வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

விதி விலக்காய் ஒரு காதல் - கதை திரி

Status
Not open for further replies.

அத்தியாயம் 01​

பல வருடங்கள் கழித்து அவள் செப்பு இதழ்களில் புன்னகையின் சாயல், எப்போதும் அழுத்தம் நிறைந்த விழிகளில் இன்று ஆனந்த கண்ணீர், அவளுடைய கண்கள் இரட்டை கோடுகளை தாங்கி நின்ற கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க, கைகளோ தானாக அவளது மணிவயிற்றை வருடியது.​

உதடுகளோ "மனு ஓய தெங் தாத்தா கெனெக் (மனு நீ அப்பாவாகிட்ட) " என்று காதலுடன் முணுமுணுக்க,​

கண்களோ விரக்தியுடன் அவள் உருவத்தை ஒரு கணம் நோக்கியது. சந்தோஷத்துடன் மென்னகை பூத்த இதழ்களோ ஏளனத்துடன் கூடிய விரக்தி புன்னகையை சிந்தியது நிறைவேறா காதலையெண்ணி, அவள் குயிலி பெர்னாண்டஸ் இல்லை இல்லை குயிலி ரிச்சர்ட் மாணிக்கம் தி பெர்னாண்டஸ் இன்று முதல் அவளை அப்படி தான் அழைக்க வேண்டும்.​

மாநிறத்துடன் சந்தனம் குழைத்தாற் போல நிறம் கருப்பும் நீலமும் கலந்தாற் போல விழிகள் அதற்கு சற்று மேலே அடர்த்தியான வில் போன்று வளைந்த புருவங்கள், சற்று தடித்த இதழ்கள் முகவடிவுக்கு ஏற்றார் போல் அழகிய நேர்த்தியான நாசி, இடையை தாண்டி வளர்ந்த கூந்தலை 'லேயர் கட்' செய்து சாதாரண கேட்ச் கிளிப் அணிந்திருந்தாள். வெள்ளை நிற குர்த்தாவில் தயாராகியிருந்தவளின் எண்ணத்தை கலைக்கும் விதமாக,​

"துவ! அத உசாவியட யன்ன ஓனே லேஸ்தித ஓயா ? (மகள் இன்னைக்கு கோர்ட்டுக்கு போகணும் தானே நீங்க ரெடியா ?) "​

என்று ஒரு வித சந்தோஷ தொனியில் வினவினார் மானெல், அதனை தொடர்ந்து தன்னை சமன் செய்த்துக் கொண்ட பெண்ணவளோ,​

"ஹா ஆண்ட்டி மங் என்னம் ( இதோ வாரேன் ஆண்ட்டி) " என்று கூறிக்கொண்டே முக்கியமான சில கோப்புகளையும் அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் உள்ளடக்கிய தோள்ப்பையையும் தோளில் மாட்டியப்படி வேகவேகமாக நீதிமன்றத்துக்கு கிளம்பினாள் குயிலி,​

இதே சமயம் இலங்கையின் பிரபல வழக்கறிஞரான தினேஷ் ஜெயக்கொடியின் அலுவலகத்தில் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான் 'மனு' என குயிலியால் செல்லமாக அழைக்கப்பட்ட மாநந்த ஆர்யவங்க்ஷ,​

ஆளை அசரடிக்கும் ஆஜானுபாகுவான தோற்றம், எதிரிலிருப்பவரின் இதயத்தை கூறுபோடும் கபில நிற விழிகள், கர்வத்துக்கும் அழுத்தத்துக்கும் சான்றாய் அழுத்தமான இதழ்கள், செதுக்கி வைத்த கிரேக்க சிற்பத்துக்கு ஒப்பான கூரிய நாசி திராவிட நிறம் அளவாக நறுக்கிய மீசை தாடி கழுத்தை தாண்டி வளர்ந்த முடியை ஒரு பேண்டில் அடக்கி கொண்டையிட்டிருக்க,​

அவனை நோக்கி வியர்க்க விறுவிறுக்க வேக எட்டுக்களுடன் நடந்து வந்தார் தினேஷ் ஜெயக்கொடி,​

அவரது மனதுக்குள் ஆயிரம் போராட்டம் இன்று கிடைக்கப்போகும் தீர்ப்பு எப்படியும் தங்களுக்கு சாதகமானதாக அமைய போவதில்லை என்பதை உறுதியாக தெரிந்துக் கொண்டவருக்கு மாநந்தவை நினைக்கும் போதே வயிற்றில் புளியை கரைத்தது என்பது தான் நிதர்சனமான உண்மை, (இனி வரும் உரையாடல்கள் தமிழில்) இருந்தும் பயத்தை சற்றும் வெளியே காட்டாமல்,​

"குட் மார்னிங் சார் இன்னைக்கு எப்படியும் தீர்ப்பு நமக்கு சாதகமா வராது நெஞ்சுவலி அப்டி இப்படின்னு ஏதாவது சொல்லி இன்னும் ஒரு ரெண்டு தவணை தள்ளி போட்டுட்டோம்னா ஏதாவது பண்ணி அப்பாவ வெளிய கொண்டு வந்துரலாம் என்ன சொல்றீங்க?"​

என்றதும் ஒரு கணம் அவரை மேலிருந்து கீழ் வரை குரூரமாக நோக்கியவன் உதட்டை கீற்றாக இழுத்து புன்னகை செய்தபடி​

"மார்னிங் மிஸ்டர் ஜெயக்கொடி " அதனை தொடர்ந்து குரலை செறுமியபடி​

"நீங்க சொல்றபடி பார்த்தா இன்னைக்கு எப்படியும் மிஸ்டர் ஆர்யவங்க்ஷவுக்கும் அவரோட கூட்டு சேர்ந்து கொலைபண்ண அத்தனை பேருக்கும் தூக்கு தண்டனை கிடைச்சிருமில்ல?"​

என்றவனது தொனியில் கட்டாயம் கிடைக்க வேண்டுமென்ற அச்சுறுத்தல் பொதிந்திருக்க அவனையே வைத்தக்கண் வாங்காமல் இருவரும் பார்த்திருந்தனர்.​

ஒருவர் தினேஷ் ஜெயக்கொடி என்றால் மற்றொருவர் இவனது பிரத்யேக உதவியாளனான சரத், அவர்கள் இருவரையும் ஆழ்ந்து பார்த்தவன் மீண்டும் இடிஇடியென நகைத்தான்.​

"என்ன நினைக்குறீங்கன்னு விளங்குது ஆனா உனக்கு லட்ச கணக்குல கொட்டி கொடுத்தது வாதாடுறதுக்கு இல்ல வாயமூடிட்டு கோர்ட்ல டம்மியா நிக்கிறதுக்கு தான் இன்னைக்கு ஒரு வார்த்தை உன் வாயிலயிருந்து வரக்கூடாது, நான் கோர்ட்டுக்கு போறேன் நீங்களும் வந்துருங்க "​

என்று ஏற்ற இறக்கத்துடன் கூறிக்கொண்டே தினேஷ் ஜெயக்கொடியின் அருகே வந்தவன் அவர் முன்நெற்றி வியர்வையை அவரது டையை கொண்டே துடைத்து விட்டபடியே​

"நான் சொன்னது நினைவிருக்கட்டும் "​

என்றான் அழுத்தமான குரலில், அதனை தொடர்ந்து ஜெயக்கொடியின் அலுவலகத்திலிருந்து புறப்பட்டவன் தனது நவீன வெண்ணிற புரவியான பென்சை கிளப்ப அவனருகில் அமர்ந்திருந்த சரத்தோ​

"சார்... உங்க அப்.. உங்க அப்பா !?" என்று கேள்வியாக இழுக்க​

அவனது கேள்வியை புரிந்துக் கொண்ட மாநந்தனோ,​

"அந்த ஆள் சாகவேண்டியவன் தான் என்ன கொஞ்சம் லேட்டாகிருச்சு போய் சேரட்டும் " என்றான் விட்டேற்றியாக,​

"சார் இருந்தாலும் நேத்து வந்த பொம்பள ஆஆ... அம்ம்மா "​

என்று தொடங்கியவன் கன்னத்தை பொத்தியபடி அலற மாநந்தனோ அவனது கையை உதறிக் கொண்டே​

"சரத் ஏதோ கேட்டியே ? " என்றான் ஒன்றுமறியா பாவனையில்,​

"இல்ல சார் மேடம்க்காக இவ்ளோ ரிஸ்க் எடுக்குறீங்களே மேடம் உங்க கூட சேர்ந்து வாழுவங்கன்னு நம்புறீங்களானு கேட்க வந்தேன் "​

என்று பணிவான குரலில் வினவ, அதற்கு அவனது ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி உதட்டை வளைத்து ஏளன புன்னகை சிந்தியவனோ,​

"அதுக்காக மட்டுமா ரிஸ்க் எடுக்குறேன்? எங்க அப்பாவோட மினிஸ்டர் பதவி அதுக்காகவும் தான் "​

என்றான் நக்கலாக அவனை புரியாமல் பார்த்த சரத்தோ,​

"பதவிக்காக ஏன் சார் அப்பாவே உங்களுக்கு " என ஆரம்பித்தவனை​

இடைமறித்தவன், "அந்த ஆள் பிச்சை போடுற அஞ்சோ பத்தோ அத பொறுக்கிக்கவா நானிருக்கேன் சாப்பிட்ட முழுசா சாப்பிடணும் இல்லன்னா சாப்பிடவே கூடாது இது தான் என் பாலிசி "​

என்றபடி லாவகமாக வாகனத்தை செலுத்தியவனை குழப்பத்துடன் ஏறிட்டவனோ​

"ஆனா நீங்க அவரோட மகன் தானே ? அப்பறம் எப்டி பதவி ? " என்று குழப்பத்துடன் மென்று விழுங்க,​

