வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கத்தரி பூவழகி - கதை திரி

Status
Not open for further replies.
eiQLN122011.jpgஅழகு - 1


ஒவ்வொரு நாளும் ஏன் விடியல் வருகிறது என்பது போல ஒருவித மன அழுத்தம் அவளுக்கு உருவாகியது என்னவோ உண்மை தான். ஏனோ எதுவும் தனக்கு நிரந்தரம் இல்லையோ என்ற ஏக்கம் அவளை வெகுவாக வாட்டியது .

என்ன தான் ஒதுக்க நினைத்தாலும் அவளது நினைவலைகள் மீண்டும் மீண்டும் அவனையே நாடியது.
காயம் கொடுத்தவனிடமே மருந்தை எதிர்பார்க்கும் இந்த மனதை அடக்கமுடியவில்லை சைந்தவியால்.

நல்லவேளை அவனிடம் இதுவரை நேரில் தனது பலவீனத்தை காட்டியது இல்லை என்ற எண்ணம் அவளை மெல்ல சமாதானம் செய்தது. மனதை நிலைப்படுத்த கண்ணை மூடி படுத்திருந்தவளை ஒரு வலிய கரம் இழுத்து அணைத்தது. கண்களை திறக்காமலே அது யார் என்று உணர்ந்தவள் மரம் போல இறுகி போனாள்.

"சவி ஐ நீட் யூ!" என்றவன் அவளது குறைந்தபட்சம் தலை அசைப்பை கூட எதிர்பார்க்காமல் முழுதாக அவளை ஆட்கொண்டிருந்தான்.
பூவை தொடுப்பது போல மென்மையாக கையால வேண்டிய தாம்பத்தியம் இப்படி வெறும் உணர்வுகளின் வடிக்கலாக நடப்பதை சற்றும் சைந்தவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இருப்பினும் அவனிடம் இதை பேச அவளுக்கு உடன்பாடு இல்லை. இல்லை என்ற மறுப்பு கூட அவனை கைபிடித்த நாளே மறுக்கப்பட்ட ஒன்று அவளுக்கு.
அவன் வேலை முடிந்ததும் முன் நெற்றியில் வழமையாக அவன் இடும் முத்தத்தை இன்று அவசரமாக கொடுத்து குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தான் வம்சி கிருஷ்ணா.

இன்று அவனிடம் தெளிவாக பேசிட வேண்டும் என்று அவன் வருகைக்காக காத்திருந்தாள் பாவை. பாவம் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் சம்பவம் தெரிந்திருந்தால் எப்பொழுதும் போல மௌனமாக இருந்திப்பாளோ என்னவோ? விதி யாரை விட்டது அவளை பாவம் பார்த்து விட.

குளித்து முடித்து வந்தவன் கலைந்த ஓவியம் தன்னை தானே சற்று திருத்திக் கொண்டிருக்கும் நிகழ்வை எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தவாறே கிளம்பி கொண்டிருந்தான்.

"வம்சி உங்ககிட்ட பேசணும்!" என்று ஒருவாறு வாக்கியத்தை தொடுத்து, அவனை பார்க்க
மேல பேசு என்பது போல அவன் தலையசைத்தான். அவ்வளவு தான் இதுவரை மனதில் பேசியதை அனைத்தும் கொட்டிவிட்டாள், அதற்கான பரிசையும் கையோடு பெற்றும் விட்டாள்.

அந்திநேரம் துயிலில் இருந்து எழுந்தவளுக்கு முன்பகலின் நிகழ்வுகள் அழையா விருந்தாளியாக நினைவிற்கு வந்தது. அவன் கொடுத்து சென்ற காயத்தை பார்த்தவளுக்கு புறத்தை காட்டிலும் அகத்தில் ஏற்பட்ட வடு பெரியதாக தெரிந்தது.
இப்படியே இருந்தால் சரிவராது என்று மெதுவாக எழுந்து குளியலறைக்கு சென்று முகம் கழுவினாள்.

குளிர்ந்த நீர் பட்டதும் இதழில் வலி ஏற்பட, முகத்தை சுருக்கியவளுக்கு அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் மீண்டும் ஒலிக்க, பொறுக்க முடியாமல் அங்கேயே அமர்ந்து கதற ஆரம்பித்தாள். ஏன் என்று கேட்க கூட அந்த வீட்டில் ஆள் இல்லாமல் போக, அழுத்தம் குறையும் வரை அழுதாள்.

இது அவள் மனதை மாற்றியதா என்று கேட்டாள் நிச்சயமாக இல்லை தான் எனினும் அவளது மன அமைதிக்காக சில சமயம் இப்படி தனிமையில் அழுவதுண்டு. இயல்புலேயே சற்று அழுத்ததோடு வளர்ந்தவளுக்கு மேலும் மேலும் விழுந்த அடி நத்தை கூட்டிற்குள் தன்னை ஒடுக்கிக் கொள்ள பெரும் காரணமாக அமைந்தது.

வலிகளை அடித்து விரட்டியவள், மிதமாக தன்னை தயார் செய்துக் கொண்டு கீழே வந்தாள். வருபவளை விழி அசையாது பார்த்திருந்தான் கதிர்வேல். இது உனக்கு தேவையா? படித்து படித்து கூறியும் அவனை தான் மணம் முடிப்பேன் என்று உறுதியாக இருந்ததுக்கு பரிசு தான் இதுவா? என்று பார்வையால் அவளை துளைத்தான்.

அதை சிறிதும் சட்டை செய்யாமல் வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்தவளை பரிதாபமாக பார்த்தார் அங்கு பல காலமாக வேலை பார்க்கும் பார்வதி. இதெல்லாம் பழகி போனவள் மெலிதாக சிரித்து அவளுக்கான குழம்பியை தயாரிக்க ஆரம்பித்தாள். தாங்கள் போட்டு தருவதாக சொன்னாலும் அவள் விடுவதில்லை என்பதால் சமையல் வேலை செய்துக் கொண்டிருந்த கங்கா அவளுக்காக நகர்ந்து வழி விட்டாள்.

