GG writers
Moderator
அத்தியாயம் 35
அவன் சொன்ன விடயத்தில் உடல் உதறலெடுக்க அவனை திரும்பி என்ன சொன்ன என்பது
போல் பார்க்க
"ஆமா நான் சொல்றது உண்மை தான் தாருணி இப்போ உயிரோடயில்ல அதுக்கு
மூலக் காரணம் அவ உன்மேலேயும் அனிதா மேலயும் கைவச்சது தான் "
"புரியுற மாதிரி சொல்லு"
என்றவுடன் தாருணி பற்றி ஒன்றுவிடாமல்
உண்மைகளை புட்டு புட்டு வைத்தான்
"கடைசியா ஆஸ்திரேலியாவில் அவளோட ஆட்கள வச்சி உங்கள கடத்தி பாங்கொக்குக்கு
விற்க பார்த்தா ஆனா அத கண்டுபிடிச்ச அபி உன்ன காப்பாத்துறதுக்காக கல்யாணம்
பண்ணிக்கிட்டு
பிரெஸ்ல உன்ன தன்னோட ஒய்ப்னு அறிமுகப் படுத்த அபியோட பணபலம்
ஆள் பலம் தெரிஞ்ச அவளோட ஆளுங்க உன்ன எதுவும் செய்யாம விட்டு விலக
அதை கேள்விப்பட்ட தாருணியும் அவளோட பாய் ப்ரெண்டும் நேரடியாக இறங்க
அபி அந்த ரெண்டு பிசாசோட கதையவும் முடிச்சிட்டான் "
என்று நடந்தவற்றை சொல்ல அவனை வெறித்து பார்த்தவள்
"இப்ப இதை நான் நம்பணுமா ? நீங்க மூணு பேரும் கூட்டு சேர்ந்து தானே எங்க வாழ்க்கைய கெடுத்தீங்க அது சரி போன முறை சாரா மாதிரி இந்த முறை தாருணி அந்த கழுதைக்கு தேவைதான் என் வாழ்க்கைய எப்படியெல்லாம் கெடுக்கலாம்னு பிளான் போட்டு கொடுக்குறதே அந்த வெள்ளப்பேய் தானே"
என்று தோளை குலுக்க, பைரவோ "என்ன நம்பு லோச்சனா "
என்றவுடன் அவனை அளக்கும் பார்வை பார்த்தவள்
"அதுவும் உன்ன மாதிரி ஒருத்தன நான் நம்பணுமா ? அந்த அபிஜித்தன கூட
நம்பலாம் உன்ன மாதிரி நல்லவன் வேஷம் போடுற நாயெல்லாம் நம்பவேமுடியாது.
அடுத்து நீங்க ரெண்டு பேரும் இதுக்கு கூட்டுயில்லன்னு நான் எப்படி நம்புறது ?ஏன்னா
நீ பிறக்காத குழந்தைக்கு குறையிருக்குன்னு சொன்னவன் தானே ?"
என்றதும் அவன் முகம் அவமானத்தில் கறுத்து போக அதை ரசித்து பார்த்தவள்
"சரி சொல்லு உன் ப்ரெண்டுக்கு எப்படியெல்லாம் வக்காலத்து வாங்குறன்னு
பார்ப்போம் " என்று ஒற்றை சோபாவில் தன் காலுக்கு மேல் கால் போட்டு
தினுசாக அமர்ந்தவளை பார்த்து அவனுக்கு வியப்பாகயிருந்தது.
"உன் ஹஸ்பண்ட்டுக்கு அடிப்பட்டு ஹாஸ்ப்பிட்டல்லயிருக்கான் நீயென்னன்னா
இப்படி கேஸூவலாயிருக்க ?" என்றதும் அவளோ ஒற்றை புருவமுயர்த்தி
"அவனுக்கு எதுவும் ஆகாதடுத்து ஒரே நாள்ல வாழ்க்கைல மொத்த விஷயத்தையும்
இழந்து நிர்க்கதியா நின்ன போது கூட கலங்கல இப்பயா கலங்க போறேன் "
என்றவளை பார்க்கும் போது எவ்வளவு மென்மையான பெண்ணை தங்களது
கொடூர செயல்கள் கல்நெஞ்சக்காரியாக மாற்றியிருக்கிறது. என்று
நினைத்து அயர்ந்து போனான். ஆனால் அபியை பற்றியும் அவன் காதலை
பற்றியும் கட்டாயம் சொல்லவேண்டுமென்ற நிபந்தனையால் தொடர்ந்து
பேசவாரம்பித்தான்.
