வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என் வாழ்வின் வசந்தமவள்! கதைத்திரி

Status
Not open for further replies.
அஸ்திரம் 57…


என் வாழ்வின் வசந்தமவள்!...


அத்தியாயம் 8…


சரியாக பன்னிரண்டு மணிக்கு தன்னவன் தனக்கு அழைத்து வாழ்த்து கூறுவான் என எண்ணி கொட்ட கொட்ட முழித்தவாறு கைபேசியை கையில் பிடித்துக்கொண்டு மெத்தையில் நகம் கடித்தபடி அமர்ந்திருந்தாள் அவள்…மதி…



அவள் எப்போதும் அப்படித்தான் வருடா வருடம் தேவா இந்நேரம் சரியாக அழைத்து விடுவான் இல்லை என்றால் அவனை உண்டு இல்லை என்று பண்ணி விடுவாள் மதி….



முதல் வருடம் இதுபோல் பன்னிரெண்டு மணிக்கு வாழ்த்து கூற வேண்டும் என அவள் அன்பு கட்டளை விடுக்க அவனும் அழைத்து இருந்தான்….



ஆனால் அச்சமயத்தில் அவளுக்கு அவளது தோழி அழைத்து வாழ்த்து கூறிக் கொண்டிருந்ததால் பிசி என வந்தது…எனவே தேவா காலையில் சொல்லிக் கொள்ளலாம் என திரும்ப அழைக்க முயலவில்லை …..



ஆனால் மறுநாள் காலையில் வந்த மதி தேவாவை உண்டு இல்லை என ஆக்கிவிட்டாள்…. அவனும் தன்னிடம் இவ்வாறு உரிமை எடுத்துக் கொண்டு பேசுகிறாளே என புன்னகையுடன் நின்றிருந்தான்….




அதற்கு அடுத்த வருடத்தில் சரியாக பன்னிரெண்டு மணிக்கு தேவா அழைத்து வாழ்த்து கூற அவளோ தனக்காக வாங்கிய பரிசினை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு ஒரே தொல்லை…..அவனும் அவளுக்கான பரிசினை புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்க அதை பார்த்ததும் மதி துள்ளி குதிக்காத குறையாய் அவனிடம் சிரித்து சிரித்து பேசினாள்….



இது இறுதி வருடம் என்பதால் நிச்சயம் தேவா தனக்கு மிகப்பெரிய பரிசினை தர நினைத்திருப்பான்… ஏனெனில் பார்ட்டி வேண்டாம் என்பதால் தன் மனம் நோகக்கூடாது என அவன் தன்னை சந்தோஷப்படுத்துவதற்காக ஏதேனும் பெரிதாய் செய்திருக்கலாம் என மனக்கோட்டை கட்டிருக்க ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக அவன் அழைத்து வாழ்த்து கூட கூறாததால் எரிமலையாய் வெடித்து கொண்டிருந்தாள் உள்ளுக்குள்…



ஏன் தேவா தனக்கு அழைக்கவில்லை என திரும்பத் திரும்ப பைத்தியம் போல் தனக்குத் தானே கேட்டுக் கொண்டிருந்தவள் அவனுக்கு அழைக்க அவனும் இனியாவிடம் பேசிவிட்டு கைபேசியை பாக்கெட்டில் வைத்த அடுத்த கணம் தவறுதலாய் அணைக்கப்பட்டு விட்டது….



அதன் காரணமாக தேவாவிடம் மதியால் பேச இயலவில்லை அதேபோல் தேவாவிற்கும் மதி அழைத்தது எதுவும் தெரியவில்லை….



அவனும் அழைத்து வாழ்த்து கூறவில்லை தான் அழைத்தும் அணைக்கப்பட்டுள்ளது என வந்திருப்பதை அறிந்ததும் மதிக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்தது….


அவன் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பதாக ஏதேதோ கற்பனை செய்தவள் அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்….



மறுநாள் காலையில் அவனை சென்று நாக்கு பிடுங்குவது போல் கேட்க வேண்டும் என முடிவு செய்தவளாய் உறங்கச் சென்று விட்டாள்....



