வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு கதை திரி

Status
Not open for further replies.
காணும் போதே கரைந்த நிலவு

அத்யாயம் 💕1

உலக படைப்பு என்பது ஒரு விசித்திரமான ஒன்று , எவனோ ஒருவன் கண்தெரியா இடத்தில்
இப்பூவியில் பிறந்த பிறப்புகளை மட்டுமல்ல ,காலத்தையும் ஆட்டு வைக்கின்றான்.

பகல் வருவதும், பின் இரவாவதும் இப்புவியில் ஒரு வாடிக்கையாக நடைபெற்று கொண்டிருக்கிறது .

நாளை என்னும் சொல்லில் மறைந்திருப்பது என்னவோ! சந்தோஷமா, துக்கமா, வெற்றியோ ,தோழ்வியோ ,வெகுமதியோ இழப்போ , எதுவும் மறைந்திருக்கலாம், அந்த நாளை என்ற சொல்லுக்குள்.

வாழ்க்கை என்பது அவிழ்க்கமுடியாத புதிர், ஒன்றை அவிழ்க்க மற்றொன்று புதிதாக உருவாகிவிடும்.

அதே போல் தான் வினய் வாழ்விலும், அவன் வாழ்க்கையில் எது நடந்ததோ , எது நடந்து கொண்டிருக்கிறதோ,எது நடக்கவிருக்கிறதோ அது அனைத்தும் புதிரே...

காலம் யாருக்கும் நிற்காமல் தன் வேலையை செவ்வனே செய்தது.

நிலவுமகள் கரைந்து, கதிரவன் உதயமானான்.


அலாரம் விடாமல் அடித்து கொண்டிருந்தது இப்படி , "டேய், எரும எந்திரிடா, டைம் ஆச்சு" என அலாரத்தில் ஒரு குரல் ஒலித்து கொண்டிருந்தது.

மெல்ல தன் வலது கையை வைத்து தான் படுத்திருந்த படுக்கையில் தேடினான் , அது அவனது தலையணை அடியில் இருந்தது ,மெல்ல தடவி தன் போனை எடுத்தவன் அதனை ஆப் செய்துவிட்டு, எழுந்து அமர்ந்தான்,கண்களை மூடியபடியே.

எழுந்து அமரந்தவன்,தன் இருகைகளையும் முகத்தில் வைத்து தேய்த்தபடியே ,மெல்ல கண்களை விரித்தவன் எதிரே இருந்த சுவரை கண்டவுடன் அவன் இதழில் புன்னகை பிறந்தது.

அவன் முகத்தில் புன்னகை பிறக்க வைத்த அந்த அதிசயம் என்னவென்றால்,

மாசறு இல்லா அந்த வெள்ளை சுவற்றில் , அவன் கண்படும் திசையில் மாட்டி இருந்தது பிரேம் செய்யப்பட்ட ஒரு சின்ன மயில் பீலி.

மயில் பீலியா , ஆம் மயில் பீலி தான் அது தான் அவன் உயிர்.

அந்த உயிரை கண்ட அந்நொடி மட்டும் தான் அவன் முகத்தில் புன்னகை
ஒளிர்ந்தது, அடுத்த நொடி தன் முகத்தை இறுக்கமாக வைத்தவன்.

தன் மொபைலை ஆன் செய்து அதில் நேரத்தை பார்க்க, அது மணி எட்டை காட்டி இருந்தது.

அதை பார்த்துவிட்டு, "ஓ காட் என்ன இவ்வளவு நேரம் கழித்து எந்திரிச்சு இருக்கேன்,நேத்து கொஞ்சம் ஓவரா போயிட்டோ ச்சை " என்று தன் மேல் உள்ள போர்வையை எடுத்து விறு விறு வென்று மடித்து வைத்தவன் , நேராக குளியலறையில் புகுந்து கொண்டான்.

சில மணிநேரத்திலே தன் காலை கடங்களை முடித்து, பின் குளித்துவிட்டு , வேகமாக கிளம்பி வெளியே வந்தவன் தன் வீடு இருந்த நிலையை பார்த்தவுடன், தன் வலது கை விரல்களை வைத்து நெத்திய தடவிக்கொண்டே மறுகையில் தன் போனை எடுத்து அழைத்தான் தன் நண்பன் மகேஷிற்க்கு.

அழைப்பை ஏற்றவன் , "சொல்லுடா மச்சான், இன்னிக்கு எவ்வளவு பட்ஜெட் வந்திருக்கும், ஒரு லட்சம், இல்லை இரண்டு இலட்சம்" என அவன் நக்கலாக கூறிய விதத்தில் கடுப்பேறியவன்.

"மூடிட்டு வந்து அடுத்து ஆக வேண்டிய வேலையை பாரு , இல்லை உனக்கு ஆகுற ஹாஸ்பிட்டல் பில்லையும் சேர்க்க வேண்டி இருக்கும்" என்று அமைதியாகவும் அதே சமயம் எச்சரிக்கை போலவும் கூறியவன் தொடர்பை துண்டித்து விட்டு , காரை எடுத்து கொண்டு அந்த முக்கியமான இடத்திற்கு சென்றுவிட்டான்.

சாப்பிட மறப்பானே தவிர அங்கு செல்வதை மறக்க மாட்டான்.

இங்கு, மகேஷ் ,வினய் வீட்டிற்க்கு வந்தவன் ,கதவை திறந்து பார்த்தது தான் தாமதம் , நெஞ்சில் கைவைத்து அப்படியே கதவில் அதிர்ச்சியுடன் சாய்ந்துவிட்டான்.

அங்கு ஹால் சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்த டீவி தரையில் உடைந்து கிடக்க, கண்ணாடி டீப்பாய் அதுவும் நொறுங்கி தன்னுடைய பரிதாப நிலையை வெளிப்படுத்த, அதற்கு அடுத்ததாக என்னையும் பார்த்து கொஞ்சம் பரிதாபப்படு என்று கெஞ்சிய சோபா கத்தி கொண்டு கிழிக்கப்பட்டு,அதன் பஞ்சு அறை எங்கும் பரவி கிடந்தது.

மற்ற சில அலங்கார பொருட்களும் உடைந்து கிடந்ததை மொத்தமாக கணக்கிட்டவன், "இந்த மாசம், ஒன்னரை லட்சத்தை அடித்து துவம்சம் பண்ணிருக்கான் மச்சான்.

வேஸ்ட் ஆனது ஒன்னரை லட்சம் ரீப்பிலேஸ்மன் 2 லட்சம் என கணக்கிட்டவன் .

வழக்கம் போல் வேலயாட்களிடம் சொல்லி அவற்றை துப்புறவு செய்து விட்டு , உடனே ரீப்லேஸ்மன்ட் செய்வதற்கும் ஏற்பாடு செய்து விட்டு அவனும் ஆபிஸ்ஸிற்க்கு சென்று விட்டான்.


அனைவரும் அலுவலகத்திற்க்கு வந்தாகிவிட்டது, அந்த அலுவலக சிஇஓ வை தவிர ,

வாசலையே இரு கண்கள் ஏக்கத்துடன் நோக்கி கொண்டிருந்தது, அதை இரு கண்கள் பரிதாபத்துடன் பார்த்து கொண்டிருந்தது.

எங்கடி, உன் ஆளு வந்தாச்சா" என்று நவநாகரீக பெண் ஒருத்தி தன் தோழியிடம் கேட்க,

"எங்க அந்த முனிவர இன்னும் காணலையே" என மற்றொருவள் சலித்து கொண்டே கூற,

"அடியே, சொன்னா கேளு நீ ஆபிஸ் வந்தே மூன்று மாசம் தான் ஆகுது , நான் உன்னோட சீனியர் சொல்லுறேன் அந்த முனிவர நீ சாதாரணமா எடை போடாத, பின்னாடி வருத்தபடுவ ஒழுங்கா அவன டிரை பண்றத நிறுத்து" என்று முதலாமவள் கூறவும்.

"நோவே நான் எப்பவும் முன் வச்ச காலை பின் வச்சது இல்லை , நேவர் எவர் கிவ் அப் தான் என் பாலிசி" என்று இரண்டாமவள் தடாலடியாக கூறிவும்.

"சரிதான் , சைத்தான் சைக்கிள் தான் போவேன்னு அடம்புடிச்சா என்ன பண்ண , உன் தலையெழுத்து " என்று முதலாமவள் கூறி கொண்டிருந்த நேரத்தில்,

அலுவலகம் பரபரப்பாக மாறியது,

அவன் வந்தான் புயலாக வந்தான் , நேர்கொண்ட பார்வையும் , நிமிர்ந்த நடையுடன் வந்தான் அவன் ,

கண்ணில் கருப்பு கண்ணாடி அணிந்திருக்க , கருப்பு கோர்ட், பேன்ட் சகிதம் வந்தவன் அந்த இரு பெண்களை கடந்து செல்லும் போது ஒரு நிமிடம் நின்று,

"போத் ஆர் கம் டு மை ரூம் நவ்" என்றவன் அவர்கள் இருவரையும் பார்க்காமலே மிடுக்காக கூறிவிட்டு தனதறை நோக்கி சென்றான்.

"ஏய் எதுக்குடி நம்மள வரச்சொல்லுறாரு" என இரண்டாமவள் கேட்க.

"ஆங், உன்கிட்ட பிரபோஸ் பண்ண"

"அப்படியா" என முப்பத்திரண்டு பல்லையும் காட்டி சென்ற இரண்டாமவளை பார்த்து தலையில் அடித்து கொண்டு பின் தொடர்ந்தாள் முதலாமவள்.

