Priyanka Muthukumar
Administrator
இக்கதைக்கான விமர்சனத்தை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
wooooooow..... first review.......#தீத்திரள்_அசுரனே
Title பிடிச்சு தான் வாசிக்க ஆரம்பிச்சேன்😍😍
கார்முகில்🥰 தாய் தந்தை இருவரும் பிசினெஸ் ஆட்கள்... தாய் தந்தையின் ஆசைக்காக பிடிக்காத அத்தை மகன் வசியை திருமணம் செய்ய சம்மதிக்கிறா😢😢
பெற்றோருக்கு பிடித்த வசியோ ஊரில் அத்தனை கேடுகெட்ட தனமும் இருந்தும் திறமையாய் மறைத்து நடிக்க😡
அவளுக்கு பிடித்த ருத்ராவை, அவனின் குறையால் அவள் அம்மா பிரியாவுக்கு பிடிக்காது... அவள் அப்பாவு ராமுக்கு வசியால் பிடிக்காது🙄 ஏனோ...!?
ருத்ராவோ, வசியின் மேல இருக்கும் கோபத்தில் முகிலைப் பயன்படுத்த😳😳
காதல் ஜெயிக்க வழி தேடும் அவளின் முன், அவனின் குழந்தையுடன் ருத்ரா🙄🙄 அவளின் கனவை காவு கேட்டு😳
முகில் பெற்றோர் அவளை படுத்தும்பாடு🤬🤬 இப்படிபட்ட பெத்தவங்க😡😡😡
இதில் நிலா, அவனால் ஏமாந்தும், அவன் மேல் கொண்ட காதலால், அவன் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண போறான், குழந்தை எல்லாம் தெரிந்தும், அவனை அவள் காதல் திருத்தும் என நம்பி காத்திருக்க😳🙄😆😆
உல்லாச வாழ்வில் உற்சாகமாய் சுத்தும் வசிக்கு இடியாய் இறங்கும் ஸ்பீட் ப்ரேக்😳😳😳 என்னவோ....!?
வசிக்கும், ருத்ராவுக்கும் என்ன பிரச்சனை....!? ருத்ராவுக்கு என்ன குறை....!? நிலா, முகில் இருவரில் யாரின் காதல் ஜெயிக்கும்....!? குழந்தை யார்...!?
பிரியா & ராம் கடைசி வரை பிடிக்கல🙃🙃 பிசினெஸ் பண்ற ஆட்கள் போலவா ரெண்டு பேரும் இருக்காங்க... யார் என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு, ஒரு முதிர்ச்சி இல்லாம அவங்க இஷ்டத்துக்கு நடக்கிறது😡😡😡
பிரியா🤬 என்ன அம்மா இவங்க எல்லாம்... தாய்மை என்ற ஒன்னு இருக்க போல எனக்கு தோணல😡😡 இவங்களுக்கு பிடிச்சா தலையில் தூக்கி வைப்பதும், இல்லனா தூக்கி எறிவதும் என சுத்தமா பிடிக்கல... யார் விசயத்திலும் இவங்க நியாயமா இல்ல😡😡
ராணி இவங்களையும் எனக்கு பிடிக்கல..ம அவசரக்குடுக்கை... எல்லாம் பண்ணிட்டு அப்பறம் ஃபீல் பண்றது😡😡
ராம் இவரும் தான்... ராணி விசயத்தில் பிரியா பேச்சை கேட்காம இருந்து இருக்கணும்😡😡😡 பிசினஸ்மேன் போல ஒரு அலசல் இல்ல இவர்கிட்ட😞😞 இது இல்லனா அது, அது இல்லனா இதுன்னு🤦♀🤦♀🤦♀
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் மூளையை முட்டுசந்து கடையில் அடகு வச்சு இருப்பாங்க போல🤦♀🤦♀🤦♀
இவருக்கான கடமை, பொறுப்பை இவர் சரியா செய்யவே இல்ல😡😡
பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடிட்டு, திடீர்னு திருந்திட்டு அவளை குறை சொல்றது😡😡😡 ஆரம்பம் போலவே இருந்து இருக்கலாம், திடீர்னு பாசம் சொல்றது எனக்கு புரியவே இல்ல... போங்க டா நீங்களும் உங்க பாசமும்🤦♀🤦♀ கிராக்குங்க😡
