வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஏகலைவனின் ஏந்திழையாள் - கதை திரி

GG writers

Moderator
ஹாய் மக்களே...
ஏகலைவனின் ஏந்திழையாள் கதை நாளை முதல் வாரம் இரண்டு அல்லது மூன்று அத்தியாயம் பதிவிடப்படும்
 
ஏகலைவனின் ஏந்திழையாள்


அத்தியாயம் 1

இந்திய மக்கள் பலரும் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா துறை நட்சத்திரங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்துக் கொண்டிருந்தது.

ஒரு படம் திரையில் வெளி வந்து வெற்றி பெற பலரின் உழைப்பு தேவையானதாக இருந்தாலும் மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை முதலில் பிடிப்பது என்னவோ அப்படத்தின் கதாநாயகனும் நாயகியும் தான்.

அவர்களுக்கு அடுத்ததாக படத்தின் இசை அனைவரின் மனதையும் வயது வித்தியாசமின்றி வசியம் செய்து விடுகின்றது. முகம் தெரியவில்லை என்றாலும் குரலினால் பலரின் மனதை வெல்ல கூடிய திறமை இசைக்கு மட்டுமே உள்ளது.

இன்னும் சில வினாடிகளில் இளம் பாடகிக்கான விருது யாருக்கு என்று தொகுப்பாளர் கூறும் முன் அரங்கத்தில் இருந்த பலரும் ஒரே பெயரை உரக்க கூற, தொகுப்பாளரும் தான் கூற வந்த பெயரை கூற மறந்து புன்னகையுடன் நின்றுவிட்டார்.

"மான்சி... மான்சி..." என்று அரங்கமே அதிர ஆரம்பிக்க அதில் உணர்வு பெற்ற தொகுப்பாளர் "தி அவார்ட் கோஸ் டூ மான்சி ஏந்திழையாாள்..." என்று ஒலிவாங்கியில் (மைக்) அரங்கத்தை அதிர வைத்த பெயரையே அறிவிக்க இப்போது கை தட்டும் ஒலி காதை கிழித்தது.

இவ்வளவு ஆர்ப்பாட்டத்திலும் அப்பெயருக்கு உரியவள் முதல் முறை தேசிய அளவில் விருது வாங்குவதற்கான பதட்டம் சிறிதுமின்றி மௌன பதுமையாக எழுந்து, ரசிகர்களை நோக்கி கரம் குவித்து விட்டு மேடையை நோக்கிச் செல்ல, அவளிடம் சாதனைக்கான கர்வம் சற்றும் இல்லை.

"மான்சி ஏந்திழையாள்..." கல்லையும் கசிந்துருக செய்யும் தேன் குரலுக்கு சொந்தமானவள். வயது என்னவோ இருபத்தி மூன்று தான். ஆனால் அவளின் சாதனைகளின் எண்ணிக்கை அவள் வயதை விட பல மடங்கு அதிகம்.

பார்த்த உடன் தமிழ் நாட்டுப் பெண் என்று கூறும் படி காஞ்சிப் பட்டு அவள் மெல்லிய உடலை பாந்தமாக தழுவி இருந்தது. மீன் விழிகள் அங்கும் இங்கும் அலைபாய, அவள் விழிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு காதில் இருந்த ஜிமிக்கியும் அசைந்தாடியது.

எட்டு வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாட ஆரம்பித்த போது தொடங்கியது அவள் இசை பயணம். சில வருடங்கள் தடைகளை சந்தித்த போதும் அவளின் குரல் தடைகளை தாண்டி விண் நோக்கி அவளை சிறகடிக்க செய்தது.

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் விருதினை வழங்க அதை புன்னகையுடன் பெற்றுக் கொண்ட மான்சி திரும்ப, தொகுப்பாளரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.

"ஹாய் மான்சி மேம்... நீங்க பாடினா தேன் மாதிரி இனிக்கிற உங்க குரல், பேசினா எப்படி இருக்கும்ன்னு ரசிகர்களோட சேர்த்து எனக்கும் கேட்க ஆசை. சோ எங்களுக்காக இரண்டு வரி பேசணும்." என்று ஆங்கிலத்தில் கூற, அரங்கத்தின் மொத்த விளக்குகளும் மான்சியை நோக்கி திரும்ப அவளிடம் சிறு தடுமாற்றம்.

உள்ளுக்குள் தோன்றிய சிறு நடுக்கத்தை மறைத்துக் கொண்டு மான்சி புன்னகைக்க அவளிடம் ஒலிவாங்கி நீட்டப்பட்டது.

"ஹாய் எவ்ரி ஒன்... எனக்கு இந்த வெற்றி கிடைக்கிறதுக்கு ரசிகர்கள் உங்க ஆதரவு மட்டும் காரணம். தேங்க் யூ சோ மச்." என்று கூறி விட்டு தனது பேச்சை முடிக்க நினைக்க,

"மான்சி மேம் உங்களுக்கு பிடிச்ச விஷயம் எதாவது மூணு சொல்லுங்க." என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

"என் கூடவே எல்லா நேரமும் இருக்கிற என் அம்மா, அப்பா அப்புறம் பாட்டு. இதை தவிர வேற எதுவும் எனக்கு பிடிக்காது. இந்த மூணும் இல்லாம என்னால மூச்சு கூட விட முடியாதுன்னு சொல்லலாம்." என்ற பதில் அவள் மனதிலிருந்தே வந்தது.

"உங்க கல்யாணம் எப்போ?" என்று பிரபலங்களிடம் கேட்கப்படும் வழக்கமான கேள்வி வந்து விழுந்தது.

"அம்மா முடிவு பண்ணும் போது..." என்று நொடியும் தாமதிக்காமல் பதில் வந்து விழுந்தது. வினாடி தாமதித்தாலும் அடுத்த கேள்வி வந்துவிட கூடும் என்பதால் மான்சி வேகமாக தனது இருக்கையை நோக்கி நடையிட்டாள்.

மகளின் நடையில் இருந்த பதட்டத்தையும் தடுமாற்றத்தையும் கண்டுக் கொண்ட வெண்பா விரைந்துச் சென்று வாழ்த்து கூறுவது போல அணைத்துக் கொண்டார்.

"ம்மா... பயமா இருக்கு. நாம சீக்கிரம் இங்க இருந்து போயிடலாம்." என்று நடுங்கும் குரலில் கூற, மகளின் முதுகை தடவி கொடுத்த படி இருக்கைக்கு அழைத்து வந்தார்.

"மான்சி ரிலாக்ஸ். இது உனக்கான நாள் மட்டும் இல்ல எனக்கானதும் கூட. என்னோட இருபது வருச தவத்துக்கான பலன் கிடைக்கும் போது அத உன் அர்த்தமில்லாத பயத்தால தடுக்காத. அம்மா உன் கூடவே தான் இருக்கேன் எதுக்கும் பயப்படாத ஓகே. ஸ்டே ஸ்ட்ராங் மை ஏந்திழையாள்." என்று புன்னகை முகமாக கண்டித்து பின் ஆறுதல் கூற, தாயின் வார்த்தையில் மான்சி தன் மன உணர்வுகளை மறைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

விளக்கின் வெளிச்சத்தில் அமர்ந்திருந்த மான்சி விழா முடிந்து வெளியேறும் வரை கூட பயம் விலகவில்லை. தனது பயத்தை மற்றவர்களுக்கு காட்டி விட கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தவள் சுற்றி நடக்கும் எதையும் கவனிக்க தவறினாள்.

தான் ஒருவனின் கண்காணிப்பில் உள்ளோம் என்பது கூட பாவையின் கருத்தில் பதியவில்லை. வேட்டையாட தயாராக இருக்கும் வேங்கையின் கண்ணில் சிக்கிய புள்ளிமான் போலவே மான்சி அவன் கண்களுக்கு தெரிந்தாள்.

நிகழ்ச்சிக்கு மான்சி வந்தது தொடங்கி இப்போது வரை அவள் ஒவ்வொரு அசைவையும் நேரலையாக தனது கணினி திரையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் விஜித் ஏகலைவன்.

மகாபாரதத்தில் வரும் ஏகலைவன் குறியை தன் ஒரே அம்பால் வீழ்த்துவதில் சிறந்தவன் என்றால் இந்த விஜித் ஏகலைவனோ எதிரிகளை ஒரே வியூகத்தில் வீழ்த்துவதில் தலை சிறந்தவன்.

தன் மூதாதையர்கள் கோடிகளில் சேர்த்து வைத்த சொத்துக்களை பல மடங்கு பெருக்கி, அதன் மூலம் அவன் கால் ஊன்றாத துறையே இல்லை எனலாம். பணம் சம்பாதிக்க விஜித் தேர்ந்தெடுத்ததில் சினிமா துறையும் ஒன்று தான்.

நேரடியாக சினிமா துறையில் எதையும் செய்வதில்லை என்றாலும் பட பிடிப்பில் தொடங்கி அது வெளியீட்டு விழா வரை அவனின் அனுமதியின்றி எதுவும் அசையாது என்னும் அளவில் அத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.

தான் விடும் மூச்சுக் காற்று கூட பணமாக மாற்று வித்தையை நன்கு கற்று தெரிந்தவன். ஒன்றை பத்தாக மாற்றும் இடத்தில் மட்டும் பணத்தை செலவு செய்து பழகியவன், இன்று பல கோடி செலவு செய்து இந்த விருது நிகழ்ச்சியை நடத்த ஒரே காரணம் மான்சி ஏந்திழையாள் மட்டுமே.

மான்சியை அவள் இருக்கும் இடத்திலிருந்தே தூக்கியிருக்க அவனால் முடியும். ஆனாலும் அப்படி செய்யாமல் அவளை தன் இடத்திற்கு வரவழைக்க நினைத்தான். அதற்காகவே அவளுக்காகவே இந்த விழா.

மான்சியின் முகத்தை மட்டுமே திரையில் பார்த்துக் கொண்டிருந்த விஜித் தனது கைப்பேசியை எடுத்து "அவார்ட் பங்ஷன் முடிஞ்சதும் மான்சி ஏந்திழையாள் என் சீக்ரெட் கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கணும்." என்று கூறி விட்டு வைக்க, மான்சி முகத்தை திரையில் பார்த்ததும் அவன் விழிகளில் பளபளப்பு கூடியது.

"பாவம் புள்ளி மான் குட்டி இந்த சிங்கத்தோட குகைக்குள்ள வந்து சிக்கிடிச்சே..." என்று பரிதாபப்படுபவன் போல பேசினாலும் வார்த்தையில் வன்மம் மட்டுமே கொட்டி கிடந்தது.

அவன் முகம் பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும் அதில் இருக்கும் கடினத்தின் அளவை அவனை தவிர யாரும் அறிய முடியாது. சிரித்துக் கொண்டே எதிரிகளை சிதறடிக்க கூடியவனாயிற்றே.

நிகழ்ச்சி முடிந்த பின் நட்சத்திர பிரபலங்கள் அனைவரும் சிறப்பு வழியில் வெளியேற்றப்பட, வெண்பா தனது மகளுக்காக காத்திருந்தார். நிமிடங்கள் பல கரைந்த பின்னும் மகள் வராததில் பதட்டமானார். நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் மீண்டும் செல்ல மான்சி சென்ற தடம் தெரியவில்லை.

ஏகலைவனின் ஆட்கள் மான்சியை நெருங்குவதற்கு முன்பே வேறு யாரோ அவளை கடத்தியிருந்தனர். இதை அவன் ஆட்கள் அவனிடம் தெரிவிக்க

"நம்ம வேலை மிச்சம். எங்க போறாங்கன்னு வாட்ச் பண்ணுங்க." என்று கட்டளையிட்டான்.

யாரிடம் கேட்டாலும் மான்சி பற்றிய தகவல் சரியாக கிடைக்கவில்லை. நேரம் செல்ல செல்ல பயத்தில் நடுங்க ஆரம்பித்த வெண்பா தன் கணவன் திலகனுக்கு அழைத்து விசயத்தை கூற, அடுத்ததாக அவர் கூறியதின் பாதகங்கள் புரிந்தாலும் மகளுக்காக செய்ய ஆரம்பித்தார்.

மகளின் பாதுகாப்பிற்கு முன் வரக்கூடிய பின் விளைவுகள் எதுவும் அந்த தாய் தந்தைக்கு பெரிதாக தெரியவில்லை. காவல்துறையில் புகார் அளிப்பதன் மூலம் மான்சி காணாமல் போனது வெளியே தெரிந்தால் அவதூறு செய்திகள் பரவ கூடும் என்றாலும் தற்போது மகளின் நலம் மட்டுமே அவர்களுக்கு முக்கியமானது.

திலகன் நேரத்தை கடத்த விரும்பாது தனது காவல்துறை நண்பனை அழைத்து விசயத்தை கூற அடுத்த நொடி விசாரணை ஆரம்பமானது. நடப்பதை அறிந்த விஜித் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

"அவங்க என்ன செய்யணுமோ செய்யட்டும். யாரும் அவங்கள தடுக்க வேண்டாம்." என்று மட்டும் கூறி விட்டு அலைப்பேசியை வைத்து விட்டான்.

"பரவாயில்ல மானம் மரியாதைன்னு யோசிக்காம உன் அப்பா அம்மா உன்ன பத்தி யோசிக்கிறாங்க. அவ்வளவு பாசம்." என்று இகழ்ச்சியாக கூற, இது எதையும் உணர முடியாது வகையில் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் வெண்பா திலகனின் செல்ல மகள்.

குடும்பத்தினரிடம் கூட காட்டாமல் பொத்தி பொத்தி வளர்த்த மகள் காணாமல் போனதில் கலங்கி நின்ற இருவரும் வழி தெரியா காட்டில் தனித்து நிற்பது போல தவித்து நின்றனர்.

