அத்தியாயம் – 15
கோவிலிலிருந்து வெளியேறிய வெற்றியோ எங்கே விட்டால் ஓடிவிடுவாளோ என்று நினைத்து கொண்டு கைவிடாமல் பிடித்திருந்தவளை இழுத்து கொண்டு தனது போலீஸ் வாகனத்தின் அருகே செல்ல அதற்கு முன் மஹாலட்சுமி தனது கணவனை அழைத்து “என்னங்க அவன நம்ம வண்டியில முதல்ல ஏற சொல்லுங்க… கல்யாணமே காக்கி யூனிஃபார்மல் ஆகிடுச்சு. தாலி கட்டுறதுக்கு ஒரு நல்ல நேரம் பார்க்கல, நல்ல துணி எடுக்கல… நாலு பேர கூப்பிடாம எல்லாம் நடந்தாச்சு… இதுல கல்யாணம் ஆன உடனேயே அந்த போலீஸ் ஜீப்புல தான் முதல் முதல்ல ஏறணுமா??” என்று புலம்பினார்.
அவரின் கோபமே இப்பொழுது புலம்பலாக வந்து கொண்டிருக்கிறது என்று புரிந்து கொண்ட அவரது மகனும் ஒரு சிறு புன்னகையை வெளிப்படுத்தி “சேகர் வண்டிய எடுத்துட்டு வீட்டுக்கு வந்துடுங்க…” என்று கூறிவிட்டு தனது மனைவியை அழைத்து கொண்டு அவர்களது காரில் ஏறினேன்.
காரை அவனது தந்தை ஓட்ட அருகில் அவனது அன்னை பின்னே வெற்றியும் தர்ஷினியும் அமர்ந்திருந்தனர்.
தர்ஷினிக்கோ ஏதோ ஒரு சுழலில் சிக்கி கொண்ட உணர்வு. ஒரு இரண்டு மணி நேரத்தில் தன் வாழ்க்கையே தலைகீழாகி போன உணர்வு. இந்த திருமணம் தேவையா? இவர் யார் எதற்கு இந்த திருமணம். ஒரு வேளை தன்னுடைய கதையே கேட்டு பரிதாபத்தினால் இந்த திருமணத்தை செய்து கொண்டாரா? ஆனாலும் எதற்கு? ஏன்? இவருடைய பெற்றோரை பார்த்தால் நல்லவர்கள் போல் தெரிகின்றனரே. அப்படிப்பட்டவங்களுக்கு தன்னை மாதிரி ஒருத்தி எதற்கு மருமகளாக? பல கேள்விகள் அவளிடத்தில் ஆனால் அதற்கு பதில் கூற கூடியவனோ அமைதியாக அவளது அருகில் அமர்ந்து வந்தான்.
அவளது பார்வை அவனை தழுவியது. இவ்வளவு நேரம் அவளின் யோசனையான முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன் அவளின் பார்வை தன்னை தழுவியதும் என்ன எனும் விதமாக புருவத்தை உயர்த்தி கேட்டான்.
ராயனின் கேஸை பற்றி அவளிடம் விசாரிக்க வரும் பொழுது இருந்த அவனது பார்வைக்கும் தற்பொழுது அவன் பார்க்கும் பார்வைக்கும் உள்ள வித்யாசத்தை நொடியில் புரிந்து கொண்டவள், “ஒன்னுமில்லை…” என்று கூறிக்கொண்டு மறுபுறம் திரும்பி கொண்டாள்.
அவனோ சிரித்து கொண்டே அவளின் புறம் சரிந்து காதருகே தன் மூச்சு காற்று படும் தூரத்தில் சென்று, “உன்னோட எல்லா கேள்விகளுக்கும் பதில் போக போக உனக்கே புரியும்…” என்றவனை திரும்பி “நான் மனசுக்குள்ள நினைச்சது இவருக்கு எப்படி தெரிஞ்சுது…” எனும் விதமாக கண்களை அகல திறந்து அவனை பார்த்தாள்.
“உன்னோட ஒவ்வொரு பார்வைக்குமான அர்த்தம் நானறிவேன் ஸ்வீட்டி…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக கூறினான்.
அவனின் பதிலில் அவளுடைய விழிகள் இன்னும் விரிந்தன.
இருவரின் மூச்சு காற்றும் மற்றொருவர் ஸ்பரிசிக்கும் தூரத்தில் இருக்க அவளின் விரிந்த அந்த விழிகளுக்குள் தன்னை தொலைத்து கொண்டிருந்தான் வெற்றி.
