Brammastram Writers
Moderator
முதலில் அதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு வெளியில் வந்த கனகம் மகள் இருந்த கோலத்தை பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டார்.
அவள் இருந்த நிலைமையே சொல்லியது அவள் அந்த வீட்டில் வாழும் லட்சணத்தை.
"என்னங்க இவர் இப்படி சொல்லிட்டு போறாரு இப்ப என்ன பண்றது?"என்று கலங்கிய குரலில் சீதா கணவனிடம் கேட்க, அவருக்கு என்ன பதில் சொல்ல முடியும் அவரால்?
"நம்ம நிலைமை என்னன்னு உனக்கே நல்லா தெரியும் சீதா..எப்படா நம்ம கீழ விழுவோம் நம்மள பார்த்து கைகொட்டி சிரிக்கலாம் என்று காத்துகிட்டு இருக்க கூட்டம் ஒரு பக்கம்..இவளை இப்ப நம்ம கூடவே கூட்டிட்டு போனா இவளுக்கு அடுத்து இருக்க இன்னொரு பொண்ணு பையன் அவங்க நிலைமை என்ன யோசிச்சு பாரு? எல்லாத்துக்கும் மேல எத்தனை காலத்துக்கு நம்மளால இவளை வச்சு பார்க்க முடியும்.. நீயும் பார்த்துகிட்டு தானே இருந்த வயசுல பெரியவங்க அப்படி இப்படி இருக்க தான் செய்வாங்க உன் பொண்ணு வாயை மூடிக்கிட்டு தான் இருக்கணும்.."
"நமக்கே நல்லா தெரியுதுங்க நம்ம பொண்ணு இப்படி பேசுற ஆள் கிடையாது இப்படி எல்லாம் பேசுற அளவுக்கு அவளை அவங்க டார்ச்சர் பண்ணி இருக்காங்க.."
"என்ன பண்றது சீதா பொம்பளையா பொறந்த எல்லாரோட தலையெழுத்தும் இதுதானே.. பொறுமையா போனால் தானே வாழ்க்கையில் எதையா இருந்தாலும் சாதிக்க முடியும்.. கொஞ்ச நாளைக்கு பொறுமையா இருந்து தான் ஆகணும் எத்தனை காலத்துக்கு நம்மளால இப்படியே இந்த பொண்ணை வச்சு பார்க்க முடியும் கல்யாணம் பண்ணி ஒரு மாசம் தான் முழுசா முடிஞ்சு இருக்கு அதுக்குள்ள இவ்வளவு பெரிய பிரச்சனை.. அவங்க எவ்வளவு கொடுமை பண்ணாலும் இப்ப அது எதுவும் பேச்சு வருதா? நம்ம பொண்ணு அவங்களை பேசுனது மட்டும்தான் தப்பு யாரு கிட்ட போய் சொன்னாலும் இதை தான் சொல்லுவாங்க.."
"அதுக்காக நம்ம பொண்ணை இப்படியே விட்டுட்டு போக முடியுமா? இதுக்காகத்தான் இவளை இவ்வளவு கஷ்டப்பட்டு கடன் வாங்கி கல்யாணம் பண்ணி கொடுத்தோமா!அந்த சங்கீதா எங்க அண்ணனுக்கு தாராளமா என்னை நம்பி கல்யாணம் பண்ணி குடுங்க எந்த பிரச்சனையும் வராது என்று உறுதி கொடுத்ததால் தானே நம்ம இவ்வளவு தூரம் இறங்கி எதையும் விசாரிக்காமல் கல்யாணம் பண்ணி கொடுத்தோம்.."என்று இருவரும் தவிப்புடன் தங்கள் பெண்ணின் வருங்காலம் என்ன ஆகுமோ என்று கலக்கமான குரலில் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க,இந்த உண்மை எல்லாம் இவர்களுக்கு தெரிய வந்தால் இப்படித்தான் பேசுவார்கள் இவர்கள் மனது காயப்படும் என்று இத்தனை நாட்களாக சிந்தியா மறைத்து வைத்திருந்த உண்மைகள் அவர்களுக்கு தெரிந்ததும் அவள் எதிர்பார்த்தது போலவே அவர்கள் மனவேதனையுடன் பேசியதை கேட்டு அவள் மனம் வலித்தது.