தவம் போல் வளர்த்த மகளின் நிலையறியாது தவித்தவர்களுக்கு கவலை கொள்ள கூட நேரமில்லாது காவல்துறையும்,ஊடகங்களும் சூழ்ந்துக் கொண்டனர். அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் சமயம் மகளை தேடும் பணியும் இருக்க அதில் மனதின் கவலையை மனதோடு புதைத்துக் கொண்டனர்.

மறந்து விட்ட சொந்தங்கள் இனி தொடர்கதையாக தொடர போவதையும் அதனால் தங்கள் வாழ்க்கை மாற போவதையும் யார் அவர்களிடம் கூறுவது.

பொழுது விடிவதற்கு முன் மான்சி கடத்தப்பட்ட செய்தி காற்றை விட வேகமாக ஊடகங்கள் பரப்ப, செய்தியுடன் வதந்திகளும் சேர்ந்தே பரவியது.

"அந்த வெண்பா நம்ம கிட்ட அடங்காம ஆடுனா. அதான் கடவுள் அவ பொண்ணு மூலமா கூலி கொடுத்துட்டாரு. இந்நேரம் எவன் கூட ஓடி போயிருக்காளோ." என்று உறவுகளே மான்சியை பற்றி முழுதும் தெரியாத போது அவள் ஒழுக்கத்தை களங்கப்படுத்தி பேசிக் கொண்டிருந்தனர்.

இப்படி அனைவரின் சிந்தனையையும் நிறைத்த மான்சி சிந்திக்கும் நிலையில் இல்லாது இருட்டில் மூழ்கியிருந்த பாழடைந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாள்.


ஹாய் மக்களே...
ஏகலைவனின் ஏந்திழையாள் கதை எப்பி செவ்வாய், வியாழன், சனி மூன்று நாட்கள் வரும். கதை முழுவதும் கேட்க நினைக்கிறவங்க யூட்டியூப்ல இருக்கு.



கருத்து திரி
 
Last edited:
அத்தியாயம் 2

மான்சி ஏந்திழையாள்.

அவளை பற்றிய எண்ணம் தோன்றும் போதே இலவச இணைப்பாக ஏதேதோ எண்ணங்கள் தோன்றி விஜித் ஏகலைவனிடம் வன்மம் பல நூறு மடங்கு அதிகரித்தது. அவன் எண்ணத்தின் நாயகியே யாரிடமிருந்து ஓடுகின்றோம் என்று தெரியாமல் இருட்டில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தாள்.

பலத்த பாதுகாப்பிற்கு நடுவே இருக்கும் தனது சாம்ராஜ்யத்திலிருந்து ஒரு சிறு பெண் எளிதாக இன்னொருவன் கடத்தியதையே அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதுவும் தான் இருக்கும் போது தன்னிடத்தில் இருந்து எப்படி அவளால் தப்பிக்க முடிந்தது என்னும் கேள்வி அவனை வண்டாக குடைய ஆரம்பித்தது.

தன் பெயர் எந்த வகையிலும் வெளி வராத வகையில் திட்டமிட்டு அனைத்தையும் செய்து முடித்திருக்க, அவனிடத்திலிருந்தே இன்னொருவர் மான்சியை கடத்தியிருந்தனர்.

பாழடைந்த கட்டிடத்தில் அவளை அடைத்து வைத்திருக்க, அங்கிருந்து தன் ஆட்கள் மூலம் அவளை தன்னிடத்திற்கு கொண்டு வந்துவிட்டான்.

இப்படி விஜித் ஏகலைவனின் ஆட்களால் கடத்தப்பட்ட மான்சி ஏந்திழையாள் வெளி உலகிற்கு தெரியாமல் அவனது ரகசிய விருந்தினர் மாளிகைக்கு கொண்டு வரப்பட்டது வரை அவன் திட்டம் சரியாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது.

ஆனால் மாளிகையிலிருந்து அவள் எப்படி வெளியேறினாள் என்று தான் யாருக்கும் தெரியவில்லை. நள்ளிரவில் மை இருட்டில் அடர்ந்த காட்டின் நடுவே பெண்ணவள் தனியாக சென்றிருக்க முடியாது என்று உறுதியாக நம்பியவன் யார் அவளுக்கு உதவியிருக்க கூடும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

ஆறு மணி நேரம் கடந்த பின்னும் மான்சி தன் வீட்டிற்கு வந்து சேரவில்லை என்பதிலே அவள் இன்னும் காட்டை சுற்றியிருக்கும் தன் ஆட்களை கடந்துச் செல்லவில்லை என்பது புரிந்தது.

எப்படியும் அவள் இந்த காட்டிற்குள் தான் இருப்பாள் என்று தன் ஆட்களை அனுப்பி விட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினான்.

ஒரு மணி நேரம் கடந்த பின்னும் மான்சி இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. மேலும் காத்திருக்கும் பொறுமையின்றி அவனே நேரில் சென்றான் மான்சியை தேடுவதற்கு.

தன் ஆட்கள் சென்ற இடங்களை தவிர்த்து பிற இடங்களில் அவனும் தேட, அப்போதைக்கு அதிஷ்டம் அவன் வசம் தான் போல. விஜித் தேட ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே அந்த சிங்கத்தின் இரை அதன் கண்களில் சிக்கியது.

மயக்கம் தெளிந்து எழுந்த மான்சிக்கு தான் கடத்தப்பட்டிருக்கின்றோம் என்பது தெளிவாக புரிந்தது. வெளியே கேட்கும் பேச்சு குரலிலே பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்க கூடும் என்று உணர்த்தியது. கத்தி அழுவதோ, சண்டையிடுவதோ சரியாக இருக்காது என்பதால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.

அதே நேரம் முக்கியமான தொலைப்பேசி அழைப்பை தவிர்க்க முடியாது தனது அறைக்குச் சென்ற விஜித் சீக்கிரம் வர முடியாது அவன் அலுவலக அறைக்குள்ளே இருக்க வேண்டியதாகிற்று.

மான்சி புத்திசாலி தான். பெற்றவர்களுக்கு சுட்டிப் பெண்ணாக இருந்தாலும், வெளி உலகை தனியாக சந்திக்காத பயந்த சுபாவம் உடையவளுக்கு நிலமையை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை.

"ம்மா பயமா இருக்கு. சீக்கிரம் வா ம்மா." என்று மான்சி மனதுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே மின் விளக்குகள் அனைத்தும் அணைந்தது.

"என்னடா இது பாஸ் இருக்கிற நேரத்தில கரண்ட் போயிட்டு. அவர் வந்து திட்ட ஆரம்பிக்கிறதுக்குள்ள யாராவது எமெர்ஜென்சி லைட்ட எடுத்துட்டு வாங்க." என்று முரட்டு குரல் கேட்க, ஆட்கள் அங்கும் இங்கும் நடக்கும் சப்தம் கேட்டது.

தைரியமானவர்களையும் அச்சம் கொள்ள செய்யும் இருள் மான்சிக்கு மட்டும் மன திடத்தை கொடுத்தது. "ம்மா இந்த இருட்டு எனக்கு நீ என் கூடவே இருக்கிற தைரியத்த கொடுக்குது." என்று தனக்கு தானே பேசிக் கொண்டு பதுங்கி பதுங்கி மாளிகையை விட்டு வெளியேறினாள்.

"சினிமால பாட்டு பாடுற அந்த குட்டி ரெம்ப ஜோரா இருக்கிறா. சும்மா தொட்டு பார்த்ததுக்கே ஜிவ்ன்னு இருக்கு. மொத்தமா ஒரு தடவை பார்த்துட்டா போதும்." என்று மதில் சுவருக்கு அருகே காவல் இருந்தவன் தன் உடன் இருப்பவனிடம் கூற, அதை கேட்டுக் கொண்டிருந்த மான்சியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

தான் மயக்கத்தில் இருக்கும் போது தன் உடலை எங்கெல்லாம் இவர்கள் தொட்டிருக்க கூடும் என்று நினைக்க நினைக்க உடல் முழுவதும் அவமானத்திலும் ஆத்திரத்திலும் பற்றி எரிய ஆரம்பித்தது.

மாளிகைக்குள் கேட்ட ஆரவாரத்தில் இருவரும் உள்ளேச் செல்லும் அவசரத்தில் கதவை பூட்டாமல் காவல் காத்தவர்கள் இருவரும் செல்ல அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மான்சி தப்பி ஓடினாள்.

விஜித் தன் அறையில் இருள் பரவியதும் நேராக ஓடிச் சென்றது மான்சி இருக்கும் இடத்திற்கு தான். அவள் இருந்த இடம் காலியாக அடுத்த நொடி மாளிகை பரபரப்பானது.

காவலர்கள் மீது நம்பிக்கையின்றி மான்சியை தேடிக் கொண்டு வந்தவன் கண்களில் சிக்கிக் கொண்டாள் தூரத்தில் நடந்து வரும் மான் விழிகளின் சொந்தக்காரி. அவள் அணிந்திருந்த வெண்பட்டு இருளிலும் அவளை தனித்து காட்டியது.
வெகு நேரம் எந்த பக்கம் செல்வது என்று தடுமாறிய மான்சி மனதிற்கு சரி என்று தோன்றிய திசையில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். கால்களை பதம் பார்க்கும் முட்களோ, கூரிய கற்களோ அவள் கவனத்தில் இல்லை. எப்படியாவது தாயிடம் சென்று விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.

காட்டிற்குள்ளே சில மணி நேரங்களாக நடந்தவள் அதிஷ்டவசமாக தார் சாலையை கண்டுக் கொண்டாள். சந்தோஷத்தில் புன்னகைத்தவள் எந்த புறம் செல்லலாம் என்று யோசித்து இரு பக்கமும் பார்த்து விட்டு இடபுறம் நோக்கிச் செல்லும் சாலையில் தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி ஓட ஆரம்பித்தாள்.

மான்சி தார் சாலையை அடைவதற்கும் விஜித் கார் அவளை நெருங்கி வருவதற்கும் சரியாக இருந்தது. திடீர் என்று தோன்றிய கார் விளக்கின் ஔியில் இருட்ட ஆரம்பித்த கண்களை திறக்க முடியாத மான்சி இரு கைகளையும் உயர்த்தி உதவி கேட்க, அவள் அருகில் கார் நின்றது.

தன்னை தாக்க வரும் வேடனிடமே உயிரை காக்க உதவி கேட்டது மான் குட்டி. விஜித் ஏகலைவன் காரின் கதவை திறந்துக் கொண்டு கீழே இறங்க, அவனிடம் வந்த மான்சி

"சார் ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. என்னை யாரோ கடத்திட்டு வந்திருக்கிறாங்க. அவங்க வர முன்னாடி என்ன பக்கத்தில இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுடுங்க ப்ளீஸ்." என்று உதவிக்காக கெஞ்ச ஆரம்பித்தாள்.

"ம்ம்..." என்று மட்டும் கூறி காரில் ஏறிக்கொள்ள அனுமதி அளித்தான்.

விஜித் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்ததும் அவன் விழிகள் மான்சியை ஒரு முறை தொட்டு மீண்டது.
குரலை செருமி தன்னை சமாளித்துக் கொண்டவன் "அஜெஸ்ட் யுவர் செல்ஃப்." என்று கூறி விட்டு இறங்கிக் கொள்ள, அதன் பிறகே மான்சி தான் இருக்கும் நிலை உணர்ந்தாள்.

கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் காட்டிற்குள்ளே ஓடிக் கொண்டிருந்தவளின் வெண்பட்டு ஆங்காங்கு கிழிந்திருந்தது. மேலும் ஒற்றையாக விடப்பட்டிருந்த முந்தானை கீழே இறங்கி அவளது இளமையை வஞ்சகமின்றி காட்டிக் கொண்டிருந்தது.

அந்நிய ஆணின் முன் இப்படியான தன் நிலையை நினைத்து வருந்தியவள் முடிந்தளவு தன்னை திருத்திக் கொண்டாள். இடது பக்க கை சட்டை கிழிந்திருக்க முந்தானையால் மூடிக் கொண்டாள்.

கார் கண்ணாடியை இரு முறை தட்டி விட்டு உள்ளே வந்தவன் தண்ணீர் பாட்டிலை நீட்ட "வேண்டாம்" என்று மறுத்து விட்டாள்.

"ஏன்?" என்று கேட்டவனுக்கு

"வேண்டாமே." என்ற கெஞ்சலான பதில் மட்டுமே வந்தது. கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் பட்டினியாக இருந்த போதும் யாரென்று தெரியாதவரிடம் நீர் வாங்கி பருக பயம் கொண்ட மனது இடமளிக்கவில்லை.

அதற்கு மேலும் அவளிடம் இறங்கிச் செல்ல மனமின்றி பாட்டிலை பின்புற இருக்கையில் போட்டு விட்டு வண்டியை தனது மாளிகை இருக்கும் வழியில் திருப்பினான்.

பதட்டத்தில் இருந்த மான்சியும் செல்லும் வழியை கவனிக்கவில்லை. தன்னிடம் கண்ணியமாக நடந்துக் கொண்டவனிடம்

"உங்கள யார் கடத்தினாங்க? எப்படி தப்பிச்சீங்க?" என்று தனக்கு தேவையான பதில் கிடைக்க கேள்விகளை அடுக்க ஆரம்பித்தான்.

மான்சி பயத்திலும் பதட்டத்திலும் அவன் விசாரணை தொனியில் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற நேரமாக இருந்தால் எதற்காக? என்ற கேள்வியை மட்டுமாவது கேட்டிருப்பாள்.

