அம்மு அழகன்
Moderator
அருந்ததி அந்த தெருவில் பல வருடங்களாக இருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்த அனைவருக்கும் பரிச்சயம்.
அவளை தனியாக விடாமல் அக்கம் பக்கத்தில் இருந்தோர் அவர்களால் முடிந்ததை செய்து கனகாவின் உடலை நல்லபடியாக அடக்கம் செய்து முடித்தார்கள்.
தன் சொந்த பாட்டியின் இறப்பிற்கு கூட பூஜா வரவில்லை.
விஷயம் கேள்விப்பட்டு உமா கண்ணீருடன் பூஜாவிடம் விஷயத்தை தெரிவிக்க, அவளோ சாதாரணமாக "எனக்கு இன்னைக்கு காலேஜ்ல முக்கியமான வொர்க் இருக்கு நான் போறேன்.."என்று சென்ற மகளை அதிர்ச்சியாக பார்த்தார்.
தான் தாய்மை ஊட்டி அன்போடு நல்லபடியாக வளர்த்த குழந்தை இன்று தன் சொந்த பாட்டி இறந்ததை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக கடந்து செல்வதை அதிர்ச்சியுடன் பார்த்தவர் அவளை கடிந்து கொள்ள முடியாமல் அவர் மட்டும் கனகாவின் இறப்பில் கலந்து கொண்டார்.
அருந்ததிக்கு ஆதரவாக அவரும் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து முடித்து விட்டார்.
அடுத்த மூன்று நாட்களும் உமா முடிந்தவரை அவளுடன் வந்து தங்கி விட்டு சென்றார்.
"இங்க பாரு அருந்ததி ஆனது ஆகிப்போச்சு பழசையே நினைச்சுகிட்டு இருந்தா எதுவும் ஆகப்போவதில்லை உன்னோட பாட்டி இப்ப தெய்வமா மாறிட்டாங்க.. எங்க இருந்தாலும் அவங்க உன்னை பார்த்துக்கொண்டு தான் இருப்பாங்க நீயும் என் கூட என் வீட்டுக்கு வந்துடு அருந்ததி.."
"வேண்டாம் மேடம் எனக்கு நீங்க நிறைய உதவி செஞ்சி இருக்கீங்க அதுக்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..இந்த வீட்ல தான் நான் என் அப்பா அம்மா என் தாத்தா பாட்டி எல்லோரும் சந்தோஷமா இருந்தோம்.. இப்ப அவங்க யாரும் என் கூட இல்லாமல் போயிருந்தாலும் அவங்க கூட நான் சந்தோஷமா வாழ்ந்த நினைவு இந்த இடத்துல ஒவ்வொரு மூலை முடுக்கும் இருக்கு அந்த சந்தோஷத்தை விட்டுட்டு என்னால எங்கேயும் வர முடியாது.."என்றவள் இதழ்களில் அதை நினைத்து ஒரு சிறிய புன்னகையும் கண்களில் தாங்க முடியாத கண்ணீருமாக நின்று கொண்டிருந்த அருந்ததியை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனம் வரவில்லை உமாவிற்கு.
எல்லாவற்றிற்கும் மேல் அவளும் தன் உயிர் தோழியின் இரண்டாவது மகள் தன் மகளின் சொந்த தங்கை அவளை அப்படியே விட்டு செல்ல மனம் வரவில்லை.
உமா எவ்வளவு எடுத்து சொல்லியும் அருந்ததி வர முடியாது என்பதில் உறுதியாக இருந்து விட்டாள்.
இந்தக் காலத்தில் யாரும் இல்லாத வீட்டில் வயதுக்கு வந்த பெண்ணை தனியாக விட பயந்த உமா அடுத்து இதைப் பற்றி எடுத்து சொன்னது பூஜாவிடம் தான்.
"இங்க பாருங்க அம்மா அருந்ததி ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு அவளுக்கு எப்படி தன்னோட லைஃபை அடுத்து கண்டினியூ பண்ணனும்னு அவளுக்கே தெரியும்..நீங்க இந்த விஷயத்துல தேவையில்லாம தலையிடாதீங்க என்ன இதுல இன்டெர்ஃபி பண்ணாதீங்க.."என்று முடித்துக் கொள்ள, இதுவரை அவளை ஒரு கடும் சொல் சொல்லாத உமா அன்று நன்றாக திட்டி விட்டார்.
