இதழ்… 16
துஷ்யந்த் மிஷ்ராவின் செய்கையில் அதிர்ச்சியில் அவள் உறைந்திருக்க… ஆனால் அவள் வாயில் இருந்த ஐஸ்கிரீமோ உருகி கரைந்து இருக்க, அவள் இதழில் வழிந்த வெண்ணிலா ஐஸ்கிரீமை ஒரு விரல் கொண்டு வழித்து எடுத்து சுவைத்தவன் "பேப்… நீ இப்படியே இன்னும் என்னை பார்த்துக்கொண்டே இருந்தால்…" என்றவன் அவள் முன் குனிந்து "அடுத்து ஐஸ்கிரீம்க்கு பதில் உன்னை தான் சாப்பிடுவேன் பேப்" என்றான் கிறக்கமான குரலில்.
"அம்மாடியோவ்… ஆளை விடுங்க சாமி" என்று அவசரமாக டிஷ்யூவில் வாயை துடைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள். செல்லும் அவளின் முதுகை வெறித்தவனின் முகத்தில் இப்பொழுது மர்மமான புன்னகை... எதை செய்ய காத்திருக்கானோ இந்த மிஷ்ரா.
பின்பு அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராக கிளம்பினர். இன்னும் சிலரோ அடுத்து ட்ரிங்க்ஸ் பக்கம் செல்ல இவனும் தனது பிஏவிடம் தலையாட்டி அவர்களை பார்த்துக்க சொல்லிவிட்டு ஆதிரையின் பின்னால் வந்தான்.
"நாம வந்திருக்கக் கூடாது... அவசரப்பட்டு வந்து விட்டோமோ?" என்று உடலும் மனமும் ஒரு நிலையில் இல்லாமல் உணர்வு குவியலில் தடுமாறிக் கொண்டிருந்தவள், மெல்ல நடந்து அங்கிருந்து தோட்டத்து பக்கம் வந்தாள்.
தொண்டையை கனைத்த மிஷ்ரா "போலாமா?" என்று கேட்கவும், வீட்டுக்கு தான் போல என்று பார்க்கிங் நோக்கி நடந்தவள் கையை பற்றி தடுத்தவன் "அங்கு இல்லை பேப்... திஸ் வே..." என்று வேறு வழியில் அழைத்துச் சென்றான்.
"எங்க... எங்க அழைச்சிட்டு போறீங்க சார்?" என்று மென் குரலில் கேட்டுக் கொண்டிருந்தவளின் வார்த்தைகள் துல்லியமாக காதில் விழுந்தாலும் பதில் பேசாமல் அழைத்து வந்தவன் அவள் உடைமாற்றிய அந்த குடிலுக்கு முன்னே நிறுத்தி "இன்னைக்கு இங்கதான் ஸ்டே பண்ண போறோம் பேப்...வா" என்றது தான் தாமதம், அவன் கையை உதறி விட்டு அவனைப் பார்த்தவள் "நோ... நோ... என்னை கொண்டு போய் வீட்டில் விட்டு விடுங்க" பதட்டத்தோடு கூறினாள்.
"லூசா பேப் நீ? மணி என்னனு பாத்தியா 12க்கு மேல ஆயிடுச்சு. இதுவே ஊருக்கு தள்ளி இருக்கிற ரெசார்ட்... இங்கே இருந்து உன் வீட்டுக்கு போக மினிமம் 2 ஹவர்ஸ் ஆகும். மிட் நைட்ல வீட்டுக்கு போனா உங்க அம்மா உன்னை என்ன சொல்லுவாங்க பேப்? உங்க அப்பா கேள்வி கேட்க மாட்டாரா? நீ கண்டிப்பா பொய் சொல்லிட்டு தான் வந்து இருப்ப என்னை பார்க்க? என்ன நைட் டூட்டினு தானே சொன்ன?" என்றதும் தலை கவிழ்ந்து நின்றவள், அவனுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினாள்.
"ஆமா… ஆனா இங்க வேணாமே" என்றாள் கையை பிசைந்தவாறு கண்களால் அந்த இடத்தையே துழாவிக்கொண்டு.
"இங்க இல்லாம வேற எங்க போய் தங்கறதா உத்தேசம் பேப்?" அவள் முன்னால் இரு கைககளையும் பாக்கெட்டில் விட்டபடி நின்றான் மிஷ்ரா.
"என்னை கொண்டு போய் ஹாஸ்பிடல்ல விட்டுடுங்களேன். அங்க இருக்குற டாக்டர்ஸ் ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு காலையில கிளம்பி நான் வீட்டுக்கு போறேன். எப்படி?" என்றாள் கண்கள் விரிய ஏதோ பெரிய தீர்வை கண்டுபிடித்தது போல மகிழ்வாக.
"சரி... ஹாஸ்பிடலுக்கு நம்ப ரெண்டு பேரும் இந்த மிட்நைட்ல சேர்ந்து போறோம்... அதுவும் இந்த டிரஸ் ஓட... பாக்குறவங்க என்ன நினைப்பாங்க? அப்ப மட்டும் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்களா?" என்றதும் தலை கவிழ்ந்து நின்றவள், "அதாவது சமாளிக்கலாம் ஆனால் இங்கே… இப்படி... ஒரு ரூமுல வேண்டாமே" என்றாள் தவிப்போடு.