"மகனுங்குறது எவ்ளோ உண்மையோ இந்த கேச பின்னாடி இருந்து இவ்ளோ தூரம் மூவ் பண்ணதும் நான் தான்றது அவ்ளோ உண்மை இனி எனக்கு மட்டும் விஸ்வாசமாயிரு நாளைக்கு சாக போறவனுக்கெல்லாம் உண்மையா இருக்காத என்ன புரிஞ்சுதா ?"​

என கர்ஜிக்கும் தொனியில் வினவ சரத்தோ பவ்யமாக,​

"ம்ம் ம்ம் புரியுது சார் " என்று ஆமோதித்தான்.​

அதே சமயம் நீதிமன்ற வளாகத்தினுள் அவனது வாகனம் பிரவேசிக்க அவனது வாகனத்தை புடை சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்விகளை தொடுக்க அவர்களை பார்த்து சிறு சிரிப்பை சிந்தியவன்​

"சட்டம் தன் கடமையை செய்யும்"​

என்று கூறிக்கொண்டே நகர்ந்து விட நீதிமன்றத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் தன் மனதுக்கினியவளை கண்ணால் களவாடியபடியே அமர்ந்து கொண்ட மாநந்தவை தான் குயிலியும் பார்த்திருந்தாள் அவளது பார்வையில் அழுத்தமும் கவலையும் மட்டுமே எஞ்சியிருந்தது.​

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆரம்பமாக இங்கு கொழும்பிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த 'மவுண்ட் லவனியா' கடற்கரை பகுதியில் ஊதா நிறப்புடவையில் கையில் அழகான வெள்ளை நிற ரோஜா பூங்கொத்துடன் அமர்ந்திருந்தாள் நடுத்தர வயது பெண்ணொருத்தி,​

சுருள் முடிகள் முன்நெற்றியை வருடிக்கொண்டு காற்றில் நர்த்தனமாட அவளது கண்களோ கடலையே வெறித்தது பார்த்துக்கொண்டிருந்தது உதட்டிலோ சிறு கீற்றாக நிம்மதி புன்னகை ஒளிர தலையை முட்டியில் புதைத்தபடி ஆழ சுவாசிக்க அவளது தோளை யாரோ வருடும் உணர்வு அவளை சுயத்துக்கு அழைத்து வர,​

“ரிச்சர்ட்” என்றாள் ஏக்கத்துடன், அவளருகே புன்னகையுடன் அமர்ந்த ரிச்சர்ட் பெர்னாண்டசோ,​

“ரொம்ப நேரம் வெயிட் பண்றியா சித்து” என்று அக்கறையாக வினவ,​

“இல்ல ரிச்சி ரொம்ப வருஷமா வெயிட் பண்றேன் உங்கள விட்டு பிரியாம இருக்க” என்றாள் ஏமாற்றத்துடன்,​

அதை கேட்டு பெருமூச்செறிந்த ரிச்சியோ, “ இன்னைக்கு மட்டும் தான் நாளைக்கு நம்ம ரெண்டு பேரையும் யாராலையும் பிரிக்க முடியாது அதுக்கு முன்னாடி நம்ம குயிலியோட வாழ்க்கைய மட்டும் சரி பண்ணிரணும்”​

அவ்வர்த்தையை கிரகித்துக் கொண்ட மனோசித்ராவோ, “ அந்தப் பையன் ரொம்ப நல்லவன் தான் இந்த கேச கூட அவன் தான் இவ்ளோ தூரம் மூவ் பண்ணிருக்கான் போல”​

“ம்ம் ஆமா அப்பாவ வச்சு மகன எடைபோட்ருக்க கூடாது சித்து கொஞ்சம் நல்லவன் தான் நம்ம குயிலிய ரொம்ப காதலிக்கிறான்”​

என்று ரிச்சியும் அவள் கருத்தை ஆமோதிக்க, அவனை ரசித்து பார்த்து கொண்டே அவனருகில் அமர்ந்திருந்த மனோசித்ராவுக்கு மானெல்லிடமிருந்து அழைப்பு வர அதையேற்றவளுக்கு அப்பக்கம் என்ன கூறப்பட்டதோ கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய மூக்கிலிருந்து ரத்தமும் சொட்ட அங்கேயே மயங்கி சரிந்தாள்., அவளது உதடுகளோ,​

"என் புருஷனுக்கு நீதி கிடைச்சிருச்சு எனக்கான அங்கீகாரமும் ஊர் முன்னாடி கிடைச்சிருச்சு"​

என்று காதலுடன் முணுமுணுத்தது.​


தொடரும்....​


*************************************************************************************

வணக்கம் மக்களே நான் தான் உங்க அஸ்திரம் 32 இப்போ தான் பந்தயத்துக்கு வந்துருக்கேன் எப்படியும் ஒரு நாளைக்கு 1 இலிருந்து 2 யூடி கொடுத்துருவேன் எனக்கு நம்பிக்கையிருக்கு என் மேல நம்பிக்கை வச்சு நீங்களும் படிங்க என்னால முடிஞ்சவரைக்கும் எபோர்ட் போட்டு முடிக்கிறேன் உங்க சப்போர்ட்டும் எனக்கு தேவை சோ ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க போட்டி முடியும் வரைக்கும் எல்லா எழுத்தாளர்களுக்கும் உங்க சப்போர்ட்ட கொடுங்க நாளைக்கு சந்திப்போம் மக்களே👋👋👋

 

அத்தியாயம் 02​

கொழும்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த அத்தனை மூத்த பத்திரிகையாளர்கள் முகத்தில் பலவருடங்கள் கழித்து சந்தோஷப் புன்னகை அதிலும் விஸ்வநாதன் கண்களில் ஆனந்த கண்ணீர், குயிலியின் அருகில் அமர்ந்திருந்தவரோ அவளை அணைத்துக் கொண்டு,​

"நீ சாதிச்சுட்ட பிள்ள உன்ர அப்பா மாதிரி சனத்துக்காக உழச்ச எத்தனையோ ரிப்போர்ட்டஸ்க்கான நியாயத்தை வாங்கிக் கொடுத்துட்டா"​

என விம்ம குயிலியின் கண்களிலும் கண்ணீர் கருவிழிகளோ மாநந்தவை தான் நிலைகுத்தி பார்த்திருந்து அந்த விழிகளில் நன்றியுணர்வும் வலியும் கொட்டிக் கிடக்க உதடுகளோ​

"தேங்க்ஸ் மனு" என அவனுக்கு மட்டும் தெரியும் விதமாக முணுமுணுக்க, அவன் கண்களும் யாருமறியாது அவளை பார்த்து மென்னகை புரிந்துக் கொண்டிருக்க,​

மாநந்தவிடம் விரைந்து வந்த சரத்தோ அவனது காதில் எதையோ பரபரப்பாக மொழிய, ஒரு நொடி அதிர்ந்தாலும் பின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் மூளையோ அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டுமென கணக்கிட​

குயிலியினருகே வந்த மாநந்தவோ​

“வா போகலாம்” என அவளுடன் கை கோர்த்தபடி நீதிமன்றத்திலிருந்து வெளியேற முற்பட அவர்களை ஊடகவியலாளர்கள் முற்றுகை இட்டபடி,​

“சார் உங்களுக்கும் மிஸ் ரிச்சர்ட் பெர்னாண்டஸுக்கும் என்ன தொடர்பு?”​

பற்களை நற நறவென கடித்தவனோ,​

“ஷீ இஸ் மை வைப்” என்று கூறியபடி நகர முற்பட​

“சார் நீங்க தான் இந்த கேஸ பின்னாடி இருந்து புல்லா மூவ் பண்ணிங்கனு சொல்றாங்க உண்மையா?”​

என்ன நினைத்தானோ தெரியவில்லை சட்டென முகத்தை நிர்மலமாக வைத்து கொண்டு,​

“சட்டத்திற்கு முன்னால் எல்லாரும் சமம் தான் குற்றவாளிகள் தண்டிக்கபடனும் தண்டிக்கப்பட்டா தான் மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை வரும் அதற்காக எனக்கு முடிஞ்ச பங்களிப்ப நான் செஞ்சிருக்கேன் அவ்ளோ தான்”​

என்றவன் மேற்கொண்டு ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காது குயிலியுடன் இலங்கையின் பிரபல தனியார் மருத்துவமனையான ‘சென்ட்ரல் ஹாஸ்பிடல்’ நோக்கி பயணிக்க,​

குயிலியோ, “மனு நான் நம்ம காதலுக்கு” என மென்று விளங்கியவளை நோக்கி,​

“உண்மையா இருக்கல குயில் நீ ரிச்சர்ட் பெர்னாண்டஸோட மகள இருந்திருக்க என்னோட பொண்டாட்டியா என்னோட சரி பாதியா என்னைக்குமே யோசிக்கல யோசிச்சிருந்தா என்கிட்ட உன்ன பத்தின உண்மைய சொல்லிருப்ப நான் தான் யாரோவாச்சே?”​

என்று வார்த்தைகளை கடித்து துப்ப, அதில் கண்கலங்கி போன பெண்ணவளோ,​

“இல்ல மனு அது வந்து நான்” என்று ஆரம்பிக்க,​

“இங்கே பாரு குயில் உன்ன காயப்படுத்த கூடாதுன்னு நினைக்குறேன் அது உன்ன என்ன நம்ம குழந்தைய எல்லாரயும் பாதிக்கும்”​

என்று தணிந்த குரலில் கூற, அவனை பார்த்து அதிர்வது இப்போது அவளது முறையானது அவனோ,​

“உன்ன பத்தி உன்ன விட எனக்கு நல்லா தெரியும்டி”​

என இறுகிய குரலில் கூற அதற்கு மேல் அவளும் பேசவில்லை அவனும் பேசவில்லை. அரைமணி நேரத்தில் வைத்தியசாலையை வந்தடைய​

