GG writers
Moderator
அத்தியாயம் 17
16 ஆண்டுகளுக்கு முன்...
பள்ளி ஆண்டு விழாவில் ஏழு வயது மான்சி பயத்துடனே முதல் முறை மைக் பிடித்து பாடிக் கொண்டிருந்தாள்.
மேடையில் நிற்கும் போது விளக்கின் ஔியில் எதுவும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை. கண்களுக்கு அனைத்தும் இருளாக இருந்தாலும் அம்மா அருகில் இருப்பார் என்ற தைரியம் அவளை பாட வைத்தது.
மான்சியின் மழலை குரலை ரசித்துக் கொண்டிருந்த விஜயா தனது கேமராவில் படம் பிடித்துக் கொண்டார்.
பாடி முடித்த மான்சி கீழே இறங்க திரும்ப, வெண்பா ஓடி வந்து மகளை அணைத்து முத்தமிட்டபடி தூக்கிக் கொண்டார். பார்க்கும் யாருக்கும் மான்சி குறை தெரிய விடாது கவனமாக நடந்துக் கொண்டார்.
மான்சி பாடும் வரை மழலை குரலில் பாடலை ரசித்துக் கொண்டிருந்த விஜயா, அவளை தூக்கிச் சென்ற வெண்பாவை பார்த்ததும் விழிகள் அதிர்ந்து விரிந்தது. ஓடிச் சென்று பேசும் ஆசை இருந்தாலும் வெண்பா தன்னிடம் பேச மாட்டார் என்று ஒதுங்கிக் கொண்டார்.
பல வருடம் கழிந்தாலும் தன் மீது வெண்பாவிற்கு கோபம் இருக்கும் என்ற பயத்தில் விஜயா வெண்பாவை நெருங்கவில்லை.
சுற்றுலாவிற்காக கணவன் மற்றும் மகனுடன் கேரளா வந்தவர் திரும்பும் வழியில் கார் பழுதாகி மான்சி படிக்கும் பள்ளி முன் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
விஜயா இயற்கை காட்சியை படம் பிடிக்க ஆரம்பிக்க, சரியாக அதே நேரம் மான்சி மேடையில் பாட தொடங்கினாள். இசை பிரியையான விஜயா தன்னை மறந்து மேடை எதிரே வந்து நின்று பாடலை ரசித்துக் கொண்டிருந்தார்.
தனது கையில் இருந்த கேமராவில் பாடல் பாடும் மான்சியின் உருவத்தை பதிவு செய்யவும் தவறவில்லை.
பாடல் முடிந்ததும் மான்சியை தூக்கிச் சென்ற வெண்பாவை பார்த்ததும் எதிலிருந்தோ தப்பும் உணர்வுடன் காருக்கு வர, பழுது நீக்கிவிட்டதாக விஜித் கூற காரில் ஏறிக் கொண்டார்.
விஜயா காரில் அமர்ந்து கண்ணாடியை ஏற்றிக் கொள்ளும் நேரம் வெண்பா கணவன் மகளுடன் நடந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தார்.
மூவரையும் கண்ணாடிக்கு பின் இருந்து பார்த்துக் கொண்ட விஜயாவின் பயணம் பல யோசனைகளுடன் தொடங்கியது.
சென்னை வீட்டிற்கு வந்த விஜயா மான்சி புகைப்படத்தை பெரிதாக சட்டமிட்டு ஒரு அறையில் விஜித் கைகளால் மாட்ட சொன்னார். விஜித் தாய் சொல்லை தட்டாத தனையனாக போட்டோவை மாட்டி முடித்தான்.
"நீ ஏந்திழையாளை கல்யாணம் பண்ணிக்கோ விஜித்..." என்று விஜயா மான்சி புகைப்படத்தை தடவி பார்த்தபடி கூற...
"மாம்... இது உங்களுக்கே ஓவரா தெரியலையா. இந்த குட்டிப் பொண்ண நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும்?" என்று கேலியாகவே பதினெட்டு வயது வாலிபனான விஜித் கேட்டான்.
'ஏந்திழையாளை சீக்கிரம் மிஸஸ்.ஏகலைவனா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்.' என்று புகைப்படத்தின் அடியில் தேதியுடன் எழுதி வைத்தார்.
"ம்மா..." என்று விஜித் கத்தியதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
"ம்மா இந்த குழந்தை வளரும் முன்ன எனக்கு குறைஞ்சது ரெண்டு குழந்தை இருக்கும்." என்று நிதர்சனத்தை கூற, விஜயா தனது எண்ணம் நிறைவேறாதோ என்ற வருத்தத்துடன் மகனை பார்த்தார்.
தாயின் வருத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாத விஜித் அவரை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
"இப்போ எதுக்கு இவ்வளவு ஃபீலிங். கல்யாணத்தை பத்தி இப்பவே பேச்சு எதுக்கு? அதுவும் சின்னப் பொண்ணு கூட." என்று கேட்க, பதில் கூற முடியாது விஜயா தலையை குனிந்துக் கொண்டார்.
"வெண்பா என் அத்தை பொண்ணு எனக்கு பெஸ்ட் ப்ரெண்டும் கூட. உனக்கே தெரியும் அப்பா கூட என் கல்யாணம் நடந்ததுக்கு அப்புறம் என் வீட்டு ஆளுங்க என் கூட பேசுறதில்லை. இந்த கல்யாணம் நடந்தா எனக்கு என் சொந்தம் கிடைக்கும்." என்று விஜித்திடம் எதனால் அவர்கள் பேசவில்லை என்ற உண்மையை மறைத்து கூறினார்.
"அதுக்கு இந்த குட்டிப் பொண்ண எப்படி கல்யாணம் பண்ண முடியும். உங்க சொந்தத்தில் வேற முறைப் பொண்ணு இல்லையா?" என்று விஜித் கேட்க,
"கட்டிக்கிற முறையில மான்சி ஏந்திழையாள் மட்டும் தான் இருக்கிறா." என்று கூற விஜித் பெரும்மூச்சுடன் தலையசைத்து எழுந்துக் கொண்டான்.
விஜித் சென்றதும் விஜயாவின் நினைவுகள் கடந்த காலத்தை நினைத்து பார்த்தது.
பதினாறு வயது விஜயாவுக்கும் தன் ஊருக்கு தொழிற்சாலை கட்ட இடம் வாங்க அடிக்கடி வந்துச் செல்லும் சர்வஜித்திற்கும் எப்படி என்று தெரியாமலேயே காதல் மலர்ந்தது.
காதல் பயிர் வளர்த்த பிறகு தான் அவருக்கு திருமணமாகி ஆறு வயதில் மகன் இருப்பதே விஜயாவிற்கு தெரிய வந்தது. முதலில் உண்மையை கூறாமல் மறைத்ததற்கு கத்தி சண்டையிட்ட விஜயா சர்வஜித் மனைவி உயிருடன் இல்லை, விஜித் பிறக்கும் போதே இறந்து விட்டார் என்பதில் இறங்கி வந்தார்.
அரசாங்கம் இலவசமாக கொடுத்த கணினியில் மின்னஞ்சல் வழியாக விஜயா தனது காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் விஜயா மடிக்கணினியை வெண்பா பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது விஜயா தந்தை செல்வராஜ் வந்துவிட்டார்.
எப்பொழுதும் பெண் பிள்ளை மீது நம்பிக்கை இல்லாதவர் வெண்பாவிடமிருந்து கணினியை பறித்து ஆராய, சற்று நேரத்திற்கு முன் விஜயா பயன்படுத்திய மின்னஞ்சல் பக்கம் திறந்து இருந்தது.
அதில் இருந்த அனைத்தையும் படித்து முடித்தவர் வெண்பாவை பேச விடாமல் அடி வெளுத்து விட்டார்.
தெருவில் அனைவரும் வேடிக்கை பார்த்ததை கருத்தில் கொள்ளாது அடித்தே வெண்பாவை அவள் வீட்டிற்கு இழுத்து வந்தவர் மின்னஞ்சல் பற்றி கூற, வெண்பாவின் பெற்றோர் மகள் மீது கொண்ட நம்பிக்கையில் செல்வராஜ் கூறியதை நம்பவில்லை.
தனது வீட்டில் இருந்து கணினியை எடுத்து வந்து காட்டினார். அரசு அனைவருக்கும் ஒரே மாதிரி கணிணி கொடுத்திருப்பதால் அது விஜயாவினுடையது என்று யாருக்கும் தெரியவில்லை.
உண்மை உணர்ந்த விஜயா தான் மாட்டிக் கொள்ள கூடாது என்று வெண்பா கணினியில் தன் புகைப்படத்தை வால்பேப்பராக வைத்துக் கொண்டாள்.
"அப்பா அது விஜயா அண்ணி லேப்டாப்." என்று வெண்பா வலியை தாங்கிக் கொண்டு கூற, செல்வராஜ் அனல் தெறிக்க மகளை பார்த்தார்.
"ஐயோ அப்பா வெண்பா பொய் சொல்றா. என்னாேடது இங்க இருக்கு" என்று திறந்து காட்ட, அதில் விஜயா புகைப்படம் மின்னியது.
அதன் பின் வெண்பா கூறியதை யாரும் நம்பாமல் திட்டிக் கொண்டிருந்தனர். மறுநாள் விஜயா காணாமல் போகும் வரை வெண்பா செய்யாத தவறுக்கு பழியை ஏற்று மூலையில் முடங்கி கிடந்தாள்.
'அப்பா வெண்பா மேல தப்பு இல்ல. என்னோட லேப்டாப் தான் அது. நான் காதலிச்சவர் கூட போறேன்.' என்று விஜயா எழுதிய கடிதம் கிடைத்த பின்னரே வெண்பா தப்பித்தாள்.
அடுத்த நாள் விஜயா சர்வஜித்துடன் வந்து நிற்க குடும்பம் மொத்தமும் வெண்பா வாங்கிய அடிகளை நினைத்து அவர்களை விரட்டியது.
வெண்பாவை தனியாக சந்தித்த விஜயா மன்னிப்பு கேட்க, "தயவு செய்து இனி என் முகத்தில முழிக்காத." என்று கூறி விட்டார்.
அதன் பிறகு பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு வெண்பாவை பார்க்கின்றார். பழைய நட்பு கண் முன் நின்றாலும் மகனிடம் சிலதை கூறி தனது நல்ல பிம்பத்தை உடைக்க முடியவில்லை.
தந்தை விஜயாவை காதல் திருமணம் செய்துக் கொண்டார் என்பது வரை மட்டுமே அவனுக்கு தெரியும். மற்ற பிரச்சனை எதுவும் தெரியாது.
திருமணம் முடித்து வந்த விஜயாவிற்கு முரட்டு குழந்தை விஜித்தை சமாளிப்பது பெரிய வேலையாக இருந்தது.
சாதாரணமாக பேசினாலும் அன்னையாக அவரை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. விஜித் மட்டும் போதும் என்று விஜயா குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்டதை தெரிந்துக் கொண்ட பின்னே விஜித் அவரை அன்னையாக ஏற்றுக் கொண்டான்.
விஜயாவும் கணவன் தன் மீது காதலை பொழிய, தனக்கு குழந்தை வேண்டும் என்று நினைக்காமல் தனது குழந்தையாகவே விஜித்தை வளர்த்தார்.
இப்போது வெண்பாவை பார்த்ததும் தனது சொந்தம் வேண்டும் என்று நினைத்தவர் விஜித் மூலம் தன் உறவுகளை தன் பக்கம் இழுக்க நினைத்தார்.
பதினாறு வயதில் தாயாக பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் என்னவோ முப்பது நெருங்கும் முன் தனக்கு முதுமையடைந்தது போல நினைத்துக் கொண்டார்.
இறுதி காலத்திலாவது சொந்தங்கள் வேண்டும் என்ற அவரது எண்ணத்தை நிறைவேற்ற கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு தான் மான்சி.
சர்வஜித் விஜயாவை தங்கமாக தாங்கினாலும் தாய் வீடு தேடியது அவரது உள்ளம். விஜித் யாரையும் காதலித்து விட்டால் தனது எண்ணம் நிறைவேறாது என்பதால் அவனிடம் இப்போதே தனது ஆசையை கூறிவிட்டார்.
விஜயா நினைத்தது போலவே விஜித் மனதில் மான்சி பற்றிய நினைவு சிறு விதையாக விழுந்தது. ஆனாலும் மான்சியின் வயது அவனை மேற்கொண்டு யோசிக்கவிடவில்லை.
ஏரோனாட்டிக்கல் இஞ்சினியரிங் முடித்து இந்திய விமானப்படையில் அவன் இணையும் போது யாரின் எதிர்ப்பையும் கருத்தில் கொள்ளவில்லை.
சில நாடுகளில் இளைஞர்கள் கட்டாயம் ராணுவத்தில் பணி செய்வது போல தானும் சில வருடம் பணி செய்துவிட்டு வருகின்றேன் என்று புறப்பட்டுவிட்டான்.
விஜித் சொன்னது போலவே சில வருடங்களில் ராணுவ வேலையை விட்டுவிட்டு வந்து தந்தையின் ஏர்லைன்ஸ் பிசினஸ் எடுத்து நடத்த ஆரம்பித்தான். அப்போதே அவனுக்கு சர்வஜித் தீவிரமாக பெண் தேட ஆரம்பித்திருந்தார்.
விஜயா மீண்டும் தனது ஆசையை சர்வஜித்திடம் கூறும் முன் வெண்பாவிடம் பேசிவிட வேண்டும் என்று யாரிடமும் கூறிடாமல் புறப்பட்டார்.
அப்போது ஒரு சில படங்களில் மான்சி பாடகியாக பாடல் பாடியிருக்க, அவளை பற்றிய தகவலை தெரிந்துக் கொள்வது பெரிதாக இருக்கவில்லை.
விஜயா வெண்பாவை பார்க்க வந்த நேரம் வீட்டில் திலகன், மான்சி இருவரும் இல்லை. வெண்பா மட்டுமே தனியாக இருந்தார்.
அழைப்பு மணி ஓசையில் கதவை திறந்த வெண்பாவிற்கு விஜயாவை சட்டென்று அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை.
தன் எதிரில் நிற்கும் நவநாகரீக பெண்ணை கிராமத்து விஜயாவும் பொருத்தி பார்த்து கண்டு பிடிக்கவே சில நிமிடம் தேவைப்பட்டது.
விஜயா மீது கோபம் மலையளவு வந்தாலும் அதை காட்ட விரும்பாது இன்முகமாய் வரவேற்று உபசரித்தார். வெண்பாவின் உபசரிப்பில் மகிழ்ந்த விஜயா வந்த விசயத்தை கூற அவர் முகம் மாற ஆரம்பித்தது.
"அண்ணி உங்கள கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு நீங்க வந்ததும் சாதாரணமா பேசினேன். அதுக்காக உங்க கூட உறவ வளர்க்க முடியாது. ஏற்கனவே என் வீட்டுக்காரர் பக்க உறவு எனக்கு சரி இல்லை. இதுல என் பக்க உறவையும் பகைச்சிக்க முடியாது.
வயசு வித்தியாசம், சாதி இப்படி பல தடைய கடந்து கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என் பொண்ணுக்கு இன்னும் வரல. அது மட்டுமில்ல நீங்க பொண்ணு கேட்டு வந்திருக்கிறது உங்க கணவரோட பையனுக்கு உங்க பையனுக்கு இல்ல." என்று வெண்பா உண்மையை முகத்தில் அடித்தார் போல கூறியே மறுத்து விட்டார்.
"எல்லாத்துக்கும் மேல உங்கள சார்ந்தவங்களுக்கு கஷ்டம் வரும் போது அவங்களுக்காக பேசுற தைரியம் இல்லாத உங்கள நம்பி என் பொண்ண எப்படி அனுப்ப முடியும்." என்று கூற விஜயா மனதளவில் நொறுங்கி விட்டார்.
தன் மகளுக்கு இந்த வரன் தேவையில்லை என்று நினைத்ததால் என்னவோ வெண்பாவிற்கு விஜித் பற்றிய விவரம் எதுவும் மனதில் பதியவில்லை.
கல்லூரி முதல் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மகளுக்கு அடுத்த வருடம் முப்பது வயதை அடைய போகும் ஒருவன் மாப்பிள்ளையா என்று நினைக்கவே பயமாக இருந்தது.
மகளுக்கான எதிர்கால துணையை பற்றி அவருக்கு இருந்த எதிர்பார்ப்பு எதிலும் விஜித் அப்போது இல்லை என்பது தான் உண்மை.
வசதியை விட மகளின் பிரச்சனை தெரிந்தும் அதை குறையாக நினைக்காமல் தாங்கும் குடும்பத்தை எதிர்பார்த்தார்.
சிறு வயதில் செய்யாத தவறுக்கு அடி வாங்கிய போது தடுக்காத விஜயா, நாளை தன் மகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் எப்படி அவள் பக்கம் நிற்பார் என்ற கேள்வியே விஜயாவின் வீட்டிற்கு மான்சியை மருமகளாக்கும் எண்ணத்தை வளர விடாமல் செய்தது.
விஜயா சென்றதும் வந்த திலகனிடம் எதையும் மறைக்காமல் கூறவும் செய்தார்.
சோகமாக வீட்டிற்கு வந்த விஜயா விஜித்திடம் வெண்பா கூறியதை கூற, பார்க்காமலே வெண்பா பற்றிய பிம்பம் தவறாக அவன் மனதில் பதிந்தது.
"பொண்ணு தர மாட்டேன்னு சொன்னத விட, நீ என் பையன் இல்லன்னு சொன்னது தான் கஷ்டமாக இருக்கு." என்ற விஜயாவிற்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
முதல் முறை விஜயா அழுகையை பார்த்த விஜித்திற்கு கோபம் கட்டுக்கடங்காமல் எழுந்தது. ஆனாலும் மான்சியை அதற்காக திருமணம் செய்யும் எண்ணம் அவனுக்கு வரவில்லை.
16 ஆண்டுகளுக்கு முன்...
பள்ளி ஆண்டு விழாவில் ஏழு வயது மான்சி பயத்துடனே முதல் முறை மைக் பிடித்து பாடிக் கொண்டிருந்தாள்.
மேடையில் நிற்கும் போது விளக்கின் ஔியில் எதுவும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை. கண்களுக்கு அனைத்தும் இருளாக இருந்தாலும் அம்மா அருகில் இருப்பார் என்ற தைரியம் அவளை பாட வைத்தது.
மான்சியின் மழலை குரலை ரசித்துக் கொண்டிருந்த விஜயா தனது கேமராவில் படம் பிடித்துக் கொண்டார்.
பாடி முடித்த மான்சி கீழே இறங்க திரும்ப, வெண்பா ஓடி வந்து மகளை அணைத்து முத்தமிட்டபடி தூக்கிக் கொண்டார். பார்க்கும் யாருக்கும் மான்சி குறை தெரிய விடாது கவனமாக நடந்துக் கொண்டார்.
மான்சி பாடும் வரை மழலை குரலில் பாடலை ரசித்துக் கொண்டிருந்த விஜயா, அவளை தூக்கிச் சென்ற வெண்பாவை பார்த்ததும் விழிகள் அதிர்ந்து விரிந்தது. ஓடிச் சென்று பேசும் ஆசை இருந்தாலும் வெண்பா தன்னிடம் பேச மாட்டார் என்று ஒதுங்கிக் கொண்டார்.
பல வருடம் கழிந்தாலும் தன் மீது வெண்பாவிற்கு கோபம் இருக்கும் என்ற பயத்தில் விஜயா வெண்பாவை நெருங்கவில்லை.
சுற்றுலாவிற்காக கணவன் மற்றும் மகனுடன் கேரளா வந்தவர் திரும்பும் வழியில் கார் பழுதாகி மான்சி படிக்கும் பள்ளி முன் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
விஜயா இயற்கை காட்சியை படம் பிடிக்க ஆரம்பிக்க, சரியாக அதே நேரம் மான்சி மேடையில் பாட தொடங்கினாள். இசை பிரியையான விஜயா தன்னை மறந்து மேடை எதிரே வந்து நின்று பாடலை ரசித்துக் கொண்டிருந்தார்.
தனது கையில் இருந்த கேமராவில் பாடல் பாடும் மான்சியின் உருவத்தை பதிவு செய்யவும் தவறவில்லை.
பாடல் முடிந்ததும் மான்சியை தூக்கிச் சென்ற வெண்பாவை பார்த்ததும் எதிலிருந்தோ தப்பும் உணர்வுடன் காருக்கு வர, பழுது நீக்கிவிட்டதாக விஜித் கூற காரில் ஏறிக் கொண்டார்.
விஜயா காரில் அமர்ந்து கண்ணாடியை ஏற்றிக் கொள்ளும் நேரம் வெண்பா கணவன் மகளுடன் நடந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தார்.
மூவரையும் கண்ணாடிக்கு பின் இருந்து பார்த்துக் கொண்ட விஜயாவின் பயணம் பல யோசனைகளுடன் தொடங்கியது.
சென்னை வீட்டிற்கு வந்த விஜயா மான்சி புகைப்படத்தை பெரிதாக சட்டமிட்டு ஒரு அறையில் விஜித் கைகளால் மாட்ட சொன்னார். விஜித் தாய் சொல்லை தட்டாத தனையனாக போட்டோவை மாட்டி முடித்தான்.
"நீ ஏந்திழையாளை கல்யாணம் பண்ணிக்கோ விஜித்..." என்று விஜயா மான்சி புகைப்படத்தை தடவி பார்த்தபடி கூற...
"மாம்... இது உங்களுக்கே ஓவரா தெரியலையா. இந்த குட்டிப் பொண்ண நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும்?" என்று கேலியாகவே பதினெட்டு வயது வாலிபனான விஜித் கேட்டான்.
'ஏந்திழையாளை சீக்கிரம் மிஸஸ்.ஏகலைவனா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்.' என்று புகைப்படத்தின் அடியில் தேதியுடன் எழுதி வைத்தார்.
"ம்மா..." என்று விஜித் கத்தியதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
"ம்மா இந்த குழந்தை வளரும் முன்ன எனக்கு குறைஞ்சது ரெண்டு குழந்தை இருக்கும்." என்று நிதர்சனத்தை கூற, விஜயா தனது எண்ணம் நிறைவேறாதோ என்ற வருத்தத்துடன் மகனை பார்த்தார்.
தாயின் வருத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாத விஜித் அவரை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
"இப்போ எதுக்கு இவ்வளவு ஃபீலிங். கல்யாணத்தை பத்தி இப்பவே பேச்சு எதுக்கு? அதுவும் சின்னப் பொண்ணு கூட." என்று கேட்க, பதில் கூற முடியாது விஜயா தலையை குனிந்துக் கொண்டார்.
"வெண்பா என் அத்தை பொண்ணு எனக்கு பெஸ்ட் ப்ரெண்டும் கூட. உனக்கே தெரியும் அப்பா கூட என் கல்யாணம் நடந்ததுக்கு அப்புறம் என் வீட்டு ஆளுங்க என் கூட பேசுறதில்லை. இந்த கல்யாணம் நடந்தா எனக்கு என் சொந்தம் கிடைக்கும்." என்று விஜித்திடம் எதனால் அவர்கள் பேசவில்லை என்ற உண்மையை மறைத்து கூறினார்.
"அதுக்கு இந்த குட்டிப் பொண்ண எப்படி கல்யாணம் பண்ண முடியும். உங்க சொந்தத்தில் வேற முறைப் பொண்ணு இல்லையா?" என்று விஜித் கேட்க,
"கட்டிக்கிற முறையில மான்சி ஏந்திழையாள் மட்டும் தான் இருக்கிறா." என்று கூற விஜித் பெரும்மூச்சுடன் தலையசைத்து எழுந்துக் கொண்டான்.
விஜித் சென்றதும் விஜயாவின் நினைவுகள் கடந்த காலத்தை நினைத்து பார்த்தது.
பதினாறு வயது விஜயாவுக்கும் தன் ஊருக்கு தொழிற்சாலை கட்ட இடம் வாங்க அடிக்கடி வந்துச் செல்லும் சர்வஜித்திற்கும் எப்படி என்று தெரியாமலேயே காதல் மலர்ந்தது.
காதல் பயிர் வளர்த்த பிறகு தான் அவருக்கு திருமணமாகி ஆறு வயதில் மகன் இருப்பதே விஜயாவிற்கு தெரிய வந்தது. முதலில் உண்மையை கூறாமல் மறைத்ததற்கு கத்தி சண்டையிட்ட விஜயா சர்வஜித் மனைவி உயிருடன் இல்லை, விஜித் பிறக்கும் போதே இறந்து விட்டார் என்பதில் இறங்கி வந்தார்.
அரசாங்கம் இலவசமாக கொடுத்த கணினியில் மின்னஞ்சல் வழியாக விஜயா தனது காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் விஜயா மடிக்கணினியை வெண்பா பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது விஜயா தந்தை செல்வராஜ் வந்துவிட்டார்.
எப்பொழுதும் பெண் பிள்ளை மீது நம்பிக்கை இல்லாதவர் வெண்பாவிடமிருந்து கணினியை பறித்து ஆராய, சற்று நேரத்திற்கு முன் விஜயா பயன்படுத்திய மின்னஞ்சல் பக்கம் திறந்து இருந்தது.
அதில் இருந்த அனைத்தையும் படித்து முடித்தவர் வெண்பாவை பேச விடாமல் அடி வெளுத்து விட்டார்.
தெருவில் அனைவரும் வேடிக்கை பார்த்ததை கருத்தில் கொள்ளாது அடித்தே வெண்பாவை அவள் வீட்டிற்கு இழுத்து வந்தவர் மின்னஞ்சல் பற்றி கூற, வெண்பாவின் பெற்றோர் மகள் மீது கொண்ட நம்பிக்கையில் செல்வராஜ் கூறியதை நம்பவில்லை.
தனது வீட்டில் இருந்து கணினியை எடுத்து வந்து காட்டினார். அரசு அனைவருக்கும் ஒரே மாதிரி கணிணி கொடுத்திருப்பதால் அது விஜயாவினுடையது என்று யாருக்கும் தெரியவில்லை.
உண்மை உணர்ந்த விஜயா தான் மாட்டிக் கொள்ள கூடாது என்று வெண்பா கணினியில் தன் புகைப்படத்தை வால்பேப்பராக வைத்துக் கொண்டாள்.
"அப்பா அது விஜயா அண்ணி லேப்டாப்." என்று வெண்பா வலியை தாங்கிக் கொண்டு கூற, செல்வராஜ் அனல் தெறிக்க மகளை பார்த்தார்.
"ஐயோ அப்பா வெண்பா பொய் சொல்றா. என்னாேடது இங்க இருக்கு" என்று திறந்து காட்ட, அதில் விஜயா புகைப்படம் மின்னியது.
அதன் பின் வெண்பா கூறியதை யாரும் நம்பாமல் திட்டிக் கொண்டிருந்தனர். மறுநாள் விஜயா காணாமல் போகும் வரை வெண்பா செய்யாத தவறுக்கு பழியை ஏற்று மூலையில் முடங்கி கிடந்தாள்.
'அப்பா வெண்பா மேல தப்பு இல்ல. என்னோட லேப்டாப் தான் அது. நான் காதலிச்சவர் கூட போறேன்.' என்று விஜயா எழுதிய கடிதம் கிடைத்த பின்னரே வெண்பா தப்பித்தாள்.
அடுத்த நாள் விஜயா சர்வஜித்துடன் வந்து நிற்க குடும்பம் மொத்தமும் வெண்பா வாங்கிய அடிகளை நினைத்து அவர்களை விரட்டியது.
வெண்பாவை தனியாக சந்தித்த விஜயா மன்னிப்பு கேட்க, "தயவு செய்து இனி என் முகத்தில முழிக்காத." என்று கூறி விட்டார்.
அதன் பிறகு பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு வெண்பாவை பார்க்கின்றார். பழைய நட்பு கண் முன் நின்றாலும் மகனிடம் சிலதை கூறி தனது நல்ல பிம்பத்தை உடைக்க முடியவில்லை.
தந்தை விஜயாவை காதல் திருமணம் செய்துக் கொண்டார் என்பது வரை மட்டுமே அவனுக்கு தெரியும். மற்ற பிரச்சனை எதுவும் தெரியாது.
திருமணம் முடித்து வந்த விஜயாவிற்கு முரட்டு குழந்தை விஜித்தை சமாளிப்பது பெரிய வேலையாக இருந்தது.
சாதாரணமாக பேசினாலும் அன்னையாக அவரை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. விஜித் மட்டும் போதும் என்று விஜயா குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்டதை தெரிந்துக் கொண்ட பின்னே விஜித் அவரை அன்னையாக ஏற்றுக் கொண்டான்.
விஜயாவும் கணவன் தன் மீது காதலை பொழிய, தனக்கு குழந்தை வேண்டும் என்று நினைக்காமல் தனது குழந்தையாகவே விஜித்தை வளர்த்தார்.
இப்போது வெண்பாவை பார்த்ததும் தனது சொந்தம் வேண்டும் என்று நினைத்தவர் விஜித் மூலம் தன் உறவுகளை தன் பக்கம் இழுக்க நினைத்தார்.
பதினாறு வயதில் தாயாக பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் என்னவோ முப்பது நெருங்கும் முன் தனக்கு முதுமையடைந்தது போல நினைத்துக் கொண்டார்.
இறுதி காலத்திலாவது சொந்தங்கள் வேண்டும் என்ற அவரது எண்ணத்தை நிறைவேற்ற கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு தான் மான்சி.
சர்வஜித் விஜயாவை தங்கமாக தாங்கினாலும் தாய் வீடு தேடியது அவரது உள்ளம். விஜித் யாரையும் காதலித்து விட்டால் தனது எண்ணம் நிறைவேறாது என்பதால் அவனிடம் இப்போதே தனது ஆசையை கூறிவிட்டார்.
விஜயா நினைத்தது போலவே விஜித் மனதில் மான்சி பற்றிய நினைவு சிறு விதையாக விழுந்தது. ஆனாலும் மான்சியின் வயது அவனை மேற்கொண்டு யோசிக்கவிடவில்லை.
ஏரோனாட்டிக்கல் இஞ்சினியரிங் முடித்து இந்திய விமானப்படையில் அவன் இணையும் போது யாரின் எதிர்ப்பையும் கருத்தில் கொள்ளவில்லை.
சில நாடுகளில் இளைஞர்கள் கட்டாயம் ராணுவத்தில் பணி செய்வது போல தானும் சில வருடம் பணி செய்துவிட்டு வருகின்றேன் என்று புறப்பட்டுவிட்டான்.
விஜித் சொன்னது போலவே சில வருடங்களில் ராணுவ வேலையை விட்டுவிட்டு வந்து தந்தையின் ஏர்லைன்ஸ் பிசினஸ் எடுத்து நடத்த ஆரம்பித்தான். அப்போதே அவனுக்கு சர்வஜித் தீவிரமாக பெண் தேட ஆரம்பித்திருந்தார்.
விஜயா மீண்டும் தனது ஆசையை சர்வஜித்திடம் கூறும் முன் வெண்பாவிடம் பேசிவிட வேண்டும் என்று யாரிடமும் கூறிடாமல் புறப்பட்டார்.
அப்போது ஒரு சில படங்களில் மான்சி பாடகியாக பாடல் பாடியிருக்க, அவளை பற்றிய தகவலை தெரிந்துக் கொள்வது பெரிதாக இருக்கவில்லை.
விஜயா வெண்பாவை பார்க்க வந்த நேரம் வீட்டில் திலகன், மான்சி இருவரும் இல்லை. வெண்பா மட்டுமே தனியாக இருந்தார்.
அழைப்பு மணி ஓசையில் கதவை திறந்த வெண்பாவிற்கு விஜயாவை சட்டென்று அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை.
தன் எதிரில் நிற்கும் நவநாகரீக பெண்ணை கிராமத்து விஜயாவும் பொருத்தி பார்த்து கண்டு பிடிக்கவே சில நிமிடம் தேவைப்பட்டது.
விஜயா மீது கோபம் மலையளவு வந்தாலும் அதை காட்ட விரும்பாது இன்முகமாய் வரவேற்று உபசரித்தார். வெண்பாவின் உபசரிப்பில் மகிழ்ந்த விஜயா வந்த விசயத்தை கூற அவர் முகம் மாற ஆரம்பித்தது.
"அண்ணி உங்கள கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு நீங்க வந்ததும் சாதாரணமா பேசினேன். அதுக்காக உங்க கூட உறவ வளர்க்க முடியாது. ஏற்கனவே என் வீட்டுக்காரர் பக்க உறவு எனக்கு சரி இல்லை. இதுல என் பக்க உறவையும் பகைச்சிக்க முடியாது.
வயசு வித்தியாசம், சாதி இப்படி பல தடைய கடந்து கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என் பொண்ணுக்கு இன்னும் வரல. அது மட்டுமில்ல நீங்க பொண்ணு கேட்டு வந்திருக்கிறது உங்க கணவரோட பையனுக்கு உங்க பையனுக்கு இல்ல." என்று வெண்பா உண்மையை முகத்தில் அடித்தார் போல கூறியே மறுத்து விட்டார்.
"எல்லாத்துக்கும் மேல உங்கள சார்ந்தவங்களுக்கு கஷ்டம் வரும் போது அவங்களுக்காக பேசுற தைரியம் இல்லாத உங்கள நம்பி என் பொண்ண எப்படி அனுப்ப முடியும்." என்று கூற விஜயா மனதளவில் நொறுங்கி விட்டார்.
தன் மகளுக்கு இந்த வரன் தேவையில்லை என்று நினைத்ததால் என்னவோ வெண்பாவிற்கு விஜித் பற்றிய விவரம் எதுவும் மனதில் பதியவில்லை.
கல்லூரி முதல் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மகளுக்கு அடுத்த வருடம் முப்பது வயதை அடைய போகும் ஒருவன் மாப்பிள்ளையா என்று நினைக்கவே பயமாக இருந்தது.
மகளுக்கான எதிர்கால துணையை பற்றி அவருக்கு இருந்த எதிர்பார்ப்பு எதிலும் விஜித் அப்போது இல்லை என்பது தான் உண்மை.
வசதியை விட மகளின் பிரச்சனை தெரிந்தும் அதை குறையாக நினைக்காமல் தாங்கும் குடும்பத்தை எதிர்பார்த்தார்.
சிறு வயதில் செய்யாத தவறுக்கு அடி வாங்கிய போது தடுக்காத விஜயா, நாளை தன் மகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் எப்படி அவள் பக்கம் நிற்பார் என்ற கேள்வியே விஜயாவின் வீட்டிற்கு மான்சியை மருமகளாக்கும் எண்ணத்தை வளர விடாமல் செய்தது.
விஜயா சென்றதும் வந்த திலகனிடம் எதையும் மறைக்காமல் கூறவும் செய்தார்.
சோகமாக வீட்டிற்கு வந்த விஜயா விஜித்திடம் வெண்பா கூறியதை கூற, பார்க்காமலே வெண்பா பற்றிய பிம்பம் தவறாக அவன் மனதில் பதிந்தது.
"பொண்ணு தர மாட்டேன்னு சொன்னத விட, நீ என் பையன் இல்லன்னு சொன்னது தான் கஷ்டமாக இருக்கு." என்ற விஜயாவிற்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
முதல் முறை விஜயா அழுகையை பார்த்த விஜித்திற்கு கோபம் கட்டுக்கடங்காமல் எழுந்தது. ஆனாலும் மான்சியை அதற்காக திருமணம் செய்யும் எண்ணம் அவனுக்கு வரவில்லை.