வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மனதில் நிறைந்தவள் அவள்தானே..! - கதைத் திரி

Status
Not open for further replies.
மனம் -17


எவ்வளவு சீக்கிரம் வேலையை முடித்து விட்டு வர நினைத்தாலும் மேலும் இரண்டு நாள் பிடிக்க நான்கு நாள் கழித்து ஊரில் காலடி எடுத்து வைத்தான் விஷ்வா. அவனது முகம் ஒரு வித சோர்வு , ஆயாசம், ஏமாற்றம் , பிடிப்பின்மை அனைத்தையும் கலவையாக காட்ட வீட்டுக்கு செல்ல மனமில்லாமல் தன் பிரத்யேக தோட்டத்துக்கு சென்று அவனது வரவுக்காக காத்திருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்து விட்டான்.

பார்வியுடனான பஞ்சாயத்துக்கு பிறகு இப்போது தான் வருகிறான். கொஞ்ச நேரம் விழிகளை மூடிக் கிடந்தவனுக்கு உறக்கம் வரும் போலில்லை. மனம் முழுவதும் இந்த நான்கு நாட்களில் நடந்த எதிர்பாராத விசயங்களில் தேங்கி விட அதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவன் அருகில் ஆள் வரும் அரவம் கேட்க நிமிர்ந்து பார்க்கவில்லை. சில நிமிடங்களுக்கு அவனிடம் பதில் வராததில் அந்த ஆளே பேச்சுக் கொடுத்தது.

"விசு மாமா.. எப்படி இருக்கீய.. நல்லா இருக்கிதீயளா.." என்று கேட்க படாரென்று விழிகளைத் திறந்து எழுந்து அமர்ந்தான். அங்கு அவனைப் பொய்க்காமல் வைசாலி தான் நின்றுக் கொண்டு இருந்தாள்.

'தன்னிடமா வந்து பேசுகிறாள்.. தான் அவளுக்கு இவ்வளவு பெரிய துரோகம் செய்தும் (அவனுக்கு தெரியும் எந்த தப்பும் செய்யவில்லை என்று ஆனால் மற்றவர் பார்வையில் அவன் தானே குற்றவாளி) கல்யாணம் கட்டிக் கொள்ள போவதாய் ஆசைக் காட்டி ஏமாற்றியவன் மீதா கருணைக் கொண்டு சுகச் செய்தி கேட்கிறாள்..?'
என்று அவன் நம்ப முடியாமல் பார்த்தான்.

அவனது பார்வையை உணர்ந்து அவனின் மனதை அறிந்தவள் ஒரு புன் முறுவலை சிந்தியவாரு ,

"என்ன மாமா அப்படி பாக்குதீய.. என்னடா நம்ம செஞ்ச காரியத்துக்கு நம்ம மூஞ்சிலேயே முழிக்க விரும்பாதவ வந்து நலம் விசாரிக்காளேன்னா..? ஹிம்.. தப்பு செஞ்சா தான மாமா அப்படி பண்ணனும்.. நீக தாம் எந்த தப்புஞ்செய்யலயே.. பொறவு என்னத்துக்கு நான் அதை செய்ய போறேன்.." என்றுக் கேட்க அவனுக்கு பெரும் அதிர்வு.

'தான் குற்றமற்றவன்' என்று 'இவளுக்கு எப்படி தெரியும்' என்று யோசிக்க "சித்ரா தாம் மாமா சொன்னா.." என்றவள் அவன் யோசனைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.

அதில் "ஓஓ..." என்றவன் "சித்ரா என் தங்கச்சி.. அவளுக்கு அவ கூடப் பொறந்தவன் மேல அம்புட்டு நம்பிக்கை இருக்கு.. உனக்கு அப்படி இல்லயேத்தா.. நீம் எப்படி நம்புனவ..?" என்று கேட்டான்.

"நானும் மொதல்ல நம்பல்ல மாமா.." என்று தலைக் குனிந்தவாறு சொன்னவள் பின் நிமிர்ந்து ,
"என் மாமா எப்படி இப்படி ஒரு பொண்ணுக்கு மோசம் பண்ணுச்சுன்னு எனக்கு மனசே ஆறலை.. அதான் அங்கன நிக்க முடியாம வீட்டுக்கு ஓடி வந்துட்டேன்.. அதுக்கு பொறவு என் அப்பாரு குடும்ப கவுரவம் அது இதுன்னு என்ன யோசிக்கவே விடாம இன்னொருத்தருக்கு என்ன கட்டி வச்சுட்டு..

இதனால எனக்கு அங்கையும் யோசிக்க முடியாம இங்கேயும் புது வாழ்க்கையை ஏத்துக்க முடியாம தவிச்சுட்டு இருக்கும் போது தான் சித்து வந்து எல்லாம் சொல்லிச்சு மாமா..

உங்களுக்குள்ள என்ன நடந்துச்சுனு தெரியலன்னாலும் நீங்க எந்த தப்பும் பண்ணலன்னு சொன்னா.. அதும் இல்லாம அந்த பார்விக்கு உங்க மேல விருப்பம் இருக்குன்னு எனக்கு முன்னமே தெரியும் நம்ம கண்ணாலத்தை நிறுத்தி உங்களைக் கட்டிக்கணும்ன்னு இப்படி அவ பண்ணிருப்பான்னு அப்புறம் தான் தோணிச்சு மாமா.. உங்களை பத்தி தெரிஞ்சும் அந்த நேரம் மடச்சி மாறி உங்களுக்கு ஆதரவா நிக்க வேண்டிய நேரத்துல நானும் எல்லாரு மாறி சந்தேகப் பட்டு போயிட்டேன்.. என்ன மன்னிச்சுருங்க மாமா.." என்று கைக் கூப்பியவளின் கைகளை பிடித்து இறக்கியவன் ,

"போதும்த்தா.. நீ என்ன புரிஞ்சிக்கிட்டதே போதும்.. சொல்ல போனா என்னால பாதிக்க பட்ட உன்
மொகத்துல எப்படி விழிக்கன்னு தான் யோசிச்சுட்டு இருந்தேன்.. இப்ப நீயே என் பக்க நியாயத்தை உணர்ந்து பேசுறப்ப எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு .. என் ஆத்தா கூட என்ன நம்பலத்தா.. அப்புறம் எங்கிட்டு வெளியாலு நம்புறது .. அதாம் எந்த வெளக்கமும் குடுக்க நான் முன் வரலை.." என்று தன் அன்னை தன்னை நம்பவில்லையே என்ற விரக்தியில் பேசிக் கொண்டு இருந்தவனை பார்க்க அவளுக்கும் பாவமாக தான் இருந்தது.

இதில் அவள் ஒன்றும் செய்ய இயலாது அல்லவா. அவரே தன் மகனின் நல்லொழுக்கத்தை உணர்ந்தால் மட்டுமே அது முடியும்.

கசப்பான சம்பவங்களை விரட்டும் பொருட்டு பேச்சை மாற்றியவன் ,
"அப்புறம் வைசு புள்ள.. உன்ன கட்டிகிட்ட அன்பன் எப்படி இருகாக.?. உன்ன சுகமா வச்சிருக்காகளா..?" என்று கேட்கவும் அதில் அவள் முகத்தில் வந்துப் போன வெட்கச் சிரிப்பே அவனுக்கான பதிலைக் கொடுத்து விட அவனுக்கு பரம திருப்தி..

எங்கு தன்னால் ஆன குழப்பத்தால் அவசர அவசரமாக நடந்த அவள் கல்யாணத்தில் எதேனும் பிரச்சினை வருமோ என்று நிதம் நினைத்துக் கவலைக் கொண்டவனின் மனம் அவளின் செய்கையில் அமைதியானது.