அதிர்ச்சியிலும் கவலையிலும் அவ்வளவு நேரம் எங்கே செல்கிறோம் என்ன செய்கிறோமென புரியாமல் இருந்தவள் சற்றே சுதாரித்துக் கொண்டு, பழைய குயிலியாக​

“மனு என்ன ஏன் இங்க கூட்டிட்டு வந்து இருக்க? இன்னும் ரெண்டு நாளுல எனக்கு ஃப்ளைட் நான் பேக் பண்ணணும்”​

சீற முகம் இறுக அவளை பார்த்து இருந்தவனோ,​

“உள்ள வா சொல்றேன்” என்றபடி அழைத்துச் சென்றது என்னவோ அவசர சிகிச்சை பிரிவிற்கு தான் அவசர சிகிச்சை பிரிவிற்கு முன்னால் பதறியபடி நின்ற மானெல்லோ குயிலியிடம்​

“குயிலிம்மா உன் அம்மா.. நம்ம மனோவுக்கு பிரைன்..” என்று ஏதோ கூற வருவதும் தடுமாறுவதுமாக இருக்க,​

குயிலியோ தன்னை கஷ்டப்பட்டு சமன் செய்து கொண்டவள் இறுகிய தொனியில்,​

“என்ன ஆச்சு ஆன்ட்டி அம்மாவுக்கு?”​

“பிரைன் கேன்சர் லாஸ்ட் ஸ்டேஜாம்” என்று வாயை மூடிக் கொண்டு அழ,​

தொப்பென்று அங்கிருந்த கதிரையில் அமர்ந்தவள் முகம் அடிப்பட்ட குழந்தையின் பாவத்தை தத்தெடுக்க,​

ஒரு தடவை ஆழமூச்செடுத்து தன்னை சமன் செய்து கொண்டவள் எப்போதும் தந்தையின் நினைவாக வைத்திருக்கும் ஒலி பதிவு கருவியை காதருகில் வைத்து உயிர்ப்பிக்க அதிலோ அன்பும் பாசமும் பொங்க ஆர்வத்துடன்,​

“பேபிம்மா எப்பவும் தைரியமா இருக்கணும் அப்பா கூட இருந்தாலும் கூட இல்லாட்டியும் அம்மாவ நல்லா பார்த்துக்கணும் சரியா குட்டி”​

என ரிச்சர்ட்டின் குரல் கூறி முடித்த நொடி ஒலி பதிவு கருவியின் செயற்பாட்டை நிறுத்தியவள் கண்களில் கண்ணீர் மட்டும் ஆறாக பெருகி வழிந்தது. அனால் தலையை இடம் வலமாக ஆட்டியவள் உதடுகளோ எதிர்மாறாக கஷ்டப்பட்டு புன்னகை பூத்தது.​

அதனை தொடர்ந்து அங்கு வந்த மருத்துவரிடம் மாநந்த ஏதோ கேட்க முற்பட அவனை தடுத்து நிறுத்தியவள் நடுக்கத்துடன் கம்மியபடி வந்த குரலை கஷ்டப்பட்டு சமன் செய்தவாறே,​

"டாக்டர் இன்னும் எவ்ளோ நாள் என் அம்மா என்கூட இருப்பாங்க ? அதாவது எந்த டிரீட்மென்ட்டும் இல்லாம"​

"அது வந்து எதையும் உறுதியா சொல்ல முடியாது மேம் ஒரு வாரம் தான் தாக்குப்பிடிக்கும் குறைஞ்ச பட்சம் ஆனா நாங்க டாக்டர்ஸா ஒரு உயிர காப்பாத்தத்தான் பார்ப்போம் டிரீட்மென்ட் மூலமா குறைஞ்சது ஒரு மாசமாவது உயிரோட இருப்பாங்க சோ"​

என்று அவர் எதையோ புரியவைக்க முற்பட கையை நீட்டி ஏதும் பேசாதே என்று பாவனை செய்தவள், கண்களில் வழிந்த கண்ணீரை நடுங்கிய கரத்தால் துடைத்தபடி,​

"வேணாம் டாக்டர் எங்கம்மா எங்கப்பாவ ரொம்ப லவ் பண்ணாங்க ஆனா வாழ்க்கையில நடந்த சதியோ இல்ல விதியோ அவங்கள சேர விடல இவ்ளோ நாள் தான் எனக்காக பிடிக்காம இந்த உலகத்துல வாழ்ந்துட்டாங்க,​

என்று கூறியவள் தொண்டையை பெரும் பாரம் அழுத்த அதை விழுங்கிக் கொண்டு,​

இனிமேலாச்சு அவங்க காதல் கதைக்கு அழகான முடிவு கொடுப்போம்"​

என்று நடுக்கத்துடன் கூற அவளை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டான் மாநந்த அவனது மார்பில் குழந்தையென தஞ்சம் ப்புகுந்தவள் விழிகளில் கண்ணீர் பொலபொலவென கொட்ட, அவனது வெண்ணிற சட்டையில் அவளது கண்ணீர் சுவடுகள்,​

சிறிது நேரம் கழித்து அவளை சமாதானம் செய்து அவனது வீட்டிற்கு அழைத்து வந்த மாநந்தவை வெறித்து பார்த்தவள் என்ன நினைத்தாளோ,​

"மனு இந்த உலகத்துல எனக்கு மட்டுமே தெரிஞ்ச அழகான ஆழமான காதல் கதையோட புத்தகத்தை உன்கிட்ட நான் தரட்டுமா ?"​

என்று ஆழ்ந்த குரலில் வினவ, அவனோ மூச்சை இழுத்துவிட்டபடி,​

"இதபத்தி பிறகு பேசலாம் குயில் இப்போ சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு"​

என்றவனை இடைமறித்தவளோ,​

"முடியாது மனு நான் உனக்கு நியாயமா இல்லங்குற குற்றவுணர்ச்சி என்ன கொலையா கொல்லுது அதுக்கான தண்டனையா தான் நான் இப்போ யாருமில்லாத " அனாதையா நிக்குறேன்,​

என்று சொல்லி முடிக்கும் முன்பே அவள் இதழ்களில் வன்மையாகவும் அழுத்தமாகவும் முத்தமிட்டு விலகியவன், கண்களில் தீப்பொறி பறக்க​

"இனி அனாதை அப்டி இப்படின்னு வார்த்தை வந்துச்சு தொலைச்சிருவேன்டி உன்ன, நீ எதுக்காக என்ன லவ் பண்ணிருந்தாலும் உன்ன என்னால வெறுக்க முடியாதுடி, உனக்காக என் அப்பனையே தூக்கி போட்டுட்டு வந்துருக்கேன் இத விட உனக்கு எப்படி என்ன நிரூபிக்கிறதுன்னு தெரில​

என்று கோபத்துட எழப்போனவனின் கையைபற்றி தடுத்தவள் பெருமூச்செறிந்தபடி​

"அது உன் பெருந்தன்மை இருந்தாலும் எனக்கு மனசு கேட்கல"​

என்று கூறிக்கொண்டே அவனருகே இரண்டு நாட்குறிப்பு புத்தகங்களை நகர்த்தி வைக்க என்ன நினைத்தானோ அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டவன் ஒவ்வொரு பக்கமாக புரட்ட தொடங்கினான்.​

1998 காலங்களின் ஆரம்பத்தில்...​

பெரிதாக தொழிநுட்ப சாதனங்களில் புழக்கமில்லாத காலகட்டம், மிஞ்சி மிஞ்சி போனால் வானொலி பெட்டிகளும், தொலைக்காட்சிகளும் ஆங்காங்கே காண கிடைக்கும்.​

இலங்கையில் மத்திய பிரதேசமான கண்டியில் நடுத்தர வர்க்கத்தினரிலும் பார்க்க சற்று மேல் தட்டு வர்க்கத்தினர் வசிக்கும் பகுதி அங்கு காணப்படும் கணக்காளர் பழனியப்பனின் வீட்டில் இரவு ஏழு மணியளவில்​

"தம்பி ப்ளீஸ்டா கொஞ்ச நேரம் இங்கிலீஷ் நியூஸ் மட்டும் பார்த்துட்டு தாறேன்டா என் செல்லமில்ல"​

மனோசித்ரா கெஞ்சிக் கொண்டிருக்க அவளது இளைய சகோதரன் மித்ரனோ, "செல்லமும் இல்ல தங்கமும் இல்ல நான் தரமாட்டேன்"​

என்று வானரமாக துள்ள சித்ராவும் அவனுக்கு சளைத்தவள் அல்ல என்பது போல் அவனை மடக்கி பிடித்து ரிமோட்டை பிடுங்க முயற்சி செய்துக் கொண்டிருக்க​

இவர்களது சத்தத்தை கேட்டுக் கொண்டிருந்த அன்னை தேவகியோ,​

"ரெண்டுபேரும் பேசமா உட்காருறீங்க இல்ல அகப்பையோட நான் அங்க வரட்டுமா ?"​

என்றது தான் தாமதம் கப்சிப்பென சத்தம் அடங்கி போனது. அதற்கு பிறகு இருவருக்குமிடையில் மௌனம் ஆட்சி செய்ய அவர்களது அமைதியை கலைக்கும் விதமாக, தொலைக்காட்சி பெட்டியிலிருந்த ரிச்சர்ட் பெர்னாண்டஸ் தனது கணீர் குரலில்​

"குட் ஈவினிங் எவரிபோடி"​

செய்தியை வாசிக்க தொடங்க மனோசித்ராவும் சரி மித்ரனும் சரி அவரது ஆங்கில உச்சரிப்பை கண்வெட்டாமல் பார்த்திருக்க அதே சமயம் வீட்டினுள் நுழைந்த பழனியப்பனோ,​

