GG writers
Moderator
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..
முருகனின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட கோதையற்றின் லோவர் ப்ரிட்ஜ்ஜை தாண்டிக் கொண்டிருந்தது திருநெல்வேலி போக்குவரத்து சபையின் பேருந்து. பிரிட்டிஷ் காலத்தில் திருவனந்தபுரம் பப்ளிக் டிபார்ட்மேன்டினால் கட்டப்பட்ட அந்தப் பாலத்தை தாண்டும் போது மட்டும் அப்படியே லண்டன் கட்டிடங்களுக்குள் நுழையும் ஓர் உணர்வு.
பஸ்ஸினுள் எண்ணி மூன்று பேர். ஒரு பெண்ணும் இரு ஆண்களும். ஆண்களின் சாயம் பூசிய தலை, ஒற்றை கடுக்கன், உடை என்பவற்றை பார்த்த நடத்துனர் யோசனையுடன் பெண்ணின் அருகே சென்றார் “நீ எங்கேம்மா போற உடனே திரும்புவியா இல்ல”
“வெளியே காட்டை வேடிக்கை பார்த்தவாறே வந்த அந்தப் பெண் திரும்பி “இல்ல அண்ணா, சித்தப்பா காட்டிலாகா அதிகாரி எனக்காக வைட் பண்ணுறார். இப்பதான் மெசேஜ் போட்டார்” என்றாள் அந்தப் பெண்.
மூவரையும் லோவர் பிரிட்ஜில் உதிர்த்து விட்டு நடத்துனரும் ட்ரைவரும் அங்கிருந்த கடையில் தேனீர் அருந்தச் சென்றனர்.
யோசனையுடன் சுற்றும் முற்றும் பார்க்க ஜீப்பையும் காணோம் சித்தப்பாவையும் காணோம் “சித்தாப்பூ வைச்சிடானா ஆப்பூ” வாய்க்குள் முனகியவள் கைபேசியை எடுக்க அவள் முன்னே வந்து நின்றது ஒரு ஜீப்.
“திடிரென்று காட்டினுள் புலி நடமாட்டம் என்று செய்தி வந்தது அதனால் உங்கள் சித்தாப்பாவால் வர முடியல. உங்களை அழைத்து வர சொல்லி என்னை அனுப்பினார்”
ஜீப்பில் இருந்தவனை சந்தேகத்துடன் பார்த்தாள். பார்க்க நன்றாய்தான் இருந்தான். ஏனோ அவனை உற்றுக் கவனிக்க முடியாமல் ஏதோ தடை செய்தது.
“என்ன சந்தேகமா? உங்கள் போனை செக் பண்ணுங்கள்” என்றான் அவன்.
‘ஆத்தி வடிவேல் சொல்லுற மாதிரி மனதில் நினைகிறத அப்படியே சொல்றான்’ அவள் மனதினுள் நினைக்க அதுவும் விளங்கியது போல் அவன் புன்னகைக்க அவள் கைபேசி அலறியது.
“ஹலோ தாத்தா, நான் இப்ப” என்று தொடங்கவே இடையிட்டு “நான் அனுப்பிய ஆள்தான். அவன் பெயர் சேஷன். அவனுடன் வா” என்றார்.
“சேஷா” அழைக்கவே சட்டென திரும்பிப் பார்த்தான்.
“மெதுவா ஏன் இவ்வளவு வேகம் கழுத்து சுளுகிரும்” தன் பயணப் பைகளை தூக்கி ஜீப்பின் பின்னால் போட்டு விட்டு அவனருகே அமர்ந்து விசாரித்தாள் “எங்கே போறோம்?”.
“சொர்க்கத்திற்கு” என்றவன் ஜீப்பை செலுத்த திரும்பிப் பார்த்தாள். பின்னால் இருந்த கடையும் வீதியும் மறைந்திருந்தது.
“கடையை காணோம்” பீதியுடன் கத்தவே “இங்கே மூடுபனி அதிகம். இப்படிதான் திடிரென்று பாதைகளை மறைத்து விடும்” மூடுபனியின் ஊடே கூர்ந்து பார்த்தவாறே “இது காடு இப்படி கத்தினா மிருகங்கள் வந்துவிடும்” எச்சரித்தான்.
சட்டென அவனருகே நெருங்கி அமர்ந்து புஜத்தை பற்றிக் கொண்டவள் “இங்கே புலி இருக்கா?” பயத்துடன் கேட்டாள்.
அவள் பயத்தை கிண்டலாய் வேடிக்கை பார்த்தவன் “ஹ்ம்ம் புலி சிறுத்தை” முன்னே கைகாட்டி “யானை எல்லாமே இருக்கு” என்றான்.
“யாயானை” குரல் காற்றாய் வர முன்னே பார்த்தாள். மந்தையாய் யானைகள் கடந்து கொண்டிருந்தது. அவன் தோளில் முகத்தைப் புதைத்தவள் வாய் உருப்போட்டது “முருகா முருகா முருகா”.