“ஏங்க முதல் வேலையா ஜோசியகாரன போய் பார்க்கனும். இன்னைக்கு நல்ல நாளா இல்லையானு தெரிஞ்சுக்கனும்…” என்ற அவனது அன்னையின் பேச்சில் சுதாகரித்து இருவரும் விலகினர்.
“மஹா அதான் கல்யாணம் முடிஞ்சுருச்சே… இனி எதுக்கு அதெல்லாம்…”
“அதுக்காக இப்படியே விட்டுட முடியுமா? அவனுக்கு தான் அறிவில்லை. முதல்லையே நம்மகிட்ட சொல்றதுக்கு என்னவாம்? யாரோ மாதிரி கல்யாணத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி சொல்றான்” என்று அங்கலாய்த்தார்.
அவரின் கோபம் புரிந்து சமாதானப்படுத்தும் விதமாய், “அம்மா…” என்று இழுக்க…
“என்னங்க அவனை எங்கிட்ட பேச வேண்டாம்னு சொல்ல சொல்லுங்க… நாம என்ன லவ்வுக்கு எதிரியா? லவ் பண்றோம் கல்யாணம் பண்ணி வைங்கனு சொன்னா என்னவாம்?”
இதை கேட்ட தர்ஷினிக்கு தான் மேலும் அதிர்ச்சியாக இருந்தது. “என்னது லவ்வா??” என்று கண்கள் தெரிக்க வாயை பிளந்து கொண்டு பார்த்தவளின் பார்வையை கண்டு வெற்றியின் இதழ்கள் சற்று தாராளமாகவே விரிந்தது.
“சாரி மஹாலட்சுமி… நான் முதல்லயே சொல்லி இருக்கனும் தான்… தப்பு பண்ணிட்டேன். ஆனா உங்கிட்டயும் அப்பாகிட்டயும் முன்னமே சொல்லி இருந்தேனே. நான் என்ன செஞ்சாலும் அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். என்னை நம்புங்கனு…” என்று தனது செய்கைக்கு நியாயம் வைத்தான்.
“அது ஏதோ எவனையாவது கொலை செய்ய போறான் அதுக்கு தான் அப்படி சொல்றானு நினைச்சேன். அன்னைக்கு மட்டும் இப்படினு தெரிஞ்சுருந்தா ஊரை அழைச்சு இந்த கல்யாணத்தை பண்ணி இருக்க மாட்டேனா?” என்று அப்பொழுதும் தனது மகனுக்கான பதிலை கணவனிடம் கூறிக்கொண்டிருந்தார்.
அவரோ இருவரின் சம்பாஷணைகளை கேட்ட படி அமைதியாக காரை ஓட்டி கொண்டிருந்தார்.
“அம்மா… என்னோட நிலைமை அப்படி… இவள தான் கல்யாணம் பண்ணுவேங்கறதுல உறுதியா இருந்தேன் ஆனா அதுக்கான நேரம் தான் எப்பனு தெரியாம இருந்தேன். ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க… நான் டைம் சொன்னா தானே உங்களால நல்ல நேரம் மண்டபம் எல்லாம் பார்க்க முடியும்?” என்றான் தாயிடம்.
“இங்க பாருங்க அவன் என்ன சொன்னாலும் நான் சமாதானம் ஆக மாட்டேனு அவங்கிட்ட சொல்லிடுங்க…” என்று அவர் சண்டை பிடிக்க அவரது மகனோ அவனை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டே வர அவர்களது வீடும் வந்துவிட்டது.
கோபத்துடன் இறங்கிய மஹாலட்சுமியோ, “அவனை இங்கேயே இருக்க சொல்லுங்க… ஆரத்தி எடுத்துட்டு வர்ரேன்…” என்று வீட்டுக்குள் நுழைந்தார்.
அவர் ஆரத்தி தட்டுடன் வெளியே வரவும், “ரெண்டு பேரையும் ஜோடியா நிக்க சொல்லுங்க…”என்று தனது கணவனுக்கு உத்தரவிட அவரோ தனது மகனை பார்த்தார்.
அவனோ எங்கோ பார்த்து கொண்டு நின்றான்.
மஹாலட்சுமியோ அவனின் நின்றிருந்த கோலத்தை பார்த்து தனது கணவரை தீயாக முறைத்தார்.
தனது மனைவியின் வேல் விழி பார்வையில் வெற்றியை நோக்கி “வெற்றி… அம்மா சொல்றத செய்டா…” என்றார்.
“நீங்களா ஆரத்தி எடுக்கறீங்க? அவங்க தானே எடுக்கறாங்க… அப்ப அவங்கள எங்கிட்ட நேரடியா பேச சொல்லுங்க…” என்று அவனும் ஏட்டிக்கு போட்டியாக பேசினான்.
