GG writers
Moderator
அத்தியாயம் 11
விஜித்திடம் பேசி விட்டு வந்த பிறகு மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். எப்படியும் அவன் சும்மா இருக்க மாட்டான் என்று அறிந்து வைத்திருந்தவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை வரும் என்று கணிக்க முடியவில்லை.
இரவு உணவு வரை எந்த பிரச்சனையும் இன்றி அனைத்தும் சரியாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. உணவருந்தி விட்டு மான்சி தனது அறைக்குச் சென்ற பின் திலகனுக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர வெண்பாவிடம் கூறிக் கொண்டு புறப்பட்டார்.
டிரான்ஸ்போர்ட் வேலையில் திலகன் அடிக்கடி இப்படி வெளியேச் செல்வது வாடிக்கையான செயல் தான் என்பதால் அவரும் பெரிதாக பிரச்சனை வரும் என்று நினைக்கவில்லை.
திலகன் டிரான்ஸ்போர்ட் இரவு நேர ஓட்டுனர்கள் இருவர் வரவில்லை என்றதும், பொருட்களை சரியான நேரத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்று வெண்பாவிற்கு தகவல் தெரிவித்து விட்டு திலகனே வழக்கம் போல வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
இரண்டு மணி நேரம் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் தாகம் எடுக்க, வண்டியில் இருந்த தண்ணீரை பருகினார்.
தண்ணீரை குடித்த சில நிமிடத்திலேயே வண்டி அவர் கட்டுப்பாட்டை இழந்தது. பல வருட அனுபவத்தில் திலகன் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு அலுவலகத்திற்கும், வெண்பாவிற்கும் அழைத்து நிலையை கூறினார்.
கார் ட்ரைவரை அழைத்துக் கொண்டு வெண்பா திலகன் இருக்கும் இடத்திற்கு வரும் போது அவர் வண்டிக்குள் மயக்கி கிடந்தார். அவர் இருக்கும் நிலையே தவறாக தோன்ற டிரைவரிடம் வண்டியை ஒப்படைத்து விட்டு கணவரை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
நேற்றிரவு விஜித் தன் பெற்றோரிடம் பேசிய முறையை நினைத்து பார்த்துக் கொண்டிருந்த மான்சிக்கு மனதை யாரோ இறுக்கி பிடிப்பது போல இருந்தது.
பெற்றோர் மீது கொண்ட பாசத்தில் அவனிடம் கோபமாக பேசிவிட்டு வந்தாலும் அவள் காதல் மனது தவித்துக் கொண்டிருந்தது.
இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டு சரி செய்ய வேண்டும் என்று மனதுக்குள்ளே திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். ஆத்திரத்தில் பேசினாலும் அவளுக்கு விஜித்தை பிரியும் எண்ணம் துளியும் இல்லை.
அதிகாலை நான்கு மணிக்கு மான்சி வாட்ஸ்ஆப்பிற்கு காணொளி செய்தி வர, இரவு முழுவதும் தூக்கம் வராமல் விழித்திருந்தவள் உடனே எடுத்து பார்த்தாள்.
முதல் காணொளியில் திலகன் ஓட்டிச் சென்ற வண்டி ஒரு பெண்ணை இடித்து தள்ள, குடி போதையில் அவர் கீழே இறங்கி பார்ப்பது போல இருந்தது.
அடுத்ததாக வந்த காணொளியில் திலகன் கீழே விழுந்த பெண்ணை தனது வண்டிக்குள் தூக்கிச் செல்வது போல பதிவாகியிருக்க, அந்த பெண்ணின் கதறல் மட்டுமே அடுத்து வந்த நிமிடங்களில் கேட்டது.
காணொளியின் காட்சியில் மான்சி கைகள் நடுங்க ஆரம்பித்தது. தன் தந்தை அப்படிப்பட்டவர் அல்ல என்று கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தாலும், குரல் அவள் தொண்டையை விட்டு வெளி வரவில்லை.
கண்ணீர் வழிய செல்போன் திரையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, விஜித் நினைவு வர யோசிக்காமல் அழைத்து விட்டாள். அவள் அழைப்பிற்காகவே காத்திருந்தவனும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றான்.
