வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

விழிகளின் அருகினில் வானம் - கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 23

சரியாக மாலை ஐந்து மணிக்கு அந்த மண்டபத்தின் முன் காரிலிருந்து இறங்கினர் தர்ஷினியும் வெற்றியும்.

தர்ஷினியின் அழகான அந்த கிரீம் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் வெற்றியும் கோட் அணிந்து வந்து இருந்தான். அவனுக்கு அந்த உடை மிகப் பொருத்தமாக இருந்தது. ஏற்கனவே அழகனாக இருந்தவனை இன்னும் அழகாக மெருகேற்றி காட்டியது அந்த உடை.

இருவரும் இணைந்து இறங்க அவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர்.

அவர்களின் வருகைக்கு முன்னவே வெற்றியின் உறவினர்கள் வந்திருக்க அனைவரையும் பார்த்து நலம் விசாரித்து கொண்டே சென்றான்.

தர்ஷினியின் விரல்களோடு தனது விரல்களையும் சேர்த்து கெட்டியாக கோர்த்து கொண்டான்.

அவளுக்கு தான் மிகுந்த சங்கடமாக இருந்தது. தற்பொழுது அனைவரின் பார்வையும் அவர்களின் மேல் இருக்க அவனது கைகளை உதறிவிட்டு அவனை உதாசினப்படுத்தவும் முடியாத நிலையில் அல்லவா இருந்தாள்.

மிகவும் மும்முரமாக அவர்களிடம் பேசி கொண்டிருந்த வெற்றியிடம் எவ்வாறு அழைத்து அவனிடம் கைகளை விடும்படி கூற செய்ய என்று யோசித்து கொண்டிருந்தாள் தர்ஷினி.

அவளின் கைகளோடு இணைந்திருந்த அவனின் கைகளில் உள்ளங்கையை மெதுவாக சுரண்டினாள் தர்ஷினி.

அவனோ அப்பொழுதும் அதை உணர்ந்தான் இல்லை. இது வேலைக்காகாது என்று நினைத்த தர்ஷினியோ தனது கையை பிடித்திருந்த வெற்றியின் கைகளின் மணிக்கட்டின் மேற்புறம் மற்றொரு கைகளினால் யாவரும் அறியாமல் கிள்ளினாள்.

அவனுக்கு அப்பொழுது அது உரைத்தது. ஆனால் அவள் புறம் திரும்பாமல் அவர்களிடம் மேலும் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டே மேடையை நோக்கி நகர்ந்து சென்றான்.

“ஏய் எதுக்குடி இப்ப கிள்ளுன?” என்றான் மிக மெல்லிய குரலில் அவளுக்கு மட்டுமே கேட்கும் விதமாக. பேச்சு மட்டுமே அவளிடம் பார்வை சுற்றியிருப்பவர்களிடமே இருந்தது.

“நான் ஒன்னும் ஓடி போக மாட்டேன். எதுக்கு இப்ப கையை இப்படி கெட்டியா பிடிச்சுகிட்டே வர்றீங்க??”

“சரி… கையை பிடிக்கலை…” என்றவன் அவளது இடையினை பிடித்திருந்தான்.

சேலையின் இடையில் தெரிந்த அவளது வெற்று இடையில் அவனது கரங்களின் சூடு பட்டதுமே அவளது மேனி ஒரு நிமிடம் சிலிர்த்தது.

அதை வெற்றியுமே உணர்ந்தான்.

அதே சமயம் அவர்களின் அருகே வந்த வெற்றியின் உறவினர் ஒரு பெண்ணோ “என்னமா நல்லா இருக்கயா?? ரெண்டு பேரோட ஜோடி பொருத்தம் சூப்பர். கல்யாணத்துக்கு தான் எங்களை கூப்பிடல ரிஷப்சனாவது வச்சீங்களே…” என்று தர்ஷினியிடம் ஆரம்பித்து வெற்றியிடம் அங்கலாய்த்து கொண்டே கூறினார்.

வெற்றிடையில் அவனது கைகளின் குறுகுறுப்பு தாங்க முடியாமல் நின்று கொண்டிருந்த தர்ஷினிக்கோ அவஸ்தையாக இருக்க அவர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் கஷ்டப்பட்டு சிரித்து வைத்தாள்.

அவளுக்கும் சேர்த்து அவனே பதில் கூறி சென்றான்.

“ப்ளீஸ் கையையே பிடிச்சுக்கோங்க… எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு… கையை எடுங்க…” என்று கெஞ்சினாள் தர்ஷினி.

அவளை திரும்பி பார்த்தவன் “இனி மேல் எப்பவும் கையை பிடிச்சா விடுனு சொல்ல மாட்டியே…” என்று அவளை பார்த்து கேட்டான்.

“இல்ல…” என்று கூறிக்கொண்டே அவனை பார்த்து இடவலமாக தலையாட்டினாள்.

அவனும் அவளது இடையினை விடுத்து கைகளை பிடித்து கொண்டான்.

இவர்கள் விவாதம் நிற்க அதேசமயம் மேடை மீது ஏறியிருந்தனர்.

மேடையேறிய மஹாலட்சுமியோ யாழினியின் கைகளில் இருந்த தட்டில் வைக்கப்பட்டிருந்த மாலையில் ஒன்றை எடுத்து வெற்றியின் கைகளில் கொடுத்து அணிவிக்க கூறினாள்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு நிற்க வெற்றியோ அந்த அழகிய இளஞ்சிவப்பு நிற ரோஜா இதழ்களின் கொண்டு வடிவமைக்கப் பட்டிருந்த அந்த மாலையின் இடையே தாமரை மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதை ரசித்து பின் தன் கைகளில் ஏந்தி அவளின் சங்கு கழுத்தில் போட்டு விட்டான்.

அவனில் இருந்த ரசனை அவளுக்கு சுத்தமாக இருக்கவில்லை போலும் ஏதோ கடனுக்கே என்று அந்த மாலையினை எடுத்து வெற்றியின் கழுத்தில் இட்டாள்.

அவளுக்கு தான் காதல் என்பது இல்லை ஆனால் அவன் அதை காதலோடு ஏற்று கொண்டான்.

அதன் பிறகு நேரம் சிறிது சிறிதாக கழிய உறவினர்கள் அவனின் உடன் பணிபுரிவோர் என அனைவரும் சிறிது சிறிதாக வரத் தொடங்கினர்.

மேடையேறி அவர்களுக்கு உண்டான பரிசுப்பொருட்களை கொடுக்க இருவரும் சேர்ந்தே வாங்கி கொண்டனர்.

மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க நின்றனர்.

புகைப்பட கலைஞர் வெற்றியின் அருகே வந்து “ஸார்… நீங்க லவ் மேரேஜ் தானே…” என்று கேட்டான்.

அவனோ நெற்றியை சுருக்கி “ஆமா… எதுக்கு இப்ப இதை கேட்கறீங்க…” என்றான்.

“இல்ல சார்… அவங்க போட்டோக்கு சிரிக்கவே மாட்டேங்குறாங்க… அதான் கட்டாய கல்யாணமோ என்னமோனு தான்…” என்று தயக்கமாக கேட்டான்.

அவனின் கேள்வியில் வெற்றிக்கு சிறிது கோபம் வந்தது. தனது அந்தரங்கத்தை பற்றி மற்றவர்கள் விவாதிப்பதை விரும்ப மாட்டான்.

“காதல்ல ஊடல் இல்லாம இருக்குமா???” என்று சிரித்து கொண்டே அவனை பார்த்து கேட்டான்.

“ஓ… அது சரி தான் சார்… ஆனா இது உங்க் வாழ்க்கையில முக்கியமான மொமன்ட்… இனி ஒரு போதும் இந்த நொடி திரும்ப கிடைக்காது. சோ அவங்கள கொஞ்சம் சிரிக்க சொல்லுங்க… இங்க பாருங்க இந்த போட்டோவ…” என்று இதற்கு முன்னர் எடுத்த புகைப்படத்தில் தர்ஷினியின் புகைப்படத்தை காட்டினான் தன்னுடைய புகைப்பட கருவியின் வாயிலாக.

மேலும் “அவங்க சண்டையை ஒரு ரெண்டு மணி நேரம் ஒதுக்கி வைக்க சொல்லுங்க சார்… ப்ளீஸ்… இல்லனா போட்டோ நல்லா வராது…” என்றான்.

“சரி நான் பார்த்துக்கறேன்.” என்றவன் திரும்பி தர்ஷினியின் பக்கம் குனிந்து நம்ம ப்ர்ஷனல் நம்மளோட இருக்கட்டும். மத்தவங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டாதா… கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்..” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக முகத்தில் புன்னகையும் வார்த்தையில் சூட்டோடும் கேட்டான்.

அவளுக்கும் அந்த போட்டோ கிராபர் பேசியது கேட்டதால் அவனிடம் பதில் கூறாமல் முகத்தை சிரித்த மாதிரி வைத்து கொண்டாள்.

அதன்பின்பு எடுத்த புகைப்படங்களில் தர்ஷினியின் முகத்தில் புன்னகை இருந்தது. ஆனால் அதில் உயிர்ப்பு இல்லை.

சிறிது நேரம் கழித்து அங்கே போலீஸ் கமிஷனர் தியாகு வந்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

“சார்… வாங்க… வாங்க…” என்று சிரிப்புடனே கூறினான் வெற்றி.

“வெற்றி இதெல்லாம் நல்லாவே இல்ல சொல்லிட்டேன். எங்க கூட தான்டா ராயன் கேசுல சுத்திட்டு இருந்த… எப்ப நீ கல்யாணம் பண்ணிகிட்ட??” என்று கேட்டு கொண்டே அவனது தோளில் தட்டினார்.

அவனோ சிரித்தானே தவிர வேறு எதுவும் பேசவில்லை.

தர்ஷினியோ அவர்களின் பேச்சினை சுவாரஸ்யம் இல்லாமல் கேட்டுகொண்டிருந்தாள்.

“என்ன மேன்… என்னை எல்லாம் உன் வொய்ஃபுக்கு இன்ற்றோ கொடுக்க மாட்டியா?? பாரு புரியாத ஒரு பார்வையோட என்னை பார்க்குறா??” என்று வெற்றியிடம் கூறினார்.

“சாரி சார்… தேவா இவர் தான் கமிஷனர் தியாகு. சார் இவ என் வொய்ஃப் தேவதர்ஷினி.”

அவரும் சிரித்து கொண்டே “என்னமா தேவதர்ஷினி… பையன் என்ன சொல்றான்? வீட்டுல ரொம்ப மிரட்டுறானா? ஏதாவது பிரச்சனைனா எங்கிட்ட சொல்லு… நான் பார்த்துக்கறேன்…” என்று கூறினார்.

அவளோ வலுக்கட்டாயமாக சிரித்து கொண்டே “அப்படி எல்லாம் இல்ல சார்…” என்று கூறினாள்.

“சார்… என்னை பார்த்தா கொடுமை படுத்தரவன் மாதிரியா தெரியுது?”

“யாரு சொன்னாங்க அப்படி? உன்னை மாதிரி ஒரு தங்கமான புள்ளைய எங்கேயும் பார்க்க முடியாது…” என்று கூறிக்கொண்டே அவர்களின் அருகே வந்தார் ஜெயந்தி. அவர் கமிஷனரின் மனைவி.

“வாங்கமா…” என்று அவரையும் வரவேற்றவன் “எங்கே அந்த வாண்டு??” என்று மேலும் கேட்க, ஜெயந்தியின் பின்னாலிருந்து வெளிப்பட்டாள் அந்த இருபது வயது பெண்.

“என்ன வெற்றி??? என்னைய தானே எதிர்பார்த்த?” என்று கூறினாள்.

அவனும் சிரித்தபடியே ஆமோதிப்பாக தலையசைத்தான்.

“நானில்லாம உன் ரிஷப்ஷன் நடந்துருமா?? கல்யாணம் தான் சொல்லாம பண்ணிகிட்ட…”

“ஏய்… அவன் உன்னை விட வயசுல மூத்தவன்… அண்ணானு கூப்பிடுனு எத்தனை தடவை சொல்றது?” என்று ஜெயந்தி மிரட்டினாள்.

“விடுங்கமா… சின்ன பொண்ணு தானே…” என்றான் வெற்றி.

“பார்த்தயா சப்போட் எனக்கு தான்… வெற்றி இருக்க பயமேன்…” என்றவள் அவர்களின் அருகே சென்று “எனிவே… ஹாப்பி மேரீட் லைஃப்…” என்று இருவருக்கும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தாள்.

