அம்மு அழகன்
Moderator
அவர் கேட்கும் பொழுது பூஜா பக்கத்தில் இருக்க தாய் தந்தை இழப்பில் அருந்ததிக்கு உடல் நலம் சரியில்லாமல் போக அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருந்தார் கனகா.
"ஏம்பா இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்கா? இப்பதான் என் புள்ளையும் மருமகளையும் பறிகொடுத்தேன் அதுக்குள்ள என் பேத்தியையும் என்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறீங்களே இதெல்லாம் உங்களுக்கு நியாயமா படுதா? இதுக்காகத்தான் எங்க பேத்தி மேல பாசமாய் இருக்கிறது மாதிரி அடிக்கடி வீட்டுக்கு வந்து போனீங்களா.."
"ஐயோ மன்னிச்சிடுங்க ஐயா அப்படி எல்லாம் கிடையாது நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க எப்படி வயசான காலத்துல இந்த ரெண்டு பெண் குழந்தைகளையும் வளர்த்து படிக்க வச்சு அவர்களுக்கு நல்லபடியாக சீர் சனம் நகை நட்டு எல்லாம் போட்டு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க? எங்களுக்கும் குழந்தையே இல்ல நீங்க கவலைப்படாதீங்க உங்க வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு வீட்டை நான் சொந்தமா வாங்கிட்டேன்..உங்களுக்கு எப்ப எல்லாம் உங்க பேத்திய பாக்கணும்னு தோணுதோ அப்ப எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம நீங்க வந்துடலாம்.."
"வாய மூடு பா உனக்கு எப்ப என் பேத்தியை நான் கொடுக்கிறேன்னு சொன்னேன்?"என்றார் காட்டமக ராமானுஜம்.
"எனக்கு அவரோட போக விருப்பம் தான் தாத்தா.."என்று அவர்கள் இருவரும் வாதிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இடைப் புகுந்தாள் பூஜா.
தான் தூக்கி வளர்த்த பேத்தி பேசியதை கேட்டு அவளை அதிர்ச்சியாக பார்த்த ராமானுஜம் அடுத்து என்ன பேச வேண்டும் என்பதே மறந்து சிலையாக நிற்க, ஈஸ்வர் உதடுகளில் வெற்றி புன்னகை மலர்ந்தது.
"இங்க பாருங்க தாத்தா என் அப்பா அம்மா இருந்த காலத்திலேயே உங்களுக்கு அந்த அருந்ததியை தான் ரொம்ப பிடிக்கும்.. இப்ப அவங்க ரெண்டு பேரும் இல்ல உங்க ரெண்டு பேரோட பாசம் முழுக்க முழுக்க அவளுக்கு மட்டும் தான் கிடைக்கும் காலம் முழுக்க நான் இப்படி எல்லாத்துக்கும் ஏங்கி ஏங்கி சாக முடியாது.. எனக்குன்னு ஒரு ஆசை சொந்த விருப்பம் எல்லாம் இருக்குது.. எல்லாத்துக்கும் மேல நான் கேட்டா எதையும் வாங்கி கொடுக்கிற அளவுக்கு உங்ககிட்ட பணம் இருக்கா? அப்பா அம்மா இல்லாத எனக்கு உமா அம்மாவும் ஈஸ்வர் அப்பாவும் கண்டிப்பா பாசம் கொடுப்பாங்க..நீங்க என்ன சொன்னாலும் நான் கண்டிப்பா கேக்க மாட்டேன் அவங்க ரெண்டு பேர் கூடவும் தான் போக போறேன் போங்க.."என்று சொல்லிவிட,ஏற்கனவே இரு உயிர்களை பலி கொடுத்து மனமுடைந்து போயிருந்த ராமானுஜம் அவள் பேசியதை கேட்டு இன்னும் மனதளவில் மனமுடைந்து போனார்.
"கேட்டீங்களா சார் உங்க பேத்திக்கு சாரி சாரி என்னோட பொண்ணுக்கு என் கூட வர தான் விருப்பம் இனிமே உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.."என்றவர் அப்போதே கையோடு பூஜாவையும் அழைத்துக் கொண்டு செல்ல,ஆரம்பம் முதலே அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக சந்தர்ப்பம் பார்த்து காத்துக் கொண்டிருந்த பூஜாவுக்கு பெரும் வாய்ப்பாக ஒரு பணக்கார வீட்டில் அவர்களுக்கு குழந்தையாக வளரப்போவதை நினைத்து மிகவும் சந்தோஷமாக ஈஸ்வரன் அழைக்க யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கிளம்பி சென்று விட்டாள்.
