Writers of Brammastram
Moderator
மலர் 20
சுதாவிற்கும் அவள் தமக்கை கவிதாவிற்கும் பனிரெண்டு வருட வயது வித்தியாசம். தான் மட்டுமே என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு தங்கை சுதாவை எப்போது பிடிக்காது.
இதில் கவிதா தான் வெளியூரில் திருமணமாகி சென்றுவிட்டால் சொத்து அனைத்தும் தங்கைக்கு சென்றுவிடுமோ என்ற பயத்தில் உள்ளூரிலே வரன் பார்க்க சொல்ல, பெற்றோரும் மகளை பிரிய மனமின்றி அருகிலேயே பார்த்த வரன் தான் செந்தில்.
சுதா பருவமடையும் வரை அனைத்தும் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு செந்தில் பார்வை சுதாவின் மீது வக்கிரமாக படிய, அதை மனைவி அறியாமல் பார்த்துக் கொண்டான்.
இதில் திருமணமாகி ஆறு வருடங்களாகியும் குழந்தையில்லாததையும், அதிலும் குறை கவிதாவிற்கு தான் என்பதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தனது வக்கிரத்தை தீர்த்து கொள்ள செந்தில் தன் மனைவியை வைத்தே காய் நகர்த்தினான்.
மனைவிக்கு அவள் தங்கையை பிடிக்காது என்பதை புரிந்து கொண்டு,
"நமக்கு தான் குழந்தை இல்ல. நாளைக்கே உன் தங்கச்சிக்கு கல்யாணமாகி குழந்த பிறந்திட்டா எல்லா சொத்து அவளுக்கு தான்...." என்று கூறி அவள் மனதில் பயத்தை விதைத்தான்.
அவள் பயத்தை மேலும் அதிகரிப்பது போல செந்தில் தன் தாயை தூண்டிவிட்டு மறுமணத்தை பற்றி பேச வைக்க, பயத்தில் குழம்பிய நிலையில் இருந்தவளிடம் வாடகை தாய் பற்றி பேசி சம்மதிக்க வைத்தான்.
வாடகை தாய் குழந்தை மீதும், கணவன் மீதும் உரிமை கொண்டாட கூடும் என்ற அச்சத்தையும் விதைத்தான். கூடவே வாடகை தாய் சட்டத்தை பற்றியும் கூறி அவளை தெளிய விடவில்லை. தன் வீட்டிற்கு வந்து செல்லும் சுதாவை பார்த்தும் பார்க்காதது போல
"பிரச்சனை செய்யாத ஒருத்தர் மூலமா நம்ம குழந்தை பிறக்கணும். அந்த பொண்ணும் உனக்கு அடங்கி போகணும்." என்று கூற, நிமிர்ந்து பார்த்த கவிதாவின் பார்வையில் சுதா விழுந்தாள்.
மனைவியின் முகமே அவள் மனநிலையை காட்ட, செந்தில் தன் திட்டத்தை மெதுவாக கூற, மகுடிக்கி மயங்கிய பாம்பாக கவிதாவும் ஏற்றுக் கொண்டாள்.
தங்கள் வீட்டிற்கு வந்து சென்ற சுதாவை வழியில் கடத்தி அவளை வாடகை தாயாக பயன்படுத்த போவதாக கூறி மதுரைக்கு வெளியே இருந்த அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்ற செந்தில், இருவரும் ஊரில் இல்லை என்றால் சந்தேகம் வர கூடும் என கூறி மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
"கரு முட்டை தேவைப்படும் போது மட்டும் நீ வந்தாள் போதும்" என கூறி மனைவியை அவள் தங்கை இருந்த வீட்டிற்கு வர விடவில்லை.
சொந்த அத்தான் மூலமே எதற்காக தான் கடத்தப்பட்டிருக்கின்றோம் என்பது புரியும் முன்பே, அந்த சிறு பூ கயவன் கைகளினால் கசக்கப்பட்டது.
"ஐய்யாே அத்தான் விடுங்க... வலி தாங்க முடியல.." என்று அவள் கதறல்கள் எதுவும் அந்த கமுகனின் காதுகளை சென்றடையவில்லை.
வீட்டில் தொழிலையும், மனைவியிடம் சுதாவின் கண்காணிப்பையும் காரணம் காட்டி அவன் வந்து போகும் நாட்கள் எல்லாம் சுதாவிற்கு நரக வேதனை தான்.
தப்பி செல்லவும் முடியாமல், சாகவும் வழி தெரியாமல் தவித்தவள் வயிற்றில் செந்திலின் பாவத்தின் விதை வளர ஆரம்பித்தது. வாடகை தாய் முறை வெற்றியடைந்து விட்டதாக மனைவியிடம் கூறியவன் சுதாவிடம்,
"இங்க பாரு சுதா எதுக்கு மெறண்டு பிடிச்சு உடம்ப புண்ணாக்கிக்கிற. ஒழுங்க இருந்தா நீ தான் என் ஆசை பொண்டாட்டி. இல்ல நான் மல்லுக்கு தான் நிப்பேன்னு சொன்னா என் கள்ள பொண்டாட்டி." என்றவனை தண்டிக்க முடியாமல் அந்த சிறு பெண் தவித்து நின்றாள்.
