வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

சிறையெடுத்தாய் என்னை!! கரம் பிடித்தேன் உன்னை!! - டீஸர்

Status
Not open for further replies.

வணக்கம் நட்பூக்களே,

நான் பிரம்மாஸ்திரம் 5


இது என்னுடைய புது முயற்சி… போட்டியில் கலந்து கொள்கிறேன் என்றதும் எனக்கு வாய்ப்பளித்த பிரியங்கா முத்துக்குமார் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்…




ஆன்டி ஹீரோ

ஆன்டி ஹீரோயின்

அப்பாவி பெண்

மனிதன்

வில்லன்


இந்த ஐந்து பேர்களையும் கொண்ட கதைக்களம் தான் இது… இது முழுக்க முழுக்க என்னுடைய கற்பனை மட்டுமே…


வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் அன்பானவர்கள்.. பண்பானவர்கள் இல்லையே.. அப்படி குணாதிசியம் கொண்ட ஐவரை மையப்படுத்தி எழுதும் என்னுடைய முயற்சிக்கு.. தங்கள் கருத்துக்கள் தான் என்னை மேன்மேலும் எழுதுவதற்கு உதவும் என்பதால்.. தங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி என்றும் உங்கள் அன்புடன்….


சிறையெடுத்தாய் என்னை!!

கரம் பிடித்தேன் உன்னை!!


டீஸர் :


சிறை :


திகுதிகுவென தீக்கீரையாகி கொண்டிருந்த வீட்டினை அந்த ஊர் மக்கள் அனைவரும் நின்று வேடிக்கை பார்த்தனர்…


இல்லை… இல்லை… வேடிக்கை பார்க்க வைத்தான் ஒருவன்… அந்த வீடு ஆரம்பத்தில் தீப்பற்றி எரியும் பொழுதே அவன் பார்த்து விட்டான்.. அவன் நினைத்திருந்தால் ஓடிச்சென்று அணைத்திருக்கலாம்…


ஆனால் வேண்டுமென்றே எரிய விட… ஊர்க்காரர்கள் அணைக்க வர, எதிரில் எரியும் தீயை விட… அவன் கண்களில் தெரிந்த ஜுவாலையில் அனைவரும் பின்னால் இரண்டடி வைத்தனர்…


அவனை எதிர்த்து அந்த ஊரில் எவரும் செயல்பட முடியாது.. செயல்படவும் விடமாட்டான் அவன்.. இன்று மதியம் தான், அவன் அரக்கத்தனத்தின் உச்சத்தை நிரூபித்தான்…


மேலும் அவனுடன் சண்டையிட்டு வெல்லவும் முடியாது… கையாலாகாத நிலையில் பார்த்த ஊர் ஜனங்களின் மத்தியில் புழுதி பறக்க ஆடிக் கார் வந்து நின்றது…


அதிலிருந்து இறங்கி… இல்லை.. அதற்குக் கூட நேரமில்லாமல் ஓடினான் ஒருவன்… ஆறடி ஆண்மகன், மார்பளவு சட்டையின் பட்டன் போடாததால், அவன் உடற்கட்டும், முறுக்கேறிய புஜங்களும் அவனின் தேகத்தின் வலிமையை சொல்லியது…


வேகமாக ஓடியவன், எரிந்து கொண்டிருந்த வீட்டின் கதவினை தன் வலிமை கொண்டு ஓங்கி மிதிக்க… கதவோ "டமார்" என்ற சத்தத்துடன் பின்னோக்கி சாய்ந்தது…


அந்த கதவின் மேலே ஒரு காலை தூக்கி வைத்தவன்.. கண்ணிமைக்கும் நொடியில் உள்ளே நுழைந்தான்… ஊர்மக்களே வாயைப் பிளந்து அவன் செய்கையையும், எதிரில் அனல் கக்கும் பார்வையில் கண்கள் சிவக்க நின்றிருந்தவனையும் தான் பார்த்தனர்…


வேகமாக உள்ளே நுழைந்தவனின் இதழ்களோ ஓயாமல், "தாச்சு… தாச்சு" என ஒலித்துக் கொண்டே உள்ளே சென்றிட… எரியும் நெருப்பில் பகையின் உச்சத்தில்… தன்னை தானே நெருப்புக்கு இரையாக்கி கொண்டிருந்தாள்… தாச்சாயினி…