மறுநாள் விடிந்ததும் இனியா தான் முதலில் கண்விழித்தது... எப்போதும் கண் விழித்ததும் இன்னும் இரண்டு நிமிடம் உறங்கலாம் என மனம் சோர்வாக இருக்கும்…



ஆனால் இன்று தான் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு அனைத்தையும் மறந்து அவள் உறங்கியதால் உற்சாகமாகவே எழுந்தாள்…



எழுந்ததும் அவள் கண்டது சோபாவில் ஒரு பக்கமே தலை சாய்த்து சின்னதாய் வாய் திறந்தபடி உறங்கிக் கொண்டிருந்த தேவாவை தான்….



அவனை அவ்வாறு கண்டதும் புன்னகைத்தவள் எழுந்து குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு பின்னர் சமையலறையில் புகுந்து கொண்டாள்…. அவனுக்கும் தனக்குமான காபியை கலந்து எடுத்துக் கொண்டு வந்தவள் அவனது தோள்தட்டி எழுப்பினாள்,


" தேவன்…. தேவன்…"

தேவாவோ வழக்கமாய் வேந்தன் எழுப்புவதாகவே எண்ணி கொண்டு,


"இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்குறேன்டா மச்சா…" என தூக்கத்திலேயே உளறிட அதைக் கண்டு கிளுக்கென சிரித்தவளது சத்தத்தில் சட்டென கேட்ட பெண் சிரிப்பில் விழுந்தடித்து எழுந்தவன் கண்ணை கசக்கி கொண்டு தன் எதிரே அமர்ந்திருந்தவளை கண்டான்…



இனியா முகம் கொள்ள புன்னகையுடன் அவனையே பார்த்தவாறு அமர்ந்திருக்கவும் அவனுக்கு அப்போதுதான் நிதர்சனம் புரிந்தது…. பின்னந்தலையை கோதியபடி அவளைப் பார்த்து,



"குட்மார்னிங் இனியா…!" என்றிடவும் பதிலுக்கு,



" குட் மார்னிங் தேவன்…. சீக்கிரம் போய் பிரஷ் அப் ஆகிட்டு வா…காபி உனக்கும் சேர்த்து போட்டு வந்து இருக்கேன்" என கூறினாள்…



அவள் கூறியபடி குளியலறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவனின் முன் காபி கோப்பையை நீட்ட அவனும் புன்னகையுடனே அதை வாங்கி குடிக்கலானான்….



ஒரு சொட்டு விடாது குடித்து முடித்த தேவன் கப்பை கீழே வைத்து விட்டு எப்பவும் போல,



" காபி சூப்பரா இருக்கு உன் பெயருக்கேத்த மாதிரி இனிப்பா…!" என்றதற்கு சத்தம் வராது சிரித்துக் கொண்டவளிடம்,



"சரி டைம் என்ன ஆச்சு…?" என சுற்றும் முற்றும் பார்த்தவாறு கேட்க அவளோ அங்கிருந்து சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரத்தை பார்த்து,



" டைம் ஏழு ஆயிடுச்சி தேவன்"


"ஓ அப்படியா…!" என ராகம் இழுத்தவன் பின் நினைவு வந்தவனாய்,



" என்னது ஏழாயிடுச்சா…???" கைப்பேசியை எடுத்து பார்க்க அதுவும் அணைத்து இருந்தது… நெற்றியில் மெல்லமாய் தட்டிக் கொண்டவன்,



" சரி இனியா நான் கிளம்புறேன் நீ உடம்பை பார்த்துக்கோ..‌‌ இன்னிக்கு கிளாஸ்க்கு வருவியா இல்ல லீவா??..." என தலையை கோதியபடி கேட்டவனுக்கு,



" கிளாசுக்கு வரணும் தேவன்…லாஸ்ட் செமஸ்டர் வேற அடிக்கடி லீவ் போட்டா நோட்ஸ் எல்லாம் சரியா எடுக்க முடியல…‌"



" சரி சரி நீ பார்த்து வா..‌‌ டாக்டர் கொடுத்த மருந்தெல்லாம் சாப்பிட்டு வா…. சரியா நான் கிளம்புறேன்…டேக் கோர்…பாய்" என கூறிவிட்டு வெளியேறி விட்டான்…‌



வாசல் வரை வந்து நின்ற இனியா வாசல் கதவோரம் சாய்ந்து இருக்க கேட்டினை திறந்து வெளியே சென்ற தேவாவும் இரு அடிகளை தான் எடுத்து வைத்து இருப்பான்..‌ நின்று நிதானமாய் தலையை திருப்பி அவளைப் பார்த்தான் இருவரது முகமும் நிர்மூலமாக இருந்தது….ஆனால் இருவரும் விழிகளும் ஏதோ பேசிக் கொண்டது ரகசியமாய்… அவன் ஆட்டோ ஏறி சென்றுவிட ….பெருமூச்சுவிட்டு இனியா கதவினை சாற்றி தாழ் போட்டுவிட்டு அதன்மீது சாய்ந்து புன்னகைத்துக் கொண்டாள்….
 