கணவனின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு சுதாவை காண வந்த கவிதாவை கட்டி பிடித்து அழுதவள் தனக்கு நடந்தை கூற, கவிதாவிற்கு தான் ஏமாற்றபட்ட உணர்வில் தங்கையை அடிக்க அவள் மயங்கி சரிந்தாள்.
வழக்கம் போல சுதாவை காண வந்தவன் மனைவியை எதிர்பாராது திகைக்க, கவிதா தன்னை ஏமாற்றியதற்காக சண்டைபிடித்தாள். அவள் கையை பிடித்து உதறியவன்
"ஆமா உன் தங்கச்சிய ஆசைப்பட்டுதான் கடத்தினேன். இப்ப என்ன செய்ய போற. புள்ள பொறந்ததும் உன் அப்பா வீட்டு சொத்து முழுசா உனக்கு, உன் தங்கச்சி எனக்கு. இல்ல நியாய தர்மம் பேசுன என் கூட சேர்ந்து கம்பி எண்ணனும். நான் ஆம்பள ஆயிரம் தப்பு பண்ணுவேன். ஆனா நீ..."என்று செந்தில் மிரட்ட கவிதா அடங்கி போனாள்.
தமக்கையே தன்னை காக்கக்கவில்லை என்றதும் தன்னை காக்க யாரும் இல்லை என நினைத்துக் கொண்டிருந்தவளை அந்த நரகத்திலிருந்து மீட்டிருந்தான் சாகித்யன்.
சாகித்யன் நீதிமன்ற விசாரணைக்கு தேவையான விபரங்களை சரிபார்த்துக் கொண்டிருக்க, வேகமாக உள்ளே வந்த காவலர் ஒருவர்
"சார் உங்கள பாக்க சுதா பொண்ணோட அப்பா அம்மா வந்திருக்கிறாங்க." என்று கூற, அவன் புருவங்கள் சுருங்க நிமிர்ந்து பார்த்தவன்
"வர சொல்லுங்க." என்று கூற, அடுத்த சில வினாடிகளால் அவன் முன் இருவரும் வந்து நின்றன.
"கோர்ட் விசாரண நாளைக்கு தான..." என்று கேள்வியாக நிறுத்தியவனை நிமிர்ந்தும் பார்க்காது
"நாங்க கேஸ திரும்ப வாங்க வந்துருக்கோம்." என்று வார்த்தைகளை மென்று விழுங்க, அவர்களை அழுத்தமாக பார்த்தவாறு
"பெத்த பாசம்... மூத்த பொண்ணு மேல இருக்கிற பாசம் சின்ன பொண்ணு மேலயும் இருந்திருக்கலாம்" என்று நக்கலாக கூற,
"நாளைக்கு விசயம் வெளிய தெரிஞ்ச என் சின்ன பொண்ணு வாழ்க்கையும் தான் நாசமா போகும். வேண்டாம் சார் நாங்க வெளிய தல காட்ட முடியாது." என்று சுதாவின் தாய் கெஞ்ச,
"சரி வழக்க வாபஸ் வாங்கிட்டு உங்க சின்ன பொண்ணுக்கு என்ன செய்ய போறீங்க." என்று கேள்வியாக கேட்க அதற்கு இருவரிடமும் பதில் சொல்ல தைரியமில்லை.
சுதாவின் வழக்கை முதலில் விசாரித்த இன்ஸ்பெக்டர் வேகமாக சாகித்யன் காதில் ஏதோ சொல்ல, எதிரில் இருந்தவர்களை பார்த்த பார்வையில் அணல் தெரித்தது. சுதாவின் அம்மாவை உருத்து விழித்தபடி
"அன்னைக்கு கனவுல எம்பொண்ணு கதறி அழறான்னு சொன்னீங்க. காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டேன். எந்த நரகத்தில இருந்து உங்க பொண்ணு தப்பிச்சு வந்திருக்கிறாளோ அதிலே தள்ளி விட பாக்கிறீங்க." என்று ஆவேசமாக பேச, தங்கள் திட்டம் தெரிந்து விட்டதில் முதலில் பதறி, பின் தன்னை திடப்படுத்துக் கொண்டவர்
"எம் பொண்ணுக்கு எது செய்யணும்னு எனக்கு தெரியும். நாளைக்கு அவ கோர்ட்க்கு வந்து நாங்க சொல்றத தான் சொல்லுவா. நாளை மறு நாள் அவளுக்கும் எம் மருமகன் செந்திலுக்கும் கல்யாணம்." என்று கூறிவிட்டு செல்ல, சாகித்யன் இதழ்களில் விஷமப்புன்னகை தோன்றியது.
