Priyanka Muthukumar
Administrator
சர்வம் 9:
வந்தவர்கள் இருவருக்கும் தான் அங்கிருப்பதில் பிடித்தமில்லை என்பது பதுமையவள் தெளிவாக உணர்ந்திருந்தாலும்,ஏனோ தன்னுடைய எதிர்க்கால வாழ்வே அங்கு தான் இருப்பது போல் உள்மனம் அச்சரம் பிசகாமல் கூறியதை அவள் எவ்வாறு மறுக்க?
அத்தோடு யாருமில்லை என்று கவலையில் உழன்று நேரத்தில் அதிரடியாய் தன் வாழ்வில் நுழைந்து அன்பு செலுத்தும் அந்த ஒற்றை ஜீவனை இழக்க விரும்பவில்லை பாவையவள்.
அது சற்றே சுயநலம் என்று தெரிந்தும் வலுக்கட்டாயமாக அவர்களது பார்வையில் தெரிந்த உதாசீனத்தையும்,அதனால் விளைந்த அவமானத்தையும் தாங்கிக்கொண்டு இல்லத்தினுள்ளே தங்கிக்கொண்டது அந்த குழந்தை உள்ளம் கொண்ட குமரி.
அவனது தாயின் கண்களில் கூட தன் மகனின் தலையில் சுமையாய் வந்துவிட்டாள் என்ற எரிச்சல் மண்டியிருந்தது என்றால்,அவன் தங்கையின் கண்ணில் சினம் மட்டுமே தாண்டவமாடியது.
பெண்ணவளது கடுகடுத்த முகத்திற்கு காரணம்,அவனது தங்கை டெய்ஸியின் அறையில் தான்,தற்போது சர்வத்மிகா தங்கியிருப்பதாக பொன்னம்மாவின் வாய்மொழியாக கேட்டு தெரிந்துக்கொண்டவளிற்கு அவள் தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் இருப்பதற்கான செயற்காரணத்தை அறிந்துக்கொள்ள முடிந்தது.
அதற்காகவே சர்வத்மிகா இரண்டு முறை அவளிடம் மன்னிப்பு வேண்டிட எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிய அந்த சிறுப்பெண்ணின் மனம் சோர்ந்துப்போனது.
இதற்கெல்லாம் மேலாக,அலெக்ஸ் அன்று உதிர்த்த கடுமையான வார்த்தைகளுக்கு பிறகு அவளிடம் சரியாக முகம் கொடுத்து பேசாதது தான் அவளை அதிகம் பாதித்தது.
அவன் மனதில் எந்த கல்மிஷமும் இல்லை என்றாலும்,நாளுக்கு நாள் அவளின் பார்வையில் தெரிந்த இனம் புரியாத உணர்வை தன் கூரிய விழிகள் கொண்டு அறிந்தவன் 'இது சரியில்லை' என்று தீர்க்கதரிசியாய் அன்றே அவளின் ஆழ் மனதின் நேசத்தை கணித்து விலகிவிட்டான்.
இந்நிலையில் இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வருபவனை நேரடியாக எதிர்க்கொள்வதற்காக உறங்க செல்லாமல் சர்வத்மிகா வரவேற்பறையிலே காத்திருக்க தொடங்கினாள்.
இன்று எப்பாடுபட்டாவது தெளிவாக அவனிடம் தன் மனதிலிருப்பதை பேசிவிட வேண்டும் என அவனிற்காக வரவேற்பறையில் காத்திருக்க தொடங்கினாள்.
ஆனால் இன்று இரவு முழுவதும் காத்திருந்தாலும் அவன் வீட்டிற்கு வரப்போவதில்லை என்று பாவம் பேதையவள் அறியவில்லை.
ஏனெனில்,தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு முக்கிய வழக்கை விசாரணை செய்து குற்றம் புரிந்த குற்றவாளியை கண்டிப்பிடிப்பதற்கு ஏதுவாக காவலர்கள் தலைமையில் சிறப்பு குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டிருந்தது.
அந்த குழுவின் தலைவனாக குற்றவியல் பிரிவை சார்ந்த ஆர்யன் என்பவனின் கீழ் அந்த குழு அமைக்கப்பட்டிருக்க,அதில் ஆர்யனிற்கு அடுத்ததாக பொறுப்பில் இருந்தான் அலெக்ஸ் பாண்டியன்.
ஆர்யனிற்கு இந்த வழக்கு விசாரணையின் போது நிகழ்ந்த எதிர்ப்பாராத தாக்குதலினால் காலில் பலமான அடிப்பட்டிருந்தது.அதன்பலனாய் தலைமை பொறுப்பு முழுவதும் இவன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்க குற்றவாளியை கண்டுப்பிடிக்கும் பணியில் இரவு பகல் பாராது வீட்டிற்கு கூட வராமல் அயராமல் உழைத்துக்கொண்டிருந்தான்.
அதற்கு காரணம்,நாட்டில் மர்மமான முறையில் பொது மக்கள் சிலர் தங்கள் சுய உணர்வை இழந்தாற் போல் நடந்து சென்று மற்றவர் பார்க்கையில் ஒரு உயரமான மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து வரிசையாக தற்கொலை செய்துக்கொண்டு இறந்திருந்தனர்.
