Sulochana Suresh
Moderator
கனவு 16
சிறு பெண்ணின் குரல் சேகருக்கு பழக்கப்பட்ட குரல் என்பதால் தான் கவனித்திருந்தான். அது உறுதியாகியதும் வேகமாக எழுந்து அந்த பக்கம் சென்ற நேரத்தில்
"பாப்பா நீ ரொம்ப சின்ன பெண்ணா இருக்க இன்னும் ஒரு நாலைந்து வயசு பெரிசா இருந்திருந்தா நாங்க கொடுக்கும் காசுக்கு பெருமானம் கிடைக்கும்" என்று சொல்லி சிரிக்கவும்,
சேகர் சென்ற வேகத்தில் அங்கிருந்தவர்களை பார்க்க இரு கல்லூரி மாணவர்கள் அமர்ந்து புகைத்து கொண்டு இருந்தனர். அவர்கள் எதிரில் பத்து வயது சிறு பெண்ணும் ஐந்து வயது பையனும் நின்று இருந்தனர்.
அந்த சிறுவர்களை ஒரு பார்வை பார்த்தவன் அங்கு பிள்ளைகளை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்த மாணவர்கள் இருவரையும் ஓங்கி அறைந்திருந்தான் சேகர்.
இருமாணவர்களும் அடிவாங்கிய கன்னத்தை பிடித்துக்கொண்டு எழுந்து நின்றனர். பார்க்க படிக்கிற பசங்களா தெரியறீங்க. குழந்தை கிட்ட பேசற பேச்சா பேசறீங்க. இதே வார்த்தையை உங்க அக்கா தங்கச்சிக்கிட்ட பேசுவீங்களா?..." என்று சேகர் கோபமாக பேசவும், அந்த மாணவர்கள் தலைகுனிந்தனர்.
"சின்ன குழந்தைங்க பசிக்குது என்று கேட்கிறாங்க, உங்க கிட்ட காசு இருந்தால் கொடுக்கனும் இல்லை கொடுக்கப்பிடிக்கலை என்றால் இல்லை என்று அனுப்பி இருக்கனும் அதை விட்டு ச்சீ... என்ன வார்த்தை பேசறீங்க. இதை உங்க பெத்தவங்க எதிர்க்க பேசுவீங்களா?...." என்று கோபத்துடன் சேகர் பேசிக்கொண்டு இருக்கவும்
"சாரி சார் தெரியாமல் பேசிட்டோம் இனி அப்படி பேசமாட்டோம் என்றவர்கள் தங்கள் பாக்கெட்டில் இருந்து இரண்டு ரூபாய் எடுத்து கொடுக்கவும் அந்த சிறு பெண் கை நீட்டி வாங்கப்போக, "மகி..." என்ற அதட்டல் குரல் சேகர் கொடுக்கவும் சட்டென்று கையை பின்னால் கொண்டு சென்றது அந்த சிறு பெண்.
"நீங்க கொடுக்க வேண்டாம், இனி இப்படி பேசறதை பார்த்தால் அவ்வளவு தான் போங்க" என்று சேகர் கோபமாக சொல்லவும் அந்த மாணவர்கள் அந்த இடத்தில் இருந்து வேகமாக சென்றனர்.
"இவ்வளவு தூரம் வரக்கூடாது என்று உன் கிட்ட சொல்லி இருக்கேன் இல்ல மகி" என்று சேகர் கேட்கவும்
அந்த சிறு பெண்ணோ "அது... அண்ணா.... விளையாட.... வந்தோம்..." என்று மிரட்சியுடன் சொல்லவும்.
"விளையாடக்கூட இங்க வரக்கூடாது என்றுதானே சொல்லியிருக்கேன்" என்று கண்டிப்புடன் கேட்கவும் மகி தலைகுனிந்து நிற்கவும் அவளின் கைப்பிடியில் இருந்த சிறுவன்
"அண்ணா பசிக்குது" என்றான்.
அதுவரை இருந்த கோபம் மறைந்து அந்த பிள்ளைகள் மீது பச்சாதாபம் எழுந்தது. எப்படி இருக்க வேண்டிய பிள்ளைகள் இன்னைக்கு பசிக்காக பிச்சை எடுக்கும் அளவுக்கு ஆளாகியிருக்காங்க என்று மனம் வேதனை அடைய,
சிறுவனின் கைபிடித்து" வா..." என்று அழைத்து சென்றான் சேகர். அவன் பின் மகியும் சென்றாள்.
நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த லட்சுமணனின் மனதில் இந்த குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்காமல் இவங்க அப்பா அம்மா என்ன செய்கிறார்கள் என்று தான் தோன்றியது.
அந்த மாணவர்கள் பேசியது கேட்டதும் இப்படியெல்லாம் பேசுவார்களா என்ற எண்ணம் வந்தது. அவன் வெளியுலகம் தெரியாமல் இருந்தாலும் அவனும் இளைஞன் தானே அந்த மாணவர்கள் பேசிய வார்த்தையின் பொருள் புரியாமல் இருக்குமா?...
சிறு பெண்ணிடம் இப்படி பேசுகிறார்களே இப்படியும் மாணவர்கள் இருக்கிறார்களா என்று அவர்கள் மீது கோபம் வந்தது. அவனுக்கு முன்பே சேகர் அடித்ததால் அமைதியாக இருந்து விட்டான். அந்த மாணவர்கள் சென்ற பின் சேகர் பேசியதை கேட்டவன், இந்த பிள்ளைகள் சேகருக்கு தெரிந்தவர்களாக இருப்பர் என்று நினைத்தான். அந்த சிறியவன் பசிக்குது என்றதும் லட்சுமணனின் கண்கள் கலங்கியது.
தங்கள் வீட்டில் இருந்த வரை பசி என்பதை அறிந்தது இல்லை. இங்கு வந்த சில நாட்களில் தான் உடல் நிலை சரியில்லாமல் போனதும் சாப்பிட முடியாமல் இருந்த போது தான் பசியை அறிந்து இருந்தான்.
இந்த சிறு குழந்தைகள் இந்த வயதில் அதனை அனுபவிப்பது எவ்வளவு கொடுமை என்று லட்சுமணன் மனம் வேதனை பட்டது.
ரோட்டோரம் இருந்த தள்ளு வண்டி கடைக்கு அழைத்து சென்று சிறுபிள்ளைகளுக்கு இட்லியை வாங்கி கொடுத்தான் சேகர்.
பிள்ளைகள் வேக வேகமாக உண்பதை வைத்தே பிள்ளைகளின் பசி தெரிந்தது. உண்டு முடிக்கும் வரை சேகரும் லட்சுமணனும் அமைதியாக இருந்தனர்.
பிள்ளைகள் உண்டு முடித்ததும் பணம் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பவும்,
மகி தயங்கி நின்றாள்.
"என்ன மகி நிக்கிற வா" என்று அழைத்தான் சேகர்.
"அண்ணா... அம்மா... கூட நேற்று ராத்திரியில் இருந்து சாப்பிடலை" என்று தயங்கித்தயங்கி சொன்னாள் மகி.
அவளைத் தொடர்ந்து மகியின் தம்பி அருண் "அம்மாவை அப்பா அடிச்சிட்டார் அண்ணா, அதனால் அம்மாவுக்கு ஜுரம் வந்திடுச்சு. அம்மா படுத்திட்டே இருந்தாங்க. காலையில் இருந்து சாப்பிட எதுவும் தரலை பசி எடுத்திச்சி அதான் அக்காகிட்ட கேட்டேன். அக்கா இங்க கூட்டிட்டு வந்தாங்க" என்றான்.
"எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த மகி பசித்தால் ஆண்டாள் பெரியம்மா வீட்டுக்கு போக வேண்டியது தானே?..." என்று கோபத்துடன் கேட்டான் சேகர்.
"அது.. அண்ணா.. என்று மகி தயங்கினாள் என்றால் அந்த தயக்கம் எதுவும் அந்த சிறுவனுக்கு இல்லாமல் அப்பா அம்மாவை அடிக்கும் போது அக்கா அப்பாக்கிட்ட அடிக்காதீங்க அப்பா என்று சொல்லி அப்பா கையை பிடிச்சாங்க, அப்ப அப்பா அக்காவையும் அடிச்சிட்டார் அண்ணா. அப்புறம் அக்கா அழுதிட்டே பெரியம்மாவை கூட்டிட்டு வரேன் என்று சொன்னாங்க அதுக்கும் அக்காவை திரும்ப அடிச்சிட்டு இனி பெரியம்மா என்று அந்த வீட்டு பக்கம் போனால் காலை உடைத்து விடுவேன் என்று சொல்லி அடித்தார்" என்று கூறினான் சிறுவன் அருண்.
அதை கேட்டுக்கொண்டு இருந்த சேகர், லட்சுமணன் இருவரின் மனதிலும் கோபமும் வேதனை ஒருங்கே சூழ்ந்தது.