வீட்டிற்கு வந்த கனகா பேத்தியை தேட அவளோ வீட்டில் எங்கும் தென்படாமல் போக, கணவரிடம் சென்று பேத்தியை பற்றி கேட்க அவரை உணர்வுகள் இல்லாது பார்த்த ராமானுஜம் நடந்த அனைத்தையும் சொல்ல, அவர் சொன்னதை கேட்டு தன் நெஞ்சை பிடித்துக் கொண்டார் கனகா.
அதன்பிறகு நாட்கள் செல்லச் செல்ல அனைத்தையும் ஏற்க பழகிக் கொண்டார்கள் வயதான தம்பதிகள் இருவரும்.
உடன்பிறந்த தமக்கை இல்லாமல் துடிதுடித்துப் போனது என்னவோ அருந்ததி மட்டும்தான்.
"பாட்டி தாத்தா அக்கா எங்க?"என்று இருவரிடமும் கேட்டு கேட்டு ஒரு கட்டத்தில் ஓய்ந்து போனவள் பதில் வராமல் போக அதை அப்படியே விட்டு விட்டாள்.
ஈஸ்வர் சொன்னது போலவே மனைவியையும் தன் தத்து மகளான பூஜாவையும் அழைத்துக் கொண்டு அருந்ததி வீட்டிற்கு பக்கத்து வீட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து விட்டார்கள்.
எதர்ச்சியாக ஒரு நாள் அவ் வீட்டில் இருந்த தன் அக்காவை பார்த்ததும் அருந்ததியின் சந்தோஷம் தாள முடியவில்லை.
வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவள் வீட்டிற்குள் ஓடிவந்து தாத்தாவிடமும் பாட்டியிடமும் "தாத்தா பாட்டி அக்கா பக்கத்து வீட்டுல தான் இருக்காங்க நான் இப்பதான் பார்த்தேன் நம்ம எல்லாரும் இங்கே இருக்கும்போது அவங்க ஏன் அங்கே இருக்காங்க? எனக்கு அக்கா கூட விளையாடனும் அக்காவை பார்க்கணும் கூட்டிட்டு போங்க பாட்டி.."என்று மழலை குரலில் கேட்க, அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார் கனகா.
"இங்க பாருடா அருந்ததி இனிமே அவ உனக்கு அக்கா கிடையாது.. எப்ப அவளுக்கு நீ முக்கியமில்ல அவளோட சந்தோசம் மட்டும் தான் அவளுக்கு முக்கியம்னு இந்த வீட்டை விட்டு நம்மள விட்டு அடுத்தவங்களை நம்பி போனாளோ அப்பவே அவளுக்கும் நமக்கும் இருந்த எல்லாம் முடிஞ்சிருச்சு.. உங்க அக்கா அங்கே இருக்கிறது தான் நமக்கும் சந்தோசம் அவகூட நமக்கு இனி எந்த உறவும் இல்லை.."என்று சொல்லிவிட, சிறு குழந்தைக்கு அது புரியவில்லை என்றாலும் தான் அக்காவை பற்றி எல்லாம் பேசும்போது பாட்டி அழுவது பிடிக்காமல் போக பூஜாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதிற்குள்ளேயே மறைத்துக் கொண்டாள்.
ஈஸ்வரும் உமாவும் சொன்னது போலவே பூஜாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள தான் அவர்கள் பிள்ளை தான் தன்னை பெற்றவர்கள் இவர்கள்தான் என்று பூஜா மனதிலும் ஆழ்ந்து பதிந்து போக, சிறுவயதிலேயே அவளுக்கு பணக்கார வாழ்க்கையின் மீது இருந்த ஆசை எல்லாம் சேர்ந்து தன் உடன் பிறந்த தங்கை தாத்தா பாட்டி அனைவரையும் மறந்து வாழ்க்கையில் முன்னேறி போனாள்.
அருந்ததிக்கும் சற்று விவரம் தெரிய ஆரம்பித்த வயதில் தான் பூஜா தங்களை விட்டு வேண்டுமென்றே சென்று விட்டாள் என்பதை புரிந்து கொண்டவள் அதன் பிறகு எங்காவது பூஜாவை பார்த்தால் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு சென்றுவிடுவாள்.
இப்படி இருக்க ஈஸ்வர் உமா இருவரும் ஒரு விசேஷமாக வெளியூருக்கு சென்று இருக்க அந்த நேரத்தில் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது பூஜாவிற்கு.
