"கண்ட முதல் நாளே இதயத்தை திருடிவிட்டாயடி

"
அத்தியாயம் 1
கரியபெருமாள்வலசை அழகான கிராம்
அந்த ஊரில் கோயில் கொண்டு இருக்கும் தெய்வத்தின் பெயரே ஊரின் பெயர் கரியபெருமாள்வலசை
வாங்க பிரண்ட்ஸ் நாமும் அந்த ஊரை சுற்றி பார்த்துட்டு வரலாம்.
சென்னையில் இருந்து 240 கிலோமீட்டர் பிரயாணம் செய்து வந்தாச்சு. பஸ்சவிட்டு இறங்கின, "வாவ்வ்... அப்படி தான் எல்லோரும் சொல்லுவாங்க ஏன்னா காதலன் படத்தில் பிரபு தேவா பாடுவார்",
"ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல காஞ்சு போச்சு டா" என்று பாடுவார்.
இப்ப சென்னை மட்டும் இல்லாமல் சென்னையை சுற்றி பல கிலோமீட்டர் தூரம் பசுமையே பார்க்கமுடியல அதுல என்ன மாதிரி ஆளுங்க மாடியில் பத்து இருபது தொட்டியில் செடி வைத்து மாடித்தோட்டம் வளர்த்தாதான் கொஞ்சம் பசுமையை பார்க்க முடியும். அந்த அளவு கட்டிடங்கள் நிறைந்து இருக்கு பசுமையே பார்க்க முடியலை.
அப்படிப்பட்ட ஊரில் இருந்து இந்த ஊருக்கு வந்தா கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நெல் வயல்கள் காய்கறி தோட்டம், பழத்தோட்டம், தென்னை தோப்புகள் பூந்தோட்டம் பார்க்கும் போது "வாவ்வ்...." என்று சொல்லத்தான் செய்வாங்க.
ஊருக்குள்ள போக கொஞ்சதூரம் நடக்கனும். சென்னை மாதிரி பத்தடி நடக்கிறதுக்குள்ள பத்து ஆட்டோ வந்து "சவாரி போகனுமா" கேட்கமாட்டாங்க அதனால் நடந்துட்டே இரண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துட்டு போகலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் இந்த ஊர் இருக்கு அப்ப விதவிதமான மாம்பழ தோட்டங்களை பார்க்கலாம். நம்ப நவம்பர் மாதத்தில் போவதால் எல்லா மரங்களிலும் மாம்பழம் பார்க்க முடியாது சில மரங்களில் மட்டும் மாங்காய் காய்த்து தொங்கிக்கொண்டு இருக்கு.
மாங்காய் பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்குது ஊரை விட்டு போகும் போது சுட்டுட்டு போயிடலாம். அடுத்து முந்திரி தோட்டம் பழங்களை பறிச்சு நெருப்பில் சுட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும் கேள்வி பட்டு இருக்கேன் இதுவரை சாப்பிட்டது இல்லை அதையும் போகறதுக்குள்ள சாப்பிட்டு பார்த்திடலாம்.
தென்னை தோப்புகள், பப்பாளி, சீதாப்பழம், சப்போட்டா இன்னும் பல பழமரங்கள், காய்கறி தோட்டங்கள், நெல் வயல்கள், பூந்தோட்டம் ஊரை சுற்றி இருக்கு ஊர் ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்தாச்சு அதான் என்னென்ன இருக்கு என்று சுருக்கமாக சொல்லிவிட்டேன்.
ஊர் ஆரம்பம் ஆகும் இடத்தில் கரியபெருமாள் கோயில் இருக்கு, அரசர்கள் காலத்தில் கட்டிய கோயில் இது. பெருமாள் தன் இரு துணைவிகள் உடன் இருக்கிறார்.
கோயில் சுற்றி விட்டு வெளியே வந்த ஒரு பக்கம் பார்வதியம்மாள் திருமண மண்டபம் அதற்கு அடுத்த சில கட்டிடங்கள் இருந்தது அதையும் தாண்டி சென்றால் வீடுகள் வரிசையாக இருக்கின்றன.
