வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என் வாழ்வின் வசந்தமவள்! கதைத்திரி

Status
Not open for further replies.
அஸ்திரம் 57…


என் வாழ்வின் வசந்தமவள்!



அத்தியாயம் 1…



ஆரவாரத்துடன் மாணவமாணவிகள் கூட்டம் அந்த விளையாட்டு மைதானத்தில் அமர்ந்திருந்தது…..

அங்கிருந்த முக்கால்வாசி கூட்டம் ஒரே ஒரு பெயரை தான் கத்தி கூப்பாடு போட்டபடி கரங்களை ஆட்டியும் தட்டியும் கண்களில் முழு ஆர்வத்துடனும் இருந்தனர்….



"தேவா…."




"தேவா…."



"தேவா…."



நெற்றியில் வழிந்த வியர்வையை ஆட்காட்டி விரலால் வழித்து பெருவிரல் கொண்டு சுண்டி விடவும் ஆணவனது வியர்வை துளிகள் தெறித்து விழுந்தன அம்மைதானத்தில்….



விழியில் ஓர் வெறியுடன் நின்றிருந்தவனது ஒரு கால் பந்தின் மீதும் மற்றொரு கால் தரையிலும் அழுந்த ஊன்றியவாறு நின்றவன் வேங்கையென கால்களில் வேகம் கூட்டி பந்தினை உதைத்து தள்ளி எட்டி ஒன்று விட்டான்….அவனது வேகம் அப்பந்திற்கும் ஒட்டிக்கொண்டதால் அவனை போலவே சீறிப்பாய்ந்து எதிரே இருந்த வலையில் மோதி கீழே விழுந்தது…




"மச்சா கோல்டா…."என உற்சாகமாய் ஓடிவந்து தேவாவை கழுத்தோடு கட்டிக்கொண்டான் அவனது தோழன் வேந்தன்…




எதிர் அணி தாங்கள் தோற்றுவிட்ட கோபத்தை நிலத்தில் காலால் உதைத்து வெளிப்படுத்தி தலையை தொங்கப்போட்டு வெளியேறினர்…


மைக்கில்,


"தொடர்ந்து இரண்டு வருடங்களாக கால்பந்து விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து வந்த ஜெஜெ கலை மற்றும் அறிவியல் கல்லூரி இம்முறையும் வெற்றி பெற்று மூன்றாம் வருடத்திலும் முதல் இடத்தை பிடித்துவிட்டது" என கூறிடவும் அணி நபர்கள் அனைவரும் மகிழ்ச்சியாய் ஆரவாரமாயினர்…



அச்சமயம் இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்தப்படி எழுந்த மதி,



"தேவா….தேவா…தேவா….
ஏஏஏஏஏய்…."என கத்தியபடி ஆட்டம் போட்டவள் தேவாவை நோக்கி ஓடிச்சென்றாள்….



கரத்தில் ஏந்திய வெற்றிக் கோப்பையுடன் அவனும் பெண்ணவளை நோக்கி ஓடிவந்தவன் அவளை தோளோடு சேர்த்தணைத்துக் கொள்ள…அவளோ அவனது கோப்பையை கரத்தில் ஆசைப்பொங்க வாங்கி அதை வைத்து குறைந்தது ஐம்பது புகைப்படங்களை எடுத்து தள்ளி இருப்பாள்….



அவளையே ரசித்தவாறு நின்றவனை நெருங்கி வந்த வேந்தன்….அவனருகே கோப்பையை வைத்து தான் மட்டும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் கடுப்பானவன் அவளிடம் இருந்து கோப்பையை பிடுங்க,



"வாடா நம்மளை தான் வரச்சொல்றாங்க"என சலிப்பாக கூறிவிட்டு மதியை ஒருகணம் கேவலமாய் பார்த்தவன் தேவாவை இழுக்காத குறையாய் இழுத்துச் சென்றுவிட்டான்….



அவனது செயலில் கோபமடைந்த மதி வாய்க்குள்ளேயே,



"இடியட்"என முணங்கிக் கொண்டாள்….



தேவா தன்னவளையே திரும்பி திரும்பி பார்த்தவாறு நண்பனுடன் சென்றவன் தலையை திருப்பி வேந்தனை பார்த்து,



"டேய்…எவ்வளவு ஆசையா கைல வெச்சி இருந்தா…நீ பாட்டுக்கு புடுங்கிட்டு வர"



"ம்ம்ம்….சரியா தான் சொல்லி இருக்க…ஆசை தான்….அந்த கப் மேல அவளுக்கு ஆசைனு அவ முகத்தை பார்த்தாலே தெரியுது….உன்மேலலாம் அவளுக்கு ஆசை இல்லை மச்சா"என்றவனை பற்களை கடித்து நறநறவென முறைத்தவன்,



"வேணாம் வேந்தா….அவளை பத்தி எதும் சொல்லாத"


பக்கவாட்டாய் திரும்பி நக்கலாய் பார்த்தவன்,



"ஏன்….உண்மை கசக்குதோ?"என இன்னும் எண்ணெய் ஊற்றியவன் முதுகிலேயே ஒன்று வைத்து அவனோடு சென்றான் அவன்….தேவா…

தேவமாருதன்..



பிஎஸ்சி இறுதி வருடம் இறுதி செமஸ்டரில் இருக்கும் மாணவன் தான் தேவமாருதன்….

பெற்றோரை இழந்தவனது பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் அவரது பாட்டி கமலம்….ஊரில் இருக்கிறார்….சிறு வயதில் இருந்தே முரட்டு குணமுடையவன் அன்பிற்கு மிகவும் ஏங்கியவன்….

அதனாலேயே தன் மீது அன்பு செலுத்தும் பாட்டியை அவனுக்கும் மிகவும் பிடிக்கும்….



சென்னைக்கு படிக்க வந்தவனை ஆரம்பத்தில் பார்ப்பதற்கு பழம் போல் இருக்கவும் அனைவரும் கேலி செய்திட….அச்சமயத்தில் வந்த கல்லூரிகளுக்கு இடையையான கால்பந்து போட்டியில் தோற்று விடுவோம் என எண்ணிக் கொண்டிருந்த சமயம் அடுத்தடுத்து கோல் அடித்து அணியை வெற்றிப்பெற செய்தான்….அணியின் வெற்றிக்கு வழி வகுத்தவனது புகழ் கல்லூரி முழுக்க பரவியது….




அப்போதுதான் அவனது உண்மையான குணமும் அனைவருக்கும் தெரிந்தது எனலாம்….ஆரம்பத்தில் பூனை போல் அமைதியாக இருந்தவன் படிப்பு என வந்துவிட்டால் புலி தான்….விரல் நுனியில் வைத்துக் கொள்வான் அனைத்தையும்…அவனது அபார திறமையை கண்டு பேராசிரியர்கள் கூட வாய்விட்டே புகழ்ந்தனர்….



இதுப்போதாதா என்ன….தன்னிடம் வந்து நட்புக்கரம் நீட்டியவர்களை ஒரே பார்வையில் தள்ளி நிறுத்தியவன் தன்னை யாரேனும் எதிர்த்து பேசினால் உண்டு இல்லை என்று செய்துவிடுவான்…



அதனாலேயே அவனிடம் எதற்கு வம்பு என்று மற்றவர்களும் அவனை பார்த்தாலே பயந்து விலகிவிடுவர்….அதுவே அவனுக்கு ஒருவித மிதப்பை தந்ததால் கெத்து காட்டி நடப்பான்…



முதலாம் ஆண்டிலேயே அனைவரும் அவன் மீது பயம் கொண்டு விலகிட நினைக்க தானாக அவன் மீது வந்து உரிமை எடுத்துக் கொண்டவள் தான் அவள்….மதி…தேவனின் காதலி…




ஆம்….இருவரும் முதலாம் ஆண்டில் இருந்தே விரும்புகிறார்கள்….ஆனால் அதை அனைவரிடமும் தெரியப்படுத்த விரும்பவில்லை முக்கியமாக மதி விரும்பவில்லை….



ஆதலால் பொதுவெளியில் இருவரும் பேசிக்கொள்வதை வைத்து மற்றவர்கள் அவள் அவனது நெருங்கிய தோழி..
முக்கியமானவள் …என ஒரு விம்பத்தை ஏற்படுத்திடவும் அவனுக்கான மரியாதையும் பணிவும் மதிக்கும் தானாக கிடைத்திடும்….




மதி….பார்ப்பதற்கு கீர்த்தி ஷெட்டி போல் இருப்பாள்….நல்ல
செவசெவ என்று வெண்மை நிறம்….எந்த உடை அணிந்தாலும் அழகியே…அதிலும் சிரித்தாள் கன்னத்தில் விழும் சிரிப்பு காண்போர் விழிகளுக்கு பேரழகியாகவே தெரிவாள்…



அவளது குடும்பம் கொஞ்சம் வசதியானது….வீட்டில் செல்லம் கொடுத்து வளர்த்ததால் கேட்டது உடனே கைக்கு கிடைத்திடும்….அவள் வீட்டில் எப்படி இருக்கிறாளோ அதுப்போல் தான் கல்லூரியிலும்….அவள் கேட்டது அனைத்தும் அவளுக்கு வந்து விடும்…தேவா ஒருவனால்…அவளுக்காக அவன் என்ன வேண்டும் என்றாலும் செய்வான்….தன் மீது காதல் வைத்து அன்பு காட்டுபவளை உண்மையில் தங்கத்தட்டில் வைத்து தாங்கிடாத குறையாய் பார்த்துக் கொண்டான் தேவா….



மற்றவர்களுக்கு அவன் எப்படியோ அவனது நண்பன் வேந்தன் என்றால் அத்தனை நெருக்கம் தேவனுக்கு….முதலாம் ஆண்டில் தேவாவை அனைவரும் கேலி செய்யும் போது நட்புக்கரம் நீட்டியது வேந்தன் ஒருவனே….




தேவாவை பற்றி வேந்தனுக்கு அனைத்தும் தெரியும்….அவனும் சாதாரண குடும்ப பிண்னணி உடையவன் தான்…இருவரும் ஒரே ஹாஸ்டல் அறை வேறு….அவனுக்கு தேவாவிடம் அனைத்தும் பிடிக்கும்…ஏன் மற்றவரை அவன் மிரட்டிடுவது கூட பிடிக்கும்…ஒன்றை தவிர…அது மதி…அவனுக்கு மட்டும் தான் தேவாவும் மதியும் நண்பர்கள் அல்ல காதலர்கள் என்கிற உண்மை தெரியும்…



அவனுக்கு மதி தேவாவை காதலிப்பதை விட ….தேவா மதியை காதலிப்பதை தான் ஏற்றுக்கொள்ளவே முடியாது…ஏனெனில் வேந்தனுக்கு மதியை முதலில் கண்டமாத்திரத்திலேயே பிடிக்கவில்லை என்பது தான் நிஜம்….ஏன் என்று காரணம் தான் தெரியவில்லை….


முதல் அத்தியாயம் படித்து விட்டேன் ....படித்து விட்டு கருத்துக்களை தெரிவிக்கவும்...நன்றி
 
Last edited:
அஸ்திரம் 57…


என் வாழ்வின் வசந்தமவள்!



அத்தியாயம் 2..




கல்லூரியில் இருந்த கேண்டீனில் தேவாவும் வேந்தனும் அமர்ந்திருந்தனர்….

கரத்தில் இருந்த சூடான காபியை கொஞ்சமாய் குடித்து விட்டு நிமிர்ந்த வேந்தன் நண்பனது முகம் ஏதோ

யோசனையுடன் இருப்பதை பார்த்து,



"டேய் தேவா…."என சற்று குரல் உயர்த்தி அழைத்திடவும் கனவில் இருந்து விழித்தவன் போல் தன்னிலை அடைந்த தேவா கரத்தில் இருந்த காபியை அருந்தியவாறு புருவம் உயர்த்தி 'என்ன'வென கேட்க,



"ஏதோ யோசனையில இருக்க…அதான் என்னனு கேட்டேன்" என்றதும் எதும் இல்லை என்று இரு புருவங்களும் முடிச்சிட்டவாறு தலையசைத்து கூறியவனை கடைக்கண்ணில் முறைத்த வேந்தன்,



"சொல்லுடா….ரொம்பத்தான்"



பெருமூச்சை விட்டு,



"இ…இனியாவை பார்த்தியா?"என்றதும் வேந்தனின் விழிகள் இரண்டும் மின்னல் அடித்தது….



நண்பனை ஒரு மார்க்கமாய் பார்த்தவன் கீழுதட்டை கடித்து தலையை அங்குமிங்கும் ஆட்டியவாறு,



"ம்ம்ம்ம்….அது என்ன இனினினியாவை மட்டும் தேடுற?"என வேண்டும் என்றே இழுத்துக் கூறியவனை இப்போது வெளிப்படையாக முறைத்த தேவா,



"வாயை மூடு….எப்பவும் கப் வாங்கிட்டு வந்ததும் விஷ் பண்ணுவா….இன்னிக்கு மார்னிங் மெஸேஜ் கூட பண்ணலை…"




"ஓஓ….மெஸேஜ் பண்ணலைனு அவ்வளவு ஃபீல் பண்ற…?....ஏன் அந்த மதி மெஸேஜ் பண்ணலைனா இப்படிதான் ஃபீல் பண்ணுவியாடா?"