இதுவரை ஐந்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துக்கொண்டு விசித்திரமான முறையில் இறந்துப்போனவர்களை பற்றி விசாரித்ததில் ஒரு முக்கிய தடயம் ஒன்று கிடைத்திருந்தது.
உயிரற்ற பிணங்களாக பாலத்திற்கு அடியில் கிடைத்த சடலங்களை பற்றி உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டதில்,அவர்கள் அனைவரும் பெண்கள் கற்பழிப்பு வழக்கில் தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் என்பதை அறிந்துக்கொண்ட அலெக்ஸ், அவர்கள் இதுவரை வாதாடிய வழக்குகளை பற்றி தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.
ஒரு வழியாய் சரியான பாதையில் துப்புத்துலக்கிய அலெக்ஸ் குற்றவாளியை நெருங்கிய வேளையில் முற்றிலும் எதிர்ப்பாராத வகையில் ஒரு மர்ம கும்பல் தன்னை நோக்கி நடத்திய துப்பாக்கி சூட்டில் காயத்தை தனக்கு பதிலாக ஆர்யன் வாங்கிக்கொண்டதில் அலெக்ஸிற்கு அவனின் மீது ஒரு பரிதாபமும் மரியாதையும் ஒருங்கே தோன்றியிருந்தது.
அதற்காகவே யாவரின் உதவியின்றி தனிமையில் வாடி தவிப்பவனிற்கு ஆறுதலளிக்கும் விதமாக இரவு அவனுடனே தங்கிக்கொள்ள போவதாக தாயிடம் முன்னரே தகவல் தெரிவித்திருந்தான்.
அதையறியாத சின்னஞ்சிறு பாவையோ தன்னை வழிநடத்தி செல்லும் மீகாமனை எதிர்நோக்கி வாசலிலே பார்வையை பதித்து கண்கள் பூக்க தவமிருந்தாள்.
பொன்னம்மாவிடமும் இதைப்பற்றி விசாலினி தெரிவிக்காததால் அவருக்கும் அவன் இரவு வீட்டிற்கு வரப்போவதில்லை என்ற விடயம் அறியாமையால் அவர் எவ்வளவோ வற்புறுத்தி 'தூங்க' வருமாறு அழைத்தும் அவள் பிடிவாதமாக வரமறுத்து வரவேற்பறையிலே பலியாய் கிடந்தாள்.
அவன் வருகையை எதிர்நோக்கியப்படியே பொன்னம்மா கீழே சுவற்றில் சாய்ந்து உறங்கியிருக்க,சர்வத்மிகாவோ சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலே உணவு மேசையின் மீது தலை சாய்த்து தன்னை மீறி உறங்கியிருந்தாள்.
எப்பொழுதும் போல் காலை எழு மணிக்கு கண்விழித்த டெய்ஸி அறையை விட்டு வெளியே வருகையில் கண்ணை கசக்கி "பொன்னம்மா காபி" என கொட்டாவி விட்டப்படியே வர,
அவளின் குரல் ஒலித்ததற்கு பிறகே அடித்து பிடித்து அவசரமாக எழுந்துக்கொண்ட பொன்னம்மாவோ புடவை தலைப்பில் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு "இதோ போட்டு வரேன் பாப்பா" என பதட்டத்துடன் கூறியப்படி சமையலறைக்குள் நுழைந்தார்.
எப்பொழுதும் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து சமையல் வேலைகளை ஆரம்பிப்பவர்,இன்று வெகு நேரம் உறங்கிய குற்றவுணர்விலும் விசாலினிக்கு தெரிந்தால் தன்னை ஒரு வழி செய்துவிடுவார் என்ற அச்சத்திலும் படபடப்புடனே சமையலறையில் தன் பணியை தொடங்கினார்.
அதற்குள் கண்ணை கசக்கிக்கொண்டே வரவேற்பறைக்குள் நுழைந்திருந்த டெய்ஸி உணவு மேசையின் முன்பு போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து இரு கரங்களையும் மேசையின் மீது ஊன்றி தலையை கரங்களால் தாங்கி உறக்கத்தை தொடர்ந்தாள்.
சர்வத்மிகாவோ இரவு வெகு நேரம் கழித்து உறங்கியதால் டெய்ஸியின் சத்தத்தில் கூட உறக்கம் களையாமல் இப்போதும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
அதற்குள் பாலை நன்கு காய்ச்சி கொட்டை வடிநீர் தயாரித்து எடுத்து வந்தவர்,டெய்ஸியும் சர்வத்மிகாவும் அருகருகே உள்ள இருக்கையில் அமர்ந்த வாக்கிலே உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் விழி விரித்தார் பொன்னம்மா.
ஏனெனில் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட டெய்ஸியும் அவளது தாய் விசாலினியும் அலெக்ஸிடம் சர்வத்மிகாவை வேறு எங்கேயாவது விடுதியில் அல்லது இல்லத்தில் சேர்த்து விடும்படி சண்டையிட்டு விவாதம் நடத்திக்கொண்டிருந்ததை இவரும் கேட்டு சர்வத்மிகாவின் நிலையை எண்ணி மனம் நொந்துப்போனார்.
