Priyanka Muthukumar
Administrator
தீரன் 14
அவளது கெட்ட நேரத்துக்கு தீரனின் தாய் வேறு அன்று கோவிலுக்கு சென்று இருக்க, கரு கலைந்ததால் உண்டான உடல் வலியை விட, தன்னுயிர் தன்னை விட்டு சென்று விட்ட மன வலி அவளுக்கு அதிகமானது . வயிற்றை பொத்தியபடி கண்ணீர் விட்டு கதறி அழுதாள் உரு பெறாத தனது உயிருக்காக.. சிறிது நேரம் கழித்து எழுந்தவளுக்கு உதிர போக்கு அதிகமாக இருக்க குளியலறையை கண்ணீருடன் கழுவியவள் தன்னையும் சுத்தப்படுத்தி விட்டு வெளியே வந்து தீரனுக்கு அழைக்க அவனோ கோபத்தில் தொலைபேசியை கட் பண்ணி கொண்டே இருந்தான். அதுவும் அவளுக்கு அழுகையுடன் கூடிய மன வலியை அளிக்க "ஷீட்" என்றவள் கட்டிலில் படுத்து குலுங்கி குலுங்கி அழுதபடி தூங்கி போனாள்.
வயிற்றில் இருக்கும் சிசுவின் இழப்பு எப்படி இருக்கும் என்று அனுபவித்த தாய் மாரை கேட்டால் புரியும். பல வித கனவுகளுடன் கூடிய எதிர்பார்ப்பை சிதைத்த உணர்வு அது. அதே நேரம் கோபத்தில் வெளியே வந்த தீரன் நேரே சென்றது கடற்கரைக்கு தான். தன்னவளது மிருக தனமான முடிவு அவனையும் அந்த கணத்தில் மிருக்கமாக்கி இருந்தது. அவள் கருத்தடை மாத்திரையை பாவிக்க விடாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான். அதன் பலனை அவள் அழிக்க நினைத்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. "மனுஷியா அவள், ராட்சசி" என்று முணு முணுத்தவன் அவள் மீண்டும் மீண்டும் அழைத்தலால் போனை அணைத்து விட்டு பான்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் விட்டு கடலை வெறித்து பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான்.
அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் மனைவியாக இருந்தாலும் தனது சிசுவுக்கு ஆபத்து என்றதும் ஒரு தந்தையாகவே யோசித்தான். சிறிது நேரம் கழித்து பெருமூச்சு விட்டு நிதானமாக தனது மனைவியின் குணத்தை பற்றி அலசி ஆராய்ந்தவன் இறுதியாக "மகதி சொன்னா கேட்டுப்பா... கொஞ்சம் கோபம் வரும் பட் இப்படி கலைக்கிற அளவுக்கு போக மாட்டா " என்று தன் மனைவியை பற்றி சரியாக கணித்தபடி சற்று நேரத்தில் நடக்க இருக்கும் பிரளயம் பற்றி அறியாமல் வீட்டுக்கு புறப்பட்டான்.
அவன் தாய் கோவில் சென்று இருப்பதை அவன் ஏற்கனவே அறிந்ததால் வீட்டை அடைந்ததும் நேரே நேரே தனது அறைக்குள் சென்றான். அங்கு மகதி கட்டிலில் காலை ஒடுக்கி படுத்து இருக்க அவள் அருகே வந்து இருந்தவன் தூங்கி கொண்டு இருந்த அவள் பால் வண்ண முகத்தை கூர்ந்து பார்த்து ரசிக்க தொடங்கினான். "இந்த முகம் அப்படியான பாவ வேலையை கண்டிப்பாக செய்யாது, ஏதோ கோபத்தில் சொல்லி இருப்பா. " என்று நினைத்தவன் அவள் நெற்றியில் இருந்த முடியை ஒதுக்கி விட்டு அவள் நெற்றியில் தனது இதழ்களை பதித்தான்.
நெற்றியில் இருந்து இறங்கிய அவன் இதழ்கள் அவள் பட்டு கன்னத்தை தீண்டி அவள் இதழ்களில் தஞ்சமடைந்து இருந்தது. அவள் இதழ்களில் மூழ்கி போன அவன் ஈர இதழ்கள் அவள் துயிலை கலைக்க மெதுவாக கண் விழித்து பார்த்தாள். குழந்தையை இழந்த அவளால் அவன் இதழ் அணைப்பில் மூழ்க முடியவில்லை. அவள் மனம் பாரமாக இருக்க எந்த அசைவும் இல்லாமல் அவனை பார்த்தபடி படுத்து இருந்தாள்.
