வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"மலராதோ மதி வதனம்!" கதை திரி

Status
Not open for further replies.
ஹாய்... மக்களே😍.

வரும் 14 தேதியில் இருந்து "மலராதோ மதி வதனம்" கதையை இங்கே படித்து மகிழுங்கள் டியர்ஸ் 😍❤️
 
ஹாய் டியர் மக்களே 👋

இதோ நானும் வந்துட்டேன்😎😎.

என்னடா லேட்டா வந்துட்டு ஓவர் பில்டப் குடுக்காளேனு நீங்க நினைக்குறது புரியுது. இருந்தாலும் நான் என்ன செய்ய எனக்கு டீ போடவே வராது டியர்.😖😖😢

நானும் பல முறை முயற்ச்சி செய்ய என் மைன்ட் "வராததை வா வா னா எப்படி வரும்னு?" என்னை கழுவி ஊத்த ஒரு வழியா நானும் அதை ஓரம் கட்டி வச்சிட்டேன். 😂😂

நாம் ஏன் வராததை முயற்சி பண்ணனும் வந்ததை சிறப்பா செய்வோம்.❤️

கதை பற்றி சொல்லிடுறேன்.

ஹீரோ: இளங்கதிரவன்

ஆன்ட்டி ஹீரோ. இவனை பற்றி இதுக்கு மேல என்ன சொல்ல? ஜஸ்ட் வெயிட் அன்ட் வாச் 😎.

இப்பவும் பாருங்க என் மைன்ட் "ஓவர் பில்டப் பண்ணி ஊத்திக்காதனு" நக்கல் பண்ணுது. இதை வச்சி கதை எழுதி முடிச்சி ஷப்பபாஆஆஆ இப்பவே கண்ணை கட்டுதே😴😴😴.


வாங்க நாம ஹீரோயின் பார்ப்போம்.

ஹீரோயின்: வெண்ணிலா

ஆன்ட்டி ஹீரோயின். தைரியமானவள். அதே நேரம் அன்பானவளும். எதிரில் நிற்பவர்களை பொறுத்தே அவள் குணம் மாறும்.

ஆன்ட்டி ஹீரோக்கு ஏத்த ஹீரோயின். அதாங்க ஜாடிக்கு ஏத்த மூடி 😂😂.

இதோ இப்போது முதல் அத்தியாயம் பதிவிடுகிறேன். வாரத்தில் இரண்டு நாட்கள் கதை வரும். எப்போதும் என்னுடன் இணைந்திருந்தாள் டியர்ஸ்❤️❤️.

Keep supporting drs ❤️
 
Last edited:
அத்தியாயம் 1

காலை கதிரவன் கீழ் வானில் உதயமாகி அன்றைய விடியலை உலகிற்கு அழகாய் காட்சிப்படுத்தி கொண்டிருந்தது.

Everything has beauty but not everyone can see (எல்லாவற்றிலும் அழகு உண்டு ஆனாலும் எல்லோராலும் பார்க்க முடியாது) என்பது போல் கீழ் வானில் உதயமான காட்சி பிழைகள் எல்லாம் பலரின் விழிகளில் பல வண்ண காட்சிகளாய் அரங்கேறி கொண்டிருக்க சிலர் அவற்றை மேகக் கூட்டங்களாய் நினைத்து கடந்து கொண்டிருந்தனர்.

எரிமலையின் தீ பிழம்பாய் கீழ் வானில் பொங்கி வழிந்த மேகக் கூட்டங்களை மென் புன்னகையுடன் ரசித்தப்படி பல் துலக்கி கொண்டிருந்தாள் வெண்ணிலா.

அவளின் தினசரி வழக்கம் இது. காலையில் எழுந்ததில் இருந்து அவசரமாய் செல்லும் அவளின் நேரத்தில் அவள் நின்று நிதானித்து ரசித்து கடப்பது இந்த நேரத்தை மட்டுமே.

கையில் ஃப்ரெஷ் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் என்றால் காலை கதிரவன், அவன் கொடுக்கும் பல வண்ண கற்பனை உருவம், வீட்டின் பின்னால் மொட்டு விட்டிருக்கும் ரோஜா, காய் காய்த்திருக்கும் தக்காளி, கத்தரி, கோழி விட்டிருக்கும் முட்டை என்று அனைத்தையும் ஒரு பார்வை பார்த்தபடி தான் நகர்வாள்.

எத்தனை அவசரம் என்றாலும் இந்த நேரத்தை அவள் என்றும் அவசரமாய் கடந்தது இல்லை. அப்படி கடந்தாள் என்றால் அன்றைய நாள் அவள் வாழ்க்கையின் நாள் குறிப்பில் இருந்து விடுபட்ட நாட்களாக இருக்கும்.

இன்றும் தன் தினசரி வழக்கமாக கதிரவனை ரசித்தபடி வெண்ணிலா பல் துலக்க,

"நிலா... இன்னும் என்ன பண்ற? காலையிலேயே இப்படி அடுப்புல ஒத்தையா கிடந்து அல்லாடுறேன். கூட மாட ஒரு வேலை செய்யுறியாடி நீ?" என்ற சந்திராவின் வசவு கொள்ளைபுறம் வந்தது.

"வேலை செஞ்சி தரட்டானு.. கேட்டா கைக்குள்ள வந்து நின்னு வேலையை கெடுக்காத போ னு திட்டுறிங்க. இப்போ வேலை செய்யல னு சொல்றிங்க, நான் என்ன தான்மா செய்யட்டும்?" என்றாள் வெண்ணிலாவும் இங்கிருந்தே.

"இந்த வாயிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை டி. கைக்குள்ள நிற்தாகன்னா ஒரு வேலையும் செய்ய மாட்டியா? ஒரு வார துணி எல்லாம் தொவைக்காம கெடக்கு. ஆத்தாங்கால்ல தண்ணீ அலைமோதி போகுது. அதை போய் தொவச்சிட்டு வரதுக்கு என்ன உனக்கு? தினமும் சொல்லிட்டே இருக்கனுமா?" என்ற சந்திரா வெளியே வந்து விட

"தினமும் எங்க சொன்னிங்க இப்போ தான் சொல்றிங்க. சாய்ந்திரம் காலேஜ் முடிஞ்சி வந்ததும் போறேன் போதுமா?" என்றாள் முறைப்புடன்.

"இப்போ இப்படி சொல்லிட்டு. சாயங்காலம் படிக்க நிறைய தந்துட்டாங்க. நாளைக்கு போறேன்னு சொல்லு... தொடப்பத்தாலையே சாந்துறேன்" என்ற சத்திரா கோபமாய் பேச,


வேலைக்கு செல்ல கிளம்பி வந்த பொன்னுதுரை "என்ன சந்திரா அவ நேரம் இருந்தா செய்ய மாட்டாளா? அவளை ஏன் திட்டுற? என்ன வேலை செய்யனும் சொல்லு... நான் செய்றேன். நீ போய் கிளம்பு போ" என்றார்.

"வேலை முடிஞ்சி. நாலு பேருக்கும் மதியத்துக்கு சாப்பாடு அடைங்க நான் வந்துடுறேன்" என்று வேலையை பொன்னுதுரையிடம் ஒப்படைத்த சந்திரா அடுத்த ஐந்து நிமிடத்தில் வேலைக்கு செல்ல கிளம்பி வந்தார்.

"நிலா இன்னும் என்ன செய்ற டி? பல்லு விளக்க இத்தனை நேரமா? பொட்ட புள்ளை மாதிரியாடி வளருற நீ? உன்னை திட்டி எனக்கு தான் ஜவ்வு கிளியுது. மணி எட்டு ஆகுது. காலேஜ் போகனும் என்ற எண்ணம் இருக்கா உனக்கு?"

"சாப்பாடு எடுத்து வச்சிட்டேன். தோசையும் சுட்டு வச்சிருக்கேன். சட்னி வைக்க நேரம் இல்லை. பொடி இருக்கு. சாப்பிட்டுட்டு போ... நான் வரும் போது தோசை சாப்பிடாம இருந்தது. தொலச்சிடுவேன். எனக்கு வேலைக்கு நேரம் ஆகிட்டு அம்மா கிளம்புறேன். சாப்பிட்டுட்டு போ..." என்ற சந்திரா எத்தனை திட்டினாலும் வேலைக்கு செல்லும் அவசரத்திலும் எங்கே கல்லுரி செல்லாம் அவசரத்தில் மகள் சாப்பிடாமல் சென்று விடுவாளோ என்று ஒன்றிற்கு இரண்டு முறை வலியுறுத்த

"ஹப்பா மூச்சி விட்டு பேசுமா. எத்தனை கேள்வி கேக்குற? நான் பார்த்துக்குறேன் மா.நீங்க பார்த்து போய்ட்டு வாங்க" என்ற வெண்ணிலா முகம் கழுவிவிட்டு உள்ளே வர, சந்திராவும் பொன்னுதுரையும் கிளம்பி இருந்தார்.

இருவரும் டவுனில் உள்ள ஒரு துணி கடையில் விற்பனை பிரிவில் பணியாற்றுகின்றனர்.

சொக்கநாதனூர் சிறுதும் அல்லாத பெரிதும் இல்லாத ஊர். எட்டு பட்டி பச்சாயத்திற்கு முதன்மையான ஊர். பத்து வருடங்களுக்கு முன்பு வரை வானம் பார்த்த பூமியாக விவசாயத்தை உயிராய் கொண்டிருந்த பூமி, இன்றோ நாகரிகத்தின் கை பிடித்து நடக்க தொடங்கி இருந்தது.

எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என முப்போகம் நெல் விழைந்த பூமி எல்லாம் இன்று வீட்டடி மனைகளாகவும் குளிர்ப்பான தொழிற்ச்சாலையாகவும் மாறி இருந்தது.

ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்களுக்கே அரசின் உதவிகள் இருக்க, சிறு குறு விவசாயிகளின் பாதிப்புகள் யார் கண்களுக்கும் தெரியாமல் போனதின் விளைவு, நூற்றி ஐம்பது வீடுகளை மட்டுமே கொண்டு சிறிதாய் இருந்த ஊர் இன்று ஐநூறுக்கும் மேற்ப்பட்ட வீடுகள் வந்து சற்று பெரிய ஊராக மாறி இருந்தது.

விவசாயம் பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமாக்க போவதில்லை என புரிந்து பெரும்பான்மையினர் இருந்த நிலத்தை விற்று விட்டு மாத சம்பளத்தில் வேலைக்கு சென்று விட்டிருந்தனர்.

அதில் பொன்னுதுரையும் ஒருவர். கணவன் மனைவி இருவரும் ஒரே கடைக்கு வேலைக்கு செல்ல ஒருவர் சம்பளம் வீட்டு செலவிற்கும், பிள்ளைகள் படிப்பிற்கும் செல்ல ஒருவர் சம்பளம் சேமிப்பில் இருந்தது.

பெரிதாக கஷ்டம் இல்லை என்பதால் பிள்ளைகள் விருப்பியதை செய்ய முடிந்தது.

அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றிருக்க, மீண்டும் பின்னால் சென்று கை கால் முகம் கழுவி வந்த வெண்ணிலா முன்தினம் மாலை அயர்ன் செய்து வைத்திருந்த புடவையை அவசர அவசரமாய் கட்டினாள்.

காட்டன் புடவை அயர்ன் செய்து வைத்தும் மடிப்பு சரியாக வராமல் சதி செய்ய, முடிந்த அளவு அதை சரி செய்தவள் கல்லூரிக்கு நேரம் ஆவதை உணர்ந்து அதை அப்படியே விட்டு விட்டு அவசரமாய் கிச்சன் சென்று மதிய உணவை எடுத்து பேக்கில் வைத்தாள்.

சந்திரா சொன்னதையும் மறக்காமல் அவர் செய்து வைத்து விட்டு சென்றிருந்த இரண்டு தோசையையும் அவசரமாய் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து செருப்பை மாட்ட

"அக்கா காலேஜ் கிளம்பிட்டாயா?" என்று வந்தான் அருண்மொழி. வெண்ணிலாவின் தம்பி.

