வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

முல்லை சிரிப்பில் மூர்க்கம் தவிர்த்தவள் கதைதிரி...

arunashok

Moderator
ஹலோ ப்ரண்ட்ஸ்.....
நான் அருணாதேவி... இந்த எழுத்து உலகத்தில் சிறு துளி.... இதுவரை பிரதிலிபியில் எழுதி கொண்டு இருந்த நான் முதல் முறையாக ஆன்லைனில் நம்ம பிரியா சிஸ் சைட்டில் எழுத ஆரம்பிக்கிறேன்....

ப்ரண்ட்ஸ் என் கதையில் லாஜிக் பாக்காதீங்க.... சில இடங்களில் இப்படி நடக்க சான்ஸே இல்லன்னு சொல்ற மாதிரி இருக்கும்...
கதை முழுக்க முழுக்க கற்பனை என்பதால் எனக்கு தோன்றியதை எழுதி இருக்கிறேன்...
எலி மற்றும் விதியின் அட்டகாசங்களை வாசிக்க ரெடியா ப்ரண்ட்ஸ்... இன்னிக்கு பர்ஸ்ட் யூடி போட போறேன்.... ஏற்கனவே இந்த கதையை பிரதிலிபியில் பதிவிட்டு இருக்கிறேன்.... யூடிக்கு வெயிட் பண்ண பொறுமை இல்லாத ப்ரண்ட்ஸ் அங்கு படிக்கலாம்.....
 
முல்லை : 1
பிரமாண்டமான அந்த ஐம்பது மாடி கட்டிடத்தின் முன் ஆட்டோவில் வந்து இறங்கினாள் பிரகதி..


23 வயதில் ஐந்தரை அடியில் பிரம்மன் நிதானமாக செதுக்கி வடித்த எலுமிச்சை நிறத்து அழகிய புயல்.. கடந்த வருடம் பி.இ கம்ப்யூட்டர் என்ஜினியரிங் முடித்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சென்னையில் ப்ளேஸ்மெண்ட் கிடைத்தது..
நேற்று இரவே சென்னை வந்தவள் அவளது தாயின் அண்ணன் வீட்டில் தங்கி வேலைக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்து இருந்தான் அவளது அண்ணன் பரணிதரன்..
அதன்படி காலையில் எழுந்து கிளம்பி வந்த பிரகதி முதல் நாள் வேலை என்பதால் நெஞ்சம் படபடக்க அந்த அடுக்குமாடி கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள்..
கொஞ்சம் பயம் இருந்தாலும் தனது தோழி வருகிறாளா என திரும்பி வாசலை பார்த்தவள் அவள் வருவதாக அறிகுறி ஏதும் இல்லாததால் மொபைலை எடுத்து அவளுக்கு கால் செய்தாள்..
" ஹலோ எலி எங்கே இருக்க.. "
"......"
"வாட் ஆன் தி வேயா .. எலி பர்ஸ்ட் நாளே லேட்டா வராத. இந்த கம்பெனி எம்.டி ஹிட்லருக்கு அத்தை பையன் ரேஞ்சுல இருப்பானாம்.. சீக்கிரம் வந்துருடி.. " என்று போனை வைத்தவள் ஜீன்ஸ் பேன்ட் ஸ்லீவ்லெஸ் சர்டும் அணிந்து இருந்த ரிசப்ஷனிஸ்ட்டிடம் சென்று அப்பாயிண்மெண்ட் ஆர்டரை காட்டினாள்..
அதை கண்ட அந்த பெண்ணோ "ஹாய் மிஸ் வெல்கம் அவர் எஸ்.வி குரூப் ஆப் கம்பெனீஸ்.. ஐ ஆம் பூமிகா.. இந்த கம்பெனியில் 4இயர்ஸா வொர்க் பண்றேன்.. நீங்க ஸ்ரைட்டா போய் தேர்ட் ரூம்ல மேனேஜர் இருப்பார்.. அவரை போய் பாருங்க.." என்றாள்..





பூமிகாவிற்கு ஒரு புன்னகையை பதிலாக தந்தவள் மேனேஜர் அறை நோக்கி நடந்தாள்.. அவளுடன் ஓட்டமும் நடையுமாக வந்து இணைந்தாள் அவளின் தோழி அஞ்சலி..
"ஏண்டி லேட்.."
"உனக்கு என்னம்மா நீ உன் மாமா வீட்டில் இருந்து வர்ற.. நேரத்துக்கு டிபன் செஞ்சு குடுத்து வழி அனுப்ப ஆள் இருக்கு.. ஆனால் எனக்கு அப்படியா.. அந்த ஹாஸ்டல் சாப்பாட்டை முழுங்கிட்டு வர லேட் ஆகிடுச்சு.. சரி வா மேனேஜரை பார்த்துட்டு நம்ம சீட்டுக்கு போலாம்.."



"இங்கே வந்தும் உன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டியா.. காலேஜ் ஹாஸ்டலை தான் ஒருவழியாக்கி வார்டனை வெறுப்பேத்தின.. இங்கேயும் அப்படி தானா.."






"அதை விடுடி.. உனக்கும் எனக்கும் வேலை குடுத்து இருக்கானே இந்த கம்பெனி எம்.டி.. கம்பெனி உருப்படும்னு நினைக்கிற.."




"ஓவரா பேசாத.. சைலன்ட்டா வா.. " என்று அஞ்சலியுடன் மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள் பிரகதி..



"வாங்க... மிஸ் பிரகதி & அஞ்சலி.. இவர்களும் இன்னிக்கு தான் ஜாயின் பண்றாங்க.." என்று அங்கே இருந்த ஒரு பெண், இரு ஆண்களை காட்டினார் மேனேஜர்..



அவர்களிடம் ஹலோ சொல்லி அறிமுகமாகினர் தோழிகள் இருவரும்..
அறிமுகப்படலம் முடிந்த உடன் மேனேஜர் பேச ஆரம்பித்தார்..
"லிசன் கைஸ்.. இப்போ புதுசா ஒரு பாரின் ப்ராஜக்ட் ஸ்டார்ட் பண்ண போறோம்.. அதுக்கான டீமில் தான் நீங்க 5பேரும் ஜாயின் பண்ண போறீங்க.. பொதுவா பாரின் ப்ராஜக்ட் எல்லாம் ப்ரஸர்ஸ்க்கு தர மாட்டாங்க.. பட் உங்க டேலண்ட்ஸ்ஸை பார்த்த எம்.டி இம்ப்ரஸ்ஸாகி இந்த ப்ராஜக்ட்டை உங்களுக்கு தர சொன்னார்.. பர்ஸ்ட் இம்ப்ரசன் ஈஸ் த பெஸ்ட் இம்ப்ரசன்.. சோ உங்க பர்ஸ்ட் ப்ராஜக்ட்டை சூப்பரா கம்ப்ளீட் பண்ணி நல்ல பேர் வாங்க பாருங்க.. ஆல் த பெஸ்ட் ஆல் ஆப் அஸ்.." என்றதுடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார்..







