வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உன் நிழலும் நிஜமும் நானடி ❤️❤️❤️ - கதை திரி

அத்தியாயம் 1

உறங்காதவர்களையும் உறங்க செய்யும் நல்லிரவு நேரம், கூடுதலாக உதகை மலையரசியின் குளுமையிலும் உறக்கம் வராமல் அந்த நட்சத்திர மலை குடிலில் (Hills resort) தன் அறையில் உள்ள படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தான், உலகின் தலை சிறந்த மனோதத்துவ நிபுனான் டாக்டர்.ஷ்யாமளா மயூரன்.
பலருக்கு உளவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறுபவன். கடந்த சில நாட்களாக இல்லை இல்லை ஒரு சில மாதங்களாக தன் உறக்கம் துலைத்து தவிக்கிறான். இதில் பெரும் வித்தை என்னவென்றால் அதற்குறிய காரணத்தினை தான் இந்நாள் வரை கண்டறிய முடியவில்லை அந்த மருத்துவனுக்கு.


இன்றும் அது போன்றே தெளிவில்லாத பல காட்சிகள் தோன்றி அவன் துயில் கலைக்க,விதிர்த்து வியர்வை வழிய விழித்தெழுதவனுக்கு அறையினுள் மூச்சடைப்பது போல் இருக்க…அந்த குளிரையும் இரவையும் பொருட்படுத்தாமல் அறையினை விட்டு வெளியேறியவனின் மீது கைப்பேசியில் பேசியவறே வந்து மோதினான் ஒரு புதியவன்.
“அப்பத்தா, பதட்டப்படாதீங்க பாப்பாவை பத்திரமா பத்துகோங்க… டாக்டர் அங்கிளை வர சொல்லுங்க… இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் அங்கு இருப்பேன்…” என பேசியப்படி வந்தவன் ஷ்யாமளா மயூரன் மீது மோத
ஏற்கனவே உறக்க இயலாத கடுப்பில் இருந்தவன் “ஏய்…” என தன்னேதிரில் இருந்தவனை திட்ட தொடங்கியவனின் வார்த்தைகளை ஒலிபெருக்கியின் வாயிலாக வந்த குரல் தடை செய்திருந்தது…
ஷ்யாமளா மயூரன் மீது மேல் மோதியதால் நிலை தடுமாறியவனின் விரல்கள் அலைபேசியின் ஒலிபெருக்கியில் பட்டுவிட, அதில் “அப்புச்சி, கொஞ்சம் சீக்கரம் வாயா… இத்தனை நாளும் விட்டத்தை வெறுச்சி பார்த்துகிட்டு எந்த உணர்வும் இல்லாமல் இருந்தவ இன்னைக்கு கத்தி கதறி மயங்கி விழவும் எனக்கும் உங்க தாத்தாவுக்கும் ஒன்னும் புரியலை…” என முதுமையின் தள்ளாமையோடும், பதட்டத்தோடும், உதறலாக ஒர் குரல் ஒலிக்க…
அக்குரலில் சற்று நிதனித்தவன், தன் எதிரில் இருப்பவனை பார்வையால் எடைப் போட்டான்…

அறடி உயரம், திரவிட நிறம், அவன் முக லட்சணமும், அவன் உடுத்தி இருந்த ஆடையின் தரமும் அவன் வளத்தினை சொல்லாமல் சொல்லியது…

அப்புதியவனோ, தன்னை ஒருவன் உற்று நோக்குவதை கூட கருத்தில் கொள்ளாமல்…. அவனை இடித்ததிற்காக மன்னிப்புக் கூட வேண்டாமல் அலைபேசியில் பேசியவாறே ஷ்யாமை கடக்க முயல…

ஷ்யாமளா மயூரனோ “மிஸ்டர்… ஒன் செக்…?” என அழைத்தான்…
அப்புதியவனோ, ஷ்யாம் மொழியின் உச்சரிப்பின் வித்தியாசத்தில் அவனை நோக்கியவன், ஷ்யாமின் விழியின் வசீகரத்திலும் அதன் வண்ணத்திலும் தான் இருக்கும் சூழலின் நிலை மறந்து அவன் நேத்ரங்களை ரசிக்க தொடங்கினான்.

தன்னேதிரில் இருப்பவனின் அசையா பார்வையில் தான், ஷ்யாம் தான் கண்ணாடி அணிய மறந்ததை உணர்ந்தவன் உதடுகளில் குறுநகை மின்ன, தன் இட கையினை அவன் முகத்தின் அருகில் அசைக்க… அதில் மீண்ட புதியவனோ, தன் செய்கையில் சிறுவெட்கம் தோன்ற “ சாரி…” என்றான்.

ஷ்யாமோ “இந்த சாரி என்னை இடிச்சதுக்க, இல்லை இவ்வளவு நேரம் என்னை சைட் அடிக்சதுக்க… என்றவன். தன் ஒற்றை கண் சிமிட்டி,”பட் நான் ஸ்டிரைட் படி” என உரைக்க.

அவன் சொல்லியதன் பொருள் புரியாமல் முதலில் குழம்பிய புதியவன், பின் அர்த்தம் புரிந்ததும் சற்று சினம் தலை தூக்க… “ நீங்க தப்ப பு…” என விளக்கம் கொடுக்க அரம்பித்தவன்…

ஷ்யாமின் கண்களில் வழியும் விசமத்தையும் பொங்கி வரும் சிரிப்பை தன் கீழ் உதடுகளை கடித்து கட்டுப் படுத்துவதிலும்… அவன் தன்னை கிண்டல் செய்வதை கண்டுக்கொண்டவன்… அப்பொழுது தான் அவனை பதாதி கேசம் முதல் ஆராய தொடங்கினான்…

ஷ்யாம் என்னதான் தமிழில் தடுமாறாமல், தவறுகள் இன்றி பேசினாலும் அவன் வார்தைகளின் உச்சரிப்பில் உள்ள வித்தியாசமும், அவனின் மீசை இல்ல முகமும், அதித வெண் தேகமும், அவனை அந்நியானாக உருவாகப்படுத்தியது.
புதியவனின் ஆராய்ச்சி பார்வையில் ஷ்யாமின் விழிகளில் கேலி கூடியது…

அவன் விழிகளின் பாவனையினை சரியாக புரிந்துக் கொண்ட புதியவன்… “ நோ.. நோ… மிஸ்டர்….” என…
“ஷ்யாம்…” என்றவனின் மனநிலை சற்று நேரத்திற்கு முன்பு எவ்வளவு இறுக்கமாக, பாரமாக இருந்ததோ அதற்கு நேர்மாறாக தளர்வாக உணர்ந்தவன்…

“ஈட்ஸ் ஒகே… படி கூல்… என் கண்ணை முதல்ல பார்குற எல்லாரோட ரியக்ஷ்சனும் இப்படி தான் இருக்கும் ” என்றான் ஷ்யாம்.
மற்றவருடன் இலகுவாக பழகு கூடாது, தன்னிடம் நெருங்கி பழகுபவர்களை தவிர்க்க வேண்டும் என பல விதிகளை பால பாடமாக பயின்றவன்… அதனை இந்நொடி வரை பின்பற்றுபவன், இன்று அதனை எல்லாம் மறந்து புன்னகையுடன் நட்பாக தன் கரங்களை புதியவனை நோக்கி நீட்டினான்.

“ ஹாய் நான் விஷ்ணு மித்ரன்…” என்றவன் ஷ்யாமின் கரங்களோடு கை குலுக்கியவனின் அழைபேசி மீண்டும் இசைக்க… அவ்வழைப்பை ஏற்றவன் முகம், அந்த பக்கம் சொன்ன செய்தியில் சடுதியில் நிறம் மாறியது…

“இவனுகளுக்கு வேற வேலையே இல்லை… நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன் அப்பத்தா… நீங்க பதட்டப்படாதீங்க…” என்றவன், “பாய் ஷ்யாம், ஒரு எமர்ஜென்சி…” என கூறியப்படி அவனிடம் விடைப் பெற முயல…

ஏதோ சொல்ல முடியாத, புரியாத உணர்வு உந்த, “விஷ்ணு, இஃப் யூ டோன்ட் மைண்ட், நா… நான் உங்க கூட வரவ…பிகாஸ் ஐ அம் எ டாக்டர்…(Because I am a Doctor)” என திக்கி திணறி, தயங்கி என ஒரு வழியாக தான் கேட்க நினைத்ததை கேட்டு விட்டவன் தவிப்பாக விஷ்ணுவின் முகம் பார்த்தான்.

ஏனெனில் இதுவரை அடுத்தவரிடம் எதற்காகவும் அனுமதி வேண்டி பழக்கமில்லாதவன்,முதல் முறை வேண்டி நின்றான்.

விஷ்ணுவிற்கு ஷ்யாம் அவ்வாறு கேட்டதும் அவன் முகத்தில் சந்தோசமும், நிம்மதியும் தோன்ற கூடவே ஒருவித சங்கடமும் தோன்றியது.

சந்தோசமும், நிம்மதியும் அவனின் தற்போதிய மனநிலையில் தனிமையில் பயணிக்க வேண்டிய அவசியமின்றி ஒர் துணை கிடைத்தை நினைத்து. சங்கடம் இன்று அவன் வீடு இருக்கும் சூழ்நிலையினை நினைத்து மௌனிக்க…

விஷ்ணுவின் அமைதியில், ‘பார்த்து பத்து நிமிடம் கூட ஆகாத தன்னை உடன் அழைத்து செல்ல கேட்ட’ தன் மடத்தனத்தினை உணர்த்த ஷ்யாம்.
“சாரி … இட்ஸ் நோ ப்ரொப்லெம் விஷ்ணு… நீங்க கிளம்புங்க… சீ யூ லேடர்” என சொல்லி, தன் அறைக்குள் செல்ல திரும்பியவனின் கரம் பற்றிய விஷ்ணு…
“சரி வாங்க… ஐ அல்சோ நீட் அ காம்பனியன்”(I also need a companion) என சொல்ல, ஷ்யாமின் மனமோ காரணம் இன்றி துள்ளி குதித்தது.
அதன்பின் நொடியும் தமாதிக்காமல் இருவரும் உதகை மலையிலிருந்து கோத்தகிரி நோக்கி பயணிக்க தொடங்கினார்.

விஷ்ணு தன் ஜீப்பினை இயக்க, அந்த இரவிலும், மலை வளைவுகளிலும் சீராக வண்டி ஒட்டும் அவனின் லவகத்தினை கண்டு வியந்த ஷ்யாமோ “யூவர் டிரைவிங்க் அவ்ஸாம் விஷ்ணு…”(your driving awesome Vishnu) என சிலாகித்தவன்.

“இங்க இருந்து ஹாஸ்பிடல் போக டைம் டுயூரேஷன் (time duration) என்ன?...”என கேட்க
விஷ்ணுவோ, “ ஹா… ஹாஸ்பிடல் எதுக்கு…?” என குழப்பமாக வினவினான்.

ஷ்யாமோ, “ உங்க ரிலேட்டிவ்க்கு(Relative) தானே ஹெல்த் இஸ்யூ…?” என கேள்வியாக விஷ்ணுவை நோக்கினான்.
விஷ்ணுவோ ஒரு பெரும் மூச்சினை வெளியேறியவன்… “என் தங்கைக்கு தான் …” என்றான் மருத்து போன குரலில்…

அடுத்ததாக “என்ன ஹெல்த் இஸ்யூ…” என வினவ வந்தவன் விஷ்ணுவின் முகத்தில் உள்ள வலியினை உணர்ந்துக் கொண்டான். ஏனெனில் அவனிற்கும் ஒரு தங்கை உண்டால்லாவ… அதனால் பேச்சை மற்றும் விதமாக…
“உங்களுக்கு போன் பண்ணது உங்க அப்…அப்… சாரி பாட்டி தானே…? என்றான் ஷ்யாம், பாவம் அவனுக்கு தமிழ் பேச தெரியும் என்றாலும் சில வார்த்தைகள் உச்சரிக்க சிரமப்படுவான் அவன் வளர்ந்த சூழல் அப்படி.

அவன் சொல்லிய விதத்தில் விஷ்ணுவிற்கு சிரிப்பு வர, “அவங்க என் அப்பத்தா, அப்பாவோட அம்மா பூங்கோதை நாச்சியார்…” என்றான்.
விஷ்ணு அப்பெயரை சொன்னவுடன் ஷ்யாமிற்கு எங்கேயோ, எப்பொழுதோ கேட்டது போல் இருந்தது. தன்னையும் அறியாமல் அவன் உதடுகள் “நைஸ் நேம்…” என உச்சரித்தது…

ஷ்யாம் சொன்னதை கேட்டதும் , விஷ்ணுவின் மனதிரையில் ‘தன் கண்களை உருட்டி மூக்கு நுனி சிவக்க தன் தாத்தாவின் தோள்களை கட்டி கொண்டு… “சிவசு, உனக்கு வேற பெயரே கிடைக்கலையா…” என நொடியில் பல உணர்வுகளை தன் முகத்தில் ப்ரதிபலிக்க சிறுக் குழந்தை என செல்லம் கொஞ்சுபவள். இன்று தன் உணர்வுகள் துலைத்து, தன்னை மறந்து ஜீவன் அற்று இருப்பதை நினைத்தவனின் மனம் செங்கனல் என தகித்தது…
தன் தங்கையின் இந்நிலைக்கு காரணமானவன் மட்டும் தன் கையில் கிடைத்தால் அவனுக்கு மரணத்தை விட கொடுமையான தண்டனை வழங்க வேண்டும் என எண்ணியவனின் மனமோ, அதற்கு முதலில் உன் தங்கை உணர்வுகளுடன் இருக்க வேண்டும் என நிதர்ஸனத்தினை உரைக்க…
தன் அதங்கத்தையும், அற்றாமையினையும் கட்டுப்படுத்த முடியாமல் வந்த ஆத்திரத்தில் ஸ்டேயரிங்க் வீலை வலக்கையினால் ஒங்கி அடித்தான்…
அந்த நல்லிரவு வேளையில் ஹார் அலறி இரவின் நிசப்த்ததினை கலைக்க…

அவ்வோலியில் எதோ சிந்தனையில் இருந்து தன்னுணர்வு பெற்ற ஷ்யாம்.அப்பொழுது தான் கவனித்தான் விஷ்ணுவின் கரங்களில் வாகனம் தடுமாறுவதை, நொடியில் சுதரித்தவன் விஷ்ணுவை உலுக்க…
அதில் தன்னுணர்விற்கு வந்த விஷ்ணு வாகனத்தினை நிலைப்படுத்தி ஒர் ஒரமாக நிறுத்தி, ஸ்டேயரிங்க் வீலை இரு கைகளினால் இறுக்கமாக பற்றியவன், அதன் மீதே தலையை கவிழ்த்துக் கொண்டான்.

அவர்கள் நல்ல நேரம் அந்நேரத்தில் எதிரில் எந்த வாகனமும் வரவில்லை… கூடவே அவர்கள் விஷ்ணுவின் எஸ்டேட்டின் அருகில் வந்து விட்டிருந்தனார்.

விஷ்ணுவின் கைகள் இன்னமும் நடுங்கி கொண்டு தான் இருந்தான, இன்னும் ஒரு நொடி ஷ்யாம் தன்னை நிலைப்படுத்தாமல் இருந்திருந்தால் நிச்சயம் விபத்து நிகழ்ந்திருக்கும்.

‘ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகள் போதும், புதிதாக தான் ஒன்றை உருவாக்க வேண்டாம் , இனி எந்நிலையிலும் நிதானம் தவறக் கூடாது என உறுதி எடுத்துக் கொண்டான்’...விஷ்ணு.
விஷ்ணு, தான் எடுத்துக் கொண்ட உறுதி மொழியை பின்பற்றுவானா!!! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஷ்யாமிற்கும் தன்னை அசுவாசப்படுத்திக் கொள்ள சில நொடிகள் தேவை பட்டது. தன்னை மீட்டுக் கொண்டவன்… விஷ்ணுவின் நிலை அறிந்து அவன் முதுகினில் மெல்ல தட்டி கொடுத்து… “ ஈஸி விஷ்ணு… டோன்ட் பனிக்(Don’t panic…) என அவனுக்கு அறுதல் சொல்ல…
அதில் சற்று தெளிந்த விஷ்ணு, தன் இரு உள்ளங்கையினால் தன் முகத்தினை அழுந்த துடைத்தவறே நிமிர அவனிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை நீட்டினான் ஷ்யாம்.

பாட்டிலை வாங்கி தண்ணீர் அருந்திய விஷ்ணு “சாரி…” என்றவன்… தண்ணீர் பாட்டிலை உயர்த்திக் காட்டி “தாங்க்ஸ்…” என உரைக்க.

ஷ்யாமோ மென்புன்னகையுடன் அவனின் தோள்களில் சிறு அழுத்தம் கொடுத்து தட்டிக் கொடுத்தான்.

மெல்ல தான் வண்டியினை இயக்கி அவர்கள் எஸ்டேடிற்குள் நுழைந்தவன், அடுத்த இருபது நிமிடத்தில் ஒரு மளிகையின் முன் தன் வண்டியின் வேகத்தினை குறைக்கவும், அந்த மளிகையின் கேட் திறக்கவும் சரியாக இருந்தது.
விஷ்ணு அந்த பழங்கால பிரிடிஷ் கட்டிடத்தின் முன் வண்டியை நிறுத்தவும், அவனின் அப்பத்தா அவன் வண்டியினை எதிர்க் கொள்ளவும் சரியாக இருந்தது.
அவரை பார்த்தவுடன், “இந்த குளிரில் எதுக்கு அப்பத்தா வெளியில் இருக்குறீங்க…” என கடிந்த படி வண்டியில் இருந்து இறங்கினான்.

பூங்கோதை நாச்சியாரோ,”வண்டி சத்தம் கேட்டுகவும் தான் வெளியில் வந்தேன் அப்புச்சி…” என்றவரின் வார்த்தைகள் அறடி உயரத்தில் இருக்கும் தன் பேரனை விட உயரமாக, கண்களில் கருப்பு சட்டமிட்ட இளமஞ்சள் நிற கண்ணாடி , ஹூடியுடன் கூடிய டார்க் நெவி பிளூ ஜெர்கின் மற்றும் ஜீன்ஸ் அணிந்து நடந்து வருபவனை கண்டவர் கேள்வியாக விஷ்ணுவை நோக்க…

விஷ்ணுவோ, அவரின் பார்வைக்கு பதிலாக … “ என் பிரெண்ட், டாக்டர்.ஷ்யாம்…” என அறிமுகப்படுத்தியவன்...

