வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"நினைவே நீதானே!!"-கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் ஒன்று:



" எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.." என்றவள் குரலில் அத்தனை அழுத்தம் தெரிந்தது.



அவளை வேதனையுடன் பார்த்த அவளது பெற்றோர்கள் அவளை அதற்கு மேலேயும் வற்புறுத்த மனம் வராமல் அதே நேரம் அவள் இருக்கும் நிலையைக் கண்டு, பார்க்க சகிக்காமல் இருவரும் வேறு வழியில்லாமல் அவர்கள் ஏற்கனவே பேசி வைத்திருந்தது போல கையில் வைத்திருந்த விஷ பாட்டிலை திறந்து நொடி கூட தாமதிக்காமல் வாயில் ஊற்றிக் கொண்டார்கள்.



தன் பெற்றோர்கள் தன் கண் முன்பாகவே விஷம் அருந்துவதை கண்டு அவர்களது தவப்புதல்விக்கு சிறிதும் வேதனையோ வருத்தமோ இல்லை என்பது போல் அத்தனை அழுத்தமாக நின்று கொண்டிருந்தாள்.



பெற்றோர்கள் இருவரும் அந்த நிலைமையில் கூட அவள் தங்களை கண்டு சிறிதும் வருத்தப்படாமல் ஏன் பதட்டம் என்பது துளியும் இல்லாமல் நிற்பதைக் கண்டு எப்படி இருந்த பெண் இன்று இப்படி தனக்குள்ளேயே இறுகிப்போய் நிற்கிறாளே என்று அதற்கும் வேதனை கொண்டவர்கள் கண்கள் சொருக ஆரம்பித்தது.



என்னதான் திருமணம் வேண்டாம் என்று அத்தனை விறைப்பாக இருந்தவளுக்கும் தன் முன்னாலேயே தன் பெற்றோர் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிவதை காண சகிக்க இயலவில்லை.



வயிற்றில் மட்டும் அந்த குழந்தை இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவளும் அவளது கணவன் சென்ற இடத்திற்கு சந்தோஷமாக சென்றிருப்பாள் அல்லவா!!



ஒரு காலத்தில் அவளை துன்பம் சிறிதும் அண்ட கூடாது என்று நினைத்தவன் இன்று அவளை மீளா துயிலில் தள்ளி விட்டு சென்ற கொடுமையை என்னவென்று சொல்வது??



தன் மகளும் மருமகளும் தன் கண் முன்னாடியே உயிருக்கு போராடுவதை கண்டு தாங்க முடியாத மகளின் தகப்பனார் தன் வயதையும் பொருட்படுத்தாமல் பேத்தியின் காலில் விழுந்து விட்டார்.



" கண்ணம்மா உனக்கே தெரியும் எனக்கு என் பொண்ணை ரொம்ப பிடிக்கும்.. உன்னோட வலியும் வேதனையும் எங்களுக்கு தெரியாமல் இல்லை! தயவு செய்து என் பொண்ணை என்கிட்டே இருந்து பிரிச்சிடாத.. இந்த வீட்ல ஏற்கனவே ஒரு உயிர் பலியானது போதும் இன்னும் ரெண்டு உயிர் பலியாக வேண்டாம்.. உன் காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன் தயவு செஞ்சு எனக்கு கருணை பிச்சை போடுமா.. " என்றவருக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.



அப்பொழுதும் அவள் மனம் சிறிதும் இரங்கவில்லை.


இன்னும் சொல்லப்போனால் அங்கு நடக்கும் எதையும் கிரகித்துக் கொள்ள அவள் அவளாகவே இல்லை.



சுற்றி நின்று கொண்டிருந்த அவ்வளவு சொந்தங்கள் யாவும் அவளை ஒரு பக்கம் வெறுப்புடனும் மறுபக்கம் பாவமாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



கல் சிலையோ இவள் என்று என்னும் அளவிற்கு இறுகிப்போய் தனக்குள்ளேயே நின்று கொண்டிருந்தாள் நிவேதா.


" அக்கா உனக்கு என்னதான் ஆச்சு? இங்க பாரு என்ன பாருக்கா.. " என்று அவளது தமையன் தமக்கை இருந்த கோலத்தை பார்க்க முடியாமல் அவள் கைகளைப் பற்றி பேச, அதற்கு எந்த விதமான உணர்வுகளையும் பிரதிப்பலிக்காமல் அமைதியாக இருந்தாள் நிவேதா.


அவளது பெற்றோர்கள் இருவரும் உயிருக்காக போராடிக் கொண்டிருக்க, அவள் காலில் விழுந்த அவளது தாத்தா இன்னும் எழுந்து கொள்ளாமல் அவள் காலில் கிடந்தபடியே அழுது கொண்டிருக்க அப்போதாவது அவள் மனம் மாற மாட்டாளா? என்று சுற்றி நின்றவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்களே தவிர, உயிருக்காக போராடிக் கொண்டிருந்த இருவரை காப்பாற்றுவதற்கும் அவள் காலில் விழுந்து அழுது கொண்டிருந்த பெரியவரை தூக்கி விட யாரும் முன்வரவில்லை.



முன்வரவில்லை என்பதை விட அவர்கள் முன்பே இதை எல்லாம் பேசி வைத்ததால் அவர்களின் சொல் பேச்சை மீறி எதுவும் செய்ய முடியாமல் தங்கள் கைகளை கட்டிக்கொண்டு மனதில் ரத்த கண்ணீர் வடித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



அங்கிருந்த அத்தனை பேரில் அவளை போலவே உணர்வற்று யாருக்கு வந்ததோ என்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இன்னொரு ஜீவன்..



அவன் கார்த்திகேயன்.



தன்னுடைய சந்தோஷம் மட்டுமே முதன்மை என்று எண்ணுபவன்.



எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் தனக்கு என்பதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பவன்.



உயிருக்காக போராடிக் கொண்டிருந்த தனது தகப்பனாரின் தங்கையையும் அவரது கணவரையும் வேடிக்கை பொருளைப் போல் பார்த்தவன், தன் தாத்தா பர்பாமென்ஸ் செய்வதாக நினைத்துக் கொண்டு அனைவரையும் ஒரு வெறுப்பு நிறைந்த பார்வை பார்த்தான்.



அவன் அனைவரையும் வெறுப்பு நிறைந்த பார்வை பார்க்க அவனை வெறுப்புடன் பார்த்தார் அவன் தந்தை சோமசுந்தரம்.



" இப்போ உனக்கு ரொம்ப சந்தோசமாடா.. உன்னால தான் இப்ப என் தங்கச்சியும் தங்கச்சி புருஷனும் உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காங்க.. என்ன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணி தொலைச்சேனோ எனக்கே தெரியல! இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு உதவாக்கரை பிள்ளையாக வந்து பிறந்து இருக்கு! போய் தொல அந்த பொண்ணு கல்லு மாதிரி நிக்குதே! நீங்க ரெண்டு பேரும் ஆசைப்பட்டது மாதிரி இந்த கல்யாணம் வேண்டாம் எதுவுமே நீ இந்த வீட்டுக்குள்ள வரவே வராத நாங்க செத்தா கூட எங்க மூஞ்சில முழிக்காத.. அனாதை பிணமாக செத்து கிடந்தாலும் சந்தோசம் தவிர உன் கையால கொல்லி வச்சு எங்க ஆத்மாவை கூட சந்தோஷம் இல்லாமல் பண்ணிடாத.. " என்ற சோமசுந்தரம் மகனை பார்க்க கூட பிடிக்காதவராக வார்த்தைகளை தணலாக கொட்டி விட்டு முகத்தை திருப்பிக் கொள்ள அவரை ஒரு உணர்வற்ற பார்வை பார்த்தான் கார்த்திக்.



அதற்கு மேல் அங்கு நிற்பதற்கு அவனுக்கும் பிடிக்காமல் போக, தான் அவளை பிடிக்கவில்லை அவள் எனக்கு வேண்டாம் என்று அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற முழுமையாக மறுத்தவன் இப்பொழுது தன்னை ஒருத்தி வேண்டாம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வலுக்கட்டாயமாக அந்த நிமிடம் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி அவன் உள்மனதில் உருவானது.



அவளை அடைவதற்கான வழியில் இறங்கியவன் அதை செயல்படுத்துவதற்காக அங்கிருந்து அகன்றான்.


பெற்றோர்கள் உயிர் தன் கண் முன்பாக போவதை விரும்பாத நிவேதா அதற்கு மேலும் பிடிவாதம் பிடிக்காமல் தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டாள்.



கால்களில் ஏதோ ஊர்வது போல் இருக்க, கீழே குனிந்து பார்த்தவள் அப்பொழுதுதான் தன் காலில் விழுந்து அழுது கொண்டிருந்த தாத்தாவைக் கண்டு பதைபதைத்தவளாக ஈரடி பின்னே சென்றாள்.



அப்படியே அத்தனை நேரம் உணர்வு அற்று இருந்தாளா என்ன?



ஆம். அத்தனை நேரம் தன் உணர்வுகளை தொலைத்தவளாக நின்று கொண்டிருந்தாள்.




கணவன் இறந்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில் இன்னொரு திருமணம்.