அஸ்திரம் 57


என் வாழ்வின் வசந்தமவள்!



அத்தியாயம் 9….



ஆட்டோவில் வந்த தேவாவிற்கு மனம் முழுவதும் இனியாவின் நினைவுகளே…. அவளுக்காக தான் துடித்ததையும் அழுததையும் நினைக்கையில் அவனுக்கு அவனை எண்ணி வியப்பாக இருந்தது…. இது மாதிரியான உணர்வுகள் அவனுக்கு புதியது…. அதுவும் அவளது நெற்றியில் கொடுத்த ஒற்றை முத்தம் ஏதோ வானத்தில் மிதப்பது போன்று ஒரு உணர்வை தந்து இருந்தது ஆணவனுக்கு…


இதழில் உறைந்த புன்னகையுடன் அமர்ந்திருந்த தேவாவிற்கு மனம் முழுவதும் உற்சாகமாய் இருந்தது…. கீழ் உதட்டை கடித்தபடி தலையை இடவலமாக ஆட்டிக் கொண்டவனுக்கு இது மாதிரியான உணர்வுகள் பிடித்திருந்தது வித்தியாசமாகவும் இருந்தது…. மதியிடம் கூட இது போல் எல்லாம் அவன் உணர்ந்ததில்லை…. ஏன் இப்போது வரை அவனுக்கு மதியின் நினைப்பே வரவே இல்லை….




சிரிப்புடன் கல்லூரிக்கு வந்தவன் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓட்டுனருக்கு காசினை கொடுத்துவிட்டு தலையை சரி செய்தவாறு உள்ளே வந்தான்….


ஹாஸ்டலுக்குள் அவன் கால் வைத்த நேரம் அவனைத் தேடி ஓடோடி வந்த வேந்தன்,


"டேய்…மச்சான் எங்கடா போன??...காலையிலிருந்து உன்னை தேடுனேன்…. எங்க போன??... இன்னிக்கு உன் ஆளுக்கு பிறந்தநாள்னா விட்டுட்டு போயிடுவியா??" என கேட்ட பின்பு தான் அவனுக்கு மதியின் நினைப்பே வந்தது…


அதுவரை முகத்தில் இருந்த புன்னகை மறைந்து கீழ் உதட்டை கடித்திருந்தவன் விழி விழிய அப்படியே சிலை போல் சமைந்து விட்டான்…. நெற்றியில் அறைந்து கொண்டவன் அவசரமாய் தனது பாக்கெட்டில் இருந்து கைபேசியை எடுத்துப் பார்க்க அதுவும் அணைக்கப்பட்டு இருந்தது…



பின்பு வேந்தனை தள்ளிக் கொண்டு வேக வேகமாய் அறைக்குச் சென்றவன் கைபேசிக்கு சார்ஜினை போட்டுவிட்டு அதன் அருகிலேயே ஒரு வித பதற்றத்துடன் நின்று இருந்தான்…


அவன் பின்னே இடையில் டவலை கட்டியவாறு வந்த வேந்தன்,


" டேய் என்னடா ஆச்சு எங்க போனன்னு தெரியல??... இப்ப என்னடானா பேய் அறைஞ்ச மாதிரி இருக்க..?? அந்த மதி பேய் புடிச்சு விட்டாளா என்ன??.." என கேட்டதும் இடையில் கை ஊன்றி நின்றிருந்த தேவா இல்லை என தலையை மறுப்பாக அசைத்தவன் பின்னந்தலையை அழுந்த கோதியவாறு,


" பெரிய தப்பு பண்ணிட்டேன் மச்சான்" என்றதும் வேந்தனோ வாயை பிளந்து கொண்டு,


" என்ன மச்சான் மேட்டர்ரா??" என ஆர்வத்துடன் கேட்டிட… அவனை கடைக்கண்ணால் முறைத்தவன்,


