ராவணனே என்னை சிறை எடு 5

"புல்லட் ஹார்ட் பக்கத்துல பட்டிருக்கு , ப்ளட் லாஸ் வேற அதிகமா இருக்கு உயிர் பிழைக்கிறது கஷ்டம் சந்ரு" கழுத்தில் செத்தோஸ்க்கோப் அணிந்திருந்த மருத்துவர் சந்ருவிடம் கூறினார்.
"இல்லை டாக்டர் பையாவோட ஆர்டர், ஏதாவது பண்ணுங்க ஆனா சாகக் கூடாது" என்று சந்ரு பிடிவாதமாக கூறவும் தன் புருவத்தை நீவியவர்,
"என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்றேன்" என்றுவிட்டு உள்ளே சென்றார்.
அஜூதியாவை ஆஷ்ரமத்தில் இறக்கிவிட்ட பிறகு, தன் வீட்டிற்கு வந்த ராவணன் நேராக தன் அறையின் குளியலறைக்குள் புகுந்து, தனது முகத்தை நான்கைந்து முறை தண்ணீரால் வேகமாக அடித்து கழுவிவிட்டு நிமிர்ந்து கண்ணாடியை பார்த்த பொழுது, மேல் சட்டையின்றி போட்டிருந்த கருப்பு நிற ஆம்கட் வெஸ்டுடன் தான் நிற்பதை கவனித்தவனின் மனம் எதை நினைக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருந்ததோ அதை மீண்டும் நினைக்க துவங்க, முகத்தை கூட துடைக்காது ஜன்னல் ஓரம் வந்து கண்களை மூடி அமர்ந்தான்.
ஜில்லென்ற தென்றல் காற்று அவனது ஈர வதனத்தில் வந்து வந்து மோதி சிலிர்ப்பை உண்டாக்க, தன் அறையில் தனிமையாக அமர்ந்திருந்த ராவணனின் மனம் முழுவதையும் அஜூதியாவே ஆக்கிரமித்திருக்க, இனி இது தனக்கு வேண்டாம் என்று தன் அறையில் அவன் ஒரு ஓரமாக போட்டிருந்த பழைய கிட்டார் இன்று வெகு நாட்கள் கழித்து, குழந்தையாக அவனின் கரங்களில் தவழ்ந்தபடி அவன் விரல் அசைவிற்கு இணங்க இசைத்து கொண்டிருக்க, கண்களை மூடி அமர்ந்திருந்தபடி கடந்த கால நிகழ்வுகளை, இதழில் மெல்லிய புன்னகை மலர, நினைத்துக் கொண்டிருந்தவனின் மனதில் இன்று நடந்த நிகழ்வுகளும் ஒவ்வொன்றாக வரிசை வகுக்க, முகம் மலர அமர்ந்திருந்தவனின் வதனம் திடிரென்று கடுமையாக மாறியது.
அப்பொழுது பார்த்து சந்ருவிடம் இருந்து அழைப்பு வர, சில நொடிகளில் அழைப்பை ஏற்றவனின் முகம், எதிர் தரப்பில் என்ன சொல்ல பட்டதோ அதில் இன்னும் ஆக்ரோஷமாக மாற, அலைபேசியையும் கிட்டாரையும் கீழே வைத்துவிட்டு தனது அறையில் இருந்து வெளியேறி, கீழே வந்து, பேஸ்மெண்டில் இருக்கும் சவுண்ட் ப்ரூஃப் அறையின் உறுதியான கதவை வேகமாக திறந்து கொண்டு, கொலைவெறி கண்களில் தாண்டவமாட உள்ளே நுழைந்தான் ராவணன்.
அவன் உள்ளே நுழைந்ததுமே அவனை நோக்கி வந்தது தேவராஜ் தான், சரக்கைப் பத்திரப்படுத்திவிட்டு அவனும் அங்கே வந்திருந்தான்.
"சரக்கை சேஃப் பண்ணியாச்சு பாய்" ராவணனின் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி நடந்துகொண்டே கூறினான்.
"ம்ம்" அவ்வளவு தான் அதற்கு மேல் அவன் ஒருவார்த்தை பேசவில்லை. தேவராஜும் மெளனமாக அவனுடனே நடந்தான்.
