Brammastram Writers
Moderator
"நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி வேணி, நல்ல இடம் அமைஞ்சிருக்கு. எப்பவும் சந்தோஷமா இருக்கணும்." என்றவர்,
"அப்படியே உங்க ரெண்டு பேருக்கும் நல்ல வரன் வந்துருச்சுன்னா நான் நிம்மதியா இருப்பேன்." என்று அஜூதியாவையும் இந்திராவையும் பார்த்து சொல்ல,
"என்னது கல்யாணமா? ஆள விடுங்க, இன்னைக்கு நைட் பாம்பே கிளம்புறேன். இந்த இன்டெர்வியூவ் மட்டும் ஓகே ஆச்சு, உங்க யார் கண்ணுலையும் நான் படவே மாட்டேன்." என்ற இந்திரா வழக்கம் போல துடுக்காக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, ஒரு பெருமூச்சுடன் அஜூதியாவைப் பார்த்தார் ஜானகி.
"நீ என்ன முழிக்கிற? அவளை மாதிரி நீயும் ஏதாவது சாக்கு சொல்ல போறியா?"
"கல்யாணம் இப்போ வேண்டாம்மா, நான் வேலைக்கு போகணும்னு இருக்கேன்." என்று சொல்ல,
"வேலைக்கு போனா கல்யாணம் பண்ண கூடாதுன்னு ஏதும் இருக்கா என்ன? வேலை கிடைச்சா பாரு, ஆனா கல்யாணம் பண்ணியே ஆகணும். உனக்குன்னு ஒருத்தன் வந்தா அவன் உன்னை பார்த்துக்க போறான்."
"ஏய் உனக்கே உனக்காக ஒருத்தன் வேணும், அவன் உனக்காக எதை வேணும்னாலும் செய்யணும், உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும் இப்படியெல்லாம் உனக்கு ஆசையே இல்லையா அஜூ?" என்று வேணியும் ஜானகியுடன் இணைந்துகொண்டு சொல்ல,
'உனக்கே உனக்காக ஒருத்தன் வேணும், அவன் உனக்காக எதை வேணும்னாலும் செய்யணும்' என்று வேணியின் சொற்களைக் கேட்ட மறுநொடி, பெண்ணவளின் மனதிற்குள் மின்னலைப் போல ராவணனின் இறுகிய முகம் சட்டென்று வந்து மறைய அஜூதியா அதிர்ந்து விட்டாள்.
"அப்படித்தான் நல்லா சொல்லு வேணி. நீதான் இந்திராவுக்கும் அஜூதியாவுக்கும் எடுத்து சொல்லணும்." என்ற ஜானகி அஜூதியாவின் தலையை வாஞ்சையுடன் தடவி,
"உனக்கும் இதுபோல எல்லாம் நடக்கணும், புடவையில உன்னை பார்க்கணும்னு எனக்கும் ஆசை இருக்கும்ல..." என்று சொல்ல, அஜூதியா மீண்டும் அதிர்ந்தாள்.
அவளின் அவன் அவள் கண் முன்னே நின்று கொண்டு வசீகரமாய் சிரிக்க, சட்டென்று பெண்ணவள் கண்களை மூடிக்கொள்ள, இப்பொழுது அவளது மனக்கண்ணிலும் அவளின் மாயவனே! ஒற்றை கண்ணடித்து அழகாய் சிரித்தான், அஜூதியா அசந்துவிட்டாள்.
"அஜூ நான் சொல்றது புரியுதா?" இரண்டு, மூன்று முறை ஜானகி உலுக்கவும், "ஹான்!" மாயவன் காட்டிய மாயாஜாலத்தில் இருந்து விழித்துக் கொண்டவள் மலங்க விழிக்க,
"அதான் இதுவரை இரண்டு, மூன்று சம்பந்தம் வந்துச்சு, நீ வேண்டாம்னு சொன்னதுனால உன்னை கட்டாயப்படுத்த விரும்பாம நான் விட்டுட்டேன். ஆனா இனிமே அப்படி இல்லை, நல்ல சம்பந்தம் வந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும் ஓகேவா? வேலை கூட எப்பவும் கிடைக்கும், ஆனா கல்யாணம் அப்படி கிடையாது." என்று இன்னும் ஜானகி பேசிக்கொண்டே இருக்க, எங்கே அது அஜூதியாவின் காதில் விழுந்தால் தானே...