“என்ன வெற்றி… உன் வைஃப் பேசவே மாட்டீங்குறாங்க??” என்றாள் தேவதர்ஷினியை வம்பிழுக்கும் விதமாக.

ஜெயந்தியோ “எல்லாரும் உன்ன மாதிரி நான் ஸ்டாப்பா பேசிட்டே இருப்பாங்களா? அந்த பொண்ண பார்த்தாலே தெரியல? ரொம்ப அமைதியா நல்ல பொண்ணு மாதிரி தெரியுது…” என்றார் தர்ஷினியின் கைகளை பிடித்து கொண்டு.

“அமைதியா??? அதெல்லாம் நமக்கு செட் ஆகாதே…” என்று கூறியவள் “வெற்றி… பெட் ரமாஸ் லைட்டே தான் வேணுமா???” என்றாள் குறும்புத்தனத்தோடு.

அவனோ தர்ஷினியின் தோளில் கை போட்டு கொண்டே “கண்டிப்பா…” என்றான் சிரித்து கொண்டே…

“அப்ப உன் தலையெழுத்து அவ்வளோ தான்…” என்றவளை கண்டு ஜெயந்தியோ “வாணி…” என்று அதட்டினார்.

பின்பு தர்ஷினியிடம் திரும்பியவர் “மன்னிச்சுடு மா… அவ ஏதோ சின்ன பொண்னு தெரியாம பேசறா…” என்றார்.

இதற்கு வெற்றி பதில் கூற முனையும் முன் இவ்வளவு நேரம் அமைதியாக இவர்களின் உரையாடல்களை கேட்டு கொண்டிருந்த தர்ஷினியோ “ஐயோ… அம்மா… எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்கறீங்க??? சின்ன பொண்ணு தானே… துருதுருனு விளையாட்டு தனமா பேசறா… எனக்கு வாணிய ரொம்ப பிடிச்சுருக்கு…” என்றாள் அவரை சமாதானப்படுத்தும் விதமாக.

அதற்குள் கமிஷனர் தியாகுவோ “ஜெயந்தி இது ரிஷப்ஷன் நாமளே ரொம்ப நேரமா நின்னு பேசிட்டு இருக்கோம்… இன்னும் எத்தனை பேர் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க பாரு…” என்றார்.

பின்பு அனைவரும் நின்று புகைப்படம் எடுத்து கொள்ள கிளம்பி செல்லும் முன் “வெற்றி… கண்டிப்பா ரெண்டு நாள்ல நீங்க வீட்டுக்கு விருந்துக்கு வரனும்…” என்று கூறினார் ஜெயந்தி…

அவர்களும் சிரித்த முகமாகவே சரி என்று கூறினார்.

அடுத்தடுத்து உறவினர்கள் வருகை புரிந்திருந்தனர்.

இதற்கிடையே கல்யாண மண்டபத்தில் தயங்கி தயங்கி இரு ஜீவன்கள் உள்ளே நுழைந்தனர்.

அவர்களை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே நுழைவாயிலிலிருந்து வரவேற்பிற்கான அலங்கார மேடை தெரிந்தது. அதில் நின்று கொண்டிருந்த வெற்றியையும் தர்ஷினியையும் கண்ட இருவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் வழிந்தது.

அவர்களின் வருகையை எதிர் பார்த்து காத்திருந்து வாயிலையே பார்த்து கொண்டிருந்த வெற்றிக்கோ அவர்களின் உருவம் தெரிய அருகே நின்றிருந்த அன்னையை கண்டு அவர்களை காட்டி அழைத்து வர சொன்னான்.

உடனே மஹாலட்சுமி தனது கணவரை அழைத்து கொண்டு வேக வேகமாக அவர்களின் அருகே சென்று “என்ன சம்பந்தி இவ்வளவு லேட்டா வந்திருக்கீங்க… நேரத்திலயே வர வேண்டாமா??? “ என்று மஹாலட்சுமி கூறினார்.

சீனிவாசனோ “மன்னிச்சுடுங்க… எங்களுக்கு உங்களை தெரியல… இந்த வெற்றியும் எங்ககிட்ட சொல்லல… இல்லனா நாங்களே நேர்ல வந்து கூப்பிட்டுருப்போம்..” என்று அவரும் அவரது பங்கிற்கு கூறினார்.

அதை கேட்ட தர்ஷினியின் பெற்றோர்களுக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு பெரிய மனுஷங்க நம்ம கிட்ட மன்னிப்பு கேட்கறாங்களே…” என்று எண்ணிய தர்ஷினியின் தந்தையோ “அச்சோ… நீங்க எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுண்டு… பரவாயில்லை…” என்றார்.

“சரி… சரி… வாங்க அவங்கள வந்து ஆசிர்வாதம் பண்னுங்க…” என்று மஹாலட்சுமி கலாவதியின் கைகளை பிடித்து இழுத்தார்.

“அச்சோ… நாங்க எல்லாம் எதுக்கு? இங்க இவ்வளவு பெரிய மனுஷாலுங்க இருக்காங்க…” என்று அவரின் இழுப்புக்கு செல்லாமல் நின்றார்.

“இதென்ன இப்படி சொல்லிட்டீங்க… மத்தவங்கள விட பெத்தவங்க ஆசிர்வாதம் தான் முக்கியம்… நல்ல வேளை நீங்க வந்துட்டீங்க… இல்லனா எனக்கு ஏதோ குறையிருக்கற மாதிரியே தோணிட்டு இருக்கும்… வாங்க” என்று அவரை வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு சென்றனர்.

எந்தவொரு தாய் தந்தைக்கும் தனது மகளை மணமகள் கோலத்தில் பார்க்க யாருக்கு தான் தெவிட்டாமல் இருக்கும். இதோ மணமக்கள் நின்று கொண்டிருந்த மேடைக்கு அருகே வரவர அவளை கண்களால் நிறைத்து கொண்டனர் இருவரும்.

எங்கேயோ பார்த்து கொண்டிருந்த தர்ஷினியை “ஏய் தேவா… இங்க பாரு யாரு வந்திருக்காங்கனு…” என்று அவளிடம் கூற அவளும் பார்க்க ஒரு நிமிடம் அசைவற்று நின்று விட்டாள்.

யாரை தன் வாழ்நாளில் சந்திக்க மாட்டோமா என்று ஏங்கியிருந்தாளோ அவர்களே தன் கண்முன்னால் வந்து நிற்க அவளின் உலகமே அசைவற்றது போல் இருந்தது. கண்களில் கண்ணீர் நிறைந்து அவளின் பார்வையை மறைக்க அதை சட்டென்று தனது புறங்கைகளினால் துடைத்து கொண்டாள்.

துடைக்க துடைக்க அவளது கண்களில் ஊற்று போல பெருக்கெடுத்தது… அவளின் கண்ணீரை கண்ட வெற்றி “தேவா… என்னதிது… சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டே இருக்க… பாரு மேக்கப் எல்லாம் கலையுது…” என்றான்.

அவனின் பேச்செல்லாம் அவளுக்கு ஏறினால் போல் தெரியவில்லை. அவனை கண்டு “அ.. ம்மா… அ…ப்பா…” என்று அப்பொழுது தான் பேச கற்றுக்கொள்ளும் குழந்தை போல் திணறினாள்.

அவளின் அந்த குழந்தை தனத்தை பார்த்தவுடன் அவளின் தோளோடு கைபோட்டு தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டே “ஆமா உங்க அம்மா… அப்பா தான்… நான் தான் அவங்ககிட்ட பத்திரிக்கை கொடுத்து உன்னை பத்தின எல்லா உண்மையும் சொல்லி அழைச்சுட்டு வந்தேன்… போதுமா… இப்ப சந்தோஷமா…” என்றான்.

அவளும் “ரொம்ப தேங்க்ஸ்…” என்றாள் கண்களில் கண்ணீரும் உதட்டில் சிரிப்போடும்.


“ஏய்… நமக்குள்ள என்ன தேங்க்ஸ்… உன்ன சந்தோஷமா வச்சுக்க வேண்டியது என் பொறுப்பு கண்ணம்மா…” என்றான் கண்களில் காதலோடு…
 
Last edited:
அத்தியாயம் – 24

அவள் மீதான உள்ளத்தில் நிறைந்திருந்த காதலை விழி வழி கடத்தி கொண்டிருந்தான். ஆனால் அதை உணர வேண்டியவளுக்கோ அது தெரியாமலே போனது. அவள் சிந்தையில் தற்பொழுது நிறைந்திருந்தது எல்லாம் அவளது அன்னை தந்தையே. இது வெற்றியின் துரதிர்ஷடமே.

மேடை ஏறியவர்கள் மணமக்களை நோக்கி வருவதற்கு முன்பே வேக எட்டுக்கள் வைத்து அவர்களை அடைந்திருந்தாள் தர்ஷினி. இருவரையும் கட்டிக்கொண்டு இவ்வளவு நாள் அவர்களை காணாது இருந்த துயரத்தினை சொல்ல அவ்வளவு விருப்பம். தனது கண்ணீரால் அவர்களது பாதங்களை கழுவி அவர்களிடம் மன்னிப்பு வேண்டிடவும் ஆசை. ஆனால் ஏதோ ஒன்று அவளை தடுத்து நிறுத்தியது.

அவளது கண்களில் வழிந்த கண்ணீர் மன்னிப்பை வேண்டி யாசித்தது. அதை உணராமல் இருப்பார்களா அவளது பெற்றவர்கள்.

உடனே கலாவதி அவளை கட்டியணைத்து அழுது தீர்த்தார். அவருக்கு குறையாத கண்ணீர் அவளிடமும்.

“ம்ப்ச்… கலா… என்னதிது… அவ தான் குழந்தை. இப்படி அழுதுண்டே இருக்கா… நீயுமா??? இங்க பாரு மாப்பிள்ளையோட சொந்த பந்தங்கள் அவர் கூட வேலை செய்யறவங்க எல்லாரும் வந்துருக்காங்க… நீங்க இப்படி ரெண்டு பேரும் அழுகறத பார்த்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க. அவங்களுக்குள்ள மரியாதை கெடுக்கற மாதிரி நடந்துகாதீங்க ரெண்டு பேரும்…” என்று அதட்டலாக கூறினார் தர்ஷினியின் தந்தை ராமானுஜம்.

“என்ன சம்பந்தி இது ??? பாசத்திற்கு கட்டுப்பாடு விதிக்க முடியுமா? சொல்லுங்க? யார் என்ன நினைச்சா நமக்கு என்ன??” என்று சீனிவாசன் கூறினார்.

“அது இல்ல சம்பந்தி…” என்று ஏதோ கூற வர…

அதற்குள் மஹாலட்சுமி “அம்மாடி தர்ஷினி… அழுது அழுது உன் மேக்கப் கலைஞ்சுருச்சு… நீ உன் ரூமுக்கு போய் முகம் கழுவி கொஞ்சம் மேக்கப் போடு… இரு உனக்கு துணைக்கு யாழினியை வர சொல்றேன்… சம்பந்திமா… நீங்களும் கொஞ்சம் அவளுக்கு துணைக்கு போங்க…” என்று யாழினியை அழைத்து தர்ஷினிக்கு உதவ சொன்னார்.

தர்ஷினி அறைக்குள் நுழைந்ததும் “ம்மா… நீயும் அப்பாவும் என்னை மன்னிச்சுட்டீங்க தானே…” என்று சிறுபிள்ளை போல் கேட்டாள்.

“அசடு… நீ என்னடி தப்பு செஞ்ச… நாங்க பண்ணினது தான் தப்பு… உன்னை நம்பாம இருந்தோம் பாரு… அது தான் நாங்க பண்ணின மிகப்பெரிய தப்பு… விடு பழசையே நினைக்காம இப்ப கிடைச்சிருக்க புது வாழ்க்கையை நல்லபடியா வாழுற வழியை பாரு… போ… உன் மாமியார் சொன்ன மாதிரி மேக்கப் போடு… சும்மா அழுதுகிட்டே இருக்காத… ரிஷப்ஷன் முடியட்டும். எல்லாம் பேசிக்கலாம். ”

“ம்மா…” என்று சிறு பிள்ளை போல் ஏக்கமாக கூறினாள்.

“தர்ஷு குட்டி… அம்மா சொல்றேனல்ல போ… சீக்கிரம் கிளம்பு… வெளிய மாப்பிள்ளை உனக்காக காத்துண்டு இருப்பார். பெரிய பெரிய ஆளுக எல்லாம் வருவாங்க… அங்க அவர் மட்டும் தனியா நின்னுண்டு இருந்தா நல்லா இருக்காது…” என்று தனது வழக்கமான அதட்டலில் அவள் தயாராக சென்றாள்.