தன் வலியும் வேதனையும் தன்னோடே போகட்டும் என்று இத்தனை நாட்கள் பொருத்து இருந்தது அத்தனையும் இலவு காத்த கிளி கதையாக வீணாகப் போனது.
"அப்பா அம்மா ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க..இது என்னோட வாழ்க்கை இதுல எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கிற அளவுக்கு என்கிட்ட தைரியம் இருக்கு..இப்படி எல்லாம் உங்க கிட்ட சொல்றதுக்கு எனக்கும் ஆசையாத்தான் இருக்கு ஆனா எனக்கு இங்க இருக்கவே புடிக்கல என்னையும் உங்க கூட கூட்டிட்டு போயிருங்க நீங்க இருக்கும் போதே இப்படி எல்லாம் பேசுறாங்க நீங்க என்னை விட்டுட்டு போனா என் நிலைமை அம்புட்டு தான் உங்க ரெண்டு பேரையும் கெஞ்சி கேட்கிறேன்.."என்றவள் பெற்றோர்களின் பாதங்களில் சாஸ்தானமாக விழுந்து விட, அவள் இப்படி சொன்ன பிறகு அவர்களால் என்ன செய்ய முடியும்?
கணவனும் மனைவியும் கண்ணீர் வழிந்த முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் மகளை தூக்கி விட்டார்கள்.
"இப்படி எல்லாம் பேசாத சிந்தியா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உனக்கு அடுத்து இருக்கிற உன் தம்பி தங்கச்சி இரண்டு பேரையும் கொஞ்சம் யோசிச்சு பாரு.. நீ மட்டும் இப்ப எங்க கூட வந்துட்டா இவங்களுக்கு அது தொக்கா போயிடும். நீ எங்க கூட வரணும்னு தான் அவங்க இவ்வளவு பிரச்சினையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. அதுக்கு நீயே இவங்களுக்கு இடம் கொடுக்காத"என்ற கனகம் மகள் தலையில் கை வைத்தார்.
"இல்லப்பா நிஜமாகவே எனக்கு இங்க இருக்க புடிக்கல ஒவ்வொரு நொடியும் செத்து செத்து பொழைக்கிறது மாதிரி இருக்குது எத்தனை நாளைக்கு இப்படியே நான் காலம் தள்ள முடியும்!"என்றவள் தலையில் வைத்த அவரது கையை தன் கைகளுக்குள் பிடித்தப்படி சிறு குழந்தை போல் அழுக, தங்கள் செல்ல மகள் கண்ணீரை கண்டதும் தாங்க முடியுமா? அந்த பெற்றோர்களுக்கு.
கனகம் மகளிடம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ள மாட்டேன் என்று தன் நிலையில் அவள் விடாப்பிடியாக நின்று கொண்டிருக்க, கனகம் மனைவியை உதவிக்கு பார்த்தார்.
சீதா மகளை அவளது அறைக்கு அழைத்துச் சென்றவர் முதலில் அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினார்.
கனகம் மகள் அழுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தவர் வண்டியை நிறுத்திய இடத்தில் கலங்கிய கண்களோடு வந்து நின்றார்.
மகள் இருந்த அறையை நன்றாக பார்த்தார் சீதா.
அந்த அறை முழுவதும் அவளுக்கு அவர் வாங்கி கொடுத்த பொருள்கள் மட்டும் தான் இருந்தது.
சிறுபிள்ளை போல் அழுது கொண்டிருந்த சிந்தியா மனதில் இருந்த பாரங்கள் அனைத்தையும் பெற்றோர்களிடத்தில் இறக்கி வைத்ததால் என்னவோ இப்பொழுது ஓரளவுக்கு அவளால் தெளிவாக சிந்திக்க முடிந்தது.