"ஆமா டா. பஸ்க்கு லேட் ஆகிட்டு. உனக்கு தோசை இருக்கு. பொடி வச்சி சாப்பிட்டுக்கோடா" என்று கூறியபடி அவசரமாய் சென்றவள் புடவை தடுக்கி விழ போக,

அவள் விழுந்து விடாமல் பிடித்து கொண்ட அருண் "அக்கா பார்த்து போ. ஏன் அவசர படுற? பஸ்க்கு இன்னும் நேரம் இருக்கு" என்றான்.

'பஸ் இப்போ அஞ்சி நிமிஷம் பாஸ்ட் டா. அதான் அவசரமா போக வேண்டியதா இருக்கு. சரி டா கிளம்புறேன்" என்ற வெண்ணிலா பேருந்து நிறுத்தம் நோக்கி சென்றாள்.

வெண்ணிலா இளங்கலை கணிதவியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். இப்போது உள்ள பெரும்பான்மையான கல்லூரியில் சீருடை என்பது பெரும்பாலும் இருக்காது.

அப்படி இருக்கும் கல்லூரிகள் சொற்பமே. அதிலும் மகளிர் கல்லூரி என்றால் சீருடை என்ற ஒன்று பெரிதாய் இருப்பதில்லை.

அதில் வெண்ணிலா கல்லூரி புதுவகை.‌ மகளிருக்கு மட்டுமேயான கல்லூரி என்றாலும் கல்லூரியின் சட்ட திட்டங்கள் ஷிட்லரின் அதிகார சட்டங்களை விட கொடுமையானது.


சீருடை இல்லை ஆனா சீருடை தான். கல்லூரிக்கு புடவை தான் கட்ட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அதிலும் காட்டன் புடவை தான் கட்ட வேண்டும் என்பது அவர்கள் கல்லூரியின் எழுதப்படாத சட்டம். அதிலும் புடவை அயர்ன் செய்து மடிப்பு கலையாமல் கட்ட வேண்டும். கழுத்து இறக்கம் என்பது சுத்தமாய் இருக்க கூடாது. காலர் வைத்து தான் தைத்திருக்க வேண்டும். கை உயரம் ஆறு சென்டி மீட்டர் குறையாமல் இருக்க வேண்டும். காலை ஒன்பது மணிக்கு நடக்கும் இறை வாழ்த்திற்கு சென்று விட வேண்டும். புடவை மடிப்பு கலைந்தோ கை அளவு குறைந்தோ இருந்தால் அன்று முழுவதும் கல்லூரியில் வெளியில் தான் நிற்க வேண்டும்.

இந்த கொடுமைக்காகவே எல்லா பெண்களும் இரண்டு செட் புடவை மட்டுமே கல்லூரிக்கு கட்ட என்று வைத்திருப்பர். இப்படி பல சட்டங்கள் போட்டு கல்லூரி செயல்பட

அந்த கல்லூரியை பார்த்தாலே பெண்கள் பலரும் விழுந்தடித்து ஓடுவார்கள். ஆனால் விதி யாரை விட்டது! அந்த கல்லூரியில் சேரவே கூடாது நின்று நினைப்பவர்கள் பலரும் பெற்றவர்களின் கட்டாயத்தில் அங்கு தான் சேர்ந்து விட பட்டனர்.

அப்படி தான் வெண்ணிலாவும் அந்த கல்லூரியில் சேர்ந்தாள். என்ன அழுது புரண்டு என்ன? கடைசியில் அங்கு தான் சேர்ந்தாள். புடவை கட்டிக்கொண்டு நடப்பது முதலில் கடினமாக இருந்தாலும் போக போக பழகி விட்டிருந்தது.

ஆனாலும் இப்படி அவசரமாய் கட்டும் சில நேரங்களில் மடிப்பு சரியாக வராமல் படபடப்பை ஏற்றி விடும்.

இன்று அதே போல் புடவை மடிப்பு கசங்கி சதி செய்ய, அதை நிதானமாய் நின்று எடுத்து விடுவதற்கு நேரம் இல்லாமல் 'பேருந்து சென்று விடுமோ!' என்ற பதட்டத்தில் அவசரமாய் சென்றாள்.

ஊர் என்ன நான் பெரிய ஊராக மாறி இருந்தாலும் பேருந்து வசதி இன்னும் வரவில்லை. ஊரில் இருந்து வெளியில் தான் இருந்தது பேருந்து நிறுத்தம். ஒரு நாளைக்கு நான்கு நேரம் மட்டுமே பேருந்து வந்து சொல்லும். அதை விட்டு விட்டால் ஐந்து கிலோ மீட்டர் சென்று தான் பேருந்து ஏற வேண்டும்.

அதிலும் அவர்கள் கல்லூரி முன் நிற்கும் பேருந்துகள் சொற்ப்பமே.

"இருந்து... இருந்து... இந்த ஹிட்லர் காலேஜ் தான் கிடைச்சிதா இந்த அப்பாக்கு?" என்று பொன்னுதுரையை திட்டியபடி வந்தவள் எதிரில் வரும் பைக்கை கவனிக்கவில்லை.

ஆனால் அவள் வருவதை கவனித்தும் அவளை நோக்கி வந்த பைக் காரன் வெண்ணிலாவின் அருகில் வந்ததும் ஹாரனை விடாமல் அழுத்தினான்.

தனக்கு மிக அருகில் சட்டென கேட்ட காரன் சத்தத்தில் பயந்த வெண்ணிலா சுதாரித்து விலகும் முன் அந்த பைக் அவளை மோதி இருக்க, அம்மா என்ற அலரலுடன் கீழே விழுந்து இருந்தாள்.

அவள் விழுந்த வேகத்தில் தார்சாலையும் அவள் இரு முழங்கையிலும் நன்றாக உராய்ந்து விட்டிருந்தது. கல்லூரி புத்தகப்பை கீழே விழுந்து சாப்பாடு ரோட்டில் சிதறி விட அவளின் நோட்டின் மேல் பைக்கின் டயர் ஏறி கீழிந்து இருந்தது.

அதில் ஆத்திரமாய் அந்த பைக்காரனை திட்ட எழ போனவள் அப்போது தான் வலது கையின் முழங்கையில் இருந்து ரத்தம் வழிந்து புடவையில் படுவதை பார்த்தாள்.

தார் சாலை அதன் வேலையை நன்றாக செய்து இருக்க அடி பெரிதாக பட்டிருந்தது. காயத்தை பார்த்த பிறகு தான் அதன் வலி உணர்ந்து முகம் கசங்கியவள் சேலையின் முந்தானையை எடுத்து கையோடு பொத்தி கொண்டாள்.

"லேசான அடி தான் போல? நான் கொஞ்சம் பெருசா எதிர் பார்த்தேனே.., என் திருப்திக்கு ஓன்ஸ் மோர் போவோமா? ப்ளீஸ்" என்று குரலில் போலி பணிவு காட்டி எல்லலாய் ஒளித்த குரலில் நிமிர்ந்து பார்த்த வெண்ணிலாவின் முகம் உணர்வுகளை தொலைத்து பாறை என இறுகி இருந்தது.

குரலே அவனை யார் என்று அடையாளம் காட்டி விட இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவனின் தாக்கம் தன்னும் இருப்பதை நினைத்து இறுகி போனவள் அவனை பார்த்த பார்வையில் ஜீவன் இருக்கவில்லை.

யாரை தன் வாழ்க்கையில் பார்த்தே விட கூடாது என்று ஒவ்வொரு நாளும் கடவுளை வேண்டினாளோ அவன் இப்படி முழுதாக முன் வந்து நிற்பான் என்று கனவிலும் நினைத்து இருக்கவில்லை. அதில் இன்னும் இறுகி போனவள் அவனை உணர்வற்று பார்க்க,

"ஏன்டி கருவாச்சி ரோடு என்ன உன் அப்பன் போட்டதா? உன் இஷ்டத்துக்கு நடு ரோட்டுல நடந்து வர, ரோடு கவர்மென்ட் போட்டது மா. பகல் கனவு கண்டுட்டு பாதையில கவனம் இல்லாம போனா இப்படி தான் சேதாரம் ஆகும். இனிமேல் ஓரமா போ.... என்னை மாதிரி எவனும் லேசா இடிக்க மாட்டான். ஓரேடியா மேலோகம் அனுப்பிடுவான் என்று படு நக்கலாய் கூறினான்.

அவன் இளங்கதிரவன் ஐபிஎஸ். இரண்டு வருடங்களாக வெளி மாநிலங்களில் வேலை பார்த்து விட்டு விரும்பி இடமாற்றம் கேட்டு சொந்த மாவட்டம் வந்திருக்கிறான். அவனை நிந்தித்த அத்தனை சட்டங்களையும் உடைத்தெரியும் வெறியுடன்.

உடைப்பானா? உடைபடுவானா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

மலரும்...❤️
 
Last edited:
ஹாய் டியர்ஸ் 👋

"மலராதோ மதி வதனம்!" கதையின் நிறை மற்றும் குறையை கருத்து திரியில் மறக்காம சொல்லிட்டு போங்க டியர். உங்கள் கருத்துக்கள் தான் என்னோட எனர்ஜி ❤️.

கருத்து திரி 👇


அன்புடன்

🏹21
 
அத்தியாயம்: 2

யாரோ பைக் காரன் இடித்து விட்டான் என்று நினைத்த வெண்ணிலா அது இளங்கதிரவனாக இருப்பான் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை.

அவன் நக்கல் பேச்சில் தான் அவனை அடையாளம் கண்டு கொண்டவளுக்கு சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் நினைவு வந்து நெஞ்சத்தில் நெருப்பை பற்ற வைத்தது.

யாரை தன் வாழ்க்கையில் மீண்டும் பார்த்து விட கூடாது என்று உறுதியாக நினைத்தாளோ! அவன் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவான் என்று துளி கூட நினைத்து பார்க்க இல்லை. அப்படி இருக்க அவன் வந்தது திகைப்பு என்றால் முன்பு இருந்த திமிர் துளியும் குறையாமல் நின்றவனை பார்த்து கோபம் வந்தது.

அதிலும் இளங்கதிரவனின் திமிர் பேச்சி அவளின் வாய் பூட்டை அவிழ்த்து விட "ரோடு என் அப்பா போட்டது இல்லை தான். ஒத்துக்குறேன். உன் அப்பா போட்டதும் இல்லை. இப்படி நடு ரோட்டுல போற வரவங்களை இடிச்சி தள்ளிட்டு போக!. பார்த்து இரு போலீஸ் தூக்கி உள்ள வச்சிட போறாங்க" என்றாள் வெண்ணிலாவும் கோபமாய்.

அவள் சொன்னதை கேட்டு "ஹாஹாஹா" வாய் விட்டு சத்தமாய் சிரித்த இளங்கதிரவன் "என்னை உள்ள தூக்கி வைக்க போறாங்களா? வைக்கட்டும்... வைக்கட்டும்... யார் வராங்கனு பார்க்கலாம்! இந்த எசிபி இளங்கதிரவனை உள்ள வைக்க!" என்றான் மீசையை முறுக்கி விட்டபடி திமிராய்.

அதில் வெண்ணிலாவின் மனம் ஒரு முறை அதிர்ந்து அடங்க அவனிடம் வெளிக்காட்டி கொள்ளவில்லை. இத்தனை வருடத்தில் ஒரு நொடி கூட வெண்ணிலா அவனை தேடியதோ அவனை தெரிந்து கொள்ள முயன்றதோ இல்லை. எங்கேனும் அவன் பெயர் அடிபட்டாலே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவாள். அப்படி இருக்க அவன் எசிபி என்பது அதிர்ச்சியை தான் தந்தது.