அவளுக்கும் ஒரு சிரிப்பை பதிலாக கொடுத்து விட்டு வழக்கம் போல் அமைதியாக அவள் வேலையை செய்ய ஆரம்பித்தாள். தனக்கு கொடுக்க வேண்டிய தேநீர் இன்னும் வராததால் வேகமாக உள்ளே வந்தாள் பிரியா. தமையனின் மனைவியின் வதனத்தை கண்டு எதுவும் பேசாமல் அடுப்பாங்கரையுள் பிரவேசித்தாள்.

அவள் வரும் ஆரவரத்தை கண்டவள் எதுவும் பேசாமல் இன்னோரு அடுப்பில் அவளுக்கான தேநீரை தயாரித்தாள். கதிருக்கு மட்டுமல்ல பிரியாவிற்கும் இவள் மீது சிறிது வருத்தம் இருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் அவனை போல முற்றும் மறுத்து ஒதுக்க பிரியாவின் மனம் இடம் தரவில்லை .

முன்பு போல் இல்லை என்றாலும் ஓரிரண்டு வார்த்தைகளோடு
பேச்சை முடித்து கொள்வாள் பிரியா. ஏன்? என்ன? என்று சண்டை இட்டிருந்தாளாவது அன்றே தீட்டி சமாதானம் ஆகிருப்பாளோ என்னவோ? இப்படி பேசாமல் ஒதுக்கியத்தின் விளைவு அவளும் அனைவரையும் தன் இதயத்தில் இருந்து வெகுதூரம் விலக்கி வைத்துவிட்டாள் .

பிரியாவிடம் ஒரு கோப்பையை நீட்டி தனக்கான குழம்பியை கண்களை மூடி சிறிது சிறிதாக ரசித்து குடித்தாள் . ஒரு விதமான இதம் அதில் கிடைக்க இறுதி சொட்டு வரை குடித்தாள். பின் கோப்பையை கழுவி அதற்கான இடத்தில் வைத்து விட்டு மீண்டும் அவள் அறைக்குள் தஞ்சம் புகுந்தாள் .

அவளை தொடர்ந்து புயல் போல உள்ளே நுழைந்து கதவை அடைத்தவன், "காலையில் என்னடி சொன்ன?" என்று அழுத்தமாகவும் நிதானமாகவும் கேட்டான்.
அவனையே பார்த்திருந்தாளே தவிர வாயை திறக்கவில்லை.
"உன்னை தான் சவி பதில் சொல்லு!" என்று பல்லை கடித்தான்.

அவனை நேராக பார்த்தவள், காலையில் சொன்ன அதே வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக கூறினாள்.
"நான் சைந்தவி வம்சி கிருஷ்ணா. நீங்க கிளப்ல ஒன் நைட் ஸ்டாண்ட் பண்ற கால் கேர்ள் இல்லை"

காலையில் ஏதோ கோவத்தில் பேசியிருப்பாள். இப்பொழுது கேட்டால் அதற்கு மன்னிப்பு கேட்டு அவனிடம் சரண் அடைவாள் என்று எதிர்பார்த்து வந்தவனுக்கு ஏமாற்றமாக போக அதை கையாள தெரியாமல் அவள் இதழை வன்மையாக முத்தமிட்டான்.

முத்தமிட இதழை அவள் பிரிக்காமல் தடை செய்ய, ஒருபடி மேல் சென்று பற்களால் தடம் பதித்து அவன் நினைத்ததை நிறைவேற்றி கொண்டான். அவள் கண்கள் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்திருக்க அவனால் அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவளை கீழே தள்ளி வெளியேறி விட்டான்.

'வம்சி ஏன் இப்படி பண்ற? உனக்கு என்ன ஆச்சு? இந்த ஆறு மாசத்துல ஏன் இப்படி மாறின?' என்று தன்னை தானே கேட்டவனுக்கு, சைந்தவியுடனான திருமணம் என்று பதில் வர மீண்டும் அவன் கோவம் முருங்கை மரம் ஏறியது.

ஏழு மாதத்திற்கு முன்பு வரை அவள் யாரென்றே தெரியாதவன் இன்று தன்னில் பாதி என்று ஒவ்வொரு முறை அவள் கூறும் போது அவன் மீது மட்டுமில்லாமல் அவள் மீதும் கோவம் வந்தது. இருவருக்கும் இறந்தக்கால நினைவுகள் நினைவடுக்கில் ஓடியது.

"ஹே சைந்து! அங்க இல்லை இன்னும் கொஞ்சம் லெஃப்ட்."

"ஹான் எங்க டி?"

"இன்னும் ரெண்டு அடி லெஃப்ட் வா"

"இப்போ?"

"இன்னும் ஒரு இன்ச் முன்னாடி வா"

"இப்போ ஓகே வா?" என்று கேட்டப்படியே வந்தவள் எதன்மீதோ மோத பிடிமானம் இல்லாமல் கீழே சரிந்தாள்.

இத்தனை நேரம் அவளுக்கு குறிப்புக் கொடுத்து கொண்டிருந்தவளுக்கோ நெஞ்சில் நீர் வற்றி போய்விட்டது.

கண்ணை கட்டியிருந்த துப்பட்டாவை விலக்கிப் பார்த்தவளுக்கு கண்கள் வெளியே வந்து விழுந்து விடும் போல் இருக்க மீண்டும் கண்ணை கட்டிக்கொண்டாள். இருவரையும் முடிந்த அளவிற்கு முறைத்த வம்சி,

"உங்களை வந்து பேசிக்கிறேன்!" என்று விரல் நீட்டி எச்சரித்து காரை எட்டிப்பார்க்க அவனையே விழி எடுக்காமல் பார்த்திருந்தாள் லேகா. இவர்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வேகமாக தனக்கு தேவையானதை எடுக்க அவன் அறைக்கு சென்றான்.

"ஹே லூசுங்களா!" என்று இருவர் காதருகே சத்தம் கேட்க விருட்டென்று திரும்பினர். அப்போ தான் அந்த வீட்டின் ஹிட்லர் கிளம்பி சென்றதை உணர்ந்தார்கள்.