யாழினி அவளை தயார் படுத்தி முடிப்பதற்கும் மஹாலட்சுமி வந்து தர்ஷினியை அழைப்பதற்கும் சரியாக இருந்தது.

வெளியே ராமானுஜத்தை அழைத்து சென்று அருகே அமர வைத்து பேசி கொண்டிருந்தார் சீனிவாசன்.

“மன்னிச்சுடுங்க... என் பையன் உங்ககிட்ட சொல்லாம உங்க பொண்ணு கழுத்துல தாலிய கட்டிட்டான்… அவன் எங்க கிட்டயே சொல்லல… சும்மா கோவிலுக்கு வாங்கனு கூப்பிட்டான். அங்க போனா தர்ஷினி கழுத்துல தாலிய கட்டிட்டான். எங்களுக்கே ஆச்சர்யம் தான். அதுவும் உங்க பொண்ணுக்கு கல்யாணம் நீங்களே அங்க புரோகிதராவும் இருந்திருக்கீங்க… அப்ப உங்களுக்கு எவ்வளவு மனசு வலிச்சுடுக்கும்…” என்றார் வருத்தத்தோடு.

“ம்ப்ச்… எனக்கு அப்ப ஒன்னுமே புரியல… ஆனா மாப்பிள்ளையோட போலீஸ் உடுப்பை பார்த்து கொஞ்சம் சமாதானமடைஞ்சேன். அத்தோட அன்னைக்கு சம்பந்திமா பேசினதும் எனக்கு உங்க குடும்பத்து மேல நல்ல அபிப்ராயம் வந்துச்சு. என் பொண்ணோட வாழ்க்கை எப்படியோ தறிகெட்டு போய்டுச்சோனு நினைச்சுண்டே கவலைப்பட்டுட்டு இருந்தேன். ஆனா இந்த கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் நிம்மதியா இருந்தாலும் மனசுக்குள்ள கொஞ்சம் உறுத்தல் இருந்துண்டு இருந்தது என்னவோ உண்மை தான். அதுக்கப்புறம் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து தர்ஷினிக்கு நடந்தது எல்லாம் சொல்லி அவ மேல எந்த தப்பும் இல்லைனு சொன்னார். அவ மேல இருந்த விருப்பத்தையும் சொல்லி இந்த கல்யாணம் நடந்ததை பத்தியும் சொன்னார். எனக்கு அதுக்கப்புறம் தான் நிம்மதியா இருந்துச்சு… இந்த ரிஷப்ஷனுக்கும் எங்களை கூப்பிட்டார்.”

“ம்… அவ அந்த சின்ன வயசுல இப்படி எல்லாம் கஷ்டப்படனும்னு தலையெழுத்து போல… அதான் விடுங்க சம்பந்தி… இனி எல்லாம் நல்ல படியா நடக்கும்.” என்று அவருக்கு ஆறுதல் கூறி கொண்டிருந்தார்.

“உங்க பெருந்தன்மை எல்லாம் யாருக்கும் வராது. என்னோட பொண்ணோட நிலைமை பத்தி தெரிஞ்சும் உங்க மாட்டு பொண்ணா ஏத்துகிட்டீங்களே… ரொம்ப சந்தோஷம். எப்பவுமே நாங்க உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டவங்க…” என்று தனது கண்களில் உதிர்த்த நீருடன் சீனிவாசனை கையெடுத்து கும்பிட்டார் ராமானுஜம்.

அதற்குள் பதறி அவரின் கைகளை இறக்கி விட்ட சீனிவாசனோ “எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க… தர்ஷினி இனி எங்க வீட்டு பொண்ணு. அவள நாங்க நல்லா பார்த்துக்குவோம் கவலைப்படாதீங்க. அதோட உங்க பொண்ணு தான் என் பையனுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கா… தர்ஷினி மட்டும் மறுபடியும் வரலைனா என் பையன் இந்த ஜென்மத்துல கல்யாணம்னு ஒன்ன நினைச்சு பார்த்திருக்கவே மாட்டான். நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்…” என்று கூறினார்.

அதற்குள் யாரோ ஒருவர் அழைக்க சீனிவாசன் “கொஞ்சம் பொறுங்க சம்பந்தி நான் வந்துடறேன்…” என்று கூறிவிட்டு எழுந்து சென்றார்.

அவரின் அருகே கலாவதி வந்து அமர இருவரின் பார்வையும் மேடையில் நின்று கொண்டிருந்த வெற்றி மற்றும் தர்ஷினியின் மேலேயே இருந்தது.

“எப்படியோ நம்ம பொண்ணுக்கு அந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைச்சுதே அதுவே சந்தோஷம்னா…” என்று கலாவதி கூற அதற்கு ஆமோதிப்பாக தலையை மட்டுமே ஆட்டினார் ராமானுஜம்.

மேடையில் இருந்த தர்ஷினியின் விழிகளோ அடிக்கடி தனது தாய் தந்தையரின் பக்கம் விழுக அதை கண்ட வெற்றியோ “அவங்க எங்கேயும் போக மாட்டாங்க… இங்க தான் இருப்பாங்க… உங்க அம்மா அப்பாவ பார்க்கிற பார்வையை கொஞ்சம் புருஷன் பக்கமும் திருப்புமா… நான் பாவமில்ல…” என்று கூற அதை கேட்டவளோ திருதிருவென்று விழித்து கொண்டிருந்தாள்.

“ஏய் போதும்டி… இப்படி எல்லாம் பார்க்காத. அப்புறம் மாமனுக்கு மூடு மாறி இருக்கிற இடம் மறந்து ஏடாகூடமா ஏதாவது பண்ணிட போறேன்.” என்று கூற அதற்குள் தன்னை நிலைப்படுத்தி கொண்டவளது பார்வை அங்கே மேடையேறி கொண்டிருந்தவர்களின் மேல் விழுந்தது.

அதன் பின்பு தர்ஷினியின் முகத்தில் ஒரு நிம்மதியான புன்னகை நிரம்பியிருந்தது. இதுவே வெற்றிக்கு போதுமானதாக இருக்க அவளின் இந்த மாற்றம் அவனுக்குள் ஒரு பெருத்த நிம்மதியை ஏற்படுத்தியது.

அங்கே வருகை புரிந்திருந்த யாருக்கும் தர்ஷினியை பற்றி தெரியவில்லை. அதுவே வெற்றிக்கு சற்று நிம்மதியை தந்தது.

அவர்களின் வரவேற்பு சிறப்பாக முடிவடைய அங்கே இருந்த உறவினர்கள் நட்புக்கள் என அனைவரும் சென்றிருக்க எஞ்சியிருந்தது என்னவோ வெற்றியின் பெற்றோரும் அவனது சித்தப்பா வீட்டினர் மற்றும் தர்ஷினியின் பெற்றோர் மட்டுமே.

மஹாலட்சுமியோ லீலாவிடம் முன்னே சென்று அவர்களை வரவேற்பதற்காக ஆரத்தி கரைத்து வை என்று கூறி அவர்களை அனுப்ப வெளியே சென்றிருக்க சீனிவாசன் எல்லாருக்கும் பணத்தை கொடுத்து செட்டில்மென்ட் பண்ண சென்றிருந்தார்.

அங்கே அமர்ந்திருந்தது என்னவோ தர்ஷினி வெற்றி மற்றும் அவர்களது பெற்றோர் மட்டுமே.

“ம்மா… நான் உங்க கூடவே வந்துடட்டா…” என்று சிறு பிள்ளை போல் அழுது கொண்டே கூற அதை கேட்ட மூவருக்குமே அதிர்ச்சி மட்டுமே நிலைத்திருந்தது.

வெற்றிக்கோ அதிர்ச்சி என்பது மாறி அவனுக்குள் ஒரு இறுக்கம மனதிற்குள் ஒரு கவலை. இன்னமும் தன்னை புரிந்து கொள்ளவில்லையே எனும் ஆதங்கம் அவனுக்குள் உருவாகி கொண்டிருந்தது.

“ஏய்… என்னடி அசடு மாதிரி பேசிண்டு இருக்க… இப்ப தான் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சுருக்கு நானும் உன் தோப்பனாரும் சந்தோஷப்பட்டுண்டு இருந்தோம். நீ என்னடானா இப்படி பினாத்திட்டு இருக்க…” என்று அவளது அன்னை அவளை கடிந்தார்.

வெற்றியின் முகத்தை பார்த்தே அவனது நிலைமையை உணர்ந்த ராமானுஜம் “மாப்பிள்ளை அவ ஏதோ அசடு மாதிரி பேசிண்டு இருக்கா… அவளுக்காக நான் உங்களாண்ட மன்னிப்பு கேட்கறேன். அவ சின்ன பிள்ளை. வாழ்க்கை என்னனு உணரதுக்கு முன்னாடியே நிறைய கஷ்டப்பட்டுட்டா… அதான் இப்படி எல்லாம் பேசறா.. நீங்க ஒன்னும் மனசுல வச்சுகாதீங்கோ… எடுத்து சொன்னா அவ புரிஞ்சுக்குவா…” என்று ஆறுதலாக மருமகனிடம் பேசி கொண்டிருக்க அவனோ சரி எனும் விதமாக தலையை மட்டும் ஆட்டிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

அங்கேயே நின்றிருந்தால் எங்கே அவளிடம் கோபப்பட்டு கத்தி விடுவோமோ என்று நினைத்தே அவ்விடம் விட்டு நகர்ந்தான் வெற்றி.

அதை கண்டு வருத்தமடைந்த தர்ஷினியின் பெற்றோர்கள் அவளை திட்ட ஆரம்பித்திருந்தனர்.

“இப்ப எதுக்கு எங்க கூட வர்ரேனு சொல்லிட்டு இருக்க?” என்றார் ராமானுஜம் கோபமாக.

“அது… அது…” என்று இழுத்தாள் தர்ஷினி…

“இங்க பாரு தர்ஷி குட்டி இதுக்கு முன்னாடி ஏதோ உனக்கு நடக்க கூடாதது எல்லாம் நடந்துருச்சு… அதை ஒரு கெட்ட கனவா மறந்திரு. இப்ப கிடைச்சுருக்கற வாழ்க்கை உனக்கு வரம் மாதிரி. இந்த ஆத்து மனுஷாலையெல்லாம் பார்க்கறப்ப ரொம்ப நல்லவா மாதிரி தெரியுது. இதை கெட்டியா பிடிச்சுட்டு சமத்தா உன் வாழ்க்கையை வாழற வழிய பாரு. அதை விட்டு தத்து பித்துனு ஏதாவது உளறிட்டு இருக்காத. இத்தனை நாள் நாம பட்ட கஷ்டம் இப்ப தான் அந்த பகவானுக்கு தெரிஞ்சு ஒரு நல்ல வழியை காட்டி இருக்கான். அதை நீயே கெடுத்துக்காத…” என்று நீண்ட ஒரு அறிவுரையை வழங்கினார் அவளது தந்தை.

அவரது வார்த்தைகளை மௌனமாக உள்வாங்கியவளோ தலையை குனிந்து அமர்ந்திருந்தாள்.

வெற்றியோ தூரத்தில் நின்றிருந்ததால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை என்றாலும் அவளுக்கு அறிவுரை வழங்கி கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் புரிந்தது. தன்னவளோ அவர்களின் முன்பு தலைகுனிந்து அமர்ந்திருப்பதை பார்க்க சகியாதவன் அடுத்த நிமிடமே அவர்களின் அருகே சென்றான்.

“அத்தை மாமா கிளம்பலாமா?” என்றான்.

“நீங்க கிளம்புங்க மாப்பிள்ளை. நாங்க இப்படியே எங்காத்துக்கு போய்டறோம்…” என்று ராமானுஜம் கூறினார்.

“அதெல்லாம் முடியாது… முதல்ல வீட்டுக்கு வாங்க… அப்புறம் நானே உங்களை வீட்டுல விடறேன்.” என்று வெற்றி கூற அதை அவர்கள் எவ்வளவோ மறுத்து கூறியும் கேளாமல் அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றான்.

வெற்றியின் வீட்டில் அவனது சித்தி அவர்களுக்கு ஆரத்தி கரைத்து உள்ளே அழைத்தார்.

அனைவரும் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் பேசி கொண்டிருக்க தர்ஷினியின் பெற்றோர்கள் அவர்களது வீட்டிற்கு கிளம்ப எத்தனிக்க தர்ஷினியின் முகம் மறுபடியும் வாடியது. எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என்ற நிலைமையில் இருந்தது அவளது கண்ணீர்.

