காதல் 2
கடலூர் என்னும் வரவேற்பு பலகையை கடந்து ஊரின் உள்ளே வரும்போதே தந்தைக்கு அழைத்து எங்கே வர வேண்டும் என்று கேட்க, விடியற்காலை என்பதால் நல்ல தூக்கத்தில் இருந்தவர் மகன் குரலில் சற்று திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார்.
தனா உண்மையாவே வந்துட்டியா என்று கேட்க, வீடு எங்க சொல்லுங்க டாட் அப்பதானே வரமுடியும் இப்போ தான் கடலூர் வந்திருக்கேன் என்றான்,
தனா நீ அங்க உள்ள புது பேருந்து நிலையம் கேட்டு அங்க போயிட்டு வெயிட் பண்ணு நா ஆள் அனுப்பி வைக்கிறேன் என்றதும் சரி டாட் என்று அலைபேசியை துண்டித்து விட்டு பக்கம் இருப்பவர்களிடம் கேட்டுக் கொண்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றது அந்த இனோவா.
அலைபேசியை வைத்த நந்தன் மனைவியை எழுப்பி மகன் அழைத்ததை கூறினார் தனா வருகிறான் என்று கேட்டதும், லக்ஷ்மி கண்கள் மின்ன சரி மனுஷா நான் அண்ணன் கிட்ட ஆள் அனுப்ப சொல்றேன் என்று அண்ணன் வீட்டை நோக்கி சென்றார்.
கிராமத்து அதிகாலை என்பதால் அனைவருமே எழுந்து அன்றைய வேலைகளை தொடங்கி இருந்தனர்.
அண்ணி... என்று அழைத்துக் கொண்டே தான் இருக்கும் வீட்டில் இருந்து அந்த பெரிய வீட்டை நோக்கி சென்றார் லக்ஷ்மி, சொல்லுங்க மதனி என்று வெளியே வந்தார் சாரதா.
லக்ஷ்மி யின் தந்தை அந்த ஊரின் முக்கிய தலைகட்டு அவரின் ஆளுமையான தோரணையே நான் சொல்வது மட்டும் தான் என்பது போல் இருக்கும் அதனால் அந்த கிராம மக்கள் அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச மாட்டார்கள், இந்த தோரணைக்கு பயந்து தான் அன்று லக்ஷ்மி காதலை வீட்டில் சொல்ல பயந்து ஓடியது.
லக்ஷ்மி யின் மூத்த அண்ணன் ரங்கா தந்தையின் தோரணை ஆளுமை அப்படியே கொண்டவர், தந்தையின் மரணத்திற்கு பின் அவரின் சாயல் கொண்ட ரங்கா அந்த ஊரின் மரியாதையை ஏற்று வருகிறார், ரங்காவின் மனைவி சாரதா இவர்களுக்கு இரு மகள்கள் தர்ஷினி வர்ஷினி இரட்டையர்.
இரண்டாவது அண்ணன் பாண்டி தாய் சுந்தரியின் சாயல் கொண்டவர் அவர் மனைவி சாந்தி இவர்களின் ஒரே மகன் கதிர்.
லக்ஷ்மி கடைக்குட்டி அந்த வீட்டின் செல்ல பெண். நிறைய சினிமா பார்த்து பார்த்து காதல் என்றாலே வீட்டில் பிரித்து விடுவார்கள் என இவரே தீர்மானித்து சென்று விட்டார்.
ஒரு வாரம் முன்பு சென்னையில் இருக்கும் தன் அண்ணன் மகளை பார்க்க வந்த பாண்டி கண்ணில் லக்ஷ்மி பட்டுவிட, தங்கச்சிமா என்று பாண்டி அழைக்கவும். அண்ணனை கண்டு பயத்திலும் பிரிவின் ஏக்கத்திலும் கண் கலங்க அண்ணா என்னை மன்னிச்சிடு என்றார். பாண்டி தங்கையின் தோற்றத்தை வைத்தே நல்லபடியாக வாழ்கிறார் என்று புரிந்து கொண்டு தங்கையின் தலையை தடவியவாரே, வீட்ல சொல்லி இருக்கலாமே பாப்பா நாங்களே உங்களுக்கு திருமணம் செய்து வெச்சிருப்போமே எங்கள நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா என்றதும்.