"ஏய் எதுக்கு ரெண்டு பேரும் பேயை பார்த்தது போல விரைச்சு போய் நிக்கறீங்க?" என்று கதிர்வேல் கேட்டான்.
"பேய் இல்லை டா. ஒரு ரத்தக்காட்டேரியை பார்த்தோம் அதான் இப்படி!" என்று தியா சொல்லி முடிக்கவும், அதை ஆதரிக்கும் விதமாக பிரியா தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

"அடிப்பாவிங்களா! இது மட்டும் அவனுக்கு தெரிஞ்சுது. நிஜமா உங்க ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுருவான்! ஏற்கனவே உன்னையும் அவனையும் வச்சி பேப்பர்ல கிழி கிழின்னு கிழிச்சுருக்காங்க "

"அண்ணா ஒரு டைம் கூட இவள பார்த்தது இல்லை அப்பறம் எப்படி இப்படி ஒரு நியூஸ் வந்துச்சு " என்று பிரியா கூற,
சைந்தவியும், "அதானே! அவர்கிட்ட கேட்டு சொல்லு கதிர்" என்று அவளுக்கு துணை நின்றாள் சைந்தவி.

"சரியா போச்சு ரெண்டு குட்டி பிசாசும் ஒண்ணா சேர்ந்து அவன்கிட்ட எனக்கும் சேர்ந்து அடி வாங்க வைக்க போறீங்க"
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, "இந்த ஐடியா கூட நல்லா இருக்கே!" என்று அவனை வாரினார்கள்.

கழுகுக்கு மூக்கு வேர்த்தது போல் கீழே வந்த வம்சி, "இன்னும் பத்து நிமிஷம் தான் இவளுக்கு டைம் இங்க இருந்து கிளம்ப. இன்னோரு தடவை இவளை இங்க பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் கொன்றுவேன்." என்று மிரட்டியவன்,
அடுத்து பேசும் முன், "கிரிஷ்!" என்ற லேகா அழைப்பில் காருக்கு விரைந்தான்.

"அந்த பொண்ணு தான இவ?" என்ற லேகாவின் கேள்வி புரிந்தாலும்,
"எந்த பொண்ணு டார்லிங்?" என்றான்.

"ம்ச் மிஸஸ். லீலா சௌந்தர்ராஜன் டாட்டார் சைந்தவி சௌந்தர்ராஜன்."
"ம்ம் ஆமாம் அவ தான்"

"அப்போ பேப்பர்ல வந்தது உண்மை தான் அப்படி தானே?" என்று கண் கலங்கினாள் லேகா.
"ஹே டார்லிங்! பேனா இருக்குனு கண்டதை எழுதுனா அது உண்மை ஆகிருமா?"

"இன்னைக்கு தான் இவளை நேரில் முதல் முதலா பார்க்கிறேன். நம்பு என்னை!" என்றவனை ஓரக் கண்ணால் பார்த்து தன்னை சமன் செய்து, "ஐ டிரஸ்ட் யூ கிரிஷ்" என்று இதழ் ஒற்றி அவள் சமாதானம் ஆகியதை மறைமுகமாக தெரிவித்தாள் லேகா.

தங்கள் தொழிலோடு காதலை வளர்த்து வரும் தொழிலதிபர் ஜோடி தான் வம்சி கிருஷ்ணா மற்றும் லேகா. அளவில்லாத காதல் வம்சி மீது லேகாவிற்கு இருந்தாலும், நடக்கும் நிகழ்வுகள் எதுவும் உவப்பாக இல்லை என்பதால் இப்படி சந்தேகம் கொள்கிறாள்.

அவள் பயம் யாவும் சைந்தவியால் அல்ல அவள் அன்னை தி கிரேட் பிசினஸ் டைகன் லீலாவால் தான். எதையும் ஆதாயம் இல்லாமல் செய்யாத லீலா, வம்சியின் தொழிலுக்கு உதவுவது, சமீபத்தில் வெளிவந்த வம்சி சைந்தவி காதல் கிசுகிசுப்பு பற்றி ஏன் என்று கூட லீலா எழுப்பாதது எல்லாம் ஏன்? இந்த கேள்விகள் லேகாவை வண்டாகா குடைக்கிறது. இதை வம்சியிடம் கூறினால் அவன் அதை கருத்தில் கொள்ளாது அவள் மனதை திசை திருப்ப, அதை பற்றி அவனிடம் பேசுவதை தவிர்த்தாள்.

லேகாவை உளுக்கிய வம்சி, "ஆபீஸ் வந்திருச்சு இறங்கு!" என்று அவளை இறக்கி விட்டு அவன் அலுவலகத்திற்கு சென்றான். செல்லும் வம்சிக்கு கூட சமீப காலமாக லீலாவின் பார்வை தன்மீது படிவதை கவனிக்க தவறவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு காரை செலுத்தினான்.

நினைவில் பின்னோக்கி இருந்தவனை, சைந்தவியின் அலறல் சத்தம் நிகழ்விற்கு மீட்டு வந்தது.​
 
eiQLN122011.jpgஅழகு - 2


என்ன நடந்தாலும் சரி, இன்று வம்சியுடன் பேசி தங்கள் எதிர்காலத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று வேகமாக எழுந்தாள். திடீரன்று காலில் ஏற்பட்ட வலியில் அலற, அறைக்குள் புகுந்தான் வம்சி கிருஷ்ணா. திரௌபதியை துகில் உரித்த துச்சாதனனை போல் அவனை பார்த்து வைத்தாள் சைந்தவி.

அவள் பார்வையை அறியாதவனா அவன்? அவளை பார்க்கப் பார்க்க ரத்தம் சூடேறியது. அவளை காயப்படுத்த சொல்லும் மனதை கட்டுக்குள் கொண்டு வர படாதப்பாடு பட்டான். அவனை பார்த்தவளுக்கு இன்னதென்று சொல்ல முடியாத உணர்வு, தன்னவன் என்று நெருங்கவும் முடியவில்லை வேறு ஒருத்தியின் காதலன் என்று விலகவும் முடியமால் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறாள்.

காலில் ஏற்பட்ட சுளுக்கை எப்படியாவது சரி செய்து விடலாம். ஆனால் அவள் அன்னை அவள் வாழ்வில் நடத்திய சடுகுடுவை எப்படி சரி செய்வது என்று மனம் நொந்து போனாள். வலியின் பிடியிலும் அவனை சிறிதும் எதிர்பார்க்காமல் படுக்கையில் ஏறி அமர்ந்து அவளது குடும்ப மருத்துவரை அழைத்தாள்.

