Sangeetha raja
New member
Hi..வணக்கம் சகோதர சகோதரிகளே,
நான் உங்கள் பிரியங்கா முத்துகுமார்.எழுதுலகில் அடியெடுத்து வைத்து ஐந்து வருடங்கள் தொட்டுவிட்ட நிலையில் புதிதாக ஒரு முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பதற்காகவே இந்த தளம் உருவாகியதற்கு முக்கிய காரணம்.
உங்கள் அனைவரையும் என்னுடைய புது தளத்திற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடைய நான்கு வருட பயணத்தில் மிக சிறிய அளவிலே நாவல்களை எழுதியிருந்தாலும்,அனைத்தும் எனது மனதிற்கு நெருங்கிய படைப்பு என்பதில் நான் பெருமிதமாகவே உணர்கிறேன்.
இதுவரை பன்னிரெண்டு நெடுந்தொடர் கதைகளையும் ஒரு குறுநாவலையும் எழுதியுள்ளேன்.
அந்த நாவல்களின் விபரங்கள்,
1.ஒண்ணும் புரியல சொல்ல தெரியல
2.செந்தணலில் பூத்த பனிமலர்
3.தேனு(னூ)றும் இதழே…!!
4.எனக்காக பிறந்தாயே எனதழ(கா)கி
5.உயிர்க்குழலில் கசியும் மெல்லிசை நீ…!!
6.இதயம் கனிந்தவளே,என் யட்சிணி
7.மாயோளின் வேந்தனவன்
8.மணிகர்ணிகா
9.கண்டெடுத்தேன் கணப்பொழுதில் காதலை
10.வேள்வியில் ஜனித்த பாரிஜாத மலரிவளோ?
11.காதல் சமர்
12.ஜீவதாசி(குறுநாவல்)
13.அனந்த தாண்டவம்
முதல் பாகம்-உவமை பேசும் விழிகள்
இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவல்,
1.ஓவியப்பாவையிவளோ நின் நேச நயனங்களில்
எதிர்க்காலத்தில் வரக்கூடியவை,
1.அனந்த தாண்டவம் பாகங்கள்
2.அத்யந்த பிரேமை
கடந்த நான்கு வருடங்களாக எனக்கு கொடுத்த ஆதரவை என்னுடைய இந்த தளத்திற்கு அளிக்க வேண்டும் என்பதையும் வாசகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களை பற்றிய அறிமுகத்தையும் என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
I m sangeetha raja.. new one here..
நான் முகநூலில் ஒரு போட்டிப் பற்றிய பதிவை இத்தளம் தொடர்பா பார்த்தேன்.
மெயில் அனுப்பினேன் இன்று தான் கடைசித் தேதி எனப் போடப்பட்டிருந்தது..
பதில் வரவில்லை. எப்பிடி பங்கேற்பது விவரம் சொல்லவும்..