"தருணியோட ஸ்வீட் சிக்ஸ்ட்டின் பர்த்டே பார்ட்டில உன்ன பார்த்து அடையாளம் கண்டவன்
ஸ்கூல்ல கிளசஸ்ல உன்ன தூரத்துலயிருந்து ரசிச்சுட்டு உன்
படிப்ப கெடுக்கக் கூடாதுன்னு போயிருவான்"
என்றதும் அவளோ "இதுக்கு பெயர் என்ன தெரியுமா ? சட்டத்துல இதுக்கென்ன
தண்டனைனாவது தெரியுமா ? அவன் வந்தானாம் இவன் அதுக்கு ஒத்து ஊத்துனானாம்"
என்றாள் கடுப்பாக மேலே சொல்லு என்பது போல் பார்க்க அவளது பார்வையில்
திடகாத்திரமான ஆண்மகன் அவனுக்கே வெலவெலத்து போனது இருந்தும் சொல்லவேண்டிய
கட்டாயத்தால் மேலும் தொடர்ந்தான்
"பதினஞ்சு வயசுலயிருந்து அவனுக்கு நீ தான் எல்லாமே உன் ட்ராவிங்கோட
தனியா பேசுவான் சிரிப்பான் வெளில போகும் பொது எங்க போறேன்னு
எங்க கிட்ட சொல்றானோ இல்லையோ உன் போட்டோ கிட்ட சொல்லிட்டு தான் போவான்"
என்றதும் பயங்கரமாக விழுந்து விழுந்து சிரித்தவள் "இதை நீ என் கிட்ட சொல்லக்
கூடாது நல்ல சைக்கோலஜிஸ்ட்டா பார்த்து அவங்க கிட்ட தான் சொல்லணுமடுத்து
இதெல்லாம் சொல்லி அவன்மேலயெனக்கு ஒன்னும் சாப்ட் கோர்னெர் வரப் போறதில்ல
பட் உன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்"
என்றதும் பைரவ் தலையை பிடித்தபடி அமர்ந்துக் கொள்ள அவளோ சொடுக்கிட்டு
"என்ன ப்ரோ அவ்ளோ தானா இன்னுமிருக்கா ?" என்றாள் கேள்வியாக
"இல்ல லோச்சனா இப்போ கூட அவன் உன் காதலுக்காக தான் போய் ஆக்சிடன்ட்
ஆகி "
என்றவுடன் மறுபடியும் பயங்கரமாக சிரித்தவள்
"சாரி ப்ரோ சாரி என் காதலுக்காக
மட்டுமா சாகக் கிடக்கிறான் என் சாபத்துலயிருந்து தன்னை காப்பாத்திக்கணும்னு
தானே சாக கிடக்குறான் ஆனா நான் சாபவிமோச்சனத்துக்கான வழிய அவன்கிட்ட
எத்தனையோ தடவ சொல்லிட்டேன் அவனா கண்டுபிடிக்க மட்டும் என்னால எதுவும்
செய்ய முடியாது வாங்க போகலாம்"
என்று இருவருமே வெளியே வரவும் சத்யமுர்த்தி பைரவுக்கு அழைத்து
அபிஜித்தனுக்கு விழிப்பு வந்துவிட்டதாகவும் உடனே லோச்சனாவை பார்க்கவேண்டுமென
முரண்டு பிடிப்பதாகவும் கூற இருவரும் மறுபடி வைத்தியசாலைக்கு வந்து
சேர்ந்தனர்.
லோச்சனாவினருகே வந்த நேத்ராவோ "எங்ககிட்ட மாதிரி மாப்பிள்ளைக்கிட்ட
எடுத்தெறிஞ்சு பேசாத " என்றதும் லோச்சனா திரும்பி பார்த்த ஒரு பார்வையில்
வாயை மூடிக் கொண்டு ஒதுங்கி விட்டார்.