"தேவிம்மா இங்க கொஞ்சம் வாயேன் நம்ம மனோவுக்கு ஜெயவர்தனபுர யூனிவெர்சிட்டில மேனேஜ்மேண்ட் பாகல்ட்டி கிடைச்சிருக்கு"​

என்று சந்தோஷத்துடன் மொழிய, அவ்விடத்திற்கு விரைந்து வந்த தேவகியோ,​

சந்தோஷத்துடன் மகளை கட்டி தழுவியபடி, "வாழ்த்துக்கள்டா ம்மா " என்று முத்தம் வைக்க, உலகம் தெரியா அப்பாவி பெண்ணின் மனமோ,​

'இவ்வளவு நாள் திரையில மட்டும் ரசிச்ச ரிச்சர்ட் சார பார்த்து ஒரேயொரு ஆட்டோகிராப் மட்டும் வாங்கிரனும் அதுக்காக தான் கஷ்டப்பட்டு படிச்சு கொழும்புக்கு போறேன் ஜாலி ஜாலி'​

என்று குத்தாட்டம் போட அதில் உலைவைக்கவென்றே அடுத்த இரண்டு நாட்களில் வீட்டில் ஏதும் விஷேசமா? என்று நினைக்கும் அளவிற்கு அனைத்து உறவினர்களும் கூடியிருக்க சித்துவோ​

' நானே இப்ப தான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன் அதுக்கெல்லாம் சேர்த்து உலை வைக்க கூடிட்டாய்ங்க அதுலயும் அந்த ராட்சசி அத்த வேற ஆளும் மூஞ்சியும் தானும் வாழாது அடுத்தவனையும் வாழ விடாது.'​

அவர்களை மனதுக்குள் வறுத்தெடுக்க, அவளது காதில் தேனருவியாய் பாய்ந்தது தந்தையின் சொற்கள்,​

"இங்க பாருங்க என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கையிருக்கு அவ என் மானத்த வாங்குற மாதிரி எந்த வேலையும் செய்யமாட்டா அதே மாதிரி அவளுக்கு புடிச்ச நம்ம குடும்பத்துக்கு எல்லா விதத்துலயும் ஏத்த பையனா எங்க அனுமதியோட கல்யாணம் பண்ண விருப்படுறானா அதுக்கு நானும் தடையா இருக்க மாட்டேன் அதனால உங்க பிரசாங்கத்த இத்தோட நிப்பாட்டுங்க"​

என்றபடி எழுந்துக் கொண்டவர்,​

"மனோ இங்கவாம்மா " என்றழைக்க அவரை நோக்கி துள்ளி குதித்து ஓடி வந்தவளோ,​

"என்னப்பா ? சொல்லுங்க " என்றாள் ஆர்வத்துடன் அவளது தலையை ஆதுரமாக வருடியவரோ,​

"வாம்மா நம்ம உனக்கு யூனிவர்சிட்டி போக தேவையான பொருளெல்லாம் வாங்கிட்டு வரலாம் உன் அம்மாக்கிட்ட மட்டும் சொல்லிட்டு வா போதும்"​

என்று கூற தேவகியிடம் மாத்திரம் விடைபெற்றுக் கொண்டு துள்ளி துள்ளி தந்தை பின்னால் ஓடிச்சென்ற பெண்ணவள் அன்று அறிந்திருக்கவில்லை அவளது வாழ்க்கையை திருப்பி போட போகும் நபர்களை சந்திக்க போகும் காலம் வெகுவிரைவில் என்று.​


தொடரும்...​

*****************************************************************************************************​

 

வணக்கம் மக்களே நான் தான் உங்க அஸ்திரம் 32 எல்லாரும் எப்படி இருக்கீங்க?

இப்போ தான் பந்தயத்துக்கு வந்துருக்கேன் எப்படியும் ஒரு நாளைக்கு 1 இலிருந்து 2 யூடி கொடுத்துருவேன் எனக்கு நம்பிக்கையிருக்கு என் மேல நம்பிக்கை வச்சு நீங்களும் படிங்க என்னால முடிஞ்சவரைக்கும் எபோர்ட் போட்டு முடிக்கிறேன் உங்க சப்போர்ட்டும் எனக்கு தேவை சோ ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க போட்டி முடியும் வரைக்கும் எல்லா எழுத்தாளர்களுக்கும் உங்க சப்போர்ட்ட கொடுங்க நாளைக்கு சந்திப்போம் மக்களே

 

அத்தியாயம் 03​

மனோசித்ராவுக்கு மட்டுமல்ல அக்கால இளைஞர்கள் யுவதிகள் எல்லோருக்கும் ரிச்சர்ட் என்பவன் மிகப்பெரிய முன்னோடி என்று தான் கூற வேண்டும்.​

அக்கால கட்டத்தில் ரிச்சர்ட் மாணிக்கம் டி பெர்னாண்டஸை இலங்கையில் அறியாத மக்களே கிடையாது. அவனது சந்தன நிறமும் கூரிய நாசியும் அளவாக நறுக்கப்பட்ட தாடி மீசையும் அளவுக்கு அதிகமாக வளர்ந்த அடர்ந்த சுருண்ட முடியும் கபில நிற​

கண்களும் அக் கண்களில் குடி கொண்டிருக்கும் அமைதியும் சாந்தமும் அதை இன்னும் மெருகேற்றும் விதமாக அவனது மூக்கு கண்ணாடியும் அவனை ஆணழகனாக மிளிரச் செய்யுமென்றால் அதையும் தாண்டி அவனது மும்மொழி வல்லமையும் மக்கள் மனதில் தனி இடத்தை பெற்று கொடுத்தது.​

அக்காலத்திலேயே புரட்சித் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் இவனது பெற்றோர், தாய் மனோராணி வைத்தியலிங்கம் மகப்பேற்று மருத்துவர், தந்தை விஜித டி பெர்னாண்டஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் தீடீர் சுகவீனத்தால் ரிச்சர்ட்டின் ஐந்தாவது வயதிலேயே இறைவனடி சேர, அவனை தாயாய் தந்தையாய் வளர்த்தவர் மனோராணி தான்,​

பள்ளி பருவம் முதலே மேடை நாடகங்களில் நடிகனாக, எழுத்தாளராக, பன்முக திறமையை வளர்த்துக் கொண்டவன் இறுதியில் தேர்ந்தெடுத்தது என்னவோ ஊடக துறையை தான் அதில் மனித நேயம் மிக்க பத்திரிகையாளனாக செய்தி வாசிப்பாளனாக நடிகனாக பன்முகம் காட்டி வெற்றியும் கண்டான்.​

அன்று இரவு நேர வேலையை முடித்து கொண்டு வீட்டிற்கு வந்த ராணிக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தான் ரிச்சர்ட், வீட்டிற்கு வந்தவர் அவனை ஒரு கணம் ஆராய்ச்சியாக பார்த்தபடி,​

“என்ன ரிச்சி இன்னைக்கு எனக்காக ஸ்பெஷலா டீ எல்லாம் ஊத்தியிருக்க என்ன விஷயம்?”​

அவனருகே அமர்ந்தவர் அவன் வார்த்துக் கொடுத்த தேநீரையும் அருந்த மறக்கவில்லை. அவரை மென் புன்னகையுடன் பார்த்திருந்தவன்,​

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல மமி,ம்ம் இப்போ சொல்லுங்க உங்க கிளினிக்ல வேலையெல்லாம் எப்படி போச்சு?"​

என தானும் தேநீரை அருந்திக்கொண்டே வினவ, அவரோ குரலை செறுமியபடி​

தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டவர்,​

"உன்கிட்ட சொல்லணும்னு நினச்சுட்டே இருந்தேன் ரிச்சு இன்னைக்கு நான் கிளினிக்கு போகல ஒரு கிரிட்டிகளான கேஸ் ஹாஸ்பிடல்ல அத ஹாண்டில் பண்றதுக்கு முதல்ல போதும் போதும்னு ஆகிருச்சு, சரி நீ சொல்லு ஹொவ் வாஸ் யுவர் டே ?"​

அவனும் தேநீரை சிப் சிப்பாக அருந்தியபடி, "ம்ம் , நானும் விஸ்வாவும் இன்னைக்கு ஒரு டெலிட்ராமா டிஸ்கஷன் போனோம். பிறகு வழமை போல தான் கவெர்மென்ட்டால பாதிக்கப்பட்டவங்க வீட்டுக்கு போய் சில டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணோம்"​

என்றான் அதே அமைதியான புன்னகையுடன் அவனது தலையை ஆதுரமாக வருடிய ராணியோ,​

"ஏதாயிருந்தாலும் பார்த்து பத்திரமா பண்ணு ஏன்னா எனக்குன்னு இருக்குறது நீ மட்டும் தான்"​

என்றவர் கண்ணில் யாருமறியா வண்ணம் சிறு கண்ணீரும் எட்டிப்பார்க்க தான் செய்தது.​

இதே சமயம் மனோசித்ராவின் வீட்டில் அவளை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைப்பதற்கான முன்னெடுப்புகளும் தீவிரமாக நடந்துக் கொண்டிருக்க சித்துவோ யாருடைய கண்ணையும் உறுத்தாது ஒரு பத்திரிகையின் முகப்பு பக்கத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தவள் மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி​

அதில் ஒருபக்கத்தில் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வளாகம் பற்றிய குறிப்புகளிருக்க மறுபக்கத்தில் அவளது எண்ணத்தின் நாயகனான ரிச்சர்டின் புன்னகையுடன் கூடிய புகைப்படம் இரண்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தவள் கொழும்பை நோக்கி புறப்படும் நாளும் வெகு சீக்கிரமாக வந்து சேர்ந்தது.​

பிறந்ததிலிருந்து வீட்டுக்குள் வசித்த பெண்ணவள் முதல்முறையாக ஹாஸ்டல் வாசத்தை தொடங்க போகிறாள் அழுதழுது பெற்றோருக்கு விடை கொடுத்தவள் மீண்டும் அழத் தொடங்க அவளை சமாதானம் செய்தது என்னவோ மானெல் தான் அன்று தொடக்கம் இருவரும் இணைபிரியாத தோழிகளாக மாறினர். ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை​

