வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நல்லுயிர் நீயெனக்கு...நாடியடி நானுனக்கு-கதை திரி

Status
Not open for further replies.
நல்லுயிர் நீயெனக்கு....
நாடியடி நானுனக்கு.....

பிரபலமான அந்த திருமண மண்டபம் முழுவதும் மக்களால் நிரம்பி இருக்க வந்தவர்களை வரவேற்க பட்டு புடவை அணிந்த பெண்கள் வரவேற்பில் நின்றிருந்தனர்....



விதவிதமான கார்களில் வி.ஐ.பிக்கள் வந்த வண்ணம் இருக்க மண்டப செக்யூரிட்டி ட்ரைவர்களிடம் பார்க்கிங் ஏரியாவை சுட்டி காட்டி கொண்டு இருந்தான்....



பி. எம். டபிள்யூ காரில் ஸ்டைலாக மண்டப வாசலில் வந்து இறங்கினான் அவன்..... செக்யூரிட்டி பார்க்கிங் ஏரியாவில் காரை விட சொல்ல அவனை திரும்பி பார்த்து முறைத்தவன் விடுவிடுவென உள்ளே சென்றான்.....



வரவேற்பில் இருந்த பெண்கள் அனைவரும் அவன் நடந்து வரும் அழகை இமை மூடாமல் பார்த்து ரசித்தனர்.....



ஆறடி நான்கு அங்குலத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் நிமிர்ந்து அவனை பார்த்து பேசும் உயரத்தில் இருப்பவன்.... இந்த கால ஹீரோக்களுடன் போட்டி போடும் அளவுக்கு உடற்பயிற்சி செய்து உடலை கட்டுகோப்பாக பல படிகட்டுகளுடன் வைத்திருப்பவன்....



என்றுமே படியாத முன் உச்சி முடியை ஸ்டைலாக அவன் கோதி கொடுப்பது பேரழகு... அவன் எதார்த்தமான செய்கையே பெண்களை அவன் பின்னால் சுற்ற வைக்கும்.... அப்படிபட்டவன் பல கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்தால் பெண்கள் கூட்டம் இவனை வலை வீசி பிடிக்க எண்ணம் கொண்டு சுற்றி வருகின்றனர்.... ஆனால் அவனோ யார் வலையிலும் இதுவரை சிக்காமல் இருக்கிறான்....



மண்டபத்தின் 20,25 படிகளை கடந்து வரவேற்பரை வருவதற்குள் அங்கு இருந்த பேனர்களை ஒருமுறை திரும்பி பார்த்து கொண்டான்....

மணமகன் : ரஞ்சன்
மணமகள் : சாதனாஸ்ரீ

சாதனாஸ்ரீ என்று கேலியாக உதட்டை வளைத்து சிரித்தவன் வரவேற்பில் தன்னை சைட் அடித்த அழகான பெண்களை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றான்.....



விவிஐபி இருக்கையில் முதல் வரிசையில் சென்று அமர்ந்தவன் மண்டபத்தை சுற்றி பார்த்தான்.... இவன் பார்ப்பதற்கும் சாதனாவின் சித்தப்பா ராஜேந்திரன் இவனை பார்ப்பதற்கும் சரியாக இருந்தது.....



"ப்ரியன்..." என்று சன்னமாக உச்சரித்த ராஜேந்திரனுக்கு பயத்தில் அந்த ஏசி மண்டபத்தில் வியர்க்க ஆரம்பித்தது.... அவசரமாக தனது முகத்தை கை குட்டையில் துடைத்து கொண்ட ராஜேந்திரன் தனது மனைவியை தேடி சென்றார்...



"ஓடு... ஓடு... எவ்வளவு தூரம் ஓட நினைக்கிறியோ ஓடு..." என்று மனதில் நினைத்தவன் முகமோ இறுக்கமாக இருந்தது....



மனைவியை தேடி போன ராஜேந்திரன் அவள் சாதனாவிடம் பேசி கொண்டிருக்கவும் அவளிடம் நெருங்கி "புனிதா கொஞ்சம் இங்கே வா... உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்..." என்றார்....



"எதுவாக இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க...."



"சித்தப்பா ஏதாவது பிரச்சனையா... ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க..." என்ற சாதனாவை பார்த்த ராஜேந்திரன் "அம்மாடி உன் கல்யாணம் நல்ல படியா நடக்குமான்னு தெரியலைம்மா..." என்ற ராஜேந்திரன் தன் மனைவியை அர்த்தமாக பார்த்து வைத்தான்....



"அந்த ப்ரியன் வந்து இருக்கானா...." என்றாள் புனிதா...



"ஆமா புனிதா... வந்து முதல் வரிசையில் அமர்ந்து இருக்கிறான்... இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த போறானோ... என்னவோ...."



"சித்தப்பா யார் தடுக்க நினைத்தாலும் இந்த மேரேஜ் கண்டிப்பா நடக்கும்... அந்த ப்ரியன் யாராக வேணாலும் இருந்துட்டு போகட்டும்.... நானும் ரஞ்சனும் உறுதியாக இருக்கும் போது அவனால் என்ன செய்ய முடியும்...." என்றவள் நெற்றியில் இருந்த நெற்றிசுட்டி சற்று இடம் மாறி இருக்க அதை சரி பண்ண ஆரம்பித்தாள்.....



ராஜேந்திரன் புனிதாவை கண் ஜாடை காட்டி வெளியே வர சொன்னார்.... புனிதாவும் சாதனாவிடம் ஏதோ காரணம் சொல்லி வெளியே வந்தாள்....



புனிதாவை தனி அறைக்குள் அழைத்து சென்ற ராஜேந்திரன் "அவன் ஏதாவது உண்மையை சாதனாகிட்ட சொன்னால் என்ன பண்றது புனிதா...."



"அவன் சாதனாவை சந்தித்தால் தானே அவனால் சொல்ல முடியும்..... எப்படியாவது இந்த திருமணம் முடியும் வரை அவனை நகர விடாமல் பார்த்து கொண்டால் போதும்... ரஞ்சன் சாதனா கழுத்தில் தாலி கட்டி விட்டால் சொத்து முழுவதும் நமக்கு தான்.... அப்புறம் அவளை அந்த ப்ரியன் என்ன வேணாலும் செய்து கொள்ளட்டும்.... ரஞ்சனுக்கு இன்று ஒருநாள் மட்டும் சாதனா வேண்டுமாம்.... சொத்தில் எந்த பங்கும் வேண்டாமாம்..."



"நிஜமாவா சொல்ற.... ஆமா நிச்சயத்து அன்னிக்கு புடவையில் சாதனாவை பார்த்தவன் ஒருநாள் மட்டும் அவள் வேண்டும்... சொத்து எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டான்..... இன்னும் 1மணி நேரத்தில் கல்யாணம்.... நீங்க போய் அந்த ப்ரியனை கண்காணித்து கொண்டு இருங்க... நான் போய் சாதனா மனதில் ப்ரியனை பத்தி தப்பான அபிப்பிராயத்தை சொல்லி வைக்கிறேன்...... அவள் என் கைப்பிடியில் இருக்கும் வரை அந்த ப்ரியனால் எதுவும் செய்ய முடியாது.... " என்று கர்வமாக கூறிய புனிதா மணமகள் அறைக்குள் சென்றாள்......



மினிஸ்டர் பாதுகாப்பிற்காக வந்து இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சென்று ப்ரியன் மீது ஒரு கண்ணை வைத்து கொள்ள சொன்ன ராஜேந்திரன் அதன் பிறகே சற்று ஆசுவாசமானான்.... ஆனாலும் அடி மனதில் பயம் இருந்து கொண்டிருந்தது.....



ப்ரியன் தன் அருகில் வந்து அமர்ந்த இன்ஸ்பெக்டரை கேலியாக பார்த்தவன் அசிஸ்டெண்ட் கமிஸ்னரான தன் நண்பனை அருகே அழைத்து "என்ன மச்சி பாதுகாப்பு எல்லாம் பலமா இருக்கு போல...." என்றான்....



"மச்சி நான் டியூட்டியில் இருக்கேன்.... சோ கால் மீ சார்...."



"ஆஹான்..."



"நீ இந்த மாதிரி ஆஹான் சொன்னாலே வில்லங்கமா ஏதாவது பண்ணி வைப்பியே.... உன் லெவல் தெரிந்தும் இப்படி பேசியது தப்பு தான்... தயவுசெய்து ஏடாகூடமா எதுவும் பண்ணிடாதே மச்சி... நீ என்னை கழுதை குதிரைன்னு கூட கூப்பிட்டுக்கோ.... நோ அப்ஜெக்ஷன்..." என்றவனின் தோளில் கை போட்டவன் அருகில் இருந்த இன்ஸ்பெக்டரை காட்டி "ஐ டோண்ட் லைக் திஸ் டிஸ்டபர்ன்ஸ்.... கிளியர் இட்...." என்றான்....



"பாவம் புள்ளைகுட்டிகாரர் ப்ரியா.... "



"ஐ செட் கிளியர் ஹிம்... உன்னால் முடியலைன்னா விட்ரு... ஜ கேன் ஹேண்டில் இட்...."



என்ன பண்ணி தொலைத்தான் இந்த இன்ஸ்பெக்டர்.... இந்த பைத்தியக்காரன் வேற ரொம்ப கோவமா இருக்கான்.... சரி இப்போதைக்கு ஸ்டேஷனுக்கு அனுப்பி வைப்போம்.... பிறகு கடவுள் விட்ட வழி.... என்று நினைத்தவன் "இன்ஸ்பெக்டர் நீங்க ஸ்டேஷனுக்கு கிளம்புங்க...."



"சார் இங்கே செக்யூரிட்டி இஷ்யூ...."



"சொல்றேன் இல்ல.... கிளம்புங்க....' என்று அவரை அனுப்பி வைத்தவன் ப்ரியனிடம் திரும்பி " மச்சி என்ன இருந்தாலும் போலீஸ்காரர்... கொஞ்சம் நிதானமா யோசித்து...." என்று பேசி கொண்டு இருந்தவன் ப்ரியனின் அழுத்தமான பார்வையில் பேச்சை நிறுத்திவிட்டு அங்கு இருந்து அகன்றான்.....



ப்ரியனை விட்டு தூரமாக சென்றதும் மூச்சை நன்றாக இழுத்து விட்டு கொண்ட சஞ்சய் "பார்க்க தான் ஹீரோ மாதிரி இருக்கான்... ஆனால் வில்லன் போல போலீஸ்காரனையே மிரட்டுறான்..." என்று ப்ரியனை பார்த்தவாறு தனக்கு தானே பேசி கொண்டான்....



முகூர்த்த நேரம் நெருங்கவும் ஐயர் பெண்ணை அழைத்து வர சொல்ல அரக்கு வண்ண பட்டு புடவையில் அலங்கார சிலை என்று இருந்தவளை அவளது தோழிகள் மணமேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர்.....



சாதனா வந்தது முதல் ப்ரியன் அவளை விட்டு எங்கும் நகராமல் அவளையே அழுத்தமாக யார்த்து வைத்தான்.... அவன் கண்கள் சாதனாவிடம் ஏதோ கூற முயல பாவம் சாதனாவிற்கு தான் அவன் கண்கள் பேசும் மொழிகள் புரியாமல் போனது.....



ஐயர் மணமகனை அழைத்து வர சொல்ல ராஜேந்திரன் தனது மகனை ரஞ்சனை அழைத்து வர சொல்லி அனுப்பி வைத்தார்.... ஆனால் மணமகன் அறையில் ரஞ்சன் இல்லை.... மண்டபமே சற்று நேரத்தில் பரபரப்பாகி மணமகனை தேட ஆரம்பிக்க சாதனாவோ கலக்கத்தோடு ஆறுதலுக்காக புனிதாவை தேடினாள்...



அப்போது தன் கழுத்தில் ஏதோ ஊர்வதை போல இருக்க அதை தட்டி விட முயன்ற போது அவள் கழுத்தில் இருந்து கைகளை எடுத்தான் ப்ரியன்....







இவன் மணமேடையில் என்ன செய்கிறான் என்று சாதனா யோசிப்பதற்குள் அட்சதைகளை அனைவரும் தூவ ஆரம்பித்தனர்.... அப்போது தான் தன் கழுத்தில் தவழ்ந்த தாலியை பார்த்தவள் அதிர்ந்து போய் ப்ரியனை பார்க்க அவனோ அலட்சியமாக சாதனை பார்த்து வைத்தான்.....



தான் காதலித்த ரஞ்சன் மண்டபத்தில் காணாமல் போன அதிர்ச்சி நீங்குவதற்குள் இப்படி அதிரடியாக தாலி கட்டியவனை வெறுப்பாக பார்த்த சாதனா "விருப்பம் இல்லாத பொண்ணு கழுத்தில் தாலி கட்டி இருக்கியே.... நீ எல்லாம் மனுஷன் தானா....." என்று கோபத்துடன் கேட்டாள்....



சாதனா பேசியதை காதில் வாங்காமல் தன் வாலட்டில் இருந்த பணத்தை எடுத்து ராஜேந்திரன் முகத்தில் விசிறி அடித்தவன் "இவள் கட்டி இருக்கும் புடவைக்கும் போட்டு இருக்கும் நகைக்கும் தான் இந்த பணம்.... என் ரிவன்ஜ்ஜை பேஸ் பண்ண ரெடியா இரு..." என்றவன் சாதனாவின் கையை பிடித்து இழுத்து கொண்டு காரை நோக்கி சென்றான்....



சாதனாவோ அவன் கைகளில் இருந்து விடுபட முயன்றவாறே "சித்தப்பா... சித்தி... நான் இவன் கூட போக மாட்டேன்.... என்னை அனுப்பாதீங்க....." என்று கத்தி கொண்டே அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள்......



ப்ரியனை தடுத்து நிறுத்தும் தைரியம் அங்கு வந்து இருந்த மினிஸ்டருக்கே இல்லாத போது வேறு யாரால் முடியும்.....



"அப்பா நான் அவன்கிட்ட மாட்டலை.." என்று நிம்மதி பெருமூச்சு விட்ட மினிஸ்டரை பார்த்த அவர் அருகில் நின்றிருந்த ஒரு பிஸ்னஸ் மேனுக்கு ஆச்சரியமாக இருந்தது....



இந்த மினிஸ்டரோட அப்பாயிண்மெண்ட் கிடைக்காமல் பிஏ எத்தனை முறை திரும்பி வந்து இருக்கிறான்.... அப்படிப்பட்ட மினிஸ்டரே பயப்படும் அளவுக்கு யார் அவன் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவருக்கு ..... அந்த பிஸ்னஸ் மேனுக்கு மற்றொரு பிஸ்னஸ் மேன் பதில் கொடுத்தார்......



"அவனும் நம்மை போல பிஸ்னஸ் மேன் தான்... ஆனால் ரொம்ப கறாரானவன்... தப்பு செய்பவர்களுக்கு அவன் தரும் தண்டனை நம் கற்பனையில் கூட எட்டாததாக இருக்கும்.... நல்லது செய்தால் தட்டி கொடுப்பான்.... அவனுக்கோ அவனை சுற்றி இருப்பவர்களுக்கோ கெட்டது செய்ய நினைத்தாலே அழித்து விடுவான்.... மூன்று மாதமாக அவன் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது... வெளிநாடு சென்று இருப்பதாக கேள்விபட்டேன்.... இன்று இங்கே.... எப்படி வந்தான்.... எதற்காக வந்தான் என தெரியவில்லை..... ஆனால் ஒன்று.... எந்த நேரத்திலும் இவனை மட்டும் பகைத்து கொள்ளாதே..... பிறகு உன் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது...."
"சரி..." என்று முடித்து கொண்ட அந்த பிஸ்னஸ் மேன் மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்......

"ஐயோ ஐயோ.... படுபாவி .... சொத்து கைக்கு வர நேரத்தில் இந்த ரஞ்சன் எங்கே போய் தொலைந்தான் என்று தெரியலையே..." என்று புனிதா வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு அழுதாள்..... அது நேரம் பாதாள சாக்கடையில் இருந்து அடையாளம் தெரியாத ஆண்பிணம் ஒன்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்......
 