உள்ளே சென்றவள் அவனை
உணர்ச்சியற்ற பார்வை பார்த்தபடி நிற்க அவன் கண்களோ மன்னிப்பை யாசித்துக்
கண்ணீர் வழிய லோச்சுவை பார்த்தது. அருகில் சென்றவளோ
"அழாத!, அழுது வருத்தத்தை பெருசு படுதிக்காத உனக்கு சாபவிமோச்சனத்துக்கான
வழிய பல தடவ சொல்லிட்டேன். அதை புரிஞ்சுக்காம சாகப்போற அடுத்து உன்ன
கொலை பண்றது என் மோட்டிவ் கிடையாது அப்டி நானும் உன்ன மாதிரி
ரத்தம் குடிக்க ஆசைப்பட்டா உனக்குமெனக்கும் என்ன வித்தியாசம் சொல்லு ? "
என்றவுடன் அவன் 'என்ன வழி?' என்பது போல் பார்க்க, அவளோ பெருமூச்செறிந்தபடி
"எப்படியும் உனக்கு நடந்துருக்க டமேஜ்க்கு எழுந்து நடக்கவே மூணுமாசமாகும்
அது மட்டும் நல்லா மண்டைய காயப்போட்டு யோசி உனக்கே தெரியும் நான்
என்ன கேக்குறேன்னு அடம்பிடிக்காம டிரீட்மென்ட்டுக்கு கோப்ரேட் பண்ணு நான்
பிரெஷாகிட்டு கேம்பஸ் போயிட்டு அந்திக்கு வாரேன் "
என யார் சொல்லியும் கேட்காமல் கல்லூரிக்கு கிளம்பி சென்றுவிட்டாள். லோச்சுவை
இனி யாரும் நெருங்கவும் முடியாது. கட்டிப்போடவும் முடியாது. அவளது பயணம்
பாதை எதுவென்பதை அவளே தீர்மானிப்பாள்.
வதம் தொடரும்...
******************************************************
இந்தா episode போட்டாச்சு பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
அவன் சொன்ன விடயத்தில் உடல் உதறலெடுக்க அவனை திரும்பி என்ன சொன்ன என்பது
போல் பார்க்க
"ஆமா நான் சொல்றது உண்மை தான் தாருணி இப்போ உயிரோடயில்ல அதுக்கு
மூலக் காரணம் அவ உன்மேலேயும் அனிதா மேலயும் கைவச்சது தான் "
"புரியுற மாதிரி சொல்லு"
என்றவுடன் தாருணி பற்றி ஒன்றுவிடாமல்
உண்மைகளை புட்டு புட்டு வைத்தான்
"கடைசியா ஆஸ்திரேலியாவில் அவளோட ஆட்கள வச்சி உங்கள கடத்தி பாங்கொக்குக்கு
விற்க பார்த்தா ஆனா அத கண்டுபிடிச்ச அபி உன்ன காப்பாத்துறதுக்காக கல்யாணம்
பண்ணிக்கிட்டு
பிரெஸ்ல உன்ன தன்னோட ஒய்ப்னு அறிமுகப் படுத்த அபியோட பணபலம்
ஆள் பலம் தெரிஞ்ச அவளோட ஆளுங்க உன்ன எதுவும் செய்யாம விட்டு விலக
அதை கேள்விப்பட்ட தாருணியும் அவளோட பாய் ப்ரெண்டும் நேரடியாக இறங்க
அபி அந்த ரெண்டு பிசாசோட கதையவும் முடிச்சிட்டான் "
என்று நடந்தவற்றை சொல்ல அவனை வெறித்து பார்த்தவள்
"இப்ப இதை நான் நம்பணுமா ? நீங்க மூணு பேரும் கூட்டு சேர்ந்து தானே எங்க வாழ்க்கைய கெடுத்தீங்க அது சரி போன முறை சாரா மாதிரி இந்த முறை தாருணி அந்த கழுதைக்கு தேவைதான் என் வாழ்க்கைய எப்படியெல்லாம் கெடுக்கலாம்னு பிளான் போட்டு கொடுக்குறதே அந்த வெள்ளப்பேய் தானே"
என்று தோளை குலுக்க, பைரவோ "என்ன நம்பு லோச்சனா "
என்றவுடன் அவனை அளக்கும் பார்வை பார்த்தவள்
"அதுவும் உன்ன மாதிரி ஒருத்தன நான் நம்பணுமா ? அந்த அபிஜித்தன கூட
நம்பலாம் உன்ன மாதிரி நல்லவன் வேஷம் போடுற நாயெல்லாம் நம்பவேமுடியாது.