"ம்ம் மாமா.. அவரு ரொம்பவே நல்லவரு.. திடீர்னு நடந்த கல்யாணம் எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியாம தவிச்சுட்டு இருந்த நேரம் அவரு வந்து 'நமக்கான காலம் இன்னும் இருக்கு .. அதனால் எதையும் ரோசிச்சு மனசைக் கொழப்பாம இருன்னு' சொன்னாரு.. 'அதுவரை நான் காத்துட்டு இருப்பேன்னு' சொன்னாரு மாமா.. இத விட ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்..

அப்பவே அவரு மேல ஒரு நல்ல மதிப்பு மருவாதி வந்துட்டு.. இன்னும் எங்களுக்குள்ள எந்த சடங்கும் ஆகலை தாம்.. ஆனா இன்னும் கொஞ்ச நாளிலே எல்லாம் மாறும்ன்னு நம்பிக்கை இருக்கு மாமா.." என்று உறுதியாக சொன்னவளின் வாழ்வு சிறக்க விஷ்வா மனதார வாழ்த்தினான்.

பிறகு அவனது வாழ்க்கை பற்றி கேட்க கசந்த முறுவலயே தந்தவனை யோசைனையாக பார்த்தவள் "ஏன் மாமா அவுக உன்ன விரும்பி தானே அப்படி ஒரு காரியம் செஞ்சுக் கட்டிக்கிட்டாக பொறவு என்னதுக்கு இப்படி இருக்கீக.. ?" என்று கேட்க

'விருப்பப்பட்டா.. பழி வாங்க கட்டிருக்கா அதும் செய்யாத தப்புக்கு' என்று மனதில் நினைத்தவன் அவளிடம் ஒன்றும் கூறவில்லை.

அவன் தன்னிடம் சொல்ல விரும்பவில்லை என்று புரிந்து கொண்டவள் மேலும் அதை பற்றி பேசிக் கிளராமல் நேரம் ஆவதை உணர்ந்து தன் கணவர் அங்கு தனக்காக காத்திருப்பதாக சிரிப்புடன் கூறியவள் அவனிடம் விடைப் பெற்று சென்றாள்.

போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா திரும்ப அங்கு இவ்வளவு நேரம் தூரத்தில் இவர்களின் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த பார்வி அவள் போனதும் அவன் கிட்ட வந்து உக்கிரமாக முறைத்துக் கொண்டு நின்றாள்.

அவளை அங்கு சற்றும் எதிர்பார்க்காதவன் திடுக்கிட்டு பின் தோள்களை குலுக்கியவாரு அவளைக் கடந்து செல்ல அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

"என்ன நாலு நாள் ஊருல இல்லாம எங்கையோ போயி சுத்திட்டு இப்ப வந்தும் வீட்டுக்கு வராம இவளோட நின்னு இங்க என்னப் பண்ணிட்டு இருக்கீங்க.. அவக்கூட நல்லா சிரிச்சு பேசிட்டு என்ன கண்டா மட்டும் கசக்குதோ பார்த்தும் பாக்காம போறீங்க.. என்ன பாத்தா எப்படி தெரியுது.." என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.

அவன் ஊருக்கு வந்ததை பார்த்த அவளின் வேலையாள் ஒருவன் சொல்லியிருக்க நேராக வீட்டுக்குள் வராமல் தோட்டத்து வீட்டுக்கு செல்வதையும் சொல்லியிருக்க அங்கே வந்து நின்றவளுக்கு அவனும் வைசுவும் பேசி நின்றது எரிச்சலையே தந்தது.

இதில் அவளிடம் மட்டும் நல்லா பேசிவிட்டு அவளைக் கண்டதும் பேசாமல் சென்றவனைக் கண்டவளுக்கு தான் அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையா என்றே தோன்றி மனதை கலங்க செய்தது.

தான் மட்டுமே அன்று முதல் இன்று வரை அவனுக்காக துடித்துக் கொண்டிருப்பதும் அவனிடம் இருந்து ஒரு சதவீதம் கூட எந்த எதிர்வினையும் இல்லாமல் போவதும் பார்க்க பார்க்க அவளின் காதல் கொண்ட மனம் தாளவில்லை.

இதில் அவள் ஒன்றை அறியவில்லை. அவளது காதலை அவனிடம் ஒழுங்காக சொல்லியிருந்தால் அதை அவன் புரிந்துக் கொண்டிருப்பது உறுதி. அன்று அவனிடம் காதல் வசனம் பேசியது உண்மையாக அவனுக்கு தோன்றவில்லை. அதுனாலயே அவளது சொல்லுக்கு அவன் மதிப்பளிக்கவில்லை. மேலும் வைசுக்கு தன்னை பரிசம் போட்டதும் ஒரு காரணமாக இருப்பின் அவன் அவளது காதலை ஏற்க வில்லை.

திருமணத்திற்கு பிறகும் தன் காதலையும் பூஜா பற்றி தான் தெரிந்தவற்றை சொல்லி விட்டிருந்தாலும் அவளின் மனதை அவன் மதிப்புக் கொடுத்து தன் பக்க நிலையையும் விளக்கிருப்பான்.

ஆனால் இவளோ 'பழிவாங்கல்' என்ற வார்த்தைக்குள் அத்தனையையும் அடக்கி வைத்ததால் அவனால் அவளின் காதலை அறிய முடியாமல் போனது.

இப்போதும் அவளின் மனதை மட்டுமே முன்னிறுத்தி அவள் பேச அவளை உறுத்து விழித்தவன் "எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.. அவ என் அத்த மவ சிரிச்சு பேசதாம் செய்வேன்.. நமக்குள்ள அப்படி என்ன உறவு இருந்துச்சு கலகலன்னு பேச.. என்னய பழிவாங்க தானே கட்டிக்கிட்ட அப்போ நான் யாருக்கூட பேசுனா உனக்கு என்ன .? எதுக்கு கோவம் வரண்ணும்.. விருப்பப்பட்டா கட்டிக்கிட்ட இல்லேலா அப்ப உன் வேலையை மட்டும் பாரு.." என்றவன் அவளின் கையை எடுத்து விட்டான்.

அவன் கைகளை அழுத்தத்துடன் பிடித்து வைத்தவள் , "நான் விருப்பம் இல்லாமதான் உங்களை கட்டிக்கிட்டேனா..? நான் உங்களை விரும்பி தான் கட்டிக்கிட்டேன் இப்போன்னு இல்ல அப்போவே.. புரியல காலேஜ் டைம்ல தெளிவா சொல்ல போனா நீங்க பூஜாவ லவ் பண்ண முன்னாடியே நான் உங்களை லவ் பண்றேன் .. இது உண்மை .. நான் பொய் சொல்லல.. என் கண்ணுல காதல் தெரியலையா..?" என்று தன் ஒட்டு மொத்த காதலையும் தேக்கி வைத்துக் கேட்க அவள் சொன்ன செய்தியில் ஆடிப் போனவன் அவள் கண்ணில் தெரிந்த உண்மையில் அதிர்ந்துதான் நின்றான்.

தன்னை மீட்டுக் கொண்டு இதுவும் அவளின் திட்டமாக இருக்குமோ எங்கு சந்தேகித்து , "என்ன..திருப்பி எந்த திட்டம் போட்டு என்னை பழிவாங்க நெனைச்சுருக்க..?" என்று கேட்க தான் செய்த செயலால் தான் உண்மை கூறியும் அதையும் திட்டம் என்று சொல்பவனின் வார்த்தையில் மரித்தவள், அடிபட்ட பார்வையுடன் கண்ணீர் வழிய அவனை ஏறிட்டு பார்க்க அந்த பார்வை அவனை எதோ செய்ய திரும்பிக் கொண்டான்.

அந்த நேரம் சூர்யா பார்வியை அழைத்தவாறு அங்கு வந்தான். அவனது பதற்றமான குரல் இருவரையும் பதற்றமுற செய்ய 'என்ன ? ஏதென்று' விசாரிக்க அவன் சொன்ன செய்தியில் விஷ்வாக்கு சகலமும் நடுங்கியது.