"என் அப்பா அப்படி பட்டவர் இல்ல..." என்று பேச ஒத்துழைக்காத குரலை சரி செய்து கூற,
"சோ வாட்... சட்டத்துக்கு தேவை சாட்சி மட்டும் தான். அது என் கிட்ட இருக்கு." என்று விஜித் குரலை உயர்த்தாமல் அதிகாரமாகவே கூறினான்.
"இப்போ என் அப்பாவ காப்பாத்த நான் என்ன செய்யணும்?" என்று தன் தந்தைக்காக அவனிடம் யாசகம் கேட்க,
"ஏந்திழையாள் இப்போ என்ன சொல்ற... கல்யாணத்துக்கு தயாரா?" என்று கேட்டவனிடம் சரி என்று கூறியவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது...
"குட்... கெட் ரெடி ஃபார் அவர் மேரேஜ்." என்று கூறி வைத்து விட்டான்.
அதுவரை விஜித் மீது மான்சி வைத்திருந்த காதல், நம்பிக்கை இரண்டும் உடைய ஆரம்பித்தது.
விஜித் பேசி முடித்ததும் நீண்ட நேரமாக யோசித்தவளுக்கு தலைவலி வந்தது மட்டும் தான் மிச்சம். என்ன யோசித்தும் தந்தையை காக்கும் வழி மட்டும் தெரியவில்லை.
வீடியோ விஷயம் தெரிந்தால் தந்தை சிறைக்கு கூட செல்வாரே தவிர, விஜித்துடன் தன் திருமணம் நடைபெற சம்மதிக்க மாட்டார் என்பது உறுதியாக மான்சிக்கு தெரியும்.
விஜித்தின் நல்ல நேரம் திலகனின் நண்பர் சரவணன் பற்றி மான்சிக்கு நினைவு வரவில்லை.
தந்தைக்கு நடந்தது தெரியாமல் அவரை காக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு. மனதிற்குள் பெற்றோரிடம் பேச வேண்டியதை யோசித்துக் கொண்டே கீழே இறங்கி வந்தாள்.
அம்மா மட்டும் தனியே அமர்ந்திருப்பதை பார்த்த மான்சி அவர் அருகில் செல்ல, வெண்பாவின் முகம் யோசனையில் இருந்தது.
"அப்பா எங்க ம்மா?" என்று தந்தையை காணாமல் கேட்க,
"ரூம்ல தூங்குறார்..." என்ற வெண்பா நேற்று நடந்த அனைத்தையும் மகளிடம் கூறினார்.
"நைட் நான் அங்க போகும் போது அப்பா முழு போதை மயக்கத்தில இருந்தார். அப்பாக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது. யார் பார்த்த வேலைன்னு தெரியல." என்று உள்ளங்கையை பார்த்துக் கொண்டே சொல்ல, அதுவே அவர் சந்தேகம் கொள்வது விஜித் என்று காட்டிக் கொடுத்தது.
"ம்மா கல்யாண ஏற்பாட்டை நிறுத்த வேண்டாம். அவர் சொன்ன மாதிரி அடுத்த வாரத்திலே கல்யாணம் நடக்கட்டும்." என்று மான்சி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள்.
"அம்மா சொன்னத கேட்டு பயந்திட்டியா மான் குட்டி. பிரச்சனைக்கு பயந்து உன்ன ஆபத்தில தள்ள எங்களால முடியாது." என்று உறுதியாக வெண்பா மகள் முடிவை மறுத்தார்.
"இல்ல ம்மா... நீங்க இத சொல்லாம இருந்தா கூட நான் உங்க கிட்ட இத பத்தி பேசியிருப்பேன். எனக்கு அவர பிடிக்கும் ம்மா. எங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் கூட ஆகிட்டு. இப்போ நிரந்தரமா என்னால அவர விட்டு வர முடியும்ன்னு தோணல." என்று மனதிற்குள் உரு போட்ட வாசகங்களை பிசிறின்றி கூறி முடித்தாள்.
"நேத்து பேசும் போது இருந்த தைரியம் இப்போ உன் கிட்ட இல்ல மான் குட்டி" என்று வெண்பா மான்சியின் கண்களை பார்த்து கேட்க, அவர் பார்வையை எதிர் கொள்ள முடியாது திணறினாள்.