அடுத்த நாள் நீதிமன்றத்தில் சுதாவின் வழக்கு விசாரணை ஆரம்பிக்க, மொத்த கவனமும் சுதாவின் மீது தான் இருந்தது. ஆனால் அவளோ யாரையும் பார்க்காமல் தனது வயிற்றில் இருக்கும் ஆறு மாத கருவின் முதல் அசைவில் உள்ளுக்குள் பயந்து வயிற்றை வெறித்த பார்த்துக் கொண்டிருந்தாள்.
சுதா பெற்றோர் கூறிய குடும்ப கௌரவம், அக்காவின் வாழ்க்கை, தன் எதிர்காலம், குழந்தையின் நிலை என அனைத்தையும் நினைத்து மௌனமாக நின்றாள். ஒவ்வொரு சாட்சியாக விசாரணை செய்யப்பட, செந்தில் வழக்கறினர்
"இதில் எனது கட்சிக்காரர் சுதாவை கடத்தியதுற்கு எந்த வித ஆதாரமும் இல்லை யுவர் ஆனர். சுதாவே விருப்பப்பட்டு தான் எனது கட்சிகாரருடன் சென்றுள்ளார். இப்போது காவல் துறை செந்தில் மீது வீண் பழியை சுமத்தியிருக்கிறார்கள் என்பதை நாம் சுதாவை விசாரித்தாலே தெரிந்து கொள்ளலாம்..." என்று கடத்தலை கள்ளக்காதல் என்று பேச, எதற்கு சுதாவிடம் பதில் இல்லை.
அவள் அமைதியை மற்றவர்கள் புன்னகையுடன் பார்க்க, சாகித்யன் தன் உணர்வுகளை வெளிக்காட்டாத முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அரசு தரப்பு வக்கில் எழுந்து
"சுதாவை விசாரிப்பதற்கு முன் முக்கிய சாட்சி ஒன்றை விசாரிக்க அனுமதி வேண்டும்." என கோரிக்கை வைக்க, அனைவரும் யார் என்று யோசிக்கும் வேலையில், சாட்சி கூண்டில் சந்துரு வந்து நின்றான்.
சந்துவை பார்த்தும் பெற்றோர் பிடியிலிருந்து ஒடி வந்த சுதா அவனை கட்டிக் கொண்டு அழ, அவளை இழுத்து வர முயன்ற அவள் பெற்றோரை சாகித்யன் தடுத்து விட்டான்.
அரசு தரப்பு வக்கீல் சந்துவுவையும் சாதாவையும் சேர்த்தே விசாரிக்க ஆரம்பித்தார். அதில் இருவரும் தங்கள் காதலை ஒத்துக்கொள்ள, பின் சுதா தனக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் கூறி முடித்தாள்.
"அங்க இருந்த ஒவ்வொரு நாளும் எனக்கு நரகமா தான் இருந்துச்சு. ஒருவழியா தப்பிச்சிட்டேன்னு நினைச்சு சந்தோஷப்படுறதுக்குள் அந்த நாய் கூடவே கல்யாணம் பண்ணி வைக்க போறதா சொல்றாங்க." என்று சுதா கதறி அழ அவளை ஆதரவாக பிடித்துக் கொண்ட சந்துரு,
"எனக்கு சுதாவ சின்னதுல இருந்தே பிடிக்கும். அவ மைனர் பொண்ணுன்னு தான் நான் என் காதல வீட்டுல சொல்ல.
இப்போ அவ மேஜர் என் கூட அனுப்பி வையுங்க நான் பாத்துக்கிறேன். பொறக்க போற குழந்தையும் எங்க குழந்தையா வளரட்டும்." என சந்துரு பேச பேச அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தன.
சந்துரு தன்னுடன் தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் ஏற்றுக் கொள்வான் என சுதாவுமே எதிர் பார்க்கவில்லை.
வழக்கு இவ்வாறு மாறக்கூடும் என முன்பே யோசித்து வைத்திருந்த சாகித்யன் சந்துருவிடம் பேசி நீதிமன்றத்திற்கு வரவழைத்தான். அவனுமே காதலில் உறுதியாக இருக்க, சுதா வழக்கில் சம்மந்தப்ட்ட அனைவருக்கும் தண்டணை கிடைத்ததும் காதலியும் தான் வேலை செய்யும் இடம் நோக்கி பறந்துவிட்டான்.
அனைத்தையும் முடித்து வீடு வந்த கணவனை கட்டி தழுவி கண்ணத்தில் முத்தமிட்டு ஆரவாரமாக வரவேற்ற அமுதரசி
"யு ஆர் க்ரேட் சகித்தான்..." என்று கூற, அவளை தூக்கி சுற்று சுற்றி இறக்கி விட்டவன்,
"உனக்கு பிடிக்குமேன்னு தான் இந்த வேலைக்கு வந்ததேன். இப்போ நீ கொடுத்த பரிசுல எனக்குமே பிடிக்க ஆரம்பிச்சிடு." என்று தன்னவள் கண்ணம் கிள்ளி சாகித்யன் கூற,
"எனக்காகவா..." என்று இன்பமாய் அதிர்ந்து அமுதரசி கேட்க,
"நமக்காக..." என்று கொஞ்சியவனின் மொழியில் உலகம் மறந்தாள் பாவையவள்.