Last edited:

உயிர் : 2

ப்ரியன் காரை நோக்கி சாதனாவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தான்.... காரில் ஏறாமல் அடம் செய்தவளின் இடுப்பை பிடித்து தூக்கி
காரில் அமர வைத்தான்,....
அவனிடமிருந்து விடுபட அவள் முயற்சி செய்ய அதை எல்லாம் தன் ஒற்றை கையால் தடுத்தவன் சீட் பெல்ட் போட்டுவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான்......
அரை மணி நேர பயணத்திற்கு பிறகு அரண்மனை போன்ற அழகான வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றான்.... வீட்டின் கேட்டில் இருந்து உள்ளே செல்ல கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஆனது.....

கேட்டில் இருந்து உள்ளே செல்லும் வழியில் அழகான பூச்செடிகள் பூத்துக் குலுங்கின.... ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த சிலைகளை சுற்றி முயல்கள் ஓடி விளையாடி கொண்டிருந்தன.....
புறாக்கள் கிட்டத்தட்ட 50 ,60க்கும் மேல் அந்த இடத்தை சுற்றி பறந்துகொண்டும் மரங்களில் அமர்ந்து கொண்டும் இருந்தன....

ஐந்தறிவு ஜீவன்களிடம் இவ்வளவு பாசமாக இருப்பவன் ஆறறிவு மனிதர்களிடம் ஏன் கோபமாக இருக்கிறான் என்று எப்போதும் தோன்றும் கேள்வி இன்றும் தோன்றியது அந்த வாட்ச்மேனிற்கு.....

இதுவரை பிரியன் மட்டுமே வந்த இந்த வீட்டிற்கு அழகான பெண் ஒருத்தியை கூட்டி வருவது இதுவே முதல் முறை என்பதால் மீண்டும் மீண்டும் காரையே பார்த்துக் கொண்டிருந்தான் அந்த வாட்ச்மேன்......


எப்போதாவது மட்டுமே இந்த வீட்டிற்கு வருபவன் இன்று ஒரு பெண்ணுடன் இங்கு வரவும் அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வ மிகுதியில் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.....


ப்ரியன் காரை விட்டு இறங்கிய பின் சாதனாவை இறங்கச் சொன்னான்... அவள் முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்தாள்......
ஒருமுறை கண்களை இறுக மூடி திறந்தவன் சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு அவளை தன் இரு கைகளில் ஏந்தி கொண்டான்..... அவன் தோள்களில் தன் கை கொண்டு அடித்தவாறு "என்னை விடுடா.... என்னை விடுடா.... ராட்சசா....." என்று கத்திக் கொண்டிருந்தாள் சாதனா.....
அவள் கத்தியதையோ அடித்ததையோ கண்டு கொள்ளாமல் போர்டிகோவில் இருந்து வாசல் படிக்கு வந்தவன் அக்கா என்று சத்தம் கொடுத்தான்......
வீட்டின் உள்ளே இருந்து 45வயதுள்ள ஒரு பெண்மணி தட்டில் ஆரத்தியுடன் வெளியே வந்தார்......
இருவருக்கும் ஆரத்தி எடுத்தவர் அதை எடுத்து சென்று வெளியில் கொட்டி விட்டு வந்தார்....
ப்ரியனோ ஆரத்தி எடுத்த உடன் வீட்டின் உள்ளே சென்றான்.......
வீட்டின் உள்ளே சென்றும் அவளை இறக்கி விடாமல் மாடிப்படியில் ஏற ஆரம்பித்தான்......
முதல் மாடிக்குச் சென்றவன் அங்கிருந்த ஒரு அறைக்கு அவளை தூக்கி சென்றான்.....
சாதனாவோ அந்த வீட்டின் அழகையோ அங்கிருந்த மற்ற கலை பொருட்களின் அழகையோ கண்டு கொள்ளாமல் ப்ரியனை அடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அவனை அடித்துக் கொண்டிருந்தாள்......
அறைக்குள் சென்று இறக்கி விட்டவன் "இதுதான் நம்ம ரூம்...... எப்படி இருக்கு......" என்றான்...
"நரகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கு......"
"ஓஹோ....." என்று ஒரு மாதிரி குரலில் கூறியவன்...
"இதையே நரகம் என்று சொன்னால் இனி நீ அனுபவிக்கப் போவதை என்ன சொல்வ... பேபி....." என்று நக்கலாக கூறியவன் "இது உன் கழுத்தில் இருக்க கூடாது.... இதை சுமக்க உனக்கு தகுதியும் கிடையாது....." என்று கோபமாக கர்ஜித்தவன் அவள் கழுத்தில் இருந்த தாலியை கழற்ற போனான்......
அதுவரை இருந்த தைரியம் காணாமல் போக பயத்தில் அழுது கொண்டிருந்தாள் சாதனா....
மணப்பெண் கோலத்தில் கழுத்தில் மணமாலையோடு புது மஞ்சள் கயிறு மின்ன தன் எதிரில் நின்றிருந்த ப்ரியனை பார்த்தபடி அழுது கொண்டிருந்தாள் சாதனா..... அவள் அழுகை சத்தத்தை கேட்டு காதை குடைந்து கொண்டே வந்த ப்ரியன் "அழுதுகிட்டே இருக்காதடி.... காது அடைக்குது....." என்றான்....
"நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட ப்ரியன்....."
"தேங்க்யூ ... ஐ வாண்ட் மோர் மோர் எமோசன்ஸ் பேபி.... "
"எதுக்குடா என் கழுத்துல தாலியை கட்டின... ஐ ஹேட் யூ... "
என்று கத்தியவளை பார்த்த ப்ரியனுக்கு ஸ்ரீ தன்னிடம் ஐ லவ் யூ என்று சொன்ன நாள் நினைவுக்கு வந்தது.....

தலையை குலுக்கி அந்த நினைவை அகற்றியவன் "எல்லாரும் எதுக்கு தாலி கட்டுவாங்க.... அதுக்காக தான்..." என்று கண்களை சிமிட்டு உதட்டை குவித்து முத்தமிட்டான் ப்ரியன்......
"சீச்சீ... உன்னை பிடிக்கலைன்னு சொல்ற பொண்ணுக்கு தாலி கட்டி இருக்கியே உனக்கு எல்லாம் வெக்கமா இல்லை....."
"வெக்கம் மானம் சூடு சொரனை எல்லாம் பார்த்தால் லவ் பண்ண முடியுமா பேபி...."
"நீ பண்றதுக்கு பேரு லவ் கிடையாது...."

"ஓஹோ அப்போ இதுக்கு பேரு என்ன பேபி..... '
"லஸ்ட் ஜஸ்ட் லஸ்ட்.... & என் உடம்பு மேல் இருக்கும் ஆசையில் தான் என்னை கல்யாணம் பண்ணி இருக்க ப்ரியன்..... நீ ஒரு சைக்கோ..... என்னை டார்ச்சர் பண்ற......"

" லவ் டார்ச்சர் தானே பேபி.... இருந்துட்டு போகட்டும் பேபி... & எல்லாரும் கல்யாணம் பண்றதே அதுக்காக தானே....." என்றவனை கண்டு அருவறுப்பில் முகம் சுழித்தாள் சாதனா....

"இந்த அருவருப்பு எல்லாம் எத்தனை நாளைக்கு...." என்று கேட்டவன் "இவ்வளவு அருவருப்பா என்னை பார்ப்பவளுக்கு எதற்கு இந்த தாலி .... அதனால் தான் கழற்ற போனேன்.. அதற்கும் அழுது என் உயிரை வாங்குற...." என்றான்.....
"நான் என் வீட்டுக்கு போகனும்..... நீ கட்டிய தாலியை வேண்டும் என்றால் நீயே எடுத்துக்கோ....நான் போறேன்....."
"நான் கட்டிய தாலி உன் கழுத்தில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் இது தான் உன் வீடு.... நான் தான் உன் புருஷன்.... பொண்டாட்டிக்கான கடமையை செய்ய தயாராய் இரு...." இதுவரை கேலியாக பேசியவனின் வார்த்தைகளாக இல்லாமல் கோபமாக அழுத்தமாக வெளிப்பட்ட இந்த வார்த்தைகளின் கனம் தாங்காமல் "நான் கூடிய சீக்கிரம் உன்னை விட்டு போயிடுவேன்.... நான் ரஞ்சனை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா......" என்றாள்.....
"ரஞ்சன் முதல்ல நீ லவ் பண்ற ரஞ்சன் அவன் தான்னு உனக்கு தெரியுமா....."
"சித்தி சித்தப்பா தான் சொன்னாங்க...."
"உன் சித்தி சித்தப்பா சொன்னதெல்லாம் உண்மையா? பொய்யான்னு ஒரு தடவையாவது யோசித்து பார்த்திருப்பியா..... உன் மனசு சொல்வதை கேட்டு பாரு.... உன் ரஞ்சன் அவன் தானா இல்லையாங்கிறதை அது சொல்லும்...."
"அவன் பெயர் ரஞ்சன்... அப்போ அவன் என்னுடைய ரஞ்சன் தானே....."
"முட்டாள்.... முட்டாள்.... இந்த உலகத்தில் எத்தனையோ ரஞ்சன் இருக்கலாம்..... அவங்க எல்லாம் உன்னோட ரஞ்சன் ஆகிடுவாங்களா....."
"இப்போ நீ என்ன சொல்ல ட்ரை பண்ற.... அவன் என்னோட ரஞ்சன் கிடையாது.... என் சித்தி சித்தப்பா... எங்கிட்ட பொய் சொல்லி இருக்காங்க... அப்படின்னு சொல்ல வர்றியா......"
"அது எனக்கு தெரியாது... உன் மனசை கேட்டுப்பார்... அது உண்மையை சொல்லும்....." என்று கூறினான்......
சாதனாவோ குழம்பி போய் தலையை கைகளைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டாள்.... அவள் தலையை கையில் பிடிக்கவும் பதறிப் போன பிரியன் "ஸ்ரீ என்னாச்சு என்னாச்சு...."என்றான்...
"ஸ்ரீயா என் பெயர் சாதனா தானே...."

"ஆமா நீ சாதனா தான்... நான் தான் ஏதோ ஞாபகத்தில் ஸ்ரீன்னு கூப்பிட்டுட்டேன்....."
"ஸ்ரீ யாரு...."
"என் லவ்வர்...." என்று முகத்தில் தோன்றிய சிறு புன்னகையுடன் கூறினான்....
இதுவரை ப்ரியனின் நக்கல் சிரிப்பை கண்டவள் கண்களோடு இணைந்த சிறு புன்னகை அவளை ஏதோ செய்தது....
"இனி இப்படி சிரிக்காதே..."
"ஏன்..."
"எரிச்சலா வருது.... அதோடு உனக்கு லவ்வர் இருக்காளா...."
"ஏன் உனக்கு லவ்வர் இருக்கும்;போது எனக்கு லவ்வர் இருக்க மாட்டாளா என்ன...."
"வேற ஒருத்தியை லவ் பண்ணும் போது எதுக்குடா என் கழுத்தில் தாலியை கட்டுன...."
"இதுக்கு நான் பதில் சொல்லிட்டேன்.... ஒருவேளை மறந்துட்டியா என்ன.... காதலுக்கு அவள்...." என்றவன் அவள் உடலை மேய்ந்தபடி "மத்ததுக்கு எல்லாம் நீ...." என்றான்....
"ச்சீச்சீ நீ எல்லாம் மனுஷனே இல்லை மிருகம்...."
"இருந்துட்டு போறேன்....."
"நீ லவ் பண்ண பொண்ணுக்கு உண்மையா இல்லை..... தாலி கட்டிய....." என்றவளை மேலே பேச விடாமல் "அதை அவள் வந்து சொல்லட்டும்...." என்றவனை கண்டு ஆயாசமாக இருந்தது அவளுக்கு......
"எனக்கு எதற்கு தாலி கட்டின.... தயவு செய்து என்னை விட்டுவிடு..... நான் ரஞ்சனை தேடி போகணும்...." என்றதும் கண்களை இறுக மூடி திறந்தவன் "இந்த ஜென்மத்தில் இதுதான் உன் வீடு..... நான் தான் உன் புருஷன்..... என்னை தாண்டியோ இந்த வீட்டை தாண்டியே போகணும்னு நினைத்தால் உயிரோடு வெளியில் போக மாட்ட...." என்றான்....
"உனக்கும் என் சித்தப்பாக்கும் ஏதாவது பிரச்சனையா...... அவரை பழி வாங்க என்னல யூஸ் பண்றியா.... என் சித்தப்பா ரொம்ப நல்லவர்....."
"எப்போதும் அதிகம் பேசாத என்னையே இவ்வளவு பேச வைக்கிறியேடி..... தயவு செய்து என் கண் முன்னாடி நிக்காதே.... போய் தொலை...." என்று அவளை தள்ளி விட்டவன் கதவை வேகமாக அடித்து சாத்திவிட்டு வெளியேறினான்.....
பிரியன் வேகமாக வெளியேறியதும் ஆரத்தி எடுத்த பெண்மணி அவசரமாக மேலே ஏறி பிரியன் அறைக்குச் சென்றார்..... அங்கு அவர் கண்ட காட்சியில் பதறிப்போய் மருத்துவருக்கு அழைத்தார்...
பிரியன் தள்ளிவிட்டதில் சாதனா அங்கிருந்த கண்ணாடி டீப்பாயில் சென்று மோதி தலையில் அடிபட்டு மயங்கி கிடந்தாள்....
தலையில் அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருக்க அதைப் பார்த்து தான் அந்த பெண்மணி பதறிப் போய் இருந்தார்.....
சற்று நேரத்தில் மருத்துவர் வந்து தலையில் கட்டு கட்டி ஊசி போட்டு மாத்திரை கொடுத்து விட்டு சென்றார்.....
"இன்னும் அந்த பொண்ணுக்கு மயக்கம் தெளியலையே....."
"ஒரு மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும்.... லக்ஷ்மிமா.... எப்படி அடிபட்டுச்சு அந்த பொண்ணுக்கு...."
"கீழே தண்ணி இருந்ததை பார்க்காமல் வழுக்கி விழுந்துட்டாங்க....."
"பொய் சொல்லாதீங்க.... லக்ஷ்மிமா.... இது அவன் பண்ண வேலை தானே...."
"இல்ல பிருந்தாம்மா.... அப்படியெல்லாம் இல்ல...."
"ஏன் தான் அவன் இப்படி எல்லாம் நடந்துக்குறானோ..... இந்த பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கான்..... ஆனா எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை..... அவன் நல்லா இருக்கணும்னு ப்ரண்ட்ஸ் நாங்க எல்லாரும் நினைக்கிறோம்.... ஆனால் எங்ககிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை.... அவனுக்கு என்னதான் பிரச்சனை...... ஏன் இப்படி எல்லாம் மாறிப் போய்ட்டான்....." என்று பிருந்தா ஆதங்கப்பட்டாள்....
லட்சுமியோ பதில் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கவும் 'நீங்களும் அவனுக்கு தானே சப்போர்ட் பண்ணுவீங்க..... என்னவோ பண்ணுங்க.... நான் கிளம்புறேன்...." என்று கூறி விட்டு பிருந்தா வெளியே சென்று விட்டாள்......
லக்ஷ்மியோ பெருமூச்சுடன் கிச்சனுக்கு சென்று ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக்கொண்டு சாதனாவை பார்க்க சென்றார்....

ப்ரியனோ கோபமாக காரை வேகமாக ஓட்டி சென்று கடற்கரையில் நிறுத்தினான்..... ஸ்டியரிங் வீலில் கைகளால் வேகமாக தட்டியவன் "ஏண்டி என்னை விட்டுட்டு போன...." என்று கத்தி கேட்டான்...

"கண்டவனை லவ் பண்றவளை கல்யாணம் பண்ணி... எனக்கு இதெல்லாம் தேவையா ஸ்ரீ.... நீ மட்டும் என் கூட இருந்தால் இதுக்கு அவசியமே இல்லை..... அவள் கழுத்தில் தாலியை பார்க்க பார்க்க அந்த கழுத்தை நெறித்து கொல்லனும் போல இருக்கு ஸ்ரீ..... உன்னால் உனக்காக மட்டும் தான் அவளை விட்டு வச்சு இருக்கேன்... இல்லை என்றால் அவள் பேசும் பேச்சுக்கு அத்தனை பல்லையும் தட்டி கையில் கொடுத்து இருப்பேன்... ஏண்டி என்னை விட்டு போன..... " என்று கேட்டு தான் ஆண்மகன் என்பதையும் மறந்தவனாக கண்ணீர் வடித்தான் ப்ரியன்.....
 