சிறிது நேரம் தங்களுக்குள் டிஸ்கஸ் செய்த ஐவரும் தங்களது டீம் லீடருக்காக வெயிட் பண்ணினர்.. அடுத்த அரைமணி நேரத்தில் டீம் லீடர் வந்து ஐவருக்குமான வேலையை பிரித்து தந்தார்..
ஐவருக்கும் ஐந்து கம்ப்யூட்டர் கொண்ட தனி கேபின் கொடுக்கப்பட ஐவரும் அங்கே அமர்ந்து அவரவர் வேலையை செய்ய ஆரம்பித்தனர்..






அஞ்சலி வேலையை செய்தவாறு மற்ற நான்கு பேரையும் நோட்டமிட்டாள்.. எல்லா பக்கியும் இவ்வளவு சின்சியரா வேலை பாக்குதே.. போற போக்கை பார்த்தால் என்னையும் வேலை செய்ய வச்சிடுவாங்க போலயே... முருகா இதெல்லாம் உனக்கே நியாயமா தெரியுதா.. நா உங்கிட்ட என்ன கேட்டேன்.. எனக்கே எனக்கா சைட் அடிக்க லவ் பண்ண ஒரு முரட்டு சிங்கிளை தானே கேட்டேன்.. அதுக்குனு நீ இந்து கோஷ்டியோட கோத்து விட்டுட்டியே இதெல்லாம் அடுக்குமா... முருகா.. நீயே சொல்லு..


"என்னடி என் முருகனை திட்டிட்டு இருக்க போல.."



"அது எப்படிடி உன் கண் கம்ப்யூட்டர்ல இருந்தாலும் நா பண்ற எல்லா தில்லுமுல்லையும் கரெக்டா கண்டுபிடிக்கிற.. "


"அதுக்கு எல்லாம் யானை வேணும் எலி.."



"ம்.. யானை இங்கே இல்லை.. யாஸ்கிட்ட இருந்து வாங்கி தரவா.."






"உன்னால் முடிந்தால் வாங்கிக்கோ.. எனக்கு என்னவோ கே.ஜி.எப். பிடித்த மாதிரி கஜகேசரி பிடிக்கலை.. எலி.."






"யாஸ் எப்படி இருந்தாலும் அழகு தாண்டி.. என் செல்லம்.."





"உன் செல்லத்தை நினைச்சுகிட்டு கோடிங் மாத்தி போட்ற போற பக்கி.."





"அதெல்லாம் அஞ்சலி கரக்டா தான் பண்ணுவா.. விதி இந்த மூணு கேரக்டரும் இவ்வளவு அமைதியா வேலை பாக்குதே.. இங்கே என்ன சைலன்ஸ் போர்டா வச்சு இருக்காங்க.."




"போர்டு வச்சால் மட்டும் அப்படியே ஃபாலோவ் பண்ற மாதிரி தான்.. நம்ம ரெண்டு பேருக்கும் ரூல்ஸ் பிரேக் பண்ணி தானே பழக்கம்.. எலி.."



"ஓய் விதி இந்த மாதிரி எலின்னு கூப்பிட்டு என் இமேஜை டேமேஜ் பண்ணாத.."



"எப்படி போட்டோ எடுத்தாலும் செல்பி எடுத்தாலும் உன் இமேஜ் படு கேவலமா தான் இருக்கும்.. இதுல நான் எங்கே டேமேஜ் பண்ண எலி.." என்ற கேட்ட பிரகதியை முறைத்தாள் அஞ்சலி..





"நீ சொன்னது ஜோக்கா.. சிரிப்பே வரலை.. வேணும்னா லஞ்சுல ஞாபகப்படுத்து சிருச்சுக்குறேன்..."




"கோபமா எலி.."





"ச்சே நமக்கு எல்லாம் கோபம், வெட்கம்,சூடு, சொரணை இதெல்லாம் இருக்க கூடாதுனு 5வது படிக்கும் போது சத்தியம் பண்ணோமே மறந்து விட்டீர்களா கோபால்.."





"இல்லை கோபால் இல்லை.. நா எதுவும் மறக்கலை.. ஒருவேளை நீங்க திருந்திட்டீங்களோன்னு ஒரு டவுட்ல கேட்டேன் கோபால்.."




"வந்ததில் இருந்து நம்ம மட்டும் தான் பேசிகிட்டு இருக்கோம்டி.. அங்கே பார் 2சிட்டி ரோபாவும் 1நிலா ரோபோவும் எப்படி வேலை பாக்குதுன்னு.. விட்டால் கம்யூட்டருக்கு உள்ளேயே போய்டுவாங்க போல.. விதி கேண்டின் போலாம் வாடி.. இவங்க வேலை செய்றதை பார்த்து எனக்கு தலைவலி வந்துடுச்சு.."



"எலி இந்த கேபினை மட்டும் பார்த்து முடிவு பண்ணாதே.. மொத்த ஆபிஸும் இப்படி தான் வேலை பாக்குது.. சுத்தி கண்ணை சுழற்றி பார் எலி.. இங்கே இது தான் வழக்கம் போல.. நாம மட்டும் கேன்டீன் போனாலும் உள்ள விடுவாங்கன்னு தோணலை.." என்ற பிரகதியை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் பார்த்தாள் அஞ்சலி..





"ஏன் எலி இவ்வளவு பாசமா பாக்குற.."




"உன்னை விதின்னு கூப்பிட்ட பாவத்துக்கு உண்மையாவே எனக்கான விதியா மாறிட்டடி.."







"இப்போ என்ன நடந்துச்சுன்னு இம்புட்டு ஆங்கிரி எலி.."





"இன்னும் என்ன ஆகனும்.. நம்மோட லட்சியம், கனவு என்ன விதி.."






"நம்மோடது இல்ல உன்னோடது.."





"சரி என்னோடது.. அந்த மீசைக்கார ஐயாச்சாமிகிட்ட இருந்து தப்பிச்சு ஒரு நல்ல அழகான 90ஸ் பையனா பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்றதுக்கு தானே வேலைக்கு போறதா சொல்லி இங்கே வந்து சேர்ந்தேன்.. இங்கே என்னடானா நா வந்ததுல இருந்து ஒரு பிகர் கூட ஒரே ஒரு முரட்டு சிங்கிளை கூட மீட் பண்ணலை.. சரி கேன்டீன் போற சாக்குலயாவது யாரையாவது சைட் அடுச்சு கரெக்ட் பண்ணலாம்னா அதுக்கும் இப்படி ஆப்பு அடிக்கிறது முறையா?? சொல்லு விதி.. இதுக்கு எல்லாம் காரணம் யாரு.."