"இது என்ன பழக்கம் பூஜா உன்னை இப்படி தான் நான் வளர்த்தேனா? அன்னைக்கு உன்னோட சொந்த பாட்டி செத்துப் போனது கேட்டு கொஞ்சம் கூட கவலையே இல்லாம போயிட்ட!இன்னைக்கு உன் கூட பிறந்த தங்கச்சி யாருமே இல்லாம அனாதையா இருக்கும்போது அவளை ஆதரவளிக்க வேண்டியது உன்னோட பொறுப்பு தானே! இது ரொம்ப தப்பான பழக்கம் பூஜா நீ இப்படி இருப்பது எனக்கு பிடிக்கலை.."என்று கண்டிப்பாக சொல்ல, அவரை வெறித்துப் பார்த்தாள் பூஜா.
"இப்படி நீங்க மாறுவீங்கன்னு எதிர்பார்த்தேன் அந்த அருந்ததி கூட யார் போய் சேர்ந்தாலும் கடைசில இப்படித்தான் மாறி போயிடுறாங்க அதனாலதான் எனக்கு அவளை சுத்தமா பிடிக்கல..இங்க பாருங்க நீங்க என்னோட அம்மா உங்களை யாருக்கும் நான் விட்டு தர மாட்டேன் அவளுக்காக என்கிட்ட நீங்க இப்படி கோபமா பேசுறது இதுதான் முதலும் கடைசியுமா இருக்கணும் மறுபடியும் இப்படி செஞ்சா அப்புறம் நான் உங்க பொண்ணா இருக்கறதைப் பற்றி யோசிக்க வேண்டி இருக்கும்.."என்று சொல்லிவிட்டு சாதாரணமாக செல்ல, அவள் சொன்னதைக் கேட்டு விக்கித்து போய்விட்டார் உமா.
பூஜா அப்படி சொன்ன பிறகும் அருந்ததியையே அந்த வீட்டிற்கு கூட்டி வரும் தைரியம் அவருக்கு இல்லை.
அதே நேரம் அருந்ததியை அப்படியே தனியாக விடவும் மனம் வராமல், தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை அருந்ததிக்கு துணையாக அந்த வீட்டில் தங்க வைத்தார்.
முதலில் அருந்ததி வேண்டாம் என்று மறுத்து சொன்னாலும் உமா அவளை கெஞ்சி கொஞ்சி ஒத்துக்க வைத்தார்.
பூஜா வீட்டில் இல்லாத நேரம் அருந்ததியை அடிக்கடி வந்து பார்த்து விட்டு செல்வார்.
இப்படியே நாட்களும் கடந்து சென்றிருக்க, அருந்ததி கல்லூரிக்கு செல்லும் முதல் நாளும் வந்தது.
தன்னிடமிருந்து எளிமையான வெள்ளை நிற காட்டன் சுடிதார் அணிந்து கொண்டவள் முதல் நாள் கல்லூரிக்கு செல்ல போகிறோம் என்ற சந்தோஷத்தோடு புகைப்படமாக இருந்த தன் தாய் தந்தை தாத்தா பாட்டி அனைவரையும் கண்டு கையெடுத்து கும்பிட்டு விட்டு கல்லூரிக்கு கிளம்ப,"அருந்ததி இந்தாமா உனக்கு பிடிச்ச லெமன் சாதம் செஞ்சி இருக்கேன் சாப்பிட்டு அப்படியே காலேஜுக்கு எடுத்துட்டு போ.."என்றார் மரகதம்.
கணவனின் கொடுமையால் அவரை விட்டு பிரிந்து வந்தவர் கணவன் என்ன செய்தாலும் அவர் கூடவே சேர்ந்து வாழ வேண்டும் என்று சொன்ன பெற்றோரையும் முழுமையாக வெறுத்துவிட்டு வாழ்க்கையில் பற்று இல்லாமல் இருந்தவரிடம் உமா அருந்ததியை பற்றி சுருக்கமாக எடுத்துச் சொல்ல, இந்த பூமியில் தான் வாழ்வதற்கு இது ஒரு காரணமாக அமையட்டும் என்று மரகதம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.