“ஷ்யாம், இவங்க என் அப்பத்தா பூங்கோதை நாச்சியார்…” என்றான்.
“வணக்கம் பா…பாட்டி…” என ஷ்யாம் சாதாரணமாக அவரை வணக்குவதுப் போல் இருந்தாலும் அவனின் மனம் ஏற்கனவே பூங்கோதை நாச்சியார் என்ற பெயரில் குழம்பியிருக்க, தற்பொழுது அவர் தோற்றம் ஷ்யாமின் மன குழப்பத்தை மேலும் அதிகரித்தது.

இது எதனையும் அறியாத பூங்கோதை நாச்சியாரோ, “வாங்க தம்பி…” என ஷ்யாமை வரவேற்றவர், அவர்கள் இருவரோடும் வீட்டிற்குள் நுழைந்தார்.

வரவேற்பறையில் உள்ள சோபாவில் ஒரு முதியவர் அமர்ந்து தவிப்பாக தனக்கு எதிரில் உள்ள அறையினை நோக்க, அவருக்கு பக்கத்தில் உள்ள இருக்கையில் ஒரு நடுத்தர வயது தம்பதிகளும் அமர்ந்திருந்தனர்.
உள்ளே வந்த விஷ்ணு அந்த தம்பதிகளை சிறிதும் கண்டுக்கொள்ளாமல், முதியவரின் அருகில் அமர்ந்து, “உட்காருங்க ஷ்யாம்…” என அவனுக்கும் ஒரு இருக்கையினை கட்டியவன், “ தாத்தா இவரு என் பிரெண்ட் டாக்டர்.ஷ்யாம்… ஷ்யாம், இவங்க என் தாத்தா சிவ சுப்பிரமணியம்…” என்றான்.

அதற்குள் அறையிலிருந்து மருத்துவர் வெளிவர, அனைவரின் பார்வையும் அவரை நோக்க, விஷ்ணுவோ அவரை நெருங்கியவன், “அங்கிள்… பாப்பா இப்ப எப்படி இருக்க…?” என வினவ
மருத்துவரோ,” பயப்படும் படி எதுவும் இல்லை விஷ்ணு, இரத்ததை பார்த்து பயந்து சத்தம் போட்டு அந்த அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான்…” எனக் கூற…
விஷ்ணு கேள்வியாக தன் அப்பதாவை நோக்க, அவரோ “ மாசம் கூட கூட பாப்பா சரியா சாப்பிடிறது இல்லை, கால் இரெண்டும் வீக்கமா இருக்கு… நல்ல இருக்கவங்களுக்கே ஆயிரம் சங்கடம் இந்த மாதிரி நேரத்தில் ஏற்படும், இவ இருக்க நிலைமையில் அவளால சொல்லவும் முடியாது…” என்றவரின் விழிகள் கலங்கியது.தான் தூக்கி வளர்த்த தன் செல்ல பேத்தியின் நிலையினை நினைத்து.

விஷ்ணுவோ, “ அப்பத்தா…” என அவர் கலங்குவதை கண்டிக்க, அதில் தெளிந்தவர், “ அதனால பாப்பா சாப்பிட்டதும் கொஞ்சம் காலாற நடக்க வைக்க முன்பக்கம் அழைச்சிகிட்டு போனேன்… என் பொதத நேரம் கொஞ்ச நேரம் நடந்தவ,கேட் வழிய ரோட்டையே பார்த்துகிட்டு நின்ன கூப்பிட்டாலும் அங்க இருந்து நகரலை சரின்னு விட்டுட்டேன்… கொஞ்ச நேரத்தில் என்ன ஆச்சுன்னு தெரியலை கேட்டை பிடிச்சி உலுக்கி கத்தி அழுவும் எனக்கும் உங்க தாத்தாவுக்கும் முதல்ல ஒன்னும் புரியலை, அப்புறம் தான் வாட்ச்மேன் கந்தசாமி சொன்னான் போன வண்டி நாயை அடிச்சி போட்டுட்டு போயிடுனுசின்னு… அதை பார்த்து தான் பாப்பா அழுது மயங்கி இருக்கும்னு… சொன்னான்…” என்றார்.

விஷ்ணு மருத்துவரை பார்க்க அவரும் சம்மதமாக தலை அசைக்க… “ மயக்கம் தெளிய இன்ஜெக்ட் பண்ணி இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சிடுவா…” என சொன்னார்.

இதுவரை அவர்கள் பேசியதை வைத்து விஷ்ணு தங்கையின் நிலையினை அனுமானித்த ஷ்யாம்… “விஷ்ணு, உங்க தங்கை சிக்னஸ்க்கும்(sickness) நடந்த இன்சிடென்ட்க்கும்(incident) ஏதாவது கனெக்டிவிடி (connectivity) இருக்க… என விசாரித்தான்.

பாவம் அவர்களுக்கு தான் அவள் நிலையின் காரண காரியம் எதுவும் தெரியாதே…
ஷ்யாமின் கேள்விக்கு விஷ்ணு “ எங்களுக்கு எதுவும் தெரியாது ஷ்யாம்…” என்றவன் முகத்தில் இயலாமை அப்பட்டமாக வெளிப்பட்டது.

ஏதோ உணர்வு உந்த ஷ்யாம், “நான் உன் தங்கையை பார்க்கலாமா…” என கேட்டான்.

விஷ்ணுவோ, சரி என தலையாட்டியவன் அவள் இருந்த அறை நோக்கி அவனை அழைத்து செல்ல ஷ்யாமின் உள்ளமோ காரணமின்றி படபடத்தது.
அவர்கள் அவள் அறைக்குள் நுழையவும் பெண்ணவளின் மயக்கம் தெளியவும் நேரம் சரியாக இருக்க…

மயக்கம் தெளிதெழுந்தவள் ஷ்யாமை கண்டதும்… “மையூ,"என அவனை கட்டிக் கொண்டு அவன் முகம் எங்கும் முத்திரை பதிக்க, பெண்ணாவளின் செயலில் அசைவற்று சிலையான நின்றவனின் உடல், அவள் மணி வயிற்றில் ஆடும் பிள்ளையின் அசைவில் உடல் சிலிர்த்தவனின் ஒரு கரம் தன்னியால்பாக பெண்ணவளை அணைக்க, மறுகாரமோ சூல் கொண்டிருக்கும் அவளின் மணிவயிற்றில் பதிந்தது.

தொடரும்…
 
அத்தியாயம் 2

விஷ்ணுவிடம் அவன் தங்கையை பார்க்க கேட்டவன், மருத்துவருடன் அவள் உடல் மற்றும் மனநிலைபற்றி வினவியப்படியே அறைக்குள் நுழைய அப்பொழுது தான் மயக்கம் தெளிந்த பெண்ணவளோ…

இத்தனை நாட்கள் தன்னிலை மறந்திருந்தவள் ஷ்யாமின் குரல் கேட்ட மறுநொடி உயிரும்,உணர்வும் பொங்க “மையூ” என ஆரத்தழுவி அச்சரமிட்டு கொண்டிருந்தவளின் செய்கையில் மற்றவர் திகைத்து பார்த்தப்படி நிற்க…

ஷயாமளனோ அவள் அணைப்பில் அனைத்தையும் மறந்து இருந்தவனை பூமிக்கு அழைத்து வந்தது, அவன் காதில் விழுந்த நரசமான வார்தைகள் …

“அய்யோ… அய்யோ… இந்த கண்றாவி எல்லாம் பார்க்கணும்னு என்ற தலையில் எழுதி இருக்கு, அங்க என்ற புள்ள ஹஸ்பிட்டல கை, கால் உடைஞ்சு அசைவில்லாம படுத்த படுக்கைய இருக்கான்,இங்க இவ வயத்தில் என் புள்ளையோட புள்ளைய சுமந்துகிட்டு வேற ஒருத்தனை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்துகிட்டு இருக்க…” என்றவர்.

ஷ்யாமை அணைத்தப்படி இருந்தவளை நெருங்கி அவள் கரம் பற்றி இழுக்க,அவர் செயலில் பதறியவராக விஷ்ணுவின் அப்பாத்தா, “பரிமளம், என்ன பண்ற வாயும் வயிறுமா இருக்குற பிள்ளைய இப்படியா இழுப்ப, விடு அவளை, அவ நிலைமை என்னான்னு உனக்கு தெரியதா…” என கேட்க.

அப்பொழுதும் தன் பிடியினை சற்று தளர்த்தாமல் தன்னை நோக்கி இழுக்க,பெண்ணவளோ ஷ்யாமை விட்டு விலக மறுத்தவளாக அவனோடு மேலும் ஒன்றினாள்.

ஷ்யாமளனோ தன்னை இறுக பற்றியவளை மேலும் தன்னோடு இறுக்க… அவர்கள் இருவரின் செயலில் வெகுண்டவர்.

“உள்ளூர்காரனான என் புள்ளைன கசந்தது, அதே வெளிநாட்டு காரன்னவுடனே இனிக்குதோ… இத்தனை நாளும் எங்களையும் என்ற புள்ளையையும் விலக்கி வைக்க தான், இந்த பைத்தியக்காரி வேசம் போல…” என்று அவர் முடிக்கவில்லை விஷ்ணுவின் “ நிறுத்துங்க…” என்ற சிறலும் ஷ்யாமின் “shut up” என்ற கர்ஜனையும் ஒன்றாக ஒலித்தது.

விஷ்ணு பேசும் முன் ஷ்யாம், “லீவ் ஹெர்” என்றவனின் குரல் எஃகின் கடினத்தோடு ஒலிக்க… அவன் குரல் கேட்டு விஷ்ணு கூட ஒரு நொடி விதிர்த்தான் என்றால் பரிமளாவின் நிலை என்னவாக இருக்கும்.
ஷ்யாம் உக்சரித்த வார்த்தைகளின் அர்த்தம் அவருக்கு புரியவில்லை என்றாலும் , அவனின் குரல் அவரின் முதுகு தண்டில் குளிர் பரவ செய்திருக்க, தானாக அவர் கைகள் பெண்ணவளின் கரத்தினை விடுவித்திருந்தது.
ஷ்யாமோ, மற்றவரை கருத்தில் கொள்ளாமல், பெண்ணவளின் கரத்தினை பரிசோதிக்க,அதுவோ பரிமளம் அழுந்த பற்றியதால் கன்னி சிவந்திருந்தது. அதனை கண்டவனின் சினம் உச்சம் தொட்டது, அதன் காரண காரியம் தான் மருத்துவனான அவனுக்கு புரிப்படவில்லை.
மெல்ல அவளை அழைத்து சென்றவன் அங்கிருந்த இருக்கையில் அவளை அமர வைக்க முயல, அவனிடமிருந்து விலக மறுத்து, விழிகள் மருள இட வலமாக தலை அசைத்தவளின் செய்கையில் மனம் கனிந்தவன், “நான் உன்னை விட்டு எங்கேயும் போகல கியூட்டி பை…” என குழந்தையினை கொஞ்சுவது போல் அவள் தலையில் தன் உள்ளங்கையினை அழுந்த பதித்து முன்னும் பின்னும் மெல்ல ஆட்டியவன்.
மருத்துவரிடம் திரும்பி, “செக் ஹெர் வைடல் அண்ட் டிரீட் திஸ்…” என அவள் கரத்தினை காண்பிக்க, மருத்துவரும் தன் பணியினை மேற்கொள்ள, அப்பொழுதும் பெண்ணவளை தன் கையனைபிலேயே வைத்திருந்தவன்.

விஷ்ணுவின் அப்பத்தாவிடம், “ பாட்டி, ப்ரெஷ் ஜுஸ் சுகர் கொஞ்சம் அதிகாம போட்டு கொண்டுவர சொல்லுங்க என, பூங்கோதை நாச்சியரும் “ இதோ கொண்டு வரேன்…” என, தான் இட்ட வேலை செய்ய ஆட்கள் இருந்தாலும் தானே கொண்டு வர சமையல் அறை நோக்கி தன் வயதையும் மறந்து வேக எட்டுக்கள் வைத்துக் கொண்டிருந்தார்.
ஷ்யாம் இளையவளிடம் காட்டும் நெருக்கத்திலும், தன்னையே மிரட்டியதாலும் (இதுவே மிரட்டுரதுனா, அப்ப அவன் நிஜமா மிரட்டின என்னாம்மா சொல்வே…) கடுப்பில் இருந்தவர், அவன் இந்த வீட்டின் உரிமையாளன் போல் நடந்து கொள்ளவது எரியும் நெருப்பில் எண்ணெய் உற்றுவது போல் பரிமளத்தின் ஆத்திரத்தினை அதிகப்படுத்த…

“மஞ்ச கண்ணாடி போட்ட தம்பி, கொஞ்சம் நிறுத்து உன் அதிகரத்தை, முதல்ல என்ற வூட்டு மருமவ மேல இருந்து கைய எடு, என்னமோ தொட்டு தாலி கட்டுன புருஷன் மாதிரி அவளை தங்குற… அவ சுமந்துகிட்டு இருக்குறது என்ற புள்ளையோட புள்ளைய, எங்க வூட்டு புள்ளைய எப்படி பார்த்துக்கானும்னு எங்களுக்கு தெரியும் நீ ஒன்னும் இங்கன நாட்டாமை பண்ண வேண்டாம், உன்ற ஜோலிய போய் பாரு…” என்றார்.

விஷ்ணுவோ இதுவரை பொருத்தாதே பெரிது என்பது போல், “என் தங்கை சொல்லட்டும், அவ வயத்தில் இருக்குற பிள்ளை யாரோடதுன்னு, அப்புறம் இங்க வந்து சொந்தம் கொண்டாடுங்க… அப்புறம் அவர் என் பிரெண்ட், அதுவும் இல்லாம அவர் ஒரு டாக்டர், அவரை பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை…” என்றான்.

விஷ்ணு தங்களுக்கு எந்தவித சொந்தமும் உரிமையும் இல்லை என சொல்லவும், கோபம் கண்ணை மறைக்க, என்ன பேசுகிறோம் என உணராமல் வார்த்தைகளை கொட்ட தொடங்கினார்.

“ அப்ப யாரோட பிள்ளைன்னே தெரியாம தான் இவ சுமந்துகிட்டு இருக்காளா, இல்ல இந்த பிள்ளைக்கு அப்பன் யாருன்னு அவளுக்கே தெளிவில்லையோ…” என வார்த்தைகளை விஷமாக கக்க…

இதுவரை பரிமளம் பேசிய வார்த்தைகளை கேட்டு சிவசு தாத்தாவிற்கு கோபம் வந்தாலும் தன் பேத்தியின் நிலை கருதி அமைதி காத்தவர், இப்பொழுது பரிமளம் சொன்னதை கேட்டு, பொறுமை இழந்தவராக, “பரிமளம், யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற, என்ற பேத்தி சொக்க தங்கம், அவளை உன்ற மகனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி எங்க வீட்டுக்கு நடைய நடந்தத எல்லாம் மறந்து போச்சா?, என்ற பேத்தி வயத்தில் இருக்குற குழந்தை உன்ற புள்ளையோடதுன்னு வந்து வந்து சொந்தம் கொண்டடுறியோ?, என்ற பேத்தி நிதானத்தில் இருந்து உன்ற மகன் தான் தன் நிலைக்கு காரணம்ன்னு சொல்லி இருந்த… இப்ப அரையும் குறையும உன்ற புள்ள உடம்பில் ஒட்டிகிட்டு இருக்குற உசிர, என் பிள்ளைக ரெண்டு பேரும் எப்பவோ சுத்தம நிறுத்தி இருப்பானுங்க…” என்றார்.

அவர் குரலில் உள்ள கடினம் அவர் சொன்னது நிச்சயம் நடந்திருக்கும் என உறுதிப்படுத்த, அதில் சற்று திகைத்து மிரண்ட பரிமளம் அமைதி காக்க.

“என்ன நடந்ததுன்னு எங்களுக்கும் தெரியாது, உனக்கும் தெரியாது… உன்ற பிள்ளையும், என்ற பேத்தியும் என்ன நடந்ததுன்னு சொல்லக் கூடிய நிலையில் இல்ல, அதனால தான் நீ இத்தனை நாள் என்ன சொன்னாலும் நாங்க அமைதிய இருந்தோம்,ஆனா இன்னைக்கு உன் பேச்சு ரொம்ப வரம்பு மீறி போயிடுச்சி… என்றவர் ஒரு பெரும் மூச்சினை வெளியேற்றி,
இத்தனை நாள் ஜடமா இருந்தவளுக்கு இன்னைக்கு தான் உயிரும் உணர்வும் வந்து இருக்கு , எங்களுக்கு எங்க பேத்தி குணமாகனும்.. நாங்களே அவளோட நிலைமையை நினைச்சி மனசு நொந்து போய் இருக்கோம்,இதுல நீ வேற கண்டதையும் சொல்லி எங்க மனசை நொகடிக்காத, போய் உன்ற புள்ளை உடல் நிலையை சரி பண்ண என்ன வழியோ அதை போய் பாரு… என்றவர் அவர்கள் செல்லலாம் என்பது போல் தன் இட கையினை அசைக்க, அவரின் வார்த்தைகள் மற்றும் செய்கையில் மனம் கொதித்த பரிமளம் மேலும் எதோ சொல்ல வர, இதுவரை அமைதியாக தன் மனைவியை பேசவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பரிமளத்தின் கணவன் கோவிந்தன், தன் மனைவியின் கரம் பற்றி அவரின் பேச்சிற்கு தடையிட்டவன், பெரியவரிடம் தன் முப்பத்தி இரெண்டு பல்லையும் காட்டி, “ நீ சொன்ன சரி தானுங்க மாமா…, பரிமளம் எதோ ஒரு அதங்கத்தில் பேசிட்ட, அவ பேசுனதை எதையும் மனசில் வெச்சிக்காதீங்க…” என கூறி அனைவருக்கும் பொதுவாக ஒரு கும்பிட்டை போட்டு, தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு வாயில் நோக்கி நடக்க தொடங்கினான்.



“ எங்க பாப்பாவோட நிலமைக்கு உன் மகன் தான் காரணும்னு தெரியட்டும்… அப்ப இருக்கு அவனுக்கு…” என்ற விஷ்ணுவை திரும்பி பார்த்தவர்களின் பார்வை பெண்ணவளை தன் தோளில் சாய்த்தணைத்து அமர்ந்திருந்த ஷ்யாமின் மீது வன்மாக படிய, தன்னை இருவர் பார்ப்பதை கூட உணராமல் தன் மனதோடு போராடிக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

மற்றவர்களின் மனநிலையினை அலசி ஆராய்ந்து அவர்களுக்கு தீர்வு சொல்லும் மனோத்தத்துவ நிபுணன், தன் மனதின் நிலை புரியாமல் தத்தளித்தான்.

முதலில் பெண்ணவள் அணைப்பில் அதிர்ந்தவன், மெல்ல மெல்ல அவள் அணைப்பினில் திளைத்தவனின் மனம் உவகையின் உச்சம் தொட்டது மட்டும் இல்லாமல் பெண்ணவளின் ஸ்பாரிசமும், வாசமும் அவனுக்கு பரிச்சயமாக தோன்றியதோடு அல்லாமல் பெண்ணவளிடம் இன்னும் நெருக்க அவன் மனம் விருப்பம் கொண்டது.

