GG writers
Moderator
அத்தியாயம் 36
“ மை டியர் செல்லம்மா எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?”
“என்னம்மா இப்படி கேட்கறீங்க? நீங்க இந்த குடும்பத்தோட மூத்த மருமகம்மா, அதோட எனக்கு சின்ன முதலாளியம்மா வேற, இதை செய்யின்னு சொல்லுங்கம்மா செஞ்சு முடிக்கறேன்.”
“நீங்க இதை விட மாட்டீங்களா ம்மா? உங்க தும்பியே இதை கேட்டா உங்ககிட்ட சண்டைக்கு வருவாரு. சூர்யா அண்ணா சொன்னதை வச்சு பார்த்தா அந்த ஆசாரி குடும்ப சங்கிலியை ஒரு பொண்ணுகிட்ட கொடுத்ததா சொல்லி இருக்கார் இல்லையா?”
“ ஆமா… ஆனா அது யார்னு அவர் சொல்றதுக்கு முன்னாடியே அவருக்கு ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சே”
“ அதை தான் நானும் சொல்ல வரேன், நித்திலா தான் அந்த நகையை வாங்கினாங்கறதுக்கு, ஒரே சாட்சி அவர் மட்டும் தான். அதனால தான் அவர் மூலமா எதுவும் பிரச்சனை வந்திடக் கூடாதுன்னு அவரை போட்டுத் தள்ள பார்த்திருக்காங்க. இங்க இருக்கவங்க யாருக்கும் தெரியாம, நான் எப்படியாவது அவரையோ இல்ல அவர் குடும்பத்தையோ சந்திக்கனும் ஏற்பாடு பண்ண முடியுமா?”
“ஐயோ தம்பிக்கு கூட தெரியாமையா? எதுக்குமா இந்த விஷப்பரிச்சை? ஏற்கனவே தம்பி உங்கள தப்பா நினைச்சுட்டு இருக்கு, அப்புறம் இதனால உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்திடப் போகுது?”
“சொன்னா புரிஞ்சுக்கோங்க செல்லம்மா, இப்போ உங்க தம்பிகிட்ட போய் இந்த போட்டோவை காட்டி, நீங்க இங்க நடந்த அத்தனை விஷயத்தையும் அவருக்கு ஒன்று விடாம சொன்னாலும், இதை நான் தான் அங்க வெச்சு குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தி, இந்த கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கிறேன்னு சொல்லுவாரு.
அவரைப் பொறுத்த வரைக்கும் நான் கெட்டவ தான் இருந்துட்டு போறேன், அதுவும் உண்மை தானே நான் தெரியாம செஞ்சிருந்தாலும் அதனால அதிகமா அவர் பாதிக்கப்பட்டிருக்காரு.
அது நானே அறியாம தவறுதலா செஞ்சதுன்னாலும் அது குற்றம் தான், அதுக்கு பிராயச்சித்தம் தேடத் தான் நான் முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.
இப்போதைக்கு இதை பத்தி அவருக்கு எதுவும் தெரிய வேணாம். ஒருவேளை இது அவருக்கு தெரிஞ்சா அவரோட நடவடிக்கை வேற மாதிரியா இருக்கும். இது நித்திலாவோட குரூப்புக்கு அட்வான்டேஜ் ஆகிடவும் சான்ஸ் இருக்கு.
முதல்ல இதை நித்திலா தான் செஞ்சாளான்னு கன்பார்ம் பண்ணி ஆதாரத்தோட நிரூபிக்கனும். இந்த விஷயம் சின்னதா வெளியே தெரிஞ்சா கூட அவங்க உஷாராகிடுவாங்க. அப்புறம் நம்மளால எதுவுமே பண்ண முடியாம போயிரும். ஷோ நான் சொல்றவரைக்கும் நீங்க இதை பத்தி வெளிய வாய் திறக்க கூடாது சரியா?”
“சரிங்கம்மா, முதல்ல எனக்கு தெரிஞ்சவங்க மூலமா அந்த ஆசாரி இந்த ஊர்ல தான் இருக்காறான்னு விசாரிச்சு, அவரை சந்திக்க ஏற்பாடு பண்றேன்.”
“ ம்ம்ம், நானும் என்னோட பிரண்டு கிட்ட, எங்களோட பேசின அந்த பொண்ணோட போட்டோ எதுவும் கிடைச்சுதான்னு மறுபடியும் விசாரிச்சு பார்க்கறேன். எந்த ஒரு லூப்புமே கிடைக்காம தான் இங்கே வந்தேன், இப்போ ஒரு நூல் கிடைச்சிருக்கு அதை வைச்சு இதோட ஆதிமூலத்தை எப்படியாவது கண்டு பிடிக்கனும்.”