யாரும் இல்லாத பெண் அவளுக்கு அவரே அனைத்தும்மாக மாறிப்போனார்.
"உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத கஷ்டம் மரகதம் அம்மா நான் ஏதாவது செஞ்சிருப்பென்ல"
"இதில் எனக்கு என்ன கஷ்டம் இருக்க போகுது அருந்ததி நீ சந்தோஷமா இருந்தா அது மட்டும் எனக்கு போதும்.. உனக்கு இப்படி என் கையால உனக்கு புடிச்ச சாப்பாடு எல்லாத்தையும் செஞ்சு தரணும்.. யாருமே இல்லாத உனக்கு நான் அம்மாவாகவும் யாருமே இல்லாத எனக்கு நீ மகளாகவும் இருக்கணும்னு ஆசைப்படுறேன் அது தப்புன்னா சாரி.."
"என்னம்மா இது ஒரு சாதாரண விஷயம் இதுக்கு போய் இவ்வளவு கோச்சிக்கிறீங்க! சரி விடுங்க நான் இனிமே எதுவும் பண்ணல உங்க விருப்பப்படி என்ன வேணாலும் எனக்கு செஞ்சு கொடுங்க.."என்று அவரை தோளோடு அணைத்துக் கொண்டு புன்னகைத்தாள் அருந்ததி.
அவரிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்த அருந்ததி தன் வீட்டு வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு போன் பேசிக் கொண்டிருந்த தமக்கையை கண்டதும் அவளுக்கு எரிச்சலாகி போனது.
தான் பிறந்தது முதல் தன்னோடு பகைமை பூண்டிருந்த தன் தமக்கையை முடிந்தவரை பேசி அவளிடம் அன்பாக இருந்த அருந்ததி தங்கள் பாட்டி இறந்ததுக்கு கூட அவள் வராமல் போனதும் அந்த நிமிடம் அவள் மீது அளவற்ற வெறுப்பு தோன்ற அவளிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள்.
பூஜாவை பார்த்தும் பார்க்காதது போல் அவளை கடந்து செல்ல, போனில் சிரித்து பேசிக் கொண்டிருந்த பூஜா தன் தங்கை தன்னை தாண்டி செல்வதை கண்டதும் அழைப்பை துண்டித்து விட்டு செல்லும் தங்கையை பார்த்தாள்.
வெள்ளை நிற உடையில் தேவதை போல் நடந்து சென்றவளை கண்டதும் அவளுக்குள் எப்போதும் போல் உள்ளுக்குள் இருந்த வெறுப்பு அவளை தூண்டி விட்டது.
'பணக்கார அப்பா அம்மாவுக்கு மகளா வாழ்கிற நான் கூட இவ்வளவு அழகா இல்லாம இருக்கும்போது இவள் மட்டும் எப்படி இந்த நிலைமையிலும் அழகா இருக்கா! ஓ மறந்து போச்சு இன்னைக்கு தானே இவளுக்கு முதல் நாள் காலேஜ் அதான் மேடம் ரொம்ப சந்தோசமா என்னை கூட கண்டுக்காம கிளம்பி போறாங்க போல இருக்கு.. உன்னோட சந்தோசம் நான் இருக்கிற வரை உன் கூட இருக்காது அருந்ததி..'என்று வன்மமாக மனதுக்குள் நினைத்துக் கொண்ட பூஜா மழை பெய்து தேங்கியிருந்த தண்ணீரில் தன் ஸ்கூட்டரை விட அவள் எதிர்பார்த்தது போலவே அருந்ததியின் வெள்ளை நிற உடை கரையாகி போயிருந்தது.
ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவள் தன் வண்டியை நிறுத்தி இவளை திரும்பிப் பார்த்து நக்கலாக புன்னகைத்தபடி "இப்பதான் நீ பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா இருக்க இப்படியே இன்னைக்கு முதல் நாள் காலேஜுக்கு போனா உன் பிரெண்ட்ஸ் எல்லாரும் ஆச்சரியப்பட்டு போவாங்க.."என்று கிண்டலடித்து விட்டு செல்ல தன் உடையை குனிந்து பார்த்த அருந்ததி அது முழுவதுமாக கரையாகி போயிருந்ததை கண்டு எதுவும் சொல்ல முடியாது மீண்டும் தன் வீட்டுக்கு சென்று உடைமாற்ற, மரகதம் அவள் உடையை கண்டதும் கேள்வி கேட்க அவரிடம் ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்டு கல்லூரிக்கு நேரமாகிவிட்டதை உணர்த்து வேகமாக கிளம்பி கல்லூரிக்கு சென்றாள்.