"ப்ச்….லூசு மாதிரி பேசாதடா…மதி நான் லவ் பண்ற பொண்ணு….இனியா என் ஃப்ரண்ட்….
தேவையில்லாம தப்பா பேசாத"என வேந்தனை கண்டித்த தேவா கைப்பேசியை எடுத்து இனியாவிற்கு அழைப்பு விடுத்தான்….



அவனையே இதழ் சுழித்து பார்த்துக் கொண்டிருந்த வேந்தன்,



"நான் தப்பா பேசுறனா இல்லை நீ தப்பா புரிஞ்சு வெச்சிருக்கியானுதான் தெரியலைடா சாமி"என சலிப்பாக கூறியவனை விழியாலே அடக்கியவன் மறுபக்கம் இவனது அழைப்பை ஏற்ற இனியா பேசுவதற்குள் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த தேவா இன்னும் வாகாக சாய்ந்து எதிரே இருந்த நண்பனை ஒரு கணம் பார்த்துவிட்டு மெதுவாக மிக மிக மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்…



"ஹலோ"என ஆரம்பிப்பதற்குள்,



"தேவன்"என்ற ஒற்றை அழைப்பு தேவாவின் இதழை கொஞ்சமாய் வளையச் செய்தது….



"நேத்து மேட்ச்க்கு நீ வரலை?"




"வீட்டுக்கு வாயேன்"என்றதும் முகம் சுருக்கியவன்,



"ஏய்…இனியா ஏதாவது பிரச்சினையா?"



"அப்படிலாம் எதும் இல்லை….நீ வா"




"ம்ம்ம்ம்….கொஞ்ச நேரத்துல வரேன்…"என துண்டிக்க போனவன் சற்று நிறுத்தி,



"இனியா….."




"ஹான்….சொல்லு"




"டேக் கேர்"என ஆழ்ந்து ஒலித்த குரலில் சரியென்று அணைப்பை துண்டித்து இருந்தாள் அவள்…இனியா…. தேவாவின் தோழி….



கரம் நீட்டி நட்பு கொண்டவன் வேந்தன் என்றால் தனது ஒற்றை விழி பார்வையில் தேவாவிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டவள் இனியா….அவனது கல்லூரியின் முதல் நாளென்று வகுப்பை காட்டியது இனியா தான்….

நன்றி கூறியதற்கு தனது விழியாலே புன்னகை செய்து நட்பு எனும் உறவுக்கு வித்திட்டாள்…

அதன்பின்னர் தேவாவின் உண்மை முகம் தெரிந்த பிறகு சில மாணவர்கள் அவனுக்கு பயந்தும்…பலப்பேர் அவனிடம் பழக நெருங்கிட…யாவரையும் நெருங்க விடாது தள்ளி நிறுத்தியவனுக்கு இனியாவின் பார்வையில் மட்டும் எவ்வித மாற்றமும் இல்லாது அவனை ஆரம்பத்தில் எப்படி பார்ப்பாளோ அவ்வாறு பார்க்கவும் தேவாவால் அவளை மற்றவர் போல் விலக்கி வைக்க முடியவில்லை….




அன்று தொடங்கிய அவர்களது நட்பு இன்று வரை கொஞ்சமும் தொய்வில்லாது அழகாய் சென்றுக் கொண்டிருக்கிறது….

என்ன இனியாவும் தேவாவும் யார் முன்னும் பேசிடமாட்டார்கள்…

ஆரம்பத்தில் இருந்து அப்படிதான்…



மதியுடன் எவ்வித பயமும் இன்றி கல்லூரியில் பேசுபவன் இனியாவிடம் அவ்வளவு எளிதாய் பேசியதில்லை….இதில் முக்கியமான விடயம் யாதெனில் மதியும் தேவாவும் காதலிக்கும் விடயம் இனியாக்கு தெரியாது….தேவா
தெரியப்படுத்திடவில்லை….
அதே போல் இனியா மற்றும் தேவாவின் நட்பும் மதிக்கு தெரியாது….ஏனெனில் மதிக்கு இனியாவை பிடிக்காது….



இனியாவை பற்றி
போகப்போக இன்னும் தெரிந்துக் கொள்ளலாம்…

இப்போது தேவா தனது பைக்கை எடுத்துக்கொண்டு இனியாவை பார்க்க அவளது வீட்டிற்கு சென்றான்…




உடன் வேந்தனும் வருவதாய் கூற,



"அவளோட குரலே சரியில்லை….நான் போய் பார்த்துட்டு சொல்றேன்டா"



"ம்ம்ம்ம்…..சரி கப்பை ஹாஸ்டல் ரூம்லதான் வெச்சிருக்கேன் மறக்காம கொண்டு போய் காட்டு"என்றான் ஒருவித நக்கல் பார்வையில்….




அதில் அவனை முறைத்தாலும் மறக்காது ஹாஸ்டல் அறைக்கு சென்று வெற்றிப் பெற்ற கோப்பையை எடுத்துக் கொண்டு இனியாவின் வீட்டிற்கு சென்றான் தேவா….




தனி வீடு அது….பக்கத்து வீடுகளும் தள்ளி தள்ளி தான் இருந்தன….கேட்டினை திறந்து கொண்டு காலிங் பெல்லை அடிக்கவும் சில நொடி இடைவெளியில் கதவினை திறந்துக் கொண்டு வெளி வந்தாள் இனியா….பார்ப்பதற்கு ஐஸ்வர்யா லஷ்மி போலவே இருந்தாள்...



அவனை கண்டதும் முகத்தில் வழக்கமாய் பூக்கும் புன்னகையை சிந்தியவளது விழிகள் அப்பட்டமாய் சோர்வை காட்டியது…..முகம் லேசாய் பொலிவிழந்து காணப்பட்டது…..



"உள்ள வா தேவன்"என அவனை உள்ளே வரவேற்றவள் அவனை இருக்கையில் அமர வைத்துவிட்டு அவனுக்காக தயாரித்து வைத்திருந்த பழச்சாறினை கொண்டு வந்து கொடுத்தவளும் அவனுக்கு பக்கத்திலேயே வந்து அமர்ந்தாள்…



ஒரு மிடறு குடித்தவன்,



"என்னாச்சு இனியா….ஏன் நேத்து மேட்ச்க்கு வரலை….கப்பு வின் பண்ணியாச்சு….
இங்கப்பாரு"என தனக்கருகே வைத்திருந்த கோப்பையை எடுத்துக் கையில் கொடுக்கவும் அவனையும் கப்பையும் மாறி மாறி பார்த்தவள் அவன் நீட்டிய கப்பினை தொடாது கரத்தை பிடித்து குலுக்கி வாழ்த்து தெரிவித்தாள்…



"கங்க்ராட்ஸ் தேவன்….எப்படியும் நீதான் வின் பண்ணுவனு தெரியும்"என சிரத்தையாய்
புன்னகைத்தவளை பார்த்தவனுக்கு வேந்தனின் நக்கல் பார்வை தானாக நினைவில் வந்து விழுந்தது….



வேந்தன் கப்பை கண்டதும் மதி அதனை பிடுங்கி புகைப்படங்களாய் எடுத்துத் தள்ளினாள்…ஆனால் இனியா முதலில் தேவாவிற்கு வாழ்த்து தெரிவித்த பின்னரே அவன் நீட்டும் கப்பை வாங்குவாள்…அதனால் தான் வேந்தன் சிரித்தது….



அதை நினைத்த தேவா சட்டென தலையை உலுக்கி விட்டு,



"சரி உனக்கு என்னாச்சு….முகமே ஒரு மாதிரி இருக்கு"



"ஜுரம்டா…"என மெல்லிய குரலில் கூறியவளை பதட்டத்துடன் பார்த்தவன் அவளுக்கு அருகே நெருங்கி அமர்ந்து நெற்றியையும் கழுத்தையும் தொட்டு பார்த்து,



"லூசு….
ஹாஸ்பிட்டலுக்கு போனியா?...
முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல…."என பதற்றத்துடன் வினவியவனை கண்கள் சிமிட்டி பார்த்த இனியா,



"எதும் இல்லைடா….நேத்து ஈவ்னிங் ஹாஸ்பிட்டல் போயிட்டு தான் வந்தேன்….இப்ப பரவாயில்லை"என்ற பின்னர் தான் அமைதி அடைந்தான்….




"சரி எதும் சாப்பிட்டு இருக்க மாட்ட….ஜீஸ் கொஞ்சம் குடி"என அவன் ஒரு மிடறு குடித்த பழச்சாறினை தயக்கமே இன்றி அவளுக்கு புகட்டினான்…



அவளுக்கு நாக்கு வேறு கசக்கவும்,



"தேவன்…வேண்டாம் சொன்னா கேளு..எதும் சாப்பிடவே பிடிக்கலை"



"எனக்கு தெரியும் நீ இதான் பண்ணுவேன்னு….ஒழுங்கா சாப்பிட்டு இருக்க மாட்ட….இதை குடி"என கட்டாயப்படுத்தி புகட்டியதும் தான் தாமதம் வாயை பொத்திக் கொண்டு ஓடிப்போய் வாஷ்பேசனில் வாந்தி எடுத்து விட்டாள்…..



அவள் ஓடவும் பின்னாடியே வந்தவன் தலையை பிடித்துக்கொண்டான்….வாந்தி எடுத்து முடித்து வாயை கழுவிவிட்டு சற்று இனியா நகர்ந்ததும் தான் தேவா கண்டான் தரையிலும் சற்று வாந்தி சிதறி இருப்பதை….


இனியாவை ஓர்ப்பார்வை பார்த்துவிட்டு அருகே இருந்த கரித்துணியே எடுத்தவன் கொஞ்சமும் தயக்கம் இன்றி வாந்தியை சுத்தம் செய்ய கீழே குனியவும் இனியா என்னவென்று பார்த்தவள் அதிர்ந்து போய் அவனது சட்டையின் பின்கழுத்தை பிடித்து இழுத்து நிமிர்த்தி,



"என்ன பண்ற தேவன்?"என கேட்கும் போதே அவளது குரல் மாறி இருந்தது…



"ஒன்னும் இல்லை…நீ அங்க போய் உட்காரு…."என்று கூறி அவளை தள்ளி நிற்க வைத்தான் தேவன்…



ஆனால் இனியா அவள் பிடித்து வைத்திருந்த சட்டையின் பிடியை விடாது ,



"நீ எதும் பண்ண வேண்டாம்….நான் பார்த்துக்குறேன்…நீ போ"



"ப்ச்…நீ சும்மா இரு"என முன்னே வந்தவனது நெஞ்சிலேயே கரம் வைத்து தடுத்து நிறுத்தியவள்,



"தேவன்….நான் பார்த்துக்குறேன்னு சொன்னேன்"என வார்த்தையில அழுத்தம் கூட்டி கூறியவள் தேவாவை இழுத்து வந்து இருக்கையில் அமர வைத்துவிடடு தானே கஷ்டப்பட்டு சுத்தம் செய்து முடித்தாள்….



சோஃபாவில் அமர்ந்திருந்தவன் முகத்தை கடுகடுவென
வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்….இதுப்போல் நிகழ்வு அடிக்கடி நிகழ்வது தான்…



அதாவது அவன் ஏதேனும் உரிமை எடுத்து செய்ய போனால் வேண்டாம் என்று பட்டென கூறிவிடுவாள் இனியா….




அதில் முகத்தை தூக்கி வைத்து கொள்பவனை சமாதானம் செய்து மீண்டும் பேச வைப்பாள்….வழக்கமாக நடப்பது தான் என்றாலும் ஏனோ அவனுக்கு அச்சமயத்தில் அளவு கடந்த கோபம் வரும்…எங்கே கோபத்தில் அவளை திட்டிவிடுவோமோ என்று பேசாது இருப்பான்…அவள் வந்து சமாதானம் செய்யும் வரை….



ஆனால் இன்று அவளுக்கே உடம்பு சரியில்லை….இதில் கோபப்பட்டு தான் இந்நேரத்தில் செல்வது சரியில்லை என்று தான் பொறுமையை இழுத்து பிடித்து அமர்ந்து இருக்கிறான்….




கரங்களை கழுவி சுத்தம் செய்துவிட்டு அவனருகே வந்து அமைதியாய் அமர்ந்தாள் இனியா…



பெருமூச்சை விட்டு அவனை ஏறிட்டு பார்த்தவள்,



"தேவன்" ..




"....."



"தேவன்…டேய்"



"....."திரும்பவே இல்லை அவன்….