இவன் பதில் கூறாமல் கதவை திறந்துக் கொண்டு உள்ளேச் சென்றவன் கதவை திறந்து வைத்துவிட்டு நின்றான் அவளை எதிர்பார்த்து.
ஆதிரையோ கொஞ்சமும் அசையாமல் அப்படியே நிற்க, அவளை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் இவன் சென்று ஒரு குளியல் போட்டு இலகுவான உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்து பார்க்க... அப்பொழுதும் அவள் அப்படியேதான் நின்று இருந்தாள். இருக்க இருக்க குளிர் வாட்டி எடுக்க கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு நின்று இருந்தாள் ஆதிரை.
"அப்போ... நீ உள்ள வர மாட்ட?"
"மாட்டேன்" என்று அவள் தலையாட்ட வெளியில் வந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து "இது அவ்வளவு நல்ல இடம் இல்லை. பேமிலி வந்து தங்கி போற ரெசார்ட்னு சொல்ல முடியாது. இந்த மாதிரி பார்ட்டி தனியா இருக்க விருப்பம் உள்ளவங்க வர்றது. காலையிலிருந்து எனக்கு செம ஒர்க் நான் போய் தூங்க போறேன். உன் இஷ்டம் நீ உள்ளே வர்றதும் வராததும்... அப்புறம் நாளைக்கு என் கற்பு போச்சு சிவப்பு போச்சுனு பேசக்கூடாது" என்று அவளை நன்றாக பயமுறுத்திவிட்டு உள்ளேச் சென்று படுத்துவிட்டான்.
இப்படி பயமுறுத்தினாலாவது அவள் உள்ளே வந்து விடுவாள் என்று இவன் எதிர்பார்க்க... அவன் எதிர்பார்ப்பை எல்லாம் தகர்த்துவிட்டு "என்னை கொண்டு போய் வீட்டில் விடுங்க... நான் போகணும்" என்றவள் அதே பல்லவியை பாடிக் கொண்டு அதே இடத்தில் தான் நின்று இருந்தாள்.
"அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல... உள்ள வந்த உடனே உன் மேல பாய்ஞ்சு உன்னை சூறையாடிடுவேன்னு நினைக்கிற? அதுக்கு எதுக்கு உன்னை இவ்வளவு தூரம் தள்ளிக் கொண்டு வரணும்? என் ஆஃபீஸ் பர்சனல் ரூம் பத்தாது பர்சனல் டாக்டருக்கு..." என்று நக்கலாக அவன் கேட்க,
"கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம எப்படி எல்லாம் பேசுறான்?" என்று இவள் தான் முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டியதாக இருந்தது.
அப்பொழுதும் அவள் அசைவதாக இல்லை "அப்புறம் உன் இஷ்டம் நைட்டு இங்கே நாலு காலு நரிங்க மட்டும் கிடையாது. ரெண்டு காலு உள்ள நரிகளும் வரும். அந்த குள்ளநரியின் வேட்டை நீயா கூட இருக்கலாம். என்ஜாய் பேப்... குட் நைட்" என்றவன் கதவடைத்து விட்டு படுத்து விட்டான்.
ஆங்காங்கே வெளிச்சத்திற்காக விளக்குகள் இருந்தாலும் அதை தாண்டியும் அந்த இருள் அவளுக்குள் ஒரு பயத்தை நடுக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகை இல்லை. இருக்க இருக்க குளிர் வேற அவளை வாட்டி எடுக்க சாட்டின் துணியாலான அந்த பார்ட்டி கவுனும் குளிருக்கு உதவி செய்ய நடுக்கத்தோடு தான் நின்று இருந்தாள் ஆதிரை.
நாம் வம்படியாக நின்றால் சிறிது நேரத்தில் அவனே மனமிறங்கி வந்து நம்மை அழைத்துக் கொண்டு ஒன்று ஹாஸ்பிடலுக்கோ இல்லை வீட்டுக்கோ சென்று விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தவளுக்கு நேரம் செல்ல செல்ல அந்த நம்பிக்கை தகர்ந்து போயிடுமோ என்று பயம். சுற்றியும் பார்த்தாள் கொஞ்சம் கொஞ்சமாக இன்னொரு பார்ட்டிலிருந்து ஆண்கள் வெளியே வருவதும் போவதுமாய் இருந்தனர்.
அவர்களின் தோற்றமே இவளுக்கு இன்னும் பயத்தை ஏற்படுத்தியது. இந்த பக்கம் வெறும் குடில்கள் தான் இருந்தாலும், அந்த ஆண்கள் பலர் இந்த குடிலை நோக்கி அவ்வப்போது வருவதும் போவதும் ஆகவே இருந்தனர். கிட்டத்தட்ட ஜெனியோடு கடைசியாக அவர்கள் சென்ற அந்த ரெசார்ட்டில் நடந்தது போல தான் இங்கேயும் ஆட்கள் இருக்க ஆதிரைக்கு உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது.