மான்சி உடன் யாரும் இல்லை. பின் யார் உதவியால் இல்லை எப்படி தப்பினாள் என்று அவனுக்கு தெரிய வேண்டியது இருந்தது. மான்சியும் நடந்ததை ஒன்று விடாமல் கூறி முடிக்க, தனது காவலர்களின் கவனக்குறைவில் ஸ்டேரிங் வீலை பற்றியிருந்த அவனது கரத்தில் அழுத்தம் கூடியது.

"கதவு லாக் பண்ணாம இருந்ததால வெளி வந்துட்டீங்க. பட் தனியா இருட்டில எப்படி இவ்வளவு தூரம் வர முடிஞ்சது." என்று விஜித் கேட்டுக் கொண்டே தனது காரின் திரையை காட்ட மணி நான்கு ஐம்பத்தி எட்டு என்று காட்டியது.

அதிகாலை வேளையிலும் ஓங்கி உயர்ந்த மரங்களை தாண்டி சூரிய கதிர்கள் உள்ளே வர முடியாது அந்த இடமே இரவு போலத்தான் இருந்தது.

"சார்... மான்சிய முதலில் கடத்தின கும்பல பிடிச்சிட்டாங்க. இப்போ போலீஸ் நம்ம இடத்துக்கு பக்கத்தில வந்துட்டாங்க." என்று விஜித் அலைப்பேசிக்கு ரவி எண்ணில் இருந்து தகவல் வந்து சேர்ந்தது.

விஜித் கேள்விக்கு பதிலளிக்க தயங்கிய மான்சி வாயை திறப்பதற்கு முன் அவர்கள் காருக்கு எதிரே இன்னும் இரு கார்கள் நெருங்கி வந்துக் கொண்டிருந்தது.

எதிரே வருவது போலீஸ் வாகனம் என்பதை கண்டுக் கொண்ட விஜித் திட்டத்தின் முதல் தோல்வியில் ஏற்பட்ட கோபத்தில் அருகில் இருப்பவளை பார்க்க அவளோ கண்களை மூடிக்கொண்டு இருந்தாள்.

இனி தான் காரை திருப்பி கொண்டுச் சென்றால் தன் மீதும் சந்தேகம் ஏற்படும் என்பதால் விஜித் தனது காரின் வேகத்தை குறைத்துக் கொண்டான். காரில் இருந்து இறங்கும் முன் என்ன பேச வேண்டும் என்று அவன் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டான்.

ஆனால் அதற்கு அவசியம் இல்லாதது போல கடத்தியவர்களிடமிருந்து மான்சி தப்பி வந்த போது தனக்கு இவர் தான் உதவினார் என்று கூற, காவலர்கள் மான்சியை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.

மான்சி காவலர்களுடன் புறப்பட்டதும் விஜித் தனது இடத்திற்கு வந்ததும் அனைத்து காவலர்களையும் தன் முன் வர கட்டளையிட்டான்.

இரு விரல் கொண்டு கையில் இருந்த கத்தியின் கூர்மையை பரிசோதித்த விஜித் தன் முன் நின்ற அனைவரையும் அழுத்தமாக பார்க்க, அவன் அம்பு போன்ற கூரிய பார்வையை எதிர்கொள்ள முடியாது தலை குனிந்து நின்றனர்.

"எப்படி?" என்று ஒற்றை வார்த்தையில் அவன் கேள்வி எழுப்ப, அதற்கு விடை தெரிந்தாலும் அதை வாய் திறந்து கூறும் தைரியம் தான் யாரிடமும் இல்லை.

தன் கேள்விக்கு பதில் வராததில் எழுந்து நின்றவன் அனைவரையும் பொதுவாக பார்த்து விட்டு "கோ?" என்று கூற, அதன் அர்த்தம் உணர்ந்த காவலர்கள் அனைவரும் பதறி விட்டனர்.

"சார்... வேண்டாம் சார்... தெரியாம தப்பு நடந்திட்டு. எப்படியாவது அந்த மான்சிய திரும்ப கொண்டு வந்திடுவோம்." என்று காலை பிடித்து மன்றாட, விஜித்தோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

தனது உதவியாளன் ரவியை பார்த்து செய்ய வேண்டியதை பார்வையால் கட்டளையிட்டு விட்டு தனது அறைக்கு வந்தான். அடிப்பட்ட வேங்கையாக சீறிக் கொண்டிருந்தவன் எண்ணம் முழுவதும் அந்த ஒருத்தியின் மீது மட்டுமே.

மீண்டும் மீண்டும் மான்சியை பற்றி யோசித்துக் கொண்டிருந்தவன் "ரவி..." என்று கத்த அடுத்த நிமிடம் ரவி அவன் முன் நின்றான்.

"இவ்வளவு சீக்கிரம் போலீஸ் எப்படி இந்த காட்டுக்குள்ள வந்தாங்கன்னு எனக்கு தெரியணும். அண்ட் மான்சி மெடிக்கல் ஹிஸ்டரி அண்ட் ரிப்போர்ட் வித் இன் ஒன் டேல எனக்கு கிடைக்கணும்." என்று கூற, புரியாத பாவனை ரவியிடம்.

"போலீஸ் பத்தி கேட்டது ஓகே. பட் மெடிக்கல் ரிப்போர்ட்???" என்று கேள்வியை சற்று பயத்துடனே கேட்டான்.

"இஃப் ஐ எம் ரைட் மான்சிக்கு எதோ மெடிக்கல் இஷ்யூஸ் இருக்கு. அது என்னன்னு எனக்கு தெரிஞ்சாங்கணும்." என்று கூற, ரவி அதை பற்றி விசாரிக்க புறப்பட்டான்.

"இன்னைக்கு நீ என் கிட்ட இருந்து தப்பிச்சிருக்கலாம். பட் கூடிய சீக்கிரம் தப்பிக்க முடியாத படி நீயா வந்து மாட்டிக்க தான் போற." என்று அடிப்பட்ட வேங்கை போல உறுமலாக கூறியவன் அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான்.

அதே நேரம் மகள் நலத்துடன் வந்துவிட்டதை உறுதி செய்துக் கொண்ட வெண்பா "உனக்கு இருக்கிற பிரச்சனை யாருக்கும் தெரியல தானே?" என்று கேட்க,

"நோ ம்மா. யாருக்கும் தெரியாது." என்று கூற, தாய் மகள இருவருக்கும் ஒரு வித நிம்மதி. விரைவில் அதை பறிக்க ஒருவன் வர போவதை அப்போது இருவரும் அறிந்திருக்கவில்லை.




கதையை ஆடியோ வடிவில் கேட்க லிங்க் கீழே கொடுத்திருக்கேன்
 
Last edited:
ஹாய் மக்களே...
கதை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்.
 
அத்தியாயம் 3 (அ)

"திலகன் நடந்ததை எல்லாம் சரியான விதத்தில யோசிச்சா மான்சிய மும்பைல வச்சு கடத்தினதும், அவள் தப்பிச்சு வந்ததும் வேற வேற ஆளா தான் இருக்கணும். விசாரணையில கிடைச்ச விபரம் எல்லாம் முதலில் அவளை கடத்தினவங்க பக்கம் மட்டும் நம்மள திசை திருப்புற மாதிரி இருக்கு. குறிப்பா மான்சிக்கு உதவி செய்தவர் பத்தி எந்த தகவலும் கிடைக்கல. எதுக்கும் நீ மான்சிகிட்ட அவரை பத்தி கேளு." என்று கூறி விட்டுச் சென்றார் திலகனின் ஏசிபி நண்பன் சரவணன்.

உறங்கும் மகளின் அறையை திலகன் எட்டி பார்க்க, அவள் அருகில் அமர்ந்திருந்த வெண்பா கணவனை பார்த்ததும் வெளியே வந்தார்.

"சரவணன் அண்ணா என்ன சொன்னாங்க?" என்று வெண்பா கேட்க, நண்பன் கூறி விட்டுச் சென்றதை மனைவியிடம் தெரிவித்தார்.

"எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு. ஆனாலும் நாம ரொம்ப இதுல இறங்கி விசாரணை செய்ய ஆரம்பிச்சா நம்ம பொண்ண பத்தியும் சொல்ல வேண்டியது வரும்." என்று கவலை கொள்ள,

"பாத்துக்கலாம் விடு. அப்புறம் அம்மா போன் பண்ணிருந்தாங்க." என்று கூறவும் வெண்பா வேகமாக எழுந்துக் கொண்டார்.

தன் மாமியார் கணவனிடம் என்ன பேசியிருக்க கூடும் என்று அனுமானிக்க முடிந்தது. நிச்சயம் மனதை கஷ்டம் கொள்ள வைக்கும் வகையில் தான் அவர் அழைப்பு இருக்கும் என்பதால் அதை கேட்டு மனதை புண்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

மனைவியில் பிடித்தமின்மையை முகத்தில் பார்த்த திலகனும் தாயை பற்றிய பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டார். எப்போது தான் அன்னை தங்களை புரிந்துக் கொள்வாரோ என்று பெருமூச்சு விட மட்டுமே அவரால் முடிந்தது.

இருபது வருடங்கள் கழிந்த பின்னும் காரணமின்றி மகள் மீதும் மனைவி மீதும் வன்மத்தை கக்குபவரை என்னவென்று சொல்ல.

அறைக்கு வந்த வெண்பாவிற்கு மாமியாரை பற்றிய பேச்சு ஆரம்பித்ததும் மகள் தனது மணி வயிற்றில் உருவான நாள் தொடங்கி அனைத்தும் நினைவு வந்தது.

தாய்மை வரமாக இருந்தாலும் அந்த பயணத்தின் பாதை சில சாபங்களை தரவும் மறப்பதில்லை. அது வெண்பா விசயத்திலும் உண்மையாகியது.

"திலகா உன் பொண்டாட்டிய அக்கா ரெண்டு பேருக்கும் போன போட்டு மாசமா இருக்கிறத சொல்ல சொல்லு." என்று மாமியார் கூற, அதையே அன்று திலகனும் வழி மொழிந்தார்.

'நான் சொன்னா தான் அது அவங்க பொண்ணுங்க காதுல விழுமோ. ஒரு நாளுக்கு பத்து தடவை மகளுக்கு பேசுற நீங்களே சொல்ல வேண்டியது தானே.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியே சொல்லும் துணிவு தான் இல்லை.

(வில்லங்கத்த விலை கொடுத்து வாங்கிட்டு அதுக்கு விளக்கம் வேற கொடுக்கணும். அதுக்கு அமைதியா இருக்கிற இடம் தெரியாம இருந்திட்டு போயிடணும்) என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

'இன்னைக்கு ஆஸ்பத்திரி போறத பெரியவளுக்கும் சின்னவளுக்கும் சொல்லிடு.
டாக்டர் என்ன சொன்னாங்கன்னு சின்னவ கேட்டா அவ கிட்ட பேசு.

பெரியவ உனக்கு ஆம்பிள பிள்ள பிறக்கணும்ன்னு டூர் போன இடத்தில ஒரு கோவில்ல வேண்டுதல் வைச்சிருக்கிறா. அவ ஆசை படி ஆம்பிளை பிள்ளைய பெத்து கொடு.
நல்லா வேலை செய்யணும்னு சின்னவ சொன்னா. அதனால எங்க துணியையும் சேர்த்து கையில துவைச்சு போடு.

பிறக்க போற பிள்ளை மேல எவ்வளவு பாசம் தெரியுமா என் மாப்பிள்ளைங்களுக்கு. பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கணும்னு இப்பவே ரெண்டு மாப்பிள்ளையும் பேசிக்கிறாங்க.'

இப்படி தான் கர்ப்பமாக இருப்பதை பற்றி ஒரு நாள் கூட சந்தோஷப்பட முடியாத அளவிற்கு வெண்பாவின் நாட்கள் நகர்ந்தது.

அதுவும் ஆண் பிள்ளை என்ற வார்த்தைகளை கேட்க கேட்க கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. எந்த பிள்ளை என்றாலும் வளர்க்க போகின்றது நான் தானே. பிறகு ஏன் மற்றவர்கள் அதை பற்றி சிந்திக்க வேண்டும்.
என் பிள்ளைக்கு பெயர் முடிவு செய்யும் உரிமையை கூட இவர்கள் தனக்கு தர மாட்டார்களா என்று ஆதங்கம் நிரம்ப இருந்தது. ஆனால் அதே ஆதங்கம் கணவனிடம் இல்லாத போது எதுவும் பேச முடியவில்லை.

எப்போது வளைகாப்பிட்டு தாய் வீட்டிற்குச் செல்வோம் என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் இருந்தது. அதற்கும் பெரிய தடை அண்ணிகளிடமிருந்து வந்தது.

"ம்மா தீபாவளியை ஒட்டி குடும்பமா நாங்க கோவிலுக்கு போவோம். அதனால பொங்கலுக்கு பிறகு வளைகாப்பை வைக்கலாம்." என்ற பணக்கார வீட்டு மருமகளாகிய மகளின் வார்த்தை அங்கு சாசனமாக எழுதப்பட்டது.

"உங்க வீட்டுல யாருக்குமே அறிவே இல்லையா. தல பிரசவம் வலி எப்போ வரும்ன்னு யாருக்கு தெரியும். தீபாவளி நவம்பர்ல வரும், பொங்கல் ஜனவரி பாதியில வரும். அதுவரை உனக்கு பிரசவ வலி வராம இருக்கணுமே.

ஒன்பதுல வளைகாப்பு நடத்துறதுல கூட பிரச்சனை இல்ல. அதுக்காக பொங்கல் முடியுற வரை காத்திருக்க முடியாது. புதுவருசத்தை ஒட்டி வைக்க சொல்லு." என்ற தாயின் புலம்பல்கள் எதுவும் யாரின் காதையும் சென்றடையவில்லை.