"பேச மாட்டியா?"என நலிந்ந குரலில் கேட்ட பெண்ணவளை திரும்பி முகம் முழுவதும் கோபத்துடன் பார்த்த வன் பல்லை கடித்து,



"ஏன் உனக்கு முடியலைனு தானே பண்ணேன்….நான் எதும் பண்ணக்கூடாதா?....சொல்லுடீ"




"ப்ச்…உனக்கு புரியலை"



"என்ன புரியலை…சொல்லு….போடீ"என சலிப்பாக கூறியவன் முகத்தை திருப்பி கொண்டான்….




விழிகளை இறுக மூடித் திறந்த இனியா அவனை நெருங்கி,



"இன்னும் கொஞ்ச மாசம் தான் தேவன் நமக்கு காலேஜ் இருக்கு….அதுக்கு அப்பறம்?"என வினா தொடுத்தவளை புரியாது பார்த்த தேவா,




"புரியலை"..



"உனக்கே தெரியும்….நான் சின்ன வயசுலேயே அப்பா அம்மாவை இழந்துட்டேன்னு…சித்திக்கூட தான் தொத்திட்டு
இருக்கேன்….அவங்களும் என்னை சாப்பிட்டியா? என்ன பண்ற?....என்ன படிக்கறனு அக்கறையா ஒரு வார்த்தை கேட்டது இல்லை….ஆரம்பத்துல இதுக்கெல்லாம் ஏங்குவேன்….பட் எதிர்பார்க்கவும் பயம்….எங்க திடீர்னு எல்லாமே காணாம போயிடுமோனு….இன்னும் கொஞ்ச மாசத்துல நாம
பிரிஞ்…சிடுவோம்"என கரக்கரத்த குரலை செறுமிக்கொண்டு சரி செய்தவள்,



"அதுக்கு அப்பறம் இதே மாதிரி எனக்கு உடம்பு சரியில்லாம ஆச்சுனா தேவன் என்னை பார்த்துகிட்டானேனு உனக்காக ஏங்குவேன்….அது கிடைக்காதப்போ மனசளவுல உடைஞ்சிடுவேன் தேவன்….அதான் என்னை பலவீனமாக்குற எதும் வேண்டாம்…."என தழுத்தழுத்த குரலில் கூறி முடித்தவளை உணர்ச்சியற்று பார்த்து வைத்தான் இனியாவின் தேவன்….தேவமாருதன்…
 
Last edited:
அஸ்திரம் 57



என் வாழ்வின் வசந்தமவள்!




அத்தியாயம் 3….



ஹாஸ்டலின் அறை வாசலில் சுவர் மீது ஏறி ஒரு காலை மடக்கியும் மற்றொரு காலை தொங்க விட்டும் அமர்ந்திருந்தான் தேவா….இருள் கொண்ட வானில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நிலவை வெறித்து இருந்தவனது தோள் தொட்டு,



"என்னடா தூங்கற டைம் ஆச்சு….இங்க உட்கார்ந்துட்டு இருக்க?"என கேட்டவாறு அவனருகே வந்து அமர்ந்துக் கொண்டான் வேந்தன்….



பெருமூச்சை விட்ட தேவா நண்பனை பார்த்து,



"மனசே ஒரு மாதிரி இருக்குடா"



"அது தெரியுது….
காரணத்தை கேட்டேன் நானு"என நக்கல் அடித்தவனை கொஞ்சமாய் முறைத்துவிட்டு ,




"இனியாதான்டா….அவளுக்கு உடம்பு சரியில்லை மச்சா….சரின்னு ஜீஸ் கொடுத்தேன்..ஒரு வாய்தான்டா குடிச்சிருப்பா….உடனே ஓடிப்போய் வாந்தி எடுத்தா…அப்போ கீழேயும் கொஞ்சம் எடுத்து ட்டா நானும் கிளீன் பண்ண துணி எடுத்து துடைக்க போறேன்…சட்டையை பிடிச்சு இழுத்து திட்டிட்டா"என்றவனது கூற்றில் வியப்பாய் பார்த்தவன்,



"ம்ம்ம்….அப்பறம்"



"அப்பறம் என்ன….எதுக்கு எதும் பண்ண விடமாட்டேங்குறனு கேட்டதுக்கு ஒரு விளக்கம் கொடுத்தா பாரு….அப்படியே செவுள்ளையே வைக்கனும் போல இருந்துச்சு"



"விடு மச்சா…அவளோட சூழ்நிலை அந்த மாதிரி….இன்னிக்கு நீ துடைக்க இருக்க….நாளைக்கு இதே மாதிரி வாந்தி எடுத்தான்னா அன்னிக்கு தேவா இருந்தானே இன்னிக்கும் அவன் வருவானானு எதிர்பார்ப்பு இருக்கும் மச்சா….பொண்ணுங்க சும்மாவே எதிர்பார்ப்பாங்க….அதும் இனியா மாதிரி சிட்டுவேஷன்ல இருக்கறவங்களுககு மத்தவங்களை விட தங்களோட எதிர்பார்ப்பை குறைச்சு ப்பாங்கடா….அப்போ வான்ட்டடா நாம போய் எதுக்கு சீன் கிரியேட் பண்ணிட்டு ….சில் மச்சா"




"எல்லா பொண்ணுங்களும் எதிர்பார்க்க மாட்டாங்கடா"என்றவனது கூற்றில் சட்டென புரை ஏறியது வேந்தனுக்கு….



அவசரமாய் தலையை தட்டிக்கொண்டு நண்பனை பார்த்தவன்,



"அது என்னவோ உண்மை தான் மச்சா…அதுவும் அந்த மதிக்கு இருக்கற எதிர்பார்ப்பு….யப்ப்ப்ப்ப்பா….
யாருக்கும் இருக்காது….ஓசில எதுனாலும் வாங்கி கொடு கண்ணை மூடிட்டு சாப்பிடுவா…இதுல மேடம் அவங்க அப்பாக்கு லிட்டில் பிரின்ஸஸ்ஸாம்…ச்சைக்… உனக்கு வேற ஆளே கிடைக்கலையாடா…போயும் போயும் அவளை லவ் பண்ணிட்டு…"என பொறிந்தவனை கோபமாக நோக்கிய தேவா,


"போதும் வேந்தா….தேவையில்லாம அவளை பத்தி பேசாத….என்கிட்ட உரிமை இருக்கறதால தானே ஆசைப்பட்டதை கேட்குறா…விடேன்"



"யப்பா சாமி….உரிமை இருக்கறதுக்காக எதெல்லாம் கேட்கனும்னு விவஸ்தை இல்லையாடா…ஏன் ஒரு ரப்பர் ஷார்ப்பனரை கூடவாடா அவங்க வீட்டுல வாங்கி தர மாட்டாங்க…என்ன ல்வ்வோ….ஆனா ஒன்னு மச்சா…அவள் நல்லா உன்னை யூஸ் பணணிக்குறா…பார்த்துக்கோ"என பேசிவிட்டு வேந்தன் அறைக்குள் சென்றுவிட்டான்….



அவனது கூற்றில் பெருமூச்சை விட்ட தேவாவுக்கு மதியின் நினைப்பு தான்…அவளாகத்தான் அவனிடத்தில் பேச ஆரம்பித்தாள்…மற்றவர்கள் மீது காட்டிய கோபமுகத்தை இவள் மீதும் காட்டினான்…ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாது தேவா…தேவா….என வார்த்தைக்கு வார்த்தை அவன் பெயர் கூறி அழைத்து அவனுடன் தொத்திக்கொண்டவள் மீது அவனுக்குமே ஈர்ப்பு இருந்தது….



வெளீரென்ற மேனி…பளிச் என்ற சிரிப்பு…எந்த ஆணுக்கும் அவளை கண்டால் ஈர்ப்பு வரும் தேவமாருதன் மட்டும் விதிவிலக்கா என்ன….


தடுமாறி யவனிடம் அவளே சென்று காதலை கூறிடவும் மகிழ்ந்து போனவன் மறுப்பதற்கு காரணம் ஏதும் இல்லாததால் சரியேன்று சம்மதித்தான்….



அவனிடம் எதையும் கேட்டு வாங்கிக் கொள்வாள் மதி…ஆனால் தேவா இதுவரையிலும் அவளிடத்தில் எதையும் கேட்டதில்லை….



அவனுக்கு அவளிடத்தில் ஒரு ஆசை….அவள் மடிமீது தலை சாய்த்து படுத்து கதை பேச வேண்டும் என்று….மற்றதில் எப்படியோ ஆனால் மதி இவ்விடயத்தில் மட்டும் உஷாரானவள்…



அவன் கரத்தோடு கரம் கோர்ப்பது…அருகே ஒட்டி அமர்வது…மிஞ்சி போனால் பைக்கில் செல்லும் போது தோளில் இருக்கரங்களையும் போட்டபடி அமர்வாள் அவ்வளவே…அதை தாண்டி முத்தமோ அல்லது கட்டிக்கொள்வதோ என எதற்கும் அனுமதித்தது இல்லை தேவாவை…



தேவாவிற்கு ம் அதை எல்லாம் அவளிடத்தில் எதிர்பார்த்ததும் இல்லை….அவனை பொறுத்தவரை முத்தமோ கட்டிப்பிடிப்பதோ எதிர்பார்த்து நடக்கக்கூடாது….தான் எதிர்பார்க்கும் முன்னமே கிடைப்பது என நினைப்பவன் ஆதலால் அவற்றை எல்லாம் பெரிய தாய் நினைப்பது இல்லை….



ஆனால் வேந்தன் மட்டும் தான் மதி தேவா தலையில் மிளகாய் அரைப்பதற்காகவே காதலிப்பதாக கூறு வதாக சொல்லிக் கொண்டே இருப்பான்….



தேவா அதையும் பொருட்படுத்த மாட்டான்….காரணம் சில சமயங்களில் அவன் தனிமையில் தத்தளிக்கும் போது அவனுக்கு ஆறுதலாய் அவளிடம் இருந்து வரும் வார்த்தை,


'நான் இருக்கேன் தேவா உனக்கு…இன்னும் கொஞ்ச நாள்தானே…அப்பறம் நாம கல்யாணம் பண்ணிகிட்டு குழந்தைங்கலாம் வந்துட்டா….நீ இப்படி கவலைப்பட மாட்டடா'என ராகம் போல் இழுத்து கூறுவதை கேட்கையில் அவனுக்கு மனதிற்கு இதமாய் இருக்கும்…



தனக்கும் அன்பு காட்ட காதல் மனைவி…தங்களின் காதலுக்கு பரிசாய் குழந்தை கள்…நினைத்து பார்க்கவே அத்தனை தித்திப்பாய் இருக்கும் அவனுக்கு…



மறுநாள் காலையில் வகுப்பில் வேந்தனுடன் சிரித்து பேசியவாறு இருந்தான் தேவா…அச்சமயம் ஜீன்ஸ் அணிந்து அதற்கு மேல் முட்டி வரை உள்ள குர்தி அணிந்து க் கொண்டும் தன் வனப்பை மறைக்க ஸ்டோல் ஒன்றையும் கழுத்தை சுற்றி போட்டபடி வகுப்பறைக்குள் நுழைந்தாள் இனியா….



அவள் வந்ததும் தேவாவின் பார்வை அவளை நோக்கி தான் சென்றது..அவன் பார்வை போகும் இடம் பார்த்து வேந்தனும் பார்க்க….அவளும் தேவாவை தான் பார்த்தாள்….இருவரது பார்வைகளும் சட்டென தொட்டு சில வினாடிகளிலேயே மீண்டது…



வேந்தன் திரும்பி நண்பனை கண்டுவிட்டு,


"பார்க்கவே டல்லா இருக்காடா"என கவலையுடன் கூறிட…



தேவாவோ பார்வையை தன் முன் இருக்கும் புத்தகத்தில் பதித்தபடி,



"இப்ப பரவாலையாம்"



"என்ன…பரவாலையாமா?.. உனக்கு எப்படிடா தெரியும்…உன்கிட்ட வந்து சொன்னாளா?"



"ம்ம்ம்…ஆமா…"என வேந்தனை பார்க்க….விழி விரிய தேவாவை பார்த்த வேந்தன்,



"டேய்…எப்புட்றா….ம்ம்ம்ம் நீ நடத்து….மதிக்கு தெரியாம இருந்தா சரி…இல்லைனா 'தேவா எனக்கு அந்த இனியா போட்டு இருக்க ஐலைனர் வாங்கி தாயேன்' னு வந்து நிக்கும் கருமம்…அதையும் விட்டு வைக்காது"என தலையில் அடித்து கூறியவனது கழுத்தை பிடித்து இறுக்கிய வன்,



"நானும் பார்த்துட்டே இருக்கேன்…நேத்துல இருந்து சும்மா அவளை கிண்டல் பண்ற என்னடா நினைச்சிட்டு இருக்க?"என கடுமையாய் கண்டித்தவனை பொருட்டாய் கூட எண்ணாது தன் கழுத்தில் இருந்து அவனது கரத்தை விலக்கியவன் சற்றே இருமியவாறே,



"ஐயய்ய்ய மச்சா…நான் கிண்டல்லாம் பண்ணலை…உண்மையை தான் சொல்றேன்"என்றவனது முதுகிலேயே மொத்தி எடுத்தான் தேவா….