நாட்கள் வண்ணமயமாக நகர எட்டு மாதம் எவ்வாறு சென்றது என்று சொல்ல முடியாதபடி வேகமாக சென்றது. அதில் அமுதரசி சாகித்யன் வாழ்வில் கொஞ்சல் செல்ல சண்டை நகர, சக்கரவர்த்தி கார்த்திகா வாழ்வில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.
சக்கரவர்த்தி தன்னில் அமுதரசி தம்பியின் மனைவி என்ற உறவை அழுத்தமாக பதிய வைத்துக் கொண்டு கார்த்திகாவிடம் நட்பாக பழக நினைக்க, கார்த்திகாவிடம் பெரிதாக எந்த எதிர் விணையும் இருப்பதில்லை.
சொல்லப்போனால் இன்னும் இருவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் ரூம்மேட் என்று நிலையை தாண்டவில்லை. அலுவலக விசயத்தை சாதரணமாக பேசுபவள், சொந்த விஷயம் என்றால் ஓர் இரு வார்த்தைகளுடன் முடித்துக் கொள்வாள்.
அவளின் மௌனத்திற்கு காரணம் புரியாது தவித்த சக்கரவர்த்தி பொறுமையிழந்து அவளிடமோ காரணம் கேட்க, கார்த்திகா நிதாரனமாக,
"போதையில கூட நான் உங்க கண்ணுக்கு பிடிச்ச மாதிரி இல்ல. பிடிக்காம நீங்க என் கூட வாழ வேண்டாம்." என்று கூற, அவள் கூறியதை கிரகிக்க முயன்றவனுக்கு தான் அன்று போதையில் கூறியதை மனைவி இன்னும் நினைவில் வைத்து கொண்டிருப்பதை நினைத்து
"இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் கடவுள் ஏன் இவ்வளவு நியாபக சக்தியை கொடுத்திருக்கான்னு தெரியல. அவங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறதே இந்த அப்பாவி புருஷன்கள் வேலையா போச்சு." என்று மனதுக்குள் புலம்ப மட்டுமே முடிந்தது.
அதன் பிறகு சக்கரவர்த்தி என்ன முயற்சி செய்தாலும் அது கார்த்திகாவை சிறிதும் அசைக்கவில்லை. சக்கரவர்த்தியின் கவனம் முழுவதும் கார்த்திகாவின் மீதிருக்க, அமுதரசியை பற்றிய நினைவே அவனிடம் இல்லை.
இதற்கிடையில் கீர்தனாவிற்கு குழந்தை பிறந்திருக்க, தோழிகள் இருவரும் சென்னை வந்து சேர்ந்தன. திருமணத்திற்கு பின் இருவரும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை. அவரவர் வேலை பளு காரணமாக சந்திப்பு நிகழவில்லை.
குழந்தை பிறந்த பதினாறாவது நாள் தொட்டிலிலிட்டு பெயரிட வேண்டும் என பெரியவராகள் முடிவு செய்ய, கீர்த்தனா பெயர் சூட்டுவிழா மதுரையில் தங்கள் வீட்டில் தான் நடைபெற வேண்டும் என அடம்பிடிக்க,
"கீர்த்தி குழந்தை பெறந்த உடனே உன்னால ட்ராவல் பண்ண முடியாது." என்று கார்த்திகா எவ்வளவோ எடுத்து கூறியும் அவள் கேட்பதாக இல்லை.
"இது என் குழந்தை. அவன் பெயர் வைக்கிற பங்ஷன் எங்க நடக்கணும்னு நான் தான் முடிவு செய்வேன். என் உடம்ப பாத்துக்க எனக்கு தெரியும் தேவையில்லாம நீ பேசாத. என்னமோ பத்து புள்ள பெத்தவ மாதிரி பேசுறீங்க." என்று கீர்த்தனா கார்த்திகாவுடன் அமுதரசியையும் சேர்த்து பேச, அது இருவருக்கும் சுருக்கென்று இருந்தது.
கீர்த்தனாவின் விருப்பப்படியே மதுரையில் பெயர் சூட்டுவிழா விமரிசையாக நடைபெற, அதை பார்த்துக் கொண்டிருந்த அன்பரசிக்கு பேசுவதற்கு வாய் பரபரத்தாலும் மகளின் பெருட்டு அமைதியானார்.
அன்பரசி எதாவது பேச நினைத்தாலே அமுதரசி அவர் முன் தோன்றி எச்சரிக்கை செய்ய, அவருக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இல்லாமல் போனது. உறவுகள் அனைத்து நடப்பை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டன.
மணிமேகலை கூட அன்பரசியின் அமைதியில் வியப்படைந்ததுடன் அமுதரசியை மெச்சுதலுடன் பார்த்துவிட்டு சென்றார்.