Last edited:
உயிர் : 3

சாதனாவிற்கு இன்னும் மயக்கம் தெளியாமல் இருக்க லஷ்மி அவள் அருகில் அமர்ந்து இருந்தார்.....





ப்ரியன் நடு இரவுக்கு மேல் நன்றாக குடித்து விட்டு முழு போதையுடன் வீட்டுக்கு வந்தான்.....




ப்ரியன் வரும் அரவம் கேட்ட லக்ஷ்மி சாதனாவின் அருகில் இருந்து எழுந்து வந்தார்....


"தம்பி சாப்பாடு எடுத்து வைக்கவா..."



"வேண்டாம்...." என்று சொன்னவன் தன்னறை நோக்கி சென்றான்....



அவன் கட்டிலில் தான் சாதனா படுத்து இருந்தாள்.....



சாதனா கட்டிலில் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்த ப்ரியன் கோபத்தோடு அவளைக் கட்டில் இருந்து கீழே தள்ளினான்....





"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் கட்டிலில் ஏறி படுத்து இருப்ப.... இந்த கட்டிலில் என்னுடன் படுக்க என் ஸ்ரீக்கு மட்டும் தான் உரிமை இருக்கு...... இன்னொரு முறை இங்கே வந்து படுத்தன்னு தெரிஞ்சது கொன்னுடுவேன்....." என்றவன் அவள் படுத்து இருந்த பெட்ஷீட்டை எடுத்து கீழே வீசிவிட்டு குடி போதையில் தட்டு தடுமாறி கப்போர்டில் இருந்து புது பெட் சீட்டை எடுத்து வந்து பெட்டில் விரித்து படுத்துக்கொண்டான்.....




கீழே விழுந்த சாதனாவிற்கு விழுந்த அதிர்ச்சியில் மயக்கம் தெளிந்து இருந்தது....




சாதனா கீழேயே அமர்ந்து கொண்டு அவன் பேசியதை கேட்டாள்.....




கோபத்தில் பல்லை கடித்து கொண்டு "நான் என்னமோ ஆசைப்பட்டு உன் பெட்டில் வந்து படுத்த மாதிரி பேசிட்டு இருக்க...." என்று கத்தினாள்.....





சாதனா கத்தியதை
கண்டு கொள்ளாமல் கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான் ப்ரியன்......



"நான் இங்க பேசிட்டு இருக்கேன்....., நீ தூங்கிட்டு இருக்கியா...." என்று அருகில் இருந்த பிளவர் வாசை எடுத்து அதிலிருந்த தண்ணியை ப்ரியனின் முகத்தில் ஊற்றினாள் சாதனா.......



தண்ணீரை முகத்தில் ஊற்றியதும் கோபத்துடன் எழுந்த ப்ரியன் அதே கோபத்தோடு அவளை அறைந்தான்....



அப்போதும் ஆத்திரம் தீராமல் அவள் கையில் இருந்த ப்ளவர் வாசை பிடுங்கி அவள் தலையில் அடிக்க போனவன் அவள் பயத்தோடு கன்னத்தில் கை வைத்தவாறு பின்னால் நகர்ந்து சுவரை ஒட்டி நின்றதை பார்த்து விட்டு அந்த வாசை சுவரில் அடித்து விட்டு "கொன்னுடுவேன் பாத்துக்க.... இந்த மாதிரி தண்ணி ஊத்தி விளையாடுற விளையாட்டு எல்லாம் அந்த ரஞ்சனோட வச்சுக்கோ.... இன்னொரு முறை என்கிட்ட விளையாடுற வேலை வச்சுக்கிட்ட கொன்னுடுவேன்...." என்றவன் அவள் அணிந்திருந்த புடவையில் தன் முகத்தை துடைத்துக் கொண்டு மீண்டும் கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டான்....





சாதனாவோ பயத்தோடு கண்களில் இருந்து நீர் வழிய கன்னத்தில் கை வைத்து நின்று இருந்தாள்.....







கண்களில் இருந்து தண்ணீர் மட்டும் விடாமல் வந்து கொண்டே இருந்தது... சத்தமாக அழுதால் அதற்கும் அடிப்பானோ என்று பயந்து மௌனமாக தேம்பி தேம்பி அழுதாள் சாதனா.....





லஷ்மியோ புருஷன் பொண்டாட்டி பிரச்சினையில தான் இடையில் செல்வது முறை இல்லை என்று கீழேயே நின்று கொண்டார்.......







சாதனா அழுது அழுது களைத்து போய் தூங்கிவிட்டாள்.... ஏசி ரூமில் குளிர் அதிகமாக இருக்க போர்வை கூட இல்லாமல் தான் கட்டியிருந்த புடவையை எடுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.....






ப்ரியனோ எதை பற்றிய நினைவும் இல்லாமல் நிம்மதியாக படுத்து உறங்கினான்.....



மூன்று மாதங்களுக்குப் பிறகான அவனது நிம்மதியான உறக்கம் இன்று தான்.....


மறுநாள் விடிந்து வெகு நேரம் ஆகியும் ப்ரியனும் சாதனாவும் எழுந்து வரவில்லை....


9 மணி வரை அமைதியாக இருந்த லட்சுமி ஒன்பது மணிக்கு மேல் அறை கதவை தட்ட ஆரம்பித்தார்.....

கதவு தட்டிய சத்தத்தில் கண்விழித்த ப்ரியன் தலையை கைகளால் பிடித்தவாறு எழுந்து அமர்ந்து "கம் இன்..." என்றான்...




லஷ்மி கையில் காப்பி ட்ரேயுடன் உள்ளே வந்தார்....
சாதனாவும் எழுந்து அமர்ந்தவள் வெகு நேரம் கை காலை குறுக்கிக் கொண்டு படுத்திருந்ததால் கை, கால்களை அசைக்க முடியாமல் கீழேயே அமர்ந்து விட்டாள்.....





காபி கொண்டு வந்த லட்சுமி சாதனா வெறும் தரையில் அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு "சோபாவில் படுத்து தூங்கி இருக்கலாமே பாப்பா...."என்றார்....



ப்ரியனோ தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதவனை போல லட்சுமி கொடுத்த காபியை அருந்தி கொண்டிருந்தான்.....



சாதனா ப்ரியனை பார்த்து விட்டு லட்சுமி இடம் "பசிக்குதுக்கா...." என்றாள்.....




லட்சுமி அப்படியே உருகி போய் விட்டார்...
"நேற்று எப்போ சாப்பிட்டாய் பாப்பா...."


"சரியா நியாபகம் இல்லை அக்கா...."


"தம்பி ஒரு வேலைக்காரியாக இருந்துகிட்டு நான் இதை சொல்லக்கூடாது....." என்றதும் நிமிர்ந்து லட்சுமியை பார்த்த ப்ரியன் கேள்வியாக புருவத்தை உயர்த்தினான்.......




"நேத்து நீங்க தள்ளிவிட்டதில் பாப்பாவுக்கு தலையில அடிபட்டுடுச்சு.... பிருந்தா பாப்பா தான் வந்து கட்டு போட்டு மருந்து கொடுத்துட்டு போச்சு....."



"வாட் த ஹெல்..... உங்களுக்கு அறிவு இருக்கா..... யாரை கேட்டு அவளை வர சொன்னீங்க..... இவளுக்கு கட்டு ஒன்னு தான் கேடு.... செத்து போனால் போகட்டும்னு விட்டு தொலைக்க வேண்டியது தானே...." என்று கத்தியவன் மொபைலை எடுத்து தன் நண்பனுக்கு அழைத்தான்.....





"ஹலோ பரத்..." என்று அடுத்த வார்த்தை பேசுவதற்குள் போன் கட் ஆனது.....


அடுத்து பிருந்தாவிற்கு அழைத்தான்.... அவளும் ஹலோ என்பதற்குள் போனை கட் செய்து இருந்தாள்......





அடுத்து விஷ்ணுவிற்கு கால் செய்தான்..... அவனுடைய போன் சுவிட்ச் ஆப்பில் கிடந்தது.....



நண்பர்கள் மூன்று பேருடைய கோபத்தை அறிந்து கொண்டவன் தற்போது அவர்கள் மூவரும் ஒரே இடத்தில் தான் இருப்பார்கள் என்று நினைத்து அவர்களை சந்திக்க முடிவு செய்தான்......



அவசர அவசரமாக குளித்து கிளம்பியவன் டைனிங் டேபிளுக்கு சென்ற அமர்ந்தான்.....



லட்சுமி சாதனாவை பார்த்துக் கொண்டிருந்ததால் ப்ரியனுக்கு டிபன் பரிமாற மறந்து போனார்... ..



2நொடிகள் காத்திருந்தவன் டைனிங் டேபிளில் இருந்த தட்டை சுவற்றை நோக்கி வீசி எரிந்து விட்டு கோபமாக வீட்டில் இருந்து வெளியேறினான்.......





தட்டு கீழே விழுந்து உடைந்த சத்தம் கேட்டு சாதனாவை விட்டு எழுந்து வந்த லக்ஷ்மி கண்டது என்னவோ வெறும் புகையை தான்.... அவ்வளவு வேகமாக காரை எடுத்துக்கொண்டு சென்று இருந்தான் ப்ரியன்......




ஒரு பெருமூச்சுடன் மீண்டும் சாதனாவை நோக்கி சென்ற லக்ஷ்மி அவள் கை கால்களை பிடித்து விட ஆரம்பித்தார்......



கை கால்கள் ஓரளவுக்கு நார்மலுக்கு வந்ததும் எழுந்து நின்ற சாதனா குளிக்கப் போகலாம் என்று நினைத்தாள்.....



அப்போதுதான் தனக்கு உடைகள் ஏதும் இல்லை என்பது நினைவுக்கு வந்தது....



லஷ்மியிடம் "அக்கா எனக்கு ட்ரஸ் எதுவும் இல்லை....." என்றாள்.....



*அதெல்லாம் தம்பி கப்போர்ட் நிறைய ட்ரஸ் இருக்கு...... உனக்கு எந்த டிரஸ் புடிச்சிருக்கோ எடுத்து போட்டுக்க பாப்பா......." என்றார்....



"ஸ்ரீக்கு வாங்கி வைத்த ட்ரஸை ஏன் எடுத்தேன்னு வந்து திட்டுவான்.... அதனால் எனக்கு வேண்டாம்... உங்களுடைய டிரஸ் ஏதாவது இருந்தால் குடுங்க..." என்று அவரிடம் இருந்து ஒரு புடவை வாங்கி கொண்டு குளிக்க சென்றாள்....




சாதனா குளித்துவிட்டு வந்ததும் அவளுக்கு டிபன் கொண்டு வந்து கொடுத்தார் லக்ஷ்மி....



"எனக்கு ஒரு உதவி பண்றீங்களா..."



"சொல்லுமா என்ன பண்ணனும்....."


"நான் இங்கிருந்து தப்பிச்சு போறதுக்கு எனக்கு உதவி பண்ணுங்க...."



"தம்பி ரொம்ப நல்லவர் தான் பாப்பா...."


"உங்க தம்பி அடிச்ச என் கன்னத்தை பாத்தீங்களா..... எப்படி இருக்குன்னு உங்க தங்க கம்பி அறைந்தது என் கன்னத்த்தில் தான்..... அடி வாங்கியது நான்....இந்த நரகத்தில் இருந்து தப்பிக்க ஹெல்ப் பண்ணுங்கக்கா ப்ளீஸ்......"



"அது வந்து பாப்பா... நான் என்ன சொல்ல.... "


"யாருன்னே தெரியாத ஒருத்திக்கு தாலி கட்டியது... நேற்று தள்ளிவிட்டு நெற்றியில் காயத்தை ஏற்படுத்தியது..... இதோ இப்போ அறைந்தது..... எல்லாம் உங்க தங்க கம்பி தானே..... அப்படிப்பட்ட உங்க தம்பி கூட என்னால் இருக்க முடியாது..... நான் என் சித்தி சித்தப்பா கிட்ட போகணும்...." என்று கோபத்துடன் அழுது கொண்டே சொன்னாள் சாதனா......





"பாப்பா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.... நான் இங்கே சாதாரண வேலைக்காரி தான்... தம்பி என்னை அக்கான்னு கூப்பிடுவதால் நான் அவங்களோட சொந்த அக்கா ஆகிட முடியாது.... எனக்கு இந்த வீட்டில் எந்த உரிமையும் கிடையாது..... நான் இங்கே சாதாரண சம்பளம் வாங்கும் வேலைக்காரி மட்டும்தான்...." என்றதும் சோர்ந்து போனவளாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள் சாதனா......




"அப்போ காலம் முழுக்க நான் இவன்கிட்ட அடி வாங்கிட்டு தான் இருக்கணுமா.... எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை... அதுவும் அவனை சுத்தமா பிடிக்கலை.... சரியான அரக்கன்.... ராட்சசன்.... குடிகாரன்..." என்று திட்டிக்கொண்டே சென்றவள் சட்டென்று அமைதியானாள்.. ..



லஷ்மி அவள் திட்டி திட்டி ஓய்ந்து போனதாக நினைத்து "இனிமேல் தப்பிக்கிற எண்ணம் இருந்தால் தயவு செய்து மாற்றிக்கொள் பாப்பா....." என்று விட்டு கிச்சனுக்கு செல்ல திரும்பினார்.....


அங்கு வாசல் படியில் கைகளை மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு ப்ரியன் நின்றிருந்தான்....


அவனுக்கு பின்னே பரத் பிருந்தா மற்றும் விஷ்ணு நின்று இருந்தனர்.....





"சோ மேடம் தப்பிக்க பிளான் பண்றாங்களோ....." என்று நக்கலாக கேட்டவன்.... "கேட்டை தாண்டி கால் எடுத்து வச்சால் உன் கால் உன் உடம்பில் இருக்காது.... முடிந்தால் ட்ரை பண்ணு..." என்றவன் நண்பர்களிடம் திரும்பி "சாதனா.... என் பொண்டாட்டிடிடிடி.." என்று இழுத்து கூறியவன் சாதனாவிடம் திரும்பி "என் உயிர் நண்பர்கள் பரத் பிருந்தா அன்ட் விஷ்ணு..." என்றவன் கீழே சென்று விட்டான்....





"ஹாய்...." என்றதுடன் பரத்தும் கீழே சென்று விட்டான்....




விஷ்ணுவும் பிருந்தாவும் சாதனாவுக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தனர்....



"ஹலோ சாதனா எப்படி இருக்கீங்க...."




"உங்க பிரண்டு என் கழுத்தில் தாலி கட்டியதுக்கு அப்புறம் ரொம்ப அமோகமா இருக்கேன்....." என்று நக்கல் அடித்தவளை பார்த்து புன்னகைத்தாள் பிருந்தா......



"பரவாயில்லை சாதனா போல்டான பொண்ணா தான் இருக்கீங்க...." என்றாள்.....




"போல்டாக இல்லை என்றால் உங்க சைக்கோ பிரண்டு கிட்ட மாட்டிகிட்டதுக்கு நேற்றே தற்கொலை பண்ணிட்டு இருந்திருப்பேனே.... எங்கிட்ட கொஞ்சம் தைரியம் இருக்கு.... அதனால் தான் அமைதியாக இருக்கேன்...... எப்படியும் இங்கே இருந்து நான் தப்பித்து போய் விடுவேன்....."


"அது உங்களால் முடியாது சாதனா...." என்றான் விஷ்ணு.....





"சேலஞ்சா இந்த சாதனாகிட்டயே சேலஞ்சா..... தப்பிச்சு காட்டுறேன்....."




"என் ப்ரண்டு ரொம்ப புத்திசாலி.... அவன் உங்க கழுத்தில் தாலி கட்டி இருக்கிறான் என்றால் நிச்சயம் ஏதாவது காரணம் இல்லாமல் இருக்காது.... நியாயமான காரணம் இல்லாத காரியத்தை எப்பவும் அவன் செய்ய மாட்டான்...."