அவள் கண் விழித்தும் தனது முத்தத்தில் கிறங்காமல் இருக்க "இன்னும் கோபம் தீரலையா?" என்று நினைத்தபடி அவள் இதழ்களை விடுவித்தவன் மெதுவாக நிமிர்ந்து இருக்க அவளும் சோகமான முகத்துடன் மெதுவாக எழுந்து இருந்தாள்.
அவசரத்துக்கு தான் அழைத்த போதும் கூட அவன் போனை எடுக்காத கோபமும் குழந்தையை இழந்த வருத்தமும் அவள் முகத்தில் கலவையாக இருக்க . அதை எல்லாம் பற்றி அறியாத அவனோ அவள் கையை தனது கைக்குள் உள்ளடக்கியபடி "இங்க பாரு மகதி, நமக்கு கடவுள் தந்த கொடை , அத கலைக்க நினைக்கலாமா?' என்று கேட்டான். அதை கேட்டதும் அவள் முகம் மேலும் இறுகி போக மெதுவாக எழுந்து நிற்க அவனும் அவள் முன்னாடி எழுந்து நின்றான். அவனை கூர்ந்து பார்த்தவள் மெதுவாக வாய் திறந்து "தீரன், எனக்கு அபார்ட் ஆயிடுச்சு, பாத்ரூம் " என்று அடுத்த வசனம் ஆரம்பிக்க முதலே அவள் ரெண்டடி தூரத்தில் கீழே விழுந்து இருந்தாள். சற்று முன்னர் வரை தனது வாரிசுக்காக அவளிடம் மண்டி இட்டவன் அவள் சொன்ன சேதி கேட்டு ருத்ர மூர்த்தியாக மாறி இருந்தான். இப்படியான மிருகத்தனமான தாக்குதலை அவளும் எதிர்பார்க்கவில்லை.
ஏற்கனவே குழந்தையை இழந்து உடல்வலியுடனும் மன வலியுடனும் இருந்தவளுக்கு அவன் அறைந்தது எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல வலிக்க கன்னத்தை பொத்தியபடி நிமிர்த்து பார்த்தவள் "தீரன்" என்று நலிந்த குரலில் அழைத்தாள். "நீ பேசாதடி.. ராட்சசி... நம்ம குழந்தையை அழிக்க உனக்கு எப்படிடி மனசு வந்திச்சு?" என்று அடி குரலில் அவன் சீறியதில் மகதி பயத்தில் வெட வெடத்து தான் போனாள். மெதுவாக கஷ்டபட்டு எழுந்தவள் "தீரன், நான் சொல்றத"' என்று அவள் ஆரம்பிக்க அவளை கை நீட்டி தடுத்தவன். " என்னடி பெருசா சொல்ல போற? மூணு வருஷம் சந்தோஷமா இருக்கணும் , அத தானே சொல்ல போற? உனக்கு செ** தான் முக்கியம்,,, குழந்தை எல்லாம் உனக்கு டிஸ்டர்பன்ஸ்..நீயெல்லாம் பொண்ணா ? மனிதாபிமானம் இல்லாத ராட்சசி ,,, சிக்,,," என்று அருவருத்து பேச அவளோ மனதுக்குள் அடிபட்டு போனாள்,
அவளை பார்த்து அப்படி ஒரு வார்த்தை தீரன் வாயால் வந்ததை அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. காலை இரவு என்று பாராமல் அவளை நாடுவது அவன் தானே, சில தடவைகள் அவன் வன்மைக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும் தனது வலியை அவனுக்காக தாங்கி கொண்டு அவன் ஆசைகளை நிறைவேற்றி இருக்கிறாளே. அப்படி பட்ட அவளை பார்த்து அவன் கூறிய வார்த்தை அவன் மேல் உள்ள அவள் காதலை அந்த இடத்திலேயே குழி தோண்டி புதைத்தது. அவனை நிமிர்ந்து அடி பட்ட பார்வை பார்த்தவள் ஆக்ரோஷமாக "தீரன், மைண்ட் யுவர் வேர்ட்ஸ்" என்று சீற அவளை அனல் தெறிக்க பார்த்தவன் வை ஷுட் ஐ? யு ஆர் செ** அடிக்ட்.. அதற்காக குழந்தையை அழிச்ச கொலைகாரி, உனக்கும் கள்ள காதலுக்காக பசங்களை சாகடிச்ச அந்த பொண்ணுக்கும் என்னடி வித்தியாசம் ? " என்று அண்மையில் நடைபெற்ற நாட்டை உலுக்கிய நிகழ்வை நிகழ்வை பற்றி கேட்க இரு கைகளாலும் காதை பொத்தியவள் "ஸ்டாப் இட் தீரன் " என்று கத்தினாள். அவனோ அவளை அழுத்தமாக பார்க்க நிமிர்ந்து அவனை எரித்து விடுவது போல பார்த்தவள் "நீ என்னை உன்னோட அடிமை என்று நினைச்சியா? என்ன வேணும்னாலும் பேசுற? நானா உன் கிட்ட வந்தேனா? நீ தானே எப்போ பார்த்தாலும் பின்னால பின்னால வர்ற? நான் செ ** அடிக்ட் இல்ல,, நீ தான்" என்று ஒருமையில் வார்த்தைகளை கடித்து துப்ப ஏற்கனவே கோபத்தின் உச்சாணி கொம்பில் இருந்தவனது கொஞ்ச நெஞ்ச பொறுமையும் காற்றில் பறந்து போனது. அவள் தலைமுடியை பிடித்து இழுத்து கொண்டு வந்தவன் "வெளிய போடி" என்றபடி வெளியே தள்ள அவள் தன்மானம் அவனிடத்தில் பெரிதும் அடி வாங்கியது. உள்ளே சென்றவன் அவள் உடுப்பு பெட்டியையும் தூக்கி வீசி எறிந்து "திரும்பி பார்க்காம வெளிய போ" என்று சொடக்கிட்டு சொன்னவன் கதவை அடித்து சாத்தினான்.