"ஏம்மா நின்னுகிட்டு இருக்கீங்க பக்கத்துல உக்காருங்க.."என்று அவளது தாயின் கையைப் பிடித்து பக்கத்தில் அமர வைத்துக் கொள்ள,அவள் சொன்னது போலவே பக்கத்தில் அமர்ந்து கொண்டு சீதா அவள் தலையை தன் மடியில் சாய்த்துக் கொண்டார்.
மகளது தலையை சுகமாக வருடி கொடுக்க, நெடு நாட்களுக்கு பிறகு தாயின் அந்த வருடலில் அவளது மனம் இலவம் பஞ்சாக லேசாகி போனது.
சிறிது நேரம் வரை சீதா எதுவும் பேசவில்லை.
சிறிது நேரம் மகள் நிம்மதியாக இருக்கட்டும் என்று அமைதியாக இருந்தவர் கணவன் வெளியில் நின்று கொண்டிருக்க, பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் இருவரும் வீட்டிற்கு வந்து விடுவார்கள் என்று மகளிடம் பேச வேண்டியதை பேச வேண்டிய கட்டாயத்தில் பேச ஆரம்பித்தார்.
"இதே மாதிரி எத்தனை நாளைக்கு உன் பக்கத்துல நான் இருக்க முடியும் சிந்து.. நீ சின்ன பிள்ளை கிடையாதுடா வளர்ந்து பெரிய பிள்ளை ஆயிட்ட கல்யாணம் ஆயிடுச்சு கல்யாண வாழ்க்கையில சந்தோசம் மட்டும் இருக்காது.. இப்படி கஷ்டங்கள் எல்லாம் வந்து போகும் இது எல்லாத்தையும் பார்த்து நீ துவண்டு போகக்கூடாது.."என்று மகளது மனம் புண்படாமல் எடுத்துச் சொல்ல, நிமிர்ந்து அமர்ந்த சிந்தியா தாயின் கண்களைப் பார்த்தாள்.
அவரது கண்களில் தன் எதிர்காலத்துக்குரிய பயம் தெரிய,கலங்கிய கண்களை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவள் தாயை ஒரு சின்ன புன்னகையோடு பார்த்தாள்.
"இவங்க என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்க அதனாலதான் இன்னைக்கு பேசிட்டேன் அம்மா..என்னை எது சொன்னாலும் பொறுத்துக்கிட்டு அமைதியா போயிடுவேன் ஆனா உங்களையும் அப்பாவையும் தேவையில்லாமல் பேசவும் தான் எனக்கு கோபம் வந்துச்சு சங்கீதாவுக்கு மட்டும் அவங்க அம்மாவே சொல்லும் போது அப்படி கோபம் வரும் அவங்க மட்டும் அவங்க அம்மாவையும் அப்பாவ அவங்க கூட கூட்டிட்டு போகணும்னு ஆசைப்படுவாங்க நான் மட்டும் என் வீட்டுக்கு எங்க அப்பா அம்மா முதல் முதல்ல வரும்போது அவங்க அம்மா இப்படி உங்களை கேவலமாக பேசுவதை பார்த்துகிட்டு அமைதியாக இருக்கணுமா?"
"கொஞ்சம் பொறுமையா இரு சிந்து இதுதான் உன்கிட்ட அம்மா சொல்லிக்கிட்டு இருந்தேன்.. பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தா மாப்பிள்ளை வீட்ல இந்த மாதிரி நடக்கிறது எல்லாம் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை வம்சா வழியா வந்துகிட்டு இருக்க விஷயம் தான்..நீ இந்த வீட்ல சந்தோசமா வாழ்ந்தால் தான் நானும் உங்க அப்பாவும் அந்த வீட்ல சந்தோசமா இருக்க முடியும்..உன்னை கட்டாயப்படுத்தி இந்த வீட்டில நீ இருந்து தான் ஆகணும்னு நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன் எனக்கு நீ ரொம்ப முக்கியம்..படிச்ச புள்ளை நீ உனக்கு நல்லது கெட்டது எதுவும் நான் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.. உன்னோட வாழ்க்கை இது முடிவெடுக்க வேண்டியது உன்னுடைய விருப்பம் தான்.."என்ற சீதா அதற்கு மேல் மகளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் அமைதியாகி போனார்.