அச்சமயம் துள்ளிக் குதிக்காத குறையாக உள்ளே வந்தாள் மதி….வந்ததும் வராததுமாய் தேவாவின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டவள் அவனுக்கு மறுபக்கத்தில் அமர்ந்திருந்த வேந்தனை கண்டதும்,



"டேய் நந்தி…போடா அப்படி…நான் இவன்கூட பேசனும்"என சிடுசிடுப்பை காட்டியவளை எரிச்சலாக பார்த்த வேந்தன்,



"வந்துட்டா…
பிரிக்கறதுக்கு ன்னே"என முணுமுணுத்தவாறு எழுந்து இனியாவின் பக்கத்தில் சென்று அமர்ந்துக் கொண்டான்….
 
Last edited:
அஸ்திரம் 57…



என் வாழ்வின் வசந்தமவள்!...



அத்தியாயம் 4….


வேந்தனை துரத்தி விட்ட மதி தேவாவின் அருகில் அமர்ந்து அவனது முழங்கையை பற்றி கொண்டு ,


"தேவா !...என்னுடைய பர்த்டே வருது என்ன கிப்ட் தரப் போற??"..

என ஒரு விதை எதிர்பார்ப்புடன் அவனைக் கேட்டாள்... அதற்கு தேவா வேந்தன் இனியாவின் அருகில் அமர்வதை அழுத்தமான பார்வையுடன் பார்த்துவிட்டு தலையை திருப்பி மதியை பார்த்தவன்,


" உனக்கு என்ன வேணும் சொல்லு வாங்கி தரேன்"
என‌ கூறியவன் மதியின் விழிகளைத் தான் கண்டான் அவளது விழியில் அப்பட்டமாய் தெரிந்தது அவள் ஏதும் பெரியதாய் எதிர்பார்க்கிறாள் என்று ....




பெருமூச்சு விட்ட தேவா,



" சொல்லு மதி உனக்கு என்ன வேணும் தைரியமா கேளு என்கிட்ட எதுக்கு உனக்கு தயக்கம் ??"


என்று மென்மையான குரலில் கேட்டிடவும் அதில் இதழ் விரித்து சிரித்தவள் தன் காதோர முடிகளை சரி செய்து விட்டு பின் நிமிர்ந்து,



" அது சின்னதா பார்ட்டி அரேஞ்ச் பண்ணலாமே!!..." என கோரிக்கையை வைத்தாள் மதி....


அதைக் கேட்டதும் புருவம் சுருக்கிய தேவா மதி பார்த்து,



" எதுக்கு ???"....


என சின்ன கோபம் அக்குரலில் தெரிந்தது .....அதைக் கேட்டதும் சற்று முகம் வாடிய மதி,


" இல்ல தேவா எனக்கு பார்ட்டி எல்லாம் பண்ணனும்னு ரொம்பவே ஆசை அதனால தான் கேட்டேன்"


என சோகமான குரலில் உரைப்பது போல் கூறினாள்‌.... அதைக் கேட்டதும் நெருடிய மனதை நீவியவாறு பார்வையை அங்கும் இங்கும் சுழல விட்டவனின் விழிகள் இனியா மற்றும் வேந்தன் இடமே நிலை குத்தியது.... இனியா புத்தகத்தை பார்த்து ஏதோ சொல்லி தருகிறாள் போல அதை வேந்தன் கவனமாக கேட்டுக் கொண்டிருக்கிறான்....


பின் ஏதோ கேட்கவும் அவள் அவனது தலையிலேயே அடித்தாள் அதற்கு வேந்தன் பயந்தவாரு நடுங்கி பின் மீண்டும் அவளது தலையில் அடித்து திரும்பி சொல்லித் தருமாறு கேட்கிறான் இவ்வாறு இருவரும் சிரித்துக்கொண்டு பேசியவாறு அமர்ந்திருப்பதை கண்டவனுக்கு ஏதோ அமர்ந்திருக்கவே முடியவில்லை....


மூச்சுகளை இழுத்து இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.... மதி வேறு,


" ப்ளீஸ் தேவா நம்ம ஏதாவது பாட்டி அரேஞ்ச் பண்ணலாம் லாஸ்ட் வருஷம் இதுக்கப்புறம் எல்லாரையும் மீட் பண்ணுவோமோ?? இல்லையோ?? அதனால பிரண்ட்ஸ் எல்லாருக்கும் நாம ட்ரீட் தரலாம் ப்ளீஸ் நீ தான் அதுக்கு அரேஞ்ச்மெண்ட்ஸ் பார்த்துக்கணும்" என கூறிக் கொண்டே இருக்கவும் ஏதோ தேவாவிற்கு அன்று மண்டை சூடானது....


விண்விண்னென்று வலித்த நெற்றியை நீவியவன் மீண்டும் வேந்தனை கண்டான். இப்போது வேந்தன் இனியாவிற்கு பின்னாடி இருக்கும் மேசையின் மீது கையை தூக்கி போட்டவாறு இன்னும் நெருங்கி அவளிடம் ஏதோ பேசியவாறு புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.....


அவளும் அவனுக்கு சொல்லிக் கொடுப்பது போல் அவன் தோளில் அடிப்பது போன்று அவர்களுக்குள் கதை பேசிக்கொண்டும் புத்தகத்தைப் பார்த்து ஏதோ படித்துக் கொண்டும் என இருவரும் சிரித்து பேசியவாறு இருந்தனர்....


ஏனோ இதை காணக்காண தேவாவிற்கு பொறுக்கவே இல்லை சட்டென மதியை கூட கருத்தில் கொள்ளாது,


" வேந்தாஆஆ......"


என கிட்டத்தட்ட கர்ஜித்து விட்டான் .....


அவனது கர்ஜனையில் வகுப்பில் இருந்து மொத்த மாணவர்களும் அவனை தான் பக் என்று திரும்பிப் பார்த்தனர்....


முகம் சிவக்க கைகளை இறுக்க மூடி நெஞ்சு புடைக்க வேந்தனை முறைத்தவன் மீண்டும்,


" வேந்தாஆ இங்கே வா" என அழைத்தான்.....


இனியா கூட வேந்தனது கர்ஜனையில் சற்று தூக்கி வாரி போட்டவாறு தான் திரும்பிப் பார்த்தாள்‌...


நண்பனை இவ்வாறு அழைக்கும் பழக்கம் இல்லாதவன் தேவா இன்று புதிதாய் இவ்வாறு அழைத்திடவும் இனியாவிற்கும் சரி வேந்தனுக்கும் சரி தங்கள் முன் நிற்கும் தேவா புதியவனாகவே தெரிந்தான்...


வேந்தன் இனியாவை ஒரு முறை பார்த்துவிட்டு பின் திரும்பி தேவாவை பார்த்தவன் எழுந்து நின்று ,


"என்னடா??... என்ன ஆச்சு????.... ஏன் இப்படி கத்துற??... கூப்பிட்டா வரப் போறேன்... அதுக்கு எதுக்கு இப்படி கத்திட்டு??... பாரு எல்லாரும் உன்ன தான் பாக்குறாங்க!..."

என கேட்டவாறு அவன் அருகே வரவும் சட்டுனு தன் தோள் இறக்கி இயல்பு போல் காட்டிய தேவா சுற்றிலும் ஒரு முறை பார்வையை சுழல விட்டான்....


அவனது அழுத்தமான பார்வையில் மாணவக் கூட்டம் கப்சிப் என்ற அமைதியாகி தங்களது வேலையை பார்க்க தொடங்கினர்....


தன் அருகே வந்த வேந்தனது தோள் மேல் கை போட்டு தன்னருகே அமர்த்தி கொண்ட தேவா,


" இங்கே இரு மச்சான் என்னன்னு தெரியல ஒரு மாதிரி இருக்கு எனக்கு !!...."


என கூறியவனை விசித்திரமாக பார்த்த வேந்தன் எதுவும் கூறாவிட்டாலும் 'சரி' என்று தலையை மட்டும் அசைத்து வைத்தான்..‌‌



தேவாவின் அருகே இருந்த மதியை ஒரு முறை பார்க்க அவளோ தேவாயை புரியாது பார்த்துக் கொண்டிருந்தாள்..


பின்னர் என்ன நினைத்தானோ வேந்தன் திரும்பி புத்தகத்தை அமைதியாக பார்த்தவாறு இருந்தான் ....

பெருமூச்சு விட்ட தேவா அப்போதுதான் மதியின் நியாபகம் வரவும் சட்டென திரும்பி இதழில் சின்ன புன்னகையை கொண்டு,


" சொல்லு அது என்னமோ சொல்லிக்கிட்டு இருந்த??"...


என அப்போதுதான் கேட்பது போல் கேட்டான்.... இதனை கேட்டதும் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மதி வாயை பிளந்து கண்கள் விரிய,


" என்ன???... திரும்பவும் சொல்லனுமா??... ஏய் நான் தான் அப்பவே சொன்னேன்ல பார்ட்டி அரேஞ்ச் பண்ணி பர்த்டே வருதுன்னு ‌‌.... நீ என்னடான்னா சொல்லு சொல்லுனு திருப்பி எத்தனை வாட்டி தான் கேட்ப??... என்னதான் ஆச்சு உனக்கு இன்னிக்கு??...நீ இவ்ளோ டென்ஷனா இருக்குற நான் லன்ச் வந்து உன்னை பார்க்கிறேன்"


என மதி எழுந்து சென்று விட்டாள் ....அவள் சென்ற பிறகு இதழினை குவித்து ஊஃப் என்று ஊதியவன் திரும்பி வேந்தனை பார்த்து அவன் தோளிலேயே சற்று அழுத்தி பிடித்து தன்னோடு இறுக்கி,


" என்னடா பேச மாட்டியா??.... அப்படியே ரொம்ப தான் படிக்கிற மாதிரி பில்டப் காட்டுற??..."

என கேள்வி கேட்டிடவும் இப்போது வெளிப்படையாகவே தேவாவை பார்த்து முறைத்து வைத்தான் வேந்தன் ....


அதற்கு தேவாவோ,


" என்னடா முறைக்கிற சம்பந்தமே இல்லாம???"


என சாதாரணமாக கேட்டான்....


அதற்கும் வேந்தன் முறைக்கவும்,


" என்னதான் ஆச்சு உனக்கு? "


என கையை ஆட்டி கேட்டவனை இப்போது வேந்தன்,


" அதாண்டா நானும் கேட்கிறேன்... உனக்கு என்ன ஆச்சு...???? நீ ஏன் இன்னைக்கு இப்படி நடந்துக்கிற?"

என ஒரு ஆழ்ந்த குரலில் கேட்ட கேள்வியில் சட்டென தேவாவின் முகம் மாறிவிட்டது ....புருவம் நெருக்கி பார்வையை அங்காங்கே சுழல விட்டு மீண்டும் வேதனை பார்த்தவன்,

" ஆமால நான் இன்னைக்கு வித்தியாசமா நடந்துக்குறேன்.... எனக்கு தெரியல மச்சான் என்ன ஆச்சுன்னு.... ஏதோ ஒரு மாதிரி இருக்குடா தலை வலிக்கிற மாதிரி இருக்கு வா நம்ம கேன்டீன் போலாம் ...."

என அழைக்கவும் விழி விரிய நண்பனை பார்த்த வேந்தன்,


" டேய் இன்னும் ஃபர்ஸ்ட் பீரியட் கூட ஆரம்பிக்கல அதுக்குள்ள கேண்டீனா??...போடா நான் வரல"

என மறுத்தான்..‌‌


அதற்கெல்லாம் அசுருபவனா தேவா??... அவனது சட்டை காலரை பிடித்து இழுத்து வகுப்பறையை விட்டு வெளியேறினான் வெளியேறும் முன் மீண்டும் இனியாவின் மீது சின்ன அழுத்தமான ஒரு பார்வை பார்த்து விட்டே சென்றான் ஏனென்று தான் தெரியவில்லை...


இனியாவும் 'காலையிலேயே எங்கேயோ செல்கிறார்களே??' என எண்ணியவள் தோளை குலுக்கிக் கொண்டு அவள் வேலையை பார்க்கலானாள்..‌‌


ஆனால் கேண்டீனுக்கு சென்ற தேவாவும் வேந்தனும் ஆளுக்கு ஒரு காபியை அருந்தலாயினர்....

தன் எதிரே இருந்த தேவாவை காபி குடித்தவாறு கூர்ந்து கவனித்த வேந்தன் புறங்கையால் தன் உதட்டை துடைத்து விட்டு பின் நிமிர்ந்து அமர்ந்து தேவாவிடம்,


" மச்சான் என்ன ஆச்சு உனக்கு??... உண்மையை சொல்லு ...நீ இன்னைக்கு நார்மலா இல்ல??"