ஆண், பெண் இருபாலரும் கட்டி பிடிப்பதும், முத்தமிடுவதும் இயல்பானதாக கருதப்படும் மண்ணில் பிறந்து வளர்ந்தவன், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுகள் கிடையாது, பிடித்திருந்தால் திருமணம் இல்லாமல்/செய்யாமல் இருவரும் இணைந்து வாழலாம், விருப்பம் இல்லை என்றால் விலகிவிடலாம், எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல் தன்னை சுற்றியுள்ளவர்கள் வாழ்வதை பார்த்து பழகியவனின் மனம் இதுவரை யாரிடமும் இப்படி முழுதாக சரண் புக விரும்பியது இல்லை.

அதற்காக அவன் பெண்களை அறியாதவன் என்று அர்த்தம் இல்லை,அவன் பழகும் பெண்களின் உறவுநிலையும் அயூட்காலம் ஒரு இரவு தான், அதுவும் அவனை நாடி வரும் பெண்களிடம் அவனிற்கும் விருப்பம் இருத்தால் மட்டுமே.

அதுவும் கடந்த ஒரு சில மாதங்களாக எந்த பெண்ணின் நெருக்கத்தினையும் அவன் உடலும் மனமும் ஏற்க மறுத்த நிலையில், இன்று இச்சிறுபெண்ணின் நெருக்கம் ஷ்யாமளனை மொத்தமாக வீழ்த்தியிருந்தது.


தன் யோசனையில் மூழ்கி இருந்தவனை கலைத்தது மருத்துவரின் குரல், “ஷ்யாம்… டாக்டர்.ஷ்யாம் என அவன் கை தொட்டு அழைக்க அதில் சுயம் பெற்றவனாக, “ ம்… சொல்லுங்க டாக்டர்… என கூறியவனின் பார்வை தன் கை வளைவில் கண் மூடி சாய்ந்திருப்பவளை கண்டவனின் மனதில், “ நீ யாரு கியூட்டி பை…?, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்…?, உனக்கு வலிச்ச, எனக்கு ஏன் துடிக்குது…?, ஏன்…?, ஏன்…? என்ற கேள்விகள் மட்டுமே நிறைந்திருந்தது.
 
அத்தியாயம் 3

தன்னிலை மறந்திருந்ததாலும், தன் மனத்தில் எழும் கேள்விகளுக்கு விடை அறிய முடியாமல் குழம்பியிருந்ததாலும்… பரிமளம் கூறிய வார்த்தைகள் எதுவும் ஷ்யாமின் செவியினை சென்றடையவில்லை… விழுந்திருந்தால் அவர்கள் நிலை என்னவோ!!!

“ஷீ இஸ் அல்ரைட் ஷ்யாம்…” என்ற மருத்துவர், அம்மணி கொஞ்சம் என்ன பாருங்க…” என அழைக்க,

பெண்ணவளோ அவர் குரலுக்கு செவி சிறிதும் சாய்க்கவில்லை… தான் இழத்துவிட்டதாக நினைத்த சொர்க்கம் தன் கண் எதிரில் தோன்றியது போல் ஷ்யாமின் கரத்தோடு தன் கரம் கோர்த்தவாறு அவன் தோளில் விழி மூடி தலை சாய்த்திருந்தாள்.

மருத்துவரின் குரலில் தன்னிலை அடைத்தவன், தன் யோசனைகளை எல்லாம் தள்ளிவைத்தவனாக, பெண்ணவளின் கரத்தின் மேல் மெல்ல தட்டி, “கியூட்டி பை,…” என அழைக்க,”ம்… “ என உடனே பதில் அளித்தாள் பெண்.

பெண்ணவளின் பதிலில் மருத்துவர் மற்றும் ஷ்யாமின் பார்வைகள் ஒரு நொடி சந்தித்து விலக, அவளின் மனநிலையினை இரு மருத்துவர்களும் புரிந்துக் கொண்டனர்.

இதற்கிடையில் பூங்கோதை நாச்சியார் கொண்டு வந்த பழரத்தை ஷ்யாம் புகட்ட, எந்தவித சேட்டையும் செய்யாமல் அமைதியாக அருந்திய பெண்ணை, அவள் குடும்ப உறுப்பினர் மூவரும் வியப்பு மேலிட பார்த்துக் கொண்டிருந்தனர். அவளை உண்ணவும், உறங்கவும் வைக்க அவர்கள் பட்ட பாடு அவர்களுக்கு தானே தெரியும்…

தாத்தாவிற்கும், அப்பத்தாவிற்கும் வியப்பு மட்டுமே, ஆனால் விஷ்ணுவிற்கு ஒரு புறம் வியப்பு என்றாலும் மனதின் ஒரத்தில் ஒரு சிறு சந்தேகம் ஒடிக் கொண்டே இருந்தது.

இத்தனை நாள் யாருக்கும், எதற்கும் தன் உணர்வுகளை ப்ரதிபலிக்காமல் இருந்தவள், இன்று ஷ்யாமை கண்டதும் அவளின் மனநிலையில் மற்றம் வர காரணம் என்ன..?, தன் தங்கை நிலைக்கும் ஷ்யாமிற்கும் சம்மந்தம் உண்டா…? என மனம் ஐயம் கொள்ள, அவனின் மூளையே ‘அது எப்படி சாத்தியம்…? என எதிர் கேள்வி கேட்டது.

ஷ்யாம் மட்டும் அயல் நாட்டவனாக இல்லாமல் இருந்திருந்தால் விஷ்ணு நூறு சதவிதம் நம்பி இருப்பான் தன் தங்கை நிலைக்கு காரணம் ஷ்யாம் தான் என்று.(நம்பி மட்டுமா இருந்திருந்திருப்பான், இந்நேரம் அவனை நார் நார இல்ல கிழித்து இருப்பான்… ஷ்யாமு ஜுஸ்ட் மிஸ்ஸு…)

அவர்கள் முகத்திலிருந்தே அவர்களின் மனநிலையினை புரிந்து கொண்ட அனுபவம் மிகுந்த மருந்துவரோ, மூவரையும் நெருங்கி வர, அவர் தங்களிடம் வருவதை கண்ட விஷ்ணு, வேகமாக அவரை நெருங்கியவன், “ ஆங்கிள், பா… பா… பாப்பா…” என தொடங்கியவனால் தன் வாக்கியத்தை முடிக்க முடியவில்லை.

அவன் நிலை உணர்ந்த மருத்துவர், “ஈஸி… ஈஸி விஷ்ணு…” என அவன் முதுகில் மெல்ல தட்டிக் கொடுத்தவர், “நீயே இவ்வளவு எமோசன் ஆனா, வயசானவங்க நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாரு…” என சொல்பவருக்கு எப்படி தெரியும் மற்ற அனைவரையும் விட அதிகம் மனக் காயம் பட்டவன் விஷ்ணு தான் என்று.

மற்றவருக்காவும், தன் குடும்பத்தினாருக்காவும் உறுதியா இருப்பதுப் போல் வெளிக்காட்டி கொண்டவனின் உள்ளம், தன் தங்கையின் நிலை நினைத்து நித்தமும் உதிரம் வடித்துக் கொண்டிருந்ததை. பெண்ணவள் அவனுக்கு உடன்பிறந்தவள் இல்லை , தன் சிறிய தந்தையுடைய பெண் என்றாலும் ஒன்றாக ஒரே வீட்டில் வளர்ந்தவள், அவள் நடை பழகிய காலம் தொட்டு அவனுடன் ஒன்றாக விளையாடியவள், அவள் பெற்றோருக்கு அவளைப் பற்றி தெரியாத, அறியாத விசயம் எல்லாம் அறிந்தவன் விஷ்ணு ஒருவனே, அவளுக்கு அண்ணனுக்கு அண்ணன், தோழனுக்கு தோழன் எல்லாம் இவனே, இப்படி அவன் தோளில் தொத்தும் தத்தையாக அவனுடனே சுற்றித் திரிந்தவளை, வேலை காரணமாக வெளிநாட்டிற்கு சென்று திருப்பியவன் கண்டது, தன்னிலை மறந்து மனநிலை பதிக்கப்பட்டவளாக தான்.

தான் தூக்கி வளர்த்த தங்கையின் நிலைக் கண்டு மனம் வெதும்பி நின்றவனுக்கு, மேலும் பெரிடியாக இருந்தது அவள் கருவூற்றிருக்கிறாள் என்ற விசயம் அறிந்தவனின் உள்ளம் வெடித்து சிதறியிருந்தது.

தான் மட்டும் வெளிநாட்டிற்கு செல்லாமல், தன் தங்கையுடனே இருந்திருந்தால் தன் தங்கைக்கு இந்நிலை வந்திருக்காதோ…? என அனுஷனமும் தன்னை தானே நிந்தித்துக் கொண்டிருப்பவனின் மனநிலையினை மற்றவர் எவ்வாறு அறியக் கூடும்.

அப்பத்தாவும், தாத்தாவும் விஷ்ணுவின் தோள் தொட தன்னை ஒருவாறு சமளித்துக் கொண்டவன், “சொல்லுங்க ஆங்கிள், இத்தனை நாள் அப்படி இருந்தவ, இன்னைக்கு ஷ்யாமை பார்த்ததும்…”தான் கேட்க நினைத்ததை கேட்க முடியாமல் தயங்கி நின்றவனின் கேள்வியினை புரிந்துக் கொண்ட மருத்துவர் இதழில் மென்னகை தவழ “அதை நீ உன் பிரெண்டு கிட்ட தான் கேட்கனும்…” என சொல்லவும் விஷ்ணுவின் பார்வை நொடியும் தாமதிக்காமல் ஷ்யாம்மினை நோக்கியது.

விஷ்ணு கேட்ட கேள்விகளை தான் பெண்ணவளை கண்ட நொடி முதல் தன்னை தானே கேட்டுக் கொண்டு விடை அறிய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவன் எங்ஙனம் மற்றவர் கேள்விகளுக்கு விடை அளிப்பான்.

விஷ்ணுவின் விழிகளை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல், தன் பார்வையினை பாவையிடத்தில் பதித்தவனாக, இல்லை என்பது போல் தன் தலையினை இட வலமாக அசைக்க. விஷ்ணு மருத்துவரை பார்க்க, அவன் தோள் தட்டியவர், “இத்தனை நாள் எந்தவித உணர்வும் இல்லாம இருந்த சின்ன அம்மணி, இன்னைக்கு இவரை(ஷ்யாமை) பார்த்து ரியக்ட் பண்ணது, இட்ஸ் எ குட் சயின்.

ஷ்யாமோட தோற்றமோ, குரலோ ஏதோ ஒன்னு நம்ம சின்ன அம்மிணியை பாதிச்சிருக்குது… இதுவரைக்கும் வெறுமையா இருந்த அவங்க உலகத்தில் இப்ப முழுமையா நிறைஞ்சி இருக்குறது ஷ்யாம் மட்டும் தான்…” என மூவருக்கும் புரிந்தும் புரியாத நிலை தான்.

தெளிவில்லாத அவர்களின் முகத்திலிருந்தே தான் கூறியது அவர்களுக்கு புரியவில்லை என அறிந்துக் கொண்ட மருத்துவர், “ சின்ன அம்மிணி…” என அழைக்க, பெண்ணவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

விஷ்ணுவை பார்த்து கூப்பிடு என்பது போல் சைகை செய்ய, விஷ்ணுவும் கமறிய தன் தொண்டையினை சரி செய்தவனாக.” பாப்பா…” என அழைக்க, அதற்கு பாவையிடமிருந்து எந்த ப்ரதிபலிப்பும் இல்லை.
தாத்தா மற்றும் அப்பாத்தாவை பார்த்து மருத்தவர் தலை அசைக்க, சிவசு தாத்தா “அம்மாடி…” என்று, அப்பாத்தா “ராஜாத்தி…” என அழைத்ததற்க்கும் மங்கை அவளிடத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஷ்யாமை நோக்கி மருத்துவர் தலை அசைக்க, ஷ்யாமோ மெல்ல “கியூட்டி பை…” என தன் அழைப்பை நிறைவு செய்யவில்லை.“ம்… சொல்லு மையூ…” என பதிலாளித்தாள் பாவை.

பெண்ணவளின் பதிலில் மூவரும் அதிர்ந்தனர் என்றால், ஷ்யாமிற்கு அவள் வார்த்தையில் சந்தேகமும், சந்தோசமும் ஒருங்கே தோன்றியது.

சந்தேகம், இத்தனை நாள் தூக்கி வளார்த்தவர்கள் குரலுக்கு ஏன் அவள் செவி சாய்க்கவில்லை என்றும், அவர்களை விட தான் பெண்ணவளை இந்தளவு பாதிப்பதற்கான காரணம் தான் என்ன???

சந்தோசம், அவள் தான் கூப்பிட்டதும் பதில் அளித்ததினால் வந்த உவகைய அல்லது அவள் தன்னை தன் அன்னைப் போல் அழைக்கும் விளிப்பா!!! அன்றி வேறேதுவுமா ஷ்யாமளனால், இன்னக் காரணம் என்று பிரித்து சொல்ல முடியவில்லை.

மருத்துவரோ, “இது தான் பாப்பாவோட தற்போதிய நிலை, இப்ப அம்மிணிக்கு (ஷ்யாமை சுட்டிக் காட்டியவர்) அவரையும் தன்னையும் தவிர அவ உலகத்தில் இப்ப யாரும் இல்லை, உங்களையே ஷ்யாம் அறிமுகம் பண்ணி வைச்ச, அம்மிணி உங்களை தன்னோட உறவுகளா தன் உலகத்தில் ஏதுக்கலாம், எதுக்காமையும் போகலாம், அது அம்மிணியோட மனநிலையை பொருத்தது.

சின்ன அம்மிணி, ஷ்யாமை பார்த்து ரியாக்ட் பண்ணது நல்லது விசயம் தான்,ஆனா அதுல ஒரு சிக்கலும் இருக்கு…” என கூறியவர் சிறிது இடைவெளி விட, அவர் சிக்கல் என சொன்னதை கேட்டு விஷ்ணு, சிவசு, பூங்கோதை மூவரும் அவரை அதிர்ந்து பார்க்க, ஷ்யாமோ அவரை குழப்பம் மேலிட பார்த்தவனுக்கு சிறிது நேரம் கழித்து தான் அவரின் வார்த்தைகளுக்கான பொருள் புரிந்தது.

அர்த்தம் புரிந்து அதற்குரிய விளக்கமளிக்க நினைத்து, இளையவளின் கரம் விலக்க, பெண்ணவளோ அச்சிறு விலகலையும் சகிக்க இயலாதவளாக, மீண்டும் அவனின் கைகளை பாய்ந்து இறுக பற்றியவள்…” மறுபடியும் என்னை விட்டு எங்கேயும் போகாத மையூ…” என விழிகளில் நீர் சரம் தொடுக்க வினவினாள்.

பெண்ணவளின் மனநிலையினை அவளின் குடும்பத்தினருக்கு எப்படி விளக்குவது என்ற யோசனையில் இருந்த மருத்துவருக்கு சிரமம் வைக்காமல், தன் நிலையினை அழகாக படம் பிடித்து காட்டியிருந்தாள், தன் சொல்லாலும், செய்கையினாலும்.

“இது தான் நான் சொன்ன சிக்கல், இத்தனை நாள் எதிலும் பற்றும், கவனமும் இல்லாமல் இருந்த அம்மிணியோட நிலை, அப்படியே தலைகீழ மாறி அவங்க கவனம் முழுக்க ஷ்யாம் மேல குவிங்சி இருக்கு, அவர் பக்கத்தில் இல்லானா அம்மிணி நிலை என்ன ஆகும் அதுவும் இந்த நிலைமையில் என்றவர் பெண்ணவளின் நிறைமாத வயிற்றை சுட்டிக் காட்ட,

சிவசு தாத்தாவோ நிற்க முடியாமல் அருகிலிருந்த இருக்கையில் தளர்ந்து அமர்ந்தவர் கண்கள் கலங்கி இருக்க, பூங்கோதையோ…” ஜடமா இருந்தவளுக்கு உணர்வு வந்துடுச்சின்னு நான் கொஞ்ச நேரம் சந்தோசப்பட்டது, உனக்கு பொருக்கலையோ முருதமலை முருகா… என்ற பேத்தியே இல்ல என்ற குடும்பமோ யாருக்கும் எந்த கெடுதாலும் செஞ்சதும் இல்லையே… ஏன் மனசால நினைச்சது கூட இல்லை, அப்படி இருக்க என்ற குடும்பத்தை ஏன் இப்படி வறுத்தி எடுக்குற…” என அவர் அழுது அறற்ற…

விஷ்ணுவின் மனநிலை படு மோசமாக இருந்தது, இவ்வளவு நாள் தான் உடனிருந்திருந்தால் தன் தங்கைக்கு இந்நிலை வந்திருக்காது என மனம் வருந்தியவன்… ஷ்யாமை அழைத்து வந்து தான் செய்தது பெண்ணவளுக்கு நன்மை பயக்குமா இல்லை தீமையை விளைவிக்குமா என்ற குழப்பத்திலிருந்தான்.

பெண்ணவளின் கேள்வியும், அவளின் முக சுணுக்கமும் ஷ்யாமின் மனதை வாள் கொண்டு அறுக்க, தான் ஒரு மருத்துவன், மனோத்தத்துவ நிபுணன், தன் எதிரில் இருப்பவள் இதற்கு முன்பு தனக்கு அறிந்தவளா, தெரிந்தவளா என்ற எந்த ஆராய்ச்சியும் செய்ய விருப்பதவனாக, மற்றவர்களை மறந்தவனாக… பெண்ணவளின் கன்னம் தாங்கி கண்ணீரை துடைத்து விட்டவன்.

“ நான் உன்னை விட்டு எங்கேயும் போகலை கியூட்டி பை… போகவும் மட்டேன்…” என சொன்னவனின் வார்த்தைகளை தடை செய்திருந்தது, பெண்ணவள் கூறிய மறுமொழி.

“பொய் சொல்ற மையூ, இப்படிதான் என்னை விட்டு போக மாட்டேன்னு சொன்ன, ஆனா… ஆனா… நீ… நீ… எ… என்னை தனியா வி… விட்டு…” என வார்தைகள் தெளிவில்லாமல் கேவி கேவி சொல்லிக்கொண்டிருந்தவள், திடிரென நிதானம் இழந்தவளாக ஷ்யாமின் மேனியின் மேல் தன் கைகளை படர விட்டு, ஷ்யாமை ஏதோ அபத்திலிருந்து காப்பது போல் இறுக அணைத்தவாறு “ர.. ர… அ… அன்னைக்கு உ… உன் மேல ரத்தம்…” என மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்க கூறியவாறு மயங்கியிருந்தாள் மன்னவனின் கரங்களில்...