அதிலும் ஒரு காவல்துறை அதிகாரியான அவன் செயல் கோபத்தை கொடுக்க "உன்னை மாதிரி சட்டம் என் சட்டை பையில் என்று பேசிட்டு சுத்துற போலிஸ் பத்து பேர் இருந்தா நாடு விளங்கிடும்" என்றாள் நக்கலாய்.

"உன் திமிர் உன்னை விட்டு போகுமா? அப்போ இருந்து இப்போ வரை இந்த திமிர் மட்டும் குறையவே இல்லைடி. இப்போ தானே வந்து இருக்கேன் இனிமேல் குறைச்சிடுறேன்" என்ற இளங்கதிரவன் வெண்ணிலாவை வன்மமாய் பார்த்தான்.

"நீதானே சாப்பாடு போட்டு வளர்த்து விட்ட? குறைக்குறதுக்கு..." என்று வெண்ணிலாவும் கோபமாய் கூற,

"நான் திமிரை சொன்னேன். கொலுப்பை சொல்லவில்லை. உனக்கு அப்படியும் ஒரு எண்ணம் இருக்கும் போல!" என்ற இளங்கதிரவனின் பார்வை ஒரு நொடி வெண்ணிலாவை அழுத்தமாய் தழுவி மீள,

அவன் பார்வையில் கூசியவள் "சீ பொறுக்கி நாயே. பதினைந்து வயசுலயே பொறுக்கிட்டு அலைஞ்சவன் தானே! உனக்கு புத்தி வேற எப்படி போகும்?" என்ற வெண்ணிலா அவனை முறைத்து விட்டு அங்கிருந்து நகர போக,

"யாருடி பொறுக்கி?" என்று கேட்டு ஆவேசமாய் பைக்கில் இருந்து இறங்கிய இளங்கதிரவன், நொடியில் வெண்ணிலாவை நெருங்கி அவள் கையை பின்னால் வளைத்து இருந்தான்.

அதில் அவனை முறைத்த வெண்ணிலா "சீ விடுடா என்னை" என்றவள் அவனிடமிருந்து கையை விலக்க பார்க்க,

அவளை விலக விடாமல் அழுத்தமாய் பிடித்து கொண்டவன் "நீ சீன்னு சொல்ற அளவுக்கு நான் தாழ்ந்து போயிடலை. இந்த திமிருக்கு தான்டி என்கிட்ட வாங்க போற! உன்னை என் முன்னாடி கண்ணீர் விட்டு கதற விடலை நான் கதிரவன் இல்லைடி" என்றான் ரௌத்திரத்துடன்.

வெண்ணிலா அப்போதும் அவனை முறைத்து நின்றவள் "அப்படி ஒரு நிலமை வந்தா பார்த்துக்கலாம்" என்று அஞ்சாமல் கூறி அவள் கையை விலக்க பார்க்க, இளங்கதிரவனின் இறுக்கமான படியில் அது முடியாமல் போனது.

"பெரிய கண்ணகி! நீ முறைச்சா நான் பொசுங்கிடுவேன் பாரு போடி..." என்றவன் அப்போது தான் வெண்ணிலாவின் கண்களில் பிரதிபலித்த வலியை பார்த்தான்.

அதில் அவளை இன்னும் நெருங்கி அவள் கண்களை விழி அசைக்காமல் பார்த்தவன் "ஹப்பாடா... இப்போ தான்டி மனசுக்கு குளுகுளுனு இதமா இருக்கு" என்று கூறி கொண்டே அவள் கையை இன்னும் பின்னால் வளைக்க, அதில் எழும்பு உடைந்தது போன்ற பெரும் வலி ஒன்று வெண்ணிலாவின் உடலெங்கும் பரவ அவள் கண்களில் கண்ணீர் பெருகி நின்றது.

ஆனாலும் அவன் முன் கண்ணீர் சிந்தி விட கூடாது என்ற வைராக்கியத்தில் அதை வெளியேர விடாமல், பல்லை கடித்து வலியை பொறுத்துக்கொண்டு வெண்ணிலா நிற்க

"இது தான் டி வேணும். உனக்கு வலிக்கனும் ஆனா அந்த வலி எனக்கு தெரிய கூடாதுனு உனக்கு நீயே வலியை தரனும். உனக்கு வலிக்கலையோனு நான் இன்னும் இன்னும் உன்னை வச்சி செய்யனும். உன் கணக்கை தீர்க்க நேரம் வந்துடுச்சி டி. தீர்த்து விட்டா தான் எனக்கு தூக்கம் வரும். அதுவரைக்கும் இந்த கதிரவனுக்கு தூக்கம் இல்லை. என்ன சொன்ன பொறுக்கியா? பொறுக்கி என்ன செய்வான்னு காட்டுறேன்" என்றான் இளங்கதிரவன் கண்கள் வஞ்சத்தில் பளபளக்க

ஆனா அதை பார்த்த வெண்ணிலாவிடம் பயம் என்ற பிரதிபலிப்பு துளியும் இல்லை. 'முன்பு செய்ததை விட பெரிதாய் என்ன செய்துவிட போகிறான்' என்று நினைத்தவள் கை வலித்தும் அவன் முன் கண்ணீர் சிந்தி விட கூடாது என்ற வைராக்கியத்தில் இறுகி நின்றிருந்தாள்.

இறுகி கிடந்த அவள் முகத்தை இகழ்ச்சியாய் பார்த்த இளங்கதிரவனின் நெஞ்சம் அவளை விட பல மடங்கு கோபத்திலும், பழி வெறியிலும் இறுகி கிடந்தது. அந்த கோபத்தை விழிகளில் தேங்கி அவளை பார்த்தவன் அவளை உதறிவிட்டு திரும்பி செல்ல,

"வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு டா. கட்டாயம் உன்னை வதம் பண்ண வருவான்" என்ற வெண்ணிலா நிதானமாய் சத்தம் உயராமல் அதே நேரம் அழுத்தமாய் சொல்ல,

"பார்க்குறேன் டி. எந்த வல்லவன் வந்து உன்னை எங்கிட்ட இருந்து காப்பாத்துறான்னு" என்ற கதிரவனின் பைக் புழுதி பறக்க அங்கிருந்து கிளம்பி சென்றது.

அதுவரை அவன் முன்பு சிந்தி விட கூடாது என்று தேங்கி நின்றவளின் கண்ணீர் பூமியில் பட்டு தெரிக்க வழிந்த கண்ணீரை துடைத்தபடி உடையிலும் கல்லூரி பேக்கிலும் ஒட்டி இருந்த மண் மற்றும் தூசியை தட்டிவிட்டாள்.

ஆனால் மனநிலை கடலில் ஆழ் கடல் சீற்றம் என கோபத்தில் பொங்கி கொண்டிருந்தது.

"ச்சை இந்த பொறுக்கி நாய் எல்லாம் திரும்பி வரலைன்னு யார் அழுதா? ஊரை வீட்டு போனவன் அப்படியே போக வேண்டியது தானே..., எத்தனையோ அப்பாவி எல்லாம் ஆக்ஸிடன்ட்ல போய் சேருறான் இவனுக்கு எந்த லாரியும் கிடைக்கலை போல..." என்று திட்டி கொண்டிருந்த வெண்ணிலா,

"நிலா என்ன ஆச்சி? ஏன் இங்க நிக்குற? ஹேய் இது என்ன கையில ரத்தம்?" என்று பதறி அவள் அருகில் வந்தான் சரவணன்.

இளங்கதிரவனின் தம்பி. கணித பேராசிரியர். கணிதத்தில் பிஹெச்டி முடித்து விட்டு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றான்.

"எல்லாம் உங்க அண்ணன் அந்த பொறுக்கியாள தான். ச்சை அவனெல்லாம் இங்க வரலைன்னு யாரு அழுதா? ஊரை விட்டு போனவன் அப்படியே போக வேண்டியது தானே!" என்ற வெண்ணிலா இளங்கதிரவன் மேல் இருந்த கோபத்தை எல்லாம் சரவணனிடம் காட்ட,

"என் அம்மா" என்றான் சரவணன் நிதானமாய்.

அதில் "என்ன?" என்ற வெண்ணிலா அவனை புரியாமல் பார்க்க, "இல்லை யார் அழுதானு கேட்டியே...? அதான் என் அம்மா அழுதாங்கனு சொன்னேன்" என்றவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து அவளின் அடிபட்ட கையில் கட்டி விட,

அவனை முறைத்த வெண்ணிலா அவன் கையை தட்டி விட்டு அங்கிருந்து விறுவிறுவென்று சென்றாள்.

"நீங்களும் அவன் தம்பி தானே! வேற எப்படி இருப்பிங்க!" என்று முணுமுணுத்தபடி வெண்ணிலா செல்ல

"நிலா... இது என்ன பேசிட்டு இருக்கும் போது பாதில போறது? நீ கதிரோட நம்ம உறவை இணைச்சி பாக்குறியா? அப்படினா இங்கேயே சொல்லிடு இனிமேல் உன் வழிக்கே வர மாட்டேன். என்னை பற்றி உனக்கு நல்லா தெரியும்" என்றான் சரவணன் அழுத்தமாய்.

அதில் கோபமாய் ரோட்டை உதைத்து விட்டு திரும்பி வந்தவள் அவனை முறைத்துவிட்டு பைக்கில் அவன் பின்னே அமர,

"பிடிச்சிக்கோ. மறுபடியும் கீழ விழுந்து காலை உடைச்சி வச்சிக்காத. அப்பறம் எனக்கு தான் கஷ்டம்" என்றவன் இதழ் பிரியா புன்னகையுடன் சொல்ல,

"எல்லாம் என் நேரம். ச்சை..."என்று ஆத்திரத்தில் பல்லை கடித்த வெண்ணிலா அவன் தோளில் கை வைத்து பிடித்து கொண்டாள்.

வெண்ணிலாவை அருகில் இருந்த மருத்துவமனை அழைத்து சென்று டிடி போட்டு விட்டு அழைத்து வந்து வீட்டில் விட்டவன் "ரெஸ்ட் எடு. அதுக்கு முன்னாடி காலேஜ்கு போன் செய்து நாளைக்கு சேர்த்து லீவ் செல்லு" என்று சரவணன் சொல்ல வெண்ணிலா மௌனமாய் நின்றிருந்தாள்.

அவள் அமைதியை பார்த்தவன் "நிலா.." என்று அழுத்தமாய் அழைக்க,

"அவன் ஏன் மறுபடியும் வந்தான்? நிம்மதியே போச்சி. என்னமோ வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டாம்னு தோனுது. காலேஜ் ஒரு வாரம் லீவ் சொல்ல போறேன்" என்ற வெண்ணிலா தன்பாட்டிற்கு பேசி கொண்டே செல்ல,

"பேசி முடிச்சிட்டியா? சரி நாளைக்கு மறுநாள் கிளம்பி இரு. நான் காலேஜ்ல ட்ராப் பண்ணிட்டு. பிக் அப் பண்ணிக்குறேன்" என்றான் சரவணன்.

"இப்போ என்ன உங்க பிரச்சனை? சும்மா எரிச்சல் படுத்திட்டு இருக்கிங்க! எனக்கு எதுவும் பிடிக்கலை என்றவள் கோபமாய் கத்த,

"உனக்கு என்ன பிரச்சனை?" என்றான் சரவணன் நிதானமாய்.

"உங்க குடும்பம் தான் பிரச்சனை. உங்க அண்ணன் தான் பிரச்சனை. அந்த வீட்டுக்கு வரதை நினைச்சாலே உடம்பெல்லாம் எரியுது" என்ற வெண்ணிலாவின் முகம் கோபத்தில் சிவந்து போக,

"நடந்து முடிஞ்சதை விடு நிலா. நீ ஏன் அதையே நினைச்சி உன்னை கஷ்டப்படுத்திக்குற?" என்ற சரவணன் அவளை கனிவுடன் பார்க்க,

"முடியலை. மறக்குற மாதிரியா உங்க அண்ணன் பண்ணான். நினைச்சாலே நெஞ்செல்லாம் எரியுது..." என்றாள் வெண்ணிலா அதீத கோபத்துடன்.