"ஓஹோ.... யாரென்று தெரியாத ஒரு பொண்ணு கழுத்தில் அவள் சம்மதம் இல்லாமல் தாலி கட்டுவதற்கு உங்க ப்ரண்டுக்கு நியாயமான காரணம் இருக்கு.... வாவ்... என்ன ஒரு ப்ரண்ட்ஷிப்....." என்று கைகளை தட்டியவளை கூர்ந்து பார்த்தான் விஷ்ணு......





"உங்களால் அல்லது உங்களைச் சேர்ந்தவர்களால் அவனுக்கு ஏதோ ஒரு பெரிய இழப்பு நடந்திருக்கலாம்..... அந்த இழப்பை உங்களுக்கு காட்டுவதற்காக தான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கானோன்னு எனக்கு தோணுது..... மேபி அது ஸ்ரீ சம்பந்தப்பட்ட விஷயமாக கூட இருக்கலாம்....." என்றான் விஷ்ணு......






"விஷ்ணு என்ன இது அவங்க கிட்ட நார்மலா பேசறதுக்கு உன்னை கூட்டிட்டு வந்தால் நீ அவங்களோடு சண்டை போட்டுட்டு இருக்க....."




"நிச்சயமாக இவர்களால் தான் ஏதோ பாதிக்கப்பட்டு இருக்கான் நம்ம ரஞ்சன்....."




"ரஞ்சனை உங்களுக்கு தெரியுமா.."



"நீ மேரேஜ் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி இருந்தே அவனை எங்களுக்கு நல்லா தெரியும்..... சின்ன வயதில் இருந்து நாங்க நாலு பேரும் பிரண்ட்ஸ்....."





"அப்படியா அப்போ ரஞ்சன் எங்க போயிருக்காரு..... ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கலை....."




"என்ன விளையாடுறியா நீ..... இப்போ உன்னை மேரேஜ் பண்ணி இருப்பது தான் ரஞ்சன்....."




"நீங்க தான் என்கிட்ட விளையாடுறீங்க.... அவன் பேரு ப்ரியன் தானே....."






"அவனோட முழு பேரு ப்ரியரஞ்சன்..... பிரண்ட்ஸ்க்கு ரஞ்சன் மத்தவங்களுக்கு ப்ரியன்..... நீ அவனை ப்ரியன்னு கூப்பிடறதை பார்த்தா நீ அவனுக்கு நெருக்கமானவள் இல்லை என்று புரியுது...." என்ற விஷ்ணு "அப்படி என்றால் உன் மேல் இருக்கும் வெறுப்பில் அவனுடைய காயங்களுக்கு பதிலாக உன்னை காயப்படுத்த பார்க்கிறான்....." என்று முடித்தான்.....






"அப்படி என்னடா நம்ம ரஞ்சனுக்கு பிரச்சனை....." என்று பிருந்தா கேட்க விஷ்ணு மௌனமாக இருந்தான்.......






"அவனக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் நம்ம கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லையா விஷ்ணு....."







"சில விஷயங்களை நண்பர்கள் கிட்ட கூட பகிர்ந்துக்க முடியாது பிருந்தா...." என்று கூறியவன் கீழே சென்று விட்டான்.....






அதன் பிறகு பிருந்தா லட்சுமியிடமும் சாதனாவிடமும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சாதனாவிடம் விடை பெற்று வெளியே வந்தாள்......






பரத்தும் விஷ்ணுவும் ப்ரியனின் தோளில் தட்டி கொடுத்து ஆறுதல் படுத்தினர்...... பிருந்தாவோ ப்ரியனை கோபத்துடன் உறுத்து விழித்தாள்.....







ப்ரியனோ கலங்கிய கண்களை நண்பர்களிடம் காட்டாமல் மறைத்து அவர்களுக்கு விடை கொடுத்தான்.......
 
Last edited:
உயிர் : 4


ப்ரியனுக்கு சாப்பாடு பரிமாறி கொண்டு இருந்தார் லக்ஷ்மி....

சாதனா அமைதியாக அறையில் அமர்ந்து இருந்தாள்... அவளுக்கு தலை வலிப்பது போல இருக்கவும் லக்ஷ்மியிடம் மாத்திரை கேட்க வெளியே வந்தாள்....


ப்ரியன் சாப்பிடுவதை பார்த்து விட்டு திரும்பி செல்ல நினைத்தவள் ஏதோ தோன்றவும் மீண்டும் ப்ரயனை பார்த்தாள்....
அவன் சாப்பிடும் போது ஒரு விரலை நீக்கி நான்கு விரல்களால் சாப்பிட்டு கொண்டிருந்தான்... இதே போல தானே எனக்கு தெரிந்த யாரோ சாப்பிடுவாங்க..... என்று யோசனை செய்தவள் தலை அதிகமாக வலிக்க ஆரம்பிக்கவும் கண்கள் இருட்டி போய் அங்கேயே மயங்கி சரிந்தாள்.....






சாதனா மயங்கி சரியவும் பதறி போன லக்ஷ்மி அவளை நோக்கி ஓடி போக ப்ரியனோ அமைதியாக சாப்பிட்டு முடித்தான்.....






ப்ரியனை பார்த்த லக்ஷ்மி அவன் எந்த உதவியும் செய்ய மாட்டான் என்று புரிந்து கொண்டு பிருந்தாவிற்கு கால் செய்து வர சொன்னார்...



ப்ரியனோ எதையும் கண்டு கொள்ளாமல் தன் அறைக்கு சென்றவன் சற்று நேரத்தில் கிளம்பி வெளியே சென்று விட்டான்....

பிருந்தா ப்ரியன் வீட்டிற்கு வந்து சாதனாவை பரிசோதித்து பார்த்து விட்டு அதிர்ச்சியால் ஏற்பட்ட மயக்கம் என்று கூறி இன்ஜெக்ஷன் போட்டு மாத்திரை கொடுத்தாள்..... பிறகு
"லட்சுமிமா பார்த்துக்கோங்க...." என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினாள் பிருந்தா......





ஊசி போடவும் மயக்கத்திலிருந்த சாதனா அப்படியே உறக்கத்திற்கு சென்று விட்டாள்....






சாதனா தூங்கவும் லட்சுமியும் வெளியே வந்தார்..... அவரை பார்த்ததும் பிருந்தா அவரிடம் "என்னாச்சு லஷ்மிமா.... எப்படி அவளுக்கு மயக்கம் வந்துச்சு...."




"தம்பி சாப்பாடு கேட்டுச்சு.... நான் சாப்பாடு பரிமாறிட்டு இருந்தேன் பாப்பா..... அப்போ சாதனா பாப்பா உள்ளே இருந்து இங்கே வந்தது..... அப்புறம் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துடுச்சு..... அவ்ளோ தான் பாப்பா எனக்கு தெரியும்...."



"சரி லக்ஷ்மிமா... நீங்க போய் அவளை பாத்துக்கோங்க... நான் வரேன்....'




"இரு பாப்பா.... காபி கொண்டு வரேன்... குடிச்சுட்டு போ...."


'இல்ல வேண்டாம் லக்ஷ்மிமா... நீங்க போய் அவளை பாருங்க... நான் கிளம்புறேன்...." என்று கூறிவிட்டு வெளியே வந்தாள் பிருந்தா....




ப்ரியன் மனநல மருத்துவரின் முன்னால் அமர்ந்திருந்தான்....



"சொல்லுங்க பிரியன்... இப்போ என்ன பிரச்சனை...."



"எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை டாக்டர்....'



"அப்போ வேற யாருக்கு என்ன ப்ராப்ளம்.... எதற்காக ஆர் யாருக்காக திரும்ப என்னை தேடி வந்து இருக்கீங்க ப்ரியன்..."




"என் பிரச்சனைக்காக வரலை டாக்டர்....."





"வேற யாருக்கு என்ன பிரச்சனை..."





"டாக்டர் எனக்கு சில டவுட் இருக்கு...."




"கேளுங்க ப்ரியன்... உங்க சந்தேகம் என்ன...."




"அது வந்து... " என்று இழுத்த ப்ரியன் சொல்ல தயங்கினான்.....
அவன் சொல்ல தயங்குவதை பார்த்த டாக்டர்






"மிஸ்டர்.ப்ரியன் உங்க ரகசியம் இந்த ரூமை விட்டும் என்னை விட்டும் யாருக்கும் தெரிய வராது... தைரியமா என்னை நம்பி சொல்லுங்க.... நம்பிக்கை இருக்கு தானே...." என்று கேட்ட டாக்டர் விஷ்ணுவை முறைத்த ப்ரியன் ஒரு முடிவுடன் தன் சந்தேகங்களை கேட்க ஆரம்பித்தான்....





"டாக்டர் எனக்கு நினைவு
வந்த மாதிரி பழைய ஞாபகங்கள் அப்போ என் கூட பழகியவங்களுக்கு அதாவது இப்போ என்னுடன் பழகிட்டு இருக்குறவங்களுக்கு அதே ஞாபகங்கள் வர வாய்ப்பு இருக்கா.... "





"நீங்க யாரை பத்தி சொல்றீங்கன்னு கொஞ்சம் தெளிவா என்கிட்ட சொல்லுங்க... அப்போ தான் அவங்களுக்கு ஞாபகம் வர வாய்ப்பு இருக்கா இல்லையான்னு என்னால் சொல்ல முடியும்...."




"பழைய வாழ்க்கையில் நான் காதலிச்ச..... என்னை காதலிச்ச.... பொண்ணுக்கு அதே பழைய ஞாபகங்கள் வர வாய்ப்பு இருக்கா...."




"அந்த பொண்ணு தான் உங்க காதலின்னு உங்களுக்கு எப்படி தெரியும்...."




"என் காதலியோட முகம்.... அதாவது என் ஸ்ரீயோட முகம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு டாக்டர்.... இப்போ இருக்கும் பொண்ணு அதே குடும்பத்தில் அதே முகத்தோட அதே 21 வயதில் இருக்கா..... அப்போ அவ என்னோட ஸ்ரீயாக இருக்க வாய்ப்பு இருக்கா.... ஒருவேளை அப்படி இருக்குமோன்னு மனசு சொல்லுது... ஆனால் அறிவு அவள் எதிரி குடும்பத்தைச் சேர்ந்தவள்... அவளை வைத்து அந்த குடும்பத்தை பழிவாங்க சொல்லுது.... மனதிற்கும் அறிவுக்கும் நடக்கும் போட்டியில் எனக்கு பைத்தியம் ஒன்னு தான் பிடிக்கலை..."




"அந்த பொண்ணு உங்களை லவ் பண்ணுதா.... "



"இல்லை டாக்டர்.... அவள் என்னை லவ் பண்ணலை.... ரஞ்சன் என்ற பையனை தான் லவ் பண்றா...."






"அந்த பொண்ணு ஏன் அந்த ரஞ்சனை லவ் பண்ணனும்... எத்தனையோ பேர் கொண்ட பசங்க இருக்கும் போது ரஞ்சன்னு பெயர் இருக்கும் அந்த பையனை மட்டும் லவ் பண்றதுக்கு காரணம்.... அந்தப் பெயராக இருக்கலாம் இல்லையா....."



"டாக்டர் நான் என்னை தெளிவுபடுத்தி கொள்ள தான் இங்கே வந்தேன்.... நீங்க என்னை இன்னும் குழப்புறீங்க...."





"மிஸ்டர்.ப்ரியன் நீங்க சொல்ற மாதிரி அந்த பொண்ணு உங்க ஸ்ரீயாக இருக்க வாய்ப்பு இருக்கு...."



"அப்போ அவளுக்கு பழைய ஞாபகங்கள் வருமா டாக்டர்...."



"சிலருக்கு வரும்... சிலருக்கு வராமல் போகும்.. . உங்களுடைய பழைய வாழ்க்கையில் பழி வாங்க முடியாமல் போனதால் நீங்க எப்படி பிறந்து இருக்கீங்களோ அதே போல உங்களுக்காக அவங்களும் பிறந்து இருக்கலாம் இல்லையா..."




"ஆனால் நான் அவளை அந்த குடும்பத்தை பழி வாங்க மட்டும் தான் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்...."



"அது உங்க மனசுக்கு நீங்க சொல்ற கட்டுக்கதை.... இப்படி சொல்லி உங்க மனதை நீங்களே காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறீங்க.... ஆனால் உண்மையில் உங்க மனசுக்குள்ள அந்த பொண்ணு மேல் இருக்கும் காதல் அதாவது உங்க ஸ்ரீ மேல இருக்கும் காதல் ஸ்ரீ போலவே இருக்கும் அந்த பொண்ணை மேரேஜ் பண்ணிக்க காரணமாக இருந்திருக்கு..... ஒருவேளை போகப் போக அந்த பொண்ணை நீங்க ஸ்ரீயாக நினைக்க வாய்ப்பு இருக்கு.... அப்படி இல்லை என்றால் உங்களை போலவே ஸ்ரீயும் மறுபிறவி எடுத்து பிறந்திருக்கலாம்.... இப்படி காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.... எதுக்கும் அந்த பொண்ணை ஒரு தடவை இங்கே கவுன்சிலிங் கூட்டிட்டு வாங்க.... ஹிப்னடைஸ் ட்ரை பண்ணி பார்ப்போம்..."





"சரி டாக்டர் முயற்சி பண்றேன்...."என்று கூறியவன் ஏதோ யோசனையில் இருந்தான்.....



" சியர் அப் மேன்.... சோர்ந்து போகாதே..."


"ஒருவேளை அவள் என் ஸ்ரீயாக இருந்தால்....."


"சிம்ப்பிள்.... அன்று வாழாத வாழ்க்கையை இன்று வாழலாமே ப்ரியன்....."


"நோ டாக்டர்.... எங்களை துடிக்க வைத்து கொலை செய்தவர்களை நானும் துடிக்க வைத்து கொல்வேன்.... " என்று சொன்னதும் இதுவரை விஷ்ணுவின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து இறுக்கம் குடி கொண்டது....




"பழிவாங்கும் எண்ணத்தை விட முடியாதா ப்ரியன்...."




"முடியாது டாக்டர்.... வாழ வேண்டிய எங்களை சொத்துக்காக வஞ்சகத்தால் கொன்றவர்களை சும்மா விட சொல்றீங்களா டாக்டர்.... எனக்கு அவர்கள் பதில் சொல்லியே தீரனும்...."




"ஓகே மிஸ்டர் ப்ரியன்... யூ கேரியான்..."




"டாக்டர் இன்னும் ஒரு டவுட்...."



"சொல்லுங்க ப்ரியன்.... அவளை அதாவது என் ஸ்ரீ போல இருக்கும் அவளை ஹிப்னடைஸ் செய்யும் போது நான் அவளுடன் இருக்கலாமா......"




"நீங்க அந்த பொண்ணோட ரிலேஷனாக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு அவர்களுடன் இருக்க அனுமதி உண்டு....."



"ஓகே டாக்டர் தேங்க்யூ.... அண்ட் நான் எப்போதும் நண்பர்களை சந்தேகப்பட மாட்டேன் டாக்டர்.... முதுகில் குத்தும் துரோகிகளை தான் இப்போதும் எப்போதும் நம்ப மாட்டேன்...." என்றவன் விஷ்ணு கூற வந்ததை காதில் வாங்காமல் ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தான்....




விஷ்ணுவோ என்றோ செய்த துரோகத்தின் பலனை இன்று அனுபவித்தான்...
"சாரி ரஞ்சா... நான் உனக்கு செய்த துரோகத்தின் வலியை இப்போ நான் உணர்றேன்.... முடிஞ்சா என்னை மன்னிச்சுடு ரஞ்சா...." என்று மன்னிப்பு கேட்டவனின் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது.....



மருத்துவமனையில் இருந்து யோசனை செய்தவாறே வெளியே வந்தான் ப்ரியன்....
"அவள் உண்மையில் என்னோட ஸ்ரீயா..... ச்சே....இருக்காது..... என்னோட ஸ்ரீ என்னை தவிர வேற யாரையும் நினைக்க மாட்டாளே.... இவள் அந்த ரஞ்சனை லவ் பண்றா..... அவள் எப்படி என்னோட ஸ்ரீயாக முடியும்..... என் ஸ்ரீ மனதில் என்னை தவிர வேற யாரையும் நினைக்க மாட்டாளே....." என்று எதை எதையோ நினைத்து குழம்பிப் போனவன் காரை கவனமில்லாமல் ஓட்டினான்......