இன்னொரு பக்கத்தில் இருபது தூண்கள் கொண்ட கல்தூண் மண்டபம் இருந்தது. அதற்கு அடுத்த பெரிய ஆலமரம் இருக்கு அந்த மரத்தை சுற்றி கல் மேடை அதில் ஐந்து பேர் உட்கார்ந்து இருந்தனர். நிறைய பேர் நின்னுட்டு இருக்காங்க அப்படின்னா நம்ப சினிமாவில் பார்க்கிற மாதிரி பஞ்சாயத்து நடக்குதே?
நான் இதுவரை பஞ்சாயத்து நடக்கிறதை நேரில் பார்த்தது இல்லை அதனால் வாங்க நம்ப போய் பார்க்கலாம்.
வயது முதிர்ந்த ஐந்து பேர் கல் மேடையில் அமர்ந்து இருந்தனர். அதில் நடுவில் அமர்ந்து இருப்பவர் தான் தலைவர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் அவ்வளவு கம்பீர தோற்றத்தில் எப்படியும் 70 வயது இருக்கும், இந்த வயதிலும் இப்படியிருந்தால் அவரின் இளமை காலத்தில் எப்படி இருந்திருப்பார்.
அவரைப்பற்றியும் அங்கு நடக்கும் பஞ்சாயத்து பற்றியும் யார்கிட்டையாவது கேட்டு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இவ்வளவு கூட்டத்தில் யார்கிட்ட கேட்கலாம் என்று சுற்றி பார்த்திட்டு வந்தா அங்க ஒருத்தர் 45 வயது இருக்கும் நினைக்கிறேன். அவர் யார் பக்கத்தில் நின்னாலும் அவர் பக்கத்தில் இருப்பவங்க வேகமாக வேறு இடத்துக்கு போய்யிட்டு இருந்தாங்க.
என்னடா.... இது... அவரைப்பார்த்த அப்படி ஒன்றும் டெரர் பீஸ் மாதிரி தெரியவில்லை அப்பாவி போலத்தான் தெரியுது. எதுக்கு அவரைப் பார்த்து எல்லாம் தூரமாக போறாங்க என்று தெரிந்துகொள்ள பக்கத்தில் இருந்த தம்பியிடம்
"தம்பி அவரைப்பார்த்து ஏன் எல்லாரும் இப்படி தூரம் போறாங்க" என்று கேட்டேன்.
என்னை பார்த்து "ஊருக்கு புதுசா"
"ஆமாம் தம்பி"
"அவர் பேச ஆரம்பித்தா நிறுத்தவேமாட்டார் காதுல இரத்தம் வரும் அளவுக்கு பேசுவார். நிறைய பேர் மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க அதனால் தப்பித்தவறி அவர் பக்கம் போகிடாதிங்க."
"அப்படியா தம்பி சரி எனக்கு இந்த ஊரைப்பத்தி சொல்லுங்களேன்."
"அக்கா இங்க முக்கியமான பஞ்சாயத்து நடக்க இருக்கு அதைவிட்டு இப்ப எதுவும் சொல்ல முடியாது பஞ்சாயத்து முடியட்டும் அதுக்கு அப்புறம் சொல்லுறேன்."
"சரி தம்பி"
உடனே தெரியலைனா நம்மளுக்கு தலை வெடித்துவிடும் என்ன பண்ணலாம், பேசாமல் அவர்கிட்டே போயி கேட்டுடலாம் அப்படி என்ன தான் அவரு பேசுறாருனு பாத்திடலாம்.
"அண்ணே வணக்கம்"
"வணக்கம் தங்கச்சி யாரு நீங்க?... இந்த ஊரில் உங்களை பார்த்தது போல தெரியலையே?.. ஊருக்கு புதுசா?... எந்த ஊரில் இருந்து வரிங்க?... எதுக்காக வந்து இருக்கிங்க?... இங்க உங்க சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா?????........
(மைண்ட் வாய்ஸ்) "அடேய் இப்ப தெரியுது ஏன் எல்லாரும் ஓடுறாங்க என்று ஆரம்பமே கண்ண கட்டுதே பெருமாளே உன் ஊருக்கு வந்த இந்த பக்தைய காப்பாற்று."