தாச்சு என அழைத்தவன்.. ஓடிச்சென்று அவளை அணைத்தான்… அவளின் வலது கையை பிடித்தவாறே, அங்கு இன்னும் எரியாத போர்வையை கொண்டு அவளுக்கு அணைவாக போர்த்தியவன்… அவளை நெஞ்சாங்கூட்டில் பாதுகாத்தவாறே வெளியே அழைத்து வர, ஊர்மக்களோ ஆளாளுக்கு ஒன்று பேச ஆரம்பித்தனர்…


எரியும் வேள்வித்தீயில் வெளிவந்த திரௌபதியை போல், இவளின் பகையும், எதிரில் நின்றிருப்பவனை சுடர்விட்டு எரிக்கும்…


எதிரில் நின்றிருந்தவனை எரிக்கும் பார்வையில் முறைக்க… அவனோ அசால்ட்டாக அவளை பார்த்தான்… இதழில் ஒரு சுழிப்பு, கண்களில் ஒரு திமிர், புருவத்தை ஒற்றை பக்கம் தூக்கி நிறுத்திட.. அவர்கள் இருவரின் பார்வையையும் உணர்ந்த அனங்கன்… தாச்சாவின் இடது கரம் பிடித்து இரண்டடி வைத்திருக்க மாட்டான்…


அதற்கு மேல் அவனால் நடப்பதற்கு ஓர் அடி எடுத்து வைக்க முடியவில்லை… ஏன் என் யோசனையுடன் பக்கவாட்டில் திரும்பி பார்க்க… அங்கு தாச்சாயினியின் இதழ்களை சிறை பிடித்திருந்தான் அவன்…


அவளின் கரம் பிடித்தவன் ஒருவன்… அவளை இதழ்களால் சிறைப்பிடித்தவன் ஒருவன்… இதழுக்கும், கரத்துக்குமிடையில் தாச்சாயினியின் முடிவு தான் என்ன??
 
Last edited:
அஸ்திரம்_5

டீஸர் :

திகுதிகுவென எரியும் வீட்டினை பார்த்தவளுக்கு அன்று தான் பட்ட துன்பங்கள் தான் கண்முன்னால் வந்தது.. அன்று அவள் அனுபவித்த துன்பத்திற்கும், இன்னல்களுக்கும் இடையில், இவன் படும் துன்பங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லாததை போல் தான் தோன்றியது..

கலங்கிய விழிகளுடன் எரிந்து கொண்டிருந்த வீட்டினை தான் பார்த்து கொண்டிருந்தான்.. அவனின் ஆசையை நிராசையா ஆக்குனதை விட… அவனின் தாயின் சமாதி இருந்த இடம் காணாமல் போனது தான் வலித்தது…

அவனின் முகமாற்றத்தை கவனித்தவளின் உள்ளமோ, குதித்து குத்தாட்டம் போட்டது… அருகில் நின்றிருந்த பழனியிடம், "என்ன பழனி ஆசையா கட்டின வீடு இப்போ எப்படி கொழுந்து விட்டு எரியுது??... காலையில் தான்‌ கிரகப்பிரவேசம் நடந்த வீடுன்னு சொன்னா ஒருத்தரும்‌ நம்பமாட்டாங்கள்ள… எத்தனை கோடி இருக்கும் " என்ற கேள்வியிலேயே சட்டென இசக்கியின் முகம் கறுத்தது…

அவனால் நினைத்து பார்க்க முடியாத ஒன்றை நடத்தி விட்டாள் அல்லவா… பெண் தானே என அவன் நினைக்க… அவளே அவனை அழிக்கும் சக்தியாக மாறி நின்றாள்…

அவன் அருகில் வந்து நின்றவள்… அவனின் கண்களை தான் கூர்ந்து கவனித்தாள்…

எப்பொழுதும், பயமின்றி கர்வத்துடன், ஆண் என்ற திமிருடன் நடந்து கொள்ளும் விழிகளில் இன்று‌ லேசான கலக்கமும், வருத்தமும் அவன்‌ முகத்தில் அப்பட்டமாக தெரிய…

