வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

விடையறியா வினா அவள்!

Status
Not open for further replies.
அத்தியாயம்- 1

அன்பெனும் கதைகளால் செய்யப்பட்ட உயிர் அவள்!

பழியறியா பனி விழிகள் அவள்!

மாய உலகத்தில் பகையறியா
பாவை அவள்!

விடையறியா வினா அவள்!

பழி பகை என்னும்
இரண்டு எழுத்தின் மறு உருவமாக
வன்மத்தில் நிறைந்திருக்கிறாள் அவள்!

அவள் பெயர் கூட
ஓர் மௌனமே
என்னும் மாயம் அவள்!

அவள் ஓர் மாயையே...

பெரியதும் இல்லாமல், சிறியதும் இல்லாமல் பார்ப்பதற்கு திருப்தியாக இருந்தது அந்த திருமண மண்டபம். ஆங்காங்கே பூக்களாலும் கலர் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டு இருந்தது மண்டபம்.

திருமணத்திற்கு வருபவர்களை அழைக்கவே வாசலில் இருவர் கைகூப்பி நின்றபடி இருந்தனர்.

வந்து இருக்கும் சொந்தங்களையும் பந்தங்களையும், பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ புன்னகை முகமாக நலம் விசாரித்து, வரவேற்பதற்காகவே மேலும் இருவர் சபையில் சுற்றிக் கொண்டு இருக்க... திருமண மண்டபத்தினுள் சொந்தப்பந்தங்கள் நிறைந்து காணப்பட்டது.

பந்தி நடக்கும் இடத்திலும் வேலைகளை சரியாக கவனித்துக் கொள்ளுவதற்கும் இரண்டு பேர் நியமித்து இருந்தனர்.

திருமணத்திற்கு வந்து இருந்த ஊர் மக்கள் வேறு ஒன்று கூடி, சலசலப்புடன் பல கதைகளை பேச தொடங்கியவர்கள், அதில் ஒரு கதையை ஒன்றாக்கி அதை இரண்டாக்கி அப்படியே வளர்த்து பத்தாக மாற்றிக் கொண்டு இருந்தனர்.


மணமகள் அறையில் பருவ பெண்கள் ஒன்றாக குவிந்து, மணப்பெண்ணை கேலி செய்துக் கொண்டு இருந்தாலும், பெண்ணை அழகாக அலங்காரம் செய்தார்கள்.

"போதும் போதும் அரட்டை அடிச்சது எல்லாம்... வெளியே போங்க. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க இங்க..? எல்லாரும் என் மருமகளை பார்த்து கண்ணு வச்சிடாதீங்கடி" என்று சொல்லிக் கொண்டே அறையினுள் வந்தார் மாப்பிள்ளையின் அம்மா காஞ்சனா.


"ம்கூம்... இப்போ தான் நாங்க இவளை பார்க்கிறோம் பாருங்க கண்ணு வைக்க" என்று ஒருத்தி நொடித்துக் கொள்ள,

இன்னொருத்தியோ, "அதானே, நாங்க எல்லாம் ஒன்னா பிறந்து ஒன்னா... வளர்ந்து ஒன்னாவே கல்" என்று ஆரம்பித்தவளின் தலையில் கொட்டிய காஞ்சனா,

"போதும் போங்கடி. நான் என் மருமக கிட்ட பேசிட்டு வரேன்" என்று சொல்லி மணப்பெண்ணின் தோழிகளை வெளியே விரட்டாத குறையாக விரட்டி வைத்தவர், அவர்கள் போனதும் கதவை அடைத்து விட்டு,

"அழகா இருக்க கீர்த்தனா. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு" என்று சொல்லி நெட்டி முறித்தார்.

கீர்த்தனாவோ அமைதியாக புன்முறுவல் பூத்து "தேங்க்ஸ் அத்தை" என்று கூறிக் கொண்டே அவர் காலில் விழுந்து வணங்கினாள்.

"நல்லா இரும்மா, அடுத்த பத்து மாசத்துல எனக்கு ஒரு பேத்தியோ பேரனோ பெத்து கொடுத்துடு கீர்த்தி" என சொன்னதை கேட்டு, அவள் நெஞ்சில் நீர் வற்றி போனது.

தொண்டை குழி ஏறி இறங்க "ம்" என மெல்ல தலையை ஆட்டினாள்.

காஞ்சனா அவளின் அலங்காரத்தை பார்த்துக் கொண்டு வந்தவர், "ஆமாடா அந்த கல்லு வச்ச ஆரம் போட்டுக்கலையா நீ? எங்கே போச்சு?" என்று கேட்டுக் கொண்டே ஆரத்தை தேட,

"அது வீட்லயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன் அத்தை" என்றாள்.

"ஓ" என்று காஞ்சனாவின் குரல் ஸ்ருதி இறங்கி ஒலித்து, "சரி சரி... வீட்டுக்கு போனதும் அத்தை கிட்ட கொடுத்துடு என்ன... பத்து சவரம் நகை பத்திரமா வைக்கணும்ல" என்றவர் பல்லை காட்டி விட்டு, "இதோ பாரு தொப்பை வேறு அதிகமா போட்டு வச்சி இருக்க. முன்ன எல்லாம் எவ்வளவு ஒல்லியா இருப்ப..? கடந்த அஞ்சு மாசத்துல இப்படியா வெளியே தெரியுற போலவா தொப்பை போடுவ" என்று கேட்டவருக்கு தெரியவில்லை.

அது உடல் கொழுப்பால் உண்டான தொப்பை இல்லை. கருவில் உருவான குழந்தை என்று.

அவருக்கு மட்டுமில்லை... அங்கே இருக்கும் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அவன் தெரிந்துக் கொள்ளவும் விடவில்லை.

அவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும், பெண்ணவளின் கருவில் அவர்கள் குடும்ப வாரிசு வளர்கிறது என்று.

காஞ்சனா கூறியதை கேட்ட கீர்த்திக்கு முகம் எல்லாம் வெளிறி போனது. மனம் படபடவென அடித்துக் கொள்ள, பயத்தில் வியர்வை துளிகள் வேறு அவள் அனுமதி வாங்காமல் வதனத்தில் அரும்ப ஆரம்பிக்க... தன் அத்தை பார்ப்பதற்கு முன் அவசரமாக வேர்வையை துடைத்துக் கொண்டாள்.

அதே நேரம் மணமகன் அறையில் வேஷ்டி சட்டை அணிந்து கம்பீரமாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு கைப்பேசியை நோண்டிக் கொண்டு இருந்தான் கலியுகவரதன்.

உனக்கு தான் திருமணம் என்று யாராவது சொன்னால் 'ஓ' என்ற ஒற்றை வார்த்தையில் அதை கடந்து விட்டுச் செல்பவன்.

ஆனால் இந்த திருமணத்தையே அவன் தான் அடம்பிடித்து நடத்துகிறான் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆனால் அது தான் நிதர்சனம்.


அவனை தவிர அந்த அறையில் யாருமே இல்லை. அவன் அனுமதிக்கவில்லை என்றே சொல்லலாம்.

இறுகிய முகத்தோடு கைப்பேசியை கண்டவனுக்கு, மேலும் இறுகி போனது அவன் வதனம் மட்டும் இல்லை தேகமும் கூட "மாப்பிள்ளையை அழைத்து வாருங்கள்" என்ற வார்த்தைகளை கேட்டு.

அவன் அறை கதவு தட்டப்பட, "எனக்கும் கேட்டுச்சு வரேன்" என்று சொன்னவன், தன் கைப்பேசியை அணைத்து சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு பெருமூச்சோடு எழுந்துக் கொண்டான்.

கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தவன் முகம் இப்பொழுது சபை நாகரீகம் கருதி மெல்ல விரிந்தது.

மணமேடையில் அமர்ந்து
அக்னிக்கு முன் அமர்ந்து ஐயர் சொன்ன மந்திரங்களை கூற தொடங்க... அடுத்து பெண்ணை அழைத்து வர சொல்லி குரல் கொடுத்தார் ஐயர்.

தலையை குனிந்த படி மணமகன் அருகில் வந்து அமர்ந்தவள் பதற்றத்தில் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவளுக்கோ சபையில் இத்தனை பேர் முன்பு அமர்ந்து இருப்பது பயத்தை வேறு கொடுத்தது.

அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்த வரதன், "கீர்த்திம்மா ப்ரீயா இருடா. எதை நினைச்சும் டென்ஷன் ஆகாத. மாமா நான் இருக்கேன்" என சொல்லி அவள் கரத்தை மென்மையாக பிடித்தான்.