"அதுக்கு இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற நிலா?" என்று சரவணன் கேட்க,

"எதுவுமே பண்ண முடியாதது தான் என் கோபத்துக்கு காரணம். ஏதாவது பண்ண முடிஞ்சா என் கோபம் குறையுமோ? என்னோவோ?" என்றவளுக்கு இளங்கதிரவனை நடு ரோட்டில் விட்டு சாட்டையால் அடிக்கும் வெறி வந்தது. ஆனால் வந்து என்ன பயன் எதுவும் செய்ய முடியாது.

ஒரு மாவட்டத்தின் ஐபிஎஸ் ஆஃபிஸரை என்ன செய்து விட முடியும்! அவள் நினைத்து போல் அடித்து விட முடியுமா! இல்லை அவன் செய்ததை மறந்து கடந்து விட தான் முடியுமா! அதை நினைத்த வெண்ணிலாவின் முகம் மீண்டும் உணர்ச்சிகளை தொலைத்து நின்றது.

"எல்லாத்துக்கும் காலம் பதில் தரும் நிலா அது வரை வெயிட் பண்ணு. இப்போ எதை பற்றியும் யோசிக்காம போய் ரெஸ்ட் எடு" என்று வெண்ணிலாவை சமாதானம் செய்து விட்டு சரவணன் அவன் வீட்டிற்கு செல்ல

"நில்லுடா... நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? அந்த வெண்ணிலா கூட பேசாதனு சொன்னா உன் மூளையில் ஏறாதா? எப்பவும் அவ கூட சேர்ந்து ஊர் சுத்தாம உன்னால் இருக்க முடியாதா?" என்றார் வேலம்மாள் கோபமாக.

"அம்மா பேசுற வார்த்தையை யோசிச்சி பேசுங்க சொல்லிட்டேன். ஊர் சுத்துறேன் அது.. இதுன்னு.. எல்லாம் பேசாதிங்க. ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் கேட்டுட்டு பொறுமையா போக மாட்டேன்" என்ற சரவணன் அடக்கப்பட்ட கோபத்துடன் பேச

"ஹோ... அந்த அளவுக்கு வந்துட்டா? என்ன பேசி உன்னை மயக்கி வச்சிருக்கா? இப்படி அவ பின்னாடியே சுத்துற..." என்று வேலம்மாள் சொல்லி முடிக்கும் முன்

"அம்மா..." என்று கத்திய சரவணன் சாப்பிட்டு மேஜையில் இருந்த தண்ணீர் சொம்மை எடுத்து விட்டெறிய, அது தரையில் பட்டு தண்ணீரை சிதறிய வேகம் சரவணனின் கோபத்தை காட்ட, பார்த்து நின்ற வேலம்மாள் வெடவெடத்து போனார்.

அவர் நடுக்கத்தில் சற்று நிதானித்த சரவணன் "உங்கிட்ட பல முறை சொல்லிட்டேன். பேசுற வார்த்தையை யோசிச்சி பேசுங்கனு. உங்க முத்த பையன் மாதிரி பொறுமையா நீங்க பேசுறதை கேட்டுட்டு இருக்க மாட்டேன்" என்று அவரை எச்சரித்தவன், அடுத்த பத்து நிமிடத்தில் கல்லூரிக்கு கிளம்பி சென்றிருந்தான்.

அதுவரை அங்கே நடப்பதை ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்தபடி கவனித்து கொண்டிருந்த இளங்கதிரவன் பேப்பரை மடித்து வைத்தபடி "அம்மா சாப்பாடு எடுத்து வைங்க டியூட்டி போக லேட் ஆகிட்டு" என்று விட்டு அவன் அறைக்கு போக,

"ஏன் கதிரவா.. நான் என்ன பேசிட்டேன்னு இப்படி நிலையா நின்னுட்டு போறான்? நீயும் பார்த்துட்டு இருக்க? என்ன சொக்கு பொடி போட்டாளோ... இவன் இப்படி அவ பின்னாடியே சுத்துறான். நீயும் என்னனு ஒரு வார்த்தை கேட்க மாட்டேங்குற" என்று விசும்பலாக சொல்ல,

"அவனுக்கு பிடிக்காததை நீங்க ஏன் பேசுறிங்க! விடுங்க. போய் சாப்பாடு எடுத்து வைங்க..." என்று விட்டு அவனும் சென்று விட, வேலம்மாள் இளங்கதிரவனின் இந்த பேச்சில் திகைத்து நின்றார்.

அவன் தனக்கு சாதகமாய் பேசுவான் என்று நினைத்து சரவணனிடம் அப்படி பேசியவருக்கு ஏமாற்றமாய் போய் விட அதற்கும் காரணம் வெண்ணிலாவென பழி சொல்லியபடி கதிரவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தார்.

இளங்கதிரவன் கிளம்பி வரவும், அவனுக்கான அரசாங்க வாகனம் அவன் வீட்டு வாசலில் வந்து நிற்க, காக்கி உடையின் கம்பிரமாய் வந்து வாகனத்தில் அமர்ந்தவன் "சைரன் ஆன் பண்ணுங்க ராமர்?" என்றான்.

"சார்!! இங்க சைரன்!!" என்ற ஓட்டுனர் தயங்கி அவனை பார்க்க,

"என்ன இந்த ஊருக்கு? கொம்பு முளைச்சிருக்கா? ஆன் பண்ணுங்க ராமர்" என்று இளங்கதிரவன் அழுத்தி சொல்ல,

தன் மேல் அதிகாரியின் பேச்சை தட்ட முடியாமல் ஓட்டுனர் வாகனத்தின் சைரனை ஆன் செய்ய அந்த தெருவில் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் இருந்தவர்கள் அதிர்ச்சியும் வியப்புமாய் வெளியே வந்து எட்டி பார்த்தனர்.

சொக்கநாதனூர் விவசாய பூமி மட்டும் இல்லை அரிச்சந்திரன் என்ற நல்ல மனிதரின் வார்த்தைக்கு கட்டு பட்ட ஊரும் கூட. ஊரில் என்ன தவறு நடந்தாலும் அரிச்சந்திரனின் தீர்ப்பில் நியாயம் கிடைக்கும் நல்லது நடக்கும் என்று நம்பி காவல் நிலையம் செல்லாமல் அரிச்சந்திரனின் வார்த்தைக்கு கட்டு பட்டு வாழும் ஊர்.

அப்படி பட்ட ஊரில் அரிச்சந்திரனின் மகனாய் பிறந்து இளங்கதிரவன் வேலையில் சேர்ந்து அடுத்த நிமிடம் தன் தனிப்பட புகாராய் தன் முதல் புகாரை சொக்கநாதனூர் மேல் பதிவு செய்து இருந்தான்.

தொடரும்...❤️
 
ஹாய் டியர் ‌ப்ரெண்ட்ஸ் 😍👋.

"மலராதோ மதி வதனம்!" கதையின் சென்ற அத்தியாயத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி டியர்ஸ் 😍❤️.

இதோ அடுத்த அத்தியாயம் பதிவிட்டு விட்டேன் படித்து விட்டு உங்கள் நிறை மற்றும் குறையை கருத்து திரியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 😍🙏

கருத்து திரி 👇👇

நன்றி 😍
 
அத்தியாயம்: 3

தான் பிறந்த மாவட்டத்தில் வேலையில் சேர்ந்த இளங்கதிரவன் முதல் வேலையாக சொக்கநாதனூர் மேல் புகார் எழுதி எப்ஐஆர் பதிவு செய்தான்.

அதில் இத்தனை ஆண்டுகளாய் கோபத்தில் கனத்து கிடந்து அவன் மனம் சற்று சமன் பட, அதன் பிறகே அடுத்த வேலையை பார்த்தான். என்ன தான் சொந்த வாழ்க்கையில் ஆத்திரகாரனாகவும், கெட்டவனாகவும் இருந்தாலும் வேலையில் நேர்மையானவன். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாகுபாடு பார்க்காமல் நியாயத்தின் பக்கம் நிற்பவன். குற்றவாளிகளை வைத்து செய்து விடுவான்.

எனவே சொக்கநாதனூரின் மீதான புகாரை பதிவு செய்தவன் அடுத்த நிமிடம் அந்த மாவட்டத்தின் குற்றவாளி பட்டியலை தூசு தட்டி எடுத்தவன் இதுவரை தீர்ப்பு வராமல் கிடப்பில் கிடந்த வழக்குகளையும் கையில் எடுத்து விசாரணையை தொடங்கி இருந்தான்.

அடுத்த அடுத்த நாள்களில் அதை செய்த குற்றவாளிகளை பிடித்து, அவர்களின் உயிரை மட்டும் உடலில் விட்டு விட்டு மற்ற அனைத்தயும் உறுவி எடுத்தவன் அவர்களின் வாக்கு மூலத்தையை சாட்சியாக்கி கோர்ட்டில் ஒப்படைத்து விட்டான்.

அதிலும் இரண்டு வருடங்களாக கிடப்பில் கிடந்த ஒரு கொலை குற்றத்தை இங்கே வந்த பத்து நாளிலேயே அதிரடியாக களம் இறங்கி குற்றவாளிகளை பிடித்து இருந்தான். கிட்ட தட்ட இது கொலை இல்லை தற்கொலை என்று முடிய இருத்த கேஸை அது கொலை என்று திசை திரும்பி இருந்தான் இளங்கதிரவன்.

கல்லூரியில் படித்த ஒரு பெண், வேறு ஜாதி பையனை காதலித்து அந்த பையனுடன் ஓடி போய் இருந்தாள். இதில் மானம், மயிர் என்று கூடி பேசி ஊர் மொத்தமும் சேர்ந்து அந்த பெண்ணை கொல்ல தேட,

இவர்களை பற்றி தெரிந்தவர்கள் நண்பன் உதவியுடன் வேறு ஊருக்கு சென்றிருந்தவர்கள் இவர்கள் கண்ணில் படாமல் மிகவும் பாதுகாப்புடனே இருந்தனர்.

ஆனால் மாதங்கள் சில ஓடி இனிமேல் வீட்டினர் தங்களை தேட மாட்டார்கள் என்று அவர்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாய் வாழ தொடங்கிய நேரம் அந்த ஊரில் ஒருவன் கண்ணில் பட்டு விட்டனர்.

அவன் சமயோஜிதமாய் 'அவர்களுக்கு உறவினர் மெச்ச திருமணம் செய்து வைக்க சொல்லி வீட்டில் பேசுவதாய்' கூறி அவர்கள் இருந்த வீட்டின் முகவரியை வாங்கி கொண்டு வந்திருந்தான்.

இவர்களின் சூழ்ச்சி அறியாதவர்களும் இனிமேல் பயந்து வாழ வேண்டியது இல்லை என்று நிம்மதியாக இருக்க அந்த நிம்மதிக்கு ஆயுள் கம்மி என்பது போல் இரவோடு இரவாக அந்த பெண்ணின் அப்பா அண்ணன் மாமா என்று சில நெருங்கிய உறவினர்கள் மட்டும் வந்து அந்த பெண்ணை அங்கேயே அந்த பையன் முன்னிலையில் தூக்கிலிட்டுவிட்டு அந்த பையனை இழுத்து வந்து ரயிலில் தள்ளி இருந்தனர்.

அது திட்டமிடப்பட்ட கொலை என்று தெரிந்தும் முன்பு இருந்த ஏசிபியும் அதே ஜாதியை சேர்ந்தவன் என்பதால் 'கணவன் மனைவி தகறாரில் கணவன் வீட்டை விட்டு சென்றதும் மனைவி தூக்கில் தொங்கி விட்டாள்' என்று 'மனைவியின் மீது கோபத்திலும் வாழ்க்கை மீதான விரக்தியிலும் அந்த பையன் ரயிலில் பாய்ந்து விட்டதாகவும்' அப்போது இருந்த எசிபி கேஸை முடிந்து இருந்தான்.