"அப்போ உங்க பொண்ணா என் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம தைரியமா பேசினேன். ஆனா இப்போ விஜித் ஏகலைவன் மனைவியா உங்க கிட்ட பேசும் போது தைரியம் இல்ல ம்மா. எனக்கு தெரியும் நான் செய்ய சொல்றது உங்களுக்கு பிடிக்காது. ஆனா எனக்கு அவர மட்டும் தான் பிடிச்சிருக்கு." என்று கூற, வெண்பா மகளுக்கு பின் நின்ற கணவரை பார்த்தார்.
"ஓஓ நீங்க சட்டப்படி விஜித் மனைவியாகிட்டீங்க இல்ல. நானும் உங்க அம்மாவும் அத மறந்துட்டோம் பாரு. எங்க குட்டிப் பொண்ணு வளர்ந்துட்டா. இனி பெத்தவங்க இல்லாம அவளுக்கான முடிவ அவளே எடுத்துப்பா." என்று திலகன் கூறும் போதே அவரை மான்சி அணைத்துக் கொண்டாள்.
"நீங்க இல்லாம நான் இல்ல ப்பா... அவருக்கு உங்க மேல என்ன கோபம்ன்னு தெரியாது. சீக்கிரம் அத நான் சரி பண்றேன்." என்ற மான்சிக்கு தான் கூறியது நடக்கும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.
இன்னும் சிறிது நேரம் பெற்றவர்கள் முன் நின்றாலும் அவர்களிடம் உண்மையை உளறிவிடுவோம் என்ற பயத்தில் மான்சி அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
"இப்போ என்ன பண்றதுங்க...?" என்று வெண்பா திலகனிடம் கேட்க,
"இனி நாம செய்ய எதுவும் இல்ல. எதோ கட்டாயத்தில நம்ம பொண்ணு கல்யாணம் பண்ண முடிவெடுத்திருக்கிறா. ஆனா அவ சொல்ற மாதிரி காதல் உண்மை தான். விஜித் கட்டாயப்படுத்தாம இருந்தா இப்ப கேட்டத கொஞ்ச நாள் கழிச்சு கேட்டிருப்பா. மான்சி கல்யாணம் முடிஞ்சதும் நம்ம பழைய வீட்டுக்கு போயிடலாம்." என்று கூற, வெண்பாவும் கணவன் நிலை புரிந்து அவரிடம் கேள்வி கேட்கவில்லை.
நடக்க போவது திலகன் வெண்பாவின் செல்லமகள் திருமணம். ஆனால் அதில் அவர்கள் தலையீடு துளியும் இல்லாத வகையில் விஜித் பார்த்துக் கொண்டான்.
மண்டபத்திற்கான பணத்தை மட்டுமாவது கொடுக்க திலகன் முயற்சிக்க விஜித்திடமிருந்து அழைப்பு வந்தது.
"மொத்த சொத்தையும் மகள் பெயருக்கு மாத்தி கொடுத்துட்டதா ஞாபகம். ஆனா இப்போ என் மனைவி பணத்தை கணக்கில காட்டாம எடுத்து செலவு பண்றீங்க." என்று மட்டும் கூற, பணம் மொத்தத்தையும் மகள் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு வந்து விட்டார்.
இன்னும் சற்று நேரத்தில் திருமணம். ஆனால் பூரிப்பு துளியும் மூவரின் முகத்திலும் இல்லை.
தான் கோடி கணக்கில் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஆசை மகளின் திருமணத்திற்கு ஒன்றும் செய்ய முடியாத தங்கள் நிலையை நினைத்து இருவரும் வருந்தி, விருந்தினர்களாக ஓர் இடத்தில் அமர்ந்திருந்தனர்.
மகளின் அறைக்குச் செல்ல விடாமல் விஜித் காவலுக்கு தன் ஆட்களை நிறுத்தியிருந்தானே. மகள் வெளியே வரும் நேரத்திற்காக அறை வாசலை பார்த்தபடி இருவரும் அமர்ந்திருந்தனர்.