சிந்தியாவிற்கோ இத்தனை பிரச்சனைகள் தன்னால் நடந்த பிறகும் இந்த வீட்டில் எப்படி இனிமேல் இருக்க முடியும் என்ற தயக்கம் பெரிதாக இருந்தது.
எந்த பிரச்சனையும் செய்யாமல் அமைதியாக இருந்த போது தான் அனைத்து பிரச்சினைகளையும் செய்தோம் என்று தன்னை வாட்டி எடுத்து விட்டார்கள்.
இப்பொழுது அவள் நடந்து கொண்டு விதத்தில் நிச்சயம் அவளை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று அவளுக்கே நன்றாக தெரிந்தது.
கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள் எதிரில் இருந்த தாயைப் பார்க்க, அவளுக்கோ தன்னையும் மீறி அனைத்தையும் சமாளித்து விடும் ஒரு வேகம்.
'கமான் சிந்து..உன்னோட தைரியம் எல்லாம் எங்க போச்சு போயும் போயும் இவங்களை பார்த்து பயந்து எப்படி கரப்பான் பூச்சி மாதிரி ஒளிஞ்சு ஒளிஞ்சு எத்தனை காலத்துக்கு நீ வாழ முடியும்? எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் இப்ப எனக்கு வேற வழி இல்லை..'என்று தன் மனதோடு சொல்லிக் கொண்டவள் எழுந்தாள்.
"நீங்க கவலைப்படாதீங்கம்மா உங்களுக்கும் அப்பாவுக்கும் கெட்ட பேர் வாங்குற மாதிரி நான் எந்த காரியமும் எப்பவும் செய்ய மாட்டேன்.. நீங்க சொன்ன மாதிரி இனிமே அவங்க என்ன செஞ்சாலும் நான் கண்டுக்கல என்னவோ பண்ணிட்டு போகட்டும்.."என்றாள் விரக்தியாக.
அவள் இப்படி எல்லாம் பேசுவதை கேட்ட பிறகும் சீதாவால் எப்படி மகளை இங்கு விட்டுவிட்டு நிம்மதியாக புறப்பட முடியும்?
அவள் இருந்த நிலைமையே சொல்லியது அவள் அந்த வீட்டில் வாழும் லட்சணத்தை.
"என்னங்க இவர் இப்படி சொல்லிட்டு போறாரு இப்ப என்ன பண்றது?"என்று கலங்கிய குரலில் சீதா கணவனிடம் கேட்க, அவருக்கு என்ன பதில் சொல்ல முடியும் அவரால்?
"நம்ம நிலைமை என்னன்னு உனக்கே நல்லா தெரியும் சீதா..எப்படா நம்ம கீழ விழுவோம் நம்மள பார்த்து கைகொட்டி சிரிக்கலாம் என்று காத்துகிட்டு இருக்க கூட்டம் ஒரு பக்கம்..இவளை இப்ப நம்ம கூடவே கூட்டிட்டு போனா இவளுக்கு அடுத்து இருக்க இன்னொரு பொண்ணு பையன் அவங்க நிலைமை என்ன யோசிச்சு பாரு? எல்லாத்துக்கும் மேல எத்தனை காலத்துக்கு நம்மளால இவளை வச்சு பார்க்க முடியும்.. நீயும் பார்த்துகிட்டு தானே இருந்த வயசுல பெரியவங்க அப்படி இப்படி இருக்க தான் செய்வாங்க உன் பொண்ணு வாயை மூடிக்கிட்டு தான் இருக்கணும்.."
"நமக்கே நல்லா தெரியுதுங்க நம்ம பொண்ணு இப்படி பேசுற ஆள் கிடையாது இப்படி எல்லாம் பேசுற அளவுக்கு அவளை அவங்க டார்ச்சர் பண்ணி இருக்காங்க.."