அவனது அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வர அனுமதி கேட்க

"மிஸ்.ஊர்மிளா நீங்க மட்டும் வாங்க" என அவன் அழைத்ததும் ,இரண்டாமவள் உள்ளே நுழைய,

"மிஸ் ஊர்மிளா இந்தாங்க உங்க டிரன்ஸ்பர்" என அவள் முகம் பாராது கணினி பார்த்து கொண்டே கூற,

"ஸார் நான் டிரன்ஸ்பர் கேட்கலையே" என அவள் பதில் கூறவும், "யூ மே கோ நவ் " என்று அழுத்தமாக கூறியவனிடம், மேலும் அந்த பெண் காரணம் கேட்க தன் மொபைல் ஆன் பண்ணி அவளிடம் காண்பித்தான்,


அதை பார்த்தவள் சற்று அதிர்ச்சியுடன்
"சார் அது நான் " என்று பேச்சை ஆரம்பித்தவளை நெருப்புகண்களோடு பார்தவன் "ஐ சேட் கோ......" என்று அதிரவும் அந்த பெண் பயத்தில் நின்று கொண்டிருக்க ,

இதே நேரம் பைலில் சைன் வாங்க வந்த மகேஷ்ற்க்கு பொலீர்னு கன்னத்தில் ஒரு அறை விட்டான்.

"இது உனக்கு விழ வேண்டியது" என்று ஒரு விரல் நீட்டி எச்சரித்தவனை மிரட்ச்சியுடன் பார்த்து, பின்அதில் பயந்தவள் கதவை திறந்து கொண்டு ஓடிவிட்டாள்....

இங்கு வெளியே நின்று கொண்டிருந்த மது செய்வதறியாது அடுத்து உள்ளே சென்று "சார்ர்ர்.."
என்று இழுவையாக கூற.

தன் ஒற்றை புருவம் தூக்கி அவளை வேள்வியாக பார்த்தான் .

"சார் அது வந்து, என அவள் சொன்னது தான் தாமதம் புயலென எழுந்தவன்

"அறிவிருக்காடி உனக்கு , இல்லை மண்டையில எதாட்டு இருக்கான்னு கேட்கிறேன்,அவ தான் காதல் பண்ணுறேன்னு சுத்துறான்னா கூட சேர்ந்து நீயும் ஏத்தி விட்டுட்டு இருக்கியா , ஒரு சீனியரா அறிவுரை சொல்லாம்ல ச்சே" என கையில் இருந்த பையிலை விசிரி அடித்து எரிச்சலுற்று திரும்பினான்.

"ஏதேய் அடப்பாவி ஏத்திவிடுற மாதிரியா தெரிஞ்சது என்று மது யோசித்த தருணத்தில் தன் மொபைலை எடுத்து காட்ட அதில் ஓடிக்கொண்டு இருந்தது இவர்களின் உரையாடல் அதை பார்த்த மது ஆத்தாடி ஆபீஸ் மொத்தமும் சைபர்களா, இது எந்த தூரோகி எடுத்தது என தெரியாமல் யோசிக்க ,

அவள் கவனத்தை கலைத்த வினய்.... இதோ பாருடி இதான் பஸ்ட் அன்ட் லாஸ்ட் இனி எனக்கு எதாட்டு புரோக்கர் வேலை பார்த்த ,பிரெண்ட்னு பார்க்க மாட்டேன் கெட் லாஸ்ட் என கண்கள் சிவக்க கூறி அவளை வெளியே அனுப்பினான் .

இதற்கு இடையில் என்ன நடந்தது என்று தெரியாமல் ஒரு அப்பாவி ஜீவன் அடியும் வாங்கி கொண்டு , கண் இமை தட்டாமல் இருவரையும் பார்த்து கொண்டிருந்தது.

மதி ,வினய் திட்டியதில் ரோசம் வந்து, இல்லை இல்லை ரோசம் வந்தது போல் அவனிடம் மேலும் கடி வாங்காமல் தப்பிப்பதற்காக அந்த நிமிடமே மகேஷ் ஐ இழுத்து கொண்டு வெளியே சென்றவள் நேராக கேண்டீனுக்கு சென்று அங்கு அமர்ந்து விட்டாள்.

அமர்ந்தவள் ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்ட பின் "எப்பா எப்பாப்பா, இந்த சைக்கோ சன்யாசிகிட்ட காலத்த ஓடட்டுறது கரண்டு கம்பில கபடி விளையாடுற மாதிரிலயா இருக்கு ,கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா ,என்ன இன்னிக்கு இவன் கொத்துகறி ஆக்கி அவன் வீட்டு நாய்க்கு போட்டுருப்பான் ஸ்ஸஸஸஸபா" என தலையில் கைவைத்து அமர்ந்தவளை முறைத்தபடியே இருந்தான் மகேஷ்.


மகேஷ் முறைப்பதை கவனித்தவள், "டேய் , மகேஷா வெய் திஸ் குறு குறு பார்வை " என அசால்டாக கேட்க, அப்போது வாயை திறந்தவன் தான் கால்மணிநேரம் வண்ண வண்ண வார்த்தைகள் போட்டு அவளை திட்டிவிட்டு மூச்சு வாங்கிஅமராந்தவனிடம் , மேஜையில் உள்ள தண்ணீர் அவன்புறம் நகட்டிவைத்தாள்.

"கொஞ்சம் கூட மா மா வெ வெ சொ சொ கிடையாதுல " என தன் தலையில் அடித்துக்கொண்டவனை பார்த்து மிக பெரிய சந்தேகம் ஒன்றை கேட்டாள் மதி,

"அதென்னடா மங்கூஸ் மண்டையா எனக்கு தெரியாத மா மா வெ வெ சூ சூ சொ சொ ,எதாட்டு புது டிஷ் ஆ " என கேட்டீனை திரும்பி பார்க்க,

"நாதாரி திங்குறதுலேயே இரு அது மானம் ,வெட்கம் ,சூடு, சொரணை " என்று ஆவேசமாக கூறியவனை பார்த்து ,சிரித்த முகத்துடனே ,

"டேய் அதெல்லாம் வெட்டி முண்டம் வீணா போன தண்டங்கள் தூக்கிட்டு அலையுற வேஸ்ட்டு லக்கேஜ்டா அது எதுக்கு நமக்கு "என்று மீண்டும் நக்கல் தோணியில் கூறினாள் மதி.

ஏற்கனவே சம்பந்தமே இல்லாமல் அடிவாங்கியதில் கடுப்பாகி இருந்தவன் ஆவேசத்தில் " அதான் அதுல எதாட்டு ஒண்ணு இருந்திருந்தாலும் தான் நீ எப்போவோ ஒருத்தனை பார்த்து கல்யாணம் கட்டிட்டு போயிருப்பியே , இப்படி தெண்டமா 28 வயசுவரை இரண்டு ஆம்பளபசங்க கூட சுத்திட்டு அலைவியா நீ " என்று கோடு,ரோடு எல்லாம் தடுமாறி பேசிவிட்டது அவன் நாவு.

அதுவரை சிரித்து கொண்டிருந்தவள் சடுதியில் முகம் மாற அங்கிருந்து ஏதும் பேசாமல் சென்றுவிட்டாள்...

அவன் தவறாக பேசியது அவளின் நட்பை , அதற்காக செய்த தியாகத்தை, அவள் எதற்காக அவனை விட்டு போகாமல் இருந்தாள், இப்படி பேசிவிட்டானே என்ற கோபத்தில் சென்றுவிட்டாள்.

காணும் போதே கரைந்த நிலவு தொடரும்🙏🙏
 
Last edited:
அத்யாயம் ❣ 2

மனது எப்போது கஷ்டப்படும், நாம் நம்பியவர்கள் நம்மை நம்பாத போது, நமக்கானவர்கள் நம்மை புரிந்து கொள்ளாத போது, நம்மவர்கள் நம்மை விட்டு செல்லும் போது.

மகேஷ் பேசிய பேச்சில் மனமுடைந்தவள் , சென்றது என்னவோ தன் இருப்பிடத்திற்க்கு தான். வந்தவள் எதுவும் பேசவில்லை யாரிடமும் , தனது இருப்பிடத்தில் உள்ள கணினியை கூட அவள் உயிர்பிக்கவில்லை ,நொறுங்கிவிட்டாள் , இந்த நிகழ்வு அவளுக்கு புதிது இல்லை தான் இருந்தாலும், அவளும் மனுஷி தானே , அவளுக்குள்ளும் இருப்பது ரத்தம் சதை தானே, எவ்வளவு காலம் தான் அவளும் எதையும் பொருள் கொள்ளாதவாறே நடிப்பது.


நமது உறவுகளுக்கு வலிக்க கூடாது என்பதற்காக, நமக்கு வலித்தாலும் வலிக்காத மாதிரி நடப்பது என்பது எத்தைகைய கொடுமையானது, அவளும் ஐந்து வருடமாக அதை தான் செய்து கொண்டிருக்கிறாள் இரு ஜீவன்களுக்காக, வினய்,மற்றும் மகேஷிற்க்காக.

நாம் எவ்வளவு தான் நடித்தாலும் ,ஒரு நாள் அந்த அழுத்தமானது ,வெடித்து சிதறும்.

அப்படியான ஒரு நாள் விரைவில் வரும்.

சிசிடிவியில் மதியின் நடவடிக்கை,மற்றும் முகத்தை பார்த்த வினய் , உடனடியாக தனது பிஏவிடம் சொல்லி அவளை அழைத்தான்,ஏனெனில் அவன் தொலைபேசியில் அழைத்தால் அவள் பதிலளிக்கமாட்டாள் என்பதை நன்கு அறிவான் வினய்.

"மதி மேம் சார் உங்களை வரச்சொன்னாங்க " என்று அழைத்தான் வினயின்பிஏ எழில் .

ஆமாம் நிங்கள் நினைப்பது சரிதான்,வினய்க்கு பெண் பிஏ என்றாள் ஆகாது அலர்ஜி.

"ம்ம் நீங்க போங்க மிஸ்டர் எழில் நான் வர்றேன்" என்று கூறியவள் , தன் இருகைகளாலும் தன் முகத்தை அழுந்த தேய்த்து விட்டு , அவனறைக்கு ஒரு பைலுடன் சென்றாள்.


"மே ஐ கம் ன் சார்" என்று கதவை பாதி திறந்தவாறு கேட்டாள் மதி.


"ப்ளீஸ் கம்" என்றான் வினய்.

