Brammastram Writers
Moderator
அத்தியாயம் 5
அபியின் வீட்டிலிருந்து அனிதாவை கெஸ்ட் ஹவுசுக்கு அனுப்பி வைத்தவளின்
மனதில் பழைய நினைவலைகளின் ரணங்கள் நினையாதே மனமே நினையாதே என்று
எத்தனை தடவை சொன்னாலும் கேட்காது.அல்லவா மானம் கெட்ட மனது நினைக்க
நினைக்க வலிகள் மட்டுமே அவளது கண்களில் அவளையறியாமலே கண்ணீர்
தாரை தாரையாக வழிந்தது.
அவள் நினைவில்............
{இக்கதையில் வரும் மலையக தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான தகவல்கள் உண்மையை தழுவி எழுதப்பட்டவையே ஆனால் மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்பான கருத்துக்கள் மட்டுமே
வெறும் கற்பனை }
1958 இல் இறுதி பகுதி, இலங்கை உட வேறிய
காலை ஏழு மணியளவில் லய குடியிருப்புகளில் உடல் விறைக்கும் குளிரிலும் காலையிலேயே
சுறுசுறுப்பாக எழுந்து தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்கு ஸ்வீட்டார்களை அணிந்து கொண்டும் கொழுந்து கூடைகளை தலையில் மாட்டிக் கொள்வதற்கு தலையில் துணிகளைக் கட்டிக்கொண்டும் கொழுந்து பறிக்கும் வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.
பதின்ம வயது பெண்கள் தொடக்கம் அறுபத்தைந்து வயது பாட்டிகள் வரை, ஆண்கள் பாக்டரி வேலைக்கு ஒரு சாராரும் கொழுந்து பறிக்கும் வேலைக்கு ஒரு சாராரும் கிளம்பி கொண்டிருந்தனர்.
இவர்கள் தான் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் இல்லையில்லை முதலாளித்துவ வர்க்கத்தின் எள் என்றால் எண்ணெயாக நிற்கும் அடிமைகள் முதுகெலுப்பிருந்தும் முதுகிலும்பில்லையென்று கூறி கூறி மட்டம்தட்டி எதிர்த்து கேள்வி கேட்கவே கூடாது. என்று வளர்க்கப்படும் கிணற்று தவளைகள், தானும் மனிதன் தான் தன்னையும் பிறர் மதிக்க வேண்டும். என்பதையே மறந்த எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்ட மறுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம்
எவ்வளவு மழை பெய்தால் என்ன? புயல் அடித்தால் என்ன? நோயென்று படுக்க இயலாது அவர்களின்
உழைப்பை அட்டையாக உறிஞ்சு குடிக்கிறது. முதலாளித்துவ வர்க்கம்,
பாவம் அவர்களுக்கு தெரியாது, அவர்கள் அனைவரும் ஒரு நாள் கொழுந்து பறிக்க மலை ஏறாவிட்டால் அரசாங்க வருமானத்தில் எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்படுமென்று,
தன்னை அட்டையாக உறிஞ்சும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆடம்பர வாழ்க்கைக்கு எவ்வளவு பெரிய சறுக்கலென்று ஒன்றும் தெரியாமல் புரியாமல் அவர்கள் அடிமையாக மட்டுமே வாழ வேண்டுமென்று
முதலாளித்துவ வர்க்கம் எண்ணுகிறது .
லயங்குடியிருப்பில் கடைசி வீட்டிலிருந்து,
" எழிலி, பூவு பத்திரமா இருந்துக்கோங்க புள்ளைங்களா நானும் உங்க அண்ணனும் மலைக்கு போறோம்
இப்போ தான் பெரிய மனுசி ஆயிருக்கீங்க காத்து கருப்பு ஏதும் அண்டிராம " என்றார்.செல்வி
"பொன்னியையும் தாமரையையும் கூட்டி போறீயா ஆத்தா ?" என்று எழிலி கேட்க,
"ஆமா புள்ள என்ன பண்றது உங்களுக்கு துணைக்கு ஆள் விட்டு போக எனக்கும் ஆச தான் ஆனா
உங்க சடங்க அண்ணன் ஓரளவாவது பெருசா செய்யணும்னு ஆசைப்படுது அதுக்கு
காசு வேணுமில்ல" என்றார் செல்வி
"எழிலி உனக்கு துணைக்கு நான் தான் இருக்கேனே பொறவு என்னத்துக்கு
அந்த பொடிசு ரெண்டும்" என்று காதை கடித்தாள் பூவரசி
"நாங்க வேணுன்னா முத வீட்டு மைனா பாட்டிகிட்ட வந்து துணைக்கு இருக்க சொல்லட்டுமா ?"
