தீ-12
தன் கையில் வைத்திருந்த புகைப்படத்தையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி.
அதில் நாற்காலியில் மரகதம் அமைந்திருக்க அவருக்கு பின்னால் நின்று அவர் கழுத்தை கட்டி பிடித்தபடி அவர் தலை மீது தன் தலையை வைத்திருந்தாள் அருந்ததி.
அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட ஒரே புகைப்படம் அது மட்டும் தான்.
அந்த புகைப்படத்தை பார்க்க பார்க்க அவள் கண்களில் கண்ணீர் அதிகமாக வழிந்தது.
"தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க மரகதம் அம்மா இப்ப நான் இருக்க நிலைமையில நீங்க என் கூட இருந்தா கண்டிப்பா அது உங்களுக்கும் ஆபத்தா கூட மாறும்.. வாழ்க்கையில எல்லாத்தையும் நான் இழந்துட்டேன் இனிமே என்கிட்ட இழக்கறதுக்கு எதுவும் இல்லை அந்த கடவுள் தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு உங்களை கொடுத்திருக்கிறார் எக்காரணம் கொண்டும் உங்களையும் நான் இழக்க விரும்பலை இப்போதைக்கு நீங்க என்னை விட்டு தூரமாய் இருப்பது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது.."என்று வாய் விட்டு புலம்பியவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல், அந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் சொன்ன வார்த்தைக்காக மரகதம் அங்கிருந்து போக பிடிக்கவில்லை என்றாலும் அவளுக்காக அந்த வீட்டை விட்டு காலையில் தான் சென்றிருந்தார்.
எப்பொழுதும் அவர் கொடுக்கும் உணவுகளை மட்டுமே உண்டு பழக்கம் கொண்டவளுக்கு இப்பொழுது யாரும் இல்லாத தனிமை பெரும் துயராக அமைந்து போனது.
இதுதான் அவள் வாழ்க்கையில் கடைசி வரை இருக்கப் போகும் விதியோ..
அனைவரும் குடும்பம் குழந்தை தங்கள் தாய் தந்தை அதுவும் பெண்களாக இருந்தால் புகுந்த வீடு பிறந்த வீடு என்று இத்தனை சலுகைகள் உண்டு.
பல சொந்தங்களுக்கு நடுவில் வாழ்வதை கண்டு எப்போதும் ஒரு புன்னகையுடன் கடந்து போனவளுக்கு இப்போதெல்லாம் அதை யோசிக்க யோசிக்க வேதனை மட்டும் தான் மிஞ்சியது.
இப்போதெல்லாம் அவளுக்கு எதன் மீதும் எதிர்பார்ப்பு இல்லை. அனைத்தையும் இழந்த ஒரு வெறுமையான மனநிலை.இன்னும் சொல்லப்போனால் தான் ஏன் இந்த உலகில் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்று தெரியாமல் உயிர் வாழவே பிடிக்காமல் அனைத்தும் வெறுத்த நிலையில் இருந்தாள்.
இப்படி தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருக்க காலையும் கடந்து மாலைப்பொழுதும் புலர்ந்தது.
அவள் வீட்டில் இருந்தால் போதும் ஒரு நேரம் கூட அவள் வயிரை வாட விடாமல் பார்த்துக் கொள்வார் மரகதம்.
பெற்ற தாயை விட ஒரு படி அதிகமாக பார்த்துக் கொண்டதால் தான் என்னவோ அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்று அவள் தன்னை விட்டு அவரை தூரமாக அனுப்பி வைத்ததே!!
எதை எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
'இந்த நேரத்தில் யார் கதவு தட்டுறாங்க?'என்று மனதில் தோன்றிய யோசனையோடு,கண்களில் வழிந்த கண்ணீரை அழுத்தமாக துடைத்து விட்டு புகைப்படம் முன்பு எங்கு இருந்ததோ அதே இடத்தில் மாட்டி வைத்துவிட்டு வெளியில் வந்தவள் கதவை திறக்க அங்கு புன்னகையோடு நின்று கொண்டிருந்தாள் பூஜா.
தங்கையை கண்டவள் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
"இப்பதான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் அருந்ததி அந்த துரியோதனனுக்கு கண்பார்வை தெரியாமல் போயிடுச்சாமே! எனக்கு கண்டிப்பா தெரியும் அதுக்கு காரணம் நிச்சயம் நீயா தான் இருப்பேன்னு கண்டிப்பா தெரியும் இந்த அக்கா மேல உனக்கு எவ்வளவு அன்பு.."என்று நக்கலாக சொல்ல, அவள் குரலில் இருந்த பேதத்தை நன்றாக உணர்ந்து கொண்டாள் அருந்ததி.
