வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இதுவும் கடந்து வாழ வேண்டும் அத்தியாயம் 5

GG writers

Moderator
நித்திலா வாழ்க்கை நரகத்தில் இருந்தது போல் இருந்தது...
வீட்டில் யாரிடமும் பேசி பழக்கம் இல்லை...
சாப்பிட சொல்ல கூட மனமில்லை...
அவளுடன் பேசுவதற்கு ஆள் இல்லை...
குமரன் வீட்டில் இருக்கும் நேரம் மிகக் குறைவு அதுவும் குடித்துவிட்டு மட்டும்தான் வருவான் வார்த்தைகளால் அவளைக் காயப்படுத்துவான்...
வீட்டிற்கு சென்று விடலாம் என்று தோன்றும்...
ஆனா வாழ வெட்டியாக சென்றால் வெண்ணிலா வாழ்க்கை என்னாகும் தனக்கு பின் தங்கை இருக்கிறாள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கலாம் குமரனை புரிய வைத்து விடலாம்...
தவறாக புரிந்து கொண்டுள்ளார் சரி செய்து விடலாம் என்று நம்பினால்...
அவள் நம்பிக்கை காற்றில் கரைந்து தான் போனது அவன் மேலும் மேலும் குத்திக்காட்டி பேசினான்...
பத்து நாள் கடந்திருக்கும் சரியாக சாப்பிடாமல் சரியாக தூக்கம் இல்லாமல் மயங்கி சரிந்தால்...
பார்ப்பதற்கு கூட ஆள் இல்லை அவள் மயக்கமுற்று விழுந்து ஆறு மணி நேரம் கழித்து தான் அறையை சுத்தம் செய்ய வந்தவேலை ஆட்கள் கண்ணில் பட்டால்...
குமரனின் பெற்றோர்கள் குமரனின் மாற்றத்தை கண்டறிந்தனர் புதிதாக திருமணம் முடிந்து தினமும் குடித்து வருவது நல்லதல்ல...
ஏதோ சரியில்லை என்று உணர்ந்தனர் ஆனால் அவர்களாக சொல்லாமல் நாமாக கேட்பது சரிவராது என்று காத்திருந்தனர்...
இந்த நிலையில் நித்திலா மயக்கமுற்ற இருப்பது அறிந்து மருத்துவரை அழைத்திருந்தனர்...
அவரும் சோதனை செய்து சத்துக் குறைவாக இருப்பதாகவும் சரியாமல் சாப்பிடாமல் இருப்பதால் மயங்கி இருப்பதாகவும் அவள் கருவுற்றிருப்பதாகவும் மருத்துவர் கூறினார்...
ரத்தினம் உடனே குமரனுக்கு அழைப்பு விடுத்து விஷயத்தை கூறினார்...
உடனே குமரன் வீட்டிற்கு வந்தான்...
இதுவரை பெற்றோர்களுக்கு தெரியாமல் இருந்த சண்டை இன்று அவர்கள் முன் நடந்தது...
யார் குழந்தைடி இது என்றுதான் முதல் வார்த்தை...
நித்தில அதிர்ச்சியில் வாயை மூடி அழுதாள்...
ஏங்க இப்படி பேசுறீங்க நம்ம குழந்தைங்க... நம்ம குழந்தைன்னு இன்னொருக்கா சொல்லாத அது உன் குழந்தை என் குழந்தை இல்ல...
கல்யாணம் ஆகி 17 நாள் தான் ஆகுது அதுக்குள்ள மாசமாய்டியா...
ஏங்க இப்படி பேசுறீங்க என்னால தாங்க முடியலங்க...
அம்மா அப்பா இவ எனக்கு வேண்டாம் கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய பேர் கூட பழகிட்டு என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னால இவ கூட வாழ நினைச்சாலே அருவருப்பா இருக்கு...
என்னடா இப்படி பேசுற...
நான் தெரியாமல் பேசலாமா நிறைய பேர் சொன்னாங்க...
இது என் குழந்தை இல்லமா...
நித்திலாவால் அழுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை...
பொறுமையா முடிவு பண்ணலாம் ரெண்டு பேரோட வாழ்க்கை இது என்று ஜான்சி நிதானமாக கூறினார்...
என்னால அவ கூட வாழ முடியாதும்மா...
டைவர்ஸ் வாங்கலாம்...
பொம்மை வாங்கலாம் மாதிரி டைவர்ஸ் வாங்கலாம்னு பேசாதடா...
பொறுமையா பேசிக்கலாம் இப்ப ரூமுக்கு போ.‌..
நித்தில ஜான்சியிடம் அத்தை இவரை தவிர யாரோட நிழலும் என் மேல பட்டது இல்லை அத்தை...
நீங்களாது என்னை நம்புங்க அத்தை...
நீயும் பொறுமையா இருடா நிதானமா பேசலாம்...
குமரனுக்கு அப்படி ஒரு ஆத்திரம், யார் குழந்தையையோ என் குழந்தைன்னு சொல்ற...
இன்னொருத்தன் குழந்தைய என் குழந்தைனு நினைத்தாலே உடம்பெல்லாம் நடுங்குது...
இந்த குழந்தை இருக்கக் கூடாது இந்த குழந்தை இருக்க கூடாது
என்று வெறி பிடித்த போல் கத்தினான்...
நித்திலா மெதுவாக அறை கதவை திறந்து வந்தாள்...
குமரன் நிலையை கண்டு அதிர்ந்தாள்...
அவன் காலிலேயே விழுந்து விட்டாள் என்னை நம்புங்கள், உங்களைத் தவிர யார் கூடையும் நாம் பழகினது இல்லைங்க என்னை நம்புங்க...
உன்ன நம்பனுமா...
அப்ப...
என்ன செய்யணும்னு சொல்லுங்க நீங்க எது சொன்னாலும் செய்றேன்...