நிலா பிடிக்கவே இல்ல ஆரம்பத்தில் இவளை... அப்படி என்ன மண்ணாங்கட்டி காதல் வெங்காயம் வேண்டி கிடக்கு அப்படினு😡😡 செம்ம கடுப்பு இவ மேல🤦♀ இவளுக்காக அவ்வளவு செஞ்சவங்க கிட்ட, இவ காதலனை முழுசும் தெரிஞ்சவங்க கிட்ட இவ பேசுறது, கோபப்படும் போது எல்லாம் எனக்கு சப் சப்புனு நாலு வைக்க தோணுச்சு😡😡 இவளை பெரிய ஆள் range kku சந்தேகம் எல்லாம் பட்டா, இவ🤦♀ இதுவும் கடவுள் பார்த்துப்பார் கேஸ் போல😆😆 ஷப்பா..... யாரோ ஒருத்தர் தான் செய்யணும், இவங்க ஒன்னும் செய்ய மாட்டாங்க, சென்டியா அழுறதை தவிர🤣🤣🤣
ருத்ரா & வசி - அஞ்சில் வளையாதது..... Very apt... பெத்தவங்க ஒன்னும் பார்க்காம விட்ட போல, பொறுப்பு எடுத்தவங்க அதுக்கும் மேல🤦♀ கஷ்டப்பட ஒருத்தன், கஸ்டப்படுத்த ஒருத்தன்😔😔 கூட எல்லாம் வேடிக்கை பார்த்து🤦♀ தேவையான சமயம் தேவையான ஆறுதலும், அறிவுரையும், கண்டிப்பும் கிடைக்காமல் போனது தான் காரணம்😔😔 ஆனாலும் தானாய் பார்த்து திருந்தாவிட்டால்......! யார் என்ன செய்ய🤷♀🤷♀
ஒரே சூழல் ஆனால் குணத்தில், வளர்ந்து நிற்பதில் எவ்வளவு வித்தியாசம்😒😒😒
முகில்😍 சரியா புரிஞ்சு வச்சு இருக்க அவனை... ஆனால் இவ குழம்பி செய்யுற எல்லாம் அடியே🤦♀பேச தைரியம் இல்லாம எங்க வரை இழுத்து😏😏 பிரியா கிட்ட, கடைசியா பேசுனதை முன்னாடியே செஞ்சு இருக்கலாம்🤷♀ நிரூபிக்க வழிகள் இருந்தும், லூசு போல என்னமோ நடக்கட்டும் அப்படினு, அதுவா கைல வரணும் நினைச்சு இருந்து இருப்பா போல😡😡 குழம்பி ஊமையா போறது🤣🤣🤣 அப்பறம் வீரமா போய் பேசுறது😆😆😆 இவளோட செம்ம காமெடி எனக்கு😂😂😂
கனி🥰 லவ்லி நீ... வாழ்வின் பிடிப்பு நீ சிலருக்கு... வாழ்வை முடிக்கும் நிலையிலும், வாழ ஆசை கொள்ள காரணம்😍 தூக்கி எறிந்துவிட்டு போனவங்க, உன்னால் வாழறாங்க பாரு சூப்பர்ப்👏👏👏
நகுல்😍😍 இவனை தான் எனக்கு பிடிச்சது... ருத்ரா அண்ட் இவன் நட்பு சூப்பர்... அவனுக்காக எதிலும் உடன் நிற்கும் இவன்👏👏👏
ருத்ரா😍 இவனை பிடிச்சது... இவனோட ஒவ்வொரு செயலும் ... இன்னா செய்தாரை... பொருத்தம்.... எத்தனை துன்பங்கள் குடுத்த போதும் அவங்க கேட்டு நிற்கும் போது அதை அவன் செய்யுறது சூப்பர்👏👏 தடுமாறிட வயதும், வழியும், வலியுமே இருந்த போதும் தீர்க்கமாய், நன்னெறியில் வளர்வது😍😍 தாத்தாவின் சொற்கள் மீறி அவனுக்காக, நேசத்துக்காக அவனின் முடிவு சூப்பர்ப்😍😍
சூப்பர் ஜி... கதையை வெற்றிகரமாக நிறைவு செஞ்சிட்டீங்க👏👏👏 நல்லா இருந்தது😍😍
வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐💐
Thank you once again sis🙏💕பிரம்மாஸ்திரம் 2023
தீத்திரள் அசுரனே
விமர்சனம்
கதையோட கவர்ச்சி பார்த்து ஆர்வமா படிக்க ஆரம்பிச்சேன் ஆனா படிக்க படிக்க இப்படியும் மனிதர்கள் இருப்பாங்களா என்று தோன்ற வைத்துவிட்டது இந்த கதை.
