வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

சிறையெடுத்தாய் என்னை!! கரம் பிடித்தேன் உன்னை!! - டீஸர்

Status
Not open for further replies.
#பிரம்மாஸ்திரம்

#அஸ்திரம் 5

images.jpeg

"தம்பி கிளம்புட்டீயா??" என பல்லை காட்டிக்கொண்டே வந்தவர் கையில்… நாலைந்து பெண்ணின் போட்டோ இருந்தது…


அந்த போட்டோவை பார்த்ததும்… சலிப்பாக முகத்தை திருப்பியவன்.. "ப்ச்ச்.. அக்கா நான் என்னோட விருப்த்தை சொல்லிட்டேன்…‌எனக்கு எந்த மாதிரி வேணும்னு.. அவளை மாதிரி ஒருத்தியை கூட்டிட்டு வா… தாலி கட்டுறேன்"... என விறுவிறுவென வெளியேறியவனை பெருமூச்சுடன் பார்த்த வசந்தி, டைனிங் டேபிளி அமர்ந்து, செல்வியின் சமையலை மூக்கு பிடிக்க சாப்பிட்டவர்… எந்த அளவு சுருட்ட முடியுமோ?? அந்தளவு சுருட்டிக் கொண்டே சென்றார்…



இவனிடம் எந்த நல்ல பெண்ணும் மாட்டிவிடக்கூடாது என்று மட்டுமே செல்வியால் நினைக்க முடிந்தது…


முப்பத்தி ரெண்டு வயதான அவனுக்கு இப்பொழுது தான் பெண் பார்க்கும் படலம் நடந்தது… அவனுக்கு ஆசைப்பட்டதெல்லாம் நடக்கவில்லை…


எம்.எல்.ஏ என்பதால், அவன் செல்லும் இடங்களுக்கு செல்லும் பொம்மை போல், ஒருத்தி வேண்டும்… அவன் நில் என்றால் நிற்க வேண்டும்.. செல் என்றால் செல்ல வேண்டும்… போ என்றால் போக வேண்டும்.‌ படு என்றால் படுக்க வேண்டும்… அவ்வளவுதான் பெண்ணை பற்றிய இலக்கணம்…



அவனின் பெண்ணின் இலக்கணத்தை மாற்றி… பெண்மை‌ என்றால் என்ன என்பதை உணர வைப்பதற்காக ஒருத்தி பிறப்பெடுத்திருக்கிறாள் என்பதை அந்த நொடி.. அவன் அறியவில்லை…
 
Last edited:
"சித்தி.. அடிக்காதிங்க.. அடிக்காதிங்க சித்தி… ரொம்ப வலிக்குது" என்ற இளம்பெண்ணின் கூக்குரலில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூட இவள் வீட்டின் முன்பு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்…


பெல்ட்டினால் அடித்ததால் வரிவரியாக தடித்த தன் உடம்பினை தாவணியால் மறைத்தவாறே கீழே அமர்ந்திருந்தவளின் முன்பு வந்து நின்றார் சாவித்திரி…


"என்னடி நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்… சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க??" என்ற கணீர் குரலில் கண்ணீர் மல்க ஏறிட்டாள்…


விழிகளில் கண்ணீர் திரையிட்டு மறைத்திருக்க… அவளையும் மீறி சொட்டு சொட்டென கண்ணீர் கோடாய் கன்னத்தில் இறங்கியது…


"சித்தி சொன்னா கேளுங்க சித்தி… என்னை விட்டுருங்க எனக்கு படிக்கணும் சித்தி.. பன்னென்டாப்பு வரை படிக்கணும் சித்தி… அதுக்கப்புறம் நீங்க சொல்ற யாரைனாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என சாவித்திரியின் காலை பிடித்துக் கெஞ்சியவளை… வேகமாக வயிற்றிலே எட்டி மிதிக்க…


"அம்மாஆஆஆ" என்ற அலறலுடன் அங்கிருந்த சுவரில் மோதி விழுந்தாள் சிறு பெண்ணவள்… சுவற்றில் மோதியதில், நெற்றி நன்றாக புடைத்து வலிக்க ஆரம்பிக்க…


அந்த வலியை தன் கை கொண்டு மறைத்தவாறே… கண்களில் வழியும் கண்ணீருடன் அமர்ந்திருந்தவளின் முடியை கொத்தாக பிடித்திழுத்த சாவித்திரி.. தரதரவென இழுத்தவாறே சுவற்றில் போய் மோதுவதற்குள்…‌


"நான் சம்மதிக்கிறேன்.. சம்மதிக்கிறேன்… அவரை கல்யாணம் பண்ண சம்மதிக்கிறேன்" என அழுகுரலில் சொல்லியவளுக்கு கண்ணீர் மட்டுமே துணையாக நின்றது…


மூன்று மணி வருவதாக சொன்ன இசக்கிமுத்துவிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள் பன்னிரெண்டாம் வகுப்பு‌ படித்துக் கொண்டிருக்கும் அகன்முகிலி…
 
Status
Not open for further replies.
Top