" நீ இதுலையே இரு… கடைசி வரை உனக்கு மேட்டரே நடக்காது …நீ வேற ஏன்டா எரிச்சலை கெளப்பிக்கிட்டு" என சலிப்பாக கூறினான்…




அதைக் கேட்ட வேந்தன்,


" உனக்கு மேட்டர் ஆச்சா இல்லையா அது மட்டும் சொல்லு.. எனக்கு மேட்டர் ஆகாம போறதுக்கு நீ ஏன்டா சாபம் கொடுக்கிற"என பதிலுக்கு திட்டி விட்டான்…


கைபேசியை எடுத்து பார்க்க அதுவும் இன்னும் சார்ஜ் ஏறாது அணைத்த படியே இருந்தது…உச்சிக்கொட்டியவாறு நண்பனை பார்த்த தேவா,


" மதிக்கு விஷ் பண்ணவே இல்லடா" எனக் கூறியதும் அவனை நோக்கி வந்த வேந்தன்,


" என்னது திரும்ப சொல்லு…." என அவசரமாய் கேட்டான்…



" நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்… மதிக்கு பர்த்டே விஷ் பண்ணல டா…. இப்ப எப்படி‌ ரியாக்ட் பண்ணுவான்னு நினைச்சாலே…."



"பயமா‌ இருக்கா மச்சான்??"என கேட்டவனை மூக்கு விடைக்க முறைத்தவன்,



"பயம் லாம் இல்லை….நான் சமாளிச்சிப்பேன் " எனக கூறியவனது கூற்றில் துள்ளி குதிக்காத குறையாய் ஆட்டம் போட்டான் வேந்தன்…



"மச்சான்… தரமான சம்பவம் பண்ணி இருக்கப்போ..‌ நல்லா மதி வச்சு செய்யப் போற உன்னை" என கிண்டல் அடித்திட….கோபமான‌ தேவாவின் முதுகிலேயே தட்டி தட்டி சிரித்த வேந்தனை பட்டென அவனது பின்னந்தலையை பிடித்து மெத்தையில் சரித்த தேவா,


" நான் இங்க கடுப்புல பேசிட்டு இருக்கேன்…. உனக்கு என்ன இவ்வளவு ஜாலியா இருக்கா…?? உன்னால தாண்டா நான் விஷ் பண்ணல.. நான் அவகிட்ட போட்டு கொடுக்கவா??.." என்றதும் பட்டென எழுந்தவன்,


" புண்ணியமா போகும் உனக்கு…ஆளை விடுடா" என கூறியவன் தனது தலையை சரி செய்தவாறு இப்போது நண்பனை நன்றாக திரும்பிப் பார்த்து,


" மதிக்கும் விஷ் பண்ணலை அப்போ இவ்ளோ நேரம் எங்கடா போயிருந்த??" என இயல்பாக கேட்டான்…



தலை திருப்பி வேந்தனை பார்த்த தேவா,


" இனியா கால் பண்ணி இருந்தாடா" என நடந்ததை கூறினான்…. இதில் அவளுக்கு முத்தமிட்டது கட்டி அணைத்தது தவிர்த்து மற்ற அனைத்தையும் கூறியிருந்தான் தேவா….


அவனது விழிகளை பார்த்திருந்த வேந்தனுக்கு தேவாவின் கண்களில் தெரிந்த தடுமாற்றத்தை சரியாக கண்டு கொண்டவன்,


" இல்லையே வேற என்னமோ நடந்து இருக்கு போல" எனக் கூறியதும் சட்டென நிமிர்ந்து பார்த்த தேவா தலையை கோதியபடி பார்வையை வேறெங்கோ பார்த்து,


" வேற என்ன நடக்க போகுதுடா… பாவம் அவ சித்தி கூட இருந்தாவாவது அவளுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்… அவங்களும் வேலை வேலைன்னு போயிடறாங்க… தனியா ரொம்ப கஷ்டப்படுறா" என குரலில் இழுத்து வைத்த மென்மையுடன் கூறியவனை சந்தேக கண்ணுடன் பார்த்த வேந்தன்,