மருத்துவர், விஷ்ணு, சிவசு, அப்பத்தா என அவள் மயக்கமுற்றதை கண்டு பதற, இதுவரை பெண்ணவளின் நிலை கண்டு பதறியவனோ, கல்லேன சமைந்து அமர்ந்திருந்தான்.

அவனின் கண்களிலிருந்து சிந்திய கண்ணீர் பெண்ணவளின் கன்னம் நனைக்க, மயங்கிய நிலையிலும் அவளின் அதரங்கள் “ என்னை விட்டு போகாத மையூ…” என முனுமுனுக்க, அவ்வதரங்களின் தவிப்பையும், துடிப்பையும் தன் உதடு கொண்டு தடைசெய்யும் எண்ணம் ஷ்யாமின் மனத்தில் தோன்ற, முயன்று அவ்வேண்ணத்தினை தடை செய்தவனின் மனம் ஒரு முடிவிற்கு வந்திருந்தது.

மலர் குவியலேன பெண்ணவளை தன் இருகரங்களிளும் ஏந்தியவன், விஷ்ணுவை பார்த்து… “டொன்ட் பனிக் மேன், ஷீ வில் பீ நார்மல் சூன்…” என்றவன் படுக்கை நோக்கி நடக்க, விஷ்ணுவும் ஷ்யாமை பின் தொடர்ந்தான்.

மெல்ல அவளை படுக்கையில் கிடத்தியவன், அருகில் இருந்த கருவிகளை பார்த்து, திரும்பி மருத்துவரை பார்த்தவன் மென்னகையோடு தலை அசைக்க, அவரும் பதிலுக்கு தலை அசைக்க, பாவை அருகினில் அமர்ந்தவன். அவளின் இதய துடிப்பு, நாடி துடிப்பு, ரத்த அழுத்தம் என அனைத்தையும் சோதிக்க, ரத்த அழுத்தம் சற்று கூடி இருக்க, இளயவளின் இதய துடிப்பு படபடக்க, மெல்ல அவள் கரம் பற்றிய ஷ்யாம், “கியூட்டி பை, நான் பேசுறது உனக்கு கேட்க்கும், நான் உன்னை விட்டு போக மட்டேன்னு ப்ராமிஸ் பண்ணி இருந்த, கண்டிப்பா உன்னை விட்டு போக மட்டேன்… நான் இங்க உன் கை புடிச்சிகிட்டி, உன் பக்கத்திலேயே தான் உட்கார்ந்து இருப்பேன்… அமைதியா தூங்கு பேப்…” என சிறுக் குழந்தைக்கு சொல்லுவதுப் போல் சொல்லியவனுக்கு தெரியது, இவ்வார்த்தைகள் பின்னாளில் தன்னை பந்தாடும் என அறியாமல் சொல்லியிருந்தான்.(விதி வலியது, யாரு என்ன பண்ண முடியும்).

பெண்ணவளை முழுதாக அளவிட தொடங்கையவனை முதலில் கவர்ந்தது இடவிழியின் ஒரம் இருக்கும் மச்சம் தான்.

பால் வண்ண மேனி, முதுகில் படரும் கருங்கூந்தல், பெண்ணவளின் வாய் பேசும் முன் அவள் கயல் விழிகளும், வதனமும் பேசிவிடும்… சிறிய மூக்கு… வரைந்து வைத்தது போல் புருவமும், உதடுகளும் அளவாய் இருக்க… ஐந்தடி உயரத்தில் பார்ப்பதற்கு பள்ளி செல்லும் மாணவி போல் இருந்தாள்.

அப்பொழுது தான் ஷ்யாமளனுக்கு, ஒரு விசயம் நினைவிற்கு வந்தது, இதுவரை தான் அவளின் பெயரினை தெரிந்துக் கொள்ளவில்லை என்று, விஷ்ணுவை பார்த்தவன்…”ஓன்னும் ப்ரப்ளம் இல்ல, கொஞ்ச எக்சைட் ஆனதுனால வந்த மயக்கம்… கொஞ்சம் தூங்கி எழுந்த ஒகே ஆயிடுவாங்க்…” என்றவன்,”ஆமா, உன் தங்கை பெயர் என்ன…?” என வினவ, விஷ்ணுவோ, தான் இருக்கும் நிலையினையும் மீறி அவன் உதடுகளில் இளநகை அரும்ப,”பூங்கோதை நாச்சியார்…” என்றான்.

“நைஸ் நேம்…” என ஷ்யாம் கூற, “இத அவகிட்ட சொல்லு…” என விஷ்ணு பதில் அளிக்க…

ஷ்யாமோ, கேள்வியாக விஷ்ணுவை நோக்க… அவனோ தன் தங்கையிடம் பார்வையினை பதித்து இருந்தான்.

ஷ்யாமோ தன் தோள்களை குலுக்கியவன், விஷ்ணுவிடம் “ எனக்கு ஒரு எமர்ஜென்சிய ஒரு கால் பண்ணனும்…” என்றவன் தன் அலைபேசியினை எடுத்து அசைத்துக் காட்டியவன் அறையில் இருந்து வெளியேற திரும்பினான்.

ஏதோ நினைவு வந்தவனாக மறுப்படியும் திரும்பியவன்…” விஷ்ணு, தனியா விட்டுடு போகாதே…ஒகே…” என்றவன். தான் யாருக்கு அழைக்க வேண்டுமோ அந்த நபரின் எண்ணிற்கு முயற்சித்த படியே வெளிவந்தவன் கண்டது… இருளை நீக்கிக் கொண்டு கீழ்வானில் இருந்து உதிக்கும் கதிரவனை தான்.

ஷ்யாமளனின் மனமும் மெல்ல மெல்ல குழப்பம் என்னும் இருளிலிருந்து வெளிவர தொடங்கி இருந்தது.


தொடரும்,❤️❤️❤️❤️❤️
 
அத்தியாயம் 4

இதுவரை தன் குழப்பங்களுக்கு விடை அறிய முடியாமல் திக்கு திசை தெரியாத கானகத்தின் காரிருலில் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு பெண்ணவள் வார்த்தைள் சிறு ஒளிகீற்றேன அவனுள் ஊடுருவ… தான் மனக் குழப்பங்களுக்கான விடை அனைத்தும் வஞ்சியவளிடம் உள்ளது என அவனின் மனம் முரசரிவிக்க, ஏன்..?, எப்படி…? என்ற இன்னும் பல கேள்விகளை எல்லாம் புறம் தள்ளியவன் அழைத்தது அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய நெருங்கிய நண்பனான ஸ்டீவ் வைய் லாங்கிற்கு தான்.(Steave wei long).

ஸ்டீவ் வைய் லாங், சீன தந்தைக்கும் அமெரிக்கா தாய்க்கும் பிறந்தவன்… ஸ்டீவின் தந்தை ஷ்யாமின் தந்தையிடம் பணியற்றுபவர், ஸ்டீவ், ஷ்யாமைவிட ஒரிரு வயது இளையவன் என்றாலும் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்ததாலோ என்னவோ அவர்கள் இருவருக்கும் இடையில் நெருங்கிய தோழமை படர்ந்திருக்கும்…

“பாஸ்…” என்ற அழைப்போடு ஸ்டீவ் அழைப்பை எற்க... அவன் அழைப்பில் கடுப்பான ஷ்யாம், “ஸ்டீவ்…” என பல்லை கடிக்க, அவ்வழைப்பிலேயே தன் கேலியையோ, கிண்டலையோ ரசிக்கும் மனநிலையில் ஷ்யாம் இல்லை என உணர்ந்த ஸ்டீவ்.

“சொல்லுங்க தஃக் கா (பெரிய அண்ணன்), இட்ஸ் எவ்ரி திங்க் ஒகே… எர்லி மார்னிங் கால் பண்ணி இருக்கீங்க… எங்க இருக்கீங்க…? ” என சிறு பதட்டத்துடன் கேட்டவன், தன் மற்றோரு அலைபேசியை எடுத்து பார்த்தான். தனக்கு ஏதாவது மெசெஜ் வந்துள்ளாத என்று, ஆனால் மெசெஜ் வந்ததிற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், “இட்ஸ் எவ்ரிதிங் அல்ரைட்…?” என குறுச்செய்தி அனுப்பினான்… ஒரு சில நொடிகளிலேயே “எவ்ரிதிங் அல்ரைட் பாஸ், பட் பிக் பாஸ் நௌ இன் கோத்தகிரி…” என்ற கூடுதல் தகவலும் வந்திருந்தது.

“உனக்கு எத்தனை தடவை சொல்லுறது வெய்… டொன்ட் கால் மீ பாஸ்…,ஐ ஹெட் தட் சௌண்ட்ஸ்…” என எண்ணெயில் இட்ட கடுகேன பொறிய தொடங்கினான் ஷ்யாம், ஸ்டீவ் கேட்ட கேள்விகள் எதையும் சற்றும் காதில் வாங்காமல்.

ஷ்யாமின் பேசியதிலிருந்தும், தனக்கு வந்த பதில் செய்தியிலிருந்தும், அவன் நலமாக உள்ளதை உணர்ந்து கொண்ட ஸ்டீவிற்கு ஷ்யாமை இன்னும் கொஞ்சம் சீண்டி விட ஆசை பிறந்தாலும், அமெரிக்காவில் தனக்கு பின்னிரவு என்றாலும் இந்தியாவில் இருப்பவனுக்கு விடியலின் தொடக்கம், (இந்தியவிற்கும் அமெரிக்காவிற்கும் 9.30 மணி நேர கால வித்தியாசம்)இந்த அதிகாலை நேரத்தில் ஷ்யாம் ஏதற்கு தன்னை அழைத்தான், அவன் கோத்தகிரி செல்ல என்ன காரணம்? என்பதை பற்றி எல்லாம் அறிந்துக் கொள்ள வேண்டி தன் சேட்டைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்த ஸ்டீவ்.

“ஸாரி தஃக் கா, ஜஸ்ட் ஃபார் பன்…” என்றவன், “சொல்லுங்க தஃக் கா என்ன விசயம்...?” என்று எந்தவித
முஸ்த்திப்புகளும் இல்லாமல் நேராக விசயத்திற்கு வந்திருந்தான் ஸ்டீவ்.

ஸ்டீவ் உடனடி மன்னிப்பிலும், அவனின் பதில் கேள்வியிலும் தான், தான் அவனை அழைத்ததின் காரணம் உணர்ந்து சற்று மலையிறங்கி வந்த ஷ்யாம்,”நத்திங் சீரியஸ் ஸ்டீவ், ஜஸ்ட் ஐ நீட் சம் இன்பர்மேஷன்…” என்றான்.

"சொல்லுங்க தஃக் கா… உங்களுக்கு எதைப்பற்றி, யார் சம்பத்தமான டீடெல்ஸ் வேண்டும்…” என்றான் ஸ்டீவ். (ஷ்யாம் கேட்க போவதை பற்றி அறியாமல்)
“நான் போன தடவை இந்திய வந்ததிலிருந்து எனக்கு அக்ஸிடெண்ட் நடந்த வரை உள்ள டீடெய்ல்டு ரிப்பொர்ட் எனக்கு உடனே வேணும், கூடவே நா… நா… நான் அனுப்புற போட்டோவில் இருக்குற பெ… பெண்ணோட அப்டூடேட் ஆல் இன்பர்மேஷன் ஐ வான்ட், டொட் மிஸ் அ சிங்கில் பிட் …” என பெண்ணவளை பற்றி தகவல்களை அறிய கேட்டவன் முதலில் திக்கி தடுமாறினாலும், முடிவில் அவன் குரலில் வெளிபட்டது உறுதியும், கட்டளையும் மட்டுமே.

ஷ்யாம் சொல்ல சொல்ல ஸ்டீவ் மனதிற்குள் ‘இவருக்கு எதுக்கு அந்த டீடைல்ஸ்’ என்று எண்ணிக் கொண்டிருந்தவன், ஷ்யாம் ஒரு பெண்ணை பற்றி சொல்லவும், சற்று நேரத்திற்கு ,முன்பு கட்டி வைத்த தன் சேட்டைகளை எல்லம் கட்டவிழ்த்து விட்டவன்…

“தஃக் கா…. ஆஆஆஆஆ… “ என பொய்யாக அதிர்ந்தவன், மத்தவங்களை பற்றி இன்பர்மேஷன் கேட்பீங்கன்னு பார்த்த, நீங்க உங்களை பற்றி இன்பர்மேசன் அதுவும் இந்தியா போயிருந்தப்பா… உங்களுக்கு தான் யாரும் உங்களை பற்றி இன்வெஸ்டிகேட் பண்ணினாலும் பிடிக்காதே, அதனால தானே இங்க பாடி கார்ட்ஸ்சை அலாட் பண்ணாம உங்க பின்னாடி 24/7 நான் சுத்துவேன், இந்தியா போன என்னையும் கழட்டி விட்டுடுவீங்க… அப்புறம் நான் எங்க போறது நீங்க கேட்குற டீடெல்ஸ்க்கு, அதுவும் உடனே… ம்ஹும்” என கதையளந்துக் கொண்டிருந்தான் ஸ்டீவ்.

அவன் சொல்லியவற்றை கேட்டு கொண்டிருந்தவனின் இதழில் சிறு முறுவல் படர்ந்தது… அம்முறுவல் வாடாமல் “ஒ… அப்படியா ஸ்டீவ் , நீங்க எனக்கு பிடிக்காதுன்னா அந்த வேலையை செய்யவே மாட்டீங்க…” என நக்கலாக கேட்டான் ஷ்யாம்.

“……”

“என்ன தம்பி, சத்தத்தை காணும்…” என்றவனிடம், “அ.. அது தஃக் கா, நான் ஆமாம்னு தலை அட்டினேன்… பழக்க தோசத்தில்…” என சமளித்தான் ஸ்டீவ்.

“நீ என்ன என்ன வேலையேல்லாம் செய்வா, எப்படி எப்படி செய்வன்னு எனக்கு தெரியும்டா … அங்கேயாவது நீ மட்டும் தான் இருப்பா, அதே நான் இந்தியா வந்த கார் டிரைவரில் இருந்து நான் தங்குற ஹோட்டல் ரூம் பாய் வரை எல்லோரையும் என்னை மானிடர் பண்ண வெச்சி, உனக்கு ரிபொர்ட் பண்ண சொல்லுவ… இவங்க பத்தாதுன்னு, தனியா வேற ஒரு டீமை எனக்குன்னு செடியூல் பண்ணி இருப்பா… நான் எத்தனை தடவை அவங்களை எமாத்தி சுத்தல்ல விட்டாலும், அடுத்த பிப்டீன் மினிட்ஸ்ல அவங்க என்னை டிரக் பண்ண ஆரம்பிச்சிடுவங்க, என்னை டிரக் பண்ண ஏதாவது டிவைஸ் வெச்சி இருக்கியோன்னு எனக்கு ஒரு சில நேரம் சந்தேகம் வரும் ஸ்டீவ்…” என சில நொடி இடைவெளி விட்டான் ஷ்யாம்.

அதற்குள் ஸ்டீவோ… “அப்படியேல்லாம் எந்த ஸ்டஃப்பும் உங்க திங்க்ஸ்ல நான் இம்ப்லன்ட் பண்ணலை தஃக் கா,என தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது, தன் நண்பனின் உத்தி,
இத்தனை நாளும் இத்தெல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்து விட்டு இப்பொழுது தான் செய்த அனைத்தையும் பட்டியலிட்டு கூறும் காரணம் அறிந்தவன்.

‘ தஃக் கா, நீங்க வெர்ல்டு பெஸ்ட் மனோ தத்துவ நிபுணன்னு சும்மாவா சொல்றாங்க, அவ்சம் ப்ரொ… என்னை விளக்கம் கொடுக்க வச்சி என்னை கார்னர் பண்ண பார்க்குறீங்க…” என தன் தஃக் கா அறிவை எண்ணி வியந்தாலும், ஏன் கிட்டையா போட்டு வாங்க பார்க்குறீங்க… இருக்க உங்களை… என மனதிற்குள் சொல்லிக் கொண்டவனை கலைத்தது ஷ்யாமின் அழைப்பு.

“ஸ்டீவ்… ஏய் ஸ்டீவ்…” என கத்தினான் அவனின் திடீர் அமைதியில்,

“அது ஒன்னுமில்லை தஃக் கா, அந்த அக்ஸிடெண்ட் ரெக்கவரிக்கு பின்னாடி இங்கே உங்களை சுத்தி சுத்தி வந்த எல்லா பொண்ணுங்களையும் வேண்டவே வேண்டாம்னு சொல்லி விரட்டி விட்டீங்க… இப்ப கூட டாப் மாடல் ரிச்சா, உங்களை பற்றி விசரிச்சிகிட்டு தான் இருக்க இங்க நிலமை இப்படி இருக்க… நீங்க என்னான்னா இத்தியாவில் இருக்குற யாரோ ஒரு பெண்ணை பற்றி விசரிக்க சொல்றீங்க… ஷீ அட்ராக்ஸ் யூ தாட் மச்… சொல்லுங்க ஷீ இஸ் அ அக்டெர்ஸ், மாடல் அர்…” என பேசிக் கொண்டிருந்தவனின் வார்த்தைகளை தடை செய்து இருந்தது, ஷ்யாமின் “ஷட் ஆப் வெய்…” என்ற கோபமான வார்த்தைகள்.

தன் மனத்திற்குள் ஒருத்தி புகுந்துக் கொண்டு மற்ற பெண்கள் தன்னை நெருங்கினால் ஒருவித ஒவ்வாமை உணர்வும், பெண்ணவளின் தெளிவில்ல உருவமும் தோன்றி தன்னை வதைப்பதை அவன் ஸ்டீவிடம் எவ்வாறு கூறுவான்.

ஷ்யாமை பொருந்த்தவரை காதல், கல்யாணம் என்பது எல்லாம் கமிட்மெண்ட், அதில் தற்பொழுது சிக்கிக் கொள்ள அவனுக்கு விருப்பம் இல்லை, தன்னை காதல் என்ற பெயரில் நெருங்க நினைப்பவர்களுக்கு ஷ்யாம் கொஞ்சமும் இரக்கம் காட்ட மாட்டான்.

அதற்காக அவனை ராமன் என்றும் சொல்லிவிட முடியாது, காதல் என்று எவரையும் அவன் இதுவரை ஏமாற்றியதும் இல்லை, மற்றவர் அவனை ஏமாற்ற விட்டதும் இல்லை… அவனின் விருப்பம் கொண்டு நாடி வருப்பவர்களில் தனக்கும் விருப்பம் இருந்தால் அதன் அயூட் காலம் என்பது ஒர் இரவு, ஒர் உறவு அவ்வளவு தான். ஆனால் பாவம் அவனுக்கு தெரியவில்லை இதே ஒர் இரவு ஒர் உறவு தன் வாழ்க்கையையே மாற்றும் என்று!!!