அடுத்து நீங்க ரெண்டு பேரும் இதுக்கு கூட்டுயில்லன்னு நான் எப்படி நம்புறது ?ஏன்னா
நீ பிறக்காத குழந்தைக்கு குறையிருக்குன்னு சொன்னவன் தானே ?"
என்றதும் அவன் முகம் அவமானத்தில் கறுத்து போக அதை ரசித்து பார்த்தவள்
"சரி சொல்லு உன் ப்ரெண்டுக்கு எப்படியெல்லாம் வக்காலத்து வாங்குறன்னு
பார்ப்போம் " என்று ஒற்றை சோபாவில் தன் காலுக்கு மேல் கால் போட்டு
தினுசாக அமர்ந்தவளை பார்த்து அவனுக்கு வியப்பாகயிருந்தது.
"உன் ஹஸ்பண்ட்டுக்கு அடிப்பட்டு ஹாஸ்ப்பிட்டல்லயிருக்கான் நீயென்னன்னா
இப்படி கேஸூவலாயிருக்க ?" என்றதும் அவளோ ஒற்றை புருவமுயர்த்தி
"அவனுக்கு எதுவும் ஆகாதடுத்து ஒரே நாள்ல வாழ்க்கைல மொத்த விஷயத்தையும்
இழந்து நிர்க்கதியா நின்ன போது கூட கலங்கல இப்பயா கலங்க போறேன் "
என்றவளை பார்க்கும் போது எவ்வளவு மென்மையான பெண்ணை தங்களது
கொடூர செயல்கள் கல்நெஞ்சக்காரியாக மாற்றியிருக்கிறது. என்று
நினைத்து அயர்ந்து போனான். ஆனால் அபியை பற்றியும் அவன் காதலை
பற்றியும் கட்டாயம் சொல்லவேண்டுமென்ற நிபந்தனையால் தொடர்ந்து
பேசவாரம்பித்தான்.
"தருணியோட ஸ்வீட் சிக்ஸ்ட்டின் பர்த்டே பார்ட்டில உன்ன பார்த்து அடையாளம் கண்டவன்
ஸ்கூல்ல கிளசஸ்ல உன்ன தூரத்துலயிருந்து ரசிச்சுட்டு உன்
படிப்ப கெடுக்கக் கூடாதுன்னு போயிருவான்"
என்றதும் அவளோ "இதுக்கு பெயர் என்ன தெரியுமா ? சட்டத்துல இதுக்கென்ன
தண்டனைனாவது தெரியுமா ? அவன் வந்தானாம் இவன் அதுக்கு ஒத்து ஊத்துனானாம்"
என்றாள் கடுப்பாக மேலே சொல்லு என்பது போல் பார்க்க அவளது பார்வையில்
திடகாத்திரமான ஆண்மகன் அவனுக்கே வெலவெலத்து போனது இருந்தும் சொல்லவேண்டிய
கட்டாயத்தால் மேலும் தொடர்ந்தான்
"பதினஞ்சு வயசுலயிருந்து அவனுக்கு நீ தான் எல்லாமே உன் ட்ராவிங்கோட
தனியா பேசுவான் சிரிப்பான் வெளில போகும் பொது எங்க போறேன்னு
எங்க கிட்ட சொல்றானோ இல்லையோ உன் போட்டோ கிட்ட சொல்லிட்டு தான் போவான்"
என்றதும் பயங்கரமாக விழுந்து விழுந்து சிரித்தவள் "இதை நீ என் கிட்ட சொல்லக்
கூடாது நல்ல சைக்கோலஜிஸ்ட்டா பார்த்து அவங்க கிட்ட தான் சொல்லணுமடுத்து
இதெல்லாம் சொல்லி அவன்மேலயெனக்கு ஒன்னும் சாப்ட் கோர்னெர் வரப் போறதில்ல
பட் உன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்"
என்றதும் பைரவ் தலையை பிடித்தபடி அமர்ந்துக் கொள்ள அவளோ சொடுக்கிட்டு
"என்ன ப்ரோ அவ்ளோ தானா இன்னுமிருக்கா ?" என்றாள் கேள்வியாக
