Brammastram Writers
Moderator
சிறை : 14
இசக்கியால் ஜீரணிக்கவே முடியாமல் போனது. இத்தனை பார்க்கும் பொழுதே தன்னை ஒருத்தி அதுவும் செருப்பால் அறைந்து விட்டால் என்பதை நினைக்கும் பொழுதே அவமானத்தை தாண்டி அவளை கொன்று போடும் வேகம் அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது.
எதிரில் இருப்பவளை கொன்று போட விடுமா?? அவன் காதல்... அவளுக்கு ஒன்றென்றால் அவனுக்கும் உயிர் போகும் வலியல்லவா வலிக்கும்.
இப்படி ஒரு சூழ்நிலையில் அவன் நிற்பான் என கனவில் கூட நினைத்தது இல்லை... வலியுடன் அவளை பார்க்க... தாச்சாயினிக்கு சற்று பயம் தான்.
"அவசரப்பட்டு விட்டோமோ?" என நினைத்த மனதுக்கு பிடிவாதமாக இவன் செய்த கெட்டதை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவள்,
"இசக்" என்பதற்குள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைய... அவன் அறைந்த வேகத்தில் தொப்பென கீழே போய் விழுந்தாள்.
அத்தோடு விட்டானா அவன்?... கீழே விழுந்தவளின் முடியை கொத்தாக பிடித்து தூக்கியவன்... "உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா? என்னையே செருப்பால அடிச்சிருப்ப?" என உறுமியவனின் காதல் உள்ளம் தவித்தாலும்...
அவன் வகிக்கும் பதவியும், ஊரில் அவனுக்கு இருக்கும் மரியாதையும் கெடுத்துக் கொள்ள அவன் எப்பொழுதும் விரும்பவில்லை.
"ப்ப்ச்ச்.. வலிக்குது இசக்கி" என வலியுடன் சொல்லி முடிப்பதற்குள் கைகளை சற்று தளர்த்தியிருந்தான்.
அப்பொழுது தான் செல்வி மயக்கத்தில் இருந்து எழுந்தாள்... இசக்கியின் கையில் சிக்கி தவிக்கும் பெண்ணை காப்பாற்றும் பொருட்டு... நேராக இசக்கியின் முன்பாக சென்று நின்றவர்...
"எம் பொண்ணை விடுடா" என அவன் இத்தனை நாள் கட்டி காப்பாத்திய மரியாதையை காற்றில் ஏற்றி விட... தீயென தகித்தவனின் உள்ளம் கண்களை ஜுவாலை கொண்டு செல்வியை முறைக்க...
அவன் பார்வைக்கே உள்ளுக்குள் குளிர் ஜுரம் எடுத்தது. அவன் அடி பணிவது அனைத்துமே தாச்சாயினியிடம் மட்டுமே... அவளை தவிர வேறு யாருக்கும் அவன் அடிபணியவும் மாட்டான். அடிபணிய விரும்பவும் மாட்டான்.
"என்ன சவுண்டு ஓவரா வருது?"
"ஆமா அப்படித்தான்டா பேசுவேன்... என் பொண்ணை விடு... இல்லை போலீஸ் மீடியான்னு எங்கே வேணும்னாலும் போவேன்.. உன்னை பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லுவேன்" என மிரட்டியவருக்கு எதிராக இடியென சிரிப்பு தோன்றிட...
நிமிர்ந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சி இசக்கி தான் சிரித்து கொண்டிருந்தான்... "என்ன சொன்ன?? போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பீயா?"... ஓஹ்ஹ்.. தாராளமா கொடு...
"யாரு நம்பர் வேணும் உனக்கு? பிரெஸ்ஸோட நம்பர் வேணுமா".. என நக்கலுடன் கேட்டவனை எரிக்கும் பார்வை பார்த்தார்...
"இசக்கி என் பொண்ணை விடு... அவளை நல்ல பையனுக்கு கட்டி வைக்கணும்.. உன்னை மாதிரி ஊர் பொறுக்கிக்கு இல்லை" என வார்த்தைகளை விட...
இசக்கியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை... ஆனால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அத்தனை ஜனங்களுக்கும் ஏகப்பட்ட வியப்பு, செல்வியின் பேச்சு, தாச்சாயினியின் நடவடிக்கை என ஒன்று மாற்றி ஒன்றை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்..
இசக்கியை தடுக்கவோ, சூழ்நிலையை விலக்கவோ யாருமே முயற்சி செய்யவே இல்லை...