அப்படி இருந்தவனை தான் தன்னையே நித்தமும் நினைக்க வைத்த முகமாறிய மங்கையவள் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தாலும், தன் மனமே தன்னை வஞ்சிக்க வஞ்சி அவளை நிந்தித்து என்ன பயன்!!!

ஸ்டீவ் சொன்னதிற்கெல்லாம் தன் மனத்திற்குள் விடை பகின்றுக் கொண்டிருந்தவன், ஸ்டீவ் கடைசியாக சொன்ன வார்த்தைகளை கேட்டு கோபத்தில் கத்தியிருந்தான்.

தான் எப்பொழுதும் இதுபோல் கேலி செய்தால்… ஷ்யாம், ஒரு சிரிப்புடன் தன்னை கடந்து விடுவான் அல்லது “நான் உன்னை மாதிரி ப்லே பாய் இல்ல வெய், உனக்கு தான் ‘மே ஐ-ன்னு’ அந்த கேர்ள்ஸ் எதற்கு கேட்குறங்கன்னு தெரியாத பொழுதே, எஸ் டியர், அப்படின்னு அவங்களை பார்த்தும் உன் மனசு ஐஸ்கீரிம் மாதிரி கரைச்சி காணாம போயிடும், வெரி பேட்,பீளிஸ் டேக் கேர் அப் யூவர் ஹெர்ட்… அப்படி இல்லைன்ன உங்க மாம்கிட்ட உன்னோட பிரைவெட் லைப் பத்தி சொல்லி அவங்களை டேக் கேர் பண்ண சொல்லவா எப்படி வசதி” என தன்னை பதிலுக்கு பொய்யாக மிரட்டி கிண்டல் செய்பவனிடமிருந்து இப்படி ஒரு கோபத்தினை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டீவ் அமைதியாகி விட.

ஸ்டீவின் மௌனத்தில் தன் கோபம் விட்டு சற்று நிதானத்திற்கு வந்த ஷ்யாம், “ஸா… ஸாரி டா , டொன்ட் கம்பெர் ஹெர் வித் தெம்…” என்றவனின் குரலில் அவ்வளவு கனிவும் , மென்மையும் இழைத்து இருந்தது பெண்ணவளை பற்றி குறிப்பிடும் பொழுது.

இதற்கு முன்பு எந்த பெண்ணை பற்றி பேசும் பொழுதும் ஷ்யாமின் குரலில் இவ்வளவு குழைவு இருந்ததில்லை, ஷ்யாமின் குரலில் இருந்தே, அப்பெண்ணின் மீது அவனின் மனம் மையல் கொண்டதை அறிந்துக் கொண்ட ஸ்டீவின் மனதில் பெயர் தெரியாத ஒரு பெண்ணின் முகம் வந்து செல்ல… “தஃக் கா…” என்றவனால் மேற்கொண்டு பேச முடியவில்லை… பேச முடியவில்லை என்பதனை விட பேச இயலவில்லை.

வாழ்வில் முதல் முறையாக தான் தவறு செய்து விட்டோமோ…? என்ற சுய அலசலில் ஈடுப்பட்டு இருந்தவனை கலைத்தது ஷ்யாமின் குரல்… “லீவ் இட் ஸ்டீவ், எனக்கு நான் கேட்ட டீடெல்ஸ் அனுப்பிவிடு, டொன்ட் டிஸ்கஸ் திஸ் மேட்டார் வித் எனிபடி… டேக் கேர் அண்ட் டேக் கேர் ஆல் ஒஃப் தெம்…” என்றவன் அழைப்பை துண்டித்து இருந்தான்.

ஸ்டீவோ, ‘யார் அந்த பெண், அக்ஸிடெண்ட் பற்றிய சொல்ல வேண்டுமனால், பெயர் தெரியாத அவளை பற்றியும், அவர்களின் பழக்கத்தை பற்றியும் சொல்ல வேண்டி வருமே, இத்தனை நாள் இதனை பற்றி ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்ற ஷ்யாமின் கேள்விக்கு தன்னிடம் விடை இல்லையே…

எப்படி ஸ்டீவினால் பதில் சொல்ல முடியும், ‘அவர்கள் இருவரை பற்றி அறிந்து தான் விசரிக்க தொடங்குகையில் ஷ்யாமிற்கு விபத்து ஏற்பட்டிருக்க, அவனை பாதுகாத்து இங்கு அழைத்து வந்து, இந்த விபத்திற்கு காரணி யார் என அறிந்து தெரிந்து அவர்களை எல்லாம் களை எடுப்பதற்குள் பெண்ணவள் இடம், தடம் தெரியாமல் காற்றில் மறைத்துப் போயிருந்தாள்.என்ன முயன்றும் ஸ்டீவினால் அவளை கண்டறிய இயலவில்லை…’ இவற்றை எல்லாம் எப்படி ஷ்யாமிடன் சொல்வது என அங்கே ஒருவன் நிம்மதி இழந்தது தவிக்க தொடங்கியிருந்தான்.

தான் கேட்ட விவரங்கள் கிடைத்துவிட்டால் தன் கேள்விகளுக்கான விடையும், தன் குழப்பங்களுக்கான தீர்வும் கிடைத்துவிடும் என நிம்மதி கொள்பவனுக்கு தெரியவில்லை, அனைத்தையும் அறிந்தக் கொண்ட பின்னர் தான் , தன் நிம்மதி மொத்தமாக தொலைய போகிறது என அவனுக்கு யார் சொல்வது!!!



தொடரும்❤️❤️❤️❤️❤️
 
அத்தியாயம் 5

ஷியாம் சொன்ன அனைத்தையும் கேட்ட ஸ்டீவ் நேராக போய் நின்றது ஷ்யாமின் அனுஜனும் அவனின் மித்திரனும் ஆன ஷ்யாமள ருத்ரனிடம் தான்.
“ருத்ரா… ருத்ரா…” என அழைத்துக் கொண்டே அவனின் அலுவல் அறைக்குள் நுழைய… கையில் உள்ள கோப்பினை பார்த்துக் கொண்டிருந்தவன் , இடதுக் கை சுட்டு விரலினால் தான் அணித்திருந்த ரிம் லஸ் கண்ணாடியினை ஏற்றிவிட்டவாறு, தன் புருவம் சுருக்கி அவனை கேள்வியாக நோக்கினான்.
ஸ்டீவோ மனதிற்குள் இந்த பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என கருவியவன். “லுக்கு எல்லாம் நல்லா தான் இருக்கு…”என நொடிக்க…
“ வேற என்ன நல்லா இல்லையாம்…”என பதில் கேள்வி கேட்டான் ருத்ரன்.
“ என் நிலைமை தான்டா நல்லா இல்ல…”என்றான் ஸ்டிவ்.
தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்த ருத்ரா, ஸ்டீவ்வை முன்னும் பின்னும் சுற்றி திருப்பிப் பார்த்தவன் … “ஏன் நல்லா தானே இருக்க, அடி ஒன்னும் பலமா இல்லையே…” என சிறு இடைவெளிவிட்டவன் “ ஒருவேளை எல்லாம் உள் காயமோ…” என்றான் பொய்யான பதற்றத்துடன்.
‘தான் சொல்ல வரும் விசயம் என்ன…? ஏது…? என கேட்காமல்… தன்னை சொல்லவும் விடாமல்… தன்னை கேலி செய்யும் ருத்ராவின் செய்கையில் பொருமை இழந்த ஸ்டீவ்.
“ என் நிலைமை புரியாமல் விளையாடாத ருத்ரா. ப்ரோ இந்தியால இருந்து கால் பண்ணி இருந்தாங்க, தனக்கு நடந்த விபத்த பற்றி முழு ரிபொர்ட் கேட்குறரு அவரு…” என பதட்டமாக கூறினான் ஸ்டீவ்.
தன் அண்ணன் அழைத்தான் என்றதும் சிறு பதட்டமான ருத்ரா, அவன் விபத்தினை பற்றி விசரித்ததாக ஸ்டீவ் கூறவும்… “ அக்ஸிடெண்ட் பத்தி ரிபொர்ட் கேட்ட கொடுக்க வேண்டியது தானேடா…” என கூலாக சொன்னான் ருத்ரா.
அவனின் பதிலில் கடுப்பான ஸ்டீவ்…” டேய்… டேய்…என் வாயில் நல்லா வந்துரும்… எதாவது சொல்லிட போறேன்… அவரு அக்ஸிடெண்ட் பற்றி மட்டும் கேட்கலை கூடவே யாரோ ஒரு பொண்ணை பற்றியும் விசரிக்க சொல்லுறரு…” என்றான்.
“வாவ் இன்ட்ரஸ்டீங்க, யாரு அந்த பொண்ணு…” என ஆர்வமாக வினாவினான் ருத்ரா.
“யாருக்கு தெரியும், போட்டோ அனுப்புறேன்னு சொல்லி இருக்குறரு…” என சலித்தவன், நாம தப்பு பண்ணிட்டோமோன்னு பயமா இருக்கு ருத்ரா முன்னாடியே நாம ப்ரொ கிட்ட பொறுமையா அந்த பொண்ணை பத்தி சொல்லி இருந்திருக்கணும்… என்றான் ஸ்டீவ்.
“புலம்புறதை முதல்ல நிறுத்து ஸ்டீவ்… அந்தப் பொண்ணை பத்தி, என்னன்னு சொல்லி இருப்பீங்க சார்…, முக்கிய செலபிரிடி அண்ட் பிக் ஷொட்ஸ்க்கு ஹெட் பாடி கார்ட்ஸ் டிரைன் பண்றவர், எந்த கேஸா இருந்தாலும் அதில் எவ்வளவு சிக்கல் இருந்தாலும் ஷொர்ட் பீரியட்ல சல்வ் பண்ற தி பெமஸ் லீடிங்க் கிரைம் இன்வெஸ்டிகேஷன் ஆபிசர் ஸ்டீவ் வெய் லாங்ன்னால, அந்த பெண்ணோட பெயரையாவது கண்டு பிடிக்க முடிஞ்சுதா … அவங்களை பத்தி எந்த இன்ஃபர்மேஷனும் இல்லாமல் என்னன்னு உன் ப்ரொகிட்ட சொல்லி இருப்ப…” என கோபமாக கத்தியவன்.
“ டாக்டர் சொன்னதை மறந்துட்டியா ஸ்டீவ், அண்ணாவோட ஹெல்த் கண்டிசனுக்கு அவர் ரொம்ப யோசிக்கவோ தன்னை குழப்பிக்கவோ கூடாது… அவருக்கு வலுகட்டாயமா எந்த ஒரு விஷயத்தையும் திணிக்க கூடாது அப்படின்னு சொன்னதை கூட நின்னு கேட்ட தானே…?
நாம் அந்த பெயர் தெரியாத பொண்ண பத்தி சொல்லி இருந்தா… அண்ணா அவங்க யாரு என்னான்னு யோசிச்சி… யோசிச்சி அவருக்கு ஸ்ட்ரெஸ் தான் ரொம்ப அதிகமா ஆகியிருக்கும்…” என்ற ருத்ரனின் குரலில் அவ்வளவு வருத்தம்.
“நமக்கும் இதுவரை எந்த ஒரு விஷயமும் அவங்களை பத்தி கிடைக்கலை, நமக்குத் தெரியாத விஷயத்தை அவருகிட்ட சொல்லி மேலும் அவரை குழப்பக் கூடாதுன்னு தானே அவர்கிட்ட இருந்து அந்த விஷயத்தை மறைச்சோம்… இதுல எதுவும் தப்பு இருக்கிறதா எனக்கு தோணலை என்றவன் தொடர்ந்து இத்தனை நாளும் தனக்கு நடந்த விபத்தை பற்றி கேட்காதவர் இப்ப கேட்கிறார் என்றால் அவருக்கு ஏதாவது நியாபகம் வந்துருக்கணும் இல்ல ஹீ வில் ஃபீல் சம்திங் ஸ்டிரேன்ஞ்… சோ அண்ணா முதல்ல போட்டோ அனுப்பட்டும், அப்புறம் அவங்க யாரு, என்னன்னு, விசாரிக்கலாம்…” என்றவன்.
விஷமம் அவன் குரலில் வழிய “சொல்ல முடியாது, என் அண்ணன் அனுப்புற போட்டோல இருக்குற பொண்ணும் நாம தேடுற பொண்ணும் ஒண்ண இருக்க கூட சான்ஸ் இருக்கு…” என ருத்ரா ஆருடம் சொல்ல, அவன் தோள் பற்றிய ஸ்டீவ்…” ருத்ரா அப்படியும் இருக்குமா…? என ஆர்வமும், மகிழ்ச்சியுமா வினவினான்.
“சொல்ல முடியாது அப்படியும் இருக்கலாம், எப்போதுமே நமக்கு எல்லாம் தோன்ற இன்டியூஷனை விட, அவனுடைய இன்டியுஷன் ஸ்ட்ராங்கா அண்ட் கரெக்ட்டா இருக்கும்…ஹோப் ஃபார் தி பெஸ்ட் என்றான் ருத்ரன் ஸ்டீவின் தோளை தட்டி, ஸ்டீவும் ருத்ரன் சொன்னவரே இருக்க வேண்டும் என அவனின் மனமும் ஆசை கொண்டது.

கோத்தகிரி
ஸ்டீவிடம் பேசிவிட்டு வந்த ஷ்யாம் கண்டது, உறங்கும் தன் தங்கையின் அருகில் அமர்ந்து விழி அகலாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவினை தான்.
விஷ்ணுவை நெருங்கி அவனின் தோளை தொட, அதில் தன் உணர்வு வந்தவன்,திரும்பி ஷ்யானை நோக்கியவன் விழிகளில் மெல்லிய நீர்படலம்.
தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவன். “எங்க பாப்பா இப்படி அமைதியா தூங்கி பல மாசம் ஆச்சு ஷியாம், அப்படியே தன்னை மறந்து ஒரு சில மணி நேரம் தூங்கினாலும் திடீர்னு பதறி எழுச்சி உட்கார்ந்து எதையோ வெறிச்சு பார்த்துகிட்டு இருப்பா, அவளுக்கு இந்த நிலைமையில் தூக்க மருந்தும் கொடுக்க முடியாது… என தன்னைப் போல பேசிக்கொண்டு இருந்தவன் தன் முகத்தினை அழுந்து துடைத்து கொண்டு, ஷ்யாமின் கரங்களைப் பற்றியவாறு நான் இப்படி கேட்கிறது அபத்தம் தான்னு அறிவுக்கு புரியுது ஆனா மனசு கேட்கலை நீ… நீ… நீங்க உ… உங்க… உங்களுக்கு எங்க பாப்பாவை முன்னாடியே தெரியுமா..?” என திக்கித் திணறி ஒருவழியாக தன் மனதினை உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வியினை கேட்டு விட்டான் விஷ்ணு.
ஷ்யாமிற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. விஷ்ணுவின் கேள்விகள் தானே அவன் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதனால் அவன் மறுமொழி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.
ஷ்யாமின் அமைதியில்… “எங்கே தான் கேள்வியை அவன் தவறாக எடுத்துக் கொண்டனோ…” என பதறிய விஷ்ணு… “சாரி ஷ்யாம் நீங்க ஒரு NRIன்னு தெரிஞ்சும் நான் இப்படி கேட்டது தப்பு தான்… அதுவும் இல்லாமல் நான் கேட்கமலையே எனக்கு உதவ வந்த உங்க்கிட்ட இப்படி நான் கேட்டது ரொம்ப ரொம்ப தப்பு தான்” என மன்னிப்பு வேண்டினான் .
தனக்கும் பெண்ணவளுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகள் என்ன என தானே தெளிவில்லாமல் மன குழப்பத்தில் இருக்கும் இந்நிலையில் விஷ்ணுவின் மன்னிப்பு ஷ்யாம் மனத்தினை வருத்தியது.அதனால் பேச்சை மாற்றும் விதமாக பெண்ணவளின் இந்நிலைக்கு என்ன காரண காரியம் என விசாரிக்க தொடங்கினான்.
விஷ்ணுவிற்கு நடந்தது என்ன என நூறு சதவீதம் தெரியாது என்றாலும், ஷ்யாம் கேட்ட கேள்விக்கு தனக்கு தெரிந்தவரை விஷ்ணு அளித்த பதில்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்றுபொருந்த என்ன நிகழ்ந்தது என அறிந்து கொள்ளும் ஆர்வமும் , பரபரப்பும் ஷ்யாம் மனதில் அதிகரிக்க தொடங்கியது.
ஸ்டீவிடம், பெண்ணவளின் புகைப்படத்தினை அனுப்புவதாக சொல்லிவிட்டவனுக்கு, விஷ்ணுவிடம் அவன் தங்கையின் புகைப்படத்தினை கேட்பதற்கு வாய் வரவில்லை. அவனிடம் எவ்வாறு கேட்பது என யோசனையில் இருந்தவனுக்கு, அப்பாத்தா விஷ்ணுவை அழைத்தது பெரும் வாய்ப்பாக அமைய, மேட்டர்னிட்டி உடையில் சிறுபிள்ளை போல் உறங்கும் அவளை தன் அலைபேசியில் படம் எடுக்கத்தவனுக்கு அப்படத்தினை ஸ்டீவிற்கு அனுப்ப தான் மன ஒப்புக் கொள்ளவில்லை, அப்படத்தினை தன் தனிபட்ட கேலரியில் சேமித்து வைத்தவன். அறையின் சுவரில் மாட்டி இருந்த பெண்ணவளின் புகைப்படத்தை தன் அலைபேசியில் பதித்துக் கொண்டவன், அதனை ஸ்டீவிற்கு “மேக் இட் பாஸ்ட்…” என்ற குறுஞ்செய்தியுடன் அனுப்பி விட்டவன். ஸ்டீவின் அழைப்பினை ஒவ்வொரு நொடியும் ஏதிர்பார்த்து காத்திருந்தான் ஷ்யாம்.