அதை எல்லாம் கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல பார்த்தான்.
"வம்சி! நான் உங்க வைஃப் அது ஞாபகம் இருக்கா?"
"சீன் கிரியேட் பண்ணாமல் விஷயத்துக்கு வா!"

"என்னை ரொம்ப ஹர்ட் பண்றீங்க வம்சி. நானும் ரத்தமும் சதையும் உள்ள மனுஷி தான். எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரி இருக்க முடியும்?"
"உன்னை யாரு கஷ்டப்பட்டு இங்க இருக்க சொன்னா?"

"தாலிக்கட்டின புருஷன் வீட்டில இல்லாமல் வேற எங்க இருக்க வம்சி?"
"ஹே நான் இப்படி தான் இருப்பேன். எனக்கு உன் கூட லவ் மேக் பண்ணனும் தோணுச்சுனா பக்கத்தில் வருவேன் நீயா என்னை நெருங்க கூடாது. நமக்குள்ள பிசிக்கல் ரிலேசன்சிப் தவிர வேற எந்த கனெக்ட்டும் இருக்காது. இதனால் நீ பிரக்ணட் ஆகிட்டினா அது முழுசா உன்னோட பொறுப்பு. உனக்கு எப்போ டிவோர்ஸ் வேணுமோ என்கிட்ட இருந்து வாங்கிக்கலாம். இது எல்லாத்தையும் பேசிட்டு தான டி தாலி வாங்குன என்கிட்ட இருந்து. என்னமோ உன்னை ஏமாற்றி கல்யாணம் செஞ்சு, உன்னை டார்சர் பண்ற போல நடிக்கிற?"

"எல்லாத்துக்கும் சரின்னு தான் கல்யாணம் பண்ணேன். ஒரு நாள் என் காதலை ஏத்துப்பிங்க, என்னை புரிஞ்சுப்பீங்கனு நினைச்சேன். ஆனால் என்னை ஒரு உயிருள்ள பொருளா கூட பார்க்க மாட்டேங்கிறீங்க?"
"அதுக்கு நேர்மையா என் வாழ்க்கையில் வந்திருக்கணும். ஃபோர் டுவெண்ட்டி மாதிரி பிளான் போட்டு என்னை சிக்க வைச்சு என்னை கார்னர் பண்ணி இப்படி என் கூட வாழுறதுக்கு பேரு வேற" என்று அவன் முடிப்பதற்கு முன் எழுந்து அவன் சட்டையை கோர்த்து முழு பலம் திரட்டி ஒரு அரையை அவன் கன்னத்தில் வைத்தாள்.

அது தான் அவளுக்கு நினைவிருந்தது. பதிலுக்கு அவள் முடியை கோர்த்து பக்கத்தில் இருந்த சுவற்றில் அழுத்தி அவள் கழுத்தை நெறித்தான். இன்னும் பத்து நொடி அழுத்தி பிடித்தாள் அவள் உயிர் உடலை விட்டு போயிருக்கும்.

நல்ல நேரம் லேகாவிடம் இருந்து வந்த எமர்ஜென்சி என்ற குறுஞ்செய்தியில் மற்றது மறந்து உற்றவளை தேடி சென்றான்.
அவனை ஏன் காதலித்தோம் இப்படி நரக வேதனையை அனுபவிக்கவா? என்று தன் நிலையை முற்றும் வெறுத்து கண்களை மூடினாள்.

புயலாக இத்தனை நேரம் சைந்தவியை சுழற்றி அடித்தவன் தென்றலாய் லேகாவை மார்பில் தாங்கினான். மசக்கையின் பிடியில் இருப்பவளுக்கு தனது ஆதரவு எத்தனை முக்கியம் என்று அவன் அறிவான்.

"கிரிஷ் உனக்கு ரொம்ப தொல்லை கொடுக்கிறனா?" என்றாள் சற்றுமுன் எடுத்த வாந்தியின் மயக்கத்தில்.
"ச்சூ எதுக்கு இப்படி லூசு மாதிரி கேள்வி கேட்டு இருக்கிற? உனக்கு தெரியாதா? என் மனசு உன்னை எவ்வளவு தேடும்னு?"

அடுத்த நொடி கண் கலங்க, "எல்லாம் ஒரு மாசத்துக்கு தான? இந்த குழந்தை பிறந்ததும் உனக்கும் எனக்குமான எல்லா பந்தமும் முடிஞ்சுரும்ல?"
"ஹே! அவள் யாரு நமக்கு ரூல்ஸ் போட? அவளெல்லாம் ஒரு ஆளு? எல்லாம் பிளான் பண்ணி என்னை கார்னெர் செஞ்சு கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துனா போதுமா? மனசுல காதல் வேண்டாமா?"

"இதெல்லாம் ஊர் உலகத்துக்கு புரியாதே. உன் பொண்டாட்டி அவள் தானே இந்த உலகத்தை பொறுத்தவரை?"
"என் பெட் ஷேர் பண்ணா மட்டும் பொண்டாட்டி ஆகிட முடியாது!" என்று அவன் முடிக்கும் முன்,
"நம்ப குழந்தையை நான் இல்லாமல் போன கூட நல்லபடியா வளர்ப்ப தான?"

"வாய்லேயே போட்டேனு வை. நம்ப குழந்தைக்கு குழந்தை வரும் வரைக்கும் நம்ப ரெண்டு பேரும் ஒண்ணா தான் இருப்போம். சேர்ந்து தான் வளர்க்க போறோம்."

"அப்படி ஒண்ணு நடந்தா நான் வேண்டாம்ன்னு சொல்ல போறேனா? எனக்கு நம்ப குழந்தை போதும் உன்னை நான் தொந்தரவு பண்ண மாட்டேன். நம்ப ஒண்ணா சேர்ந்து வாழ இந்த ஜென்மத்துல எனக்கு கொடுப்பினை இல்லை." என்று பேச பேச மூச்சு விட சிரமப்பட்டு போனாள் லேகா.
"ச்சூ எதுவும் பேசாத அமைதியா கண்ணை மூடி தூங்கு." என்று நெஞ்சதை மஞ்சமாக மாற்றினான் வம்சி கிருஷ்ணா.