அழுத்தமாக இரண்டு நிமிடங்கள் நின்றிருந்தவன்... யாருமே எதிர்பார்க்காத வண்ணம் தாச்சாயினியை தூக்கி தோளில் துண்டினை எடுத்து போடுவது போல் போட்டவன்...
"இனி இந்த ஊர்பொறுக்கி தான் உன் பொண்ணோட புருஷன்... எழுதி வச்சிக்கோ" என கணீர் குரலில் கர்ஜித்தவன்... தான் கொண்டு வந்த காரில் தாச்சாயினியை தூக்கி போட...
இறங்க முயற்சி செய்தவளின் பலன் பூஜ்ஜியமே... அனைத்து டோர்களையும் லாக் பண்ணியிருந்தான்...
"இசக்கி எங்கே கூப்பிட்டு போற??" விடு என்னை" என அரற்றியவளின் குரல் அவன் காதில் விழுந்தாள் தானே...
"தாச்சா... தாச்சா... அக்கா... அக்கா" என செல்வி, பரிதி இருவரின் குரல் கேட்காத வண்ணம்... புழுதியை கிளப்பிய படி கார் பறந்து சென்றது...
வசந்தி வெற்றி புன்னகையுடன் பார்க்க... செல்வியோ அனாதரவான நிலையில் நின்றிருந்தார்...
தன் பெண்ணின் வாழ்க்கை மொத்தமாக முடிந்தே விட்டதே... பத்தோடு பதினொன்றாக தன் பெண்ணும் இனி வாழ போகிறாளே என நினைத்தவருக்கு உள்ளம் பதைபதைத்துப் போக..
கார் போன திசையில் பின்னாடியே ஓடினார்...
எப்படியும் அவன் வீட்டிற்கு தான் அழைத்து செல்வான் என நினைத்தவர்... அவன் வீட்டுக்கு செல்ல... ஆனால் கில்லாடி கீரைவடை அவனோ, தாச்சாயினி வீட்டில் தான் காரை விட்டிருந்தான்...
ஊரெல்லாம் வலைவீசி தேடியவர்... அவர் வீட்டில் தேட மறந்தது விதியின் சதியே... நேராக தாச்சாயினியின் வீட்டிற்குளளே நுழைய… இரண்டு படுக்கையறை கொண்ட வீடல்லவா அது... சுத்தமாக இருந்தது...
அப்பொழுதும் அவளை மிரட்டி விட்டு விடலாம் என எண்ணியவன்... அவளை வீட்டினுள் விட்டு கதவினை லாக் பண்ணிட... இசக்கியுடன் தனிமையில் அதுவும் அவன் கோபத்தில் இருக்கும் பொழுது ஒருவித பயம் தாச்சாயினிக்கு உண்டாக்கிட...
"எங்க வீட்டை விட்டு வெளியே போ... முதல்ல என்ன நடந்தது என்று புரிஞ்சிக்கோ?"
"என்ன நடந்திச்சி?" என அழுத்தமாக சற்று நிதானமாக கேட்ட இசக்கியின் ஊடுருவும் பார்வையில்... அவள் சென்றது... தன் தாயை வசந்தி அறைந்தது... தன் ஆடையை கிழித்தது... அந்த கோபத்தில் தான் அறைந்தது... நீ வந்ததும் என்ன நடந்தது என அறியாமல் நீ என்னை அடித்தது...
அந்த கோபத்தில் நான் உன்னை அடித்தது... என அனைத்தையும் சொல்லி முடிப்பதற்குள் இசக்கி மின் முகமோ செவ்வானமாய் கோபத்தில் சிவந்து நின்றது...
வசந்தியை நினைக்க நினைக்க ஆத்திரம் தாளவில்லை அவனுக்கு... பலபேர் இருக்கும் இடத்தில் தாச்சாயினியின் ஆடையை பிடித்து இழுத்தவள் மீது கோபம் பல்மடங்கு பெருகியது...
அவனின் முகத்தை பார்த்த தாச்சாயினி தன் மேல் தான் கோபமாக இருக்கிறான் என தப்பாக அர்த்தம் புரிந்தவளுக்கு...
தவறு பண்ணிய இவனுக்கு இவ்வளவு கோபம் வருகிறதா?" என நினைத்தவளுக்கு எரிச்சல் மேலோங்கிட... அவனை முதலில் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மட்டுமே உள்ளம் துடித்தது...