அவளோ தீரனின் நடவடிக்கையில் விக்கித்து நிற்க அந்த நேரம் கோவிலில் இருந்து வந்த தீரனின் தாய் " என்னம்மா இது?" என்றபடி அவளை எழுப்ப போக அவர் கையை தட்டி விட்டவள் "இப்படி ஒரு மகனை பெத்துக்கு நீங்க மலடியாவே இருந்திருக்கலாம்" என்று அவன் மேலுள்ள கோபத்தில் அவரை வார்த்தையால் வதைக்க அவரோ அதிர்ந்தபடி அவளை பார்த்தார். மகதியின் கண்ணில் இருந்து கண்ணீர் கட்டுப்பாடு இல்லாமல் தாரை தரையாக வடிய அதை துடைத்தவள் பெட்டியை தூக்கி கொண்டு போனாள். ,தீரனின் தாயாரால் மகதியின் வாயில் இருந்து வந்த அமில வார்த்தைகளை கேட்ட பின்னர் அவளை தடுக்கவே மனதுக்குள் பயந்து போனார்.
அவள் செல்வதை மன பாரத்துடன் பார்த்தவர், விறு விறுவென்று வீட்டுக்குள் சென்று கதவை திறந்து ஹாலில் பெருமூச்செடுத்து தனது கோபத்தை கட்டுப்படுத்தியபடி சோபாவில் அமர்ந்து இருந்த தீரனிடம் "தீரன் என்ன ஆச்சு?" என்று கலங்கிய கண்களுடன் கேட்க "நம்ம வீட்டு வாரிசை அழிச்ச கொலைகாரி பத்தி என் கிட்ட பேச வேணாம்" என்றவன் பாய்ந்து எழுந்து தனது அறைக்குள் புகுந்து கதவை அடித்து சாத்தினான்.
ஏற்கனவே மருமகள் வீட்டை விட்டு சென்றதில் விக்கித்து நின்றவருக்கு குழந்தை கலைந்த விடயம் இதயத்தை கத்தி கொண்டு கிழிக்க சாமி அறைக்குள் சென்றவர் தனது கணவன் படம் முன்னே அழுது தனது மன பாரத்தை கொட்டி தீர்த்தார். அவருக்கு தெரியும் இருவரும் கதைத்து பேசி சமாதானம் செய்யக்கூடியவர்கள் இல்லை என்ற விடயம்.