" யுவர் பைல் சார் படிச்சுட்டு ஓகே பண்ணா பார்வர்டு பண்ணிருவேன் " என்றவள் அவன் முகத்தை பார்க்காத வண்ணம் நின்றிருந்தாள்.

ஆனால் வினய் வந்ததில் இருந்து அவள் முகத்தை மட்டும் தான் பார்த்து கொண்டிருக்கிறான்.

இருவரும் இவ்வாறே அமைதியாக இருந்து கொண்டிருக்க, பொறுமை இழந்த மதி தன் நகத்தை கடித்து துப்ப ஆரம்பித்து விட்டாள்.

"ப்ளீஸ், டோண்ட் பைட் யுவர் நெய்ல்ஸ் இன் பிரென்ட் ஆப் மீ மதி ஐ கேட் ட்" என்று வினய் கூறவும் தான் நகம் கடிப்பதை நிறுத்தினாள் மதி.

அவளிடம் அமைதி

"எவ்வளவு நேரம் நிற்ப ஸிட் " என்றவனை இப்போதும் நிமிர்ந்து பார்க்கவில்லை மதி.

"ம்ம் " தன் தலையை இரு பக்கமும் ஆட்டியவன், தன் கைகளை மேஜயில் தட்டி எழுந்தவன் அவளுக்கு அருகில் ஒரு கதிரையை போட்டு அமர்ந்தவன் அவள் இரண்டு கைகளையும் பிடித்து "மதி ஐயம் சாரி" என்றான்.

தன் கைகளை அவனிடம் இருந்து உருவியவள், "இட்ஸ் ஓகே, இதென்ன புதுசா எனக்கு பழகிட்டு "என்றவள் இன்னும் அவன் கண்களை அவள் பார்க்காமலே இருந்தாள்.

அவள் நாடியை பிடித்து "ஏய் இங்க பாருடி என் பாசக்காரி,சண்டைகாரி " என்று தன்னை பார்க்க வைத்தான் வினய்.

மெல்ல அவனை பார்த்தவள் கண்களில் ஈரம் பூத்து இருந்தது .

"ஏன்டி இப்படி பண்ற உனக்கும் எத்தனை வருஷமா நானும் சொல்லுறேன், என் வாழ்க்கையில் அவள தவிர வேற யாரும் கிடையாது, வேற யாரையும் நுழைக்க நீ முயற்சி பண்ணாத அது வேஸ்ட் ,அது நம்ம இரண்டு பேருக்கும் தான் சண்டை ஆகும்,சொன்னா கேளு டி , ப்ளீஸ் " என்றான் வினய் கண்ணில் ஈரம் வர.

மெல்ல அவனை பார்த்தாள் மதி, " நீ ஏன்டா இவ்வளவு பிடிவாதமா இருக்க" எனாறு கேட்டாள்.

"பிடிவாதம் இல்லை மதி , அது தான் உண்மை, நான் இப்போது ஒரு உயிருள்ள ஜீவன்இல்லை ஜடம், மனுச ஜடம், அவ போன அன்னைக்கே நானும் போயிருப்பேன், ஆனா அவளுக்கு கொடுத்த சத்தியம்,அத காப்பாத்தனும் தான் உயிரோட இருக்கேன், என்ன நம்பி இருக்கிற அந்த பத்து ஜீவன்களுக்காகவும் தான் நான் இருக்கேன்.
என்றவனின் முகத்தில் இறுக்கம் இல்லை, பேச்சில் உயிர் இல்லை.

"ஆனா மாறும் வினய், ஏன்னா அவளுக்கு நீ இப்படி இருக்கிறது பிடிக்காது, அவளும் உன்ன விரும்பி இருந்தது உண்மைனா , இன்னிக்கு சொல்லுறேன்டா இந்த தனிமை உனக்கு நிரந்தரம் இல்லை ,உன் வாழ்க்கை வெறுமையா கழிய என் பிரெண்ட் விட மாட்டா" என்றவள் வேகமாக எழுந்து கதைவை நோக்கி செல்ல இருந்தவளுக்கு நேருக்கு நேராக மகேஷ் வந்தான்.


மதியை திட்டிவிட்டு பின் தான் பேசிய வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்தவன், மதியிடம் மன்னிப்பு கேட்பதற்க்காக அவளின் இருப்பிடம் வந்து அவளை காணாமல் தேடியவனுக்கு, அவள் வினய் அறையில் இருக்கிறாள் என்பதை அறிந்து உள் நுழைய கதவை திறந்தபோது தான் ,மதி எதிரே நின்றாள்.

மகேஷ்யை பார்த்தவள், உடனே வினையை பார்த்து, "கனவா கரைந்து போன காதலை மறக்க வைக்க நீ போராடுற, என் நண்பனோட வாழ்கையில தனிமையை போக்க நான் போராடுறேன் , உன்னோட வாதம் உனக்கு சரின்னா, என்னோட வாதமும் சரி .

என் நட்பு அவ்வளவு ஆழமானது. அத யாராலும் புரிஞ்சுக்க முடியாது, எவனாலும் என்னோட" என்றவள் மகேஷயை பார்த்து கொண்டே சொல்ல வந்த வார்த்தையை முழுங்கி விட்டு வெளியே சென்றுவிட்டாள்.


வினய் பெருமூச்சு ஒன்றை விட்டு கையை தன் தொடையில் ஊன்றி தன் இருக்கையை விட்டு எழுந்தவன் சிலையாக நின்ற மகேஷ் அருகில் வந்து அவனை கட்டி அணைத்து "ஸாரிடா மச்சான், எவ்வளவு சொல்லியும் அந்த பொண்ணு நின்னதுனால தான்டா உன்ன அறைஞ்சேன் ஸாரிடா "என இரைஞ்சலாக கூறியவன் முதுகை தட்டி,

"பரவாயில்லைடா மச்சான் , ஆனா நான் தான் அந்த டென்சன்ல மதிட்ட கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்" என மகேஷ் சங்கடப்படவும்.

"பாவம்டா,மதி நான் தான் இப்படி பண்றேன்னா ,நீயும் ஏன்டா அவள புரிஞ்சுக்காம இப்படி நடந்துக்கிற , ப்ளீஸ் நான் சொன்னா கேளு , நீயும் ........" என வினய் ஆரம்பிக்கும் முன்னே ,

"நிறுத்துடா ப்ளீஸ் , உன் முடிவுல உன் வாழ்க்கையில நான் தலையிடுறனா" என கேட்டவனிடம்,

இல்லை என்பது போல் தலையாட்டினான் வினய்.

"தென் , அதே மாதிரி நீயும் இருந்துக்கோ, நான் எண்ண பண்ணனும் எப்படி நடந்துகனும்னு நீ சொல்லாத " என்றவன் ஒரு நொடி அமைதிக்கு பின் தன் கண்ணை மூடி திறந்து இன்னிக்கு ஓரு ப்ரொஜெக்ட் முடிக்க வேண்டி இருக்கு, அத நியாபகம் படுத்த வந்தேன், நீ அத பத்தி அப்டேட் பண்ணு ப்ரொசிட் பண்ணிடலாம்" என்றவன் வெளியே சென்றுவிட்டான்.

சென்றவன் முதுகை பார்த்த ,வினய் தன்னால் இரு ஜீவன்களின் வாழ்கை கண்முன்னே காணாமல் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்தவன் , தன் மனதிற்க்கு எதிராக எதுவும் செய்ய இயலாமல், இன்று முடிக்க வேண்டிய அந்த ப்ரொக்ஜெக்டை கவனிக்க ஆரம்பித்தான்.

இங்கு அறையை விட்டு வெளியே வந்த மகேஷ் , மதி முன்னாள் வந்து நிற்க்க , அவள் அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்து கொண்டே "ஸாரிடி "என தன் கண்களால் வினவினான்.

அதற்கு மதி "போடா டேய்" என தன் உதடை அசைத்து சத்தம் வராமல் கூறவும்,மகேஷ் தன் புன்னகையை தன் இதழுக்குள் மறைத்து வைத்து கொண்டான்.


இது தான் மதி, அவளுக்கு ,மகேஷ்,மற்றும் வினய்யிடம் அதிக நேரம் தன் கோபத்தை காட்ட முடியாது. அவள் இந்த இருவருக்காக மட்டுமே இருக்கிறாள்.


மெல்ல கண்ணை திறந்தவன் கண்டதோ பாழடைந்த பழைய செயல்படாத தொழிற்சாலை குடோன்.

"தண்ணீ, தண்ணீ" என்றவன் உதடுகள் தண்ணீர் கேட்டு மன்றாடியது.

மீண்டும் தலையை மெல்ல தூக்கியவன் கண்முன் நின்றது மூன்று உருவங்கள் , கருப்பு நிற உடை, கையுறை முகமூடி என யார் என்று தெரியாத மூன்று உருவங்கள் அவன் அருகில் வந்தது.

யாரா இருக்கும்
அடுத்த எ பி ல டிக்டாக் டிக்டாக் டடான்😁😁
 
Last edited:
அத்யாயம் 💙 3

கட்டுபட்டு கிடந்தவன் தலை தரை நோக்க இரத்தம் அவன் வாயில் இருந்து சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்தது.

வந்தார்கள் அம்மூவரும், ஆல்பா, பீட்டா , காமா , என்னடா பெயர் இது என்று கேட்டால் ,ஆமாம் அது தான் அவர்கள் பெயர், அவர்களுக்கு என்று ஒரு ராஜாங்கம், கொள்கைகள், விதிமுறைகள்.

இவர்கள் யாருக்கும் அடங்காதவர்கள்,அடிபணியாதவர்கள், அவர்கள் எடுப்பதே முடிவு, சொல்வதே தீர்ப்பு, செய்வதே செயல்.

கட்டுண்டு கிடந்தவன் முன்னாடி மூவரும் வந்து நின்றார்கள் கம்பீரமாக .

தன் கையில் உள்ள கட்டையை வைத்து கீழே கிடந்தவன் நாடியை உயர்த்தினான் ஆல்பா.