"என்னடா சொல்ற ..??" என்று பார்வி கர்ஜிக்க , "ஆமா.. க்கா சித்..சித்துவ யாரோ ரெண்டு பேரு கார்ல கடத்திட்டு போயிட்டாங்க கா.. உன்ன பார்த்தா நீ வீட்ல இல்ல அப்பா தான் நீ இங்க இருக்கன்னு சொல்லி உன்கிட்ட சொல்ல ஓடி வந்தேன்.. " என்று திக்கியவாரு சொன்னான்.

"டேய் அறிவிருக்கா.. என்கிட்ட சொல்ல வந்ததுக்கு கார் பின்னாடி போயிருந்தா பிடிச்சுருக்கலாமே.. இப்போ எங்கன்னு போயி பாக்க.." என்று தலையில் கைவைத்தவாரு புலம்பினாள்.

"நான் போனேன் கா.. ஆனா அதுக்குள்ள கார் எந்த திசை பக்கம் போச்சுன்னு தெரியல.."

"என்னாச்சுன்னு முதல்ல இருந்து சொல்லு.. எப்படி என் சித்ரா காணாம போனா.." என்று விஷ்வா அழுத்தமாக கேட்க , ஒரு நிமிடம் தயங்கியவன் பின் சொல்ல ஆரம்பித்தான்.

காலையில் எப்போதும் போல வாசல் தெளிச்சு கோலம் போட்டு வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து விட்டு செத்த நேரம் வாசல் படியில் உட்காருவது சித்ரா வழக்கம். அப்படி உட்கார்ந்து இருக்கும் போது தான் அவர்கள் வீட்டு பெரிய கேட்டூக்கு முன்னாடி ஒரு சிறுமி நின்றுக் கொண்டு இவளை அழைக்க அருகில் சென்று பார்க்கும் போது தான் சிறுமிக்கு பின்னால் நின்ற இருவர் அவளின் கையைப் பிடித்துக் காருக்குள் தள்ள முயன்றனர்.

அந்த நேரம் அவளுக்கு சூர்யா நினைப்பே வர "சூர்யா... ஆஆ.." என்று கத்தி அழைத்தாள். அவனுக்கு அவள் அழைப்பு வெளியில் இருந்து கேட்பது தெரிந்தும் அலட்சியப் படுத்தினான்.

இவள் பலமுறைக் கத்தியும் அவன் பார்க்காமல் போக காருக்குள் தள்ளும் ஒரு வினாடியில் "என்னை காப்பாத்துங்க .." என்று கத்தவும் அவளது வாயில் துணியை வைத்து அடைத்தவாரு கூட்டி சென்றனர்.

அப்போதே விபரீதம் புரிந்து பால்கனி வழியே எட்டிப் பார்த்தவன் இருவர் அவளை உள்ளே ஏற்றும் காட்சியை தான். அவன் பதறிக் கீழே வருவதற்குள் காரும் போன சுவடு தெரியாமல் மறைந்து விட்டது.

அந்த நேரம் பரிமளமும் வீட்டில் இல்லை. விஸ்வநாதனும் எதோ வேலையாக வெளியில் சென்று அப்போதே வர அவன் அவரிடம் விசயத்தை சொல்ல கடிந்துக் கொண்டார்.

'கோபத்தைக் காட்ட இதுவா நேரம் ..'என்று திட்டி தீர்த்தவர் பார்வி இருக்கும் இடத்தைக் கூறி சீக்கிரம் சித்ராவை கண்டுபிடிக்க சொல்லி அனுப்பி வைத்தார்.

அனைத்தையும் அவன் சொல்லி முடிக்க கோபத்தில் கண்மண் தெரியாமல் ஆத்திரம் வந்தது பார்விக்கு. இருந்தும் அடக்கிக் கொண்டாள். அவள் தான் அவர்களின் காதலையும் தன் கல்யாணத்திற்கு பின் அவர்களின் மோதலையும் தெருந்தவளாயிற்றே..

ஆனால் விஷ்வாக்கு அது எதுவும் தெரியாததால் சூர்யாவிடம் எகிறினான்.

"ஏய்.. ஏன்டா இப்படி பண்ண..? என் மேல உள்ள கோபத்துல ஆபத்துல இருக்க என் தங்கச்சியை எப்படியோ போட்டும்னு விட்டுருவியா.. உனக்குலாம் ஈவு எரக்கமே கிடையாதா.." என்று கடுமையாக சாடினான்.

தன் மேல் தவறு இருந்ததால் அமைதியாக இருந்த சூர்யாவுக்கு பாழாப்போன வீண் பிடிவாதத்தால் தன்னவளை இப்படி நிற்கதியில் விட்டு விட்டோமே என்று உள்ளம் குமைந்து நின்றான்.

அவனை அமைதியாக இருக்க சொன்ன பார்வி அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது அவளுக்கு அந்த ஊரின் ஸ்பை யிடம் இருந்து அழைப்பு வர யோசனையுடன் எடுத்து பேசியவள் அங்கு என்ன சொல்லப் பட்டதோ உடனே வருவதாக மகிழ்ச்சியுடன் சொன்னவள் அழைப்பை துண்டித்தாள்.

அவளின் பேச்சிலும் முகப் பிரகாசத்திலும் கேள்வியாக பார்த்தவர்களிடம் ஒரு இடத்தின் பெயரை சொல்லி அங்கு தான் சித்ராவை கடத்தி வைத்திருப்பதாக சொல்ல அந்த இடம் ஊருக்கு எல்லைத் தாண்டி இருக்கும் ஒரு பாழடைந்த இடம் என்று விஷ்வா சொன்னான்.

"ஆனா அங்க யாரு சித்ராவை கடத்தி வச்சுருக்காங்க" என்று விஷ்வா கேட்க

"யாரோ பாலா ன்னு சொன்னாங்க.." என்று பார்வி தெரியாமல் தோள்களை குலுக்கவும் அந்த பெயரைக் கேட்டு அதிர்ந்த விஷ்வா கண்ணில் வெறிக் கொண்டு அங்கு இருவரையும் கூட்டிக் கொண்டு சென்றான்.

போகும் முன் பரிதிக்கும் தகவலை சொல்லிவிட்டு சென்றான். 'ஏன்' என்று கேட்ட பார்விக்கும் 'அங்கு போனால் உனக்கே எல்லாத்துக்கும் விடை தெரியும் ' என்று கூறியவன் தன் ஜீப்பில் ஏறி அமர்ந்து அவர்களையும் உடன் அழைத்து சென்றான்.

அங்கு தான் இத்தனை காலமாக நினைத்து செய்த ஒன்று வேறாகி போவதையும் தன்னுடைய முட்டாள் தனத்தால் எவ்வளவு பெரிய காரியத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் என்று அறியும் போது என்ன ஆவாளோ...?


நிறைவாள்..❤️❤️❤️
 
ஹாய் தோழிகளே..💖💖

நான் உங்களின் 39வது 🏹
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்.. படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.. 🥰🥰

Post in thread 'மனதில் நிறைந்தவள் அவள்தானே..! - கருத்துத் திரி' https://pmtamilnovels.com/index.php?threads/மனதில்-நிறைந்தவள்-அவள்தானே-கருத்துத்-திரி.77/post-7912
 
மனம் -18


பாழடைந்த இடத்திற்குள் ஜீப்பை கொண்டு வந்து நிறுத்தியதும் இறங்கியவர்கள் பார்க்கும் போது அங்கு ஆள் அரவம் இருப்பது போல தெரியவில்லை. மெதுவாக உள்ளே நுழைந்து அங்கு சென்றவர்கள் கண்ட காட்சியில் அதிர்ந்தனர்.