"வேற யாரு உன் விதியான நானே தான் காரணம்.."




"இன்னும் ரெண்டு கம்பெனில ப்ளேஸ்மெண்ட் கிடைத்தது.. அதை விட்டுட்டு இந்த வீணா போன கம்பெனிக்கு தான் போகனும்னு அடம் பிடித்த உன்னை என்ன பண்ணலாம் விதி.. "






"ஒன்னும் பண்ண முடியாது எலி. உன் பைத்தியகாரதனத்துக்கு முடிவு கட்ட தான் இந்த கம்பெனியை சூஸ் பண்ணேன்.. சரி உன் அழுகாச்சி காவியம் முடிஞ்சுதா.. வா கேன்டீன் போலாம்.. எல்லாரும் போறாங்க.."






"நா வரலை விதி.. நா வேலையை ரிசைன் பண்றேன்.."






"காமெடி பண்ணாம வாடி போகலாம்.."




"நோ விதி கன்பார்மா இந்த தடவை உன்னை விட்டு நா போக தான் போறேன்..





"ஓ அப்படியா.. அப்போ நம்ம ப்ரண்ட்ஷிப் அவ்வளவு தான் இல்ல.. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி கேன்டீன்ல சமோசா வாசம் வந்தது . சரி எலிக்கு பிடிக்குமே வாங்கி தரலாம்னு பார்த்தேன்.. நீ தான் வேலையை ரிசைன பண்ண போறியே.. நீ போய் மேனேஜரை பாரு.. நா போய் சமோசா சாப்பிட்டு காபி குடித்துவிட்டு வர்றேன்.. பாய் எலி.."






"என்னது...... என்னை விட்டுட்டு சமோசா சாப்பிட போறியா.. அடுச்சு பல்லை கழட்டிருவேன் ராஸ்கல்.. யாரு சொன்னது நா வேலையை விட போறதா.. அது சும்மா உல்லல்லாங்காட்டி சொன்னது.. என் ப்ரண்டை சென்னைல தனியா விட்டுட்டு பெங்களூக்கோ, மும்பைக்கோ போவேனா என்ன .. நண்பிடி.." என்று பிரகதியின் தோளில் கை போட்டு சொன்ன அஞ்சலியை இதழில் சிரிப்புடன் பார்த்தாள் பிரகதி..



இது தான் இவர்கள் நட்பு.. எல்.கே.ஜி தொடங்கி காலேஜ் வரை ஒன்றாக படித்து வந்தவர்கள்..




கரூருக்கு அருகே உள்ள குளித்தலை தான் இவர்கள் பிறந்த ஊர்.. பிரகதியின் தந்தை சிவநாதன் அந்த ஊரின் பெரியதனக்காரர்..




நீதி நேர்மைக்கு மறு பெயராக இவரது பெயரை சொல்லலாம்.. அந்த அளவுக்கு நியாயமானவர்..
மகாலெட்சுமியின் மறுஉருவமான சிவசக்தி தான் பிரகதியின் தாய்.. இல்லை என்று வீடு தேடி வந்தவருக்கு அள்ளி தரும் வள்ளல்.. திருவள்ளுவருக்கு வாசுகியை போல கணவர் சொல்லை தட்டாமல் நடந்து கொள்பவர்.. சில நேரங்களில் மந்திரியாக ஆலோசனைகளையும் சொல்வார்.. மொத்தத்தில் அந்த ஊரின் கலியுக வள்ளல்களாக வாழ்ந்து வரும் குடும்பத்தினர்..
சிவநாதன், சிவசக்தி தம்பதியருக்கு ஒரு ஆண் பரணிதரன் பெண் நம் நாயகி பிரகதி.. பரணி எம்.இ அக்ரி படித்து விட்டு அருகே உள்ள கல்லூரியில் வேலை பார்த்து கொண்டே பி.ஹச்.டி படிக்கும் இளைஞன்.. அந்த கிராமத்தில் விவசாயத்தில் புதுமை செய்யும் முயற்சியில் இறங்கி தன் தந்தையின் மூலம் செய்து காட்டி மற்றவர்களையும் பின்பற்ற வலியுறுத்திக் கொண்டிருக்கிறான்..






தன் தங்கைக்கு திருமணம் முடித்த பிறகு தான் தனது திருமணம் என்றிருக்கும் அன்பான அண்ணன்..

இவர்களின் பக்கத்து வீட்டில் தான் அஞ்சலியின் குடும்பத்தினர் இருக்கின்றனர்.. பிரகதி வீட்டினர் அளவுக்கு வசதி இல்லை.. விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களில் இவர்கள் குடும்பமும் ஒன்று.. பிரகதி பிறந்த ஒரு வாரத்தில் பிறந்தவள் அஞ்சலி.. அதன் பிறகு நடைபழக ஆரம்பித்ததில் இருந்து இருவரும் இணைந்தே சுற்றினார்கள்..





பள்ளி செல்லும் வயதில் பிரகதியை ஆங்கில வழியில் சேர்க்க போக அவளோ அஞ்சலியுடன் தான் செல்வேன் என்று கூற அஞ்சலி அப்பாவோ பண வசதி இல்லாததால் ஆங்கில வழி பள்ளி வேண்டாம் என்று கூற பிரகதி அழுது அழுது காய்ச்சலில் விழுந்தாள்..
அதன் பிறகு சிவநாதன் அஞ்சலியை படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்று கொண்டார்.. அன்றிலிருந்து இன்று வரை அஞ்சலியின் மொத்த பொறுப்பும் சிவநாதன் சிவசக்தி தம்பதியரின் வசமாக இருக்கிறது..




பிரகதிக்கும், அஞ்சலிக்கும் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்க அஞ்சலியின் தந்தைக்கோ பிரகதியின் மாமா வீட்டில் தங்கி வேலை பார்ப்பதில் இஷ்டம் இல்லாததால் அவளை ஹாஸ்டலில் சேர்த்து விட்டனர்..






பிரகதியின் மாமா கோபப்படுவார் என்பதால் அவள் மட்டும் அவருடைய வீட்டில் இருந்து வேலைக்கு வருகிறாள்...

 
முல்லை : 2

பிரகதியும் அஞ்சலியும் ஸ்கூல் படிக்கும் போதிலும் சரி கல்லூரி செல்லும் போதும் சரி தங்களுடன் பழகும் அனைவருக்கும் நிக் நேம் வைத்து அழைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்..