"என்னமோ சொல்ற உன் பார்வையும் சரியில்ல…. பேச்சும் சரியில்ல….இப்ப‌ எப்படி‌ இருக்கா‌ இனியா….உனக்கு கால்‌ பண்ணப்போ என்னை எழுப்பி விட்டு இருக்கலாம்ல…..நான்‌ போய்‌ இனியாவை பார்த்திருப்பேன்ல….
நீயும் மதிக்கு விஷ் பண்ணி இருந்துருக்கலாம்" என கூறிவிட்டு தேவாவை திருட்டு பார்வை பார்க்க அதில் தேவா பல்லை கடிப்பதை கண்டுக்கொண்டவனுக்கு நண்பனை கண்டு சிரிப்பாக வந்தது….இருந்தும் அதை வெளிக்காட்டி கொள்ளாது சாதாரணமாக இருப்பது போல் காட்டிக்கொண்டான்…..


வேந்தனின் கூற்றில் பல்லை கடித்த தேவா குரலை செறுமிக்கொண்டு,


"நீ…நீ‌..தூங்கிட்டு இருந்த…மச்சா…அதான் எதுக்கு உன்னை டிஸ்டர்ப் பண்ணனும்னு நானே…போய் வந்தேன்"


"என்னமோ சொல்ற…நல்லா இருந்தா சரி" எனக் கூறிவிட்டு சென்று விட்டான்…



வேந்தன் சென்ற பின்பு மூச்சை இழுத்து விட்டு தேவா முகத்தை இருக்கரங்களால் அழுந்த தேய்த்தவனுக்கு மதியிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது என தெரியவில்லை..‌பெருமூச்சு விட்டவன் சரி பார்த்துக் கொள்ளலாம் என்கிற முடிவுடன் குளிக்கச் சென்றான்…


கல்லூரிக்கு புது ஆடையை அணிந்தவாறு முகம் கொள்ள கடுப்புடன் நடந்து வந்தாள் மதி…. அவளது அழகில் மயங்கியவர்கள் தானாகவே வந்து அவளுக்கு வாழ்த்து கூறிட… அவர்களையெல்லாம் துச்சம் என பார்த்தவள் கண்டு கொள்ளாது வந்தாள்…



ஒரு சில பேரோ உண்மையாவே வாழ்த்து கூறிட அவர்களையும் அலட்சியப்படுத்தினாள் மதி…. தோழிகள் வாழ்த்து கூறியதற்கு மட்டும் வலுக்கட்டாயமாக சிரித்த மதி,


" தேவா எங்க??" என்ற கேள்வி தான் முதலில் கேட்டாள்… அதைக் கேட்டதும் அவளது தோழி உதட்டை சுழித்து,


"ம்க்கும்.. ஏன் விஷ் பண்றவங்களை பார்த்தா மனுஷங்களா‌ தெரியலையா?" என கடுப்பில் கேட்டுவிட… சலிப்பாக அவளை பார்த்த மதி,


" கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு…தேவா காலேஜ் வந்துட்டானா??.. இல்லையா??"



" ஹாஸ்டல்ல தானே இருக்கான்… வந்து இருப்பான்" எனக் கூறிட அவளுடன் வகுப்பறைக்கு நடந்து சென்றாள்‌‌ மதி…



தேவாவும் குளித்துவிட்டு தயாராகி உணவு உண்ண நேரமாகிவிட்டதால் அவசர அவசரமாய் சாப்பிட்டவனுக்கு இனியாவின் நினைவுதான் அவள் சாப்பிட்டாளா அல்லது என்ன செய்கிறாய் என தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணம் வரவும் வேந்தனை ஒரு பார்வை பார்க்க அவன் இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்….




வேகமாய் சாப்பிட்டு முடித்த தேவா முதலில் கை கழுவ சென்று வேந்தனையை ஒரு பார்வை பார்த்துவிட்டு கைபேசியில் இனியாவை அழைத்தான்.