கைகள் கட்டப் பட்ட நிலையில் சித்ரா நின்றவாக்கில் அழுது கொண்டிருக்க அவளின் கழுத்தில் தாலி கட்ட முனைந்தான் அந்த பாலா என்பவன். அவனிடம் இருந்து மிகவும் பிரயாத்தனப்பட்டு அவள் போராடிக் கொண்டிருக்க விஷ்வா விட்ட உதையில் தூரப் போய் விழுந்தான் அவன்.

அதில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் தன் அண்ணனை கண்டதும் "அண்ணே..!!" என்று பெருங்குரலெடுத்து அழுக அவளை சமாதானம் செய்தவன் அந்த பாலாவைப் போட்டு புரட்டி எடுத்து விட்டான்.

சூர்யா அவளின் கைக் கட்டுகளை அவிழ்த்து விட்டு அவளின் முகம் பார்க்க திராணியற்று நிற்க அவளோ அவனைக் குற்றம் சாட்டும் பார்வைப் பார்த்தாள். தான் கூப்பிடும் நேரத்தில் நீ மட்டும் வந்திருந்தால் இந்த நிலை தனக்கு நேர்ந்திருக்குமா..? அவன் மட்டும் தன் கழுத்தில் தாலி கட்டிருந்தால் ..!! அந்த நினைவே அவள் உடலை வெடவெடக்க செய்தது.

அவனுக்கும் சற்று முன் நடந்த காரியத்தை நினைக்க நினைக்க ஆத்திரம் தாளவில்லை. தாங்கள் வர கொஞ்சம் தாமதமானாலும் அவன் தாலிக் கட்டிருப்பது உறுதி.

அப்படி மட்டும் நடந்திருந்தால் அதை நினைக்க நினைக்க வெறி ஏறி அவனும் நாலு மிதி மிதித்து சித்ரா வின் அருகில் வந்தான்.

விஷ்வாவோ அவனைக் கொன்று போடும் வேகத்தில் கண்மண் தெரியாமல் அடித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்த பார்வி 'எங்கே அடித்தே கொன்று விடுவானோ..?' எனப் பயந்து அவனை விலக்க போக அவளை தள்ளி விட்டு மீண்டும் அடி வெளுத்து விட்டான்.

"ஆஹ்...ஆ..அம்மா ஆ ஆ ஆ....!" என்று அவன் அலறி துடிக்க ஒரு கட்டத்தில் பொறுக்காமல் "ஸ்டாப் இட் விஷ்வா..! எதுக்கு இப்படி காட்டுமிராண்டித்தனமா அடிக்குற.. செத்துக் கித்து போயிட போறான்.." என்று அவனை அவனிடமிருந்து விலக்கியவாரு கத்த ,

"சாவட்டும் .. இவம்லாம் உசுரோட இருக்கதுக்கு சாவதே மேலு.. சாவுலே.." என்று மிதி மிதியென்று மிதித்தான்.

"நிறுத்து விஷ்வா.. அப்படி என்ன இவன் பண்ணிட்டான். சித்ராவ தாலிக் கட்ட பார்த்தான். தாங் காட் அதான் அப்படி எதுவும் நடக்காமல் காப்பாத்திட்டோம்ல இவனை போலீஸ்ல பிடிச்சுக் குடுத்துட்டா அவங்க பாத்துப்பாங்க .. நீ இவனை விடு.. " என்று சொல்லி முடிக்கவும் ,

"ஹேய்.. இவன் என்ன பண்ணான்னா கேக்குற..? சித்ராவ கட்டப் போனதுக்கு மட்டுமா இவனை இப்படி அடிச்சுக் கொல்றேன்.. இவன் ..இவ...இவன் தாண்டி பூஜா சாவுக்கு காரணம்.." என்று வெறிக் கொண்டு கத்த பார்வி அதிர்ச்சியில் சிலையானாள்.

ஐந்து நிமிடங்களுக்கு ஒன்றும் புரியாமல் அதிர்வுடன் நின்றவள், பின் சுயத்துக்கு வந்து "என்ன சொல்ற .. எதுக்கு இப்படி உன்ன நல்லவனா காட்ட எவனோ ஒருத்தன் மேல பழியைப் போடுற .. நீ தான் அவ சாவுக்கு காரணம்.." என்று சொல்ல ,

"ஷட் அப் யுவர் ப்ளடி.... மவுத்.." என்று கர்ஜித்தான் விஷ்வா.அதில் அவளின் உடல் அதிர்ந்து அடங்க சித்ரா சூர்யாவின் பார்வையும் இவர்களை நோக்கி தான் அதிர்வுடன் பார்த்தது.

"என்ன டி சொன்ன நான் காரணமா .. சொல்லு டி நானா பூஜா சாவுக்கு காரணம்.. நானா காரணம்.. உனக்கு என்ன நடந்துச்சுனு எதாவது தெரியுமா..? எதையும் முழுசா ஆராயாம எல்லாம் நான்தான் பண்ணிருப்பேன்னு நினைச்சு என்னவெல்லாம் பண்ணுன..

ஒரு உண்மைய சொல்லவா இப்போ ..இவ்ளோ நாளா பூஜா சூசைட்க்கு நான் காரணம்னு தான என்ன பழிவாங்க இந்த ஊருக்கு வந்து என்மேல இல்லாத பழியை போட்டு கல்யாணம் பண்ணுன.. உண்மையிலேயே பூஜா செத்ததுக்கும் அவள் கர்ப்பமானதுக்கும் யாரு காரணம்னு தெரியுமா.. இதோ அடிவாங்கி கிடக்கிறானே இந்த நாய் தான்.." என்று அவன் குறுக்கில் ஓங்கி மிதிக்க "ஆ. ஆ...ஆ.." என்று வலியில் அலறினான்.

"சொல்லுடா நாயே.. இத செஞ்சது நீ தானே .. சொல்ரியா இல்ல உன் கையை ஒடைக்கவா..?" என அவன் கையை பிடித்து முறுக்க வலியின் மிகுதியில் ,

"வேணாம்.. வேணாம்.. நான் சொல்லுறேன்.. நான் தான் அவ சாவுக்கு காரணம்.. நா..நான் தான் திட்டமிட்டு அவளை என் வலையில சிக்க வச்சேன்.." என்று அன்று நடந்ததை கூற ஆரம்பித்தான்.

***

விஷ்வா பூஜாவை பார்த்த பார்வையை குரோதமாக பார்த்தது வேறு யாருமல்லை இந்த பாலா தான். பாலா பரிதியின் இரட்டை சகோதரன். நான் ஐடென்டிக்கல் டிவின்ஸ். அதனால் வேறு வேறு முக அமைப்பை பெற்றிருந்தனர்.

முகம் மட்டும் அல்லாமல் குணங்களும் வேறு தான். பரிதி அன்பானவன் .. உறவுக்கு மதிப்பு கொடுப்பவன் . பாலாவோ சுயநலவாதி. தான் என்ற அகம்பாவம் கொண்டவன். ஆதலால் இருவருக்கும் என்றுமே ஒத்து வராது.

பரிதி தான் பல நேரங்களில் தம்பி என்று விட்டுக் கொடுப்பான். அதனாலேயே அவன் அனைத்து விஷயத்திற்கும் முரண்டு பிடிப்பான். பரிதிக்கு படிப்பு ஏறவில்லை.

பாலா சுமாராக படிப்பான். அவ்வூரில் விஷ்வா மிகவும் திறமைசாலியாக படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பது இவனுக்கு எப்போதும் வயிற்றெரிச்சலை கொடுக்கும். விஷ்வாவை சிறு வயது தொட்டு பாலாவுக்கு பிடிக்காது.

அனைவரும் அவனிடமே நெருங்கி நெருங்கி பழகுவர். இவனது குணத்துக்கு யாரும் அருகில் வரமாட்டர். இது எல்லாம் சேர்ந்து தன் அண்ணன் பரிதி கூட 'விஷ்வாக்கு பிறகு தான் நீ..' என்று சொல்வது இப்படி அனைத்தும் கேட்டு அவன் மேல் வன்மத்தை சேர்த்து வைத்திருந்தான்.