முதல் முதலில் இருவரும் மாற்றி மாற்றி அவர்களுக்கே வைத்து கொண்ட பெயர் தான் விதி, எலி..
அஞ்சலி பிரகதியை தனக்கு விதித்த விதி என்றும் பிரகதி அஞ்சலியை எலியை போல கீச் கீச் என்று பேசுவதால் அந்த பெயர் வைத்தும் பேசி கொண்டனர்.. இந்த பெயர் மாற்றம் அவர்களுக்கு பிடித்து போக அம்மா அப்பா முதல் டீச்சர்ஸ், பிரின்சிபால் வரை இதுவே தொடர்ந்தது..






இன்று கம்பெனியில் முதல் நாள் என்பதால் இருவரும் கொஞ்சம் தன்மையாக நடந்து கொள்கின்றனர்..





லஞ்ச் முடித்து விட்டு மீண்டும் வந்து அவரவர் கேபினில் அமர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.. ஆபிஸே அமைதியாக இருக்க குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் போல அந்த அளவுக்கு கம்ப்யூட்டர் கீயை தட்டும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க இங்கே அஞ்சலிக்கோ கடுப்பாக இருந்தது..
எனவே பிரகதியிடம் பேச ஆரம்பித்தாள்..




"விதி.. ஸ் ஸ்.. விதி.. "



"சொல்லுடி.. எருமை"




"வர வர மரியாதை குறையுது.. "





"எலியை விட எருமை கொஞ்சம் பெருசு தான்.. சோ மரியாதை பெருசாகுதே தவிர குறையல.."



"கோபம் வர்ற மாதிரி ஜோக் பண்ணாத விதி.."




"சரி என்ன சொல்ல வந்தியோ அந்த மேட்டருக்கு வா.."





"அந்த மீசைக்கார ஐயனார் சொன்னதை கேட்டு மேரேஜ் பண்ணி இருந்தாலாவது மேட்டர் பண்ண சான்ஸ் இருக்கு. இப்போ மேட்டருக்கு நா எங்கே போக.."





"கருமம் கருமம் சொல்ல வந்த விஷயம் என்னவோ அதை சொல்லி தொலை எலி.."




"ஓ அதுவா.. இங்கே ரொம்ப போர் அடிக்கும் போல விதி.. இந்த ஆப் டேவே மோக்கையா இருக்கு.. பட் கேன்டீன்ல எனக்கு பிடித்த மாதிரி வெள்ளை பையனா டிப்டாப்பா ஒருத்தனை பார்த்தேன்.. இனி என் டார்கெட் அவன் தான்.. அவனை லவ் பண்ணி அவனையும் என்னை லவ் பண்ண வச்சு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போறேன்.. அலைபாயுதே மாதவன் ஸ்டைல்ல.. எப்படி என் ப்ளான்.."




"மொக்கையா இருக்கு. நீ பார்த்த பையனுக்கு ஆல்ரெடி ஆள் இருந்தால் என்ன செய்வ.. "





"அவளை ஓரம் கட்டிட்டு லவ் பெயிலியரான அவனுக்கு லைப் கொடுப்பேன்.. சிம்பிள்.. ம்.. ஒரு விஷயத்தை மறந்துடாதே விதி.. இந்த ப்ராஜக்ட்ல உன் ஹெல்ப்பும் தேவைப்படும்.. "





"எலி பார்த்த உடனே வர்ற பீலிங்ஸ் பேர் ஈர்ப்பு.. பழக பழக ஈர்ப்பு மறைந்து விடும்.. ஆனால் காதல் அப்படி இல்ல.. உன்னை மேரேஜ் பண்ணிகிட்ட உன் ஹஸ்பண்ட்கிட்ட மட்டும் வர்ற பீலிங்ஸ் தான் காதல்.. அது ஒரு முறை ஓரே ஒருத்தர்கிட்ட மட்டும் தான் வரும்.. நமக்கு மட்டுமே சொந்தமான ஒருத்தர்.."





"ஸ்டாப் யுவர் லெக்சர் விதி.. என்னோடது ஈர்ப்பாவே இருக்கட்டும்.. அவனை மேரேஜ் பண்ணி லவ் பண்றேன்.. இல்ல மேட்டர் பண்ணி மேரேஜ் பண்றேன்..... எதுவாக இருந்தாலும் அவன் எனக்குசொந்தமானவன்....."




"நீ இந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருந்தால் நிச்சயம் அவன் உனக்கு கிடைப்பான் எலி.. ஆல் த வெரி பெஸ்ட்.."





"தேங்ஸ்டி.. என்னவோ அவன் என் மனதில் ஒட்டிக் கொண்டான்.. பார்த்த முதல் பார்வையில் எனக்கு எல்லாமாக அவன் இருப்பான்னு தோணுச்சு.. அவன் யாரா இருந்தாலும் ஐ டோண்ட் கேர்.. ஐ லவ் ஹிம்.. "





"சரி அண்ணா பேர் என்ன"





" ப்ச்.. தெரியாது விதி.. இனி தான் கண்டு பிடிக்கனும்.."
இப்படி தோழிகள் இருவரும் பேசி கொண்டிருக்க ஆபிஸில் அனைவரின் முகங்களும் டென்சனில் வியர்க்க ஆரம்பித்தது..





ஒருத்தர், ரெண்டு பேர் இல்லாமல் ப்யூன் முதல் மேனேஜர் வரை அனைவரும் பதற்றத்துடன் இருந்தனர்..
தோழிகளோ எப்போதும் போல நார்மலாக இருந்தனர்..







சற்று நேரத்தில் ஆறரை அடி உயரத்தில் திராவிட நிறத்தில் காற்றில் மிதந்த அடங்காத முன் தலை முடியை ஒரு கரத்தில் கோதி கொண்டு மற்றொரு கரத்தை பேண்ட் பாக்கெட்டில் விட்டவாறு உள்ளே வந்தான் எஸ்.வி என்று அனைவராலும் அழைக்கப்படும் சிஷிவாகணன்..