என்றான் அண்ணன் ராசு
"ஐயோ! வேணாம்ணே நாங்க பார்த்துக்குறோம்" உடனடியாக மறுத்தாள் எழிலி
"சமைச்சாச்சிடி ரெண்டு பேரும் சாப்பிடுங்க காமரா (அறை ) வாசல்ல சாப்பாடு இருக்கு
முட்டையும் நல்லெண்ணெயும் ஒரு பாத்திரத்துல இருக்கு கட்டாயம் குடிச்சிருங்க உளுத்த பருப்பு உருண்ட
இருக்கு எல்லாம் செஞ்சாச்சு காலைல ரொட்டியும் பருப்பு கறியும் தேங்காய் சம்பலுமிருக்கு செந்தமிழ் குடுத்த பொங்கலுமிருக்கு எல்லாம் சாப்புட்ருங்க என்ன அடுக்களை பக்கம் போறதில்ல ஒரு மாசத்துக்கு புரிஞ்சுதா ?கதவ சும்மா சாத்தி வச்சிட்டு போறோம் "
கதவு பூட்டும் சத்தம் கேட்டவுடன்
"ஹப்பாடா" என்று இருவரும் அறையை விட்டு வெளியே எட்டி பார்த்தனர்
அந்த வீடே சிறு அறை அமைப்பில் தான் இவர்கள் குடி வந்த புதிதில் இருந்தது.
எழிலியின் அண்ணன் கணக்கு பிள்ளையாக ( தோட்டத்தில் கொழுந்து பறிப்போர் எத்தனை நாட்கள் வேலை செய்தார்கள் என கணித்து கொடுப்போர் )
வேலைக்கு சேர்ந்த பின்
"மூணு பொம்பிளை புள்ளைங்கள வச்சிருக்கோம். அதனால
தனியறை ஒன்னு காட்டுவோம். பின்னாடி இடமிருக்கு தானே ஆத்திர அவசரத்துக்கு பொதுவுல
உள்ள கழிப்பறைக்கு போனா அதுங்களுக்கு சங்கடமாயிருக்குமில்லையா ஆத்தா அதனால
கழிப்பறை ஒன்னும் காட்டுவோம் ஆத்தா"
என்று எழிலியின் அண்ணன் ராசுக் கட்டியது
தான் அதன் பின்தான் வீடு ஓரளவு விசாலமாக தெரிந்தது
அப்போதும் ராசுவின் அன்னை செல்வி
"நமக்கு சொந்தமில்லாத இடம் அப்பு இருக்க மட்டும் இது நம்ம இடம் ஆத்தா"
என்று சொல்லி ராசு கட்டிய அறையில் தான் இரண்டு குமரிப் பெண்களும் இருந்தனர்.
பூவரசி எழிலின் இணைபிரியா தோழி எங்கே செல்வதாயிருந்தாலும் சரி எந்த திருட்டுத்தனமான வேலையாயிருந்தாலும் சரி கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் ஒன்றாக சேர்ந்தே செய்தவர்கள். கடைசியில் ஒன்றாக சேர்ந்து வயதுக்கும் வர இருவரையும் ஒரே வீட்டில் இருக்க கூடாது என்று சொல்ல கட்டி புரண்டு அழுது ஒருவாறு சாதித்து விட்டார்கள்.,
ராசுவுக்கு தங்கைகளின் கண்கலங்கினால் மனம் தாங்காது
அதுவும் மூத்த தங்கை எழிலி என்றால் அவனுக்கு அவ்வளவு அன்பு அவளும் அப்படித்த்த்தான் வழுக்கி விழுந்தால் என்ன? அடிப்பட்டாள் என்ன? அண்ணன் கூடவே இருக்கணும்
அதனால்
"செந்தமிழக்கா பாவம் ஆசைப்படுத்துங்க இருந்துட்டு போகட்டுமே" இருந்தாலும்
என்று அவர் ஏதோ சொல்ல வர ராசு உடனே "எல்லாம் நம்ம உருவாக்குன சம்பிரதாயம் இருந்துட்டு போகட்டுமே"
"சரி தம்பி " என்று என்ன சொல்லவென்று தெரியாமல் நகர்ந்து கொண்டார். பூவராசியின்
அன்னை செந்தமிலுக்கு ராசுவின் வீட்டில் பெண்ணை விட்டு வைப்பதில் அவருக்கு ஆட்சேபனையே
கிடையாது அவருக்கு தெரியும் ராசு பெண்ணை பார்த்தால் மண்ணை பார்க்கும் ரகம்
பூவரசி எழிலி இருவரும் வாலில்லா வானரங்கள் கிட்டத்தட்ட ஒன்று சேர்ந்து விட்டால்
ஊரே கதிக்கலங்கி போகுமளவுக்கு சேட்டை செய்வார்கள் எழிலி பொதுவாகவே
புத்தி கூர்மை மிக்க பெண் தானே எந்த வம்புக்கும் செல்லவும் மாட்டாள்.