அவன் முகத்தில் சரமாரியாக அடிவிழுந்ததில் முகம் இரத்தம் தொய்ந்து இருந்தது.

"பீட்டா"என ஆல்பா அழைக்க.

"யேஸ் ஜீ" என தன் கையில் கட்டையோடு பீட்டா கட்டுண்டு இருந்தவன் அருகில் வர.

"இவன அவிழ்த்து விடு"என ஆல்பா தன் கண்களாலே சைகை செய்ய ,பீட்டா மறுபேச்சு பேசாது உடனே அவனை அவிழ்த்து விட அவன் ஆல்பா காலிலே சட்டென்று விழுந்தான்.

பட்டென்று தன் காலை உதறிய ஆல்பா , பீட்டாவை பார்த்து கண்ணசைக்க, பீட்டாவோ அதை புரிந்து கொண்டவனாய், கீழே விழுந்து கிடந்தவனை இழுத்து முட்டிபோடவைத்தான்.

"டேய், யார்டா நீங்க எல்லாரும் எதுக்குடா என்ன கடத்தி இப்படி பண்றீங்க ,டேய் நான் யாருன்னு தெரிஞ்சு தான் இப்படி பண்றீங்களா என உடல் வலியில் அவன் கதற, அவன் உயிர் மெல்ல மெல்ல பிரிந்து கொண்டிருந்தது.


"நீ தப்பு பண்ணவன், எங்க விதிமுறைகளின்படி, உனக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது

என்று சொல்லிவிட்டு காமா வை பார்த்ததுதான் தான் தாமதம் காமா வந்து தன் கையில் உள்ள மருந்து அடைக்கப்பட்ட ஊசியை கொண்டு அவன் கழுத்தில் ஓங்கி குத்திவிட்டு,
ஆல்பாவை பார்த்து தன் பெருவிரலால் உயர்த்தி காட்டிவிட்டு பழையபடி தன் இடத்திற்கே சென்றுவிட்டார்.

ஊசி குத்தப்பட்ட சிறிது நேரத்தில் அந்த இடத்திலே துடி துடித்து , கை கால்கள் வெட்டி வெட்டி இழுக்கப்பட்டு பின் அதே இடத்தில் இறந்தான் அங்கு கட்டுபட்டு இருந்தவன்.

அதை பார்த்த மூவர் இதழ்களும் மகிழ்ச்சியில் புன்னகை சிந்தியது , அவர்கள் அணிந்திருந்த முகமூடிக்குள்ளே அதுவும் பல காரணங்களை போல் மறுக்கப்பட்டது.

பின் அவர்கள் வழக்கப்படி அந்த பிணம் இரயில் தண்டவாளத்தில் இரவோடு இரவாக இரயில் வரும் நேரம் விசிறிஅடிக்கப்பட்டது .

இரவும், அமைதியாக அதுவும் பல ரகசியங்களை உள்ளடக்கி அப்படியே கரைந்து போனது .


மறுநாள் வழக்கம் போல் , பொழுது புலர்ந்து , வினய் தன் ஆபிஸ்ஸிற்க்குள் நுழைய அனைவர் தொலைபேசியிலும் ஓரே செய்தி ஒடிக்கொண்டிருந்தது.

வினய் நடந்து வரும் அரவம் கண்டவுடன் ,அனைவரும் தங்கள் தொலைபேசியை மூடிவிட்டு , தங்கள் கணினியில் வேலை செய்ய ஆரம்பித்தனர்.

வினய் அதே மிடுக்கோடு தன் அறையில் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்த அடுத்த நொடி மகேஷ் தொலைபேசியுடன் உள்ளே நுழைந்தான்.

அவனை ஏறிட்டு பார்த்த அடுத்த நொடி "டேய், அப்படி என்னடா காலையிலேயே பார்த்துட்டு இருக்க" என வினய் கேட்கவும்.

அவனிடம் தன் போனில் ஓடிய செய்தியை காமித்து, " பேமஸ் தொழிலதிபரோட பையன் காதல் தோழ்வியால டிரெயின்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டான்" என கூறவும்.

தன் கழுத்தில் உள்ள டையை இலகுவாக்கி கொண்டே "புல்சீட், என்ன இது முட்டாள் தனமா இருக்கு, காதல் தோழ்வினா உடனே செத்துடுவாங்களா, செத்து காதலை வாழவைக்க முடியும்னா நாட்டுல பாதிபேர் கூட இருக்க மாட்டாங்க, நாட்டுல பொண்ணா இல்லை ச்சை இடியட்ஸ் " என திட்டி கொண்டிருந்தவனை பார்த்த மகேஷ்.

"உனக்கென்னப்பா ஈஸியா சொல்லிடுவ, அவன் அவன் கஷ்டம் அவனுக்கு தான் தெரியும், சிலவங்க மனச மாத்திட்டு வேற லைப்ப லீட் பண்ண போயிடுவாங்க.சிலபேர் தன் காதலிய மறக்க முடியாம, குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்தது மட்டும் இல்லாமல் வீட்டில உள்ள எல்லாத்தையும் உடைச்சு தள்ளுவாங்க" என மகேஷ் கூறிக்கொண்டிருக்கும்போதே,

" டேய் " என வினய் சீர, மகேஷ் சமாளிப்பாக தலையாட்டி கொண்டே பேச்சை தொடர்ந்தவன் "நீ ஏன்டா இப்போ படம் எடுக்க, அடுத்தவன் கதை நமக்கெதுக்கு, நாம நம்ம வேலையை பார்ப்போம்" என அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

வினய் வழக்கம் போல தன் வேலையுண்டு தான் உண்டு என்று தனது அலுவலக பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டான் மனதில் ஒரு இனம்புரிய ஒருவித மகிழ்வுடன்.


இருள் சூழ்ந்த நேரமது,ஆனாலும் அந்த கதிரவனுக்கே சவால் விடும் அளவு வண்ண விளக்குகள் ஒளி வெளிச்சத்தை தன்மேல் படரவிட்டிருந்தது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநகரம் .


இந்திய மக்கள் பெருவாரியாக வசிக்கும் இடம் அது.


அந்த பகுதியில் சாலையோரத்தில் பல கடைகள் ,உணவு விடுதிகள் ,மது கூடங்கள் தங்கள் பங்களிப்பை மக்களுக்கு வழங்கி கொண்டிருந்தது.

வாரம் முழுவதும் உழைக்கும் மக்கள் தங்கள் வார இறுதிநாளை யாருக்குகாகவும் விட்டு கொடுக்க மாட்டார்கள். தங்களுக்காக மட்டுமே செலவழிப்பார்கள், வாழ தெரிந்த மக்கள்.....

வெளியே இரவை பகலாக காட்டும் செயற்கை ஒளிகள் நிறைந்து காணப்பட்டாலும் , அந்த குறிப்பிட்ட மது கூடத்தில் மட்டும் என்னவோ மிதமான ஒளியே வழக்கம்போல ஒளிர விடபட்டிருந்தது.

ஒருவர் முகம் ஒருவர் அறியாதவாறு மதுக்களுடனும், போதையில் தள்ளாடிய படியும், மாந்தர்கள் அந்த இடத்தை நிரப்ப ,

குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் சட்டென்று ஒளி ஒளிரவிடப்பட்டது ,

அங்கு ஒரு சிறிய மேடை அதில் ஒரு நீண்ட கம்பியில் ஆன தூண் (pole)
அமைக்கப்பட்டிருந்தது.


வந்தாள் அவள், ஆளை அசரடிக்கும் ஆரசி, அனைவரையும் தன் அழகில் சுருட்டி கொள்ளை கொண்டு போகும் பேரழகு சுனாமி.

பெண்ணவள் முகமோ இந்திய சாயல், அவள் தேகத்தின் ஆடையோ மேற்கத்திய சாயல்.

சந்தணம் உரசி அதை பன்னீரில் குழப்பி எடுத்து செய்த உடல் அது அவள் உடல்.

அவள் அங்கம் மறைக்கும் ஆடை என்னவோ அது கஞ்சம் தான் .

அவள் கண்களை கண்டால் அதுவே போதை, டு பீஸ் ஆடையில் அந்த மேடைக்கு வந்தவளோ அந்த தூணை பிடித்து கொண்டு வளைந்து நெழிந்து தன் வாழைத்தண்டு கால்களை பயன்படுத்தி கொடிபோல் அந்த தூணை பற்றி ஆட ஆரம்பித்தாள் .

மது போதையுடன், மாது போதையும் அவ்விடத்தை ஆக்கிரமித்தது.

தனது நடனம் முடியவும் , அடுத்த நடனம் ஆட அந்த மேடைக்கு நிர்வானமாக இரு மேற்கத்திய பெண்கள் வந்தனர்.

அந்த இந்திய அழகி இறங்கி தன் அறைக்கு செல்லவும் , அவள் பின்னே சென்றான் பணம் பொருந்திய ஒரு மேற்கத்தியன்.

சென்றவன் அவள் கையை பிடித்து, எனக்கு "இரவு உன் கம்பெனி வேண்டும்" என்க .

அவளோ அங்கு அதற்காக நிற்க்கும் வேறு சில பெண்களை கை காட்ட, அவனோ "நீ தான் வேண்டும் ,எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்" என்று சொல்ல அவளோ "நாட் இன்ட்ரஸ்ட் " என்று சொல்லி விட்டு தனதறை நுழைந்தவளிடம் அத்துமீறியவனை கண்டவள் ஒரு முடிவுடனும் , தன் இதழில் புன்கையுடன்,

அவன் சட்டையை இழுத்து அவனை முத்தமிட்டாள்.

அடுத்தநாள் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூஸில் , அந்த பணக்கார வாலிபன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த மரண செய்தி ஒளிபரப்பாகியது,

அதை கண்கள் மின்ன பார்த்தவள் எண்ணத்தில்,

அவள் அவனை முத்தமிடும் போது அவன் கழுத்தில் உயிரை மெதுவாக அபகரிக்கும் விஷத்தை ஊசிமூலம் இறக்கி இருந்தாள், அதோடு கிறக்கத்திற்க்கு சென்றவனை பவுன்சர்ஸ் மூலம் அவனிடம் சேர்த்து விட்டாள்..