அவளை கவனித்த வெற்றியோ ஒரு மெருமூச்சுடன் ராமானுஜம் மற்றும் கலாவதியின் அருகே சென்று “இத்தனை நாள் தான் தர்ஷினி நீங்க இல்லாம கஷ்டப்பட்டுட்டா… இனிமேலும் அவ வருத்தப்பட கூடாது. இது உங்க பொண்ணு வீடு. இனி அவள பார்க்க நீங்க எப்ப வேணாலும் வரலாம். இத நான் சொல்லனும்னு இல்ல… இருந்தாலும் நீங்க தயங்கி எங்கே வராம விட்டுடுவீங்களோனு தான் நான் சொல்றேன். என் பொண்டாட்டி வருத்தப்பட்டா எனக்கு கஷ்டமா இருக்கும். சோ அடிக்கடி உங்க பொண்ண நீங்க வந்து பார்த்துட்டு போங்க…” என்று கூறினான்.

அதை கேட்ட ராமானுஜமோ “நாங்களே எங்க மனுஷால்ல யாரையாவது இவளுக்கு ஆம்படையாணா பார்த்து இருந்திருந்தாலும் இவ்வளவு நல்ல மாப்பிள்ளை எங்களுக்கு கிடைச்சு இருக்க மாட்டார். எங்களுக்கு கவலையே எங்க பொண்ண பத்தி தான் இருந்துச்சு… இனி எதுக்கும் நாங்க கவலைப்பட மாட்டோம். கண்டிப்பா அடிக்கடி நாங்க வர்றோம். நீங்களும் தர்ஷினியை கூட்டிண்டு வீட்டுக்கு வாங்க…” என்று அழுத கண்களை துடைத்து கொண்டே கூறினார்.

பின்பு அவர்கள் இருவரையும் வெற்றியே கொண்டு போய் வீட்டில் விட்டு வந்தான்.

அன்று இரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யார் எவ்வளவு எடுத்துரைத்தாலும் தர்ஷினிக்கு சிறிதளவும் இதில் உடன்பாடு இல்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் அலங்காரம் செய்து கொண்டு வெற்றியின் அறைக்கு சென்றாள்.

“அம்மா, அப்பாவை பார்க்கறதுக்கு முன்னாடி இருந்த இவரை பிரிஞ்சிடனும்னு நாம எடுத்த முடிவுல இப்ப நிலையா நிற்க முடியலையே… யாருமே எனக்கு ஆதரவாவோ சாதகமாவோ பேச மாட்டேங்குறாங்க… இதுவரைக்கு அம்மா அப்பாவுக்கு நான் நிம்மதி கொடுக்கல. ஏனோ இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருந்ததா சொன்னாங்க. இந்த வாழ்க்கையில இருந்து நான் வெளியே வந்தா எல்லாருக்கும் கஷ்டம் தான். அதனால முயற்சி செஞ்சு வாழ்ந்து பார்க்கறேன்.” என்று தனது மனதை தானே ஆறுதல் படித்து கொண்டு அவனது அறைக்கதவின் மேல் கைவைத்து தட்டினாள்.

“கதவு திறந்து தான் இருக்கு உள்ளே வா…” என்று உள்ளிருந்து வெற்றியின் குரல் கேட்க கதவை திறந்து உள்ளே சென்றாள்.

அங்கே படுக்கையில் அமர்ந்து தனது கைப்பேசியை பார்த்து கொண்டே “யாரும் தன்னோட ரூமுக்குள்ள வர்றதுக்கு பெர்மிஷன் கேட்க மாட்டாங்க… புரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்.” என்றான்.

அவளோ ஏதும் பேசாமல் படுக்கைக்கு அருகே சென்று அவனிடம் பாலை நீட்டினாள்.

“எனக்கு நைட் பால் குடிக்கும் பழக்கம் இல்ல…”

“அ… அத்த தான் குடிக்க சொல்லி கொடுத்தாங்க.”

“ம்… அதை அங்கே வை…” என்று அருகே இருந்த மேசையை காட்டினான்.

பால் இருந்த செம்பை அங்கே வைத்து விட்டு அமைதியாக நின்று கொண்டாள்.

அவளை ஒரு நிமிடம் மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் எழுந்து சென்று கதவை அடைத்து விட்டு வந்தான்.

அவளோ ஏதும் பேசாமல் அந்த அறையையே சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தாள்.

“ரூமெல்லாம் நல்லா இருக்கா? உனக்கு வசதியா தான் இருக்கும்னு நினைக்குறேன்.” என்றான் அவளை பார்வையால் விழுங்கிய படியே.

அவளோ “இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாம இப்படி பேசறாரு…” என்று நினைத்தவள் அவனை புரியாத ஒரு பார்வை பார்த்தாள்.

அவளின் பார்வையை உணர்ந்தவனோ “இல்ல… ரூமையே சுத்தி சுத்தி பார்த்துட்டு இருந்தயா அதான் சொன்னேன். அப்புறம் விடிய விடிய இப்படியே நின்னுட்டே இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கயா?” என்றான்.

“அது… அது… இல்ல…”

“எது?? எது? இல்ல…இப்ப நமக்கு எதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்கனு உனக்கு தெரியும் தானே.”

அவளோ சட்டென்று தலையை குனிந்து கொண்டு “ம்…” என்று தலையை ஆட்டினாள்.

“அப்பாடி… ரொம்ப சந்தோஷம் அப்ப நாம ஆரம்பிக்கலாமா?” என்றான் கேலி நிறைந்த குரலில்.

அவனது இந்த பேச்சில் அதிர்ச்சியடைந்தவள் சட்டென்று அவனை நோக்கினாள்.

அவளது கண்கள் “ப்ளீஸ் வேண்டாமே…” எனும் விதமாக அவனிடம் கெஞ்சியது.

அவளது பார்வையை உணர்ந்தவன் நகர்ந்து அவள் வைத்திருந்த பாலை எடுத்து அவளை பார்த்து கொண்டே அவளையும் பாலையும் ஒரே நேரத்தில் பருகினான்.

அவளுக்கு அவனின் பார்வை ஏதோ செய்ய மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.

பாலை பாதி பருகியவன் மீதியை அவளிடம் நீட்டினான்.

அவளோ வேண்டாம் எனும் விதமாக தலையை அசைத்தாள்.

“ஏன் வேண்டாம்?”

“இ… இல்ல… பால் எனக்கு பிடிக்காது…”

“பால் பிடிக்காதா? இல்லை நான் குடிச்சதுனால இந்த பாலை பிடிக்காதா?” என்று கேள்வி கேட்டான்.

அவனின் கேள்வியில் “அது… அது…” என்று திணறினாள்.


“சோ… நான் செகண்ட் சொன்னது தான் கரெக்ட்…” என்று கூறியவன் பால் முழுவதையும் குடிக்க ஆரம்பித்திருந்தான்.
 
Last edited:
அத்தியாயம் – 25

பாலை குடித்தவன் அடுத்த நிமிடமே அவளை இழுத்தணைத்து அவளின் வாயோடு தனது வாயை பொறுத்தி இருந்தான். தான் அருந்திய பாலை அவளுக்கு முழுவதும் புகட்டியவன் அவளை விழுங்க செய்த பின்பே அவளை விடுவித்தான்.

இதற்கிடையில் அவனிடமிருந்து தன்னை விடுவித்து கொள்ள அவனை அடித்தது எதுவும் அவனுக்கு உரைக்கவில்லை.

இவளது மகிழ்ச்சியே முக்கியம் என்பதற்காக தான் செய்த செயல்கள் அனைத்தையும் சிறிதும் புரிந்து கொள்ளாமல் அவளின் தாய் தந்தையருடன் தன்னையும் அழைத்து செல்லுமாறு அவள் கூறிய வார்த்தைகளின் தாக்கமே இந்த செயல்.

அவள் அவனை தள்ளி நிறுத்தும் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு கோபத்தையே விளைவிக்கின்றது. தன்னுடைய செய்கைகள் தான் அவனது நடவடிக்கைகளுக்கு காரணம் என்பதை அவள் உணரவேயில்லை.

அவளை அவன் விடுவித்தவுடன் அவனிடமிருந்து பிரிந்தவள் தனது கைகளால் முகத்தினை மூடி அழ ஆரம்பித்து விட்டாள்.

அவளின் கண்ணீரை கண்டவனுக்கு எரிகின்ற தீயில் நெய் வார்த்தது போல் இருக்க அவனது கோபம் கட்டுக்கடங்காமல் சென்றது.

அவளது மேற்கையை பிடித்து தனது பக்கம் இழுத்தவன் “ஏய்… இப்ப எதுக்கு இந்த அழுகை. ஏன் என்னைய பிடிக்கலையா? நான் தொட்டா அருவருப்பா இருக்கா? அவன் தொட்டப்ப மட்டும் சுகமா இருந்துச்சா???” என்று வார்த்தைகளை நெருப்பாக கொட்டினான்.

அவளோ “ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க?” என்று மன்றாடும் விதத்தில் கேட்டாள்.

“அப்புறம் நீ நடந்துக்கறதுக்கு என்னை எப்படி பேச சொல்ற? ஒருவேளை அந்த ராயன தான் இன்னும் நீ புருஷனா நினைச்சுகிட்டு இருக்கயோ… நான் தான் நீ கஷ்டப்படறேனு தப்பா புரிஞ்சுகிட்டு வலுக்கட்டாயமா உன்னை கல்யாணம் பண்ணிகிட்டனோ?”

“அ.. அப்படி எல்லாம் ஒன்னுமில்லை…”

“அப்படி எதுவுமில்லைனா எதுக்கு என்னை விட்டு போகறதுக்குனே பார்க்குற? இன்னைக்கு தான் ஊர் உலகத்துக்கு முன்னாடி உன்னை என் பொண்டாட்டி என்னுடைய சரிபாதினு சொன்னேன். ஆனா நீ அந்த ஃபங்க்சன் முடியறதுக்கு முன்னாடியே என்ன கூட்டிட்டு போங்கனு உங்க அப்பா அம்மாகிட்ட சொல்ற… அதுக்கு என்ன அர்த்தம்…”

“நான் உங்கள விட்டு பிரியறதுக்கு ஏற்கனவே காரணம் சொல்லிட்டேனே.” என்றாள் அழுகையினூடே.

“என்ன காரணம் ஏற்கனவே நீ கல்யாணம் ஆனவ… உனக்கு கற்பெல்லாம் கிடையாது. அப்படிங்கறது தானே?”

அவனது பேச்சை கேட்டு அவள் மௌனமாக கரைந்தாள்.

மாலை அவளது தாய் தந்தையர் ஏதோ கூறியதற்கு சட்டென வாடிய அவள் முகத்தை கண்டதும் துடித்தவன் தற்பொழுது அவனே அவளின் கண்ணீருக்கு காரணமாய் நின்றான். கோபத்தில் மதியிழந்து வார்த்தைகளை அமிலங்களாக கக்கினான்.

“நீ கல்யாணமானவனு தெரிஞ்சு தானே நானும் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன். அதுக்கு பின்னாடி என்னென்ன கொடுமை உனக்கு நடந்திருக்கும்னு தெரியாம இருக்கறதுக்கு நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல…” என்று கூறி தனது தலை முடியை அழுந்த கோதி கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான் ஆனால் முடியவில்லை.

“ஒன்னு மட்டும் சொல்லு… அந்த நாய் ராயன் இன்னும் உன் மனசுல இருக்கானா? அவன் தான் உன் புருஷன்னு இன்னும் உனக்கு நினைப்பு இருக்கா?”

தன்னுடைய கடந்த காலத்தை ஓரளவிற்கு தெரிந்து வைத்தும் இப்படி கேட்பவனை என்னவென்று சொல்வது என்று நினைத்தவளை நோக்கி “இப்ப சொல்ல முடியுமா முடியாதா?” என்று கர்ஜித்தான்.

“அவன மாதிரி ஒருத்தன ஏன் என் வாழ்க்கையில சந்திச்சோம்னு இப்ப வரைக்கும் அந்த கடவுள் கிட்ட நான் கேட்டுட்டு இருக்கேன். என்னைக்குமே அவன புருஷனாவோ ஏன் மனுஷனாவே நினைச்சது கிடையாது. பிறகு எப்படி என் மனசுல அவன் இருப்பான்.”

அவளது அந்த பதில் நெருப்பாய் கொதித்து கொண்டிருந்தவனுக்கு ஏதோ சிறு பனிச்சாரல் வீசியது போல் இருந்தது. கோபம் சற்று குறைந்து சாந்தமானான்.