"மகி நீ தம்பியை கூட்டிட்டு போ நான் ஆண்டாள் பெரியம்மாவை அனுப்புறேன். அவங்க அம்மாக்கு சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க" என்று கூறியதும் மகி சற்று பயத்துடன் சேகரை பார்க்கவும் "உன் அப்பா எதுவும் சொல்லமாட்டார் நீ பயப்படாமல் போ" என்றான் சேகர்.
பிள்ளைகள் இருவரும் முன்னாள் நடக்க அவர்கள் பின் சென்ற சேகர் மெல்லிய குரலில் லட்சுமணனிடம் "இந்த குழந்தைகள் எப்படி வாழ்ந்து இருக்க வேண்டியவங்க தெரியுமா?... லட்சுமணன். பெரிய வீட்டில் பணக்கார வாழ்க்கை வாழவேண்டிய பிள்ளைகளை இப்படி பிச்சை எடுக்க வச்சுட்டானுங்க சில பொறாமை பிடித்த மனித மிருகங்கள்" என்று கோபத்துடன் சொன்னான்.
ஏற்கனவே அந்த சிறுவன் பேசிய பேச்சைக்கோட்டு இப்படியும் ஒரு தகப்பன் இருப்பானா என்ற கோபமும் குழந்தைகள் நிலை நினைத்து வேதனையில் இருந்தவனுக்கு சேகரின் பேச்சு அதிர்ச்சியை கொடுத்தது.
"என்ன சொல்லுறீங்க சேகர் இந்த பசங்க வசதியானவங்களா இப்ப எப்படி இப்படி?..." என்று புரியாமல் கேட்டான்.
"இந்த பசங்களோட அப்பாவும் ஒரு நடிகர் தான். கஷ்டப்பட்டு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து சின்ன வேடத்தில் நடிச்சிட்டு இருந்தார். ஒரு படத்தில் காமெடி சீன் நடிக்கிறவர் வேற பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிட்டார்."
"டைரக்டர் திரும்ப புது காமெடி ஆக்டர் கால்ஷீட் வாங்க லேட் ஆகும் என்று புதிய ஆளையே நடிக்க வைக்கலாம் என்று நினைத்து தேடியபோது கண்ணில் பட்டவர் தான் வேலு. அவரை அழைத்து ஒரு சீன் சொல்லி நடிக்க சொன்னபோது இவரும் நல்லா நடித்து இருக்கார். அவரையே அந்த படத்தில் முழுநேர காமெடி நடிகனாக நடிக்க வச்சு அந்த படமும் நல்லா ஓடி அடுத்தடுத்து புதிய படங்கள் கிடைத்தது.
வருமானம் நல்லா வந்ததும் பெரிய வீடு வாடகைக்கு எடுத்துட்டு குடிபோனாங்க, பசங்களை பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வச்சாங்க. இரண்டு வருடம் நல்லா இருந்தவர் வாழ்க்கையில் நண்பர்கள் என்ற பெயரில் இருந்த பொறாமை பிடித்தவர்கள் குடிக்க கற்றுக்கொடுத்துவிட அந்த பழக்கம் அதிகமாகி, சரியாக நடிக்கமுடியாமல் அவரின் படவாய்ப்புகளை நண்பர்கள் என்ற பெயரில் இருந்தவர்கள் தட்டி பரித்து விட்டார்கள்."
"படவாய்ப்பு சுத்தமாக நின்றதோடு குடியையும் விடமுடியாமல் சம்பாதித்த அனைத்தும் காலியாகி திரும்ப இந்த இடத்திற்கே வந்தாச்சு. இப்ப ஒரு வருஷமாக இந்த பசங்களோட அம்மா வீட்டு வேலைக்கு போய் சம்பாதித்து குடும்பத்தை பார்க்கறாங்க. குடிக்க பணம் இல்லை என்றால் அவங்ககிட்ட சண்டை போட்டு வாங்கிட்டு போய் குடிப்பார்."
"இப்ப அடிக்கவும் ஆரம்பித்திட்டார் போல, நல்லா வாழவேண்டிய குடும்பத்தை நாசமாக்கிட்டு இன்னிக்கு அவங்க எல்லாம் நல்லா வாழ்ந்திட்டு இருக்காங்க" என்று பேசிக்கொண்டே ஆண்டாள் அக்கா வீட்டின் முன் வந்து நின்றனர்.
விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்தார் ஆண்டாள். லட்சுமணனின் கண்கள் ஊர்மிளாவை தேடியது, அவனின் கண்களில் அவள் படவில்லை. எங்க போனாள் என்று எண்ணிக்கொண்டு இருந்த நேரம் சேகரின் "அக்கா..." என்ற குரல் கேட்டதும் தன் எண்ணம் போகும் பாதையை நினைத்து தன்னையே மானசீகமாக குட்டிக்கொண்டான் லட்சுமணன்.
"என்ன சேகர் ரோட்டு பக்கம் போய் வந்திட்டிங்களா வாங்க சாப்பிட்டு போங்க..." என்று அழைத்தார்.
"அக்கா இருக்கட்டும் நான் முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன்" என்று கூறிய சேகர் மெல்லிய குரலில் நடந்ததை கூறவும் நெஞ்சில் கை வைத்து "அய்யோ..." என்றார் ஆண்டாள்.
"வீட்டின் உள்பக்கமாக திரும்பி அடியேய் உள்ள என்னடி பண்ணுற என்று குரல் கொடுத்தார். வீட்டின் உள்ளே ஓரமாக அமர்ந்து சிந்தனையில் இருந்த ஊர்மிளா காதில் தாயின் குரல் கேட்கவும் வேகமாக வெளியே வந்தாள்.
அருகில் வந்த மகளின் தலையில் குட்டு ஒன்றை வைத்த ஆண்டாள். "ஏன்டி சாயங்காலம் ஆனால் மகியையும் அருணையும் பார்க்க போவாய் இல்லையா?... இன்னைக்கு போகாமல் மூளையில் உட்கார்ந்திட்டு என்ன பண்ணிட்டு இருக்க?...." என்று கூறி மீண்டும் ஒரு குட்டு வைத்தார்.
வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்த போதே சேகர், லட்சுமணனை கண்டுவிட்டு இருந்தாள் ஊர்மிளா. அவர்கள் எதிரிலேயே தாய் திட்டியதோடு அடிக்கவும் அவளின் பார்வை லட்சுமணனை முறைத்தது.
எல்லாம் இவனால் தான் இவனை பார்த்ததில் இருந்து தான் இப்படி பைத்தியம் மாதிரி இவனை பற்றியே சிந்தனை பண்ணிட்டு இருக்கேன் என்று மனதுக்குள் லட்சுமணனை திட்டிக்கொண்டு இருந்தாள்.
"அடியேய் நான் இங்க பேசிட்டு இருக்கேன் உன் சிந்தனை எங்க இருக்கு போய் அந்த பாலை கொஞ்சம் சூடு பண்ணி எடுத்துட்டு வா. நான் மகி வீட்டுக்கு போறேன்" என்றவர் "சேகர் வாப்பா இன்னைக்கு அவனை ரெண்டில் ஒன்னு பார்க்கனும்" என்று முன் சொல்ல அவரின் பின் சேகரும் லட்சுமணனும் சென்றனர்.
ஊர்மிளாவுக்கு அப்போது தான் எதுவோ பிரச்சனை என்று தெரிந்து வேகமாக பாலை அடுப்பில் வைத்து சூடு செய்து சிறு தூக்கில் ஊற்றி எடுத்து சென்றாள்.
ஆண்டாள் அக்கா வீட்டில் இருந்து ஐந்து வீடு தள்ளி ஒரு சிறு சிமெண்ட் சீட் போட்ட வீட்டின் முன் இருந்த திண்ணையில் பயத்துடன் மகியும் அருணும் அமர்ந்து இருந்தனர்.
ஆண்டாள் வேகமாக அந்த வீட்டின் முன் சென்றவர் பிள்ளைகள் மிரட்சியுடன் வீட்டினுள் பார்ப்பதை கண்டதும்
"உங்க அப்பா உள்ள இருக்காரா?...." என்று கேட்கவும் "இருக்கார் பெரியம்மா இப்ப தான் எழுந்தார்" என்றாள் மகி.
கொஞ்சமாக திறந்திருந்த கதவை நன்றாக திறந்து உள்ளே சென்ற ஆண்டாள் கண்டது தட்டுத்தடுமாறி எழுந்து நின்ற வேலுவையும், ஓரமாக சுருண்டு படுத்திருந்த அவன் மனைவி கல்பனாவையும் தான். வேகமாக வேலுவின் முன் சென்று நின்றதும் அவரைக்கண்டு அதிர்ந்து அக்கா.... என்று தடுமாற்றத்துடன் வேலு அழைக்கவும், இரு கன்னத்திலும் ஓங்கி அறைந்திருந்தார் ஆண்டாள்.