"இதழில் கொடூர புன்னகையுடன் நின்றிருந்தாள் அவள் தான் , எமிலி...... எமிலி அஷ் ....
___________________________________எப்படி இருந்தது என்று கருத்திடுங்கள் மச்சீஸ் ,
உங்களுடன் நான் 😊😊

Thread 'நிலவு கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/நிலவு-கருத்து-திரி.213/
 
Last edited:
அத்யாயம் 💙 4.


கதிரவன் உதயம் ஆனான், புது நாள் ஒன்று புத்துயிர் பெற்று பிறந்தது. இன்று அலுவலக விடுமுறை நாள் வாரம் முழுவதும் உழைப்பவர்களுக்கு இந்த ஒரு நாள் என்பது பொக்கிஷம் போன்றது. பெண்கள் இதில் அடங்க மாட்டார்கள் ,ஏனெனில் அவர்களுக்கு விடுமுறை நாளில் தான் மற்ற நாட்களை விட அதிகப்படியான வேலை இருக்கும் என்ன செய்ய டிசைன் அப்படி....

ஆனால் வினய்க்கும் மற்ற நாட்களை போல தான் ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாளும் ஆனால் ஒரு மாதத்தில் இறுதியில் வரும் வாரம் மீது ஒரு அலாதி பிரியம், மாதம் முழுவதும் அவன் முகத்தில் நடவடிக்கையில் இருக்கும் கடினம் இந்த மாதத்தின் இறுதியில் ஏனோ விடைபெற்று சென்றிருக்கும்.

வழக்கம் போல அலாரம் அடிக்க, அந்த அலாரத்தில் வரும் திட்டுகளையும் அதன் குரலையும் ரசித்தபடியே எழுந்தான் வினய் , வழமையாக கண்ணை திறந்ததும் மயில் பீலியை பார்ப்பவன் இன்றும் அதை செய்ய தவறவில்லை, பின் படுக்கையை விட்டு எழுந்தவன், தன் போர்வையை மடித்து தலையணை அருகில் வைத்துவிட்டு பெட்டையும் சரிசெய்தான்.

எல்லாம் முடித்து நிமிர்ந்தவன் கண்கள் கண்டது தாடி வளர்ந்து , முகம் தளர்வாக இருப்பதை, அதனை புருவம் சுருக்கி பார்த்தவன் , தன் விரல்களால் இருபக்க கன்னத்து தாடியையும் தடவி பார்த்தவாறே அலமாரியில் இருந்து பூந்துவாளையை எடுத்து கொண்டு குளியலறை நோக்கி சென்றான்.

சென்றவன் ,சட்டென்று தன் நடையை பின்னோக்கி வைத்து அந்த மயில் பீலியை தடவி பார்த்து அதன் மேல் இதல் ஒற்றல் வைத்து பின் விலகி குளியலறை புகுந்து கொண்டான்.

விரைவில் குளித்து முடித்து பூந்துவாளையுடன் வெளியேவந்தவன் அங்கு இருந்த நிலைகண்ணாடியில் தன் முகத்தை பார்த்துவிட்டு "பெர்பக்ட் " என சொல்லி கொண்டே அவன் செல்லும் இடத்திற்கு ஆயத்தம் ஆகினான்.

அவன் அறையில் இருந்து வெளியே வந்த சமயம் . அங்கு ஏற்கனவே தயாராகி அமர்ந்திருந்தனர், மகேஷ் மற்றும் மதி.

"ஹேய் வாங்க ,வாங்க எப்ப வந்தீங்க" என தன் கையில் தனது ஸ்மார்ட் வாட்சை அணிந்து கொண்டே கேட்டவனை இருவரும் ஏதோ ஒரு வித்தியாசமான ஜந்துவை பார்பது போல் பார்த்தனர்.

"என்னடா பலவருசம் கழித்து பார்க்கிற மாதிரி ஒரு பில்டப்பூ என மதி நினைத்து கொண்டிருந்த வேளையில்,

மகேஷ் "ச்சே என்னாமா பண்றான்யா பர்பாமென்ஸ்" என மனதிற்குள் நினைத்து கொண்டாலும் "இஇஇஇ இப்ப தாண்டா "என வினையை பார்த்து இழித்துகொண்டே , மதியை பார்த்தான் மகேஷ்.

மதியோ தன்னை அசடு வழிய பார்த்த மகேஷை காரி உமிழ்வது போல செய்கை செய்தாள்.

கைகடிகாரத்தை கெட்டி முடித்த கையோடு வினய் அங்கு சார்ஜில் போட்டுவைத்திருந்த தனது தொலைபேசியை எடுத்து கொண்டு
" போலாமா" எனக்கேட்டவுடன் இரண்டும் தலையாட்டி கொண்டே பின்னாடியே சென்றனர்.

கீழே கார்பார்க்கிங் வந்ததும் , தனது கார் கீயை மகேஷிடம் தூக்கி ஏறிய அவனும் லாவகமாக பிடித்து பின் காரை திறந்து, ஓட்டுநர் இருக்கையில் அமர , வினய்யோ கார் கதவை திறந்து கொண்டே "மச்சான் எல்லாம் ரெடிதானே எதுவும் மிஸ் ஆகலையே"என கேட்க.

"எல்லாம் ரெடி மச்சான் ஒண்ணு விடாம பர்செஸ் பண்ணியாச்சு கார் டிக்கில இருக்கு நீ கவலை படாத " என மகேஷ் கூறவும்.

"ஓகே பைன் ,லேட்ஸ் கோ" என வினய் கூறிவிட்டு காரில் ஏசியை தனக்கு நேரே திருப்பி வைத்தான்.

"ஏன்டா மகேஷா பொய் சொல்லுற, ஒண்ணே ஒண்ணு மிஸ் ஆகி இருக்குல" என மதி பூடகமாக பேசவும் மகேஷ் "இந்த பயபுள்ள என்ன புதுசா ஏதோ பேசுது" என நினைத்து கொண்டு திரு திரு வென்று முழிக்கவும் அதை பார்த்த வினய் , மகேஷ்யை முறைத்து கொண்டே ,

"என்ன மிஸ் பண்ண " என கோபமாக கேட்க , அதை பார்த்த மதி மிஸ்ஸிங் அவன் கிட்ட இல்லை " என கூறவும்

"சரிதான் இவ ஏதோ பிளான் பண்ணிட்டா " என மகேஷ் வாயை குவித்து காற்று ஊதி கார் ஸ்டியரிங்கை விரல்களால் தட்டினான்.


"என்னடி உளர்ற எரும சொல்லி தொலை" என வினய் பின்பக்கம் அமர்ந்து இருந்த மதுவை பார்த்து கேட்க, உடனே வினய் ஓட தாடையை பிடித்து கார் கண்ணாடி பக்கம் திருப்பிய மது எங்கடா உன் தாடி ,அதான் மிஸ்ஸிங்"என மது கூறவும்.

"அது அது ஸ்பெஷலா ஒருதங்கள பார்க்க போகும் போது தாடியோட போன நல்லாவா இருக்கும் " என வினய் தன் முகத்தை திருப்பி கொள்ள ,

"அத தான் நாங்களும் சொல்லுறோம் , உனக்கு தாடி நல்லா இல்லைனு, நீ தான் என்னமோ கர்ணன் கவச குண்டலத்தோட பிறந்த மாதிரி மாசம் பூராவும் தாடி வச்சிட்டு சுத்துற " என மது கூறிமுடிக்கவும்.

வினய் சலிப்பாக மதுவை பார்த்து விட்டு, "மது தெரியாதவங்களுக்கு விளக்கம் சொல்லிடலாம் ,தெரிஞ்சே பேசுற உனக்கு " என தன் தலையை இருபக்கமும் ஆட்டி விட்டு "டேய் வண்டி ஸ்டார்ட் பண்ணு" என ஜன்னலை பார்த்து கொண்டான் .

மகேஷ் கேலியாக மதுவை பார்த்து இதழுக்குள் சிரிக்க, "போ டா டேய்" என இதழ் சைகை செய்தாள்.

வண்டி புறப்பட்டது, இளைய ராஜா பாடல்

(என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் தர தர தா த் த த
தொடருதே தினம் தினம் தர தர தா த் த த
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே)

"டேய் வினய் என்னமா பாடுற , எவ்வளவு அழகா கித்தார் வாசிக்க, எனக்கு கித்தார்னா ரொம்ப புடிக்கும் " என வினய் வாசிப்பதையும் பாடுவதையும் கன்னத்தில் கைவைத்து விழி அசையாமல் பார்த்து கொண்டிருந்தாள் அவள்,

(பன்னீரைத் தூவும் மழை
ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ
எண்ணங்கள் ஆடும் நிலை
என்னாசை உன்னோரமே)

ஒவ்வொரு வரியும் அவன் பாடும் போது அவளுக்காகவே பாடியது போல உணர்ந்தாள் , வினய் விழிகளையும், அவன் பாடும் இதழ் அசைவையும் , ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் காட்டும் முகபாவனையும், கித்தார் மீட்டும் அவன் மென் விரல்களையும் , அணு அணுவாக மெய்மறந்து ரசித்து கொண்டிருந்தவள் முன் இருவிரல் சொடுக்கிட்டது , அதில் இமை தட்டி "யாருடா அந்த கரடி" என பார்க்க,

வேறு யாரும் இல்லை அந்த கரடி மகேஷ் தான்.

"நீங்களா அண்ணா" என அசடு வழிய மகேஷ் ஐ பார்க்க,

"என்னமா பண்ற சிலையாட்டம்" என்றவனிடம்.

"அண்ணா எப்படி வாசிக்கிறான் "பாருங்களே என மீண்டும் பாட்டில் லயத்த படி கூறவும்.