அவள் கரமோ வியர்வையில் சில்லுட்டு இருக்க... அவளின் நிலையை உணர்ந்து ஐயரிடம், "ஐய்யரே போதும் மந்திரம் சொன்னது. தாலியை கொடுங்க" என்று தாம்பூள தட்டில் இருந்து தானே திருமாங்கல்யத்தை எடுத்து மணப்பெண் கழுத்தில் கட்ட போக,

இதை பார்த்த அனைவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டு "மாப்பிள்ளைக்கு ரொம்ப அவரம் போல" என சொல்லி மேலும் சிரிக்க, நாதஸ்வரம் சத்தத்தையும் தாண்டி,

அந்த மண்டபமே அதிரும்படி வந்து விழுந்த அவள் வார்த்தைகள்.

"ஸ்டாப் இட்" என ஆளுமையான ஒரு குரல் ஒலிக்க. அக்குரலுக்கு சொந்ததகாரி யாராக இருக்கும் என்று திரும்பி பார்க்காமலே கண்டுக் கொண்டவன் முகம் அழுத்தமாக இறுகி போனது. தாலியை பிடித்தவன் பிடியும் இறுகியது.

அனைவரும் யார் என்று வாசலை திரும்பி பார்க்க அங்கே கையிலிருந்த மைக்கை அருகில் இருந்தவனிடம் கொடுத்து விட்டு திமிருடன் நடந்து வந்தவள் அங்கே மணப்பெண்ணின் கழுத்தருகில் தாலியுடன் அமர்ந்து இருந்த கலியுகவரதன் மீது படிந்தது.

தன் மீது துளைத்து எடுக்கும் பார்வையை வீசிக் கொண்டு இருப்பவளை இப்பொழுது நிதானமாக திரும்பி பார்த்தான்.

அச்சமயம் கலியுகவரதனின் தந்தை ராஜேந்திரன், "யாரும்மா நீ? எதுக்கு இப்போ நிறுத்த சொன்ன?" என்று கேட்டவரை அனல் தெறிக்க பார்த்தவள்,

"பின்னே, நிறுத்தாம என்னை கர்ப்பம் ஆக்கி ஏமாத்திட்டு, இப்போ வேறு ஒரு பொண்ணை கல்யாண பண்ணிக்க போறவனுக்கு அர்ச்சனை தூவி வாழ்த்த சொல்றீங்களா?" என்று அங்கே இருக்கும் அனைவருக்குமே கேட்கும்படி கத்தி கூறினாள் அவள்.

அதை கேடடு கீர்த்தனா அதிர்ந்து வரதனை திரும்பி பார்க்க... அனைவருமே அவனை தான் பார்த்தார்கள்.

அந்த மண்டபத்தில் இருக்கும் அனைவரும் பேரதிர்ச்சியில் வாய் மேல் கை வைத்துக் கொண்டு நடக்கும் கூத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க, மணமகன் மணமகள் உறவினர்கள் முக சுழிப்புடன் நின்று இருந்தனர்.

மாப்பிள்ளையின் அம்மா காஞ்சனா, "யாரும்மா நீ? தாலி கட்டுற நேரத்தில் வந்து பிரிச்சனை செய்துட்டு இருக்க. உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு என் புள்ளை தான் அப்பானு எதை வச்சி சொல்ற. நான் ஒன்னும் என் புள்ளையை முறை தப்பி போற அளவுக்கு வளர்க்கல. அவன் சொக்க தங்கம்" என்று சொன்னதை கேட்ட மணமகனாக அமர்ந்து இருந்த கலியுகவரதனுக்கே தன் அன்னை பேசுவது கொஞ்சம் ஓவராக தான் போகிறதோ என்று தோன்றியது.

அங்கே மார்புக்கு நடுவே கரங்களை கட்டிக் கொண்டு தன்னை சுட்டெரிப்பது போல் பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளை, என்ன என்று புருவத்தை உயர்த்தி சைகையால் அவன் கேட்க,

அவளோ, "த்தூ" என்று துப்பிவிட்டு, "என் வயத்துல வளர்ற குழந்தைக்கு உங்க புள்ள தான் அப்பா. இதை நிரூபிக்க டெமோ ஏதாவது காட்ட முடியுமா என்ன?" என்று கடுப்புடன் கேட்டவளை பார்த்து,

"ஹா" என்று வாயை பிளந்தார் அவர்.

"பொண்ணு மாதிரியா பேசுற நீ" என்று கேட்டுக் கொண்டே வரதனின் தந்தை ராஜேந்திரன் முன்னே வர, அவரை ஏற இறங்க பார்த்தவள்,

"இந்த வா போ னு பேசுற வேலையெல்லாம் வேணாம். அப்புறம் நானும் அப்படி தான் பேசுவேன்" என்றாள் திமிராக.

அவள் கூறுவதோ, தன் எதிரே இருப்பவர்கள் அவளை எப்படி நடத்துகிறார்களோ அப்படி தான் தானும் நடந்துக் கொள்வேன் என்பது போல் இருக்க. முகம் சுருங்கி போனது அவருக்கு.

அதுவரை அமைதியாக மணமேடையில் அமர்ந்து இருந்த கலியுகவரதன் சற்றே கோபத்துடன் எழுந்து மங்கையின் அருகில் வந்தவன் அவளை அருவெறுப்பாக பார்த்து, "இங்க பாரு மாயா, உன்னோட இந்த அகங்காரத்தை வேற யார்கிட்டயாவது வச்சிக்கோ. என் குடும்பத்துகிட்டையும் என் கிட்டையும் வச்சிக்காத. ஆமா குழந்தை குழந்தைனு சொல்றியே..." என்று கேட்டுக் கொண்டே அவள் வயிற்றை சுட்டிக் காட்டி, "இதுக்கு நான் தான் காரணம்னு எதை வச்சு டி சொல்ற?" என்று எரிச்சலுடன் கேட்டான்.

"அதுக்கு, நமக்குள்ள நடந்ததை வீடியோவா எடுத்து வச்சிட்டு இருக்க முடியும்..? ஒருவேளை நீ இப்படியெல்லாம் கேட்பனு அன்னிக்கே தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா வீடியோ எடுத்து இருப்பேன்டா" என்று அவனுக்கு சற்றும் சலிக்காத குரலில் எந்த தயக்கமுன்றி பேசுபவளை பார்த்து வெறுத்து போனான் கலியுகவரதன்.

சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்களே என்று கவலையே கொள்ளாமல் பேசுபவளை கண்டு அனைவராலும் "பொண்ணா இது" என்று முணுமுணுக்காமல் இருக்க முடியவில்லை.

அந்நேரம் மணமேடையில் அமர்ந்து இருந்த கீர்த்தனா சட்டென்று மயக்கம் போட்டு விழவும், அனைவரின் கவனமும் அவள் மீது திரும்பியது.

திருமணத்திற்கு வந்து இருந்த மருத்துவர் ஒருவர் கீர்த்தனாவை பரிசோதித்து விட்டு, குரலை சரி செய்துக் கொண்டே தயக்கமாகவே, "கீர்த்தி பிரக்னண்டா இருக்கா" என்று அனைவரின் தலையிலும் மேலும் ஒரு குண்டை தூக்கி போட,

காஞ்சனாவோ ஆவேசமாக கீர்த்தனா அருகில் சென்று, "யார் இதுக்கு காரணம்?" என்று அவளிடம் கேட்க, கீர்த்தனா தலையை குனிந்து கண்ணீரோடு விழிகளை உயர்த்தி, "மாமா தான்" என அங்கே இறுகி போய் நின்று இருந்த கலியுகவரதனை விரல் நீட்டி காட்டினாள்.

இதை கேட்டு மேலும் அனைவருக்கும் பேரதிர்ச்சி ...

சிலர் "மாப்பிள்ளை ஒரே கல்லுல இரண்டு மாங்கா அடிச்சிட்டார்" என்று கூற,

மேலும் சிலரோ, "மாப்பிள்ளை ஜகஜால கில்லாடி தான்" என்றனர்.


ஒரு சிறிய விஷயத்தையே ஊதி எப்படி பெரியதாக்க வேண்டும் என்று தெரிந்த நம் மக்களுக்கு... இத்தனை பெரிய செய்தியை எவ்வாறு பூகம்பம் போல் வெடித்து சிதற விட வேண்டும் என்று சொல்லியா கொடுக்க வேண்டும். இதில் எல்லாம் அவர்கள் கை தேர்ந்தவர்கள் ஆயிற்றே..!


முதல் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன் பேபிஸ்... படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்துகளை கூறி...

என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்துங்கள்.

கருத்து லிங்க்

Thread '(VVA) கருத்து திரி'
https://pmtamilnovels.com/index.php?threads/vva-கருத்து-திரி.26/
 
Last edited:
அத்தியாயம்- 1

அன்பெனும் கதைகளால் செய்யப்பட்ட உயிர் அவள்!

