அழகிய காதல் நிலவே
ஹாய் பிரெண்ட்ஸ்,
இதோ அடுத்த அத்தியாயம் போட வந்துடேன்.
போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க…
யாரையாவது டாக் பண்ணனுமா அதையும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.
நிலா 6:
பாத்திரம் விழும் ஒலி கேட்டு விட்டின் உள்ளே ஓடிய கண்ணன் அங்கு கண்ட காட்சியில் ஸ்தம்பித்து நின்றது ஒரு நொடி தான். பின் தன்னை சமாளித்து சமாதானம் செய்வதற்கு சென்றான்.
என்னென்றால் அங்கு வேண்டும் என்றே பாத்திரம் தட்டி விட்டது அவனை ஈன்ற தாய் "கலைவாணி".
அறிவு, புத்தி கூர்மை, நாவடக்கம், படிப்பு, நற்பண்பு, பொறுமை என்று அனைத்திற்கும் தெய்வமாய் விளங்கும் சரஸ்வதி தாயின் மறுபெயரான கலைவாணி பெயரை சூட்டியதாலோ என்னமோ. அதற்கும் தனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை எனும் விதம் தன் நா எனும் சாட்டையால் சுழற்றி அடிப்பார்.
உலகில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் பல விஷம் அற்றவை சில உயிரினங்கள் விஷம் கொண்டவை.
அப்படி இருக்கும் விஷம் கொண்ட உயிரினத்தில் அதன் உடலில் ஏதாவது ஒரு பகுதியான கொடுக்கு, நாக்கு, தோல், கண், முழங்கை போன்ற பாகங்களில் கொடிய விஷம் காணப்படும்.
ஆனால் கலைவாணியோ உடல் முழுவதும் விஷம் நிறைந்தவர். அவர் வாய் திறந்து பேசினால் நிச்சயம் அங்கே கலகதிற்கு பஞ்சம் இருக்காது.
தனது கையில் இருக்கும் சாப்பிடும் தட்டை விசிறி அடித்தவர்.
தன் மகனை நோக்கி "வேலைக்கு போக துப்பில்ல காலங்காத்தால எவள பாக்க போரியோ தெரியல. அப்படியே எவளயாவது பாத்த 11 அழகான அறிவான பொண்ணா இல்லாம நெறய சொத்து இருக்குற பொண்ணா பாரு. அப்போ தான் நம்ம குடும்ப கஷ்டம் திறும். உன்ன பெத்த வயிறு குளிரும் புரியுதா" என்று அவனை திட்டி தீர்த்தார்.
அவனிற்கு இது தினமும் வாடிக்கை என்பதால் எப்பொழுதும் ஒரு விரக்கத்தி புன்னகையுடன் கடந்து செல்பவன். இன்று தன்னவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தனது அன்னை கூறியதை கேட்டவன் சற்று அதிரத்தான் செய்தான்.
சில நொடிகளில் தன்னை சமாளித்தவன் தன் அன்னையை நோக்கி அவனது சூழ்நிலையை எடுத்துரைக்க வாய் திறந்த சமயம்.
"பெத்து வச்சிருக்கேன் பாரு புள்ளைய பொம்பள புள்ள வேலைக்கு போயி வீட்ட காப்பாதுது ஆசையா பெத்து வச்ச ஆம்பள புள்ள வெட்டிய ஊரு சோவாருது இந்த கொடுமைய எங்கனு போயி சொல்ல" என்று வசை பாட
மேலும் நொந்து போனவன் "அம்மா நான் வேணும்னு வேலைக்கு போகாம இல்ல. சரியான வேலை கிடைக்கல கூடிய சிக்கிரம் ஏதாவது ஒரு வேலைக்கு கண்டிப்பா போறேன் கவலைப்பட வேண்டாம்" என்று ஆறுதல் கூற
அவனது தாய்யோ "பேசுறது மட்டும் நல்லா வக்கணையா பேசு. பெயருக்கு ஏத்த மாதுரி அழகா தான டா இருக்க இங்க இருந்து சோவாருவதுக்கு பதிலா ஒரு பெரிய பார், பப், ஹோட்டல்னு வசதியான பொண்ணுக வர்ற இடத்துக்கு போ. ஒரு பொண்ண வசதியானவன் மாதிரி நடிச்சு கல்யாணம் பண்ணி எல்லாரும் செட்டில் அகுறதுக்கு வழி பாரு" என கூற
அந்த எண்ணமே அவனை முகம் சுழிக்க செய்து வேப்பங்காயாக கசந்தது.