என கேட்டான்.... அவனது தீவிரமான குரலில் தடுமாறிய தேவா நொடி நேரத்தில் தன்னை சமன் செய்துகொண்டு,


" சே சே.... அப்படிலாம் இல்லடா... நான் எப்பவும் போல தான் இருக்கேன்... அதான் சொன்னேன்ல இன்னைக்கு என்னன்னு தெரியல தலை ரொம்ப வலிக்குது.... நீ வேற பக்கத்துல இல்ல ஏதோ ஒரு மாதிரி இருந்துச்சு அதான் காபி குடிக்கலாம் இங்க வந்தேன்"


என வழக்கமாய் பேசுவது போலவே பேசினான்... இருந்தும் வேந்தனுக்கு மனம் நெருடியது.... ஆனால் வாய் திறந்து அதற்கு மேல் ஏதும் கேள்விகளை அவன் கேட்கவில்லை ....


அன்று மதியமே புட்பால் ப்ராக்டிஸிற்காக மைதானத்திற்கு சென்று இருந்தான் தேவா உடன் வேந்தனும்.... பாலை வைத்து பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தவன் பார்வையில் பட்டாள் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த இனியா ....


தூக்கிப் பிடித்த பாலை சட்டென வேந்தன் மீது தூக்கி எறிந்து விட்டு அவனைப் பார்த்து சின்ன தலை அசைப்பை தந்தவன் இனியவை கண்காட்டினான்... அதனை புரிந்து கொண்ட வேந்தனும் சரி என்று விளையாட ஆரம்பித்தான்....


தேவாவும் தன் தலையை சரி செய்து கொண்டு சாதாரணமாக நடப்பது போல் நடந்து வந்து இனியாவை நெருங்கினான்...


இனியாவும் அவனை கண்டதும் நடையின் வேகத்தை குறைத்தவள் இதழில் உறைந்த மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்து ,


"ஹாய் தேவா என்ன பிராக்டிஸா??"



"ஆமா இனியா சும்மா போர் அடிக்குது அதான் ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கோம் "


எனக் கூறியவனை தலையசைத்து பார்த்தவள் பின் தலையை திருப்பி மைதானத்தை கண்டாள்.‌‌ அங்கு வேந்தன் மற்றவரோடு விளையாடுவதை கண்டதும்,


" வேந்தனும் நல்லா விளையாடுறான்ல??..." என கூறினாள் இனியா.....அதைக் கேட்டதும் தேவாவின் முகம் மாறிவிட்டது...‌ வெளிப்படையாகவே அவளை முறைத்து,


" ஏன் ??....நான் நல்ல விளையாடலையா???..."

என சற்று கோபத்துடன் கேட்கவும் அதை கண்டு சிரித்தவள்,


" எதுக்கு இப்ப கோவப்படுற நீ எப்போவும் நல்லா விளையாடுவ..‌ வேந்தனும் இப்ப உன் அளவுக்கு விளையாடுறான்னு சொல்ல வரேன் அதுக்கு ஏன் இப்படி கோபப்படுற??..." என கேட்டதும் சட்டென்று புன்னகைத்தவன்,


" நான் கோபப்படலையே சும்மா கேட்டேன் "

என மழுப்பினான்... அவனை நெற்றி சுருக்கி பார்த்து இனியா,

" சரி காலையில எதுக்கு வேந்தனை அப்படி கோபமாக கூப்பிட்ட??"

என கேட்டதும் தன் பின்னங்கழுத்தை நீவியவாறு அவளை பார்த்தவன்,


" அது சும்மா தலை வலிக்குது... அதான் கேன்டீனுக்கு போலாம்னு கூப்பிட்டேன் வேற எதுவும் இல்லை "

என உள்ளே போன குரலில் கூறியவனை கண்டவள் பின்னர்,


" சரி தேவா நான் கம்ப்யூட்டர் லேபுக்கு போகபோறேன் நீயும் வரியா பிராக்டிஸ் முடிஞ்சிடுச்சில்ல...???"


என கேட்ட இனியாவிற்கு தேவாவும் ,


"இல்லை நீ முதல்ல போ நானும் வேந்தனும் கொஞ்ச நேரம் கழிச்சு வரோம்"

என்றதும் 'சரி' என தலையசைத்து இனியா அந்தப் பக்கம் சென்று விட இந்த பக்கம் வந்த மதி தேவாவை மூக்கு உடைக்க முறைத்தவாறு நின்று இருந்தாள்.‌‌


இனியா செல்வதை பார்த்தவன் மைதானத்தை நோக்கி நடக்கும் பொருட்டு திரும்பிட அங்கு எதிர்பாராத விதத்தில் மதி கோபமாக நிற்கவும் சட்டென திகைத்து விட்டான்...
 
Last edited:
அஸ்திரம் 57…



என் வாழ்வின் வசந்தமவள்!...



அத்தியாயம் 5




மதியை அங்கு எதிர்பாராத தேவா சட்டென திகைத்தாலும் பின்னர் சடுதியில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு ,



"ஏய் மதி…!!! என்ன இங்க வந்து நின்னுட்டு இருக்க??..."


என சாதாரணமாகத்தான் கேட்டான்….அதற்கு அவனைப் பார்த்து மூக்கு புடைக்க முறைத்து இருந்த மதி பல்லை கடித்துக்கொண்டு,



" எதுக்கு தேவா இப்ப அந்த இனியா கிட்ட பேசிட்டு இருந்த…????"என கோபமாகவே கேட்டாள்…



அதில் ஒரு கணம் இனியா செல்லும் பாதையை திரும்பிப் பார்த்துவிட்டு பின் மீண்டும் மதியை பார்த்தவன் ,



"அது அவ எதோ நோட்ஸ் எடுக்கலையாம் அதனால என்கிட்ட கேட்டா… நான் இல்லைன்னு சொன்னேன் …"


என அப்பட்டமாகவே பொய்யுரைத்தான்….



அதனை கேட்டதும் சற்று முகம் இளகிய மதி,



" ஓ…!. அப்படியா சரி சரி… அவ எது கேட்டாலும் கொடுக்காத …அவளும் அவள் மூஞ்சியும் பார்த்தாலே பிடிக்க மாட்டேங்குது"

என கடுகடுத்துக் கூறியவளை பார்த்த தேவாவிற்கு ஏனோ அவளது இந்த பேச்சு மனதிற்கு அவ்வளவாய் ஒப்பவில்லை…



தலையை ஆழ்ந்து கோதி கொண்டவன்,



" சரி விடு மதி… ஆமா நீ என்ன இங்க வந்திருக்க..??"


என பேச்சை திசை திருப்பினான்… அவனது கேள்வியில் கண்கள் மின்ன,


"ஆமா தேவா..! நான் வந்ததே மறந்துட்டேன் பாரு… அது என்ன விஷயம்னா… நான்தான் அப்ப சொன்னேன்ல கிளாஸ் ரூம்ல என் பர்த்டே வருது அதுக்கு பார்ட்டி அரேஞ்ச் பண்ணலாம்னு…! நீ என்ன நினைக்கிற??.."


என எதிர்பார்ப்புடன் கேட்டாள்….



அதைக் கேட்டதும் இடுப்பில் ஒரு கரம் ஊன்றி…. மறுகரத்தால் நெற்றியை நீவியவன் நிமிர்ந்து மதியை பார்த்து,



" மதி…! பார்ட்டி எல்லாம் இப்ப அரேஞ்ச் பண்ணியே ஆகணுமா??..."


என மறுப்பு தெரிவிக்கும் விதமாய் கேட்டான்…



அதை உணர்ந்த மதியின் முகம் ஏமாற்றம் அடைவதற்கு பதிலாக அனலை காட்டியது எனலாம்… வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல மதி தேவாவை பார்த்து,



" என்ன தேவா..? எப்பவும் நான் ஆசைப்பட்டு எது கேட்டாலும் உடனே கொண்டு வந்து கொடுப்ப… இப்ப நான் ஆசைப்பட்டு பார்ட்டி அதுவும் இந்த வருஷத்தோட லாஸ்ட் பர்த்டே… அதுக்கப்புறம் நம்ம எல்லாம் எங்க இருக்குமோ ஐ மீன் நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரையும் சொல்றேன்..‌‌ இதுக்கப்புறம் நம்ம ப்ரண்ட்ஸ்ஸை‌ பார்ப்போமோ??... எப்படியோ??...நீயும் நானும் இப்ப லவ்வர்ஸ்ஸா செலிப்ரேட் பண்ற லாஸ்ட் பர்த்டே..!.. இப்படி அரேஞ்ச் பண்ணனுமா பார்ட்டிக்கு கேக்குறியே??... உனக்கே இது நியாயமா??"


என குரலில் அப்பாவித்தனத்தை கொண்டு வந்து சோகமாய் கேட்கவும்….அதில் தடுமாறிய தேவா சற்று தயக்கத்துடனே,



"அப்படி இல்ல மதி… பாட்டிக்கு வேற உடம்பு சரியில்லைன்னு சொல்லி இருந்தாங்க… நான் இன்னும் போய் கூட பார்க்கலை..‌எப்படி இருக்காங்கன்னு கூட கேட்கலை மேட்சுக்கு ப்ராக்டிஸ் பண்ணதால…. அதுக்கே டைம் போயிடுச்சு… இப்ப திடீர்னு பார்ட்டினதும் அதுக்கு நான் அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணனும்னா பாட்டி கிட்ட தான் காசு கேக்கணும் அதான்…"


என இழுத்தவனை பல்லை கடித்துப் பார்த்தவள்,



" என்ன தேவா இது??... பாட்டி.. ஊர்… என்ன கதை பேசிட்டு இருக்க??... நான் எவ்ளோ ஆசையா கேட்கிறேன் … என் ஆசையை நிறைவேத்த மாட்டியா தேவா??... எனக்கு நீ தானே இருக்க…! உன்கிட்ட தான நான் உரிமை எல்லாமே கேட்க முடியும்!!... நீயே இப்படி பேசலாமா??... பாட்டிக்கு எதும் ஆகாது.‌‌என் பர்த்டே முடிஞ்சு நீயும் நானும் சேர்ந்து கூட பாட்டியை பார்த்துட்டு வரலாம்"


என அவனிடம் கொஞ்சி கொஞ்சி பேசினாள்….



இருந்தும் தேவாவிற்கு இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்வதில் விருப்பம் இல்லையே..‌‌



பெருமூச்சு விட்டவன்,


" நான் யோசிச்சு சொல்றேன் மதி.."


என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்….



எப்போதும் தன் ஆசைக்கு தடை விதிக்காதவன் இப்போது மறுப்பாய் வார்த்தையை கூறவும் அவளால் அதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை ….தனது தோழிகள் இடத்தில் இதனை எல்லாம் ஒரு பெருமையாய் கூறி கர்வப்பட்டு கொள்வாள் மதி.‌‌




அப்படிப்பட்டவளுக்கு அவனது இந்த மறுப்பு பெரிய அடியாய் விழுந்தது…. இருந்தும் அதனை வெளிக்காட்டாது முகத்தை சோகமாகவே வைத்துக் கொண்டு,



" ஓகே தேவா ….உனக்கு பிடிக்கலைன்னா விடு ஆஃப்ட்ரால் பார்ட்டி தானே…? என் பர்த்டே என்ன உனக்கு அவ்வளவு முக்கியமா…?? எப்பவும் போல அப்பா அம்மா கூட கோவிலுக்கு போகிறேன் "


என ஏதோ விட்டு தருவது போல் கூறியவள் அவனை திரும்பி பார்க்காது தளர்ந்து நடையுடன் சென்று விட்டாள்….



அவள் அவ்வாறு கூறிவிட்டு சென்றது தேவாவிற்கு மனதை ஒரு மாதிரி கனக்கச் செய்தது…. ஏனெனில் அவன் இதுவரை அவள் கேட்ட எதையும் மறுத்ததில்லை ….இதுவே முதல் முறை அதற்கும் காரணம் உண்டு …



ஏனெனில் போன வாரம் தான் அவனது பாட்டி ஊரிலிருந்து அவனுக்கு அழைத்து தனக்கு உடம்பு சரியில்லை என கூறியிருந்தார்….



எப்போதும் கம்பீரமாக கேட்கும் அவரது குரல் இம்முறை சற்று உள்ளே போனதாக அவனுக்கு உணர முடிந்தது…



அவருக்கும் வயதாகி விட்டது அல்லவா..!!!.... கால்பந்து பயிற்சிக்கு சென்றிருந்த காரணத்தால் அவனால் ஊருக்கு செல்ல முடியவில்லை….



இப்போது மதியின் பிறந்தநாளுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு பணம் நிச்சயமாக பாட்டியிடம் தான் கேட்டாக வேண்டும் ….அவர் இருக்கும் நிலையில் தான் சென்று கூட பார்க்கவில்லை ….அப்படி இருக்கையில் பணத்திற்காக அவருக்கு அழைத்து கேட்டால் அது அவனுக்கு மட்டுமல்லாது அவனது பாட்டிக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும்….