அத்தோடு அவள் பக்கத்தில் வந்தால் கூட தீட்டு என்பது போல் அவளை தீண்டத்தகாதவளாக பாவித்து அவள் வரவேற்பறைக்கு வந்தால் தாயும் மகளும் உடனடியாக முகத்தை திருப்பிக்கொண்டு தங்களது அறைக்குள் நுழைந்து கொள்வதை அறிந்த சர்வத்மிகாவிற்கு உள்ளுக்குள் ரணமாய் வலித்தாலும் வேறுவழியின்றி வரவேற்பறைக்கு வராமல் அறையினுள்ளே அடைந்து கிடந்தாள்.
நெஞ்சமெல்லாம் ஊசியால் குத்தும் உணர்வு!
நேற்று தான் அலெக்ஸிடம் பேசுவதற்காக வெளியே வந்திருந்தவளிற்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
ஆனால் இப்போது டெய்ஸி அவளாக சர்வத்மிகாவின் அருகில் அமர்ந்திருப்பதை எண்ணி வியந்தப்படியே அவளை நெருங்கினார்.
"பாப்பா இந்தா காப்பி" என்றவுடன் "ஹூம்" என்று சிணுங்கி கண்ணை கசக்கியப்படி விழி திறந்தவள் தன் முன்னே ஆவி பறக்க இருந்த கொட்டை வடிநீர் குவளையை ஆசையோடு விழி விரிய பார்த்து "தேங்க்ஸ் பொன்னம்மா" என வடிநீரை ரசித்து உறிஞ்சி குடிக்க தொடங்கினாள்.
பொன்னம்மாவோ மனதிற்குள் 'பரவாயில்லை பாப்பா மனசு மாறி இந்த பாப்பாவை ஏத்துக்கிச்சு போல்' என அகமகிழ்ந்துப்போனவர்,அதற்கான ஆயுள்குறைவு என்பதை அச்சமயம் அறியவில்லை.
ஏனெனில் சிறிது சிறிதாக வடிநீரை மிடறு விழுங்கிக்கொண்டே "பொன்னம்மா உன்னை மாதிரி காப்பி போட இந்த உலகத்தில் யாருமே இல்லை...செம்ம சூப்பர்" என புன்னகையுடன் சிலாகித்துக்கொண்டே பார்வையை சுழற்றியவளின் விழி வட்டத்தில் அப்போது தான் தன் அருகே வலதுப்புற இருக்கையில் அமர்ந்திருந்த சர்வத்மிகாவின் உருவம் தெரிந்தது.
அவளை பார்த்தவுடன் டெய்ஸியின் முகம் மாறி அஷ்டக்கோணலாகியது.
உடனடியாக குவளையை கீழே வைத்தவள் 'இவளா?' என பல்லை நறநறவென கடித்தவளின் முகம் ஜிவுஜிவுவென்று சிவந்துப்போனது.
இதழை அருவருப்புடன் சுழித்து படீரென்று இருக்கையை பலத்த சப்தத்துடன் தள்ளிக்கொண்டு எழுந்து நின்றவள் பொன்னம்மாவை தன்னுடைய கனல் விழிகளால் முறைத்து "பொன்னம்மா உனக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லையா?முன்னாடியே சொல்லி தொலைச்சிருந்தா கண்ட கழுதையெல்லாம் பார்க்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது...எல்லாம் உன்னால் தான்" என விரல் நீட்டி படபடவென புரிந்து தள்ளியவள் "உன்னை இரு அம்மாகிட்டயே சொல்லி கொடுக்கறேன்...அம்மாஆஆஆஆ" என வீடே கிடுகிடுக்கும் படி கத்தினாள்.
அவளது கீச்குரலில் அலறியடித்து உறக்கம் களைந்து எழுந்து நேராக அமர்ந்த சர்வத்மிகாவோ தன் முன்னே காளி அவதாரம் எடுத்து நின்றிருந்தவளை கண்டு ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழிக்கத்தொடங்கினாள்.
அதை கண்டு மேலும் முகத்தை வெறுப்புடன் சுழித்த டெய்ஸியோ "அம்மாஆஆஆ" என்று உரக்க கத்தி குரல் கொடுக்க,
அதில் பதறிப்போன பொன்னம்மா "பாப்பா அம்மாவை கூப்பிடாதேம்மா...அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப சத்தம் போடுவாங்க...நான் வேணா இந்த பாப்பாவை ரூமுக்கு கூட்டிட்டு போயிடறேன்...இனிமேல் நீங்க இருக்கும் போது வெளிய வராதமாதிரி பார்த்துக்கிறேன்" என கெஞ்சலாக மன்றாடியதற்கு பிறகே டெய்ஸி சிறிது இறங்கி வந்தாள் என்றால்,சர்வத்மிகாவிற்கோ அதன்பிறகே நடந்த நிகழ்வுகளின் காரணம் புரிப்பட இதயம் தன் துடிப்பை நிறுத்துவது போல் சுருங்கிப்போனது.
அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அச்சிறு பெண்ணின் இதயத்திற்குள் பெரும் பூகம்பத்தை விளைவித்தது.
மகள் அமைதி அடைவதற்குள் "ஏய் காலங்காரத்தாலே எதுக்குடீ எட்டு ஊருக்கு கேட்கமாதிரி கத்தறே?இந்த வீட்டில் நிம்மதியா தூங்க முடியாதா?" என வசைப்பாடி கொண்டே வரவேற்பறைக்கு வந்தவர்,
உணவு மேசையின் அருகே நின்றிருந்த மகளை கண்டு "என்னடி உனக்கு பிரச்சனை?எதுக்கு கத்தி கூப்பாடுப்போட்டே?" என்று மகளை அதட்ட,
அவளோ தன்னிடம் கண்களில் இறைஞ்சிய பொன்னம்மாவையும் தன்னுடைய வார்த்தைகளால் விழிகளில் உயிரற்று எங்கோ வெறித்த சர்வத்மிகாவின் பார்வையும் அவளின் நெஞ்சை பிசைந்திட தாயிடம் "ஒண்ணுமில்லைம்மா...அண்ணனை இன்னும் காணும்?அதுக்கு தான் உன்னை கூப்பிட்டேன்" என சமாளித்து வைத்தாள்.
மகளை இடுப்பில் கை வைத்து முறைத்து "அதுக்கு அவனிற்கு போன் பண்ணி கேட்க வேண்டியது தானேடி...என் தூக்கத்தை கெடுத்து எதுக்கு தொந்தரவு செய்யறே?" என்று திட்டிக்கொண்டே வரவேற்பறைக்கு வரமுனைந்தவரை கண்டு பொன்னம்மாவிற்கு திக்கென்றது.
அவளிற்குள்ளும் ஒரு பூ மனம் எங்கோ மறைந்திருக்க வேண்டும் என்பது போல்,
சடுதியில் தனது தாயின் வார்த்தைகளின் வீரியம் உணர்ந்த டெய்ஸி உடனடியாக முன்வந்து அவரின் தோளில் கைவைத்து அறைக்குள்ளே தள்ளிக்கொண்டே "அம்மா அண்ணாவுக்கு போன் பண்ண சொல்லிட்டு வெளிய வந்தால் என்ன அர்த்தம்?போன் ரூமுக்குள்ள இருக்கு...வா நாம் அண்ணாகிட்ட பேசலாம்" என்று பகுமானமாக கூறி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.
அதனை கண்டு நன்றிப்பெருக்குடன் இருகரம் குவித்தவரை பார்த்து மறுப்பாக தலையசைத்த டெய்ஸி கதவை சாற்றிக்கொண்டாள்.
அதன்பிறகு பொன்னம்மா சர்வத்மிகாவிடம் ஓடோடி வந்தவர் "பாப்பா வா...நாம் ரூமுக்கு போகலாம்" என விரைந்து செயல்பட்டு சக்கர நாற்காலியை அறைக்கு தள்ளிச்சென்றார்.
டெய்ஸி இயற்கையில் நல்லகுணமுடையவள் என்றாலும் சர்வத்மிகாவின் மீது பிடித்தமின்மை உருவாகியதற்கு காரணம் அவளது சகோதரன் அலெக்ஸ் இதுநாள் வரை எந்தவொரு பெண்ணிடமும் அவ்வளவு ஏன் அவளிடம் கூட அக்கறையாக நடந்துக்கொண்டதில்லை.
அவனது தாயின் மீதும் தங்கையின் மீதும் மலையளவு பாசத்தை நெஞ்சிற்குள் சுமந்திருந்தாலும் அதனை ஒரு நாளும் அலெக்ஸ் முகத்திற்கு நேரே வெளிக்காட்டியதில்லை என்றாலும்,தன் செயல்பாடுகளின் வழியாக அன்பை தங்கையிடம் பகிர்ந்துக்கொண்டிருந்ததை இருபத்தி இரண்டு பாவையால் உணர்ந்துக்கொள்ள இயலவில்லை.
அவனை போலவே நாட்டில் பல ஆண்கள் தங்கள் வீட்டு மகளிரின் மீது கொள்ளை கொள்ளையாய் பாசத்தையும் அன்பையும் நெஞ்சம் நிறைய வைத்திருந்தாலும் அதை அவ்வளவு எளிதாக வெளியிட விரும்பமாட்டார்கள்.
அப்படியே அவர்களின் அன்பும் அக்கறையும் வெளிப்படுமாகின் அது அதட்டலாகவோ கோபமாகவோ மட்டுமே புறத்தே காட்டுவார்கள்.
அதுப்போலான ஆண்களின் வகையை சேர்ந்த அலெக்ஸ் சர்வத்மிகாவின் மீது வெளிப்படையாக காட்டும் அக்கறை டெய்ஸியின் மனதினுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி பொறாமையை தூண்டிவிட்டிருந்தது.
அதனால் புதுப்பிக்க வேண்டிய உறவுகளுக்கிடையே விரிசல் தோன்ற தன்னையறியாமலே காரணமாகியிருந்தான் வேந்தனவன்.