இருவருக்கும் இடையில் அவர் எப்படி முழித்து கொண்டிருந்தாரோ அதே மாதிரி தர்ஷினியும் இவர்களின் சண்டையை பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.
அவன் ஒருபக்கம் முறுக்கி கொண்டு நிற்க அவனுக்கு ஒரு சதவீதத்திலும் குறைந்தவள் தான் இல்லை என்று அவனது அன்னையும் முறுக்கி கொண்டு நின்றார். இருவரின் நிலையை கண்ட சீனிவாசனோ மானசீகமாக தலையில் அடித்து கொண்டு அங்கே பரிதாபமாக நின்றிருந்த மருமகளையும் கண்டார்.
“இங்க பாருங்க… வீட்டுக்கு வந்த மருமகளை இப்படி வெளியவே நிக்க வச்சு அம்மாவும் மகனும் சண்டை போட்டுட்டு நிப்பீங்களா??” என்று அவருக்கு கோபம் வந்து கத்த அப்பொழுது தான் இருவருக்குமே உரைத்தது.
உடனே வெற்றி அவளின் அருகே வந்து நிற்க அவனது அன்னையோ “அந்த ஷூவ கழட்டிட்டு வந்து நில்லுடா...” என்று கத்தினார்.
அவனும் சமத்தாக தனது தாயின் கட்டளையை நிறைவேற்றி விட்டு தர்ஷினியின் அருகே வந்து நின்று அவளது கைகளை இறுக்க பற்றி கொண்டான்.
இருவரும் சேர்ந்தே வலது காலை எடுத்து வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்.
வீட்டிற்குள் நுழைந்த மருமகளை பூஜை அறைக்கு சென்று விளக்கேற்ற கூறினார். அவளும் அவரின் பேச்சை கேட்டு தவறாமல் செய்தாள்.
“உன் பெயரென்னமா?” என்று மஹா தர்ஷினியிடம் கேட்டார்.
அவள் பதில் கூறும் முன் முந்தி கொண்டு, “தேவதர்ஷினி… எனக்கு மட்டும் தேவா…” என்று காதலோடு கூறினான்.
அவனின் பதிலில் திகைத்து நின்றது என்னவோ தர்ஷினி தான்.
“ஏன் அவ பேசமாட்டாளா? அவளுக்கு நீ என்ன பின்னனியா பேசுற?” என்று அதற்கு எகிறிகொண்டு தனது மகனிடம் சண்டைக்கு நின்றார்.
“இங்க பாருங்க அவ ஒரு வாயில்லா பூச்சி… இந்த மிரட்டுற வேலை எல்லாம் அவகிட்ட வச்சுக்க வேணாம் சொல்லிட்டேன்.”
“இங்க பாரு உன் வேலை எவனாவது ஒருத்தன ஜெயில்ல போட்டு அடிக்கனும், இல்லையா என்கவுண்டர் அப்படிங்கற பேர்ல எவனாவது சுட வேண்டியது. அதுக்கும் எவனாவது சிக்கலைனா இந்த அரசியல்வாதிங்க அப்புறம் ஏதாவது பேரணி இதுக்கெல்லாம் பந்தோவஸ்து பண்ண வேண்டியது மட்டும் தான். இங்க எங்க ரெண்டு பேருக்கு இடையில நீ வந்தீனு வச்சுக்கோ அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்.” என்று தனது மகனை மிரட்டி கொண்டிருக்க தர்ஷினிக்கோ அரசியல்வாதி என்ற சொல்லை கேட்டவுடன் இதயமே நடுங்கிற்று.
இவ்வளவு நேரம் ராயனையும் அவனது அண்ணனையும் மறந்து போயிருந்தவளுக்கு அவர்களது நினைவு வந்து அவளது உடலை நடுங்க செய்து கண்கள் கலங்கிற்று.
“சரி… சரி என்னமோ பண்ணுங்க… ஆனா என் பொண்டாட்டி கண்ணுல இருந்து மட்டும் கண்ணீர் வந்துச்சு அப்புறம் நானும் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்…” என்று பேசி கொண்டிருந்தவனின் கைப்பேசி அழைத்தது.
கைப்பேசியை எடுத்து திரையில் தெரிந்த தியாகுவின் எண்ணை கண்டவனின் நெற்றி யோசனையில் சுருங்க, “சார்… சொல்லுங்க…” என்றான் இணைப்பை ஏற்படுத்தி.
அந்தப்பக்கம் தியாகுவோ “வெற்றி எங்க இருக்க? உடனே கிளம்பி ராயனை அட்மிட் பண்ணி இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு வா…” என்றார் கட்டளையாக.