ப்ரியன் காரின் எதிரே வந்த லாரியை கவனிக்காமல் லாரியில் சென்ற மோத போனவன் சற்று தடுமாறி அருகில் இருந்த மரத்தில் சென்று மோதினான்...... அவன் வந்த ஸ்பீடுக்கு மரத்தில் மோதியதும் ஏர் பேக் ஓபன் ஆகி தலை அதில் மோதி பின்னால் இருந்த சீட்டில் வந்து மோதி மீண்டும் முன்னே சென்று மோத போக கையை ஊன்றி சமாளிக்க முயற்சி செய்த ப்ரியன் சுதாரிக்க முடியாமல் கை மடங்கி எலும்பு முறியும் சத்தம் கேட்க தலையில் அடிபடாமல் இருந்தாலும் அதிர்ச்சியில் மயங்கி சரிந்தான்......





ப்ரியன் சென்றது பைபாஸ் என்பதால் ஏகப்பட்ட வாகனங்கள் அந்த வழியே சென்று கொண்டிருக்க நடந்து சென்ற ஓரிருவர் அங்கே நடந்த விபத்தை பார்த்துவிட்டு அவனை காப்பாற்ற ஓடி வந்தார்கள்.....





யாரோ ஒருவர் ஆம்புலன்ஸுக்கு கால் செய்ய அருகில் இருந்த ஹாஸ்பிடலில் இருந்து ஆம்புலன்ஸ் வந்து ப்ரியன் அதில் ஏற்றப்பட்டான்......







ஹாஸ்பிடலில் ப்ரியனுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்க அவன் மொபைலை எடுத்து இறுதியாக அவன் பேசியிருந்த நம்பருக்கு கால் செய்தார்கள்.....



இறுதியாக அவன் விஷ்ணுவிற்கு தான் கால் செய்திருந்ததான்.....




விஷ்ணு மொபைலை எடுத்து கால் அட்டென்ட் செய்து "ஹலோ......" என்றான்.....


"ஹலோ சார்....." என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.....



"இது என் நண்பன் போன்..... நீங்க எப்படி இதில்.... நீங்க யாரு..... அவன் போனில் நீங்க எதுக்காக பேசுறீங்க...."




"சார்... என்னையும் கொஞ்சம் பேச விடுங்க சார்...." என்று அந்த பக்கம் பேசிய பெண் கூறவும் "சொல்லுங்க... " என்றான் விஷ்ணு.....



"இந்த மொபைலுக்கு சொந்தக்காரர்
இங்கே அடிபட்டு அட்மிட் ஆகி இருக்காரு...."



"என்ன ரஞ்சனுக்கு ஆக்சிடண்டா...."



"ஆமா சார் அவரை காவேரி ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து இருக்காங்க.... நீங்க வரீங்களா சார்......"


"இதோ உடனே வரேன் மேடம்...." என்று கூறி காலை கட் செய்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் காவேரி ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான்.......




அவசர சிகிச்சை பிரிவில் ப்ரியனுக்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்க ரத்தக்கசிவு எதுவும் இல்லை என்றாலும் வேகமாக வந்த காரை திடீரென திருப்பியதால் அவன் கை பேலன்ஸ் தவறி ஸ்டீயரிங் வீலில் மோதி கையில் பிரக்சர் ஆகி இருந்தது.......



கையில் கட்டு போட்டு ஊசி போட்ட மருத்துவர்கள் வெளியே வந்தார்கள்......



"டாக்டர் என் பிரண்டுக்கு இப்போ எப்படி இருக்கு....."





"பயப்படும்படியாக எதுவும் இல்லை மிஸ்டர்...."



"விஷ்ணு டாக்டர்..... ஐ ஆம் எ சைக்யாட்ரிஸ்ட்...."


"ஓஹோ.... சீ மிஸ்டர்.விஷ்ணு எதுக்கும் தலையை ஒரு ஸ்கேன் பண்ணி பாத்துருங்க...... வெளியே அடிப்படாமல் இருந்தாலும் உள்ளுக்குள் அடிபட்டு ரத்தம் கசிந்து இருக்க வாய்ப்பு இருக்கு..... சோ ஒரு தடவை தலையை ஃபுல்லா ஸ்கேன் பண்ணி ரிப்போர்ட் கொண்டு வாங்க...." என்று கூறினார் டாக்டர்...,


"டாக்டர் வேற எதுவும் பிராப்ளம் இல்லையே..... "




"கையில் மட்டும் ஏர்லைன் பிராக்சர் ஆகி இருக்கு..... மேபி கார் வேகமாக ஓட்டிட்டு வரும் போது திடீர்னு திருப்பியதும் கை எங்கேயாவது அடிபட்டு இருக்கலாம் அல்லது இவரே கையை நீட்டி தடுக்கும் போது அடிபட்டு இருக்கலாம்...... இப்போதைக்கு கட்டு போட்டு டேப்லட் கொடுத்திருக்கோம்.."




"நான் போய் பார்க்கலாமா டாக்டர்....."


"ஜெனரல் வார்டுக்கு மாத்திடுவாங்க..... அதுக்கு பிறகு போய் பாருங்க....." என்ற டாக்டர் வெளியே சென்று விட்டார்.....



விஷ்ணு அதன் பிறகு தனது நண்பர்களுக்கு கால் செய்து சொன்னவன் சாதனாவிடம் கூறாமல் தவிர்த்தான்....




பிருந்தா ப்ரியன் வீட்டுக்கு அருகில் தான் இருந்தாள்...... எனவே சாதனாவையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தாள்.......
 
Last edited:
உயிர் : 5

ப்ரியனுக்கு அப்போது தான் மயக்கம் தெளிந்திருந்தது.....






தன்னை சுற்றி கேட்ட பேச்சு குரல்களை காதில் வாங்கிக் கொண்டே கண்விழித்து பார்த்தான் ப்ரியன்.....






பிருந்தா பரத் இருவரும் "ஆர் யூ ஓகே ரஞ்சன்..." என்று கேட்டார்கள்...






ப்ரியனோ அவர்களுக்கு பதில் கூறாமல் கண்களை சுழற்றி யாரையோ தேடினான்....








சுற்றிலும் பார்த்தவன் கண்களில் விஷ்ணு தெரியவும் மலர்ந்த முகத்துடன் "டேய் கிருஷ்ணா... வந்துட்டியாடா..." என்று கேட்டான்....







அங்கிருந்த மற்ற இரு நண்பர்களும் குழப்பத்தோடு இவர்களை பார்க்க விஷ்ணு அதிர்ந்து போய் ப்ரியனை பார்த்தான்....






ப்ரியனோ இன்னும் ஏதோ கேட்கவும் தன் அதிர்ச்சியை மறைத்து கொண்டு அவன் சொல்வதை கேட்க ஆரம்பித்தான்....




"கிருஷ்ணா... ஸ்ரீ எப்படி இருக்காடா... என்னை நினைத்து ரொம்ப அழுதாளாடா.. அவளை கவலைப்பட வேண்டாம்னு சொல்லு... என் தலை காயம் சரியானதும்..." என்று பேசியவாறு தலையை தொட்டு பார்த்தவன் அங்கு காயம் எதுவும் இருப்பது போல தெரியாததால் "கிருஷ்ணா... இது எந்த மாசம்... நான் இத்தனை நாள் கோமாவில் இருந்தேனா..."






"இன்னும் கொஞ்ச நேரம் இப்படி எங்களுக்கு புரியாத மாதிரி பேசினால் நிஜமாகவே உன்னை கோமாவுக்கு அனுப்பிடுவேன்..." என்று கூறிய பிருந்தாவை முன்பின் தெரியாத பெண்ணை பார்ப்பது போல பார்த்து வைத்தான்...






ப்ரியனுக்கு என்ன பிரச்சினை என்று புரிந்து கொண்ட விஷ்ணு பிருந்தாவையம் பரத்தையும் வெளியே காத்திருக்க சொன்னான். . .







பிருந்தா வெளியே செல்ல திரும்பவும் அவளுக்கு பின்னே நின்றிருந்த சாதனா ப்ரியனின் கண்களில் விழுந்தாள்....





சாதனாவை பார்த்ததும் "ஸ்ரீ..." என்றவாறு எழ முற்பட்டவன் அடிபட்ட கையை கட்டிலில் ஊன்றி விட்டான்...





"ஆஆ.." என்று வலியில் முனகியவன் அந்த வலியை பொருட்படுத்தாமல் சாதனாவை நோக்கி செல்ல முனைந்தான்.....






ஒரு பெருமூச்சுடன் ப்ரியனை கட்டிலிலேயே அமர சொன்ன விஷ்ணு சாதனாவை கண்களால் அருகில் வருமாறு அழைத்தான்....






சாதனாவோ கண்களில் பயத்துடன் ப்ரியனை நோக்கி வந்தாள்... ப்ரியனோ கண்கள் நிறைந்த காதலுடன் "எனக்கு தெரியும் ஸ்ரீ... நீ என்னை தேடி வருவன்னு... கிருஷ்ணா தான் உன்னை கூட்டிட்டு வந்தானா..." என்று கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தவன் செவிலியர் போட்ட இன்ஜெக்ஷனில் தூக்கம் சொக்கவும் கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான்....






பயந்த கண்களுடன் நின்ற சாதனாவையும் அழைத்து கொண்டு பிருந்தா விஷ்ணுவை பின்தொடர்ந்தாள்..... பரத் எப்போதும் போல அமைதியாக அவர்களுடன் நடந்தான்....








அந்த மருத்துவமனை விஷ்ணுவின் ப்ரண்ட் கைலாஷின் மருத்துவமனை என்பதால் அவனுக்கு கால் செய்து ப்ரியன் இருந்த அறைக்கு அருகில் இருக்கும் தனி அறையை இவர்கள் தனியாக பேசுவதற்கு ஒதுக்கி தர சொன்னான் விஷ்ணு.....






ப்ரியன் உறங்குவதால் பக்கத்து அறைக்கு இவர்களை அழைத்து சென்ற விஷ்ணு சற்று நேரம் அமைதியாக இருந்தான்....






ஆனால் பிருந்தா அந்த அமைதியை கலைத்து "விஷ்ணு இங்கே என்ன நடக்கிறது என்று எங்களுக்கு சொல்ல போறியா இல்லையா..." என்று கத்தினாள்...







"சொல்றேன்... ஆனால் நீ நினைப்பது போல இதை எடுத்தோம் கவிழ்த்தோம்னு சொல்ற சின்ன விஷயம் கிடையாது.... இது கொஞ்சம் வேற மாதிரி... இதை கேட்டால் நீ நம்பாமல் கூட போகலாம்...." என்று பீடிகையுடன் ஆரம்பித்தான் விஷ்ணு....








"பிருந்தா எல்லா உண்மையும் சொல்றதுக்கு முன்னாடி இப்போ நான் சொல்ல போறதை மனதில் வச்சுக்கோ.... இதை எப்போதும் மறக்காதே... ஒருவேளை இதுக்கு பிறகு என்னால் சொல்ல முடியாமல் கூட போகலாம்...." என்றவனை குழப்பமாக பார்த்தாள் பிருந்தா....








தன் சட்டை பையில் இருந்து அழகான மோதிரத்தை எடுத்து பிருந்தாவிடம் நீட்டி "ஐ லவ் யூ பிருந்தா.... ஐ வாண்ட் டூ மேரி யூ...." என்றவனை மறுத்து பேச வந்தவளிடம் கையை நீட்டி தடுத்த விஷ்ணு "ப்ளீஸ் இப்போ நீ எதுவும் சொல்லாதே... காதலின் வலியை அனுபவிக்க நீ கொடுத்த சாபத்தை நான் விரும்பி ஏத்துக்குறேன்..... நீ என்னை லவ் பண்ணாலும் பண்ணலைனாலும் என் மனசு மாறாது..." என்று அவள் கையை பிடித்து மோதிரத்தை கொடுத்து விட்டு அனைவருக்கும் முன்னால் சென்று நின்றான்....







"கைஸ்... உங்க எல்லாருக்கும் இருக்கும் ஒரு டவுட்.... ஸ்ரீ யாரு அப்படின்றது... ஸ்ரீ நம்ம ரஞ்சனோட காதலி..." என்றதும் சாதனா ஏதோ கேட்க வர அவளை தடுத்த விஷ்ணு "ப்ளீஸ்... இப்போ எந்த டவுட்டும் கேட்காதீங்க... நான் எல்லாத்தையும் சொல்லி முடித்த பிறகு உங்களுக்கே எல்லாம் புரியும்.." என்றவன் ப்ரியனை பற்றி கூற ஆரம்பித்தான்....







நம்ம ரஞ்சன் மூணு மாதத்திற்கு முன்னாடி என்னை பார்க்க ஹாஸ்பிடல் வந்தான்...






"வா ரஞ்சா... என்ன என்னை பார்க்க ஹாஸ்பிடலுக்கே வந்து இருக்க... ஏதாவது முக்கியமான விஷயமா..."








"விஷ்ணு... எனக்கு கொஞ்ச நாளா ஒரே கனவு திரும்ப திரும்ப வருது.... இன்பேக்ட் அது கனவு போலவே தெரியலை... நிஜமாகவே எனக்கு நடப்பதை போல இருக்கு.... கடைசியாக என்னை உயிரோடு குழியில் தள்ளி மண்ணை போட்டு மூடும் போது நிஜமாவே என்னால் மூச்சு விட முடியலை... தினமும் நைட் இப்படியே கனவு வந்து விழிப்பும் வருது.. எனக்கு ஏதோ பிராப்ளம் இருக்குற மாதிரி ஃபீல் பண்றேன் விஷ்ணு..."








"ஓகே... ஓகே.. ஐ அண்டர்ஸ்டேண்ட்... இப்போ உனக்கு தேவைப்படுறது கவுன்சிலிங் இல்லை ரஞ்சா.... சிலருக்கு இந்த மாதிரி பவர்ஸ் திடீர்னு வரும்...."




"என்ன பவர்..."




"யாருக்கோ நடக்க இருக்கும் சம்பவங்கள் உனக்கு கனவாக வரலாம்..."





"ம்ஹூம் இல்லை விஷ்ணு.... இது எனக்கு நடந்தது தான்... என்னால் என்னையே பார்க்க முடிந்தது... நிச்சயமா தெரியும்... அது நான் தான்.... இதோ இந்த மச்சம்....." என்று தன் நெஞ்சில் ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு இருந்த மச்சத்தை காட்டியவன் இதே மச்சம் அவன்கிட்ட நான் பார்த்தேன்.... ப்யூச்சரில் இந்த சம்பவம் நடக்க இருந்தால் அதை தடுக்க எனக்கு உதவி செய் விஷ்ணு...." என்று படபடப்பாக பேசினான் ப்ரியன்....





"ஹே ரிலாக்ஸ் ஜஸ்ட் ரிலாக்ஸ் ரஞ்சா.... இட்ஸ் ஓகே... இப்போ எதுக்காக இவ்வளவு டென்சன் ஆகுற..."








"உனக்கு புரியாது விஷ்ணு... அங்கே என்னுடன் ஒரு பொண்ணு இருந்தாள். .. அவளையும் எனக்கு பக்கத்தில் இருந்த குழியில் தள்ளி மண்ணை போட்டு மூடினாங்க.... நான் அவளை பார்த்து ஸ்ரீ ஸ்ரீன்னு கத்தினேன்... அவள் ரஞ்சன்னு கூப்பிட்டபடியே உயிரை விட்டாள்...." என்றவனின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது...






"ரஞ்சா வாட் ஈஸ் திஸ்... இட்ஸ் நாட் ரியல்.... இட்ஸ் ஜஸ்ட் எ ட்ரீம்...."





"நோ.... இட்ஸ் நாட் எ ட்ரீம்.... புரியலையா விஷ்ணு உனக்கு... ஐ காண்ட்..."





"ஓகே ரிலாக்ஸ் ரஞ்சா.... நான் உனக்கு ஹிப்னாடிஸம் ட்ரை பண்ணி பார்க்கவா..."