"பொங்கலுக்கு இங்க இருந்தா சீர் செலவு வரும்ன்னு உங்க வீட்டுல யோசிக்கிறாங்களா. நாங்க எங்க பொண்ணுங்களுக்கு எவ்வளவு செய்தோம் தெரியுமா?" என்று மாமியார் பட்டியலிட்டு கூற, ச்சீ என்ற எண்ணமே வந்தது.

ஒரு வழியாக வளைகாப்பு முடிந்து சந்தோஷமாக தாய் வீடு வந்தவளின் மகிழ்ச்சி இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது.

இரண்டு நாட்கள் அம்மா வீட்டில் விட்டதே பெரிது என்பது போல பலதும் கூறி மருமகளை அழைத்துச் செல்ல மகனை அனுப்பி விட்டார் மாமியாரும் நாத்தனார்களும்.

அவள் மனது மட்டும் 'எத்தனை வேலைக்காரங்க இருந்தாலும் உங்க அம்மாக்கு என்ன வேலை வாங்கலன்னா பொழுது விடியாதே.' என்று கூறிக் கொண்டது.

"இங்க உள்ள ஆஸ்பத்திரியில பாத்தா உங்க வீட்டுக்கு செலவு ஆகிடும்ன்னு பயமா. முடியலன்னா சொல்லு நான் மொத்த பணத்தையும் தரேன்." என்ற மாமியாரின் வார்த்தையில் அடிப்பட்ட பார்வை பார்த்தவள் ஒன்றும் கூறாமல் அமர்ந்து விட்டாள்.

டாக்டர் கூறிய இரு நாட்களுக்கு முன்பாகவே வலி எடுக்க ஆரம்பித்து விட வெண்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

ரத்த கொதிப்பு ஏகத்துக்கும் அதிகரித்திருக்க, சீ செக்ஷன் செய்தாக வேண்டிய கட்டாயம்.

அடுத்த ஒரு மணி நேரம் யுகமாக கழிய திலகன் வெண்பாவின் செல்வமகள் வீல் என்ற சத்தத்துடன் வெண்பாவின் புகுந்த வீட்டின் ஆண் குழந்தை நினைப்பை பொய்யாக்கி வெளியுலகை காண வந்தாள்.

பிள்ளை பிறந்து இரண்டு மாதம் முடியும் முன்னரே அழைத்து வர திலகன் வீட்டார் முடிவெடுத்து விட எதிர்த்து பேசாமல் வெண்பாவும் கிளம்பிவிட்டாள்.

மாமியார் வீட்டிற்கு வந்தவளுக்கு முன்பு போல பரபரப்பாக வேலை செய்ய முடியவில்லை. அறுவை சிகிச்சை செய்த உடல் அதற்கு ஒத்துழைக்கவும் இல்லை.

முடிந்த வேலைகளை மட்டும் செய்பவள் குழந்தையின் தேவைகள் எதற்கும் யாரின் உதவியையும் எதிர் பார்க்கவில்லை. குளிப்பாட்டுவது தொடங்கி அனைத்தையும் அவளே பார்த்துக் கொண்டாள்.

இடை இடையே மாமியார் குறை கூறினாலும் அதற்காக வரிந்து கட்டிக்கொண்டு எந்த வேலையையும் இழுத்து கட்டி செய்யவில்லை.
இன்னும் சிறிது நேரத்தில் பிள்ளைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு நடக்க போகின்றது என்னும் நிலையிலும் யாரும் குழந்தைக்கு வைக்க போகும் பெயரை வெண்பாவிடம் சொல்லியிருக்கவில்லை.

பெற்ற பிள்ளைக்கு வைக்க போகும் பெயர் கூட தெரியாமல் தான் என்ன தாய் என்ற கழிவிறக்கம் மனதை வதைக்க, உடை மாற்ற வந்த கணவனை பிடித்துக் கொண்டாள்.

"இப்போ நீங்க பாப்பாக்கு செலக்ட் பண்ண பெயர சொல்லல நான் வெளிய வர மாட்டேன். எப்படியும் நான் சொன்ன எந்த பெயரும் இருக்காதுன்னு தெரியும். அதனால பயப்படாம சொல்லுங்க." என்று கிட்டத்தட்ட வெளிப்படயைாகவே கணவனை மிரட்டினாள்.

"சந்தனமாரி மகாதேவி" என்று கணவன் தயங்கியபடி தங்கள் சகோதரி வீட்டார் தேர்வு செய்த மகளின் பெயரை கூறியதும் வெண்பாவிற்கு கண்கள் இருட்டிக் கொண்டு வருவது போல இருந்தது.

இந்த காலத்தில் இப்படி பெயர் வைப்பார்களா என்று தோன்ற கணவனிடமே "மனசாட்சிய தொட்டு சொல்லுங்க இந்த பெயர் நல்லா இருக்கா?" என்று கணவனின் சட்டையை பிடித்து உலுக்காத குறையாக வெண்பா கேட்டுக் கொண்டிருந்தாள்.

"அம்மா அப்பா பெயரும் சாமி பெயரும் வர மாதிரி...'' என்று திலகன் நினைக்க, பார்வையால் கணவனை பொசுக்கினாள்.

"அறிவு இருக்காயா உனக்கு... சாமி சாம்பிராணின்னுகிட்டு... எப்படியும் நீ எதையும் முடிவு பண்ணிருக்க மாட்ட. உன் வீட்டாளுங்க தானே இந்த பெயர முடிவு பண்ணது. இனி நான் பாத்துக்கிறேன். நீ தள்ளி நிள்ளு." என்று மரியாதையை பறக்கவிட்டு ஒருமையில் பேசும் இந்த வெண்பா புதிகாக தெரிந்தாள்.

"என்ன வெண்பா இப்படி பேசுற?" என்று ஆதங்கமாக கேட்க,

"அப்படி தான் டா பேசுவேன். என்ன பண்ணுவ? ஒழுங்கா அமைதியா என் கூட வந்து நிக்கிற. நானும் போனா போகுது கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டோமேன்னு அமைதியா இருந்தா தலை மேல ஏறி உக்கார்ந்து ஆட ஆரம்பிக்கிறீங்க." என்று ஆவேசமாக பேசும் மனைவியை இடையில் புகுந்து நிறுத்த நினைக்க, கணவனின் சட்டையை பிடித்துவிட்டாள்.

"குறுக்க பூந்து பேச நினைச்ச குறுக்கெலும்பை உடைச்சு கையில கொடுத்துடுவேன்." என்று பேச, இனி மனைவியிடம் பேச முடியாது என்று திலகன் கப்சிப்.

"வந்த மொத நாளே இந்த வெண்பா யாருன்னு உங்களுக்கு காட்டிருக்கணும். பெரியவங்களுக்கு அடங்கி போ... புருஷன அனுசரிச்சு போன்னு பெத்தவங்க சொன்னத கேட்டது என் தப்பு தான். இனி என் பிள்ளை விஷயத்தில முடிவு எடுக்கிறத நான் பாத்துக்கிறேன்.

எதாவது தேவையில்லாம பேசி வைச்சீங்க அப்புறம் குடும்பம் மொத்தமும் சந்தன மாரிக்கு பதிலா பத்திரகாளிய தான் பார்க்க வேண்டியிருக்கும்." என்று கணவனை எச்சரித்து விட்டு வெளியே வந்தாள்.

அறையை விட்டு வெளியே வந்தவள் தன் புகுந்த வீட்டாரை பார்க்க, பிள்ளை விஷயத்தில் அனைத்து முடிவுகளும் தங்களிடம் தான் என்பதில் சாதித்து விட்ட கர்வம் அப்பட்டமாக தெரிந்தது.

"என் கிட்டவே போட்டியா... இனி தானே இந்த வெண்பாவோட ஆட்டத்த பாக்க போறீங்க." என்று மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

ஐயர் வந்து பூஜை ஆரம்பிக்க தம்பதிகள் இருவரும் மனையில் அமர்ந்தனர்.

"குழந்தைய தொட்டில்ல போட்டுட்டு அரிசியில பெயர் எழுதுங்க." என்று ஐயர் கட்டளையிட, கணவனுக்கு முன்பே எழுந்துக் கொண்டவள் தன் மகளை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு அரிசியின் அருகில் வந்தாள்.

"வெண்பா..." என்று மாமியார் அழைத்ததும் காதில் கேட்காதது போல இருந்தவள், யாரின் முகத்தையும் பார்க்காமல் கீழே அமர்ந்தாள்.

"மான்சி ஏந்திழையாள்" என்று வெண்பா எழுத திலகன் வீட்டார் வெளிப்படையாகவே வெண்பாவை முறைத்து பார்த்தனர்.

விழா நல்லபடியாக முடிந்து இரு பக்க உறவினர்கள் செல்லும் வரை பொறுமையாக இருந்தவர்கள் அவர்கள் கிளம்பியதும் வெண்பாவை சுற்றி வளைத்தனர்.

"நாங்க சொன்ன பெயர ஏன் வைக்கல.
எங்க வார்த்தைக்கு இங்க மதிப்பு இல்லாம போயிட்டு.

நேத்து இந்த வீட்டுக்கு வந்தவ எங்கள கேட்காம முடிவெடுக்க பழகிட்ட இல்ல. சாமி பெயர வைக்கலன்னா தெய்வ குத்தமாகிடும்." என்று ஒவ்வொருத்தரும் மாறி மாறி பேசினர்.

"நாளைக்கு என் பொண்ணு மத்தவங்க முன்னாடி பெயர சொல்ல கஷ்டப்பட கூடாது. அப்புறம் நான் எந்த சாமி கிட்டயும் வேண்டுதல் வைக்கல. வேண்டுதல் வைச்சவங்க சாமி குத்தம்ன்னு நினைச்சா பரிகாரம் பண்ணிக்கோங்க." என்று முடித்துக் கொண்டவளுக்கு மேலும் பேசும் எண்ணமில்லை.

 
அத்தியாயம் 3(ஆ)

வெண்பா திலகனின் அன்பு மகள் தவழ்ந்து வீட்டையே சுற்றி வர, அவளை சுற்றி மற்றவர்களின் நாட்களும் நகர்ந்தது.

"பாப்பா எப்பவும் பகல்ல டல்லா இருக்கா. ஆனா நைட் டைம்ல குஷியா விளையாடுறா. எப்படி தான் உன்னால இவள சமாளிக்க முடியுதோ." என்று திலகன் அலுத்துக் கொள்ள, வெண்பாவிற்கு புன்னகை மட்டுமே.

நாட்கள் செல்ல செல்ல மான்சியின் செயல்கள் வெண்பாவிற்கே ஒரு வித பயத்தை கொடுக்க ஆரம்பித்தது. இருளில் இருக்கும் உற்சாகம் வெளிச்சத்தில் இருப்பதில்லை.

திலகனிடம் மெல்ல இதை கூற அவனோ "சின்ன பிள்ளைங்க நைட் நல்லா விளையாடும்ன்னு நீ தானே சொன்ன அப்புறம் என்ன ஃபீல் பண்ற." என்று சொல்ல, தாயால் அமைதி காக்க முடியவில்லை.

திலகனிடம் போராடி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள். குழந்தைக்கு சில சோதனைகள் செய்துவிட்டு முடிவிற்காக காத்திருக்க, திலகன் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.
தன் மகளுக்கு குறை இருக்கும் என்று அவன் நினைக்கவில்லை. ஆனால் வெண்பா பயந்துக் கொண்டிருந்தாள். டாக்டர் அழைத்ததும் உள்ளேச் செல்ல அவரோ அமைதியாக இருவரையும் அமர சொன்னார். அவரின் அமைதி மனதில் கலவரத்தை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது.

"சாரி மிஸ்டர் அண்ட் மிஸஸ் திலகன் உங்க பொண்ணு மான்சிக்கு கண்ணுல ரேர் டிசிஸ் இருக்கு." என்று கூற இருவரும் மொத்தமாக உடைந்து போயினர்.

அதுவரை சாதாரணமாக இருந்த திலகன் கூட மகளின் நிலை முழுதும் தெரியும் முன் நொறுங்கிவிட்டான். இருவரில் முதலில் தெளிந்தது வெண்பா தான்.

"டாக்டர் என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என்று கேட்க, அவரோ பெரும்மூச்சுடன் ரிப்போர்டை அவள் புறம் நகர்த்தி வைத்தார்.

"டே ப்ளைன்னஸ் (Day Blindness - பகல் குருடு) அண்ட் (Night vision power)" என்று கூற இருவருக்கும் புரியாத நிலை தான். பெற்றவர்கள் நிலை உணர்ந்து மருத்துவர் அதை விளக்கி கூறினார்.

"பொதுவா நம்ம பார்வை திறனை தீர்மானிக்க கூடிய குச்சி கூம்பு செல்கள் உங்க பொண்ணுக்கு அதிகமா இருக்கு. சோ மான்சிக்கு நைட் டைம்ல கண்ணு நல்லா தெரியும். இருட்டில நாம் பார்க்க முடியாததை கூட உங்க பொண்ணால பாக்க முடியும். பட் டே டைம்ல அந்தளவு பார்க்க முடியாது. அதிகபடியான வெளிச்சம் கண் நரம்புகளுக்கு கூச்சத்தை கொடுக்கிறதோட பார்வை திறனை குறைக்கும்." என்று கூறி முடித்த நொடி திலகன் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

"எதனால டாக்டர் என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை." என்று மடியில் தூங்கிக் கொண்டிருந்த மகளின் மீது பார்வையை வைத்தபடி கேட்டான்.