சரியாக முகூர்த்த நேரத்திற்கு மான்சி வெளியே வர, தேவதை போல நடந்து வரும் தங்கள் மகளை பார்க்க திலகன் வெண்பாவிற்கு இரு கண்கள் போதவில்லை.
அறையில் இருந்து வெளி வந்த மான்சியின் கண்களும் பெற்றோரை தேடி அலைபாய, அவர்களை கண்டுக் கொண்ட பின்னே மேடை ஏறினாள்.
"அம்மா அப்பா மேல ரொம்ப பாசமோ?" என்று நக்கலாக விஜித் கேட்க,
"உங்கள விட அதிகம் தான்." என்று மான்சி பெற்றோரை பார்த்துக் கொண்டே பதில் கூறினாள்.
"பாசம் இல்லாத வரை அவங்க நல்லா இருப்பாங்க." என்று விஜித் கூறியதும் பார்வையை அக்னியை நோக்கி திருப்பினாள்.
குறித்த நேரத்தில் மான்சி கழுத்தில் மூன்று முடிச்சிட்டு ஏந்திழையாளை ஏகலைவனின் உடமையாக்கிக் கொண்டான்.
தாலி கட்டி முடித்ததும் மான்சியின் கரம் பற்றி எழுந்த விஜித் மேடையின் ஓரத்தில் சக்கர நாற்காலில் அமர வைக்கப்பட்டிருந்த தன் தாயின் அருகில் வந்தான்.
விஜித் தாயின் பாதம் வணங்க, அவனை தொடர்ந்து மான்சியும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டாள்.
மகன் மீதுள்ள கோபத்தை தாயிடம் காட்ட அவள் மெல்லிய மனது இடமளிக்கவில்லை. உண்மைக்கும் விஜயா மீது அவளுக்கு தான் எந்த கோபமும் இல்லையே.
விஜயா தன் கரத்தில் இருந்த அர்ச்சதையை இருவர் தலையிலும் தூவ, மான்சி வியப்புடன் அவரை பார்த்தாள்.
"இரண்டு நாளுக்கு முன்ன தான் அம்மா கிட்ட இம்ப்ரூவ்மெண்ட் தெரிய ஆரம்பிச்சது. நாம பேசினா புரியும் ஆனாலும் அவங்களால பேச முடியல பட் கை மட்டும் அசைக்கிறாங்க. நீ சொன்ன மாதிரி நம்ம கல்யாணத்துக்கு அம்மா ஆசீர்வாதம் கிடைச்சிட்டு." என்று விஜித் கூற, மான்சிக்கு அவர் குணமானதில் மகிழ்ச்சி தான்.
"நீங்க குணமானதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் அத்தை." என்றவள் அவரை அணைத்து கன்னத்தில் முத்தம் பதிக்க, விஜித் அவள் செயலில் சிரித்துக் கொண்டான்.
விஜித் தன்னை பார்த்து சிரிப்பதை கண்டு அவனை முறைத்த படி மான்சி தள்ளி நின்றாள். மான்சி தள்ளி நின்ற பின்பே விஜயாவை முழுதாக வெண்பாவினால் பார்க்க முடிந்தது.
"என்னங்க அது விஜயா அண்ணி...!" என்று வெண்பா அதிர்ச்சியுடன் கூற, திலகனுக்கு மனைவி யாரை பற்றி கூறுகின்றாள் என்று புரியவில்லை.
"யாரை சொல்ற வெண்பா?" என்று கேட்க, விஜயாவை திலகனுக்கு காட்டி
"என்னோட தாய் மாமா செல்வராஜ் பொண்ணு எனக்கு அண்ணி." என்று விளக்கம் கொடுக்க, அப்போது தான் திலகனுக்கு புரிந்தது.
மான்சியை இழுத்து தன் அருகில் நிறுத்திய விஜித் மறு கையால் விஜயாவின் தோளை பிடித்துக் கொண்டு திலகன், வெண்பாவை பார்த்தான்.