'துரியோதனன் மெடிக்கல் காலேஜ்'என்று தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த கல்லூரியின் வாயிலில் இறங்கி அந்த கல்லூரியை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
'கடவுளே நான் எடுத்துருக்க இந்த மருத்துவத் துறையில் நான் நிறைய சாதிக்கணும் என்னால முடிஞ்ச வரை எல்லாரும் உயிரையும் காப்பாற்ற வேண்டும் இன்றைக்கு நான் எல்லாரையும் இழந்துட்டு நிற்கிறது மாதிரி இங்கே இருக்க யாரும் இனி யாரையும் இழக்கக்கூடாது உங்களோட ஆசிர்வாதம் எப்பவும் போல் எனக்கு கொடுங்க..தாத்தா பாட்டி அப்பா அம்மா நீங்களும் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க..'என்றபடி தன் ஆசைகள் அனைத்தையும் எதிர்பார்த்தபடி கல்லூரியில் கால் எடுத்து வைக்க,அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தது இரு ஜோடி கண்கள்.
"உன்னால தாண்டி என்னோட நட்பு இத்தனை வருஷம் என்னை விட்டு பிரிஞ்சு போயிடுச்சு.. அன்னைக்கு என் வாழ்க்கையில நீ வந்துட்டு போன ஒரு நிமிஷம் என் மொத்த வாழ்க்கையும் அப்படியே மாற்றி போட்டுவிட்டது.. நான் நெனச்சது மாதிரியே இந்த காலேஜுக்கு நீ வந்து சேர்ந்துட்ட இனி உன் வாழ்க்கையில் எப்படி நிம்மதி இருக்கிறது என்று நானும் பார்க்கிறேன்.."என்று வாய் விட்டு வன்மமாக உரைத்தது அந்த குரல்.
அவளை தனியாக விடாமல் அக்கம் பக்கத்தில் இருந்தோர் அவர்களால் முடிந்ததை செய்து கனகாவின் உடலை நல்லபடியாக அடக்கம் செய்து முடித்தார்கள்.
தன் சொந்த பாட்டியின் இறப்பிற்கு கூட பூஜா வரவில்லை.
விஷயம் கேள்விப்பட்டு உமா கண்ணீருடன் பூஜாவிடம் விஷயத்தை தெரிவிக்க, அவளோ சாதாரணமாக "எனக்கு இன்னைக்கு காலேஜ்ல முக்கியமான வொர்க் இருக்கு நான் போறேன்.."என்று சென்ற மகளை அதிர்ச்சியாக பார்த்தார்.
தான் தாய்மை ஊட்டி அன்போடு நல்லபடியாக வளர்த்த குழந்தை இன்று தன் சொந்த பாட்டி இறந்ததை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக கடந்து செல்வதை அதிர்ச்சியுடன் பார்த்தவர் அவளை கடிந்து கொள்ள முடியாமல் அவர் மட்டும் கனகாவின் இறப்பில் கலந்து கொண்டார்.
அருந்ததிக்கு ஆதரவாக அவரும் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து முடித்து விட்டார்.
அடுத்த மூன்று நாட்களும் உமா முடிந்தவரை அவளுடன் வந்து தங்கி விட்டு சென்றார்.
"இங்க பாரு அருந்ததி ஆனது ஆகிப்போச்சு பழசையே நினைச்சுகிட்டு இருந்தா எதுவும் ஆகப்போவதில்லை உன்னோட பாட்டி இப்ப தெய்வமா மாறிட்டாங்க.. எங்க இருந்தாலும் அவங்க உன்னை பார்த்துக்கொண்டு தான் இருப்பாங்க நீயும் என் கூட என் வீட்டுக்கு வந்துடு அருந்ததி.."