அவளுக்குத்தான் தங்கை மீது வெறுப்பே தவிர அருந்ததிக்க அல்லவே!!
பூஜாவிற்கு உடல் நலம் சரியில்லை என்பதை அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி மூலம் தெரிந்து கொண்டவள் இரவு முழுவதும் அவள் உடன் இருந்து பார்த்துக் கொள்ள தங்கையாக இருந்தவள் தாயாக மாறி போக, அப்போதும் தன் தங்கை மீது பூஜாவிற்கு பாசம் வரவில்லை.
அவளை தன்னுடைய தங்கை என்று சொல்வதையே பெரும் அவமானமாக கருதியவள் அவள் செய்த பணிவிடைக்கு பணத்தையும் கொடுத்துவிட, அதை புன்னகையுடன் வாங்கிக் கொண்ட அருந்ததி கோவிலில் சுத்தம் செய்யும் நபருக்கு தானமாக கொடுத்து விட்டாள்.
ராமானுஜம் கனகா இருவராலும் பேத்திக்கு அனைத்தையும் வாங்கி கொடுக்க முடியாவிட்டாலும் அவள் கேட்டதை வாங்கி கொடுத்து அவளை நன்றாக படிக்க வைத்தார்கள்.
தாத்தா பாட்டி இருவரின் அரவணைப்பிலும் நன்றாக வளர ஆரம்பித்தாள் அருந்ததி.
"அம்மாடி அருந்ததி உனக்கு வர்ற சனிக்கிழமை ஸ்கூல் இருக்கா?"என்று ராமானுஜம் கேட்க, ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டிருந்த அருந்ததி அதை விட்டுவிட்டு "இல்ல தாத்தா எனக்கு அன்னைக்கு லீவு தான்.."என்றிட, கனகா கணவனை பார்க்க ராமானுஜம் தன் கண்களை மூடி திறந்தார்.
"அது ஒன்னும் இல்லடா அருந்ததி உன்னோட பாட்டு எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு இல்லையா? சனிக்கிழமை பக்கத்துல இருக்க கோவிலில் ஒரு சிறப்பு பூஜை ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம்.. அதுல உன் திருவாயால் பாடல் பாடினால் அவங்க ரொம்ப சந்தோசமா இருக்குனு சொன்னாங்க.. நான் உன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கேன் என்ன சொல்ற?"
"இதுல என்ன இருக்குது தாத்தா என் கிட்ட கேட்க வேண்டிய அவசியம் என்ன நீங்களே அவங்க கிட்ட சொல்ல வேண்டியது தானே? கட்டாயம் சனிக்கிழமை நம்ம எல்லாரும் அந்த கோவிலுக்கு போகலாம்.. சரி தாத்தா நான் இந்த ட்ராயிங் கம்ப்லிட் பண்ணிட்டேன் ஹோம் ஒர்க் இருக்கு போய் பார்க்கிறேன்.."என்று அருந்ததி தான் வரைந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல,அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் கனகா.
"அஞ்சலி தான் அருந்ததி பூஜா ரெண்டு பேரையும் பெற்றெடுத்தா! அவ வயித்துல பிறந்த பூஜா எத பத்தியும் கவலைப்படாம அவ சந்தோஷத்தை மட்டும் நினைச்சுட்டு இந்த சின்ன வயசுலயே நம்மளை விட்டுட்டு போயிட்டா.. அருந்ததி தேவதை மாதிரி நம்ம கூட இருந்து எவ்வளவு சந்தோஷமா நம்மளை பார்த்துக்கிறாள் இவ சந்தோசம் எப்பவுமே இப்படியே இருக்கணும்.."என்று கணவரிடம் சொல்ல அதை ஆமோதிப்பது போல் கண்களை மூடி திறந்தார் ராமானுஜம்.
பாவம் அவர்கள் வேண்டுதல் அந்த கடவுளின் காதில் விழவில்லை போலும்!!
அருந்ததி வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப் போவது அந்த கோவில் தான் என்பது அந்த கணம் அந்த பெரியவர்கள் இருவருக்கும் தெரியாமல் போனது!
அருந்ததி பாடுவதாக சொன்ன அந்த கோவில் தான் துரியோதனன் பாட்டி வேண்டிக்கொண்டு அபிமன்யு, கர்ணன் இவரிடமும் தன் பேரனை அழைத்துக் கொண்டு செல்லும்படி சொன்னதும் அந்த கோவிலுக்கு தான்.