'இப்போது புரிகின்றதா?' என்று பார்வையால் அவன் கேள்வி கேட்க, புரிந்துக் கொண்ட வெண்பா கணவரை அழைத்துக் கொண்டு மகளிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
விஜித்திடம் பேசி விட்டு வந்த பிறகு மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். எப்படியும் அவன் சும்மா இருக்க மாட்டான் என்று அறிந்து வைத்திருந்தவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை வரும் என்று கணிக்க முடியவில்லை.
இரவு உணவு வரை எந்த பிரச்சனையும் இன்றி அனைத்தும் சரியாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. உணவருந்தி விட்டு மான்சி தனது அறைக்குச் சென்ற பின் திலகனுக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர வெண்பாவிடம் கூறிக் கொண்டு புறப்பட்டார்.
டிரான்ஸ்போர்ட் வேலையில் திலகன் அடிக்கடி இப்படி வெளியேச் செல்வது வாடிக்கையான செயல் தான் என்பதால் அவரும் பெரிதாக பிரச்சனை வரும் என்று நினைக்கவில்லை.
திலகன் டிரான்ஸ்போர்ட் இரவு நேர ஓட்டுனர்கள் இருவர் வரவில்லை என்றதும், பொருட்களை சரியான நேரத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்று வெண்பாவிற்கு தகவல் தெரிவித்து விட்டு திலகனே வழக்கம் போல வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
இரண்டு மணி நேரம் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் தாகம் எடுக்க, வண்டியில் இருந்த தண்ணீரை பருகினார்.
தண்ணீரை குடித்த சில நிமிடத்திலேயே வண்டி அவர் கட்டுப்பாட்டை இழந்தது. பல வருட அனுபவத்தில் திலகன் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு அலுவலகத்திற்கும், வெண்பாவிற்கும் அழைத்து நிலையை கூறினார்.
கார் ட்ரைவரை அழைத்துக் கொண்டு வெண்பா திலகன் இருக்கும் இடத்திற்கு வரும் போது அவர் வண்டிக்குள் மயக்கி கிடந்தார். அவர் இருக்கும் நிலையே தவறாக தோன்ற டிரைவரிடம் வண்டியை ஒப்படைத்து விட்டு கணவரை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
நேற்றிரவு விஜித் தன் பெற்றோரிடம் பேசிய முறையை நினைத்து பார்த்துக் கொண்டிருந்த மான்சிக்கு மனதை யாரோ இறுக்கி பிடிப்பது போல இருந்தது.
பெற்றோர் மீது கொண்ட பாசத்தில் அவனிடம் கோபமாக பேசிவிட்டு வந்தாலும் அவள் காதல் மனது தவித்துக் கொண்டிருந்தது.
இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டு சரி செய்ய வேண்டும் என்று மனதுக்குள்ளே திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். ஆத்திரத்தில் பேசினாலும் அவளுக்கு விஜித்தை பிரியும் எண்ணம் துளியும் இல்லை.
அதிகாலை நான்கு மணிக்கு மான்சி வாட்ஸ்ஆப்பிற்கு காணொளி செய்தி வர, இரவு முழுவதும் தூக்கம் வராமல் விழித்திருந்தவள் உடனே எடுத்து பார்த்தாள்.
முதல் காணொளியில் திலகன் ஓட்டிச் சென்ற வண்டி ஒரு பெண்ணை இடித்து தள்ள, குடி போதையில் அவர் கீழே இறங்கி பார்ப்பது போல இருந்தது.
அடுத்ததாக வந்த காணொளியில் திலகன் கீழே விழுந்த பெண்ணை தனது வண்டிக்குள் தூக்கிச் செல்வது போல பதிவாகியிருக்க, அந்த பெண்ணின் கதறல் மட்டுமே அடுத்து வந்த நிமிடங்களில் கேட்டது.
காணொளியின் காட்சியில் மான்சி கைகள் நடுங்க ஆரம்பித்தது. தன் தந்தை அப்படிப்பட்டவர் அல்ல என்று கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தாலும், குரல் அவள் தொண்டையை விட்டு வெளி வரவில்லை.
கண்ணீர் வழிய செல்போன் திரையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, விஜித் நினைவு வர யோசிக்காமல் அழைத்து விட்டாள். அவள் அழைப்பிற்காகவே காத்திருந்தவனும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றான்.