ஆனால் இறந்த பையனின் குடும்பம் தன் மகன் கொலை தான் செய்யப்பட்டான் என்று மகனுக்கு நீதி வேண்டும் என்று கேட்டு மீண்டும் வழக்கு தொடுக்க முடிந்த வழக்கு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு மறு விசாரணை செய்யப்பட்டது.

மீண்டும் பெண் வீட்டார் அது தற்கொலை என்று கேஸை முடிக்க முயல, சமுக ஆர்வலர்கள் சிலர் அந்த பையன் சார்பாக களம் இறங்கினர். அதில் அந்த கேஸ் இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்தடிக்க, இளங்கதிரவன் அதை முடிக்க வேண்டும் என்ற முயற்ச்சியில் இறங்கியவன் இதோ ஊருக்கு வந்த பத்து நாளில் பெண்ணின் தாய் மாமனை கஷ்டடி எடுத்திருந்தான்.

கான்ஸ்டபிளை விட்டு அவனை கவனிக்க சொல்லி விட்டு அவன் அறைக்கு வந்த கதிரவன் அடுத்த கேஸ் ஃபைலை எடுத்து ஆராய தொடங்கி விட்டான்.

"டேய் நான் யாருனு தெரியாம என்னை உள்ள தூக்கி வச்சிருக்க? என்னை விட்டுட்டு வேற வேலை இருந்தா பாரு. என் வக்கிலுக்கு கூட பதில் சொல்ல முடியாத பச்சா என்னை தூக்கி உள்ள வைக்குறியா? இந்த செல்வம் யாருனு தெரியலை உனக்கு?" என்று அந்த பெண்ணின் மாமன் கத்த

"திரு..." என்று கதிரவன் அழுத்தமாய் அழைக்க. அதில் கான்ஸ்டபிள் திருவாசகம் பவ்வியமாய் வந்து நிற்க,

"என்ன தொல்லை திரு இது? க்ளியர் பண்ணி விடுங்க. சத்தம் வெளிய வர கூடாது" என்று இளங்கதிரவன் சொன்ன வார்த்தையில் திருவின் உடல் பயத்தில் வேர்த்து போனது. இந்த இடைப்பட்ட நாள்களில் அவன் விசாரணையின் விதத்தை பார்த்து இருந்தவனாயிற்றே.

கவனிக்க என்று சொன்னாலே உயிர் போற வரை அடிக்க வேண்டும். இப்போது அப்புறம் படுத்துவதென்றால்! தொண்டை குழி ஏறி இறங்கி திருவாசகம் அவனை பயத்துடன் பார்க்க,

"என்ன திரு சொன்னது புரியலையா?* என்ற கதிரவன் நக்கலாய் ஒற்றை புருவம் ஏற்றி கேட்க,

'புரிஞ்சுது' என்னும் விதமாய் தலையாட்டிய திருவாசகம் கூண்டில் உள்ளே கத்தியவனை பாவமாய் பார்த்தபடி "சரி சார்.." என்று கூறி இன்னும் இரண்டு காஸ்டபிளை துணைக்கு அழைத்துக்கொண்டு லத்தியை எடுத்து கொண்டு சென்றார்.

ஆனால் அவர்கள் கவனிப்பு அத்தனை சிறப்பாய் இல்லை போலும் செல்வத்தின் ஆணவ பேச்சி கேட்டு கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் கடுப்பான கதிரவன் போட்டிருந்த காக்கி சட்டையை கழட்டி அருகில் இருந்த ஸ்டாண்டில் மாட்டிவிட்டு
"என்னடா பேசனும் உனக்கு? இப்போ பேசு" என்றபடி செல்வத்தின் முன்னே சேர் போட்டு அமர்ந்தான்.

"நான் யார்னு தெரியாம என் மேல கை வச்சிட்ட. இதோட விட்டுடு. இல்லை... உனக்கு நல்லது இல்லை. இந்த வட்டி செல்வத்தை பத்தி உனக்கு தெரியாது" என்று கை நீட்டி கோபமாய் பேசியவனின் வலது கையை சட்டென ஒடித்து விட்டான் கதிரவன்.

இளங்கதிரவனின் அதிரடி செய்கையை எதிர் பார்க்காமல் அதிர்ந்த செல்வத்தின் அலறல் காவல் நிலையத்தின் வெளியே இருந்தவர்களையும் ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தது.

ஆனால் அப்படி எதுவும் இல்லாத கதிரவன் காதில் சுண்டு விரல் விட்டு ஆட்டியபடி "தெரிஞ்சிட்டா போச்சி! திரு ஐயாவ உடம்புல ஒட்டு துணி இல்லாம தூக்கி தலைகீழா தொங்க விடுங்க" என்றான் இலகுவாய் சேரில் சாய்ந்து அமர்ந்தபடி.

திருவும் மற்ற காவலர்களும் அவன் காலால் சொன்னதை தலையால் செய்வது போல் அடுத்த சில நிமிடங்களில் செல்வதை தலைகீழாக கட்டி தொங்க விட்டிருந்தனர்.

அதுவரை வலியில் அலறியவன் மற்றவர்கள் முன்பு தான் இந்த நிலையில் நிற்பதை எண்ணி அவமானமாக உணர்ந்த செல்வம் "டேய்... நீ ஆள் தெரியாம கை வச்சிட்ட! அனுபவிப்ப" என்று கோபமும் திமிருமாய் பேச,

"சரி டா சரி டா அதை அப்போ பார்ப்போம். ஆமா... என் வீட்டு பொண்ணு பிடிச்சவனோட போனா மானம் போச்சி மயிரு போச்சினு சொன்னியே! இப்போ ஒன்னும் போகலையா?" என்று எகத்தாலமாய் கேட்டவன் அடுத்து அடித்த அடி ஒவ்வொன்று இடி என செல்வம் மேல் இறங்கியது.

அவன் கத்திய கத்தலில், பக்கத்து செல்லில் இருந்த குற்றவாளிகளும் குளிர் காய்ச்சல் வந்தது போல் நடுங்க, அடி வாங்கியவனோ கரண்டில் அடி வாங்கிய காக்கை என தொங்கி கொண்டிருந்தான்.

அதற்கு மேல் அடித்தால் அவன் உயிர் போவது உறுதி என்று புரிந்த திரு "சார் உயிர் போயிட போகுது. விடுங்க.." என்று கதிரவனை பிடித்து இழுக்க,

"சாவட்டும் இந்த தடுமாட்டு தண்டம் **** உயிரோட இருந்து என்னத்தை கிழிக்க போறான்? இன்னும் இப்படி அப்பாவி பத்து பேரை கொல்லுவான். அதுக்கு இவன் சாகட்டும். அந்த பொண்ணு சாகும் போது நாலு மாசம் கர்பமாக இருந்து இருக்கு. அது தெரிஞ்சே இந்த ***** நாய் கொண்ணு இருக்கான்" என்ற கதிரவனின் கண்கள் ரத்தம் என சிவந்து இருக்க இன்னும் ஆத்திரம் குறையாதவனாய் மேலும் அவனை அடி நொறுக்கி விட்டான்.

கடைசியாக அவன் கைகள் வலி எடுக்கவும் செல்வத்தை விட்டவன் திருவிடம் அவனை அவிழ்த்து விடும் படி கண்ணை காட்ட, திருவும் செல்வத்தின் கட்டை அவிழ்த்து கை தாங்கலாக அழைத்து வந்து கதிரவனின் முன் இருக்க வைத்தான்.

இளங்கதிரவன் அவனை சாதாரணமாய் பார்க்க "நான்... உண்மையை சொல்லிடுறேன்" என்ற செல்வம் திக்கி தினறி சொல்லி முடிக்கும் முன் அவன் வாயில் தன் பூட்ஸ் காலால் எட்டி உதைத்த இளங்கதிரவன் "ஹோ... ஐயா அப்போ உண்மையை சொல்ல மாட்டேன்னு வேற சொல்லுவியோ?" என்றான் படு நக்கலாய்.

அவன் எட்டி உதைத்ததில் செல்வத்தின் முன்பல் நான்கும் தெரித்து விழுந்திருந்தது. அதில் வலியில் அலறியவன் இளங்கதிரவனின் காலில் விழுந்து விட்டான்.

"ச்சை நாயே.. நீ பண்ண பாவத்தை எங்கிட்ட கரைக்காத" என்று அவனை காலாலேயே உதறிய இளங்கதியவன் "திரு வாக்கு மூலம்..." வாங்குங்க என்றான்

"ஏன் திரு பல்லு போனா சொல்லும் போச்சினு சொல்லுவாங்க இல்ல?" என்று சந்தேகமாய் கேட்டவன் "நீங்க இவங்கிட்ட இந்த ரெண்டு நாய்ங்க பெயர மட்டும் காரணம்னு சொல்ல சொல்லுங்க. அவனுங்களை முடிச்சி விடும் முன்னாடி இவன் தெளிஞ்சிடுவான். அப்பறம் வாக்குமூலம் வாங்கிக்கலாம்" என்றான்.

அவன் கூறிய விதமே இந்த கேஸில் ஒருத்தனையும் கதிரவன் விட போவதில்லை என்று புரிய திரு சம்மதமாய் தலையசைத்து வைத்தான்.

"உன் கை ரேகை சிக்குனதுனால தான் உன்னை தூக்க முடிஞ்சிது. நீ வாக்குமூலம் குடு. அப்பறம் இருக்கு அந்த ****ங்களுக்கு" என்று அந்த பெண்ணின் அப்பனையும் அண்ணனையும் திட்டி விட்டு, திருவிடம் கண்ணை காட்டி விட்டு அவன் அறைக்கு செல்ல போனவன், காவல் நிலையத்தின் முன் நின்ற தனியார் பேருந்தையும் சுற்றி நின்ற கூட்டத்தையும் கவனித்தபடி அறைக்கு சென்று சட்டையை மாட்டினான்.

தண்ணீரை குடித்தபடி அழைப்பு மணியை அடிக்க, அதில் ஒரு காவலர் உள்ளே வர "என்ன பிரச்சனை? ஏன் வெளியே கூட்டமா இருக்கு? சீக்கிரம் விசாரிச்சி அனுப்புங்க" என்று இளங்கதிரவன் கூற,

"தெரியலை சார். வடநாட்டு பசங்க மூன்று பேர் ரத்தத்தோட உங்களை பார்க்கனும்னு வந்து நிக்குறாங்க. பஸ்ல வச்சி ஏதும் கை கலப்பு போல! நாங்க கேட்டும் சொல்லலை சார். உங்களை தான் பார்க்கனும் னு பிடிவாதமா நிக்குறாங்க" என்று இன்ஸ்பெக்டர் சுதன் சொல்ல

"அந்த பசங்களை வர சொல்லுங்க" என்றவன் சுதன் வெளியே செல்லவும் என்ன நினைத்தானோ அவன் எழுந்து வெளியே வந்தான்.

அந்த தனியார் பேருந்தை சுற்றி ஆட்கள் கூட்டமாய் இருக்க, அவர்களில் ஒருத்தியாய் வெண்ணிலாவும் நின்றிருந்தாள். முகத்தில் ஏகத்திற்கும் படபடப்புடன் அங்கு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவர்களை பார்த்தபடி நகத்தை கடித்து துப்பி கொண்டிருக்க,

"ஆடு தானா வந்து சிக்கி இருக்கே...! சுக்கா வைப்போம்" என்று உல்லாசமாய் நினைத்த இளங்கதிரவன் வாசலிலேயே விரைப்பாய் நின்று கொண்டு "இங்க என்ன கூட்டம்? எதுக்கு இத்தனை பேர் வந்து இருக்கிங்க?" என்றான் அதட்டலாய்.

அவன் சத்தத்தை கேட்ட வெண்ணிலாவின் முகம் நொடியில் இருள் அடைய, அந்த கூட்டத்தை விட்டு பிரிந்து சற்று தள்ளி சென்று நின்று கொண்டாள்.