விஷ்வா காலேஜ் படிப்புக்கு ஊட்டி செல்லும் போது இவனுக்கும் உத்தியோகத்துக்கு உதவும் என்று தன்னுடன் அழைத்து சென்றான். அவனோ ஊரை விட்டு வேறு ஊருக்கு ஊதாரியாக சுற்ற ஆசைக் கொண்டு படிப்பு என்னும் போர்வையைச் சுற்றிக் கொண்டு அவனுடன் கிளம்பினான்.

அது தான் விஷ்வா செய்த பெரிய தப்பு. தன்னை அவனுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் அவன் நன்றாக இருக்கணும் என்றே விஷ்வா எப்போதும் நினைப்பான். தன் நெருங்கிய தோழனின் தம்பி என்றதால் கூட இந்த அக்கறை இருக்கலாம்.

பூஜாவை பார்த்த நொடி இவனுக்கும் அவளை பிடித்து தொலைத்தது. ஆனால் அது வெறும் காமப் பிடிப்பு மட்டுமே.

இதில் விஷ்வாவின் பார்வையும் அவள் மேல் விழுந்ததில் பல காலமாக அவனைப் பழி வாங்க நினைத்த மனதுக்கு ஒரு வழிக் கிடைத்தது. அதன் படி யாரும் அறியாமல் அவன் ஒரு திட்டம் வகுத்தான்.

கொஞ்ச நாள்கள் அவர்களின் காதல் இசையை மீட்ட வைத்தவன் தக்க சமயத்துக்காக காத்திருக்க தொடங்கினான். அந்த நாளும் வந்தது. அன்று விஷ்வா கூல்டிரிங்ஸ் வாங்க செல்லும் போது ஒரு வேலை வந்து விட அவனோடு இருந்த பாலா தான் , தான் வாங்கி வருவதாக கூற ' சரி' என்று சென்று விட்டான்.

அவன் நகர்ந்ததும் நினைத்த படி கூல்டிரிங்க்ஸ் வாங்கி அதில் மயக்க மருந்தைக் கலந்து வைத்து விஷ்வா வந்ததும் குடுத்து விட்டான்.

விஷ்வா அதைக் கொண்டு பூஜா இருக்கும் இடத்திற்கு செல்ல அவனறியாமல் இவனும் பின்னாடியே சென்று நடப்பதை கவனிக்க தொடங்கினான்.

ஜூஸை குடித்ததும் இருவருக்கும் தலை சுற்ற ஆரம்பிக்க 'இதுதான் சரியான நேரம் ' என்று வெளியில் வந்து விஷ்வாவிற்கு பின் சென்று தான் கையில் இருந்த வீரியமிக்க மயக்க மருந்து தெளித்த கைக் குட்டையால் அவனின் மூக்கில் வைத்து அழுத்தி மூர்ச்சையாக்கினான்.

இதைக் கண்டு அரை மயக்கத்தில் இருந்த பூஜா அதிர்ந்து விழிக்கயில் அவளையும் நெருங்கி அதை வைத்து மயக்கமுற செய்தவன் அவளைத் தோளில் போட்டுக் கொண்டு அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தான்.

அங்கு அவளை கிடத்தி அவளின் அனுமதியில்லாமல் உணர்வில்லாத நிலையில் புணர்ந்தவன் தன் தேவையை முடித்து விட்டு வெளியில் வர விஷ்வா கேட்பாரற்று கிடந்தான்.

பிறகு அவன் தான் அவனை மயக்க நிலையில் ஹாஸ்டல் அறைக்குள் கொண்டு விட்டு திரும்பி பூஜா இடத்திற்கு வந்து அதிகாலை வரை அந்த மருந்து வேலை செய்யும் என்பதால் தன் இச்சை தீரும் மட்டும் அவளை அடைந்து ஒரு மிருகத்தை விட கொடிய அரக்கனாக மாறி அந்த பாவப்பட்ட ஒன்றும் அறியாத பெண்ணின் வாழ்க்கையை ஒரே இரவில் சீரழித்தான்..

அதிகாலையில் விழிப்பு வந்து கண்களை திறந்து பார்த்தவள் எழும்ப முயற்சிக்கையில் அவளால் முடியவில்லை.

பத்து பேர் மேலே அமுக்கி கிடந்தது போல உடலெங்கும் வலி எடுக்க கண் பார்வையை மட்டும் சுழற்றி தன்னை கண்டவள் தன் ஆடையில்லாத தோற்றத்தை கண்டு அதிர்ந்து நொறுங்கி போனாள்.

அவள் விழித்து விட்டதை கண்டு கிட்ட வந்த பாலாவை கண்டு தன் கைகளைக் கொண்டு உடலை மறைக்க போராட அதில் இடியென சிரித்தவன் ,

"இன்னும் எத மறைக்க டி இப்படி பண்ணிகிட்டு இருக்க.. ஹாஹா.ஹா..
நான் லாம் இதலாம் நேத்தே பாத்தாச்சு.. ச்சு.ச்சு.. சும்மா சொல்ல கூடாது .. நீ பேரழகி தான்.அதான் அந்த விஷ்வா **** பய உன்கிட்ட மயங்கி கிடக்குறான் போல..

நீ இப்ப உன் அழகை மறைச்சு ஒன்னும் ஆவ போறதில்ல .. ஏனா இழக்க கூடாத ஒன்ன நீ நேத்து ராத்திரியே என்கிட்ட இழந்துட்ட டி.. ஹா.. ஹாஹா..." என்று சிரிக்க அவனின் வார்த்தையில் கூடை தனலை தன் மேல் கொட்டியது போல துடித்துப் போனாள் பாவை.

"நீ.. நீ..என் ..ன சொல்ற..?" என்று திணறலுடன் தன் காதில் விழுந்தது சரி தானா என்று தெரிந்துக் கொள்ள கேட்க ,

"இன்னுமா புரியல உன் கர்ப்ப சூறையாடிட்டேன்னு சொல்றேன்.." என இழுத்து சொல்ல அந்த நொடியே 'பூமி பிளந்து அதில் புதைந்து விட மாட்டோமா..' என்று கண்ணீர் வழிய நினைத்து உயிரோடு மரித்து போனாள்.

அவளின் கண்ணீர் கூட அந்த கொடூரனுக்கு காம ஆசையை துளிர் விட செய்ய உணர்வில்லாமல் அவளை அடைந்தவன் இப்போது அவளின் சுயநினைவோடு இருக்கும் போது ஆட்கொள்ள தொடங்க ஏற்கனவே உடம்பில் வலு இல்லாமல் அசையக் கூட முடியாமல் கிடந்தவள் அவன் தன்னை நெருங்கி வரவும் தடுக்க திராணியற்று கிடந்தாள்.

பின் ஒருவாறு அவளை விட்டு விலகியவன் அவளது ஆடைகளை அவளின் மீது எறிந்து விட்டு சீக்கிரம் ரெடி ஆக சொல்லி விட்டு சென்றான்.

எழும்ப முடியாமல் இருந்தவள் கஷ்டப்பட்டு எழுந்து தன் ஆடைகளை அணிந்து அப்போதே அந்த இடத்தை
பார்க்க அது அவளும் விஷ்வாவும் சந்திக்கும் இடம் என்று அறிந்தவளுக்கு விஷ்வா நியாபகம் தோன்றியது.

அவனும் தானே தன்னுடன் இருந்தான். அந்த ஜூஸை குடித்ததும் இவன் தான் விஷ்வாவை மயக்கமுற செய்தான். அதுவரை நினைவில் இருந்தது. பின் நடந்தது நினைவில் இல்லையென்றாலும் தனது கோலமே தன்னைக் காட்டி கொடுக்கிறதே..