நேரே மகளிர் விடுதிக்கு வந்த மகதி நேரே தனது தந்தைக்கு அழைத்து "அப்பா, நான் டிவோர்ஸ் பண்ண போறேன், " என்று மட்டும் சொன்னவள் மேலும் எதுவும் சொல்லவும் இல்லை. என்ன விடயம் என்று தெரிந்தால் தானே சேர்த்து வைக்க முடியும். இருவரும் யாரிடமும் எதுவும் கூறவே இல்லையே, தீரனுக்கு அவள் மேல் எல்லை கடந்த கோபமும் ஆத்திரமும் இருந்தாலும் அவளை பிரிய யோசிக்கவில்லை. ஆனால் வீட்டை விட்டு இவ்வாறு தன்னை அவமான படுத்தி, தன்னை பேச விடாமல். புரிந்து கொள்ளாமல் இருந்த தீரனை ஏற்று கொள்ள அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. நாட்கள் நகர ஒரு நாள் வீட்டுக்கு வந்த தீரனை பார்க்க வந்தார் அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் வார்டன். சற்று நாட்கள் முன்னர் அவர் குழந்தையின் ஆபெரேஷனுக்கு தனது சொந்த முயற்சியில் குறைந்த வட்டிக்கு பேங்க் லோனும் , தன்னால் முடிந்த பண உதவியும் செய்து கொடுத்தாள் மகதி. இதை அறிந்த தீரன் அன்று முழுதும் அவளை முத்தத்தால் குளிக்க வைத்தது வேறு கதை. ஆபரேஷன் முடிந்து மகனுடன் நன்றி சொல்ல வந்தவரை பார்த்த தீரன் "அவ இங்க இல்லை" என்று மட்டும் கூறினான். மேலும் அவனிடம் கேள்வி கேட்க முடியாததால் அமைதியாக அவரும் சென்று விட அவன் மனமோ "இப்படி உதவி செய்றவ , மென்மையான மனம் படைத்தவ கருவை கலைச்சு இருப்பாளா?" என்று யோசித்தவன் மனம் அவள் ராட்ஷசி போல பேசியதை மீண்டும் அசைபோட அவள் மேல் கோபம் மறுபடியும் வந்து இறங்கியது.
அன்றைய நாளை அவள் நினைவுடனேயே கழித்து விட்டு , அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்றவனுக்கு அதிர்ச்சியாக அவன் மேசையில் வைக்கப்பட்டு இருந்தது விவாகரத்து பத்திரம், அதை பார்த்து அவன் கோபம் தாறு மாறாக எகிற "தப்பு செய்த உனக்கே இவ்வளவு திமிர் இருக்கும்ன்னா , எனக்கு எவ்வளவு இருக்கும்?" என்று நினைத்தவன் சற்றும் யோசிக்காமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இட்டு அவளுக்கு அனுப்பினான்.
மகதி விவாகரத்து கோரி இருந்தாலும் அவள் காதல் கொண்ட மனம் மீண்டும் அவன் தன்னிடம் வருவான் , செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பான் என்று எதிர்பாத்திருந்தது. ஆனால் அவன் கையெழுத்து இட்ட விவாகரத்து பத்திரம் அவளுக்கு கோபத்தை பெற்றோல் ஊற்றி எரிய வைத்தது. நாட்கள் மெதுவாக நகர இருவரையும் கோர்ட்டில் அழைத்து விசாரித்தவர்கள் அடுத்த ஆறு மாதங்கள் அளவிலேயே இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கினார்கள்.
அன்றைய நாள் இருவருக்கும் உண்ணா விரதமாகவே கழிய, இருவரையும் சுற்றி இருந்த அனைவரும் அவர்கள் பிரிவில் கவலை கொள்ள மோனிஷா மட்டும் சந்தோசம் கொண்டாள்.
இந்த சந்தர்ப்பத்தில் தான், மகதியை ரணதீரன் சிக்னல் லைட்டில் நீண்ட காலம் கழித்து கண்டு அவள் அழகில் தன்னை அறியாமல் மயங்கி போனதும், அவளை தீண்ட வந்தவனை தாக்கி அவன் கையை உடைத்தும் நடந்தது.
மேலும் பேங்க் கொலை கேஸ் அனைத்தும் அவளை சுற்றியே பின்னப்பட்டு அவள் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதும் முதலில் துடித்து போனது அவன் தான், . தன்னவள் குற்றவாளி அல்ல என்று அவன் மனம் அடித்து கூறினாலும் சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் அவள் குற்றவாளியாக சுட்டிக்காட்ட பட்டாள். தீரனுக்கு அவள் மேல் இருந்த கோபம் மெதுவாக அகன்று காதல் பிறந்தாலும் மகதியின் புண் பட்ட மனம் ஆற மறுத்தது. காதல் கொண்ட மனம் தன்னவர்கள் தவறை மன்னிப்பது இயல்பு தானே, அதை தான் தீரன் செய்தான். ஆனால் மகதிக்கோ தான் செய்யாத தப்புக்கு அவன் அளித்த தண்டனைகளை ஏற்று கொள்ள முடியவில்லை. தன்னவன் நெருக்கத்தை மனம் விரும்பினாலும் கஷ்டப்பட்டு தனது மனதை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தாள். காதல் விடயத்தில் பெண்களுக்கு இருக்கும் மன கட்டுப்பாடு ஆண்களுக்கு எப்போதும் இருப்பதில்லை. அதற்கு தீரன் மட்டும் விதிவிலக்கா என்ன?
தத்தமது நினைவில் இருந்து மீண்ட இருவரினதும் மனம் கனத்து போக அடுத்து நடக்க இருப்பதை பற்றி தீரன் தீவிரமாக யோசிக்க தொடங்கினான்.