வந்தவர்கள் இருவருக்கும் தான் அங்கிருப்பதில் பிடித்தமில்லை என்பது பதுமையவள் தெளிவாக உணர்ந்திருந்தாலும்,ஏனோ தன்னுடைய எதிர்க்கால வாழ்வே அங்கு தான் இருப்பது போல் உள்மனம் அச்சரம் பிசகாமல் கூறியதை அவள் எவ்வாறு மறுக்க?
அத்தோடு யாருமில்லை என்று கவலையில் உழன்று நேரத்தில் அதிரடியாய் தன் வாழ்வில் நுழைந்து அன்பு செலுத்தும் அந்த ஒற்றை ஜீவனை இழக்க விரும்பவில்லை பாவையவள்.
அது சற்றே சுயநலம் என்று தெரிந்தும் வலுக்கட்டாயமாக அவர்களது பார்வையில் தெரிந்த உதாசீனத்தையும்,அதனால் விளைந்த அவமானத்தையும் தாங்கிக்கொண்டு இல்லத்தினுள்ளே தங்கிக்கொண்டது அந்த குழந்தை உள்ளம் கொண்ட குமரி.
அவனது தாயின் கண்களில் கூட தன் மகனின் தலையில் சுமையாய் வந்துவிட்டாள் என்ற எரிச்சல் மண்டியிருந்தது என்றால்,அவன் தங்கையின் கண்ணில் சினம் மட்டுமே தாண்டவமாடியது.
பெண்ணவளது கடுகடுத்த முகத்திற்கு காரணம்,அவனது தங்கை டெய்ஸியின் அறையில் தான்,தற்போது சர்வத்மிகா தங்கியிருப்பதாக பொன்னம்மாவின் வாய்மொழியாக கேட்டு தெரிந்துக்கொண்டவளிற்கு அவள் தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் இருப்பதற்கான செயற்காரணத்தை அறிந்துக்கொள்ள முடிந்தது.
அதற்காகவே சர்வத்மிகா இரண்டு முறை அவளிடம் மன்னிப்பு வேண்டிட எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிய அந்த சிறுப்பெண்ணின் மனம் சோர்ந்துப்போனது.
இதற்கெல்லாம் மேலாக,அலெக்ஸ் அன்று உதிர்த்த கடுமையான வார்த்தைகளுக்கு பிறகு அவளிடம் சரியாக முகம் கொடுத்து பேசாதது தான் அவளை அதிகம் பாதித்தது.
அவன் மனதில் எந்த கல்மிஷமும் இல்லை என்றாலும்,நாளுக்கு நாள் அவளின் பார்வையில் தெரிந்த இனம் புரியாத உணர்வை தன் கூரிய விழிகள் கொண்டு அறிந்தவன் 'இது சரியில்லை' என்று தீர்க்கதரிசியாய் அன்றே அவளின் ஆழ் மனதின் நேசத்தை கணித்து விலகிவிட்டான்.
இந்நிலையில் இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வருபவனை நேரடியாக எதிர்க்கொள்வதற்காக உறங்க செல்லாமல் சர்வத்மிகா வரவேற்பறையிலே காத்திருக்க தொடங்கினாள்.
இன்று எப்பாடுபட்டாவது தெளிவாக அவனிடம் தன் மனதிலிருப்பதை பேசிவிட வேண்டும் என அவனிற்காக வரவேற்பறையில் காத்திருக்க தொடங்கினாள்.
ஆனால் இன்று இரவு முழுவதும் காத்திருந்தாலும் அவன் வீட்டிற்கு வரப்போவதில்லை என்று பாவம் பேதையவள் அறியவில்லை.
ஏனெனில்,தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு முக்கிய வழக்கை விசாரணை செய்து குற்றம் புரிந்த குற்றவாளியை கண்டிப்பிடிப்பதற்கு ஏதுவாக காவலர்கள் தலைமையில் சிறப்பு குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டிருந்தது.
அந்த குழுவின் தலைவனாக குற்றவியல் பிரிவை சார்ந்த ஆர்யன் என்பவனின் கீழ் அந்த குழு அமைக்கப்பட்டிருக்க,அதில் ஆர்யனிற்கு அடுத்ததாக பொறுப்பில் இருந்தான் அலெக்ஸ் பாண்டியன்.
ஆர்யனிற்கு இந்த வழக்கு விசாரணையின் போது நிகழ்ந்த எதிர்ப்பாராத தாக்குதலினால் காலில் பலமான அடிப்பட்டிருந்தது.அதன்பலனாய் தலைமை பொறுப்பு முழுவதும் இவன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்க குற்றவாளியை கண்டுப்பிடிக்கும் பணியில் இரவு பகல் பாராது வீட்டிற்கு கூட வராமல் அயராமல் உழைத்துக்கொண்டிருந்தான்.
அதற்கு காரணம்,நாட்டில் மர்மமான முறையில் பொது மக்கள் சிலர் தங்கள் சுய உணர்வை இழந்தாற் போல் நடந்து சென்று மற்றவர் பார்க்கையில் ஒரு உயரமான மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து வரிசையாக தற்கொலை செய்துக்கொண்டு இறந்திருந்தனர்.