"வேண்டாம் மேடம் எனக்கு நீங்க நிறைய உதவி செஞ்சி இருக்கீங்க அதுக்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..இந்த வீட்ல தான் நான் என் அப்பா அம்மா என் தாத்தா பாட்டி எல்லோரும் சந்தோஷமா இருந்தோம்.. இப்ப அவங்க யாரும் என் கூட இல்லாமல் போயிருந்தாலும் அவங்க கூட நான் சந்தோஷமா வாழ்ந்த நினைவு இந்த இடத்துல ஒவ்வொரு மூலை முடுக்கும் இருக்கு அந்த சந்தோஷத்தை விட்டுட்டு என்னால எங்கேயும் வர முடியாது.."என்றவள் இதழ்களில் அதை நினைத்து ஒரு சிறிய புன்னகையும் கண்களில் தாங்க முடியாத கண்ணீருமாக நின்று கொண்டிருந்த அருந்ததியை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனம் வரவில்லை உமாவிற்கு.
எல்லாவற்றிற்கும் மேல் அவளும் தன் உயிர் தோழியின் இரண்டாவது மகள் தன் மகளின் சொந்த தங்கை அவளை அப்படியே விட்டு செல்ல மனம் வரவில்லை.
உமா எவ்வளவு எடுத்து சொல்லியும் அருந்ததி வர முடியாது என்பதில் உறுதியாக இருந்து விட்டாள்.
இந்தக் காலத்தில் யாரும் இல்லாத வீட்டில் வயதுக்கு வந்த பெண்ணை தனியாக விட பயந்த உமா அடுத்து இதைப் பற்றி எடுத்து சொன்னது பூஜாவிடம் தான்.
"இங்க பாருங்க அம்மா அருந்ததி ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு அவளுக்கு எப்படி தன்னோட லைஃபை அடுத்து கண்டினியூ பண்ணனும்னு அவளுக்கே தெரியும்..நீங்க இந்த விஷயத்துல தேவையில்லாம தலையிடாதீங்க என்ன இதுல இன்டெர்ஃபி பண்ணாதீங்க.."என்று முடித்துக் கொள்ள, இதுவரை அவளை ஒரு கடும் சொல் சொல்லாத உமா அன்று நன்றாக திட்டி விட்டார்.
"இது என்ன பழக்கம் பூஜா உன்னை இப்படி தான் நான் வளர்த்தேனா? அன்னைக்கு உன்னோட சொந்த பாட்டி செத்துப் போனது கேட்டு கொஞ்சம் கூட கவலையே இல்லாம போயிட்ட!இன்னைக்கு உன் கூட பிறந்த தங்கச்சி யாருமே இல்லாம அனாதையா இருக்கும்போது அவளை ஆதரவளிக்க வேண்டியது உன்னோட பொறுப்பு தானே! இது ரொம்ப தப்பான பழக்கம் பூஜா நீ இப்படி இருப்பது எனக்கு பிடிக்கலை.."என்று கண்டிப்பாக சொல்ல, அவரை வெறித்துப் பார்த்தாள் பூஜா.
"இப்படி நீங்க மாறுவீங்கன்னு எதிர்பார்த்தேன் அந்த அருந்ததி கூட யார் போய் சேர்ந்தாலும் கடைசில இப்படித்தான் மாறி போயிடுறாங்க அதனாலதான் எனக்கு அவளை சுத்தமா பிடிக்கல..இங்க பாருங்க நீங்க என்னோட அம்மா உங்களை யாருக்கும் நான் விட்டு தர மாட்டேன் அவளுக்காக என்கிட்ட நீங்க இப்படி கோபமா பேசுறது இதுதான் முதலும் கடைசியுமா இருக்கணும் மறுபடியும் இப்படி செஞ்சா அப்புறம் நான் உங்க பொண்ணா இருக்கறதைப் பற்றி யோசிக்க வேண்டி இருக்கும்.."என்று சொல்லிவிட்டு சாதாரணமாக செல்ல, அவள் சொன்னதைக் கேட்டு விக்கித்து போய்விட்டார் உமா.
பூஜா அப்படி சொன்ன பிறகும் அருந்ததியையே அந்த வீட்டிற்கு கூட்டி வரும் தைரியம் அவருக்கு இல்லை.