இவர்கள் இருவரும் ஒன்றாக சந்திக்கும் பொழுது நடக்கப் போவது தான் என்னவோ??
"ஏம்பா இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்கா? இப்பதான் என் புள்ளையும் மருமகளையும் பறிகொடுத்தேன் அதுக்குள்ள என் பேத்தியையும் என்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறீங்களே இதெல்லாம் உங்களுக்கு நியாயமா படுதா? இதுக்காகத்தான் எங்க பேத்தி மேல பாசமாய் இருக்கிறது மாதிரி அடிக்கடி வீட்டுக்கு வந்து போனீங்களா.."
"ஐயோ மன்னிச்சிடுங்க ஐயா அப்படி எல்லாம் கிடையாது நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க எப்படி வயசான காலத்துல இந்த ரெண்டு பெண் குழந்தைகளையும் வளர்த்து படிக்க வச்சு அவர்களுக்கு நல்லபடியாக சீர் சனம் நகை நட்டு எல்லாம் போட்டு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க? எங்களுக்கும் குழந்தையே இல்ல நீங்க கவலைப்படாதீங்க உங்க வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு வீட்டை நான் சொந்தமா வாங்கிட்டேன்..உங்களுக்கு எப்ப எல்லாம் உங்க பேத்திய பாக்கணும்னு தோணுதோ அப்ப எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம நீங்க வந்துடலாம்.."
"வாய மூடு பா உனக்கு எப்ப என் பேத்தியை நான் கொடுக்கிறேன்னு சொன்னேன்?"என்றார் காட்டமக ராமானுஜம்.
"எனக்கு அவரோட போக விருப்பம் தான் தாத்தா.."என்று அவர்கள் இருவரும் வாதிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இடைப் புகுந்தாள் பூஜா.
தான் தூக்கி வளர்த்த பேத்தி பேசியதை கேட்டு அவளை அதிர்ச்சியாக பார்த்த ராமானுஜம் அடுத்து என்ன பேச வேண்டும் என்பதே மறந்து சிலையாக நிற்க, ஈஸ்வர் உதடுகளில் வெற்றி புன்னகை மலர்ந்தது.
"இங்க பாருங்க தாத்தா என் அப்பா அம்மா இருந்த காலத்திலேயே உங்களுக்கு அந்த அருந்ததியை தான் ரொம்ப பிடிக்கும்.. இப்ப அவங்க ரெண்டு பேரும் இல்ல உங்க ரெண்டு பேரோட பாசம் முழுக்க முழுக்க அவளுக்கு மட்டும் தான் கிடைக்கும் காலம் முழுக்க நான் இப்படி எல்லாத்துக்கும் ஏங்கி ஏங்கி சாக முடியாது.. எனக்குன்னு ஒரு ஆசை சொந்த விருப்பம் எல்லாம் இருக்குது.. எல்லாத்துக்கும் மேல நான் கேட்டா எதையும் வாங்கி கொடுக்கிற அளவுக்கு உங்ககிட்ட பணம் இருக்கா? அப்பா அம்மா இல்லாத எனக்கு உமா அம்மாவும் ஈஸ்வர் அப்பாவும் கண்டிப்பா பாசம் கொடுப்பாங்க..நீங்க என்ன சொன்னாலும் நான் கண்டிப்பா கேக்க மாட்டேன் அவங்க ரெண்டு பேர் கூடவும் தான் போக போறேன் போங்க.."என்று சொல்லிவிட,ஏற்கனவே இரு உயிர்களை பலி கொடுத்து மனமுடைந்து போயிருந்த ராமானுஜம் அவள் பேசியதை கேட்டு இன்னும் மனதளவில் மனமுடைந்து போனார்.
"கேட்டீங்களா சார் உங்க பேத்திக்கு சாரி சாரி என்னோட பொண்ணுக்கு என் கூட வர தான் விருப்பம் இனிமே உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.."என்றவர் அப்போதே கையோடு பூஜாவையும் அழைத்துக் கொண்டு செல்ல,ஆரம்பம் முதலே அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக சந்தர்ப்பம் பார்த்து காத்துக் கொண்டிருந்த பூஜாவுக்கு பெரும் வாய்ப்பாக ஒரு பணக்கார வீட்டில் அவர்களுக்கு குழந்தையாக வளரப்போவதை நினைத்து மிகவும் சந்தோஷமாக ஈஸ்வரன் அழைக்க யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கிளம்பி சென்று விட்டாள்.