வீட்டில் சிவா நண்பர்கள் மற்றும் பிஸ்னஸ் வட்டாரத்தில் எஸ்.வி..
சிஷிவாகணனின் அம்மா தீவிர முருக பக்தை.. எனவே முருகனின் பெயர்களில் ஒன்றான சிஷிவாகணன் என்று தன் மகனுக்கு பெயர் வைத்தார்.. கூப்பிடும் போது முருகன் தந்தையான சிவனது பேரை சொல்லி சிவா என மகனை அழைப்பார்..
எஸ்.விக்கு தாய் மட்டும் தான்.. தந்தையின் பெயரை இதுவரை அவன் எங்கேயும் சொன்னதே இல்லை.. யார் மகன் என்று கேட்டாலும் தன் தாயின் பெயரை மட்டும் சொல்வானே தவிர தந்தையின் பெயரை சொல்ல மாட்டான்.. அவனை பொறுத்த வரை தந்தை ஒரு துரோகி.. தன் தாயை ஏமாற்றியவன்..
ஆனால் அவன் தாய் தாமரையோ ஒருநாளும் தன் கணவரை தவறாக பேசமாட்டார்.. அதோடு சுயம்புவாக எழுந்து நிற்கும் மகனிடம் தன் கருத்துக்களை கூறவும் மாட்டார்.. ஒரு நல்ல மனைவியாக என் கணவரை நேசிக்கிறேன்.. நல்ல அம்மாவாக மகனுக்கு துணை நிற்கிறேன் என்பதே தாமரையின் வாதம்..





தன் தாய் தன்னுடைய முடிவில் தலையிடாது இருக்கும் போது அவருடைய முடிவில் தலையிடாமல் இருக்க பழகிக் கொண்டான்.. இருந்தாலும் தந்தை மீதான வெறுப்பில் தாமரையை சில நேரம் கடிந்து கொள்வதும் உண்டு..



எஸ்.விக்கு உலகம் முழுவதும் கம்பெனிகள் இருந்தாலும் அவன் எப்போதும் சென்னை பிராஞ்சில் தான் அதிக நேரம் இருப்பான்.. சென்னையில் ஏகப்பட்ட பிஸ்னஸ் இருப்பதால் ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விஸிட் செய்வான். அவன் வரும் நேரத்தில் குறைந்தது இருவராவது சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்..
ஏதோ ஒரு காரணமாக சஸ்பெண்ட் செய்வான் எஸ்.வி..





நேற்று போன கம்பெனியில் ஒருவர் இவன் விஸிட் சென்ற நேரத்தில் வேலை செய்யாமல் காபி குடித்ததை காரணமாக வைத்து சஸ்பெண்ட் செய்தான்.. இப்படி இவன் எடுக்கும் முடிவுகள் சில நமக்கு பைத்தியகாரத்தனமாக தெரியும். ஆனால் இவனோடு எப்போதும் கூடவே இருக்கும் இவனது நண்பன் ப்ளஸ் பி.ஏ அசோக் மட்டுமே எஸ்.வி பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்தவன்..
இன்று இந்த கம்பெனி விஸிட் என்பதால் காலையிலேயே இங்கு வந்து என்னென்ன ப்ராஜக்ட் ரன் ஆகிறது.. இன்னும் பல இன்பர்மேஷனை க்ராஸ் செக் செய்தான் அசோக்..







அசோக் மார்னிங் ஆபிஸ் வருகிறான் என்றால் எஸ்.வி அன்று விஸிட் வரும் நாள் என்று அந்த ஆபிஸில் வேலை செய்யும் அனைவருக்கும் தெரியும்.. அதன் படி இன்று காலையில் பிரகதி போனில் பேசியபடி வரும் போது தான் அசோக்கும் வந்தான்.. ஆபிஸில் வேலை செய்யும் அனைவரையும் ஓரளவுக்கு அசோக் அறிவான்.. இன்று புதிதாக ஒரு பெண் வருவதை பார்த்து நியூ ஜாயினி போல என்று நினைக்கும் போதே எஸ்.வி கால் செய்தான்..
அசோக் காலை அட்டன்ட் பண்ணி காதில் வைக்க போகும் போது அஞ்சலி அவசரமாக ஓடி வந்த வேகத்தில் அசோக்கை இடிக்க மொபைல் கீழே விழுந்தது.. அஞ்சலியும் போனில் பேசிக் கொண்டே வந்ததால் அவள் மொபைலும் கீழே விழுந்து ஸ்பீக்கர் ஆனாகியது.. அப்போது தான் பிரகதி போனில் ஹிட்வருக்கு அத்தை பையன் இந்த கம்பெனியின் எம்.டி என கூறினாள்.. அதை கேட்டு அதிர்ந்த அசோக் அஞ்சலியை பார்க்க அவளோ இடித்தவனை பற்றியோ அவன் மொபைல் கீழே விழுந்ததை பற்றியோ எந்த நினைவும் இல்லாமல் பிரகதியிடம் செல்வதை பற்றி மட்டும் யோசித்தவாறு ஓட்டமும் நடையுமாக உள்ளே சென்றாள்..





அசோக்கோ சரியான லூசா இருப்பா போல என திட்டி விட்டு கீழே கிடந்த மொபைலை எடுத்து காதில் வைத்தான்.. மறுமுனையில் இருந்த எஸ்.வியோ "இப்போ ஒரு பொண்ணு என்னை ஹிட்லருக்கு அத்தை பையன்னு சொன்னாலே அவள் யார்..." என்றான்..




"நியூ ஜாய்னிங் போல சிஷி.. அவளோட ப்ரண்ட் தான் மொபைல்ல அப்படி சொன்னாள்.. ரெண்டு பேரை பத்தி ஃபுல் டீடையில் இன்னும் 5நிமிஷத்தில் சொல்றேன்.." என்று சொன்னான் அசோக்.
அதே போல 5நிமிடங்களில் தோழிகளை பற்றிய முழு விவரங்களை எஸ்.பியிடம் சொல்ல அவனோ இவங்களுக்கு புது ப்ராஜக்ட்டை தர சொன்னான்..





"எஸ்.வி இவங்க ப்ரசர்ஸ்.. இவங்களால எப்படி அவ்வளவு பெரிய ப்ராஜக்ட்டை செய்ய முடியும்.. ரிஸ்க் எடுக்காதே.." என்று போனில் படபடத்த அசோக்கிடம் "டூ வாட் ஐ சே.. " என்று கத்தி விட்டு காலை கட் செய்தான்..





ஒரு பெருமூச்சுடன் எஸ்.வி கூறியபடி புது ப்ராஜக்ட்டை இவர்களிடம் கொடுத்தவன் இவர்கள் ப்ராஜக்ட்டை பற்றி என்ன பேசி கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ளவே எஸ்.வி மீட்டிங் நடத்தும் அறையில் இவர்களை அமர வைத்து ப்ராஜக்ட் ஸ்டார்ட் பண்ண சொன்னான்..
அங்கு இருந்த மற்ற மூவரும் அமைதியாக வேலை பார்க்க அஞ்சலியும் பிரகதியும் பேசி கொள்வதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான் அசோக்..
அப்படி அவன் சிரித்துக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்தான் சிஷிவாகணன்..





நண்பன் சிரிப்பதை பார்த்து புருவத்தை உயர்த்தி என்ன என்று வினவினான் எஸ்வி..