அவளது கெட்ட நேரத்துக்கு தீரனின் தாய் வேறு அன்று கோவிலுக்கு சென்று இருக்க, கரு கலைந்ததால் உண்டான உடல் வலியை விட, தன்னுயிர் தன்னை விட்டு சென்று விட்ட மன வலி அவளுக்கு அதிகமானது . வயிற்றை பொத்தியபடி கண்ணீர் விட்டு கதறி அழுதாள் உரு பெறாத தனது உயிருக்காக.. சிறிது நேரம் கழித்து எழுந்தவளுக்கு உதிர போக்கு அதிகமாக இருக்க குளியலறையை கண்ணீருடன் கழுவியவள் தன்னையும் சுத்தப்படுத்தி விட்டு வெளியே வந்து தீரனுக்கு அழைக்க அவனோ கோபத்தில் தொலைபேசியை கட் பண்ணி கொண்டே இருந்தான். அதுவும் அவளுக்கு அழுகையுடன் கூடிய மன வலியை அளிக்க "ஷீட்" என்றவள் கட்டிலில் படுத்து குலுங்கி குலுங்கி அழுதபடி தூங்கி போனாள்.
வயிற்றில் இருக்கும் சிசுவின் இழப்பு எப்படி இருக்கும் என்று அனுபவித்த தாய் மாரை கேட்டால் புரியும். பல வித கனவுகளுடன் கூடிய எதிர்பார்ப்பை சிதைத்த உணர்வு அது. அதே நேரம் கோபத்தில் வெளியே வந்த தீரன் நேரே சென்றது கடற்கரைக்கு தான். தன்னவளது மிருக தனமான முடிவு அவனையும் அந்த கணத்தில் மிருக்கமாக்கி இருந்தது. அவள் கருத்தடை மாத்திரையை பாவிக்க விடாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான். அதன் பலனை அவள் அழிக்க நினைத்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. "மனுஷியா அவள், ராட்சசி" என்று முணு முணுத்தவன் அவள் மீண்டும் மீண்டும் அழைத்தலால் போனை அணைத்து விட்டு பான்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் விட்டு கடலை வெறித்து பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான்.
அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் மனைவியாக இருந்தாலும் தனது சிசுவுக்கு ஆபத்து என்றதும் ஒரு தந்தையாகவே யோசித்தான். சிறிது நேரம் கழித்து பெருமூச்சு விட்டு நிதானமாக தனது மனைவியின் குணத்தை பற்றி அலசி ஆராய்ந்தவன் இறுதியாக "மகதி சொன்னா கேட்டுப்பா... கொஞ்சம் கோபம் வரும் பட் இப்படி கலைக்கிற அளவுக்கு போக மாட்டா " என்று தன் மனைவியை பற்றி சரியாக கணித்தபடி சற்று நேரத்தில் நடக்க இருக்கும் பிரளயம் பற்றி அறியாமல் வீட்டுக்கு புறப்பட்டான்.
அவன் தாய் கோவில் சென்று இருப்பதை அவன் ஏற்கனவே அறிந்ததால் வீட்டை அடைந்ததும் நேரே நேரே தனது அறைக்குள் சென்றான். அங்கு மகதி கட்டிலில் காலை ஒடுக்கி படுத்து இருக்க அவள் அருகே வந்து இருந்தவன் தூங்கி கொண்டு இருந்த அவள் பால் வண்ண முகத்தை கூர்ந்து பார்த்து ரசிக்க தொடங்கினான். "இந்த முகம் அப்படியான பாவ வேலையை கண்டிப்பாக செய்யாது, ஏதோ கோபத்தில் சொல்லி இருப்பா. " என்று நினைத்தவன் அவள் நெற்றியில் இருந்த முடியை ஒதுக்கி விட்டு அவள் நெற்றியில் தனது இதழ்களை பதித்தான்.
நெற்றியில் இருந்து இறங்கிய அவன் இதழ்கள் அவள் பட்டு கன்னத்தை தீண்டி அவள் இதழ்களில் தஞ்சமடைந்து இருந்தது. அவள் இதழ்களில் மூழ்கி போன அவன் ஈர இதழ்கள் அவள் துயிலை கலைக்க மெதுவாக கண் விழித்து பார்த்தாள். குழந்தையை இழந்த அவளால் அவன் இதழ் அணைப்பில் மூழ்க முடியவில்லை. அவள் மனம் பாரமாக இருக்க எந்த அசைவும் இல்லாமல் அவனை பார்த்தபடி படுத்து இருந்தாள்.