எத்தனை கனவு கண்டோம் காதலில் விழுந்த நொடி முதல். என்னை விட தொழிலில் தேர்ந்து அதிக லாபம் ஈட்டினாலும் என்னையும் உடன் அழைத்து சென்று அழகு பார்ப்பவள். என் காதலை தவிர எதையும் எதிர்பாராத காரிகை. என்ன பெண் இவள் என்று லேகாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அன்று லேகாவின் பயம் நிஜத்தில் உண்மையானதோ என்று அந்நாளை நினைவுகூர்ந்தான்.

"கிரிஷ் அந்த மீட்டிங் கண்டிப்பா அட்டென்ட் பண்ணி தான் ஆகணுமா?"
"டார்லிங் என்ன விளையாடுறியா? நம்ப இத்தனை நாள் வெயிட் பண்ணது இந்த மீட்டிங்ல ஒரு சின்ன ப்ரெசென்டேசன் பண்ண தான். இப்போ வந்து போகணுமான்னு கேட்கிற?"

"ம்ச் உன்னை விட இந்த நாளுக்கு நான் தான் காத்திருந்தேன். ஆனால் என்னமோ ஒருமாதிரி பயமா இருக்கு! நீ என்னை விட்டு ரொம்ப தூரம் போற மாதிரி"
"வெறும் ஒரு நாள் தான் டார்லிங். இன்னைக்கு போயிட்டு நாளைக்கு கிளம்பிருவேன். நம்ப பேபி கான்போர்ம் பண்ணதால தான் உன்னை கூட்டிட்டு போக முடியல. எவ்வளவு கேட்டும் டாக்டர் நோ சொல்லிட்டாங்க. இல்லனா உன்னை விட்டுட்டு போவேனா அதுவும் இந்த மாதிரியான நிலையில்."

"சரி ஒரு நாள் தானே. பத்திரமா போயிட்டு வா. உனக்காக நானும் நம்ப குழந்தையும் வெயிட் பண்றோம்"
"வந்ததும் நம்ப கல்யாணம் பண்றதை பத்தி ஒரு பிரஸ் மீட் வைச்சிடலாம்"

"ஹா ஹா! நல்லவேளை எனக்கு வளைகாப்பு முடிந்ததும் தான் கல்யாணமும்னு நினைச்சேன். கொஞ்சம் சீக்கிரமா நடக்கும் போல"
"அடிப்பாவி நீ தான் டி, இத்தனை நாள் தள்ளிப்போட்ட? இப்போ என்னவோ நான் வேண்டாம்னு சொன்னது போல பேசுற?"

"பொண்ணுங்க அகராதில வேண்டாம்னா வேணும்னு அர்த்தம்."
"ஐயோ! மிஸ் பண்ணிட்டேனே!"
"அது தான் வந்ததும் கல்யாணம் பண்ணிக்க போறோமே அப்பறம் என்ன டா"
"நான் அதை சொல்லல டி. அன்னைக்கு நான் செம ஃபார்ம்ல இருந்தேன் போதும் வேண்டாம்னு நீ சொன்னதை நம்பி விட்டுட்டேன். இப்போ ரெண்டு மாசத்துக்கு எதுவும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க. நான் மோசம் போகிட்டேனே" என்றவனை பார்த்து அதிர்ந்து,
"கிரிஷ் நீ ரோபோ, நாண்-ரொமான்ஸ் பர்சன்னு இந்த ஊரே சொல்லும். ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியும் நீ எவ்வளவு பெரிய காதல் மன்னனு"

அவளை காதலாக பார்த்தவன், "என்னை எனக்காக காதல் செய்யும் ஒருத்தி நீ! உன்கிட்ட தானே என்னோட எல்லாத்தையும் காமிக்க முடியும். வார்த்தையில் விவரிக்க முடியாத உணர்வு டி எனக்கு".
"ப்பா முதல் முறை என்னை டி சொல்லுற அப்படியே ஹெவேன் பீலிங்!"

"ம்ம் நம்ப கல்யாணத்துக்கு அப்பறம் தினம் தினம் உனக்கு காமிக்கிறேன் இந்த சொர்க்கத்தை"
"சரி நீ கிளம்பு. இல்லைனா பிலைட்டுக்கு லேட் ஆகிடும்."

"ஆமாம் டார்லிங். நான் கிளம்பறேன் ஏதாவது எமெர்ஜெண்சின்னா எனக்கு கால் பண்ணு அடுத்து பிலைட்ல ரிட்டன் வந்திறேன். பத்திரமா இரு கரெக்ட் டைமுக்கு சாப்பிடு. மாத்திரை கசக்கும்னு சாப்பிடாமல் விட்டுராதே. ஒழுங்கா சாப்பிடு! என்று பல அறிவுரைகளை கூறி பெங்களூருக்கு கிளம்பினான்.

இன்று தனியாக செல்பவன் அடுத்தமுறை வரும் போது இரண்டு பேராக வரவிருப்பதை அறியாத பேதை காதலோடு வழியனுப்பி வைத்தாள். நேராக வீட்டிற்கு சென்று தம்பி மற்றும் தங்கையிடம் வெளியூர் செல்ல இருப்பதை கூறினான். அடுத்து பத்து நிமிடத்தில் கிளம்பியவன் இருவருக்கும் அலுவலக வேலைகளை பிரித்து கொடுத்து,
"நான் வந்ததும் ஒரு குட் நியூஸ் சொல்லுறேன்" என்று புதிர்ப்போட்டு கிளம்பினான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் கான்பரன்ஸ் நடக்கும் இடத்திற்கு அருகே வளரும் தொழிலதிபர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட அறையின் சாவியை பெற்று ஓய்வெடுக்க சென்றான். இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அந்த உருவம் வஞ்சமாக பார்த்து தனது திட்டம் படிப்படியாக நிறைவேறுகிறது என்று யாரும் அறியாமல் சந்தோசம் அடைந்தது.