மலரும்...
சுதாவிற்கும் அவள் தமக்கை கவிதாவிற்கும் பனிரெண்டு வருட வயது வித்தியாசம். தான் மட்டுமே என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு தங்கை சுதாவை எப்போது பிடிக்காது.
இதில் கவிதா தான் வெளியூரில் திருமணமாகி சென்றுவிட்டால் சொத்து அனைத்தும் தங்கைக்கு சென்றுவிடுமோ என்ற பயத்தில் உள்ளூரிலே வரன் பார்க்க சொல்ல, பெற்றோரும் மகளை பிரிய மனமின்றி அருகிலேயே பார்த்த வரன் தான் செந்தில்.
சுதா பருவமடையும் வரை அனைத்தும் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு செந்தில் பார்வை சுதாவின் மீது வக்கிரமாக படிய, அதை மனைவி அறியாமல் பார்த்துக் கொண்டான்.
இதில் திருமணமாகி ஆறு வருடங்களாகியும் குழந்தையில்லாததையும், அதிலும் குறை கவிதாவிற்கு தான் என்பதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தனது வக்கிரத்தை தீர்த்து கொள்ள செந்தில் தன் மனைவியை வைத்தே காய் நகர்த்தினான்.
மனைவிக்கு அவள் தங்கையை பிடிக்காது என்பதை புரிந்து கொண்டு,
"நமக்கு தான் குழந்தை இல்ல. நாளைக்கே உன் தங்கச்சிக்கு கல்யாணமாகி குழந்த பிறந்திட்டா எல்லா சொத்து அவளுக்கு தான்...." என்று கூறி அவள் மனதில் பயத்தை விதைத்தான்.
அவள் பயத்தை மேலும் அதிகரிப்பது போல செந்தில் தன் தாயை தூண்டிவிட்டு மறுமணத்தை பற்றி பேச வைக்க, பயத்தில் குழம்பிய நிலையில் இருந்தவளிடம் வாடகை தாய் பற்றி பேசி சம்மதிக்க வைத்தான்.
வாடகை தாய் குழந்தை மீதும், கணவன் மீதும் உரிமை கொண்டாட கூடும் என்ற அச்சத்தையும் விதைத்தான். கூடவே வாடகை தாய் சட்டத்தை பற்றியும் கூறி அவளை தெளிய விடவில்லை. தன் வீட்டிற்கு வந்து செல்லும் சுதாவை பார்த்தும் பார்க்காதது போல
"பிரச்சனை செய்யாத ஒருத்தர் மூலமா நம்ம குழந்தை பிறக்கணும். அந்த பொண்ணும் உனக்கு அடங்கி போகணும்." என்று கூற, நிமிர்ந்து பார்த்த கவிதாவின் பார்வையில் சுதா விழுந்தாள்.
மனைவியின் முகமே அவள் மனநிலையை காட்ட, செந்தில் தன் திட்டத்தை மெதுவாக கூற, மகுடிக்கி மயங்கிய பாம்பாக கவிதாவும் ஏற்றுக் கொண்டாள்.
தங்கள் வீட்டிற்கு வந்து சென்ற சுதாவை வழியில் கடத்தி அவளை வாடகை தாயாக பயன்படுத்த போவதாக கூறி மதுரைக்கு வெளியே இருந்த அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்ற செந்தில், இருவரும் ஊரில் இல்லை என்றால் சந்தேகம் வர கூடும் என கூறி மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
"கரு முட்டை தேவைப்படும் போது மட்டும் நீ வந்தாள் போதும்" என கூறி மனைவியை அவள் தங்கை இருந்த வீட்டிற்கு வர விடவில்லை.
சொந்த அத்தான் மூலமே எதற்காக தான் கடத்தப்பட்டிருக்கின்றோம் என்பது புரியும் முன்பே, அந்த சிறு பூ கயவன் கைகளினால் கசக்கப்பட்டது.
"ஐய்யாே அத்தான் விடுங்க... வலி தாங்க முடியல.." என்று அவள் கதறல்கள் எதுவும் அந்த கமுகனின் காதுகளை சென்றடையவில்லை.
வீட்டில் தொழிலையும், மனைவியிடம் சுதாவின் கண்காணிப்பையும் காரணம் காட்டி அவன் வந்து போகும் நாட்கள் எல்லாம் சுதாவிற்கு நரக வேதனை தான்.
தப்பி செல்லவும் முடியாமல், சாகவும் வழி தெரியாமல் தவித்தவள் வயிற்றில் செந்திலின் பாவத்தின் விதை வளர ஆரம்பித்தது. வாடகை தாய் முறை வெற்றியடைந்து விட்டதாக மனைவியிடம் கூறியவன் சுதாவிடம்,
"இங்க பாரு சுதா எதுக்கு மெறண்டு பிடிச்சு உடம்ப புண்ணாக்கிக்கிற. ஒழுங்க இருந்தா நீ தான் என் ஆசை பொண்டாட்டி. இல்ல நான் மல்லுக்கு தான் நிப்பேன்னு சொன்னா என் கள்ள பொண்டாட்டி." என்றவனை தண்டிக்க முடியாமல் அந்த சிறு பெண் தவித்து நின்றாள்.