பெயருக்கு ஏற்றார் போல கண்ணனாக இல்லாமல் தன்னவழுக்கு கலியுக ராமனாக வாழ ஆசை கொண்டவனிடம். இப்படி அபத்தமான வார்த்தைகளை கூறியது தனது தாயகவே இருந்தாலும் அவரை அறைய தூடித்த தனது கைகளை கட்டு படுத்தி அங்கிருந்து நகர்தான்.
அறையினுள் சென்று கதவை சாற்றியவனின் மனம் தன்னவளை நினைத்து கதற. ஓலமிடும் தனது மனதை அடக்க பெரும்பாடு பட்டவன் கண்களை மூட அதிலிருந்து கண்ணீர் வடிந்தது.
தன்னவளை நினைத்ததாலோ என்னவோ நான் இருக்கிறேன் எனும் விதமாக ஈஸ்வரியின் புகைப்படம் அவனது அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததன் அடையாளமாக ஒளிர்ந்தது.
அவளை கண்டவனின் முகமும் ஒளிர ஓடி சென்று குறுஞ்செய்தியை பார்த்தவனின் முகம் மேலும் ஒளிர்ந்தது.
—--------------------------------------
அந்த ஊரின் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கேட்டு கொண்டு வந்தவளின் ஆர்வம் மேலும் பல கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டவள்.
பேச்சின் சுவாரசியத்தில் கிராமத்தின் முச்சந்திக்கு (மூன்று சாலைகள் இணையும் இடம்)வந்ததை கவனிக்க வில்லை.
அவர்கள் அங்குவரவும் அப்புதியவளின் காலின் அருகே ஒருவன் விழவும் சரியாக இருந்தது. அதனால் பயந்தவள் ஓர் அடி பின்னால் நகர்ந்தாள்.
வலியில் முகம் சுருங்க தன் வழியில் விழுந்து கிடந்தவனை பார்த்து அதிர்ந்தவள். நிமிர்த்து பார்க்க அங்கே துர்க்கை அம்மனின் மறு உருவமாக நின்றிந்தார் ஒரு பெண்மணி.
வட்ட முகம், நன்கு அகன்ற நெற்றி அதில் அளவோடு இருக்கும் பொட்டு, கண்களில் கனிவு ஆனால் கோவம் கொண்டு பார்த்தல் அக்னியின் ஜுவாலை தெறிக்கும், முக்கில் கல் வைத்த பெரிய முக்குத்தி, மானிறத்துக்கும் சற்று குறைந்த நிறம், விலை உயர்ந்த நூற்புடவை அணிந்திருந்தார்.
சற்று பூசினார் போன்று இருக்கும் தோற்றம், கேசம் அனைத்தையும் வாரி கொண்டை இட்டு, தனது சேலை முந்தானையை உதறி தனது இடையில் சொருகி நின்ற அவரின் தோற்றம் கிராம பெண்ணின் பெருமையை எடுத்துரைத்தது.
முகம் வெளிறி நின்றிந்த அவளை நோக்கி வந்தவர். அவளின் காலின் அருகே கிடந்தவனை அவனது சட்டையின் கழுத்து பட்டியை (ஷர்ட் காலர்) பிடித்து தூங்கி நிறுத்தியவர் மீண்டும் அவனது கன்னம் பளுக்கும் படி ஒரு அறை விட்டார்.
