விவாஹம் 1:
நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்த மனையாளை தொந்தரவு செய்ய விரும்பாமல் சத்தமின்றி உள்ளே நுழைந்த ஆடவன்,தன்னுடைய சட்டையை கழற்றி அதனை கொரண்டியில் மாட்டிவிட்டு திரும்ப நினைத்தான்.
அச்சமயத்தில் அவனை திரும்ப விடாமல் மேல் சட்டையின்றி வெற்று தேகத்துடன் இருந்தவனின் முதுகை ஒரு வளையல் கரம் சுற்றி வளைத்தது.
அதில் அவனது முகத்தில் ஒரு இளநகை மலர "ஏய் திருட்டுப்பூனை…இன்னும் தூங்கலையா நீ?" என அதீத காதலுடன் குழைந்து வந்த குரலில் உருகிய அவனது மனையாளோ "நீங்க வராமல் என்னைக்கு தூங்கியிருக்கேன் மாமா" என்றுரைத்தவளிடம் "நீ தூங்காமல் இருக்கிறதும் எனக்கு நல்லது தான் பேபி" என விஷமத்துடன் இதழ்மடித்து சிரித்தவனின் பளிங்கு முதுகில் வெட்கத்துடன் தன் முகத்தை புதைத்து அதில் அழுத்தமான முத்தமொன்றை கொடுத்தாள் அப்பெண்.
அதில் அவன் தேகமோ சிலிர்க்க அப்படியே சில நொடிகள் மயக்கத்தில் விழி மூடி சிலிர்ப்புடன் கைமுஷ்டி இறுக நின்றுக்கொண்டிருந்தான் ஆடவன்.
பெண்ணவளோ முன்னால் இருந்த தன் பூங்கரம் கொண்டு உடற்பயிற்சியினால் முறுக்கேறி இருந்த அவனது படிக்கட்டு தேகத்தை பின்னால் இருந்தப்படியே வருடியவாறே "மாமா யூ ஆர் சோ ஹாட்" என்றவளின் குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது.
பட்டென்று விழி திறந்த ஆடவன் அதற்கு மேல் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாமல் அவளின் கைப்பிடித்து முன்னால் இழுத்து நிறுத்தியவன் "நான் எவ்வளவு ஹாட்டுன்னு உனக்கு காட்டறேன் பேபி" என சிரித்தப்படி கூறியவன் புடவையினூடே கைவிட்டு அவளை தன்னோடு இழுத்தணைத்து நெருக்கினான்.
அத்தோடு பெண்ணவளின் கண்ணோடு கண் நோக்கி அவளின் சிவந்த இதழ் நோக்கி முத்தமிட குனிந்திருந்தான்.
அப்பெண்ணும் இதழை குவித்து அவனது முத்தத்திற்கு தயாராக அவனது கழுத்தை கட்டிக்கொண்டு விழி மூடி காத்திருக்க,மனையாளின் இதழை நெருங்குவதற்கு நூலளவு இடைவெளியில் பெண்ணவளின் முகம் பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்களில் அதுவரை இருந்த கிறக்கம் காணாமல் போக கொலைவெறியில் விழிகள் இரத்தநிறத்தை பூசிக்கொண்டது.
பின்பு தன் கால்சட்டை பையில் மறைத்து வைத்திருந்த இரவின் ஒளியை கிழித்துக் கொண்டு பளபளத்த கத்தி கொண்டு அவளது இடையிலேயே சராலென்று பல முறை குத்தியவனின் இதழ்களிலோ ஒரு குரூர புன்னகை தோன்ற அவளது காதரோம் "ரெஸ்ட் இன் பீஸ் மை பேபி" என சீறலான குரலில் கூறி அவளை கீழே தரையை நோக்கி தள்ளிவிட்டிருந்தான் மனித உருவில் இருந்த அந்த அரக்கன்.
இறந்து கிடந்த அந்த சடலத்தையே இதழை வளைத்து சில நிமிடங்கள் கொடூரமாய் ரசித்து அவன் பார்த்திருந்த நேரத்தில் "கட்…கட்.." என்ற இயக்குனரின் சத்தத்தில் அவ்விடத்திலிருந்த அத்தனை விளக்குகளும் ஒளிர்ந்தது.