சோபாவில் அமர்ந்தபடியே லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, அப்படியே உறங்கி இருந்தான். செல்லம்மாவிடம் பேசி முடித்துவிட்டு யோசனையோடு அறைக்கு வந்த நிலாவிற்கு அவன் மீது கோபம் வந்தாலும், மறுபுறம் அவனது நிலை கண்டு இரக்கமும் தோன்றியது.
“பண்றதெல்லாம் பண்ணிட்டு தூக்கத்தை பாரு பச்ச குழந்தை மாதிரி, வீட்ல இருக்குற கருப்பு ஆட்டை கண்டுபிடிக்க தெரியல, இதுல இவரு பெரிய பிசினஸ் மேக்னட்டாம். உன்னால அந்த அவார்டுக்கு உண்டான மரியாதையே போச்சுய்யா.”
ஒரு தலையணையையும் பெட்ஷீட்டையும் கட்டிலின் ஒரு பக்கம் போட்டவள் மறுபக்கம் படுக்க ஆயுத்தமானாள். சத்தம் கேட்டு விழித்தவனோ நிலாவின் செயலை கண்டு,
“மேடம் என்ன பண்றீங்க?”
“ ம்ம்ம் நான் தூங்கறதுக்காக பெட்டை அரேஜ் பண்ணறேன். இந்த ரெண்டு தலகாணியும் எனக்கு வேணும் அங்க இருக்கிறதை வச்சு தூங்கிக்கங்க, குட் நைட்.”
என்றபடி கட்டிலின் நடுவில் தலையணையை வைத்தவள் முதுகு காட்டியபடி படுத்துவிட,
“அட ஆமா இல்ல ரொம்ப டைம் ஆகிடுச்சு தூங்கலாமா?”
என்று லேப்டாப்பை மூடிவிட்டு கட்டிலின் அருகில் வந்தவன், தொப்பென்று அதில் குதிக்க அவன் விழுந்த வேகத்தில் திடுக்கிட்டு எழுந்தாள் நிலா. அவளை நோக்கி திரும்பியவனோ இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு, ஒற்றை புருவத்தை உயர்த்திய படி,
“ஆமா… அப்போ எதுக்கு சிரிச்சேன்னு சொல்லவே இல்லையே?”
திடுக்கிட்டவளோ திருதிருவென விழிக்க, அவன் கண்களில் சுவாரசியம் கூடியது.
“என்ன மிஸ்ஸஸ் விஷ்வேஸ்வர பாண்டியன் புருஷன் கேட்ட கேள்வி புரியலையா இல்ல…”
சாதரணமாக அவன் பார்வையிலேயே மனதை பறி கொடுப்பவள், மயக்கும் புன்னகையை சிந்தினாள் என்ன செய்வாள் பாவம்! அவனால் தனது முகத்தில் ஏற்பட்ட குங்கும வதனத்தை மறைக்க, மீண்டும் முதுகை காட்டியபடி திரும்பி படுத்தாள்.
அவஸ்தையாக நெளிந்து கொண்டே இருந்தவள் உறங்க வெகு நேரம் ஆனது. ஆனால் விஷ்வாவோ மனநிறைவோடு பல நாட்களுக்கு பிறகு அன்று தான் நன்கு உறங்கினான்.
அடுத்த நாள் அவர்கள் அறைக் கதவு தட்டும் சத்தத்தில் கண்விழித்தவன், திரும்பி நிலாவை பார்க்க, அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள். அன்னிச்சையாக அவனது இதழ்கள் புன்னகைக்க, மீண்டும் கதவு தட்டும் சத்தத்தில் அவளிடம் இருந்து விழிகளை திருப்பியவன், எழுந்து சென்று அறைக் கதவை திறக்க, வெளியே பதட்டத்தோடு நின்றிருந்தார் செல்லம்மா.
அவரை கண்டவுடன் அவரது பதட்டம் இவனுக்கும் தொற்றிக் கொள்ள,
“என்ன ஆச்சு ம்மா? அம்மா… அம்மாவுக்கு எதுவும் பிரச்சினை இல்லையே?”
“ தம்பி அது… அம்மா…”
அதற்கு மேல் அங்கு நிற்காமல் தனது அன்னையைக் காண அவர் அறை நோக்கி ஓடி இருந்தான் விஷ்வா.