"இல்ல லோச்சனா இப்போ கூட அவன் உன் காதலுக்காக தான் போய் ஆக்சிடன்ட்
ஆகி "
என்றவுடன் மறுபடியும் பயங்கரமாக சிரித்தவள்
"சாரி ப்ரோ சாரி என் காதலுக்காக
மட்டுமா சாகக் கிடக்கிறான் என் சாபத்துலயிருந்து தன்னை காப்பாத்திக்கணும்னு
தானே சாக கிடக்குறான் ஆனா நான் சாபவிமோச்சனத்துக்கான வழிய அவன்கிட்ட
எத்தனையோ தடவ சொல்லிட்டேன் அவனா கண்டுபிடிக்க மட்டும் என்னால எதுவும்
செய்ய முடியாது வாங்க போகலாம்"
என்று இருவருமே வெளியே வரவும் சத்யமுர்த்தி பைரவுக்கு அழைத்து
அபிஜித்தனுக்கு விழிப்பு வந்துவிட்டதாகவும் உடனே லோச்சனாவை பார்க்கவேண்டுமென
முரண்டு பிடிப்பதாகவும் கூற இருவரும் மறுபடி வைத்தியசாலைக்கு வந்து
சேர்ந்தனர்.
லோச்சனாவினருகே வந்த நேத்ராவோ "எங்ககிட்ட மாதிரி மாப்பிள்ளைக்கிட்ட
எடுத்தெறிஞ்சு பேசாத " என்றதும் லோச்சனா திரும்பி பார்த்த ஒரு பார்வையில்
வாயை மூடிக் கொண்டு ஒதுங்கி விட்டார்.
உள்ளே சென்றவள் அவனை
உணர்ச்சியற்ற பார்வை பார்த்தபடி நிற்க அவன் கண்களோ மன்னிப்பை யாசித்துக்
கண்ணீர் வழிய லோச்சுவை பார்த்தது. அருகில் சென்றவளோ
"அழாத!, அழுது வருத்தத்தை பெருசு படுதிக்காத உனக்கு சாபவிமோச்சனத்துக்கான
வழிய பல தடவ சொல்லிட்டேன். அதை புரிஞ்சுக்காம சாகப்போற அடுத்து உன்ன
கொலை பண்றது என் மோட்டிவ் கிடையாது அப்டி நானும் உன்ன மாதிரி
ரத்தம் குடிக்க ஆசைப்பட்டா உனக்குமெனக்கும் என்ன வித்தியாசம் சொல்லு ? "
என்றவுடன் அவன் 'என்ன வழி?' என்பது போல் பார்க்க, அவளோ பெருமூச்செறிந்தபடி
"எப்படியும் உனக்கு நடந்துருக்க டமேஜ்க்கு எழுந்து நடக்கவே மூணுமாசமாகும்
அது மட்டும் நல்லா மண்டைய காயப்போட்டு யோசி உனக்கே தெரியும் நான்
என்ன கேக்குறேன்னு அடம்பிடிக்காம டிரீட்மென்ட்டுக்கு கோப்ரேட் பண்ணு நான்
பிரெஷாகிட்டு கேம்பஸ் போயிட்டு அந்திக்கு வாரேன் "
என யார் சொல்லியும் கேட்காமல் கல்லூரிக்கு கிளம்பி சென்றுவிட்டாள். லோச்சுவை
இனி யாரும் நெருங்கவும் முடியாது. கட்டிப்போடவும் முடியாது. அவளது பயணம்
பாதை எதுவென்பதை அவளே தீர்மானிப்பாள்.
வதம் தொடரும்...
******************************************************
இந்தா episode போட்டாச்சு பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
காலகேயனின் காதல் வதம் - கருத்து திரி
உங்கள் பொன்னான கருத்துக்கள் வரவேற்கபடுகிறது நட்பூக்களே
pmtamilnovels.com