கணவனின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு சுதாவை காண வந்த கவிதாவை கட்டி பிடித்து அழுதவள் தனக்கு நடந்தை கூற, கவிதாவிற்கு தான் ஏமாற்றபட்ட உணர்வில் தங்கையை அடிக்க அவள் மயங்கி சரிந்தாள்.
வழக்கம் போல சுதாவை காண வந்தவன் மனைவியை எதிர்பாராது திகைக்க, கவிதா தன்னை ஏமாற்றியதற்காக சண்டைபிடித்தாள். அவள் கையை பிடித்து உதறியவன்
"ஆமா உன் தங்கச்சிய ஆசைப்பட்டுதான் கடத்தினேன். இப்ப என்ன செய்ய போற. புள்ள பொறந்ததும் உன் அப்பா வீட்டு சொத்து முழுசா உனக்கு, உன் தங்கச்சி எனக்கு. இல்ல நியாய தர்மம் பேசுன என் கூட சேர்ந்து கம்பி எண்ணனும். நான் ஆம்பள ஆயிரம் தப்பு பண்ணுவேன். ஆனா நீ..."என்று செந்தில் மிரட்ட கவிதா அடங்கி போனாள்.
தமக்கையே தன்னை காக்கக்கவில்லை என்றதும் தன்னை காக்க யாரும் இல்லை என நினைத்துக் கொண்டிருந்தவளை அந்த நரகத்திலிருந்து மீட்டிருந்தான் சாகித்யன்.
சாகித்யன் நீதிமன்ற விசாரணைக்கு தேவையான விபரங்களை சரிபார்த்துக் கொண்டிருக்க, வேகமாக உள்ளே வந்த காவலர் ஒருவர்
"சார் உங்கள பாக்க சுதா பொண்ணோட அப்பா அம்மா வந்திருக்கிறாங்க." என்று கூற, அவன் புருவங்கள் சுருங்க நிமிர்ந்து பார்த்தவன்
"வர சொல்லுங்க." என்று கூற, அடுத்த சில வினாடிகளால் அவன் முன் இருவரும் வந்து நின்றன.
"கோர்ட் விசாரண நாளைக்கு தான..." என்று கேள்வியாக நிறுத்தியவனை நிமிர்ந்தும் பார்க்காது
"நாங்க கேஸ திரும்ப வாங்க வந்துருக்கோம்." என்று வார்த்தைகளை மென்று விழுங்க, அவர்களை அழுத்தமாக பார்த்தவாறு
"பெத்த பாசம்... மூத்த பொண்ணு மேல இருக்கிற பாசம் சின்ன பொண்ணு மேலயும் இருந்திருக்கலாம்" என்று நக்கலாக கூற,
"நாளைக்கு விசயம் வெளிய தெரிஞ்ச என் சின்ன பொண்ணு வாழ்க்கையும் தான் நாசமா போகும். வேண்டாம் சார் நாங்க வெளிய தல காட்ட முடியாது." என்று சுதாவின் தாய் கெஞ்ச,
"சரி வழக்க வாபஸ் வாங்கிட்டு உங்க சின்ன பொண்ணுக்கு என்ன செய்ய போறீங்க." என்று கேள்வியாக கேட்க அதற்கு இருவரிடமும் பதில் சொல்ல தைரியமில்லை.
சுதாவின் வழக்கை முதலில் விசாரித்த இன்ஸ்பெக்டர் வேகமாக சாகித்யன் காதில் ஏதோ சொல்ல, எதிரில் இருந்தவர்களை பார்த்த பார்வையில் அணல் தெரித்தது. சுதாவின் அம்மாவை உருத்து விழித்தபடி
"அன்னைக்கு கனவுல எம்பொண்ணு கதறி அழறான்னு சொன்னீங்க. காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டேன். எந்த நரகத்தில இருந்து உங்க பொண்ணு தப்பிச்சு வந்திருக்கிறாளோ அதிலே தள்ளி விட பாக்கிறீங்க." என்று ஆவேசமாக பேச, தங்கள் திட்டம் தெரிந்து விட்டதில் முதலில் பதறி, பின் தன்னை திடப்படுத்துக் கொண்டவர்
"எம் பொண்ணுக்கு எது செய்யணும்னு எனக்கு தெரியும். நாளைக்கு அவ கோர்ட்க்கு வந்து நாங்க சொல்றத தான் சொல்லுவா. நாளை மறு நாள் அவளுக்கும் எம் மருமகன் செந்திலுக்கும் கல்யாணம்." என்று கூறிவிட்டு செல்ல, சாகித்யன் இதழ்களில் விஷமப்புன்னகை தோன்றியது.