"ஆஹான்", என மகேஷ் தன் கையில் உள்ள மொபைலில் பாட்டை ஆப் பண்ண உடனே பாட்டு நின்றது.

பாடல் நின்றது கூட அவதனியாமல் தன் நடிப்பிலே குறியாக இருந்த வினய் , தன் நடிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான்.

சில நொடிகளில் வித்தியாசத்தை உணர்ந்தவன் கண்களை திறந்து பார்க்க அவன் காளியாக நின்று கொண்டிருந்தாள் ,

பின்ன இவ்வளவு நேரம் பாடல் பாடி கித்தார் வாசித்தது வினய் இல்ல அவனோட மொபைல் போன் ,

வினய் அவளை பார்த்தவாரே பின்னாடி "எவன்டா இப்படி காலைவாரிவிட்டது "என பார்க்க அங்கு மகேஷ் வாயை பொத்தி சிரித்து கொண்டிருந்தான் ,

"நீயா டா குல துரோகி" என அவனை முறைத்தவன் கண்கள் மீண்டும் அவளிடம் வந்தது.

அவளின்முறைப்பை பார்த்தவாரே "இல்லை , இல்லை டி லட்டு அது அதுவந்து " என இழுவையாக பேசவும் .

"டேய் என்னையவே எமாத்திட்டியடா உன்ன " என கூறியவள் அவன் கையில் இருந்த கித்தாரை பிடுங்கி அவனை அடிக்க போக ,

"அடியே மீ பாவம் " என துள்ளி குதித்து ஓடினான்.

"டேய் நில்லுடா மவன இல்லைனா கொன்னுடுவேன்" என அவள் வினய்யை துரத்த,

"செத்தான் சேகரு" என மகேஷ் கைகொட்டி சிரித்து கொண்டே வந்த வேலை முடிந்தது என அவ்விடம் விட்டு நகர்ந்தான்,

அங்கிருந்து ஓடியவன் சோபா பின்னாடி தன்னை மறைத்து நிற்க , சோபாவிற்க்கு முன் கித்தாருடன் அவள் நிற்க்க "எடி வேண்டான்டி லட்டு உன் வினய் பாவம் டி , படாத இடத்துல பட்டுட்டுனா அப்புறம் உனக்கு தாண்டி கஷ்டம் பார்த்துகோ" என வினய் அங்கும் இங்கும் கபடி ஆட,
"பரவா இல்லைடா பக்கோடா " என அவனை மீண்டும் துரத்த, இறுதியில் அவள் ,அவன் சட்டை காலரை பிடிக்க, அவளிடம் தப்பிக்க ,வினய்யோ சோபாவை தாண்டி குதித்து ஓடுகிறேன் என்று சோபாவை தாண்ட இருவரும் தவறி சோபாவில் விழுந்தனர்.

அவள் கீழே அவன் மேலே , இருவரின் வாசமும் ஒன்றோடு ஒன்று கலக்கும் தூரத்தில், கண்கள் ஒருவர் மேல் ஒருவரிடம் இருந்து அசையவில்லை, அவளின் கைகளும், அவனின் கைகளும் வேலை நிறுத்தம் செய்தது , அவள் கண்களை பார்த்து கொண்டே இருந்தவனின் கண்கள் இடம் மாறியது நெருக்கம் கூடியது,

(பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கை சேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இதுதானே என் ஆசைகள்
அன்பே…)

என்ற வரிகள் அவர்கள் இருவர் காதிலும் விழ அவளை நோக்கி மெல்ல குனிந்தவன் தலை இடித்தது என்னவோ கார் கண்ணாடியில்,,

ஆம் மகேஷ் பிரேக் அடித்திருந்தான்.

சட்டென சுயத்திற்க்கு வந்தவன் நெற்றியை தடவி கொண்டே " எரும ,எரும சொல்லிட்டு பிரேக் போட மாட்டியா" என வினய் திட்டவும்.

அவனை விசித்திரமாக பார்த்த மகேஷ் , "அடேய்யப்பா, இனி உனக்கு பிரேக் போட போறேன் சார் அப்புரூவ் பண்ணுங்கன்னு மெயில் அனுப்பி நீ ஓகே பண்ணவுடன் நான் பிரேக் போடுறேன்" என்று கிண்டல் அடித்தவனை தீயாக முறைத்தான் வினய்.

"அவனை ஏண்டா முறைக்க நீ கனவு கண்டு முட்டுனது உன் தப்பு இறங்குடா வரவேண்டிய இடம் வந்துட்டு" என மதி கூறிவிட்டு கதவை திறந்து கொண்டு இறங்கினாள்.

வினய்யும் தன் தலை ,உடை அனைத்தும் சரிசெய்து கொண்டு இறங்கினான்.

"எனக்குன்னு வாச்சான் பாரு நல்ல பிரெண்டு " என தலையில் அடித்து கொண்டு மகேஷ் கார் பார்க் பண்ண சென்றுவிட்டான்....

மதி, வினய் இருவரும் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றார்கள்....

உள்ளே உள்ளே சொல்லுறீயே எங்கனு சொல்லி தொலை அதான அது அடுத்த எபில , மச்சீஸ் கமெண்ட்ஸ் பத்தல கமெண்ட்ஸ் பத்தல நீங்க பொங்கலோ ,பூளியோதரையோ கிண்டுனாதான உற்சாகமா மீ எழுத முடியும், கமெண்ட்ஸ் போடுங்கோ😉😉😉😉


கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/நிலவு-கருத்து-திரி.213/
 
அத்யாயம் 💙 5


காரை விட்டு இறங்கி நடந்தனர், மதியும்,வினயும்.


அது ஒரு பெரிய வீடு, வாயிலில் வருபவர்களை வரவேற்க்கும் விதத்தில் அழகான பூச்செடிகள் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது.


வந்தவர்கள் வீட்டின் அழைப்பு மணியை அடிக்கவும் , கதவை திறந்தது என்னவோ ஊர்வசி தான் .


"அட ஐய்யா நீங்களா வாங்க ,வாங்க ,வாங்கம்மா"என இருவரையும் வரவேற்றாள் ஊர்வசி.


"ஊர்வசி என்ன வீடே அமைதியா இருக்கு, யாரையும் காணோம்" என சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே வினய் கேட்க .


"ஓ... ஹேய் ......மாமா வந்தாச்சு" என்ற அலறலோடு வெவ்வேறு வயதுடைய 10 குழந்தைகள், ஓடிவந்து அவன் கால்களை கட்டி கொண்டது .


அத்தனை குழந்தைகளையும் பார்த்து மகிழ்ந்தவன் தன் உதட்டில் புன்னகையுடன், தன் இரு கைகளையும் தாராளமாக விரித்து குழந்தைகளை அணைத்து கொண்டான்.


"மாமா , ஏன் இவ்வளவு லேட் " என ஒரு சிறு வண்டு கேட்க , "அதுவா " என அப்படியே திரும்பிய வினய் அங்கு வெளியே கார் பார்க் செய்துவிட்டு வரும் மகேஷ்யை பார்த்தவுடன் ,


"அதோ வர்றானே அவன் கிளம்ப தான் லேகுரல் ட் ஆகிட்டு" என கூறவும் அந்த சிறுவண்டு தன் கையிலுள்ள என்ற விளையாட்டு பொருளை வைத்து அடிக்கவும்.


நடந்த எதுவும் அறியாத மகேஷ் " ஏய் எதுக்கு டா என்ன அடிக்க" என அந்த சிறுவண்டு கையை பிடித்து கேட்க அதுவோ "ஆங் எங்க மாமா வர லேட் ஆனதுக்கு நீங்கதான் காரணமாம் மாமா சொன்னாங்க அதான் அடிக்கேன் என மீண்டும் அடிக்க ஆரம்பித்து விட்டது .


"அவனா அப்படி சொன்னான் சரியா போச்சு , உங்க மாமா தான் கண்ணாடிய பாத்துட்டு கிளம்ப லேட் ஆக்கினான் போடா வந்துட்டான் " எனக்கூறவும் அந்த குழந்தை அவனை பார்த்து முறைத்து கொண்டே சென்றது.


மற்றொரு சிறு வண்டு வந்து "மாமா நீங்க அழகா இருக்கீங்க " எனக்கூறவும் .


"ஹலோ அப்போ நான் எப்படி இருக்கேன்" என மகேஷ் அங்கிட்டும் இங்கிட்டும் தன் முகத்தை அசைத்து கேட்க.


" தாடி வச்சு நல்லா கரடி மாதிரி இருக்கீங்க " என கிண்டல் பண்ணவும், வினய்க்கும் மதுவுக்கும் ஒரே சிரிப்பு.


அதை பார்த்த மகேஷ் "ஏன்டா, சிரிக்க மாட்ட இன்னிக்கு லேட் ஆனதே நீ தாடிய டிரிம் பண்ணதானடா, இந்த உலகம் கலரா இருக்கிறவன் பொய் சொன்ன நம்புது என்ன மாதிரி அப்பாவி சொன்னா " என தன் தலையில் அடித்தான்.


இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வேலை ஆட்கள் அவர்கள் வாங்கி வந்த பொருட்களை கொண்டு வர அதை பார்த்த குழந்தைகள் சந்தோஷமடைந்து கூச்சலிடவும் , அதை கண்டு வினய் முகத்திலும் சிரிப்பு பரவியது.


"மது குழந்தைகளுக்கு எல்லாத்தையும் எடுத்து கொடு " என கூறவும் மது குழந்தைகளுடன் சென்றுவிட்டாள் .


"வாப்பா வினய்" , என்ற குரலில் திரும்பியவன் அங்கு ஒரு வயதான பெண்மணி வரவும்,


"இப்போ தான் மா வந்தேன் மா " என்று கூறிக்கொண்டே அவங்களை ஆரத்தழுவினான் வினய்.