பகிடி வதைகளுக்கு தடையென்பதால் மாணவர்கள் சற்று நிம்மதியாகவே தங்கள் காலத்தை கழிக்க கூடியதாக இருந்தது. இதற்கிடையில் மானெலுக்கும் அவளது தூரத்து உறவினனான லலித்துக்கும் காதல் மலர்ந்திருந்தது.​

முதன்முறையாக காதல் என்ற வார்த்தையை கேட்ட மனோசித்ராவுக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தியது என்பது தான் நிதர்சனமான உண்மை, காரணம் அவளது பெற்றோரின் கண்டிப்பான வளர்ப்பு தான், இருந்தும் நண்பியின் மனதை உடைக்க விரும்பாமல் தாமரை இலை நீர் போல் பட்டும்படாமல் அவளது காதலனுடன் பேசி பழகிய போது அவனிடமிருந்த வெளிப்படையான பேச்சும் நேர்மையான அணுகுமுறையும் மானெல்லை போலவே துவேஷமற்ற அவனது மனிதத்துவமும் அவளது மனதில் ஒரு சகோதரனாக தனி இடத்தை பெற்று கொடுத்ததென்றால்,​

ரிச்சர்ட்டின் நெருங்கிய தோழன் என்பதை அறிந்து கொண்டபோது இன்பமாக அதிர்ந்து தான் போனால் இப்படியாக நாட்கள் நகர அவளது கல்லூரி வாழ்க்கை பயணம் தொடங்கி எட்டு மாதங்கள் முடிவடைந்த நிலையில் யாரை சந்திக்க வேண்டுமென்ற ஆசையில் கொழும்பை நோக்கி வந்தாளோ அவனையும் சந்திக்க நேர்ந்தது.​

அன்று மானெல் மாதாந்திர சுகவீனத்தின் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு வராமல் விடுதியில் தங்கி விட சித்தராவும் காலை நேர விரிவுரைக்கு மாத்திரம் சமூகமளித்தவள் பின்னேரம் விரிவுரைக்கு சமூகமளிக்காது நேரத்துடன் விடுதிக்கு புறப்பட்டு விட அவளை எதிர்ப்பார்த்து காத்திருந்தவள் எழுந்துக் கொண்ட மானெல்லோ​

"வா வா இவ்ளோ நேரம் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் இன்னைக்கு உன்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போக போறேன்"​

என்று அத்தனை சுகவீனத்திலும் குதூகலமாக கூறியவளை ஆராய்ச்சி பார்வை பார்த்த சித்ராவோ,​

"எங்க போக போறோம் ? வயிறு வலின்னு சொன்னியே இப்போ பரவாயில்லையா? இல்லாட்டி லெக்ஸர்ஸ் கட் பண்ண பொய் சொன்னியா ?"​

என்று குழப்பமாக கேட்க மானெல்லோ அசராது,​

"அதுக்கு மெடிசின் வாங்க தான் ஒரு இடத்துக்கு லலித் கூட போக போறோம் ரொம்ப கேள்வி கேட்காம சீக்கிரம் வா "​

என்று குதூகலத்துடன் அவளை இழுத்துக் கொண்டு வந்ததென்னவோ ரிச்சர்ட்டின் இல்லத்திற்கு தான், அங்கு வந்த மனோசித்ராவுக்கு தான் இம்மையும் மறுமையும் புரியா நிலை யாருடைய வீடு ? நண்பிக்கு தெரிந்தவர்கள் வீடா ? சாதாரணமாகவே யாருடனும் பெரிதும் பேசி பழகாத மனோவுக்கு உள்ளூர ஒரு கணம் குளிர் கூட விரவி பரவியது.​

மனதினுள் சிறு போரே நிகழ்த்திக் கொண்டிருந்தவள் வீட்டின் முன் கதவு திறக்கும் சத்தத்தில் சுய நினைவுக்கு வர, கதவை திறந்தவனை கண்டு ஒரு நொடி திக்குமுக்காடி தான் போனாள் அவளோ மெய்மறந்து அவன் கண்களை வைத்தகண் வாங்காமல் பார்த்திருக்க அவள் மனதில் தோன்றிய சிந்தனைகள்,​

'ஒரு கண்ணால் உயிரை ஊடுருவ முடியுமா ? முடிந்ததே அவன் கண்களுக்கு முடிந்ததே, ஒரு கண்ணால் தூக்கத்தை தொலைக்க செய்ய முடியுமா ? முடிந்ததே அவன் கண்களால் முடிந்ததே,'​

என்று யோசித்தபடி நிற்க அவள் முகத்தின் முன்னால் சொடுக்கிட்டவன்​

"ஹலோ மேடம் என்ன அப்டி பார்க்குறீங்க ? நான் என்ன அவ்ளோ அழகா இருக்கேனா ?"​

என சற்று நக்கல் தொனியில் தமிழில் வினவ மனோவுக்கு வெட்கம் மேலிட்டாலும் அதையும் தாண்டி,​

"உங்க இங்கிலீஷ விட தமிழ் ரொம்ப அழகாயிருக்கு சார் "​

என்று தன்னிலை மறந்து கூறி விட ரிச்சர்ட்டும் கூட அவளது கிள்ளை மொழியில் அயர்ந்து தான் போனான் இருவரும் எத்தனை நிமிடங்களாக தன்னிலை மறந்து கண்களை ஊடுருவி பார்த்தபடி நின்றனரோ,​

இருவரையும் கலைத்தது லலித்தின் குரல் தான்,​

"உன் ரசிகைய ரசிச்சது போதும்டா கொஞ்சம் எங்களையும் கவனி நாங்களும் இங்கேயிருக்கோம்"​

என நக்கல் செய்தபடி வீட்டினுள் நுழைய மானெல்லுடன் சித்ராவும் வீட்டினுள் நுழைந்துக் கொண்டாள்.​

நிகழ்காலத்தில் தன்னை மறந்து அவர்களது காதல் கதையின் ஆரம்பத்தை வாசித்துக் கொண்டிருந்த மாநந்தவின் சிந்தனையை கலைக்கும் விதமாக அமைந்தது. குயிலியின்​

"ஆ அம்மா ஸ்ஸ் " என்ற அலறல் உடனே தன்னை நனவுலகிற்கு மீட்டு வந்தவனோ சமையலறையை நோக்கி .​

கட்டுக்கடங்கா கோபத்துடன் வந்தவனோ​

"என்னடி பண்ணி வச்சிருக்க ?"​

என்று அதட்டி கேட்க அதில் சற்று மிரண்டு விழித்தவள்​

"இல்ல அது வந்து புட்டுக்கு மாவு குழைக்கலாம்னு எடுத்தேன் சுடுதண்ணீய தவறி கையில கொட்டிக்கிட்டேன் நீங்களும் சாப்பிடல இல்லையா"​

என்று தயங்கியபடி நின்றவளை கண்டு என்ன நினைத்தானோ உடனடியாக அவளது கையில் "சில்வரின்" ஐ தடவியவன் "தள்ளு"​

என்றபடி பிட்டுக்கு மாவு குழைக்க தொடங்க அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் மீண்டும்​

"மனு என்ன குழந்தை உங்களுக்கு பிடிக்கும் ?"​

என ஆசையாக வினவ அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன்​

"எந்த குழந்தையா இருந்தாலும் பிடிக்கும் ஆனா உன்ன மாதிரி பெண் குழந்தை இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் "​

என்று ஏக்கத்துடன் கூற அவனை ஒரு முறுவலுடன் பார்த்தவள்​

"ஏன் ?" என ஆர்வமாக கேட்க அவனோ பிட்டுக்கு தேங்காய் சாம்பல் அரைத்தப்படி​

"ஏன்னா ஒரு பொண்டாட்டிய என்னோட பாதியா நீ தோத்துட்டாலும் ஒரு அப்பாவோட மகளா நீ ஜெய்ச்சிட்ட இல்ல அதனால எனக்கு பொண்ணு தான் வேணும்"​

என ஆழமான குரலில் கூற,​

அவன் கூறிய பதிலில் கண் கலங்கி தான் போனாள். இருந்தும் தன்னிலையை புரிய வைத்து விடும் நோக்கில்,​

"மனு நான் நம்ம காதலுக்கோ நட்புக்கோ என்னைக்கும் துரோகம் பண்ணல முதல்ல ஆர்யவங்க்ஷவோட மகன்னு உன்மேல கோபமிருந்தது உண்மை தான் ஆனா நான் லவ் பண்ண ஆரம்பிச்ச காலம் தொட்டு உனக்கு உண்மையா தான் இருந்தேன்"​

அவளது கூற்றில் சினம் தலைக்கேற உறுத்து விழித்தவன்​

"ஆமா எனக்கு உண்மையா இருக்குறதால தான் குழந்தை உண்டானதையும் மறைச்சி ஆஸ்திரேலியாக்கு ஓடி போக பார்த்தியா ? "​

சற்றே தணிந்த குரலில்,​

"இங்க பாரு குயில் வீணா என் வாயை கிளறி வாங்கி கட்டிக்காத சொல்லிட்டேன்"​

என்று கூறியபடி சமையலறையை விட்டு வெளியேற அவள் கண்களோ தன்னை விட்டு விலகிச் செல்லும் தன்னவனின் முதுகையே வெறித்தபடி நிற்க மனதிலோ அவனை சந்தித்த முதல் நாளை பசுமையாக எண்ணி சிலிர்த்தது.​




தொடரும்...​

 

வணக்கம் மக்களே நான் தான் உங்க அஸ்திரம் 32 எல்லாரும் எப்படி இருக்கீங்க?