"நடந்தது நடந்திருச்சி... நீ வீட்டை விட்டு வெளியே போ?" என்றவளை பார்த்து இதழ் பிரித்து சிரித்தவன்... அவளின் அருகில் வர வர.. உள்ளுக்குள் குளிர் ஜுரமே வந்தது தாச்சாயினிக்கு...
அவனோ அவளின் முதுகின் பின்னால் வர.. அதுவரை பரிதியின் சட்டையை பிடித்து வைத்திருந்தவளுக்கு... காரினுள் இவன் தூக்கிப் போட்ட வேகத்தில் சட்டை எங்கேயோ தவறி விழுந்து விட... இப்பொழுது ஆடை கிழிந்தது அப்பட்டமாக அவளின் புறமுதுகை காட்டியது...
அவளின் முதுகின் பின்னால் வந்து நின்றவனின் மேல் கோபம் தோன்றிட... "ப்ளீஸ்.. தள்ளிப் போ" என்பதற்குள்... தாச்சாயினியை தன் புறம் திருப்பியவன்...
இதழோடு இதழ் பொருத்தியிருந்தான்... சற்று அழுத்தமாக வேகத்துடன் அவளை நாடிட... அவளோ முதல் முத்தத்தில் ஸதம்பித்து நின்றவளின் கரங்கள்...
அவனை விட்டு விலகிட முயற்சி செய்தவளின் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்...
அவனை விட்டு பிரிய முயற்சி செய்தவளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய... சில நிமிடங்களுக்கு பிறகு அவளை விட்டவன்...
தன் கழுத்தில் எப்பொழுதும் உறவாடிக் கொண்டிருக்கும் தாலி போன்ற முறுக்கு செயினை வெளியே எடுக்க... அதனுடன் தாலியும் கோர்க்கப்பட்டிருந்தது...
அதை பார்த்து விழி விரித்தவளை பார்த்து புன்னகைத்தவன்... "என்ன பார்க்கிற?... இது எங்க அம்மா தாலி.. எப்போ நான் உன்னை கட்டிக்கிறீயான்னு? கேட்டேனோ அப்பவே இந்த தாலி என் கிட்ட வந்திருச்சி... இப்போ இது உன் கழுத்துக்கு வரப்போகுது"
எவ்வளவு கெட்டது நடந்தாலும் அவனுக்கு என்ன நல்லது என ஆராயும் அவன் புத்தி... இவ்வளவு கலவரத்திற்கு பிறகு தாச்சாயினியை விட்டு விட அவன் என்ன முட்டாளா??...
இது தக்க சூழ்நிலை இல்லை என அறிந்தாலும்... தாச்சாவை விட மனமில்லாமல்... தன் மனம் சொல்லும் பேச்சை முதல் முறை கேட்டான்...
தாச்சாயினி தவிப்புடன் பார்க்கும் பொழுதே அவள் கழுத்தில் மாங்கல்யத்தை மாலை போல் சூட்டிட.. அதிர்ந்து போனது பெண் உள்ளம்.
தன் நெஞ்சில் உறவாடிய தாலிச் செயினை பார்த்தவளுக்கு எரிச்சல் தான் தோன்றியதே தவிர, காதல் தோன்றவில்லை...
மறுநிமிடமே அவன் கன்னத்தில் அறைய போன கைகள் அந்தரத்திலே தடுத்து நிப்பாட்டப்பட்டது இசக்கியின் வலுவான கரங்களால்...
"என்னடி.. அடிக்க அடிக்க வாங்கிக்கிட்டே இருப்பேன்னு நினைச்சீயா?" என இதழை சுழிக்க...
அவளோ தீக்கிரையாக்கப்பட்ட புழுவினை போல் துடித்தாள்.. "நீ தாலி கட்டிட்டா உன் கூட நான் வாழுவேனனு நினைச்சீயா?"...
"வாழ்ந்து தான்டி ஆகணும்... இசக்கி ஒரு முடிவு எடுத்தா எடுத்தது தான்... நீ என் கூட வாழ்ந்து தான் ஆகணும்" என்றவளை
இரு கைகளில் ஏந்திட..
அடுத்து நடக்கப் போவதை அறிந்த பெண் உள்ளம் அவளை எச்சரிக்க... அவன் கைகளில் இருந்து இறங்க முயற்சிக்க...
"தாலியே கட்டியாச்சி எங்கே ஓடப்பாக்குற?" அவளை வலுவான கரங்கள் கொண்டு தன் ஆளுமைக்கு கீழ் கொண்டு வர...