“நான் வீட்டுல இருக்கேன் சார்… ஏதாவது பிரச்சனையா?”
“ஆமா எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு விரைவா வா…” என்று கூறி வைத்து விட்டார்.
“என்ன பிரச்சனையா இருக்கும்?” என்று யோசனை செய்தவன் வெளியில் சேகர் தனது வண்டியுடன் வந்திருக்க “அம்மா… கொஞ்சம் வேலை இருக்கு… நான் நைட் வர்ர லேட் ஆனாலும் ஆகும்… பார்த்துக்கோங்க… வந்து எல்லா விசயமும் சொல்றேன்.” என்றவன் விழிகளால் தர்ஷினியை காட்டி வெளியே செல்ல போனான்.
“டேய்… பால் பழமாவது சாப்பிட்டு போ…” என்று அவனது அன்னை அழைக்க…
“இல்ல மா… ஒரு சின்ன பிரச்சனை… இதுக்கெல்லாம் நேரமில்லை…” என்றவன் தனது போலீஸ் வாகனத்தில் ஏறி சென்று விட்டான்.
“இவனுக்கு எப்ப பார்த்தாலும் இதே பொழப்பா போச்சு…” என்று புலம்பிக் கொண்டே அங்கே திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் நின்று கொண்டிருந்த தர்ஷினியை கண்டு, “தர்ஷினி ஏன் உன் முகம் ஒரு மாதிரி வாடி போய் இருக்கு??? தலைவலிக்குதா?” என்று கேட்டார்.
“ஆமாம்…” என்று அவளும் சிறிது தயங்கி கொண்டே கூற…
“சாப்பிடறயா?? இல்ல காபி ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?” என்று மஹாலட்சுமி கேட்டார்.
“இ… இல்ல… கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியா போய்டும்…” என்றாள் தயங்கி கொண்டே.
அங்கே இருந்த அறையை காட்டியவர் “போடா… கொஞ்ச நேரம் போய் தூங்கு…” என்று கூற அவளும் எப்பொழுதடா தனிமை கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருக்க சட்டென்று அந்த அறைக்குள் புகுந்து கதவை அடைத்து கொண்டாள்.
அவளின் நடவடிக்கைகளை பார்த்து கொண்டே இருந்த மகாலட்சுமியோ, “பொண்ணு ரொம்ப அழகா இருக்காங்க… ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு… ஆனா ஏங்க இந்த பொண்ணு ரொம்ப சோகமா இருக்குது? இந்த பொண்ணுக்கு ஏதோ பிரச்சனை இருக்குமோ… ஒரு வேளை நம்ம வெற்றிய இவளுக்கு பிடிக்கலையோ… ஆனா அவன் முகத்தில இன்னைக்கு இருந்த சந்தோஷத்துக்கு ஒரு அளவே இல்லை. ஆனா இந்த பொண்ணு… எனக்கென்னமோ பயமா இருக்குதுங்க…கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தவன் இப்ப தான் கல்யாணம் செஞ்சு இருக்கான். ஆனா இந்த பொண்ணு ரொம்ப சோகமா இருக்கா… ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்துடுமோ…” என்று தனது கணவரின் அருகே அமர்ந்து கொண்டே கேள்வி எழுப்பி கொண்டிருந்தார்.
“இங்க பாரு போலீஸ்காரனோட அம்மானு நிரூபிக்காத. அவன் தான் சொல்லிட்டு போனானே வந்து எல்லாம் சொல்றேனு… அப்புறம் என்ன? கொஞ்ச நேரம் அமைதியா இரு. அந்த பொண்ணோட முகத்தை பார்த்தாலே தெரியுது அமைதியான பொண்ணுனு. ஏதோ ஒரு கஷ்டத்துல தான் அந்த பொண்ணும் இருக்குது போல… நம்ம பையன் முகத்துல இருக்கற சந்தோஷத்தை பார்த்தாலே தெரியுது அவன் எப்படியும் அந்த பொண்ண மீட்டெடுத்து தன்னோட வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துக்குவானு. அதனால ரொம்ப கவலைப்படாம போய் சாப்பாடு எடுத்து வை. கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணையும் எழுப்பி ஏதாவது சாப்பிட வை.” என்றார்.