இன்னைக்கு தான் வர முடிஞ்சுது எங்க பாட்டியோட திவசம் நாளைக்கு அதனால கொஞ்சம் வேலையா இருக்கேன் டைம் இருக்கும் போதெல்லாம் டைப் பண்ணி போற்றுவேன் எப்படியும் இந்த முறை ஸ்டோரிய முடிச்சே ஆவேன் என் மேல நம்பிக்கை வச்சு நீங்க படிங்க, அதுக்கு உங்க சப்போர்ட்டும் எனக்கு தேவை சோ ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க போட்டி முடியும் வரைக்கும் எல்லா எழுத்தாளர்களுக்கும் உங்க சப்போர்ட்ட கொடுங்க இன்னைக்கு நைட்டுக்கு சந்திப்போம் மக்களே

 

அத்தியாயம் 04​

பல வருடங்கள் கழித்து தனது தாய் நாடான இலங்கைக்கு வருகை தந்திருந்தாள் குயிலி இலங்கையை விட்டு வெளியேறும் போது தாயின் கருவறையில் தென்றலாக உறங்கி கிடந்தவள் இன்று புயலாக மாறி திரும்பி வந்திருக்கிறாள்.​

தன் தந்தையின் இழப்பிற்கு காரணமான கயவர்களை சம்ஹாரம் செய்ய காத்திருக்கும் பெண் புலியாக மாறி வந்திருக்கிறாள்., தன் தந்தையின் இறப்பிற்கு காரணமான ஒவ்வொருவரை பற்றிய தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவளுக்கு அம்மூன்று கயவர்களின் வாரிசுகளுக்கிடையேயான நட்புறவு மட்டும் தெரியாமலாயிருக்கும்​

அவர்கள் தற்போது எங்கிருப்பார்கள் என்பதை அறிந்து கொண்டவளாக கொழும்பின் ‘மரைன் டிரைவ்’ பகுதிக்கு வந்து சேர்ந்தவள் காதுகளுக்குள்​

“நந்த.. நந்த நந்த” என்ற கோஷம் மீண்டும் மீண்டும் கேட்க அக்கோஷத்துக்கு சொந்தக்காரனோ பிடரி முடியை சிலுப்பியபடி தனது தலைக்கவசத்தை கழட்டிக்கொண்டே உயர் ரக இருசக்கர வண்டியை விட்டு இறங்கிய நொடி அந்த ஆடவனை சுற்றி இளம் வயது பெண்களும் ஆண்களுமாக கூட்டம் ஈசலாக மொய்க்க,​

ஆனால் அவர்களை தாண்டி அவள் கண்ணுக்குள் பதிந்தது அவன் மட்டும் தான்​

இதயத் துடிப்பு அதிகரிக்க அவள் நீல நிறக் கண்களோ அவன் கபில நிறக் கண்களை மட்டுமே ஊடுருவி பார்த்தது அதில் சத்தியமாக பழியுணர்ச்சியோ வன்மமோ இல்லை மாறாக​

‘ஏண்டா நீ ஆர்யவங்க்ஷ மகனா பிறந்த?’​

எ‌ன்ற ஏமாற்றம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவனை பற்றி ஒன்று விடாமல் கேட்டறிந்து கொண்ட போதே வந்த மெல்லிய உணர்வு இன்று அவனை நேரில் பார்த்ததும் வெடித்து சிதறியது காதலாக,​

அதற்கு மேல் அங்கிருக்க திடமற்றவளாக கிளம்பியவளை தான் மாநந்தவும் பார்த்திருந்தான். அவனுக்கு விசித்திரமாகயிருக்க,​

‘வந்தா நம்மள உத்து உத்து பார்த்தா என்ன நினைச்சளோ போயிட்டா’​

எ‌ன்று நினைத்தவன் மனமும் அவளை சுற்றி தான் வலம் வந்தது.​

இப்படியிருக்கையில் மறுநாள் மாலையில் இருவரும் மீண்டும் சந்திக்க போகிறோமென்பதை அறியாமலேயே இருவரும் அவரவர் நினைவில் உழன்றபடி காலத்தை கழிக்க,​

மறுநாள் மாலை இலங்கையின் அழகிய கடற்கரையான ‘மவுண்ட் லவ்னியாவுக்கு கிளம்பிய குயிலியின் முகமோ இறுக்கத்தை தத்தெடுத்திருந்தது.​

கடற்கரையை அடைந்தவள் கைகளில் வெள்ளை நிற லில்லி மலர் கொத்தை அங்கிருந்த பாறை மீது வைத்து விட்டு மெதுவாக காலில் அலைகள் உரச நடந்தவள் தனிமையான இடத்தில் நின்று பெருமூச்செறிந்தபடி கடலையும் அதில் முழ்கி கொண்டிருக்கும் கதிரவனையும் பார்த்திருக்க​

அவள் மேனியில் வலிமையான ஆடவன் மேனி மோத அதில் திடுக்கிட்டு திரும்பியவள் கண்களில் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கண்ணனாக நின்றிருந்தான் மாநந்த, அவனை பார்த்து அவள் மனம் ஒரு கணம் தடுமாறிய போதும் சுதாரித்துக் கொண்டவள்,​

“ஹேய் மேன் என்ன கண்ணு தெரியாதா உனக்கு?, ஏன் என்ன இடிச்ச?”​

என்று அழுத்தமான குரலில் சற்று கோபத்துடன் வினவ, அவனோ​

“சாரி மேடம் இவ்ளோ அழகான பொண்ணுன்னு தெரிஞ்சிருந்தா இடிச்சிருக்க மாட்டேன்”​

என்று கண்களில் குறும்பு புன்னகையுடன் ஸ்டைலாக கூற,​

அவளோ அவனை கண்களால் வதம் செய்தபடி​

“என்ன மிஸ்டர் சொல்ல வரீங்க?”​

என்று எரிச்சல் மேலிட பார்த்தவளை, நக்கலாக பார்த்து சிரித்தவன்,​

“அதுக்கு பதிலா குண்டு கட்டா தூக்கியிருப்பேன் மேடம்”​

என்று கூற ஒரு கணம் ஊசி குத்தும் அவன் பார்வையில் சிலிர்த்து அடங்கியவள் சுதாரித்தபடி,​

"மிஸ்டர் மாநந்த நீங்க ரொம்ப தப்பு தப்பா கதைக்குறீங்க நான் அப்பறோம் போலீஸ்க்கு போக வேண்டி வரும்"​

என்று மிரட்ட அவளை கூர்ந்து பார்த்தவன் நக்கலாக சிரித்தபடி,​

"மேடத்துக்கு என் பெயர கூட தெரிஞ்சிவச்சிருக்கீங்க அவ்வளவு ஸ்பெஷலா நான்"​

அவளோ இதற்கு மேல் அவனுடன் வாதம் புரிய முடியாது என கணித்தவள் பதில் சொல்லாது அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து நகர்ந்து விட, அவனோ அவளின் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி,​

"பதில் சொல்லிட்டு போ இல்லன்னா தேடி வருவேன்"​

என்று சத்தமாக கத்த அவளோ பதில் கூறாமல் ஓடியே விட்டாள் இருந்தும் அவனது பார்வையும் சிரிப்பும் விடாமல் துரத்துவதாக அடுத்தடுத்த நாட்களில் பிரமை கூட தோன்றியது.​

அதன் பிறகு வரும் நாட்களில் அதை கொஞ்சம் ஒதுக்கி வைத்தவள்,​

தான் வந்த காரியத்தை சாதிக்க கனக்கச்சித்தமாக வியூகம் அமைக்க தொடங்கினாள். அவ் வியூகத்தில் முக்கிய பங்கு விஸ்வநாதன் மற்றும் லலித்துக்குரியது அவர்களை தவிர வழக்கறிஞர் விக்கிரமசிங்கவும் இந்த திட்டத்தின் முக்கிய புள்ளி,​

ஆர்யவங்க்ஷ, சுபோத, கருணாதிலக்க ஆகிய மூவரின் தகவலையும் கனக்கச்சித்தமாக வழங்கியவர் விஸ்வநாதன் என்றால் ரிச்சர்ட் கடைசியாக தயாரிக்க முற்பட்ட மேடை நாடகம் மற்றும் அவர் சேகரித்த ஊழல் தொடர்பான செய்திகள் பற்றிய தகவலை துல்லியமாக ஆதாரத்துடன் பெற்று தந்தது லலித் தான் இருப்பினும் இந்த ஆதாரங்கள் மட்டும் நீதிமன்றத்தில் வாதாட போதாது என்று கணித்தவள் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையிலிருக்க,​

அவள் மனதுக்குள் அன்று சரியாக தோன்றிய தவறான யோசனையின் விளைவை தான் இப்போது அவள் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.​

அவளது திட்டத்தை செயல்படுத்தும் விதமாக இரண்டு நாட்களிலேயே மாநந்த 'எம் பி எ' பயிலும் அதே கல்லூரியில் அதே வகுப்பில் இணைந்து கொள்ள, அத்தனை நாள் வேலை நிமித்தமாக குயிலியை பற்றி ஆராய மறந்து போயிருந்த மாநந்தவுக்கு திருப்பி தன் விழியில் விழுந்து இதயம் நுழைந்த பெண்ணவளை கடந்து போக மனமில்லாமல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க அவனை நமட்டு சிரிப்புடன் பார்த்தவளோ தந்தையை போன்ற மகன் என அவனை பிழையாக கணித்து விட்டாள்.​

இப்படி கடந்தகால சிந்தனையில் கண்மூடி லயித்திருந்தவளின் மடியில் ஏதோ பாரம் கணக்க கண்களை மெல்ல திறந்தவள் கண்டது என்னவோ அவள் மடியில் குழந்தையென தலை வைத்து படுத்திருக்கும் கணவனை தான்,​