இதுவரை ஐந்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துக்கொண்டு விசித்திரமான முறையில் இறந்துப்போனவர்களை பற்றி விசாரித்ததில் ஒரு முக்கிய தடயம் ஒன்று கிடைத்திருந்தது.
உயிரற்ற பிணங்களாக பாலத்திற்கு அடியில் கிடைத்த சடலங்களை பற்றி உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டதில்,அவர்கள் அனைவரும் பெண்கள் கற்பழிப்பு வழக்கில் தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் என்பதை அறிந்துக்கொண்ட அலெக்ஸ், அவர்கள் இதுவரை வாதாடிய வழக்குகளை பற்றி தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.
ஒரு வழியாய் சரியான பாதையில் துப்புத்துலக்கிய அலெக்ஸ் குற்றவாளியை நெருங்கிய வேளையில் முற்றிலும் எதிர்ப்பாராத வகையில் ஒரு மர்ம கும்பல் தன்னை நோக்கி நடத்திய துப்பாக்கி சூட்டில் காயத்தை தனக்கு பதிலாக ஆர்யன் வாங்கிக்கொண்டதில் அலெக்ஸிற்கு அவனின் மீது ஒரு பரிதாபமும் மரியாதையும் ஒருங்கே தோன்றியிருந்தது.
அதற்காகவே யாவரின் உதவியின்றி தனிமையில் வாடி தவிப்பவனிற்கு ஆறுதலளிக்கும் விதமாக இரவு அவனுடனே தங்கிக்கொள்ள போவதாக தாயிடம் முன்னரே தகவல் தெரிவித்திருந்தான்.
அதையறியாத சின்னஞ்சிறு பாவையோ தன்னை வழிநடத்தி செல்லும் மீகாமனை எதிர்நோக்கி வாசலிலே பார்வையை பதித்து கண்கள் பூக்க தவமிருந்தாள்.
பொன்னம்மாவிடமும் இதைப்பற்றி விசாலினி தெரிவிக்காததால் அவருக்கும் அவன் இரவு வீட்டிற்கு வரப்போவதில்லை என்ற விடயம் அறியாமையால் அவர் எவ்வளவோ வற்புறுத்தி 'தூங்க' வருமாறு அழைத்தும் அவள் பிடிவாதமாக வரமறுத்து வரவேற்பறையிலே பலியாய் கிடந்தாள்.
அவன் வருகையை எதிர்நோக்கியப்படியே பொன்னம்மா கீழே சுவற்றில் சாய்ந்து உறங்கியிருக்க,சர்வத்மிகாவோ சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலே உணவு மேசையின் மீது தலை சாய்த்து தன்னை மீறி உறங்கியிருந்தாள்.
எப்பொழுதும் போல் காலை எழு மணிக்கு கண்விழித்த டெய்ஸி அறையை விட்டு வெளியே வருகையில் கண்ணை கசக்கி "பொன்னம்மா காபி" என கொட்டாவி விட்டப்படியே வர,
அவளின் குரல் ஒலித்ததற்கு பிறகே அடித்து பிடித்து அவசரமாக எழுந்துக்கொண்ட பொன்னம்மாவோ புடவை தலைப்பில் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு "இதோ போட்டு வரேன் பாப்பா" என பதட்டத்துடன் கூறியப்படி சமையலறைக்குள் நுழைந்தார்.
எப்பொழுதும் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து சமையல் வேலைகளை ஆரம்பிப்பவர்,இன்று வெகு நேரம் உறங்கிய குற்றவுணர்விலும் விசாலினிக்கு தெரிந்தால் தன்னை ஒரு வழி செய்துவிடுவார் என்ற அச்சத்திலும் படபடப்புடனே சமையலறையில் தன் பணியை தொடங்கினார்.
அதற்குள் கண்ணை கசக்கிக்கொண்டே வரவேற்பறைக்குள் நுழைந்திருந்த டெய்ஸி உணவு மேசையின் முன்பு போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து இரு கரங்களையும் மேசையின் மீது ஊன்றி தலையை கரங்களால் தாங்கி உறக்கத்தை தொடர்ந்தாள்.
சர்வத்மிகாவோ இரவு வெகு நேரம் கழித்து உறங்கியதால் டெய்ஸியின் சத்தத்தில் கூட உறக்கம் களையாமல் இப்போதும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
அதற்குள் பாலை நன்கு காய்ச்சி கொட்டை வடிநீர் தயாரித்து எடுத்து வந்தவர்,டெய்ஸியும் சர்வத்மிகாவும் அருகருகே உள்ள இருக்கையில் அமர்ந்த வாக்கிலே உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் விழி விரித்தார் பொன்னம்மா.
ஏனெனில் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட டெய்ஸியும் அவளது தாய் விசாலினியும் அலெக்ஸிடம் சர்வத்மிகாவை வேறு எங்கேயாவது விடுதியில் அல்லது இல்லத்தில் சேர்த்து விடும்படி சண்டையிட்டு விவாதம் நடத்திக்கொண்டிருந்ததை இவரும் கேட்டு சர்வத்மிகாவின் நிலையை எண்ணி மனம் நொந்துப்போனார்.