அடுத்த நாள் நீதிமன்றத்தில் சுதாவின் வழக்கு விசாரணை ஆரம்பிக்க, மொத்த கவனமும் சுதாவின் மீது தான் இருந்தது. ஆனால் அவளோ யாரையும் பார்க்காமல் தனது வயிற்றில் இருக்கும் ஆறு மாத கருவின் முதல் அசைவில் உள்ளுக்குள் பயந்து வயிற்றை வெறித்த பார்த்துக் கொண்டிருந்தாள்.
சுதா பெற்றோர் கூறிய குடும்ப கௌரவம், அக்காவின் வாழ்க்கை, தன் எதிர்காலம், குழந்தையின் நிலை என அனைத்தையும் நினைத்து மௌனமாக நின்றாள். ஒவ்வொரு சாட்சியாக விசாரணை செய்யப்பட, செந்தில் வழக்கறினர்
"இதில் எனது கட்சிக்காரர் சுதாவை கடத்தியதுற்கு எந்த வித ஆதாரமும் இல்லை யுவர் ஆனர். சுதாவே விருப்பப்பட்டு தான் எனது கட்சிகாரருடன் சென்றுள்ளார். இப்போது காவல் துறை செந்தில் மீது வீண் பழியை சுமத்தியிருக்கிறார்கள் என்பதை நாம் சுதாவை விசாரித்தாலே தெரிந்து கொள்ளலாம்..." என்று கடத்தலை கள்ளக்காதல் என்று பேச, எதற்கு சுதாவிடம் பதில் இல்லை.
அவள் அமைதியை மற்றவர்கள் புன்னகையுடன் பார்க்க, சாகித்யன் தன் உணர்வுகளை வெளிக்காட்டாத முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அரசு தரப்பு வக்கில் எழுந்து
"சுதாவை விசாரிப்பதற்கு முன் முக்கிய சாட்சி ஒன்றை விசாரிக்க அனுமதி வேண்டும்." என கோரிக்கை வைக்க, அனைவரும் யார் என்று யோசிக்கும் வேலையில், சாட்சி கூண்டில் சந்துரு வந்து நின்றான்.
சந்துவை பார்த்தும் பெற்றோர் பிடியிலிருந்து ஒடி வந்த சுதா அவனை கட்டிக் கொண்டு அழ, அவளை இழுத்து வர முயன்ற அவள் பெற்றோரை சாகித்யன் தடுத்து விட்டான்.
அரசு தரப்பு வக்கீல் சந்துவுவையும் சாதாவையும் சேர்த்தே விசாரிக்க ஆரம்பித்தார். அதில் இருவரும் தங்கள் காதலை ஒத்துக்கொள்ள, பின் சுதா தனக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் கூறி முடித்தாள்.
"அங்க இருந்த ஒவ்வொரு நாளும் எனக்கு நரகமா தான் இருந்துச்சு. ஒருவழியா தப்பிச்சிட்டேன்னு நினைச்சு சந்தோஷப்படுறதுக்குள் அந்த நாய் கூடவே கல்யாணம் பண்ணி வைக்க போறதா சொல்றாங்க." என்று சுதா கதறி அழ அவளை ஆதரவாக பிடித்துக் கொண்ட சந்துரு,
"எனக்கு சுதாவ சின்னதுல இருந்தே பிடிக்கும். அவ மைனர் பொண்ணுன்னு தான் நான் என் காதல வீட்டுல சொல்ல.
இப்போ அவ மேஜர் என் கூட அனுப்பி வையுங்க நான் பாத்துக்கிறேன். பொறக்க போற குழந்தையும் எங்க குழந்தையா வளரட்டும்." என சந்துரு பேச பேச அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தன.
சந்துரு தன்னுடன் தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் ஏற்றுக் கொள்வான் என சுதாவுமே எதிர் பார்க்கவில்லை.
வழக்கு இவ்வாறு மாறக்கூடும் என முன்பே யோசித்து வைத்திருந்த சாகித்யன் சந்துருவிடம் பேசி நீதிமன்றத்திற்கு வரவழைத்தான். அவனுமே காதலில் உறுதியாக இருக்க, சுதா வழக்கில் சம்மந்தப்ட்ட அனைவருக்கும் தண்டணை கிடைத்ததும் காதலியும் தான் வேலை செய்யும் இடம் நோக்கி பறந்துவிட்டான்.
அனைத்தையும் முடித்து வீடு வந்த கணவனை கட்டி தழுவி கண்ணத்தில் முத்தமிட்டு ஆரவாரமாக வரவேற்ற அமுதரசி
"யு ஆர் க்ரேட் சகித்தான்..." என்று கூற, அவளை தூக்கி சுற்று சுற்றி இறக்கி விட்டவன்,
"உனக்கு பிடிக்குமேன்னு தான் இந்த வேலைக்கு வந்ததேன். இப்போ நீ கொடுத்த பரிசுல எனக்குமே பிடிக்க ஆரம்பிச்சிடு." என்று தன்னவள் கண்ணம் கிள்ளி சாகித்யன் கூற,
"எனக்காகவா..." என்று இன்பமாய் அதிர்ந்து அமுதரசி கேட்க,
"நமக்காக..." என்று கொஞ்சியவனின் மொழியில் உலகம் மறந்தாள் பாவையவள்.