எஸ்.வியை அமர சொன்னவன் அஞ்சலியும் பிரகதியும் பேசிக் கொண்ட ஆடியோவை கேட்க சொன்னான் .. இதுவரை அலுவலகத்தில் வேலை செய்யும் போது யாரும் தங்களது கோ வொர்க்கரிடம் பேசியதே கிடையாது.. அப்படி இருக்க இன்று வேலைக்கு சேர்ந்த இவர்கள் இப்படி மற்றவர்களுக்கு நிக் நேம் வைத்து விளையாடியதை கேட்டவனுக்கு கோபம் வர கண்கள் சிவந்தது..
"ஹே.. கூல் கூல்.. கூல்படி.. நல்ல ப்ரண்ட்ஸ் ரெண்டு பேரும்.. பாரு உனக்காக எவ்வளவு நல்ல பேரை செலக்ட் பண்ணி வச்சு இருக்காங்க.." என்று சிரித்தான்..





அசோக்கின் சிரிப்பில் எரிச்சலான எஸ்.வி. அவனை நோக்கி சேரை திருப்பி அழுத்தமாக பார்த்தான்.. சிஷியின் பார்வையில் சிரிப்பதை நிறுத்தினான் அசோக்.... அப்போது மேனேஜர் கதவை தட்டி உள்ளே வந்தவர் "சார் .. நீயூ ஜாய்னீஸ் 5பேர் இருக்காங்க.. வர சொல்லவா சார்.." என்றார்..





அசோக் கண்களில் மின்னலுடன் "ஒவ்வொருத்தரா அனுப்பி வைங்க.. " என்றான்..
சிஷி அவனை முறைக்க அதை கண்டு கொள்ளாத அசோக் தலைமுடியை சரி செய்து சற்று சுருக்கமாக இருந்த சட்டையை நீவி விட்டு கண்ணாடியில் முகத்தை சீர் செய்துவிட்டு வந்து சேரில் அமர்ந்தான்..




அசோக் செய்த கோமாளித்தனங்களை கண்டு தலையில் அடித்து கொண்ட சிஷி கதவை தட்டி அனுமதி கேட்கவும் "யெஸ் கமின்" என்றான்..
அசோக்கின் நேரமோ என்னவோ ஆண்கள் இருவரும் முதலில் வந்து தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு தாங்கள் செய்யும் ப்ராஜக்ட் பற்றியும் கூறினர்.. அதன் பிறகு அவர்கள் டீமில் இருந்த மற்றொரு பெண் வந்தாள்.. நான்காவதாக பிரகதி உள்ளே வர நொந்து போனான் அசோக்..






சிஷிக்கோ உதட்டோரம் சிறு முறுவல் வந்ததோ என்று அறிவதற்குள் மறைந்தும் போனது..
உள்ளே வந்த பிரகதி "குட் ஈவ்னிங் சார்.. ஐ ஆம் பிரகதி.." என்றாள்..




"புது ப்ராஜக்ட் பத்தி ஏதாவது டவுட்ஸ் இருக்கா மிஸ்.பிரகதி"



"இப்போதைக்கு இல்ல சார்.. "



"அதானே எப்படி இருக்கும்.. வேலை பார்த்தால் தானே டவுட் வர.. அரட்டை அடித்தால் எப்படி டவுட் வரும்.." என்றான் அழுத்தமான குரலில்..





"நாங்க அரட்டை அடித்தாலும் வேலை கரெக்டா நடக்கும் சார்.. இதுவரை பண்ண வொர்க்கை உங்களுக்கு மெயில் பண்றேன்.. செக் பண்ணி பாருங்கள் .... " என்றாள் பிரகதி..
 
முல்லை : 3

சிஷியின் கேள்விக்கு பதில் அளித்த பிரகதிக்கு ஏனோ சிஷியை பிடிக்காமல் போனது..


முதல் முறையாக சந்திக்கும் ஒருவனை எப்படி பார்த்த உடன் வெறுக்க தோன்றியது என்ற யோசனையில் இருந்த பிரகதியை கலைத்தது சிஷியின் குரல்..
"இப்படி கண்ணை திறந்து கனவு கண்டால் என் கம்பெனி என்னாகும் மிஸ்.பிரகதி.."




"சார் என் வொர்க் எப்படின்னு பார்த்துட்டு சொல்லுங்க.. என்னால உங்க கம்பெனிக்கு பிராபிட் அதிகமா தான் கிடைக்கும்.. இட்ஸ் மை பிராமிஸ்.."





"என்னை பொறுத்த வரை சத்தியம் எல்லாம் சக்கரை பொங்கல் தான்.. பார்ப்போம் உங்க வொர்க்கை.. யூ மே கோ நௌ மிஸ்.பிரகதி.."







பிரகதி சிஷியை நோக்கி ஒரு வெட்டும் பார்வையை வீசியவள் அறையை விட்டு வெளியேறினாள்.. அதன் பிறகு கடைசியாக அஞ்சலி உள்ளே வந்தாள்.. அவளை பார்த்ததும் அசோக் முகம் தௌசண்ட் வாட்ஸ் பல்ப்பாக மின்னியது.. அதை ஓரக்கண்ணால் பார்த்த சிஷி "சிட் டவுன் மிஸ்.அஞ்சலி.." என்றான்.....




"தாங்க் யூ சார்.." என்றவள் சேரில் அமர்ந்தாள்..



"வொர்க் பிடித்து இருக்கிறதா மிஸ்.அஞ்சலி.."




"யா சார்.. வொர்க் எல்லாம் பிடித்து இருக்கிறது.."





"பிடிக்காதது ஏதாவது இருக்கா மிஸ்.அஞ்சலி.."





"ஆமா சார்.. பிடிக்காததும் இருக்கு... கேன்டீனில் சமோசா மட்டும் தான் போடுறாங்க.. சூடா பஜ்ஜி, வடை போட்டால் ரொம்ப நல்லா இருக்கும் சார்.. " என்றவளை பார்த்து அசோக் முறைக்க சிஷியோ இதழ் விரித்து சிரித்தான்..






"அடிப்பாவி சாப்பிடுறதை மட்டும் தான் குறிக்கோளா வச்சு இருப்பா போல..." என்று மனதுக்குள் நினைத்த அசோக் அவளிடம் "அஞ்சலி பஜ்ஜி, வடை மட்டும் போதுமா இல்ல பீட்சா, பர்கர் இதெல்லாம் வேண்டாமா.. " என்றான்..





"சார் சத்தமா சொல்லாதீங்க.. எனக்கு முன்னாடி வந்தாளே விதி அவ காதில் விழுந்துச்சு எனக்கு தர்ம அடி கன்பார்ம்.."