பழியறியா பனி விழிகள் அவள்!

மாய உலகத்தில் பகையறியா
பாவை அவள்!

விடையறியா வினா அவள்!

பழி பகை என்னும்
இரண்டு எழுத்தின் மறு உருவமாக
வன்மத்தில் நிறைந்திருக்கிறாள் அவள்!

அவள் பெயர் கூட
ஓர் மௌனமே
என்னும் மாயம் அவள்!

அவள் ஓர் மாயையே...

பெரியதும் இல்லாமல், சிறியதும் இல்லாமல் பார்ப்பதற்கு திருப்தியாக இருந்தது அந்த திருமண மண்டபம். ஆங்காங்கே பூக்களாலும் கலர் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டு இருந்தது மண்டபம்.

திருமணத்திற்கு வருபவர்களை அழைக்கவே வாசலில் இருவர் கைகூப்பி நின்றபடி இருந்தனர்.

வந்து இருக்கும் சொந்தங்களையும் பந்தங்களையும், பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ புன்னகை முகமாக நலம் விசாரித்து, வரவேற்பதற்காகவே மேலும் இருவர் சபையில் சுற்றிக் கொண்டு இருக்க... திருமண மண்டபத்தினுள் சொந்தப்பந்தங்கள் நிறைந்து காணப்பட்டது.

பந்தி நடக்கும் இடத்திலும் வேலைகளை சரியாக கவனித்துக் கொள்ளுவதற்கும் இரண்டு பேர் நியமித்து இருந்தனர்.

திருமணத்திற்கு வந்து இருந்த ஊர் மக்கள் வேறு ஒன்று கூடி, சலசலப்புடன் பல கதைகளை பேச தொடங்கியவர்கள், அதில் ஒரு கதையை ஒன்றாக்கி அதை இரண்டாக்கி அப்படியே வளர்த்து பத்தாக மாற்றிக் கொண்டு இருந்தனர்.


மணமகள் அறையில் பருவ பெண்கள் ஒன்றாக குவிந்து, மணப்பெண்ணை கேலி செய்துக் கொண்டு இருந்தாலும், பெண்ணை அழகாக அலங்காரம் செய்தார்கள்.

"போதும் போதும் அரட்டை அடிச்சது எல்லாம்... வெளியே போங்க. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க இங்க..? எல்லாரும் என் மருமகளை பார்த்து கண்ணு வச்சிடாதீங்கடி" என்று சொல்லிக் கொண்டே அறையினுள் வந்தார் மாப்பிள்ளையின் அம்மா காஞ்சனா.


"ம்கூம்... இப்போ தான் நாங்க இவளை பார்க்கிறோம் பாருங்க கண்ணு வைக்க" என்று ஒருத்தி நொடித்துக் கொள்ள,

இன்னொருத்தியோ, "அதானே, நாங்க எல்லாம் ஒன்னா பிறந்து ஒன்னா... வளர்ந்து ஒன்னாவே கல்" என்று ஆரம்பித்தவளின் தலையில் கொட்டிய காஞ்சனா,

"போதும் போங்கடி. நான் என் மருமக கிட்ட பேசிட்டு வரேன்" என்று சொல்லி மணப்பெண்ணின் தோழிகளை வெளியே விரட்டாத குறையாக விரட்டி வைத்தவர், அவர்கள் போனதும் கதவை அடைத்து விட்டு,

"அழகா இருக்க கீர்த்தனா. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு" என்று சொல்லி நெட்டி முறித்தார்.

கீர்த்தனாவோ அமைதியாக புன்முறுவல் பூத்து "தேங்க்ஸ் அத்தை" என்று கூறிக் கொண்டே அவர் காலில் விழுந்து வணங்கினாள்.

"நல்லா இரும்மா, அடுத்த பத்து மாசத்துல எனக்கு ஒரு பேத்தியோ பேரனோ பெத்து கொடுத்துடு கீர்த்தி" என சொன்னதை கேட்டு, அவள் நெஞ்சில் நீர் வற்றி போனது.

தொண்டை குழி ஏறி இறங்க "ம்" என மெல்ல தலையை ஆட்டினாள்.

காஞ்சனா அவளின் அலங்காரத்தை பார்த்துக் கொண்டு வந்தவர், "ஆமாடா அந்த கல்லு வச்ச ஆரம் போட்டுக்கலையா நீ? எங்கே போச்சு?" என்று கேட்டுக் கொண்டே ஆரத்தை தேட,

"அது வீட்லயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன் அத்தை" என்றாள்.

"ஓ" என்று காஞ்சனாவின் குரல் ஸ்ருதி இறங்கி ஒலித்து, "சரி சரி... வீட்டுக்கு போனதும் அத்தை கிட்ட கொடுத்துடு என்ன... பத்து சவரம் நகை பத்திரமா வைக்கணும்ல" என்றவர் பல்லை காட்டி விட்டு, "இதோ பாரு தொப்பை வேறு அதிகமா போட்டு வச்சி இருக்க. முன்ன எல்லாம் எவ்வளவு ஒல்லியா இருப்ப..? கடந்த அஞ்சு மாசத்துல இப்படியா வெளியே தெரியுற போலவா தொப்பை போடுவ" என்று கேட்டவருக்கு தெரியவில்லை.

அது உடல் கொழுப்பால் உண்டான தொப்பை இல்லை. கருவில் உருவான குழந்தை என்று.

அவருக்கு மட்டுமில்லை... அங்கே இருக்கும் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அவன் தெரிந்துக் கொள்ளவும் விடவில்லை.

அவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும், பெண்ணவளின் கருவில் அவர்கள் குடும்ப வாரிசு வளர்கிறது என்று.

காஞ்சனா கூறியதை கேட்ட கீர்த்திக்கு முகம் எல்லாம் வெளிறி போனது. மனம் படபடவென அடித்துக் கொள்ள, பயத்தில் வியர்வை துளிகள் வேறு அவள் அனுமதி வாங்காமல் வதனத்தில் அரும்ப ஆரம்பிக்க... தன் அத்தை பார்ப்பதற்கு முன் அவசரமாக வேர்வையை துடைத்துக் கொண்டாள்.

அதே நேரம் மணமகன் அறையில் வேஷ்டி சட்டை அணிந்து கம்பீரமாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு கைப்பேசியை நோண்டிக் கொண்டு இருந்தான் கலியுகவரதன்.

உனக்கு தான் திருமணம் என்று யாராவது சொன்னால் 'ஓ' என்ற ஒற்றை வார்த்தையில் அதை கடந்து விட்டுச் செல்பவன்.

ஆனால் இந்த திருமணத்தையே அவன் தான் அடம்பிடித்து நடத்துகிறான் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆனால் அது தான் நிதர்சனம்.


அவனை தவிர அந்த அறையில் யாருமே இல்லை. அவன் அனுமதிக்கவில்லை என்றே சொல்லலாம்.

இறுகிய முகத்தோடு கைப்பேசியை கண்டவனுக்கு, மேலும் இறுகி போனது அவன் வதனம் மட்டும் இல்லை தேகமும் கூட "மாப்பிள்ளையை அழைத்து வாருங்கள்" என்ற வார்த்தைகளை கேட்டு.

அவன் அறை கதவு தட்டப்பட, "எனக்கும் கேட்டுச்சு வரேன்" என்று சொன்னவன், தன் கைப்பேசியை அணைத்து சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு பெருமூச்சோடு எழுந்துக் கொண்டான்.

கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தவன் முகம் இப்பொழுது சபை நாகரீகம் கருதி மெல்ல விரிந்தது.

மணமேடையில் அமர்ந்து
அக்னிக்கு முன் அமர்ந்து ஐயர் சொன்ன மந்திரங்களை கூற தொடங்க... அடுத்து பெண்ணை அழைத்து வர சொல்லி குரல் கொடுத்தார் ஐயர்.

தலையை குனிந்த படி மணமகன் அருகில் வந்து அமர்ந்தவள் பதற்றத்தில் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவளுக்கோ சபையில் இத்தனை பேர் முன்பு அமர்ந்து இருப்பது பயத்தை வேறு கொடுத்தது.

அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்த வரதன், "கீர்த்திம்மா ப்ரீயா இருடா. எதை நினைச்சும் டென்ஷன் ஆகாத. மாமா நான் இருக்கேன்" என சொல்லி அவள் கரத்தை மென்மையாக பிடித்தான்.