சில தூரம் நடந்த பிறகு மீண்டும் ஒரு சிறிய கதவு தெரிய, ராவணன் திறப்பதற்குள் தேவராஜ் கதவைத் திறக்கவும் உள்ளே சென்றவன், அங்கே கட்டிலில் சுவாசத்திற்கான கருவி பொறுத்தப்பட்டிருக்க மயக்கத்தில் கிடந்த பரந்தாமனை அழுத்தமாகப் பார்த்தபடி அவன் அருகே வந்து நின்றவன்,
"எப்போ முழிப்பான்?" எனச் சந்ருவை பார்த்து வினவினான்.
அதற்கு அவன், "ஒருமணிநேரம் ஆகும் பாய்" என்று சொல்லவும், பரந்தாமனை வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந்தான் ராவணன்.
பொதுவாகவே ராவணன் கத்தி கோபப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் ரகமெல்லாம் கிடையாது. எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் முடிந்தளவு நிதானமாகவே செயல்படுபவனின், இந்த நிமிட வேகமும், அவன் கண்களில் இருக்கும் வெறியும், அவனது சகாக்களுக்கே புதிதாக இருக்க, அதிலும் பரந்தாமனை சுடாமலே அஜூதியாவை காப்பாற்றி வர முடிந்திருந்தும், ஏன் ராவணன் அவனை சுட்டான்? சரி அவனை சுட்ட பிறகு ஏன் இப்பொழுது காப்பாற்றி வைத்திருக்கிறான்? என இப்படி பல கேள்விகளுக்கு காரணம் புரியாமல் அவர்கள் குழம்பி நிற்க, ராவணனை நன்றாக கணித்து வைத்திருக்கும் சந்ருவோ அவனது செயல்பாட்டிற்கான காரணம் தெரிந்தும், யாரிடமும் எதுவும் வாய் திறக்கவில்லை. நடப்பதை வேடிக்கை பார்த்தபடி அவன் இடும் கட்டளைகளை மற்றும் நிறைவேற்றிக்கொண்டிருந்தவன், மனதிற்குள் ராவணனும் அஜூதியாவும் எப்படியாவது இணைந்துவிட வேண்டும் என மனதார விரும்பினான்.
ராவணனும் அவனது ஆட்களும் திரும்பி விட்டனர், ஆனால் சரக்கு மட்டும் இன்னும் வந்து சேரவில்லை என்னும் செய்தி வரதனின் தமயன் விக்ரமின் காதுக்கு எட்டியபொழுது மிகவும் கொந்தளித்தவன், அதை தாமதிக்காமல் வரதனிடம் சென்று கூற, அவன் சொன்னதை நிதானமாக கேட்ட வரத பெருமாள் அடுத்து அழைத்தது என்னவோ ராவணனுக்கு தான். அழைப்பு போய் கொண்டே இருந்ததே தவிர, அவன் எடுக்கவே இல்லை. அவன் எடுக்காததும் தேவ்ராஜ்க்கும், சந்ருவுக்கு அவர் மாறி மாறி அழைக்க அவர்களும் எடுக்காது போக, அது வரதனின் கோபத்தை பன்மடங்காக தூண்டிவிட்டது.
பரந்தாமன் மீதிருந்து தன் பார்வையை அகற்றாது நின்றிருந்த ராவணனின் அருகே வந்த தேவராஜ்,
"பாய் வரதன் கால் மேல கால் பண்ணிட்டே இருக்காரு, சரக்குக்காக தான் இருக்கும். நான் வேணும்ன்னா சரக்க கொடுத்துட்டு வரட்டுமா?" என்று ஆர்வத்துடன் கேட்க, திரும்பி அவனை பார்த்தானே ஒரு பார்வை தேவ்ராஜ்க்கு முதுகுத்தண்டு சில்லிட்டு உடம்பெல்லாம் ஒருமாதிரி ஆகிவிட, தேவராஜை தொடர்ந்து அனைவரையும் ஒருமுறை அதே பார்வை பார்த்த ராவணன்,
"நான் சொல்ற வரை சரக்கு எங்கையும் போக கூடாது" என்றான் ஆனால் குரலையெல்லாம் உயர்த்தவில்லை இருந்தும், அவனது குரலும் அதில் இருந்த அழுத்தமும் அனைவருக்குள்ளும் கிலியை பரப்பியது.
"பார்த்தியா அண்ணா உன் ஃபோனை கூட எடுக்க மாட்டிக்கிறான். நான் தான் சொன்னேன்ல அவன் சரி இல்லைன்னு திமிரு பிடிச்சவன்" என விக்ரம் பல்லை கடித்தபடி வரதனிடம் சீறிக்கொண்டிருந்தான். ஆனால் வரதன் எதுவும் பேச வில்லை நிமிர்ந்து அமைதியாக விக்ரமை பார்த்தவன், "அங்க என்ன நடந்துச்சுன்னு நாம கண்காணிக்க அனுப்பின ஆள்ட்ட விசாரி" என்று மட்டும் கூறினார்.