அதுவும் தான் உயிருக்கு உயிராக நேசித்து விடாப்படியாக திருமணம் செய்து கொண்ட தன் மாமனை இழந்து ஆறு மாதங்கள் கூட முழுமையாக கடந்து செல்லாத நிலையில் தனக்கு சுத்தமாக பிடிக்காத ஒருவனை திருமணம் செய்து கொள்ள அனைவரும் வற்புறுத்துவதை கண்டு சிலையாக சமைந்து போய் தான் நின்று கொண்டிருந்தாள்.



இடிக்கு மேல் இடியாக அவள் தலையில் இறங்கிக் கொண்டிருக்க, எதுவாக இருந்தாலும் ஒரு அளவு தானே தாங்கிக் கொள்ள இயலும்.



ஒரு கட்டத்திற்கு மேல் போனால் எதுவும் சுத்தமாக மரத்துப் போய்விடும்.



அப்படி மரத்துப்போன ஒரு மனநிலையில் நின்று கொண்டிருந்தவள் தாயும் தந்தையும் நாடகம் ஆடுவதாக நினைத்துக்கொண்டு சில நாட்களாக இருந்தது போல் இப்பொழுதும் பித்து பிடித்த நிலைக்கு சென்றவள் அவளது தாய் மாமன் குரலில் தான் நினைவுலகம் வந்தாள்.



தாத்தா தன் காலில் விழுந்து அழுததை தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் கண்களில் கண்ணீர் வழிய, அனைவரையும் ஒரு உணர்வற்ற பார்வை பார்த்தவள் " நீங்க என்ன சொல்றீங்களோ அதுக்கு நான் சம்மதிக்கிறேன்.. " என்று ஆறு மாதங்களுக்குப் பிறகு முதன்முதலாக வாயை திறந்து அன்று தான் பேசினாள்.



நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு அவள் பேசியதை கேட்டு மிகவும் சந்தோஷமடைந்த அவள் குடும்பத்தினர் அதற்கு மேலும் தாமதிக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவளது பெற்றோர் இருவருக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய தடாலடியாக தாலியுடன் கையில் நுழைந்தான் கார்த்திக்.



அங்கு நடந்தது எதையும் அறிந்து கொள்ளாமல் கையில் தாலியை கொண்டு வந்தவன் எதிரில் நின்று கொண்டிருந்த நிவேதா கழுத்தில் கட்டி விட்டு, அவளும் ஒரு மனுஷி தான் என்று நினைக்காமல் அவள் கைகளை பிடித்து தர தரவென இழுத்துக் கொண்டு சென்றான்.



அவனது அதிரடி செயலில் அங்கிருந்த அனைவரும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார்கள்.



அதிரடியாக நடந்த அந்த செயலில் யாராலும் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்க அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவளை வேகமாக இழுத்துக் கொண்டு வந்தவன் காரில் பின் பக்கமாக அவளை உள்ளே தள்ளி கதவை சாத்தியவன் அதே வேகத்தில் தானும் காரில் ஏறி புயல் வேகத்தில் கிளம்பி கொண்டு சென்றான்.


காரில் சென்று கொண்டிருந்தவளுக்கு
கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய
'எதுக்காக என்னவிட்டு போனீங்க மாமா..?என்னால உங்க இடத்துல வேற யாரையும் வச்சு பார்க்க முடியலையே!! இனி நான் என்ன பண்ண போறேன்..?'என்று ஊமையாய் அழுது கொண்டிருக்க அவள் கழுத்தில் தாலி கட்டி தன் மனைவியாக்கிக் கொண்டவன் அவளை சிறிதும் கண்டு கொள்ளவில்லை.



அன்பு என்றால் என்ன? என்று கேள்வி கேட்பவன் அன்பே உயிராக வாழ்பவளிடம் காட்டி அவள் நேசத்தைப் பெற்றுக் கொள்வானா? இல்லை அவளை உயிரோடு துடிக்க வைக்க போகிறானா?




 
அத்தியாயம் 2:



காரை செலுத்துவதில் கவனமாக இருந்த கார்த்திகேயன் மறந்தும் பின்பக்கத்தில் அமர்ந்து மௌனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த நிவேதாவை திரும்பி பார்க்கவில்லை.



அவளுக்கோ ஒரு கட்டத்தில் அழுது அழுது கண்ணீரும் ஓய்ந்து போனது.



அவள் அழுக அழுக அவள் வயிற்றில் வளரும் குழந்தையும் சேர்த்து அழுததோ என்னவோ அவள் வயிற்றில் எட்டி ஒரு உதை உதைக்க, அப்பொழுதுதான் அவளுக்கு காலையில் இருந்து தானும சாப்பிடாமல் குழந்தையையும் பட்டினி போட்டது நினைவிற்கு வந்தது.



மேடிட்ட வயிற்றை தன் கைகளால் அழுத்தமாக பிடித்துக் கொண்டவள் ' சாரி பாப்பா வர வர எனக்கு இருக்க பிரச்சினையில் உன்னை கவனிக்க முடியாமல் போகுது.. மாமா எனக்கு விட்டுட்டு போன கடைசி நினைவுகள் நீ மட்டும் தான் பாப்பா.. உன்னை பட்டினி போட்டதுக்கு அம்மாவை மன்னிச்சிடுங்க..' என்று மனதோடு வயிற்றில் இருக்கும் குழந்தையோடு பேசியவளுக்கு இன்னும் பசி அதிகமாக ஆரம்பித்தது.



அவள் பேசியதை எல்லாம் கேட்க விரும்பாத அவள் மழலைச் செல்வம் பசியில் அவள் வயிற்றை இன்னும் வேகமாக எட்டி உதைக்க ஆரம்பித்தது.



கைகளால் வயிற்றை அழுத்தமாக பிடித்துக் கொண்டே நிவேதா சிரமப்பட்டு வந்த கண்ணீரை இதழ் கடித்து அடக்கிக் கொண்டாள்.



தனக்கு பிடிக்காத ஒருவனிடம் இப்படி கையேந்தும் சூழ்நிலைக்கு தன்னை தள்ளிய அந்த கடவுளை மனமார அந்த நேரம் சபித்துக் கொண்டிருந்தாள்.



தன்னுடைய பசி என்றால் கூட பொறுத்துக் கொண்டிருப்பாளோ என்னவோ?



குழந்தையின் பசி என்று வரும் பொழுது அவளது பிடிவாதம் கூட பின்னுக்குச் சென்றது.


இவனிடம் அவசியம் கேட்டு தான் ஆக வேண்டுமா? என்று சில நிமிடங்கள் வரை தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டவள் அதன் பிறகு தன் தயக்கத்தை முழுவதுமாக விட்டு ஒளித்துவிட்டு அவனிடம் பசிக்கிறது என்று சொல்வதற்காக வாயை திறக்க, அதற்கு இடமளிக்காமல், அவனே காரில் வைத்திருந்த ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து பின்புறமாக நீட்டினான்.



" உன் முகத்தை கண்ணாடி வழியா பார்த்தாலே நல்லா தெரியுது உனக்கு இப்ப பசிக்குதுன்னு.. உன்னோட ஒவ்வொரு சின்ன அசைவுகளும் எதுக்காகன்னு எனக்கு நல்லாவே தெரியும்! இப்ப இந்த பிஸ்கட் பாக்கெட் உன்னோட பசியை தீக்கறதுக்கு இல்லை உன்னோட வயித்துல இருக்க குழந்தையோட பசிக்காக மட்டும் தான்.. அதுவும் அந்த குழந்தை மேல இருக்க பாசம்னு தப்பா எடுத்துக்காத! ஒரு கர்ப்பிணியை பட்டினி போட்ட பாவம் எனக்கு வேண்டாம்.. ஏற்கனவே நான் அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறது பத்தாதா!" என்றவன், காரை ஓரமாக நிறுத்தி அவளை திரும்பி பார்க்க, அவன் சொன்ன கடைசி வரிகளில் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் தலை தானாக குனிந்து கொண்டது.



அவன் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை வேதனைகளுக்கும் காரணம் அவள் மட்டும் தான் அல்லவா?



" எவ்வளவு நேரம் இப்படியே நான் இதை வச்சுக்கிட்டு இருக்குது சட்டுபுட்டுன்னு புடி.. " என்றவன் குரலில் அவள் தேகம் தூக்கி வாரி போட, கைகள் தானாக பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிக் கொண்டது.



அவனும் தான் இங்கிருந்தால் அவள் சாப்பிடுவதற்கு சங்கடப்படுவாள் என்று அவளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டவனாக காரை விட்டு இறங்கியவன் புகைபிடிப்பதற்காக சற்று தூரம் தள்ளி சென்றான்.



அவள் கேட்காமலேயே தண்ணீர் பாட்டிலையும் இன்னும் சில தின்பண்டங்களையும் அருகில் வைத்து விட்டு தான் சென்றான்.



நிவேதா இருந்த பசிக்கு அனைத்து தின்பண்டங்களையும் தீர்த்து முடித்தவள் தண்ணீரையும் குடித்து முடிக்க அப்பொழுதுதான் அவள் வயிற்றில் வளரும் குழந்தையும் தன் ஆட்டத்தை சற்று நிறுத்தியது.