கணவனின் முதல் தொடுகை கசந்தது பெண்ணுக்கு...
முதல் உறவு பெண்ணுக்கு வலி தான்... ஆனால் இங்கு பெண்ணவளுக்கு உடல் வலியை தாண்டி உள்ளமும் வலித்தது...
அவனின் முத்தங்களும், அழுத்தமும் இனிக்கவில்லை... வேப்பங்காயை மென்று முழுங்குவது போல் கசங்கி போன காகிதமாய் கசங்கியது அவள் பெண்மை...
அவனின் தொடுகையில் சூரியன் கண்ட பனியாக உறையவில்லை ... அனலில் இட்ட மெழுகாக துடித்தாள்... அவளின் கண்ணீர் என்ற சுரப்பி என்ற ஒன்றே அவள் இன்று தான் கண்டாள்...
தன் வலியை பல் கடித்து பொறுப்பவளை விசித்திரமாக பார்த்தான்... அவன் இதுவரை பழகிய பெண்கள் யாரும் கன்னிப்பெண்கள் இல்லையே... தன் வலிமை கொண்டு அவளை ஆண்டு முடித்தவன்... அவளை விட்டு விலகிட...
"இதுக்கெல்லாம் நீ ரொம்ப வருத்தப்படுவ?"...
"வருத்தப்படும் போது பட்டுக்கலாம்" என்றவன்.. கதவு தட்டும் சத்தத்தில் வேகமாக எழுந்தான்...
*உங்கம்மா வந்துட்டாங்க... நான் என் வீட்டுக்கு போறேன்.. என் கூட வாழ இஷ்டம் இருந்தா.. என்னைத் தேடி நீ வா" என கணீர் குரலில் சொன்னவன்..
அங்கு இருந்த அலமாரியை திறந்து அதில் இருந்து ஒரு நைட்டியை எடுத்தவன்... அவளுக்கு அணிவித்து விட்டே வெளியே சென்றான்...
வேகமாக சென்று கதவை திறக்க... பேரதிர்ச்சியில் உறைந்து நின்றார் செல்வி...
மேலாடையற்ற அவனின் மேனி, கண்களில் கூலிங்கிளாஸ்.. என சகல விகிதமாக வெளியேறியவன்.. காரை எடுத்துக் கொண்டு கிளம்பிட..
தன் மகளின் நிலையை எண்ணி கலக்கமுற்றவர்... அறையினுள் தேட... அங்கு யாருமேயில்லை...
"தாச்சா.. தாச்சா??" என்ற குரலுக்கு
"நான் குளிச்சிட்டு இருக்கேன்" என கரகரத்து ஒலித்த கண்ணீர்க்குரலை அந்த தண்ணீர் மட்டுமே அறியும்..
குளித்து முடித்து அழகுப் பதுமையாக வெளியே வந்த மகளை பார்த்த செல்விக்கு நெஞ்சே அடைத்துப் போனது...
நீண்ட நேரத்திற்கு பின் கண் விழித்தாள் அகன்முகிழி.. தான் இருக்கும் இடம் தெரியாமல் திருதிருவென முழித்தவள்.. மெத்தையில் திரும்பியபடி தன் இறகுகளை தன் அலகால் தடவி கொண்டு பாவமாக உட்கார்ந்திருந்த அழகி தான் கண்களுக்கு பட்டது..
"அழகி" மெல்லிய குரலில் அவள் அழைக்க,
"பொண்ணாடி நீ?" என ஏகபோகமாக திட்ட ஆரம்பிக்க,
"ஏன் அழகி திட்டுற"
"ஏன் திட்டுறேனா? உன் வாழ்க்கையை இங்க அந்தல்சிந்தலாகி போய் கிடக்கு ஏன் கத்துறேன்னு கேட்குற?"
" அந்த வளந்து கெட்டவன் முத்தம் கொடுத்ததுக்கு பஞ்சாயத்து கூட்டியிருக்காங்க பக்கி…" என வருத்தம் மிகுந்த குரலில் சொல்லிட.. திடுக்கிட்டு போய் அமர்ந்தாள் அகன்முகிழி
"பஞ்சாயத்தாஆஆ… அதுவும் அவளுக்கா???.யார் அந்த வளந்து கெட்டவன்?" என யோசித்தவளுக்கு, எதிரில் யாரும் இல்லா வெறுமையான இடம் மட்டுமே காட்சியளித்தது.