"நீ கேப்பன்னு தெரியும் அண்ணன், அதான் முன்னாடியே பேசிட்டேன், இப்போ வந்திருவான்" என்று சொல்லும் பொழுதே அவர்களை நோக்கி வந்த கட்டுமஸ்தான இளைஞன் ஒருவன் வரத பெருமாளை பார்த்து வணங்கிவிட்டு விக்ரமை பார்க்க,
"இவன் தான் அண்ணன் நாம அனுப்புனா ஆளு" என வரதனின் காதில் விக்ரம் சொல்லவும், அவனை ஆராய்ந்த வரதன் அவனிடம், "சரக்கு என்னாச்சு?" என்றார்.
"சரக்கு ராவணன் கிட்ட தான் இருக்கு ஐயா" என்றதுமே வரதனின் முகம் கோபத்தில் நெருப்பாய் தகிக்க,
"அது மட்டும் இல்லை ஐயா" என தொடர்ந்த அந்த ஆடவன், "ராவணன் கூட ஒரு பொண்ணும் கார்ல இருந்துச்சு, அதுக்கப்புறம் அவன் கூடவே ஒருத்தன் இருப்பானே சந்ரு, அவனும் இன்னும் கொஞ்ச பேரும் சேர்ந்து அந்த பரந்தாமனை தூக்கி கார்ல போட்டு கொண்டு போனாங்க, நான் கண்காணிச்ச வரை இவ்வளவு தான் ஐயா எனக்கு நடந்துச்சு" என்றான்.
ராவணனுடன் ஒரு பெண்ணும் இருந்தாள், என்பதை கேட்டதும் ஆச்சரியத்துடன் அந்த ஆடவனை பார்த்த விக்ரம் அவனிடம்,
"யாரது?" என்று ஆர்வத்துடன் வினவ,
"எனக்கு தெரியாது அண்ணன், இருட்டுல முகம் தெளிவா தெரியல" என்றவன் விடைபெறுவதற்காக அவர்களை பார்க்க, அவனை செல்லுமாறு தன் தன் கரம் அசைத்து வரதன் செய்கை செய்யவும் இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு, அந்த ஆடவன் சென்ற மறுநொடி,
"சரக்கை கையில வச்சிட்டு நம்ம கிட்ட தரவும் இல்லை, ஃபோன் போட்டாலும் எடுக்க மாட்டிக்கிறான், நமக்கு எதிரா ஏதோ பண்ணிட்டு இருக்கான் அண்ணா. இவனை விட கூடாது, முதல்ல அந்த பொண்ணு யாருன்னு கண்டு பிடிக்கணும்" என தீவிரமாக கூறிய விக்ரமின் கன்னத்தில் ஓங்கி அறைந்த வரதபெருமாள்,
"முட்டாள்! சரக்கையும் தராம, பரந்தாமனையும் ஏன் தூக்கியிருக்கான்னு நான் குழம்பி போய் இருக்கேன் ஆனா உன் புத்தி பொண்ணு பின்னாடியே போகுது? ம்ம் தொலைச்சிடுவேன் வந்து வண்டியெடு" என சீற்றத்துடன் கூறிய வரதனின் கார் புயலென ராவணனின் கோட்டைக்குள் நுழைந்தது.
நொடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் நேரமாகி, கடந்த பிறகு மெல்ல கண்விழித்த பரந்தாமன், முழு சுய நினைவை அடைந்த பொழுது, மரநாற்காலியில் சோர்வாக அமர்ந்திருக்க அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி அவனை தன் கனல் விழி தகிக்க பார்த்து கொண்டிருந்தான் ராவணன். சுற்றி இருந்த அவனது ஆட்கள் அவனின் உத்தரவுக்காக காத்திருக்க, அப்பொழுது ராவணனை ஆக்ரோஷமாக பார்த்த பரந்தாமன்,
"என் பலம் என்னனு தெரியாம மோதிட்டு இருக்க நீ, கடைசியா சொல்றேன் என்னை ஒழுங்கா விட்று இல்லை ஒருத்தனும் தப்ப மாடீங்க" என்று அந்த நிலைமையிலும் அவனை மிரட்ட, பரந்தாமனின் பேச்சில் பொங்கியெழுந்த சந்த்ரு ராவணனின் கட்டளைக்காக அவனை பார்க்க, தலைவனின் கண்ணசைவில் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டவன், இரும்பு ராடால் பரந்தாமனின் முதுகை தாக்கினான். அவ்வளவு தான் வலி தாங்காமல் அலறிவிட்டான் பரந்தாமன்.