அவள்தான் ஜானகியின் பின்னால் நின்றுகொண்டு தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் சிறையெடுத்துக் கொண்டிருக்கும், தன் மாயவனை அல்லவா தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
'என்ன இது? திடிரென்று எங்கு பார்த்தாலும் அவன் உருவமே தெரிகிறது' என்று எண்ணி, விட்டால் போதும் என தான் இருக்கும் அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டவளுக்கு, எதை பற்றியும் சிந்திக்காது அந்த பரந்தாமனிடம் இருந்து தன்னைக் கம்பீரத்துடன் காப்பற்றி சென்றது, தன் தேவையைப் புரிந்து தனக்காக ஆடை வாங்கி கொடுத்தது என அன்று ராவணன் செய்த ஒவ்வொன்றும், இன்று இந்த நொடி நினைக்க நினைக்க, ஆணவனின் நிமிர்வு பெண்ணவளைப் பயங்கரமாக ஈர்த்தது.
பரந்தாமனை அனல் தெறிக்க பார்த்தபடி துப்பாக்கியால் சுட்டது அன்று பயத்தைக் கொடுத்தது. ஆனால் இப்பொழுது பிடித்தது. கொலை செய்வது பாவம் என தெரிந்தும் பிடித்தது. அந்த பாவத்தை செய்தவனை மிகவும் பிடித்தது. அதுவும் தனக்காக, தனக்காக மட்டுமே செய்தவனை இதோ அளவுக்கு அதிகமாக பிடிக்கிறது. தன்னை அழுத்தமாக பார்த்த அந்த கனல் விழிகள் அன்று அச்சத்தைக் கொடுத்தது. ஆனால் இந்த நொடி மிகவும் பிடித்தது. ஆக அவன் கழுத்தில் சர்ப்ப வடிவில் இருந்த டாட்டூ துவங்கி, அவன் முதுகில் பாதி தெரிந்த ராஜாளி ரெக்கை வடிவு டாட்டூ, வலது காதோரத்தில் இருந்த மச்சம் என அவன் தொடர்புடைய அனைத்தும் அவளது நினைவுகளை நிறைத்து, முதல் முதலாக பெண்ணவளுள் என்னென்னவோ செய்தது.
விழி மூடினால், விழி திறந்தால் என தன்னை விடாமல் துரத்தும் ராவணனையும் அவனது நினைவுகளையும், அவனின் கம்பீரம் நிறைந்த முகத்தையும் விரட்ட முயன்று வெற்றி கண்டவள், 'தேவையில்லாததை யோசிக்க கூடாது அஜூ, இது சரியில்லை' என தன்னைத் தானே திட்டிக்கொண்டு கண்களை மூடிய பிறகு சில மணிநேரத்தில் உறங்கினாள்.
பாழடைந்த கட்டிடம்! அதில் இருக்கும் அழுக்கு படிந்த சுவர்கள்! அந்த இரவு நேரத்தில் தனிமையில் அங்கு நின்றிருந்த அஜூதியாவுக்கு பயத்தில் உடல்லெல்லாம் வியர்வையில் குளித்திருக்க, அங்கிருந்து தப்பிக்கும் வழி தெரியாது தவிக்கிறாள். அப்பொழுது, "தப்பிக்கலாம்ன்னு நினைக்கிறியா அது நடக்காது, உன்னால முடியாது." என்று கேட்ட பரந்தாமனின் குரலில் சர்வமும் அடங்கி போக,
'நீயா? நோ! யாரவது வாங்க, காப்பாத்துங்க...' என கத்திக்கொண்டு ஓடுகிறாள். அவன் எக்காளமாய் சிரித்தபடி அவளை விடாமல் துரத்துகிறான். அவளும் விடாமல் ஓடுகிறாள். ஒரு கட்டத்தில் தடுக்கி கீழே விழுகிறாள். அவன் மெல்ல மெல்ல நிதானமாய் அவளை நெருங்கி வர,
"காப்பாத்துங்க..." என வாய்விட்டு கத்தியபடி அஜூதியா கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள். பெண்ணவள் அச்சத்துடன் கண்விழித்தாள். அங்கே பரந்தாமனும் இல்லை, பழைய கட்டிடமும் இல்லை. வழக்கமாக அவளும் இந்திராவும் உறங்கும் அறையில், இந்திரா இன்டெர்வியுவிற்காக மும்பை கிளம்பியிருந்ததால் அவள் மட்டும் இருந்தாள்.