ஷ்யாம் அனுப்பிய போட்டோவை பார்த்த ஸ்டீவ், அவனை அலைபேசியில் தொடர்பு கொள்ளாமல், “ப்ரோ நீங்க கேட்ட டீடைல்சோட நாளைக்கு மார்னிங் உங்களை நான் நேரில் பார்க்கிறேன்…” என குறுஞ்செய்தி மூலம் பதில் தகவல் அனுப்பி இருந்தான்.
ஷ்யாமின் மனமோ, “இவனை டீடைல்ஸ் கேட்டா இவன் எதுக்கு இப்ப இந்தியா கிளம்பி வரான்…”என எண்ணியவன். ஸ்டீவ்விற்கு அழைக்க அவனின் அலைபேசியோ அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
ம்ச்… என தன் அதிருப்தியை உச்சிக் கொட்டி வெளியிட்டவன், விஷ்ணுவிடம் சொல்லிக் கொண்டு ஹோட்டல் வரை சென்று விட்டு வரலாம் என நினைத்து, பெண்ணவளை பார்க்க, அவளோ உறங்கிக் கொண்டிருக்க, அவள் விழித்தெழுந்தாள் தன்னை செல்ல விட மாட்டாள். அதலால் அவள் உறக்கம் கலைந்து எழுவதற்குள் ஹோட்டல் அறைக்கு சென்று திரும்பி விடலாம் என எண்ணி அறையின் கதவு நோக்கி சென்றான்.
சரியாக அந்நேரம் கண் விழித்த பெண்ணவள் கண்டது அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் ஷ்யாமினை தான்.
அவன் தன்னை விட்டு செல்வதை கண்டவள். இத்தனை நாள் தன்னை மறந்து, தன்னுணர்வு இன்றி இருந்தவள், தன் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினை கவனிக்க தவறியவளாக, தற்போழுது தான் இருக்கும் நிலைமையையும் மறந்து வேகமாக எழ முயன்றாள்.
தன்னால் எழ முடியாமல் போகவே, “மையூயூயூ…” என சத்தமாக கத்தி அழைக்க… நிறைமாத வயிற்றோடு அவள் எழ சிரமப்படுவதை கண்டவன்.
“ ஈஸி…ஈஸி… கியூட்டி பை…” என்றபடி அவளை இரெண்டெட்டில் அடைத்தவன். பெண்ணவள் எழ தன் ஒரு கரம் நீட்டியவன், மறு கரம் கொண்டு மெல்ல அவளை அணைத்தவாறு எழுப்பி அமர வைத்தான்.
நீட்டிய அவன் கரத்தினை பற்றி படி எழுந்தவள், அவனை இடையோடு கட்டிக் கொண்டு “மையூ… மையூ என விசும்ப…” பெண்ணவளின் குரல் கேட்டு வந்த அவள் குடும்பத்தாரின் கண்களுக்கு இக்காட்சி விருந்தாக, விஷ்ணு அவர்கள் இருவர் இருக்கும் நிலையினை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் பெரியவர்கள் இருவருக்கும் அக்காட்சி உவப்பனதாக இல்லை என்று அவர்களின் பார்வை உணர்த்த… அவனுக்கு யார் சொல்லுவது , அது அதிருப்தி இல்லை, அச்சம் என்று.
ஏற்கனவே ஒருவன் பிள்ளை தன்னுடையது என உறவு கொண்டாட, இத்தனை நாள் ஜடமாக இருந்தவள் உணர்வு வந்ததும் அந்நியன் ஒருவனிடத்தில் உரிமை கொள்வதை நல்லது என ஏற்பதா..? கெட்டது என தவிர்பதா…? என நிலைகொள்ளாமல் தத்தளித்தது அவ்விரு முதியவர்களின் மனம் .
தன் இடையினை கட்டிக் கொண்டு அழுபவளின் கையினை மென்மையாக தன்னிலிருந்து பிரித்தவன், அவளை சரியாக கட்டிலில் அமர வைத்து, “கியூட்டி பை, இந்த மாதிரி நேரத்தில் இப்படி வேகமா எழுந்திரிக்க கூடாது, பேபி பயந்துடும் என்றான்…அவளின் வயிற்றை சுட்டிக்காட்டி, அவன் சொல்லியதன் பொருள் புரியாமல் பாவை விழிக்க… பெண்ணவள் பாவனையில் ஷ்யாமளனின் உதடுகளில் முறுவல் தோன்றியது.
அப்புன்னகையுடனே கலைந்திருந்த அவள் குழல்களை காதின் ஒரம் சொருகியவன்… அவளின் வல கையினை எடுத்து மேடிட்டிருக்கும் வயிற்றில் பதிக்க, இத்தனை நாள் அன்னை தன்னை கண்டுக் கொள்ளவில்லை என்ற கோபமோ அல்லது பல நாள் கடந்து தாயின் ஸ்பாரிசம் கிட்டிய உவகையா தெரியவில்லை…குழந்தை துள்ள, பெண்ணவள் அணிந்திருக்கும் உடையினை தாண்டியும் சிசுவின் அசைவை கண்டான் ஷ்யாம்.
இதுவரை எந்த உணர்வும், அசைவும் இன்றி ஜடமாக இருந்தவள் முதல் முறையாக குழந்தை துள்ளிவதை உணர்ந்து பயம் கொண்டு தன் இரு கை கொண்டு தன் பெருத்த வயிற்றை பற்றியவள்.
“ அ… அ… மை…மை… மையூ… மையூ… எ… என்… வ… வயத்துகுள்ள…” என தான் உணர்வதை உரைதிட முடியாமல் மங்கை அவள் மருள, பெண்ணவளின் நிலை உணர்த்த ஷ்யாம்.
“ ஈஸி… ஈஸி… பேப், ஒன்னும் இல்லை பயப்படாதே… உன் வயற்றில் இருக்குற பேபி மூவ் பண்றாங்க… அவ்வளவு தான்” என விளக்கம் அளித்தான்.
பெண்ணவளோ, தன் வயிற்றினை பயப்பார்வை பார்த்தவாறு, “ என் வயத்துக்குள்ள எனக்கு தெரியாம பேபி எப்படி போனாங்க…?” என கேள்வி கேட்க, அங்குள்ள அனைவரின் பார்வையும் பாவை மீது பாய, அவர்கள் விழிகளிலும் அக்கேள்வியே நிறைந்திருந்தது.
இந்த கேள்விக்கு அங்குள்ள யாரால் பதில் கூற முடியும், ஷ்யாம் என்ன சொல்வது என தெரியாமல்… “ அது… அது…” என தயங்க, பெண்ணவளோ அவனை நோக்கி விரல் நீட்டி… “ நான் தூங்கும் பொழுது எனக்கு தெரியாம நீ பேபியை என் வயற்றில் வெச்சிட்டியா மையூ…” என்றவளின் கேள்வியில் ஷ்யாம் உறைந்து நின்று விட, பெரியவர்கள் பொருள் அறியாமல் தன் பேத்தி கேட்ட கேள்வியில் மனம் வெதும்பி அங்கிருந்த இருக்கையில் தளர்ந்து அமர்ந்து விட்டனர். விஷ்ணுவோ “பாப்பா, என்ன பேசுற…” என்றவனின் குரலில் கோபத்தினை விட அற்றாமையே நிறைந்திருந்தது.
ஏனெனில் சற்று நேரத்திற்கு முன்பு, இதே கேள்வியை தானே தானும் மாற்றி கேட்டோம்… இப்பொழுது இளையவளும் அதையே கேட்க… உதவ வந்தவன் மீது வீண் பழி சுமத்துவதாக ஷ்யாம் தங்களை தவறாக கருதி விடுவனோ என்ற அற்றாமையில் சத்தமாக கத்தி விட்டான்.
விஷ்ணுவின் கத்தலில் பெண்ணவளின் உடல் அதிர கட்டிலில் அமர்ந்திருந்தவள் சட்டென எழுந்து தன்னை விட்டு விலகி நின்றிருந்த ஷ்யாமை நெருங்கி அணைத்துக் கொள்ள…
பெண்ணவளின் ஸ்பாரிசமும், விஷ்ணுவின் சத்தமும், கோதையின் கேள்வியில் உறைந்த நின்றிருந்தவனை நிகழ்விற்கு அழைத்து வந்தது.
தன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவளின் உடல் பயத்தில் நடுங்குவதை உணர்ந்த ஷ்யாமின் ஒரு கரம் அவள் முதுகினை மெல்ல வருடி கொடுக்க… தாய் அவள் பயந்ததில் சேய்யும் பயந்ததோ என்னவோ, மீண்டும் சுற்றி சுழல… இம்முறை பார்வையில் அல்லாது ஸ்பாரித்தின் மூலம் சிசுவின் அசைவை உணர்ந்தவனின் கரம், சுற்று சுழலும் பிள்ளையினை மெல்ல வருடியவன்.
“பேப்… நான் என்ன சொன்னேன் வேகமா எழுந்த பேபி பயப்படுவங்கன்னு சென்னேன் தானே… அதையே மறுபடியும் பண்ண என்ன அர்த்தம்…” என செல்லமாக கடித்துக் கொள்ள, மங்கையவளோ அவன் மார்பினிலிருந்து தன் முகத்தினை மெல்ல நிமிர்த்தி அவன் முகம் பார்த்தவள், திரும்பி விஷ்ணுவின் புறம் தன் கரம் நீட்டி “யாரு அவங்க…? அவங்க தீடிர்ன்னு சத்தமா பேசவும் நா.. நான் பயந்துட்டேன்…” என ஷ்யாமளனுக்கு விளக்கமளிக்கின்றேன் என்ற பெயரில் விஷ்ணுவை போட்டுக் கொடுத்தாள்.
ஏற்கனவே விஷ்ணுவை குற்றம் சாட்டும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தவனின் விழி வீச்சில் அனலை அதிகரிக்க செய்தது கோதையவளின் கூற்று.
கண்களில் கனலும், வார்த்தைகளில் கடுமையும் வெளிபட்டாலும், சிறிது தன் குரலை உயர்த்தாமல் பெண்ணவளை அணைத்தவாறு… “விஷ்ணு, அவகிட்ட இப்படி தான் சத்தமா கத்துவீயா…? பாரு பயத்தில் அவள் உடம்பு எப்படி உதறுது…” என்றவனுக்கு விஷ்ணு “அது… பாப்பா…” என பதிலளிக்க முயன்றவன் ஷ்யாம் பார்த்த பார்வையில் அவன் வார்த்தைகள் அப்படியே பாதியில் நின்றுவிட்டன.
“நானும் அதை தான் சொல்றேன், இப்ப அவ ஒரு குழந்தை மாதிரி, அவ என்ன சொன்னாலும், செஞ்சாலும் நாம பெருச எடுத்துக்க கூடாது, அதுக்கும் அர்த்தமும் கண்டு பிடிக்க கூடாது… அவ தெரிஞ்சி எதையும் பண்ணலை… ஆனா நாம சொல்றதும், செய்றதும் அவ மனசில் பெரிய பாதிப்பை உண்டாக்கும்… சோ இனிமே அவ எதிரில் எதை பேசுனாலும், செஞ்சாலும் கொஞ்சம் பார்த்து பன்ணுங்க என அனைவருக்கும் பொதுவாக சொல்லியவனின் வார்தைகளில் வன்மையிருந்தாலும் அவனின் கரங்கள் மென்மையாக இளையவளை வருடிக் கொண்டிருந்தன.
மெல்ல மெல்ல ஷ்யாமளனின் வருடலில் தாயும் சேயும் அமைதிக் கொள்ள… அவளின் மனத்தினை திசை மாற்ற அங்கு அமர்திருந்த முதியவர்களை சுட்டிக் காட்டியவன் “ இவங்க யாருன்னு தெரியுதா…? என கேட்க, இளையவளோ “இல்லை…” என மறுப்பாக அவன் மார்பினிலிருந்து தன் தலையினை விலக்காமல் இட வலமேன அசைக்க… அவளின் முக மென்மையினை தான் அணிந்திருக்கும் உடையினை தாண்டி உணர்ந்தவனுக்கு … தன் நெஞ்சில் முகம் புதைத்திருக்கும் மங்கை அவளின் மலர் வதனம் பற்றி முத்தமிட்டு சற்று முன்பு தான் உணர்ந்த மென்மை உண்மையா என தன் உதடுகள் மூலம் உறுதிபடுத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகரிக்க, தன் மன போகும் திசை அறிந்தவனுக்கு அந்த மலையகத்தின் குளுமையிலும் அவனுள் வெம்மை பரவியது.
இவ எனக்கு அடி வாங்கி கொடுக்காம விட மாட்டா போலிருக்கே… ஏற்கனவே இவ மையூ… மையூன்னு கட்டிக்கவும், இவ ஃபமிலில இருக்குறவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்குறங்க…
சிறியவளின் நெருக்கத்தில் தன் மனம் முழுதாக அவளிடம் சரண் புகுவதை உணர்ந்தவன்… இதுல நான் வேற ஏதாவது எக்கு தப்பா செஞ்சி வெச்ச என்னை பற்றி என்ன நினைப்பாங்க…
நோ, இந்த லிட்டில் டெவில் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கனும், என மனதில் உறுதி எடுத்து கொண்டிருந்தவனின் கன்னம் பற்றியவள்.
“மையூ, என்னால நிக்க முடியாலை… கால்… கால்…” என சொல்லியவள் நிற்க முடியாமல் தடுமாற… தான் எடுத்த உறுதி மொழியை காற்றில் விட்டவன்… சிறுபிள்ளையினை தூக்குவதுப் போல் தன் இருக்கரங்களில் அள்ளியவன் கட்டிலில் சாய்வாக அமர்த்தி பெண்ணவளின் பாதங்களை அராய, அவளின் பாதங்களில் நன்றாக நீர்க் கோர்த்து வீங்கி இருந்தன.

ஷ்யாம் அவள் பாதங்களை அராய்வதை கண்ட அப்பத்தா, வெளியில் சென்று ஒரு பாத்திரத்தில் வெந்நீரும் துண்டும் கொண்டு வந்தவர், இளையவளுக்கு ஒத்தடம் கொடுக்க முயல, பெண்ணவளோ அவரை கண்டு பயந்தவளாக தன் கால்களை பின்னுக்கு இழுக்க முயன்றவளின் எண்ணம் புரிந்த ஷ்யாம் அவளின் பாதங்களை இறுக பற்றியவன் “பேப், எதுக்கு பயம் அவங்க உன் அ… அப்…” என தடுமாற, அவன் தடுமாறுவதை கண்ட சிவசு தாத்தாவோ… “ உன்ற அப்பத்தா ராசாத்தி…” என கூற, சிறியவளோ ஷ்யாமினை பார்க்க, அவனும் ஆமாம் என்னும் விதமாக தலை அசைக்க… அதில் திருப்தியடைந்தவளாக பெண்ணவளும் “அப்பத்தா…” என சொல்லி பார்த்தாள்.
“ ஆமாம் ராசாத்தி, நான் உன்ற அப்பத்தா தான்.” என்றவர் பல நாள் இல்லை இல்லை பல மாதங்கள் கழித்து தன் பேத்தி வாய் திறந்து பேசுவதை கண்டு ஆனந்தம் அடைந்தவராக.. விழிகளில் கண்ணீர் வழிய இளையவளை நெருங்க, அவரின் நெருக்கத்தில் முதலில் பயம் கொண்டு விலக நினைத்தவளின் மனத்தினை முதியவரின் கண்ணீர் எதோ செய்ய, அவரின் முகம் பார்த்து “அப்பத்தா…” என அழைக்க, அவ்வழைபிற்காகவோ காத்திருந்தது போல் பூங்கோதை நாச்சியரோ சிறியவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள… பெண்ணவளும் பெரியவரின் அணைப்பில் பந்தமாக அடைக்கலம் ஆனாள்.

சொன்னது போலவே ஸ்டீவ், மறுநாள் காலையில் ஷ்யாமளனை நேரில் காண வந்தவன், புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் தற்போதிய நிலையினை கண்டவன், தான் எண்ணி வந்தது போல் விசயம் எளிதானது அல்ல என அதிர்ந்து நின்றுவிட்டான்.