அப்பொழுது அஜூதியாவின் கலங்கிய விழிகளை நினைத்து பார்த்த ராவணன்,
"இது போதாது இன்னும் இன்னும் இன்னும் சத்தமா கத்து" என பரந்தாமனின் முகத்தை பார்த்து வெறிகொண்ட மிருகம் போல உறும, ஒன்று இரெண்டு மூன்று என அடுத்தடுத்து பரந்தாமனின் முதுகு இரும்பு ராடால் தாக்கப்பட, பரந்தாமனின் அலறல் ஒலி அந்த அறையை நிரப்பியது. பரந்தாமனோ இதற்கு மேல் தாங்க முடியாது என்கிற நிலையில்,
"உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி பண்ற? என்னை விட்று" என வார்த்தைகளை கோர்த்து பேச முடியாது மிகவும் தடுமாறியவர் கடினப்பட்டு ஒருவழியாக பேசி முடித்தார்.
கண்களை மூடிய நிலையில் பரந்தாமனின் அலறலை ரசித்து கொண்டிருந்த ராவணன் அவன் பேசியதை கேட்டு தன் விழிகளை திறந்த, சில நொடிகள் பரந்தாமனை வெறித்து பார்த்தவன்,
"வேணும் தான், ம்ம்"என்று யோசிப்பது போல தனது ஆள்காட்டி விரலால் நெற்றியை தட்டினான். பிறகு யோசனை வந்தவனாய் பரந்தாமனை பார்த்து,
"உன் உயிரை, தரியா?" என இலகுவாக கேட்டு அவனது அதிர்ந்த முகத்தை பார்த்து சத்தமாக சிரிக்க, தான் யார்? தன் செல்வாக்கு என்ன? இவனிடம் எல்லாம் இப்படி சிறைப்பட்டு கிடக்க வேண்டியிருக்கிறதே என்கிற இயலாமையில் அவனை பார்த்து முறைத்தவர்,
"இங்க பாரு திரும்பவும் சொல்றேன், எவ்வளவு பணம் வேணும்னாலும் வாங்கிக்கோ என்னை விட்று. நீ தப்பான இடத்துல மோதிட்டு இருக்க டா, நான் மட்டும் நினைச்சேன் நீ இருக்கமாட்ட" என முதலில் ஆவேசத்துடன் கூறியவர், 'முடிஞ்சத பண்ணிக்கோடா' என்னும் தோரணையில், எதற்கும் அசையாது தன்னை திமிரோடு பார்க்கும் ராவணனை பார்த்து மனதளவில் தளர்ந்தவர் 'இவனிடம் இனி மிரட்டியெல்லாம் ஒன்றும் வேலைக்காகாது முடிந்தளவு பணிந்துவிட வேண்டும், நமக்கான நேரம் கிடைக்கும் பொழுது ஒருத்தனையும் விட கூடாது' என மனதிற்குள் முடிவெடுத்தவர்,
“நான் உனக்கு என்ன டா பண்ணினேன்? என்கூட உனக்கு என்ன தான் பகை? எனக்கு உன்னை இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி கூட நியாபகம் இல்லையே" என சோர்வுடன் சொல்ல,
"ஓ! நீ என்ன பண்ணினன்னு உனக்கு நியாபகம் இல்லையா?" என்று ஒருவித அழுத்தத்துடன் கேட்டவனிடம் என்ன பதில் கூறுவது என புரியாது விழித்த பரந்தாமன், "ஆமா நியாபகம் இல்லை" என தலையாட்டினான்.