அந்த சம்பவத்திற்கு பிறகு இது போல அடிக்கடி வரும் கனவுதான். ஆனால் துணைக்கு இந்திரா இருந்ததால், அவள் சமாதானம் செய்து பார்த்துக்கொள்ள, அஜூதியா கொஞ்ச தைரியமாக இருப்பாள். ஆனால் இப்பொழுது மிகவும் பயமாக இருந்தது. 'இந்த பாதிப்பில் இருந்து எப்பொழுதுதான் தனக்கு விடுதலை கிடைக்கும்' என்று எண்ணியவளை அவள் இப்பொழுது இருக்கும் அறையே பயத்தைக் கொடுத்தது.
ஒருவித அச்சத்துடன் அமர்ந்திருந்தவளுக்கு காற்றில் ஜன்னல் படபடவென அடிக்கும் சத்தம் கூட நடுக்கத்தைக் கொடுக்க, எழுந்து ஜன்னலை மூடியவளின் கண்களில் டேபிளில் மடித்து வைக்கப்பட்ட துணிகள் பட, மெல்ல நடந்து அங்கே சென்றவள் ஒருகணம் தன் விழிகளை மூடி திறந்து, அங்கே இருந்த ராவணனின் கருப்பு நிற சட்டையை, சில நொடிகள் தயக்கத்திற்கு பிறகு தன் கரத்தில் எடுத்தாள்.
"அப்படியே உங்க ரெண்டு பேருக்கும் நல்ல வரன் வந்துருச்சுன்னா நான் நிம்மதியா இருப்பேன்." என்று அஜூதியாவையும் இந்திராவையும் பார்த்து சொல்ல,
"என்னது கல்யாணமா? ஆள விடுங்க, இன்னைக்கு நைட் பாம்பே கிளம்புறேன். இந்த இன்டெர்வியூவ் மட்டும் ஓகே ஆச்சு, உங்க யார் கண்ணுலையும் நான் படவே மாட்டேன்." என்ற இந்திரா வழக்கம் போல துடுக்காக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, ஒரு பெருமூச்சுடன் அஜூதியாவைப் பார்த்தார் ஜானகி.
"நீ என்ன முழிக்கிற? அவளை மாதிரி நீயும் ஏதாவது சாக்கு சொல்ல போறியா?"
"கல்யாணம் இப்போ வேண்டாம்மா, நான் வேலைக்கு போகணும்னு இருக்கேன்." என்று சொல்ல,
"வேலைக்கு போனா கல்யாணம் பண்ண கூடாதுன்னு ஏதும் இருக்கா என்ன? வேலை கிடைச்சா பாரு, ஆனா கல்யாணம் பண்ணியே ஆகணும். உனக்குன்னு ஒருத்தன் வந்தா அவன் உன்னை பார்த்துக்க போறான்."
"ஏய் உனக்கே உனக்காக ஒருத்தன் வேணும், அவன் உனக்காக எதை வேணும்னாலும் செய்யணும், உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும் இப்படியெல்லாம் உனக்கு ஆசையே இல்லையா அஜூ?" என்று வேணியும் ஜானகியுடன் இணைந்துகொண்டு சொல்ல,
'உனக்கே உனக்காக ஒருத்தன் வேணும், அவன் உனக்காக எதை வேணும்னாலும் செய்யணும்' என்று வேணியின் சொற்களைக் கேட்ட மறுநொடி, பெண்ணவளின் மனதிற்குள் மின்னலைப் போல ராவணனின் இறுகிய முகம் சட்டென்று வந்து மறைய அஜூதியா அதிர்ந்து விட்டாள்.