தன் பேரன் தன்னை வந்து பார்க்காது வெறும் பணத்தை மட்டும் கேட்கிறானே..?! என அவர் தன்னை தவறாக நினைத்து விட்டால்… அவன் முகத்தை எங்கு சென்று வைத்துக் கொள்வான்…



அதனால் தான் தேவா மறுப்பதற்கு காரணம் அதை புரிந்து கொள்ளாத மதி அவனை முதலில் திட்டி விட்டு பின்னர் சோகமாக பேசிவிட்டு சென்று விட்டாள்….


இப்போது இருதலைக்கொல்லி எறும்பாய் தவிப்பது தேவா தான்…மதி பேசிச் சென்றதையே யோசித்தபடி அப்படியே நின்று இருந்தவனது தோள் தொட்டு தன்னை நோக்கி திருப்பிய வேந்தன் அதிர்ந்து போனான் அவன் முகம் கண்டு….
 
Last edited:
அஸ்திரம் 57…



என் வாழ்வின் வசந்தமவள்!...


அத்தியாயம் 6…



மதி தேவாவிடம் ஏதோ பேசுவதும்…. அதற்கு தேவா பதில் அளிப்பதும் பின் அவள் பாட்டிற்கு செல்வதையும் பார்த்த வேந்தனுக்கு ஏதோ தவறாக படவும் விரைந்து சென்றான் நண்பனை நோக்கி…



பின்னந் தலையை அழுந்த கோதியபடி நின்றிருந்தவனது தோளினை தொட்டு திருப்பிய வேந்தன் தேவாவின் முகத்தைக் கண்டு திகைத்துப் போனான்…. அவனது கன்னத்தை தொட்டு,


" டேய் …என்னடா ஆச்சு??.."

என பதறியவாறு கேட்டிடவும் அவனது கையை விலக்கிவிட்டு பார்வையை அங்கும் இங்கும் சுழல விட்டு நின்று இருந்த தேவா,


" கடுப்பா இருக்கு மச்சான்….என்னன்னே தெரியல…?" என கண்களை இறுக மூடி கூறினான் …


இன்று ஏனோ தேவா வித்தியாசமாக நடப்பது போல் தோன்றியது வேந்தனுக்கு…அதை வெளிப்படையாகவும் கேட்டு விட்டான் ,


"என்னடா ஆச்சு உனக்கு இன்னிக்கி..?காலைல நல்லா தானே இருந்த திடீர்னு அப்படி கத்துற..?? அப்புறம் கூலா நடந்துக்குற…? இப்ப என்னடானா மூஞ்சி மூஞ்சுறு கணக்கா இருக்கு… என்னதான் ஆச்சு உனக்கு???ஒழுங்கா தெளிவா சொல்லு…ஊர்ல ஏதாவது பிரச்சனையா..??இல்ல பாட்டிக்கு ரொம்ப சீரியஸா??என்ன ஏதாவது சொல்லுடா..??"

என உள்ளே போன குரலில் கேட்டான் வேந்தன்….




ஏனெனில் இதுநாள் வரை தேவாவை இவ்வாறு கண்டதில்லை….அதனால் தான் அவனை இவ்வாறு கேட்டது…. கீழ் உதட்டை கடித்த தேவா இடுப்பில் இரு கரங்களையும் ஊன்றியவாறு வேந்தனை நிமிர்ந்து பார்த்து ,



"பார்த்துக்கலாம் மச்சான் ….எதுவும் இல்ல …."



"ஆமா நீ எதுவும் சொல்லிடாத …போ"

என சலிப்பாக விலகிச் சென்றவனது முழங்கையை பற்றி,


" எதுவும் இல்லடா…"




" நம்பிட்டேன் …யாராவது கூமூட்டை இருப்பான்… அவன்கிட்ட போய் சொல்லு" என கோபமாகவே கூறிய வேந்தனது தோளில் கரம் போட்டு அங்கே இருந்த படிக்கட்டுகளில் அமர்ந்த தேவா பெருமூச்சு விட்டு கூறத் தொடங்கினான்,


"ஊர்ல பாட்டிக்கு வேற உடம்பு சரி இல்லை மச்சான்… எப்பவும் நல்லா பேசுவாங்க …போன வாரம் உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க… அது வேற போய் பார்க்கலை.. இப்ப மதி என்னடான்னா பார்ட்டி வை அப்படின்னு சொல்றா… நானும் எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்றா… நான் அவளுக்கு இம்பார்ட்டன்ஸ் தரமாற்றேன் அப்படின்னு நினைக்கறாடா..‌ என்ன பண்றதுன்னு தெரியல …உன் கிட்ட கொஞ்சம் காசு இருக்குமா மச்சான்" எனக் கேட்டவனை வேதனையுடன் பார்த்த வேந்தன்,



" மச்சான் என்ன பேசுற நீ??.. பாட்டிக்கு உடம்பு சரியில்ல… இப்ப இந்த மதிக்கு பார்ட்டி அவசியமா ரொம்ப..?? ஏன் இந்த வருஷம் பிறந்த நாள் கொண்டாடலைன்னா அந்த அம்மாக்கு என்ன வயசு ஏறிடாதா?...இல்ல கொறைஞ்சிடுமா..?? ரொம்பதான் பண்றா ….டேய் நீ அவளுக்காக இவ்வளவு பாக்கணும்னு அவசியமே இல்ல….பேசாம விடு…என்ன ஒரு நாள் பேசாம இருக்கும் அடுத்த நாள் ஐஸ் கிரீம் வாங்கி தரேன்னு சொல்லு உடனே ஓடி வந்துடும்"என மதியை எண்ணி கடுப்பாக பேசியவளை ஏறிட்டு பார்த்த வேந்தன்,


" என்னை விட நீ தான்டா அவளை நல்லா புரிஞ்சு வச்சிருக்க…!" என்றிடவும் இப்போது விளக்கெண்ணெய் குடித்தது போல் ஆனது வேந்தனின் முகம்….





"டேய்..! வேணா மச்சான் எனக்கு அதைப் பார்த்தாலே கடுப்பா வருது… இதுல புரிஞ்சு வேற வச்சிருக்காங்க அந்த அம்மாவை… நீ முதல்ல போய் பாட்டிய பாரு …! பாவம் அவங்களுக்கும் உன்னை விட்டா வேற யாரு இருக்கா..?"

என அறிவுரை வழங்கிடவும் மெல்லமாய் தலையை அசைத்த தேவா,



"இந்த வாரம் எப்படியாவது போயிடனும் மச்சான்… இல்லனா எனக்கே ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கும் டா" என ஊருக்கு கிளம்ப யோசனை செய்தான் தேவா….



இரண்டு நாட்கள் கழித்து மதியின் பிறந்தநாள் வருவதால் தேவாவும் வேந்தனும் அவளுக்கு ஏதேனும் வாங்கலாம் என கடைக்கு வந்திருந்தனர்…



அது ஒரு பெரிய மால் இருவரும் சுற்றிக் கொண்டே தான் இருந்தார்கள் தவிர என்ன வாங்கலாம் என ஒரு யோசனையும் இல்லை…..



வேந்தனோ,


" மச்சான் அதுக்கு கிப்ட் வாங்குற காசுக்கு எனக்கு ஏதாவது வாங்கி கொடுடா பசிக்குதுடா…!" என வயிற்றை தடவியபடி கேட்க அவனது முதுகிலேயே பட்டென அடித்த தேவா,


"காலையில சாப்பிட்டு தானே வந்த..? இன்னும் மதியம் கூட ஆகலை… அதுக்குள்ள உனக்கு பசிக்குதா… மூடிட்டு வாடா" என இழுத்துக் கொண்டு சென்றான்…



உடைகள் வாங்கலாம் என்றாலும் அவளிடம் ஏற்கனவே ஏராளமான உடைகள் உள்ளது…. அதை மதியே அடிக்கடி கூறுவாள்… வேற என்ன வாங்கலாம் என யோசித்து இருக்கும் போது தான் அங்கிருந்த பரிசுப் பொருட்கள் விற்கும் கடைக்கு உள்ளே சென்றனர்….



தேவா இக்கடைக்கு அழைத்துச் செல்வதை புரியாது பார்த்த வேந்தன்,


"மச்சான்…? எதுக்குடா இந்த கடைக்கு கூட்டிட்டு வந்த…?" என கேட்டிடவும் அவனை முகம் சுருக்கி பார்த்த தேவா,


" பர்த்டேக்கு கிப்ட் வாங்க கிப்ட் ஷாப் தானடா வரணும்..? வேற எங்க போக சொல்ற..??" என கேட்டவாறு எதிரில் இருந்த பொருளை ஆராய்ந்து கொண்டிருந்தான்….



அதற்கு வேந்தன் கிளுக்கென சிரித்து,



" மச்சான்… நீ இதெல்லாம் வாங்கி கொடுக்கறதே வேஸ்ட்டா…" என்றிடமும் அவன் எதைக் கூற வருகிறான் என சரியாக கண்டுகொண்ட தேவா,


" போதும் ….விட்று" எனக் கூறிவிட்டு அங்கிருந்து விலக முயல அதற்குள் அவனது தோளில் கரம் போட்டு அவனது காதில்,


" அவளுக்கு ஒரு பர்பி வாங்கி கொடேன் அதுக்கே அலைஞ்சுகிட்டு வந்துரும்…. நீ எதுக்கு மச்சான் இவ்வளவு காசு வேஸ்ட் பண்ற…??" என்ன கூறிவிட்டு ஓடிவிட்டான்….



அதில் அவனை துரத்தி சென்ற தேவா தலையிலேயே பட்டென அடித்து விட்டு,



"ஒழுங்கு மரியாதையா அமைதியா இருடா… தேவையில்லாம என்னை கடுப்பேத்தாத… அவளைப் பற்றி தேவையில்லாம பேசாதே..கிண்டல் பண்ணிகிட்டே இருக்க…?? இனி அவளை பத்தி பேசு அப்பறம்‌ இருக்கு‌ மச்சான் உனக்கு"

என கட்டளையாய் கூறிவிட்டு அவளுக்காக என்ன வாங்கலாம் என ஆராய்ந்தவாறு நின்று இருந்தான் தேவா….



வேந்தனும் அதற்குப் பிறகு தோளை குலுக்கி விட்டு வேடிக்கை பார்க்கலானான்.‌‌…பிறகு அங்கே இருந்த கிறிஸ்டலில் செய்யப்பட்ட ஆணும் பெண்ணும் நின்றிருப்பது போலவும் அவர்களுக்கிடையில் இதய வடிவிற்கு நடுவே ஐ லவ் யூ என ஆங்கிலத்தில் எழுதியது போல் இருப்பதை கண்ட தேவா அதை கையில் எடுத்து பார்த்தான்…



அச்சமயம் சட்டென அவனது மன கண்ணில் இனியாவின் முகம் வந்து செல்ல… தலையை அழுந்த கோதிக் கொண்டவனுக்கு,


'என்ன இது..?? மதிக்கு கிப்ட் வாங்கலாம் பார்த்தா இனியா முகம் வருது…. கடவுளே!!..' என மனதில் முணுமுணுத்தவாறு தலையை குலுக்கி கொண்டான்….



பின்னர் அப்பரிசினை எடுத்துக் கொண்டு நேராக பில் போடும் இடத்திற்கு சென்றவன் என்ன நினைத்தானோ வேந்தனிடம் ,



"மச்சான் இதை பேக் பண்ண
சொல்லு …நான் இப்ப வந்துடுறேன்" என கூறிவிட்டு மீண்டும் கடைக்குள் சென்றான்….



அவன் செல்வதை பார்த்த வேந்தன் பில் போடுபவரிடம் ,


"இதை கிஃப்ட் பேக் பண்ணிடுங்க அண்ணா" என்று கூறிவிட்டு மீண்டும் ‌தேவா சென்ற திசை நோக்கி பார்வையை செலுத்தினான்….


சிறிது நேரத்தில் தேவா மேலும் ஒரு கிஃப்ட் உடன் வந்தவன் பில் போடுபவர் இடம் ,



"அண்ணா இதையும் சேர்த்து பில் போட்டுடுங்க….கிஃப்ட் பேக் பண்ணிடுங்க அண்ணா" என்று வைத்துவிட்டு வேந்தனை பார்த்தான்,



" எதுக்கு மச்சான் இப்ப அந்த மதிக்கு இரண்டு கிஃப்ட்டு…??... அதுக்கு ஒண்ணே அதிகம் இதுல ரெண்டும் வாங்கணுமா ரொம்பத்தான்…!" என சலித்துக் கொண்டான்…



இருவரும் கடையை விட்டு வெளி வர வேந்தனுக்கு பசி எடுக்கவும் அங்கிருந்த உணவகத்தில் இருவரும் சேட் ஐட்டம்ஸை உண்டு விட்டு ஹாஸ்டலுக்கு வந்து விட்டனர்….