இளங்கதிரவனின் கண்கள் பொதுவாக கூட்டத்தை பார்ப்பது போல் இருந்தாலும், உண்மையில் வெண்ணிலா மேல் தான் பதிந்து இருந்தது. எனவே அவள் முக இறுக்கமும் விலகலும் அவன் விழிகளுக்கு தப்பாமல் போக, நக்கலாய் சிரித்து கொண்டவன் "சுதன்..." என்றான் சத்தமாய்.

அவன் அழைப்பில் கூட்டத்தினரை விசாரித்து கொண்டிருந்த சுதனும் சிலரை அழைத்துக்கொண்டு முன்னால் வர, வந்தவர்கள் பிரச்சனை என்ன என்று சொல்லாமல் மீண்டும் தங்களுக்கு அடித்து கொள்ள தொடங்கினர்.

அதில் சுதனை முறைத்த கதிரவன் "திரு... இவங்க மொத்த பேரையும் தூக்கி உள்ள வைங்க. நம்ம விதத்துல விசாரிச்சிக்கலாம்" என்றான் உறுமலாய்.

திருவும் அவர்களை இழுத்துச் செல்ல "ஏய் இங்க வா..." என்ற கதிரவன் வெண்ணிலாவை பார்த்து அதட்டி கூப்பிட,

'கூட்டத்தில் யாரையோ அழைக்குறான்' என்று நினைத்த வெண்ணிலா பேசாமல் நிற்க,

"ஏய் கருவாச்சி உன்னை தான். இங்க வா" என்றான் இன்றும் சத்தமாய்.

அவன் அழைப்பில் அவனை முறைத்த வெண்ணிலா 'என்ன' என்பது போல் அவன் முன்னே வந்து நிற்க,

"வா..." என்று விட்டு அவன் அறைக்கு சென்று விட்டான்.

'இந்த விளங்காதவன் ஏன் என்னை கூப்பிடுறான்?' என்ற யோசனையுடனே பின்னால் திரும்பி யாரும் தன்னுடன் உள்ளே வருவார்களா! என்று பார்த்த வெண்ணிலா யாரும் வரவில்லை என்றதும் பெருமூச்சுடன் காவல் நிலையத்தின் உள்ளே சென்றாள்.

அங்கே இளங்கதிரவன் ஐபிஎஸ் என்ற பெயர் பலகையின் பின்னே தோரணையாய் அமர்ந்து இருந்த இளங்கதிரவனை இகழ்ச்சியாய் பார்த்த வெண்ணிலா "எதுக்கு கூப்பிட்டிங்க?" என்றாள் சற்றே கோபமாய்.

"பயந்து நடுங்குவனு பார்த்தா தைரியமா வந்து நிக்குற! பரவாயில்லை. நீயும் அந்த பஸ்ல தான் வந்தியா?" என்றான் விசாரனை தோரணையில்.

"ஆமா காலேஜ் முடிஞ்சி எங்க ஊருக்கு போற பஸ் இது ஒன்னு தான். எப்பவும் இதுல தான் போவேன்" என்றாள் கூடுதல் தகவலாய்.

"ஓகே. என்ன நடந்தது? என்ன பிரச்சனை?" என்று இளங்கதிரவன் கேட்க,

'இவன் என்ன.. நான் என்னவோ குற்றவாளி மாதிரி என்னை விசாரிக்குறான்! அதான் பிடிச்சி வச்சிருக்கானே அவனுங்களை கேட்க வேண்டியது தானே!' என்று மனதில் பொறுமி கொண்டவள்

"தெரியாது. நான் முன்னாடி இருந்தேன். சண்டை பின்னாடி நடந்துது" என்று வெண்ணாலா சொல்ல, "சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பின்னால இருக்குமா?" என்றான் இளங்கதிரவன் நக்கலாய்.

"அதை நீங்க பஸ்ஸை அளந்து தான் தெரிஞ்சிக்கனும். இல்லனா கவர்மென்ட் சம்பளம் வாங்குற உங்களுக்கு தெரிஞ்சி இருக்கனும். என்னை கேட்டா?" என்று வெண்ணிலாவும் நக்கலாய் பதில் கொடுக்க,

"கருவாச்சிக்கு மறியாதை எல்லாம் கொடுக்க தெரியும் போல!" என்ற கதிரவன் மீண்டும் நக்கலாய் கேட்க,

"அது உனக்கு தந்தது இல்லை. நீ இருக்கும் பதவிக்கு தந்தது. அப்பறம் நீங்க கருவாச்சின்னு சொல்றது என்னை கோபப்படுத்த! இல்லை காயப்படுத்தனா இதை இத்தோட விட்டுடுங்க. ஏன்னா... நீங்க அப்படி சொல்லும் போதெல்லாம் நான் தமிழச்சி என் கலர் இது தான்னு பெருமையா தான் இருக்கு. நான் என் கலரை நினைச்சி ஒரு நாளும் வருத்தப்பட்டதும் இல்லை. இனிமேல் வருத்தப்பட போறதும் இல்லை" என்றாள் நிமிர்வாகவே.

"சரி கருவாச்சி. இப்போ விஷயத்துக்கு வா. பஸ்ல என்ன பிரச்சனை?" என்ற இளங்கதிரவன் இத்தனை நேரம் அவள் பேசியதை ஒரு பொருட்டாக எடுக்காமல் மீண்டும் அப்படியே பேச,

"எனக்கு தெரியாது. நான் பார்க்கலைனு பர்ஸ்டே சொல்லிட்டேன். மறுபடியும் எங்கிட்ட கேட்டா?" என்றாள் வெண்ணிலா கோபமாய்

"சரி நீ பார்க்கலை. உனக்கு தெரியாது. ஓகே. ஆனா... இவ்வளவு நேரம் உன்னோட வந்தவங்க பேசுனதை கேட்டு தான இருப்ப! என்ன பேசிக்கிட்டாங்க? சொல்லு..." என்றான் பிடிவாதத்துடன்.

"அதை நீங்க பிடிச்சி வச்சிருக்கவங்க கிட்டையே விசாரிக்க வேண்டியது தானே! ஏன் என்னை கேக்குறிங்க!" என்றாள் அவனை சந்தேகமாய் பார்த்து,

"ப்ச் நான் விசாரிச்சா எல்லாருக்கும் ஒரே ட்ரீட்மென்ட் தான். இதுல தப்பு செய்யாதவன் யார்னு தெரியலை. அதான் கேக்குறேன். நீ மட்டும் இல்லை மற்றவங்க கிட்டயும் விசாரிப்பேன். சொல்லு..." என்று கோபம் ஏதும் இல்லாமல் சாதாரணமாய் கேட்டவன்

'சொல்லுடி அப்பறம் பேசிக்குறேன் உன்னை. இதுவரை போலிஸ் ஸ்டேஷன் பக்கமே வராத உன்னை கோர்ட்டை சுற்றி அலைய விடுறேன்' என்று மனதில் நினைத்தபடி அவளை பார்க்க,

"பஸ் மஞ்சங்குளம் நிறுத்தத்துல ஆளை இறக்கி விட்டுட்டு எடுக்க போகவும், அந்த மூனு பசங்களும் நடத்துனர் கிட்ட பஸ்ஸ நிறுத்த சொல்லி கத்துனாங்க. என்னனு பார்க்க, கொஞ்சம் தூரமா இரண்டு அக்கா பஸ்ஸ நிறுத்த சொல்லி செய்கை காட்டிட்டே ஓடி வந்தாங்க. அந்த பசங்களும் 'அவங்களுக்கு அவசரம் போல! அடுத்த பஸ் எப்போ வருமோ! இரண்டு நிமிடம் நின்னு ஏத்திட்டு போகலாம்னு' நடத்துனர் கிட்ட சொன்னாங்க. நடத்துனரும் சரி சொல்லவும் இந்த பசங்க 'அக்கா மெதுவாக வாங்க. பஸ் நிற்கும்னு' வெளிய கையை நீட்டி அந்த அக்காவை மெதுவா வர சொன்னாங்க".

"உடனே வெளிய நின்ன அந்த ஊர் காரன் "எங்க ஊரு பொண்ணுக்கே கை காட்டுறியானு?" அந்த பையன் கையை பிடிச்சி இழுத்து அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க இந்த பையன் கூட இருத்த பசங்க அவனை அவர்கிட்ட இருந்து விலக்க பார்க்க, அதுக்குள்ள நிறைய பேர் முன்னாடியும் பின்னாடியுமா பஸ்ல ஏறி அந்த பசங்களை ரொம்ப அடிச்சிட்டாங்க. இத்தனைக்கும் அந்த பசங்க திரும்பி அடிக்கல்லை. ஆனா இவங்க அவங்க அம்மா பத்தி எல்லாம் தப்பா பேசவும் தான் திரும்பி அடிச்சிட்டான். அப்பறம் ட்ரைவரை பஸ்ஸ போலிஸ் ஸ்டேஷன் விட சொல்லி கூட்டிட்டு வந்துட்டாங்க" என்றாள் விளக்கமாய்.

'கருவாச்சி இவ்வளவு நேரமும் தெரியாதுனு சொன்ன. இந்தா சிக்கிட்ட இல்ல! இரு பேசிக்குறேன்' என்று மனதில் நினைத்த இளங்கதிரவன்

"ஹோ... உதவி பண்ணா அடிப்பானுங்களாமா? இருக்கு அவனுங்களுக்கு" என்று டேபிளை தட்டி கொண்டு கோபமாய் எழுந்தவன் "திரு இந்த பொண்ணு கிட்ட கையெழுத்து வாங்கிட்டு அட்ரஸ் வாங்கிட்டு அனுப்பி விடுங்க. விசாரணைக்கு எப்போ கூப்பிட்டாலும் வரனும்" என்று திமிராய் சொல்ல

"என்ன?" என்று ஒரு நொடி அதிர்ந்த வெண்ணாலா "உன்னை பத்தி தெரிஞ்சும் சொன்னேன் பாரு... என்னை சொல்லனும்" என்று கோபமாய் கூறி வெளியேற போக

"உன்னை விடவாடி இத்தனை நேரம் அமைதியா போனேன்! கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் ஒரு இரண்டு நாள் அலை. அப்போ தான் திமிர் குறையும். ஹா ஹா போலிஸ் ஸ்டேஷன் வாசலை மிதிக்க மாட்டோம்னு வாழ்ந்த ஊர்காரி கோர்ட் வாசல் ஏற போறியா!! சூப்பர்..." என்று நக்கலாய் மெச்சிக்கொண்டவன்

"இது தான்டி ஆரம்பம். உன்னை கோர்ட் வாசலை மிதிக்க வச்ச மாதிரி. என் வாழ்க்கையை அழிச்ச அந்த ஊர்காரன் மொத்த பேரையும் கூண்டுல ஏத்துறேன்" என்று அடிக்குரலில் உறுமியவன் அடுத்த வலக்கை விசாரிக்க சென்று விட்டான்.


மலரும்....
ஹாய் மக்களே கதையின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே ❤️

கருத்து திரி 👇

நன்றி
 
அத்தியாயம்: 4

காவல் நிலையத்தில் இருந்து வீடு வந்த வெண்ணிலாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை. பெரிதாய் தவறு செய்து விட்டது போல் மனம் கிடந்து அடித்துக்கொள்ள,

'அவனை பற்றி தெரிந்தும் அவன் கூப்பிட்டதும் சென்றிருக்க கூடாது. பேருந்து காவல் நிலையம் சென்றதும் இறங்கி வெளியே வந்து இருக்க வேண்டும். அங்கே நின்று இருக்கவே கூடாது' என்று பல முறைக்கு மேல் நினைத்து தன்னையே கடிந்து கொண்டு விட்டாள். ஆனால் நடந்து முடிந்ததை மாற்ற முடியாதே மனமும் சமாதானம் அடையவில்லை.