அப்போ விஷ்வா எங்க போனான்.. என்ற யோசனையில் இருந்தவள் அருகில் வந்த பாலா "சீக்கிரம் கிளம்பு உன்ன ஹாஸ்டல்ல விட்டுட்டு போனும் .." என்று அவசரப் படுத்தினான்.

அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. அந்த அளவுக்கு அவளை பலவந்த படுத்தியவன் ஈவு இரக்கமில்லாமல் நடப்பதைக் கண்டு அவளால் மௌனமாக கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது.

பொறுத்து பார்த்தவன் அவளின் நிலையை அலட்சியப் படுத்தி தர தரவென இழுத்துக் கொண்டு ஹாஸ்டல் வாசலில் இழுத்து போட்டவன் 'அவ்வளவு தான் முடிந்தது' என்ற ரீதியில் திரும்பிக் கூட பார்க்காமல் சென்று விட்டான்.

அதன் பின்னே பார்வி வந்து அவளை ரூமிற்கு அழைத்து சென்றாள்.விஷ்வா அவளைக் காண வந்தும் தன்னுடைய இந்த நிலையில் அவனைப் பார்க்கும் சக்தியில்லாமலே தான் ஊருக்கு சென்று விட்டதாக சொல்ல சொன்னாள்.

இப்படியே அறைக்குள் முடங்கி கிடந்தவளை பாலா தனக்கு தெரிந்த பெண் மூலம் அழைத்து வர சொன்னான். அவளோ அவனைப் பார்க்க முடியாது என்று மறுக்க அவன் அனுப்பிய சில போட்டோக்களை அந்த பெண் காட்ட அதைக் கண்கொண்டு காண முடியாமல் துடித்தவள் அவளுடன் அந்த மிருகத்தை சந்திக்க சென்றாள்.

அதில் இருந்தது விஷ்வாவை அவன் தூக்கி செல்லும் முன் பூஜா பக்கத்தில் கிடத்தி அவனும் அவளுமாக இருப்பது போல பல கோணங்களில் படம் பிடித்து வைத்தான். அதை பார்த்தாலே விஷ்வாவும் அவளும் தவறு செய்துள்ளனர் என்று நம்பும் படி இருந்தது.

அவற்றைக் கண்டே அவள் அவனைக் காண சென்றாள். அங்கு அவன் அவளை பார்வையால் மொய்க்க உடல் கூச நின்றாள்.

"என்னடி.. அறைக்குள்ளே அடைஞ்சு கிடந்தா பெரிய பத்தினின்னு ஆயிருமா.. உன்ன வச்சு என்ன லாம் பிளான் போட்டுருக்கேன்.. நீ இப்படி ஒளிஞ்சுகிட்டா எப்படி..?" என்று பீடிகை போட , அவனது 'பிளான்' என்ற வார்த்தையில் யோசனையானாள்.

"என்ன பிளான்னு யோசிக்குறீயா..? இப்போதைக்கு ஒன்னு சொல்றேன் அதை செய். அதுக்கு பிறகு மத்தது சொல்றேன்.." என்றவன் தனது முதல் பிளானாக விஷ்வாவின் காதலை முறிக்க சொன்னான்.

அதில் அதிர்ந்தவள், 'முடியாது இப்போவே அவனிடம் எல்லாம் சொல்ல போவதாகவும் , அவன் என்னை ஏற்றுப்பான் ..' என்று உறுதியுடன் சொல்ல அதில் கோபமுற்றவன் ,

'அப்படி எதுவும் சொன்னால் அவனும் அவளும் இருக்கும் போட்டோக்களை வெளியில் லீக் பண்ணி விடுவேன் என்றும் இதனால் விஷ்வா பெயர் மோசமாகும் ' என்று எங்கு அடித்தால் அவளுக்கு வலிக்குமோ அங்கு அடிக்க அதில் அவள் அவன் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ட தொடங்கினாள்.

விளைவாக விஷ்வாவிடம் பொய்யுரைத்து தன்னை தவறாகக் காட்டி அவன் அவளை வெறுக்க செய்து காதலை முறித்தாள்.

சில நாட்கள் கழித்து அவளுக்கு நாட்கள் தள்ளிப் போனதைக் கணக்கிட்டு பயந்து பிரக்னென்சி கிட் வாங்கி பரிசோதித்து பார்த்து அதில் பாசிட்டிவ் வந்ததும் பாலாவைக் காண சென்றாள்.

அங்கு அவனோ கூலாக இதை கலைத்து விடு என்று சொல்ல முடியாது என்று மறுத்தவள் நல்லதோ கெட்டதோ நடந்தது நடந்து விட்டது இந்த பிள்ளைக்காகவாது திருமணம் செய்வோம் என்று அவன் செய்த அனைத்தையும் மறந்து தனது கருவில் உதித்த சிறு சிசுவைக் காக்க அவள் போராட ,

"உனக்கு கல்யாணம் தான பண்ணிக்கணும் .. ஒன்னு செய் இந்த பிள்ளை விஷ்வா கூட பழகுனதுல வந்ததுன்னு சொல்லி அவனையே கட்டிக்கோ.. அவனுக்கும் நான் திருப்பி கொடு
த்த மாதிரி ஆச்சு.. உன்னையும் தண்ணி தெளிச்சு விட்ட மாதிரியும் ஆச்சு.." என்று பேச அதிர்ந்து போனாள்.


நிறைவாள்...❤️❤️❤️
 
ஹாய் தோழிகளே..💖💖

நான் உங்களின் 39வது 🏹
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்.. படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.. 🥰🥰
Post in thread 'மனதில் நிறைந்தவள் அவள்தானே..! - கருத்துத் திரி' https://pmtamilnovels.com/index.php?threads/மனதில்-நிறைந்தவள்-அவள்தானே-கருத்துத்-திரி.77/post-8232
 
மனம் -19


தனக்குள் ஒரு ஜீவன் உதித்ததும் தாய்மை உணர்வு தலைத்தூக்கி தன்னை பெண்டாண்டு கசக்கி தூக்கிப் போட்டு விட்டவனையும் மன்னித்து அந்த உயிருக்கு ஒரு உறவைக் கொடுக்க நினைத்தவள் அவனிடம் திருமண யாசகம் கேட்டு நின்றாள்.

ஆனால் அந்த கயவனோ அதிலும் தனக்கு பழிவாங்க எதுவும் வாய்ப்பு உள்ளதா என்று பார்த்து , அவள் கடவுளாய் நினைக்கும் விஷ்வாவை அல்லவா அவளின் இந்த நிலைக்கு காரணமாக்க பார்க்கிறான்..

வாழ்வே வெறுத்து போனது அவளுக்கு. தான் பிறந்ததே ஒரு சாபக் கேடு என்று மனம் வெம்பி போய் நின்றாள். தனக்கு மட்டும் இந்த ஜென்மத்தில் சந்தோசமே நிலைக்காது என்பது உறுதியாக தெரிய அவனை ஏறிட்டும் பார்க்காமல் திரும்பி நடந்தாள்.

போகும் முன் அவன் சொன்ன "தயாரா இருந்துக்கோ..நாளைக்கு காலையில அன்னைக்கு எடுத்த போட்டோஸ்ஸை நான் நம்ம காலேஜ் ஃபுல்லா பரப்பி உனக்கும் அவனுக்கும் தப்பான உறவு இருக்குன்னும் அதற்கு சாட்சி உன் வயத்துல வளர்ற குழந்தைன்னும் சொல்லி அந்த விஷ்வா பேரை காலேஜ் மட்டும் இல்லாமல் எங்க ஊரு பூரா சொல்லி நாறடிக்கலை நான் பாலா இல்லை.." என்ற வார்த்தைகளே அவள் காதில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.

என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி தவித்தவளுக்கு எக்காரணம் கொண்டும் விஷ்வா பெயர் இதில் வரக் கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருந்தாள்.