அவனது செயலில் சிலிர்த்தவள் கண் கலங்கியபடி அவன் அடர் கேசத்தை வருடி விட பட்டென்று கண்ணை திறந்தவனை பார்வையால் மெல்ல வருட​

"மனசு சரியில்ல அதனால இங்க தான் படுத்துக்க போறேன்"​

என்று உதட்டை சுழித்தவன் மேலும் சுருண்டுக் கொள்ள, அவளோ,​

" உங்க அப்பாவ நான் ஜெயிலுக்கு அனுப்புனதால வந்த மனக்கஷ்டமா ?"​

என்று சற்று இறுகிய குரலில் கேட்டு அவனது வாயை மீண்டும் கிளறி விட,​

"சின்ன திருத்தம் என் அப்பன் ஜெயிலுக்கு போக நான் தான் காரணம் நான் மனசு வைக்காட்டி ஒரு ஆணியும் அங்க புடுங்கியிருக்க முடியாது அடுத்து மனக் கஷ்டம்​

உன்னால தான் ஆனா உன்ன விட்டு என்னால விலகவும் முடியாது எங்க அம்மாவுக்கு அப்றம் அதிகமா பாசம் வச்ச ஒரே ஆள் நீ தான் அது தான் இவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகம் பண்ண பின்னாடியும் உயிரோட இருக்க"​

என்றபடி அவளது வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டவன் இதற்கு மேல் எப்படி தான் காதலை கூற முடியும். குயிலியின் கண்களில் மீண்டும் கண்ணீர் 'அவனது மனக் காயத்தின் காரணமும் அவளே அதற்கு மருந்தும் அவளே' என்று நினைத்தவளுக்கு இது என்ன மாதிரியான அன்பு ? இவனிடமிருந்தா பிரிந்து செல்ல எத்தனித்தோம் என்று எண்ணுகையில் அவளது மனம் அவளை கொலையாய் கொன்றது.​

தொடரும்...​

*******************************************************************​

வணக்கம் மக்களே நான் தான் உங்க அஸ்திரம் 32

சொன்னபடி ஓடி வந்துட்டேன் குட்டி எபிசொட் தான் அட்ஜஸ்ட் கரோ இந்த முறை ஸ்டோரிய முடிச்சே ஆவேன் என் மேல நம்பிக்கை வச்சு நீங்க படிங்க, அதுக்கு உங்க சப்போர்ட்டும் எனக்கு தேவை சோ ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க போட்டி முடியும் வரைக்கும் எல்லா எழுத்தாளர்களுக்கும் உங்க சப்போர்ட்ட கொடுங்க நாளைக்கு சந்திப்போம் மக்களே

 

அத்தியாயம் 05​

அவன் தலையை கோதியபடியே அசந்து தூங்கியிருந்த குயிலியை மெதுவாக மெத்தையில் கிடத்தியவனுக்கு தூக்கம் எட்டாக்கனியாகி போக, அவளது உறக்கம் கலையாதவாறு எழுந்துக் கொண்டவன் பேல்கனியில் நின்றபடி காற்று வாங்க அந்த காற்றின் வேகத்தில் நாட்குறிப்பேட்டின் ஏடுகள் வேகமாக புரட்டப்பட்டு ஒலியெழுப்ப, அதை அவதானித்தவன் உறக்கம் வரும் வரை அதையாவது படிப்போம் என்று எண்ணியபடி நாட்குறிப்பேட்டை​

கையிலெடுத்தவன் விட்ட இடத்திலிருந்து தொடர,..​

திரையில் பார்த்து ரசித்த ரிச்சர்ட்டை இன்று நேரடியாக ரசிக்க கிடைத்த வாய்ப்பை இன்று பயன்படுத்திக் கொள்ள அவளுக்கு விருப்பம் தான் இருந்தும் எதோவொன்று தடுத்தது.​

அது பெண்களுக்கே உரிய கூச்ச சுபாவம் மட்டுமே காதல் என்றாலே கெட்ட வார்த்தை போன்ற மாய தோற்றத்தில் வளர்ந்தவளுக்கு மனதுக்குள் கண்டவுடன் காதலெல்லாம் சாத்தியமா என்ன ?​

எத்தனையோ விதமான பெண்களை கடந்த ரிச்சர்ட்டிற்கு மனோசித்ராவின் முற்பாதி பெயர் சற்றே மனதுக்குள் ஒரு வித அழகிய அதிர்வை ஏற்படுத்தினாலும் அதை பெரிதாக சட்டை செய்யவில்லை.​

என்பது தான் நிதர்சனமான உண்மை காரணம் முதல் காதலில் ஏற்பட்ட தோல்வியாக இருந்திருக்கலாம். அல்லது தனது நிலையில்லா பொருளாதார சூழ்நிலையாக கூட இருந்திருக்கலாம். ரிச்சர்டின் தாய் மனோசித்ராவும் தந்தை விஜிதவும் உயர் வகுப்பு குடிகளாக இருந்த போதிலும் அவர்களது காதல் திருமணத்தின் விளைவாக குறிப்பிட்ட சொத்துக்கள் மாத்திரமே அவர்களுக்கு கிடைக்க பெற்றது.​

அதிலும் பெரும்பாலானவற்றை தானம் தர்மமென செலவு செய்ய எஞ்சியிருப்பது என்னவோ அவர்கள் குடியிருக்கும் வீடும் அதை சுற்றியுள்ள காணியும் அத்துடன் ரிச்சர்ட்டின் தாயார் உபயோகப்படுத்தும் ஒரு காரும் மாத்திரமே, அதை தவிர்த்து ரிச்சர்ட்டின் மோட்டார் வண்டி அது அவனது பல வருட உழைப்பில் வாங்கியது. அவ்வளவே,​

அவனது முன்னாள் காதலி அக்காலத்தில் பிரபல தமிழ் அரசியல்வாதியான வஷிஷ்டன் வாசுதேவனின் மகள் அவனது ஆங்கில உச்சரிப்பிலும் அழகிலும் மயங்கிய பெண்ணவளுக்கு இவனது தான தர்ம நடவடிக்கையும் அரசினை எதிர்த்து நிற்கும் துணிவும் எட்டிக்காயாய் கசக்க அவனிடம் எத்தனையோ முறை கெஞ்சியும் கொஞ்சியும் பார்த்தவள் ஒருகட்டத்தில் தந்தை பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு பறந்து விட்டாள்.​

இருந்தும் அதை பெரிதாக சட்டை செய்யாத ரிச்சர்ட் மேலும் மேலும் அரசாங்கத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்க்கும் விதமாக மேடை நாடகங்களையும் கண்டன கட்டுரைகளையும் வெளியிட ஆரம்பித்தான்.​

இப்படி தான் உண்டு தன் வேலையுண்டு என சுதந்திரமாக சுற்றி திரிபவனின் வாழ்க்கைக்கு புது அர்த்தம் கற்பிக்கும் விதமாக அவன் வாழ்க்கைக்குள் அனுமதியின்றி நுழையவிருந்தாள் மனோசித்ரா,​

நாட்கள் நகர மனோசித்ரா மற்றும் மனோராணியின் பிணைப்பு அதிகமாகி விட ரிச்சர்டை ரசித்த ரசிகை இன்று மனோராணியின் ரசிகையாக மாறிப் போனாள்.​

அவரது தன்னம்பிக்கையுடன் கூடிய நிமிர்ந்த நடை நேர்த்தியாக புடவை அணியும் விதமும் சாந்தமான கண்களும் சாத்வீக புன்னகையும் அவரை பேரழகியாக காட்டுமென்றால் மிகையாகாது.​

முன்பெல்லாம் கல்லூரி முடிந்தால் விடுதி, விடுதியிலிருந்து கிளம்பினாள் கல்லூரி என காணப்பட்ட மனோசித்ராவுடைய நேர அட்டவணை மாறி பெரும்பாலும் மனோராணியின் வீட்டில் தான் கழிந்தது.​

அடுத்த நாள் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் சிங்கள மொழி மூலமான தொலைக்காட்சி நாடகத்தின் ஸ்க்ரிப்ட்டை சரிபார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் அத்தனையும் மனோசித்ராவை பற்றியது தான் எப்போது ? எப்படி? மனதினுள் நுழைந்தாள் என்பதை அவன் அறிய முற்படவில்லை.​

ஆனால் அவளை எவ்வளவு பிடிக்குமென்றால் வாழ்நாள் முழுவதும் அவளுடன் கைக்கோர்த்து நடக்க பிடிக்கும்., அவளை போல நிறைய பெண் குழந்தைகளை பெற்றுக் கொள்ள பிடிக்கும்.,​

அதற்கான பாக்கியமில்லையெனில் வாழ்நாள் முழுவதும் அவளை குழந்தையாக பார்த்துக் கொள்ள பிடிக்கும்.​

இவ்வளவு பிடித்தமிருந்தும் அவளை விட்டு விலகி நிற்க ஒரே ஒரு காரணம் தான் இன்று உண்டு அது அவனது வேலையிலிருக்கும் உயிராபத்து மட்டும் தான்,​

கத்தியை எடுத்தவனுக்கு மட்டுமா கத்தியால் சாவு மக்களுக்காக பேனாவை கத்தியாக பிடித்தவனுக்கும் கத்தியாலோ அல்லது துப்பாக்கியாலோ தான் சாவு என்பதை தினம் தினம் பார்த்துக் கொண்டிருப்பவன் எப்படி தன்னுயிரானவளை இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் காதல் புரிய விரும்புவான்.​

அவளது நிம்மதிக்காக இப்போது தள்ளி நிற்பவனால் எப்போதும் தள்ளி நிற்க முடியாது. என்பது தான் நிதர்சனமான உண்மை இப்படியாக பல சிந்தனையில் உழன்றவனை நிகழ்க்காலத்திற்கு அழைத்து வரும் விதமாக வீட்டின் அழைப்பு மணி ஒலியெழுப்ப,​