கார்முகில் தங்கக் கூண்டுக்குள் அடைப்பட்ட செல்லக்கிளி அவள்.
பெரும் தொழில்துறையினராகிய கார்முகிலின் பெற்றோர் இருவரும் தங்களின் பகட்டு வாழ்க்கைக்கு ஆகும் ஆடம்பரத்திற்காகவும் மகளுக்கு பிடிக்காத ஒருவனான வசியை திருமணம் செய்து வைக்க பார்க்கிறார்கள்.
வசியோ தன் கண்ணில் படும் அனைத்து பெண்களிடமும் தன் லீலைகளை காட்டி ஊரில் உள்ள அனைத்து கேடுகெட்ட வேலைகளையும் செய்து கொண்டு பாவமான முகத்தை வைத்து அனைவரிடமும் திறமையாக நடித்துக் கொண்டிருக்கும் பசுத்தோல் போர்த்திய புலி
முகிலின் உள்ளத்தில் நிறைந்தவனான ருத்ராவை அவனின் குறையை காரணம் காட்டி அவளிடம் இருந்து விலக்கி வைக்கின்றனர் அவளின் பெற்றோர்.
வசியுடன் இருக்கும் பகையை தீர்க்க கார்முகிலை பகடைக்காயாக வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ருத்ரா.
முகில் தன் காதலை வெளிப்படுத்தும் போது அதனை ஏற்க மறுத்து முகில் உயிராக நினைக்கும் அவளது கனவை விட்டு வர கூறும் ருத்ரா .
முகில் அவளது கூண்டை விட்டு வெளியேறினாளா? வசீயின் முகத்திரை எவ்வாறு கிழிகிறது? ருத்ராவிற்கு என்ன குறை? வசிக்கும் ருத்ராக்கும் என்ன பகை? முகிலின் திருமணம் ருத்ராவுடனா?வசியுடனா? முகில் அவள் லட்சியத்தில் வென்றாளா? என்று பல கேள்விகளோடு கதை நகர்கிறது எல்லா கேள்விகளுக்கும் விடை கதையில்.
ராம் பிரியா ராணி இவங்க மூணு பேரையும் கதைல சுத்தமா பிடிக்கல இவங்க எல்லாம் என்ன மனுசங்கன்னு தோணுது. பிரியாவோட செயல் சில இடங்களில் இவங்களாம் ஒரு அம்மாவா நாலு அப்பு அப்பினா என்னனு இருந்தது.
ராணி உப்பு பெறாத ஒரு காரணத்துக்காக தன் வாழ்க்கையும் அழித்து தன் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனிக்காம விட்டு அவர்களின் வாழ்க்கை திசை மாறி போக விட்ட இவர்களின் செயல் மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
நிலா ஆரம்பத்துல நிலா காதல் பார்க்கும் போது இவ காதலிக்க வேற ஆளே கிடைக்கலையான்னு இருந்தது சொத்த பைத்தியக்காரத்தனமா தெரிஞ்சது ஆனா கடைசில இவளோட ஆழமானஆழமான காதல் நெகிழ வைத்தது
நகுல் ரொம்ப அருமையான நண்பன்
ருத்ரா திசை மாறுவதற்கான சூழ்நிலையும் வலிகளும் காரணங்களாக இருந்த போதும் தவறான வழியில் செல்லாமல் நல்லவனாக வளர்ந்து தன்னை ஒதுக்கியவர்களையும் அரவணைத்து அவர்களின் மீது அக்கறை கொள்ளும் விதம் சூப்பர்.