விஷயம் சந்திராவிற்கு தெரிந்தால் கண்டிப்பாய் துடப்பம் பிய்யும் வரை அடிப்பார் என்பது வேறு ஒரு பக்கம் பயத்தை கொடுத்தது.

அதில் பாடத்தில் கவனம் செல்லாமல் புக்கை கையில் வைத்து கொண்டு ஒரு வரி வாசிப்பதும், பிறகு யோசனையில் ஆழ்வதுமாக வெண்ணிலா இருக்க,

அவள் எதிரில் அமர்ந்து படித்தபடி அவளை கவனித்து கொண்டிருந்த அருண் "அக்கா... என்ன யோசிச்சிட்டே இருக்க?" என்றான்.

"ஒன்னும் இல்லைடா. லேசா தலை வலிக்குது. நீ ஏன் என்னையே பார்த்துட்டு இருக்க? படி..." என்ற வெண்ணிலா சோர்வான குரலில் கூற,

"ரொம்ப முடியலையா? நான் வேணும்னா காபி போட்டு தராவா க்கா? தலை வலி கேட்கும்" என்று அருண் புக்கை மூடி வைத்து விட்டு எழுந்து கொள்ள,

'காபி குடித்தால் நன்றாக தான் இருக்கும்' என்று நினைத்த வெண்ணிலாவும் மெல்லிய புன்னகையுடன் "சரி..." என்று தலையசைத்தாள்.

அதில் மகிழ்ந்து போனவன் "அக்கா தேங்காய் பால் காபி போடவா? உனக்கும் பிடிக்குமே?" என்றான் அருண் ஆசையாக.

அவன் முகத்தில் இருந்த ஆர்வத்திலேயே, இப்போது அவனுக்கு தேங்காய் பால் காபி வேண்டும் என்று புரிந்து கொண்ட வெண்ணிலா "சரி. நீ தேங்காய் எடுத்து தா. நான் பால் எடுத்து தரேன். நீ காபியை போடு" என்ற வெண்ணிலா புக்கை மூடி வைத்து விட்டு எழுந்து கொள்ள போக,

"அக்கா... அது என்ன பெரிய வேலையா? நானே போடுறேன். நீ இவ்வளவு நேரம் படிக்கவே இல்லை இல்ல! நீ படி. நான் போடுறேன்" என்றவன் அவனே தேங்காய் நெட்டிகளை உறித்து வைத்து விட்டு, காபிக்கு அடுப்பில் வைத்தவன் தேங்காய் துருவ,

அவனை வேடிக்கை பார்த்த வெண்ணிலாவின் மனம் சற்றே சமன் பட்டு நடந்த நிகழ்வை விட்டு வெளியே வந்து, முற்றிலும் அருணை கவனிக்க தொடங்கி இருந்தது.

சந்திராவும், பொன்னுதுரையும் காலையில் வேலைக்கு சென்றால் இரவு எட்டு மணிக்கு தான் வீடு வருவார்கள். அதனால் வீட்டில் சிறு சிறு வேலைகள் செய்து அருணுக்கு பழக்கம் தான் என்பதால், மிக எளிதாகவே தேங்காய் பால் காஃபி போட்டு முடித்திருந்தான்.

"காஃபியில் கலந்து இருந்த தேங்காய் பாலின் வாசம் நாசியை நிறப்ப, அதை மூச்சை இழுத்து நெஞ்சத்தை நிறப்பி கொண்டவள் "செம்ம வாசம் டா அருண். தலை வலி எல்லாம் எங்கேயோ பறந்து போன மாதிரி இருக்கு!" என்று வெண்ணிலா சொல்ல,

"ஆமா நல்ல வாசம் இல்லக்கா! அக்கா வாசல்ல போய் இருந்து அப்படியே வேடிக்கை பார்த்துட்டே குடிப்போமா? இன்னும் சூப்பரா இருக்கும்" என்றான் அருண்.

"டேய் உண்மையை சொல்லு எனக்கு தலை வலினு நீ காஃபி போட்டு தந்தியா? இல்லை உனக்கு காஃபி குடிக்க தோனுனதுனால போனா போதுனு எனக்கும் சேர்ந்து போட்டு தந்தியா?" என்ற வெண்ணிலா அருணை சந்தேகமாய் பார்க்க,

"உனக்காகதான் க்கா போட்டேன். ஆனா இப்போ எனக்கும் ஆசை வந்துட்டு. காஃபியை ரசிச்சி குடிக்க தோனுது. அதான் உன்னையும் கூப்பிடுறேன். போலாமா...?" என்று ஆர்வமாய் கேட்க,

"சரி வா.." என்ற வெண்ணிலா எழுந்து சென்று வாசல் நடையின் அமர, அருணும் வந்து அவளுடன் அமர்ந்து கொண்டான்.

இரவின் தொடக்கம். அனைத்து விடுகளிலும் இருந்து பல்ப் வெளிச்சமும் டீவி சீரியலின் சத்தம் மட்டும் வெளியே கசிந்து கொண்டிக்க , தெருவில் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை.

எனவே அக்கா தம்பி இருவரும் இரவை ரசித்தபடி, காஃபி குடிக்க "அக்கா இப்போ மழை வந்தா எப்படி இருக்கும்?" என்றான் அருண் ரசனையுடன்.

"செம்மயா இருக்கும். அன்ட் இதை விட அழகான நேரம் இருக்க முடியாது டா? ஆனா இப்போ வரும்னு நினைக்குற!" என்றாள் வெண்ணிலாவும் கண்கள் மின்ன.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மழை தான் வரவில்லை. இரவு முடிந்து விடியலும் வந்தது.

என்ன தான் அந்த நேரம் அருணின் செய்கையால் வெண்ணிலாவின் பயம் சென்று பின்னே சென்றிருந்தாலும் அடி மனதில் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்தது.

அவளுக்கான கோர்ட் ஆர்டர் வரும் போது சந்திரா மட்டும் இல்லாமல் இந்த ஊரே அவளை பேசும். அதை நினைத்தே பாதி நேரம் தலைவலியும் எரிச்சலுமாகவே சுற்றி கொண்டிருந்தாள்.

அன்றும் காலையில் கல்லூரி கிளம்பி வரும் போது இளங்கதிரவன் அவனை தாண்டி செல்ல "அவன் பார்த்த நொடி தொட்டு தன் வாழ்வில் பிரச்சனை தான்" என்று என்றும் போல் இன்றும் அவனை திட்டிய படி எரிச்சலும் கோபமுமாய் கல்லூரி வந்தவள் அவள் வகுப்பு நோக்கி செல்ல,

"நிலா.... ஏய் நிலா..."என்ற சஞ்ஜனாவின் அழைப்பில் நின்றவள்,

"என்னடி? ஏன் இப்படி காட்டு கத்து கத்துற?" என்றாள் வெண்ணிலா எரிச்சலாய்.

"நீ ஏன்டி நான் கத்தியும் கண்டுக்காம போற?" என்று சஞ்ஜனாவும் பதிலுக்கு கோபமாய் கேட்க,

"ரொம்ப நேரமா கூப்பிட்டியா? சாரி டி. ஏதோ யோசனை! நீ கூப்பிட்டதை கவனிக்கலை. எதுக்கு கூப்பிட்ட?" என்று வெண்ணிலா கேட்க,

"என்ன டென்ஷன் டி? நானும் பாக்குறேன் ஒரு வாரமா ஆளே சரி இல்லை. கிளாஸ் கூட கவனிக்காம இருக்க. என்ன பிரச்சனை!" என்ற சஞ்ஜனா, அவள் சொல்ல வந்ததை விடுத்து தோழியின் கவலை பற்றி ஆராய தொடங்கி விட,

"பெருசா எதுவும் இல்லை டி. ஏதோ... மனசுக்கு சரி இல்லை. காரணம் தெரியலை" என்றாள் வெண்ணிலா உண்மையை மறைத்து.

"ஹோ...! சரி. ஆனா நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நிலா" என்று சஞ்ஜனா சொல்ல,

அவளை பொய்யாக முறைத்த வெண்ணாலா "நான் சோகமா இருந்து உனக்கு ஹேப்பியாடி?" என்று கேட்க

"ஹேய்... சீ அப்படி இல்லை டி எருமை. அது வேற சந்தோசம். சரி சொல்லு எனக்கு ஒரு உதவி பண்ணுறியா? ப்ளீஸ்..." என்ற சஞ்ஜனா நிலாவின் கைகளை பிடித்துக்கொண்டு கெஞ்சலாய் பார்த்தாள்.

"சரி வா... கேன்டீன் போவோம். நீ ஹேப்பியா இருக்குறதுக்கு ட்ரீட் வை. அப்பறம் உனக்கு ஹெல்ப் பண்றதை பற்றி பேசலாம்" என்ற வெண்ணாலா தோழியின் கை பிடித்து இழுக்க,

"வா போலாம். இன்னைக்கு நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேன். வா... வா.. என்றாள் சஞ்ஜனாவும் உற்ச்சாகமாய்.

அதில் வியப்புடன் அவளை பார்த்தவள் "பாருடா... சஞ்சுவ! அப்போ செம்ம ஹேப்பி போல மேடம்? இவ்வளவு ஹேப்பியா ஆகுற அளவுக்கு என்ன மேட்டர்?" என்று வெண்ணிலா கேட்க,

"என் அக்கா கேஸ்ல தீர்ப்பு வந்துட்டு. நம்ம மாவட்டம் ஏசிபி இளங்கதிரவன் இருக்காரு இல்ல! அவர் தான் கேஸ் ஹேன்டில் பண்ணார். ஒரு வாரத்துல தீர்ப்பு. என் அப்பா, அண்ணா, மாமா மூன்று பேருக்கும் ரெட்டை ஆயுள் தண்டனை. மூன்று பேருக்கும் செம்ம அடியாம். மாமாவுக்கு முன் பல்லு இல்லைனு எல்லாம் சொல்றாங்க. நான் செம சந்தோஷமா இருக்கேன்" என்ற சஞ்ஜனா ஆர்ப்பாட்டமாய் சொல்ல,

அவள் பேச தொடங்கியதுமே திகைத்து நின்று விட்ட வெண்ணிலா "சஞ்சு..." என்று தோழியின் கை பற்ற,

அதுவரை உற்சாகமாய் பேசியவளின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய "என் அக்கா சாகும் போது நாலு மாசமாம் நிலா. என் அம்மா எப்படி அழுதாங்க தெரியுமா? அப்படி என்ன ஜாதி வெறி? நல்லா அனுபவிக்கட்டும். அடுத்தவங்க உயிர் மட்டும் கிள்ளு கீரையா? என்ன கேட்டா என் அப்பாவை எல்லாம் தூக்குல போட்டு இருக்கனும்... ஆயில் தண்டனையோட விட்டதே தப்பு" என்றாள் சஞ்ஜனா அடக்கப்பட்ட கோபத்துடன் அழுத்தமாய்.

அவளின் கோபத்தின் நியாயமும் வலியும் புரிந்த வெண்ணிலா "ஹேய்... சஞ்சு ரிலாக்ஸ். அதான் தண்டனை கிடைச்சிட்டே அப்பறம் என்ன! வா.. வா.. நாம செலிபிரேட் பண்ணுவோம். கேன்டின் போலாம். இன்னைக்கு எனக்கு சரியாக வேட்டை" என்று சமாதாணப்படுத்தி கேன்டினுக்கு இழுத்து செல்ல,

"சரி டி. நீ கேட்டதை எல்லாம் வாங்கி தரேன். ஹெல்ப் பண்ணுவியா? அதை சொல்லு" என்ற சஞ்ஜனாலும் அவளுடன் நடந்தபடி கேட்க,

"என்ன சொல்லு பண்றேன்" என்றாள் வெண்ணிலா.

"இளங்கதிரவன் சாரை பார்த்து தேங்க்ஸ் சொல்லனும். அதுக்கு நீ என்னோட உங்க ஊருக்கு வரனும்" என்றாள் சஞ்சனா.