"அப்படித்தான் நல்லா சொல்லு வேணி. நீதான் இந்திராவுக்கும் அஜூதியாவுக்கும் எடுத்து சொல்லணும்." என்ற ஜானகி அஜூதியாவின் தலையை வாஞ்சையுடன் தடவி,
"உனக்கும் இதுபோல எல்லாம் நடக்கணும், புடவையில உன்னை பார்க்கணும்னு எனக்கும் ஆசை இருக்கும்ல..." என்று சொல்ல, அஜூதியா மீண்டும் அதிர்ந்தாள்.
அவளின் அவன் அவள் கண் முன்னே நின்று கொண்டு வசீகரமாய் சிரிக்க, சட்டென்று பெண்ணவள் கண்களை மூடிக்கொள்ள, இப்பொழுது அவளது மனக்கண்ணிலும் அவளின் மாயவனே! ஒற்றை கண்ணடித்து அழகாய் சிரித்தான், அஜூதியா அசந்துவிட்டாள்.
"அஜூ நான் சொல்றது புரியுதா?" இரண்டு, மூன்று முறை ஜானகி உலுக்கவும், "ஹான்!" மாயவன் காட்டிய மாயாஜாலத்தில் இருந்து விழித்துக் கொண்டவள் மலங்க விழிக்க,
"அதான் இதுவரை இரண்டு, மூன்று சம்பந்தம் வந்துச்சு, நீ வேண்டாம்னு சொன்னதுனால உன்னை கட்டாயப்படுத்த விரும்பாம நான் விட்டுட்டேன். ஆனா இனிமே அப்படி இல்லை, நல்ல சம்பந்தம் வந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும் ஓகேவா? வேலை கூட எப்பவும் கிடைக்கும், ஆனா கல்யாணம் அப்படி கிடையாது." என்று இன்னும் ஜானகி பேசிக்கொண்டே இருக்க, எங்கே அது அஜூதியாவின் காதில் விழுந்தால் தானே...
அவள்தான் ஜானகியின் பின்னால் நின்றுகொண்டு தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் சிறையெடுத்துக் கொண்டிருக்கும், தன் மாயவனை அல்லவா தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
'என்ன இது? திடிரென்று எங்கு பார்த்தாலும் அவன் உருவமே தெரிகிறது' என்று எண்ணி, விட்டால் போதும் என தான் இருக்கும் அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டவளுக்கு, எதை பற்றியும் சிந்திக்காது அந்த பரந்தாமனிடம் இருந்து தன்னைக் கம்பீரத்துடன் காப்பற்றி சென்றது, தன் தேவையைப் புரிந்து தனக்காக ஆடை வாங்கி கொடுத்தது என அன்று ராவணன் செய்த ஒவ்வொன்றும், இன்று இந்த நொடி நினைக்க நினைக்க, ஆணவனின் நிமிர்வு பெண்ணவளைப் பயங்கரமாக ஈர்த்தது.
பரந்தாமனை அனல் தெறிக்க பார்த்தபடி துப்பாக்கியால் சுட்டது அன்று பயத்தைக் கொடுத்தது. ஆனால் இப்பொழுது பிடித்தது. கொலை செய்வது பாவம் என தெரிந்தும் பிடித்தது. அந்த பாவத்தை செய்தவனை மிகவும் பிடித்தது. அதுவும் தனக்காக, தனக்காக மட்டுமே செய்தவனை இதோ அளவுக்கு அதிகமாக பிடிக்கிறது. தன்னை அழுத்தமாக பார்த்த அந்த கனல் விழிகள் அன்று அச்சத்தைக் கொடுத்தது. ஆனால் இந்த நொடி மிகவும் பிடித்தது. ஆக அவன் கழுத்தில் சர்ப்ப வடிவில் இருந்த டாட்டூ துவங்கி, அவன் முதுகில் பாதி தெரிந்த ராஜாளி ரெக்கை வடிவு டாட்டூ, வலது காதோரத்தில் இருந்த மச்சம் என அவன் தொடர்புடைய அனைத்தும் அவளது நினைவுகளை நிறைத்து, முதல் முதலாக பெண்ணவளுள் என்னென்னவோ செய்தது.
விழி மூடினால், விழி திறந்தால் என தன்னை விடாமல் துரத்தும் ராவணனையும் அவனது நினைவுகளையும், அவனின் கம்பீரம் நிறைந்த முகத்தையும் விரட்ட முயன்று வெற்றி கண்டவள், 'தேவையில்லாததை யோசிக்க கூடாது அஜூ, இது சரியில்லை' என தன்னைத் தானே திட்டிக்கொண்டு கண்களை மூடிய பிறகு சில மணிநேரத்தில் உறங்கினாள்.