' அப்படியே நீ உங்க அப்பா மாதிரி..' என்று மனதோடு சொல்லிக் கொண்டவளுக்கு எண்ணங்கள் எங்கெங்கோ சென்று வந்தது.



சிறிது நேரம் வரை அவளுக்கு தனிமை கொடுத்த கார்த்திகேயன் மீண்டும் காரில் வந்தமர்ந்தவன் " போற வழியில ஹோட்டல் எதுவும் இல்லை இப்போதைக்கு இந்த ஸ்னாக்ஸ் மட்டும் தான் உனக்கு.. சீக்கிரம் வீட்டுக்கு போனதும் உனக்கு சாப்பாடு வாங்கி தரேன்.. " என்றதோடு காரை கிளப்ப, அவளும் அவனை சிறிதும் கவனிக்காமல் சற்று சாப்பிட்டதால் ஆசுவாசமாக இருக்க அப்படியே காரில் சாய்ந்து உறங்க ஆரம்பித்திருந்தாள்.



காரை நிறுத்தி திரும்பி பார்த்தவன் சிறுவயதில் உறங்குவது போலவே இப்பொழுதும் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை ஒரே ஒரு நொடி வேதனையுடன் பார்த்தவன் அடுத்த நொடியே அது பொய்யோ எனும் விதமாக தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.


அவளது தூக்கத்தை கலைக்க மனம் வராதவனாக, கார் கதவை சத்தம் இல்லாமல் திறந்து அவளை சிறு பிள்ளை போல அழுங்காமல் குலுங்காமல் கைகளில் தூக்கிக் கொள்ள, தூக்கத்தில் கனவில் இருந்த நிவேதாவோ எப்போதும் போல் தன் கணவன் தான் ( அவளை பொறுத்தவரை இந்த நிமிடம் வரை அவளது கணவன் என்பது அவளுடைய இறந்து போன விஜய் தான்) தன்னை கைகளில் தூக்கிக் கொள்கிறான் என்று நினைத்துக் கொண்டவள் இதழ்கள் தானாக புன்னகையை சிந்தியது.



" மாமா எப்ப பாத்தாலும் தூங்கும்போது இதே வேலையை பார்த்துகிட்டு இருக்கீங்க.. மாமா அங்க தொடாதீங்க கூசுது.. ஐயோ மாமா கால விடுங்க கால் கூசுது.. மாமா வயித்துல பாப்பா இருக்குது அதாவது உங்களுக்கு நினைவு இருக்கா இல்லையா? இப்படி என்னை சின்ன புள்ள மாதிரி தூக்கி வச்சுக்கிட்டு நீங்க பண்றது எல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லப்பா.. " என்று செல்லமாக சலித்துக் கொண்டாலும் அவள் முகமோ அதற்கு மாறாக புன்னகையை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.



கணவன் தான் எப்போதும் போல் தன்னை தூக்கிக் கொள்கிறான் என்று நினைத்து அவனிடம் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தவளுக்கு அடுக்கடுக்காக விஷயங்களில் நொடியில் ஞாபகம் வந்து போக, தூக்கத்திலேயே கணவன் இறந்ததும் அதற்காக தான் துடிதுடித்து போனதும் நினைவு வந்து போக, அந்த அதிர்ச்சியிலேயே அவள் கண்கள் தானாக திறந்து கொண்டது.



அவளை கைகளில் தூக்கியது முதல் அவள் பேசியதை கேட்டுப்படியே நடந்து கொண்டிருந்த கார்த்திகேயன் முகம் முதலில் புன்னகையில் ஆரம்பித்து இறுதியில் புன்னகையை தொலைத்து இறுகி போயிருந்தது.



அவன் கைகளில் தான் இருப்பதை கண்டதுமே தேகம் தூக்கி வாரி போட அதிர்ந்து போன நிவேதா அவன் கைகளில் இருந்து இறங்குவதற்கு போராட, அதற்கெல்லாம் வாய்ப்பை கொடுக்கவில்லை அவன்.



தன் கைகளில் துள்ளிக் கொண்டிருந்தவளை ஒரு நிமிடம் தன் நடையை நிறுத்தி அழுத்தமான ஒரு பார்வை பார்க்க, அதில் நிவேதா தன் முயற்சியை கைவிட்டு வேண்டா வெறுப்பாக கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.



இதற்கு மேலும் தான் இப்படி அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் அவன் ஒரு அடி கூட நகர மாட்டான் என்பது அவளுக்கு நன்றாக தெரியுமே அல்லவா??



"குட்" என்று ஒற்றை வார்த்தையை உதிர்த்தவன் அவளை தனது அறையில் கொண்டு வந்து இறக்கி விட, அவன் இறக்கியதுதான் தாமதம் அவன் கைகளில் இருந்து பட்டாம்பூச்சி போல் பறந்து அப்பாற்பக்கம் சென்றவளை கோபமாக முறைத்து பார்த்தான்.



" இங்க பாருங்க உங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ணிட்டு இப்படி என்னை தொட்டு தூக்குற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க.. உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை என்னை தூக்குறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என்னை தொட முதல்ல நீங்க யாருங்க?" என்று கோபத்தில் படபடக்க, அவளை இறக்கி விட்டதும் அங்கிருந்து செல்லலாம் என்று திரும்பிய கார்த்திகேயன் அவள் பேசிய வார்த்தைகளில் அந்த இடத்திலேயே அழுத்தமாக நின்றான்.



வார்த்தையை விட்டு விட்ட நிவேதாவிற்கு யாரும் இல்லாத சூழலில் அவனிடம் தனியாக சிக்கிக் கொண்டதை நினைத்து எல்லாம் சிறிதும் கவலையில்லை.


வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை பார்த்துவிட்டவளுக்கு இதெல்லாம் ஒரு விஷயமாக தெரியவில்லை..



" ஹவ் டேர் ஆர் யூ?" என்று கோபமாக கத்தியவன் அவள் பக்கத்தில் வந்து நிதானமாக கழுத்துக்கருகில் கையை கொண்டு செல்ல,எது நடந்தாலும் எனக்கு சிறிதும் பயம் இல்லை என்பது போல் அழுத்தமாக நின்று கொண்டிருந்த நிவேதா கண்களில் பயம் என்பது சிறிதும் இல்லை.



அவள் கண்களை உற்றுப் பார்த்தபடியே அவள் கழுத்தில் தொங்கிய தாலியை எடுத்துக்காட்டிய கார்த்திகேயன் " உன்னை தொட எனக்கு எல்லா விதமான உரிமையும் இருக்குடி என் பொண்டாட்டி.. என்னைத் தவிர வேற யாருக்கு அந்த உரிமை இருக்கு? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேற ஒருத்தனை பத்தி என்கிட்ட பேசிக்கிட்டு இருந்த.. தூக்கத்துல நீ பேசிகிட்டு இருந்ததால உன்னை சும்மா விடுறேன்.. இனிமே நான் தான் உன்னோட புருஷன் இத உன் மனசுல நல்லா பதிய வச்சுக்கோ.. என் இஷ்டத்துக்கு தான் நீ இருக்கணும் உன் இஷ்டப்படி இருக்கணும்னு நெனச்ச நான் என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும்.. " என்று மிரட்டலாக சொல்ல, அவன் கைகளில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை விடுவித்த நிவேதா அவனை அழுத்தமாக பார்த்தாள்.



" உனக்கே நல்லா தெரியும் கார்த்திக் உன்னோட மிரட்டலுக்கு எல்லாம் பயப்படற ஆள் நான் கிடையாது.. இந்த மஞ்சள் கயிற என் கழுத்துல நீ கட்டுனதும் என் புருஷன் ஆயிடுவியா? இல்லை என் புருஷனதான் நான உன்னை ஏத்துக்குவேன்னு நினைச்சியா?நெவர் நான் உயிரோடு இருக்க வரைக்கும் அது நடக்காது.. என்ன பொறுத்த வரைக்கும் இந்த ஜென்மத்துக்கு விஜய் மட்டும் தான் என்னோட புருஷன்.. என்னோட குழந்தைக்கு அப்பா விஜய் மட்டும் தான்.. இதை தாண்டி நீயும் வராத நானும் வரமாட்டேன் பொண்டாட்டின்னு உரிமை எடுத்துட்டு பக்கத்துல வந்த அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்.." என்றவள் நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு அவளாக மாறி இருந்தாள்.