சிறிது நேரம் அந்த அறையே நிசப்தமாய் இருந்தது. இருவருக்கும் இடையில் கனத்த மௌனம். இந்த மௌனமே இருவரையும் சற்று நிதானத்திற்கு கொண்டு வந்திருந்தது.

அவளை கைப்பிடித்து அழைத்து சென்று மெத்தையில் அமரவைத்தவன் தானும் அவளருகே அமர்ந்தான்.

“இந்த நேரத்துல தேவையில்லாம அவன பத்தின பேச்சுகள் ஏதும் வேண்டாம். விடு. நீ என்னை விட்டு விலகறதுக்கு அப்ப நீ சொன்ன காரணத்தை என்னால ஏத்துக்க முடியாது. உன்னை எப்ப பார்த்தேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் நீ தான் என் மனைவினு. இந்த தாலி மத்தவங்களுக்காக மட்டும் தான். எனக்கு உன்னோட பழைய வாழ்க்கையை பத்தி துளி கூட கவலையில்லை. ஏன் என் அம்மா அப்பா கூட உன்ன இந்த வீட்டு மருமகளா ஏத்துகிட்டாங்க. இதுக்கு மேல என் கூட வாழ என்ன பிரச்சனை உனக்கு…” என்று நிறுத்தி நிதானமாக உரைத்தான்.

சில நிமிட மௌனத்திற்கு பின்பு வாய் திறந்தாள்.

“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க…”

அவனோ பெருமூச்சுடன் “சரி… எவ்வளவு காலம் எடுத்துக்குவ?” என்றான்.

அவளோ அவனை புரியாத ஒரு பார்வை பார்த்தவள் “அது… அது எப்படி சொல்ல முடியும்?” என்றாள்.

“இவள் இவ்வளவு தூரம் இறங்கி வந்து டைம் கேட்டதே பெருசு. ரொம்ப படுத்தி எடுக்காத. அப்புறம் நீ வேண்டானு ஓடிற போறா” என்று மனதிற்குள் நினைத்தவன் “சரி… உனக்காக காத்திருக்கிறேன்.” என்றான்.

அவனின் அந்த பதில் தான் அவளுடைய இதழில் சற்று புன்னகை வரவழைத்திருந்தது.

“சரி தூங்கு…” என்றான் அவளிடம் இருந்து சற்று விலகியபடி.

அவளோ தலையணையை தூக்க “ஏய்… எதுக்கு இப்ப அதை எடுக்கற?” என்றான்.

“இல்ல… நீங்க மேல படுத்துக்கோங்க… நான் கீழ பெட்சீட் விரிச்சு படுத்துக்கறேன்…”

“என்னது?? இங்க பாருங்க மிஸஸ்.வெற்றிவேல் டைம் கேட்டது நீ… எனக்கு எந்த டைமும் தேவையில்லை. பொண்டாட்டிய பக்கத்துல வச்சுகிட்டு சாமியாரா வாழறதுக்கு எல்லாம் நான் தயாரா இல்ல… நீ எப்ப வேணாலும் என்ன உன் புருஷனா ஏத்துக்கோ அதுக்காக எல்லாம் என்னால தள்ளி நிற்க முடியாது…” என்றவன் அவளை வலுக்கட்டாயமாக இழுத்து மெத்தையில் படுக்கவைத்து அவனும் அருகே படுத்து அவளின் இடுப்பினை கட்டிக்கொண்டான்.

விளக்கை அணைத்ததோடு அவளையும் அணைத்து கொண்டு கண்மூடினான்.

அவளுக்கோ அவனின் பிடியில் பெரும் அவஸ்தையுடன் தூக்கம் வராமல் விட்டத்தை பார்த்து படுத்து கொண்டிருந்தாள்.

தன் கைவிட்டு போன ஒன்று தனக்கு கிடைத்த மகிழ்ச்சியினாலோ என்னவோ வெற்றிக்கு படுத்தவுடன் தூக்கம் வந்து விட்டது.

சிறிது நேரத்தில் முழிப்பு வர கண் திறந்து பார்த்தவனுக்கு தெரிந்தது என்னவோ இன்னமும் தூங்காமல் விழித்து கொண்டிருந்த தர்ஷினி தான்.

“ஏய் தேவா… என்ன நீ இன்னும் தூங்கலயா?”

அவளோ அவனை பார்க்காமல் “இல்ல தூக்கம் வரல…” என்றாள்.

“புது இடமில்ல அதான் தூக்கம் வரல… கண்ணை மூடி படு தூக்கம் வந்துடும்…”

“இ… இல்ல… கொஞ்சம் கையை எடுத்தீங்கனா நான் தூங்கிடுவேன்…” என்று சற்று தயக்கமாக கூறினாள்.

அவனோ தலையை நிமிர்த்தி அவளை புரியாத பார்வை பார்த்தவன் சிரித்து கொண்டே அவளது கழுத்து வளைவினில் தனது முகத்தை புதைத்து அழுத்த முத்தமிட்டு “அதெல்லாம் முடியாது. எனக்கு இப்படி படுத்தா தான் தூக்கம் வருது. சோ நீயும் இதுக்கு பழகிக்கோ…” என்றவன் அவளது வாசனையை நுரையீரலில் நிரப்பி கொண்டு முன்பை விட நிம்மதியான தூக்கத்தை தொடர்ந்தான்.

அவளுக்கோ இன்னமும் அவஸ்தை கூடி போனது. “கையை எடுங்கனு சொல்லாமயே இருந்திருக்கலாம். சொன்னது தப்பா போச்சு…” என்றவளுக்கு மறுபடியும் தூக்கம் தூர போனது.

என்ன தான் கொட்ட கொட்ட விழித்திருந்தாலும் விடியலின் தொடக்கத்தில் உறங்க தொடங்கினாள்.

அவள் உறங்கிய சில மணி நேரங்கள் கழித்து அவனுக்கு விழிப்பு வந்தது.

அன்றைய நாளின் தொடக்கமே அவள் முகம் பார்த்து தான் அவனுக்கு ஆரம்பமாகியது. முதல் ஊடல் கூடலில் முடிவடையா விட்டாலும் இருவரும் சமாதானமாகி உறங்கியதே அவனுக்கு நிம்மதி அளித்தது. அதிலும் அவள் தன்னுடன் வாழ சிறிது கால அவகாசம் கேட்டது அவளுடன் தன்னுடைய வாழ்வு கூடிய விரைவில் மகிழ்ச்சியுடன் அமையும் என்று நினைத்து மகிழ்ந்தான்.

மனைவி உறங்கும் அழகினை கண்டவன் அவளது நெற்றியில் முத்தம் பதித்தான். முகத்தில் அவனது பார்வை சென்ற இடங்களுக்கெல்லாம் முத்தத்தை பரிசளித்தவன் முடிவில் அவனது உதடுகள் உரசியது என்னவோ அவளது இதழில் தான். அழுந்த இதழ் மீது இதழ் பதித்தவன் “சீக்கிரமே என்னை புரிஞ்சுகிட்டு ஏத்துகோடி… ரொம்ப நாள் எல்லாம் என்னால காத்திருக்க முடியாது…” என்றவன் எழுந்து சென்று விட்டான் உடற்பயிற்சியினை மேற்கொள்ள.

தனது உடற்பயிற்சியினை முடித்து விட்டு வந்தவன் இன்னமும் தர்ஷினி தூங்கி கொண்டிருப்பதை பார்த்து குளியலறைக்கு சென்று விட்டான். அதன் பிறகு அவன் கிளம்பி வெளியே செல்லாமல் தனது தொலைபேசியை பார்த்தபடி படுக்கையிலேயே அமர்ந்து விட்டான்.

அப்பொழுது தான் கண்விழித்தாள் தர்ஷினி. தனக்கருகில் குளித்து வெளியே செல்வது போல் கிளம்பி அமர்ந்திருந்த தனது கணவனை கண்டு திடுக்கிட்டு எழுந்தாள்.

“சா… சாரி… நைட் ரொம்ப நேரம் முழிச்சுட்டு இருந்தனால லேட்டா தான் தூங்கனேன். எழுப்பி விட்டிருக்கலாமே…”

“நீயே சொல்லிட்ட நைட் தூக்கம் பிடிக்கலைனு அப்புறம் எப்படி எழுப்பறது அதான் எழுப்பல… கீழ தனியா போக பிடிக்கலை. அதான் இங்கேயே உட்கார்ந்துட்டேன். குளிச்சுட்டு வா… கீழ போகலாம்.”

“ம்… சரி…” என்றவள் தனக்கான உடைகளை எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

சிறிது நேரத்தில் வீட்டிற்குள் அணியும் சாதாரண புடவை அணிந்து வெளியே வந்தவளை பார்த்தவன் ஒரு நிமிடம் அவளது அழகில் மயங்கி தான் போனான்.

வெளியே வந்தவள் சற்று தள்ளி நின்று ஈரத்தலையினை துவட்டி கொண்டிருந்தாள்.

அதை கண்டவனோ “நல்லா அழகா தான் இருக்கா ஆனாலும்…” என்றவன் அவளருகே சென்று அவளை மேலும் கீழும் பார்த்தான்.

“ஏ… ஏன் இப்படி பார்க்கறீங்க??”

“இல்ல… இந்த சேலை வேண்டாம். வேற சேலை மாத்து…”

“இந்த சேலைக்கென்ன நல்லா தானே இருக்குது…”

“ம்ப்ச்… சொன்னா கேளு… வேற சேலை… இல்ல… இல்ல… இரு நானே எடுத்துட்டு வர்ரேன்.” என்றவன் அங்கே சேலைகள் அடுக்கி வைத்திருந்த கப்போர்டை திறந்தவன் பச்சையும் தங்க நிறமும் அடுத்தடுத்து வருவது போல் அமைந்திருந்த ஒரு சில்க் காட்டன் புடவையை எடுத்து வந்து அவளது கைகளில் திணித்து “இதை கட்டிட்டு வா…” என்றான்.

“வீட்டில தானே இருக்க போறேன். இப்ப எதுக்கு இந்த சேலை… வேண்டாம்…”

“யார் சொன்னாங்க.. நாம வீட்டுல இருக்க போறோம்னு… வெளிய போகலாம் கிளம்பு…” என்றவன் மறுபடியும் மெத்தையின் மேல் அமர்ந்து கொண்டான்.

அவனையும் சேலையையும் ஒரு முறை பார்த்தவள் “சேலை கட்டனும் வெளிய போங்கனு சொன்னா எடக்கா ஏதாவது சொல்லுவார். அதனால் வேற வழி இல்ல பாத்ரூமுக்கே போயிடலாம்..” என்று குளியலறைக்கு செல்ல முயன்றவளை “பாத்ரூமுக்குள்ள எப்படி சேலை கட்டுவ? இங்கேயே கட்டு…” என்றான் உதட்டினுள் புன்னகையை மறைத்து கொண்டே.

“இல்ல… பரவாயில்ல நான் கட்டிக்குவேன்…” என்றவள் மறுபடியும் செல்ல…

“வேண்டாம் நான் வேணா கீழ போறேன்… சீக்கிரம் கிளம்பி வா…” என்றவன் எழுந்து வெளியே சென்று விட்டான்.

அவளுக்கோ மனதிற்குள் பெருத்த நிம்மதி எழுந்து கிளம்பினாள்.

கால் மணி நேரத்திற்குள் கிளம்பி கீழே செல்ல அனைவரும் அமர்ந்திருந்தனர்.

அவனது தாய் தந்தையிடம் சொல்லி விட்டு அவளை அழைத்து கொண்டு முதலில் சென்றது என்னவோ கோவிலுக்கு தான். அவனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் தன்னவளுக்காக அவளின் மனநிம்மதிக்காக சென்றான்.

அவளுக்கும் சிறிது மன அமைதி தேவைப்பட்டதோ என்னவோ அமைதியாக கோவிலில் அம்மனை வணங்கி விட்டு அங்கே இருந்த பிரகாரத்தில் அமர்ந்தாள்.

இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே. கோவிலிலிருந்து கிளம்பியவர்கள் நேரே சென்றது என்னவோ அவளது தாய் தந்தையரின் வீட்டிற்கு தான்.

காரை நிறுத்தியதும் “இறங்கு…” என்றான்.

“இது யார் வீடு?” என்று கூறிக்கொண்டே இறங்க காரின் சப்தம் கேட்டு அவளது பெற்றோர்கள் வெளியே வந்தனர்.

அவர்களை கண்டதும் தர்ஷினியின் கண்கள் கலங்க ஓடிசென்று அவளது அன்னையை அணைத்து கொண்டாள்.