நாளை அந்த கூட்டத்தில் மிக முக்கிய பிரெசென்டேசன் செய்ய லீலா சௌந்தராஜன் வந்திருக்க, இன்னும் வஞ்சனையோடு நின்றது அந்த உருவம். கண்களில் அத்தனை சினம் சிவப்பேறி ரத்தம் கொதிக்க நின்றிருந்தவனை நெருங்கினான் துப்புரவு பணியாளர்.

"சார் நீங்க சொன்னது போல அவருக்கு கொடுத்த காபில அந்த பவுடரை கலந்துட்டேன். என்மேல இருக்க கேஸை தள்ளுபடி பண்ணுங்க சார்"
சரி என்னும் விதமாக தலையை ஆட்டி அடுத்து நடக்க வேண்டியதை பார்க்க வம்சி அறைக்கு பக்கத்து அறைக்கு சென்று காத்திருந்தான்.

அறையில் படுத்தது மட்டும் தான் நினைவிருந்தது வம்சி கிருஷ்ணாவிற்கு மறுநாள் காலை கதவு தட்டும் ஓசை கேட்கும் வரை. எழுந்து செல்ல யோசித்தவன் மேல் ஏதோ கனமாக இருக்க கண்களை பிரித்தவனுக்கு இதயம் ஒருமுறை நின்று துடித்தது.

'இவள் எப்படி இங்க அதுவும் இந்த நேரத்தில்' என்று யோசித்தவன் அப்போது தான் அவளை நன்றாக பார்த்தான். கலைந்த ஓவியமாக இருந்தாள்.
'இல்லை அப்படி எதுவும் நடந்திருக்க கூடாது!' என்று போர்வையை விலக்கியவனுக்கு தலையில் இடி விழுந்தது போல நடந்து முடிந்ததின் மிச்சம் கூறியது.

'நோ நான் என் லேகாவை ஏமாற்றி இருக்க மாட்டேன். நான் அவளுக்கு துரோகம் பண்ண மாட்டேன் எங்கயோ தப்பு நடந்திருக்கு என்று யோசித்தவனை மீண்டும் கலைத்தது கதவு தட்டும் ஓசை. மாற்றத்தை புறந்தள்ளிவிட்டு வேகமாக எழுந்து கதவை திறந்தான்.

அவ்வளவு தான் வெறும் வாயை மென்று கொண்டிருந்த ஊடகத்திற்கு அவலை கொடுத்தது போல அவனை தாண்டி அறைக்குள் இருப்பதை படம் பிடிக்க ஆரம்பித்தனர். சட்டென்று சுதாரித்து அவர்களை தள்ளி கதவை பூட்ட அதற்குள் உள்ளே இருந்தவளை அரைகுறையாக படம் பிடித்திருந்தான் அவன்.

நினைத்தது போல நிழற்படம் கிடைக்க பேசி வைத்தது போல குறிப்பிட்ட சேனலுக்கு அப்படத்தை அனுப்பினான்.
அடுத்த அரைமணி நேரத்தில் காட்டுத்தீயாக பரவியது அந்த செய்தி. இதை எதையும் அறியாமல் நித்திரையின் பிடியில் துயில் இருந்தாள் சைந்தவி.
 
eiQLN122011.jpgஅழகு - 3


முந்தைய நாள் நடந்தவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நினைத்து பார்த்தான். அறைக்கு வந்ததும் தன்னை சுத்தம் செய்ய குளியலறைக்குள் நுழைந்தான் வம்சி கிருஷ்ணா.
குளித்து முடித்து வந்தவனுக்கு சூடாக காபி குடிக்க தோன்றியது.
உடனே பேண்ட்ரிக்கு அழைத்து தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்தான்.

அந்த நேரம் லேகா அழைக்க, அழைப்பை ஏற்று அவளிடம் பேச ஆரம்பித்தான்.
"டார்லிங் என்ன டி பண்ற?"
"நானும் என் பையனும் பேசிட்டு இருக்கோம்"

"அடியே! என் பொண்ணு டி அது"
"நோ! நோ! எனக்கு பையன் தான் வேணும்"
"சரி உனக்கு பையன் எனக்கு பொண்ணு. நாம் இருவர் நமக்கு இருவர் பாலிசி ஃபாலோ பண்ணலாம்"

"நல்லா இருக்குடா உன் பாலிசி"
"இருக்கணும்ல" என்று பேசிக்கொண்டு இருக்கும் போது அறைக்கதவு தட்டப்பட்டது.

"டேப்லெட் சாப்பிட்டயா?" என்று கேட்டவாறு கதவை திறந்து காபியை வாங்கியவன், பேசிக்கொண்டே அருந்தினான்.
"சாப்பிட்டேன். நீ செட் ஆகிட்டியா?"

"அதெல்லாம் அப்பவே. நீ இல்லாமல் முதல் மீட்டிங், ஏதோ மிஸ்ஸிங்கா பீல் ஆகுது."
"என்ன சார் என்னென்னமோ பேசுறீங்க?"

"நீ பக்கத்துலயே இருக்கணும்னு தோணுது. உன்னை இறுக்கி அணைச்சுட்டு உன் சூடான மூச்சு என் நெஞ்சுல வீசியப்படி தூங்கணும். எனக்கு நீ வேணும்"
"டேய் நாளைக்கு ப்ரெசென்டேசன் ஒழுங்கா பண்ணிட்டு வா. அதுக்கு அப்புறம் உன்னை விட்டு போகவே மாட்டேன். இப்போ போய் தூங்கு." என்று அழைப்பை துண்டித்தாள் லேகா.

தான் கடைசியாக பேசியது எல்லாம் விட்டு விட்டு நினைவு வர, கஷ்டப்பட்டு நினைவுக்கு கொண்டு வந்தான் வம்சி கிருஷ்ணா.
'அந்த காபில தான் ஏதோ கலந்திருக்காங்க.' என்று சரியாக கணிந்தவனுக்கு, ஏன்? எதற்கு? யார்? என்று வரிசையாக கேள்விகள் மனதை குடைந்தது.

அருகே ஏதோ அசைய, திரும்பி பார்த்தவனுக்கு இவள் எப்படி இங்கே வந்தாள் என்ற யோசினை வந்தது. லேகாவிடம் பேசிவிட்டு கட்டிலில் படுத்தவனுக்கு நிழலாக லேகா கூட இருப்பது போல் தோன்றியது. பட்டுப்போன்ற ஒரு கை அவன்மீது தவிழ்ந்து ஒருவித ஏக்கத்தை அவனிடத்தில் ஏற்படுத்தியது.