கரம்பிடிப்பான் ...
இசக்கியால் ஜீரணிக்கவே முடியாமல் போனது. இத்தனை பார்க்கும் பொழுதே தன்னை ஒருத்தி அதுவும் செருப்பால் அறைந்து விட்டால் என்பதை நினைக்கும் பொழுதே அவமானத்தை தாண்டி அவளை கொன்று போடும் வேகம் அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது.
எதிரில் இருப்பவளை கொன்று போட விடுமா?? அவன் காதல்... அவளுக்கு ஒன்றென்றால் அவனுக்கும் உயிர் போகும் வலியல்லவா வலிக்கும்.
இப்படி ஒரு சூழ்நிலையில் அவன் நிற்பான் என கனவில் கூட நினைத்தது இல்லை... வலியுடன் அவளை பார்க்க... தாச்சாயினிக்கு சற்று பயம் தான்.
"அவசரப்பட்டு விட்டோமோ?" என நினைத்த மனதுக்கு பிடிவாதமாக இவன் செய்த கெட்டதை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவள்,
"இசக்" என்பதற்குள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைய... அவன் அறைந்த வேகத்தில் தொப்பென கீழே போய் விழுந்தாள்.
அத்தோடு விட்டானா அவன்?... கீழே விழுந்தவளின் முடியை கொத்தாக பிடித்து தூக்கியவன்... "உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா? என்னையே செருப்பால அடிச்சிருப்ப?" என உறுமியவனின் காதல் உள்ளம் தவித்தாலும்...
அவன் வகிக்கும் பதவியும், ஊரில் அவனுக்கு இருக்கும் மரியாதையும் கெடுத்துக் கொள்ள அவன் எப்பொழுதும் விரும்பவில்லை.
"ப்ப்ச்ச்.. வலிக்குது இசக்கி" என வலியுடன் சொல்லி முடிப்பதற்குள் கைகளை சற்று தளர்த்தியிருந்தான்.
அப்பொழுது தான் செல்வி மயக்கத்தில் இருந்து எழுந்தாள்... இசக்கியின் கையில் சிக்கி தவிக்கும் பெண்ணை காப்பாற்றும் பொருட்டு... நேராக இசக்கியின் முன்பாக சென்று நின்றவர்...
"எம் பொண்ணை விடுடா" என அவன் இத்தனை நாள் கட்டி காப்பாத்திய மரியாதையை காற்றில் ஏற்றி விட... தீயென தகித்தவனின் உள்ளம் கண்களை ஜுவாலை கொண்டு செல்வியை முறைக்க...
அவன் பார்வைக்கே உள்ளுக்குள் குளிர் ஜுரம் எடுத்தது. அவன் அடி பணிவது அனைத்துமே தாச்சாயினியிடம் மட்டுமே... அவளை தவிர வேறு யாருக்கும் அவன் அடிபணியவும் மாட்டான். அடிபணிய விரும்பவும் மாட்டான்.
"என்ன சவுண்டு ஓவரா வருது?"
"ஆமா அப்படித்தான்டா பேசுவேன்... என் பொண்ணை விடு... இல்லை போலீஸ் மீடியான்னு எங்கே வேணும்னாலும் போவேன்.. உன்னை பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லுவேன்" என மிரட்டியவருக்கு எதிராக இடியென சிரிப்பு தோன்றிட...
நிமிர்ந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சி இசக்கி தான் சிரித்து கொண்டிருந்தான்... "என்ன சொன்ன?? போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பீயா?"... ஓஹ்ஹ்.. தாராளமா கொடு...
"யாரு நம்பர் வேணும் உனக்கு? பிரெஸ்ஸோட நம்பர் வேணுமா".. என நக்கலுடன் கேட்டவனை எரிக்கும் பார்வை பார்த்தார்...
"இசக்கி என் பொண்ணை விடு... அவளை நல்ல பையனுக்கு கட்டி வைக்கணும்.. உன்னை மாதிரி ஊர் பொறுக்கிக்கு இல்லை" என வார்த்தைகளை விட...
இசக்கியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை... ஆனால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அத்தனை ஜனங்களுக்கும் ஏகப்பட்ட வியப்பு, செல்வியின் பேச்சு, தாச்சாயினியின் நடவடிக்கை என ஒன்று மாற்றி ஒன்றை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்..
இசக்கியை தடுக்கவோ, சூழ்நிலையை விலக்கவோ யாருமே முயற்சி செய்யவே இல்லை...