"அண்ணே அண்ணே போதும் அண்ணே இவ்வளவு கேள்வி கேட்ட எப்படி பதில் சொல்லுறது, நான் வேற கொஞ்சம் ஞாபகம் மறதி ஆளுங்க அண்ணே, எல்லா கேள்விக்கும் மொத்தமா பதில் சொல்ல வராது அதனால் முதலில் என்ன பற்றி சொல்லிடுறேன். அப்புறம் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமல் விட்டு இருந்தா கேளுங்க அண்ணா.
"சரி தங்கச்சி உன்னை பற்றி சொல்லு"
"நான் சென்னையில் இருந்து வந்து இந்த ஊரைப்பத்தி தெரிந்துட்டு கதை எழுதலாம் வந்து இருக்கேன். இங்க எனக்கு யாரையும் தெரியாது, விசாரித்ததில் உங்களுக்கு தான் இந்த ஊரை பற்றி எல்லாம் தெரியும் சொன்னாங்க அண்ணே அதான் ஊரைப்பத்தி சொன்னிங்கனா நல்லா இருக்கும்."
" அப்படியா தங்கச்சி உனக்கு இந்த ஊரைப்பத்தி தெரியனும் அவ்வளவு தானே சொல்லிட்டா பேச்சு"
" கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் பாம்பாறு அணை தென்பெண்ணை ஆறு சேரும் இடமான பாவக்கல் ஊராட்சியில் அமைந்துள்ளது கரியபெருமாள்வலசை கிராமம். இங்க இருந்து ஊத்தங்கரை எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு."
" இங்க விவசாயம் தான் முக்கிய தொழில். இந்த பக்கம் எல்லா ஊரும் மலைப்பாங்கான ஊர், பக்கத்தில் தான் ஜவ்வாது மலைத்தொடர் இருக்கு பொருபாலான இடங்களில் பெரிய பெரிய பாறைகள் பார்க்கலாம். கொஞ்சம் வறண்ட பூமி தான். பாறைகள் நிறைந்த பூமியா இருக்கிறதால் பாறையில் மழை நீர் பூமியில் ஊராது கிணறு எடுத்தாலும் நீர் சுரக்கிறது கம்மிதான்."
"அதனால் இந்த பகுதியில் தென்னை, பழத்தோட்டம் தான் அதிகம், ஆரம்பத்தில் தான் தண்ணி கொடுக்கனும் மரம் வளர்ந்துட்டா தண்ணீர் அதிகம் தேவைப்படாது."
"ஆனால்... இப்ப நிறைய பூச்செடி தோட்டம், காய்கறி தோட்டம், நெல் வயல் கூட வர வழியில் பார்த்தேனே அண்ணனே"
"அதுவா தங்கச்சி பஞ்சாயத்து மேடையில் நடுவில் உட்கார்ந்து இருக்காரே எங்கய்யா அவரும் அவர் குடும்பம் தான் காரணம்"
"அவரா அண்ணே முதலில் பார்க்கும் போதே தெரிந்தது ராஜா மாதிரி கம்பீரமாக இருக்காருன்னு நினைச்சேன்."
" நீ நினைச்சது சரிதான் தங்கச்சி பரம்பரை பரம்பரையாக அவங்கதான் இந்த ஊர் பெரிய குடும்பம். அவர் குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதும் நினைக்காமல் அந்த காலத்தில் இருந்தே நிறைய நல்லது பண்ணியிருக்கார்."
"தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் இருந்தவங்களுக்கு தன் சொந்த பணத்தில் அங்காங்கே கிணறு தோண்டினார். இவர் பிள்ளைகள் அதே தெரியுதே கல்யாண மண்டபம் அதை அவர்கள் தான் கட்டினாங்க."
எந்த விசேஷம் என்றாலும் இந்த காலி இடத்தில் தான் பண்ணனும், கல்யாணம் கோயிலுக்கு உள்ள பண்ணிட்டு இங்க பந்தி போடனும், அதுவே பெண் பிள்ளைகளுக்கு சடங்கு பண்ணனும் என்ற கோயில் உள்ள போகமுடியாது. காதுகுத்து வளைகாப்பு இப்படி விசேஷங்கள் மழை நாளில் இங்க வைக்கமுடியாது அதனால் இங்கிருந்து ஊத்தங்கரை போய் தான் மண்டபத்தில் செய்யனும்."