அவள் பேசியதை கேட்டு கார்த்திக் கோபம் அதிகமாக பக்கத்தில் இருந்த பூஜாடியை தூக்கி போட்டு உடைத்தவன் " இன்னொருத்தனை மனசுல நினைச்சுகிட்டு என் பக்கத்துல இருக்க நீ எனக்கு வேண்டாம்.. நான் கட்டுன தாலியை கழட்டி கொடுத்துட்டு உன் இஷ்டத்துக்கு நீ எங்க வேணும்னாலும் போகலாம்.. உன்னை கூட்டிட்டு வந்த பாவத்துக்கு உனக்கு விடுதலை தருகிறேன் உன்னை உன்னோட சொந்தக்காரங்க யாரும் தொந்தரவு பண்ணாம நான் பார்த்துக்கிறேன்.. உன் இஷ்டப்படி உன் வாழ்க்கையை வாழு ஆனால் அது நீயா இருக்கிற வரைக்கும் தான் என் பொண்டாட்டியா இருந்தா நான் சொல்றதை கேட்டு தான் ஆகணும் முடிவு உன் கையில தாலிய என் கையில் கழட்டி வச்சிட்டு உன் இஷ்டத்துக்கு எங்க வேணாலும் போ.. " என்றவன் அவளுக்கு முன்பாக கையை நீட்ட, அவனை ஒரு கணம் ஆக்ரோஷமாக பார்த்த நிவேதா கைகள் தாலியை கழட்டுவதற்காக கழுத்துக்கு அருகே செல்ல அவன் உயிரோடு இருக்கும்பொழுது தாலியை கழட்டினால் அதற்கு அர்த்தம் என்ன என்று ஏற்கனவே தெரியும் என்பதால் ஒரு முறை அதை நன்றாக அனுபவித்தவளுக்கு மறுமுறையும் அதை அனுபவிக்கும் தைரியம் இல்லாமல் போக, கைகள் தாலியை இறுக்கமாக பற்றிக் கொள்ள அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டாள்.



' கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிற! உனக்கு கொஞ்சம் கூட கருணை என்பதே கிடையாது.. எனக்கு இப்படி தண்டனைக்கு மேல தண்டனை கொடுத்துக்கிட்டு இருக்கீங்க அப்படி என்னதான் பாவம் செஞ்சு தொலச்சேன்..' என்று கடவுளிடம் சண்டை போட்டவள் அவன் கட்டிய தாலியை கழுத்தில் சுமக்கவும் முடியாமல் கழட்டி அவனிடம் கொடுக்கவும் முடியாமல் பாரமாகி போக, அழுத்தங்கள் பல ஒன்று சேர அப்படியே மயங்கி சரிந்தாள்.



சிறிது நேரம் அவளை பார்த்தபடி நின்ற கார்த்திக் அவள் மயங்கி விழுகவும் கைகளில் பிடித்துக் கொண்டவன் கட்டிலில் கிடத்த, உணர்வுகளை தொலைத்து மயக்கத்திலிருந்த நிவேதாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவன் பெருமூச்சு விட்டான்.



"ப்ளடி.. Xx" என்று சில கெட்ட வார்த்தைகளை சொல்லி வாய்விட்டு திட்டிக் கொண்டவன் எரிச்சலோடு மருத்துவருக்கு அழைத்தான்.



" பிரக்னண்டா இருக்கிறதால அழுத்தம் தாங்க முடியாமல் மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டாங்க.. ரொம்ப ரொம்ப பிரஷர் அதிகமாக இருக்கு இந்த நேரத்துல ரொம்ப சந்தோஷமா இருக்கணும் கார்த்திகேயன் உங்க வைஃப் ரொம்ப பலவீனமா இருக்காங்க.. உங்களுக்கு கல்யாணமான விஷயம் யாருக்கும் சொல்லாமல் வச்சிருக்கீங்க போல இருக்கு.. " என்ற மருத்துவர் அவனை நன்கு தெரிந்தவர் என்பதால் நட்பு ரீதியில் கேட்க, அவரை கோபமாக முறைத்து பார்த்தவன் " எந்த வேலைக்கு வந்தீங்களோ அந்த வேலையை மட்டும் பாத்துட்டு கிளம்புங்க தேவை இல்லாமல் என் விஷயத்தில் மூக்கை நுழைச்சுக்கிட்டு இருக்காதீங்க எனக்கு அது சுத்தமா பிடிக்காது.. " என்று முகத்தில் அடித்தது போல் சொன்னவன் சிகிச்சை பார்த்ததற்கான பணத்தையும் அவர் கைகளில் திணிக்க, அவனை பற்றி நன்கு தெரிந்ததால் மருத்துவர் மயக்கத்தில் இருந்த நிவேதாவை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.



" எல்லாம் உன்னால தான் டி ஒவ்வொரு தடவையும் நா அசிங்கப்பட்டு நிற்பதற்கு காரணம் நீ மட்டும் தான்.. உன்னால் தான் இப்ப எவன் எவனோ என்னை வில்லன் ரேஞ்சுக்கு பார்த்துட்டு போறான்.. உன்னை சொல்லி என்ன பண்றதுன்னு எனக்கு ஒண்ணுமே தெரியல. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு..", என்றவன் கோபமாக அவள் கழுத்தை பிடிக்க போக, அவனை தடை செய்யும் விதமாக அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை எட்டி உதைக்க புடவையினுடே தெரிந்த இடையில் குழந்தையின் அசைவு நன்றாக தெரிய, அதை கண்டு தன் கோபத்தை குறைத்துக் கொண்டான்.



அங்கேயே நின்றால் தன்னையும் மீறி ஏதாவது செய்து விடுவோமோ என்கிற பயத்தில் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினான்.
 



" டாக்டர் என் மகளும் மருமகனும் இப்ப எப்படி இருக்காங்க?"



" கவலைப்படாதீங்க இரண்டு பேரும் நல்லா இருக்காங்க.. அவங்க குடிச்ச விஷயம் அவ்வளவு வீரியமானது கிடையாது.. நேரா நேரத்துக்கு மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்.. " என்ற மருத்துவர் அங்கிருந்து செல்ல, இருவரின் உயிருக்கும் எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் சொன்னதைக் கேட்ட பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டார் தனிகாசனம்.



அந்த குடும்பத்தின் ஆணிவேர் அவர் தான்.



மகளது தலையை வாஞ்சையாக
தடவியபடி பக்கத்தில் அவரது மனைவி மஞ்சுளா அமர்ந்திருக்க, ஏனையோர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



" அப்பா நம்ம ஆசைப்பட்டது மாதிரி ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்திருச்சு.. ஆனால் இந்த பாவி பய அந்த பொண்ணை எப்படி கூட்டிட்டு போனான் என்று நீங்கள் பார்த்தீர்கள் தானே? இவனை நம்பி எப்படி அந்த புள்ளையை நம்ம தனியா விட முடியும் சொல்லுங்க.. போயும் போயும் இந்த மாதிரி ஒரு தருதலையை தவமாய் தவமிருந்து பெத்து எடுத்த இவளை சொல்லணும்.. " என்றார் தனிகாசனத்தின் இரண்டாவது மகன் சோமசுந்தரம்.



கணவன் பேசுவதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் பூங்கோதை சோமசுந்தரத்தின் மனைவி.



" இங்க பாரு சோமசுந்தரம் இப்ப எதுக்கு நீ கோபப்பட்டுகிட்டு இருக்க? ஆயிரம் தான் இருந்தாலும் அவன் இந்த வீட்டு வாரிசு.. என்ன நடந்தாலும் எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் அவன் கண்டிப்பாக அவளை நல்லா பாத்துக்குவான்.. எனக்கு அந்த நம்பிக்கையை முழுசா இருக்கு என் பேரன் எப்பவுமே என்ன பொறுத்த வரைக்கும் நல்லவன் தான்.. அவன் இன்னைக்கு இப்படி மாறி போயிருக்க நம்ம எல்லாரும் ஒரு காரணம் அதை மறந்து இப்படி எல்லாம் பேசாத!"



" அதுக்கு இல்லப்பா.. "


" உன்னை பேச வேண்டாம் அமைதியா இருக்க சொன்னேன் சுந்தரம்.. கொஞ்ச நேரம் மகளும் மருமகனும் ஓய்வெடுக்கட்டும்.. அவங்க ரெண்டு பேரும் எழுந்ததுக்கு அப்புறம் மேற்கொண்டு நடக்க வேண்டிய விஷயத்தை பற்றி பேசலாம்.. " என்றவர் அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர, தொங்கிப்போன முகத்துடன் சுந்தரம் தந்தையை பின் தொடர்ந்தார்.



கணவரின் வார்த்தைக்கு இணங்க மஞ்சுளாவும் மாமனார் வார்த்தைக்கு இணங்கி பூங்கோதையும் வெளியில் ஒன்று சேர வந்தார்கள்.



எப்போதும் போல் பூங்கோதை தன் வேதனைகளை தனக்குள்ளேயே போட்டு பூட்டிக் கொண்டார்.



மூன்று பிள்ளைகளை பெற்று வளர்த்த மஞ்சுளாவிற்கு பூங்கோதையின் வேதனை நன்றாகவே புரிந்தது.



" இங்க பாரு பூங்ககோத.. என் மகன் ஒவ்வொரு தடவையும் உன் மகனைப் பத்தி தப்பு தப்பா பேசும் போது ஒரு அம்மாவா எப்படி மனசு வலிக்குதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. இந்த குடும்பத்தில் இருக்கவங்க சந்தோசம் அழிஞ்சிடக் கூடாதுன்னு உன் பிள்ளையை நீ தியாகம் பண்ணிருக்க.. இங்கே இருக்க யாருக்கும் அது புரிஞ்சாலும் புரியாட்டியும் எனக்கு நல்லாவே தெரியுது கவலப்படாத எல்லாம் கூடிய சீக்கிரம் மாறும்.. " என்ற மாமியாரின் கைகளைப் பற்றி அத்தனை நாட்களாக மனதில் இருந்த துயரம் தீரும் மட்டும் அழுக ஆரம்பத்திருந்தார் பூங்கோதை.