தனது மகனின் மேலிருந்த நம்பிக்கையில் அவரும் தனது கவலைகளை மறந்து சரியென்று கூறி கொண்டே எழுந்து சென்றார்
கருத்து திரி:
கோவிலிலிருந்து வெளியேறிய வெற்றியோ எங்கே விட்டால் ஓடிவிடுவாளோ என்று நினைத்து கொண்டு கைவிடாமல் பிடித்திருந்தவளை இழுத்து கொண்டு தனது போலீஸ் வாகனத்தின் அருகே செல்ல அதற்கு முன் மஹாலட்சுமி தனது கணவனை அழைத்து “என்னங்க அவன நம்ம வண்டியில முதல்ல ஏற சொல்லுங்க… கல்யாணமே காக்கி யூனிஃபார்மல் ஆகிடுச்சு. தாலி கட்டுறதுக்கு ஒரு நல்ல நேரம் பார்க்கல, நல்ல துணி எடுக்கல… நாலு பேர கூப்பிடாம எல்லாம் நடந்தாச்சு… இதுல கல்யாணம் ஆன உடனேயே அந்த போலீஸ் ஜீப்புல தான் முதல் முதல்ல ஏறணுமா??” என்று புலம்பினார்.
அவரின் கோபமே இப்பொழுது புலம்பலாக வந்து கொண்டிருக்கிறது என்று புரிந்து கொண்ட அவரது மகனும் ஒரு சிறு புன்னகையை வெளிப்படுத்தி “சேகர் வண்டிய எடுத்துட்டு வீட்டுக்கு வந்துடுங்க…” என்று கூறிவிட்டு தனது மனைவியை அழைத்து கொண்டு அவர்களது காரில் ஏறினேன்.
காரை அவனது தந்தை ஓட்ட அருகில் அவனது அன்னை பின்னே வெற்றியும் தர்ஷினியும் அமர்ந்திருந்தனர்.
தர்ஷினிக்கோ ஏதோ ஒரு சுழலில் சிக்கி கொண்ட உணர்வு. ஒரு இரண்டு மணி நேரத்தில் தன் வாழ்க்கையே தலைகீழாகி போன உணர்வு. இந்த திருமணம் தேவையா? இவர் யார் எதற்கு இந்த திருமணம். ஒரு வேளை தன்னுடைய கதையே கேட்டு பரிதாபத்தினால் இந்த திருமணத்தை செய்து கொண்டாரா? ஆனாலும் எதற்கு? ஏன்? இவருடைய பெற்றோரை பார்த்தால் நல்லவர்கள் போல் தெரிகின்றனரே. அப்படிப்பட்டவங்களுக்கு தன்னை மாதிரி ஒருத்தி எதற்கு மருமகளாக? பல கேள்விகள் அவளிடத்தில் ஆனால் அதற்கு பதில் கூற கூடியவனோ அமைதியாக அவளது அருகில் அமர்ந்து வந்தான்.
அவளது பார்வை அவனை தழுவியது. இவ்வளவு நேரம் அவளின் யோசனையான முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன் அவளின் பார்வை தன்னை தழுவியதும் என்ன எனும் விதமாக புருவத்தை உயர்த்தி கேட்டான்.
ராயனின் கேஸை பற்றி அவளிடம் விசாரிக்க வரும் பொழுது இருந்த அவனது பார்வைக்கும் தற்பொழுது அவன் பார்க்கும் பார்வைக்கும் உள்ள வித்யாசத்தை நொடியில் புரிந்து கொண்டவள், “ஒன்னுமில்லை…” என்று கூறிக்கொண்டு மறுபுறம் திரும்பி கொண்டாள்.
அவனோ சிரித்து கொண்டே அவளின் புறம் சரிந்து காதருகே தன் மூச்சு காற்று படும் தூரத்தில் சென்று, “உன்னோட எல்லா கேள்விகளுக்கும் பதில் போக போக உனக்கே புரியும்…” என்றவனை திரும்பி “நான் மனசுக்குள்ள நினைச்சது இவருக்கு எப்படி தெரிஞ்சுது…” எனும் விதமாக கண்களை அகல திறந்து அவனை பார்த்தாள்.
“உன்னோட ஒவ்வொரு பார்வைக்குமான அர்த்தம் நானறிவேன் ஸ்வீட்டி…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக கூறினான்.
அவனின் பதிலில் அவளுடைய விழிகள் இன்னும் விரிந்தன.
இருவரின் மூச்சு காற்றும் மற்றொருவர் ஸ்பரிசிக்கும் தூரத்தில் இருக்க அவளின் விரிந்த அந்த விழிகளுக்குள் தன்னை தொலைத்து கொண்டிருந்தான் வெற்றி.
“ஏங்க முதல் வேலையா ஜோசியகாரன போய் பார்க்கனும். இன்னைக்கு நல்ல நாளா இல்லையானு தெரிஞ்சுக்கனும்…” என்ற அவனது அன்னையின் பேச்சில் சுதாகரித்து இருவரும் விலகினர்.