“ மை டியர் செல்லம்மா எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?”
“என்னம்மா இப்படி கேட்கறீங்க? நீங்க இந்த குடும்பத்தோட மூத்த மருமகம்மா, அதோட எனக்கு சின்ன முதலாளியம்மா வேற, இதை செய்யின்னு சொல்லுங்கம்மா செஞ்சு முடிக்கறேன்.”
“நீங்க இதை விட மாட்டீங்களா ம்மா? உங்க தும்பியே இதை கேட்டா உங்ககிட்ட சண்டைக்கு வருவாரு. சூர்யா அண்ணா சொன்னதை வச்சு பார்த்தா அந்த ஆசாரி குடும்ப சங்கிலியை ஒரு பொண்ணுகிட்ட கொடுத்ததா சொல்லி இருக்கார் இல்லையா?”
“ ஆமா… ஆனா அது யார்னு அவர் சொல்றதுக்கு முன்னாடியே அவருக்கு ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சே”
“ அதை தான் நானும் சொல்ல வரேன், நித்திலா தான் அந்த நகையை வாங்கினாங்கறதுக்கு, ஒரே சாட்சி அவர் மட்டும் தான். அதனால தான் அவர் மூலமா எதுவும் பிரச்சனை வந்திடக் கூடாதுன்னு அவரை போட்டுத் தள்ள பார்த்திருக்காங்க. இங்க இருக்கவங்க யாருக்கும் தெரியாம, நான் எப்படியாவது அவரையோ இல்ல அவர் குடும்பத்தையோ சந்திக்கனும் ஏற்பாடு பண்ண முடியுமா?”
“ஐயோ தம்பிக்கு கூட தெரியாமையா? எதுக்குமா இந்த விஷப்பரிச்சை? ஏற்கனவே தம்பி உங்கள தப்பா நினைச்சுட்டு இருக்கு, அப்புறம் இதனால உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்திடப் போகுது?”
“சொன்னா புரிஞ்சுக்கோங்க செல்லம்மா, இப்போ உங்க தம்பிகிட்ட போய் இந்த போட்டோவை காட்டி, நீங்க இங்க நடந்த அத்தனை விஷயத்தையும் அவருக்கு ஒன்று விடாம சொன்னாலும், இதை நான் தான் அங்க வெச்சு குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தி, இந்த கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கிறேன்னு சொல்லுவாரு.
அவரைப் பொறுத்த வரைக்கும் நான் கெட்டவ தான் இருந்துட்டு போறேன், அதுவும் உண்மை தானே நான் தெரியாம செஞ்சிருந்தாலும் அதனால அதிகமா அவர் பாதிக்கப்பட்டிருக்காரு.
அது நானே அறியாம தவறுதலா செஞ்சதுன்னாலும் அது குற்றம் தான், அதுக்கு பிராயச்சித்தம் தேடத் தான் நான் முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.
இப்போதைக்கு இதை பத்தி அவருக்கு எதுவும் தெரிய வேணாம். ஒருவேளை இது அவருக்கு தெரிஞ்சா அவரோட நடவடிக்கை வேற மாதிரியா இருக்கும். இது நித்திலாவோட குரூப்புக்கு அட்வான்டேஜ் ஆகிடவும் சான்ஸ் இருக்கு.
முதல்ல இதை நித்திலா தான் செஞ்சாளான்னு கன்பார்ம் பண்ணி ஆதாரத்தோட நிரூபிக்கனும். இந்த விஷயம் சின்னதா வெளியே தெரிஞ்சா கூட அவங்க உஷாராகிடுவாங்க. அப்புறம் நம்மளால எதுவுமே பண்ண முடியாம போயிரும். ஷோ நான் சொல்றவரைக்கும் நீங்க இதை பத்தி வெளிய வாய் திறக்க கூடாது சரியா?”
“சரிங்கம்மா, முதல்ல எனக்கு தெரிஞ்சவங்க மூலமா அந்த ஆசாரி இந்த ஊர்ல தான் இருக்காறான்னு விசாரிச்சு, அவரை சந்திக்க ஏற்பாடு பண்றேன்.”
“ ம்ம்ம், நானும் என்னோட பிரண்டு கிட்ட, எங்களோட பேசின அந்த பொண்ணோட போட்டோ எதுவும் கிடைச்சுதான்னு மறுபடியும் விசாரிச்சு பார்க்கறேன். எந்த ஒரு லூப்புமே கிடைக்காம தான் இங்கே வந்தேன், இப்போ ஒரு நூல் கிடைச்சிருக்கு அதை வைச்சு இதோட ஆதிமூலத்தை எப்படியாவது கண்டு பிடிக்கனும்.”