மஞ்சுளாவும் மருமகள் மனதில் உள்ள பாரம் நீங்கும் வரை அழுகட்டும் என்று அவரை சமாதானப்படுத்தாமல் விட்டுவிட்டார்.



இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு கண்களை திறந்த நிவேதா ஏதோ ஒரு புதிய இடத்தில் இருப்பது போல் இருக்கவும் தான் இருக்கும் இடத்தை நன்றாக விழிகளை சுழற்றி ஆராய்ந்து பார்த்தாள்.



" இது எந்த இடம்? நான் எப்படி என் வீட்ல என் ரூம்ல இல்லாம இங்க வந்தேன்.. " என்று யோசித்துப் பார்த்தவளுக்கு தலைவலி பிடித்துக் கொண்டது.


தலையை பிடித்தபடி குனிந்து பார்த்தவள் கழுத்தில் மஞ்சள் கயிறு மின்ன அதை கண்டதும் அடுக்கடுக்காக காலையிலிருந்து நடந்த விஷயங்கள் யாவும் நினைவிற்கு வந்து போனது.



தன் கழுத்தில் கிடந்த மஞ்சள் சரடை இறுதியாக கார்த்தி கேட்டதும் தான் அதற்கு பதில் சொல்ல முடியாமல் மயங்கி விழுந்ததும் ஞாபகம் வர, அவள் கண்களோ கார்த்திகை தேடி அந்த இடம் முழுவதும் வலம் வந்தது.



அவன் அந்த இடத்தில் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு நிம்மதியாக பெருமூச்சு விட்டாள்.



வயிற்றில் இருக்கும் குழந்தை நானும் இங்கு தான் இருக்கிறேன் என்பதுபோல் எட்டி உதைத்து அவளுக்கு சேதி சொல்லியது.



கைகளோ மேடிட்ட வயிற்றை வாஞ்சையாக தடவி கொடுக்க, அவள் பார்வை அந்த இடத்தை முழுவதுமாக வலம் வந்தது.



ஒரு ஆண்மகன் அந்த அறையில் தங்கி இருக்கிறான் என்று நம்ப முடியாத அளவிற்கு அத்தனை சுத்தமாக இருந்தது அந்த அறை.



அவன் எப்பொழுதுமே எதிலுமே சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் தான்.



ஆனால் தன் விஷயத்தில் மட்டும்?? என்று யோசித்துப் பார்த்தவளுக்கு யோசிக்க தலைவலி இன்னும் அதிகமாக ஆரம்பித்தது.



சிறிது நேரத்திற்கு முன்பு கார்த்திக் வாங்கி கொடுத்திருந்த நொறுக்கு தீனிகளும் வயிற்றில் கரைந்து போய் இருக்க தலைவலியோடு சேர்ந்து பசியும் அவளை பிடித்துக் கொண்டது.


பசியோடு சேர்த்து அவள் கணவன்( விஜய்) ஞாபகமும் அவளுக்கு வந்து விட்டது.



" மாமா எனக்கு வேண்டாம் ரொம்ப வாந்தி வருது.. வயித்துல இருக்க உங்க பையன் என்னை ரொம்ப பாடா படுத்தி வைக்கிறான்.. ப்ளீஸ் மாமா இதுக்கு மேல எனக்கு சாப்பாடு வேண்டாம்.. " என்று விஜய்யிடம் கெஞ்சி கொண்டிருந்தாள் நிவேதா.



அவள் சொல்வதை எல்லாம் சிறிதும் கேட்காத விஜய் அவளுக்கு பிடித்தது போல அடுப்படியில் சமைத்துக் கொண்டிருக்க, அந்த வாசனை கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்து நிவேதாவிற்கு ஒப்புக் கொள்ளாமல் வாந்தி வந்தது.



"உவே" என்றவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுப்பதற்காக ஓட, சமைத்துக் கொண்டிருந்ததை பாதியிலேயே விட்டுவிட்டு அவளை பின்தொடர்ந்து வந்த விஜய் அவள் தலையை வாந்தி எடுப்பதற்கு வாகாக பிடித்துக் கொண்டான்.



முழுவதுமாக அவள் வாந்தி எடுத்து ஓய்ந்து போக, கையில் எலுமிச்சை சாறுடன் வந்தார் அவளது அன்னை தேவி.



" இந்தாப்பா இதை நீயே அவகிட்ட குடு நாங்க கொடுத்தா உன் பொண்டாட்டி குடிக்க மாட்டாள்.." என்றவர் சலித்துக் கொண்டார்.


" அத்தை என்ன இது? எதுக்காக தேவையில்லாமல் நிவேதா மேல இப்ப கோவப்பட்டு இருக்கீங்க.. அவளுக்கு உங்க கை பக்குவம் ரொம்ப பிடிக்கும்.. அது உங்களுக்கும் ரொம்ப நல்லா தெரியும் பாவம் அடிக்கடி வாந்தி எடுத்து வாந்தி எடுத்து ரொம்ப டயர்டா இருக்கா.. " என்றவன் குரல் கவலையை பூசிக்கொள்ள, எந்த தாய்க்குத்தான் தன் மருமகன் மகள் மீது இத்தனை அன்பு வைத்திருந்தால் பிடிக்காமல் போகும்?


" இங்கே பாரு விஜய் கல்யாணம் ஆனா ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கிற சந்தோஷமான அதே நேரம் கொஞ்சம் உடலை போட்டு படுத்துற விஷயம் தான் இது! இதுக்கெல்லாம் போய் கவலைப்பட்டுக்கிட்டு இருக்காம அவளை இந்த ஜூஸை குடிக்க வைக்கிற வழியை பாரு.. " என்றவர் நாகரீகமாக இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு செல்ல, அவரது செயலில் சின்ன புன்னகை உண்டானது விஜய் முகத்தில்.



நிவேதாவை தன் மார்போடு அப்படியே சாய்த்துக் கொண்டவன் அவள் வாயை துடைத்து சுத்தப்படுத்திவிட்டு எலுமிச்சை சாறை அவள் பக்கத்தில் கொண்டு போக, அவள் முகமோ சுருங்கி போனது.


" இப்பதானே வாந்தி எடுத்து முடிச்சேன் மாமா மறுபடியும் வாந்தி எடுக்க என்னால முடியாது.. ப்ளீஸ் எனக்கு இது ரொம்ப அதிகம் காலைல நான் கேட்க கேட்க உங்க இஷ்டத்துக்கு நீங்க தோசை சுட்டு கொடுத்தீங்க அதுக்கு இப்ப நான் அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன்.. நான் தான் நல்லா சாப்பாடு கேட்டுகிட்டு இருக்கேன்னு உங்க இஷ்டத்துக்கு உங்களை யார் எனக்கு சாப்பாடு செஞ்சு கொடுக்க சொன்னது? இப்ப பாருங்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்.. " என்று காலையில் அவன் ஊத்திய தோசைகளை நன்றாக சாப்பிட்டுவிட்டு இப்பொழுது அவனையே குறை சொல்லிக் கொண்டிருந்தாள் அவனது செல்ல மனையாள்.



அவளது சீண்டலில் கூட அவள் மீது அவனுக்கு பொய்யான கோபம் கூட வரவில்லை.



சிறு வயது முதலே அவளை அவன் வளர்த்ததால் என்னவோ அவள் மீது இப்பொழுது வரை ஒரு சின்ன கோபம் கூட அவனுக்கு வந்தது இல்லை.



" கண்ணம்மா நீ இப்படி வயிறு நிறைய சாப்பிடும் போது என்னால எப்படி அதை தடுக்க முடியும் சொல்லு? "


" போங்க மாமா உங்களுக்கு எப்ப பாத்தாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கிட்டே இருங்க.. என்னால சுத்தமா முடியல மாமா ப்ளீஸ்.. "



" என் செல்ல கண்ணம்மா தானே! மாமா என்ன சொன்னாலும் கேட்பீங்க தானே! மாமா இப்போ உங்களுக்கு இந்த ஜூஸை குடுப்பேனா நீங்க கண்ணை மூடிக்கிட்டு மூக்கை பொத்திகிட்டு ஜூசை கடகடவென குடிச்சிட்டு மாமா மேல வாந்தி வந்தாலும் எடுப்பீங்களாம்.. " என்றவன் அவள் மறுத்து பேசுவதற்கு இடம் கொடுக்காமல், அவளுக்கு சிறு பிள்ளைக்கு பால் புகட்டுவது போல் ஜூசை குடித்து முடிக்க அவன் சொன்னது போலவே அவளுக்கு உள்ளே போன வேகத்தில் வெளியில் வந்தது.



வாந்தி வந்த வேகத்தில் அவன் மீது எடுத்து வைக்க, ஒரு சின்ன முகசுளிப்பு கூட இல்லாமல் அவளை தன்னை விட்டு நகர்த்தி விட்டவன் " இந்தாடா கண்ணம்மா வாயை கொப்பளிச்சுக்கோ.. நான் போய் டிரஸ் மாத்திகிட்டு வரேன் இல்லன்னா இந்த வாடையும் சேர்ந்து உனக்கு வாந்தி வர மாதிரி இருக்கும்.." என்றவன் அவளை சுத்தப்படுத்தி விட்டே தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.