வழமை போலவே மனோசித்ராவும் மானெல்லும் ரிச்சர்ட்டின் வீட்டிற்கு வருகை தந்திருக்க எதையும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாதவனோ,​

"என்ன என்ன அதா மமி என்ன பறக்குவெய் கையாள கீவ்வா மல்லிகா அபி துன் தெனாட்ட தே ஹதன்னைக்கோ"​

{வாங்க வாங்க அம்மா இன்னைக்கு வர கொஞ்சம் லேட்டாகும், மல்லிகா எங்க மூணு பேருக்கும் டீ ஊத்துங்க}​

"இதின் கோஹோமத மானெல் கேம்பஸ் பெத்தே எஹெம ? மன் கியன்ன ஹிட்டியே மன் அழுத் டெலி டிராமா எக்கக ரங்கப்பாண்ண இன்னே "​

{கேம்பஸ் எல்லாம் எப்படி போகுது ? அப்பறோம் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல இருந்தேன் நான் புது டெலிட்ராமால நடிக்க போறேன்}​

அதை கேட்ட மானெல்லோ,​

" காங்கிராட்ஸ் ரிச்சர்ட்"​

என்று கைக்குலுக்க மனோவும் கடமைக்கு புன்னகைத்தவள்,​

"காங்கிராட்ஸ் சார்" என்க அவள் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள்​

'இப்போ ஸ்டார்ட் பண்ணா என்னால வாரத்துக்கு ரெண்டு நாள் கூட இவர பார்க்க முடியாதே'​

என்ற ஏக்கம் பிறந்தாலும் மூளையோ அவளது சிந்தனை ஓட்டத்தை கண்டு எச்ச்சரித்தது.​

இருவரின் மனதிலும் காதல் அழகாக துளிர்த்த போதும் சமூகம் குடும்பம் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலகி நின்றனர்., என்பது தான் நிதர்சனமான உண்மை,​

அவளது ஏக்கம் நிறைந்த விழிகளை கண்ட ரிச்சர்ட்டின் உடலும் ஒரு கணம் சிலிர்த்து அடங்க,​

[இனி வரும் உரையாடல்கள் தமிழில்]​

மானெல்லிடம் கூறுவது போல,​

"ஆனா வீகென்ட் மட்டும் வீட்ல இருப்பேன்"​

சித்துவை பார்த்தபடி கூற கள்ளம் பிடிப்பட்ட குறுகுறுப்பில் தலையை தாழ்த்திக் கொண்டாள் பெண்ணவள்,​

அதே சமயம் லலித்தும் இவர்களுடன் இணைந்துக் கொள்ள சற்று நேரம் கலகலப்பாகவே கழிந்தது. அதனை தொடர்ந்து லலித்துக்கும் மானெல்லுக்கும் தனிமை கொடுத்த ரிச்சர்ட்டும் சித்துவும் தனியாக நகர்ந்து செல்ல​

காதலை வாய்மொழியாக கூறாத போதும் இருவருக்கிடையில் பார்வை பரிமாற்றமும் மெல்லிய உணர்வும் அழகாக இழையோடியது.​

எதையோ சிந்தித்தவள்,​

"உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே ?"​

அவளை பார்த்து முத்துப்பல் தெரிய சிரித்தவனோ,​

"இல்ல சொல்லு சந்தேகத்த தெளிவு படுத்துறது நல்லது தானே ? "​

அவளோ தயங்கியபடி,​

"இல்ல நீங்க ஏன் ? அதாவது ஏன் கவர்மெண்ட் ஜாப் அப்ளை பண்ணல நல்ல கிரேட்ஸ் இருக்குன்னு ஆண்ட்டி சொன்னாங்க "​

கேட்கவும் அவனும் சிரித்துக் கொண்டே,​

"இவ்வளவும் சொன்ன மமி ஏன் கவர்மெண்ட் ஜாப் அப்ளை பண்ணலன்னு சொல்லலையா ?"​

அவளோ ஒரு கணம் பேசாதிருந்து விட்டு,​

"இல்ல சொன்னாங்க கவர்மெண்ட் மேல கோபம் அப்டின்னு ஏதோ "​

என்று கண்களை உருட்டியபடி கூற அவளை பார்த்து மென்மையாக சிரித்தபடி அவளை தன் அருகிலிருந்த கல் பெஞ்சில் அமர கூறியவன் அவளிடம் திரும்பி,​

"நீ கஷ்டப்பட்டு படிக்குற நல்லா பாஸ் பண்ற ஆனா உனக்கு கிடைக்க வேண்டிய லெக்சர் போஸ்ட் ஒழுங்கா பர்போம் பண்ணாத ஒரு ஸ்டுடென்ட்டுக்கு இன்ப்ளுவென்ஸ் மூலமா கிடைக்குது அதாவது கிட்டத்தட்ட​

ஒரு இடத்துல தமிழ் பேசுறதால உன் திறமை நிராகரிக்கப்படுது, இல்லன்னா நீ பின்பற்றுற மதத்தால உன்னோட உரிமை பறிக்கப்படுது உன்ன காயப்படுத்துறாங்க இதுக்கெல்லாம் காரணம் யாரு ?"​

அவளோ அவனை கூர்ந்து கவனித்தவள்,​

"மக்களுக்கு இடையில சரியான புரிந்துணர்வு இல்லாதது தான் இதுக்கு இவங்க தான் காரணம் அவங்க தான் காரணம்னு எப்படி சொல்றது?"​

என்றவளை பார்த்து பெருமூச்செறிந்தவன் தலையை இடம் வலமாக ஆட்டி விரக்தியாக புன்னகைத்தவன்,​

"சரி எல்லாத்தயும் விடு கடந்த சில வருடங்களா எத்தனை சிங்களம் பேசுற தமிழ் பேசுற படிச்ச அறிவார்ந்த சமூகத்தை கொன்னு குவிச்சாங்க அதுக்கு காரணம் என்ன ?"​

அவளோ அவனை புரியாமல் பார்த்தபடி,​

"அவங்க ஆயுதம் எடுத்ததாலா தானே இப்டி எல்லாம் "​

என்று மென்று விழுங்கியவளை அழுத்தமாக பார்த்தவன் ,​

"அது எதுக்காகனு சொல்லு ?"​

என்று மிரட்டும் தொனியில் வினவ அவளோ பயந்தபடி,​

"இல்ல நீங்களே சொல்லிருங்க இதபத்தி எனக்கு பெரிய புரிந்துணர்வு இல்ல"​

என்று கூற அவளது பயத்தை கண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன்,​

"அவங்களோட உரிமைக்காக மக்களோட உரிமைக்காக இங்க யாரும் சொந்த விருப்பத்துக்காக ஆயுதங்கள கையில எடுக்கல புரிஞ்சுதா ?​

அவளோ,​

"அதுக்காக ஆளாளுக்கு ஆயுதத்த கையில எடுத்த சரின்னு சொல்றீங்களா? அப்டி எல்லாரும் ஆயுதத்த கையில எடுத்தா நாடே சுடுகாடாகிரும் "​

என்று சற்றே கோபமாக சொல்ல அவனோ அர்த்தமாக புன்னகைத்தவனோ,​

"நான் சரின்னு சொல்லல சித்து ஆனா அதுக்கு தூண்டுகோள் யாரு ? இன்னைக்கு ஆயுதம் ஏந்தி போராடுற மக்கள் யாரும் பெரிய பணக்காரர்களோட பிள்ளைகளில்ல, சாதாரண விவசாயியோட பிள்ளைகள் கூலித்தொழிலாளியோட பிள்ளைகள்​

முன்னேறணும்னு ஆசைப்படுற மக்கள் தானே தவிர்த்து வேற யாருமில்ல இதுக்கெல்லாம் தூண்டுகோள் யாரு இந்த அரசியல்வாதிகளும் முதலாளிகளும்​

தான் என்னோட ஆசையெல்லாம் மக்கள் பக்கம் நிக்கணும்ங்கிறதே தவிர பணமோ காசோயில்ல அதனால தான் என்னால கையில எடுக்க முடிஞ்ச ஒரே ஆயுதமான பேனா மூலமா சண்டை போடுறேன்"​

என்று எழ போனவனின் கையை பிடித்து அமர்த்திய மனோசித்ராவோ,​

"ரிச்சி நானும் உங்களோட இந்த கடினமான பாதையில வழித்துணையா ஒரு ஒளி விளக்கா காலம்பூரா வர விரும்புறேன் நீங்க உடனே பதில் சொல்லணும்னு இல்ல யோசிச்சு சொல்லுங்க"​

என்றபடி அவன் கண்ணையே பார்த்திருக்க,​

நிகழ்காலத்திலோ நாட்குறிப்பேட்டை தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த மாநந்தவின் சிந்தையை கலைக்கும் விதமாக குயிலியின் குரல் அமைந்தது.​

கண்ணை கசக்கியபடி குறை தூக்கத்தில் அவனருகே வந்தவள்​

"மனு உனக்கு தூக்கம் வரலையா ? இப்போவே 12 மணியாகுது ப்ளீஸ் வாயேன் எனக்கு நீ இல்லாம ஒரு மாதிரி இருக்கு"​

என்று சிணுங்கியபடி அறைக்குள் இழுத்து செல்ல அவனோ நாட்குறிப்பேட்டையும் எடுத்துக் கொண்டே அறைக்கு சென்றான்.​

முதலில் கடமைக்காகவும் தூக்கத்திற்காகவும் நாட்குறிப்பேட்டை எடுத்தவன் இன்று ஒரு உன்னத மனிதனின் காதலையும் போராட்டத்தையும் அறிந்துக் கொள்ளும் பொருட்டு நாட்குறிப்பேட்டை எடுத்துக் கொண்டான்.​


தொடரும்...​

 
Status
Not open for further replies.
Top