“மஹா அதான் கல்யாணம் முடிஞ்சுருச்சே… இனி எதுக்கு அதெல்லாம்…”
“அதுக்காக இப்படியே விட்டுட முடியுமா? அவனுக்கு தான் அறிவில்லை. முதல்லையே நம்மகிட்ட சொல்றதுக்கு என்னவாம்? யாரோ மாதிரி கல்யாணத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி சொல்றான்” என்று அங்கலாய்த்தார்.
அவரின் கோபம் புரிந்து சமாதானப்படுத்தும் விதமாய், “அம்மா…” என்று இழுக்க…
“என்னங்க அவனை எங்கிட்ட பேச வேண்டாம்னு சொல்ல சொல்லுங்க… நாம என்ன லவ்வுக்கு எதிரியா? லவ் பண்றோம் கல்யாணம் பண்ணி வைங்கனு சொன்னா என்னவாம்?”
இதை கேட்ட தர்ஷினிக்கு தான் மேலும் அதிர்ச்சியாக இருந்தது. “என்னது லவ்வா??” என்று கண்கள் தெரிக்க வாயை பிளந்து கொண்டு பார்த்தவளின் பார்வையை கண்டு வெற்றியின் இதழ்கள் சற்று தாராளமாகவே விரிந்தது.
“சாரி மஹாலட்சுமி… நான் முதல்லயே சொல்லி இருக்கனும் தான்… தப்பு பண்ணிட்டேன். ஆனா உங்கிட்டயும் அப்பாகிட்டயும் முன்னமே சொல்லி இருந்தேனே. நான் என்ன செஞ்சாலும் அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். என்னை நம்புங்கனு…” என்று தனது செய்கைக்கு நியாயம் வைத்தான்.
“அது ஏதோ எவனையாவது கொலை செய்ய போறான் அதுக்கு தான் அப்படி சொல்றானு நினைச்சேன். அன்னைக்கு மட்டும் இப்படினு தெரிஞ்சுருந்தா ஊரை அழைச்சு இந்த கல்யாணத்தை பண்ணி இருக்க மாட்டேனா?” என்று அப்பொழுதும் தனது மகனுக்கான பதிலை கணவனிடம் கூறிக்கொண்டிருந்தார்.
அவரோ இருவரின் சம்பாஷணைகளை கேட்ட படி அமைதியாக காரை ஓட்டி கொண்டிருந்தார்.
“அம்மா… என்னோட நிலைமை அப்படி… இவள தான் கல்யாணம் பண்ணுவேங்கறதுல உறுதியா இருந்தேன் ஆனா அதுக்கான நேரம் தான் எப்பனு தெரியாம இருந்தேன். ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க… நான் டைம் சொன்னா தானே உங்களால நல்ல நேரம் மண்டபம் எல்லாம் பார்க்க முடியும்?” என்றான் தாயிடம்.
“இங்க பாருங்க அவன் என்ன சொன்னாலும் நான் சமாதானம் ஆக மாட்டேனு அவங்கிட்ட சொல்லிடுங்க…” என்று அவர் சண்டை பிடிக்க அவரது மகனோ அவனை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டே வர அவர்களது வீடும் வந்துவிட்டது.
கோபத்துடன் இறங்கிய மஹாலட்சுமியோ, “அவனை இங்கேயே இருக்க சொல்லுங்க… ஆரத்தி எடுத்துட்டு வர்ரேன்…” என்று வீட்டுக்குள் நுழைந்தார்.
அவர் ஆரத்தி தட்டுடன் வெளியே வரவும், “ரெண்டு பேரையும் ஜோடியா நிக்க சொல்லுங்க…”என்று தனது கணவனுக்கு உத்தரவிட அவரோ தனது மகனை பார்த்தார்.
அவனோ எங்கோ பார்த்து கொண்டு நின்றான்.
மஹாலட்சுமியோ அவனின் நின்றிருந்த கோலத்தை பார்த்து தனது கணவரை தீயாக முறைத்தார்.
தனது மனைவியின் வேல் விழி பார்வையில் வெற்றியை நோக்கி “வெற்றி… அம்மா சொல்றத செய்டா…” என்றார்.
“நீங்களா ஆரத்தி எடுக்கறீங்க? அவங்க தானே எடுக்கறாங்க… அப்ப அவங்கள எங்கிட்ட நேரடியா பேச சொல்லுங்க…” என்று அவனும் ஏட்டிக்கு போட்டியாக பேசினான்.
இருவருக்கும் இடையில் அவர் எப்படி முழித்து கொண்டிருந்தாரோ அதே மாதிரி தர்ஷினியும் இவர்களின் சண்டையை பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.