சிறு பெண்ணின் குரல் சேகருக்கு பழக்கப்பட்ட குரல் என்பதால் தான் கவனித்திருந்தான். அது உறுதியாகியதும் வேகமாக எழுந்து அந்த பக்கம் சென்ற நேரத்தில்
"பாப்பா நீ ரொம்ப சின்ன பெண்ணா இருக்க இன்னும் ஒரு நாலைந்து வயசு பெரிசா இருந்திருந்தா நாங்க கொடுக்கும் காசுக்கு பெருமானம் கிடைக்கும்" என்று சொல்லி சிரிக்கவும்,
சேகர் சென்ற வேகத்தில் அங்கிருந்தவர்களை பார்க்க இரு கல்லூரி மாணவர்கள் அமர்ந்து புகைத்து கொண்டு இருந்தனர். அவர்கள் எதிரில் பத்து வயது சிறு பெண்ணும் ஐந்து வயது பையனும் நின்று இருந்தனர்.
அந்த சிறுவர்களை ஒரு பார்வை பார்த்தவன் அங்கு பிள்ளைகளை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்த மாணவர்கள் இருவரையும் ஓங்கி அறைந்திருந்தான் சேகர்.
இருமாணவர்களும் அடிவாங்கிய கன்னத்தை பிடித்துக்கொண்டு எழுந்து நின்றனர். பார்க்க படிக்கிற பசங்களா தெரியறீங்க. குழந்தை கிட்ட பேசற பேச்சா பேசறீங்க. இதே வார்த்தையை உங்க அக்கா தங்கச்சிக்கிட்ட பேசுவீங்களா?..." என்று சேகர் கோபமாக பேசவும், அந்த மாணவர்கள் தலைகுனிந்தனர்.
"சின்ன குழந்தைங்க பசிக்குது என்று கேட்கிறாங்க, உங்க கிட்ட காசு இருந்தால் கொடுக்கனும் இல்லை கொடுக்கப்பிடிக்கலை என்றால் இல்லை என்று அனுப்பி இருக்கனும் அதை விட்டு ச்சீ... என்ன வார்த்தை பேசறீங்க. இதை உங்க பெத்தவங்க எதிர்க்க பேசுவீங்களா?...." என்று கோபத்துடன் சேகர் பேசிக்கொண்டு இருக்கவும்
"சாரி சார் தெரியாமல் பேசிட்டோம் இனி அப்படி பேசமாட்டோம் என்றவர்கள் தங்கள் பாக்கெட்டில் இருந்து இரண்டு ரூபாய் எடுத்து கொடுக்கவும் அந்த சிறு பெண் கை நீட்டி வாங்கப்போக, "மகி..." என்ற அதட்டல் குரல் சேகர் கொடுக்கவும் சட்டென்று கையை பின்னால் கொண்டு சென்றது அந்த சிறு பெண்.
"நீங்க கொடுக்க வேண்டாம், இனி இப்படி பேசறதை பார்த்தால் அவ்வளவு தான் போங்க" என்று சேகர் கோபமாக சொல்லவும் அந்த மாணவர்கள் அந்த இடத்தில் இருந்து வேகமாக சென்றனர்.
"இவ்வளவு தூரம் வரக்கூடாது என்று உன் கிட்ட சொல்லி இருக்கேன் இல்ல மகி" என்று சேகர் கேட்கவும்
அந்த சிறு பெண்ணோ "அது... அண்ணா.... விளையாட.... வந்தோம்..." என்று மிரட்சியுடன் சொல்லவும்.
"விளையாடக்கூட இங்க வரக்கூடாது என்றுதானே சொல்லியிருக்கேன்" என்று கண்டிப்புடன் கேட்கவும் மகி தலைகுனிந்து நிற்கவும் அவளின் கைப்பிடியில் இருந்த சிறுவன்
"அண்ணா பசிக்குது" என்றான்.
அதுவரை இருந்த கோபம் மறைந்து அந்த பிள்ளைகள் மீது பச்சாதாபம் எழுந்தது. எப்படி இருக்க வேண்டிய பிள்ளைகள் இன்னைக்கு பசிக்காக பிச்சை எடுக்கும் அளவுக்கு ஆளாகியிருக்காங்க என்று மனம் வேதனை அடைய,
சிறுவனின் கைபிடித்து" வா..." என்று அழைத்து சென்றான் சேகர். அவன் பின் மகியும் சென்றாள்.
நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த லட்சுமணனின் மனதில் இந்த குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்காமல் இவங்க அப்பா அம்மா என்ன செய்கிறார்கள் என்று தான் தோன்றியது.
அந்த மாணவர்கள் பேசியது கேட்டதும் இப்படியெல்லாம் பேசுவார்களா என்ற எண்ணம் வந்தது. அவன் வெளியுலகம் தெரியாமல் இருந்தாலும் அவனும் இளைஞன் தானே அந்த மாணவர்கள் பேசிய வார்த்தையின் பொருள் புரியாமல் இருக்குமா?...
சிறு பெண்ணிடம் இப்படி பேசுகிறார்களே இப்படியும் மாணவர்கள் இருக்கிறார்களா என்று அவர்கள் மீது கோபம் வந்தது. அவனுக்கு முன்பே சேகர் அடித்ததால் அமைதியாக இருந்து விட்டான். அந்த மாணவர்கள் சென்ற பின் சேகர் பேசியதை கேட்டவன், இந்த பிள்ளைகள் சேகருக்கு தெரிந்தவர்களாக இருப்பர் என்று நினைத்தான். அந்த சிறியவன் பசிக்குது என்றதும் லட்சுமணனின் கண்கள் கலங்கியது.
தங்கள் வீட்டில் இருந்த வரை பசி என்பதை அறிந்தது இல்லை. இங்கு வந்த சில நாட்களில் தான் உடல் நிலை சரியில்லாமல் போனதும் சாப்பிட முடியாமல் இருந்த போது தான் பசியை அறிந்து இருந்தான்.
இந்த சிறு குழந்தைகள் இந்த வயதில் அதனை அனுபவிப்பது எவ்வளவு கொடுமை என்று லட்சுமணன் மனம் வேதனை பட்டது.
ரோட்டோரம் இருந்த தள்ளு வண்டி கடைக்கு அழைத்து சென்று சிறுபிள்ளைகளுக்கு இட்லியை வாங்கி கொடுத்தான் சேகர்.
பிள்ளைகள் வேக வேகமாக உண்பதை வைத்தே பிள்ளைகளின் பசி தெரிந்தது. உண்டு முடிக்கும் வரை சேகரும் லட்சுமணனும் அமைதியாக இருந்தனர்.
பிள்ளைகள் உண்டு முடித்ததும் பணம் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பவும்,
மகி தயங்கி நின்றாள்.
"என்ன மகி நிக்கிற வா" என்று அழைத்தான் சேகர்.
"அண்ணா... அம்மா... கூட நேற்று ராத்திரியில் இருந்து சாப்பிடலை" என்று தயங்கித்தயங்கி சொன்னாள் மகி.
அவளைத் தொடர்ந்து மகியின் தம்பி அருண் "அம்மாவை அப்பா அடிச்சிட்டார் அண்ணா, அதனால் அம்மாவுக்கு ஜுரம் வந்திடுச்சு. அம்மா படுத்திட்டே இருந்தாங்க. காலையில் இருந்து சாப்பிட எதுவும் தரலை பசி எடுத்திச்சி அதான் அக்காகிட்ட கேட்டேன். அக்கா இங்க கூட்டிட்டு வந்தாங்க" என்றான்.
"எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த மகி பசித்தால் ஆண்டாள் பெரியம்மா வீட்டுக்கு போக வேண்டியது தானே?..." என்று கோபத்துடன் கேட்டான் சேகர்.
"அது.. அண்ணா.. என்று மகி தயங்கினாள் என்றால் அந்த தயக்கம் எதுவும் அந்த சிறுவனுக்கு இல்லாமல் அப்பா அம்மாவை அடிக்கும் போது அக்கா அப்பாக்கிட்ட அடிக்காதீங்க அப்பா என்று சொல்லி அப்பா கையை பிடிச்சாங்க, அப்ப அப்பா அக்காவையும் அடிச்சிட்டார் அண்ணா. அப்புறம் அக்கா அழுதிட்டே பெரியம்மாவை கூட்டிட்டு வரேன் என்று சொன்னாங்க அதுக்கும் அக்காவை திரும்ப அடிச்சிட்டு இனி பெரியம்மா என்று அந்த வீட்டு பக்கம் போனால் காலை உடைத்து விடுவேன் என்று சொல்லி அடித்தார்" என்று கூறினான் சிறுவன் அருண்.
அதை கேட்டுக்கொண்டு இருந்த சேகர், லட்சுமணன் இருவரின் மனதிலும் கோபமும் வேதனை ஒருங்கே சூழ்ந்தது.