அப்ப இந்த குழந்தை வேணாம் அழிச்சுரு...
வேணாங்க இது மட்டும் வேணாங்க...
இப்பதானே எதுனாலும் செய்றேன்னு சொன்ன செய்...
நம்ம குழந்தைங்க...
திரும்பத் திரும்ப இந்த வார்த்தை சொல்லாத கோவத்துல உன்ன கொன்னுடுவேன்...
என்ன கூட கொல்லுங்க நம்ம குழந்தை பாவங்க என்று கெஞ்சினாள்...
அப்ப குழந்தை நீயும் உயிரோட இருங்க நான் செத்துப் போறேன் அப்படி சொல்லிக்கொண்டே அருகில் இருந்த கத்தியால் கையை கிழிக்கப் போனான்...
நித்திலா பதறி தடுத்தாள்...
நான் வேணுமா குழந்தை வேணுமா...
இது என் குழந்தை இல்லை என்கிற நினைப்புலயே நான் செத்து போயிடுவேன் அதுக்கு நானே சாகுறேன்...
இப்படி எல்லாம் பேசாதீங்க இது உங்க குழந்தை தான்...
நானா குழந்தையா முடிவு பண்ணு...
குழந்தையா அபார்ட் பண்ண சம்மதிக்கவில்லைனால் நான் செத்து போயிருவேன் நீ உன் குழந்தையோட சந்தோசமா வாழ், நானும் எதுக்கு உயிரோட இருக்கனும் என்று லேசாக கையை கிழிக்க ஆரம்பிக்கவும் அட்சோ என்ன பண்றீங்க எனக்கு நீங்களும் முக்கியம் குழந்தையும் முக்கியம் என்றாள்... குமரன் பேசி சரி செய்ய முடியாது என்று கதவை அடித்து சாத்திவிட்டு வெளியே சென்று விட்டான்...
நீ அதை சென்றது அவன் குடும்ப மருத்துவரிடம்...
நித்திலா உடல்நிலை குழந்தை சுமக்கும் அளவு ஆரோக்கியம் குறைவாக இருப்பதாகவும் குழந்தையை கொஞ்ச நாள் கழித்து எதிர்பார்ப்பதாகவும் இப்போது இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்லி மாத்திரையை பெற்றுக் கொண்டான்... மருத்துவரும் சற்றுமுன் தான் அவளது உடல்நிலை பரிசோதித்து வந்ததால் குமரன் கூறுவது உண்மை என்று நம்பினார் அதனால் அவரும் கொடுத்து விட்டார்...
குமரன் வீட்டிற்கு சென்று பணிப்பெண்ணிடம் "நித்திலா சாப்பிட்டாளா? என்று கேட்டான்"
இல்லை என்று கூறவும், மாத்திரையை பணிப்பெண்ணிடம் கொடுத்து அடுத்து எது சாப்டாலும் இந்த மாத்திரையை அதுல கலந்து கொடுத்துடு என்று கூறினான்... பணிப்பெண்ணிற்க்கும் நித்திலாவின் உடல்நிலை சரியில்லை என்பதால் அதற்குரிய மாத்திரை என்று நினைத்துக் கொண்டாள்... நித்திலாவும்,குமரன் சென்றதிலிருந்து சாப்பிடாமல் இருந்தவள் நமக்காக இல்லை என்றாலும் குழந்தைக்காக சாப்பிடணும் என்று நினைத்து சாப்பிட எழுந்து சென்றாள்... சாப்பிட மனம் இல்லாமல் பணிப்பெண்ணிடம் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்குமாறு கூறினாள்...
பணிப்பெண்ணும் மாத்திரை கலந்து ஜூஸ் கொடுத்தாள்... அடுத்த அரை மணி நேரத்தில் நித்திலாவின் உயிரில் உருவான உயிர் காற்றில் கரைந்து போனது...
அவள் கத்திய சத்தத்தில் அனைவரும் அறைக்கு விரைந்து வந்து அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்...
அவள் இயல்பு நிலைக்கு வர 3நாட்கள் எடுத்தது...
குமரன் வரவே இல்லை...
மருத்துவர் கூறும் வரை குமரன் செயல் என்று அவளுக்கு புரியவில்லை...
புரிந்த பின்னர் அவனுடன் வாழ விரும்பவில்லை...
உயிரற்ற உடலுடன் அவள் சென்றது தன் தாய் வீட்டிற்கு...
2வருடம் ஆனாது விவாகரத்து முழுமையடைய...
எது வரை இதை கடந்து
வாழ வேண்டும் என்று தெரியாமல் அவள் வாழ்க்கை அதன் வழியில் செல்கிறது...
 
смотрела на большом экране!
Наличие годовой страховки делает ваши путешествия надежнее и спокойнее, так как вы всегда вы сможете рассчитывать на поддержку в непредвиденных ситуациях, https://makolli.tj/strahovka-dlja-poezdki-v-tajland-0/ это проблемы со здоровьем и прочие неприятности.
 
Извините, что не могу сейчас поучаствовать в дискуссии - нет свободного времени. Вернусь - обязательно выскажу своё мнение по этому вопросу.
z tohoto duvodu stranka kasino muze je predcasne zablokovana, ale vzdy muze byt zablokovany platebni kanaly, https://www.deliverdelights.com/nejlepi-online-zaitky-casino-cz-pro-kadeho-hrae/ toto vice ma vliv na hrace.
 
Top