மீண்டும் ஜீப் புறப்பட்ட சத்தத்தில் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள். அடர்ந்த வனத்தினுள் மறைந்து கொண்டிருந்த யானைகளின் பின்புறம் தென்பட்டது. நெஞ்சில் கை வைத்து பெரிய மூச்சைவிட்டவள் “நிம்மதியா விஜய் தேவர் கொண்டா படம் பார்த்தோமா போப்கர்ன் சாப்பிட்டோமா நல்ல தூங்கினோமா என்று இருந்தவளை காட்டுக்கு கூட்டிட்டு வந்து யானையை வைத்து கொலை பண்ண ப்ளான் போடுறாங்க. அடேய் தாத்தா இருடா உனக்கு இருக்கு” புலம்பித் தள்ளினாள்.
அவன் புலம்பலில் வாய் விட்டே சிரித்தான் சேஷன் “யானை பயமா? அது சும்மாவெல்லாம் அடிக்காது”
“எனக்கு ஒன்றும் பயமில்ல” ‘கெத்தை அப்படியே மெயிண்டைன் பண்ணுடி’ மனம் கூற மூளை காறித் துப்பியது ‘இப்ப தானே பயத்தில் அவனைப் பிடித்த’.
“கேரளாவில் யானை அடிச்சதை நோக்கியல்லோ அதான். இது காட்டு யானை எதுவும் செய்யாது” பல் முப்பத்தி இரண்டையும் காட்டி கேவலமாய் சமாளித்தாள்.
“நம்பிட்டேன்” அவளைப் பார்த்து கேலியாய் சொன்னவன் பாதையைப் பார்க்க முன்னே முப்பதடி நீள நாகமொன்று பாதையில். வேகமாய் வீலை திருப்ப ஜீப் மறுபுறம் இருந்த குழிக்குள் இறங்கவே அருகில் இருந்தவளை இழுத்துக் கொண்டு பாய்ந்தான்.
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..
முருகனின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட கோதையற்றின் லோவர் ப்ரிட்ஜ்ஜை தாண்டிக் கொண்டிருந்தது திருநெல்வேலி போக்குவரத்து சபையின் பேருந்து. பிரிட்டிஷ் காலத்தில் திருவனந்தபுரம் பப்ளிக் டிபார்ட்மேன்டினால் கட்டப்பட்ட அந்தப் பாலத்தை தாண்டும் போது மட்டும் அப்படியே லண்டன் கட்டிடங்களுக்குள் நுழையும் ஓர் உணர்வு.
பஸ்ஸினுள் எண்ணி மூன்று பேர். ஒரு பெண்ணும் இரு ஆண்களும். ஆண்களின் சாயம் பூசிய தலை, ஒற்றை கடுக்கன், உடை என்பவற்றை பார்த்த நடத்துனர் யோசனையுடன் பெண்ணின் அருகே சென்றார் “நீ எங்கேம்மா போற உடனே திரும்புவியா இல்ல”
“வெளியே காட்டை வேடிக்கை பார்த்தவாறே வந்த அந்தப் பெண் திரும்பி “இல்ல அண்ணா, சித்தப்பா காட்டிலாகா அதிகாரி எனக்காக வைட் பண்ணுறார். இப்பதான் மெசேஜ் போட்டார்” என்றாள் அந்தப் பெண்.
மூவரையும் லோவர் பிரிட்ஜில் உதிர்த்து விட்டு நடத்துனரும் ட்ரைவரும் அங்கிருந்த கடையில் தேனீர் அருந்தச் சென்றனர்.
யோசனையுடன் சுற்றும் முற்றும் பார்க்க ஜீப்பையும் காணோம் சித்தப்பாவையும் காணோம் “சித்தாப்பூ வைச்சிடானா ஆப்பூ” வாய்க்குள் முனகியவள் கைபேசியை எடுக்க அவள் முன்னே வந்து நின்றது ஒரு ஜீப்.
“திடிரென்று காட்டினுள் புலி நடமாட்டம் என்று செய்தி வந்தது அதனால் உங்கள் சித்தாப்பாவால் வர முடியல. உங்களை அழைத்து வர சொல்லி என்னை அனுப்பினார்”
ஜீப்பில் இருந்தவனை சந்தேகத்துடன் பார்த்தாள். பார்க்க நன்றாய்தான் இருந்தான். ஏனோ அவனை உற்றுக் கவனிக்க முடியாமல் ஏதோ தடை செய்தது.
“என்ன சந்தேகமா? உங்கள் போனை செக் பண்ணுங்கள்” என்றான் அவன்.
‘ஆத்தி வடிவேல் சொல்லுற மாதிரி மனதில் நினைகிறத அப்படியே சொல்றான்’ அவள் மனதினுள் நினைக்க அதுவும் விளங்கியது போல் அவன் புன்னகைக்க அவள் கைபேசி அலறியது.