இருவரும் கட்டிப்பிடித்து அழ ஆரம்பிக்க வெற்றிக்கோ ஆயாசமாக இருந்தது. “எப்ப பார்த்தாலும் அழுதுகிட்டே இருக்கா? கண்ணுல டேம் ஏதாவது கட்டி வச்சுருக்காலோ என்னவோ” என்று மனதிற்குள் தனது மனையாளை திட்டி கொண்டிருந்தான்.

அதற்குள் அவளது தந்தையே இருவரையும் கடிந்து கொண்டார்.

“எப்ப பார்த்தாலும் அழுதுட்டே தான் இருப்பீங்களா அம்மாவும் மகளும். எப்படி மாப்பிள்ளையை இப்படியே ரோட்டலயே நிக்க வச்சு அனுப்பிடலாமா? ஆத்துக்குள்ள கூப்பிடனும்னு நோக்கு தோணலயா? என்று அவரும் தன் மனைவியை வெளிப்படையாகவே திட்டினார்.

அதில் சுதாகரித்த கலாவதி “மன்னிச்சுருங்க மாப்பிள்ளை… அவ அழுததும் நானும் அழுதுட்டேன். ஒரு நிமிஷம் இருங்கோ… ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வந்துடறேன்.” என்றவர் சிறுபிள்ளை போல் வீட்டிற்குள் ஓடி சென்று சில நிமிடங்களில் ஆரத்தி தட்டோடு வந்தார்.

இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க அன்று பகல் உணவை அவர்களது வீட்டிலேயே முடித்து விட்டு மாலை பொழுதில் வெற்றி கிளம்பலாம் என்று சொன்னான்.

உள்ளுக்குள் ஒரு பயம் எங்கே வரமாட்டேன் என்று தனது மனைவி கூறி விடுவாளோ என்று ஆனால் அவனது மாமியார் அதற்கு இடம் கொடாமல் இன்னும் அவளுக்கு பல அறிவுரைகள் வழங்கியே அனுப்பி வைத்தார்.

இருவரும் அவர்களது வீட்டிற்கு பயணிக்க கிளம்பும் பொழுது தர்ஷினிக்கு இருந்த மனநிலைக்கும் தற்பொழுது இருக்கும் மனநிலைக்கும் மிகுந்த வித்யாசம் இருந்தது.

முதலில் அவளே மௌனத்தை கலைத்து “தேங்க்ஸ்… ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் சந்தோஷமா இருந்தேன். காலையில கோவிலுக்கு போனது நிம்மதியா இருந்துச்சு அதுக்கு பின்னாடி எங்காத்துக்கு கூட்டிண்டு போனீங்க. ரொம்ப நாள் கழிச்சு அம்மா அப்பா கூட இருந்தது சந்தோஷமா இருந்துச்சு…” என்றாள் முகத்தில் புன்னகையுடன்.

அவளின் பேச்சுக்கு எந்த எதிர்வினையும் அவன் காட்டவில்லை.

அவனிடம் அமைதி நிலவ “ஏன் ஏதும் பேச மாட்டீங்கறீங்க?” என்றாள்.

“உன் சந்தோஷத்தை மீட்டெடுத்து கொடுத்துட்டேன். ஆனா என் சந்தோஷம் எனக்கு கிடைக்கலையே?”

“ஏன் உங்க சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்?” என்று கேட்டவளுக்கோ பின்பே தெரிந்தது அவனின் சந்தோஷம் எது என்று அதற்கு பின்பு அவள் ஏதும் பேசவில்லை. அவனும் பேசவில்லை.
 
அத்தியாயம் – 26

ராக்கேஷ் ராயனின் பள்ளி கல்லூரிகளில் பொறுப்பேற்று இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகின்றது. தினமும் பள்ளி கல்லூரிக்கு சென்றான்.

ராயனுக்கு சொந்தமாக மெட் ரிகுலேஷன் பள்ளியும், மத்திய அரசின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ எனப்படும் பள்ளியும் உள்ளது. அதே போல் கலைக்கல்லூரியும், பொறியியல் கல்லூரியும் உள்ளது.

பள்ளிகளிலும் கல்லூரியிலும் எவ்வளவு வருமானம் வருகிறது என்பதை அங்கு வந்த இரண்டு நாட்களில் கண்டு விட்டான். இவ்வளவு வருமானமும் தனக்கே கிடைக்குமானால் எதற்கும் தனது தந்தையை சார்ந்து அவன் இருக்க வேண்டியது இல்லையே அதனால் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்து தன்னை அவன் தந்தை மற்றும் தாயின் முன்பு நல்லவனாக காட்டி கொள்ள எண்ணினான்.

ராதாகிருஷ்ணன் முதல் மாதம் முழுவதும் அவனுடனேயே இருந்து அவனுக்கு எவ்வாறு பள்ளி கல்லூரியை வழி நடத்துவது அதோடு சிக்கல்களை தீர்த்து வைப்பது என்று முழுவதும் அவனுக்கு கற்று கொடுத்தார்.

தனக்கு இந்த பள்ளி கல்லூரி இரண்டும் வேண்டும் என்று நினைத்தவன் அவரிடம் இருந்து அனைத்தையும் கற்று கொண்டான்.

தினமும் பெண்களுடன் உல்லாசம், விரும்பிய இடத்திற்கு விரும்பிய நேரத்தில் சென்று வந்து கொண்டிருந்தவனுக்கு இன்று ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது சிரமமாக தான் இருந்தது. ஆனாலும் பணத்திற்காக பொறுத்து கொண்டிருந்தான்.

பிறகு மாதத்தில் இரு முறை வந்து கணக்கு வழக்குகளை பார்த்து வந்தார்.

உள்ளுக்குள் வேலை செய்வதற்கு நொடிந்து கொண்டாலும் வெளியே அதை காட்டி கொள்ளாமல் இருந்தான் ராக்கேஷ்.

எங்கே தான் முன் போல் நடந்து கொண்டு அந்த விசயம் தனது தந்தைக்கு தெரிந்து கிடைக்கும் சுகபோக வாழ்வு கிடைக்காமல் போய் விடுமோ என்று பயந்தவன் கொஞ்சம் நல்ல விதமாகவே நடந்து கொண்டான்.

ஓரிரு மாதங்கள் கழித்து பள்ளி மற்றும் கல்லூரியில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடை பெற்று கொண்டிருந்தது.

அனைத்தையும் மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தான். பள்ளி சேர்க்கையை விட கல்லூரி சேர்க்கையிலேயே அவனது முழுக்கவனமும் இருந்தது.

ஒவ்வொரு மாணவர்களும் பெற்றோருடன் கல்லூரி முதல்வரை சந்திக்கும் பொழுது அவர்களை அவன் அங்கே இருந்த காணொலியின் மூலம் அழகான பெண்களை கண்டவுடன் இத்தனை நாட்கள் அவன் பணத்திற்காக போட்ட வேஷம் அவனை நல்லவனாய் இருக்க விடாமல் செய்தது.

தினம் ஒரு பெண் என்ற விதத்தில் கூடி களைத்து சல்லாபித்து கொண்டிருந்த ஒரு பெண் பித்தனுக்கு கடந்து ஆறு மாதங்களாக பெண் சகவாசம் இல்லாமல் இருந்தது அவனுக்கு கொடுமையாக இருந்தது. திருமணம் சில மாதங்கள் கழித்து தான் என்ற நிலையில் இருந்தவனுக்கு வாழ்க்கையே வெறுத்து போகும் நிலை தான்.

முதல் மூன்று மாதங்கள் மட்டுமே ராதாகிருஷ்ணன் கல்லூரி மற்றும் பள்ளியை பற்றிய பொறுப்புகளை கேட்டு கொண்டிருந்தான். அதற்கு பிறகு அமைச்சருக்குண்டான பணிகளே அவரை உள்ளே இழுத்து கொள்ள முற்றும் முழுதாய் சென்னை பக்கம் வருவதை தவிர்த்திருந்தான்.

இது ராக்கேஷிற்கு சாதகமாக அமைந்திருந்தது. முதல் ஆண்டு சேர்க்கை எல்லாம் முடிந்து அங்கே வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி அந்த கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற அதில் ராக்கேஷும் தாளாளராக கலந்து கொண்டு கல்லூரியின் அருமை பெருமைகளை பற்றி எடுத்து கூறி நல்ல விதமாக நடந்து கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று கூறினான்.

சாத்தான் வேதம் ஓதியது போல் இருந்தது அவனது அறிவுரைகள்.

ராயனின் காரியங்கள் எல்லாம் முடிந்த பிறகு தன் மகனை வழி நடத்தும் பொறுப்பு, அரசியல் வாழ்வு, அமைச்சருக்கான பொறுப்புகள், வெளிநாட்டு பயணங்கள் என்று மற்றதில் முழுகவனமும் செலுத்தியதால் ராயனை கடத்தியவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள இயலவில்லை.

தனது சொந்த வாழ்விலும், அரசியலிலும் அனைவரையும் ஆட்டிவித்து கொண்டிருக்கும் ஒருவனை அவனது மகனே ஏமாற்ற தொடங்கியிருந்தான்.

ஆனால் இவர்கள் இருவரையும் ஏற்கனவே ஒருவன் ஏமாற்றியிருப்பதை இருவரும் அறிந்திருக்கவில்லை.

…………………………………………………

ராயனின் வழக்கு முடிந்தவுடன் தர்ஷினியினுடனான திருமணம் என்று சிறிது நாட்கள் விடுப்பு எடுத்து இருந்த வெற்றி அவர்களின் வரவேற்பு முடிந்தவுடனேயே பணியில் சேர்ந்து கொண்டான்.

வேறு சில முக்கிய வழக்குகளில் மிகவும் சிரத்தையாக பணி புரிந்து கொண்டிருந்தான்.

தர்ஷினி அந்த இல்லத்தில் நல்ல மருமகளாக வளைய வந்தாள். வெற்றியின் பெற்றோருக்கு நல்ல மருமகள் மட்டுமே வெற்றியின் மனைவியாக அல்ல.

இருவருக்கும் இடையே உள்ள உறவானது தாமரை இலை தண்ணீர் போல் தான் இருந்தது.

இருந்தாலும் வெற்றி அவ்வப்பொழுது அவளை சீண்டி கொண்டே தான் இருந்தான். அவளுக்கு அவனை பிடித்திருக்கிறதா என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

இதற்கிடையில் யாழினியும் அங்கே இருந்து தான் கல்லூரிக்கு சென்றாள். அதுவும் ராயனின் கல்லூரிக்கு. வெற்றிக்கு வேலைப்பளு அதிகம் இருந்ததால் அவனால் அவள் எந்த கல்லூரிக்கு சென்று வருகிறாள் என்பதை அறியாமலயே விட்டுவிட்டான். தர்ஷினியும் அவளிடம் படிப்பை பற்றி கேட்கவில்லை.

இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்க,

“அண்ணா இன்னைக்கு நீ ஃப்ரீயா?? மதியம் என்னை கொஞ்சம் காலேஜ்ல இருந்து கூட்டிட்டு வருவயா?” என்று யாழினி வெற்றியிடம் கேட்டாள்.

“லீவு தான்… ஆனாலும் வெளிய கொஞ்சம் வேலை இருக்கு யாழினி… மதியம் எத்தனை மணிக்கு காலேஜ் விடுவாங்கனு சொல்லு நான் வர்ரேன். உனக்கு காலேஜ் பஸ் வருமல்ல…”

“இன்னைக்கு மதியம் வரை தான் காலேஜ்… சோ பஸ் வராது. அதான் உன்ன வர சொன்னேன்.”

“ம்… சரிடா… நான் வர்ரேன்…” என்றவன் எழுந்து அறைக்குள் செல்லும் போது “ஹேய் யாழினி… நீ எந்த காலேஜ் படிக்கற??” என்றான்.

“அடப்பாவி… அப்ப இத்தனை நாள் நான் எங்க படிக்கறேனு கூடவா தெரியாம இருந்த?”

“ஏய்… உன்கிட்ட கேட்க மறந்துட்டேன். சொல்லு…”

“கே.ஆர் எஞ்சினியரிங்க் காலேஜ்…”

அவளின் பதிலில் வெற்றி மற்றும் தர்ஷினி இருவருக்குமே உச்சகட்ட அதிர்ச்சி. நொடியில் அதிலிருந்து வெளிவந்தவன் என்னவோ வெற்றி தான்.

“ஓ… மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணனோட தம்பி ராயன் காலேஜ் தானே…” என்றான் தனது தாடையை தடவி கொண்டே.