அவன் அருகில் நின்றவளை ஏறிட்டுப் பார்த்ததவனை நக்கலாக பார்த்து புன்னகைத்தவள்.. "அப்புறம் எப்படி இருக்கு உன் வீடு.. அழகா இருக்குல்ல… ரொம்ப ரொம்ப ஆசை ஆசையா பார்த்து பார்த்து கட்டியிருப்ப போல… அச்சோ பாவம்.. இப்போ சாம்பல் மட்டும்தானே மிஞ்சும்" என பரிதாபப்படுவதை போல் எள்ளல் நிறைந்த குரலில் சொல்லியவளை கொன்று போடும் வேகம் அவனுக்கு…

ஆனால் அவனின் இரும்பு முரட்டுக்கரங்களையும் கட்டிப் போட்டது… அவள் வயிற்றில் வளரும் சிசு… ஏழு மாத கருவை வயிற்றில் சுமந்தபடி… மனம் முழுவதும் வஞ்சினத்துடன் பேசுபவளின் மீது பாவம் இரக்கம்‌ தான் சுரந்தது…

"ஏன் இப்படி பண்ண??.. இந்த இடம் எனக்கு எவ்ளோ பொக்கிஷம் தெரியுமா" என தழுதழுத்த குரலில் சொல்லியவனின் சட்டையை கொத்தாக பிடித்தாள்…

"ஏன் தெரியாம??.. இந்த இடத்துல உன் அம்மாவோட சமாதி இருந்தது… இது உன்னோட‌ சாம்ராஜ்யம்.. நீ பார்த்து பார்த்து கட்டுன உன்னோட கோட்டை… அதான்‌ சமாதி கட்டினேன்"‌… என்றவளின் கண்களில் இருந்த குரூரத்தையும், வன்மத்தையும் பார்த்தவன் வாயடைத்து நின்றான்…

"என்ன வலிக்குதா?? என நக்கல் தொணியில் கேட்டவள்…‌

"அன்னைக்கு எனக்கும் இதே மாதிரி தான் வலிச்சது. எங்கம்மா நெருப்புல வெந்து சாகும் போது நான் எப்படி.. கதறுனேன் தெரியுமா??... நமக்குன்னு எந்த உறவும் இல்லைன்னு நினைச்சப்போ… எப்படி அழுதேன் தெரியுமா?? அந்த வலியை நீயும் அனுபவிக்க வேண்டாம்… அனுபவி.. உன்னோட ஒரு சொட்டுக்கண்ணீரையாவது பார்க்காம நான் ஓய மாட்டேன்" என்றவளின் வேகமாக நடந்து சென்றவள்… மறுபடியும் திரும்பி வந்தாள்…

செல்லும் அவளை கோபத்துடன் முறைத்த பழனி.. அவள் திரும்பி வருவதை புருவ முடிச்சுடன் பார்த்தான்…

தன்னருகில் நின்றிருந்த இசக்கியின்‌ தோளினை தட்டிட.. அவனும் "ஏன் திரும்பி வருகிறாள்??" என்ற கேள்வியுடன் அவளை நோக்கிட…

"எனக்கு யாராவது ஏதாவது கொடுத்தா… அதை நான் உடனே திரும்பி கொடுத்துடுவேன்" என்றவள் நொடி நிமிடத்தில் இசக்கியின் இதழில் தன் இதழை பதித்திருந்தாள்..‌

ஆழ் முத்தமெல்லாம் இல்லை… அழுத்தமான முத்தம்… இரு இதழ்களுக்கிடையில் சண்டையெல்லாம் நடக்கவில்லை… இருவரின் மனங்களுக்கிடையில் பெரிய யுத்தமே நடந்து கொண்டிருந்தது…

நீண்ட நெடிய முத்தத்துக்கு பிறகு, அவனை விட்டு பிரிந்தவள் தன் வீட்டை நோக்கி சென்றவள்.. செல்லும் அவளின் உதட்டில் குரூர புன்னகை… செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த விரல் இதழில் விரக்தியான புன்னகை…
 
Status
Not open for further replies.
Top