வேகமாக சென்று இவள் அறைக்கதவை தட்ட ஆனால் கதவு திறக்கவில்லை. "அத்தனை தடவ சொன்னானே, நமக்கு கொழுப்பு! வாய் கொழுப்பு மட்டுமல்ல உடம்பு ஃபுல்லா கொழுப்பு இருக்குனு மாதவி சொல்றதுல தப்பே இல்ல... இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே? சரி சிவனேனு கார்ல போய் உக்காந்துட வேண்டியது தான்" என்றவள் தனது கைப்பை எங்கே என்று தேட அதுவும் அவன் அறைக்குள் தான் இருந்தது ஞாபகம் வந்தது. "இப்படியாடி சொதப்புவ ஆதி நீ" என்று கண்கள் கலங்க அவ்விடத்தையே மெல்ல சுற்றி வந்தாள்.
"நாம வேற ஒரு ரூம் எடுத்து தங்கிடலாமா? ஆனா அதுக்கு அமௌன்ட் கேட்பாங்களே? அட்லீஸ்ட் கார்டு போன் எதாவது ஒன்னு இருந்தா கூட போதும். எதுவுமே இல்லாம இப்படி வெறும் கையோடு நிற்க மாதிரி ஆயிடுச்சே" என்று கலங்கியவள்… தன்னை சுற்றி பார்த்துக் கொண்டே மெல்ல நடந்தாள்.
அவள் நடக்க நடக்க அங்கிருந்த விளக்குகள் எல்லாம் ஒவ்வொன்றாய் அணைக்கப்பட "அந்த பார்ட்டியும் முடிஞ்சிடுச்சு போல அவங்களாம் வருவார்களோ?" என்று மனது தடத்தடக்க மெல்ல சென்றவள், அடுத்து முட்டி நின்றது என்னவோ ஒரு ஆணின் மீது. அதிர்ந்து பார்த்தள் அங்கே ரிஷியை கண்டதும் ஒருவித ஆசுவாசம். அதே நேரம் சிறு பயம் இவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது.
"ரிஷி…." என்று அவள் அழைக்க…
"டியர்... என்ன இங்க தனியா இருக்க? எப்படி இங்க வந்த? ஓஓ என்னை தேடி வந்தியா?" என்றவன் முழு குடி போதையில் இருந்தான்.
"ரிஷி... ரிஷி... பாரு இங்க இருந்து போயிடலாம். உன்கிட்ட கார் இருக்கும் தானே... கார் சாவி கொடு நான் ஓட்டுறேன்"
"கார் சாவியா? அது எங்கே வச்சேன் எங்க வச்சேன் டார்லிங்?" என்று அவளிடமே உளறிக் கொண்டே நின்றவன் தள்ளாடிக்கொண்டே வர இவனை நம்பினால் ஆகாது என்று அவன் வேலட், ஃபோன் ஏதாவது இருக்கிறதா என்று தேடி பார்க்க ஒன்றுமே இல்லை அவனிடம்.
'இவனும் இப்படி சொதப்புறானே… ஆனால் இவன் இங்க என்ன பண்றான்?' என்று யோசனையோடு மற்றவர்களை பார்க்க, அங்கிருந்து இரண்டு மூன்று பேர் கண்கள் இவள் மேலே அட்டை போல் ஒட்டி இருக்க இவள் பயந்து "ரிஷி வாங்க போகலாம்" என்று அவன் கையை பிடித்து இழுக்க, அவனோ தள்ளாடி தள்ளாடி ஆதிரை மேலே விழுந்தான்.
"இவன் நம்மை காப்பாத்துவான்னு பார்த்தா... இவன் இருக்கிற நிலைமைல இவனையும் நாமதான் காப்பாத்தணும் போல... இது ஆவுறதுக்கு இல்ல" என்று அவனை அங்கிருந்த ஒரு மரப்பெஞ்சில் அமர வைத்தவள், அங்கிருந்து வேகமாக நடந்தாள்.
யாரோ பின்னே அவளை தொடர்ந்து வரும் அரவம் கேட்க, இன்னும் வேகமாக நடந்தவளின் நடை இப்போது ஓட்டமாக மாறி இருக்க... தடதட என்று பின்னால் அவளை துரத்தும் சத்தங்கள் இன்னும் அதிகரிக்க… நெஞ்சுக்குழியில் உயிர்பயம் வந்து ஒட்டிக் கொண்டது. முதுகுத்தண்டு சில்லென்றாக, "இவர்கள் கையில் மாட்டினால் அய்யோ…" என்று இன்னும் வேகம் எடுத்தவள் எந்த வழி போக என்று தெரியாமல் மீண்டும் மீண்டும் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் ஓடி ஓடி களைத்து அனைத்து சக்தியும் வடிந்தாற் போல மூச்சிரைக்க நின்றிருந்தவள் முன்னே வந்து நின்றவர்களை கண்டதும்... ஆதிரைக்கு அதிர்ச்சி இல்லை பேரதிர்ச்சி என்பது கூட சின்ன வார்த்தை தான் அப்போது!
யாராக இருக்கும்?
இசை பயணம் தொடரும்…