என்ன சொல்றிங்க என்று லக்ஷ்மி அதிர்ந்து அப்போ அப்பா என்று கேட்க அவரும் இதான் சொன்னார். நீயும் மாப்பிள்ளையும் ஊர், அலைபேசி எண்.,எல்லாம் மாத்திட்டிங்க.. என் மகள் எங்கிருந்தாலும் நல்லா தான் இருப்பானு சொல்லி தேட வேண்டாம் சொல்லிடாங்க அப்பா.
உன்னைத்தான் அவருக்கு ரொம்ப பிடிக்குமே அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் கடைசி வரை உன்னை உன் கணவர உன் பிள்ளைகள பார்க்க முடியலனு தான் அவருக்கு ஏக்கம் இருந்துச்சு, உன்னைத் தேடி கூப்பிட்டு வரலாம்னு அண்ணன் சொன்னாங்க. அப்பா வேண்டாம் சொல்லிடாங்க ஆனா நீ ஒரு நாள் கண்டிப்பா வருவனு சொன்னாங்க.
அம்மா கூட உன்னை பத்தி நெனச்சி அடிக்கடி அழும், என்கூட ஊருக்கு வா பாப்பா எல்லோரும் ரொம்ப சந்தோஷம் படுவாங்க என்றதும்.
சரிங்க அண்ணன் இப்போ என் கூட வாங்க பக்கம் தான் அவர் அலுவலகம் இருக்கு போகலாம் என்று பாண்டியை அழைத்து கொண்டு சென்றார்.
நந்தனை அண்ணனுக்கு அறிமுகப்படுத்தி., பாண்டி சொல்லியதை நந்தனிடம் பகிர்ந்து கொள்ள, சரி லட்சு போகலாம் என்று அப்போதே பாண்டியோடு ஊருக்கு கிளம்பினார்கள்.
லக்ஷ்மி தினேஷை அழைத்து நந்தனோடு தன் தோழி ஊருக்கு செல்வதாகவும் வர நேரம் ஆகும் என்றும் தெரிவித்திருந்தார்.
பாண்டி பெரிய அண்ணனுக்கு அழைத்து நடந்த அனைத்தும் சொல்லி லக்ஷ்மி கணவருடன் வருவதையும் தெரியப்படுத்தி இருந்தார்.
வீடு வந்ததும் தாயிடம் மன்னிப்பு கேட்டு கணவருடன் ஆசிர்வாதம் பெற்றார் லக்ஷ்மி தந்தை மறைவிற்கு வருத்தம் தெரிவித்து, பெரிய அண்ணனிடமும் மன்னிப்பு கேட்டு, பின்னர் அவர் அவர்கள் மனைவி குழந்தைகள் பற்றி பகிர்ந்துக் கொண்டு பாச போராட்டம் முடிந்து.
லக்ஷ்மி கணவரை பார்க்க அவரோ உங்க பாச போராட்டம் தாங்க முடியல ஓடி போனதுக்கு உள்ள மரியாதையே போச்சு என்று அவர் காதில் கிசுகிசுத்தார், கணவருக்கு தன் முறைப்பைக் காட்டி பின் தன் தாயிடம் பேச தொடங்கினார்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வர்ஷினியிடம் இருந்து அழைப்பு வர, நாங்க வந்துட்டோம் பாப்பா நீ பத்திரமா இரு என்றார். அதோடு வர்ஷினி தன் அக்காவை பற்றி விசாரிக்கவும், வயலுக்கு போய் இருக்கு பாப்பா என்று
சொல்லி பின்னர் சிலபல பத்திரங்கள் சொல்லி அழைப்பை துண்டித்தார்.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரி எப்ப பார்த்தாலும் வயல்வெளினு சுத்திட்டு இருக்காளுங்க எப்ப தான் கல்யாணம் பண்ண போறாளுங்கனு தெரியல நின்று சிலாகித்துக் கொண்டார்.