ஆம்,நாக தேவ் ஒரு பிரபலமான திரைப்பட நடிகன்.அவன் நடித்த அத்தனை படங்களும் கதாப்பாத்திரங்களுமே விண்ணை தொடும் அளவு வெற்றியை பெற்றிருந்தது.
பொதுவாக தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு இயக்குனரின் கதையை வைத்து நாயகனை தேடுவார்கள்.ஆனால் நாக தேவ் விஷயத்திலோ அவன் தான் இயக்குனரை தேர்வு செய்து,அதற்கு ஏற்ற தயாரிப்பாளரை தேர்ந்தெடுக்கும் அளவு உயர்ந்திருக்கிறான்.
அதுவும் கடந்து இரண்டு வருஷத்தில் அவன் நடித்து வந்த படங்கள் அனைத்தும் அசுரத்தனமாக ஓடி அமோக வெற்றியை அடைந்திருந்தது.
ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் தன்னுடைய கடின உழைப்பினால் மட்டுமே அவன் மக்கள் மதிக்கும் நட்சத்திரமாக அவர்களின் மனதில் ஜொலித்துக் கொண்டிருக்கிறான் திரையுலக சூப்பர் ஸ்டார் நாக தேவ்.
சினிமாவில் நடிக்க தொடங்கிய நாட்களில் பவ்யமாக அனைவருக்கும் மரியாதை கொடுத்து நடந்துக் கொள்ளும் நாக தேவ்வின் நடவடிக்கைகள் தொடர்ந்து நான்கு வெற்றி படங்களில் நடித்து உலக புகழ் பெற்று,அவனது கையில் கோடி கோடியாக பணம் புரள தொடங்கியவுடன் ஒரு அந்தஸ்து நடிகர்களுக்கே உரிய கர்வமும் மமதையும் அவனிடத்தில் உருவாகியிருந்தது.
அவனையும் குறை கூறுவதற்கில்லை.வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் அவனிடத்தில் நீக்கமற நிறைந்திருந்து அவனை திமிர்ப்பிடித்தவனாக மாற்றியிருந்தது.
நடித்துக்கொண்டிருந்த வேளையில் பல உணர்ச்சிகளை பிரதிபலித்த அவனது முகமோ,இயக்குனர் 'கட்' என கூறியவுடன் இப்போது கடும்பாறையென இறுகி அவனது நிஜமான முகத்திற்கு மாறியிருந்தது.
அவன் அங்கே தனக்கென போடப்பட்டிருந்த பிரத்யேக நாற்காலியில் அமர்ந்தவுடன்,அவனது உதவியாளினி ஓடி வந்து குட்டி மின் விசிறியை அவனை பார்த்து உயர்த்தியோடு வேறொரு புதிய சட்டையையும் அவன் கையில் பவ்யமாக வழங்கினாள்.
அவனிடம் வேலைக்கு சேர்ந்த நாட்களின் தொடக்கத்தில் அவனிடம் வசவுகளை மட்டும் பரிசுகளாக பெற்றிருந்தவள்,இப்போதெல்லாம் அவன் கண் பார்த்து செயல்படும் அளவில் வளர்ந்திருந்தாள் ஷாலினி.
தன் பணியை சரியாக செய்ய தொடங்கியவுடன்,அவனிடமிருந்து ஒரு பாராட்டிற்காக அவனையே ஏக்கத்துடன் பார்ப்பாள்.ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கும்.
இப்போதும் தனது முதலாளியை பார்க்க,தேவ்வோ அவளை பாராட்டும் விதமாக எந்த வார்த்தையும் கூறாமல் சட்டையை அணிந்து கொண்டு மேல் இரண்டு பொத்தான்களை கழட்டி விட்டு தன் நெஞ்சுரத்தை அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியப்படி கால் மேல் கால் போட்டு ஆணவத்துடன் அமர்ந்திருந்தான்.
அதன்பிறகே தன்னை பார்த்து கையை பிசைந்துக்கொண்டிருந்த இயக்குனரை அவனருகே கையசைத்து அழைத்தவன் 'என்ன' என்பது போல் தன் கூர் விழிகளால் அவரை துளைத்தெடுத்தப்படி பார்த்திருந்தான்.