கனவில் லேகாவோடு பின்னி பிணைவதாக எண்ணி அருகே இருந்த பாவை மீது படர்ந்தான். மறுப்பு ஏதாவது வந்திருந்தால் சுதாரித்து இருப்பானோ என்னவோ? தடையில்லாமல் போக சைந்தவியோடு கூடி கழித்து கூடி கழித்து, விடியல் வரும் வேளையில் தான் அவளை பிரிந்து கண்ணயர்ந்தான்.

எல்லாம் நினைவிற்கு வர மனம் குற்றம் செய்த சிறுபிள்ளையாக தவித்தது. லேகாவென எண்ணி ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளேன் என்ற எண்ணமே அவனை அடியோடு வதைத்தது. எழுந்து இவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவளையே பார்த்திருந்தான்.

அரைமணி நேரத்திற்கு பிறகு எழுந்தவள், தான் இருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.
"நோ இது ஒரு கெட்ட கனவு தான் வேக் அப் சைந்து" என்று மெதுவாக அவள் கூறி தன்னிலை அடைய பார்த்தாள். அவனுக்கும் கூட இது ஒரு கெட்ட கனவாக இருக்கக்கூடாதா என்ற ஆவல் இருந்தது.

பின் உண்மை சுட, எதிரே யோசனையோடு இருந்த வம்சியை பார்த்ததும் கலக்கம் இருந்ததே தவிர அருவருப்பு ஏற்படவில்லை. சரியான இடத்தில் தான் தன்னை இழந்துள்ளேன் என்பதே அவளுக்கு அந்த நிமிடம் மன அமைதியை கொடுத்தது.

இருந்தும் தனது பெண்மையை தனது சுயநினைவில்லாமல் இழந்ததை எண்ணி கண்ணீர் பூத்தது. அவளை பார்க்க பாவமாக தான் இருந்தது, அவன் மட்டும் என்ன செய்வான் எல்லாம் கைமீறி அல்லவா போய்விட்டது. தன்னை சுதாரித்து அவளிடம் பேச ஆரம்பித்தான்.

"சைந்தவி நீ எப்படி என் ரூமுக்கு வந்த?"
"வாட் இது உங்க ரூமா? இது என் ரூம் வம்சி" என்றவள் இத்தனை நேரம் இழுத்து பிடித்து வைத்திருந்த கண்ணீரை சிந்தி,
"இல்லை இது என் ரூம் நான் தான் முன்னாடி வந்தேன்".

"நைட் பார்ட்டி முடிச்சிட்டு நான் லேட்டா தான் வந்தேன். இப்போ அது முக்கியம் இல்லை என்னை ஏன் இப்படி பண்ணீங்க வம்சி. உங்களை நான் காதலிக்கிறேன் தான் ஆனால் கல்யாணத்துக்கு முன்னாடியான உறவை கனவுல கூட என்னால் நினைச்சு பார்க்க முடியாது. என்னை ஏமாத்திட மாட்டீங்களே. அப்படி ஏதாவது நடந்தால் நான் செத்துருவேன் வம்சி ." என்று அவனுக்கு வாய்பளிக்காமல் பேசிக்கொண்டே போனாள்.

"சட்-அப் சைந்தவி. முதலில் கற்பனையில் இருந்து வெளியே வா. நம்பள யாரோ வேணும்னே ட்ராப் பண்ணி இப்படி மாட்டி விட்டிருக்காங்க. எனக்கு ஆல்ரெடி ஒரு லவ் இருக்கு. நானே அவளுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு இருக்கேன். லவ் கல்யாணம்னு உளறிட்டு இருக்க."

"வம்சி விளையாட்டுக்கு தான இப்படி பேசுறீங்க? நீங்க என்னை லவ் பண்றீங்க தான. நான் தான் போதையில் இருந்தேன். நீங்க தெளிவா தான இருந்திங்க?"
"பைத்தியம் மாதிரி பேசாத. நான் தெளிவா இருந்திருந்தா நீ இந்த ரூம்குள்ள வந்திருக்க மாட்ட!" என்று அவன் கத்த மீண்டும் கதவு தட்டும் ஓசை கேட்டது.

"ஐயோ! யாரோ கதவு தட்டுறாங்களே?"
"பயப்படாதே இந்த விஷயத்தில் இருந்து உன்னை வெளியே கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு. நீ லூசு தனமா எதையும் பேசி வைக்காதே. நம்பள மீடியா ரவுண்டு பண்ணிடுச்சு"

நடப்பது நெற்றிப்பொட்டில் அறைய நிதானமாக, "வம்சி இது சாதாரணமான விசயம் இல்லை. என்னோட லைஃப் மேட்டர். நடந்த எல்லாத்துக்கும் ரெண்டு பேரும் தான் பொறுப்பு. அதில் எனக்கு சம்பந்தம் இல்லை உனக்கு சம்பந்தம் இல்லைனு சொல்ல முடியாது."
"சுத்தி வளைக்காமல் சொல்லு"

ஆழ்ந்து மூச்சை எடுத்து, "என்னை ஏமாத்த நினைச்சா கண்டிப்பா செத்துருவேன்!" என்று மீண்டும் பல்லவியை பாட அவன் பொறுமை காற்றில் பறந்தது. யாரோ தன்னை இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டிருக்கிறார்கள் என்று தனியாக குழம்பி கொண்டிருந்தான். கூட இவள் வேறு சாவை காட்டி தன்னை மடக்குவது போல் தோன்றியது.

ஏதோ அவன் பேச வர அவள் அலைபேசி அடிக்க பயத்தோடு எடுத்து பார்த்தாள். அதில் பிரியா கால்லிங் என்று வர கை நடுங்க அதை ஏற்றாள்.
"ஹே சைந்து! அண்ணா கிட்ட போனை கொடு" என்றதும் யோசனையோடு அவனிடம் நீட்டினாள்.
"ஹலோ!" என்று அவன் சொன்னது தான் தாமதம்.