மதியின் பிறந்த நாளும் வந்தது…..வழக்கமாய் தேவா தான் இரவு பன்னிரெண்டு மணிக்கு வாழ்த்து கூறுவான்…. அன்றும் அவளுக்காக தூங்காது கைபேசியை கையிலே வைத்துக் கொண்டிருந்தான்….


சரியாக பன்னிரெண்டாக ஒரு நிமிடமே இருக்க கைபேசியில் மதியின் எண்ணை அழுத்த போகும் சமயம் திடீரென இனியாவிடமிருந்து அழைப்பு வந்தது….. புருவம் சுருக்கியவன் சற்றும் தாமதிக்காது அழைப்பை ஏற்று காதில் வைக்க மறுபுறம் பதற்றமான குரலில் இனியா,



"தே… தேவன்..‌" என்று தான் கூறியிருப்பாள் அதற்கே அமர்ந்திருந்த இடத்திலிருந்து சடார் என்று எழுந்த தேவா,



" ஏய்…. இனியா??... என்ன ஆச்சு??... ஏன் டென்ஷனா பேசுற…?" என பதறிடவும்… அதற்கு இனியா,



" தேவன்….ப்…ப்ளீ… ப்ளீஸ் கொஞ்சம் வீட்டு…க்கு…. வாயேன்" என தட்டு தடுமாறி அழைத்தாள் அவனை….



திகைப்புற்ற தேவா இந்நேரத்தில் அழைக்கிறாளே என‌ எண்ணியவனுக்கு இன்னுமே பதறச் செய்வது….



" இனியா..? என்ன ஆச்சுன்னு சொல்லு?...இந்த டைமுக்கு வர சொல்ற..? அங்க எதாச்சும் ப்ராப்ளமா..?? உங்க சித்தி ஏதாவது சொன்னாங்களா??.." என கேள்வி மேல் கேள்வி கேட்கவும் பொறுமை இழந்த இனியா,


" இப்ப வர முடியுமா…? வர முடி..யாத தேவன்" என அழுத்தமாய் கேட்டாள்….



அதற்கு மேல் அவளது தேவனால் மறுக்க முடியுமா என்ன??...திரும்பி வேந்தனைப் பார்த்தான்…. அவன் நல்ல உறக்கத்தில் இருக்கவும் பெருமூச்சு விட்டு கைபேசியையும் தனது பர்சையும் எடுத்து பாக்கெட்டில் போட்டவன் யாருக்கும் தெரியாது சுவரேறி குதித்து சாலையை அடைந்தான்….



அவனது இருசக்கர வாகனம் உள்ளே இருப்பதால் எடுத்து வரும்போது நிச்சயம் வாட்ச்மேன் இடம் மாட்டிக் கொள்ள இயலும்…. அதனால் தான் அவன் அதை எடுத்து வராது ஆட்டோவில் செல்லலாம் என வந்து விட்டான்….



வாட்ச்மேனை சரி கட்டுவது அவனுக்கு பெரிய விடயம் அல்ல ஆனால் இந்நேரத்தில் செல்வதை அறிந்து என்ன?..ஏதென்று?? கேள்விகள் வரும்… அதனை தவிர்க்கத்தான் அவன் சுவர் ஏறி குதித்து வந்தது….



அச்சமயம் ஆட்டோவும் ஏதும் தென்படவில்லை இருந்தும் விறுவிறுவென இனியாவின் வீட்டை நோக்கி நடந்தே சென்றவன்…. வழியில் ஒரு ஆட்டோ வரவும் அதில் ஏறி இனியாவின் வீட்டின் முன்பு இறங்கி கொண்டான்….



தனது பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து ஆட்டோக்காரருக்கு கொடுத்த தேவா சுற்றும் முற்றும் பார்க்க….அனைத்து வீடுகளிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது….


மெதுவாக கேட்டை திறந்து காலிங் பெல்லை அடிக்காது கதவை தட்டினான் தேவா….



" இனியா…?...இனியா?" என இரு முறை அழைத்தவாறு கதவினை தட்ட உள்ளே இருந்து தடுமாறியபடி வந்து விழுந்தது வார்த்தைகள் ,



"உள்…ள…வா…. தேவன்"

என மூச்சு வாங்கியபடி கூறிய இனியாவின் குரலில் சட்டென்று கதவை திறந்தான்…தாழ் போடாமல் இருக்கவும் திகைப்புற்றவாறு அவளை நெருங்க அங்கு அவன் கண்ட காட்சி அவனை அதிரச் செய்தது எனலாம்….



தலை கலைந்திருக்க…. முகம் முழுவதும் வியர்வையில் குளித்திருக்க…. கால்களை ஒடுக்கியபடி… கீழே அமர்ந்திருந்த இனியா கிட்டத்தட்ட பாதி மயக்கத்தில் இருந்தாள் எனலாம்….



அவளை அந்நிலையில் கண்டதும் தேவாவின் அணு முழுவதும் அவளுக்காக துடித்தது….விரைந்து சென்று அவளை நெருங்கியவன்,



"இனியா..???இனியா… என்னாச்சு உனக்கு..?? சொல்லுடீஇஇ…" என கன்னத்தை பட்பட்டென்று தட்டினான்….



அவளோ தன் தேவன் தனக்கு அருகே இருப்பதை உணர்ந்ததால் வந்து தைரியத்தில் மெதுவாய் கண்களை திறந்து,



" தேவன்…வயிறு ரொம்ப வலிக்குது தேவன்…என்னால முடியல" என்றிடவும் அவள் முகத்தையும்..‌ அவளது வயிற்றையும் மாறி மாறி பார்த்தவன்,



" என்ன ஆச்சு வயிறு வலிக்கற அளவு??.." என அடுத்து என்ன கேட்பது என திணறியவாறு இருந்தவனிடம்,



"பீரிய….ட்ஸ்…தேவன்… வலி ரொம்ப அதிகமா இருக்கு….தாங்க முடியல டிரஸ் எல்லாம் அதிகமா ஆயிடுச்சு" என திக்கி திணறி கூறியவளை என்ன நினைத்தானோ தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தவன் அவளது உச்சி முகர்ந்து,


" எதும்.. ஆகாது நான் உன் கூட தான் இருப்பேன்.." என கரகரத்த குரலில் கூறியவன் சற்றும் தாமதிக்காது அவளை தன் இரு கரங்களில் தூக்கிக் கொண்டு கதவினை பூட்டிவிட்டு கேட்டினை தாண்டி வெளிவந்தான்..‌‌



நல்ல வேளை அவனை விட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் அங்கு யாருடனோ கைபேசியில் பேசியவாறு இருக்கவும் இனியாவை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் படுக்க வைத்து விட்டு,



" அண்ணா…. ப்ளீஸ் கொஞ்சம் ஹாஸ்பிடல் போங்கண்ணா…. உடம்பு சரியில்லண்ணா… ப்ளீஸ்"என 'ப்ளீஸ்' என்கிற வார்த்தையை உபயோகப்படுத்திடவே யோசிப்பவன் இன்று யாரென்று தெரியாதவரிடத்தில் தன் உயிர்த்தோழிக்காக அத்தனை 'ப்ளீஸ்' களை உபயோகப்படுத்தினான்….




அவரும் இனியாவை பார்த்துவிட்டு உடனே ஆட்டோவை எடுத்து மருத்துவமனை நோக்கி விட்டார்….நல்லவேளை அருகிலேயே சின்ன கிளினிக் ஒன்று திறந்திருந்தது….ஸ்ட்ரக்சரை எதிர்பார்க்காது அவளை தன் இரு கரங்களால் தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் ,



"டாக்டர்…!... நர்ஸ்….?!" என கத்திக் கூப்பாடு போட தூங்கிக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர் பதறிக்கொண்டு எழுந்து,



" என்னாச்சு சார்?" என்றிடவும் இனியாவை பார்த்து,



" வயிறு வலி…கொஞ்சம் சீக்கிரம் பாருங்களேன் ப்ளீஸ்" என கூறியவனை கண்ட பெண்மணி என்ன நினைத்தாரோ உடனே மருத்துவரையும் நர்சுகளையும் அழைத்து இனியாவை சோதிக்க ஏற்பாடு செய்தார்….



தேவா தலையில் கை வைத்தவாறு வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான்…. தலை குனிந்து இருந்தவன் அவனது கரங்களை பார்த்தான் அப்படி நடுங்கியது‌ அவனது விரல்கள் அனைத்தும் ….மூச்சு வாங்க அமர்ந்தவனது இதயத்துடிப்பும் ஏகத்துக்கும் எகிறி இருந்தது….



அவன் ஒரு முறை கூட இவ்வாறு உணர்ந்ததில்லை…. இரு கரங்களால் முகத்தை மூடியவன் அழுந்த துடைத்தான்…. கண்கள் சற்றே கலங்கி காணப்பட்டது ….நெற்றியை நீவியவாறு விழிகள்‌‌ மூடி,


'கடவுளே என் இனியாக்கு எதும் ஆகக்கூடாது 'என மனதிற்குள்ளேயே கடவுளை நினைத்து பிரார்த்தனை வைத்தான் தேவா….



எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்திருப்பானோ ஒரு செவிலி பெண் வெளியே வந்து அவனிடம் ,



"சார்…. இதெல்லாம் போய் கொஞ்சம் மெடிக்கல் ஷாப்ல வாங்கிட்டு வந்துடுங்க வெளிய தான் இருக்கு" என ஒரு சீட்டினை நீட்டிட அவனும் விரைந்து சென்று அவற்றையெல்லாம் வாங்கி வந்து அந்த செவிலி பெண்ணிடம் கொடுத்தான் …



கொடுக்கும்போதே,



" உள்ள… அவ….ங்களுக்கு…. எப்படி இருக்கு" என கேட்டவனுக்கு வார்த்தைகள் வர மறுத்தது…. அவனை பரிதாபமாக பார்த்த செவிலி பெண்ணும்,



"பயப்படுற மாதிரி எதுவும் இல்லை…அவங்களுக்கு பீரியட்ஸ் ரத்தப்போக்கு அதிகமா இருக்கு….வலி தாங்க முடியாம ரொம்ப மயக்கம் ஆகியிருக்காங்க ….இப்ப ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம்…. டாக்டர் வந்து டீடைலா இப்ப சொல்லுவாங்க" என்று மட்டும் கூறியவர் உள்ளே சென்று விட்டார்….
 
Last edited:
அஸ்திரம் 57


என் வாழ்வின் வசந்தமவள்!...



அத்தியாயம் 7…



செவிலி பெண் உள்ளே சென்ற சில நேரம் கழித்து மருத்துவர் ஒருவர் வெளிவந்தார்….அவரை கண்டதும் பதற்றத்துடன் எழுந்து நின்ற தேவா அவரிடம்,


"அவங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே…டாக்டர்…??" எனக் கேட்டவனை பாவமாக பார்த்தவர்,


" நீங்க..???" என இழுக்கவும்,


" நான் அவளோட ஃப்ரெண்ட்" என தயக்கமாய் உரைத்தவனை வியப்பாய் பார்த்தவர்,



" அவங்களுக்கு ஏதும் இல்லை….பீரியட்ஸ்ல பிளட் ஃப்ளோ அதிகமா இருக்கு அதனால தான் ரொம்ப டயர்ட் ஆயிட்டாங்க….மருந்து கொடுத்து இருக்கோம்.‌‌…நார்மல் ஆனதும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்" என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்….



அந்நேரம் அறையை விட்டு வெளிவந்த செவிலிப் பெண்ணை பார்த்த தேவா,


" சிஸ்டர்...?இப்ப போய் பார்க்கலாமா அவங்களை….??"



" ஹான்… போய் பாருங்க சார்….முழிச்சிட்டு தான் இருக்காங்க" என அவர் நகர்ந்ததும் அவசரமாய் உள் நுழைந்த தேவா அங்கு கண்டது வாடிய கொடியாய் மெத்தையில் சாய்ந்த அமர்ந்து இருந்த இனியாவை தான்….



ஏனோ அவளை அவ்வாறு கண்டதும் விழிகள் கலங்கிவிட்டது ஆணவனுக்கு…அடுத்த நொடி புயலெனப் பாய்ந்து அவளது தோள் வளைவில் முகம் புதைத்து அழுது விட்டான்….