அவள் கரமோ வியர்வையில் சில்லுட்டு இருக்க... அவளின் நிலையை உணர்ந்து ஐயரிடம், "ஐய்யரே போதும் மந்திரம் சொன்னது. தாலியை கொடுங்க" என்று தாம்பூள தட்டில் இருந்து தானே திருமாங்கல்யத்தை எடுத்து மணப்பெண் கழுத்தில் கட்ட போக,

இதை பார்த்த அனைவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டு "மாப்பிள்ளைக்கு ரொம்ப அவரம் போல" என சொல்லி மேலும் சிரிக்க, நாதஸ்வரம் சத்தத்தையும் தாண்டி,

அந்த மண்டபமே அதிரும்படி வந்து விழுந்த அவள் வார்த்தைகள்.

"ஸ்டாப் இட்" என ஆளுமையான ஒரு குரல் ஒலிக்க. அக்குரலுக்கு சொந்ததகாரி யாராக இருக்கும் என்று திரும்பி பார்க்காமலே கண்டுக் கொண்டவன் முகம் அழுத்தமாக இறுகி போனது. தாலியை பிடித்தவன் பிடியும் இறுகியது.

அனைவரும் யார் என்று வாசலை திரும்பி பார்க்க அங்கே கையிலிருந்த மைக்கை அருகில் இருந்தவனிடம் கொடுத்து விட்டு திமிருடன் நடந்து வந்தவள் அங்கே மணப்பெண்ணின் கழுத்தருகில் தாலியுடன் அமர்ந்து இருந்த கலியுகவரதன் மீது படிந்தது.

தன் மீது துளைத்து எடுக்கும் பார்வையை வீசிக் கொண்டு இருப்பவளை இப்பொழுது நிதானமாக திரும்பி பார்த்தான்.

அச்சமயம் கலியுகவரதனின் தந்தை ராஜேந்திரன், "யாரும்மா நீ? எதுக்கு இப்போ நிறுத்த சொன்ன?" என்று கேட்டவரை அனல் தெறிக்க பார்த்தவள்,

"பின்னே, நிறுத்தாம என்னை கர்ப்பம் ஆக்கி ஏமாத்திட்டு, இப்போ வேறு ஒரு பொண்ணை கல்யாண பண்ணிக்க போறவனுக்கு அர்ச்சனை தூவி வாழ்த்த சொல்றீங்களா?" என்று அங்கே இருக்கும் அனைவருக்குமே கேட்கும்படி கத்தி கூறினாள் அவள்.

அதை கேடடு கீர்த்தனா அதிர்ந்து வரதனை திரும்பி பார்க்க... அனைவருமே அவனை தான் பார்த்தார்கள்.

அந்த மண்டபத்தில் இருக்கும் அனைவரும் பேரதிர்ச்சியில் வாய் மேல் கை வைத்துக் கொண்டு நடக்கும் கூத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க, மணமகன் மணமகள் உறவினர்கள் முக சுழிப்புடன் நின்று இருந்தனர்.

மாப்பிள்ளையின் அம்மா காஞ்சனா, "யாரும்மா நீ? தாலி கட்டுற நேரத்தில் வந்து பிரிச்சனை செய்துட்டு இருக்க. உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு என் புள்ளை தான் அப்பானு எதை வச்சி சொல்ற. நான் ஒன்னும் என் புள்ளையை முறை தப்பி போற அளவுக்கு வளர்க்கல. அவன் சொக்க தங்கம்" என்று சொன்னதை கேட்ட மணமகனாக அமர்ந்து இருந்த கலியுகவரதனுக்கே தன் அன்னை பேசுவது கொஞ்சம் ஓவராக தான் போகிறதோ என்று தோன்றியது.

அங்கே மார்புக்கு நடுவே கரங்களை கட்டிக் கொண்டு தன்னை சுட்டெரிப்பது போல் பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளை, என்ன என்று புருவத்தை உயர்த்தி சைகையால் அவன் கேட்க,

அவளோ, "த்தூ" என்று துப்பிவிட்டு, "என் வயத்துல வளர்ற குழந்தைக்கு உங்க புள்ள தான் அப்பா. இதை நிரூபிக்க டெமோ ஏதாவது காட்ட முடியுமா என்ன?" என்று கடுப்புடன் கேட்டவளை பார்த்து,

"ஹா" என்று வாயை பிளந்தார் அவர்.

"பொண்ணு மாதிரியா பேசுற நீ" என்று கேட்டுக் கொண்டே வரதனின் தந்தை ராஜேந்திரன் முன்னே வர, அவரை ஏற இறங்க பார்த்தவள்,

"இந்த வா போ னு பேசுற வேலையெல்லாம் வேணாம். அப்புறம் நானும் அப்படி தான் பேசுவேன்" என்றாள் திமிராக.

அவள் கூறுவதோ, தன் எதிரே இருப்பவர்கள் அவளை எப்படி நடத்துகிறார்களோ அப்படி தான் தானும் நடந்துக் கொள்வேன் என்பது போல் இருக்க. முகம் சுருங்கி போனது அவருக்கு.

அதுவரை அமைதியாக மணமேடையில் அமர்ந்து இருந்த கலியுகவரதன் சற்றே கோபத்துடன் எழுந்து மங்கையின் அருகில் வந்தவன் அவளை அருவெறுப்பாக பார்த்து, "இங்க பாரு மாயா, உன்னோட இந்த அகங்காரத்தை வேற யார்கிட்டயாவது வச்சிக்கோ. என் குடும்பத்துகிட்டையும் என் கிட்டையும் வச்சிக்காத. ஆமா குழந்தை குழந்தைனு சொல்றியே..." என்று கேட்டுக் கொண்டே அவள் வயிற்றை சுட்டிக் காட்டி, "இதுக்கு நான் தான் காரணம்னு எதை வச்சு டி சொல்ற?" என்று எரிச்சலுடன் கேட்டான்.

"அதுக்கு, நமக்குள்ள நடந்ததை வீடியோவா எடுத்து வச்சிட்டு இருக்க முடியும்..? ஒருவேளை நீ இப்படியெல்லாம் கேட்பனு அன்னிக்கே தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா வீடியோ எடுத்து இருப்பேன்டா" என்று அவனுக்கு சற்றும் சலிக்காத குரலில் எந்த தயக்கமுன்றி பேசுபவளை பார்த்து வெறுத்து போனான் கலியுகவரதன்.

சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்களே என்று கவலையே கொள்ளாமல் பேசுபவளை கண்டு அனைவராலும் "பொண்ணா இது" என்று முணுமுணுக்காமல் இருக்க முடியவில்லை.

அந்நேரம் மணமேடையில் அமர்ந்து இருந்த கீர்த்தனா சட்டென்று மயக்கம் போட்டு விழவும், அனைவரின் கவனமும் அவள் மீது திரும்பியது.

திருமணத்திற்கு வந்து இருந்த மருத்துவர் ஒருவர் கீர்த்தனாவை பரிசோதித்து விட்டு, குரலை சரி செய்துக் கொண்டே தயக்கமாகவே, "கீர்த்தி பிரக்னண்டா இருக்கா" என்று அனைவரின் தலையிலும் மேலும் ஒரு குண்டை தூக்கி போட,

காஞ்சனாவோ ஆவேசமாக கீர்த்தனா அருகில் சென்று, "யார் இதுக்கு காரணம்?" என்று அவளிடம் கேட்க, கீர்த்தனா தலையை குனிந்து கண்ணீரோடு விழிகளை உயர்த்தி, "மாமா தான்" என அங்கே இறுகி போய் நின்று இருந்த கலியுகவரதனை விரல் நீட்டி காட்டினாள்.

இதை கேட்டு மேலும் அனைவருக்கும் பேரதிர்ச்சி ...

சிலர் "மாப்பிள்ளை ஒரே கல்லுல இரண்டு மாங்கா அடிச்சிட்டார்" என்று கூற,

மேலும் சிலரோ, "மாப்பிள்ளை ஜகஜால கில்லாடி தான்" என்றனர்.


ஒரு சிறிய விஷயத்தையே ஊதி எப்படி பெரியதாக்க வேண்டும் என்று தெரிந்த நம் மக்களுக்கு... இத்தனை பெரிய செய்தியை எவ்வாறு பூகம்பம் போல் வெடித்து சிதற விட வேண்டும் என்று சொல்லியா கொடுக்க வேண்டும். இதில் எல்லாம் அவர்கள் கை தேர்ந்தவர்கள் ஆயிற்றே..!


முதல் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன் பேபிஸ்... படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்துகளை கூறி...

என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்துங்கள்.