அதே நேரம் அருந்ததியை அப்படியே தனியாக விடவும் மனம் வராமல், தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை அருந்ததிக்கு துணையாக அந்த வீட்டில் தங்க வைத்தார்.
முதலில் அருந்ததி வேண்டாம் என்று மறுத்து சொன்னாலும் உமா அவளை கெஞ்சி கொஞ்சி ஒத்துக்க வைத்தார்.
பூஜா வீட்டில் இல்லாத நேரம் அருந்ததியை அடிக்கடி வந்து பார்த்து விட்டு செல்வார்.
இப்படியே நாட்களும் கடந்து சென்றிருக்க, அருந்ததி கல்லூரிக்கு செல்லும் முதல் நாளும் வந்தது.
தன்னிடமிருந்து எளிமையான வெள்ளை நிற காட்டன் சுடிதார் அணிந்து கொண்டவள் முதல் நாள் கல்லூரிக்கு செல்ல போகிறோம் என்ற சந்தோஷத்தோடு புகைப்படமாக இருந்த தன் தாய் தந்தை தாத்தா பாட்டி அனைவரையும் கண்டு கையெடுத்து கும்பிட்டு விட்டு கல்லூரிக்கு கிளம்ப,"அருந்ததி இந்தாமா உனக்கு பிடிச்ச லெமன் சாதம் செஞ்சி இருக்கேன் சாப்பிட்டு அப்படியே காலேஜுக்கு எடுத்துட்டு போ.."என்றார் மரகதம்.
கணவனின் கொடுமையால் அவரை விட்டு பிரிந்து வந்தவர் கணவன் என்ன செய்தாலும் அவர் கூடவே சேர்ந்து வாழ வேண்டும் என்று சொன்ன பெற்றோரையும் முழுமையாக வெறுத்துவிட்டு வாழ்க்கையில் பற்று இல்லாமல் இருந்தவரிடம் உமா அருந்ததியை பற்றி சுருக்கமாக எடுத்துச் சொல்ல, இந்த பூமியில் தான் வாழ்வதற்கு இது ஒரு காரணமாக அமையட்டும் என்று மரகதம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.
யாரும் இல்லாத பெண் அவளுக்கு அவரே அனைத்தும்மாக மாறிப்போனார்.
"உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத கஷ்டம் மரகதம் அம்மா நான் ஏதாவது செஞ்சிருப்பென்ல"
"இதில் எனக்கு என்ன கஷ்டம் இருக்க போகுது அருந்ததி நீ சந்தோஷமா இருந்தா அது மட்டும் எனக்கு போதும்.. உனக்கு இப்படி என் கையால உனக்கு புடிச்ச சாப்பாடு எல்லாத்தையும் செஞ்சு தரணும்.. யாருமே இல்லாத உனக்கு நான் அம்மாவாகவும் யாருமே இல்லாத எனக்கு நீ மகளாகவும் இருக்கணும்னு ஆசைப்படுறேன் அது தப்புன்னா சாரி.."
"என்னம்மா இது ஒரு சாதாரண விஷயம் இதுக்கு போய் இவ்வளவு கோச்சிக்கிறீங்க! சரி விடுங்க நான் இனிமே எதுவும் பண்ணல உங்க விருப்பப்படி என்ன வேணாலும் எனக்கு செஞ்சு கொடுங்க.."என்று அவரை தோளோடு அணைத்துக் கொண்டு புன்னகைத்தாள் அருந்ததி.
அவரிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்த அருந்ததி தன் வீட்டு வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு போன் பேசிக் கொண்டிருந்த தமக்கையை கண்டதும் அவளுக்கு எரிச்சலாகி போனது.
தான் பிறந்தது முதல் தன்னோடு பகைமை பூண்டிருந்த தன் தமக்கையை முடிந்தவரை பேசி அவளிடம் அன்பாக இருந்த அருந்ததி தங்கள் பாட்டி இறந்ததுக்கு கூட அவள் வராமல் போனதும் அந்த நிமிடம் அவள் மீது அளவற்ற வெறுப்பு தோன்ற அவளிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள்.
பூஜாவை பார்த்தும் பார்க்காதது போல் அவளை கடந்து செல்ல, போனில் சிரித்து பேசிக் கொண்டிருந்த பூஜா தன் தங்கை தன்னை தாண்டி செல்வதை கண்டதும் அழைப்பை துண்டித்து விட்டு செல்லும் தங்கையை பார்த்தாள்.