"என்ன பண்றது சீதா பொம்பளையா பொறந்த எல்லாரோட தலையெழுத்தும் இதுதானே.. பொறுமையா போனால் தானே வாழ்க்கையில் எதையா இருந்தாலும் சாதிக்க முடியும்.. கொஞ்ச நாளைக்கு பொறுமையா இருந்து தான் ஆகணும் எத்தனை காலத்துக்கு நம்மளால இப்படியே இந்த பொண்ணை வச்சு பார்க்க முடியும் கல்யாணம் பண்ணி ஒரு மாசம் தான் முழுசா முடிஞ்சு இருக்கு அதுக்குள்ள இவ்வளவு பெரிய பிரச்சனை.. அவங்க எவ்வளவு கொடுமை பண்ணாலும் இப்ப அது எதுவும் பேச்சு வருதா? நம்ம பொண்ணு அவங்களை பேசுனது மட்டும்தான் தப்பு யாரு கிட்ட போய் சொன்னாலும் இதை தான் சொல்லுவாங்க.."
"அதுக்காக நம்ம பொண்ணை இப்படியே விட்டுட்டு போக முடியுமா? இதுக்காகத்தான் இவளை இவ்வளவு கஷ்டப்பட்டு கடன் வாங்கி கல்யாணம் பண்ணி கொடுத்தோமா!அந்த சங்கீதா எங்க அண்ணனுக்கு தாராளமா என்னை நம்பி கல்யாணம் பண்ணி குடுங்க எந்த பிரச்சனையும் வராது என்று உறுதி கொடுத்ததால் தானே நம்ம இவ்வளவு தூரம் இறங்கி எதையும் விசாரிக்காமல் கல்யாணம் பண்ணி கொடுத்தோம்.."என்று இருவரும் தவிப்புடன் தங்கள் பெண்ணின் வருங்காலம் என்ன ஆகுமோ என்று கலக்கமான குரலில் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க,இந்த உண்மை எல்லாம் இவர்களுக்கு தெரிய வந்தால் இப்படித்தான் பேசுவார்கள் இவர்கள் மனது காயப்படும் என்று இத்தனை நாட்களாக சிந்தியா மறைத்து வைத்திருந்த உண்மைகள் அவர்களுக்கு தெரிந்ததும் அவள் எதிர்பார்த்தது போலவே அவர்கள் மனவேதனையுடன் பேசியதை கேட்டு அவள் மனம் வலித்தது.
தன் வலியும் வேதனையும் தன்னோடே போகட்டும் என்று இத்தனை நாட்கள் பொருத்து இருந்தது அத்தனையும் இலவு காத்த கிளி கதையாக வீணாகப் போனது.
"அப்பா அம்மா ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க..இது என்னோட வாழ்க்கை இதுல எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கிற அளவுக்கு என்கிட்ட தைரியம் இருக்கு..இப்படி எல்லாம் உங்க கிட்ட சொல்றதுக்கு எனக்கும் ஆசையாத்தான் இருக்கு ஆனா எனக்கு இங்க இருக்கவே புடிக்கல என்னையும் உங்க கூட கூட்டிட்டு போயிருங்க நீங்க இருக்கும் போதே இப்படி எல்லாம் பேசுறாங்க நீங்க என்னை விட்டுட்டு போனா என் நிலைமை அம்புட்டு தான் உங்க ரெண்டு பேரையும் கெஞ்சி கேட்கிறேன்.."என்றவள் பெற்றோர்களின் பாதங்களில் சாஸ்தானமாக விழுந்து விட, அவள் இப்படி சொன்ன பிறகு அவர்களால் என்ன செய்ய முடியும்?
கணவனும் மனைவியும் கண்ணீர் வழிந்த முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் மகளை தூக்கி விட்டார்கள்.
"இப்படி எல்லாம் பேசாத சிந்தியா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உனக்கு அடுத்து இருக்கிற உன் தம்பி தங்கச்சி இரண்டு பேரையும் கொஞ்சம் யோசிச்சு பாரு.. நீ மட்டும் இப்ப எங்க கூட வந்துட்டா இவங்களுக்கு அது தொக்கா போயிடும். நீ எங்க கூட வரணும்னு தான் அவங்க இவ்வளவு பிரச்சினையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. அதுக்கு நீயே இவங்களுக்கு இடம் கொடுக்காத"என்ற கனகம் மகள் தலையில் கை வைத்தார்.