கருத்து லிங்க்

Thread '(VVA) கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/vva-கருத்து-திரி.26/
Adeii ennada natakkuthu Inga....keerthana orginal karpam....appo Maya ean poi sollanum.... interesting epi❤️💖 waiting for your next epi sis💖💖💖
 
அத்தியாயம்- 2

ஊராரின் வாயை அடைக்க முடியவில்லை என்றாலும் மிகவும் சிரமப்பட்டு வந்தவர்களை வழியனுப்பி விட்டு, வீட்டினர்கள் ஒன்று கூடி இருந்தனர் ராஜேந்திரனின் இல்லத்தில்.

மாயாவும் அவர்கள் வீட்டில் தான் கால் மேல் கால் போட்டுக் கொண்டு திமிராக அமர்ந்து இருந்தாள்.

அவளை வெறுப்பாக பார்த்தவர் அழுது அழுது முகமெல்லாம் வீங்கி போய் இருந்த கீர்த்தனாவிடம் பல கேள்விகளை வீசினார்கள்.

அவள் எதற்கும் பதிலளிக்கவில்லை. அனைத்துக்குமே கலியுகவரதன் தான் பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.

"ஏன்டி இப்படி பண்ண? குடும்ப மானத்தையே வாங்கிட்டியே" என்று அவளை திட்ட ஆரம்பிக்க.

"அவளை ஏன் திட்டுறீங்க? எதுவா இருந்தாலும் என்னை கேளுங்க. இதுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு என்னுடையது" என்று கீர்த்தனாவை இவர்களின் பேச்சுகளிலிருந்து காப்பாற்ற போராடினான்.

அதை பார்த்துக் கொண்டு இருந்த மாயாவின் மனமோ ஏளனமாக 'ஓ சப்போர்ட்டா!' என்றது.

கலியுகவரதனின் சித்தி மரகதம் கீர்த்தனாவின் அருகில் சென்றவர் மெல்ல அவளின் புடவையை விலக்கி வயிற்றை தொட்டு பார்த்தார்.

அவர் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து, "அப்போ இது நிஜமாவே குழந்தை தானா? ஏன்டி இத்தனை நாளா, எத்தனை வாட்டி கேட்டு இருப்பேன் என்னவோ தொப்பை போட்ட போல இருக்குனு..? அப்போ எல்லாம் ஆமானு தலையை ஆட்டிட்டு இப்போ புள்ளையினு சொல்லிட்டு வந்து நிக்கிற? சரியான அமுக்குனிடி நீ" என்று அவளை திட்ட,

காஞ்சனாவோ, "அம்மா அப்பா இல்லாத பொண்ணு... உன் அப்பாவோட சொந்தங்காரங்க கொடுமை படுத்துறாங்கனு பதினைந்து வயசுல இந்த வீட்டுக்கு அடைக்கலம் தேடி வந்த. சரி நாங்களும் இந்த இவங்களோட தங்கச்சி பொண்ணாச்சேனு உன்னை பார்த்து வளர்த்து விட்டா... இப்படி வயித்துல சுமையை தள்ளிட்டு வந்து இருக்க. சும்மாவா சொன்னாங்க ஊமை ஊரை கெடுக்கும்னு. ரொம்ப அமைதியான பொண்ணுனு நினைச்சா. இப்படி ஆம்பள சுகத்துக்கு" என தன் தாயை அதற்கு மேல் பேச விடாமல்

"அம்மா" என்று கத்தியே விட்டான் வரதன்.

"என்னடா அம்மா? என்ன காரியம் பண்ணி இருக்க? உன் அண்ணன் இளங்கோ பிறந்த அதே வயித்துல தானே நீயும் பிறந்த. அவனுக்கு ஈடாகுவியா நீ? பொண்ணுங்களை தலைநிமிர்ந்து கூட பார்க்க மாட்டான். அவனோட ஒரு நல்ல குணமாவது உன்கிட்ட இருக்கா? இப்படியா வீட்ல இருந்த வயசு பொண்ணு கிட்ட தப்பா நடந்து இருப்ப? இந்த கன்றாவி கூத்து எல்லாம் என் மூத்த புள்ளைக்கு தெரிஞ்சுது தம்பினு கூட பார்க்காம வெட்டி போட்டுடுவான் உன்னை. நல்லவேளை அவனுக்கு லீவ் எதுவும் கிடைக்கல" என்று தன் மூத்தப்பிள்ளையை தலைக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டு பேசினார் காஞ்சனா.

தன் அத்தையின் வார்த்தைகளை கேட்டு துடித்து போய் விட்டாள் பெண்ணவள். விழியில் உறைந்த கண்ணீரோடு அவரை எறிட்டு பார்த்தவள் அழுதுக் கொண்டே அவள் அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொள்ள, பயம் தொற்றிக் கொண்டது வரதனுக்கு மட்டுமில்லை அனைவருக்கும்.

ராஜேந்திரனோ தன் மனைவியை கடிந்து விட்டு, அவர் தம்பி மூர்த்தியிடம், "டேய், அந்த பக்கம் ஜன்னல் கிட்ட போய் திறக்குதா பாருடா. இவ ஏதாவது பண்ணிக்கிட்டு செத்து போய்ட்டா நம்ம தான் கொடுமை பண்ணி சாகடிச்சிட்டோம்னு சொல்லுங்க. இதுல இந்த பையன் வேறு அவளை கெடுத்து புள்ளைய கொடுத்து இருக்கான். வேற சாட்சியே தேவையில்லை" என்று தம்பியை விரட்டினார்.

"சரிண்ணா" என்று அண்ணனின் பேச்சை என்றும் தட்டாத தம்பியாக மூர்த்தி வெளியேச் சென்று அந்த அறையின் ஜன்னல் கதவை தள்ள... அது சுலபமாக திறந்துக் கொண்டது.

"அண்ணா ஜன்னல் திறந்துடுச்சி" என மூர்த்தி வெளியே இருந்தபடி கத்தி கூப்பிடவும் அனைவரும் வெளியே ஓடினர்.

வரதனோ, "கீர்த்திம்மா... எதுவும் தப்பான முடிவு எடுத்திடாதடா. எதுவா இருந்தாலும் மாமா நான் இருக்கேன். கதவை திறடா" என்று கெஞ்சிக் கொண்டு அறையினுள் எட்டி பார்த்தான்.

கீர்த்தனாவோ தன் தாய் தந்தையின் புகைப்படத்திற்கு முன் அமர்ந்து கதறிக் கொண்டு இருந்தாள்.

"என்னை மட்டும் ஏன்ம்மா விட்டு போன?" என்ற சொற்களை மட்டுமே அவள் உதிர்த்துக் கொண்டு இருக்க... அப்பொழுது தான் கலியுகவரதனிற்கு மூச்சே வந்தது.

மற்றவர்கள் அவள் அழுவதை வெறுமென பார்த்து விட்டு மீண்டும் உள்ளேச் செல்ல கலியுகவரதனும் உள்ளே வந்தான்.

வந்தவர்களின் பார்வை, அங்கே எந்த பதற்றமும் பயமும் இல்லாமல் முன்பு அமர்ந்து இருந்தது போல் அமர்ந்து இருந்த மாயாவின் மீது படிந்தது. சின்ன வித்தியாசம் என்னவெனில் கைப்பேசியை நோண்டிக் கொண்டு இருந்தாள்.

மரகதம் அங்கே என்ன நடந்துக் கொண்டு இருக்கிறது என்று ஆர்வத்துடன் பார்த்து இருந்த பதினெட்டு வயது நிரம்பிய அவர் ஒரே மகள் லாவண்யாவின் தலையில் ஒரு கொட்டு வைத்து, "உனக்கு என்ன இங்கே வேலை? உள்ளே போடி" என்று விரட்டி அனுப்பினார்.

அவளோ தலையை தேய்த்துக் கொண்டு, 'ச்சே என்னனு தெரிஞ்சுக்க விடாம இப்படி துரத்துறாங்களே' என்று சலித்துக் கொண்டாள்.

ராஜேந்திரன் முதலில் இவளை அனுப்ப வேண்டும் என்று எண்ணியவர், "இங்க பாரு நீ" என பேச வந்தவரை சட்டென்று கைப்பேசியிலிருந்த பார்வையை விலக்கி அவரை அழுத்தமாக பார்க்க அவரோ குரலை செறுமிக் கொண்டு, "இங்க பாருங்கம்மா. நீங்க யாரு? ஏன் இப்படி கல்யாண வீட்ல வந்து கலாட்டா பண்றீங்க?" என்று கேட்டவரை அனைவரும் ஒரு மார்க்கமாக பார்த்து வைக்க.