"எப்படி இருக்கப்பா, எப்படி போது உன் பிஸ்னஸ் எல்லாம் " என கேட்டார் அந்த பெண்மணி அவர் தான் திலகம் அவர் ஒரு சமூக சேவகி சமுகத்திற்க்கு சேவை செய்யவே திருமணம் செய்யாமலே தன்னை அர்ப்பணித்து கொண்டவர் . தனக்குன்னு எந்தவித உறவும் கிடையாது வினய்க்காகவும் மற்றும் இந்த குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


" நல்லா போகுதுமா , நீங்க எப்படி இருக்கீங்க, பசங்க, ஹோம் ,எல்லாம் நல்லாதான போகுது , இல்லை எதுவும் தேவையா " என்கேட்க.


"நீ இருக்கும் போது என்ன குறை வரப்போவுது எங்களுக்கு , என்ன நீ மாசத்துக்கு ஒரு தடவை வர்றதுதான் எங்களுக்கு வருத்தமா இருக்கு " என கூறிய திலகாமாவை பார்த்து விரக்தி புன்னகை புரிந்தவன்.


"சரிம்மா நான் டார்லிங்க பாத்துட்டு வர்றேன்" என்று கூறியவனை பாவமாக பார்த்து தலையசைத்த திலகம் மற்றவர்களை கவனிக்க சென்றுவிட்டார்.


இங்கு தன் டார்லிங் யை பார்க்க தோடத்திற்க்கு வந்த வினய்.


"டார்லிங், எப்படி இருக்கீங்க, என்ன கோபமா லேட் ஆ வந்துட்டேன்னு " என்று பேசிக்கொண்டே அவள் அருகில் போய் அமர்ந்தான் வினய்.


ஆம் அவள் தோட்டத்தில் உள்ள மண்டபத்தில் தான் இருந்தாள்.


ஓடிச்சென்று ஒரு நாற்காலியை இழுத்ணு போட்டு அவள் அருகில் அமர்ந்தான்.
அவளை தடவி கொண்டே, அவள் முகத்தின் அருகே சென்றவன் அந்த ஒரு மாதம் என்ன நடந்தது என்று அனைத்தையும் ஒன்று விடாமல் அவள் முகத்தை பார்த்து பேசிக்கொண்டிருந்தான்.


இங்கு மதியம் அனைவரும் சாப்பிட உட்கார்ந்து இருக்க, சமையல் பரிமாறி கொண்டிருந்த ஊர்வசியோ , "அம்மா நான் போய் வினய் ஐய்யாவை கூட்டிட்டு வர்றேன் " என நகரப்போனவளை இடைமறித்த திலகம்,


"அவனை ,தொந்தரவு செய்ய வேண்டாம், பசிச்சா அவனே வருவான்" என திலகம் கூறவும்.


மதுவும் , மகேஷ்ம் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.


நேரம் அப்படிமே நகர்ந்தது, மதுவும் ,மகேஷ்ம் குழந்தை களுடன் தங்கள் நேரத்தை செலவிட்டனர்.


இப்போது மாலை ஆகிவிட்டது அவர்கள் கிளம்பும் நேரமும் வந்தது, மதுவும் மகேஷ்ம் தோட்டத்திற்கு வந்தனர்.


வினய்க்கு அருகில் வந்தவர்கள் , "டேய் வினய் டைம் ஆகிட்டு கிளம்புவோமா நாளைக்கு ஒரு முக்கியமான ப்ரொஜெக்ட் இருக்கு" என மது கூறவும் .


"இதோ இதோ" என எழுந்தவன் "ஊர்வசி ,ஊர்வசி " என சத்தமிடவும் ஊர்வசி அங்கு வந்தாள்.


"என்னங்கையா?" என கேட்க .


"ஊர்வசி என் டார்லிங்க பத்திரமா பாத்துக்கோ, டார்லிங் எனக்கு லேட் ஆகிட்டு நான் அடுத்த மாதம் வர்றேன். என கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்து வந்து காரில் அமர்ந்தான், திலகத்திடம் கூற சொல்லவில்லை, அதுவும் ஒன்றும் புதிதல்ல எப்பவும் நடக்கிறது தான்.


கார் கிளம்பியது, நேராக வினய் தன்னுடைய பிளாட்டிற்க்கு சென்று நிறுத்தினான்.


சரிடா நீங்க ரெண்டு பேரும் கார்ல போங்க நான் பிளாட்க்கு போறேன் என திரும்பி நடக்க இருந்தவன் கையை பிடித்த மகேஷ் "டேய் நான் வேண்டும்னா இன்னிக்கு ஸ்டே பண்ணவாடா" எனக்கேட்க ,


அதுவரை அவனிடம் இருந்த இலகுதன்மை மறைந்தது , " வேண்டாம் கிளம்பு " எனக்கூறிவிட்டுவேகமாக நடந்து சென்று விட்டான்.


போறவனையே பார்த்து கொண்டிருந்த மகேஷிடம் , " வண்டிய எடு பழக்க பட்டது தானே புதுசா பீல் பண்ற போடா " என்றாள் மது.

எப்படி இருந்தது சொல்லிட்டு போங்க மச்சீஸ் ☺☺

கருத்து திரி'
https://pmtamilnovels.com/index.php?threads/நிலவு-கருத்து-திரி.213/
 
அத்யாயம் 💙 6

வீட்டிற்க்குள் வந்தவன் உடை கூட மாற்றாது நேரே அவன் வீட்டில் மற்றுமொரு அறைக்கு சென்றான், அங்கு அவன் பிரத்தியேகமாக அமைத்து வைத்திருந்த சிறிய மதுபான பார் செட்அப் இருந்தது.

அதன் அருகில் சென்றவன் , அதில் உள்ள மதுபானத்தில் ஒன்றை எடுத்து மெல்ல குடிக்க ஆரம்பித்தான்.

மெல்ல மெல்ல அந்த மதுவானது அவனை நிதானத்தை குலைத்து அவனது மாதுவை நினைவுக்கு கொண்டு வந்தது.

தலை கிறுகிறுக்க அப்படியே தள்ளாடியவாரே
அறையின் ஓரத்திற்க்கு சென்றவன், மெல்ல மெல்ல தன் கையில் உள்ள மதுபானத்தை மீண்டும் பருகிகொண்டே ,உலறல் மொழியில்

"ஏண்டி விட்டுட்டு போன ஏன் விட்டுட்டு போன, ஆ......ஆ....... என தன்கையில் வைத்து குடித்து கொண்டிருந்த முழு மது பாட்டிலை கொண்டு அங்கு இருந்த மதுபான செட்டப்பை அடித்து உடைத்தான்.

அடித்து நொறுக்கியவன், போதையில் சிவந்த கண்களுடன், அவனுக்கு எதிரே இருந்த புகைப்படத்தை பார்த்தான்.

அழகில் மட்டும் இல்லை, அடக்கத்திற்க்கும், அமைதிக்கும்அரசி, அவள் கண்களில் தெரிவது பனி விழும் பார்வை ,அவள் இதழ்கள் பேசும் பேச்சுகளோ தேன் போன்றது,அவள் உடை உறுத்தாது, நடை பிறலாத அமுதம் அவள்.

அவள் இயற்கையின் அதிசய படைப்பு .....

அவளே ஷிவானி , அழகாக சிரித்து கொண்டிருந்தாள்,ஆளுயர புகைப்படத்தில்,
மலர் மாலையுடன்.

ஆம் அவள் இறைவனடி சேர்ந்து விட்டாள்.

வினய் அந்த வீட்டில் , அந்த மண்டபத்தில், அவளுடைய கல்லறையில் அவளதுமுகத்தை பார்த்து தான் பேசி கொண்டிருந்தான்.

அந்த கல்லறையை தடவி பார்ப்பான் , அதன் மேல் சிறிது நேரம் படுத்து கொள்வான். புகைப்படத்தில் அவளது முகத்தில் முத்தமிடுவான்.

அந்த கல்லறை மீது சிறிய காய்ந்த இலை விழுந்தாழும் பதறி துடித்து போவான்.

மாதத்தில் ஒருமுறை நடக்கும் கிறுக்குத்தனம் இது ,அவள் கல்லறை அருகில் அவன் பைத்தியம் ஆகிவிடுவான்.

அந்த பத்து சின்ன சின்ன மொட்டுகளும் ,அவனுக்கு அவள் அளித்து விட்டு சென்ற பொறுப்பு, இன்னொரு பொறுப்பும் அவனுக்கு இருக்கிறது.

அவள் பிரிவை அவன் மூளை ஏற்கவில்லை, அவன் காதல் அவனை அவளிடம் கட்டி போட்டு வைத்திருக்கிறது.

அவன் இம்மண்ணில் நிலைத்திருப்பதே அவள் அளித்துவிட்டு போன கடமையை நிறைவேற்றத்தான்.

இதற்கிடையில் மற்றொரு வாழ்க்கை கல்யாணம் அவன் மனது எவ்வாறு ஏற்று கொள்ளும்

"வினய்,நிஜமா என்னை உனக்கு புடிக்குமா,என்ன விட்டு போயிட மாட்டில்லன்னு கேட்டே கேட்டே என்ன விட்டு நீ போட்டியடி ,என கதறினான்.

"டேய் ,வினய் ,டி டோட்லரா டா நீ , ஓரு தம்மூ கூட கிடையாதா பார்ரா இப்படி ஒரு பையனா, நான் ரொம்ப குடுத்து வச்சவடா" என்று அவள் கூறிவிட்டு அவன் கண்ணை பார்த்து சிரித்தது, அவன் காதுகளில் ஒலிக்க,

" அய்யோஓ ஓ ஓ ஓ , ஆ....... ஆ... நான் ... நான் டி டோட்லர்னு பெருமை படுவியேடி, இப்ப பாரு இப்ப பாரு தம்மடிச்சு, தண்ணீ அடிச்சு, இப்படி புலம்பிட்டு இருக்கேன் , நான் நானா இல்லடி என்று கதறியவன் அப்படியே மயங்கி சரிந்தான் நிலம்தனில்.

அவன் நினைவுகளில் மின்னி மறைந்தாள் அவள் , அவளை சந்தித்த நேரங்கள் , அவளுடன் பழகிய காலங்கள், அவளை காதலித்த தருணங்கள் ,அவளுடன் வாழ்ந்த மொத்த வாழ்க்கையும் அவன் கண்முன்னே கனவாய் வந்து போனது.....