"சரி...."





"ரஞ்சா... இது விளையாட்டு கிடையாது... இதனால் உன் ஆழ்மன எண்ணங்கள் வெளியே வரும்..."






"பரவாயில்லை... என் கனவில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்... அதற்காக என்ன வேணாலும் செய்யலாம்... நான் ரெடி.... எப்போ ஸ்டார்ட் பண்ற...."








"பொறுடா.... ஏன் இவ்வளவு அவசரப்படுற... என் சீனியர் டாக்டர்.பார்கவி மேடம் வந்து இருக்காங்களான்னு பார்த்து விட்டு வருகிறேன்... அவங்க தான் இந்த ஹிப்னாடிஸத்தில் ஸ்பெஷலிஸ்ட்...." என்று கூறி விட்டு வெளியே சென்றவன் அடுத்த 15 நிமிடங்களில் டாக்டர் பார்கவியுடன் உள்ளே வந்தான்...







"மேடம் இவர் தான் நான் சொன்ன பேஷன்ட்... & மை பெஸ்ட் பிரண்ட் ப்ரியரஞ்சன்..." என்று அறிமுகப்படுத்தியவன் ரஞ்சனிடம் திரும்பி "இவங்க தான் என் சீனியர் டாக்டர். பார்கவி..." என்றான்....









டாக்டர். பார்கவியும் விஷ்ணுவும் ஒரு தனி அறைக்கு ரஞ்சனை அழைத்து சென்றார்கள்....







அங்கு இருந்த இருக்கையில் அமர சொன்ன பார்கவி அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து அங்கே இருந்த எல்இடி ஸ்க்ரீனை பார்க்க சொன்னார்....







வளைய வளையமாக ஓடிய ஸ்க்ரீனை பார்த்த ப்ரியனுக்கு கண்கள் சொருக ஆரம்பிக்க மெல்ல மெல்ல கண்களை மூடினான் ப்ரியன்....









ப்ரியனின் கண்கள் மூடிக் கொள்ளவும் பார்கவி அவனிடம் பேச ஆரம்பித்தார்....







"மிஸ்டர்.ரஞ்சன்... நான் பேசுறது கேட்குதா...."








"ம்... நல்லா கேட்குது.."








"ஓகே.. இப்போ நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா..."







"சொல்றேன்... நீங்க கேள்வி கேளுங்க...."








"ஸ்ரீ... ஸ்ரீ.. யாரு ரஞ்சன்....."






"ஸ்ரீ... என் காதலி..."







"ஓகே... எத்தனை வருஷமா காதலிக்கிறீங்க... அவங்களோட முழு பெயர் என்ன...."











"காலேஜ் தேர்ட் இயரில் இருந்து லவ் பண்றேன்.... அவளோட பெயர் நித்யஸ்ரீ... எல்லாருக்கும் நித்யா.... எனக்கு மட்டும் ஸ்ரீ...." என்றவனின் முகம் புன்னகை பூத்தது....








விஷ்ணு குழம்பி போய் ஏதோ பேச வர அவனை தலையாட்டி தடுத்த பார்கவி "இப்போ என்ன வருஷம் என்ன மாதம் ரஞ்சன்..."





"1967 ஆகஸ்ட் 25..."







"இப்போ நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரஞ்சன்....






"எங்க காலேஜில் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் வராங்க.. சோ அவங்களை பார்க்கவும் ராகிங் பண்ணவும் பசங்க வெயிட் பண்றாங்க.. நானும் அவங்களோடு வெயிட் பண்றேன்...."





"உங்க ஸ்ரீ வரலையா ரஞ்சன்..."






"ஸ்ரீ..." என்று புருவத்தை சுளித்தவனை தட்டி கொடுத்து நினைவு திரும்ப விடாமல் தடுத்த பார்கவி "சரி உங்க காலேஜ் லைப் பத்தி சொல்லுங்க... உங்களை என்ன சொல்லி கூப்பிடுவாங்க..." என்று கேட்டார்...







"என் பெயர் சித்தரஞ்சன்... வீட்டில் சித்து... ப்ரண்ட்ஸ்க்கு ரஞ்சன்.... காலேஜில் ப்ரபசர் ஸ்டூடண்ட்ஸ் எல்லாருக்கும் ரஞ்சன் தான்... நான் தான் காலேஜ் டாப்பர்... ரெண்டு வருஷமா பர்ஸ்ட் மார்க் எடுத்து லெக்சரர்கிட்ட நல்ல பெயர் எடுத்த அக்மார்க் நல்லவன்... ஆனால் கொஞ்சம் கோவக்காரன்..."






"இது தற்புகழ்ச்சி போல தெரியுது ரஞ்சன்...."






"நீங்க தஞ்சாவூர் கவர்மென்ட் காலேஜ் பிரின்சிபல்கிட்ட என் பெயர் சொல்லி விசாரித்து பாருங்க...."





"ஓகே நான் விசாரிக்கிறேன்... நீங்க அடுத்து சொல்ல ஆரம்பிங்க ரஞ்சன்..."



"அடுத்து..."





"அதான் ரஞ்சன் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் என்ட்ரி..."





"யா... யா... அன்னிக்கு தான் முதல் முறையா ஸ்ரீயை பார்த்தேன்.... அழகான பாவாடை தாவணியில் தலையை தளர பின்னி தலை நிறைய முல்லை பூ வைத்து நெற்றியில் திருநீறு குங்குமம் வைத்து அலங்காரம் செய்து வைத்த சிலை போலவே இருந்தாள்.... அவளை பார்த்த உடன் மனசை ஏதோ செய்தது... அவளை என் நண்பன் ராகிங் பண்ண அழைத்தான்.... முதலில் வேண்டாம் என்று சொல்ல நினைத்தேன்.... ஆனால் அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆசையில் அமைதியாக நின்றேன்.... அவள் எனக்கு எதிரே வந்து நின்று பயத்தில் இமைகளை படபடவென்று மூடி திறந்தாள்....







ஒரு பட்டர்ப்ளை சிறகடித்ததை போல இருந்தது...
அவள் இமைகளை மூடி திறந்த அந்த நிமிடம்.....







என் மனம் அவசரமாக வரைந்த கவிதை.... என்று கூறிய ரஞ்சன் தொடர்ந்தான்.....










"என் நண்பன் அவளிடம் பெயர் கேட்டான்...."







"அவளும் சொன்னாள் நித்யகல்யாணி என்று....."


 
Last edited:
உயிர் : 6
என் நண்பன் அவளிடம் பெயர் என்ன என்று கேட்டதற்கு நித்ய கல்யாணி.... என்று கூறி விட்டு "ஸ்..."என்று நாக்கை கடித்து கொண்டவள் நித்யஸ்ரீ என்று கூறினாள்....



அவள் நித்திய ஸ்ரீ என்று கூறியதும் என் மனதில் ஸ்ரீயாக நிலைத்து விட்டாள்.... அவள் பெயரை தவறாக கூறிவிட்டு நாக்கை கடித்துக் கொண்ட போது எனக்கு வலித்தது என்றவன் முகத்தில் வந்து போன உணவுகளை கண்ட விஷ்ணு ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.....



"அதுக்கப்புறம் என்ன ஆச்சு சித்து...." என்று கேட்டார் டாக்டர்.....



என் நண்பன் ஸ்ரீயிடம் "அப்புறம் எதுக்காக நித்ய கல்யாணின்னு பேர் சொன்ன...." என்று கேட்டான்....



"அது என் பாட்டி பேர்.... எனக்கும் அந்த பேரை தான் வச்சாங்க.... ஆனால் சர்டிபிகேட்டில் எல்லாம் என்னோட பேரு நித்யஸ்ரீ...."



'அப்போ நீ நித்யஸ்ரீ.... உனக்கு நல்லா பாட்டு பாட வருமா...."



"நான் நித்யஸ்ரீ வாசுதேவன்...."



"சரி.... அதுக்கு என்ன.... பாட்டு பாட வருமா....வராதா...."



"நான் நல்லா பாடுவேன் சீனியர்...."



"அப்போ ஒரு நல்ல தமிழ் சாங் பாடு பார்ப்போம்...." என்றதும் ஸ்ரீ அவனிடம் "பாட்டை கேட்க தான் முடியும் சீனியர்... பார்க்க முடியாது...." என்று கூறினாள்......


"ஓய் என்ன நக்கல்.... சீனியரையே நக்கல் பண்றியா...." என்று கேட்கவும் பயந்து போன ஸ்ரீ பாட ஆரம்பித்தாள்.....



மன்னவன் வந்தானடி தோழி



மன்னவன் வந்தானடி தோழி



மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி தோழி







மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த



மன்னவன் வந்தானடி



மாயவனோ



தூயவனோ நாயகனோ நான் அறியேன்



மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்



மன்னவன் வந்தானடி தோழி...



செந்தமிழ் சொல் எடுத்து இசை தொடுப்பேன்



வண்ண சந்தத்திலே கவிதை சரம் தொடுப்பேன்



மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்






மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்



இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்



மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து



அற்புதமாய் வாழ்ந்திருக்கும் மன்னவன் வந்தானடி தோழி







மஞ்சத்திலே இருந்து நெஞ்சில் அமர்ந்த



மன்னவன் நாயகன் வந்தானடி ச .. ரி .. க .. ம .. ப .. த . . நி ..... சரிகமபதனி சுரமோடு ஜதியோடு நாத கீத ராக பாவம் தான் பெறவே





மன்னவன் வந்தானடி காதல் கவிதை கடலெனப் பெருகிட மாதர் மனமும் மயிலென நடமிடவே மன்னவன் வந்தானடி



"ஸ்ரீ உடைய குரல் அவ்வளவு இனிமையா இருந்துச்சு.... அவளோட மன்னவனா நான் தான் இருக்கணும்னு ஒரு பேராசை வந்துச்சு..... ஸ்ரீ எங்களை எல்லாம் பார்த்து பயந்து போயிட்டா.... நான் அவ கிட்ட பேச போன சமயத்தில் பிரின்ஸிபல் கூப்பிட்டாரு... அதனால் நான் ஆபீஸ் ரூம் போயிட்டேன்..... போய்ட்டு வந்து பார்த்தால் ஸ்ரீயை காணோம்..... அதுக்கு பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை.... அந்த நேரத்தில் தான் ஃபர்ஸ்ட் இயர் மாணவர்களை வரவேற்கும் பங்சனை ஆர்கனைஸ் பண்ற வேலையை என்கிட்ட கொடுத்து இருந்தாங்க.... முதல் வருட மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதற்கான ஒரு இடமாக தான் நான் அந்த நிகழ்ச்சியை நடத்த நினைத்தேன்.....




நித்யஸ்ரீ பரதநாட்டியத்தில் பேர் கொடுத்து இருந்தாள்..... இப்படியே நாள் போயிட்டு இருக்கும் போது எனக்கு ஸ்ரீயை பார்க்கும் போதெல்லாம் பேசணும் பழகணும்னு ஆசை இருந்துச்சு.... ஆனால் அவள் என்னை பார்த்ததுமே ஓடி ஓடி போனாள்..... ஏன் என்னை பார்த்து இப்படி ஓடுறான்னு எனக்கு தெரியலை.... ஒரு நாள் பிடிவாதமாக அவளை நிறுத்தி வைத்து பேச ஆரம்பிச்சேன்.....



"உனக்கு என்ன ஆச்சு.... ஏன் என்னை பார்த்தால் விலகி விலகி போற...."



"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சார்...."



"இந்த சார் மோர் விக்கிறதை விட்டுட்டு அழகா பேர் சொல்லி கூப்பிடு...."



"உங்க பேர் என்ன சார்...."



"மறுபடியும் சாரா..."



"சரி சொல்லுங்க.... உங்களை என்ன சொல்லி கூப்பிடனும்....."



"என் பெயர் சித்தரஞ்சன்.... எல்லாரும் என்னை சித்துன்னு கூப்பிடுவாங்க..... உனக்கு எப்படி தோணுதோ அப்படி கூப்பிடு...."



"நான் உங்களை ரஞ்சன்னு கூப்பிடவா...."



"ரஞ்சன் பேர் அழகா தான் இருக்கு.... ஏன் ரஞ்சன்னு கூப்பிடுற சித்துன்னு கூப்பிடலாமே...." என்றதும் அவள் விழிகள் கலங்க ஆரம்பித்தது.....



"ஸ்டாப் ஸ்டாப்.... எதுக்கு இப்போ இப்படி அழுவுற.....இங்கே பாரு ஸ்ரீ..... நான் எதுவுமே பண்ணலையே.... நீ எதுக்காக அழுவுற.... ஒருவேளை என்னை பார்த்தால் பயமாக இருக்கா....." என்று கேட்கவும் ஸ்ரீ இல்லை என்ற தலையாட்டினாள்......



"அப்புறம் ஏன் அழுவுற..... என்ன தான் பிரச்சனை உனக்கு..... வாயை திறந்து பதில் சொல்லி தொலைடி...." என்று திட்டவும் நிமிர்ந்து சித்துவை பார்த்தவள் "டி சொன்னீங்க... அவ்வளவு தான் பாத்துக்கோங்க...." என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டினாள்.....



"என்ன பண்ணுவ.... சொல்லுடி.... என்ன பண்ணுவ..... இனிமேல் நான் உன்னை வாடி போடின்னு தான் பேசுவேன்..... உன்னால் என்ன பண்ண முடியும் சொல்லுடி...."



"என் பெரிய அண்ணன்கிட்டயும் சின்ன அண்ணன்கிட்டயும் சொல்வேன்.... இருங்க அவங்ககிட்ட போய் சொல்றேன்...."



"சரி சொல்லு..... போய் அவங்ககிட்ட என்ன சொல்லனுமோ போய் சொல்லுடி.... போய் சொல்லு.... நானும் அவங்ககிட்ட சொல்றேன்.... "



"நீங்க என்ன சொல்லுவீங்க...." என்று அப்பாவியாக கேட்டாள் ஸ்ரீ ....



"நானும் ஸ்ரீயும் லவ் பண்றோம்..... இவ எனக்கு பொண்டாட்டியாக வரப் போகிறவள்.... அதனால் நான் அவளை வாடி போடின்னு பேசுறேன்..... உங்களுக்கு இதில் ஏதாவது ஆட்சேபனை இருக்கா.... அப்படின்னு உன் பெரியயயயயய அண்ணன்கிட்டயும் உன் சின்னனனனன அண்ணன்கிட்டயும் கேட்பேன்....."



"ஐயோ கடவுளே.... நான் உங்களை லவ் பண்றேனா.... இல்லவே இல்லை.... அதுவும் நான் உங்களுக்கு பொண்டாட்டியாக வர போறேனா.... உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை பொண்டாட்டின்னு சொல்லுவீங்க..... இதையும் சேர்த்து என் அண்ணன்கள்கிட்ட சொல்றேன்.... உங்களை மரத்தில் கட்டி வைத்து அடிக்க போறாங்க பாருங்க...." என்று மிரட்டியவள் வேகவேகமாக பேருந்து நிலையம் நோக்கி நடந்தாள்......



ரஞ்சனோ தலையை கோதி மெல்ல சிரித்தபடி "அழகா அம்சமா ஐயராத்து பொண்ணு மாதிரி இருக்கான்னு பார்த்தால் அண்ணாட்ட சொல்றேன்.... சின்னாட்ட சொல்றேன்னு... அமைதியான பையனான என்னையே கோபமா பேச வச்சுட்டாள்..." என்று தனக்குள்ளே பேசியபடி நண்பர்களே தேடி போனான். .. ..



மறுநாள் காம்பியரிங் செய்து விழாவை நடத்தினான் சித்தரஞ்சன்....



ஒவ்வொரு பர்ஸ்ட் இயர் மாணவ மாணவிகளும் ஸ்டேஜில் ஏறி அவரவர் திறமையை வெளிக்காட்ட நித்யஸ்ரீயின் முறை வந்தது....







ஸ்டேஜில் ஏறிய ஸ்ரீ அன்று சீனியர்கள் முன் பாடிய பாடலுக்கு ஏற்ப அபிநயம் பிடித்து நன்றாக ஆட ஆரம்பித்தாள்.....