மாயாவோ, "ம் குட்... இப்படி தான் மாமனாரே மரியாதை கொடுத்து பேசணும். இல்லனா நம்ம குடும்பத்துக்கு மரியாதை கொடுத்து பேச தெரியாதுனு சொல்லிடுவாங்க" என்றவள் தன் கைப்பேசியை அணைத்து டீபாயின் மீது வைத்து விட்டு தன் இருக்கரத்தையும் கட்டிக் கொண்டு, "நான் மாயா" என்று கூற வந்தவள் அவர் நின்று இருப்பதை பார்த்து, "பரவாயில்ல என் முன்னாடி உட்காரலாம். இதுக்கெல்லாம் நான் எதுவும் சொல்ல மாட்டேன். போதாததுக்கு வயசானவரு வேற நீங்க. ரொம்ப நேரம் நின்னுட்டு இருந்தா மூட்டு வலி வந்திடும்" என்று சொல்லி அவரை அமர சொல்ல,

அவரோ, "இது என் வீடும்மா. நீங்க சொல்லணும்ன்ற அவசியமில்லை" என்றவர் மகனை முறைத்து பார்த்தார்.

அவனோ யாரோ யார் வீட்லயோ உட்கார்ந்து பேசிட்டு இருப்பது போல, தூண் மீது சாய்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு மாயாவின் மீது அத்தனை கோபங்கள்.

அவனை தேடி வர மாட்டேன் என்று சொன்னவள், இன்று அவனுக்கு திருமணம் என்று தெரிந்தும் வேண்டுமென்றே பழி தீர்ப்பது போல் வந்து நின்றது கலியுகவரதனிற்கு வெறுப்பாக இருந்தது. இப்படி அவனின் மொத்த திட்டத்தையும் கெடுத்து விட்டாள் என்று வேறு கோபம் அவனின் பொறுமையை சோதித்துக் கொண்டு இருந்தது.

ராஜேந்திரன் நாற்காலியில் அமர்ந்ததும் தான் சங்கடமாக உணர்ந்தார். தான் அமர்ந்தும் அவள் இன்னும் சரியாக அமராமல் சிறிதும் மரியாதை இல்லாமல் கால் மீது கால் போட்டுக் கொண்டே அமர்ந்து இருப்பது அவரை அவமானப்படுத்துவது போல் உணர்ந்தவர் இதற்கும் மகனை முறைத்து பார்த்தார்.

அவரின் பார்வையோ, 'என்ன மாதிரியான பிசாசை பிடிச்சி வந்து இருக்க' என்பது போல் தான் இருந்தது.

அவர் முன்பு சொடுக்கு போட்ட மாயா மீண்டும் ராஜேந்திரனின் கவனத்தை தன் புறம் திருப்பினாள்.

மற்றவர்களுக்கோ மாயாவின் செயல் எரிச்சலை கொடுக்க அவள் என்ன கூற வருகிறாள் என்று கேட்பதற்கு அமைதியாக இருந்தனர்.

"நான் மாயா... உங்க புள்ளையோட கம்பெனில தான் ஒர்க் பண்றேன். அப்போ தான் எங்களுக்குள்ள பழக்கம் ஏற்பட்டுச்சு. இப்போ இந்த வீட்டோட வாரிசை சுமந்துட்டு இருக்கேன்" என்று சுருக்கமாக சொன்னவளை "ஆ" என வாயை பிளந்தபடி பார்த்தனர்.

அவளோ, "ஏன் கதை புரியலையா? இன்னும் விளக்கமா சொல்லணுமா?" என்று அவர்களை பார்த்துக் கேட்க,

"இல்லை வேணாம். இது கேட்கவே கன்றாவியா இருக்கு. ஆமா இது எங்க வீட்டு வாரிசுனு எப்படிம்மா சொல்றீங்க? என் பையன் கொஞ்சம் அப்படி இப்படி தான். ஆனா இப்படி ஒரு பொண்ணை ஏமாத்த எல்லாம் மாட்டான்" என்றார் காஞ்சனா.

"ஏன் இந்த வீட்டு பொண்ணையே ஏமாத்தலையா உங்க தங்கபுள்ளை?" என நக்கலாக கேட்டாள்.

அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

அப்பொழுது, "சரிம்மா இப்போ நீங்க கிளம்புங்க நாங்க எங்க புள்ளை கிட்ட பேசி என்னனு சொல்றோம்" என அவளை அங்கே இருந்து விரட்டி விட அவர் நினைக்க.

"நான் ஏன் போக வேண்டும்?" என்று அதிகாரமாக கேட்டாள் மாயா.

"ஏன் போகணும்னா... இது என்னம்மா கேள்வி? பின்னே இங்கேயேவா இருக்க போற? பார்க்கிறவங்க தப்பா பேசுவாங்கம்மா அசிங்கமா இருக்கும்" என்றவரை நேருக்கு நேர் பார்த்து,

"என்னை தொட்டு என் வயித்துல புள்ளைய கொடுத்த உங்க புள்ளையே அசிங்கம் இல்லாமல் வெளியே நடமாடும் போது, உங்க புள்ளையை நம்பி ஏமாந்து இந்த வீட்டோட வாரிசை துணிவோடு சுமந்துட்டு இருக்க நான் ஏன் அசிங்கப்படணும்?" என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டாள் மாயா.

அவளின் இந்த பேச்சு மற்றவர்களுக்கு நாராசமாக இருக்க, மரகதம் இடை புகுந்து, "ஏம்மா சும்மா சும்மா வாரிசுனு சொல்லிட்டு இருக்காத. அதான் ஒரு வாட்டி சொல்லிட்டல்ல. எங்களுக்கு ஒன்னும் மறந்து போற வியாதி இல்ல. வார்த்தைக்கு வார்த்தை உங்க வீட்டு வாரிசு உங்க வீட்டு வாரிசுனு சொல்லிட்டு இருக்க. என்ன உரிமை போர் நாட்டுறியா நீ" ஒரு ஆதங்கத்தில் அவர் பேசி விட, மற்றவர்கள் அவரை 'உனக்குள்ள இவ்வளவு துணிச்சலா?' என்று பார்த்தனர் வரதன் உட்பட.

சும்மாவே அந்த ஆட்டம் ஆடுபவள் இப்பொழுது கேட்க வேண்டுமா என்ன?

மரகதத்தை நிமிர்ந்து பார்த்த மாயா "நீ" என்று தன் ஆள்காட்டி விரலை நெற்றி பொட்டை தட்டி யோசிப்பது போல் பாவனை செய்ய,

அவரோ, "நான் கலி பையனோட சித்தி. இந்த வீட்டோட இரண்டாவது மருமகள்" என்று தன்னை தானே பெருமையாக சொல்லிக் கொண்டார்.

"ஹான் சட்டி... ச்சீ சித்தி, ஆமா நீ தானே இந்த வீட்ல இருக்கிற பாதி பொருட்களை திருட்டு தனமா உங்க வீட்டுக்கு பார்சல் பண்ணி அனுப்பி விடுறது" என்று சந்தேகத்துடன் கேட்டவள் வரதன் புறம் திரும்பி, "இவ தானே கலிபையா?" என்று தெரியாதது போல் முகத்தை வைத்து கேட்டாள்.

கலியுகவரதனோ, 'சரி ஆரம்பிச்சிட்டா' என்று நினைத்தான்.

அனைவரும் அதிர்ந்து அவரை சட்டென்று திரும்பி பார்க்க அவரோ, "இல்ல அது நான் இல்ல. இவ பொய் சொல்றா" என்று பதற்றத்துடன் தலை ஆட்டினார்.

மாயாவோ, "நான் ஏன் பொய் சொல்லணும்? எப்படி ஒருத்தர் கிட்ட அறிமுகம் படுத்திக்கணும் கூட தெரியாத நீ தான் பொய் சொல்ற. கலிபையனோட சித்தியாம் சித்தி. அதெப்படி வரும் இன்னும் பத்து மாசத்துல எனக்கு குழந்தை பிறந்தா, அப்போ நீ கலிபையனோட பாட்டி தானே சொல்லணும். இதுல இருந்தே தெரியல யார் பொய் சொல்றாங்கனு" அவருக்கு மெதுவாக பாடம் எடுக்க.

"அதானே, இந்த புள்ளை சொல்றது சரி. அதெப்படி நீ தப்பு தப்பா சொல்லலாம். அப்போ நீ தான் நம்ம வீட்டோட மளிகை பொருள் எல்லாம் பேக் பண்ணி உன் வீட்டுக்கு கொடுத்து அனுப்பிட்டு இருக்கியா?" என்று காஞ்சனா சண்டைக்கு கிளம்ப.

வரதனின் மனமோ, 'ஏதே தப்பா அறிமுகப்படுத்திக்கிட்டா பொய் சொல்றவங்களா ஆகிடுவாங்களா? இந்த அம்மாவும் அதை புரிஞ்சுக்காம குதிக்க ஆரம்பிச்சிட்டாங்க' என்று சலிப்பாக தலையை ஆட்டிக் கொண்டான்.