பாழடைந்த கட்டிடம்! அதில் இருக்கும் அழுக்கு படிந்த சுவர்கள்! அந்த இரவு நேரத்தில் தனிமையில் அங்கு நின்றிருந்த அஜூதியாவுக்கு பயத்தில் உடல்லெல்லாம் வியர்வையில் குளித்திருக்க, அங்கிருந்து தப்பிக்கும் வழி தெரியாது தவிக்கிறாள். அப்பொழுது, "தப்பிக்கலாம்ன்னு நினைக்கிறியா அது நடக்காது, உன்னால முடியாது." என்று கேட்ட பரந்தாமனின் குரலில் சர்வமும் அடங்கி போக,
'நீயா? நோ! யாரவது வாங்க, காப்பாத்துங்க...' என கத்திக்கொண்டு ஓடுகிறாள். அவன் எக்காளமாய் சிரித்தபடி அவளை விடாமல் துரத்துகிறான். அவளும் விடாமல் ஓடுகிறாள். ஒரு கட்டத்தில் தடுக்கி கீழே விழுகிறாள். அவன் மெல்ல மெல்ல நிதானமாய் அவளை நெருங்கி வர,
"காப்பாத்துங்க..." என வாய்விட்டு கத்தியபடி அஜூதியா கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள். பெண்ணவள் அச்சத்துடன் கண்விழித்தாள். அங்கே பரந்தாமனும் இல்லை, பழைய கட்டிடமும் இல்லை. வழக்கமாக அவளும் இந்திராவும் உறங்கும் அறையில், இந்திரா இன்டெர்வியுவிற்காக மும்பை கிளம்பியிருந்ததால் அவள் மட்டும் இருந்தாள்.
அந்த சம்பவத்திற்கு பிறகு இது போல அடிக்கடி வரும் கனவுதான். ஆனால் துணைக்கு இந்திரா இருந்ததால், அவள் சமாதானம் செய்து பார்த்துக்கொள்ள, அஜூதியா கொஞ்ச தைரியமாக இருப்பாள். ஆனால் இப்பொழுது மிகவும் பயமாக இருந்தது. 'இந்த பாதிப்பில் இருந்து எப்பொழுதுதான் தனக்கு விடுதலை கிடைக்கும்' என்று எண்ணியவளை அவள் இப்பொழுது இருக்கும் அறையே பயத்தைக் கொடுத்தது.
ஒருவித அச்சத்துடன் அமர்ந்திருந்தவளுக்கு காற்றில் ஜன்னல் படபடவென அடிக்கும் சத்தம் கூட நடுக்கத்தைக் கொடுக்க, எழுந்து ஜன்னலை மூடியவளின் கண்களில் டேபிளில் மடித்து வைக்கப்பட்ட துணிகள் பட, மெல்ல நடந்து அங்கே சென்றவள் ஒருகணம் தன் விழிகளை மூடி திறந்து, அங்கே இருந்த ராவணனின் கருப்பு நிற சட்டையை, சில நொடிகள் தயக்கத்திற்கு பிறகு தன் கரத்தில் எடுத்தாள்.
சிறையெடுப்பானா?
FOR COMMENTS PLEASE CLICK HEREஇராவணனே என்னை சிறை எடு - கருத்து திரி
ப்பா செம்மையா மடக்கிட்டான் 🔥🔥🔥 ஒரு எக்ஸ் மினிஸ்டரை கொன்னுட்டு அதை க்ளோஸ் பண்ண என்னா பிளான்😳😳 மாஸ்டர் பிளான் டா டேய்👏👏👏 ரவுடி சார் விக்கி🤭🤭🤭🤭🤭 வரதன், விக்கி, சக்தி அப்படினு புதிய எதிரிகளை சம்பாதிச்சு வச்சு இருக்கான்😳😳 இதுல அவணுங்களுக்கு அஜூவை வேற தெரிஞ்சு இருக்கு.. சரக்கு அவனுங்க கைக்கு...
pmtamilnovels.com
Last edited: