ஓவியப்பாவையிவளோ நின் நேச நயனங்களில்......
பிரியங்கா முத்துகுமார் நாவல்கள்
Priyanka muthukumar
பிடிக்காத திருமணம்
படிக்காத மனைவி
பட்டிக்காடு எருமை மாடு என
பல பெயர்களில் தன்
பிடித்தமின்மையை வெளிப்படுத்தும்
படித்த பெரிய மருத்துவன்.....
தந்தை பேச்சுக்கு மதிப்பு கொடுத்து
திருமணம் செய்து கொள்ள
தன் வாழ்வை அழித்து விட்டதாக எண்ணி
தந்தை மேல் கோவம் கொண்டு
தவிக்கும் மகனாக
துருவ் விக்ரமாதித்தன்....
படிப்பறிவு இல்லாத
பட்டிக்காட்டில் பிறந்த
பதினெட்டு வயது
பருவ மங்கை வடிவாம்பாள்....
படிக்காதவள் தான் ஆனால்
பாசத்தை அள்ளிக் கொடுப்பவள்
பழகும் விதத்தில் அவள் பேரழகு
திருமணம் முடிந்து
தனியாக சென்னை வீட்டில்
தனித்தனியாக
தனி அறையில் வாழ....
தள்ளி நிற்கும் போது தான்
தவறுகளும் சரியும்
தெள்ளத் தெளிவாக தெரியும்....
தினம் ஒரு வாக்குவாதம்
தினம் ஒரு பேச்சு கோவம் என
தினசரி சண்டையில் முடிய
தள்ளி இருப்பவர்களின்
துணையை புரிந்து கொள்ள
வில்லி போல நடாஷா....
ஈர்ப்புக்கும் ஆசைக்கும்
காதலுக்கும் புரிதலுக்கும் ஒரு
பிரிவு வேண்டும் ..
பிரிதல் புரிய வைக்கும் _ நம்
பிரியம் அளவை எடுத்துச் சொல்ல
முதலில் புரியாமல்
அன்பு செய்யும் மனைவி
அனுசரித்து செல்லும் மனைவி
அவனுக்காக பார்த்து பார்த்து
அனைத்தும் செய்யும் மனைவி மேல்
மெல்ல மெல்ல காதல் கொள்ள
கணவனின் காதல் தான் இல்லை என பிரிய நினைக்க மனைவியை
பிரிய முடியாதபடி தன் காதலை
புரிய வைக்க துடிக்கும் கணவன்...
அழகை முன் நிறுத்தியவன்
அக அழகில் மயங்கி
அவன் கண்ணிற்கு
அவள் ஓவியமாக மிளிர...
மனைவியின் நிலை உயர்த்த
மறைத்து வைத்த திறமையை
முயற்சி செய்து
முன்னுக்கு வர வைத்து
சாதிக்க வைக்கும் கணவனை
காதால் உருகி நேசம் கொள்ளும்
கிராமத்து மனைவி.....
டாம் அண்ட் ஜெர்ரி
கணவன் மனைவியாக...
எருமைக்கு
பட்டிகாட்டுக்கு விளக்கம் சூப்பர்
கார் பயணத்தின் பாடல்கள்
காதல் வந்த பிறகு
தவிக்கும் துருவ்
திருட்டு முழி
துறு துறு...
துருவ்
வடிவு
இருவரின் நிலைமையும்
முதலில் தடுமாறினாலும்
முட்டி மோதி
சிரித்து மகிழ்ந்து
முறைத்து தவித்து....
காதலை யாரது முதலில் சொல்வது என தயங்கி
முத்தத்தில் ஆரம்பித்து
மோகத்தில் திளைத்து
காதலைச் சொல்லும் முன்
காமத்தில் ஈடுபட....
கணவனின் செயலில்
காதலை உணராமல்
காயம்பட்டு வருந்தும் வடிவு ....
வார்த்தைகளில் மனைவியின்
வேதனையை புரிந்து
விலகிச் செல்ல....
விலகலும் வலிகைகளை தந்து
வாழ்க்கையின் அர்த்தத்தை
வலிக்க சொல்லி கொடுத்து
வாழ வழி வகுக்க....
வருத்தம் விலகி
ஊடல் முடிந்து
கூடல் தொடங்கி
அழகிய தாம்பத்தியம் பரிசாக
அழகு மகள் மனைவியுடன்
ஆனந்த வாழ்வு.....
ஜாலியான காதல் கதை
கணவன் மனைவி உறவின்
புரிதலும் நம்பிக்கையும்
மோதலிலும் காதலிலும்
சொல்லி புரிய வைத்து விட்டீர்கள்
வாழ்த்துக்கள் சகி