"பெரியவங்களுக்கு இந்த பிரச்சனை வர நிறைய காரணம் இருக்கலாம். பட் குழந்தைங்களுக்கு வரணும்னா ஜெனடிக் ஆர் டிஎன்ஏ மட்டும் தான் காரணமா இருக்கணும் உங்க வீட்டுல யாருக்காவது இப்படி ஒரு பிரச்சனை இருந்திருக்கா?" என்று மருத்துவர் கேட்டதும் இல்லை என்பது போல இருவர் தலையும் ஆடியது.

"இந்த பிரச்சனைக்கு தீர்வு இல்லையா டாக்டர்?'' என்று திலகன் கேட்க அவன் குரலில் வலி அப்பட்டமாக தெரிந்தது.

"ட்ரீட்மெண்ட் இருக்கு. பட் மான்சி ஒரு வயசு கூட ஆகாத சின்ன குழந்தை அவளுக்கு செய்றது கஷ்டம். மான்சி வளர்ந்த பிறகு தான் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க முடியும்." என்று மருத்துவர் கூற மேலும் சில தகவலை பெற்றுக் கொண்டு கனத்த மனதுடன் வெளியே வந்தனர்.

மருத்துவமனை வாசலிற்கு வரும் போது சூரிய வெளிச்சம் பிரகாசமாக மான்சி மேலே விழ, புடவை கொண்டு வெண்பா மகளை மூடினாள்.

வீட்டுற்கு வரும் வழியில் "வீட்டுல யார் கிட்டயும் இத பத்தி சொல்லாதீங்க. தேவையில்லாத பிரச்சனை வரும்." என்று புகுந்த வீட்டரை மனதில் வைத்து கூற, வண்டி சடர்ன் ப்ரேக் அடித்து நின்றது.

"என்ன பிரச்சனை வரும். என் வீட்டு ஆளுங்கள பார்த்தா பிரச்சனை பண்றவங்க மாதிரியா இருக்கு." என்று தனது மன அழுத்தம் மொத்தத்தையும் மனைவியிடம் இறக்க அதில் அவளில் அழுத்தம் கூடியது.

திலகன் வீட்டிற்குள் வந்ததும் கிளிப்பிள்ளை போல மருத்துவர் கூறிய அனைத்தையும் தாயிடம் கூறி ஆறுதல் தேட, வெண்பா நினைத்தது போல பிரச்சனை சிறிதாக அல்லாமல் பூதாகரமாக கிளம்பியது.

வெண்பா திலகன் இருவரின் வழி உறவினர்கள் மொத்தமும் கூடி இருக்க, மாமியாரின் குரல் சற்று ஓங்கி ஒலித்தது.

"ஆம்பிள பிள்ளைய பெத்து தர துப்பில்ல. இப்படி ஊனமான பிள்ளைய பெத்து எங்க குடும்பத்தையே விளங்காம பண்ணிட்டா. இவள ஒழுங்கு மரியாதையா உங்க கூட கூட்டிட்டு போங்க. நாங்க நல்ல பொண்ணா பாத்து எங்க பையனுக்கு கட்டி வைச்சிக்கிறோம்." என்று திலகனின் தாய் கூற, இரு பக்க உறவினர்களும் வாக்கு வாதத்தில் இறங்கி்னர்.

அறைக்குள் இருந்த வெண்பாவி்ன் கவனம் முழுவதும் மான்சியிடம் மட்டுமே. பசிக்கும் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தவள் காதில் அனைத்தும் விழுந்தாலும் எதுவும் பேசவில்லை.

"கண்ணு தெரியாத பிள்ளைய வைச்சு பிச்சை எடுக்கவா...'' என்று திலகனின் உறவினர் ஒருவரின் வார்த்தை கூட்டத்தின் நடுவே கேட்க, பெற்ற தாயின் மனது அவ்வார்த்தையில் கதறி அழுதது.

இருத்தரப்பும் கடும் வாக்குவாதத்தில் இருக்க திலகன் எழுந்து அறைக்குள் வந்தான். மனைவி மடியில் உறங்கிக் கொண்டிருந்த மகளின் நெற்றில் மென்மையாக இதழ் பதித்தான்.

தந்தையில் மீசை முடி உரசியதில் குழந்தை சின்னதாக சிணுங்க, அந்த அழகில் தன்னை தொலைத்தவன் அவளை மெல்ல தூக்கி மார்போடு அணைத்தான். தந்தை கதகதப்பில் கலைந்த தன் தூக்கத்தை தொடர, மகளை தொட்டிலில் கிடத்தினான்.

மகள் உறங்கி விட்டதை உறுதி செய்தவன் வெண்பாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். வெண்பாவின் கரம் பிடித்து திலகன் அழைத்து வருவதிலே அவன் முடிவை அறிந்துக் கொண்ட பெண்ணவளின் வீட்டார் அமைதியாகிவிட்டனர்.

"திலகா இவள..." என்று பேச வந்த தாயை கரம் உயர்த்தி தடுத்தவன்,

"அம்மா என் மனைவிக்கும் பொண்ணுக்கும் மரியாதை இல்லாத இடத்தில நான் இருக்க வேண்டிய அவசியம் இல்ல. நாங்க எத வேணும்னாலும் தாங்கிப்போம் ஆனா எம் பொண்ணு பத்தி பேசுனது என்னால தாங்கிக்க முடியல. வேண்டாம் ம்மா மனசு மொத்தமா விட்டு போயிருச்சு. தெரிஞ்ச இடத்தில எனக்கு ஒரு வேலை இருக்கு அதனால நான் என் குடும்பத்தை கூட்டிட்டு போறேன்." என்று கூறியவன் யார் தடுத்தும் நிற்கவில்லை.

வாடகை வண்டியில் மூவரின் உடமை தொடக்கம் அனைத்தையும் வண்டியில் ஏற்றியவன் மனவைி மகளுடன் கேரளாவை நோக்கி புறப்பட்டான்.

இங்க பாரு பாப்பா பிடிக்காம நடக்கிறா...
என் தங்க பிள்ளை இப்பவே அப்பா சொல்றத செய்யுறா...

இன்னைக்கு பாப்பா எத்தனை வார்த்தை பேசினா தெரியுமா...

இவை எல்லாம் வெண்பாவின் வாய் மொழி அல்ல திலகனின் மொழிகள். ஒரு வேகத்தில் மனைவி மகளை அழைத்து வந்தவனுக்கு வருமானம் குடும்ப செலவிற்கு போதவில்லை.

வெண்பா எவ்வளவு சிக்கனமாக இருந்த போதும் குழந்தையின் மருத்துவ தேவையும் இருக்க, பற்றாக்குறை இருந்து கொண்டே இருந்தது. வேறு வழி இல்லாமல் வெண்பாவும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.

வெண்பா பகலில் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற, திலகன் இரவில் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனத்திற்கு ட்ரைவராக சென்றுக் கொண்டிருந்தான்.

இருவரில் யாராவது ஒருவர் மகளுடன் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது தம்பதியருக்குள் எழுதப்படாத விதி.

மே மாத வெயிலிலும் கூட மிதமான பனி மூட்டம் இருக்கும் இடத்தில் வெளிச்சம் காலையில் தாமதமாக தோன்றி மாலையில் சீக்கிரம் சென்றுவிடும். அந்த ஒரு காரணத்திற்காகவே திலகன் இங்க வர சம்மதித்தான்.

மலை பகுதியில் வசிப்பதில் சில பல நடைமுறை சிக்கல் இருந்த போதும் மகளுக்காக இருவரும் அனைத்தையும் கடந்து வர பழகி கொண்டனர்.

"மான்சி..." என்று வெண்பா கோபமாக அழைக்க, மகள் திரும்பி பார்க்கும் முன் தந்தை மகளுக்கு அரணாக வந்து நின்றான்.

"இப்போ எதுக்கு பாப்பாவ கோபமா கூப்பிட்ட?" என்று மனைவியை முறைத்து பார்க்க, அவளது பார்வை கணவன் காலை கட்டிக் கொண்டு நின்ற மகளை தொட்டு பூஜை அறையை நோக்கி திரும்பியது.

மனைவியின் பார்வையை தொடர்ந்த தன் பார்வையை திலகன் செலுத்த பூஜை அறையை முழுவதும் அலங்கோலமாக இருந்தது.

"இன்னும் நல்லா நடக்க கூட வரல அதுக்கே உங்க மக பண்ற அட்டகாசம் தாங்க முடியல. சூடம் டப்பா மொத்தமா சிதற விட்டுருக்கா, பத்தி குச்சி எல்லாத்தையும் முறிச்சி போட்டுருக்கா. அது கூட பரவாயில்ல சந்தனம், குங்குமம், திருநீறு வைத்து தரைய சூப்பரா மொழுகி வச்சி இருக்கா, நல்ல வேளை சாமி போட்டோ எல்லாம் கொஞ்சம் உயரமா சுவர்ல மாட்டி இருந்ததால தப்பிருக்கு..." என்று மகள் பற்றி குற்ற பத்திரிக்கை வாசிக்க, தந்தைக்கு பொறுக்கவில்லை.

"என் தங்க புள்ளைய அவ்வளவு நேரம் தனியா விட்டுட்டு நீ எங்க போன. நீ வாடா குட்டி உங்க அம்மாக்கு வேற வேலையில்லை." என்று மனைவி செய்ததே தவறு என்பது போல கூறி விட்டு மகளுடன் சாமர்த்தியமாக வெளியேறினான்.

அங்கேயே நின்றிருந்தால் மனைவியிடம் தானும் அல்லவா திட்டு வாங்க வேண்டும். மகளுடன் செல்லும் கணவனை பார்வையால் பொசுக்கி விட்டு பூஜை அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு வந்த வெண்பா மகளுக்கு உணவு கொடுக்க வேண்டிய நேரம் என்பதால் வெளியே வர, அவள் கண்ட காட்சியில் சாந்த சொரூபி பட்டம் வாங்கும் அளவுக்கு பொறுமை காக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கே கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

தோட்டத்தில் இருந்த ஈரமான மண்ணை குழப்பி பொம்மை செய்கின்றேன் என்று அப்பா மகள் இருவரும் சகதியில் விழுந்து எழுந்தவர்கள் போல இருந்தனர்.

இதில் பொம்மை தலைக்கு பூ வைக்க வேண்டும் என்று ஆசையாக வளர்த்த செடியில் இருந்த மலர்களை எல்லாம் பறித்து மகள் கையில் கொடுத்துக் கொண்டிருந்தார் அவள் அன்பு தந்தை.

கோபத்தில் அடித்து விடலாமா என்று வேகமாக இருவரையும் நெருங்கிய வெண்பாவின் கால்கள் மகளின் சிரிப்பொலியில் அப்படியே நின்றுவிட்டது. புதிதாக முளைத்த அரிசி பற்கள் தெரிய சிரித்த மகளை பார்த்ததும் அவள் கோபம் சூரியனை கண்ட பனி போல மாயமாக மறைந்தது.

வெண்பா வருவதை பார்த்த திலகன் கையில் இருந்ததை கீழே போட்டுவிட்டு அசட்டு சிரிப்புடன் எழுந்து நிற்க, மகளும் நல்ல பிள்ளையாக தந்தையின் கால்களை பிடித்துக் கொண்டு நின்றாள்.

வெண்பா போலியாக இருவரையும் முறைக்க, மகளை கையில் தூக்கிக் கொண்ட திலகன் மின்னல் வேகத்தில் மனைவியின் கன்னத்தில் முத்திரை பதித்துவிட்டு வீட்டிற்குள் ஓடி மறைந்தான்.

திலகன் குடும்பம் இருந்த பகுதி ஓங்கி உயர்ந்த மரங்களை கொண்ட மலை பிரதேசம் என்பதால் சூரிய வெளிச்சம் என்பது சற்று குறைவாகவே இருந்தது. புதிதாக அறிமுகமான குடும்பத்திடம் இன்முகமாக பழகினாலும் யாரிடமும் மான்சியின் பார்வை குறைபாடு தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.

மாலை நேரங்களிலும் இரவின் இருட்டிலும் உற்சாகமாக விளையாடும் குழந்தையை பார்ப்பவர்கள் அனைவரும் "உங்க பொண்ணுக்கு ராத்திரி தான் விடியும் போல, என்ன உற்சாகம். அதுவும் மான்சிக்கு மத்த பிள்ளைங்களை விட கண்ணு இருட்டுல நல்லா தெரியுது." என்று புகழ்ச்சியாக கூற, பெற்றவர்களுக்கு பதறிக் கொண்டு வந்தது.

மான்சி குறையை காரணம் காட்டி திலகன் வீட்டார் விலகி நிற்க, கணவன் மனம் வருந்தாமல் இருக்கும் பொருட்டு வெண்பா தன் வீட்டாரை விலக்கிக் கொண்டாள். அதனால் தான் மான்சி பற்றி மற்றவர்களுக்கு தெரியவில்லை. தெரிவதில் இருவருக்கும் துளியும் விருப்பம் இல்லை.

திலகன் வெண்பா இருவரின் சம்பாத்தியத்தில் பெரும் பகுதி மருத்துவ தேவைக்கே செல்ல, எளிமையான வாழ்க்கையே அவர்களது என்ற நிலையில் இருந்தனர். தேவைக்கு கூட பல முறை யோசித்து எண்ணி எண்ணி செலவு செய்யும் அளவில் அவர்கள் குடும்பம் இருந்தது.

பணத்தை காரணமாக கொண்டு எவ்வளவு பிரச்சனை வந்த போதும், அது எதுவும் மகளை நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டனர். மான்சியின் புன்னகைக்காக எதையும் செய்ய இருவரும் தயாராக இருக்க கடவுளும் அவர்களை கண்டு புன்னகைத்தார்.