வந்த வம்பை விட்டு வைக்கவும் மாட்டாள். ஏதாவது ஊருக்குள் அடிதடியென்றால்
ஊர் ஆட்கள் ஒன்றுக் கூடுமுன்பே
எழிலி பூவரசி கூட்டணி அங்கே தான் நின்றிருக்கும்.
காரணம் இவர்கள் பண்ணி வைத்த
சேட்டையில் தான் பெண்களுக்கிடையில் குடுமி சண்டை தொடக்கம் ஆண்களுக்கிடையில்
குத்து சண்டை வரை இவர்கள் தயவில்லாமல் நிகழாது.
ஒரு மாதத்திற்கு எந்த வம்பு தும்பும் இருக்காது என்று லயங் குடியிருப்பில் உள்ளவர்கள்
'அப்பாடா' என்று பெருமூச்சு விட அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை என்று இருவரும்
எல்லாரும் வேலைக்கு சென்ற பின் தங்களது திருட்டு வேலைகளை தொடங்கி
விட்டனர்.
யார் கண்ணிலும் பட்டால் தானே பிரச்சனை படாமல் எங்கே செல்வது என்ன செய்வதென்று
பேசிக் கொண்டு நண்பிகளிருவரும் ஒரண்டை இழுக்க கிளம்பி விட்டனர்.
''வாடி அங்க துரை பங்களாவுக்கு மேல காடு இருக்குல்ல அங்க போய் காட்டு
மாங்காவும் காணு கொச்சிக்காவும் திம்போம்''என்றாள் எழிலி
''மாங்கா சரி காணு கொச்சிக்காயும் காட்டுக்குள்ள கிடைக்கும் உப்புக்கு
என்னடி பண்றது உங்க ஆத்தா வேற அடுக்களை பக்கம் ஒரு மாசம்
போக கூடாதுனு சொன்னுச்சேடி?'' என்றாள் கேள்வியாக பூவரசி
''அது சொல்லறதெல்லாம் கேட்டுருந்தா நானும் பொன்னி தாமரை கணக்கா
பொண்ணா அடக்க ஒடுக்கமா மாறியிருப்பேன்டி அதெல்லாம் நமக்கில்லடி
பொம்பள புள்ளைங்களுக்கு வா!'' அடுக்களைக்கு போய் ஒரு பிடி
உப்பெடுத்துட்டு ஓடிருவோம்
என்று திருட்டு பூனை போல் பதுங்கி பதுங்கி அடுப்பறைக்குள் நுழைந்து ஒரு பிடி
உப்புக்கல்லை தூக்கிக் கொண்டு காட்டுப்பகுதியை நோக்கி
ஓட முற்படும் போது
"ஏட்டி யாரது? யாருடி?"என்று மைனா பாட்டி குரல் கொடுக்க
"ஐயோ மைனா பாட்டிடி "என்று அலறினாள் பூவரசி
"ஐயோ அந்த கெழவிக்கு கண்ணு வேற நல்லா
தெரியுமேடி" என்று அலறினாள் எழிலி
"ஆமா நம்ம பண்ற வேலைய சும்மாவே புட்டு புட்டு வைக்கும் உங்க ஆத்தா
எங்க ஆத்தாகிட்ட எல்லாம் இப்போ நம்ம செய்ற வேலையெல்லாம்
சொல்லிக் குடுத்து காய்ச்சி எடுத்துற வச்சிரும்" என்றாள் பூவரசி பயத்தோடு
'என்ன பண்ணலாம் ?' என்று யோசித்த எழிலிக்கு, அங்கே பெருமலை கங்காணி முனியாண்டி வர
எழிலியின் வானர மூளைக்கு அற்புதமான யோசனை தோன்ற அதே செயற்படுத்தினாள்.