"இல்லப்பா நிஜமாகவே எனக்கு இங்க இருக்க புடிக்கல ஒவ்வொரு நொடியும் செத்து செத்து பொழைக்கிறது மாதிரி இருக்குது எத்தனை நாளைக்கு இப்படியே நான் காலம் தள்ள முடியும்!"என்றவள் தலையில் வைத்த அவரது கையை தன் கைகளுக்குள் பிடித்தப்படி சிறு குழந்தை போல் அழுக, தங்கள் செல்ல மகள் கண்ணீரை கண்டதும் தாங்க முடியுமா? அந்த பெற்றோர்களுக்கு.
கனகம் மகளிடம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ள மாட்டேன் என்று தன் நிலையில் அவள் விடாப்பிடியாக நின்று கொண்டிருக்க, கனகம் மனைவியை உதவிக்கு பார்த்தார்.
சீதா மகளை அவளது அறைக்கு அழைத்துச் சென்றவர் முதலில் அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினார்.
கனகம் மகள் அழுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தவர் வண்டியை நிறுத்திய இடத்தில் கலங்கிய கண்களோடு வந்து நின்றார்.
மகள் இருந்த அறையை நன்றாக பார்த்தார் சீதா.
அந்த அறை முழுவதும் அவளுக்கு அவர் வாங்கி கொடுத்த பொருள்கள் மட்டும் தான் இருந்தது.
சிறுபிள்ளை போல் அழுது கொண்டிருந்த சிந்தியா மனதில் இருந்த பாரங்கள் அனைத்தையும் பெற்றோர்களிடத்தில் இறக்கி வைத்ததால் என்னவோ இப்பொழுது ஓரளவுக்கு அவளால் தெளிவாக சிந்திக்க முடிந்தது.
"ஏம்மா நின்னுகிட்டு இருக்கீங்க பக்கத்துல உக்காருங்க.."என்று அவளது தாயின் கையைப் பிடித்து பக்கத்தில் அமர வைத்துக் கொள்ள,அவள் சொன்னது போலவே பக்கத்தில் அமர்ந்து கொண்டு சீதா அவள் தலையை தன் மடியில் சாய்த்துக் கொண்டார்.
மகளது தலையை சுகமாக வருடி கொடுக்க, நெடு நாட்களுக்கு பிறகு தாயின் அந்த வருடலில் அவளது மனம் இலவம் பஞ்சாக லேசாகி போனது.
சிறிது நேரம் வரை சீதா எதுவும் பேசவில்லை.
சிறிது நேரம் மகள் நிம்மதியாக இருக்கட்டும் என்று அமைதியாக இருந்தவர் கணவன் வெளியில் நின்று கொண்டிருக்க, பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் இருவரும் வீட்டிற்கு வந்து விடுவார்கள் என்று மகளிடம் பேச வேண்டியதை பேச வேண்டிய கட்டாயத்தில் பேச ஆரம்பித்தார்.
"இதே மாதிரி எத்தனை நாளைக்கு உன் பக்கத்துல நான் இருக்க முடியும் சிந்து.. நீ சின்ன பிள்ளை கிடையாதுடா வளர்ந்து பெரிய பிள்ளை ஆயிட்ட கல்யாணம் ஆயிடுச்சு கல்யாண வாழ்க்கையில சந்தோசம் மட்டும் இருக்காது.. இப்படி கஷ்டங்கள் எல்லாம் வந்து போகும் இது எல்லாத்தையும் பார்த்து நீ துவண்டு போகக்கூடாது.."என்று மகளது மனம் புண்படாமல் எடுத்துச் சொல்ல, நிமிர்ந்து அமர்ந்த சிந்தியா தாயின் கண்களைப் பார்த்தாள்.
அவரது கண்களில் தன் எதிர்காலத்துக்குரிய பயம் தெரிய,கலங்கிய கண்களை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவள் தாயை ஒரு சின்ன புன்னகையோடு பார்த்தாள்.