இப்படி அவளை பொழுதெல்லாம் ஏதாவது சொல்லி சொல்லி அவளை பசியில் வாட விடாமல் ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பான்.



அதை எல்லாம் நினைத்து பார்த்தவளுக்கு இப்பொழுது துக்கம் நெஞ்சை அடைத்தது.



யார் கண் பட்டதோ அவர்கள் மீது..நன்றாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் விதி கோரமாக விளையாடிவிட்டு சென்று இருந்தது.



பாவம் பெண்ணவளுக்கு தெரியவில்லை.



அவள் வாழ்க்கையில் இதுவரை பட்ட துன்பங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை எனுமளவிற்கு இப்பொழுது இருப்பவன் அவளை பாடாய்படுத்தி வைக்க போகிறான் என்பது!


பழைய சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவள் தன் சிந்தனையை கலைந்து விட்டு
அந்த அறையை விட்டு வெளியில் வர, அங்கிருந்த மேஜையில் அமர்ந்து நன்றாக சாப்பாடு உண்டு கொண்டிருந்தான் கார்த்திகேயன்.



அவனது செயலில் அவளுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.



தனக்காக வேண்டாம் என்றாலும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவாவது ஒரு வார்த்தை சாப்பிடுகிறாயா? என்று கேட்க கூட தோணாமல் தனியாக அமர்ந்து அவன் சாப்பிடுவதை கண்டு மனதில் பாரமேறி போனது.



அதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் இப்பொழுது உணவு கிடைக்குமா?



அனைத்து விஷயங்களிலும் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருப்பவள் குழந்தை என்று வரும் பொழுது மட்டும் தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டாள்.



சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் முன்பாக வந்து நின்றவள் அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் " எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு வேணும்.. என்னோட குழந்தை ரொம்ப நேரம் பசி தாங்காது.. " என்று மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் சொல்ல, அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை அவன்.



அவன் செயலில் அவளுக்கு கோபம் வந்தாலும் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள்.



இனிமேல் இவனிடம் என்ன கேட்பது? என்று அவனுக்கு எதிர்ப்புறமாக தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிடுவதற்காக அமர்ந்தாள்.



அவனும் அவளுக்கு மிகவும் பிடித்தமான ரச சாதம் உருளைக்கிழங்கு செய்து சாப்பிட்டு கொண்டிருக்க, அதை கண்டு அவள் பசி இன்னும் அதிகமானது.



' கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் எப்படி சாப்பிட்டுகிட்டு இருக்கான் பாரு இவன் எல்லாம் மனுசனே இல்ல மிருகம் மிருகம்..' என்று மனதுக்குள்ளையே திட்டிக் கொண்டவள் பாத்திரத்தில் இருந்த சாதத்தை எடுத்து தட்டில் போடுவதற்கு உள்ளாக அந்தரத்தில் பறந்து சென்றது அந்த பாத்திரம்.



பாத்திரம் விழுந்த வேகத்தில் அதில் இருந்த சோறு முழுவதும் வீடு முழுவதும் சிதறியது.



" இடியட் ஒரு பிச்சைக்காரி நீ எனக்கு நிகராக உட்கார்ந்து சாப்பிடுற? யார் கொடுத்த தைரியம் உனக்கு உன் இஷ்டத்துக்கு எது வேணாலும் பண்ணுவியா! எப்போ உன் கழுத்துல நான் கட்டுன தாலியை கழட்டாமல் மயக்கம் போட்டு விழுந்தியோ அப்பவே நீ என்னோட அடிமை.. இனிமே உன் இஷ்டத்துக்கு எதுவும் பண்ண முடியாதுடி என் பொண்டாட்டி.. ரொம்ப பசிக்குதுன்னு சொன்னேன்ல இந்த வீடு கிளீன் பண்ணி ரெண்டு நாள் தான் ஆகுது சோ கீழ கிடக்குற சோறு எல்லாத்தையும் பொறுக்கி நல்லா தின்னு உன் பசியை தீர்த்துக்கோ.. அப்படியே இந்த பாத்திரம் வீடு எல்லாத்தையும் கிளீன் பண்ணி வச்சிடு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் வெளியில் போயிட்டு வந்துடுவேன்.. தப்பிக்கலாம்னு நினைக்காத வெளியில பூட்டிட்டு தான் போவேன்.." என்றவன் சிறிதும் மனசாட்சி இல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்று செல்ல, அவனது செயலில் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தாள் பாவை.



அவன் கெட்டவன் என்பது தெரியும் அவளுக்கு.



ஆனால், இவ்வளவு கேடு கெட்டவன் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது.



அவளது சூழ்நிலை எல்லாம் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தெரியுமா என்ன?



அவள் வயிற்றில் எட்டி உதைத்து தன் பசியை வெளிப்படுத்த, கண்கள் கலங்கி போக வேறு வழி இல்லாமல் அவன் சொன்னது போலே தட்டில் சோறை அள்ள ஆரம்பித்திருந்தாள்.



இனி அவளது நிலைமை தான் என்னவோ??





 
அத்தியாயம் மூன்று:



தன் நிலைமையை நினைத்துக் கொண்டு கண்ணீருடன் நிவேதா கீழே கிடந்த சோற்றுப் பருக்கைகளை அள்ளி தன் தட்டில் வைத்தவள் கண்ணீருடன் அதை சாப்பிடுவதற்காக தன் வாயருகே கொண்டு செல்ல, அதை தட்டி விட்டது இரண்டு கரங்கள்.



கீழே விழுந்த தட்டை பார்த்தவள் இந்த உணவை கூட தன்னை சாப்பிட விடமாட்டானா? என்ற கழிவிரக்கம் அதிகமாக சேர அது கோபமாக உருமாறியது. நிமிர்ந்து அதே கோபத்துடன் அவனை முறைத்து பார்த்தவள் " உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா? நீங்க சொன்னது போல கீழ கிடந்த சோத்தை எடுத்து சாப்பிட கூட என்னை விட மாட்டீங்களா? எதுக்காக என்னை இவ்வளவு டார்ச்சர் பண்றீங்க? " என்றவளுக்கு எந்த விதமான பதிலும் சொல்லாதவன் தன் கையில் வைத்திருந்த புதிய சாதம் நிறைந்த தட்டை நீட்டினான்.


அவன் நீட்டிய தட்டையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் எங்கே இதையும் பிடுங்கி விடுவானோ என்று பயத்தில் தட்டை அவன் கைகளில் இருந்து பறித்தவள் அவசர அவசரமாக சாப்பிட ஆரம்பித்தாள்.



அவள் சாப்பிடும் வேகத்தில் புரை ஏறியது.



சாப்பிடுவதற்கு அவள் கஷ்டப்படுவதை கண்ட கார்த்திக் அவள் தலையை தட்டி நீரை எடுத்து கொடுக்க, அவனை உலகத்தில் எட்டாவது அதிசயம் போல் பார்த்து வைத்தாள் நிவேதா.



" என்னை வேடிக்கை பார்த்தது போதும் முதல்ல சாப்பிட்டு முடி.. " என்றவன் அவளுக்கு சாப்பிட அவகாசம் கொடுத்து விட்டு சற்று தள்ளி அமர்ந்தான்.



அவள் சாப்பிட்ட உணவு போதுமானதாக இருக்க, ஒரு நிம்மதியான பெருமூச்சுடன் தட்டில் கை கழுவி விட்டு கார்த்திகை கோபமாக நிமிர்ந்து பார்த்தாள்.



" நீ எல்லாம் நிஜமாகவே ஒரு மனுஷன் தானே? சாப்பிடுற சாப்பாட்ட தட்டி விட்டுட்டு இப்ப சாப்பாடு கொடுக்கிற! இப்ப சாப்பாடு கொடுக்குற நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அதே சாப்பாட்ட நான் சாப்பிடும்போது எதுக்கு தட்டி விட்ட? "



" ஒருத்தவங்க சாப்பிட்டுகிட்டு இருக்கும்போது அதுவும் பசியில ரொம்ப துடி துடிச்சு யாருக்கும் தெரியாம கெட்டுப் போன சாப்பாடா இருந்தாலும் பரவாயில்லைன்னு
சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது அவங்கள சாப்பிட விடாம அடுத்தவங்க கிட்ட மாட்டி விடும்போது எப்படி இருக்கும்னு நீ தெரிஞ்சுக்க வேண்டாம்? " என்றவன் சத்தம் சிறிதும் போடவில்லை.



ஆனால் அவன் கொடுத்த அழுத்தத்தில் அவளுக்கு தேகம் நடுங்கியது.



" தென் நீ செஞ்ச ஒவ்வொரு தப்பையும் அதுக்கான தண்டனையும் இப்படி உனக்கு நான் ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பேன்.. பழிவாங்குறதுல இது ஒரு புதிய அத்தியாயம் உன்ன கஷ்டப்படுத்துற நானே உனக்கு மருந்தாவும் இருப்பேன்.. " என்றவன் அந்த இடத்தை விட்டு அகன்றான்.



அவன் சொன்னதை கேட்ட நிவேதாவுக்கு கண்கள் கண்ணீர் தன்னையும் அறியாமல் வந்தது...


அவனிடத்தில் எப்படி தன்னை விளக்கிச் சொல்வாள்?