பாட்டி வாசலில் வைத்திருந்த கொட்டை பாக்கு பொட்டலத்தை கையில்
எடுத்துக் கொண்டவள் "ஐயோ திருடன் திருடன்" என்று தங்கள் வீட்டிற்கருகில் ஒளிந்துக்
கொண்டு கத்த என்னது 'திருடனா என்று கங்காணி?' மைனா பாட்டி வீட்டருகில் வரவும் சரியாக
எழிலி,"ஐயோ!திருடன் பாட்டி கொட்டைப்பாக்க திருடிட்டான்"என்று சத்தமிட
பாட்டி ஊன்று கோலுடன் வெளியே வந்தவர்,
" ஏண்டா பொசக்கெட்ட பயலே முனியாண்டி என் கொட்டப்பாக்கு தான்
ஒனக்கு கிடச்சதா" என்று வெளுக்க
"ஐயோ !கெழவி நா எடுக்கல" என்றார் வலி தாங்காமல்
"அப்ப நீ எடுக்கலன்னா வீட்டு வாசல்ல வச்சிருந்த கொட்டப்பாக்குக்கு ரெக்க
மொளச்சி பறந்துருச்சாடா ?"
"ஆ எனக்கு புரிஞ்சு போச்சு உன் கடைசி வீட்டு பேத்திக தான் ஏதோ
திருட்டு தனம் பண்ணிட்டு மாட்டி விடுதுக"
"அதுங்க ரெண்டும் சமைஞ்சு இன்னும் ரெண்டு வாரம் கூட ஆகல
அதுக எப்பிடிடா வெளிய வரும்"
"எனக்கு தெரிஞ்சு போச்சு அந்த புள்ளைங்க வீட்டுல யாருமில்லன்னு
தெரிஞ்சுகிட்டு வம்பு பண்ண வந்துருக்க உனக்கு பொண்டாட்டி
வீட்ல இருக்கும் போது புதுசா பொம்பள சோக்கு கேக்குதோ
உனக்கு" என்று வெளுத்து விட்டார் பாட்டி
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட தோழிகளிருவரும்
"வாடி அதுக ரெண்டும் அதுக சோலிய பாக்கட்டும் நம்ம
சோலிய பாக்கலாம்னு வாடி"
அசப்பில்லாமல் அங்கிருந்து நகர்ந்து அவர்களுக்கு
மட்டுமே தெரிந்த குறுக்கு பாதையூடாக காட்டை நோக்கி
நடக்க ஆரம்பித்தனர்.
"ஏண்டி எழிலி உனக்கு இந்த காத்து கருப்பு மேல நம்பிக்கை இருக்காடி?" என்றாள் கேள்வியாக
பூவரசி
"ஏண்டி கேக்குற ?" என்றாள் கேள்வியாக எழிலி
"சும்மாத்தாண்டி இப்போ இப்படியெல்லாம் சுத்துறோம் தானே ஆத்த சொன்ன மாதிரி
காத்து கருப்பு எதுவும் அண்டியிருச்சினா என்ன பண்றது?" என்றாள் தலையை சொறிந்த வண்ணம்
"அண்டுன கூட மாட ஒத்தாசைக்கு சேர்த்துக்கிட்டே ஊர சுத்த
வேண்டியது தான்" என்றாள் எழிலி குறும்பாக
"என்னது ?"