"இவங்க என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்க அதனாலதான் இன்னைக்கு பேசிட்டேன் அம்மா..என்னை எது சொன்னாலும் பொறுத்துக்கிட்டு அமைதியா போயிடுவேன் ஆனா உங்களையும் அப்பாவையும் தேவையில்லாமல் பேசவும் தான் எனக்கு கோபம் வந்துச்சு சங்கீதாவுக்கு மட்டும் அவங்க அம்மாவே சொல்லும் போது அப்படி கோபம் வரும் அவங்க மட்டும் அவங்க அம்மாவையும் அப்பாவ அவங்க கூட கூட்டிட்டு போகணும்னு ஆசைப்படுவாங்க நான் மட்டும் என் வீட்டுக்கு எங்க அப்பா அம்மா முதல் முதல்ல வரும்போது அவங்க அம்மா இப்படி உங்களை கேவலமாக பேசுவதை பார்த்துகிட்டு அமைதியாக இருக்கணுமா?"
"கொஞ்சம் பொறுமையா இரு சிந்து இதுதான் உன்கிட்ட அம்மா சொல்லிக்கிட்டு இருந்தேன்.. பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தா மாப்பிள்ளை வீட்ல இந்த மாதிரி நடக்கிறது எல்லாம் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை வம்சா வழியா வந்துகிட்டு இருக்க விஷயம் தான்..நீ இந்த வீட்ல சந்தோசமா வாழ்ந்தால் தான் நானும் உங்க அப்பாவும் அந்த வீட்ல சந்தோசமா இருக்க முடியும்..உன்னை கட்டாயப்படுத்தி இந்த வீட்டில நீ இருந்து தான் ஆகணும்னு நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன் எனக்கு நீ ரொம்ப முக்கியம்..படிச்ச புள்ளை நீ உனக்கு நல்லது கெட்டது எதுவும் நான் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.. உன்னோட வாழ்க்கை இது முடிவெடுக்க வேண்டியது உன்னுடைய விருப்பம் தான்.."என்ற சீதா அதற்கு மேல் மகளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் அமைதியாகி போனார்.
சிந்தியாவிற்கோ இத்தனை பிரச்சனைகள் தன்னால் நடந்த பிறகும் இந்த வீட்டில் எப்படி இனிமேல் இருக்க முடியும் என்ற தயக்கம் பெரிதாக இருந்தது.
எந்த பிரச்சனையும் செய்யாமல் அமைதியாக இருந்த போது தான் அனைத்து பிரச்சினைகளையும் செய்தோம் என்று தன்னை வாட்டி எடுத்து விட்டார்கள்.
இப்பொழுது அவள் நடந்து கொண்டு விதத்தில் நிச்சயம் அவளை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று அவளுக்கே நன்றாக தெரிந்தது.
கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள் எதிரில் இருந்த தாயைப் பார்க்க, அவளுக்கோ தன்னையும் மீறி அனைத்தையும் சமாளித்து விடும் ஒரு வேகம்.
'கமான் சிந்து..உன்னோட தைரியம் எல்லாம் எங்க போச்சு போயும் போயும் இவங்களை பார்த்து பயந்து எப்படி கரப்பான் பூச்சி மாதிரி ஒளிஞ்சு ஒளிஞ்சு எத்தனை காலத்துக்கு நீ வாழ முடியும்? எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் இப்ப எனக்கு வேற வழி இல்லை..'என்று தன் மனதோடு சொல்லிக் கொண்டவள் எழுந்தாள்.
"நீங்க கவலைப்படாதீங்கம்மா உங்களுக்கும் அப்பாவுக்கும் கெட்ட பேர் வாங்குற மாதிரி நான் எந்த காரியமும் எப்பவும் செய்ய மாட்டேன்.. நீங்க சொன்ன மாதிரி இனிமே அவங்க என்ன செஞ்சாலும் நான் கண்டுக்கல என்னவோ பண்ணிட்டு போகட்டும்.."என்றாள் விரக்தியாக.
அவள் இப்படி எல்லாம் பேசுவதை கேட்ட பிறகும் சீதாவால் எப்படி மகளை இங்கு விட்டுவிட்டு நிம்மதியாக புறப்பட முடியும்?