"வாட்.." என்று எழுந்து நின்ற அசோக்கை பார்த்து "சார் எதுக்காக இவ்ளோ ஷாக்.. விதிக்கு நா ஆயில் ஐடம்ஸ் அதிகமா சாப்பிடுறது பிடிக்காது.. அதனால் தான் மெதுவா பேச சொன்னேன்.. நா சொல்லி தான் நீங்க இந்த ஐட்டம்ஸை கேன்டீன்ல சேர்த்தீங்கன்னு தெரிந்தால் திட்டுவா.. ப்ளீஸ் நீங்க சொல்லிடாதீங்க.. நானும் சொல்ல மாட்டேன்.. " என்று நீளமாக பேசியவளை பார்த்து மலைத்து நின்றான் அசோக்..



"மிஸ்.அஞ்சலி நீங்க சொன்னதை நாங்க கன்சிடர் பண்றோம்.. இப்போ போய் உங்க வொர்க்கை பாருங்க" என்ற சிஷிக்கு தேங்க் யூ சொல்லி வெளியே சென்றாள் அஞ்சலி..





அவள் வெளியேறிய அடுத்த நிமிடம் அசோக்கை பார்த்தவன் அவன் இன்னும் முகம் வெளிற நிற்பதை பார்த்தவன் "அசோக்" என்று சத்தமாக அழைத்தான்..





"டேய் நண்பா .. என்ன பொண்ணுடா இவ.. கிண்டலா கேட்டதை கூட புரிந்து கொள்ளாமல் அதையும் சேர்த்து பண்ணா சந்தோஷம்னு சொல்லிட்டு போறா.. நிஜமாவே இவ வேலைக்கு தான் வந்தாளா.. இல்ல சாப்பிட மட்டும் வந்தாளா.. முடியலைடா சத்தியமா இவளோட போராடி என்னால ஜெயிக்க முடியாது.. " என்ற அசோக்கை பார்த்து சிரித்த சிஷி "யு ஆர் லவ் வித் அஞ்சலி.. அசோக்.." என்றான்....





"டேய் நீ என்ன லூசா.. நா போய் அவளை லவ் பண்றேன்னு சொல்ற.. ஐ காண்ட் டால்ரேட் திஸ் மச்சி.. யப்பா என்னா பேச்சு பேசுறா.. இவ திங்கிற தீனிக்கு நீ குடுக்குற சம்பளம் பத்தாது மச்சி.. " என்று அசோக் புலம்ப அதை கண்டு மேலும் சிரித்த சிஷி "ஏன் மச்சி அவளுக்காக இவ்வளவு யோசிக்கிற.. அவ எவ்வளவு சாப்பிட்டா உனக்கு என்ன.. அவ எவ்வளவு பேசினால் உனக்கு என்ன மச்சி.. அதோட யார் பேசுறதையும் கேட்டும் ரியாக்ட் பண்ணி பழக்கம் இல்லாத நீ அவளோடதை மட்டும் எதுக்காக ரிக்கார்டு பண்ணி வச்சு திரும்ப திரும்ப கேட்டு சிருச்ச.. நீ இதுவரை எந்த பொண்ணையும் ரசித்து நான் பார்க்கலை மச்சி.. உன் மனசு அவளை விரும்ப தொடங்கிருச்சு மச்சி.." என்றான்..




சிஷி கூறிய விளக்கத்தை கேட்ட அசோக் பார்த்த ஒரே நாளில் ஒரு பெண் இந்த அளவுக்கு என் மனதை பாதித்து இருக்கிறாளா என்று அரண்டு போய் பாவமாக சிஷியை பார்க்க அவனோ நண்பனின் நிலை கண்டு சிரித்துக் கொண்டே "மச்சி லவ் பண்றது அப்படி ஒன்றும் தப்பே இல்லையே.. " என்றான்..






"ஏன் சொல்ல மாட்ட.. அம்மாவுக்கு நா லவ் பண்றேன்னு தெரிந்தால் அவ்வளவு தான்.. உடனே உன் புகழ் பாடிகிட்டு.. சிஷி எவ்வளவு நல்ல பையன்.. அவனே நாங்க சொல்ற பொண்ணை தான் மேரேஜ் பண்ணிப்பேன்னு சொல்லிட்டான்.. ஆனால் நீ அவனை விட மூணு மாசம் சின்ன பையன் உனக்கு காதலா.. சிஷியை பார்த்து நல்ல விஷயங்களை கத்துக்கோ.. அதை விட்டுட்டு காதல் ,கத்தரிக்காய், முருங்கைக்காய் அப்படி இப்படின்னு வந்த சோத்துல விஷத்தை வச்சுடுவேன்.. இப்படி தான் சொல்வாங்க.. அதோடு என் சம்பளத்தில் அவளுக்கு தீனி வாங்கி குடுத்து கட்டுப்படியாகாது மச்சி.." என்று கூறி விட்டு வாசலை பார்த்த அசோக் மீண்டும் அரண்டவனாக சிஷி பின்னே ஒளிந்து கொண்டான்..


ஏனெனில் ரூம் வாசலில் பத்ரகாளியாக நின்றிருந்தாள் அஞ்சலி.. மொபைலை டேபிளில் வைத்தவள் எடுக்க மறந்ததால் அதை எடுக்க வந்தவள் அசோக்கின் பேச்சை கேட்டு கோபத்தில் முகம் சிவக்க நின்றாள்..
"யூ யூ யூ பிளடி இடியட், ஃபூல், ஸ்கௌண்ட்ரல்.. இன்னொரு முறை என்னை பற்றியோ இல்ல நா சாப்பிடற ஸ்னாக்ஸ் பத்தியோ பேசின ஐ வில் கில் யூ மேன்.. " என்று விட்டு மொபைலை எடுத்து கொண்டு வெளியேறினாள்..




அஞ்சலி சற்று நேரத்திற்கு முன் வந்ததால் அஞ்சலியை பற்றி பேசிய கடைசி வரிகளை மட்டும் தான் கேட்டாள்.. சிஷி பேசியதை கேட்காததால் மட்டுமே இந்த அளவில் திட்டி முடித்தாள்.. தோழிகள் தங்களுக்குள் பேசியதை அசோக் ரெக்கார்டு பண்ணி கேட்டது தெரிந்தால் ருத்ரதாண்டவம் ஆடி இருப்பாள்..





அசோக்கின் நல்ல நேரம் அவனின் கடைசி வரிகளை மட்டும் அஞ்சலி கேட்க நேர்ந்தது.. கோபத்துடன் சென்று அவள் இடத்தில் அமர்ந்தாள் அஞ்சலி..
அமைதியாக வேலை பார்த்த பிரகதி கோபத்தில் இருந்த அஞ்சலியை பார்க்க "என்னடி ஹிட்லரின் அத்தை பையன் உன்னையும் டென்சன் பண்ணிட்டானா...." என்றாள்..