அவன் ஒருபக்கம் முறுக்கி கொண்டு நிற்க அவனுக்கு ஒரு சதவீதத்திலும் குறைந்தவள் தான் இல்லை என்று அவனது அன்னையும் முறுக்கி கொண்டு நின்றார். இருவரின் நிலையை கண்ட சீனிவாசனோ மானசீகமாக தலையில் அடித்து கொண்டு அங்கே பரிதாபமாக நின்றிருந்த மருமகளையும் கண்டார்.
“இங்க பாருங்க… வீட்டுக்கு வந்த மருமகளை இப்படி வெளியவே நிக்க வச்சு அம்மாவும் மகனும் சண்டை போட்டுட்டு நிப்பீங்களா??” என்று அவருக்கு கோபம் வந்து கத்த அப்பொழுது தான் இருவருக்குமே உரைத்தது.
உடனே வெற்றி அவளின் அருகே வந்து நிற்க அவனது அன்னையோ “அந்த ஷூவ கழட்டிட்டு வந்து நில்லுடா...” என்று கத்தினார்.
அவனும் சமத்தாக தனது தாயின் கட்டளையை நிறைவேற்றி விட்டு தர்ஷினியின் அருகே வந்து நின்று அவளது கைகளை இறுக்க பற்றி கொண்டான்.
இருவரும் சேர்ந்தே வலது காலை எடுத்து வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்.
வீட்டிற்குள் நுழைந்த மருமகளை பூஜை அறைக்கு சென்று விளக்கேற்ற கூறினார். அவளும் அவரின் பேச்சை கேட்டு தவறாமல் செய்தாள்.
“உன் பெயரென்னமா?” என்று மஹா தர்ஷினியிடம் கேட்டார்.
அவள் பதில் கூறும் முன் முந்தி கொண்டு, “தேவதர்ஷினி… எனக்கு மட்டும் தேவா…” என்று காதலோடு கூறினான்.
அவனின் பதிலில் திகைத்து நின்றது என்னவோ தர்ஷினி தான்.
“ஏன் அவ பேசமாட்டாளா? அவளுக்கு நீ என்ன பின்னனியா பேசுற?” என்று அதற்கு எகிறிகொண்டு தனது மகனிடம் சண்டைக்கு நின்றார்.
“இங்க பாருங்க அவ ஒரு வாயில்லா பூச்சி… இந்த மிரட்டுற வேலை எல்லாம் அவகிட்ட வச்சுக்க வேணாம் சொல்லிட்டேன்.”
“இங்க பாரு உன் வேலை எவனாவது ஒருத்தன ஜெயில்ல போட்டு அடிக்கனும், இல்லையா என்கவுண்டர் அப்படிங்கற பேர்ல எவனாவது சுட வேண்டியது. அதுக்கும் எவனாவது சிக்கலைனா இந்த அரசியல்வாதிங்க அப்புறம் ஏதாவது பேரணி இதுக்கெல்லாம் பந்தோவஸ்து பண்ண வேண்டியது மட்டும் தான். இங்க எங்க ரெண்டு பேருக்கு இடையில நீ வந்தீனு வச்சுக்கோ அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்.” என்று தனது மகனை மிரட்டி கொண்டிருக்க தர்ஷினிக்கோ அரசியல்வாதி என்ற சொல்லை கேட்டவுடன் இதயமே நடுங்கிற்று.
இவ்வளவு நேரம் ராயனையும் அவனது அண்ணனையும் மறந்து போயிருந்தவளுக்கு அவர்களது நினைவு வந்து அவளது உடலை நடுங்க செய்து கண்கள் கலங்கிற்று.
“சரி… சரி என்னமோ பண்ணுங்க… ஆனா என் பொண்டாட்டி கண்ணுல இருந்து மட்டும் கண்ணீர் வந்துச்சு அப்புறம் நானும் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்…” என்று பேசி கொண்டிருந்தவனின் கைப்பேசி அழைத்தது.
கைப்பேசியை எடுத்து திரையில் தெரிந்த தியாகுவின் எண்ணை கண்டவனின் நெற்றி யோசனையில் சுருங்க, “சார்… சொல்லுங்க…” என்றான் இணைப்பை ஏற்படுத்தி.
அந்தப்பக்கம் தியாகுவோ “வெற்றி எங்க இருக்க? உடனே கிளம்பி ராயனை அட்மிட் பண்ணி இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு வா…” என்றார் கட்டளையாக.
“நான் வீட்டுல இருக்கேன் சார்… ஏதாவது பிரச்சனையா?”