"ஏன் அண்ணா இப்படி பண்ண? அவளுக்கும் என் வயசு தான? அவளோட அந்தரங்கத்தை இப்போ ஊரே பார்க்கும்படி பண்ணிட்டியே. அவ தாங்கமாட்டா அண்ணா. ஏன் அண்ணா?" என்று பிரியா கதற நிலைமை விபரிதம் ஆகியதை உணர்த்து, தொலைக்காட்சியை உயிர்பித்தான்.

"மீட்டிங் என்ற பெயரில் சொகுசு அறையில் பிஸ்னஸ் டைக்கன் லீலா சௌந்தராஜன் மகளோடு லீலையில் ஏற்பட்டுள்ளார் இளம் தொழிலதிபர் வம்சி கிருஷ்ணா" என்று காலையில் எடுத்த வீடியோ மற்றும் அறையில் தூங்கிகொண்டிருந்த சைந்தவியின் புகைப்படம் என மாறி மாறி வர அதிர்ந்து போனான்.

அவ்வளவு தான் கத்தி கதற ஆரம்பித்தாள் சைந்தவி.
மீண்டும் சைந்தவியின் அலைபேசி அடிக்க இம்முறை அவளது அன்னை அவளுக்கு அழைத்திருந்தார்.
அவளிடம் அவர் ஏதோ பேச கதறி அழுதவள், "அம்மா எனக்கு பயமா இருக்கு வெளியே நான் வரல" என்றாள்.
எதிர்புறம் என்ன சொல்லப்பட்டதோ, கலைந்த கேசத்தை அள்ளி கொண்டையிட்டு உடைகளை சரி செய்து வெளியே செல்ல ஆயத்தமானாள்.

"இப்போ எங்க போற?" என்று அவள் கையை பிடிக்க,
"எங்க அம்மா வெளியே இருக்காங்க. நான் போறேன்" என்றாள் அழுதவாறு.
"சரி இரு நானும் வரேன்" என்று அவனும் கூட செல்ல, மொத்த கேமராவும் இருவரை சரமாரியாக புகைப்படம் எடுத்தது.

தனது அலைபேசிக்கு யாரும் இன்னும் அழைக்கவில்லையே என்று பார்க்க அது சைலன்ட் மோடில் இருந்தது.
நூத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் அதில் தவறி இருந்தது.

இப்போ எதை பார்க்க என்று அவன் யோசிக்கும் போது நிலைமையை கையில் எடுத்த லீலா சௌந்தராஜன் சற்றும் யோசிக்காமல் ஊடகத்தில் பேசினார்.

"அவங்க லவ் பன்றாங்க. இது அவங்களோட தனிப்பட்ட வாழ்க்கை. ஒருத்தரோட அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காமிக்கிறதை விட அசிங்கமான விசயம் எதுவும் இல்லை அதைத்தான் நீங்க பண்ணிருக்கீங்க. சீக்கிரம் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க. இப்போ வழியை விடுங்க" என்று வம்சியை கண்டிக்கும் பார்வை பார்த்து சைந்தவியோடு அவ்விடத்தை விட்டு அகன்றார்.

அடுத்த கேள்விகனைகள் அவனை நோக்கி பாய எதற்கும் பதிலளிக்காமல் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறினான். சற்று ஆசுவாசப்படுத்தி அலைபேசியில் லேகாவை தொடர்புக் கொண்டான்.

"வம்சி என்ன ஆச்சு? எப்படி அவளோட நீ?" என்று திக்கித் திணறி பேசினாள்.
"லேகா எதுக்கு நீ இப்படி அழுதுட்டு இருக்க. உன் வயிற்றில் குழந்தை இருக்கிறதை மறந்துட்டியா? நான் நேரில் வறேன். எனக்கே சில விசயம் தெளிவாக தெரியல"

"சீக்கிரம் வா எனக்கு பயமா இருக்கு!"
"நீ எதையும் யோசிக்காமல் இரு நான் வந்துட்டே இருக்கேன்" என்று அழைப்பை துண்டித்தவனுக்கு பிரியா கேட்ட கேள்விகள் நினைவிற்கு வந்தது.

'அப்போ நான் தான் தப்பு பண்ணேன் அப்படினு எல்லாரும் நினைக்கிறாங்க. பட் இது ஒரு அக்சிடேன்ட்டுனு நான் எல்லாருக்கும் எப்படி நிரூபிக்க?'

'இதை சைந்தவியே நம்பள மத்தவங்கல எப்படி நம்ப வைக்க. யாரு எங்க ரெண்டு பேரையும் ஒரே ரூம்ல கோர்த்து விட்டது. மீடியாக்கு யாரு சரியான நேரத்தில் நியூஸ் கொடுத்தது.'

'ஏதோ தப்பா தெரியுது ஆனால் எங்கனு தெரியல. இந்த லீலா எதுக்கு நாங்க லவ் பண்றோம்னு சொன்னாங்க. அவங்க பொண்ணோட இமேஜ காப்பாற்ற அப்படி சொல்லியிருக்கலாம்!'

' இந்த சைந்தவி எப்போ இருந்து என்னை காதலிக்கிறா? இதை எப்படி கவனிக்காமல் போனேன்? அப்போ அந்த நியூஸ் லீலா வேலையா? இல்லை சைந்தவி வேலையா? இல்லை மூணாவதா யாராவது இருக்காங்களா? நான் எப்படி சுயநினைவில்லாம சைய்ந்தவியோட இருந்தே?'

'லேகா முகத்தில் எப்படி முழிப்பேன்? அவள் என்கிட்ட எதையும் எதிர்பாக்கல என் காதலை தவிர. அதை கூட அவளுக்கு தர முடியல' என்று பல விஷயங்களை நினைத்து வருந்தினான்.

மீண்டும் லேகாவை அழைத்து பேச கூட மறந்தவன் இயந்திரத்தனமாக விமானத்தில் ஏறி பயணத்தை தொடர்ந்தான்.
அங்கே அழுதுக்கொண்டிருந்த லேகாவை ஒரு கும்பல் கத்தி முனையில் கடத்தி சென்றதை அறியாமல் அவளை காண வந்து கொண்டிருந்தான்.


கருத்து திரி

 
Status
Not open for further replies.
Top