"அதனால் அய்யா பிள்ளைகள் இங்க மண்டபம் கட்டிக்கொடுத்து இருக்காங்க. இப்ப எல்லா விசேஷமும் இங்க தான் செய்கிறோம் மண்டபத்துக்கு வாடகை வாங்குறது இல்லை. இதுமட்டுமா இங்க விளையறதை ஊத்தங்கரை போய் தான் விற்றுவிட்டு வரனும் அதுக்கு இரண்டு டெம்போ வண்டி வாங்கிவிட்டாங்க வண்டிக்கு பெட்ரோல் செலவு மட்டும் எல்லோரும் பகிர்ந்துக்கனும் இப்படி எவ்வளவு சொல்லலாம்."
"இப்ப பேரப்பிள்ளைகள் அதுக்கு ஒரு படி மேலே போய் எவ்வளவு செய்து இருக்காங்க தெரியுமா?
"செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போட்டு மண்ணின் தன்மையை அழிச்சுட்டு இருந்தவங்களை இயற்கை உரங்களையும், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி அதிக மகசூல் கிடைக்கும் என்று செய்து காட்டி மத்தவங்களையும் அந்த முறை செய்ய வைத்து இப்ப சுத்துபத்து எல்லா ஊர்களிலும் இயற்கை விவசாயம் பண்ண வச்சு இருக்கார். அதுமட்டும் இல்லாமல் இங்க விளையறதை இவங்களே வாங்கி மண்டபம் பக்கத்தில் இருக்கே அது அவங்களுதுதான் இங்க அதை சுத்தப்படுத்தி தரம் பிரித்து ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் வரைக்கும் இங்கிருந்துதான் போகுது, ஏன் இங்க விளையறதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ணுறாரு கண்ணன் ஐயா."
"வெயில் காலத்தில் விவசாயம் பண்ண தண்ணீர் பற்றாக்குறையை போக்க சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்ய ஏற்பாடு செய்து இருக்கார். மழை காலத்தில் மழைநீரை சேமிக்க நிறைய குளங்கள், குட்டைகள் உருவாக்கி இருக்கார்."
"இப்படி பலதும் இந்த ஊருக்கு எங்க பெரிய ஐயா குடும்பம் செய்துட்டு இருக்காங்க."
"உண்மையிலே இராஜா தான் அண்ணே உங்க பெரியய்யா. அப்புறம் கண்ணன் ஐயா என்று சொன்னிங்களே யார் அண்ணே அவரு?..."
"அவர் தான் எங்க சின்ன ஐயா அதே ஒசரமா பெரியய்யாவை உரிச்சு வச்ச மாதிரி இருக்கரே அவர் தான் கண்ணன் ஐயா."
" அண்ணே கொஞ்ச நேரத்திற்கு முன்னர்தான் நினைச்சேன் 70 வயசுல இப்படி இருக்கார் சின்ன வயதில் எப்படி இருந்து இருப்பார் என்று ஆனால் அவரையே சின்ன வயதில் பார்த்த மாதிரி இருக்கார்."
" எங்க பெரியய்யாவுக்கு 83 வயசு மூன்று வருஷத்துக்கு முன்னாடி 80 கல்யாணம் நடந்தது."
"உருவத்தில் மட்டும் இல்லை குணத்திலும் பெரியய்யா தான்."
"விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும் தன் மக்களை பாதுகாத்தவன் அந்த கார்முகில் வர்ணன் கருநீல வண்ணன் கண்ணன்."
"அவனைப்போல் இந்த கண்ணனும் ஊரை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திட்டு இருக்கார்."
அந்த நேரத்தில் கூட்டத்தில் சலசலப்பு கேட்க திரும்பி பார்த்த போது மூன்று பேர் காரில் இருந்து இறங்கி வந்தனர்.
"வா தங்கச்சி அந்த தடி தாண்டவராயன் குடும்பம் வந்திடுச்சு பஞ்சாயத்து ஆரம்பித்துவிடுவாங்க மிச்சத்தை பஞ்சாயத்து முடிந்ததும் பேசலாம்.
"சரி அண்ணனே"
"அப்புறம் தடி தாண்டவராயன் குடும்பம் சொன்னிங்களே யாரு அண்ணே அவங்க."
"அவங்களை பத்தி சொல்ல அவங்க ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை பஞ்சாயத்தை பார்த்தா உனக்கே தெரிந்திடும்."