"அவன் இல்லடி அந்த ஒட்டகம் மேய்க்கிறவன் தான் என்னை பார்த்து ஓவரா ஸ்னாக்ஸ் சாப்பிடுறேன்னு சொல்லிட்டான்.. அவன் கொள்ளி கண்ணை பாம்பு கொத்த.." என்ற பொங்கிய அஞ்சலியை அடக்கினாள் பிரகதி..


"ஸ்.. மெதுவா பேசுடி யார் காதிலாவது விழுந்து தொலைக்கப் போகுது.."



"அதெல்லாம் பாத்துக்கலாம்.. இவனுங்களை ஏதாவது பண்ணனும் விதி.. வேலைக்கு வந்த முதல் நாளே டென்சன் பண்ணதுக்கு பனிஸ்மெண்ட் கொடுக்காமல் போனா வரலாறு நம்மை பத்தி என்ன பேசும்.. "



"அப்படின்ற.. விடு எலி பாத்துக்கலாம்.. இன்னும் பத்து நிமிடத்தில் ஆபிஸ் முடிந்து எல்லாரும் போய்டுவாங்க.. இவனுங்க லேட்டா தான் போவானுங்க.. ஏன்னா முதலாளி இல்லையா.. " என்று கிண்டலாக சொன்ன பிரகதி அஞ்சலியை அருகே அழைத்து காதில் விஷயத்தை சொல்ல "ஹே சூப்பர்.. சூப்பர் ப்ளான்.. இவனுங்களுக்கு நல்லா வேணும்.. நடந்தே வீடு போய் சேரட்டும்.." என்றாள்..





எம்.டி அறையில் இருந்து இவர்கள் பேசியதை கேட்ட அசோக்கும் சிஷியும் அதிர்ந்தனர்..
"மச்சி என்னடா இது எம்.டின்ற பயமே இல்லாமல் ஏதோ ப்ளான் பண்றாங்க.. இந்த பிரகதி பேசியதை கேட்டப்போ ரொம்ப நல்ல பொண்ணா இருக்கும்னு நினைத்தேன்.. கடைசியில் என் ஆளுக்கு ஐடியா குடுக்குற ஐடியா மணியே பிரகதி தான் போல.. மச்சி என் எதிர்காலம் கண் முன்னே பிரகாசமா தெரியுது மச்சி.. ஐயோ இப்போ நா என்ன சொன்னேன். அந்த அமுல் பேபியை என் ஆளுன்னு தானே .. மச்சி ரொம்ப உளர்றேன் மச்சி... இங்கே இருந்து என்னை எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு போய்டு மச்சி.. இந்த ஆபிஸ்க்கு இனிமேல் நா வரமாட்டேன்.. நா வரவே மாட்டேன் மச்சி.." என்ற அசோக்கை பார்த்து மென்மையாக சிரித்தான் சிஷிவாகணன்..





அஞ்சலி திட்டி விட்டு சென்ற பிறகு மூச்சை இழுத்து விட்ட அசோக் "ப்பா சாமி கொலைகாரி.. எப்படி பேசிட்டு போறா பாரு மச்சி.." என்றான்..
"மச்சி அவள் திட்டியது நீ ஸ்னாக்ஸ் பத்தி பேசியதால் தான்னு நினைக்கிறேன்.. நீயா அவகிட்ட ஏதாவது பேசி உளறி வச்சுடாதே.." என்று பேசிக் கொண்டிருந்த போது அஞ்சலியின் குரல் கோபமாக கேட்டது.. அப்போது தான் அவர்கள் வேலை செய்யும் கேபினில் மைக் ஆப் பண்ணாமல் இருந்ததை கண்டு ஆப் பண்ண போகும் போது சிஷியை ஹிட்லரின் அத்தை பையன் என்றும் அசோக்கை ஒட்டகம் மேய்ப்பவன் என்றும் கூறியதை கேட்டு அதிர்ந்தனர் நண்பர்கள் இருவரும்.. அதற்கும் மேல் தங்களை வைத்து ஏதோ ப்ளான் செய்ததை கேட்டு அதிர்ச்சியின் எல்லைக்கே போய் நின்றான் அசோக்..
இதுவரை ஸ்டாப் யாரும் சார் என்றதை தவிர வேறு வார்த்தை பேசியதில்லை... ஆனால் இவர்களோ வேலைக்கு வந்த முதல் நாளே இப்படி ஆட வைக்கிறாங்களே என்று நினைத்த அசோக் "மச்சி நீ இதுவரை இவ்வளவு பொறுமையாக யாரையும் ஹேண்டில் பண்ணதே இல்லை.. எனக்காக தான் இப்படி பொறுத்து போறன்னு புரியுது.. எனக்கு அவள் வேண்டாம் மச்சி.. வேலையை விட்டு தூக்கிடலாம்.. இவங்க நம்ம ஆபிஸிற்கு வேண்டாம் மச்சி.." என்று சின்ன குரலில் கூறினான்..




"மச்சி எனக்கு இருக்கும் ஒரே ப்ரண்ட் நீ மட்டும் தான்.. உன் சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம் மச்சி.. அதோடு இவங்க பண்ற சின்ன சின்ன குறும்புகளை ரசிக்க தோணுது மச்சி" என்ற சிஷியை பார்த்து விழி விரித்தான் அசோக்..




"மச்சி உன் கண்களில் இன்னிக்கு நிஜமான சந்தோஷம் தெரியுது மச்சி.. இதுவரை அழுத்தமாக இருந்த உன் முகத்தில் சிரிப்பு தெரியுது மச்சி.. யூ ஆர் லாபிங் மேன்.." என்றான் அசோக்..





"இருக்கலாம் மச்சி.. ஏனோ அந்த பிரகதியை பார்த்தால் மனதுக்கு சந்தோஷமா இருக்கு மச்சி.. இது ஈர்ப்பா இல்ல வேறு எதுவுமானு எனக்கு தெரியலை.. பட் ஷீ இஸ் மைன் அப்படின்னு இங்கே சொல்லுது.." என்று நெஞ்சை காட்டி சொன்னவனை ஆச்சரியமாக பார்த்தான் அசோக்..

ஹலோ பிரண்ட்ஸ்..
இந்த கதை பிடித்து இருக்கிறதா.. படிக்கும் ப்ரண்ட்ஸ் கமெண்ட் பண்ணினால் நன்றாக இருக்கும் ப்ரண்ட்ஸ்.. நன்றி..



 
Top