வெள்ளை நிற உடையில் தேவதை போல் நடந்து சென்றவளை கண்டதும் அவளுக்குள் எப்போதும் போல் உள்ளுக்குள் இருந்த வெறுப்பு அவளை தூண்டி விட்டது.
'பணக்கார அப்பா அம்மாவுக்கு மகளா வாழ்கிற நான் கூட இவ்வளவு அழகா இல்லாம இருக்கும்போது இவள் மட்டும் எப்படி இந்த நிலைமையிலும் அழகா இருக்கா! ஓ மறந்து போச்சு இன்னைக்கு தானே இவளுக்கு முதல் நாள் காலேஜ் அதான் மேடம் ரொம்ப சந்தோசமா என்னை கூட கண்டுக்காம கிளம்பி போறாங்க போல இருக்கு.. உன்னோட சந்தோசம் நான் இருக்கிற வரை உன் கூட இருக்காது அருந்ததி..'என்று வன்மமாக மனதுக்குள் நினைத்துக் கொண்ட பூஜா மழை பெய்து தேங்கியிருந்த தண்ணீரில் தன் ஸ்கூட்டரை விட அவள் எதிர்பார்த்தது போலவே அருந்ததியின் வெள்ளை நிற உடை கரையாகி போயிருந்தது.
ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவள் தன் வண்டியை நிறுத்தி இவளை திரும்பிப் பார்த்து நக்கலாக புன்னகைத்தபடி "இப்பதான் நீ பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா இருக்க இப்படியே இன்னைக்கு முதல் நாள் காலேஜுக்கு போனா உன் பிரெண்ட்ஸ் எல்லாரும் ஆச்சரியப்பட்டு போவாங்க.."என்று கிண்டலடித்து விட்டு செல்ல தன் உடையை குனிந்து பார்த்த அருந்ததி அது முழுவதுமாக கரையாகி போயிருந்ததை கண்டு எதுவும் சொல்ல முடியாது மீண்டும் தன் வீட்டுக்கு சென்று உடைமாற்ற, மரகதம் அவள் உடையை கண்டதும் கேள்வி கேட்க அவரிடம் ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்டு கல்லூரிக்கு நேரமாகிவிட்டதை உணர்த்து வேகமாக கிளம்பி கல்லூரிக்கு சென்றாள்.
'துரியோதனன் மெடிக்கல் காலேஜ்'என்று தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த கல்லூரியின் வாயிலில் இறங்கி அந்த கல்லூரியை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
'கடவுளே நான் எடுத்துருக்க இந்த மருத்துவத் துறையில் நான் நிறைய சாதிக்கணும் என்னால முடிஞ்ச வரை எல்லாரும் உயிரையும் காப்பாற்ற வேண்டும் இன்றைக்கு நான் எல்லாரையும் இழந்துட்டு நிற்கிறது மாதிரி இங்கே இருக்க யாரும் இனி யாரையும் இழக்கக்கூடாது உங்களோட ஆசிர்வாதம் எப்பவும் போல் எனக்கு கொடுங்க..தாத்தா பாட்டி அப்பா அம்மா நீங்களும் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க..'என்றபடி தன் ஆசைகள் அனைத்தையும் எதிர்பார்த்தபடி கல்லூரியில் கால் எடுத்து வைக்க,அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தது இரு ஜோடி கண்கள்.
"உன்னால தாண்டி என்னோட நட்பு இத்தனை வருஷம் என்னை விட்டு பிரிஞ்சு போயிடுச்சு.. அன்னைக்கு என் வாழ்க்கையில நீ வந்துட்டு போன ஒரு நிமிஷம் என் மொத்த வாழ்க்கையும் அப்படியே மாற்றி போட்டுவிட்டது.. நான் நெனச்சது மாதிரியே இந்த காலேஜுக்கு நீ வந்து சேர்ந்துட்ட இனி உன் வாழ்க்கையில் எப்படி நிம்மதி இருக்கிறது என்று நானும் பார்க்கிறேன்.."என்று வாய் விட்டு வன்மமாக உரைத்தது அந்த குரல்.