அன்று மதுவுக்கு பிறந்தநாள் , வினய்யின் வீட்டில் மதுவிற்க்கு இரகசிய பிறந்த நாள் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான் வினய் .

ஆமாம் வினய் , மது ,மகேஷ் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். மூன்று பேருக்கும் குடும்பம் என்ற கட்டமைப்பு கிடையாது. மூன்று பேரும் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து கல்லூரியில் நட்பானவர்கள்.
வினய் தன் தாய் இறந்தபிறகு தன் தந்தையால் கைவிடப்பட்டான். தன் தந்தையின் நண்பர்களால் ஒர் ஹோம் இல் சேர்க்கப்பட்டு படித்து வளர்ந்தவன் , மிகவும் அறிவாளி திறமைசாலி.

மது ,மகேஷ்க்கும் வெவ்வேறு பின்புலம் உண்டு அதை கதையோட்டத்தில் பார்க்கலாம்.

இந்த மூன்று பேரும் படித்து முடித்து ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

மது பிறந்தநாள் அவளுக்காக பிரத்தியேகமாக செய்யப்பட்ட கேக் , நிறைய பரிசு பொருள் என்று அவளுக்கு சர்பிரைஸ் கொடுத்தனர், மகேஷ்ம் வினய்யும்,

வேற யாரும் இல்லை அங்கு அவர்கள் மட்டுமே, அவர்கள் மூவர் தாண்டி அவர்கள் கூட்டில் அவர்கள் வேறு யாரையும் சேர்ப்பதில்லை,யாரும் தேவையும் இல்லை.

"மது உனக்கு பிறந்தநாள், மது நீ அழகா பொறந்துட்டியே ,உலக அதிசயமே " என மகேஷ் கிண்டலடிக்க, மது அவனை அடிக்க துரத்த அதை தனது மொபைலில் வீடியோ எடுத்தான் வினய்.

"ஹப்பி பெர்த்டே மை ஸ்விட்டி", அவளை அணைத்து விடுவித்தான் வினய்.

கேக் வெட்டப்பட்டு பாதி உண்டும், பாதி அவர்கள் முகத்தில் தடவியும் பிறந்தநாள் சென்று கொண்டிருந்தது.

"டேய் பசிக்குதுடா, ஒரு பிறந்த நாள் பிள்ளைய சாப்பாடு போடாம சாகடிச்சுடாதீங்கடா" என மது தன் வயிற்றை தடவி கொண்டே சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

"டேய் சாப்பாடு சொன்னியா" என வினய் கேட்க.

"எப்பவோ ஆர்டர் பண்ணிட்டேன், இந்நேரத்துக்கு வந்திருக்கனும் ஆனா இன்னும் வரல இரு கால் பண்றேன்" என மகேஷ் அழைபேசியுடன் பால்கனி வந்தான்.

சிறிது நேரத்தில் வினய்யும் அவ்விடம் வர

"என்ன சார் இன்னும் ஆர்டர் பண்ண சாப்பாடு வரல" என மகேஷ் யாருடனோ போனில் கத்தி கொண்டு இருந்தான்.

"டேய் என்னடா" என வினய் கேட்க

"டேய் ,டேக் எ மினிட் புட் சர்வீஸ்ல புட் ஆர்டர் பண்ணேன் டா இந்தா வந்துட்டேன் இந்தா வந்துட்டேன்னு இன்னும் வந்துட்டு இருக்கான்." என மகேஷ் புலம்பவும்

அங்கு அவர்கள் பேசிகொண்டிருந்த நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

"இதோ வந்துட்டான்னு நினைக்கிறேன் இன்னிக்கு அவன " என மகேஷ் கோபமாக சென்று கதவை திறந்து ,
"ஹலோ ஏன் இவ்வளவு லேட் , சாப்பாடு இவ்வளவு லேட்டா டெலிவரி பண்றீங்க, அதுவும் நாங்க சாப்பிடவா இல்லை நாய்க்கு போடவா ,இருங்க உங்கள் ஆப்பிஸ்ல ரிப்போர்ட் பண்றேன் என வயிறு பசியிலும், தாமதமான கோபத்திலும் டெலிவரி பண்ணவங்களை திட்டி கொண்டிருந்தான் மகேஷ்.

"இவன் என்ன இவ்வளவு நேரமா வாங்குறான்" என்று அங்கு வந்து பார்த்த வினய்க்கு , மகேஷ் முன் சாப்பாடு பார்சலுடன் ஒரு பெண் நின்று கோண்டிருந்தாள்.

மகேஷ் தோளை தொட்டவன் அவனிடம்

"டேய் ஏன்டா அதான் சாப்பாடு வந்துட்டுல அதுக்கு எதுக்கு இப்படி திட்டுற" என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தாள் அப்பெண்.

"சாரி சார் என் தப்பு தான், அவங்க ஊங்க டெலிவரி கேர்ல் கிடையாது " என்று இன்னொரு குரல் கேட்க இருவரும் அப்பெண் பின்னாடி பார்த்தனர், அங்கு மற்றொரு டெலிவரி பாய் கை கால் இரத்ததுடன் தாங்கி தாங்கி நடந்து வந்தார்.

"நீங்க எதுக்கு இப்போ இங்க வந்தீங்க ப்ரோ உங்கள கீழே தானே இருக்க சொன்னேன்" என்றாள் அப்பெண்.

"நீ சும்மா இருங்க சிஸ்டர் டெலிவரி லேட் ஆனா எவ்வளவு திட்டு விழும்னு எனக்கு தெரியும் " என அந்த டெலிவரி பையன் கூறவும்.

வினய் "என்னாச்சு உங்களுக்கு" என்றான்.

"சார் நான் உங்களுக்கு டெலவரி பண்ண வேகமா வந்துட்டு இருக்கும் போது, ரோட்டுல ஒரு நாய் இடையில வந்துட்டு, அதுல வழுக்கி கீழே விழுந்துட்டேன், நல்ல வேலை சாப்பாடு பாக்ல இருந்ததால ஒண்ணும் ஆகல, நைட்ல அந்த ரோட்ல யாருமே இல்லை, அப்போது தான் இவங்க அந்த பக்கம் வந்தாங்க ,

"ஐய்யோ என்னாச்சு ப்ரோ"என அப்பெண் கேட்க.

"சர்வீஸ் போகும் போது நாய் இடையில வந்துட்டு சிஸ்டர் "அப்போது அவன் தொலைபேசிக்கு போன் வந்து கொண்டே இருந்தது.

"எடுத்து பேசுங்க ப்ரோ இப்போ 5 நிமிடத்தில வந்துடுறேன் சொல்லுங்க " என அப்பெண் கூறவும்.

"எப்படி சிஸ்டர், என்னால எந்திக்க முடியல, வண்டி வேற இப்படி கிடக்கு , இந்த ஆர்டர் அவ்வளவு தான் என் சம்பளத்துல தான் பிடிப்பாங்க." என அவன் கண்கள் கலங்கி கூறவும்.

"அட ப்ரோ இதுக்கெல்லாம் பீல் பண்ண கூடாது டெலிவரி பாய் வாழ்க்கையில கீழ விழுறது எல்லாம் சகஜம் நீங்க மெல்ல எந்திரிங்க ஆர்டர் டெலிவரி பண்ணிட்டு ஹாஸ்பிட்டல் போவோம், சாப்பாடு கேன்சல் ஆகாது வாங்க மெல்ல எந்திரிங்க." அவன் கை பிடித்து தூக்கி பின் சாப்பாடு வைத்திருக்கும் பாக்ஸை அவன் கையில் கொடுத்து தன் வண்டியில் ஏற்றி கொண்டு இங்கு வந்து சேர்ந்தனர்.

" சார் ,அவங்க டி - சர்ட் பார்த்தால் தெரியலையா ,அவங்க வேற கம்பெனி நீங்க ஆர்டர் பண்ணது வேற கம்பெனி, ஸாரி சார் லேட் டெலிவரிக்கு " என தன் உடல் வலியில் அந்த டெலிவரி பாய் கூறவும் தான் மகேஷ் அந்த பெண்ணின் கம்பெனி பெயரை பார்த்தான்.

"ஐய்யோ ஸாரி சிஸ்டர், சாப்பாடு லேட் ஆகிட்டேனு டென்சன்ல கத்திட்டேன்" என மகேஷ் கூறவும்,

"பரவாயில்லை சார் விடுங்க, ஆனா நாங்களும் மனுசங்க தான் உங்களுக்கு ஐந்து நிமிடத்துல டெலிவரி பண்ண நாங்க எங்க உயிரை பணயம் வைச்சு வர்றோம் சார், முன்ன பின்ன சில நேரம் இந்த மாதிரி தவிர்க முடியாம லேட் ஆகலாம் கொஞ்சம் என்னனு எங்கிட்டயும் கேளுங்க சார், இப்படி வாய்க்கு வந்தபடி திட்ட வேண்டாம், எதாட்டு தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க சார்"

என அப்பெண், தன்னுடன் வந்தவரை அழைத்து கொண்டு அடுத்து மருத்துவமனை சென்றனர்.

இவை அனைத்தையும் கன்வெட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் வினய் .

""அடேய், நாசமா போறவிங்களா உங்க பஞ்சாயத்து முடிஞ்சதுனா சாப்பாட தாங்கடா என்னால முடியல" என மது சத்தம் போட்டு கூறியதோடு சோபாவில் மயங்கி கிரங்கியவாறு படுத்து கிடந்தாள் .

"இங்கே எவ்வளவு பெரிய அமலி குமலி போகுது இதுக்கு சோறு தான் முக்கியம் " என மகேஷ் தலையில் அடித்து கொண்டு செல்ல, வினய் போனவள் சென்ற பாதையையே திரும்பி பார்த்தான்.

கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/நிலவு-கருத்து-திரி.213/
 
Status
Not open for further replies.
Top