அதில் தனது அதிர்வில் இருந்து மிண்டவள். பொன்னரசியின் கையை சுரண்டி "அக்கா இந்த ஊருல பண்ணையாரம்மா தான பெரிய ஆளுனு சொன்னிங்க. ஆனா இந்த அம்மா அவங்கள விட பெரிய அங்காள பரமேஸ்வரியா இருப்பாங்க போல" என்று அலற
"கண்ணு நான் சொன்ன எங்க அம்மா, அதாவது பண்ணையாரம்மா அவங்க தான். அப்புறம் அவுக பேரு அங்காள பரமேஸ்வரி இல்ல நாகேஸ்வரி" என்று கூற
"அப்போ இவங்க தான் உங்க பண்ணையாரம்மா வா…." என்று நிட்டி முழங்க
"ஆமா கண்ணு" என்று கூறியவரிடம் "உங்க அம்மா எது செஞ்சாழும் நியமா தான் செய்வாங்கனு சொன்னிங்க. இப்போ எதுக்கு அந்த பாவ பட்ட ஆள போட்டு அந்த அடி அடிகாங்க. எதுக்கு அடிக்காங்கனு கேட்க மாட்டிங்களா யாரும்" என்று கேட்கவும்
அவளது கேள்விக்கு ஏற்றார் போல கீழே விழுந்தவனை வசை பாட ஆரம்பித்தார் பண்ணையாரம்மா "ஏலே என் கிட்ட என்னவே சொல்லி வட்டி வாங்குனவ. ஒழுங்கா மாசம் பொறந்தா வந்து வட்டி தரனும்னு மறந்து போயிருதாகும். இன்னைக்கு இப்போ போட்ட போடுல கரெக்டா வருது பணம் இந்த புத்தி முதல்லே இருந்துருகணும் ல. இதே மாதிரி அடுத்த மாசம் வட்டி வரல வேற மாதிரி வசூல் செய்ய வேண்டி வரும். பாத்து பத்திரமா இருந்துகல" என்று கூறி விட்டு தனக்கு சொந்தமான வாகனத்தில் சென்று விட்டார்.
பண்ணையாரம்மா கூறியதை கேட்ட அந்த பெண்ணுக்கோ கோவம் கோவமாக வர அதே ஆவேசத்துடன் "அக்கா என்ன கா இது அவனுக்கு என்ன கஷ்டமோ வட்டி கட்ட முடியல அதுக்காக இப்படியா போட்டு அடிகுறது. சுத்த காட்டு மிராண்டி தனமா இருக்கு கா. இந்த லட்சணததில ஆஹா ஓஹோனு அவங்களுக்கு சீட்டிஃபைகேட் வேற" என்று எகிற
"கண்ணு இப்படி ஒரு தல பச்சமா பாத்துட்டு பேச கூடாது. ரெண்டு பக்கமும் என்ன நடந்தது அது முதல்ல தெரிஞ்சுக்கணும் அப்புறம் தான் முடிவு பண்ணனும். அரைகுறையா கேட்டுட்டு முடிவு எடுகுறதும் பாதி கிணறு தாண்டிட்டு மீதி கிணறு தாண்டம விடுறதுக்கு சமம் கண்ணு" என்று கூறவும்.
அவர் கூறியது சரி என தோன்ற அமைதியானால் அவள்.
"எங்க அம்மா ஏதாவது செஞ்சாங்கன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும் கண்ணு. அம்மாவுக்கு கோவம் அதிகமாக வரும் ஆனா கோவம் இருக்குற இடத்தில தான குணம் இருக்கும். அதுக்கு உதாரணமே எங்க அம்மா தான் கண்ணு. அதுனால என் கிட்ட சொன்ன மாதிரி வேற யாரு கிட்டயும் கேட்டு புடாத கண்ணு"
"சரி கா" என்று கூறியவளின் மன கண்ணில் பண்ணையாரம்மாவின் தோற்றமே வந்து போனது.
மேலும் அவர் என் அந்த ஆடவனிடம் அவ்வாறு நடந்து கொண்டார் எனும் கேள்விக்கு பதில் கிடைத்ததாக வேண்டும் என்று நினைத்தவள். ஓர் முடிவு எடுத்த பின்பே கண் அயர்ந்தாள்.