"மகி நீ தம்பியை கூட்டிட்டு போ நான் ஆண்டாள் பெரியம்மாவை அனுப்புறேன். அவங்க அம்மாக்கு சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க" என்று கூறியதும் மகி சற்று பயத்துடன் சேகரை பார்க்கவும் "உன் அப்பா எதுவும் சொல்லமாட்டார் நீ பயப்படாமல் போ" என்றான் சேகர்.
பிள்ளைகள் இருவரும் முன்னாள் நடக்க அவர்கள் பின் சென்ற சேகர் மெல்லிய குரலில் லட்சுமணனிடம் "இந்த குழந்தைகள் எப்படி வாழ்ந்து இருக்க வேண்டியவங்க தெரியுமா?... லட்சுமணன். பெரிய வீட்டில் பணக்கார வாழ்க்கை வாழவேண்டிய பிள்ளைகளை இப்படி பிச்சை எடுக்க வச்சுட்டானுங்க சில பொறாமை பிடித்த மனித மிருகங்கள்" என்று கோபத்துடன் சொன்னான்.
ஏற்கனவே அந்த சிறுவன் பேசிய பேச்சைக்கோட்டு இப்படியும் ஒரு தகப்பன் இருப்பானா என்ற கோபமும் குழந்தைகள் நிலை நினைத்து வேதனையில் இருந்தவனுக்கு சேகரின் பேச்சு அதிர்ச்சியை கொடுத்தது.
"என்ன சொல்லுறீங்க சேகர் இந்த பசங்க வசதியானவங்களா இப்ப எப்படி இப்படி?..." என்று புரியாமல் கேட்டான்.
"இந்த பசங்களோட அப்பாவும் ஒரு நடிகர் தான். கஷ்டப்பட்டு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து சின்ன வேடத்தில் நடிச்சிட்டு இருந்தார். ஒரு படத்தில் காமெடி சீன் நடிக்கிறவர் வேற பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிட்டார்."
"டைரக்டர் திரும்ப புது காமெடி ஆக்டர் கால்ஷீட் வாங்க லேட் ஆகும் என்று புதிய ஆளையே நடிக்க வைக்கலாம் என்று நினைத்து தேடியபோது கண்ணில் பட்டவர் தான் வேலு. அவரை அழைத்து ஒரு சீன் சொல்லி நடிக்க சொன்னபோது இவரும் நல்லா நடித்து இருக்கார். அவரையே அந்த படத்தில் முழுநேர காமெடி நடிகனாக நடிக்க வச்சு அந்த படமும் நல்லா ஓடி அடுத்தடுத்து புதிய படங்கள் கிடைத்தது.
வருமானம் நல்லா வந்ததும் பெரிய வீடு வாடகைக்கு எடுத்துட்டு குடிபோனாங்க, பசங்களை பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வச்சாங்க. இரண்டு வருடம் நல்லா இருந்தவர் வாழ்க்கையில் நண்பர்கள் என்ற பெயரில் இருந்த பொறாமை பிடித்தவர்கள் குடிக்க கற்றுக்கொடுத்துவிட அந்த பழக்கம் அதிகமாகி, சரியாக நடிக்கமுடியாமல் அவரின் படவாய்ப்புகளை நண்பர்கள் என்ற பெயரில் இருந்தவர்கள் தட்டி பரித்து விட்டார்கள்."
"படவாய்ப்பு சுத்தமாக நின்றதோடு குடியையும் விடமுடியாமல் சம்பாதித்த அனைத்தும் காலியாகி திரும்ப இந்த இடத்திற்கே வந்தாச்சு. இப்ப ஒரு வருஷமாக இந்த பசங்களோட அம்மா வீட்டு வேலைக்கு போய் சம்பாதித்து குடும்பத்தை பார்க்கறாங்க. குடிக்க பணம் இல்லை என்றால் அவங்ககிட்ட சண்டை போட்டு வாங்கிட்டு போய் குடிப்பார்."
"இப்ப அடிக்கவும் ஆரம்பித்திட்டார் போல, நல்லா வாழவேண்டிய குடும்பத்தை நாசமாக்கிட்டு இன்னிக்கு அவங்க எல்லாம் நல்லா வாழ்ந்திட்டு இருக்காங்க" என்று பேசிக்கொண்டே ஆண்டாள் அக்கா வீட்டின் முன் வந்து நின்றனர்.
விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்தார் ஆண்டாள். லட்சுமணனின் கண்கள் ஊர்மிளாவை தேடியது, அவனின் கண்களில் அவள் படவில்லை. எங்க போனாள் என்று எண்ணிக்கொண்டு இருந்த நேரம் சேகரின் "அக்கா..." என்ற குரல் கேட்டதும் தன் எண்ணம் போகும் பாதையை நினைத்து தன்னையே மானசீகமாக குட்டிக்கொண்டான் லட்சுமணன்.
"என்ன சேகர் ரோட்டு பக்கம் போய் வந்திட்டிங்களா வாங்க சாப்பிட்டு போங்க..." என்று அழைத்தார்.
"அக்கா இருக்கட்டும் நான் முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன்" என்று கூறிய சேகர் மெல்லிய குரலில் நடந்ததை கூறவும் நெஞ்சில் கை வைத்து "அய்யோ..." என்றார் ஆண்டாள்.
"வீட்டின் உள்பக்கமாக திரும்பி அடியேய் உள்ள என்னடி பண்ணுற என்று குரல் கொடுத்தார். வீட்டின் உள்ளே ஓரமாக அமர்ந்து சிந்தனையில் இருந்த ஊர்மிளா காதில் தாயின் குரல் கேட்கவும் வேகமாக வெளியே வந்தாள்.
அருகில் வந்த மகளின் தலையில் குட்டு ஒன்றை வைத்த ஆண்டாள். "ஏன்டி சாயங்காலம் ஆனால் மகியையும் அருணையும் பார்க்க போவாய் இல்லையா?... இன்னைக்கு போகாமல் மூளையில் உட்கார்ந்திட்டு என்ன பண்ணிட்டு இருக்க?...." என்று கூறி மீண்டும் ஒரு குட்டு வைத்தார்.
வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்த போதே சேகர், லட்சுமணனை கண்டுவிட்டு இருந்தாள் ஊர்மிளா. அவர்கள் எதிரிலேயே தாய் திட்டியதோடு அடிக்கவும் அவளின் பார்வை லட்சுமணனை முறைத்தது.
எல்லாம் இவனால் தான் இவனை பார்த்ததில் இருந்து தான் இப்படி பைத்தியம் மாதிரி இவனை பற்றியே சிந்தனை பண்ணிட்டு இருக்கேன் என்று மனதுக்குள் லட்சுமணனை திட்டிக்கொண்டு இருந்தாள்.
"அடியேய் நான் இங்க பேசிட்டு இருக்கேன் உன் சிந்தனை எங்க இருக்கு போய் அந்த பாலை கொஞ்சம் சூடு பண்ணி எடுத்துட்டு வா. நான் மகி வீட்டுக்கு போறேன்" என்றவர் "சேகர் வாப்பா இன்னைக்கு அவனை ரெண்டில் ஒன்னு பார்க்கனும்" என்று முன் சொல்ல அவரின் பின் சேகரும் லட்சுமணனும் சென்றனர்.
ஊர்மிளாவுக்கு அப்போது தான் எதுவோ பிரச்சனை என்று தெரிந்து வேகமாக பாலை அடுப்பில் வைத்து சூடு செய்து சிறு தூக்கில் ஊற்றி எடுத்து சென்றாள்.
ஆண்டாள் அக்கா வீட்டில் இருந்து ஐந்து வீடு தள்ளி ஒரு சிறு சிமெண்ட் சீட் போட்ட வீட்டின் முன் இருந்த திண்ணையில் பயத்துடன் மகியும் அருணும் அமர்ந்து இருந்தனர்.
ஆண்டாள் வேகமாக அந்த வீட்டின் முன் சென்றவர் பிள்ளைகள் மிரட்சியுடன் வீட்டினுள் பார்ப்பதை கண்டதும்
"உங்க அப்பா உள்ள இருக்காரா?...." என்று கேட்கவும் "இருக்கார் பெரியம்மா இப்ப தான் எழுந்தார்" என்றாள் மகி.
கொஞ்சமாக திறந்திருந்த கதவை நன்றாக திறந்து உள்ளே சென்ற ஆண்டாள் கண்டது தட்டுத்தடுமாறி எழுந்து நின்ற வேலுவையும், ஓரமாக சுருண்டு படுத்திருந்த அவன் மனைவி கல்பனாவையும் தான். வேகமாக வேலுவின் முன் சென்று நின்றதும் அவரைக்கண்டு அதிர்ந்து அக்கா.... என்று தடுமாற்றத்துடன் வேலு அழைக்கவும், இரு கன்னத்திலும் ஓங்கி அறைந்திருந்தார் ஆண்டாள்.