கல்லூரி மொத்தமும் குண்டூசி விழுந்தாள் கூட சத்தம் கேட்கும் வண்ணம் அமைதியாக ஸ்ரீயின் நடனத்தை மெய் மறந்து பார்த்து கொண்டு இருக்க சித்தவோ ஒரு படி மேலே சென்று அவள் அங்க வளைவுகளை ரசிக்க ஆரம்பித்தான்.....







பாடல் முடியும் தருவாயில் அவள் செய்த அபிநயத்தை கண்டு கல்லூரியே வியப்பில் ஆழ்ந்தது... அவள் கண்களும் சேர்ந்து நடனமாட அனைவரின் ஒட்டு மொத்த கைதட்டலுடன் வணக்கம் சொல்லி ஸ்டேஜில் இருந்து கீழே இறங்கினாள் நித்யஸ்ரீ......



அவள் இறங்கி சென்று சேரில் அமரும் வரை அவளையே பார்த்து கொண்டு இருந்த ரஞ்சனின் தலையில் தட்டி ஸ்டேஜிற்கு போக சொன்னான் நண்பன்.....







அடுத்தடுத்த மாணவர்களின் பெயர்களை கூறி அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பற்றி காமெடியாக எடுத்து கூறி நிகழ்ச்சியை கலகலப்பாக்கிய சித்து அவ்வப்போது தன்னவளின் மேல் பார்வையை பதிக்கவும் தவறவில்லை.....



நண்பர்களுக்கு இவன் எந்த பெண் பின்னாலும் செல்ல மாட்டான் என்று தெரியும் என்பதால் அவனை யாரும் கண்காணிக்கவில்லை.....



அதனால் தைரியமாக ஸ்ரீயை அடிக்கடி சைட் அடித்தவன் விழா முடியும் வரை பார்வையை விலக்கவே இல்லை....



இரவு வெகுநேரம் கழித்து விழா முடிய மாணவ மாணவிகள் மற்றும் ப்ரபசர்ஸ் அனைவரும் வீட்டுக்கு சென்று விட கடைசியாக வாட்ச் மேனும் சித்துவும் மட்டுமே மீதி இருந்தனர்.....



அனைத்து இடங்களிலும் ஒருமுறை செக் செய்த இருவரும் க்ரவுண்டிற்கு வந்து மரத்தடியில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தனர்....



மரத்தின் அடியில் தாவணியை இழுத்து போர்த்தி கொண்டு ஸ்ரீ நின்று கொண்டு இருந்தாள்.....



"இவள் வீட்டிற்கு போகாமல் இங்கு என்ன செய்கிறாள்...." என்ற யோசனையோடு அவள் அருகில் சென்று அவள் பெயரை சொல்லி அழைத்தான் ரஞ்சன்...







திடீரென தன் அருகில் கேட்ட குரலில் பயந்து உடல் நடுங்கி போய் கலக்கம் சுமந்த முகத்துடன் திரும்பி பார்த்த ஸ்ரீ தன் அருகில் ரஞ்சனை பார்த்து விட்டு இன்னும் பயந்து போனாள்.....



"என்னை விட்டுடு.... நான் வீட்டுக்கு போகனும்...." என்று தட்டு தடுமாறி சொல்லி முடித்தாள் ஸ்ரீ.....







அவள் கூறிய தொனியும் கூறிய வார்த்தைகளும் தான் அவள் மனதில் எப்படிப்பட்ட இடத்தில் இருக்கிறோம்.... என்பதை தெளிவாக எடுத்து கூற கண்களை ஒருமுறை அழுத்தமாக மூடி திறந்தவன் 'என்னால் இனி உனக்கு எந்த பிரச்சனையும் வராது... நீ இருக்கும் திசை பக்கம் இனி என் நிழல் கூட படாது... என் வார்த்தையில் நம்பிக்கை இருந்தால் இங்கு எதற்காக நிற்கிறாய் ... என்று சொல்....* என்றான்.....








மனதில் ஏதோ ஒரு குரல் அவனை நம்ப சொல்ல "என் ஊருக்கு போகும் கடைசி பஸ் போயிடுச்சு... எப்படி வீட்டுக்கு போறதுன்னு தெரியலை.... எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்பாவோ அண்ணாவோ என்னை தேடி காலேஜ்க்கு வருவாங்க.... நான் இங்கே நின்றால் அவர்கள் வந்ததும் போய்டுவேன்.....*



" ஓஓஓஓ.. நீ தனியாக இங்கே நிற்க வேண்டாம்.... வாட்ச் மேன் பக்கத்தில் போய் நில்... உன் வீட்டில் இருந்து வரும் வரை அவர் உனக்கு துணையாக இருப்பார்...." என்றதும் அவள் முகம் தெளிவில்லாமல் இருக்க "இன்னும் என்ன... " என்று சிடுசிடுப்பாக கேட்டான்.....







"தயவுசெய்து கோபப்படாமல் நான் சொல்வதை கேளுங்க.."



"சொல்லு....."



"அது வந்து.... வந்து...."



"இங்கே பார்... நீ என்னை பார்க்கும் பார்வைக்கு பேசின பேச்சுக்கு ரொம்ப பொறுமையா இருக்கேன்.... என் பொறுமையை சோதிக்காமல் சொல்லி தொலை...."








"எனக்கு அந்த வாட்ச் மேனை பார்த்து பயமா இருக்கு.... என் வீட்டில் இருந்து வரும் வரை வாட்ச் மேன் பக்கத்தில் உட்கார்ந்து பேசிட்டு இருக்கீங்களா...."



"ஏம்மா இப்போ தான் நான் உன்னை ரேப் பண்ண போற மாதிரி கத்தின... இப்போ என்னையே துணைக்கு இருக்க சொல்ற....."



"இல்ல... அந்த வாட்ச் மேன் என்னை ஏதாவது பண்ண வந்தால் நீங்க காப்பாத்துவீங்க... நீங்க ஏதாவது பண்ண வந்தால் வாட்ச் மேன் காப்பாத்துவார்... ஒரு சேப்டிக்கு ஒருத்தருக்கு ரெண்டு பேர் இருப்பது நல்லது தானே...."



"இப்போ மட்டும் பேச்சு தெளிவா அழகா பேசுற... என்னை பார்த்தால் மட்டும் அழுது ஊரை கூட்டு.... பத்தாததுக்கு என்னை ரேப்பிஸ்ட் மாதிரி ட்ரீட் பண்ற...." என்றதும் ஸ்ரீ உதட்டை கடித்து கொண்டு அமைதியாக நின்றாள்....



"பேசுங்க மேடம்... கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி எவ்வளவு தெளிவா ப்ளான் பண்ணி பேசுன... இப்போ மட்டும் பேச்சு வரலையோ..."



"இப்போ என்ன எங்கிட்ட சண்டை போடனுமா..."








"உங்கிட்ட சண்டை போட்டு எனக்கு என்ன கிடைக்க போகுது...."

"----------"

"எனக்கு தேவை பதில்... ஏன் என்னை பார்த்து பயந்து ஓடுற.... என்னை தப்பான பையனா முடிவு பண்ற அளவுக்கு நான் என்ன அவ்வளவு மோசமாவா உங்கிட்ட நடந்துகிட்டேன்...."



"எங்கிட்ட நடந்துக்கலை..."



"அப்போ வேற யார்கிட்ட நான் தப்பா நடந்ததை நீ பார்த்த..'



" நான் பார்க்கலை.."



"அப்படியே அறைஞ்சேன்னு வை... கன்னம் பழுத்துரும்... இவங்க திருவள்ளுவர் பரம்பரை.... ரெண்டு வார்த்தையில் தான் பதில் சொல்வாங்க.... இப்போ ரீசன் சொல்ல போறீயா... இல்லையா....." என்று இவன் கத்த அந்த இருட்டு நேரத்தில் யாரும் இல்லாத கல்லூரியில் இவன் குரல் மட்டும் தெளிவாக கணீரென்று அனைத்து புறமும் எதிரொலித்தது.....



அதுவரை சற்று தைரியமாக இருந்தவள் ரஞ்சன் கத்தவும் பயந்து போனாள்.... அதே நேரம் இவள் சின்ன அண்ணன் வண்டியில் இவளை அழைத்து செல்ல வரவும் வண்டி சத்தத்தை வைத்து தன் வீட்டு ஆட்கள் வந்து விட்டதை புரிந்து கொண்டு வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் நித்யஸ்ரீ......



அவளை பின் தொடர்ந்து போன ரஞ்சன் அவள் வண்டியில் ஏறி செல்வதை பார்த்து விட்டு கோபத்தில் பல்லை கடித்து கொண்டு "நாளைக்கு காலேஜ் வருவ இல்ல.... நாளைக்கு பார்த்து கொள்கிறேன்...." என்று கருவியவன் தன் வண்டியில் வீட்டை நோக்கி பயணித்தான்.....
 
Last edited:
உயிர் : 7
சித்து வீட்டிற்கு வந்த பிறகும் கூட ஸ்ரீயை திட்டி கொண்டு இருந்தான்...


"பார்க்க மட்டும் தான் அழகா இருக்கா... ஆனால் மனசு முழுக்க அழுக்கு... என்னை மாதிரி ஒரு நல்ல பையன் அவளுக்கு கிடைப்பானா என்ன.... ரேங்க் ஹோல்டர்... எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன்... அவளுக்கு எல்லாம் யாராவது காட்டுமிராண்டியை அவள் அப்பனும் அண்ணனும் மாப்பிள்ளையா கொண்டு வந்து நிறுத்துவானுங்க... இவளும் பல்லை காட்டிட்டு கல்யாணம் பண்ணிக்குவா.... என்னை மாதிரி டீசன்ட்டான பசங்க என்ன தான் உருகி உருகி லவ் பண்ணாலும் இவளுக்கு புரியாது... சரியான தத்தி ஜடம்... அறிவு கெட்ட முண்டம்.... சரியான வாத்து கிணத்து தவளை..." என்று இன்னும் திட்டி கொண்டே இருந்தான்.....

ரஞ்சன் திட்டுவதை எல்லாம் கேட்டு கொண்டு உள்ளே வந்த தீனா "டேய் மாப்ள.. போதுண்டா... காதால் கேட்க முடியலை... எதுக்காக யாரை இவ்வளவு கேவலமா திட்டிட்டு இருக்க..." என்று கேட்டபடி வந்து அமர்ந்தான் ரஞ்சனின் நண்பன்....
(முதல் யூடியில் திருமண மண்டபத்தில் ரஞ்சன் வைத்து செய்த ஐபிஎஸ் ஆபிசர் தீனா தான்பா... இவன்.. அன்று முதல் இன்று வரை ரஞ்சனிடம் மாட்டி கொண்ட முழிக்கும் அப்பாவி ஜீவன்....)

"வாடா மாப்ள... என்ன இந்த பக்கம்... என்னை தேடி மிட்நைட்டில் வந்து இருக்க.."
"ஹி... ஹி.. . ஹி.... வேற எதுக்கு மாப்ள... அசைன்மெண்ட் சப்மிட் பண்ண மண்டே தான் லாஸ்ட் டேட்... அதான் வழக்கம் போல உன் அசைன்மெண்ட்டை பார்த்து காபி பண்ணிடலாம்னு...." கேட்க வந்தேன்... என்று முடிப்பதற்குள் "ஷிட்...." என்று தலையில் அடித்து கொண்டவன் நாளைக்கு ஒருநாள் டைம் இருக்கு தானே.... எழுதிடலாம்.... என்று நினைத்த ரஞ்சன் "அதெல்லாம் அசைன்மெண்ட்டை தர முடியாது.... இந்த முறை நீ ஓனா எழுது.... இது லாஸ்ட் இயர்... சோ நீயும் கொஞ்சம் கஷ்டப்படு...." என்றவன் கட்டிலில் படுத்து விட "மாப்ள... என்னடா இது... என்னை போய் தனியா அசைன்மெண்ட் எழுத சொல்ற..." என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சியாக கேட்டவன் அவன் அருகில் கட்டிலில் படுத்து விட்டான்....
"மாப்ள...."
"ம்..."
"மாப்ள..... "
"ம்..."
"அந்த அசைன்மெண்ட்டை எங்கே வச்சு இருக்க..." என்ற தீரனை திரும்பி பார்த்து முறைத்தவன் குப்புற படுத்து உறங்க தொடங்கினான்......
இதற்கு மேல் இவனை அசைக்க முடியாது என்று நினைத்த தீரன் சற்று நேரத்தில் உறக்கத்தை தழுவி விட மூச்சு சீராக வர தொடங்கியது....
தீரன் உறங்குவதற்காகவே காத்திருந்த ரஞ்சன் படுக்கையை விட்டு எழுந்து பக்கத்து அறையில் அமர்ந்து அசைன்மெண்ட்டை எழுத ஆரம்பித்தான்.....

ஏற்கனவே நடுநிசிக்கு மேல் ஆனதால் ரஞ்சன் எழுத ஆரம்பித்த போது விடியற்காலை நேரமாகி இருந்தது...

காலை பத்து மணிக்கு எழுந்த தீரன் தன் அருகில் ரஞ்சனை தேட அறை முழுவதும் அவன் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததால் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அறையின் எல்லா இடங்களிலும் அசைன்மெண்ட்டை தேட ஆரம்பித்தான்....



தீரன் தேடிய அசைன்மெண்ட்டில் பாதியை எழுதி இருந்த ரஞ்சன் ரொம்ப நேரமாக குனிந்து எழுதியதால் கழுத்து வலி எடுக்க பேனாவை கீழே வைத்து விட்டு கழுத்தை நீவி விட ஆரம்பித்தான்....




அறை முழுவதும் தேடி சலித்து போன தீரன் பக்கத்து அறையில் அரவம் கேட்டு உள்ளே வந்தவன் கழுத்தை நீவியபடி அமர்ந்து இருந்த ரஞ்சனை பார்த்து விட்டு ஏதோ கேட்க வந்தவன் மேஜையில் இருந்த பேப்பர்களை பார்த்து கையில் எடுத்து வாசித்து பார்த்தான்....



கண்களை மூடிய படி அமர்ந்து இருந்த ரஞ்சன் கண்களை திறந்து பேப்பர்களை அடுக்கி முடிப்பதற்குள் தீரன் படித்து விட்டு "என்னடா மாப்ள இது.. நீயா கடைசி நேரத்தில் அசைன்மெண்ட் எழுதுற.... படிப்பு விஷயத்தில் கரெக்டா இருக்கும் மிஸ்டர்.பர்பெக்ட்.. முதல் முறையாக அசைன்மெண்ட்டை ஏனோ தானோ என்று எழுதுகிறார்..." என்று பேப்பர்களை சுருட்டி மைக் போல பிடித்து கொண்டு கத்தினான் தீரன்....




"ப்ச்... மரியாதையா பேப்பர்ஸை குடுடா..." என்று மிரட்டியவனை வித்தியாசமாக பார்த்தான் தீரன்...





"உனக்கு இப்படி எல்லாம் மிரட்ட தெரியுமா.... சித்து..." என்று வியந்து போய் கேட்டான் தீரன்....



"ப்ச்..." என்று சலித்து கொண்ட ரஞ்சன் தலையை கைகளால் தாங்கி கொண்டு அமர அதற்கும் ரஞ்சனிடம் "என்னாச்சு மாப்ள.. ஏதாவது ப்ராப்ளமா.... ஏன் இவ்வளவு டென்சனாகுற.. . எவ்வளவு பெரிய பிரச்சினையையும் கூலா ஹேண்டில் பண்ற சித்துவுக்கு என்னாச்சு..." என்று தோளை தட்டி கொடுத்தான் தீரன்....



"என்னை பார்த்தால் பொறுக்கி போல தெரியுதா தீரா..."



"டேய் என்னடா இது.. உன்னை போய் பொறுக்கின்னு அறிவில்லாதவன் கூட சொல்ல மாட்டான் மாப்ள..."



"அப்புறம் அவள் மட்டும் ஏண்டா அப்படி சொன்னாள்...."


"யாரு மாப்ள...." என்று தீரன் கேட்டதும் தான் கோபத்தில் தான் உளறியதை புரிந்து கொண்டு அமைதியானான்....




ரஞ்சனின் அமைதி தீரனுக்கு எதையோ உணர்த்த "லவ் பண்றியா மாப்ள.... " என்று அதிரடியாக கேட்டான் தீரன்....