அத்தோடு அவள் பக்கத்தில் வந்தால் கூட தீட்டு என்பது போல் அவளை தீண்டத்தகாதவளாக பாவித்து அவள் வரவேற்பறைக்கு வந்தால் தாயும் மகளும் உடனடியாக முகத்தை திருப்பிக்கொண்டு தங்களது அறைக்குள் நுழைந்து கொள்வதை அறிந்த சர்வத்மிகாவிற்கு உள்ளுக்குள் ரணமாய் வலித்தாலும் வேறுவழியின்றி வரவேற்பறைக்கு வராமல் அறையினுள்ளே அடைந்து கிடந்தாள்.
நெஞ்சமெல்லாம் ஊசியால் குத்தும் உணர்வு!
நேற்று தான் அலெக்ஸிடம் பேசுவதற்காக வெளியே வந்திருந்தவளிற்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
ஆனால் இப்போது டெய்ஸி அவளாக சர்வத்மிகாவின் அருகில் அமர்ந்திருப்பதை எண்ணி வியந்தப்படியே அவளை நெருங்கினார்.
"பாப்பா இந்தா காப்பி" என்றவுடன் "ஹூம்" என்று சிணுங்கி கண்ணை கசக்கியப்படி விழி திறந்தவள் தன் முன்னே ஆவி பறக்க இருந்த கொட்டை வடிநீர் குவளையை ஆசையோடு விழி விரிய பார்த்து "தேங்க்ஸ் பொன்னம்மா" என வடிநீரை ரசித்து உறிஞ்சி குடிக்க தொடங்கினாள்.
பொன்னம்மாவோ மனதிற்குள் 'பரவாயில்லை பாப்பா மனசு மாறி இந்த பாப்பாவை ஏத்துக்கிச்சு போல்' என அகமகிழ்ந்துப்போனவர்,அதற்கான ஆயுள்குறைவு என்பதை அச்சமயம் அறியவில்லை.
ஏனெனில் சிறிது சிறிதாக வடிநீரை மிடறு விழுங்கிக்கொண்டே "பொன்னம்மா உன்னை மாதிரி காப்பி போட இந்த உலகத்தில் யாருமே இல்லை...செம்ம சூப்பர்" என புன்னகையுடன் சிலாகித்துக்கொண்டே பார்வையை சுழற்றியவளின் விழி வட்டத்தில் அப்போது தான் தன் அருகே வலதுப்புற இருக்கையில் அமர்ந்திருந்த சர்வத்மிகாவின் உருவம் தெரிந்தது.
அவளை பார்த்தவுடன் டெய்ஸியின் முகம் மாறி அஷ்டக்கோணலாகியது.
உடனடியாக குவளையை கீழே வைத்தவள் 'இவளா?' என பல்லை நறநறவென கடித்தவளின் முகம் ஜிவுஜிவுவென்று சிவந்துப்போனது.
இதழை அருவருப்புடன் சுழித்து படீரென்று இருக்கையை பலத்த சப்தத்துடன் தள்ளிக்கொண்டு எழுந்து நின்றவள் பொன்னம்மாவை தன்னுடைய கனல் விழிகளால் முறைத்து "பொன்னம்மா உனக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லையா?முன்னாடியே சொல்லி தொலைச்சிருந்தா கண்ட கழுதையெல்லாம் பார்க்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது...எல்லாம் உன்னால் தான்" என விரல் நீட்டி படபடவென புரிந்து தள்ளியவள் "உன்னை இரு அம்மாகிட்டயே சொல்லி கொடுக்கறேன்...அம்மாஆஆஆஆ" என வீடே கிடுகிடுக்கும் படி கத்தினாள்.
அவளது கீச்குரலில் அலறியடித்து உறக்கம் களைந்து எழுந்து நேராக அமர்ந்த சர்வத்மிகாவோ தன் முன்னே காளி அவதாரம் எடுத்து நின்றிருந்தவளை கண்டு ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழிக்கத்தொடங்கினாள்.
அதை கண்டு மேலும் முகத்தை வெறுப்புடன் சுழித்த டெய்ஸியோ "அம்மாஆஆஆ" என்று உரக்க கத்தி குரல் கொடுக்க,
அதில் பதறிப்போன பொன்னம்மா "பாப்பா அம்மாவை கூப்பிடாதேம்மா...அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப சத்தம் போடுவாங்க...நான் வேணா இந்த பாப்பாவை ரூமுக்கு கூட்டிட்டு போயிடறேன்...இனிமேல் நீங்க இருக்கும் போது வெளிய வராதமாதிரி பார்த்துக்கிறேன்" என கெஞ்சலாக மன்றாடியதற்கு பிறகே டெய்ஸி சிறிது இறங்கி வந்தாள் என்றால்,சர்வத்மிகாவிற்கோ அதன்பிறகே நடந்த நிகழ்வுகளின் காரணம் புரிப்பட இதயம் தன் துடிப்பை நிறுத்துவது போல் சுருங்கிப்போனது.
அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அச்சிறு பெண்ணின் இதயத்திற்குள் பெரும் பூகம்பத்தை விளைவித்தது.
மகள் அமைதி அடைவதற்குள் "ஏய் காலங்காரத்தாலே எதுக்குடீ எட்டு ஊருக்கு கேட்கமாதிரி கத்தறே?இந்த வீட்டில் நிம்மதியா தூங்க முடியாதா?" என வசைப்பாடி கொண்டே வரவேற்பறைக்கு வந்தவர்,
உணவு மேசையின் அருகே நின்றிருந்த மகளை கண்டு "என்னடி உனக்கு பிரச்சனை?எதுக்கு கத்தி கூப்பாடுப்போட்டே?" என்று மகளை அதட்ட,
அவளோ தன்னிடம் கண்களில் இறைஞ்சிய பொன்னம்மாவையும் தன்னுடைய வார்த்தைகளால் விழிகளில் உயிரற்று எங்கோ வெறித்த சர்வத்மிகாவின் பார்வையும் அவளின் நெஞ்சை பிசைந்திட தாயிடம் "ஒண்ணுமில்லைம்மா...அண்ணனை இன்னும் காணும்?அதுக்கு தான் உன்னை கூப்பிட்டேன்" என சமாளித்து வைத்தாள்.
மகளை இடுப்பில் கை வைத்து முறைத்து "அதுக்கு அவனிற்கு போன் பண்ணி கேட்க வேண்டியது தானேடி...என் தூக்கத்தை கெடுத்து எதுக்கு தொந்தரவு செய்யறே?" என்று திட்டிக்கொண்டே வரவேற்பறைக்கு வரமுனைந்தவரை கண்டு பொன்னம்மாவிற்கு திக்கென்றது.
அவளிற்குள்ளும் ஒரு பூ மனம் எங்கோ மறைந்திருக்க வேண்டும் என்பது போல்,
சடுதியில் தனது தாயின் வார்த்தைகளின் வீரியம் உணர்ந்த டெய்ஸி உடனடியாக முன்வந்து அவரின் தோளில் கைவைத்து அறைக்குள்ளே தள்ளிக்கொண்டே "அம்மா அண்ணாவுக்கு போன் பண்ண சொல்லிட்டு வெளிய வந்தால் என்ன அர்த்தம்?போன் ரூமுக்குள்ள இருக்கு...வா நாம் அண்ணாகிட்ட பேசலாம்" என்று பகுமானமாக கூறி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.
அதனை கண்டு நன்றிப்பெருக்குடன் இருகரம் குவித்தவரை பார்த்து மறுப்பாக தலையசைத்த டெய்ஸி கதவை சாற்றிக்கொண்டாள்.
அதன்பிறகு பொன்னம்மா சர்வத்மிகாவிடம் ஓடோடி வந்தவர் "பாப்பா வா...நாம் ரூமுக்கு போகலாம்" என விரைந்து செயல்பட்டு சக்கர நாற்காலியை அறைக்கு தள்ளிச்சென்றார்.
டெய்ஸி இயற்கையில் நல்லகுணமுடையவள் என்றாலும் சர்வத்மிகாவின் மீது பிடித்தமின்மை உருவாகியதற்கு காரணம் அவளது சகோதரன் அலெக்ஸ் இதுநாள் வரை எந்தவொரு பெண்ணிடமும் அவ்வளவு ஏன் அவளிடம் கூட அக்கறையாக நடந்துக்கொண்டதில்லை.
அவனது தாயின் மீதும் தங்கையின் மீதும் மலையளவு பாசத்தை நெஞ்சிற்குள் சுமந்திருந்தாலும் அதனை ஒரு நாளும் அலெக்ஸ் முகத்திற்கு நேரே வெளிக்காட்டியதில்லை என்றாலும்,தன் செயல்பாடுகளின் வழியாக அன்பை தங்கையிடம் பகிர்ந்துக்கொண்டிருந்ததை இருபத்தி இரண்டு பாவையால் உணர்ந்துக்கொள்ள இயலவில்லை.
அவனை போலவே நாட்டில் பல ஆண்கள் தங்கள் வீட்டு மகளிரின் மீது கொள்ளை கொள்ளையாய் பாசத்தையும் அன்பையும் நெஞ்சம் நிறைய வைத்திருந்தாலும் அதை அவ்வளவு எளிதாக வெளியிட விரும்பமாட்டார்கள்.
அப்படியே அவர்களின் அன்பும் அக்கறையும் வெளிப்படுமாகின் அது அதட்டலாகவோ கோபமாகவோ மட்டுமே புறத்தே காட்டுவார்கள்.
அதுப்போலான ஆண்களின் வகையை சேர்ந்த அலெக்ஸ் சர்வத்மிகாவின் மீது வெளிப்படையாக காட்டும் அக்கறை டெய்ஸியின் மனதினுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி பொறாமையை தூண்டிவிட்டிருந்தது.
அதனால் புதுப்பிக்க வேண்டிய உறவுகளுக்கிடையே விரிசல் தோன்ற தன்னையறியாமலே காரணமாகியிருந்தான் வேந்தனவன்.