“ஆமா எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு விரைவா வா…” என்று கூறி வைத்து விட்டார்.
“என்ன பிரச்சனையா இருக்கும்?” என்று யோசனை செய்தவன் வெளியில் சேகர் தனது வண்டியுடன் வந்திருக்க “அம்மா… கொஞ்சம் வேலை இருக்கு… நான் நைட் வர்ர லேட் ஆனாலும் ஆகும்… பார்த்துக்கோங்க… வந்து எல்லா விசயமும் சொல்றேன்.” என்றவன் விழிகளால் தர்ஷினியை காட்டி வெளியே செல்ல போனான்.
“டேய்… பால் பழமாவது சாப்பிட்டு போ…” என்று அவனது அன்னை அழைக்க…
“இல்ல மா… ஒரு சின்ன பிரச்சனை… இதுக்கெல்லாம் நேரமில்லை…” என்றவன் தனது போலீஸ் வாகனத்தில் ஏறி சென்று விட்டான்.
“இவனுக்கு எப்ப பார்த்தாலும் இதே பொழப்பா போச்சு…” என்று புலம்பிக் கொண்டே அங்கே திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் நின்று கொண்டிருந்த தர்ஷினியை கண்டு, “தர்ஷினி ஏன் உன் முகம் ஒரு மாதிரி வாடி போய் இருக்கு??? தலைவலிக்குதா?” என்று கேட்டார்.
“ஆமாம்…” என்று அவளும் சிறிது தயங்கி கொண்டே கூற…
“சாப்பிடறயா?? இல்ல காபி ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?” என்று மஹாலட்சுமி கேட்டார்.
“இ… இல்ல… கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியா போய்டும்…” என்றாள் தயங்கி கொண்டே.
அங்கே இருந்த அறையை காட்டியவர் “போடா… கொஞ்ச நேரம் போய் தூங்கு…” என்று கூற அவளும் எப்பொழுதடா தனிமை கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருக்க சட்டென்று அந்த அறைக்குள் புகுந்து கதவை அடைத்து கொண்டாள்.
அவளின் நடவடிக்கைகளை பார்த்து கொண்டே இருந்த மகாலட்சுமியோ, “பொண்ணு ரொம்ப அழகா இருக்காங்க… ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு… ஆனா ஏங்க இந்த பொண்ணு ரொம்ப சோகமா இருக்குது? இந்த பொண்ணுக்கு ஏதோ பிரச்சனை இருக்குமோ… ஒரு வேளை நம்ம வெற்றிய இவளுக்கு பிடிக்கலையோ… ஆனா அவன் முகத்தில இன்னைக்கு இருந்த சந்தோஷத்துக்கு ஒரு அளவே இல்லை. ஆனா இந்த பொண்ணு… எனக்கென்னமோ பயமா இருக்குதுங்க…கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தவன் இப்ப தான் கல்யாணம் செஞ்சு இருக்கான். ஆனா இந்த பொண்ணு ரொம்ப சோகமா இருக்கா… ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்துடுமோ…” என்று தனது கணவரின் அருகே அமர்ந்து கொண்டே கேள்வி எழுப்பி கொண்டிருந்தார்.
“இங்க பாரு போலீஸ்காரனோட அம்மானு நிரூபிக்காத. அவன் தான் சொல்லிட்டு போனானே வந்து எல்லாம் சொல்றேனு… அப்புறம் என்ன? கொஞ்ச நேரம் அமைதியா இரு. அந்த பொண்ணோட முகத்தை பார்த்தாலே தெரியுது அமைதியான பொண்ணுனு. ஏதோ ஒரு கஷ்டத்துல தான் அந்த பொண்ணும் இருக்குது போல… நம்ம பையன் முகத்துல இருக்கற சந்தோஷத்தை பார்த்தாலே தெரியுது அவன் எப்படியும் அந்த பொண்ண மீட்டெடுத்து தன்னோட வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துக்குவானு. அதனால ரொம்ப கவலைப்படாம போய் சாப்பாடு எடுத்து வை. கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணையும் எழுப்பி ஏதாவது சாப்பிட வை.” என்றார்.
தனது மகனின் மேலிருந்த நம்பிக்கையில் அவரும் தனது கவலைகளை மறந்து சரியென்று கூறி கொண்டே எழுந்து சென்றார்
கருத்து திரி:
விழிகளின் அருகினில் வானம் - கருத்து திரி
தங்களுடைய கருத்துக்கள் தான் எனக்கு பூஸ்டர். அதனால் தவறாமல் கருத்துக்களை பதிவிட வேண்டுகிறேன்.
pmtamilnovels.com