தொடரும்❤️❤️❤️❤️❤️
 
அத்தியாயம் 6

அமெரிக்கா
ஷ்யாம் அனுப்பிய புகைப்படத்தினை கண்டு ஸ்டீவிவும், ருத்ரனும் உறைந்துவிட்டனர்.
டேய் ருத்ரா, என்னடா இது…? என ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக கேட்ட ஸ்டீவிற்கு மேற்கொண்டு என்ன சொல்வது என தெரியவில்லை.
ஏனெனில் ருத்ரன் விளையாட்டாக சொன்னது போல் அவர்கள் தேடும் பெண்ணும், ஷ்யாம் அனுப்பிய புகைப்படத்தில் இருந்த பெண்ணும் வேறு வேறு அல்ல ஒருவரே ஆவர்.
ருத்ரனும் புகைப்படத்தினை கண்டு திகைத்து விட்டவன், தன்னை சட்டென்று மீட்டுக் கொண்டவனாக முதல்ல தான் அவங்களை பற்றி எந்த தகவலும் சேகரிக்க முடியலை, இப்ப தான் அவங்க யாரு என்னன்னு தெரிஞ்சிடுச்சி இல்ல… என அவன் சொல்லி முடிக்கவில்லை.
ஸ்டிவின் அலைபேசி இசைத்தது.
தன் திகைப்பிலிருந்து வெளிவந்த ஸ்டீவ் அழைப்பை ஏற்க…
பாஸ், பிக் பாஸ் இப்ப இருக்குற எஸ்டேட் ஓனர் பெயர் சிவ சுப்ரமணியம் அவரோட பாமிலி மற்ற டிடைல்ஸ் எல்லாம் உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன்… என அந்த பக்கம் சொல்ல, ம்… என சொல்லியவாறே அங்கிருந்த மடிக்கணினியில் தனக்கு வந்திருக்கும் தகவல்களை ஆராய்ந்த வண்ணம்… ப்ரோ, சேப்டி… என கேட்க…
நோ இஸ்யூ… பாஸ், அந்த ஏரியா முழுசும் நம்ம கண்காணிப்பில் தான் இருக்கு… என உடனடியாக அந்த பக்கமிருந்து பதில் வந்தது.
குட்… யாரு அந்த பங்களாவுக்கு வராங்க, போறங்கன்னு வாட்ச் பண்ணுங்க அவங்க டீடெயில்ஸும் கலெக்ட் பண்ணுங்க… என அவர்களுக்கு கட்டளையிட்டு அழைப்பை துண்டித்தவன், கணினியில் கண்பதிக்க…
ருத்ரனோ அழைப்பு வந்ததினால் தடைப்பட்ட தன் உரையினை தொடர்ந்தான்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அண்ணாவுக்கும் அவங்களுக்கும் எப்படி பழக்கம், அண்ணாவை பத்தி அவங்களுக்கு தெரியுமா… அவன் ஆக்ஸிடென்டிற்கு பிறகு அவங்க காணாம போக காரணம்… இப்ப எப்படி அண்ணா அவங்களை மறுபடியும் சந்திச்சான்… அவங்க அண்ணாவை அப்ரோச் பண்ண ஏதாவது காரணம் இருக்க இல்ல, அவங்க சந்திப்பு தற்செயலாக நடந்ததா… இது எல்லாம் எனக்கு உடனே தெரிஞ்சாகணும் ஸ்டீவ்… என்றவனின் முன் மடி கணினியினை திருப்பிய ஸ்டீவ்.
நீ நினைக்கிற மாதிரி, அவங்க சாதாரண பாமிலி இல்ல… ப்ரோவை அவங்க அப்ரோச் பண்ண எனக்கு தெரிஞ்சி எந்த மொட்டிவும் இல்ல… அதுவும் இல்லாமல் ப்ரோ தானவே தான் விஷ்ணு கூட போயிருக்கார் என்றவன்.
தொடர்ந்து நாம தேடிக்கிட்டு இருந்தவங்க பெயர் பூங்கோதை நாச்சியார், கோத்தகிரியில் தாத்தா சிவ சுப்பிரமணியம் மற்றும் அப்பத்தா பூங்கோதை நாச்சியாரோட கடந்த சில மாசமா தங்கி இருக்காங்க.
சிவ சுப்பிரமணியம் கோயம்புத்தூரில் செல்வாக்கு உள்ளவர். அவருக்கு ரெண்டு பசங்க மூத்தவர் கதிர்வேல் விவசாயம் மற்றும் மில்களை பார்த்துகிறார், அவர் மனைவி தெய்வானை, அவங்களுக்கு ஒரே மகன் பெயர் விஷ்ணு மித்ரன். அப்பா கூட விவசாயம் மற்றும் மில்களை பார்த்துக்கிட்டு இருக்கிறார்.
இளையவர் பெயர் சக்திவேல், இவர் தொழில்துறை மந்திரி, அவர் மனைவி செண்பக வள்ளி, அவங்களுக்கு ஒரே பொண்ணு பூங்கோதை நாச்சியார். மருத்துவம் படிக்குறங்க… எல்லாரும் கூட்டு குடும்பமா ஒண்ணா கோயம்புத்தூரில் தான் வசிக்கிறங்க. ஆனா கொஞ்ச நாளா இல்ல இல்லா சரியா சொல்லனும்னா கடந்த ஒரு சில மாசங்களா பெரியவங்க அப்புறம் பூங்கோதை கோத்தகிரியில் ஸ்டே பண்றாங்க… விஷ்ணு அங்கேயும் இங்கேயும்னு தங்குறாங்க…
மினிஸ்டர் பொண்ணு அதனால நம்மளால அவங்களை டிரேஸ் பண்ண முடியாம போக காரணம், பூங்கோதை பத்தி எந்த தகவலும் வெளியில் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு ப்ளாக் பண்ணி இருக்கணும்னு நினைக்குறேன். அதனால தான் நமக்கு அவங்களை பற்றி ஒரு சின்ன விஷயம் கூட கிடைக்கலை,தெரியலை.
இதுல இன்னொரு முக்கியமான விசயம் என்னென்ன, இதுவரை பூங்கோதை கோத்தகிரி வந்த நாளில் இருந்து அந்த பங்களாவை விட்டு எங்கேயும் வெளியில் போகலை… அதுதான் சம் திங் பிஷ்ஷி என வல கையினால் தன் தாடையினை தடவியவாறு கூறினான்.
ஸ்டீவ் கூறிய அனைத்தையும் அமைதியாக கேட்ட ருத்ரன், ஸ்மார்ட்… என தன் நண்பனின் வேலை திறனில் உள்ள வேகத்தினை சிலகித்தவன்.
அண்ணவோட ஆக்ஸிடென்ட் முன்னாடி நடந்தது என்னன்னு தெரிஞ்சுதா… என்றான்.
அதையும் விசாரிக்க சொல்லி இருக்கேன்… மே பீ இன்னைக்குள்ள தெரிஞ்சிடும். என பதிலளித்தான் ஸ்டீவ்.
அதற்குள் நாம் ஷ்யாமளனின் குடும்பம் பற்றி அறிந்துக் கொள்ளலாம்.
அமெரிக்கவில் வாழும் விரல்விட்டு எண்ணக்கூடிய மில்லிரியர்களில் ஒருவரும், உலகளவில் பெயரும் புகழும் கொண்ட ஷ்யாமளன் பர்மா மற்றும் ஷ்யாமளன் குழுமத்தின் நிறுவனர். பல தலைமுறைகளுக்கு முன்பே அமெரிக்கா மண்ணிற்கு புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான் ஷ்யாமள மயூரனின் தந்தை சுந்தர ஷ்யாமளன், மிகவும் பொறுப்பனவர், பணம் கொண்டு மனிதர்களை தரம் பிரிக்கும் குணம் இவருக்கு இல்லை… தாய் சகுந்தலை, அன்பான மனைவி … தன் கணவன் தனக்கு தனித்து முடிவெடுக்கும் அதிகாரம் அளித்திருந்தாலும், தன் கணவனை கலந்தலோசிக்காமல் இதுவரை எந்த முடியும் எடுத்ததில்லை… அது நிறுவனம் சம்பந்தபட்டதாக இருந்தாலும் சரி, குடும்ப சம்பந்தமாக இருந்தாலும் சரி…
இருவருக்கும் இரு மகன்கள் ஷ்யாமள மயூரன் மூத்தவன், இளையவன் ஷ்யாமள ருத்ரன் மற்றும் ஒரு மகள் சக்தி மயூரி. அவனின் குடும்ப உறுப்பினர்கள் அவர்… அச்சசோ, முக்கியமான ஒரு ஆளை விட்டுட்டேன், அதுவேறு யாருமில்லை சுந்தர ஷ்யாமளனின் தாய் சக்தி விலசினி இல்ல இல்ல வினி. (அந்த பாட்டி, ச்சீ…ச்சீ… தப்பு தப்பு அந்த பியூட்டிக்கு அப்படி கூப்பிட்ட தான் பிடிக்கும், அப்படி கூப்பிடாம நீங்க மத்தி கூப்பிட்டு ஆகும் சேதாரத்திற்கு கம்பனி பொருப்பகாது, அப்புட்டு தான் சொல்லிட்டேன்…)
ஷ்யாமள மயூரனின் அன்னை சகுந்தலைக்கு மயூரன் பிறந்து ஒரு வருடம் பூர்த்தி ஆனதும் அடுத்த பிள்ளை நின்றுவிட அவனிற்கு அன்னைக்கு அன்னையாக , தோழிக்கி தோழியாக இருந்தவர் சக்தி விலாசினி தான் இல்ல இல்ல ஷ்யாமள மயூரனின் ஹனி. மற்ற பிள்ளைகளும் அவருக்கும் செல்லம் என்றாலும் மயூரன் என்றால் தனி பிரியம் உண்டு அவருக்கு.

ஷ்யாமள மயூரன், மாமனையும் மருகனையும் தன் பெயரில் கொண்டவன்… தோற்றமும் அப்படியே அறடிக்கு குறையாத உயரம், அதற்கு ஏற்ற உடற்கட்டு அழகன், வயது 31, அவனின் நேத்திரங்களை கண்டு மயங்குவதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை… அழியின் நீல நிறத்தினை பிரதிப்பலிக்கும் அவனின் நேத்திரங்கள்.
குடும்ப தொழிலில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை, மருத்துவத்தில் அதுவும் மனங்களை அறிவது, ஆராய்வதும் மிகவும் பிடிக்கும். அதனால் மனோ தத்துவத்தை தனி பாடமாக எடுத்து படித்தவன் அதில் தனக்கென பெயரும் புகழும் பெற்றிருந்தான்.

இளையவன் ஷ்யாமள ருத்ரன், மயூரனை விட இரண்டு வயது சிறியவன். நிறம், உயரம், எடை, தேக அமைப்பு என பின்னிருந்து பார்த்தால் யார் ருத்ரன் யார் மயூரன் என கண்டறிவது கடினம், அவர்களை வேறுபடுத்தி காட்டுவது அவர்களின் முகமும், மயூரனின் விழிகளின் நிறமும் தான்.
பல நேரம் ருத்ரன் கறுப்பு கண்ணாடியும் அணிந்துக் கொண்டு, தன்னை மயூரன் என நெருங்கும் பெண்களுடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவர்களுடன் அட்டம் பாட்டம் என இழைப்பவன், மது மயக்கத்தில் லவ் யூ டார்லிங் என அவர்கள் மயூரன் என எண்ணி தங்கள் காதலை சொல்ல ருத்ரனும் பதிலுக்கு மீ டூ என பதிலளிப்பான். அது அவனுக்கு விளையாட்டு… அவன் பதிலில் புலங்ககிதம் அடைந்தவர்கள். எல்லை மீற முயல லாவகமாக அங்கிருந்து வந்துவிடுவான்.
அடுத்த முறை அவர்கள் மயூரனிடம் நெருங்குகையில் ருத்ரனின் கூட்டு வெளிப்பட்டு விடும்.
கோபமாக ருத்ராவின் முன் நிற்பவன் ருத்ரா உனக்கு எத்தனை தடவை சொல்றது இந்த மாதிரி என்னுடைய பெயர் சொல்லிகிட்டு பொண்ணு கிட்ட லவ் யூ சொல்லாத, அந்த வார்த்தை ஒரு பொண்ணுக்கு எவ்வளவு நம்பிக்கையும் பாதுகாப்பும் கொடுக்கும் தெரியுமா அதை ஜஸ்ட் லைக் தட் சொல்லிட்டு போற… நம்மளை நெருங்க நினைகுறவங்க எல்லாருக்கும் மணி தான் மொட்டிவ், பை சான்ஸ் நீ விளையாட்டா சொன்னது யாரோட மனசையவது பதிச்ச அது பாவம் ருத்ரா இந்த விளையாட்டு வேண்டாம் என்றவனுக்கு அப்பொழுது தெரியாது தன்னால் ஒருத்தி பிச்சி நிலைக்கு செல்ல போவது.
ருத்ரன்,தந்தைக்கு துணையாக குடும்ப தொழிலினை நிர்வகிப்பவன்… பொறுப்பனவன் தான் ஆனால் சற்று விளையாட்டு குணம் அதிகம்.
மயூரன் ரெண்டு வார்த்தை பேசினால், ருத்ரன் அந்த இடத்தில் பத்து வார்த்தை பேசுவான்.
கடைக்குட்டி சக்தி மயூரி, அண்ணன்களின் செல்ல தங்கை.
அனைத்தும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. உலக அளவில் ஷ்யாமளன் பார்மா தயாரிக்கும் மருந்துகளுக்கு எப்படி வர்த்தக சந்தையில் தனி மதிப்பு உண்டோ, அதேபோல் மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளுக்கு இவர்கள் நிறுவனம் வழங்கும் தரச் சான்றிதழ்களுக்கு மவுசு அதிகம்.
எப்படி ஷ்யாமளன் ஃபார்மா மருந்துகளுக்கு தனி சிறப்பு உண்டோ, அதேபோல் ஷ்யாமள மயூரன் அவன் துறை சம்பந்தமாக ஆராய்ந்த பரிந்துரைக்கும் மருந்துகளுக்கும் வர்த்தக சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு.
பொதுவாக தங்கள் நிறுவனம் அல்லாத மற்ற நிறுவனங்களுக்கு அவ்வாறு பரிந்துரைத்து நற்சான்றிதழ் வழங்க மாட்டான் மயூரன்… அதில் சில விதிவிலக்கு உண்டு.

தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை விட விலை குறைவாக இருந்தால், இந்திய நிறுவனமாக இருந்தால் என இப்படி சில உண்டு.

அப்படி ஒரு வருடத்திற்கு முன்பு புனேவில் இருந்து ஒரு பர்மா, தாங்கள் தயாரிக்கும் மருந்தை ஷ்யாமளன் பர்மாவின் தர சான்றிதழுடன் , மயூரனின் நற்சான்றிதனையும் கேட்டு அவர்களின் மருத்தின் மாதிரிகளை அனுப்பி இருந்தனர்.
தனக்கு வந்த மாதிரிகளை ஆராய்ந்து அறிக்கை இணை தயாரித்த ருத்ரன் தன் தமையனிடம் அவங்க அனுப்பின சேம்பிள் படி இந்த டேப்லெட்ல எந்தவித தப்பும் இல்லை, இது மன அழுத்தத்தினை குறைக்க உதவும்,ஆனா நாம எப்பவும் பண்ற மாதிரி மத்தவங்க தயரிக்குற மருந்தின் மார்க்கெட்டிங் சேப்பிலை இந்தியாவில் இருக்கிறவங்க கிட்ட ஸ்டீவ் மூலமாக பர்செஸ் பண்ணி , டெஸ்ட் பண்ண ரிசல்ட் இது, ரெண்டுக்கும் நிறைய வெரியேசன் இருக்கு… என மயூரன் முன் வைத்தான்.
அறிக்கையினை ஆராய்ந்து பார்த்தவனுக்கு அப்படி ஒரு கோபம் மேல்வாரியாக பார்த்தால் அம்மாத்திரை மன அழுத்தத்தினை படி படியாக குறைத்து குணப்படுத்தும், அதனை தொடர்ந்து உபயோகப்படுத்தி வந்தால் மட்டுமே, அம்மருந்தினை இடையில் நிறுத்தினால் அதன் பக்க விளைவுகள் பலவாக இருக்கும்… ஏன் மூளை நரம்புகளை பாதித்து மன அழுத்தத்தினை அதிகரித்து பைத்தியம் பிடிக்கும் நிலைக்கும் கொண்டு செல்லும்… என அதன் சாதக பாதகத்தினை விளக்கமாக விலாவாரியாக அறிக்கை தயாரித்தவன், அம்மாத்திரையினை தடை செய்ய கோரி இந்தியாவின் மருந்து சான்றிதழ் வழங்கும் The Central Drugs Standard Control Organisation(CDSCO)under Directorate General of Health Services,Ministry of Health & Family Welfare,Government of India ஒரு அறிக்கையும் , உலகளவில் மருந்துகளுக்கு சான்றிதழ் அளிக்கும் அமைப்பிற்கு ஒரு அறிக்கையினை அனுப்பிவிட்ட மயூரன், அந்த நிறுவனத்திற்கும் அனுப்பினான்.
மயூரனின் அறிக்கையினை கண்ட சுரஜ், எஸ்.அர் பர்மாவின் உரிமையாளனுக்கு என்ன செய்வது? 0ஏது செய்வது என அவன் யோசிப்பதற்குள் அவன் மருந்துகளுக்கு தடை விதித்து, அவன் மருந்து கம்பனிக்கு சீல் வைக்கப்பட்டு, அவனை கைது செய்யவும் உத்தரவு வந்திருந்தது.
நம் நாட்டின் சட்டத்தில் உள்ள ஓட்டையினை பயன்படுத்தி சூரஜ் தனக்கும் இந்த மருந்தில் உள்ள குளருபடிக்கும் யாதோர் சம்பந்தமும் இல்லை என மற்றொருவரை பலியாடாக மாற்றி தண்டனையில் இருந்து வெளி வந்து விட்டான் தான். ஆனால் அவனால் தன் மருந்து கம்பெனியை காப்பாற்ற முடியவில்லை…அதனால் அவனின் செல்வநிலை அடி பாதாளத்திற்கு செல்ல அவனின் வெறுப்பு முழுவதும் மயூரன் மீது திரும்பியது.
அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து முடிய, ருத்ரனின் முன் கோபமாக நின்றிருந்தான் ஸ்டீவ்.
என்ன வேலைடா பார்த்து வெச்சி இருக்காரு, அவரை யாருடா நேரடியா ரிப்போர்ட் பண்ண சொன்னது எப்பவும் போல நானே ரிப்போர்ட் பண்ணி இருப்பேன்ல இது தானே நம்ம வழக்கம். அங்கே கம்பெனிக்கு சொந்தக்காரன் மத்தவன கைகாட்டி விட்டுட்டு அவன் வெளியில வந்துட்டான். ப்ரோ மேல சரி கடுப்புல இருக்கான்…. என சலித்துக் கொண்டவனிடம் அவன் கடுப்பு என் அண்ணனை என்னடா செய்யும் என ருத்ரன் பத்தி கேள்வி கேட்க அவனால இங்க வந்து ஒரு டேஷும் புடுங்க முடியாது எனக கூறி தன் முடியை இழுத்துக்காட்ட, அப்புறம் ஏண்டா நீயும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் அக்குற… பீ கூல் என அவனுக்கு தேறுதல் சொன்னான் ருத்ரா.
ப்ரோ இங்கேயே இருந்தா நான் ஏண்டா இப்படி புலம்ப போறேன், இப்ப பிரச்சனையே ப்ரோ அடுத்த மாசம் இந்தியா போக ஷெடுல் போட்டு இருக்குறது தான். அந்த சுரஜ்க்கும் அண்டர் கிரவுண்ட் மாஃபியா, லோகல் தாதா இப்படி நிறைய கண்டாக்ட்ஸ் இருக்கு… இவர் இந்திய போற விஷயம் அவனுக்கு பை சான்ஸ் தெரிஞ்சதுன்னா ஆத்திரத்தில் இருக்கிறவன் என்ன செய்வன்னே தெரியாது,பைத்தியக்காரன் விட மிக மோசமானவன்… அவனால் பிரோக்கு ஏதாவது ஆபத்து வந்திடுமோண்ணு கொஞ்சம் பயமா இருக்கு… என தன் கவலையினை நண்பனிடம் சொல்ல
அவனின் தோளினை தட்டிக் கொடுத்த ருத்ரன் இதுக்கு ஏன்டா இவ்வளவு கவலை படற எப்பவும் போல உன்னோட ஆட்களை வைத்து அவரை புரோடெக்ட் பண்ணிக்க வேண்டியது தான். அதுவும் இல்லாமல் அந்த சுரஜ்க்கு என் அண்ணன் மேல கை வைக்கிற அளவுக்கு அவ்வளவு தைரியம் எல்லாம் கிடையாது. என கர்வமாக சொல்லியவனுக்கு தெரியாது, பின்னாளில் தன் இதற்காக வருந்துவோம் என்று.



தொடரும் ❤️❤️❤️❤️❤️
 
அத்தியாயம் 7

ருத்ரனும் ஸ்டீவும் தங்களுக்குள் மயூரனை பற்றி விவாதித்து கொண்டிருக்க, அவர்கள் அறையை கடந்து சென்ற மயூரனின் செவிகளில் அவர்களின் உரையாடல் விழுந்தது, அதுவும் தன் பெயர் அதில் அடிப்படவும் அவ்வறைகுள் நுழைந்தான் மயூரன். அவனின் வரவை எதிர்பார்க்காதவர்கள் சற்றென்று அமைதியாகிவிட, மயூரனோ அவர்கள் இருவரையும் பார்த்து… என்னை பத்தி அப்படி என்னடா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தீங்க?…எனக் கேள்வி கேட்டான்.

ருத்ரனோ, பெருசா எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா.. நீங்க இந்த தடவை அந்த சூரஜ் கம்பெனியை பத்தி நேரடியா ரிப்போர்ட் பண்ணது பத்தி தான் பேசிட்டு… இருந்தோம் என பதில் அளித்தான்.