"என் அப்பா அப்படி பட்டவர் இல்ல..." என்று பேச ஒத்துழைக்காத குரலை சரி செய்து கூற,
"சோ வாட்... சட்டத்துக்கு தேவை சாட்சி மட்டும் தான். அது என் கிட்ட இருக்கு." என்று விஜித் குரலை உயர்த்தாமல் அதிகாரமாகவே கூறினான்.
"இப்போ என் அப்பாவ காப்பாத்த நான் என்ன செய்யணும்?" என்று தன் தந்தைக்காக அவனிடம் யாசகம் கேட்க,
"ஏந்திழையாள் இப்போ என்ன சொல்ற... கல்யாணத்துக்கு தயாரா?" என்று கேட்டவனிடம் சரி என்று கூறியவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது...
"குட்... கெட் ரெடி ஃபார் அவர் மேரேஜ்." என்று கூறி வைத்து விட்டான்.
அதுவரை விஜித் மீது மான்சி வைத்திருந்த காதல், நம்பிக்கை இரண்டும் உடைய ஆரம்பித்தது.
விஜித் பேசி முடித்ததும் நீண்ட நேரமாக யோசித்தவளுக்கு தலைவலி வந்தது மட்டும் தான் மிச்சம். என்ன யோசித்தும் தந்தையை காக்கும் வழி மட்டும் தெரியவில்லை.
வீடியோ விஷயம் தெரிந்தால் தந்தை சிறைக்கு கூட செல்வாரே தவிர, விஜித்துடன் தன் திருமணம் நடைபெற சம்மதிக்க மாட்டார் என்பது உறுதியாக மான்சிக்கு தெரியும்.
விஜித்தின் நல்ல நேரம் திலகனின் நண்பர் சரவணன் பற்றி மான்சிக்கு நினைவு வரவில்லை.
தந்தைக்கு நடந்தது தெரியாமல் அவரை காக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு. மனதிற்குள் பெற்றோரிடம் பேச வேண்டியதை யோசித்துக் கொண்டே கீழே இறங்கி வந்தாள்.
அம்மா மட்டும் தனியே அமர்ந்திருப்பதை பார்த்த மான்சி அவர் அருகில் செல்ல, வெண்பாவின் முகம் யோசனையில் இருந்தது.
"அப்பா எங்க ம்மா?" என்று தந்தையை காணாமல் கேட்க,
"ரூம்ல தூங்குறார்..." என்ற வெண்பா நேற்று நடந்த அனைத்தையும் மகளிடம் கூறினார்.
"நைட் நான் அங்க போகும் போது அப்பா முழு போதை மயக்கத்தில இருந்தார். அப்பாக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது. யார் பார்த்த வேலைன்னு தெரியல." என்று உள்ளங்கையை பார்த்துக் கொண்டே சொல்ல, அதுவே அவர் சந்தேகம் கொள்வது விஜித் என்று காட்டிக் கொடுத்தது.
"ம்மா கல்யாண ஏற்பாட்டை நிறுத்த வேண்டாம். அவர் சொன்ன மாதிரி அடுத்த வாரத்திலே கல்யாணம் நடக்கட்டும்." என்று மான்சி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள்.
"அம்மா சொன்னத கேட்டு பயந்திட்டியா மான் குட்டி. பிரச்சனைக்கு பயந்து உன்ன ஆபத்தில தள்ள எங்களால முடியாது." என்று உறுதியாக வெண்பா மகள் முடிவை மறுத்தார்.
"இல்ல ம்மா... நீங்க இத சொல்லாம இருந்தா கூட நான் உங்க கிட்ட இத பத்தி பேசியிருப்பேன். எனக்கு அவர பிடிக்கும் ம்மா. எங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் கூட ஆகிட்டு. இப்போ நிரந்தரமா என்னால அவர விட்டு வர முடியும்ன்னு தோணல." என்று மனதிற்குள் உரு போட்ட வாசகங்களை பிசிறின்றி கூறி முடித்தாள்.
"நேத்து பேசும் போது இருந்த தைரியம் இப்போ உன் கிட்ட இல்ல மான் குட்டி" என்று வெண்பா மான்சியின் கண்களை பார்த்து கேட்க, அவர் பார்வையை எதிர் கொள்ள முடியாது திணறினாள்.