அழுத்தமாக இரண்டு நிமிடங்கள் நின்றிருந்தவன்... யாருமே எதிர்பார்க்காத வண்ணம் தாச்சாயினியை தூக்கி தோளில் துண்டினை எடுத்து போடுவது போல் போட்டவன்...
"இனி இந்த ஊர்பொறுக்கி தான் உன் பொண்ணோட புருஷன்... எழுதி வச்சிக்கோ" என கணீர் குரலில் கர்ஜித்தவன்... தான் கொண்டு வந்த காரில் தாச்சாயினியை தூக்கி போட...
இறங்க முயற்சி செய்தவளின் பலன் பூஜ்ஜியமே... அனைத்து டோர்களையும் லாக் பண்ணியிருந்தான்...
"இசக்கி எங்கே கூப்பிட்டு போற??" விடு என்னை" என அரற்றியவளின் குரல் அவன் காதில் விழுந்தாள் தானே...
"தாச்சா... தாச்சா... அக்கா... அக்கா" என செல்வி, பரிதி இருவரின் குரல் கேட்காத வண்ணம்... புழுதியை கிளப்பிய படி கார் பறந்து சென்றது...
வசந்தி வெற்றி புன்னகையுடன் பார்க்க... செல்வியோ அனாதரவான நிலையில் நின்றிருந்தார்...
தன் பெண்ணின் வாழ்க்கை மொத்தமாக முடிந்தே விட்டதே... பத்தோடு பதினொன்றாக தன் பெண்ணும் இனி வாழ போகிறாளே என நினைத்தவருக்கு உள்ளம் பதைபதைத்துப் போக..
கார் போன திசையில் பின்னாடியே ஓடினார்...
எப்படியும் அவன் வீட்டிற்கு தான் அழைத்து செல்வான் என நினைத்தவர்... அவன் வீட்டுக்கு செல்ல... ஆனால் கில்லாடி கீரைவடை அவனோ, தாச்சாயினி வீட்டில் தான் காரை விட்டிருந்தான்...
ஊரெல்லாம் வலைவீசி தேடியவர்... அவர் வீட்டில் தேட மறந்தது விதியின் சதியே... நேராக தாச்சாயினியின் வீட்டிற்குளளே நுழைய… இரண்டு படுக்கையறை கொண்ட வீடல்லவா அது... சுத்தமாக இருந்தது...
அப்பொழுதும் அவளை மிரட்டி விட்டு விடலாம் என எண்ணியவன்... அவளை வீட்டினுள் விட்டு கதவினை லாக் பண்ணிட... இசக்கியுடன் தனிமையில் அதுவும் அவன் கோபத்தில் இருக்கும் பொழுது ஒருவித பயம் தாச்சாயினிக்கு உண்டாக்கிட...
"எங்க வீட்டை விட்டு வெளியே போ... முதல்ல என்ன நடந்தது என்று புரிஞ்சிக்கோ?"
"என்ன நடந்திச்சி?" என அழுத்தமாக சற்று நிதானமாக கேட்ட இசக்கியின் ஊடுருவும் பார்வையில்... அவள் சென்றது... தன் தாயை வசந்தி அறைந்தது... தன் ஆடையை கிழித்தது... அந்த கோபத்தில் தான் அறைந்தது... நீ வந்ததும் என்ன நடந்தது என அறியாமல் நீ என்னை அடித்தது...
அந்த கோபத்தில் நான் உன்னை அடித்தது... என அனைத்தையும் சொல்லி முடிப்பதற்குள் இசக்கி மின் முகமோ செவ்வானமாய் கோபத்தில் சிவந்து நின்றது...
வசந்தியை நினைக்க நினைக்க ஆத்திரம் தாளவில்லை அவனுக்கு... பலபேர் இருக்கும் இடத்தில் தாச்சாயினியின் ஆடையை பிடித்து இழுத்தவள் மீது கோபம் பல்மடங்கு பெருகியது...
அவனின் முகத்தை பார்த்த தாச்சாயினி தன் மேல் தான் கோபமாக இருக்கிறான் என தப்பாக அர்த்தம் புரிந்தவளுக்கு...
தவறு பண்ணிய இவனுக்கு இவ்வளவு கோபம் வருகிறதா?" என நினைத்தவளுக்கு எரிச்சல் மேலோங்கிட... அவனை முதலில் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மட்டுமே உள்ளம் துடித்தது...