உனக்கு பையனோ பொண்ணோ இருந்தா இவனுங்களோட பிள்ளைகள் யாரையாவது கல்யாணம் பண்ணி கொடுக்க உங்க அப்பா ரொம்ப ஆசைப்பட்டார்
என்று சுந்தரி சொல்லவும்.
எனக்கும் ஆசையா தான் அம்மா இருக்கு ஆனா எங்க இந்த பெரியவன் கல்யாண பேச்சு எடுத்தாலே வேண்டாம் சொல்லிடுறான் என்று கவலையாக சொன்னார் லக்ஷ்மி.
லக்ஷ்மி க்கு சட்டென்று ஏதோ தோன்ற ஏன் அண்ணன் என் பையனுக்கு உன் பொண்ண குடுப்பியா என்று கேட்டார் ரங்காவிடம்.
என் மாப்பிள்ளைக்கு குடுக்காம வேற யாருக்குமா கொடுக்க போறேன் ஆனா தர்ஷினி இப்போ கல்யாணம் வேணாம் சொல்றாமா அக்காவுக்கு பண்ணாம வர்ஷினிக்கு எப்படி மா பண்றது, இப்ப கூட இரண்டு நாள் முன்னாடி கல்யாணம் பேச்சு எடுக்கவும் வயலே கெதின்னு அங்கேயே இருக்குது.
லக்ஷ்மி சட்டென்று முடிவெடுத்தவராய் நா முடிவு பண்ணிட்டேன் அண்ணன் தர்ஷினி தான் என் வீட்டு மருமக இந்தாங்க தனாவோடு புகைப்படம் பாப்பா கிட்ட காமிச்சு சம்மதம் வாங்குங்க மத்தத நான் பாத்துக்குறேன் என்றதும்,
இல்ல தங்கச்சி மா அது வர்ஷினி மாதிரி நிரந்தர இடமான வேலை எல்லாம் இல்ல அது மாப்பிள்ளைக்கு ஒத்துவருமானு தெரியல அதான் என்று ரங்கா சற்று தயங்க.. தன் மகள் வயல்வெளி வேலை என இருப்பதை அண்ணன் சொல்லத் தயங்குவதாக எண்ணி...,
நீங்க இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம் அண்ணா பாப்பா கிட்ட சம்மதம் கேளுங்க புடிச்சிருந்தா உடனே நம்ம கல்யாணம் பண்ணி வைக்கிறோம் தனாவ சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு என்று முடித்துக் கொண்டார்.
சரி தங்கச்சி மா என்று கையில் இருந்த தனாவின் புகைப்படத்தை தன் தாயிடம் கொடுத்தார் ரங்கா,
அதனை வாங்கி பார்த்து என்னோட பேரன் ராசா கணக்குல இருக்கான் இல்ல என்றபடி அந்த புகைப்படத்தை சாரதா விடம் கொடுத்தார். பின்னர் அனைவரும் அந்த புகைப்படத்தினை பார்த்து திருப்தி அடைந்தனர்.
தங்கச்சிமா நீ தர்ஷினிய பார்க்கலையே என்றவாறு அருகில் இருந்த ஒரு புகைப்படத்தை ரங்கா லட்சுமியிடம் காண்பித்தார்.
அதில் தர்ஷினி வர்ஷினி இருவரும் புடவை அணிந்து இருந்தனர் உருவ வேறுபாடு இருந்தது இருவருக்கும்.
அந்தா உங்க அண்ணன மாதிரியே அளந்தா போல சிரிக்கிறாளே அவ தான் தர்ஷினி, நல்லா வாய்விட்டு சிரிக்கிறாளே அவதான் வர்ஷினி என்றார் சுந்தரி.