ஆயிரம் தான் இருந்தாலும் ஒரு பெண் தன்னுடைய தன்மானத்தை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டாள் என்பது அருந்ததியின் எண்ணமாக இருந்தது.
ஆனால் அவள் அக்கா அனைத்திற்கும் விதிவிலக்காக இருக்கும் பெண் என்பது பாவம் அவளுக்கும் தெரியாது அல்லவா!!
"சொல்லு கண்டிப்பா இதுக்கு காரணம் நீயா தான் இருப்ப என்ன பண்ண?"என்று குதூகலமாக பூஜா கேட்க, அவளை சலிப்பாக பார்த்தாள் அருந்ததி.
"நான் எதுவும் பண்ணல எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தேவையில்லாத எந்த பிரச்சினையிலும் நான் தலையிடுறதா இல்ல.."
"பொய் சொல்லாத அருந்ததி கண்டிப்பா இதுக்கு நீ தான் காரணமா இருப்ப.."எனவும் நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டே இரு என உள்ளே சென்று விட்டாள் அருந்ததி.
தான் இத்தனை கேட்டும் கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ளாமல் தன்னையே அலட்சியம் செய்வது போல் உள்ளே சென்ற தங்கையை காணும் பொழுது பூஜாவிற்கு கோபம் வந்துவிட்டது.
"இப்ப நீ சொல்ல போறியா இல்லையா?"
"நீங்க எத்தனை தடவை கேட்டாலும் என்னோட பதில் ஒன்னே ஒன்னு தான் எனக்கும் அந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தேவையில்லாத விஷயம் எதிலும் நான் தலையிடுவதும் இல்லை தயவு செஞ்சு நீங்க இங்கே இருந்து கிளம்புங்க உங்களுக்கு தான் என் வீட்டுக்கு வர்றது பிடிக்காதே.."
"ஹான் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அருந்ததி இது உன்னோட வீடு மட்டுமில்லை என்னோட வீடும் கூடத்தான் ஞாபகம் இருக்கு தானே!!"என்று அவள் அந்த வீட்டில் தனக்கும் பங்கு இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு சொல்ல, வெள்ளந்தி மனம் கொண்ட அருந்ததி தங்கள் சொந்த தாய் வீடு என்பதால் அவளுக்கும் அதில் உரிமை இருக்கிறது என்று சொல்கிறாள் என தவறாக எடுத்துக் கொண்டாள்.
"கண்டிப்பா அக்கா இந்த வீட்டிலயும் உங்களுக்கு உரிமை இருக்குதான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா எனக்கு இப்ப வரைக்கும் புரியாது புதிரா ஒன்னே ஒன்னு தான் இருக்கு அதை கேட்கவா?"என்று அவள் கேள்வி கேட்ட தோரணையே பூஜாவிற்கு ஒரு மாதிரியாக இருக்க,"சரி அப்படி என்னதான் என்கிட்ட கேக்க போற கேளு நானும் பார்க்கிறேன்.."என்றாள்.
"இந்த வீட்ல உரிமை இருக்குன்னு வார்த்தைக்கு வார்த்தையை ஆயிரம் தடவை சொல்ற நீங்க பாட்டி தாத்தா செத்துப்போன போது நீங்க வராம போயிட்டீங்க..அவங்க ரெண்டு பேரும் தான் நம்ம ரெண்டு பேரையும் கஷ்டப்பட்டு தூக்கி வளர்த்தாங்க அவங்க ரெண்டு பேரோட கடைசி நிமிஷத்துக்கு கூட உங்களால வர முடியல அப்படி இருக்க இந்த வீட்ல உங்களுக்கு உரிமை மட்டும் எங்கிருந்து வரும் அக்கா?"என்று அருந்ததியின் கேள்வியில் திகைத்து விட்டாள் பூஜா.
அவளிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காதவள் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் "சரி அருந்ததி நான் உமா அம்மாவுக்கு தெரியாம தான் இங்க வந்தேன் அவங்களுக்கு நான் இங்கே இருக்க விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக தேவையில்லாத பிரச்சினை வரும்.. உன்னோட கேள்வி எல்லாத்துக்கும் நான் அப்புறமா பதில் சொல்றேன்.."என்றவள் நைசாக நழுவி சென்றுவிட, அருந்ததி மனதில் குற்ற உணர்வு தலை தூக்கியது.