நாட்கள் வண்ணமயமாக நகர எட்டு மாதம் எவ்வாறு சென்றது என்று சொல்ல முடியாதபடி வேகமாக சென்றது. அதில் அமுதரசி சாகித்யன் வாழ்வில் கொஞ்சல் செல்ல சண்டை நகர, சக்கரவர்த்தி கார்த்திகா வாழ்வில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.
சக்கரவர்த்தி தன்னில் அமுதரசி தம்பியின் மனைவி என்ற உறவை அழுத்தமாக பதிய வைத்துக் கொண்டு கார்த்திகாவிடம் நட்பாக பழக நினைக்க, கார்த்திகாவிடம் பெரிதாக எந்த எதிர் விணையும் இருப்பதில்லை.
சொல்லப்போனால் இன்னும் இருவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் ரூம்மேட் என்று நிலையை தாண்டவில்லை. அலுவலக விசயத்தை சாதரணமாக பேசுபவள், சொந்த விஷயம் என்றால் ஓர் இரு வார்த்தைகளுடன் முடித்துக் கொள்வாள்.
அவளின் மௌனத்திற்கு காரணம் புரியாது தவித்த சக்கரவர்த்தி பொறுமையிழந்து அவளிடமோ காரணம் கேட்க, கார்த்திகா நிதாரனமாக,
"போதையில கூட நான் உங்க கண்ணுக்கு பிடிச்ச மாதிரி இல்ல. பிடிக்காம நீங்க என் கூட வாழ வேண்டாம்." என்று கூற, அவள் கூறியதை கிரகிக்க முயன்றவனுக்கு தான் அன்று போதையில் கூறியதை மனைவி இன்னும் நினைவில் வைத்து கொண்டிருப்பதை நினைத்து
"இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் கடவுள் ஏன் இவ்வளவு நியாபக சக்தியை கொடுத்திருக்கான்னு தெரியல. அவங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறதே இந்த அப்பாவி புருஷன்கள் வேலையா போச்சு." என்று மனதுக்குள் புலம்ப மட்டுமே முடிந்தது.
அதன் பிறகு சக்கரவர்த்தி என்ன முயற்சி செய்தாலும் அது கார்த்திகாவை சிறிதும் அசைக்கவில்லை. சக்கரவர்த்தியின் கவனம் முழுவதும் கார்த்திகாவின் மீதிருக்க, அமுதரசியை பற்றிய நினைவே அவனிடம் இல்லை.
இதற்கிடையில் கீர்தனாவிற்கு குழந்தை பிறந்திருக்க, தோழிகள் இருவரும் சென்னை வந்து சேர்ந்தன. திருமணத்திற்கு பின் இருவரும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை. அவரவர் வேலை பளு காரணமாக சந்திப்பு நிகழவில்லை.
குழந்தை பிறந்த பதினாறாவது நாள் தொட்டிலிலிட்டு பெயரிட வேண்டும் என பெரியவராகள் முடிவு செய்ய, கீர்த்தனா பெயர் சூட்டுவிழா மதுரையில் தங்கள் வீட்டில் தான் நடைபெற வேண்டும் என அடம்பிடிக்க,
"கீர்த்தி குழந்தை பெறந்த உடனே உன்னால ட்ராவல் பண்ண முடியாது." என்று கார்த்திகா எவ்வளவோ எடுத்து கூறியும் அவள் கேட்பதாக இல்லை.
"இது என் குழந்தை. அவன் பெயர் வைக்கிற பங்ஷன் எங்க நடக்கணும்னு நான் தான் முடிவு செய்வேன். என் உடம்ப பாத்துக்க எனக்கு தெரியும் தேவையில்லாம நீ பேசாத. என்னமோ பத்து புள்ள பெத்தவ மாதிரி பேசுறீங்க." என்று கீர்த்தனா கார்த்திகாவுடன் அமுதரசியையும் சேர்த்து பேச, அது இருவருக்கும் சுருக்கென்று இருந்தது.
கீர்த்தனாவின் விருப்பப்படியே மதுரையில் பெயர் சூட்டுவிழா விமரிசையாக நடைபெற, அதை பார்த்துக் கொண்டிருந்த அன்பரசிக்கு பேசுவதற்கு வாய் பரபரத்தாலும் மகளின் பெருட்டு அமைதியானார்.
அன்பரசி எதாவது பேச நினைத்தாலே அமுதரசி அவர் முன் தோன்றி எச்சரிக்கை செய்ய, அவருக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இல்லாமல் போனது. உறவுகள் அனைத்து நடப்பை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டன.
மணிமேகலை கூட அன்பரசியின் அமைதியில் வியப்படைந்ததுடன் அமுதரசியை மெச்சுதலுடன் பார்த்துவிட்டு சென்றார்.
மலரும்...