"அப்போ உங்க பொண்ணா என் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம தைரியமா பேசினேன். ஆனா இப்போ விஜித் ஏகலைவன் மனைவியா உங்க கிட்ட பேசும் போது தைரியம் இல்ல ம்மா. எனக்கு தெரியும் நான் செய்ய சொல்றது உங்களுக்கு பிடிக்காது. ஆனா எனக்கு அவர மட்டும் தான் பிடிச்சிருக்கு." என்று கூற, வெண்பா மகளுக்கு பின் நின்ற கணவரை பார்த்தார்.
"ஓஓ நீங்க சட்டப்படி விஜித் மனைவியாகிட்டீங்க இல்ல. நானும் உங்க அம்மாவும் அத மறந்துட்டோம் பாரு. எங்க குட்டிப் பொண்ணு வளர்ந்துட்டா. இனி பெத்தவங்க இல்லாம அவளுக்கான முடிவ அவளே எடுத்துப்பா." என்று திலகன் கூறும் போதே அவரை மான்சி அணைத்துக் கொண்டாள்.
"நீங்க இல்லாம நான் இல்ல ப்பா... அவருக்கு உங்க மேல என்ன கோபம்ன்னு தெரியாது. சீக்கிரம் அத நான் சரி பண்றேன்." என்ற மான்சிக்கு தான் கூறியது நடக்கும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.
இன்னும் சிறிது நேரம் பெற்றவர்கள் முன் நின்றாலும் அவர்களிடம் உண்மையை உளறிவிடுவோம் என்ற பயத்தில் மான்சி அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
"இப்போ என்ன பண்றதுங்க...?" என்று வெண்பா திலகனிடம் கேட்க,
"இனி நாம செய்ய எதுவும் இல்ல. எதோ கட்டாயத்தில நம்ம பொண்ணு கல்யாணம் பண்ண முடிவெடுத்திருக்கிறா. ஆனா அவ சொல்ற மாதிரி காதல் உண்மை தான். விஜித் கட்டாயப்படுத்தாம இருந்தா இப்ப கேட்டத கொஞ்ச நாள் கழிச்சு கேட்டிருப்பா. மான்சி கல்யாணம் முடிஞ்சதும் நம்ம பழைய வீட்டுக்கு போயிடலாம்." என்று கூற, வெண்பாவும் கணவன் நிலை புரிந்து அவரிடம் கேள்வி கேட்கவில்லை.
நடக்க போவது திலகன் வெண்பாவின் செல்லமகள் திருமணம். ஆனால் அதில் அவர்கள் தலையீடு துளியும் இல்லாத வகையில் விஜித் பார்த்துக் கொண்டான்.
மண்டபத்திற்கான பணத்தை மட்டுமாவது கொடுக்க திலகன் முயற்சிக்க விஜித்திடமிருந்து அழைப்பு வந்தது.
"மொத்த சொத்தையும் மகள் பெயருக்கு மாத்தி கொடுத்துட்டதா ஞாபகம். ஆனா இப்போ என் மனைவி பணத்தை கணக்கில காட்டாம எடுத்து செலவு பண்றீங்க." என்று மட்டும் கூற, பணம் மொத்தத்தையும் மகள் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு வந்து விட்டார்.
இன்னும் சற்று நேரத்தில் திருமணம். ஆனால் பூரிப்பு துளியும் மூவரின் முகத்திலும் இல்லை.
தான் கோடி கணக்கில் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஆசை மகளின் திருமணத்திற்கு ஒன்றும் செய்ய முடியாத தங்கள் நிலையை நினைத்து இருவரும் வருந்தி, விருந்தினர்களாக ஓர் இடத்தில் அமர்ந்திருந்தனர்.
மகளின் அறைக்குச் செல்ல விடாமல் விஜித் காவலுக்கு தன் ஆட்களை நிறுத்தியிருந்தானே. மகள் வெளியே வரும் நேரத்திற்காக அறை வாசலை பார்த்தபடி இருவரும் அமர்ந்திருந்தனர்.