வீட்டிற்கு வந்த கனகா பேத்தியை தேட அவளோ வீட்டில் எங்கும் தென்படாமல் போக, கணவரிடம் சென்று பேத்தியை பற்றி கேட்க அவரை உணர்வுகள் இல்லாது பார்த்த ராமானுஜம் நடந்த அனைத்தையும் சொல்ல, அவர் சொன்னதை கேட்டு தன் நெஞ்சை பிடித்துக் கொண்டார் கனகா.
அதன்பிறகு நாட்கள் செல்லச் செல்ல அனைத்தையும் ஏற்க பழகிக் கொண்டார்கள் வயதான தம்பதிகள் இருவரும்.
உடன்பிறந்த தமக்கை இல்லாமல் துடிதுடித்துப் போனது என்னவோ அருந்ததி மட்டும்தான்.
"பாட்டி தாத்தா அக்கா எங்க?"என்று இருவரிடமும் கேட்டு கேட்டு ஒரு கட்டத்தில் ஓய்ந்து போனவள் பதில் வராமல் போக அதை அப்படியே விட்டு விட்டாள்.
ஈஸ்வர் சொன்னது போலவே மனைவியையும் தன் தத்து மகளான பூஜாவையும் அழைத்துக் கொண்டு அருந்ததி வீட்டிற்கு பக்கத்து வீட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து விட்டார்கள்.
எதர்ச்சியாக ஒரு நாள் அவ் வீட்டில் இருந்த தன் அக்காவை பார்த்ததும் அருந்ததியின் சந்தோஷம் தாள முடியவில்லை.
வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவள் வீட்டிற்குள் ஓடிவந்து தாத்தாவிடமும் பாட்டியிடமும் "தாத்தா பாட்டி அக்கா பக்கத்து வீட்டுல தான் இருக்காங்க நான் இப்பதான் பார்த்தேன் நம்ம எல்லாரும் இங்கே இருக்கும்போது அவங்க ஏன் அங்கே இருக்காங்க? எனக்கு அக்கா கூட விளையாடனும் அக்காவை பார்க்கணும் கூட்டிட்டு போங்க பாட்டி.."என்று மழலை குரலில் கேட்க, அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார் கனகா.
"இங்க பாருடா அருந்ததி இனிமே அவ உனக்கு அக்கா கிடையாது.. எப்ப அவளுக்கு நீ முக்கியமில்ல அவளோட சந்தோசம் மட்டும் தான் அவளுக்கு முக்கியம்னு இந்த வீட்டை விட்டு நம்மள விட்டு அடுத்தவங்களை நம்பி போனாளோ அப்பவே அவளுக்கும் நமக்கும் இருந்த எல்லாம் முடிஞ்சிருச்சு.. உங்க அக்கா அங்கே இருக்கிறது தான் நமக்கும் சந்தோசம் அவகூட நமக்கு இனி எந்த உறவும் இல்லை.."என்று சொல்லிவிட, சிறு குழந்தைக்கு அது புரியவில்லை என்றாலும் தான் அக்காவை பற்றி எல்லாம் பேசும்போது பாட்டி அழுவது பிடிக்காமல் போக பூஜாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதிற்குள்ளேயே மறைத்துக் கொண்டாள்.
ஈஸ்வரும் உமாவும் சொன்னது போலவே பூஜாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள தான் அவர்கள் பிள்ளை தான் தன்னை பெற்றவர்கள் இவர்கள்தான் என்று பூஜா மனதிலும் ஆழ்ந்து பதிந்து போக, சிறுவயதிலேயே அவளுக்கு பணக்கார வாழ்க்கையின் மீது இருந்த ஆசை எல்லாம் சேர்ந்து தன் உடன் பிறந்த தங்கை தாத்தா பாட்டி அனைவரையும் மறந்து வாழ்க்கையில் முன்னேறி போனாள்.
அருந்ததிக்கும் சற்று விவரம் தெரிய ஆரம்பித்த வயதில் தான் பூஜா தங்களை விட்டு வேண்டுமென்றே சென்று விட்டாள் என்பதை புரிந்து கொண்டவள் அதன் பிறகு எங்காவது பூஜாவை பார்த்தால் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு சென்றுவிடுவாள்.
இப்படி இருக்க ஈஸ்வர் உமா இருவரும் ஒரு விசேஷமாக வெளியூருக்கு சென்று இருக்க அந்த நேரத்தில் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது பூஜாவிற்கு.
அவளுக்குத்தான் தங்கை மீது வெறுப்பே தவிர அருந்ததிக்க அல்லவே!!