தான் எங்கேனும் மறைந்து போய் வாழ்ந்தாலும் தன் மேல் உள்ள கோபத்தால் அந்த ஆதாரங்களை லீக் செய்து விஷ்வா மேல் பழி சுமத்துவான் என்று அறிந்துக் கொண்டவள் அந்த யோசனையையும் விட்டு விட்டாள்.

அதுவும் விஷ்வா ஊருக்கு சென்று இருக்கும் விஷயம் அறிந்து வைத்ததால் இதையேக் காரணம் காட்டி ரெண்டு பேரும் எங்கையோ ஓடி விட்டனர் என்று சொன்னாலும் சொல்வான் அந்த மிருகம் என்று நினைத்துக் கொண்டு வந்தவளுக்கு கடைசியில் தோன்றியது தற்கொலை முடிவு.

இம்முடிவை எடுக்கும் போது எந்த தப்பும் செய்யாத ஒரு மிருகத்தின் காமப் பசிக்கு இரையான பாவப் பட்ட பெண்ணின் பாவத்தை மேலும் சுமக்கவென வந்த அந்த இளங்குருதியை நினைத்து தாங்க மாட்டாமல் அழுது தீர்த்தவள்,

தான் மட்டும் இந்த உலகில் வந்து என்ன சந்தோசத்தை அனுபவித்து விட்டோம்.. இதே நிலை தான் இனி உனக்கும் வரும் அதற்கு நீ இந்த உலகில் கால் பதிக்காமலே இந்த பாதுகாப்பான கருவுலகிலே இருந்து விடு என்று தூக்கில் தொங்கி தனக்கும் தன் பிள்ளைக்கும் உள்ள இந்த உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள்.

அவளின் தற்கொலை செய்தி கேட்டு பாலாவுக்கு பயங்கர அதிர்ச்சி. அவளை வைத்து பல திட்டங்கள் அவன் வைத்திருக்க அனைத்தையும் சுக்குநூறாக்கிவிட்டு சென்றவளை திட்டி தீர்த்தவன் விஷ்வா இல்லாத நேரத்தில் தான் இங்கு இருந்தால் எங்கே தன் பக்கம் யார் மூலமாவது சந்தேகம் வந்து விடுமோ என்று அஞ்சி அன்றே ஊருக்கு சென்று விட்டான்.

அங்கோ விஷ்வாவின் தந்தை இறந்த பிறகு அவனுக்கு இருந்த அடுக்கடுக்கான கஷ்டங்களை பார்த்து தான் நினைத்தது அதுவாகவே நடப்பதை கண்டு குதூகளித்தவன் படிப்புக்கு முழுக்கு போட்டு தன் அண்ணனின் சம்பாத்தியத்தில் ஊதாரியாக சுற்ற ஆரம்பித்தான்.

இப்படி இருக்கும் போது தான் பார்வி இங்கு சூட்டிங் நடத்த வருவதை கண்டு திடுக்கிட்டான். ஏனெனில் அவனுக்கு பூஜா பார்வியின் தோழி என்று நன்றாக தெரியும்.

தமிழ்நாட்டில் எவ்வளவோ கிராமம் இருக்க எதற்கு இங்கு வந்து இருக்கிறாள் என்று சந்தேகம் தோன்ற அவளுக்கே தெரியாமல் அவளைக் கண்காணிக்க தொடங்கினான்.

தன் மீது சந்தேகம் வந்து வந்திருக்கிறாளா..? என்று ஐயம் கொண்டவனுக்கு அவள் வந்து ஒரு வாரம் காலமாகியும் அந்த மாதிரி எதுவும் தன்னை சந்தேகத்தின் பேரில் அணுகவில்லை என்பது ஒரு புறம் சந்தோசமாக இருந்தாலும் அவள் வந்த நோக்கம் அறிய ஆவல் கொண்டான்.

அதை தெரிந்துக் கொள்ளும் நாளும் வந்தது. பார்வி விஷ்வாவை நோட்டம் விட அவ்வூரிலேயே வைத்த உளவாளி ஒருவன் இவனின் நண்பன் தான்.

ஒரு நாள் போதையில் இவனிடம் அனைத்தையும் உளறி விட இவனுக்கு அனைத்தும் பிடிபட்டு போனது. அந்த உளவாளியிடம் கூட அவனை உளவு மட்டும் பார்த்து சொல்வதற்கு பணம் தருவது மட்டும் தான் பார்வி சொல்லி வைத்திருக்கிறாள்.

மற்ற விஷயங்கள் எதுவும் தெரியாது.அதை தான் இவனும் பாலாவிடம் சொன்னான். ஆனால் இவன் ஒன்னு ஒன்னு ரெண்டு என்று சரியாக காரணத்தை ஊகித்து விட்டான்.

இருந்தும் அதைக் கன்பார்ம் பண்ண விஷ்வா வீட்டில் யாரும் அறியாமல் பார்வி அறையில் பேசுவதை ரெகார்ட் செய்யும் பென்னால் ஆன கருவியை அங்கு வைத்து விட்டு சென்று விட்டான்.

ஆனால் அதன் மூலம் அவனால் எதையும் அறிய முடியவில்லை. பார்வி விஷ்வாவை அன்று சந்திக்க தோட்டத்துக்கு வரவழைக்கும் போது வீட்டு ஆட்களை மட்டுமே அந்த உளவு வேலை செய்பவனிடம் கூட்டி வர சொன்னாள்.

ஆனால் இந்த விசயத்தை அறிந்த பாலாதான் ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்து அவர்களின் அந்த நிலையை காணும் படி செய்தான்.

அடுத்த நாளே விஷ்வா பார்வியிடம் அவளின் அறையில் பேசும் போது பாலா வைத்த கருவியினால் அவளின் பழிவாங்கும் எண்ணத்தை தெரிந்துக் கொண்டவன் , தன்னை நிரூபிக்க விஷ்வா பழைய விசயங்களை தோண்டி துறுவுவான் என்று எண்ணி அவன் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இருக்கிறதா என்று பார்க்க ஊட்டிக்கு இவனும் சென்றான்.

ஆனால் தன்னை சிறைபிடிக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று அறிந்தபின் திரும்பி ஊருக்கு வந்து விட்டான். அப்படி பெரிதாக எந்த ஆதாரமும் இல்லாமல் கச்சிதமாக திட்டம் போட்ட பாலா ஒரு இடத்தில் சொதப்பி விட்டான். அது ஒரு நாள் தன் நண்பனிடம் போதையில் பூஜாவிடம் நடந்துக் கொண்டதையும் அதனால் அவள் கர்ப்பம் தரித்ததையும் அதை வைத்து விஷ்வாவை மாட்டி விடப் போவதாகவும் சொல்லி விட்டான்.

அவனது நண்பனுக்கோ அது அதிர்ச்சியாக இருந்தாலும் இதை வெளியில் சொன்னால் எங்கு தன்னை எதுவும் செய்து விடுவானோ என்று பயந்து உண்மையை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டான்.

போதையில் அவனிடம் பேசியதை பாலாவும் மறந்து விட்டான். அது தான் வினையாகி போனது. அந்த நண்பன் அந்த காலேஜிலேயே வேலைக்கு சேர்ந்து இருக்க விஷ்வா பூஜா பற்றி விசாரணை பண்ணும் போது விஷ்வாவை கண்டு ஓட்டம் எடுக்க , அதில் சந்தேகித்து அவனை பிடித்து அடித்து கேட்டு உண்மையை வரவழைத்தான்.

கேள்விபட்டதை நினைக்க நினைக்க ஆத்திரம் மட்டுப்படவில்லை அவனுக்கு. இவனுக்கு உண்மை தெரிந்த விசயத்தை அங்கு ஏற்கனவே விஷ்வா வந்தால் அங்கு நடக்கும் செய்தியை தெரியப்படுத்துமாறு பியூன் ஒருவனுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு பாலா சென்றிருக்க அவன் மூலம் பாலாக்கு விஷ்வா எல்லாத்தையும் அறிந்து விட்டான் என்பதை அறிந்து தலைமறைவாகி விட்டான்.