அவரோ அவனருகே நெருங்கி வந்தவர் சிறிது தயக்கத்துடனே "சார்…நீங்க கொலைப்பண்ணற சீனுக்கு முன்னால் ஒரு லிப்லாக் பண்ணனும்" என்னும்போதே,
"யா ஐ நோ" என அலட்சியமாக கூறியவன் 'அதுக்கு என்ன?' என்பது போல் அவரை உறுத்து நோக்க,
'தெரியும்…ஆனாலும் அதை செய்யவில்லை' என்பது போன்ற பாவனையில் திமிராக கூறியவனிடம் 'என்ன' என்று கேட்க முடியாமல் தன்னையே நொந்துக்கொண்டு "ஒண்ணுமில்லை சார்…நீங்க மறந்திட்டிங்களோன்னு நினைச்சு கேட்க வந்தேன் சார்…வேற ஒண்ணுமில்லை…நான் கிளம்பறேன்" என்றவரை ஒற்றை புருவம் உயர்த்தி ஊசியின் கூர்மையோடு கைகள் கட்டி பார்த்திருந்தான் நாக தேவ்.
பின்பு 'என்ன நினைத்தானோ?' அவரை சொடக்கிட்டு அழைத்த தேவ்,அவர் தன்னை நோக்கி திரும்பியவுடன் தன் முழு உயரத்திற்கும் எழுந்து தன் கால்சட்டை பையினுள் கைவிட்டு காலை அகட்டி திமிராக நின்றவன் அந்த படத்தின் நாயகியை கண்ணால் காட்டி "இனிமேல் இந்த மாதிரி சீப்பான பொண்ணுங்களை நடிக்க கூட்டி வந்தீங்க…நான் எடுக்கப்போற முடிவு விபரீதமா இருக்கும்…காட் இட்" என கர்ஜிக்கும் தோரணையுடன் தன்னை மிரட்டியவனை பார்த்து பயத்துடனே தலையசைத்து வைத்தார் அந்த இயக்குனர்.
உடனே கால்சட்டை பையிலிருந்து கையை எடுத்து தேவ் ஒற்றை கையை மேலே தூக்கி சொடக்கிட்டவன்,அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரின் பார்வையும் அவன் மீது பீதியுடன் ஒரு சேர குவிய "பேக் அப்" என ஆணை பிறப்பித்துவிட்டு விறுவிறுவென்று நடிகர்களுக்கு என வழங்கப்படும் கூண்டு வண்டியை நோக்கி நடந்தான்.
இயக்குனரோ 'அடேய்…இங்க நான் இயக்குனாரா நீயாடா?முடியலை' என்பது போல் நொந்துப்போய் கதாநாயகியாக நடித்த அந்த பெண்ணிடம் 'நீ எதாவது சொதப்பினீயா?' என்று வேறுவழியின்றி அவளை வறுத்தெடுத்து கொண்டிருந்தார்.
வண்டியை நெருங்கியதும் அவனது உதவியாளினி ஓடி வந்து கதவை திறந்துவிட மெச்சுதலாய் கூட ஒரு பார்வை பார்க்காமல், 'நீ வர வேண்டாம்' என்பது போல் அவளின் முன்பு ஒற்றை கையை மட்டும் நீட்டி தடுத்துவிட்டு உள்ளே சென்று கதவை அடித்து சாற்றிக்கொண்டான்.
அவன் அடித்து சாற்றியே வேகமே அவனது சினத்தை அங்கிருந்து அனைவருக்கும் எடுத்துரைத்தது.
அவன் உள்ளே செல்லும் நிமிடம் வரை மழை பேய்ந்து ஓய்ந்தது போல் அவ்விடமே நிசப்தமாக இருக்க,அவன் உள்ளே சென்று தஞ்சமடைந்த அடுத்த வினாடியே பெரிய சலசலப்பு அவ்விடம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது.
அனைவரும் அந்த பெண்ணை சுற்றிக்கொண்டு கேள்வியால் துளைத்தெடுக்க,அவள் 'என்ன' கூறுவது என்று தெரியாமல் இரத்தம் தோய்ந்த காட்சியில் நடித்த அதே புடவையுடன் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தாள்.