"மூடிட்டு வாடி" என்று முன்நோக்கி நடக்கவரம்பித்தாள் எழிலி
பாதி தூரம் நடந்து பங்களா இருக்கும் வீதி அருகே வரும் போது
அவர்கள் முன் ஒரு ஆஸ்டின் கேம்பிரிஜ் கார் வந்து நிற்க
"ஐயோ! பேய் பேய் மாரியாத்தா காப்பாத்து " என்று பூவரசி அலற
"ஹேய் பியூட்டீஸ் பயப்புடாதீங்க நாங்க இங்க இருக்க
எஸ்டேட் பங்களாவுக்கு போனும் எப்டி போறது" என்றான் கேள்வியாக புதியவன்
"யார பார்த்து பாட்டிங்கிற? மைதா மாவு மூஞ்சா வகுந்துடுவேன் வகுந்து" என்றாள் எழிலி
அவள் கேட்ட தினுசில் மிரண்டு போனான் புதியவன்,
"ஏய் ஒழுங்கா பேசுடி துரை வீட்டுக்கு வந்துருக்காங்க போல" என்று பூவரசி எழிலியின்
காதை கடிக்க
பூவரசியை ஆர்வமாக பார்த்தபடி ,"உங்க பின்னுக்கு இருக்குற குட்டி பாப்பா யாரு அழகா இருக்காங்களே"
வினவினான் புதியவன்
அவளோ சட்டென்று,"என்னங்க நான் ஒன்னும் பாப்பா இல்ல இப்ப நான் பெரிய மனுஷியாம்
ஆத்தா சொன்னுச்சு" என்றாள் வெகுளியாக
"பெரிய மனுஷிக்கு எத்தின வயசு?" என்று வினவினான் புதியவன்
"பதினாறு வயசு'' என்றாள் கீழே குனிந்தபடி
அதற்குள் இடையில் புகுந்த, "எழிலி துரைக்கு பொண்ணுங்கள்ட்ட
வயச கேட்க கூடாதுனு யாரும் சொல்லி தரலியா ?" என்றாள் நுனி மூக்கு
சிவக்க
"சரி சரி தங்கச்சி எப்டி பங்களாவுக்கு போகணும் புதுசா வந்த
சுப்ரிண்டன்ட் உள்ள தான் இருக்கார்"
அப்டினா பெரிய துரையா? என்றாள் எழிலி கேள்வியாக
" ஆமா ஆமா" என்றான் புதியவன்
அகனோ தலையை தாழ்த்தி கண்களை உயர்த்தி
தன் முன் நின்ற எழிலியின் வனப்பை தான் ரசித்திருந்தான் .
என்ன பெண்ணிவள்? வெள்ளைக்காரிகள் அத்துணை வெள்ளையாக இருந்தாலும் இவளது சந்தன நிறத்திற்கு ஈடாகுமா ? பதறிச் சிறகடிக்கும் அந்த கண்கள் அவனை கொல்லாமல் கொன்றது.
இப்போது தான் துளிர் விட துவங்கும் பெண்மைக்குரிய அழகுகள் நான் உனக்கே உனக்கு தான் என்றது. அவள் செப்பு உதடுகள் மாமா என்றாள் எப்படியிருக்கும் என்றெல்லாம் எண்ணம் தறிகெட்டு ஓடியது.
ஆனால் அவன் மனதில் மதில்ட்டா என்ற பெண்ணின் நியாபகமேயில்லை அந்த நேரமே
இந்த விடயத்தை ஆராய்ந்திருந்தால் ஈர்ப்புக்கும் காதலுக்குமான வித்யாசம் புரிந்திருக்கும்.
பிற்காலத்தில் ஏற்பட போகும் பிரச்சனைகளிலிருந்து அவன் தலையும்
தப்பியிருக்கும் விதி வலியது தான் போலும்
"இப்டியே நேரா போனா ஒரு சுடுகாடு வரும்,"
"என்னது சுடுகாடா!! ?" என்று அதிர்ந்து விழித்தான் கிரிதரன்
"முழுசா கேட்டுட்டு பேசுங்க அந்த சுடுகாட்டுல இருந்து மேற்கால
ஒரு பாத போகும் அந்த பாதைல போனா பங்களா வரும்
இங்க பாருங்க ஐயா நாங்க உங்களுக்கு உதவி பண்ணிருக்கோம் எங்களுக்கு
நீங்க உதவி பண்ணனும் '
"உதவிக்கு உதவியா சொல்லுமா ?" என்றான் குறும்புடன் தரன்
"இந்த பக்கம் எங்கள பார்த்ததையோ பேசுனதையோ
யார்ட்டயும் சொல்ல கூடாது" என்றாள் தெளிவாக
"அப்ப வேலைய விட்டுட்டு இங்க சுத்தி திரியிறீங்களா?" என்று
அகன் கறார் குரலில் புருவமுயர்த்தி கேட்க
"அப்டியெல்லாமில்ல ஆனா சொல்ல முடியாத காரணம் " என்றாள்
எழிலி சங்கடமாக
''அப்டி என்ன காரணம் பாப்பா?'' என்று பூவரசியை பார்த்து
தரன் கேட்க
"அம்மா ஒரு மாசம் வீட்ட விட்டு" என்று ஏதோ சொல்ல வர
"ஏய் நிறுத்துடி ! அதெல்லாம் ஒண்ணுமில்ல" என்றாள் எழிலி
கன்னம் சிவக்க, அவளும் பெண் தானே
என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்துக் கொண்ட
அகன் ஆர்ப்பாட்டமாக சிரித்து விட்டான்.