அவளுக்கும் உடம்பு பரவாயில்லை‌ என்பதால் கல்லூரிக்கு தயாராகி கதவை பூட்டும் நேரம் அவளது கைபேசி அடித்தது…


எடுத்துப் பார்த்தாள் அதில் தேவன் என தெரிந்ததும் புன்னகையுடன் எடுத்துப் பேசினாள்,


" தேவன்…!" என்ற பிரத்தியேக அழைப்பில் என்றும் இல்லாமல் இன்று உற்சாகம் பீறிட்டது தேவாவிற்கு…



இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டவன் விழிகள் மூடி ஒரு கணம் அதனை உள்வாங்கிக் கொண்டான்… பின்பு மூச்சை இழுத்து விட்டு,


" காலேஜுக்கு கிளம்பிட்டியா இனியா??"



" எனக்கு‌ பரவால தேவன்….இப்பதான் கதவை லாக் பண்ணேன்… நீ கால் பண்ணிட்ட… கொஞ்ச நேரத்துல வந்துருவேன் தேவன்"



" சரி நீ சாப்டியா??' என்ன மென்மையாக கேட்டிடவும் அதில் முகம் சிவந்தவள்,


" சாப்பிட்டேன் மாத்திரையும் போட்டுட்டேன்… நீ சாப்டியா??"



" இப்பதான் சாப்பிட்டேன் வேந்தன் சாப்பிட்டுட்டு இருக்கான்" என வேந்தனை பார்த்து கூறினான் தேவா…



" சரி தேவன் நான் கொஞ்ச நேரத்துல காலேஜ் வந்துடுவேன் அங்க பார்க்கலாம்" என்றிட,


"சரி பார்த்து பத்திரமா வா" என அழைப்பை துண்டிக்கப் போனவன் ஒரு கணம் நிறுத்தி,


" இனியா…?" என்றவனிடம் அவளும் ,


"சொல்லு தேவன்" என்றாள்…இருவரிடையே ஒரு அமைதி நிலவியது சில கணம்…. பின்பு,


"ஒன்னும் இல்லை நீ வா" என்று மட்டும் கூறியவன் அழைப்பை துண்டித்து விட்டான்…



அச்சமயம் அங்கு வந்து வேந்தன் அவனையும் அவனது கைபேசியையும் மாறிமாறி பார்த்தவன்,


" என்னடா யார்கிட்ட பேசிட்டு இருந்த??" என கேட்கவும்,


" இல்லையே சும்மாதான் டைம் என்னன்னு பார்க்கலாம்னு போனை எடுத்தேன்" என்று கூறியவனை ஒரு மார்க்கமாய் பார்த்தவன் கை கழுவி விட்டு தனது கைக்குட்டையால் கையினை துடைத்தவாறு,


" சரி உன் போனை கொடு… நானும் டைம் என்னன்னு பாத்துக்கிறேன்" எனக் கையினை நீட்ட அதில் திடுக்கிட்ட தேவா,


" டைம் தானே பாக்கணும் பார்த்துக்கோ.." என தன் கரத்தில் கைபேசியை வைத்தவாறு காட்ட அதில் கடுப்பான வேந்தன்,


" என்னமோ பண்ற பார்த்துக்குறேன்" எனக் கூறிவிட்டு முன்னே நடந்தான்… அவனைத் தொடர்ந்து தேவாவும் சிறு புன்னகையுடன் சென்றான்…



அவர்கள் சென்ற நேரம் அனைவரும் வகுப்பறையில் இருந்தனர்….வழக்கம்போல யாரையும் நிமிர்ந்து பார்க்காது இனியாவின் இடத்தை ஒரு கணம் அழுத்தமாய் பார்த்துவிட்டு நிமிர மதி பல்லை கடித்தபடி மூச்சு வாங்க மேசையில் பார்வை பதித்திருந்தாள்…..



அவளை அவ்வாறு கண்டதும் தேவாவின் மூளை எச்சரிக்கை மணியை அடிக்க ஆரம்பித்தது..‌‌கண்களை இறுக மூடித்திறந்து அவனது இருக்கையில் சென்று நேரே அமர்ந்து விட்டான்….வேந்தனுக்கு நண்பனது செயல் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர தந்தது…..



வகுப்பறையே அவனை திரும்பி பார்த்திட அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்…அதில் கப்சிப் என திரும்பிக் கொண்டவர்கள் தான் அவன் பக்கமே தலையை திருப்பவே இல்லை.‌‌


வேந்தனுக்கு மதியை பேசியே சமாதானம் செய்து விடலாம் என தப்பு கணக்கு போட்டுக்கொண்டிருந்தான்..
 
Status
Not open for further replies.
Top