மரகதமோ அவசரமாக, "அய்யோ அக்கா இல்ல. இந்த பொண்ணு பொய் சொல்லுது. நம்ம குடும்பத்துக்குள்ள சண்டையை மூட்டி விடுது. பாருங்க வயசுல பெரியவங்கனு கூட இல்லாம வா போ பேசுறா. மாமா முன்னாடி திமிரா உட்கார்ந்துட்டு இருக்கா. இதோ பாருங்க இப்போ கூட என்னை பார்த்து நக்கலா சிரிக்கிறா" என்று திணறிக் கொண்டு இருக்க.

மாயாவோ மேலும் நன்றாக சாய்ந்து அமர்ந்தவள் உதட்டில் வன்ம புன்னகை.

வந்த முதல் நாளே குடும்பத்திற்குள் கொளுத்தி போட்டதை எண்ணி திருப்தியடைந்துக் கொண்டாள் மாயா.


Thread '(VVA) கருத்து திரி'
https://pmtamilnovels.com/index.php?threads/vva-கருத்து-திரி.26/
 
Last edited:
அத்தியாயம்- 3

ராஜேந்திரன் தலையை ஒரு கரத்தால் தாங்கியபடி நாற்காலியில் அமர்ந்து இருக்க, மூர்த்தியோ சற்று தள்ளி தூணின் பின்னால் பாதி உடலை ஒளித்து வைத்து தலையை மட்டும் வெளியே தெரியும்படி நின்று இருக்க...

கலியுகவரதன் அங்கே இருந்து அமைதியாக சமையலறைக்குச் சென்றவன் கீர்த்தனாவிற்கு ஒரு டம்ளர் பாலை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குள் புகுந்து விட, அதை கண்டும் காணாமல் நடக்கும் சண்டையை சுவாரஸ்யமாக தன் அலைபேசியில் அவர்கள் அறியாது பதிவு செய்துக் கொண்டு இருந்தாள் மாயா.

பொதுவாக வீட்டில் ஒரு மருமகள் மாமியார் என்றாலே சண்டைகளுக்கு அங்கு பஞ்சம் இருக்காது. இங்கேயோ மாமியார் இல்லை என்றாலும் அதற்கு ஈடாக இரு மருமகள்கள் முட்டிக் கொண்டு இருந்தனர்.

இரு பெண்களும் வாக்குவாதத்தில் இறங்கி இருக்க... அங்கே பிரச்சனை வெடித்து சிதற ஆரம்பித்தது.

"இப்படி திருட்டு பொருளில் வாழ்க்கையை நடத்திட்டு இருக்காங்களா உங்க வீட்டு ஆளுங்க" என காஞ்சனா ஆரம்பித்தது தான். அதிலிருந்து பற்றிக் கொண்டது இருபெண்களுக்கும்.

"போதும் வார்த்தையை அளந்து பேசுங்க. என்னவோ அங்கே மட்டும் ஒழுங்கு போல பேசிட்டு இருக்கீங்க" என்று அக்கா என்ற அழைப்பை கத்திரிக்கோல் இல்லாமலே கட் செய்து இருந்தார் மரகதம்.

"என்னடி ஒழுக்கம் இல்லாததை கண்டுட்ட... நான் ஒன்னும் உன்னை போல வாழ வந்த வீட்டுல இருந்து, மளிகை பொருட்களை திருடி கொடுக்கல"

"ஆமா ஆமா அதுக்கு பதிலா தான்... மாசம் மாசம் மாமாவை மயக்கி பணமா வாங்கி அனுப்புறீங்களே" என்று மரகதம் கோபத்துடன் சீற,

"என் புருஷனை நான் மயக்குவேன் மயக்காம போவேன். அதை கேட்க நீ யாருடி..? உனக்கு வேணா உன் புருஷனை மயக்கிக்கோ" என அவரும் கத்த,

"அதானே" என்று நடுவில் மாயா ஏத்தி விட்டாள்.

மூர்த்தியோ 'என்ன இவங்க சண்டையில நமக்கு மரியாதை குறைஞ்சிட்டு போகுது' என்று உள்ளுக்குள் நினைத்தவர் மறந்தும் வாயை திறக்கவில்லை.

அப்படி திறந்தால் சண்டை அவர் பக்கம் திரும்பி விடும் என்று முன் அனுபவமா இருக்கும்.

"ஏய், நீ சும்மா இரு" என்று மரகதம் மாயாவை அடக்கி விட்டு, "என் புருஷன் ஒன்னும் உன் புருஷன் மாதிரி மயங்கி போறவரு இல்லை. கம்பீரமான சிங்கம்" என அவரை முன்னுக்கு இழுத்து முதுகை தட்டிச் சொல்ல,

'ஏதே சிங்கமா? நானா?' என்று நினைத்தவருக்கு சற்று ஆறுதலாக இருந்தது அவரின் அண்ணனிற்கும் மரியாதை குறைந்து வருவதை கண்டு.

'அப்பாடா இப்போ தான் நிம்மதியாக இருக்கு' என உள்ளுக்குள் மகிழ்ந்து போனார் அவர்.

ராஜேந்திரனோ, 'என்ன இதுங்க சங்கதி கேப்பில் நம்மளை மரியாதை இல்லாம பேசுதுங்க' என்று நினைத்தவர், 'இதற்கு மேல் விட்டால் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மரியாதையும் போய் விடும்' என்று, "போதும் நிறுத்துங்க" என கத்தினார்.

அவரின் குரலுக்கு இருபெண்களும் சற்று அமைதி அடைந்தாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்று இருந்தனர்.

"நம்ம குடும்ப சண்டையை அப்புறம் வச்சிக்கலாம். இப்போ வந்து இருக்கிற வேண்டாத விருந்தாளியை வெளியே அனுப்புற வழியை பார்ப்போமா?" என்று கோபத்தை கட்டுப்படுத்தியபடி கேட்டார்.

அவருக்கோ பிரச்சனை மேல் பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டு போவது ஆத்திரத்தை கொடுத்து இருக்க... இன்னொரு பக்கமோ மரகதத்தின் திருட்டு தெரியவும் கடுப்பாகி தான் போனார்.

'யார் வீட்டு பொருளை யாருக்கு தூக்கி கொடுப்பது' என்று உள்ளுக்குள் கறுவியவர் மரகதத்தை முறைத்து பார்த்து விட்டு தன் தம்பியையும் முறைத்தார்.

அவரோ, "அய்யோ அண்ணா எனக்கு எதுவும் தெரியாது" என்று உடனடியாக மறுத்தார்.

அச்சமயம் மாயாவோ வீடியோவை நிறுத்தி விட்டு, "நான் வேண்டாத விருந்தாளி இல்ல மாமனாரே. இந்த வீட்டோட வாரி..." என்று பேச வந்தவளை இடைமறித்து,

"என்ன, வாரிசை சுமந்துட்டு இருக்கிற பொண்ணு அதானே?" என்று கேட்டார் மரகதம்.

"அட அதே தான். கப்புனு பிடிச்சுக்கிட்டிங்க" என்று அவரை பாராட்டிய மாயா தன் கைப்பையிலிருந்து இரண்டு கட்டு நோட்டுகளை எடுத்து மேசையின் மீது எறிந்தவள், "இது நான் இங்க தங்குறதுக்கான பணம். இரண்டு லட்சம் இருக்கும் நினைக்கிறேன்" என்று சொல்லி அங்கே பணத்தை வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருந்த காஞ்சனாவை ஒரு கணம் பார்த்து விட்டு ராஜேந்திரனை நோக்கினாள்.

பணம் என்றால் பத்தும் செய்யும் என்று சும்மாவா சொன்னார்கள்.

இரண்டு லட்சம் என்றதும் ராஜேந்திரனும் சற்று தடுமாறினார். ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் குரலை செறுமியவர்,

"என்னம்மா பணம் கொடுத்து எங்களை வாங்க பார்க்குறியா? நாங்க பெரிய பணக்காரங்களா இல்லாமல் இருக்கலாம். ஆனால் வசதி வாய்ப்புக்கும் பணத்துக்கும் எங்களுக்கு பஞ்சமில்லை" என்று அவர் கூறி முடிப்பதற்குள் மாயா அடுத்து மூன்று கட்டு நோட்டுகளை தூக்கி போட,

அவர் பேச வந்த வார்த்தை தொண்டையிலே சிக்கிக் கொண்டது.

"ஐந்து லட்சமா?" என்று மரகதம் மேலும் வாயை பிளக்க.