சோபாவில் அமர்ந்தபடியே லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, அப்படியே உறங்கி இருந்தான். செல்லம்மாவிடம் பேசி முடித்துவிட்டு யோசனையோடு அறைக்கு வந்த நிலாவிற்கு அவன் மீது கோபம் வந்தாலும், மறுபுறம் அவனது நிலை கண்டு இரக்கமும் தோன்றியது.
“பண்றதெல்லாம் பண்ணிட்டு தூக்கத்தை பாரு பச்ச குழந்தை மாதிரி, வீட்ல இருக்குற கருப்பு ஆட்டை கண்டுபிடிக்க தெரியல, இதுல இவரு பெரிய பிசினஸ் மேக்னட்டாம். உன்னால அந்த அவார்டுக்கு உண்டான மரியாதையே போச்சுய்யா.”
ஒரு தலையணையையும் பெட்ஷீட்டையும் கட்டிலின் ஒரு பக்கம் போட்டவள் மறுபக்கம் படுக்க ஆயுத்தமானாள். சத்தம் கேட்டு விழித்தவனோ நிலாவின் செயலை கண்டு,
“மேடம் என்ன பண்றீங்க?”
“ ம்ம்ம் நான் தூங்கறதுக்காக பெட்டை அரேஜ் பண்ணறேன். இந்த ரெண்டு தலகாணியும் எனக்கு வேணும் அங்க இருக்கிறதை வச்சு தூங்கிக்கங்க, குட் நைட்.”
என்றபடி கட்டிலின் நடுவில் தலையணையை வைத்தவள் முதுகு காட்டியபடி படுத்துவிட,
“அட ஆமா இல்ல ரொம்ப டைம் ஆகிடுச்சு தூங்கலாமா?”
என்று லேப்டாப்பை மூடிவிட்டு கட்டிலின் அருகில் வந்தவன், தொப்பென்று அதில் குதிக்க அவன் விழுந்த வேகத்தில் திடுக்கிட்டு எழுந்தாள் நிலா. அவளை நோக்கி திரும்பியவனோ இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு, ஒற்றை புருவத்தை உயர்த்திய படி,
“ஆமா… அப்போ எதுக்கு சிரிச்சேன்னு சொல்லவே இல்லையே?”
திடுக்கிட்டவளோ திருதிருவென விழிக்க, அவன் கண்களில் சுவாரசியம் கூடியது.
“என்ன மிஸ்ஸஸ் விஷ்வேஸ்வர பாண்டியன் புருஷன் கேட்ட கேள்வி புரியலையா இல்ல…”
சாதரணமாக அவன் பார்வையிலேயே மனதை பறி கொடுப்பவள், மயக்கும் புன்னகையை சிந்தினாள் என்ன செய்வாள் பாவம்! அவனால் தனது முகத்தில் ஏற்பட்ட குங்கும வதனத்தை மறைக்க, மீண்டும் முதுகை காட்டியபடி திரும்பி படுத்தாள்.
அவஸ்தையாக நெளிந்து கொண்டே இருந்தவள் உறங்க வெகு நேரம் ஆனது. ஆனால் விஷ்வாவோ மனநிறைவோடு பல நாட்களுக்கு பிறகு அன்று தான் நன்கு உறங்கினான்.
அடுத்த நாள் அவர்கள் அறைக் கதவு தட்டும் சத்தத்தில் கண்விழித்தவன், திரும்பி நிலாவை பார்க்க, அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள். அன்னிச்சையாக அவனது இதழ்கள் புன்னகைக்க, மீண்டும் கதவு தட்டும் சத்தத்தில் அவளிடம் இருந்து விழிகளை திருப்பியவன், எழுந்து சென்று அறைக் கதவை திறக்க, வெளியே பதட்டத்தோடு நின்றிருந்தார் செல்லம்மா.
அவரை கண்டவுடன் அவரது பதட்டம் இவனுக்கும் தொற்றிக் கொள்ள,
“என்ன ஆச்சு ம்மா? அம்மா… அம்மாவுக்கு எதுவும் பிரச்சினை இல்லையே?”
“ தம்பி அது… அம்மா…”
அதற்கு மேல் அங்கு நிற்காமல் தனது அன்னையைக் காண அவர் அறை நோக்கி ஓடி இருந்தான் விஷ்வா.