“ஹலோ தாத்தா, நான் இப்ப” என்று தொடங்கவே இடையிட்டு “நான் அனுப்பிய ஆள்தான். அவன் பெயர் சேஷன். அவனுடன் வா” என்றார்.
“சேஷா” அழைக்கவே சட்டென திரும்பிப் பார்த்தான்.
“மெதுவா ஏன் இவ்வளவு வேகம் கழுத்து சுளுகிரும்” தன் பயணப் பைகளை தூக்கி ஜீப்பின் பின்னால் போட்டு விட்டு அவனருகே அமர்ந்து விசாரித்தாள் “எங்கே போறோம்?”.
“சொர்க்கத்திற்கு” என்றவன் ஜீப்பை செலுத்த திரும்பிப் பார்த்தாள். பின்னால் இருந்த கடையும் வீதியும் மறைந்திருந்தது.
“கடையை காணோம்” பீதியுடன் கத்தவே “இங்கே மூடுபனி அதிகம். இப்படிதான் திடிரென்று பாதைகளை மறைத்து விடும்” மூடுபனியின் ஊடே கூர்ந்து பார்த்தவாறே “இது காடு இப்படி கத்தினா மிருகங்கள் வந்துவிடும்” எச்சரித்தான்.
சட்டென அவனருகே நெருங்கி அமர்ந்து புஜத்தை பற்றிக் கொண்டவள் “இங்கே புலி இருக்கா?” பயத்துடன் கேட்டாள்.
அவள் பயத்தை கிண்டலாய் வேடிக்கை பார்த்தவன் “ஹ்ம்ம் புலி சிறுத்தை” முன்னே கைகாட்டி “யானை எல்லாமே இருக்கு” என்றான்.
“யாயானை” குரல் காற்றாய் வர முன்னே பார்த்தாள். மந்தையாய் யானைகள் கடந்து கொண்டிருந்தது. அவன் தோளில் முகத்தைப் புதைத்தவள் வாய் உருப்போட்டது “முருகா முருகா முருகா”.
மீண்டும் ஜீப் புறப்பட்ட சத்தத்தில் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள். அடர்ந்த வனத்தினுள் மறைந்து கொண்டிருந்த யானைகளின் பின்புறம் தென்பட்டது. நெஞ்சில் கை வைத்து பெரிய மூச்சைவிட்டவள் “நிம்மதியா விஜய் தேவர் கொண்டா படம் பார்த்தோமா போப்கர்ன் சாப்பிட்டோமா நல்ல தூங்கினோமா என்று இருந்தவளை காட்டுக்கு கூட்டிட்டு வந்து யானையை வைத்து கொலை பண்ண ப்ளான் போடுறாங்க. அடேய் தாத்தா இருடா உனக்கு இருக்கு” புலம்பித் தள்ளினாள்.
அவன் புலம்பலில் வாய் விட்டே சிரித்தான் சேஷன் “யானை பயமா? அது சும்மாவெல்லாம் அடிக்காது”
“எனக்கு ஒன்றும் பயமில்ல” ‘கெத்தை அப்படியே மெயிண்டைன் பண்ணுடி’ மனம் கூற மூளை காறித் துப்பியது ‘இப்ப தானே பயத்தில் அவனைப் பிடித்த’.
“கேரளாவில் யானை அடிச்சதை நோக்கியல்லோ அதான். இது காட்டு யானை எதுவும் செய்யாது” பல் முப்பத்தி இரண்டையும் காட்டி கேவலமாய் சமாளித்தாள்.
“நம்பிட்டேன்” அவளைப் பார்த்து கேலியாய் சொன்னவன் பாதையைப் பார்க்க முன்னே முப்பதடி நீள நாகமொன்று பாதையில். வேகமாய் வீலை திருப்ப ஜீப் மறுபுறம் இருந்த குழிக்குள் இறங்கவே அருகில் இருந்தவளை இழுத்துக் கொண்டு பாய்ந்தான்.
*****
அவள் கண்முன்னே வெள்ளை நிற ஒளி வெள்ளம் சிதற தெளிவில்லாத சில காட்சிகள்.
“மோகினி” இன்பமாய் அழைக்கும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தால் அந்த இடமே போர்க்களம் போல் வெடித்து சிதறிக் கொண்டிருந்தது. அழைத்தவன் பின்னால் ஏற்பட்ட வெளிச்சத்தில் அவன் முகம் தெரியவில்லை.
“மோகினி” திடிரென ஒரு கண்கள் கருப்பு நிறத்தில் இருந்து தங்க நிறத்தில் கோபத்துடன் தகதகத்தது.
அதன் பின் பெரும் பேரொளி...
*****
“அம்மா மாலி” யாரோ அவள் கன்னத்தை தட்டினார்கள்.