அப்போது தான் அகனழகனை கவனித்தால்,எழிலி எதிரியை
கூறு போடும் விழிகள் அளவான மீசை தாடியுடன்
வெள்ளையுடன் மஞ்சள் கலந்த சந்தன நிறம் ஆண்மைக்கு இன்னும்
அழகு சேர்ப்பது போல் பெரிய நெற்றி என்று தன் முன் நிற்பவனை கண்டு
மூச்சடைத்து போனாள். பெண்ணவள் அன்றே அவள்
மனதில் கள்வனாக நுழைந்துக் கொண்டான் அவளவன்
"சரிம்மா உன் பெயர் என்ன ?"என்றான் அகன்
அவளும் "எழிலி தாரெழிலி" என்றாள் குறும்புடன்
அந்த பெயரை அவன் ஏற்கனேவ எங்கோ
கேட்டது போல் தோன்றியது. ஆனால் அதை ஒதுக்கி வைத்துவிட்டான்.
அன்றே அதை ஆராய்ந்திருந்தால் இன்று மறுபிறப்பில்
நாயாய் பேயாய் அலைந்திருக்கும் அவசியம் வந்திருக்காது.
"பாப்பா உன் பேரு என்ன ?" என்றான் தரன்
"பூவரசி" என்றாள் மென்மையாக
இருவரும் விட்டால் போதுமென்று அந்த இடத்தை விட்டு
ஓடி மறைந்தனர். ஆனால் அவனது பார்வை தாராவை விடாமல்
துரத்தியது. என்னவோ இருவரும் கவனிக்கவில்லை
கவனித்திருந்தாள் இரு அரக்கர்களின் பார்வையிலிருந்து
இரு மலராத மொட்டுக்கள் தப்பியிருக்கும்.
இன்று,
அவள் நினைவலைகளை கலைக்கும் வண்ணம் அனி பேச தொடங்க
லோச்சு கண்களை துடைத்துக் கொண்டாள்.
"நீ சொன்ன மாதிரியே எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துட்டேன்டி இப்போ
என்னமோ நெஞ்சு வலி வந்த மாதிரி நடிக்கிறேன்ன, எங்க ஒன்னயும் காணோம்?"
என்றாள் அனி,
அவளோ சற்று கோபமாக, "அது நெஞ்சு வலியில்லடி பைத்தியம் மூச்சு திணறல் கஷ்டப்பட்டு
உயிர கொடுத்து நடிக்க போறேன் பிளான் சொதப்புச்சு அவ்ளோ
தான் ரெண்டு பேரும் காலி ஒழுங்கா நடி"
"அந்த சுடல்லா பைத்தியம் எங்கடி?" என்று எரிச்சலுடன் வினவினாள் லோச்சு
"அவ அப்பயே வீட்ட விட்டு கிளம்பிட்டாளாம்டி
நீ அப்போவே சொன்ன நான் தான் கேக்கல " என்றாள் வருத்தமாக
"அதா முக்கியம் வா நாமளும் தப்பிச்சு ஓடலாம் ஒழுங்கா நடி" என்றாள் கறாராக
"சரிடி " என்று இருவரும் நடிக்க தயாரானார்கள்
"கத்துடி" என லோச்சு சொல்ல
"ஐயோ! என் லோச்சுவுக்கு மூச்சு வாங்குதே மாரி
பிஸ்கேட் ஓடி வாங்க" என்று கத்த
லோச்சு கோபமாக அனிதாவின் குறுக்கிலேயே ஒரு உதை விட்டாள்.