சிறிய வயதில் அவள் அறியாமல் செய்த தவறுக்கு எல்லாம் சேர்த்து வைத்து இப்பொழுது அவன் தண்டிக்கும் பொழுது அவளுக்கு மனது ரணமாக வலித்தது.


" எதுக்காக என்னை விட்டுட்டு போனீங்க மாமா? இந்த கஷ்டத்தை எல்லாம் நான் அனுபவிக்க கூடாதுன்னு தானே என்ன உங்க பக்கத்திலேயே வச்சிருந்தீங்க.. நான் இவ்வளவு கஷ்டப்படுவேன்னு தெரிஞ்சும் என்னை விட்டுட்டு போன உங்களை நான் என்னன்னு சொல்வேன் மாமா.. இனிமே நான் என்ன பண்ண போறேன்.. " என்றவளுக்கு விஜயின் ஞாபகம் அதிகமாக வர வாய்விட்டு புலம்பி கொண்டாள்.


பழைய ஞாபகத்தில் இருந்தவளுக்கு எதுவோ உடையும் சத்தம் கேட்க தன் சிந்தனை கலந்து அதிர்ச்சியாக சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தாள்.



அங்கு கார்த்திக் தான் ஆவேசமாக நின்று கொண்டிருந்தான்.



" உன்கிட்ட நான் நிறைய தடவை சொல்லிட்டேன்.. உன்னோட புருஷன் இனிமே நான் மட்டும்தான் என் பொண்டாட்டி மனசுல நான் மட்டும் தான் இருக்கணும் வேற ஒருத்தனை நினைத்துக்கொண்டு இருந்தா அதுக்கு அர்த்தம் என்னன்னு உனக்கு நல்லாவே தெரியும் இதுக்கு மேல நீ அவனை பற்றி யோசிச்சுக்கிட்டு இருந்த அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.. " என்றவன் கோபமாக மறந்துவிட்ட மொபைல் போனை எடுத்துக் கொண்டு சென்றான்.



அந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டிருந்த நிவேதாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.


தன் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு அவன் சொன்னது போலவே வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்க, ஓரளவிற்கு அவளால் பழைய விஷயங்களை மறந்து விட்டு சிறிது நேரம் நிம்மதியாக இருக்க முடிந்தது.



அவள் வேலைகளை முடிக்கும் தருணம் சரியாக உள்ளே வந்தான் அவன்.



வீடு முழுவதும் அவன் சொன்னது போலவே சுத்தமாக இருப்பதை கவனித்து விட்டு அவளை ஆச்சரியமாக ஒரு பார்வை பார்த்தவன் " பரவாயில்லையே நான் கூட இந்நேரம் உன் முன்னாள் புருஷன நெனச்சுக்கிட்டு எந்த வேலையும் பார்க்காமல் மறுபடியும் உட்கார்ந்து ஊளை கண்ணீர் வடிச்சுக்கிட்டு இருப்பன்னு நெனச்சுக்கிட்டு வந்தேன்.. எல்லா வேலையும் முடிச்சு நான் சொன்னது போல வீட்டை நீட்டா வச்சிருக்க குட் இதே போல ஒவ்வொரு தடவையும் நான் சொல்றதை கேட்டு சமத்தா இருந்தா பிரச்சனை உனக்கும் உன் வயித்துல வளர உன்னோட குழந்தைக்ககும் கிடையாது.. " எனவும் அவனை முறைத்து பார்த்தாள் நிவேதா.



" தேவையில்லாமல் எதையும் பேசிக்கிட்டு இருக்காத கார்த்திக்.. நான் விஜய்யை எந்த அளவுக்கு காதலிச்சேன்னு உனக்கு நல்லா தெரியும்.. அவர் இப்ப இந்த உலகத்துல வேணா இல்லாம இருக்கலாம் ஆனால் அவரோட நினைவுகள் என் ரத்தத்தில் கலந்தது அத எப்பவும் என்கிட்ட இருந்து உன்னால பறிக்க முடியாது.. நீ பேசுறதுக்கு எல்லாம் நான் அமைதியா இருக்கேன்னு உன் இஷ்டத்துக்கு பேசுற வேலை எல்லாம் இதுவே கடைசியாக இருக்கட்டும்.. நீ சொன்னது போல உன் வீட்ல இருக்க நான் ஒன்னும் உன்னோட அடிமை கிடையாது.. நான் படிச்சிருக்க படிப்புக்கு என்னால என்னையும் பார்த்துகிட்டு என் குழந்தையையும் நல்லபடியா வளர்க்க முடியும் என் மாமாவுடனான நினைவுகள் என் வாழ்க்கை முழுசுக்கும் போதும் என்னோட குழந்தையை வளர்த்துக்கிட்டு என் வாழ்க்கை முழுசையும் நான் வாழ்ந்து முடிச்சிடுவேன் யாரையும் அண்டி பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.. இப்படி நீ பேசுறது இதுவே கடைசி தடவயா இருக்கட்டும்.." என்றவள் கோபத்தில் அவன் முன்பாக ஒரு கையை நீட்டி பேச, அந்த விரலை அழுத்தமாக பிடித்தவன் விடவில்லை.



அவன் பிடித்த வேகத்தில் நிவேதாவிற்கு வலி உயிர் போனாலும் பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டாள்.



" வலிக்குதுன்னு சொன்னா நம்ம வலியை வெளியில் சொல்லிடனும்.. இந்த மாதிரி என்கிட்ட பேசாதன்னு பல தடவை நான் உன்னிடம் சொல்லிட்டேன் மறுபடியும் மறுபடியும் நீ பண்ண தப்ப மீண்டும் மீண்டும் பண்ணிக்கிட்டே இருக்க! எந்த ஒரு புருஷனும் தன் பொண்டாட்டி மனசுல தான் மட்டும் தான் இருக்கணும் ஆசைப்படுவாங்க நான் ஆசைப்படுறதுல என்ன தப்பு? என் கையை விட்டு நீ ஒரு தடவை போயிட்ட அப்ப நான் அமைதியா உன்னை விட்டுட்டு விலகிட்டேன் மறுபடியும் என் கைக்கு கிடைச்ச உன்னை விடுவேன்னு நினைக்காத! நீ என்னோட பொண்டாட்டி எனக்கு மட்டும்தான் பொண்டாட்டி.. என்னை தவிர வேற யாரோட ஞாபகமும் உனக்கு வரக்கூடாது.. மறுபடியும் உனக்கு கடைசியா ஒரு வாய்ப்பு தரேன் நான் கட்டுன தாலியை கழட்டி கொடுத்துட்டு போயிரு.... இல்லன்னா எனக்கு பொண்டாட்டியா வாழ்ற வழியை பாரு.. " என்றவன் சாதாரணமாக அவளைக் கடந்து சென்றான்.



அவன் பேசியதை கேட்ட நிவேதாவிற்கு மீண்டும் மயக்கம் வருவது போலிருந்தது.



அவன் சொன்னது போலவே அவன் கட்டிய தாலியை கழட்டி கொடுத்துவிட்டு சென்று விடலாமா? என்று அவள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம், அவளிடம் அலைபேசியை திணித்து சென்றான் கார்த்திக்.



வலுக்கட்டாயமாக தன் கைகளில் போனை வைத்து விட்டு செல்பவனை முறைத்து பார்த்தவள் அவனை விடுத்து போனில் யார் என்று பார்க்க, பூங்கோதை தான் அழைத்திருந்தார்.



அவரிடம் பேசலாமா? வேண்டாமா? என்று மனம் பட்டிமன்றம் செய்ய, அதற்குள் பூங்கோதை " அம்மாடி நிவேதா" என்று பத்து முறைக்கும் மேல் அவள் பெயரை சொல்லி அழைத்து இருப்பார்.



இறுதியில் வேறு வழி இல்லாமல் போனை காதில் வைத்தாள்.



" சொல்லுங்க அத்தை எப்படி இருக்கீங்க? "



" எனக்கு என்னமா நான் நல்லாத்தான் இருக்கேன்.. எப்படியும் இந்நேரத்துக்கு உன்னை நான் பெத்த பிள்ளை பாடா படுத்தி எடுத்துகிட்டு இருப்பான்னு எனக்கு தெரியும்.. யார் சொல்றாங்கன்னு கேட்காத டா உன்னோட அத்தை நான் சொல்றேன்.. வலுக்கட்டாயமா அவன் கட்டுன தாலியோட உனக்கு பிடிக்கலைன்னா வாழ வேண்டிய அவசியம் இல்லை.. உனக்கு ஒரு துணை தேவைன்னு தான் இங்கே இருக்க எல்லாரும் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணாங்க.. எல்லாத்துக்கும் மேல என் பிள்ளை எப்படி பட்டவன்னு எனக்கப்புறம் இந்த வீட்ல உனக்கு மட்டும் தான் தெரியும்.. கடந்த 15 வருஷத்துல என் பிள்ளை ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்.. அதுதான் அவன் தலைவிதினா அப்படியே இருந்துட்டு போகட்டும்.. இதுவரைக்கும் எத்தனையோ தடவை நான் போன் பண்ணி இருக்கேன் அப்போல்லாம் ஒரு தடவை கூட எடுத்து பேசாதவன் இப்ப முதன்முதலா நீ அங்க இருப்பதால் தான் போனை எடுத்து அவன் கூட பேசாம உன் கிட்ட தான் பேசுவேன்னு தெரிஞ்சு உன்கிட்ட போனை கொடுக்கிறான்.. உனக்கு எப்பவுமே நாங்க துணையாக இருக்கோம் இப்ப கூட ஒன்னும் இல்லை சொல்லுமா அவன் உன்னை ரொம்ப கொடுமை படுத்தினான்னா நானே வந்து உன்னை கூட்டிட்டு வரேன்.. " என்றவர் குரல் முதலில் தன்னால் தன் பிள்ளையை இந்தக் கோலத்தில் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ஆரம்பித்து இறுதியில் அழுகையில் முடிந்தது.