அதில் அதிர்ந்த வெண்ணிலா "என்னால அவன் வீட்டுக்கு எல்லாம் வர முடியாது. அவன் அவன் வேலையை தான் செஞ்சான். அதுக்கு நீ ஏன் தேங்க்ஸ் சொல்லனும்?" என்று கதிரவன் மேல் இருந்த கோபத்தில் பட்டென பேசி விட,

"என்னடி!! அவரை அவன் இவன்னு பேசுற?" என்ற சஞ்சனா கோபமாய் கேட்க,

அதில் தன்னிலை அடைந்த வெண்ணிலா "ஊர் பக்கம் பேசி அப்படியே வந்துட்டு டி. அவர் அவர் வேலையை தான் செஞ்சார் அதுக்கு ஏன் நீ தேங்க்ஸ் சொல்லனும்? அதெல்லாம் வேண்டாம். விடு.. என்றாள் வெண்ணிலா.

"அப்படி இல்லை நிலா. இதுக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் மாமா கிட்ட பணம் வாங்கிட்டு கேஸை முடிக்க தான் ட்ரை பண்ணாங்க. ஆனா... கதிரவன் சார் அப்படி இல்லாம இங்க வந்த கொஞ்ச நாள்லயே தண்டனையை வாங்கி தந்துட்டாங்க. அதுக்காக சின்ன அப்ரிசேஷனா தான் இந்த தேங்கஸ். ப்ளீஸ் என்னோட வாடி" என்ற சஞ்ஜனா கெஞ்சலாய் பார்க்க

"இல்ல டி! காலேஜ் லீவ் போட்டா அம்மா திட்டுவாங்க. நீ வேணும்னா தனியா போய்ட்டு வா" என்று வெண்ணிலா சொல்ல,

"நான் உன் அம்மா கிட்ட பேசுறேன்" என்றாள் சஞ்சனா.

"புரியாம பேசாத சஞ்சு. மேம் எப்படி விடுவாங்க? ஹெச்சோடி பனிஸ்பண்ணி வெளிய விட்டுடுவாங்க. எல்லார் முன்னாடியும் அவமானப்படவா!" என்ற வெண்ணிலா எரிச்சலாய் கேட்க,

"நான் ஹெச்சோடிகிட்ட கேட்டுட்டு வந்து தான் டி உன்னை கூப்பிடுறேன். மேம் போய்ட்டு வர சொல்லிட்டாங்க" என்றாள் சஞ்சனா. அதன்பிறகு வெண்ணிலாவின் எல்லா வித மறுப்பிற்கும் சஞ்சனாவிடம் இடம் இல்லாமல் போக வெண்ணிலாவும் வேறு வழி இல்லாமல் சஞ்சனாவுடன் இளங்கதிரவனை பார்க்க வந்தாள்.

ஊருக்குள் வந்து இறங்கியதும் இன்னும் பெரும் தயக்கம் வெண்ணிலாவிடம், அவன் வீட்டிற்கு செல்வதை நினைத்தாலே அவமானமாய் இருந்தது. அதிலும் அவன் முன் சென்று நின்று அவனின் ஏளன பார்வையையும் பேச்சையும் கேட்க வேண்டுமா? என்று நினைத்தவள் "சஞ்சு எனக்கு தலை வலிக்குது. நான் இப்படியே வீட்டுக்கு போறேன். நீ போய் பார்த்து தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்புறியா!" என்று கேட்க

"அதெல்லாம் முடியாது. நீ வா... நானே தனியா போக கூச்சப்பட்டு தானே உன்னை கூட்டிட்டு வந்தேன் பேசாமா வா..." என்றவள் அவளை இழுத்து சென்றாள்.

"அவர் வீடு எங்கடி இருக்கு?" என்ற சஞ்சனா ஒவ்வொரு வீட்டையும் ஆர்வமாக பார்த்தபடி வர,

இன்றைய கால மார்டன் வீட்டை போல் இரண்டு மாடியில் பெரிதாக இருந்த வீட்டின் முன்னால் நின்ற வெண்ணிலா "அது தான் அவர் வீடு" என்று சொல்ல,

"ஏய்... நிஜமாவே இது தான் அவர் வீடா? ஏதோ அவங்க அப்பா ஊர் பஞ்சாயத்து தாரர்! நேர்மையானவர்! அப்படி எல்லாம் சொன்னாங்க! அதனால வீடும் பழைய காலத்து தேக்கு மர வீடா இருக்கும்னு நினைச்சேன். இது என்ன நியூ மார்டனா இருக்கு?" என்றாள் சஞ்சனா வியப்பும் சிரிப்புமாய்.

"இப்போ அதுவா முக்கியம்? ஓவரா பண்ணமா வா..." என்ற நிலா முன்னே செல்ல,

"ஏய் நிலா காலிங் பெல் அடிக்காம போற! இரு பெல் அடிக்கலாம்" என்றவள் கேட்டின் இரண்டு பக்க சுவற்றிலும் பெல்லை தேட,

"காலிங் பெல் எல்லாம் கிடையாது. வாடி..." என்ற வெண்ணிலா கேட்டை திறந்து உள்ளே சென்றான்.

" ஹோ... மார்டன் வீடுனதும் பெல் வச்சி இருப்பாங்கனு நினைச்சேன். ஓகே... அது தான் இல்லை. இந்த நாய் ஏதும்!" என்ற சஞ்சனா சுற்றும் முற்றும் பார்க்க,

"அப்படி ஏதும் இல்லை. கொஞ்சம் தொணதொணக்காம வரியா? இல்லை நீ பேசிட்டு வான்னு நான் வீட்டுக்கு போய்டுவேன்" என்றாள் வெண்ணிலா கோபமாய்.

அதில் வாயை மூடி கொண்ட சஞ்சனா வீட்டின் முன்னால் இருந்த கார் பார்க்கிங், சுற்றிலும் இருந்த புல்வெளி, அதன் ஓரமாய் வரிசாயாய் அழகுபட வளர்ந்து நின்ற செடிகளையும் வியப்புடனே பார்த்தபடி வந்தாள்.

"என்ன நிலா! அய்யாவ பார்க்க வந்தியா?" என்று அங்கே வேலை செய்யும் பெண்மணி, வெண்ணிலா கதிரவன் வீட்டிற்கு வந்ததை நம்ப முடியாமல் கேட்க,

"இல்லக்கா..." என்ற வெண்ணிலா என்ன சொல்வது என்று புரியாமல் தயங்கி நிற்க,

"நாங்க இளங்கதிரவன் சாரை பார்க்க வந்தோம். அவர் வீட்டுல இருக்காரா?" என்று சஞ்சனா எந்த வித தயக்கமும் இல்லாமல் கேட்டு இருந்தாள்.

"ஹோ... சின்ன தப்பிய பார்க்க வந்திங்களா? உள்ள தான் இருக்காங்க" என்றவர் வெண்ணிலாவை ஒரு மாதிரியாக பார்த்து செல்ல, அவள் முகம் நொடியில் இறுகி போனது.

ஆனால் இதை எல்லாம் எதிர் பார்த்தே வந்திருந்த வெண்ணிலா "வாடி போலாம்..." என்று சஞ்ஜனாவை அழைத்துக்கொண்டு
வீட்டின் உள்ளே செல்ல, ஹாலில் சேர் போட்டு அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருந்தார் அரிச்சந்திரன்.

"ஐயா.." என்ற வெண்ணிலாவின் அழைப்பில் திரும்பியவர், வெண்ணிலாவை அங்கே சற்றும் எதிர் பார்க்காமல் திகைத்தவர் முகத்தில் அடுத்த நிமிடம் அளவிட முடியா சந்தோஷம்.

அதில் ஆர்வமாய் எழுந்தவர் "வா வெண்ணிலா! வா இரு..." என்று எழுந்து வந்து உபசரிக்க,

"இருக்கட்டும் ஐயா. இவ என் ப்ரெண்ட் சஞ்சனா" என்ற வெண்ணிலா தோழியை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

"வாம்மா..." என்று சஞ்சனாவையும் வரவேற்ற அரிச்சந்திரர் இருவரையும் அமர சொல்ல,

வெண்ணிலா அதற்கு மேல் உள்ளே செல்லாமல் வாசலின் அருகிலேயே நின்று கொண்டு சஞ்ஜனாவை மட்டும் உள்ளே செல்ல சொல்ல,

அதில் அதிர்ப்தியாய் அவளை பார்த்தவர் "என்ன வெண்ணிலா இது. வீட்டுக்குள்ள வா" என்றார் கண்டிப்புடன்.

அப்போதும் வெண்ணிலா தயங்கி நிற்க "இவ ஒருத்தி... எதுக்கெடுத்தாலும் தயங்கிக்கிட்டு" என்று அழுத்துக்கொண்ட சஞ்ஜனா நிலாவையும் இழுத்துக்கொண்டு சோஃபாவில் சென்று அமர்ந்தவள் "நாங்க உங்க பையன் இளங்கதிரவன் சாரை பார்க்கனும்" என்றாள்.

"அப்படியாமா! சரி. அவன் மாடில ரூம்ல தான் இருக்கான். இருங்க வர சொல்றேன்" என்ற அரிச்சந்திரர் மாடிக்கு செல்ல

அவர் செல்வதையே பார்த்த சஞ்ஜனா "நல்ல ஆள் தான் போல! எந்த பந்தாவும் இல்லாமல் இருக்கார்" என்றாள் பாராட்டுதலாய்.

"ஆமா அவர் குணமே அது தான். ஆனா தப்பு பண்ணா நிறைய கோபம் வரும். அப்போ முன்னால் இருக்குங்க யார்னு எல்லாம் பார்க்க மாட்டாங்க" என்று வெண்ணிலா சொல்ல "இளங்கதிரவன் சார் மாதிரி. அப்படி தானே?" என்றாள் சஞ்சனா.

அவள் அரிச்சந்திரனை இளங்கதிரவனுடன் ஒப்பிட்டது துளியும் பிடிக்காத வெண்ணிலா "நீ ஓவரா போய்ட்டு இருக்க சஞ்சு. இப்போ நீ சும்மா இல்லை.. நான் கிளம்பி போய்டுவேன்" என்று கோபத்தில் கத்தி விட,

"ஹேய் சாரி டி. இனி நான் பேசவில்லை" என்று வாயில் கை வைத்து அமர்ந்தவள், எதிரே இருந்த சுவற்றில் இருந்த போட்டோவை பார்த்து,

"நிலா... இன்னும் ஒரே ஒரு வார்த்தை மட்டும் கேட்டுக்கட்டுமா டி? பெரிய சந்தேகம்" என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு கேட்க,

தோழியை முறைத்த வெண்ணிலா "கேளு..." என்றாள் முறைப்புடன்.

"கதிரவன் சாருக்கு கல்யாணம் ஆகிட்டா? சைல்ட் மேரேஜா டி?" என்று எதிரில் இருந்த ஃபோட்டோவை காட்டி கேட்க,

அவள் கேள்வியில் அதிர்ந்து அவள் பார்வை சென்ற பக்கம் பார்வையை திருப்பிய வெண்ணிலா "இளங்கதிரவன் அறும்பு மூசையுடன் கோபமாய் முறைத்தபடியும், அவள் அருகில் ஒரு பெண் அழுத முகமாகவும் இருவரும் கழுத்தில் மாலையுடன் இருப்பதையும் பார்த்தவளுக்கு பழைய நினைவில் கண்களில் கண்ணீர் தேங்கி விட்டது.

"நிலா..." என்று சஞ்ஜனா அழைக்கவும்

"எனக்கு தெரியாது" என்று கூறிய வெண்ணிலாவின் முகம் அந்த போட்டோவை பார்த்து ரத்தப்பசையற்று வெளுத்து போனது.

மலரும்...

ஹாய் தோழமைகளே 👋

கதையின் நிறை மற்றும் குறையை கருத்து திரியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே

கருத்து திரி 👇


நன்றி ❤️
 
Status
Not open for further replies.
Top