மயூரனோ, அவன் பண்ண வேலைக்கு ரிப்போர்ட் பண்ணாம வேற என்னடா பண்ண சொல்றீங்க? என அவர்களிடம் பதில் கேள்வி கேட்டான்.

ருத்ரன் பதிலளிக்கும் முன்னால் முந்தி கொண்ட ஸ்டீவ், அது இல்ல ப்ரோ , எப்பவும் இந்த மாதிரி இஸ்யூஸ் வந்த ருத்ரன் என்கிட்ட சொல்லுவான், நான் யாரு,எப்படி, எங்கிருந்து ரிப்போர்ட் பண்ணங்கன்னு டிராக் பண்ண முடியாத படி ரிப்போர்ட் பண்ணுவேன், அதுபோல் நீங்களும் என்கிட்ட சொல்லியிருந்தீங்கன்னா நான் ரிப்போர்ட் பண்ணி இருப்பேன் இல்லையா என தான் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லாமல் நிறுத்தினான் .

மயூரனோ இதுல என்னடா இருக்கு… நான் ஒரு டாக்டர், நானே நேரடியா ரிப்போர்ட் பண்ணதால தான். உடனடியா அவன் கம்பனிக்கு சீல் வெச்சாங்க? நமக்கு தேவை அவன் கம்பெனி மருந்துகளை தயரிக்ககுறதை நிறுத்தனும். சாரி அவன் தயரிக்குறது மருந்துக்களே இல்ல விஷம். ஏற்கனவே இருக்குற நோய்களுக்கே மருந்து கண்டுபிடிக்க முடியாம இருக்கு, இதுல இவன் குணப்படுத்தும்ன்னு மக்கள் நம்பி சாப்பிடுற மருந்தில், அந்த நோய் குணமாகமா இருக்கவும், அதை அதிகரிக்கவும் வழிவகை செய்றான்.

இந்த மாதிரி ஆட்களை எல்லாம் உயிரோடவே விட கூடாது, இவன மாதிரி ஆட்கள் பண்ற தப்பினால் எத்தனை பேரோட வாழ்க்கையை பாதிக்குது தெரியுமா? அப்படி என்ன பணம் சம்பாதிக்க வேண்டி இருக்கு? என தன் மனக்குமுறலை ஆத்திரமாகவும், ஆற்றமையாகவும் வெளியிட்டான்.

ஸ்டிவோ, உங்க ஸ்பீச் எல்லாம் நல்ல தான் இருக்கு, ஏற்கனவே அந்த சூரஜ் ஒரு பண பைத்தியம் பிடிச்ச குரங்கு, நீங்க பண்ண வேலையினால் அவன் இப்ப கள்ளு குடிச்ச மாதிரி வெறி பிடிச்சு சுத்திக்கிட்டு இருக்கான், என மனதில் புலம்பியவன்.

மயூரனின் இந்திய பயணத்தினை தடுக்க நினைத்து, அதை பற்றி அவனிடம் பேச முயல, அதற்குள் ருத்ரனோ, தன் நண்பனின் எண்ணம் அறிந்தவனாக அவன் கை பற்ற, என்னவென பார்த்தவனை விழிகளினால் வேண்டாம் என தடுத்தவன்.

நீ எப்ப இந்திய போற என மயூரனிடம் வினவ, அவனோ இன்னும் ரெண்டு வாரம் இருக்கு… என் கேட்குற ருத்ரா வேற எதாவது இஸ்யூஸ், இல்ல நான் பார்க்க வேண்டிய வேலை இருக்கா என வினவினான்.

அப்படி எதுவும் இல்லை என்றான் ருத்ரன்.

ஸ்டீவ், நீங்க பார்த்தா வரை போதும்… என மனதிற்குள் கூறி கொண்டவன், இவன் என் நம்மளை பேச விடாமல் தடுக்குறான் என ருத்ரனின் செயலுக்கு விளக்கவுரை யோசித்துக் கொண்டிருந்தவன், சகோதரர்களில் உரையாடலில் கவனம் வைக்காமல் தன்னுள் மூழ்கியிருத்தான்.

தங்களுக்குள் பேசி கொண்டிருந்தவர்கள், வெகு நேரமாக ஸ்டீவ் அமைதியாக இருப்பதை கண்ட மயூரன், இவன் ஏண்டா இப்படி இருக்கான் என ஸ்டீவினை சுட்டிக் காட்டி கேட்க, ருத்ரனோ தன் தோள்களை குலுக்கி யாருக்கு தெரியும் என்றான்.

மயூரனோ ஸ்டீவின் பின்னதலையில் தட்டி, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவாறு… என்னடா எந்த ஃபிகர் கூட டூயட் பாடிகிட்டு இருக்க என்றான் சிரித்தபடி, ருத்ரானும் தன் உடன்பிறந்தவனுக்கு ஹய் பை கொடுத்தவாறு புன்னகையுடன் மயூரனின் அருகில் அமர…

ஸ்டீவோ ,மயூரன் தட்டியதில் கலைந்த தன் கேசத்தினை சரி செய்தவாறு… வளருற பிள்ளையா தலையில் அடிக்கதீங்க ப்ரோ என்றான்.(டேய் ஸ்டீவ் இதுக்கும் மேல நீ வளரணுமா… அவனுங்களே அறடிக்கு மேல, நீ அவனுங்களை விட ஒண்ணு ,இரெண்டு இன்ச் உசரம் அதிகமா தான் இருப்ப… சொல்றதுல ஒரு நியாய தர்மம் வேண்ட … ராஸ்கல்)

உதடுகளில் உறையும் மென்னகையுடன் அமர்ந்திருக்கும் இரு சகோதரர்களையும் பார்த்தவன்… ஒரு பெரும் மூச்சினை விட்டவாறு எங்க அம்மாவும் அப்பாவும் தப்பு பண்ணிட்டாங்க டா… என அவன் சொல்லி முடிக்கவில்லை.

ருத்ரனோ… ஆமாம் டா, உன்னை போய் பிள்ளையா பெத்திறுகங்களே… என சிரியாமல் சொல்ல… அவன் சொன்னதை கேட்டு மயூரனால் தன் சிரிப்பினை கட்டுப்படுத்த முடியவில்லை வாய்விட்டு சிரித்தான்.

அவர்கள் தன்னை கேலி செய்வதை கண்டு அவர்களை முறைத்தவன்… என்னையா பையான பெத்ததுக்கு பதில் பொண்ணா பெத்திருந்த உங்க ரெண்டு பேரில் யாரையாவது லவ் பண்ணி செட்டில் ஆகி இருப்பேன் என வருத்தத்துடன் சொல்ல…

அவன் சொன்னதை கேட்ட இருவரும், எங்களுக்கு அவ்வளவு மட்டமான டேஸ்ட் இல்ல… என ஒன்றாக சொல்லி சிரித்தனர்.

ஏன் சிரிக்க மாட்டீங்க… ஒருத்தர் கண்ண பார்த்தே எல்லா பொண்ணுங்களும் மயங்குது… பெண்ணுங்கன்னு இல்லை அன்னைக்கு உங்க ஃபேஷட் கூட வந்தவன்… உங்க கண்ணா பார்த்ததும்… டாக்டர் யூவர் ஐஸ் ஆர் கில்லிங் மீ… ன்னு சொல்றார்… இதுவரை இப்படி பொண்ணுங்களை பார்த்து பசங்க சொல்லித்தான் நான் கேள்விப்பட்டிருக்கேன், ஒருசில பசங்க கண்ணா பார்த்ததும் பெண்ணுங்க சொல்லியும் பார்த்திருக்கேன்… ஆனால் என் லைப்ல முதல் முறை ஒரு பையன் பார்த்து ஒரு பையன் சொன்னதை கேட்டு அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்… (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்). என வளைந்து நெளிந்து சொல்லியவன் மீது மயூரன் குஷனை விட்டெரிய அதனை லாவகமாக பிடித்தவன், மயூரனை கண்டு விஷமமாக சிரித்தவன் அவன் என்கிட்ட வந்து என்ன கேட்டான் தெரியுமா ருத்ரா , ப்ரோ வந்து வந்து ஸ்டிரைட்அ இல்ல என மேலும் ஏதோ சொல்லவந்தவனின் வாயினை எழுந்து வந்த மயூரன் மூட, அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள பொராடியவனின் காதில் இதுக்கு மேல ஒரு வார்த்தை சொன்ன உன்னை என்ன பண்ணுவேன்னே தெரியதுடா… என மயூரன் மிரட்ட..

விடுங்க ப்ரோ, நான் எதுவும் சொல்லலை, நீங்கதான் அப்படின்னா, இவனை என்ன சொல்ல, அன்னைக்கு பப்ல நான் தனியா போறவங்க வரவங்களை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்… அன்னைக்கு எந்த சாமிக்கு என் மேல கருணை பிறந்ததோ தெரியலை, ஒரு அழகான பொண்ணு என்கிட்ட வந்து ஹாய் டுயூட்(dude) , யூ நீட் கம்பெனி… அப்படின்னு கேட்க, நானும் எஸ்னனு சொல்றதுக்குள்ள அவ்வளவு நேரம் அங்கே ஆடிக்கிட்டு இருந்தவன் எப்ப, எப்படி என் பக்கத்தில் வந்தான்னு. தெரியலை ப்ரோ, வந்தவன் என் பக்கத்தில் ஒரு பொண்ணு இருக்கிறதை பார்த்து, கண்டும் காணாம போகாம , ஹாய்ன்னு சொல்ல அவ்வளவு தான் ப்ரோ சோலி முடிஞ்சுது, அதுவரை என்னை பார்த்து பேசிக்கிட்டு இந்தவ, இவனை பார்த்ததும் ஹாய் ஹன்ட்சம்.. ன்னு பேச ஆரம்பிச்சவா பேசுற பேசுற பேசிகிட்டே இருக்கா, இவனும் அவ சொல்றதுக்கு எல்லாம் ஈ.. ன்னு இளிசிகிட்டு இருக்கான்…

இவன் இளிக்க இளிக்க இவன் வல கன்னம் குழி விழ, அதை எதோ உலக அதிசயம் போல் பர்த்தவா, யூவர் ஸ்மைல் இஸ் மெஸ்மெர்ரைசிங்(mesmerising) அண்ட் திஸ் டிம்பிள் இஸ் சோ நைஸ்ன்னு தொட்டு பார்குற.. அதுக்கு இவன் இன்னும் கொஞ்சம் இளிக்க, அப்புறம் அவ ஏன் என் பக்கம் திரும்புற… இப்படிபட்ட உங்களோட இருந்த நான் எங்கிருந்து நிஜத்தில் ஒரு பெண்ணோட டூயட் பாடுறது, கனவில் தான் டூயட் பாட முடியும், அதுவும் கஷ்டம் தான் என அலுத்து சலித்து கொண்டான்.

இப்படி அலுத்து கொள்பவனுக்கு மது, மாது என்றால் கொஞ்சம் தூரம் தான்… இவன் தொழிலுக்கு விழிப்புணர்வு அவசியம் என்பதால் மதுவை கையில் எந்துபவன் அதனை உட்கொண்டது இல்லை… மாது, அவர்களுடன் கடலை போடுவான், ஆடுவான்,பாடுவான் அவ்வளவு தான், அதற்கு மேல் இவன் பெண்களை நெருங்கியது இல்லை, அவர்கள் இவனை நெருங்கினால் அங்கிருந்து நழுவி விடுவான். ஸ்டீவிடம் உள்ள ஒரே கெட்ட பழக்கம் புகைப்பது , அதுவும் அவன் அதிகம் பதட்டபட்டால் மட்டுமே.

ஸ்டீவ் சொல்லிவற்றை கேட்ட மயூரன், ஏன் டா என்பது போல் கேள்வியாக நோக்க, அதற்கு ருத்ரனோ சும்மா என வாய் அசைத்து, கண் சிமிட்ட , இளையவனின் செய்கையில் மயூரனின் உதடுகள் புன்னகைக்க, உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கமவே இல்லையாட சின்ன பிள்ளைங்க மாதிரி ஒருத்தனை பத்தி ஒருத்தன் குறை சொல்லிகிட்டு, இன்னும் கொஞ்ச நேரம் உங்க கூட
இருந்தேன் அடுத்து நான் செய்ய வேண்டிய வேலையை மறந்துடுவேன் , நான் கிளம்புறேன் என கூறி ஓரடி எடுத்து வைக்க, உடனே ஸ்டீவ், எங்க போறீங்க ப்ரோ வாங்க போகலாம் என அவனுக்கு முன் செல்ல முயல, ஸ்டிவின் கரம் பற்றிய மயூரன், அவனை சுற்றி யாரையோ தேடுவது போல் தன் பார்வையினை அலையவிட்டான்.

என்ன ப்ரோ, என அவன் பார்வையினை தொடர்ந்த படி ஸ்டீவ் கேட்க, இல்லடா இவ்வளவு நேரம் ஒருத்தன் எங்க கூட இருந்த அவனுக்கு எந்த பொண்ணும் செட் ஆகாதுன்னு புலம்பிகிட்டு இருந்தவன், இப்ப நான் வேலை இருக்குன்னு சொன்னதும் எங்க என்னன்னு கூட கேட்காம, என் கூட வரேன்னு சொல்றான். அதான் கொஞ்ச நேரம் முன்ன என்கிட்ட புலம்பின அந்த மனஸ்தனை தேடுறேன், என சிரித்தவாறு சொல்ல… ஸ்டீவோ, கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் அவனை எல்லாம் தேடதீங்க கிடைக்க மாட்டான் என சொல்லியவன், எங்க ப்ரோ போகனும்… என கேட்டவனின் பின்னதலையில் தட்டிய மயூரன்,என் ரூமுக்கு பேக் பண்ண போறேன் வரியா? என கேட்க,

ரூமுக்கு தானா… என்றவன், மயூரனின் பேக் பண்ண போறேன் என சொன்னதை கேட்டதும் ப்ரோ நான்… என எதோ சொல்ல முயல, அவனை முந்தி கொண்ட ருத்ரனோ, மையூ அண்ணா நீ போய் பேக் பண்ற வேலைய பாரு, இவனை விட்ட இன்னைக்கு பூரா வெட்டி கதை பேசிக்கிட்டு இருப்பான், என சொல்ல மயூரனும் புன்னகைத்த படி தன் அறை நோக்கி சென்று விட்டான்.

ஸ்டீவோ, ருத்ரனை முறைத்த படி, எண்டா ப்ரோ கிட்ட நான் சொல்லவந்ததை சொல்லவிடாம தடுத்த? என வினவினான்.

ருத்திரனோ, நீ என்ன சொன்னாலும் அவன் இந்தியா போறதை உன்னால தடுத்து நிறுத்த முடியும்னு நீ நினைக்கிறியா? அவன் ஏன் இந்திய போறான்னு உனக்கு தெரியாதா? என கேட்க, தெரியும். என்றான் உள்ளே சென்றுவிட்ட குரலில் ஸ்டீவ்.

ஆம், மயூரன் வருடா வருடம் இந்தியா செல்ல வலுவான காரணம் உண்டு, அவன் தமிழ்நாட்டிற்கு வர முக்கிய காரணம் அவன் பாட்டி சக்தி விலசினியின் தமக்கை சக்தி சௌத்ரி மதுரையில் இருப்பதே. தன் மகன் சக்தி சண்முகம் மருமகள் முத்தழகு மற்றும் பேத்தி அழகு மீனாளுடன் வசித்து வந்தார். உறவு முறையில் அத்தான் என்றாலும் மயூரனுக்கு மீனாள் குட்டி தங்கை போன்றவள், தன் வினி டார்லிங்குடன் வருடம் தவறாமல் மதுரை வந்து செல்வான்… மற்றவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப வந்து செல்வார்கள், ஆனால் மயூரனின் வருகை மட்டும் தவறியதில்லை.

எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யார் கண்பட்டதோ
அழகு மீனாளின் மரணம் அனைவரையும் புரட்டி போட்டிருந்தது. அதுவும் நோய் வந்தோ, விதி முடிந்தோ பெண்ணவள் இறக்கவில்லை, தற்கொலை செய்து கொண்டாள். அவள் மரணம் தற்கொலை என அறிந்தவர்கள் மயூரன்,ருத்ரன்,ஸ்டீவ் மட்டுமே.

சுற்றுலாவில் வேடிக்கை பார்க்க சென்றவள், தவறி விழுந்ததாக மற்றவர்கள் நினைக்க… நடந்ததோ வேறு…

கல்லூரி இறுதி ஆண்டு ஆதலால் அனைவரும் உல்லாச பயணமாக மலைகளின் இளவரசியாக திகழும் கொடைக்கானலுக்கு சென்றனர். அதில் அழகு மீனாளும் அடக்கம்.

மயூரன் பெரும்பாலும் பிஸியாக இருப்பதால், அவனுக்கு எப்பொழுதும் தான் பகிர நினைக்கும் விரும்பும் செய்தியினை குரல் பதிவாக அனுப்புவது மீனாளின் வழக்கம், தன் ஓய்வு நேரத்தில் அதனை காண்பவன், அவளுக்கு அழைத்து பேசுவான்.

அவ்வாறே மிகவும் மகிழ்ச்சியாக, குரலில் உற்சாகம் துள்ள தான் சுற்றுலா செல்ல போவதை குரல் பதிவாக மயூரானுக்கு அனுப்பினாள் மீனாள்.

பதிலுக்கு மயூரன்… ஹாய் மினி பியூட்டி, மதுரையில இருந்துகிட்டு கொடைக்கானலை பார்த்தே இல்லாத மாதிரி அவ்வளவு எக்ஸைட் ஆகுற… போன தடவை நான் வந்தபோ எல்லாரும் கொடைக்கானல் போய்ட்டு வந்தோம் தானே… என்றான்.

அதற்கு மீனாள், அது வேறு இது வேறு, பாமிலியா போறதுக்கும் பிரெண்ட்ஸ் கூட போறதுக்கும் வித்தியாசம் இருக்கு தானே.? என்றாள்.

மயூரனோ, எனிவேஸ் பார்த்து பாத்திரமா போய்ட்டு வா என அவளுக்கு அறிவுரை கூறியவன், என்ஜாய் த டிரிப் என பெண்ணவளுக்கு வாழ்த்தும் தெரிவித்தான்.

ஆனால் அவர்கள் இருவருக்கும் தெரியாது இன்னும் ஒரு சில நாளில் உள்ளம் நெந்து, கண்ணீர் தளும்ப இளையவள் அனுப்பும் மரண வாக்குமூலம் கேட்டு இவன் ஆயிரம் ஆயிரம் மையில்களுக்கு அப்பால் இருந்து இரத்த கண்ணீர் வடிப்பான் என்று.



தொடரும்❤️❤️❤️❤️❤️
 
Top