'ஒருவேளை நான் தப்பு பண்ணிட்டேனா?' என்று அருந்ததியின் மனசாட்சி அவளிடம் கேள்வி எழுப்ப, அந்த கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை என்பதே உண்மை.
அவள் அங்கிருந்து சென்றதும் ஒரு பெருமூச்சு விட்ட அருந்ததி வீட்டை சுத்தம் செய்துவிட்டு இரவு அவளுக்கு தேவையான உணவை அவளே தயாரிக்க ஆரம்பித்தாள்.
உணவுகளை சமைத்து முடிக்கும் தருவாயில் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
"இந்த பூஜா அக்காவுக்கு என்ன தான் வேணும் அவங்க கிட்ட தான் எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டேனே அப்புறம் எதுக்கு மறுபடியும் மறுபடியும் தேடி வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல.."என்று வாய்விட்டு புலம்பியவள் கதவை திறக்க, அவளுக்கு முன்பாக கருப்பு நிற தொப்பியும் கண்களில் கருப்பு நிற கண்ணாடியும் கையில் ஸ்டிக் குச்சியின் உதவியோடு ஒருவன் நிற்க, அவனை புரியாமல் பார்த்தாள்.
"ஹலோ யார் நீங்க? எதுக்காக இப்ப தேவையில்லாம கதவை தட்னீங்க ஏதாவது அட்ரஸ் வேணுமா?"என்று கேட்க,அவளது எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அவளை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் அவன்.
தன்னை தள்ளி கொண்டு ஒருவன் உள்ளே வருவதை அதிர்ச்சியாக பார்த்த அருந்ததி தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய வீட்டிற்குள் வந்தவனை கோபமாக பார்த்தாள்.
"யார் நீங்க? உங்ககிட்ட தானே கேட்டுகிட்டு இருக்கேன் கொஞ்சம் கூட அடிப்படை நாகரிகம் இல்லாம அடுத்தவங்க வீட்டுக்குள்ள வரீங்க.. மரியாதையா என் வீட்டை விட்டு வெளிய போங்க.."என, அவளை நக்கலாக பார்த்தபடி தன் தலையில் அணிந்திருந்த தொப்பியையும் கண்களில் அணிந்திருந்த கண்ணாடியும் துரியோதனன் கழட்டினான்.
அது இரண்டும் அவனை விட்டு அகன்ற பிறகு அவன் யார்? என்பது அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது.
"நீங்க நீங்க இங்க என்ன பண்றீங்க? எதுக்காக உங்க அடையாளம் எல்லாத்தையும் இப்படி மறைச்சிட்டு வந்து இருக்கீங்க.."என்றாள் தன் மனதுக்குள் தோன்றிய அதிர்ச்சிகள் அனைத்தையும் மறைத்தபடி.
"உன் வீட்டுக்கு எதுக்கு வந்து இருக்கேன் இன்னும் உனக்கு தெரியாதா உன் கூட குடும்பம் நடத்த தான்!"என்றவன் குச்சியை ஓரமாக வைத்துவிட்டு அங்கிருந்த சுவர்களை தடவி பார்த்தபடி நடந்து சென்றவன் எதிரில் இருந்த சோபாவில் காலை இடித்து கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.
"அவுச்" என்று வலியில் கத்தியவன் காலை பிடித்தபடி, அமர்ந்துவிட அவன் பக்கத்தில் வேகமாக ஓடி வந்தாள் அருந்ததி.
"என்னாச்சு ரொம்ப வேகமா இடிச்சிக்கிட்டிங்களா! காலை காட்டுங்க நான் பார்க்கிறேன்.."என்றவள் துரியோதனன் கால்களை பிடிக்க வர அவள் கைகளை தட்டி விட்டான்.
"தொடாத உன்னை மாதிரி ஒரு புவர் லேடி என்னை தொடுவது கூட எனக்கு ரொம்ப பெரிய அசிங்கம்.. என்னோட கண்ணையும் என்கிட்ட இருந்து பிடிங்கி என்னை ஜெயிலுக்கு அனுப்பி என் கெரியர் மொத்தத்தையும் நாசம் பண்ண உன்ன அப்படியே சும்மா விட்டுடுவேன் மட்டும் நினைக்காதே!!"
"நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்தது ஜஸ்ட் ஒரு மனிதாபிமான அடிப்படையில் தான் நீங்க எவ்வளவுதான் பெரிய ஆளாய் இருந்தாலும் நீங்களும் ஒரு சாதாரண மனுஷன் தான்..இந்த உலகத்துல எவ்வளவு பெரிய ஆளுங்களா இருந்தாலும் ஆம்பள ஆம்பள தான் பொம்பள பொம்பள தான் அதுல எந்த விதமான மாற்றமும் இருக்காது.. இன்னைக்கு இருக்க அந்த பணம் ஒரு நாள் நிச்சயமா உங்கள விட்டுப் போகும் அன்னிக்கு நீங்க என்ன பண்றிங்கன்னு நானும் பாக்குறேன்.."என்றாள் சவாலாக அருந்ததி.
அவன் சொன்னதை கேட்டு துரியோதனன் இதழ்களில் ஒரு புன்னகை.
அந்த புன்னகையை பார்க்கும் பொழுது அருந்ததிக்கு மனதில் ஒரு பயத்தை உண்டு பண்ணியது.
இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் "நீங்கதான் அவ்வளவு பெரிய பணக்காரர் ஆச்சே அப்புறம் எதுக்கு இந்த ஏழை வீட்டுக்கு வந்தீங்க! ஒழுங்கு மரியாதையா என் வீட்டை விட்டு போங்க.."என்றவள் இடையை சுற்றி வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன் அவள் தன்னை விட்டு நகராமல் இருப்பதற்காக உடும்பு பிடியாக ஒரு கையை வைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவன் மற்றொரு கையை வைத்து அவள் முகத்தில் கோலம் போட்டு கொண்டு வந்தவன் கைகள் அவள் இதழில் நிலைத்து நிற்க,அவன் செயலில் அருவருப்பாக உணர்ந்த அருந்ததி அவனிடம் இருந்து போராடினாள்.
"டேய் என்ன மரியாதையா விடுடா ஒழுங்கா மரியாதையா என் மேல இருந்து கையை எடு இல்ல இதுக்கு அப்புறம் நடக்க போறது எதுக்கும் நான் பொறுப்பு இல்ல விடுடா பொறுக்கி நாயே.."என்று அவன் கைகளில் சிக்கி இருந்த இரு கைகளையும் விடுவிக்கப் போராட, அவளை வன்மாமக பார்த்த துரியோதனன் சற்றும் தாமதிக்காது அவள் இதழ்களோடு தன் இதழ்களை புதைத்துக் கொண்டான்.
அவன் அதிரடியில் அருந்ததி அதிர்ந்து நிற்க, அவளைப் பற்றி எல்லாம் சிறிதும் கணக்கில் கொள்ளாத துரியோதனன் அவள் இதழ்களுக்குள் முடிந்தவரை தன்னை ஆழமாகப் புதைத்துக் கொள்ள சரியாக அந்த நேரம் அருந்ததி வீட்டு கதவை திறந்து கொண்டு வந்தது பத்திரிக்கை ஊடகம்.
அவர்கள் இருவரும் அந்த நிலைமையில் இருப்பதை கண்டு வேக வேகமாக அதை தங்கள் கேமராவிற்குள் உள்வாங்கிக் கொள்ள "பளிச் பளிச்" என்னும் பிளாஷ் லைட் சத்தத்தில், துரியோதனன் தான் எதிர்பார்த்தது போலவே வெற்றிகரமாக நடந்ததை எண்ணி அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் அப்படியே தனியே விடாமல் அவள் இடையை சுற்றி கைகளை போட்டு தன் கை வளைவிலேயே நிறுத்திக் கொண்டவன் "ஹூ ஆர் யூ? யார் எங்களை தேவையில்லாமல் தொந்தரவு பண்றது..?"என்று கோபமாக கேட்க, வந்திருந்த ஊடக காரர்களில் ஒருவன் தைரியமாக முன்வந்து துரியோதனன் கேள்விக்கு பதில் அளித்தான்.
"நாங்க எல்லாம் ரிப்போர்ட்டஸ் சார் எல்லா டிவி சேனல்ஸ்ல இருந்து வந்திருக்கோம்.."
"ஓ.. யார் வேணாலும் வாங்க அது உங்க விருப்பம் ஆனா இப்படி ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது இரண்டு பேரையும் தொந்தரவு பண்றது மாதிரி வந்தது சரியா! இதுதான் உங்க பத்திரிகை ஊடகத்தின் கொள்கையா?"என்று கேட்டான் சற்று காட்டமாக.