பூஜாவிற்கு உடல் நலம் சரியில்லை என்பதை அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி மூலம் தெரிந்து கொண்டவள் இரவு முழுவதும் அவள் உடன் இருந்து பார்த்துக் கொள்ள தங்கையாக இருந்தவள் தாயாக மாறி போக, அப்போதும் தன் தங்கை மீது பூஜாவிற்கு பாசம் வரவில்லை.
அவளை தன்னுடைய தங்கை என்று சொல்வதையே பெரும் அவமானமாக கருதியவள் அவள் செய்த பணிவிடைக்கு பணத்தையும் கொடுத்துவிட, அதை புன்னகையுடன் வாங்கிக் கொண்ட அருந்ததி கோவிலில் சுத்தம் செய்யும் நபருக்கு தானமாக கொடுத்து விட்டாள்.
ராமானுஜம் கனகா இருவராலும் பேத்திக்கு அனைத்தையும் வாங்கி கொடுக்க முடியாவிட்டாலும் அவள் கேட்டதை வாங்கி கொடுத்து அவளை நன்றாக படிக்க வைத்தார்கள்.
தாத்தா பாட்டி இருவரின் அரவணைப்பிலும் நன்றாக வளர ஆரம்பித்தாள் அருந்ததி.
"அம்மாடி அருந்ததி உனக்கு வர்ற சனிக்கிழமை ஸ்கூல் இருக்கா?"என்று ராமானுஜம் கேட்க, ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டிருந்த அருந்ததி அதை விட்டுவிட்டு "இல்ல தாத்தா எனக்கு அன்னைக்கு லீவு தான்.."என்றிட, கனகா கணவனை பார்க்க ராமானுஜம் தன் கண்களை மூடி திறந்தார்.
"அது ஒன்னும் இல்லடா அருந்ததி உன்னோட பாட்டு எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு இல்லையா? சனிக்கிழமை பக்கத்துல இருக்க கோவிலில் ஒரு சிறப்பு பூஜை ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம்.. அதுல உன் திருவாயால் பாடல் பாடினால் அவங்க ரொம்ப சந்தோசமா இருக்குனு சொன்னாங்க.. நான் உன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கேன் என்ன சொல்ற?"
"இதுல என்ன இருக்குது தாத்தா என் கிட்ட கேட்க வேண்டிய அவசியம் என்ன நீங்களே அவங்க கிட்ட சொல்ல வேண்டியது தானே? கட்டாயம் சனிக்கிழமை நம்ம எல்லாரும் அந்த கோவிலுக்கு போகலாம்.. சரி தாத்தா நான் இந்த ட்ராயிங் கம்ப்லிட் பண்ணிட்டேன் ஹோம் ஒர்க் இருக்கு போய் பார்க்கிறேன்.."என்று அருந்ததி தான் வரைந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல,அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் கனகா.
"அஞ்சலி தான் அருந்ததி பூஜா ரெண்டு பேரையும் பெற்றெடுத்தா! அவ வயித்துல பிறந்த பூஜா எத பத்தியும் கவலைப்படாம அவ சந்தோஷத்தை மட்டும் நினைச்சுட்டு இந்த சின்ன வயசுலயே நம்மளை விட்டுட்டு போயிட்டா.. அருந்ததி தேவதை மாதிரி நம்ம கூட இருந்து எவ்வளவு சந்தோஷமா நம்மளை பார்த்துக்கிறாள் இவ சந்தோசம் எப்பவுமே இப்படியே இருக்கணும்.."என்று கணவரிடம் சொல்ல அதை ஆமோதிப்பது போல் கண்களை மூடி திறந்தார் ராமானுஜம்.
பாவம் அவர்கள் வேண்டுதல் அந்த கடவுளின் காதில் விழவில்லை போலும்!!
அருந்ததி வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப் போவது அந்த கோவில் தான் என்பது அந்த கணம் அந்த பெரியவர்கள் இருவருக்கும் தெரியாமல் போனது!
அருந்ததி பாடுவதாக சொன்ன அந்த கோவில் தான் துரியோதனன் பாட்டி வேண்டிக்கொண்டு அபிமன்யு, கர்ணன் இவரிடமும் தன் பேரனை அழைத்துக் கொண்டு செல்லும்படி சொன்னதும் அந்த கோவிலுக்கு தான்.
இவர்கள் இருவரும் ஒன்றாக சந்திக்கும் பொழுது நடக்கப் போவது தான் என்னவோ??