தேவாவின் இச்செயலை கொஞ்சமும் எதிர்பாராத இனியா அதிர்ச்சியுடன் சிலையாய் சமைந்து விட…. பின் தன்நிலை அடைய அவளுக்கு சில கணங்கள் தேவைப்பட்டது….. மூச்சை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்… தன்னை கட்டிக்கொண்டு அழுபவனது தோளினை தட்டி தன்னிடம் விளக்க முயல…. அவனோ விடுவேனா என அவளை இன்னும் இறுக்கமாய் கட்டிக்கொண்டு கதறினான் சத்தம் வராது….ஆனால்‌ அவனது உடல் குலுங்குவதிலேயே அழுவதை கேட்டுக்கொண்டவன் ட்ரீப்ஸ் ஏற்றப்படாத மறுக்கரத்தால் அவனது பின்னந்தலையை ஆறுதலாய் வருடிவிட்ட இனியா,



" எனக்கு எதுவும் இல்லை தேவன்…. தயவு செஞ்சு‌ அழாத….." என கூறியவளின் கூற்றில் தலை குனிந்தவாறு அவளை விட்டு விலகிய தேவா,



" உன்னை அப்படி பார்த்ததும் என்னால நிஜமாக முடியலை…இனியா…‌எவ்வளோ பயந்துட்டேன் தெரியுமா??...." என உதடு துடிக்க கூறியவனை சிறு புன்னகையுடன் பார்த்தவள்,



"ஏன் எனக்கு ஏதாவது ஆயிடும்னு எதிர்பார்த்தியா என்ன??..." என கூறியதுதான் தாமதம் இப்போது நிமிர்ந்து ஏகத்துக்கும் தன் எதிரே இருந்தவளை முறைத்தவன்,



"அப்படியே பளார்னு ஒன்னு வைப்பேன்….
என்னதான் ஆச்சு உனக்கு??... உன் குரலை அப்படி கேட்டதும் அடுத்த நிமிஷம் எனக்கு என்ன பண்றதுனே தெரியல…. வேந்தன் கிட்ட கூட சொல்லல… நான் பாட்டுக்கு வந்துட்டேன்….உடம்பை பார்த்துக்க மாட்டியா??.." என வாஞ்சையாய் கூறியவனை தயக்கமாய் ஏறிட்டவள்,



"அது….எப்பயாச்சும் இது மாதிரி ஆகும் தேவன்..‌‌ இன்னைக்கு என்னன்னு தெரியல ட்ரஸ் ஃபுல்லா ஆயிடுச்சு…‌வலியும் தாங்க முடியலையா அதான் உன்னை அழைக்க வேண்டியதா போச்சு…சாரி தேவன் என்னால தான உனக்கு கஷ்டம்…??"



"அதெல்லாம் ஒன்னும் இல்ல….லூசு மாதிரி நீ பேசாத…."



"என்ன இருந்தாலும் இந்த டைமுக்கு உன்னை இங்க வர வச்சு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக சொல்லி நான் தொல்லை பண்ணிட்டேன்…!"




"இனியா…? நீ உதை வாங்க போற…..தேவை இல்லாம நீ இது மாதிரி பேசாத சரியா …??நீ என்னதான கூப்பிட்ட….ஆமா எங்க உங்க சித்தி??... ஏன் அவங்க வீட்ல இருக்க மாட்டாங்களா??..." என்றிடவும் அவளிடம் இருந்து வெறும் பெரும் மூச்சு மட்டும் தான் வந்தது….



அதிலேயே புரிந்து கொண்டவன்,



" சரி விடு அவங்க கதை தெரிஞ்சது தானே…. நல்லவேளை நீ என்னை கூப்பிட்டியே…இப்ப எப்படி ஃபீல் பண்ற..??" எனவும் தலையை நிமிர்த்தி,



'பரவாயில்ல' எனும் விதமாய் தலையை அசைத்தாள்… அவனை சின்ன சிரிப்புடன் பார்த்துக் கொண்டே இருக்க அவளது பார்வை உணர்ந்து,


" ஏய்… என்னடீ..?? என்னையை பார்த்துட்டு இருக்க??..."



" இல்ல உனக்கு அழுகலாம் வருமான்னு பார்க்கிறேன்..!" என்று கூறியவளின் கூற்றில் கரத்தால் தன் கண்களை தொட்டுப் பார்க்கவும் அதில் சின்ன புன்னகையுடன் குனிந்து தனது டீசர்டினை கொண்டு முகத்தை அழுந்த துடைத்துவிட்டு மூக்கை உறிஞ்சிவிட்டு நிமிர்ந்து அவளை பார்த்தான்….


"நான்தான் சொன்னேன்ல எனக்கு அந்த டைம் எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரியல…உன்னை பார்த்ததும் தான் அழுகை தானா வந்துருச்சு" என்றான்…



அதன் பிறகு தான் அவனது கரத்தை கண்டாள் பெண்ணவள்… அதில் ரத்தம் ஆங்காங்கே காய்ந்து கிடக்கவும் சங்கடமாக உணர்ந்தவள் அவன் முகம் காணாது,


"தே…வன்… உன் கையெல்லாம் ரத்தமா இருக்கு" என ஈனஸ்வரத்தில் கூறினாள்…



அதில் நெற்றி சுருக்கி தன் கரத்தை பார்க்க அதில் இனியாவை தூக்கிக் கொண்டு வரும் பொழுது அவளது ஆடையில் இருந்த உதிரம் அவனது கரத்திலும் நன்றாக பதிந்திருந்தது….



அதை பார்த்தவனுக்கும் சங்கடமாக இருந்தது…. அவள் என்ன நினைப்பாளோ என்று எண்ணி நிதானமாகவே கூறினான்,



" இரு நான் போய் வாஷ் பண்ணிட்டு வரேன்" என அங்கிருந்த வாஷ்பேஷனில் கரங்களை கழுவி விட்டு வந்தவன் அவள் அருகே அமர்ந்து கொண்டான்…‌



பின்னர் சிறிது நேரத்தில் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என செவிலி பெண் கூறிவிட்டார்…‌ மருத்துவர் அவளுக்கு கூறிய மருந்து மாத்திரைகளை வாங்கிய தேவா அவளது கரம்பிடித்து ஆட்டோவில் ஏற்றி அவளது வீட்டினை நோக்கி சென்றனர் இருவரும்….



வீட்டிற்கு வந்த இனியாவிற்கு மனம் முழுவதும் இதமாக இருந்தது…. காதோரம் இருந்த முடியினை சரி செய்தவாறு திரும்பி பார்க்க அங்கு தேவா கதவை அடைத்து விட்டு நடந்து வந்து கொண்டிருந்தான்…



அவளை நெருங்கி ஏதோ பேச வாய் எடுக்க அதற்குள் சட்டென அவனை கட்டிக் கொண்டாள் இனியா..‌


அவளது அணைப்பில் அவனது நுனிக்கால் முதல் உச்சந்தலை வரை மின்சாரம் பாய்ந்து அவனுக்குள் புது ரத்தம் ஓடுவது போல் உணர்ந்தவன் கண்கள் மூடி அத்தருணத்தில் ஆழ்ந்து விட அனிச்சையாக அவனது கரங்கள் இனியாவினை முதுகை அணைத்துக் கொண்டன…‌



அவளது உச்சந்தலையில் தனது மோவாயை பதித்தவாறு கண்கள் மூடி நின்றிருந்தான் தேவா….அவன் மனம் முழுவதும் நிம்மதியை உணர்ந்தது அச்சமயம்…



தனக்காக இவன் இருக்கிறான் எப்போதும் என்பது போல் தேவாவை இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்ட இனியாவின் காதில் அவனது இதயத்துடிப்பானது தெளிவாக கேட்டது….



இதழ் விரிந்த சிரிப்புடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க அவனும் அவளது விழிகளை பார்த்தான்…..இருவரது விழிகளும் ஒன்றோடு ஒன்று கலந்து இருந்தது…. அவனது சட்டையை ஒரு கரத்தால் இறுக்கமாய் பற்றி தன்னை நோக்கி இழுத்தவள்,


"எப்பவும்… என் கூட இரு தேவன்" என ஆழ்ந்த குரளில் உரைத்திடவும் அவ்வார்த்தை அவனுள் ஏதோ செய்தது போலும் தன் ஒரு கரத்தால் அவளது கன்னத்தை மென்மையாக பற்றிய தேவா அவளது விழிகளை நேருக்கு நேராய் பார்த்து,


" எப்பவும் விட்ற மாட்டேன்" என்ற வார்த்தைகள் உறுதியாய் வந்து விழுந்தன….



இருவரும் அந்த நேரம் சொல்லென உணர்வில் தாக்கப்பட்டனர்….
இனியாவின் விழிகளை பார்த்தவாறு அவளது நிடலத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றை வைக்க பெண்ணவளது விழிகள் இரண்டும் தானாக மூடிக்கொண்டு அவனது முதல் முத்தத்தை உள்வாங்கிக் கொண்டன….



விழி திறந்து அவளை விட்டு விலகி மதிமுகம் கண்டவனுக்கு உணர்ச்சிகள் ஏகத்துக்கும் கட்டுப்பாடு இன்றி எகிறியது….இருவரது மனநிலையும் இன்று வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தவர்களுக்கு மற்றொருவர் முகத்தை காணவே கூச்சம் வந்து ஒட்டிக்கொண்டது….



தேவாவின் முகத்தையே இமைக்காது பார்த்த இனியாவிற்கு ஏகத்துக்கும் மூச்சு வாங்கி அவளை
அவஸ்தைக்குள்ளாக்கியது…. அவளது ஏறி இறங்கிய தனங்களில் ஒரு நொடி பார்வையை பதித்தவன் சட்டென கண்கள் மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டான்..‌‌



இனியாவிற்கும் ஒருவித அவஸ்தையாக இருந்தது அவனது பார்வையில்…. தலை குனிந்து கொண்டவள் அவனையே நினைத்திருக்க அச்சமயம் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்ட இடத்தில் வலி ஏற்படவும் முகத்தை சுழித்து கரத்தைப் பிடித்தவாறு தேவாவை நிமிர்ந்து பார்த்தாள்…


அவனும் அவள் வலியில் அலறிய சத்தத்தில் தலையை திருப்பி பார்க்க அங்கு இனியா கரத்தைப் பிடித்தவாறு நிற்கவும் தன்நிலை மீட்டுக் கொண்டு அவளை சோபாவில் அமர வைத்தான்…‌



" இனியா ஏதாச்சும் கொஞ்சம் சாப்பிடுறியா…. சாப்பிட்டு படுத்தா பெட்டர்ரா இருக்கும்ல…??" என ஒவ்வொரு வார்த்தைகளையும் அவளிடம் பேச தேடினான்….




அவளும்,



" இல்ல தேவன் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு" என மறுத்தவளிடம்,



"சரி நீ ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு நான்….
இங் ‌….கேயே இருக்….கேன்..இல்ல. நான் கிளம்பட்டுமா??.." என‌ தடுமாறியவனிடம்,


"இங்கேயே இரேன் தேவன்"என பட்டென வந்து விழுந்தது வார்த்தைகள் இனியாவிடமிருந்து…‌அதன்பின்னர் மறுப்பானா என்ன??...


சரியாக இருவரும் சோபாவில் அமர்ந்திருக்க இனியாவிற்கு ஒரு நிலைக்கு மேல் அமரவே முடியவில்லை…‌



அசதியாக உணர்ந்தவள் நெளிந்தவாறு இருக்கவும் அதை கண்டுக்கொண்ட தேவா அவளது கரம் பிடித்து இழுத்து பெண்ணவளது தலையை தன் மடியில் சாய்த்து கொண்டான்…‌




அவனது அச்செயலில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது பெண் அவளுக்கு…. விழி நீரை பெருவிரலால் துடைத்தவளுக்கு ஏனோ மனம் முழுவதும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது….



தனக்கு யாருமே இல்லை என்று இருக்கின்ற நிலைமையில் தன்னை பார்த்து பார்த்து கவனிக்க ஒருத்தர் இருக்கும்போது அவரது அக்கறையை கண்டு மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தையில் கூறிட முடியாது…‌



அத்தகைய மன நிலையில் தான் இனியா இருந்தாள்…. தேவாவை எதற்கும் அழைத்துப் பார்க்கலாம் என்று தான் அவள் நடு இரவில் அழைத்தது..‌‌ ஆனால் அவள் அழைத்த மறுகணமே எதை பற்றியும் யோசிக்காது அவளுக்காக பதறி கொண்டு ஓடி வந்தவன் கதவைத் திறந்து அவளை பார்த்த பார்வை இன்னமும் அவளது மனக்கண்ணில் உள்ளது….



அவனது விழியில் தெரிந்த தனக்கான பதற்றத்தை கண்டவளுக்கு ஒரு நொடி மனதில் ஒரு தென்றல் வந்து போனது இதமாய்….



பின்னர் அவன் தன்னை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியதும்….அதன் அடுத்து தன்னை கட்டிக்கொண்டு அழுததையும் பார்க்கையில் ஏதோ வானத்தில் மிதப்பது போலவே உணர்ந்தாள்…



ஒரு மனமோ 'இன்னும் சிறிது நாள் மட்டுமே இத்தகைய அக்கறை கிடைக்கும் அதனை ஏற்றுக் கொண்டு கண்டபடி யோசிக்காதே..!' என எச்சரித்தாலும் அதையும் மீறி மறு மனமோ தேவாவை ரசிக்கவே செய்தது…



பெருமூச்சு விட்ட இனியா மருந்தின் உதவியால் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்….அவளுடன் அவளது தேவனும் நிம்மதியாய் உறங்கினான்..‌



இங்கு ஆத்திரம் பொங்க அமர்ந்திருந்தாள் அவள்….மதி
 
Status
Not open for further replies.
Top