அதிகாலை யாரிற்கும் காத்திராமல் அழகாக விடிந்தது.
குளித்து முடித்து தன்னை சுத்தம் செய்து கொண்டவள் கிராமத்து பெண்களின் பாரம்பரிய உடையான தாவணி அணிந்து கொண்டாள்.
தாவணி அணிந்தவள் நாகேஸ்வரி அம்மாவை போல முந்தானையை உதறி இடுப்பில் சொருகவும் அவளது உடல் சிலிர்த்தது.
"சப்ப பீஸ் உனக்கே உடம்பு முந்தானையை உதறி சொருகின உடனே முறுக்கேருதே. பக்கா கிராமத்து ஆளு அவங்களுக்கு எப்டி இருந்திருக்கும்" என்று கண்ணாடியை பார்த்து கூறி சிரித்து கொண்டவள் வீர நடை போட்டு நடந்தால் அந்த அரண்மனையை நோக்கி.
அரண்மனையை வந்தடைந்தவள் அந்த பெரிய இரும்பினால் ஆனா வாயிற்கதவை திறந்து கொண்டு நடை பாதையில் சென்றாள்.
அவள் அந்த கதவை திறக்கவும் அங்கு குறைந்தது இருபத்தைந்து நபராவது தங்களது வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.
சில ஆண்கள் தோட்ட வேலை, மர கிளைகளை வெட்டி சரி செய்வது, ஏர் புட்டுவது, மாட்டிற்கு தண்ணி காட்டுவது போன்ற வேலையில் இடு பட்டனர்.
பெண்களோ வற்றல், வடகம் காயவைத்தல், தொழுவத்தை சுத்தம் செய்து பூஜை போடுவது, துடபத்தை கொண்டு சுத்தம் செய்வது என ஒவொருவரும் ஒரு வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.
அந்த அரண்மனையை சுற்றி ஆயிரம் மரங்கள் இருந்தாலும் வீட்டின் அருகே ஒரு பிரம்மாண்ட மா மரம் இருந்தது.
அதன் அருகே சென்று நின்றவள் அதை வியந்து பார்த்து கொண்டிருக்க.
தற்செயலாக திரும்பியவள் கண்ணில் விழுந்தனர் நேற்று பண்ணையாரம்மாவிடம் உதை வாங்கியவனும் அவன் அருகே இரு குழந்தைகளுடன் ஒரு பெண்ணும்.
அவர்கள் உரையாடி கொண்டிருந்தது பண்ணையாரம்மாவிடம் தான். அவர்கள் உரையாடுவதும் பின்பு அந்த ஆடவன் அவரின் காலில் விழுவதும் தெரிந்தது.
அதை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தவள் காதில் விழுந்தது அந்த உரையாடல்.
எலே ராசு உமக்கு அறிவில்லே உன் கூட்டாலிங்க கூட சேந்து கூத்தடிக்க நான் கூடுத்த பணத்தையாவே பயன் படுத்தினிரு. உனக்கு எம்புட்டு நெஞ்சலுத்தம் இருக்கும். உன் பொஞ்சாதி என் கிட்ட வட்டிக்கு வாங்கி புள்ளையா காப்பாத்த ஆசுபத்திரிக்கு போக வச்சிருந்த காச இப்படி சூதாடி தோலச்சி வச்சதுக்கு உன் தோல உரிகணும்லே. உன் பொஞ்சாதி வந்து கேட்டதால விடுறேன். ஒழுங்கா பொஞ்சாதி பேச்சு கேட்டு பொலப்ப பாரு இல்ல அடுத்த தடவை யாரு சொன்னாலும் கேக்க மாட்டேன் ஜாக்கிரதை" என கூறவும்
பொன்னரசி கூறியது தனது மன கண்ணில் தோன்ற "என்ன மனுஷிபா இவங்க. இவங்கள போய் தப்பா நெனசிடோமே" என்று நினைத்து கொண்டே திரும்பியவள் அதிர்ந்தாள்.
நிலா வருவாள்.
மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…
அழகிய காதல் நிலவே.. கருத்து திரி
pmtamilnovels.com