“ஆமா… அப்படி தான் சொல்லிகிட்டாங்க. ஆனா அதான் அந்த ராயன் இப்ப உயிரோட இல்லையே.”

“ம்… ஆமா… இப்ப யாரு அங்க கரெஸ்பாண்டெண்ட்?”

“ராக்கேஷ்… அன்னைக்கு ஃபர்ஸ்ட் இயர் வெல்கம் பண்ணப்போ வந்து பேசினார்.”

“சரி… அடிக்கடி அவனை அங்க பார்ப்பயா?”

“எப்பவாவது பார்ப்பேன். சரி காலேஜ்க்கு லேட் ஆச்சு… கிளம்புறேன்… மதியம் மறக்காம வந்திரு…” என்று கிளம்பி சென்றாள்.

ராயனின் வழக்கு முடிந்தவுடன் அந்த கல்லூரியில் போதை பொருள், கடத்தல் என்பன போன்ற நிகழ்வுகள் ஏதும் இல்லாததால் கவனிக்காமல் விட்டான்.

ஆனால் தற்பொழுது ராக்கேஷ் பொறுப்பேற்று இருப்பதாக கூறியதால் மறுபடியும் கண்காணிக்க வேண்டுமோ என்று நினைத்து கொண்டிருந்தான்.

அறையில் இருந்து அனைத்தையும் யோசித்து கொண்டிருந்தவனோ சில நொடிகள் கழித்தே தன் முன்னே தர்ஷினி நின்று கொண்டிருப்பதை அறிந்தான்.

ராக்கேஷின் நினைவுகளை ஒதுக்கியவன் தன் முன்னே நின்றிருந்தவளை பார்த்து, “என்ன என் பொண்டாட்டி இன்னைக்கு கூப்பிடாமயே என் முன்னாடி வந்து நிக்குறா… என்ன விசயம்??” என்றான் கண்களில் சுவாரஸ்யம் மின்ன…

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…”

“ஆஹான்… பேசலாமே…” என்றான் கண்களும் உதடும் சிரித்து கொண்டே.

“அ… அது… உங்க தங்கச்சி எதுக்கு அந்த காலேஜ் சேர்ந்தா??? அந்த ராக்கேஷ் அவ்வளவு ஒன்னும் நல்லவனில்லை. வேற காலேஜ் சேர்ந்து படிக்க சொல்லுங்க… அங்க வேண்டாம்.”

வேறு ஏதோ பேச்சை கேட்க ஆர்வமாயிருந்தவனுக்கு அவளின் இந்த பேச்சு ஏமாற்றத்தையே தந்தது. ஆனாலும் இந்த சில மாதங்களில் அவளிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவனும் பார்த்து கொண்டு தானே இருக்கிறான்.

தனது தாய் தந்தையரை அக்கறை எடுத்து பார்த்து கொள்கிறாள். சமைக்க கற்று கொண்டிருக்கிறாள். மருமகளாய் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறாள். தன்னுடைய தேவைகள் அனைத்தையும் தெரிந்து கொண்டு பூர்த்தி செய்கிறாள் தான். ஆனால் அது கடமைனினால காதலினாலா என்பது மட்டும் தெரியவில்லை.

“என்ன எதுவும் பேச மாட்டீங்கறீங்க?” என்று பேச்சில் அவனது எண்ண ஓட்டத்திற்கு தடை போட்டிருந்தாள் தர்ஷினி.

“ஏன் உனக்கு முன்னமே தெரியாதா அவள் எந்த காலேஜ் படிக்கறானு?”

“தெரியாது…” என்று இடவலமாக தலையாட்டினாள்.

“ஏன்?”

“நான் கேட்டது இல்ல…“

“அவ என் தங்கச்சி தானே… இதெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்க மாட்டியா?” என்று அவளை வேண்டுமென்றே குற்றம் சாட்டும் விதமாக கூறினான்.

“அண்ணன் உங்களுக்கே இப்ப தான் அவ எங்க படிக்கறானு கேட்டு தெரிஞ்சுக்கறீங்க… இதுல என்னைய குற்றம் சொல்றீங்களா?” என்று தைரியமாக கேட்டு விட்டாள்.

அவளின் இந்த கேள்வியில் விக்கித்து நின்றது என்னவோ வெற்றி தான்.

அவளும் கேட்டபின்பே அந்த கேள்வியை உணர்ந்தவள் “ஐயோ… இப்படி பேசிட்டமே… அவர் ஏதாவது கோபிச்சுக்குவாரோ…” என்று எண்ணியவள் அவனின் எப்படி உணர்கிறான் என்பதை அறிய அவனது முகம் பார்த்தாள்.

நிமிடத்தில் தனது திகைப்பை மறைத்தவன் “ஓ… என்னையே குற்றம் சொல்ற அளவுக்கு மேடம்க்கு தைரியம் வந்திருச்சு…” என்று முகத்தில் சற்று கோபத்தை கொண்டு வந்து நடித்தான்.

“அது… அது இல்ல… சும்மா ஏதோ பேசிட்டேன்…” என்றவள் அங்கிருந்து நகர பார்க்க வெற்றி அவளது கைகளை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான்.

அவளின் பின்புறத்தை தன்னோடு சேர்த்து அழுத்தி கொண்டவன் அவளுடைய இடையை சற்று அழுத்தி பிடித்தான்.

அவனுடைய வெம்மையான மூச்சுக்காற்று முதுகில் படும் பொழுது உடல் சிலிர்த்தது அவளுக்கு…

அவளுடைய ஆடை மறைக்காத முதுகில் தனது உதடுகள் உரச பேசினான்.

“பரவாயில்லை என் பொண்டாட்டி என்னையே எதிர்த்து கேள்வி கேட்கற அளவுக்கு வந்துட்டா… ம்…” என்று பேச்சினிடையே சிறு சிறு முத்தங்கள் பதித்து கொண்டே பேசினான்.

“எப்படி என்னைய ஏத்துக்குவ??” என்ற குரலில் தாபமும், ஏக்கமும் நிறைந்திருந்தது.

அதை புரிந்து கொண்டவளுக்கோ என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவன் அழைத்து செல்லும் உலகிற்கு சென்று கொண்டிருந்தாள்.

அவர்களின் மோகன நிலையை கலைப்பதற்கே அவனுடைய கைப்பேசி ஒலித்து கொண்டிருந்தது.

அழைப்பு ஏற்கப்படாமயே இருக்க அதன் ஒலி ஒலித்து ஓய்ந்தது. சில நொடிகளுக்கு பிறகு மறுபடியும் ஒலிக்கவே அதனை கருத்தில் கொண்டு எடுத்தான்.

அவனின் பிடி விலகவே அந்த அறையிலிருந்து வெளியேறினாள் தர்ஷினி.

கமிஷனர் தியாகுவின் அழைப்பை பார்த்து ஏற்றவன் “எஸ் சார்…” என்றான் விரைப்பாக.

“வெற்றி கொஞ்சம் ******* ஹாஸ்பிடல் வரமுடியுமா…” என்றார்.

அவரின் குரலிலேயே ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தவன் “இன்னும் அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன் சார்…” என்றவன் கூறியது போலவே தியாகுவின் முன்பு நின்றான்.
 
Last edited:
அத்தியாயம் – 27

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவின் முன்னே அமர்ந்திருந்தார் கமிஷனர் தியாகு.

அவசரமாக அவரின் அருகே ஓடியவன் “சார்… யாருக்கு என்ன ஆச்சு? சொல்லுங்க…” என்றான் பதட்டமாக.

அவரோ பக்கத்தில் இருந்த அறையின் கதவினை காட்டினார். அங்கே கதவுகளில் பொறுத்தியிருந்த கண்ணாடியின் வழியாக உள்ளே பார்க்க அங்கே வாணி வாடியிருந்த மலர் போல படுத்திருந்தாள். எப்பொழுது துறுதுறுவென்று இருப்பவள் இன்று கன்னங்களில் வீக்கங்களும், உடலில் ஆங்காங்கே நகக்கீரல்களும், ரத்ததிட்டுகளும் இருக்க ஒரு காவலனாக இருப்பவனுக்கு வாணிக்கு என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

தியாகுவின் அருகே சென்று அவரின் தோளில் கை வைக்க “ஸார்…” என்று வெற்றி கூற அடுத்த நிமிடம் அவனின் கையை பற்றி கொண்டு அதில் முகம் புதைத்து அழ ஆரம்பித்திருந்தார்.

“சார்… என்ன இது? நீங்களே இப்படி அழுதா? நீங்க ஒரு போலீஸ்… ப்ளீஸ்… இப்ப தான் நீங்க தைரியமா இருக்கனும்…”

“முடியலையே வெற்றி. இது மாதிரி எத்தனையோ கேஸ்களை பார்த்திருக்கேன் தான். ஆனாலும் என்னுடைய வீட்டுல இது நடக்கும் பொழுது என்னால இத தாங்கிக்க முடியல… இந்த நேரத்துல என்னால ஒரு போலீஸ்காரனா தைரியமா இருக்க முடியல… ஒரு அப்பாவா பயப்பட தான் முடியுது…”

“சார்… ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ஃப்…”

அதே சமயம் இவர்களின் அருகே வந்தார் மருத்துவர்.

“டாக்டர்… இப்ப எப்படி இருக்கா என் பொண்ணு?”

“நீங்க போலீஸ்… அவங்கள பார்த்த உடனேயே தெரிஞ்சுருக்கும் என்ன நடந்திருக்கும்னு…” என்றவர் மேலே பேச வாயெடுக்கும் முன்பே வெற்றி வேண்டாம் எனும் விதமாக தலையை ஆட்டினார்.

அவர் எதற்காக கூற வருகிறார் என்பதை புரிந்து கொண்ட மருத்துவரோ “பட்.. நவ் ஷீ இஸ் ஒகே சார்… ரொம்ப பயப்படுற மாதிரி இல்ல…” என்றார்.

அவரை பார்த்து விரக்தியாக சிரித்தவர் “எங்கிட்ட சொல்றதுக்கு சங்கடப்படறீங்கனு எனக்கு தெரியுது… அதனால தான் அவளோட அண்ணனா இருக்கற வெற்றிய கூப்பிட்டேன். எனக்கு என் பொண்ணு உயிரோட எந்த பாதிப்பும் இல்லாம கிடைச்சா அதுவே எனக்கு போதும்… வெற்றி நீயே டாக்டர்கிட்ட பேசு…” என்றவர் ஓய்ந்து போய் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

“சாரி டாக்டர்… அவர் ரொம்ப மன உளைச்சல்ல இருக்கார்… அவளோட ஹெல்த் கன்டிஷன் எப்படி இருக்கு?”

“ரேப் தான் வெற்றி… மயக்கமருந்து கொடுத்து தான் ரேப் பண்ணியிருக்காங்க. அந்த மயக்கத்திலும் அந்த பொண்ணு தன்னோட கற்பை காப்பாத்திக்க போராடி இருக்கா… அந்த சமயம் அவன் கொஞ்சம் அடிச்சிருப்பான் போல அதான் முகத்தில இருக்கற காயம்…”

“டாக்டர் நான் இப்படி கேட்க கூடாது தான்… பட்… அவளுக்கு இந்த சம்பவத்துனால பிஸிக்கலா எந்த விதமான பிரச்சனையும் இல்லையல்ல…” என்றான் சற்றே தயக்கத்துடனேயே.

“நீங்க கேட்கறது புரியுது வெற்றி. அந்த பொண்ணுக்கு வெளிக்காயம் மட்டும் தான்.”

“இதனால அவ வாழ்க்கை ஏதும் பாதிக்கப்படாதல்ல டாக்டர்.”

“அதெல்லாம் எந்த விதமான பாதிப்பும் இல்ல… ஆனா அவங்க மனசலவுல எந்த விதமான பாதிப்புல இருக்காங்கனு தெரியல… மயக்கம் தெளிஞ்சு எழுந்த உடனே தான் தெரியும். சோ… நீங்க தான் அத பார்த்துக்கனும். கண்டிப்பா உடலளவுல அவங்க இதிலிருந்து மீண்டு வர்றதுக்கு நான் பொறுப்பு…”

“தேங்க்யூ டாக்டர்… இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் வாணி கண்முழிக்க…”

“இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்…”

“ஒகே டாக்டர்…” என்றவன் மீண்டும் தியாகுவின் அருகே சென்று மருத்துவர் கூறியதை மேலோட்டமாக கூறினான்.

“இதுக்கு காரணம் யாருனு தெரியுமா சார்?”