இவளது பதிலுக்காக பூங்கோதை காத்திருக்க, அவர் சொன்னது போலவே தன்னால் அவன் அனுபவிக்கும் கஷ்டங்களை இன்று வரை உணர்ந்து அதற்காக மனதுக்குள் தவித்துக் கொண்டிருந்தவள் அவனை ஏற்கவும் முடியாமல் தன் மாமனை மறக்க முடியாமல் மனதுக்குள் தவித்து போனவள் இறுதியில் ஒரு முடிவு எடுத்தவளாக " இங்க பாருங்க அத்தை மாமா கூடவே என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு.. நான் பண்ணுன அந்த ஒரே ஒரு தப்புக்கு பரிகாரமா உங்க பையன் கூடவே காலம் முழுக்க இருந்து தண்டனை அனுபவிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.. இனிமேலாவது என் வாழ்க்கையில் நீங்க யாரும் தலையிடாமல் என்னை விட்டுடுங்க ப்ளீஸ் என்னையும் என் குழந்தையை பார்த்துக்க எனக்கு தெரியும்.. " என்றவள் பதிலுக்கு காத்திருக்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.



எப்பொழுதோ செய்த தவறுக்கு இப்பொழுது தண்டனை அனுபவிக்க அந்த நிமிடம் முடிவு செய்தாள்.



அந்த தண்டனையின் முடிவில் அவளது குழந்தைக்கு காத்திருப்பது என்னவென்று அறியாமலேயே தன்னை பற்றி மட்டும் அந்த நிமிடம் சிந்தித்தவள் குழந்தையை ஏனோ மறந்து போனாள்.



போனை கட் செய்த நிவேதா மனதுக்குள் எதை எதையோ அந்த நிமிடங்கள் யோசித்து முடிவு எடுத்திருந்தாள்.



சிறிது நேரம் அவளுக்கு தனிமை கொடுத்து விட்டு சென்றிருந்த கார்த்திக் மீண்டும் அவளிடம் வந்திருந்தான்.



" என்ன சொன்னாங்க உங்க அத்தை? இவன்கிட்ட இருந்து உன்னால ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க முடியாது என்கூட வந்துடுன்னு சொன்னாங்களா? " என்றவனை அவள் ஆச்சரியமாக பார்க்க, அவள் பதில் சொல்லாமலேயே அவள் கண்கள் வழியாக தான் சொன்னதை தான் தன் தாய் சொல்லி இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவன் மனம் வலித்தாலும் எப்போதும் போல அது வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவளிடம் வில்லன் சிரிப்பு ஒன்றை சிரித்து வைத்தான்.



" உன்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லிட்டு போய் ஒரு மணி நேரத்துக்கும் மேலாயிடுச்சு.. இதுக்கு மேல கண்டிப்பா உனக்கு டைம் தர மாட்டேன் இப்பவும் சொல்றேன் கடைசியா சொல்றேன் என் கூட உன்னால இருந்து வாழ முடியாது.. என் கூட நீ வாழும் போது நரகத்தையும் அனுபவிப்ப சொர்க்கத்தையும் அனுபவிப்ப எனக்குன்னு யாரு வேண்டாம்னு நான் ஏற்கனவே முடிவு எடுத்தது போல தனியாக இருந்துக்கிறேன்.. உன்னோட குழந்தைக்கும் உனக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு எல்லாத்தையும் பண்ணித் தரேன் ஒழுங்கா நான் கட்டின தாலியை கழட்டி என் மூஞ்சில விட்டு எறிஞ்சிட்டு போயிடு!" என்றவனை விசித்திரமாக பார்த்தாள் நிவேதா.



ஒரு நேரம் தேனி போல் கொட்டுபவன் மறுநிமிடம் தேன் தடவியது போல் பேசினால் அவளும் என்னதான் செய்வாள்??



ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்ட நிவேதா அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தவள் " இங்க பாரு கார்த்திக் நான் செஞ்ச தப்பு எல்லாத்துக்கும் பிராயசித்தம் பண்ண நினைக்கிறேன்.. என்ன பாவம் பண்ணுனேனோ இன்னைக்கு என் சந்தோசம் என் மாமான்னு எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிறேன்.. அவர் என்னை விட்டுட்டு போய் ரொம்ப நாளாச்சு.. என்னை பொருத்தவரை அவர் உடம்பு மட்டும்தான் அழிந்து போய் இருக்கு ஆன்மா என் கூட மட்டும்தான் இருக்கு.. கண்டிப்பா இந்த ஜென்மத்துல என்னால என் மாமாவை தவிர வேற யாரையும் ஏத்துக்க முடியாது.. அதே நேரம் உன்னைத் தவிர வேற யாராலும் என்னை நல்லபடியா பார்த்துக்கவும் முடியாதுன்னு எனக்கு தெரியும்.. நான் இந்த வீட்ல தான் இனிமே இருக்க போறேன் ஆனா உனக்கு பொண்டாட்டியா இல்லை உன்னோட அத்தை மகளாக உன்னோட சின்ன வயசு தோழியா! என்னை கஷ்டப்படுத்தி உனக்கு சந்தோஷம் கிடைத்ததுன்னா கண்டிப்பா எனக்கும் சந்தோஷம்தான்.. உன் கூட இந்த வீட்ல நான் சும்மா இருந்தா அதுக்கு வெளியில வேற அர்த்தம்.. அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் இந்த தாலி என் கழுத்துல இருக்கும்.. " என்றவள் அவன் மொபைல் போனை அவன் கரங்களிலேயே திணித்துவிட்டு வீட்டிற்கு பின்னால் இருந்த தோட்டத்திற்கு சென்று விட்டாள்.



அவள் பேசியதை கேட்டு இப்பொழுது அதிர்ச்சியாக நிற்பது கார்த்திக்கின் முறை ஆயிற்று.



சில நிமிடங்களில் தலையை குலுக்கி கொண்டவன் வாய்க்குள் எதையெதையோ முனுமுனுத்துக் கொண்டான்.



' என் வாழ்க்கையில் இத்தனை நாள் இல்ல பல வருஷமா தவிச்சுக்கிட்டு இருந்த ஒன்னு இப்ப எனக்கு கிடைச்சிடுச்சு.. கண்டிப்பா நீயே என்னை உன் புருஷனா ஏத்துக்குவ உன் வயித்துல வளர உன் குழந்தைக்கு அப்பான்னு சொல்லுவ.. என்னை நீ உன் புருஷனா ஏத்துக்கலாட்டியும் பரவாயில்லை மை டெடி பியர் என் கூடவே நீ இருந்தால் மட்டுமே போதும்..' என்றவன் மனம் நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகு சாந்தம் கொண்டது.



அதே நேரம் அங்கிருந்த தோட்டத்திற்கு வந்த நிவேதா மனமோ உளைக்கலமாக கொதித்துக் கொண்டிருந்தது.


' கண்டிப்பாக நான் உங்களுக்கு துரோகம் பண்ண மாட்டேன் மாமா.. உங்களுடைய ஆத்மா இங்கே என் பக்கத்துல தான் இருக்கும் என்று எனக்கு தெரியும்.. நீங்க சொன்னது மாதிரி கார்த்திகேயனுக்கு நான் ஒரு வாய்ப்பு கடைசி தடவையா கொடுக்கிறேன்..' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் எப்போதும் போல் விஜயின் நினைவுகளில் மூழ்கி போனாள்.


அவள் தன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாள் என்கிற நிம்மதியில் அவனும், தான் செய்த தவறுகளுக்கு பரிகாரமாக அவனுடன் இருக்க அவளும் முடிவு எடுத்து இருக்க விதி அவர்களைப் பார்த்து கோரமாக சிரித்தது.



இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்த சந்தோஷத்தில் அவர்கள் மொத்த குடும்பமும் ஒரு கவலை தீர்ந்த சந்தோஷத்தில் திளைத்திருந்தார்கள்.


அதே நேரம், எந்த இடம் என்றே தெரியாத அந்த ஊரில் ஒரு கொட்டாயில் சுயநினைவு எதுவும் இல்லாத விஜயின் இதழ்களோ " நிவேதா நிவேதா" என்று மனைவியின் பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருக்க, அவனை கவலையாக பார்த்துக் கொண்டிருந்தார் அவனை காப்பாற்றிய அந்தப் பெண்.



இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவன் உயிரோடு வந்த பிறகு அங்கு இருப்பவர்களின் நிலைமை??
 
Status
Not open for further replies.
Top