"நடந்தது நடந்திருச்சி... நீ வீட்டை விட்டு வெளியே போ?" என்றவளை பார்த்து இதழ் பிரித்து சிரித்தவன்... அவளின் அருகில் வர வர.. உள்ளுக்குள் குளிர் ஜுரமே வந்தது தாச்சாயினிக்கு...
அவனோ அவளின் முதுகின் பின்னால் வர.. அதுவரை பரிதியின் சட்டையை பிடித்து வைத்திருந்தவளுக்கு... காரினுள் இவன் தூக்கிப் போட்ட வேகத்தில் சட்டை எங்கேயோ தவறி விழுந்து விட... இப்பொழுது ஆடை கிழிந்தது அப்பட்டமாக அவளின் புறமுதுகை காட்டியது...
அவளின் முதுகின் பின்னால் வந்து நின்றவனின் மேல் கோபம் தோன்றிட... "ப்ளீஸ்.. தள்ளிப் போ" என்பதற்குள்... தாச்சாயினியை தன் புறம் திருப்பியவன்...
இதழோடு இதழ் பொருத்தியிருந்தான்... சற்று அழுத்தமாக வேகத்துடன் அவளை நாடிட... அவளோ முதல் முத்தத்தில் ஸதம்பித்து நின்றவளின் கரங்கள்...
அவனை விட்டு விலகிட முயற்சி செய்தவளின் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்...
அவனை விட்டு பிரிய முயற்சி செய்தவளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய... சில நிமிடங்களுக்கு பிறகு அவளை விட்டவன்...
தன் கழுத்தில் எப்பொழுதும் உறவாடிக் கொண்டிருக்கும் தாலி போன்ற முறுக்கு செயினை வெளியே எடுக்க... அதனுடன் தாலியும் கோர்க்கப்பட்டிருந்தது...
அதை பார்த்து விழி விரித்தவளை பார்த்து புன்னகைத்தவன்... "என்ன பார்க்கிற?... இது எங்க அம்மா தாலி.. எப்போ நான் உன்னை கட்டிக்கிறீயான்னு? கேட்டேனோ அப்பவே இந்த தாலி என் கிட்ட வந்திருச்சி... இப்போ இது உன் கழுத்துக்கு வரப்போகுது"
எவ்வளவு கெட்டது நடந்தாலும் அவனுக்கு என்ன நல்லது என ஆராயும் அவன் புத்தி... இவ்வளவு கலவரத்திற்கு பிறகு தாச்சாயினியை விட்டு விட அவன் என்ன முட்டாளா??...
இது தக்க சூழ்நிலை இல்லை என அறிந்தாலும்... தாச்சாவை விட மனமில்லாமல்... தன் மனம் சொல்லும் பேச்சை முதல் முறை கேட்டான்...
தாச்சாயினி தவிப்புடன் பார்க்கும் பொழுதே அவள் கழுத்தில் மாங்கல்யத்தை மாலை போல் சூட்டிட.. அதிர்ந்து போனது பெண் உள்ளம்.
தன் நெஞ்சில் உறவாடிய தாலிச் செயினை பார்த்தவளுக்கு எரிச்சல் தான் தோன்றியதே தவிர, காதல் தோன்றவில்லை...
மறுநிமிடமே அவன் கன்னத்தில் அறைய போன கைகள் அந்தரத்திலே தடுத்து நிப்பாட்டப்பட்டது இசக்கியின் வலுவான கரங்களால்...
"என்னடி.. அடிக்க அடிக்க வாங்கிக்கிட்டே இருப்பேன்னு நினைச்சீயா?" என இதழை சுழிக்க...
அவளோ தீக்கிரையாக்கப்பட்ட புழுவினை போல் துடித்தாள்.. "நீ தாலி கட்டிட்டா உன் கூட நான் வாழுவேனனு நினைச்சீயா?"...
"வாழ்ந்து தான்டி ஆகணும்... இசக்கி ஒரு முடிவு எடுத்தா எடுத்தது தான்... நீ என் கூட வாழ்ந்து தான் ஆகணும்" என்றவளை
இரு கைகளில் ஏந்திட..
அடுத்து நடக்கப் போவதை அறிந்த பெண் உள்ளம் அவளை எச்சரிக்க... அவன் கைகளில் இருந்து இறங்க முயற்சிக்க...
"தாலியே கட்டியாச்சி எங்கே ஓடப்பாக்குற?" அவளை வலுவான கரங்கள் கொண்டு தன் ஆளுமைக்கு கீழ் கொண்டு வர...