பின்பு அவள் வளர்ந்து வரும் நடிகை என்பதால் இப்போது அவள் செய்து வைத்த காரியத்தை கூறினால் சமூகத்தில் அவளிற்கு இருக்கும் பெயர் சீரழிந்து,தன்னுடைய சினிமா சந்தையில் தன் மதிப்பு குறைந்துவிடும் என்று எண்ணி துணிச்சலை வரவழைத்து "டைரக்டர் சார்…நேத்து ஹீரோ சார் என்னை அவரோட ரூமுக்கு கூப்பிட்டாரு…நான் அந்த மாதிரி பொண்ணில்லைன்னு சொல்லி அதை மறுத்திட்டேன்னு என்னை இப்போ பழிவாங்கிட்டு போறாரு…நீங்களும் அதை நம்பிட்டு என்னை கேட்கறீங்களே?" என இரண்டு சொட்டு முதலை கண்ணீர் சிந்தவும்,
அதனை நிஜமென்று நம்பிய சில கூட்டம் தேவ்வை குற்றம் கூறியது என்றால்,இயக்குனர் உட்பட அவளை பற்றி நன்கு அறிந்த சிலர் அவளை நம்பாத பார்வை பார்த்திருந்தனர்.
ஏனென்றால் பணத்திற்காக அவள் என்னவெல்லாம் செய்வாள் என்பதை நன்கு அறிந்தவர்கள் 'இவள் என்ன செய்தாளோ?ஹீரோ சார் கோபப்பட்டு போயிட்டாரு' என இவளின் மீது கண்டனம் செலுத்தி அடுத்த வேலையை பார்க்க சென்றனர்.
"யாரு மேலே தப்புன்னு எனக்கு தேவையில்லை…தேவ் சார் சொன்ன மாதிரி இந்த படத்திலிருந்து உன்னை தூக்கியாச்சு" என்று இயக்குனர் சிறிதும் இரக்கமின்றி கூறவும்,
அவளோ "நான் புரோடியூசர் சார்கிட்ட பேசிக்கிறேன்" என்று குதிக்கவும்,
அவரோ 'நீ யாருக்கிட்ட வேணா பேசு…கடைசியா தேவ் என்ன நினைக்கிறானோ?அதான் நடக்கும்' என எரிச்சலாக தன்னிலையையும் நொந்தப்படி அந்த இடத்தை காலி செய்திருந்தார் இயக்குனர்.
அவரின் தலை மறைந்தவுடன் அவளது முகம் விகாரமாக மாற,மூடியிருந்த தேவ்வின் வண்டியை வன்மத்துடன் நோக்கி "உன்னை நான் சும்மாவே விடமாட்டேன்டா" என்றப்படி தொப்தொப்பென்று நடந்து தனக்குரிய வாகனத்தில் ஏறி பறந்திருந்தாள்.
இங்கு நாக தேவ்வோ அவளின் மீதிருந்த கடும்கோபத்தில் சிகரெட்டை வாயில் வைத்து வளையம் வளையமாய் புகையை வெளிவிட்டு கொண்டிருந்தான்.
'எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் அனுமதியின்றி இவ்வாறு செய்திருப்பாள்' என மனமெல்லாம் கொந்தளித்த தேவ் தனது அலைப்பேசியை எடுத்து அவனது மேலாளருக்கு தொடர்பு கொண்டான்.
"மோகன் அந்த டயானாவை என்னுடைய கேரவனிற்கு சீக்கிரம் அனுப்பு" என்றவுடன்,
"நோ ஜி…அவங்க வேற ஒரு கஸ்டமர் கூட…" என்னும் போதே,
"கோ டூ ஹெல்" என நரம்புகள் புடைக்க கத்திவிட்டு அலைப்பேசியை தூக்கி கீழே எறிய,அதுவோ தூக்கு நூறாக உடைந்து சிதறியது.
வெளியில் நின்றிருந்த ஷாலினியோ இரைச்சல் கேட்டு "150" என முணுமுணுத்து இரண்டு காதையும் கைகளால் பொத்திக்கொண்டாள்.