"ஏண்டி உதைச்ச? அம்மா வலிக்குதே " என்று கதறினாள் அனி
"அரை பைத்தியமே ஒழுங்கா நடி மாரி அங்கிள்னு சொல்லு
ஏண்டி இப்டி படுத்துற எப்ப பாரு திங்கிறதுலயே குறியா
இரு" என்றாள் எரிச்சலாக
இவளை பார்த்துக் கொண்டு காத்தாமலிருந்தவளை பார்த்த
லோச்சு
"ஏண்டி இப்போ நிப்பாட்டுன? கத்து கீழ போய் அழுதாவது காலை
புடிச்சாவது ஹாஸ்ப்பிட்டல் கூட்டி போகணும்னு சொல்லு
நடி" என்று
ஊக்கப்படுத்தியே லோச்சுவுக்கு உண்மையாக மூச்சு வாங்கியது.
அதற்குள் இவர்கள் சத்தம் கேட்டு அங்கு வந்து சேர்ந்த மாரி,
" என்னமா ஆச்சு?"
"லோச்சுவுக்கு மூச்சு திணறல் அங்கிள் ஹாஸ்ப்பிட்டல் கூட்டி போகணும்" என்று பதற்றத்துடன்
அனி கூற
சரிம்மா இருங்க ஐயாக்கிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு என்று மாரி ஆரம்பிக்க
அபிக்கு தெரிந்தால் காரியம் கெட்டுவிடும் என்று யூகித்தவள்
அவர் நகரும் முன்பே, " ஐயோ செத்து போன பாட்டி தெரியுதே தாத்தா கூப்புடறாரே"
லோச்சு நன்றாகவே நடிக்க
"கூட்டிட்டு வாங்கம்மா நான் வேண்டிய எடுக்குறேன்
படி இறங்குவாங்களா இல்லனா டாக்டர கூப்பிடட்டுமா பாப்பாம்மா "
அவசரமாக மறுத்த அனியோ, " அதெல்லாம் இறங்குவா இறங்குவா நீங்க வண்டிய ரெடி பண்ணுங்க
கூட்டிட்டு வாரேன் " என்றவுடன் அவரும் அவசரமாக வண்டியை கிளப்பினார்.
வள்ளியம்மை மட்டுமிருந்திருந்தால் இவர்களது திருட்டுத்தனத்தை கண்டுபிடித்து
மூச்சடைத்தால் பரவாயில்லை வீட்டுக்கு வைத்தியரை அழைத்து வர செய்திருப்பார்.
மாரிக்கு மகளை ஒத்த வயது பெண் மீதுள்ள கரிசனை அந்த கரிசனையே
இப்போது அவருக்கே எதிரியாக அமைந்தது தான் மிச்சம்
ஆனால் வைத்தியசாலையில் தான் இருவருக்குமான பெரிய அதிர்ச்சி
காத்திருக்கிறது. என்பதை இருவருமே அறியவில்லை. இவர்கள்
காரில் ஏறி அமர்ந்தவுடனே மாரி யாருக்கோ அழைத்து பேச ஆரம்பித்திருந்தார.
ஹாலோ பைரவ் ஐயா எங்க இருக்கீங்க?
"டவுன் ஆஸ்பத்திரியிலயா ?"
"இருங்க உடனே வாரேன்"
"அங்கிள் இங்கேயிருந்து டவுனுக்கு போக எவ்ளோ நேரமாகும் ?" வினவினாள் அனி
லோச்சுவோ ஐயோ அம்மா என்று கத்தி நடிப்பை தொடர்ந்த வண்ணம் வந்தாள்
"ஒரு அரை மணி நேராமாகும்" என்றார் அவர்
அப்டியா டாக்டர் உங்களுக்கு
தெரிஞ்சவரா? அங்கிள் என்று ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே வர
"ஆமாம்மா துரை ஐயாவோட ஸ்நேகிதர்" என்று அவர் கூற
"ஓஹ்ஹ் டாக்டர் பேரு என்ன அங்கிள் ?"