அவள் கண் விழித்தும் தனது முத்தத்தில் கிறங்காமல் இருக்க "இன்னும் கோபம் தீரலையா?" என்று நினைத்தபடி அவள் இதழ்களை விடுவித்தவன் மெதுவாக நிமிர்ந்து இருக்க அவளும் சோகமான முகத்துடன் மெதுவாக எழுந்து இருந்தாள்.
அவசரத்துக்கு தான் அழைத்த போதும் கூட அவன் போனை எடுக்காத கோபமும் குழந்தையை இழந்த வருத்தமும் அவள் முகத்தில் கலவையாக இருக்க . அதை எல்லாம் பற்றி அறியாத அவனோ அவள் கையை தனது கைக்குள் உள்ளடக்கியபடி "இங்க பாரு மகதி, நமக்கு கடவுள் தந்த கொடை , அத கலைக்க நினைக்கலாமா?' என்று கேட்டான். அதை கேட்டதும் அவள் முகம் மேலும் இறுகி போக மெதுவாக எழுந்து நிற்க அவனும் அவள் முன்னாடி எழுந்து நின்றான். அவனை கூர்ந்து பார்த்தவள் மெதுவாக வாய் திறந்து "தீரன், எனக்கு அபார்ட் ஆயிடுச்சு, பாத்ரூம் " என்று அடுத்த வசனம் ஆரம்பிக்க முதலே அவள் ரெண்டடி தூரத்தில் கீழே விழுந்து இருந்தாள். சற்று முன்னர் வரை தனது வாரிசுக்காக அவளிடம் மண்டி இட்டவன் அவள் சொன்ன சேதி கேட்டு ருத்ர மூர்த்தியாக மாறி இருந்தான். இப்படியான மிருகத்தனமான தாக்குதலை அவளும் எதிர்பார்க்கவில்லை.
ஏற்கனவே குழந்தையை இழந்து உடல்வலியுடனும் மன வலியுடனும் இருந்தவளுக்கு அவன் அறைந்தது எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல வலிக்க கன்னத்தை பொத்தியபடி நிமிர்த்து பார்த்தவள் "தீரன்" என்று நலிந்த குரலில் அழைத்தாள். "நீ பேசாதடி.. ராட்சசி... நம்ம குழந்தையை அழிக்க உனக்கு எப்படிடி மனசு வந்திச்சு?" என்று அடி குரலில் அவன் சீறியதில் மகதி பயத்தில் வெட வெடத்து தான் போனாள். மெதுவாக கஷ்டபட்டு எழுந்தவள் "தீரன், நான் சொல்றத"' என்று அவள் ஆரம்பிக்க அவளை கை நீட்டி தடுத்தவன். " என்னடி பெருசா சொல்ல போற? மூணு வருஷம் சந்தோஷமா இருக்கணும் , அத தானே சொல்ல போற? உனக்கு செ** தான் முக்கியம்,,, குழந்தை எல்லாம் உனக்கு டிஸ்டர்பன்ஸ்..நீயெல்லாம் பொண்ணா ? மனிதாபிமானம் இல்லாத ராட்சசி ,,, சிக்,,," என்று அருவருத்து பேச அவளோ மனதுக்குள் அடிபட்டு போனாள்,
அவளை பார்த்து அப்படி ஒரு வார்த்தை தீரன் வாயால் வந்ததை அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. காலை இரவு என்று பாராமல் அவளை நாடுவது அவன் தானே, சில தடவைகள் அவன் வன்மைக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும் தனது வலியை அவனுக்காக தாங்கி கொண்டு அவன் ஆசைகளை நிறைவேற்றி இருக்கிறாளே. அப்படி பட்ட அவளை பார்த்து அவன் கூறிய வார்த்தை அவன் மேல் உள்ள அவள் காதலை அந்த இடத்திலேயே குழி தோண்டி புதைத்தது. அவனை நிமிர்ந்து அடி பட்ட பார்வை பார்த்தவள் ஆக்ரோஷமாக "தீரன், மைண்ட் யுவர் வேர்ட்ஸ்" என்று சீற அவளை அனல் தெறிக்க பார்த்தவன் வை ஷுட் ஐ? யு ஆர் செ** அடிக்ட்.. அதற்காக குழந்தையை அழிச்ச கொலைகாரி, உனக்கும் கள்ள காதலுக்காக பசங்களை சாகடிச்ச அந்த பொண்ணுக்கும் என்னடி வித்தியாசம் ? " என்று அண்மையில் நடைபெற்ற நாட்டை உலுக்கிய நிகழ்வை நிகழ்வை பற்றி கேட்க இரு கைகளாலும் காதை பொத்தியவள் "ஸ்டாப் இட் தீரன் " என்று கத்தினாள். அவனோ அவளை அழுத்தமாக பார்க்க நிமிர்ந்து அவனை எரித்து விடுவது போல பார்த்தவள் "நீ என்னை உன்னோட அடிமை என்று நினைச்சியா? என்ன வேணும்னாலும் பேசுற? நானா உன் கிட்ட வந்தேனா? நீ தானே எப்போ பார்த்தாலும் பின்னால பின்னால வர்ற? நான் செ ** அடிக்ட் இல்ல,, நீ தான்" என்று ஒருமையில் வார்த்தைகளை கடித்து துப்ப ஏற்கனவே கோபத்தின் உச்சாணி கொம்பில் இருந்தவனது கொஞ்ச நெஞ்ச பொறுமையும் காற்றில் பறந்து போனது. அவள் தலைமுடியை பிடித்து இழுத்து கொண்டு வந்தவன் "வெளிய போடி" என்றபடி வெளியே தள்ள அவள் தன்மானம் அவனிடத்தில் பெரிதும் அடி வாங்கியது. உள்ளே சென்றவன் அவள் உடுப்பு பெட்டியையும் தூக்கி வீசி எறிந்து "திரும்பி பார்க்காம வெளிய போ" என்று சொடக்கிட்டு சொன்னவன் கதவை அடித்து சாத்தினான்.