மென் புன்னகையோடு லக்ஷ்மி அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு சரிங்கண்ணே நீங்க பேசிட்டு சொல்லுங்க நாங்க கிளம்புறோம் என்றவாறு நந்தன் லக்ஷ்மி விடை பெற்றனர் அங்கிருந்து.
இரு நாட்கள் கழித்து அண்ணனிடமிருந்து அழைப்பு வர அதில் தர்ஷினி திருமணத்திற்கு சம்மதம் சொன்னது தெரிவிக்கவும்,
நந்தனும் லட்சுமியும் உடனே புறப்பட்டு இருந்தனர் கிராமத்தை நோக்கி.
இடையில் நந்தன் லக்ஷ்மி யிடம் என்னம்மா தனா கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கலையே என்று கேட்கவும் நான் பாத்துக்குறேன் அவன கேட்டா எப்படியும் வேணா தான் சொல்லுவான். என் அண்ணன் பொண்ணு மாதிரி ஒரு நல்ல கிராமத்து பொண்ணு கிட்ட மாட்டினா தான் இவன் எல்லாம் உருப்படுவான் அப்போ தான் அவ இவன கட்டி வீட்ல வைப்பா என்றதும்., தன் மனைவி அவள் எடுத்த முடிவிலிருந்து பின் வாங்க மாட்டார் என்பதை உணர்ந்த நந்தன் அதோடு அமைதியாகிவிட்டார்.
கிராமத்துக்கு வந்ததும் திருமணம் முடியும் வரை தான் பக்கத்தில் இருக்கும் அவர்களது மற்றொரு வீட்டில் தங்கிக் கொள்வதாக சொல்லி இருவரும் அந்த வீட்டிலேயே தங்கி கொண்டனர்.
ஜாதகம் பார்த்து இரண்டு தினங்களில் திருமணம் என்று குறிக்கப்பட்டது.
தினேஷை அழைத்து இங்கு வர சொல்லி அனைத்தும் அவனிடம் தெரிவிக்கப்பட, அதன் பின்னர் தான் தனாவை வரவழைத்தது.
லக்ஷ்மி குரல் கேட்டு வெளியே வந்த சாரதா என்னங்க மதனி இவ்வளவு பரபரப்பா இருக்கிங்க எதும் பிரச்சனை இல்லையே என்று கேட்க,
இல்லை அண்ணி தனா கடலூர் வந்துட்டான், அண்ணன் கிட்ட சொல்லி அவன கூப்பிட்டு வர ஆள் அனுப்பனும் அதான் வந்தன் அண்ணன் வீட்டில் இருக்கா கொஞ்சம் கூப்பிடுரிங்களா என்றதும்... அட மாப்பிள்ளை வந்தாச்சா... இந்தா உங்க அண்ணன் வர சொல்றேன் என்றவாறே கணவனை அழைத்து வந்தார் சாரதா.
ரங்காவிடம் தனா வரவை லக்ஷ்மி சொல்லவும், நானே போயிட்டு என் மாப்பிள்ளைய கூப்பிட்டு வரன் தங்கச்சிமா என்று கிளம்பி இருந்தார்.
அந்த வீடு இரண்டு தளம் அதில் மூன்று படுக்கையறையும் கொண்ட வீடு. கீழ் தளத்தில் பெரிய கூடம் ஒரு படுக்கையறையும் சமையல் அறையும் கொண்டது மேல் தளத்தில் பால்கனியோடு இரு படுக்கையறைகளும் கொண்டது.
நந்தன் லக்ஷ்மி தம்பதியர் கீழ் தளத்தில் இருந்தனர், தினேஷ் மேல் படுக்கையறையில் இருக்க அது அதிகாலை என்பதால் தனா வந்த செய்தி அவனுக்கு தெரிந்திருக்க வில்லை.
வெள்ளை வேட்டி சட்டையில் மிடுக்கோடு வந்தவரின் தோரணையில் சற்றே மிரட்சியோடு அவரோடு அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தான் தனஞ்செயன்...