பிள்ளைக்காக பெற்றவர்களின் கஷ்டம் போதும் என்று கடவுள் நினைத்தாரே என்னவோ வெண்பா திருமணத்திற்கு முன் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பணி நியமன உத்தரவு வந்து சேர்ந்தது.

கூடுதல் சந்தோஷமான விஷயமாக அருகில் இருக்கும் பழங்குடியினர் பள்ளியிலேயே வேலை கிடைக்க அவர்கள் வாழ்க்கை நிலை சற்று உயர்ந்தது.

மான்சி வளர வளர அவள் பிரச்சனையை முழுவதும் மறைக்க முடியாது "வெளிச்சத்தை பார்த்தா கண்ணு கூசும்." என்று சொல்லி சமாளித்தனர்.

மருத்துவர்கள் பரிந்துரைத்த கருப்பு நிற கண்ணாடியுடன் வலம் வரும் மான்சியை முதலில் வித்தியாசமாக பார்த்தாலும் அவள் பிள்ளை மொழியும், குறும்பு சேட்டையும், விட்டு கொடுக்கும் மனதும், அறிவாளித் தனமான பேச்சும் அவளிடம் உறவாட நினைக்கும் மற்றவர்களை கவர கண்ணாடி கருத்தில் பதியாமல் போனது.

வருடங்கள் உருண்டோட மான்சியின் பிரச்சனையை ஒரளவு மட்டுமே மருத்துவர்களால் சரி செய்ய முடிந்தது.

"இங்க பாருங்க மிஸ்டர் அண்ட் மிஸஸ் திலகன் உங்க பொண்ணுக்கு எங்களால முடிஞ்ச வரை முயற்சி பண்ணிட்டோம் பட் அவங்களால ஓரளவுக்கு மேல பகல்ல வெளிச்சத்தை பார்க்க முடியாது. அண்ட் நைட் டைம்ல பார்வை திறன் அதிகமா இருக்கிறத சரி செய்ய முடியாது.

பெட்டர் நீங்க இது கடவுள் மான்சிக்கு கொடுத்த வரம்னு நினைக்க முயற்சி செய்யுங்க. நீங்க வரமா நினைச்சா உங்க பொண்ணும் அத வரமா நினைப்பா, நீங்க சாபமா நினைச்சா உங்க பொண்ணுக்கும் அது சாபம் தான்." என்று மருத்துவர் மகள் நிலையை விளக்க, இருவரும் தெளிந்தனர்.

மகளுக்கு பக்குவமாக எடுத்து கூறி அவளுக்கு இருப்பது குறை அல்ல கடவுள் கொடுத்த வரம் என்று நம்ப வைத்தனர். சமத்து குழந்தை மான்சியும் பெற்றவர்களின் வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொண்டாள்.

மகள் வளர வளர திலகனின் பொருளாதாரமும் வளர்ந்தது. வெண்பா தன் பெயரில் கடன் பெற்று திலகனுக்கு வண்டி ஒன்று வாங்கி கொடுக்க அவர்கள் நிலை உயர்ந்தது.

இரவும் பகலும் திலகன் தன் முழு உழைப்பை கொடுக்க, வண்டிகளின் எண்ணிக்கையுடன் அவர்கள் வாழ்க்கை தரமும் பெருகியது.

மான்சியின் பிரச்சனை வெளியே தெரியாத அளவிற்கு அவளின் மற்ற திறமைகளை முன்னிறுத்தினர். அதிலும் தேன் குரலில் பாடும் மகளை முறைப்படி சங்கீதம் படிக்க வைத்தனர்.

மான்சி பாட்டுக்காகவே மிகப்பெரிய நட்பு வட்டம் கிடைத்தது. மகளின் திறமையை உலகிற்கு வெளிக்காட்ட வெண்பா விரும்பினாள்.

"கண்ணு தெரியாத பிள்ளைய வைச்சு பிச்சை எடுக்கவா..." என்ற உறவினர்கள் வார்த்தை இன்று காதில் ஒலிக்க, அவர்கள் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் மகளை நிறுத்த பெற்றவள் மனம் ஆவல் கொண்டது.


எதிலும் என் மகள் சிறந்தவள் தான் என்று உலகிற்கே நிரூபித்து காட்டினார்கள் அந்த செல்லமகளின் பெற்றோர்.

எல்லாம் பெற்றோரின் விருப்பப்படி நடக்க, இதில் அவர்கள் விரும்பாமலே ஒருவனின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டனர்.




ஹாய் மக்களே...

ஏகலைவனின் ஏந்திழையாள் கதை படிப்பவர்கள் மறக்காம உங்க கருத்த தெரிவிக்க மறக்காதீங்க.



கதையை ஆடியோ வடிவில் கேட்க விரும்புபவர்கள் எனது செசிலி வியாகப்பன் ஆடியோ நாவல் சேனல்ல கேட்கலாம்.
 
அத்தியாயம் 4

மான்சி மெடிக்கல் ரிப்போர்ட் முழுவதையும் படித்து முடித்த விஜித் முகம் உணர்வுகள் எதையும் வெளிக்காட்டவில்லை. சலனமின்றி இருந்தவனின் முகத்தில் இருந்து எதையும் கண்டுக் கொள்ள முடியாது ரவி தான் குழம்பிப் போனான்.

"போலீஸ் எப்படி அங்க வந்தாங்க?" என்று விஜித் கேட்க,

"ஏ.சி.பி சரவணன் திலகன் சாரோட பெஸ்ட் ப்ரெண்ட். அவ்வளவு ப்ரொடக்ஷனையும் தாண்டி அவார்ட் ஃபங்ஷன்ல மான்சி காணாம போனதால நேரடியா உங்கள பத்தி தான் விசாரிச்சிருக்கார்." என்று ரவி கூற, விஜித் புருவங்கள் கேள்வியாக உயர்ந்தது.

"நீங்க என்ன தான் வெளிப்படையா சினி ஃபீல்ட்ல இன்வால்வ் ஆகலன்னாலும் உங்கள பத்தி அவருக்கு தெரிஞ்சிருக்கு. அண்ட் அவரு அன்அஃபீஷியலா அந்த பக்கம் மான்சிய தேட அனுப்பி வைச்ச போலீஸ் ஜீப் அது. அதுல வந்த எஸ்.ஐ அந்தளவு விவரம் இல்ல. அதனால தான் உங்கள உங்க கார் பத்தி எதுவும் விவரமா ஏ.சி.பி கிட்ட சொல்லல." என்று ரவி கூறியதும் விஜித் புலன்கள் சரவணனை நினைத்து இன்னும் கூர்மையானது.

விரைவில் அவர் தன்னை நெருங்கி விட கூடும் என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது. ஆனால் அதற்கு முன் மான்சியை அவன் நெருங்க நினைத்தான்.

"### படத்தில மெலோடி பாட்டுக்கு மான்சிய புக் பண்ணிடு." என்று விஜித் கூற,

"சார் அது கிட்டத்தட்ட ஐநூறு கோடி செலவுல எடுக்கிற ஹிஸ்டாரிக்கல் மூவி. அதுல வொர்க் பண்ற எல்லாருக்கும் எக்ஸ்பீரியன்ஸ் அதிகம் இருக்கணும்னு சொன்னதால பெஸ்ட் சிங்கர் ### புக் பண்ணிருக்கிறோம்." என்று ரவி கூற,

"சொன்னத மட்டும் செய் ரவி. மான்சி பாடினாலும் நல்லா தான் இருக்கும். அவளோட கடைசி பாட்டு என் படத்தில பாடினதா இருக்கட்டுமே." என்று வில்லத்தனமாக கூறி சிரிக்க, ரவியால் தலையாட்ட மட்டுமே முடிந்தது.

ரவி வெளியேறியதும் விஜித் கைகள் புத்தகத்தை எடுத்து அதில் "Once may smile, and smile and be a villain" என்ற சேக்ஸ்பியரின் வரிகளின் கீழ் அடிக் கோடிட்டது.

"முறைச்சு பார்த்து அடிக்கிறத விட சிரிச்சிக்கிட்டே அடிச்சா நிச்சயம் ரொம்ப வலிக்கும் ஏந்திழையாள். அன்னைக்கு அவார்ட் வாங்கும் போது என்ன சொன்ன 'என் கூடவே எல்லா நேரமும் இருக்கிற என் அம்மா, அப்பா அப்புறம் பாட்டு. இதை தவிர வேற எதுவும் எனக்கு பிடிக்காது. இந்த மூனும் இல்லாம என்னால மூச்சு கூட விட முடியாதுன்னு'
சோ முடிவு பண்ணிட்டேன் உனக்கு பிடிச்சத பறிச்சிட்டா உனக்கு மூச்சு கொடுத்தவங்களுக்கும் மூச்சு அதுவா நின்னுடும். கொஞ்சம் கொஞ்சமா நீங்க கஷ்டப்படுறத பாத்தா கூட எனக்கும் சந்தோஷமா தான் இருக்கும்." என்று கூறி சிரித்துக் கொண்டான்.
________________________________________

"அப்பா நீங்களாவது அம்மா கிட்ட சொல்லுங்க. என்னால அங்க பாட போக முடியாது." என்று மான்சி தந்தையிடம் செல்லம் கொஞ்ச, அவருக்கு மகள் பயம் புரிந்தாலும் அவள் கூறுவதை ஏற்க முடியவில்லை.

யாருக்காகவோ பயந்து தன் மகளின் திறமையை முடக்கி வைப்பதில் வெண்பா, திலகன் இருவருக்கும் விருப்பம் இல்லை.

"மான்சி நீ பாடுற அவ்வளவு தான். இதுக்கு மேல ஆர்கியூ பண்ணாத. அம்மா வேலைய ரிசைன் பண்ண போறேன். இனி நீ எங்க போனாலும் உன் கூடவே இருப்பேன். அண்ட் வெளியூர் போக வேண்டியது இருந்தா அப்பாவும் நம்ம கூட வருவாங்க. அப்புறம் சரவணன் அண்ணா உனக்கு செக்யூரிட்டி காட்ஸ் கூட அரேஞ் பண்ணிட்டாரு." என்று வெண்பா கூற, மான்சிக்கு மனதே சரியில்லை.

தாய்க்கு ஆசிரியர் பணி எவ்வளவு பிடிக்கும் என்பதை உடனிருந்து பார்த்தவள் ஆயிற்றே. தனக்காக தாயின் கனவு கலைவதை அவளால் ஏற்க முடியவில்லை. தான் நினைத்ததை மான்சி அப்படியே கூற, வெண்பா சிரித்துக் கொண்டார்.

"மான் குட்டி அம்மா இருபது வருசம் எனக்கு பிடிச்ச வேலைய மன நிறைவோட செய்திட்டேன். எனக்கு அது போதும். இனி நான் என் பொண்ணுக்கு முழு நேர டீச்சரா மாற போறேன்." என்று வெண்பா கூறும் போது அவர் முகத்தில் வலி தெரிகின்றதா என்று மகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகளின் எண்ணவோட்டத்தை புரிந்துக் கொண்டவர் "மான்சி நீ தான் என் ஒட்டு மொத்த சந்தோசம். சோ உனக்காக நான் எது வேணும்னாலும் செய்வேன்.'' என்றவர் வார்த்தையில் சிறிதும் பொய்யில்லை.

அடுத்து வந்த நாட்களில் மான்சி விஜித் நிறுவனம் முதல் முறை நேரடியாக தயாரிக்க போகும் படத்தில் பாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாள்.

சரித்திர படம் என்பதால் பாடல்களின் வார்த்தைகள் கண்ணியமாகவே இருக்க பாடுவதில் அவளுக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை. முதல் நாள் அவள் பாடும் போது தவறும் இடத்தில் கூட இசையமைப்பாளர் மிக பொறுமையுடனே சொல்லி கொடுத்தார்.

முந்தைய படங்களில் பாடியது போல் அல்லாமல் இப்படத்தில் முதல் பாடலை முழு மன நிறைவுடனே பாடி முடித்தாள். பாடி முடித்து கிளம்பும் நேரம் ஓடி வந்த ஒருவர்

"ஒரு நிமிசம் எல்லாரும் இருங்க. நம்ம படத்தோட புரோடியூசர் வரார்." என்று கூற, அனைவரும் அவர்கள் இடம் விட்டு நகரவில்லை.

தன் பாதுகாவலர்கள் நடுவே கம்பீரமாக நடந்து வந்த விஜித் ஏகலைவனை பார்த்ததும் மான்சியின் விழிகள் வியப்பில் விரிந்தது. இருளில் கண்டவனை இன்று வெளிச்சத்தில் பார்க்கும் போது வித்தியாசாமாக இருந்தாலும் அவனை விட்டு பார்வையை விலக்க முடியவில்லை.

மகள் மீது மட்டும் எப்போதும் கவனம் வைத்திருக்கு வெண்பா அசைவற்று நின்ற மகளை பற்றி உலுக்க அதில் சுய உணர்வு பெற்றவள், தாயிடம் பார்வையால் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

மகள் ஒரு ஆணை இவ்வளவு நேரம் பார்த்தது அவள் வயதுக்குரிய குணம் என்றாலும் வெண்பாவிற்கு சற்று சங்கடமாகவே இருந்தது.

"ஹாய்..." என்று அனைவரையும் பொதுவாக பார்த்து கூறியவன் நடுநாயகமாக போடப்பட்டிருந்த இருக்கையில் விஜித் அமர்ந்ததுக் கொள்ள, இசையமைப்பாளர் அவனிடம் பேச ஆரம்பித்தார்.

சிறிது நேரத்திற்கு பின் மான்சியை காட்டி அவர் ஏதோ கூற, விஜித்தின் தலை மறுப்பாக அசைந்தது. அவனை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் மறுப்பான தலையசைவு பயத்தை கொடுத்தது.