அது ஆ ... இதோ ஹாஸ்பிடல் வந்துருச்சு என்று வைத்தியசாலையின் வாகன
தரிப்பிடத்தில் நிறுத்தியவர்
எறங்குங்க மா
"இல்ல அங்கிள் என்னால முடியாது" என்று இளைத்தபடி லோச்சு கூற
"நீங்க ஸ்ட்ரெச்சர் எடுத்துட்டு வாங்க அங்கிள் லோச்சுவுக்கு
தலை சுத்துதாம்" என்று அனி இன்னும் இட்டுகட்டி கூற
"சரிம்மா இதோ வரேன்" என்று மாரி இறங்கி ஓட
"ஏய் இறங்குடி அந்த ஆள் வர முன்ன ஓடணும் " என்று
லோச்சு அவசரப்படுத்த
விடு ஜூட் என்று இருவரும் இறங்கி ஓட்டமும்
நடையுமாக ஓட வைத்தியசாலை வாளாகத்திலிருந்து இருந்து
வெளியேறி எதிரே பத்திரிகை வாசித்தபடி
நீல நிற ஷிர்ட்டும் கருப்பு நிற கால்ச்சட்டையும்
அணிந்து நின்ற ஆடவனிடம் வந்து
"எக்ஸ்க்யூஸ் மீ சார் " என்று லோச்சனா அழைக்க
திரும்பியவனை பார்த்து லோச்சு அதிர்ந்து போனால் என்றால்
அனி
"ஹாய்! அங்கிள் பஸ் ஸ்டாப்புக்கு எப்படி போனும்" என்று கண்களை
உருட்டி வினவ
அவனுக்கோ தவுசண்ட் வால்ட் பல்ப் எரிந்தது.
"பூவு எப்படிடி இருக்க உன்னை பார்த்து எவ்ளோ
நாள் கனவுல கூட உம்மா தர போனா மறஞ்சி போயிர்ர" என்றான் சோகமாக
அனியோ யார்ரா நீயென்பதை போல் பார்த்து வைக்க அவனுடைய
முகம் கூம்பியது,
"நான் உன் மாமண்டி என்ன நீ என்று உலுக்கி விட்டு,
மாமாக்கு லிப் டு லிப் கிஸ் தந்து ஸ்பாயில் பண்ண
மூட்ட சரி பண்ணு"என்று
உதடு குவித்துக் காட்ட
அவளுக்கோ ஒரு போத்தல் விளக்கெண்ணெயை குடித்தது போல்
முகம் மாறியது
"ஏய் என்ன இந்த ஊரு பூரா லூசா சுத்துதுங்க வாடி
போலாம்" என்றாள் அனி எரிச்சலாக
எங்க போறீங்க ரெண்டு பேரும் என்று வினவினான் கடுமையான குரலில்
பாவம் அபிக்கு தெரியாதா எழிலி
நீ இங்க இருக்குறது ? என்று வினவ
லோச்சுவோ எரிச்சலுடன்
"நான் எழிலியும் இல்ல இவ பூவும் இல்ல
என் பேரு த்ரிலோச்சனா இவ பேரு அனிதா
நீங்க யாரோனு நினச்சு யார்கிட்டயோ பேசுறீங்க"
அவனோ ஏற இறங்க பார்த்துவிட்டு,
"அப்டி பார்த்தா என் பேரும் கிரிதரனில்ல பைரவ்
அபி பேரும் அகனழகனில்ல அபிஜித்தன் இரு
அவனுக்கு போன் போடுறேன்".
என்று போனை எடுத்தது. தான் தாமதம் அவன் போன் பறந்து
சென்று கழிவுக் கால்வாய்க்குள் விழுந்தது.இருவரும் அவன் கையிலிருந்த
செல்லை தட்டிவிட்டு
"வாடி ஓடிரலாம்" என்று லோச்சுவும் அனியும் பின்னங்கால் பிடரியில்
படுமளவுக்கு
தப்பித்து ஓடிவிட்டனர். இருவரும் அங்கே சுற்றி இங்கே சுற்றி
ஒருவாறு பஸ் நிலையத்துக்கு வந்து கண்டி பஸ்சில்
ஏறி அமர்ந்து பெருமூச்செறிந்தனர்.
வதம் தொடரும்.........
*****************************************
இதோ அடுத்த episode போட்டுட்டேன் படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க இந்த ud ல நிறைய தெளிவு கிடைக்கும் ஆனா பொங்கி என்ன திட்ட கூடாது இவன கட்டயால அடிச்சாலும் I don 't care இவனோட make அப்டி okyaa plss நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
காலகேயனின் காதல் வதம் கருத்து திரி
கட்டாயம் சேர்த்து vachirvom க்கா Apdi ellam posukkunu mudivu edukka kudathu sis... konjam nalllaaaaaa yosichukanga😜😄
pmtamilnovels.com