"இவங்க தானே சார் நீங்க அவங்களை கொலை பண்ண பாத்தீங்கன்னா உங்க மேல கேஸ் கொடுத்து உங்களை ஜெயில்ல தள்ளினார்கள்.. இப்ப அவங்க கூட நீங்க இப்படி ஒண்ணா இருக்கீங்க.."
"ஹே மேன் அது ஒரு ஆக்சிடென்ட் இந்த பொண்ணு என்னோட காலேஜ்ல தான் படிக்கிறா அப்பப்ப எனக்கு மூடு வரும் போது என்னை வந்து ரொம்ப சந்தோஷப்படுத்திட்டு போவா அப்படி போன தடவை வந்து சந்தோஷப்படுத்தும் போது அவளுக்கு எப்பவும் கொடுக்கிற அமௌண்டை விட கம்மியா கொடுத்தேன் அதனால என் மேல கோவமா இருந்தவ என் கண்ணுல ****மருந்து அடிச்சு என் கண் பார்வையை என்கிட்ட இருந்து பிடிங்கி கிட்டா.. அதை அவ வாயாலேயே ஒத்திக்கிட்டு ஹாஸ்பிட்டல என்கிட்ட வந்து பேசும்போது கேவலம் ஒரு பணத்துக்காக என் பார்வையை என்கிட்டே இருந்து பிடுங்குன இந்த பொண்ண என்னால சும்மா விட முடியுமா.. இதோ இந்த பொண்ணு என்கிட்ட பேசினதுக்கான வீடியோ.."என்றவன் தன் சட்டை பைக்குள் மறைத்து வைத்திருந்த போனை எடுத்து கேள்வி கேட்ட அந்த ஊடக காரனிடமே கொடுத்து ஓபன் செய்ய சொன்னான்.
அவன் சொன்னது போலவே அந்த ஊடக காரனும் அவன் கையில் இருந்த மொபைலை வாங்கி வீடியோவை ஓபன் செய்ய அவன் சொன்னது போலவே யாருக்கும் தெரியாமல் அந்த அறைக்குள் அருந்ததி உள்ளே வந்தது முதல் அவனிடம் பேசியது வரை முழு வீடியோவாக இருந்தது.
ஆனால் அவனிடம் அவள் பேசியது அத்தனையும் மாற்றப்பட்டு மார்பில் செய்யப்பட்ட அவளது குரலாக இருந்தது.
"ஒழுங்கு மரியாதையா நான் பணத்தை கேட்டப்பவே நீ பணத்தை கொடுத்து இருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? நீ கூப்பிட்டப்ப அடிக்கடி வந்து உன் கூட ஜாலியா இருந்து உன்னை சந்தோஷப்படுத்தியது எதுக்கு எல்லாம் உன்கிட்ட இருக்க பணத்தை அடையறதுக்காக தான்.. இந்த பணம் உன்கிட்ட இருக்கதால தானே உன்கிட்ட நான் அடிக்கடி வரேன் அந்த பணத்தை என்கிட்ட நீ கொடுக்காமல் விட்டா உன்னை விட்டுடுவேனா எப்படி உன் கண் பார்வையை உன்கிட்ட இருந்து புடுங்கிட்டேனா.. இனி நீ எந்த பொண்ணை தொட்டாலும் இதுதான் உனக்கு ஞாபகம் வரும் என்னை ரசித்து பார்த்து என் கூட இருந்த அந்த கண்ணு இனிமே வேற யாரையும் பார்க்காது உன்னை இந்த நிலைமையில் ஆளாகியதற்கு காரணம் நான் மட்டும் தான் அது யாருக்கும் கடைசி வரைக்கும் தெரியவே தெரியாது கண்ணு தெரியாத குருட்டு முண்டமே!!" என்று அருந்ததி கோபமாக பேச,அவள் பேசியதை கேட்டு கோபமடைந்த துரியோதனன் அவள் கழுத்தை பிடித்து நெரிக்க வர சரியாக அந்த தாதிப்பெண் உள்ளே நுழைந்ததும் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டது போல் நடிக்க அந்த தாதி பெண்ணும் அவளை வந்து பார்த்துவிட்டு தண்ணீர் கொண்டு வருவதற்காக செல்ல, இறுதியாக அவனிடம் பேசிய வார்த்தைகள் உண்மையாக இருக்க அத்தோடு நிறைவடைந்திருந்தது அந்த வீடியோ.