ரஞ்சன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க "மாப்ள யார் அந்த பெண்...." என்று மீண்டும் கேட்டான்...



"ப்ச்... எனக்கு மட்டும் அவளை பிடிச்சு என்ன பிரயோஜனம் மாப்ள... அவளுக்கு என்னை சுத்தமா பிடிக்கலை... அவளை பொறுத்த அவரை நான் ஒரு ரோக்... ஆனால் ஒன்னு இனி அவள் பின்னாடி நான் போக மாட்டேன்... என்னை மாதிரி ஒரு நல்லவனை வேண்டாம்னு முடிவு பண்ண அவள் யார் மாப்ள... இப்போ சொல்றேண்டா.... என்னை பொறுக்கியா நினைச்சுட்டு இருக்கும் அவள் எனக்கு வேண்டாம்... ஐ ஹேட் ஹர்.... ஐ ஹேட் ஹர்...." என்று கூறியவன் மீண்டும் அசைன்மெண்ட்டை எழுத ஆரம்பித்தான்....



"மாப்ள நானும் உன் கூட தான் தினமும் காலேஜ் வர்றேன்.... நீ எப்போ யாரை பார்த்த... எப்போ லவ் பண்ண..."





"உன்னை மாதிரி வெட்டி பேச்சு பேச எனக்கு நேரம் இல்லை.... என்னை தொல்லை பண்ணாமல் அம்மா டிபன் பண்ணி இருப்பார்கள்... போய் சாப்பிட்டு வா.... நான் அசைன்மெண்ட்டை முடித்து வைக்கிறேன.... வந்து எடுத்துட்டு போய் காப்பி அடி...." என்றவன் எழுத ஆரம்பிக்க "அடப்பாவி... நான் வெட்டிக் கதை பேசுறேனா.... எனக்கு இது தேவை தான்.... தலைவர் படம் இன்னிக்கு ரிலீஸ் ஆகுது... அதை விட்டுட்டு அசைன்மெண்ட்டுக்காக இங்கே வந்த என்னை...."



"செருப்பு வாசலுக்கு வெளியே தான் கிடக்குது.... அதை எடுத்து அடுச்சுகிட்டு அப்படியே உன் வீட்டுக்கு ஓடி போய்டு..." என்றவனை முறைத்த தீரனுக்கு வயிறு சத்தம் கொடுக்கவும் "பசிக்குது சாப்பிட்டு வந்து உன்னை பேசிக்கிறேன்...." என்று கூறி விட்டு கிச்சனை நோக்கி சென்றான்.....



கிச்சனுக்கு சென்ற தீரன் அங்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்த ரஞ்சனின் தாய் சகுந்தலாவிடம் "அம்மா எனக்கு தோசை...." என்றான்....


சகுந்தலா ஒரு புன்னகையுடன் தட்டில் தோசையை வைத்து தீரனிடம் நீட்டினார்....

சகுந்தலா தோசை சுட்டு கொடுக்க கொடுக்க வாங்கி வாங்கி சாப்பிட்டவன் கையை கழுவி விட்டு வந்து மற்றொரு தட்டில் தோசை சட்னி அனைத்தையும் வாங்கிக் கொண்டு ரஞ்சன் இருக்கும் ரூமிற்கு சென்றான்.......



"சித்து.... போதும் எழுதியது...." என்று கூறி அவனது பேனாவை புடுங்கிக் கொண்டு ரைட்டிங் டேபிளை நகர்த்தி வைத்துவிட்டு அவன் கையில் தோசை தட்டை கொடுக்க "இருடா கை கழுவி விட்டு வர்றேன்..." என்று எழுந்தவனை எழவிடாமல் அப்படியே அமர்த்தி வைத்து அந்த தோசைகளை ஊட்டி விட்டவன் "இதெல்லாம் உனக்காக ஒன்னும் பண்ணலை.... எனக்கு அசைன்மென்ட் வேணும்.... அதுக்காக தான் பண்றேன்..... சீக்கிரம் எழுதி முடி... நான் வேற காப்பி பண்ணனும்...." என்றவன் காலி தட்டுடன் மறுபடியும் கிச்சனுக்கு சென்றான்.......

நண்பனின் பாசத்தையும் தன் மேல் காட்டிய அக்கறையையும் எண்ணி சிரித்துக் கொண்டே அசைன்மெண்டில் மூழ்கி போனான் ரஞ்சன்.....

ஸ்ரீயின் வீட்டில் காலை நேரம் வேலைக்காரர்கள் அனைவரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்க ஸ்ரீயின் அம்மா பார்வதி காலை டிபனை அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார்.....



ஸ்ரீயின் பெரிய அண்ணன் ராஜசேகரனும் சின்ன அண்ணன் ராஜேந்திரனும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க இவள் அறையில் உட்கார்ந்திருந்தாள்....



" அம்மா பாப்பா எங்கே.... சாப்பிட வரலை... எங்களுக்கு மட்டும் டிபன் வைக்குறீங்க..... பாப்பாவை கூப்பிட்டு டிபன் வைங்க...."



"அதானே எங்க பாப்பாவை காணோம்... கூப்பிடுங்க நேரத்தோடு சாப்பிடட்டும்..." என்றான் ஸ்ரீயின் சின்ன அண்ணன் ராஜேந்திரன்.....




"பாப்பாவாம் பாப்பா..... அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கறதே நீங்க ரெண்டு பேரும் தான்டா....இந்நேரம் அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருந்தால் கைல ஒன்னு இடுப்பில் ஒன்னுனு தூக்கிகிட்டு பிறந்த வீட்டுக்கு வந்து இருப்பாள்... அவள் ஆசைபடுறான்னு டவுன் பள்ளிகூடத்துக்கு அனுப்பி வச்சு படிக்க வைக்கிறீங்க.... இவள் படிக்கும் படிப்புக்கு நம்ம சாதி சனத்தில் மாப்பிள்ளை தேடி கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.... என் பேச்சை நீங்களும் கேட்க மாட்டேன்றீங்க... என்னவோ பண்ணுங்க...."
"அம்மா உங்க பேச்சை கேட்க கூடாதுன்னு எல்லாம் இல்லம்மா.... நம்ம பாப்பா வீட்டுக்கு ஒரே பொண்ணு..... செல்லமா இருந்துட்டு போகுது.... போற இடத்துல எப்படி இருக்குமோ யாருக்கு தெரியும்...."
"இப்படி சொல்லி சொல்லியே தான் அவள் கேட்கிற அத்தனையும் வாங்கி கொடுக்குறீங்க.... ஒரு நாள் ஏதாவது பெருசா கேட்க போறா..... அப்போ இருக்கு உங்களுக்கு....." என்று திட்டியவர் அறையில் அமர்ந்து இருந்தவளை அழைத்து வர சென்றார்......
"நித்யா அண்ணன்கள் சாப்பிடாமல் உனக்காக காத்துட்டு இருக்கானுங்க பாரு சாப்பிட வா...." என்றதும் அவசரமாக எழுந்து வெளியே வந்த நித்யா டைனிங் டேபிளுக்கு நடந்தாள்....




தன் அண்ணன்களுடன் சேர்ந்து சாப்பிட அமர்ந்தவள் "அண்ணா எனக்கு ஒரு டூவிலர் வாங்கி கொடுங்க...." என்றாள்.....


"உனக்காக கார் வாங்கி தர்றோம்.... ட்ரைவரை போடுறோம்..... காலேசுக்கு காரில் போய்ட்டு வா.... ஆனால் தனியா நீ வண்டியில் போக கூடாது பாப்பா...."



"ஆமா பாப்பா..... உனக்கு கார் வாங்கி தர்றோம்...... உனக்கு புடிச்ச கார் எதுன்னு சொல்லு வாங்கி தர்றோம்.... ஆனா டூவீலர் நீ ஓட்டக்கூடாது பாப்பா.... இந்த காலத்தில் அதெல்லாம் பாதுகாப்பு கிடையாது.... பள்ளிகூடத்துக்கு சைக்கிளில் போறேன்னு சொல்லி அடம் பிடித்து கடைசியாக நடந்ததை மறந்துட்டியா....." என்றதும் முகத்தை சுருக்கியபடி அமர்ந்து இருந்த ஸ்ரீயின் தலையை தடவி கொடுத்த ராஜேந்திரன் "பாப்பா புரிஞ்சுக்கோடா அண்ணன் உன் நல்லதுக்கு தானே சொல்றாரு...." என்று சொன்னதும் சரி என்பதாக தலையாட்டினாள் ஸ்ரீ.....






அன்று மாலையே அன்றைய கால கட்டத்தில் இருந்த லேட்டஸ்ட் மாடல் காரை தன் தங்கைக்காக வாங்கினார் ராஜசேகரன்......




அன்று முதல் நாள் கல்லூரிக்கு புது காரில் சென்றாள் நித்யஸ்ரீ.......




காரில் வந்து இறங்கிய நித்யஸ்ரீயை தூரத்தில் இருந்து பார்த்த ரஞ்சன் அவள் கல்லூரிக்குள் வரவும் அவளை நோக்கி நடந்து சென்றான்.....
"நித்யஸ்ரீ...." என்று அவள் பெயரை சொல்லி அழைத்ததும் அதிர்ந்து போய் திரும்பி பார்த்தவள் அவனைப் பார்த்து பயந்து இரண்டு அடி பின்னால் சென்று நின்றாள்......

"இந்த பயம்..... எதனால் இப்படி பயப்படுற.... எனக்கு இன்னைக்கு காரணம் சொல்லியே ஆகணும் ஸ்ரீ.... காரணம் சொல்லாமல் நீயும் இந்த இடத்தை விட்டு போக முடியாது..... நானும் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன்....." என்று கோபமாக கேட்டவனே கண்டு பயந்து போனாள் நித்யஸ்ரீ....

"சொல்லு எதுக்காக என்னை பார்த்து பயந்து பயந்து ஓடுற...."
'நான் பயந்து ஓடியது உங்களை பார்த்து இல்லை....."




"பின்னே....."



"என்னை பார்த்து...."




"என்னை பார்த்தால் லூசு மாதிரி தெரியுதாடி......"





"வாடி போடின்னு பேசினால் நல்லா இருக்காது பாத்துக்கோங்க...." என்று மீண்டும் ஒற்றை விரலை நீட்டி மிரட்டியவளை கண்டு கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு "நான் உன்கிட்ட பேச வரும் போது எல்லாம் பயந்து பயந்து ஓடின தானே..... அது எதுக்காகன்னு கேட்டால் நீ உன்னை பார்த்து பயந்து ஓடுறதா சொல்ற.... இப்போ காரணத்தை சொல்ல போறியா இல்லையா...." என்று கோபமாக கேட்டவனை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் குனிந்து மண்ணை பார்த்தவள் "சொல்றேன்...... ஆனால் நீங்க என்னை தப்பா எல்லாம் நினைக்க கூடாது...." என்றாள் மெல்லிய குரலில்.....






"அது நீ சொல்றதை பொறுத்து இருக்கு.... முதல்ல விஷயத்தை சொல்லு....."



"வந்து.... என் மாமா பையன் இருக்காரே....





" உன் மாமா பையன் இங்கே எதுக்கு வந்தான்.... சுத்தி வளைக்காமல் விஷயத்தை சொல்லு...."




"நீங்கள் இப்படி அவசரப்படாமல் பொறுமையாக கேளுங்க.... என் மாமா பையனும் நீங்களும் பெஸ்ட் பிரண்ட்ஸ் தானே....."





"உன் மாமா பையனுக்கு நான் ஏண்டி பிரெண்ட் ஆகணும்....."





"உங்க கூடவே சுத்திக்கிட்டு இருக்காரே கிருஷ்ணா...... அவர் தான் என் மாமா பையன்...... அம்மாவோட அண்ணன் பையன்......"




"ஓஹோ.... கிருஷ்ணாவோட அத்தை பொண்ணா நீ...."






"ஆமா ...."





"சரி அதுக்கும் நீ என்னை பார்த்து பயந்து ஓடுறதுக்கும் என்ன சம்பந்தம்....."





"அது வந்து சின்ன வயசில் இருந்து கிருஷ்ணா உங்களை பத்தி பேசி பேசி....."




"பேசி பேசி...."
"என் மனசுக்குள்ள....."




"மனசுக்குள்ள உங்க மேல ஒரு நல்ல மரியாதை வந்துடுச்சு....'




"சரி...."




"ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு மழை நாளில் ஒரு சின்ன பொண்ணுக்கு உதவி செய்தீங்க.... ஞாபகம் இருக்கா....."






"ம்.. ஞாபகம் இருக்கு..... ஸ்கூலை விட்டு வீட்டுக்கு போகும் போது தாவணி சைக்கிள்ல மாட்டிக்கிச்சு..... அதனால் அந்த குட்டி பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணேன்...."




"அந்த பொண்ணு நான் தான்....."






"நீயா அது.... அப்போ ரொம்ப சின்ன பொண்ணா தெரிந்த...."




"இல்ல அது நான் தான்....."



"சரி அப்படியே இருந்தாலும் உனக்கு நல்லது தானே செய்தேன்.... அதுக்கு எதுக்கு என்னை பார்த்து பயப்படுற...."






"அது வந்து உங்க மேல் மரியாதை மட்டும் தான் அதுவரைக்கும் இருந்துச்சு..... எப்போ உங்க சட்டையை நான் போட்டுகிட்டு வீட்டுக்கு போனேனோ அப்ப இருந்து....."





"அப்போ இருந்து....."







"என் மனசுக்குள்ள நீங்க வந்துட்டீங்க....."





"என்னது....."




"ஆமா நான் உங்களை தான் நினைச்சுட்டு இருக்கேன்..... ஸ்கூல் படிக்கும் போது இதெல்லாம் தப்புன்னு மனசுக்கு தெரிஞ்சாலும் என்னால உங்களை நினைக்காமல் இருக்க முடியலை.... எங்கே இது உங்களுக்கு தெரிஞ்சு என்னை தப்பா நினைப்பீங்களோன்னு தான் உங்களை பார்த்து பயந்து ஓடிட்டே இருந்தேன்.... எங்கே இப்ப நான் பேசியதை உங்களை பார்த்த அன்னிக்கே பேசிருவேனோன்னு பயம்..... முன்னபின்ன தெரியாத பையன் கிட்ட இப்படி எல்லாம் பேசுவியான்னு நீங்கள் என்னை தப்பா நினைச்சிருவீங்களோன்னு பயம்..... அதனால் தான் உங்களை பார்த்து பயந்து பயந்து ஓடினேன்....." என்று தலையை குனிந்து கொண்டே ஸ்ரீ சொன்னதும் ரஞ்சனின் மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒரே நேரத்தில் பறந்தது......



ஆனாலும் அதை முகத்தில் காட்டாமல் குனிந்து இருந்த அவள் முகத்தை பார்த்து "சோ உனக்கு என்னை புடிச்சிருக்கு..... அப்படி தானே....." என்றதும் மேலும் கீழுமாக தலையை ஆட்டியவளை கண்டு புன்னகை முகத்துடன் "வாயை திறந்து பதில் சொல்லுடி...." என்று கத்தினான் ரஞ்சன்.....




"டி போட்டு பேசாதீங்க.... அப்புறம் இப்படி எல்லாம் கத்தாதிங்க..... நீங்க ரொம்ப நல்லவர்..... சாப்டானவர்னு எங்க மாமா சொன்னார்..... ஆனால் நீங்க இப்ப எல்லாம் என்கிட்ட கோவமாக தான் பேசுறீங்க...... அன்னைக்கு மழை நேரத்தில் கூட எவ்வளவு பாசமா பேசுனீங்க..... அந்த மாதிரி என்கிட்ட அன்பா பாசமா பேசுங்களேன்....." என்று சிறு குழந்தை போல கேட்டவளை அள்ளி அணைக்க கைகள் இரண்டும் பரபரக்க கைகளை கட்டுப்படுத்த முடியாமல் தனது பேண்ட்டின் பாக்கெட்டுக்குள் இரண்டு கைகளையும் விட்டுக் கொண்டவன் ஸ்ரீயை இமைக்காமல் பார்த்து நின்றான்.....
 
Status
Not open for further replies.
Top