அவளோ தீரனின் நடவடிக்கையில் விக்கித்து நிற்க அந்த நேரம் கோவிலில் இருந்து வந்த தீரனின் தாய் " என்னம்மா இது?" என்றபடி அவளை எழுப்ப போக அவர் கையை தட்டி விட்டவள் "இப்படி ஒரு மகனை பெத்துக்கு நீங்க மலடியாவே இருந்திருக்கலாம்" என்று அவன் மேலுள்ள கோபத்தில் அவரை வார்த்தையால் வதைக்க அவரோ அதிர்ந்தபடி அவளை பார்த்தார். மகதியின் கண்ணில் இருந்து கண்ணீர் கட்டுப்பாடு இல்லாமல் தாரை தரையாக வடிய அதை துடைத்தவள் பெட்டியை தூக்கி கொண்டு போனாள். ,தீரனின் தாயாரால் மகதியின் வாயில் இருந்து வந்த அமில வார்த்தைகளை கேட்ட பின்னர் அவளை தடுக்கவே மனதுக்குள் பயந்து போனார்.
அவள் செல்வதை மன பாரத்துடன் பார்த்தவர், விறு விறுவென்று வீட்டுக்குள் சென்று கதவை திறந்து ஹாலில் பெருமூச்செடுத்து தனது கோபத்தை கட்டுப்படுத்தியபடி சோபாவில் அமர்ந்து இருந்த தீரனிடம் "தீரன் என்ன ஆச்சு?" என்று கலங்கிய கண்களுடன் கேட்க "நம்ம வீட்டு வாரிசை அழிச்ச கொலைகாரி பத்தி என் கிட்ட பேச வேணாம்" என்றவன் பாய்ந்து எழுந்து தனது அறைக்குள் புகுந்து கதவை அடித்து சாத்தினான்.
ஏற்கனவே மருமகள் வீட்டை விட்டு சென்றதில் விக்கித்து நின்றவருக்கு குழந்தை கலைந்த விடயம் இதயத்தை கத்தி கொண்டு கிழிக்க சாமி அறைக்குள் சென்றவர் தனது கணவன் படம் முன்னே அழுது தனது மன பாரத்தை கொட்டி தீர்த்தார். அவருக்கு தெரியும் இருவரும் கதைத்து பேசி சமாதானம் செய்யக்கூடியவர்கள் இல்லை என்ற விடயம்.