சரியாக முகூர்த்த நேரத்திற்கு மான்சி வெளியே வர, தேவதை போல நடந்து வரும் தங்கள் மகளை பார்க்க திலகன் வெண்பாவிற்கு இரு கண்கள் போதவில்லை.
அறையில் இருந்து வெளி வந்த மான்சியின் கண்களும் பெற்றோரை தேடி அலைபாய, அவர்களை கண்டுக் கொண்ட பின்னே மேடை ஏறினாள்.
"அம்மா அப்பா மேல ரொம்ப பாசமோ?" என்று நக்கலாக விஜித் கேட்க,
"உங்கள விட அதிகம் தான்." என்று மான்சி பெற்றோரை பார்த்துக் கொண்டே பதில் கூறினாள்.
"பாசம் இல்லாத வரை அவங்க நல்லா இருப்பாங்க." என்று விஜித் கூறியதும் பார்வையை அக்னியை நோக்கி திருப்பினாள்.
குறித்த நேரத்தில் மான்சி கழுத்தில் மூன்று முடிச்சிட்டு ஏந்திழையாளை ஏகலைவனின் உடமையாக்கிக் கொண்டான்.
தாலி கட்டி முடித்ததும் மான்சியின் கரம் பற்றி எழுந்த விஜித் மேடையின் ஓரத்தில் சக்கர நாற்காலில் அமர வைக்கப்பட்டிருந்த தன் தாயின் அருகில் வந்தான்.
விஜித் தாயின் பாதம் வணங்க, அவனை தொடர்ந்து மான்சியும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டாள்.
மகன் மீதுள்ள கோபத்தை தாயிடம் காட்ட அவள் மெல்லிய மனது இடமளிக்கவில்லை. உண்மைக்கும் விஜயா மீது அவளுக்கு தான் எந்த கோபமும் இல்லையே.
விஜயா தன் கரத்தில் இருந்த அர்ச்சதையை இருவர் தலையிலும் தூவ, மான்சி வியப்புடன் அவரை பார்த்தாள்.
"இரண்டு நாளுக்கு முன்ன தான் அம்மா கிட்ட இம்ப்ரூவ்மெண்ட் தெரிய ஆரம்பிச்சது. நாம பேசினா புரியும் ஆனாலும் அவங்களால பேச முடியல பட் கை மட்டும் அசைக்கிறாங்க. நீ சொன்ன மாதிரி நம்ம கல்யாணத்துக்கு அம்மா ஆசீர்வாதம் கிடைச்சிட்டு." என்று விஜித் கூற, மான்சிக்கு அவர் குணமானதில் மகிழ்ச்சி தான்.
"நீங்க குணமானதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் அத்தை." என்றவள் அவரை அணைத்து கன்னத்தில் முத்தம் பதிக்க, விஜித் அவள் செயலில் சிரித்துக் கொண்டான்.
விஜித் தன்னை பார்த்து சிரிப்பதை கண்டு அவனை முறைத்த படி மான்சி தள்ளி நின்றாள். மான்சி தள்ளி நின்ற பின்பே விஜயாவை முழுதாக வெண்பாவினால் பார்க்க முடிந்தது.
"என்னங்க அது விஜயா அண்ணி...!" என்று வெண்பா அதிர்ச்சியுடன் கூற, திலகனுக்கு மனைவி யாரை பற்றி கூறுகின்றாள் என்று புரியவில்லை.
"யாரை சொல்ற வெண்பா?" என்று கேட்க, விஜயாவை திலகனுக்கு காட்டி
"என்னோட தாய் மாமா செல்வராஜ் பொண்ணு எனக்கு அண்ணி." என்று விளக்கம் கொடுக்க, அப்போது தான் திலகனுக்கு புரிந்தது.
மான்சியை இழுத்து தன் அருகில் நிறுத்திய விஜித் மறு கையால் விஜயாவின் தோளை பிடித்துக் கொண்டு திலகன், வெண்பாவை பார்த்தான்.
'இப்போது புரிகின்றதா?' என்று பார்வையால் அவன் கேள்வி கேட்க, புரிந்துக் கொண்ட வெண்பா கணவரை அழைத்துக் கொண்டு மகளிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.