"ம்ம் நியபாகம் இல்லைன்னா, நியாபகம் படுத்திடலாம் பரந்தாமன்" என்ற ராவணனின் குரலில் இருந்த அமைதி பரந்தாமனை மிகவும் அச்சுறுத்த, அவனது விழிகளில் தெரிந்த பயத்தை உள்வாங்கியபடி நாற்காலியில் இருந்து எழுந்து கொண்ட ராவணன், பரந்தாமனின் அருகே வந்து அவனின் வலது கரத்தை வளைத்து பிடித்து, அதை அவனது முதுகுடன் சேர்த்து அழுத்தி, வலியில் அவன் துடித்த துடிப்பை ரசித்தபடி அவனிடம்,
"தப்பான இடத்துல கைவச்சிட்ட பரந்தாமா! அஜூதியாவை யாருன்னு நினைச்ச ஹான்" என்று அவன் பார்த்த பார்வையில் பரந்தாமனுக்கு உள்ளே தட தடத்தது. ஆக அஜூதியாவுக்காக தான் இவ்வளவுமா? ஒரு பெண்ணிற்காகவா! தன்னை படுத்துகிறான்! பரந்தாமன் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, அவனது வலது கரத்தை இழுத்து பிடித்த ராவணன் "இந்த கை தானடா" என ஒருகணம் தன் விழிகளை மூடி அஜூதியா கலைந்த சிகையும், கிழிந்த ஆடையுடன் தன்னிடம் காப்பாற்றும் படி ஓடி வந்ததையும், பரந்தாமன் அவளது கரத்தை அழுத்தமாக பிடித்திருந்ததையும், நினைத்து பார்த்தவன் அதன் பிறகு எதை பற்றியும் யோசித்து பார்க்கவில்லை.
கண்களை மூடிய நிலையில் தன் மறு கரத்தை மட்டும் சந்ருவை நோக்கி நீட்டியவன் அவன் கொடுத்த அகன்ற கூர்மையான அமைப்பை கொண்ட கத்தி ஒன்றை பெற்றுக்கொண்டு, பரந்தாமனை தீக்கங்கை போல பார்க்க, “ராவணா வேண்டாம் ...”, “ஏய் வேண்டாம் டா” வரதன் மற்றும் பரந்தாமனின் குரல்கள் ஒன்றாக கேட்க, தடுக்கும் தனது ஆட்களை தள்ளிவிட்டு உள்ளே வந்த வரதனை ஒருபார்வை பார்த்துவிட்டு பரந்தாமனை பார்த்தவன், அஜூதியாவை எண்ணியபடி, நொடி தாமதிக்காது ஆயுதம் ஏந்தியிருந்த தன் கரத்தை ஓங்கி வீசியவன், முகத்தில் தெறித்த ரத்த துளிகளுடன் அகோரனாய் காட்சியளித்தான் அந்திரன் ராவண ஈஷ்வரன்.
கொலைகள் ஒன்றும் வரதனுக்கு புதிதல்ல, இதை விட பலமடங்கு செய்துவிட்டு தான் இப்பொழுது இந்த நிலையில் இருக்கிறான், இருந்தும் கத்தியை ஓங்கியபடி ராவணன் அவரது விழிகளை நேருக்கு நேர் பார்தானே அகோர பார்வை அதில் ஆடி போனவருக்கு, அதற்கு மேல் அங்கு நிற்க தோன்றவில்லை. தடுமாறிய தன்னை நிலை படுத்தி கொண்டவர், விறுவிறுவென அங்கிருந்து கிளம்பியிருந்தார்.
காரில் போகும் வழியெல்லாம் அவரது சிந்தனை ராவணனை பற்றி தான் இருந்தது. அப்பொழுது "அண்ணா அந்த ராவணன் நாம நினைச்சதை விட ரொம்ப ஆபத்தானவன்" என விக்ரம் சிறு அதிர்ச்சியுடன் சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்த வரதன்,
"ஆனா நான் அவனை விட மோசமானவன்" என தன் பற்களை நர நரத்தபடி கூறியவர் மேலும் தொடர்ந்து, "அந்த பொண்ணு அதான் அஜூதியா, அவ யாருன்னு விசாரி, அதுக்கு முன்னாடி நம்ம ஆளுங்க எத்தனை பேரை வேணும்னாலும் கூட்டிட்டு போ, சரக்கு நாளைக்கு காலையில குள்ள கைக்கு வந்தாகணும். குறுக்க எவன் வந்தாலும் விட்றாத. அவன் வந்தாலும்!" என்று இறுதி வாக்கியத்திற்கு அழுத்தம் கொடுத்து கூற, விக்ரம் ஆமோதிப்பதாக தலையசைத்தான்.
ராவணன் சிறையெடுப்பானா??
For Comments Please Click Here
Ravanan sema writer ji.....😍💗 Dhiya sollamalye avaluku thevaiyanathu ellame panurane....🤩 early waiting for the next ud....🤗 Thank you so much dali
pmtamilnovels.com