நேரே மகளிர் விடுதிக்கு வந்த மகதி நேரே தனது தந்தைக்கு அழைத்து "அப்பா, நான் டிவோர்ஸ் பண்ண போறேன், " என்று மட்டும் சொன்னவள் மேலும் எதுவும் சொல்லவும் இல்லை. என்ன விடயம் என்று தெரிந்தால் தானே சேர்த்து வைக்க முடியும். இருவரும் யாரிடமும் எதுவும் கூறவே இல்லையே, தீரனுக்கு அவள் மேல் எல்லை கடந்த கோபமும் ஆத்திரமும் இருந்தாலும் அவளை பிரிய யோசிக்கவில்லை. ஆனால் வீட்டை விட்டு இவ்வாறு தன்னை அவமான படுத்தி, தன்னை பேச விடாமல். புரிந்து கொள்ளாமல் இருந்த தீரனை ஏற்று கொள்ள அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. நாட்கள் நகர ஒரு நாள் வீட்டுக்கு வந்த தீரனை பார்க்க வந்தார் அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் வார்டன். சற்று நாட்கள் முன்னர் அவர் குழந்தையின் ஆபெரேஷனுக்கு தனது சொந்த முயற்சியில் குறைந்த வட்டிக்கு பேங்க் லோனும் , தன்னால் முடிந்த பண உதவியும் செய்து கொடுத்தாள் மகதி. இதை அறிந்த தீரன் அன்று முழுதும் அவளை முத்தத்தால் குளிக்க வைத்தது வேறு கதை. ஆபரேஷன் முடிந்து மகனுடன் நன்றி சொல்ல வந்தவரை பார்த்த தீரன் "அவ இங்க இல்லை" என்று மட்டும் கூறினான். மேலும் அவனிடம் கேள்வி கேட்க முடியாததால் அமைதியாக அவரும் சென்று விட அவன் மனமோ "இப்படி உதவி செய்றவ , மென்மையான மனம் படைத்தவ கருவை கலைச்சு இருப்பாளா?" என்று யோசித்தவன் மனம் அவள் ராட்ஷசி போல பேசியதை மீண்டும் அசைபோட அவள் மேல் கோபம் மறுபடியும் வந்து இறங்கியது.
அன்றைய நாளை அவள் நினைவுடனேயே கழித்து விட்டு , அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்றவனுக்கு அதிர்ச்சியாக அவன் மேசையில் வைக்கப்பட்டு இருந்தது விவாகரத்து பத்திரம், அதை பார்த்து அவன் கோபம் தாறு மாறாக எகிற "தப்பு செய்த உனக்கே இவ்வளவு திமிர் இருக்கும்ன்னா , எனக்கு எவ்வளவு இருக்கும்?" என்று நினைத்தவன் சற்றும் யோசிக்காமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இட்டு அவளுக்கு அனுப்பினான்.
மகதி விவாகரத்து கோரி இருந்தாலும் அவள் காதல் கொண்ட மனம் மீண்டும் அவன் தன்னிடம் வருவான் , செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பான் என்று எதிர்பாத்திருந்தது. ஆனால் அவன் கையெழுத்து இட்ட விவாகரத்து பத்திரம் அவளுக்கு கோபத்தை பெற்றோல் ஊற்றி எரிய வைத்தது. நாட்கள் மெதுவாக நகர இருவரையும் கோர்ட்டில் அழைத்து விசாரித்தவர்கள் அடுத்த ஆறு மாதங்கள் அளவிலேயே இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கினார்கள்.
அன்றைய நாள் இருவருக்கும் உண்ணா விரதமாகவே கழிய, இருவரையும் சுற்றி இருந்த அனைவரும் அவர்கள் பிரிவில் கவலை கொள்ள மோனிஷா மட்டும் சந்தோசம் கொண்டாள்.
இந்த சந்தர்ப்பத்தில் தான், மகதியை ரணதீரன் சிக்னல் லைட்டில் நீண்ட காலம் கழித்து கண்டு அவள் அழகில் தன்னை அறியாமல் மயங்கி போனதும், அவளை தீண்ட வந்தவனை தாக்கி அவன் கையை உடைத்தும் நடந்தது.
மேலும் பேங்க் கொலை கேஸ் அனைத்தும் அவளை சுற்றியே பின்னப்பட்டு அவள் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதும் முதலில் துடித்து போனது அவன் தான், . தன்னவள் குற்றவாளி அல்ல என்று அவன் மனம் அடித்து கூறினாலும் சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் அவள் குற்றவாளியாக சுட்டிக்காட்ட பட்டாள். தீரனுக்கு அவள் மேல் இருந்த கோபம் மெதுவாக அகன்று காதல் பிறந்தாலும் மகதியின் புண் பட்ட மனம் ஆற மறுத்தது. காதல் கொண்ட மனம் தன்னவர்கள் தவறை மன்னிப்பது இயல்பு தானே, அதை தான் தீரன் செய்தான். ஆனால் மகதிக்கோ தான் செய்யாத தப்புக்கு அவன் அளித்த தண்டனைகளை ஏற்று கொள்ள முடியவில்லை. தன்னவன் நெருக்கத்தை மனம் விரும்பினாலும் கஷ்டப்பட்டு தனது மனதை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தாள். காதல் விடயத்தில் பெண்களுக்கு இருக்கும் மன கட்டுப்பாடு ஆண்களுக்கு எப்போதும் இருப்பதில்லை. அதற்கு தீரன் மட்டும் விதிவிலக்கா என்ன?
தத்தமது நினைவில் இருந்து மீண்ட இருவரினதும் மனம் கனத்து போக அடுத்து நடக்க இருப்பதை பற்றி தீரன் தீவிரமாக யோசிக்க தொடங்கினான்.