இங்கு விஷ்வா பரிதிக்கு அழைத்து விசியத்தை சொல்ல அவனுக்கும் பயங்கர அதிர்ச்சி கோபம் போட்டிப் போட தன் தம்பியை தேட அவன் எங்கும் இல்லை என்ற செய்தி தான் கிடைத்தது.

இதில் கோபம் கலந்த சோர்வுடன் விஷ்வா அவனை எங்கு சென்றுக் கண்டு பிடிப்பது என்று புரியாமல் ஊர் வந்து சேர அவன் தேடி வந்தவனோ அவனின் தங்கையை கடத்தி தாலிக் கட்ட துணிந்து இருக்கிறான்.

சித்ராவை எதற்கு கல்யாணம் பண்ண நினைத்தான் என்றால் தான் எங்கு ஓடி ஒளிந்தாலும் பிடிபட்டு விடுவோம் என நினைத்து அவனின் தங்கையை மணம் முடித்தால் கண்டிப்பாக தங்கை வாழ்விற்காக தன்னை எதுவும் செய்யவும் மாட்டான்.

போலீசிலும் பிடித்துக் கொடுக்க மாட்டான் என்று தப்பு கணக்கு போட்டவனுக்கு அனைத்தும் கடைசியில் தப்பாக முடிந்தது. இவை அனைத்தையும் வீடியோ மூலம் வாக்கு மூலமாக தனது போனில் பதிவு பண்ண விஷ்வா அவன் கடைசிக் கூற்றில் எட்டி அவன் முகத்தில் மிதிக்கவும் போலீஸை கூட்டிக் கொண்டு பரிதி வரவும் சரியாக இருந்தது.

ஊர் பஞ்சாயித்து மூலம் அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கலாம் என்றாலும் அதுலாம் அவன் செய்த தப்புக்கு ஈடாகாது மேலும் கிடப்பில் கடந்த பூஜா தற்கொலை வழக்குக்கு இவன் தான் காரணம் என்று அவனது வாக்கு மூல வீடியோ சாட்சி சொல்ல அதைப் பெற்றுக் கொண்டு போலீஸ் அவனைக் கைதுப் பண்ணிக் கூட்டி சென்றனர்.

அனைத்தும் அறிந்துக் கொண்ட பார்வி கூனிக் குறுகி போய் நின்றாள். எத்தனை பெரிய மடத்தனத்தை செய்து வைத்துள்ளாள்.. அவன் மீது காதல் கொண்டதற்கு அவளுக்கு பெரியதாக காரணம் எதுவும் இல்லாவிடினும் அவனின் ஒழுக்கமும் பெண்களை கண்ணியம் தவறாமல் காணும் ஒரு பண்பே அவனின் பால் அவள் மனம் சரிய போதுமானதாக இருந்தது.

அந்த பண்பை பற்றி ஒரு நிமிடம் நினைத்து பார்த்திருந்தாலும் அவன் அத்தப்பை செய்து இருப்பானா என்று ஒரு முறை யோசித்திருந்தாலும் இதற்குலாம் யார் காரணம் என்று அன்றே அறிந்திருப்பாள்.

இப்படி ஒன்றும் அறியாதவன் மேல் வஞ்சத்தை வளர்த்துக் கொண்டு தன் கற்பையும் கேவலப்படுத்தி தன் தந்தை தம்பியின் மனதையும் காயப் படுத்தி குறிப்பாக அனைவரின் வாழ்க்கையையும் அல்லவா நிம்மதியிழக்க செய்திருக்கிறாள்..

அனைத்தும் நினைக்க நினைக்க அவளுக்கு அவள் மீதே ஆத்திரம் வர அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்களில் கண்ணீர் வழிய தலையில் அடித்துக் கொண்டு கீழே விழுந்து கதறி அழுதாள்.

பாலா சொன்னவற்றை எல்லாம் கேட்ட சூர்யாவிற்கோ தலையில் இடி விழுந்த உணர்வு. தன் அக்காவுக்காக தன் காதலையே துச்சமாக நினைத்தவன் , அதற்காக ஒரு பெண்ணின் மனதை வதைத்தவன் இப்படி அக்கா..அக்கா.. என்று தனது வாழ்க்கையை கூட நினைக்காமல் இருந்தவனின் அக்கா இப்படி பொய்த்து போவாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

எல்லாம் வெறும் நாடகமா..? அப்படி என்றால் அவளின் பழிவாங்கும் செயலுக்கு தங்களின் மனதையும் அல்லவா காயப் படுத்தி இருக்கிறாள்..

அந்த எண்ணம் நியாயமாக இருந்தால் கூட ஓரளவுக்கு தன்னை சமன்படுத்த முயன்றிருப்பான்..ஆனால்..? அதன் அடிப்படையே தவறாக இருக்கும் பட்சத்தில் யாரோ ஒருவன் செய்த தவறுக்கு ஒன்றும் அறியாத இன்னோருவனுக்கு போய் தண்டனைக் கொடுக்க முயன்றதை எண்ணும் போது எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

"நீயும் அதே தவறைத் தான் தப்பாமல் சித்ராவுக்கு செய்திருக்கிறே... அக்காவுக்கு தப்பாத தம்பி.." என்று அவனது மனசாட்சி அவனை காரி உமிழ தலைக் குனிந்தான்.

இருவரின் இணைகளும் தங்களின் இணை யோசிக்காமல் செய்த செயல்களுக்கு வருந்துவதைக் கண்டும் காணாமல் இருந்தனர். இப்போது வருந்தினால் தான் பின் இப்படி அவசரப்பட்டு ஒரு காரியத்தை செய்ய யோசிப்பர் என்று அமைதிக் காத்தனர்.

பிறகு நால்வரும் தங்களின் வீடு வந்து சேர சூர்யா பார்வியின் முகத்தை கூட பார்க்காமல் விறுவிறுவென தன் தந்தையிடம் சென்று அனைத்து விஷயத்தையும் கூறி முடித்தான்.

அவன் பேசும் போது அருகில் இருந்த பரிமளமும் எல்லாத்தையும் கேட்டு விட்டு இத்தனை நாள் தன் மகன் மீது தான் தவறென்று நினைத்து தான் அவனை நம்பாமல் விலக்கி வைத்ததை நினைத்து துடித்து போனார்.

"எய்யா ராசா... அப்போ நீ எந்த தப்பும் பண்ணலயா இது தெரியாம உன்ன தப்பா நினைச்சுட்டன்னே..என்ன மன்னிச்சுருய்யா.. இந்த கோட்டி புத்திக் கெட்டு போயி பெத்த புள்ளைய நம்பாம விட்டுட்டேன்.. என்னை மன்னிப்பியாயா.." என்று ஏக்கமாக கேட்டவரை அதற்கு மேலும் கஷ்டப் படுத்த விரும்பாதவன் அவரை அணைத்துக் கொண்டான்.

பின் இதற்கெல்லாம் காரணம் பார்வி என்பது நினைவு வர அவன் அணைப்பில் இருந்து விடுபட்டு அவளிடம் சென்று ஓங்கி அவள் கன்னத்தில் அறை விட்டார் பரிமளம்.


நிறைவாள்..❤️❤️❤️
 
ஹாய் தோழிகளே..💖💖

நான் உங்களின் 39வது 🏹
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்.. படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.. 🥰🥰

Post in thread 'மனதில் நிறைந்தவள் அவள்தானே..! - கருத்துத் திரி' https://pmtamilnovels.com/index.php?threads/மனதில்-நிறைந்தவள்-அவள்தானே-கருத்துத்-திரி.77/post-9009
 
Status
Not open for further replies.
Top