"மான்சி நீ பாடின பாட்ட திரும்ப ஒரு தடவை முழுசா பாடி காட்டு. அப்போ தான் நம்ம புரோடியூசர்க்கு உன் திறமை மேல நம்பிக்கை வரும்." என்று கூற, சரி என்று மான்சி ஏற்றுக் கொண்டு பாடுவதற்கு தயாரானாள்.

மான்சி பாட வந்து விட்டாலும் பாடல் வரிகளை நினைத்தே படபடப்பாக உணர்ந்தாள். ஏனெனில் காதல் கொண்ட பெண்ணவள் தன் மனதை கவர்ந்த தலைவனிடம் தன் காதலை மறை பொருளாக உணர்த்தும் படியாகவே பாடல் வரிகள் இருந்தது.

அவற்றையெல்லாம் விஜித் முகத்தை பார்த்துக் கொண்டு எப்படி பாடுவது என்று தயக்கம் கொள்ள, வெண்பா விஜித்திற்கு பின் வந்து நின்றார். தாயை கண்டதும் அவள் தயக்கங்கள் அனைத்தும் மறைந்து போனது.

பாடல் வரிகள் ஆரம்பிக்கும் வரை தாயின் மீது நிலைத்திருந்த கண்கள் தானாகவே தன்னை மட்டும் பார்த்திருந்தவன் மீது திரும்பியது.

மான்சியின் குரலில் காதல் ததும்பும் பாடலை கேட்டுக் கொண்டிருந்தவன் முத்தில் உணர்வுகள் எதுவும் வெளிப்படவில்லை என்றாலும் மனது செய்ய வேண்டியதை கணக்கிட்டுக் கொண்டு தான் இருந்தது.

மான்சி பாடி முடிக்கும் வரை அந்த இடமே அப்படி ஒரு அமைதியில் நிறைந்திருக்க, பாடல் முடிந்த அடுத்த நொடி அனைவரின் கரவொலி காதை நிறைத்தது.

விஜித் தன் இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டதும் அனைவரும் கை தட்டுவதை நிறுத்தி விட்டு அடுத்து அவன் என்ன சொல்வானோ என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ம்ம் ஓகே... பட் ஏந்திழையாள் பாடும் போது ஒரு இடத்தில சின்ன தடுமாற்றம் இருந்துச்சே." என்று யோசிப்பது போல விரல்களை நெற்றியில் தேய்த்துக் கொண்டு கூறினான்.

விஜித் கூறிய தடுமாற்றத்தை மான்சியும் உணர்ந்திருந்தாள். பாடிக் கொண்டுருக்கும் போது மான்சியின் விழிகள் விஜித் விழிகளுடன் கலந்த ஒரு நொடி அவளுக்கே பாடல் வரி மறந்து அவன் மட்டுமே நினைவில் நின்றான்.

மீண்டும் தாயை பார்த்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு சரியாக பாட ஆரம்பித்தாள். இவையனைத்தும் இரு நொடி தடுமாற்றம் என்றாலும் அது விஜித் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் கவனித்துக் கொண்டனர்.

"நானும் கவனிச்சேன் சார். பட் இதுவும் கூட நல்லா தான் இருக்கும். ஹீரோயின் பாடும் போது ஹீரோ கண்ணசைக்க, அதில் ஹீரோயின் வெட்கப்பட்டு தடுமாறி பின் பாடுற மாதிரி சீன் டைரக்டர் சொல்லிருந்தார். அதுக்கு இந்த டூ செக்கென்ட் கேப் பர்ஃபெக்ட்டா இருக்கும்." என்று இசையமைப்பாளர் விளக்கம் கொடுத்தார்.

"வெட்கத்தில் வர தடுமாற்றமா? அப்போ ஓகே தான்." என்று மான்சியை பார்த்து கூறி விட்டுச் செல்ல, அவளோ அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என தெரியாது நின்றாள்.

வீட்டிற்கு வந்த பின் கூட அவள் சிந்தனை முழுவதும் விஜித் ஏகலைவன் மட்டுமே. அவனிடம் தனக்கு தோன்றுவது என்ன மாதிரியான உணர்வு என்று கூட அவளால் பிரித்தறிய முடியவில்லை.

அனைத்திற்கும் தாயின் உதவியை நாடுபவளுக்கு, இதை அவரிடம் சொல்லவே தடுமாற்றமாக இருந்தது. தான் கூறுவதை தாய் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற பயம் அவள் மனதை நிறைத்திருந்தது.

"மான் குட்டி உனக்கு அம்மா கிட்ட எதாவது சொல்லணுமா?" என்று கேட்க அவளோ தடுமாறும் மனதை இழுத்து பிடிக்க வழி தெரியாது தாயை அணைத்துக் கொண்டாள்.

"நான் தப்பு பண்றேனாமா?" என்று காரணத்தை கூறாமலே கேட்க,

"என் மான் குட்டி தப்புன்னு தெரிஞ்சா அதை செய்ய மாட்டா." என்று மகள் கூறாமல் விட்டதை புரிந்துக் கொண்டு அதற்கு பதில் கூறினார்.

"மான் குட்டி அம்மா உன் கிட்ட ஒரு நல்ல தோழியா தான் நடந்துக்க நினைக்கிறேன். அதனால நீ நினைக்கிறத தயங்காம சொல்லலாம்." என்று பரிவுடன் மகளின் தலையை தடவி கொடுத்தார்.

அம்மாவின் அன்பில் முழுதாய் கரைந்தவள் அவர் தோளில் சாய்ந்துக் கொண்டு விஜித்தை சந்தித்ததை பற்றி கூறி, இன்றைய தடுமாற்றத்தையும் கூறினாள்.

"எனக்கு அவரை இன்னைக்கு பார்த்ததும் வந்த ஃப்லீங்கை எப்படி சொல்றதுன்னு தெரியல ம்மா. பட் எனக்கு அது பிடிச்சிருந்தது அதே நேரம் பயமாவும் இருந்துச்சு." என்று மனதை மறைக்காமல் கூறினாள்.

"நம்பிக்கை இருக்கிற இடத்தில பயம் வராது மான் குட்டி. நீ பயப்படுறன்னா அதுக்கான காரணத்தை முதல்ல யோசி. இத தவிர வேற எதையும் நான் சொல்ல விரும்பல. உனக்கான முடிவுகளை நீயே எடுக்குறது தான் சரி வரும்." என்று கூறிவிட்டுச் சென்றார்.

அன்னை கூறி விட்டுச் சென்ற செய்தி மான்சியின் மனதை சரியாக சென்று தாக்கியது. அவளின் பிடித்தம் அதற்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்பில்லாத போது அது தவறு என்று மூளை எடுத்து கூற அதை அவள் மனதும் ஏற்றுக் கொள்ள தயாராகியது.

காதல் என்னும் விதை மகளின் மனதில் விழும் முன்னே வெண்பா அதை தடுத்துவிட்டார். மகளின் பிடித்தம் அத்தோடு நின்றுவிடாது என்று அவருக்கு தெரியும். ஆனாலும் எட்டாத உயரத்தில் இருப்பவனை பற்றி கனவு காண்பது கூட தவறு தான் என்று மகளுக்கு உணர்த்தி விட நினைத்தார்.

நினைப்பது மட்டும் நடந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்பது இருக்காதே. இவர்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டவன் ஒருவன் இருக்கின்றானே.

தனது அறைக்கு வந்த மான்சி தன் உடமைகளுக்கு நடுவே இருந்த பொருளை மெல்ல எடுத்து சில நிமிடம் ரசித்து பார்த்தாள். விஜித் ஏகலைவன் MD Of விஜித் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் என்று எழுதியிருந்தது.

அன்று விஜித் மான்சிக்கு உதவிய போது அவனின் காரில் இருந்த விசிட்டிங் கார்டை எதற்காக என்று காரணம் அறியாமல் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டாள்.

அதில் இருந்த எண்ணிற்கு அழைத்து தனக்கு உதவியதற்கு ஒரு நன்றியாவது சொல்ல வேண்டும் என்று ஆயிரம் முறையாவது எடுத்து பார்த்து விட்டு வைத்திருப்பாள்.

இன்று தாய் கூறியதை கேட்ட பின் இனியும் இது தன்னிடம் இருக்க கூடாது என்று நினைத்தவள் கிழித்து குப்பை தொட்டியில் வீசியிருந்தாள்.

அட்டையை கிழிக்க முடிந்தவளால் அதிலிருந்த அவனது தொலைப்பேசி எண்ணை மனதிலிருந்து அழிக்க முடியவில்லை.
ஆசைக்கும் நிதர்சனத்திற்கும் இடையே போராடிக்கொண்டிருந்தவளின் சிந்தனையை அவளது அலைப்பேசியின் சப்தம் கலைத்தது.

திரையில் தெரிந்த எண்ணை பார்த்ததும் அவளது மனது பந்தய குதிரையை விட வேகமாக குதித்து ஓட தொடங்கியது. முழுவதும் அழைத்து ஓய்ந்த அலைப்பேசியை பார்த்தவளுக்கு அந்த எண்ணிற்கு மீண்டும் அழைக்கும் தைரியம் இல்லை.

நடுங்கும் கரங்களினால் அலைப்பேசி நழுவி விடாமல் இறுக பற்றியிருக்க, அது மீண்டும் அவளுக்காக இசைத்தது. இந்த முறை அழைத்தவனை காத்திருக்க செய்யாமல் உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

அழைப்பது விஜித் ஏகலைவன் என்று தெரிந்தே ஏற்றவளுக்கு அவனிடம் பேசும் தைரியம் இல்லை. அவளின் மௌனத்தில் சில வினாடி மட்டும் பொறுமை காத்தவன்
"பிஸியா?" என்று கேட்க, அவன் குரல் மனதின் அடி நாதத்தை மீட்டும் இசையாக தழுவிச் சென்றது.

"ஏந்திழையாள் பிஸியா?" என்று மீண்டும் அவனுக்கே உரிய அழுத்தமான குரலில் கேட்க,
"ம்ஹூம்" என்ற பதில் மட்டும் வந்தது.

"ஏகலைவனுக்கு ஏந்திழையாளை பார்க்கணும்." என்று கூற, காரணமின்றி அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது.

"அம்மாக்கு பிடிக்காது." என்று கூறும் முன் அவள் குரல் வளையை யாரோ நெருக்கி பிடிப்பது போல வலியை உணர்ந்தாள்.

"ஓகே." என்று கூறியவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் அப்படி ஒரு அழுகை மான்சியிடம். நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறி அழுதவளின் சத்தத்தில் பெற்றவர்கள் பதறியடித்துக் கொண்டு அவள் அறைக்குள் வந்தனர்.

"மான் குட்டி என்ன ஆச்சு. எதுக்காக இப்படி அழுற? சொல்லு ம்மா" என்று வெண்பா பதற, காரணத்தை கூற முடியாது தாயை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

மகளின் கையில் இருந்த அலைப்பேசியும் அவள் கிழித்து எறிந்திருந்த அட்டையுமே அவருக்கான பதிலை தந்தது.




ஹாய் மக்களே...
தாமதத்திற்கு மன்னிக்கவும்... எனக்கு ஆறாவது மாத செக்கப் போனதுல யூடி போட மறந்திட்டேன். அதனால இரண்டு யூடி இன்று போடுகிறேன்..
 
அத்தியாயம் 5

அடுத்த நாள் விடியும் வரை வெண்பா திலகன் தம்பதியரிடம் பெரிதாக பேச்சு இல்லை. ஆசை மகள் இரண்டு முறை மட்டும் அதுவும் வெகு சில நிமிடங்கள் சந்தித்த ஒருவனுக்கு மனதில் இடமளித்திருக்க கூடும் என்று நம்ப முடியவில்லை.

அவளின் வேதனை எதனால் என்று தெரிந்தாலும் அவர்களால் ஒன்றுமில்லை என்று வார்த்தையால் கூட சமாதானம் சொல்ல முடியவில்லை.

"நான் வேணும்னா டாக்டர் தருண் கிட்ட பேசட்டுமா?" என்று திலகன் கேட்க

"பேசியாகணுமே... அவங்களை ரொம்ப நாள் காத்திருக்க வைக்கிறது நல்லதில்லை. வருண் நல்ல பையன், அவன பத்தி மான்சி கிட்ட அவார்ட் ஃபங்ஷனுக்கு முன்னவே பேசியிருக்கணும். நீங்க வருண் அப்பா அம்மாட்ட பேசுங்க." என்று வெண்பா பதிலளிக்க, அதை கேட்டுக் கொண்டிருந்த மான்சி அழுகையை அடக்கிக் கொண்டு தனது அறைக்கு ஓடிச் சென்றாள்.

தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தருண் குடும்பத்தை மான்சிக்கு நன்கு தெரியும். அதிலும் அவரது மகன் வருணை சில வருடங்களாக நல்ல பழக்கம் தான்.

ஆனாலும் வருண் விருப்பத்தில் சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்த இந்த திருமணம் பேச்சு அவளுக்கு தெரியாது. வெண்பாவும் மகளுக்கு பாடலில் இருந்து கவனம் சிதற கூடாது என்று அப்போதைக்கு தெரியப்படுத்தியிருக்கவில்லை.

அவார்ட் விழா முடிந்த அன்று இரவு உணவின் போது பேச வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் விதியோ மொத்தமாக அனைத்தையும் மாற்றி விட்டது.

எதனால் தனக்கு ஏகலைவனை பிடித்தது என்று மான்சியால் உறுதியாக கூற முடியவில்லை. பல மணி நேரம் காட்டிற்குள் தனித்து நின்றவளுக்கு அவனிடம் கிடைத்த உதவியும், அவன் கண்ணியமான நடத்தையுமே ஒருவித பாதுகாப்புணர்வை தந்தது. அதுவே அவன் பக்கம் இவள் மனம் சாய வைத்தது.