கணவனின் முதல் தொடுகை கசந்தது பெண்ணுக்கு...
முதல் உறவு பெண்ணுக்கு வலி தான்... ஆனால் இங்கு பெண்ணவளுக்கு உடல் வலியை தாண்டி உள்ளமும் வலித்தது...
அவனின் முத்தங்களும், அழுத்தமும் இனிக்கவில்லை... வேப்பங்காயை மென்று முழுங்குவது போல் கசங்கி போன காகிதமாய் கசங்கியது அவள் பெண்மை...
அவனின் தொடுகையில் சூரியன் கண்ட பனியாக உறையவில்லை ... அனலில் இட்ட மெழுகாக துடித்தாள்... அவளின் கண்ணீர் என்ற சுரப்பி என்ற ஒன்றே அவள் இன்று தான் கண்டாள்...
தன் வலியை பல் கடித்து பொறுப்பவளை விசித்திரமாக பார்த்தான்... அவன் இதுவரை பழகிய பெண்கள் யாரும் கன்னிப்பெண்கள் இல்லையே... தன் வலிமை கொண்டு அவளை ஆண்டு முடித்தவன்... அவளை விட்டு விலகிட...
"இதுக்கெல்லாம் நீ ரொம்ப வருத்தப்படுவ?"...
"வருத்தப்படும் போது பட்டுக்கலாம்" என்றவன்.. கதவு தட்டும் சத்தத்தில் வேகமாக எழுந்தான்...
*உங்கம்மா வந்துட்டாங்க... நான் என் வீட்டுக்கு போறேன்.. என் கூட வாழ இஷ்டம் இருந்தா.. என்னைத் தேடி நீ வா" என கணீர் குரலில் சொன்னவன்..
அங்கு இருந்த அலமாரியை திறந்து அதில் இருந்து ஒரு நைட்டியை எடுத்தவன்... அவளுக்கு அணிவித்து விட்டே வெளியே சென்றான்...
வேகமாக சென்று கதவை திறக்க... பேரதிர்ச்சியில் உறைந்து நின்றார் செல்வி...
மேலாடையற்ற அவனின் மேனி, கண்களில் கூலிங்கிளாஸ்.. என சகல விகிதமாக வெளியேறியவன்.. காரை எடுத்துக் கொண்டு கிளம்பிட..
தன் மகளின் நிலையை எண்ணி கலக்கமுற்றவர்... அறையினுள் தேட... அங்கு யாருமேயில்லை...
"தாச்சா.. தாச்சா??" என்ற குரலுக்கு
"நான் குளிச்சிட்டு இருக்கேன்" என கரகரத்து ஒலித்த கண்ணீர்க்குரலை அந்த தண்ணீர் மட்டுமே அறியும்..
குளித்து முடித்து அழகுப் பதுமையாக வெளியே வந்த மகளை பார்த்த செல்விக்கு நெஞ்சே அடைத்துப் போனது...
நீண்ட நேரத்திற்கு பின் கண் விழித்தாள் அகன்முகிழி.. தான் இருக்கும் இடம் தெரியாமல் திருதிருவென முழித்தவள்.. மெத்தையில் திரும்பியபடி தன் இறகுகளை தன் அலகால் தடவி கொண்டு பாவமாக உட்கார்ந்திருந்த அழகி தான் கண்களுக்கு பட்டது..
"அழகி" மெல்லிய குரலில் அவள் அழைக்க,
"பொண்ணாடி நீ?" என ஏகபோகமாக திட்ட ஆரம்பிக்க,
"ஏன் அழகி திட்டுற"
"ஏன் திட்டுறேனா? உன் வாழ்க்கையை இங்க அந்தல்சிந்தலாகி போய் கிடக்கு ஏன் கத்துறேன்னு கேட்குற?"
" அந்த வளந்து கெட்டவன் முத்தம் கொடுத்ததுக்கு பஞ்சாயத்து கூட்டியிருக்காங்க பக்கி…" என வருத்தம் மிகுந்த குரலில் சொல்லிட.. திடுக்கிட்டு போய் அமர்ந்தாள் அகன்முகிழி
"பஞ்சாயத்தாஆஆ… அதுவும் அவளுக்கா???.யார் அந்த வளந்து கெட்டவன்?" என யோசித்தவளுக்கு, எதிரில் யாரும் இல்லா வெறுமையான இடம் மட்டுமே காட்சியளித்தது.
கரம்பிடிப்பான் ...