அவசரமாக பணத்தின் அருகில் சென்ற காஞ்சனா அதை எடுத்து தன் முந்தானையில் மறைத்துக் கொண்டு,

"என் மருமகளை பார்த்து கண்ணை வைக்காதடி" என்று மரகதத்தை பார்த்து கூறினார்.

காலையில் அவர் கூறிய அதே வார்த்தைகள்... ஆனால் என்ன அந்த வார்த்தைகளுக்கு சொந்தமான உயிர் தான் வேறு.

அதை கேட்ட மாயாவோ நக்கலாக சிரித்தாள்.

மரகதமோ, "ஏது மருமகளா? பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும்னு சும்மாவா சொன்னாங்க" என்று கழுத்தை நெடித்துக் கொண்டவர்,

"அப்போ இனிமேல் இவ இங்க தான் இருக்க போறாளா? இந்த அசிங்கம் எங்கேயாவது நடக்குமா? ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே துப்பு இல்லையாம்... ஆனா அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம். அது போல இருக்கு. இங்க நடக்கிற கூத்து" என்று குத்தலாக பேசியவர் கணவரிடம் திரும்பி,

"ஏன்யா இன்னும் இங்கேயே நிக்குற. அதான் பணத்தை பார்த்ததும் அவங்க கட்சி மாறிட்டாங்களே. உள்ளே போவோம் வா" என்று அவர் உள்ளேச் செல்ல, மனைவின் பின்னால் மூர்த்தியும் சென்றார்.

ராஜேந்திரன் தன் மனைவியை பார்த்து, "என்ன காஞ்சனா பண்ணிட்டு இருக்க? யாரை கேட்டு நீ அந்த பணத்தை எடுத்த? இருக்கிற குழப்பம் போதாதா?" என்று கண்டிப்புடன் சொன்னவர் மனைவியிடமிருந்து பணத்தை பிடிங்கி மீண்டும் மேசையில் வைத்து,

"இங்க பாருங்கம்மா, நீங்க இங்க தங்குறது எல்லாம் சரிப்பட்டு வராது. வெளி உலகத்திற்கு தெரிஞ்சா எங்களுக்கு தான் அசிங்கம். நீங்க கிளம்புங்க, நான் என்ன ஏதுனு என் புள்ளை கிட்ட விசாரிச்சிட்டு சொல்றேன்" என்று பேசினாலும் அவர் கண்கள் அந்த பணத்தில் தான் அடிக்கடி படிந்து மீண்டது.

அதை கவனித்த மாயாவோ, "இங்க பாருங்க அங்கிள் நான் ஒன்னும் இல்லாத வீட்ல இருந்து வந்த பொண்ணில்லை. எனக்குனு நாலு வீடு, ஐம்பது ஏக்கர் நிலம், இரண்டு ஹோட்டல், நாலு காம்ப்ளக்ஸ் இருக்கு. அப்புறம் முக்கியமா இரண்டு பிளைட்டை கவர்மெண்டுக்கு லீசுக்கு வேற கொடுத்து இருக்கோம்..." என்று அவள் சொல்ல சொல்ல, காஞ்சனா வாய் பெரியதாகிக் கொண்டே போனது.

ராஜேந்திரன் கூட ஒரு கட்டத்தில், "ஐம்பது ஏக்கரா? பிளைட்டா!" என்று ஆச்சர்யமாக கேட்டு விட்டார்.

"ம்... ஆமா அங்கிள் நீங்க வேண்டுமென்றால் வரதா கிட்ட கேட்டு பாருங்க" என்று மாயா கூற,

அவரோ சிறிது யோசனையோடு, "இவ்வளவு சொத்து இருக்கும் போது எதுக்கும்மா அந்த ஓடாத கம்பெனி வேலைக்கு போயிட்டு இருக்க?" என்று அறிவோடு கேட்டார்.

அவளோ, "சும்மா டைம் பாஸுக்கு அங்கிள். அப்புறம் உங்க புள்ளைக்காக போக ஆரம்பிச்சேன்" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவள், "ரொம்ப டயர்டா இருக்கு" என சொல்லி முடிப்பதற்குள்,

"என்னங்க நீங்க புள்ளத்தாச்சி பொண்ணை இவ்ளோ நேரம் உட்கார வச்சி பேசிட்டு இருக்கீங்க. பாவம் நம்ம மருமகளுக்கு சோர்வாகாதா?" என்று கணவனை அர்த்தமுள்ள ஒரு பார்வை பார்த்து விட்டு மாயாவின் கரத்தை பிடித்து அலுங்காமல் தூக்கி நிறுத்தி வைத்தவர்,

"நீ வாம்மா" என சொன்னவரை திரும்பி பார்க்க...

அவரோ "ஈஈஈ" என்று சிரித்து விட்டு, "நீங்க" இழுவையாக சொன்னவர், "நீங்க வாங்கமா நான் உங்க ரூமை காட்டுறேன்" என்று கையில் ஏந்திக் கொண்டு போகாத குறையாக பார்த்து பத்திரமாக அழைத்துச் சென்றார்.

மாயாவோ, 'முட்டாளுங்க என்ன சொன்னாலும் நம்புதுங்க' என்று வெறுப்பாக நினைத்தாள்.

ராஜேந்திரனோ, 'புள்ளை பிடிச்சாலும் புளிய கொம்பை தான் பிடிச்சி இருக்கான்' என்று மகனை நினைத்து பெருமைப்பட்டார்.

அங்கே அறையில், "கீர்த்திம்மா கொஞ்சமாச்சி பாலை குடிடா. உனக்காக இல்லையினாலும் பாப்பாவுக்காக குடிடா" என்று வெகு நேரமாக ஒரு டம்ளர் பாலை குடிக்க வைக்க கீர்த்தனாவிடம் போராடிக் கொண்டு இருந்தான் கலியுகவரதன்.

அவளோ, "இல்ல மாமா எனக்கு எதுவும் வேணாம்" என்று கண்ணீரோடே கூறினாள்.

அவனோ பொறுமையாக, "இங்க பாரும்மா... அம்மா, சித்தி பேசினதை எல்லாம் பெருசா எடுத்துக்காத. அவங்க அப்படி தான்னு உனக்கு நல்லாவே தெரியும் தானே. நீ ஏன் அவங்களை பத்தி கவலைப்படுற..? உனக்காக நான் இங்க கவலையோடு இருக்கேன். அது உன் கண்ணுக்கு தெரியலயா கீர்த்திம்மா?" என்று பாசமாக பேசியவனை கலங்கி போய் பார்த்தாள் கீர்த்தனா.

"மாமா" என அவள் பேச வர,

"முதல இந்த பாலை குடி. நானும் இன்னும் எதுவும் சாப்பிடல கீர்த்திம்மா" என்று அவன் கூறிய அடுத்த நொடி டம்ளரை வாங்கி பாலை குடிக்க ஆரம்பித்தாள்.

அதை மென்புன்னகையாக பார்த்தவன் அவள் தலையை வருடிக் கொடுத்து, "எதை பத்தியும் யோசிக்காம ரெஸ்ட் எடுடா. எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்" என்று ஆறுதலாக பேசினான் வரதன்.

அவளோ அவனை நேராக பார்த்து, "மாமா, அந்த பொண்ணு" என்று கேட்க வந்தவள் தயங்க,

அவனோ பெருமூச்சுடன், "ம்... தெரியும். மாயா என் கம்பெனில தான் ஓர்க் பண்றா" என்று சொன்னான்.

தலையை தாழ்த்திக் கொண்டு, "அவங்க கர்ப்பமா இருக்காங்கனு சொன்னாங்களே" என்று ஓர விழியால் கலியுகவரதனை பார்த்து கேட்டாள் கீர்த்தனா.

"ம்... அதை பத்தி நீ கவலைப்படாதடா. நான் பார்த்துக்கிறேன். இதையெல்லாம் போட்டு குழப்பிக்காம அமைதியா இரும்மா. மாமா கண்டிப்பா உன் கழுத்துல தான் தாலி கட்டுவேன்" என்று உறுதியாக சொன்னவனை நிமிர்ந்து பார்த்து,

"அப்போ அவங்க" என்று கேட்டாள்.

அவனோ, "அதை நான் பார்த்துக்கிறேன்" என்று சொன்னவன் கீர்த்தனாவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்தவனின் மனமோ மாயாவை வெறுப்புடன் நினைத்தது.

மாயாவும் அவளுக்கு கொடுக்கப்பட்ட அறையின் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தவளின் எண்ணங்களும் கலியுகவரதனை சுற்றி தான் இருந்தது.


டியர் ரீடர்ஸ் மறக்காம கமெண்ட் பண்ணுங்க.?
Thread '(VVA) கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/vva-கருத்து-திரி.26/
 
Last edited:
Status
Not open for further replies.
Top