“தெரியல வெற்றி… நேத்து மதியம் ஃப்ரண்ட பார்க்க போறேனு சொல்லிட்டு போயிருக்கா… ஈவினிங்க் ஆஹியும் வரல… ஜெயந்தி தான் போன் பண்ணி சொன்னா… நானும் ஃப்ரண்ட் வீட்டுக்கு எங்காவது போயிருப்பா வந்துருவானு சொன்னேன். மறுபடியும் நைட் 8 மணிக்கு ஜெயந்தி கால் பண்ணி இன்னும் வரலைனு சொன்ன உடனே எனக்கு கொஞ்சம் பயமாகிருச்சு. நம்ம தொழில்ல தான் சுத்தியும் எதிரிகள் இருக்காங்களேனு நான் நினைச்சுகிட்டு உடனே அவள சமாதானப்படுத்த வாணி ஃபரண்ட் வீட்டுல தான் இருகானும் அவ போன் சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகிடுச்சுனும் பொய் சொன்னேன். நைட் ஃபுல்லா தேடிட்டு இருந்தேன். அப்ப தான் சிட்டி அவுட்டர்ல ஒரு பஸ் ஸ்டாப்புக்கு பின்னாடி இருபது வயசுல ஒரு பொண்ணு மூச்சு பேச்சு இல்லாம கிடக்குறானு எனக்கு நியூஸ் வந்துச்சு… உடனே அங்க கிளம்பி போனேன். அங்க என் பொண்ணு… என் பொண்ணு…” என்று மேலும் சொல்ல முடியாமல் அழுதார்.

“சார்… ப்ளீஸ்… இப்போதைக்கு அவளுக்கு நீங்க தான் ஆறுதல் கூறணும். நீங்களே இப்படி அழுதா எப்படி சார்…” என்று அவரது முதுகை தடவி கொடுத்தான்.

“அவ இருந்த கோலத்தை பார்த்த உடனேயே மனசு விட்டு போச்சு.. அதுக்கு மேல இதுக்கு காரணம் யாருனு எல்லாம என்னால யோசிக்க கூட முடியல வெற்றி… அதான் உன்ன கூப்பிட்டேன்..”

“ஒகே சார்… விடுங்க… கூடிய சீக்கிரம் இதுக்கு காரணமானவங்கள நான் பார்த்துக்கறேன். இப்போதைக்கு நீங்க வாணியையும் அம்மாவையும் தான் இதிலிருந்து வெளிய கொண்டு வரணும்… ஆனா அம்மாகிட்ட எப்படி சொல்லிவீங்க…”

“அதான் எனக்கும் தெரியல வெற்றி… இந்த விசயத்தை சொன்னா கண்டிப்பா அவ உயிரோட இருக்க மாட்டா…”

“ம்… சார்… அம்மாகிட்ட நான் பேசிக்கறேன்… விடுங்க… முதல்ல வாணி கண் முழிக்கட்டும்…”

இரண்டு மணி நேரம் என்பது மூன்று மணி நேரங்கள் கழித்தே கண் விழித்தாள் வாணி.

கண்விழித்தவுடன் தனக்கு நேர்ந்த கொடுமை முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவிற்கு நியாபகம் வர கதறி அழ தொடங்கினாள். அவளின் அழுகையை கண்ட ஆண்கள் இருவருக்கும் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.

தியாகுவோ ஏதும் பேசாமல் அழுது கொண்டிருக்க வெற்றியோ தான் கண்கலங்கினால் மேலும் இவர்கள் உடைந்து விடுவர். தற்பொழுது இவர்களுக்கு தேவை இந்த நிலைமையிலுருந்து மீட்டு கொண்டுவரவேண்டும். என்று தனக்குள்ளே கூறி கொண்டவன் வாணியின் அருகே சென்று அமர்ந்து அவளது கைகளை தன் கைகளுக்குள்ளே வைத்து கொண்டான்.

அவனுடைய கைகளின் ஸபரிசம் பட்டதும் அவளுடைய உடல் நடுங்கியது. மேலும் அவனது கைகளிலிருந்து தனது கையை விடுவித்து கொள்ள நினைத்து கையை எடுத்தாள். ஆனால் அவளுடைய நிலையை அவனும் உணர்ந்து “வாணிமா… நான் உன் வெற்றிடா… வெற்றி அண்ணன்டா… இங்க பாரு என்னைய… நான் தொட்டா உனக்கு பயமா இருக்கா… இங்க பாருடா… என்னைய…” என்று அவளது தாடையை பற்றி நிமிர்த்தினான்.

அதில் அவனுடைய முகம் பார்த்தவள் உடனே அவனது தோளில் சாய்ந்து அழுக ஆரம்பித்திருந்தாள்.

“வாணிமா… இங்க பாரு… அழுக கூடாது… நீ எவ்வளவு தைரியமான பொண்ணு… உன் தைரியம் எல்லாம் எங்க போச்சு… ம்…” என்று அவளது கண்ணீரை துடைத்து விட்டு கொண்டே கூறினான்.

“என் தங்கச்சி தைரியமானவ… அழ கூடாது… உன் அண்ணா ஒரு ஐபிஎஸ்… உன் அப்பா கமிஷனர்… இப்படி நாங்க ரெண்டு பேரும் உனக்கு பக்க பலமா இருக்கும் போது நீ அழலாமா சொல்லு…” என்று அவளுக்கு கூறுவது போல் தியாகுவுக்கும் கூறினார்.

அவன் கூறிய வார்த்தை இருவரிடமுமே வேலை செய்தது.

ஒரு சில நிமிடங்கள் மௌனம் மட்டுமே அந்த இடத்தில் நிலவியது. அந்த மௌனத்தை கலைக்கும் விதமாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தாள் தர்ஷினி அவளது மாமனாருடன்.

அவளை இந்த நேரம் தியாகுவும் வாணியும் எதிர்பாரததால் என்ன சொல்வதென்றும் எப்படி அவளை எதிர்கொள்வது என்று புரியாமல் முழித்து கொண்டிருந்தனர்.

ஆனால் தர்ஷினியோ எதையும் கண்டு கொள்ளாமல், “வாணி எப்படி இருக்க? இப்ப உனக்கு உடம்பு பரவாயில்லையா?” என்றாள்.

வாணியோ பதில் பேசாமல் வெறுமனே தலையை மட்டும் ஆட்டினாள்.

“ம்… உனக்கு ஒன்னுமில்ல… சீக்கிரமா சரி ஆகிடும்…” என்றவள் தன் கையோடு கொண்டு வந்திருந்த உணவினை தட்டில் போட்டு பிசைந்து அவளது வாயருகே கொண்டு சென்றாள் ஊட்டி விடுவதற்காக.

இதை யாருமே எதிர்பார்க்காத காரணத்தில் அனைவரும் திகைத்து நிற்க வெற்றியோ தன்னவளின் இந்த பரிமாணாத்தை காதலுடன் பார்த்து கொண்டிருந்தான்.

வாணியோ அவள் ஊட்டிய சாதத்தை வாங்காமல் அழுத விழிகளுடன் தர்ஷினியை பார்த்து கொண்டிருந்தாள்.

“என்ன? எதுக்கு இந்த அழுகை? முதல்ல சாப்பிடு… அழுதுட்டே இருந்தா எதையும் எதிர் கொள்ள முடியாது. எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள நம்ம முதல்ல நல்லா சாப்பிட்டு தெம்பா இருக்கனும். சரியா?” என்றவள் தன்னுடைய இடது கையால் அவளது கண்ணீரை துடைத்து விட்டு மீண்டும் உணவை வாயருகே கொண்டு சென்றாள்.

இந்த முறை எந்த வித மறுப்புமின்றி உணவினை வாங்கி கொண்டாள் வாணி.

முழுதாக உணவினை உண்டு முடித்த பின்பு “வாணி… உன் பிரச்சனை என்னனு எனக்கு தெரியாது. தெரிஞ்சுக்கவும் வேண்டாம்… அன்னைக்கு எங்க வரவேற்பு விழாவுக்கு வந்து எவ்வளவு உரிமையா இவர் கூட பேசிட்டு இருந்த… அதெல்லாம் வெறும் பேச்சுக்கு தானா? இவர உண்மையா அண்ணனு நினைச்சிருந்தா நீ இப்படி அழுக மாட்ட வாணி… நாங்க எல்லாரும் உனக்கு துணையா இருப்போம்… சரியா…” என்று வாணியிடம் கூறியவள், “சார்… உங்களுக்கும் சேர்த்து தான் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். ப்ளீஸ் மறுக்காமல் நீங்களும் சாப்பிடுங்க…” என்றாள் தியாகுவிடம்.

அதை கேட்ட தியாகுவோ, “தர்ஷினி எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து ஆறுதல் சொல்றியே… ரொம்ப சந்தோஷம் மா… வெற்றியாவது எங்களுக்கு இத்தனை நாள் பழக்கம்… ஆனா உன்னை ஒரு தடவ தான் பார்த்து இருக்கோம். ஆனா நீ கூட பிறந்த தங்கச்சி மாதிரி அவளுக்கு ஆறுதல் சொல்லி துணையா இருக்கோம்னு சொன்னயே அதுவே போதும்மா… இனிமேல் வாணி மட்டும் இல்ல நீயும் எனக்கு மகள் தான். என்னை சார்னு கூப்பிடாம அப்பானே கூப்பிடுமா…” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

அவரின் தோளில் ஆறுதலாக தட்டி கொடுத்தார் சீனிவாசன்.

“இப்ப என்னோட கவலை எல்லாம் இவளோட இந்த நிலைமைய எப்படி இவ அம்மாகிட்ட சொல்லுவேன். போலீஸ்காரனா இருக்கற நானே இந்த அளவுக்கு உடைஞ்சு போய்ட்டேன். அவ எல்லாத்துக்கும் பயப்படுவா… அவ எப்படி எடுத்துக்குவாளோ தெரியல…” என்று தனது கண்ணீரை துடைத்து கொண்டே கூறினார்.

“சார்… இப்போதைக்கு அம்மாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம். அவங்க ரொம்ப உடைஞ்சு போய்டுவாங்க… நானே நேர்ல போய் பேசி அவங்கள கூட்டிட்டு வர்றேன்… அவங்க என்ன சொல்றாங்களோ அதுக்கு ஆமானு மட்டும் சொல்லுங்க… மத்தபடி ஏதும் அவங்ககிட்ட சொல்ல வேண்டாம்.”

தியாகுவோ அதற்கு ஆமோதிப்பாக சரி எனும் விதமாக தலையாட்டினார்.

தர்ஷினியை வெளியே வருமாறு சைகை காட்டி விட்டுவெளியே சென்றான்.

அவளும் எழுந்து அவன் பின்னே சென்றாள்.

“தேவா… நான் வர்ற வரைக்கும் நீயும் அப்பாவும் இங்கேயே இருங்க… வாணிய தனியா விடாத… அவகூட ஃப்ரண்ட்லியா பேச்சு கொடுத்து இது எப்படி நடந்துச்சுனு நான் வர்றதுக்குள்ள கொஞ்சம் விசாரிச்சு வை… சரியா… என்ன தான் அண்ணனு சொன்னாலும் ஒரு சில விசயங்கள் என் கூட பேச அவ சங்கடப்படுவா… அதனால நீ கேளு… அப்புறம்…” என்றவன் சுற்றி முற்றி பார்த்து விட்டு அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டான்.

அவளோ திகைத்து நிற்க அவளது கன்னத்தை தட்டி கொடுத்தவன் “இன்னைக்கு என்னவோ என் பொண்டாட்டி வேற மாதிரி தெரிஞ்சா… ரொம்ப பிடிச்சுருக்கு உன்னைய… ஐ லவ் யூ டி…” என்றவன் மறுபடியும் அவளது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அறையினுள் நுழைந்தான்.

அவளோ வெற்றியின் இந்த அதிரடியில் அதிர்ந்து நின்றுவிட்டாள். சிலரின் பேச்சு சப்தத்தில் தெளிந்தவள் உள்ளாஎ நுழைந்தாள்.

அங்கே அவளது கணவன், “அப்பா… நான் போய்ட்டு வர்ற வரைக்கும் இங்கேயே இருங்க…” என்றவள் திரும்பி தனது மனைவியை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றான்.

கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாத மனுஷன். எந்த இடத்துல எப்படி நடந்துக்கனும்னு கூட தெரியல… என்று மனதிற்குள்ளேயே அவனை திட்டி கொண்டு சென்று வாணியின் அருகே அமர்ந்தாள்.
 
Status
Not open for further replies.
Top