இப்போது நினைத்து பார்க்கையில் இது ஒரு காரணமா என்று தோன்றினாலும், மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவனை வெளியேற்றும் வழி தெரியவில்லை.

ஏகலைவன் தன் வாழ்வில் இல்லையென்றாலும் தன்னால் வருணை திருமணம் செய்ய முடியாது என்று பெற்றோரிடம் கூறி விட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.

இன்னும் சற்று நேரம் அதே இடத்தில் இருந்திருந்தாலே வருண் சம்பந்தம் வேண்டாம் என்று வெண்பா கூறியிருந்தது அவளுக்கு கேட்டிருக்கும்.

விஜித் ஏகலைவனை மகள் விரும்புவது புரிந்தாலும் அது நடக்காத விஷயம் என்று உறுதியாக நம்பியவர்கள் மகள் மனம் மாற அவகாசத்தை தர நினைத்தனர்.

பெற்றோர் பேசியதை தவறாக புரிந்துக் கொண்டு அவள் மனது தவித்துக் கொண்டிருக்கும் நேரம் அலைப்பேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசை கேட்டது. எடுத்து பார்க்க செய்தி வந்தது வருண் எண்ணிலிருந்து.

"ஹாய் மான்சி ஐ அம் சோ ஹேப்பி... நாங்க இன்னைக்கு உங்க வீட்டுக்கு வரோம். வெய்ட் ஃபார் மை ப்ரெஷன்ஸ் மை ஏஞ்சல்." என்று அனுப்பியிருந்தான்.

பெற்றோர் பேசியதையும் வருண் குறுஞ்செய்தியையும் சேர்த்து குழப்பிக் கொண்டவள், பின் விளைவு எதையும் யோசிக்காமல் விஜித் எண்ணிற்கு அழைத்து விட்டாள்.

ஏந்திழையாள் மனதில் இந்த ஏகலைவன் இருப்பது அவளின் வார்த்தையின்றி புரிந்துக் கொண்டவன் இனி அவளாக தன்னிடம் வர வேண்டும் என்று உறுதி கொண்டான். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவன் எண்ணத்தின் நாயகியே அழைத்துவிட்டாள்.

இகழ்ச்சியில் வளைந்த இதழ்கள் அவனது மனதை அப்பட்டமாக காட்டியது. அழைப்பு முடியும் வேளையில் அதை ஏற்றவன் மௌனம் சாதித்தான்.

விஜித் அழைப்பை ஏற்றதும் அவளிடம் அழுகையுடன் கூடிய கேவல் மட்டுமே வந்தது.
நேற்று தான் அழைத்து சந்திக்க கேட்ட போது தாய்க்கு பிடிக்காது என்ற மான்சியின் மீது கோபத்தின் உச்சியில் இருந்தவனுக்கு அவளது அழுகையுடன் கூடிய கேவல் நிம்மதியை கொடுத்தது.

துணிந்து அழைத்தவளின் துணிச்சல் அவன் மௌனத்தில் கரைந்து போனது. நிமிடங்கள் கடந்த பின்னும் பேசாமல் இருப்பவனிடம் என்ன பேசுவது என்று விழித்தவளுக்கு அவளது குரலும் மேலே எழும்பாமல் சதி செய்தது.

"டாக்டர் அங்கிள் பேமிலி வராங்க. நான் என்ன செய்ய." என்று கூறும் முன் மனதிற்குள் நொறுங்கி விட்டாள்.

ஏகலைவனிடம் பேசும் போது தான் அவனுக்கு தன்னை பிடிக்குமா என்று கூட தெரியாது பேசும் தன் மடத்தனத்தை உணர்ந்துக் கொண்டாள்.

"சாரி... நான் தெரியாம... எனக்கு..." என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் திணறியவள் அழைப்பை துண்டித்தாள்.

மான்சி அழைப்பை துண்டித்ததும் செல்போன் திரையை பார்த்துக் கொண்டிருந்தவன் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தது. உடனே ரவிக்கு அழைத்து

"டாக்டர் அங்கிள் பேமிலி யாரு?" என்று மொட்டையாக கேட்க, அது யாரு என்று குழம்பியவன் பின் மான்சியை பற்றியதாக இருக்க கூடும் என்று எண்ணிக் கொண்டான்.

"அது மான்சி மேம்க்கு ட்ரீட்மெண்ட் பாக்குற டாக்டர் தருண் பேமிலின்னு நினைக்கிறேன்." என்று பதிலளிக்க,

"டாக்டர் தருணுக்கு பையன் இருக்கா?" என்றவனுக்கு இருக்க கூடாது என்ற எண்ணம் பிறந்தது.

"எஸ் சார். அவருக்கு வருண் அண்ட் அருண்னு ரெண்டு பசங்க. ரெண்டு பேரும் டாக்டர்ஸ்." என்று கூற, பதிலின்றி அழைப்பை துண்டித்துவிட்டான்.

குளித்து தயாராகியவன் உடன் வர தயாராக நின்ற காவலர்களையும் மறுத்துவிட்டு தனியே மான்சியின் இல்லம் நோக்கி புறப்பட்டான்.

"மான்சி சாப்பிட வா." என்று அன்னை அழைத்த பின்னே தான் செய்த செயலின் வீரியம் புரிந்தது.

தடதடக்கும் மனதுடன் வெளியே வந்தவளுக்கு பெற்றவர்களை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. தட்டில் இருந்த உணவில் கை வைத்திருந்தவளுக்கு அதை உண்ண வேண்டும் என்று கூட தோன்றவில்லை.

"மான்சி சாப்பிடு. அப்பா அம்மா உனக்கு கஷ்டம் தர எதையும் செய்ய மாட்டோம். எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம், இப்போ சாப்பிடு." என்று கூற, வருண் பற்றி பேச போவதாக நினைத்தவளுக்கு உணவு தொண்டைக்குள் செல்லாமல் சதி செய்தது.

ஒரு வழியாக பெயருக்கு சாப்பிட்டு முடித்தவர்கள் ஹாலில் அமர்ந்திருக்க, யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று அமைதியாக இருந்தனர்.

மூவரும் ஒருவர் மற்றவர் முகம் பார்த்திருக்க, யாரும் எதிர்பாரா வகையில் விஜித் ஏகலைவன் வந்து நின்றான். அவன் இப்படி வந்து நிற்பான் என்று தெரியாத இருவரும் அதிர்ந்தனர். அதில் மான்சி மட்டும் நிம்மதியடைந்தாள்.

"சார் நான் தடுத்தும் இவர் கேட்காம உள்ள வந்துட்டார்." என்று வாயிற்காவலன் கூற,

"சார் தெரிஞ்சவரு தான் ராமு. நீங்க போங்க." என்று திலகன் அனுப்பி வைத்தார்.

"வாங்க மிஸ்டர் விஜித் ஏகலைவன். உக்காருங்க..." என்று வந்தவனை சம்பிரதாயமாக வரவேற்ற திலகன் மனைவியை பார்த்து கண் காட்ட, அவரும் தேநீர் தயாரிக்க சமையலறை நோக்கி நகர அடியெடுத்து வைக்கும் முன் விஜித் குரல் தடுத்து நிறுத்தியது.

"ஒரு நிமிசம் மிஸஸ் வெண்பா, நான் கொஞ்சம் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசணும். அப்புறம் காபி, டீ..." என்று அவன் வாய் கூறினாலும் பார்வை முழுவதும் மான்சி மீது மட்டும் தான்.

"மான்சி உள்ள போ." என்று திலகன் மகளை உள்ளே அனுப்ப நினைக்க,

"நான் பேச போறதே ஏந்திழையாள் பத்தி தான் அதனால அவளும் இருக்கட்டும்." என்று கூற, என்ன வர போகின்றதோ என்ற பீதி மூவரிடமும்.

"வெல்... சுத்தி வளைக்காம நேரடியா விஷயத்துக்கு வரேன். ஐ வாண்ட் டூ மேரி ஏந்திழையாள்." என்று நேரடியாக கேட்டு விட, ஆயிரம் மத்தாப்புக்கள் பெண்ணவள் மனதில்.

"ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்ற திலகனுக்கு விஜித்தின் திடீர் வருகை சந்தேகத்தை கொடுத்தது.

பணத்தில் சமுதாய அந்தஸ்த்தில் எட்டாத உயரத்தில் இருப்பவன் தங்கள் வீட்டில் பெண் கேட்பது ஒன்று சாதாரண விஷயம் அல்லவே.

"ஏன்னு கேட்டா?" என்றவன் திலகனின் கேள்வி புரியாதது போல பாவைனை செய்ய,

"நான் என்ன கேட்கிறேன்னு உங்களுக்கு நல்லா தெரியும். திடீர்ன்னு வந்து என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க கேட்கிறது ஏன்னு நான் கேட்டேன்." என்றவருக்கு விஜித்தின் தோரணை சற்று எரிச்சலாகவே இருந்தது.

"பிடிச்சுருக்கு பொண்ணு கேட்கிறேன். இத தவிர சொல்ல எதுவும் இல்ல." என்று அசட்டையாக தோளை குலுக்கியபடி சொல்ல, திலகனுக்கு பொறுமை பறக்கும் தருணத்தில் இருந்தது.

கணவனின் கரத்தை பற்றிய வெண்பா மகளை காணும் படி பார்வையால் கெஞ்ச, அவரும் தன் கவனத்தை மகள் பக்கம் திருப்பினார். பெற்றோர் விஜித்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்ற ஏக்கம் அவள் முகத்தில் ஏகத்துக்கும் நிரம்பி வழிந்தது.

அடுத்து கேட்க தோன்றிய கேள்விகள் அனைத்தும் மகள் முகத்தில் தெரிந்த ஏக்கத்தில் தொண்டைக்குள்ளே அடக்கிக் கொண்டார்.

"சரி உங்க வீட்டுல பெரியவங்க யாராவது இருந்தா அவங்கள பார்த்து பேசணும்." என்று மறைமுகமாக திருமண பேச்சை ஆரம்பித்து வைத்தார்.

"எனக்கு அப்பா இல்ல. அம்மா மட்டும் தான். அவங்களும் ஸ்டோக் வந்ததுல நடமாட்டம் இல்லாம இருக்கிறாங்க. நீங்க எது பேசுறதுன்னாலும் என் கிட்ட தான் பேசணும். என்ன பேசணும்ன்னு யோசிக்க டைம் தேவைப்பட்டா டேக் யுவர் டைம். இது என் கார்ட்." என்று தன் கார்ட் ஒன்றை டீபாய் மீது வைத்தவன் எழுந்துக் கொண்டான்.

விஜித் எழுந்ததும் அவன் புறப்படப்போவதை உணர்ந்து மூவரும் எழுந்துக் கொள்ள "பார்க்கலாம்..." என்று பொதுவாக கூறியவன், மான்சியிடம் சிறு தலையசைப்பை கொடுத்துவிட்டு வெளியேறினான்.

"மான் குட்டி அப்பா கொஞ்சம் யோசிக்கணும். நம்ம தகுதிக்கு மீறின இடம்... பின்னாடி வருத்தப்பட கூடாது பாரு." என்று கூறி, அலைப்பேசியை எடுத்துக் கொண்டு தனதறைக்குச் சென்றார்.

"உனக்கு விரும்பம் இல்லாத எதையும் நாங்க செய்ய மாட்டோம். அதே மாதிரி எங்களுக்கு சரியில்லைன்னு தெரிய வந்தா அதையும் நீ ஏத்துக்கணும்." என்று கணவரை பின் தொடர்ந்தார்.

பெற்றவர்கள் இருவரும் பேசி விட்டுச் சென்றதில் உள்ள நியாயம் புரிய, விஜித் விட்டு சென்ற கார்டை தவிப்புடன் பார்த்து விட்டு தனதறைக்கு வந்தாள்.

அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று எல்லா தெய்வங்களிடமும் வேண்டுதல் வைக்க ஆரம்பித்தாள்.

"என்ன செய்யலாம்?" என்று வெண்பா கேட்க,
"சரவணன் கிட்ட பேசியிருக்கேன். அவன் சொல்லட்டும் அதுவரை எந்த முடிவுக்கும் வர வேண்டாம்." என்று திலகன் கூற, வெண்பாவிற்கு மகள் முகமே கண் முன் வந்தது.

அன்று மாலை சரவணன் நேரில் வருவதாக தகவல் தெரிவிக்க, அவருக்காக அனைவரும் காத்திருந்தனர். சொன்ன நேரத்தில் அவரும் வந்து விட அனைவரும் அவர் சொல்ல போவதை கேட்க காத்திருந்தனர்.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல திலகன். கேரக்டர் வெய்ஸ் பார்த்தா விஜித் ரெம்ப நல்லவர் தான். இவ்வளவு சொத்து இருந்தும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. பட் அவர் வயசு... அப்புறம் பிஸினஸ்ல அவர் ஆட்டிடியூடுட் அதான் யோசிக்க வேண்டியது. தென் மான்சி விஷயத்துல அவர் மேலயும் எனக்கு சின்ன டௌட் இருக்கு." என்று சரவணன் கூற, மூவரிடம் மௌனம் மட்டுமே.

"பெட்டர் இத பத்தி நாம அவர் கிட்ட நேர்ல பேசிடலாம்." என்று கூற திலகனும் ஏற்றுக் கொண்டார்.

ஹாய் மக்களே...
கதை உங்களுக்கு பிடிச்சிருக்கா. ஏகலைவனின் ஏந்திழையாள் கதையை முழுமையா கேட்க நினைச்சா எனது ஆடியோ நாவல் சேனல்ல கேட்கலாம்.

 
Top