தங்களின் பகட்டுக்கும் பெருமைக்கும் மதிப்பளித்து பெற்ற பிள்ளைகளின் மனதை அறியாமல் அவர்களை வருத்தும் பெற்றோர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றனர்
நல்ல கதை அருமையான முடிவு வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
Thank you once again sis🙏💕#பிரம்மாஸ்திரம்_2023
#கௌரிவிமர்சனம்
#தீத்திரள்_அசுரனே
காதல் கதை♥️♥️♥️♥️♥️
ராம் & பிரியா ஓட பொண்ணு தான் நம்ம ஹீரோயின் கார்முகில்....கேட்டது இல்லைனு சொல்லாம செல்லமா இருக்கும் பெற்றோர்🥰🥰🥰🥰
இவளோட முதல் காதல் பாரதம், அதை இப்ப வரை அழகா படிச்சிட்டு வர.......இன்னொரு காதலுக்கு தான் ஏக தடை பெற்றோர் கிட்ட இருந்து🤷🤷🤷🤷🤷🤷
ஏன்??????
எல்லா அம்மா அப்பா போல தான்....இத்தனைக்கும் அவன் சொந்த அத்தை மகன் தான், ருத்ரா நம்ம ஹீரோ🤩🤩🤩🤩🤩🤩....
ஆன அவளை வசிக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசை இல்ல இல்ல வெறினு கூட சொல்லலாம்......அவன் நம்ம ஹீரோ ஓட அண்ணன் தான்......
காரணம்????
அவர்களிடம் அவன் போடும் ரொம்ப நல்லவன் வேசம் தான்🤷🤷🤷🤷🤷
அதில் இவளுக்கு விரும்பம் துளியும் இல்ல, காரணம் அவன் ஊர் பொறுக்கி😡😡😡😡😡😡😡
இவர்கள் இப்படி இருக்க, மாமா குடும்பம் ஒதுக்கி வைத்த ருத்ரா😥😥😥😥😥
எதற்காக??????
இந்நிலையில் முகில் காதல் வென்றதா, வசியின் உண்மை முகம் தெரிந்ததா, ருத்ராவை ஒதுக்க காரணம், இது எல்லாம் கதையில்.......
ருத்ரா - சின்ன விஷயத்திற்காக இவன் அம்மா அப்பா பிரிஞ்சி இருக்க......
சின்ன வயசில் பார்வை குறைபாட்டால் சொந்த தாயே முதலில் ஒதிக்கி வைக்கிரார்🥺🥺🥺🥺🥺.....
பிறகு அப்பாவிடம் வளரும் ருத்ரா, ரொம்ப நல்ல பையனாவே இருக்கான்.....
ஆன தாய் ஒதுக்கி வெச்ச காயம் அவனை ரொம்பவே இறுக செய்து😓😓😓😓😓😓😓
கார்முகில் - சின்ன வயதில் ஒதுங்கி போன ருத்ரா, திரும்பவும் வாழ்க்கையில் வர, காதல் துளிர்க்குது......
அவள் காதலை அடைய செய்யும் முயற்சிக்கள் எல்லாம்🤩🤩🤩🤩🤩
பிரியா & ராம் - என்ன பெத்தவங்க இவங்கனு செம்மையாக காண்டு ஆச்சி😤😤😤😤😤
அதுவும் பிரியா பண்றதை பார்த்து ரெண்டு அப்பு அப்பலாம்னு இருந்தது😡😡😡😡😡😡😡😡, கடைசி வரை திருத்தல😏😏😏😏😏😏😏😏
நிலா - உண்மையா இவளை எனக்கு ரொம்ப பிடிச்சது......
இவளோட காதல் ரொம்ப தனித்துவமானது 🥰🥰🥰🥰🥰🥰
ஆரம்பத்தில் என்ன பொண்ணு நீ அப்படினு கோவம் தான் வந்துச்சி,ஆன கடைசில ப்பா என்ன பொண்ணு மா நீ நினைக்க வெச்சிட்டா♥️♥️♥️♥️♥️♥️
வசி - பயங்கர பொறுக்கி 😡😡😡😡😡
இவன் இவளோ கெட காரணம் இவன் அம்மா தான்...... தன் துயர், சோகம்னு தனகுள்ளையே மூழ்கி, பையனை கவனிக்க கண்டிக்க தவற விட்டுட்டாங்க 🤷🤷🤷🤷🤷🤷
பிள்ளைக்கள் வரம், அதை போற்றி வளர்க்களைனா கூட பரவால்ல, குப்பைக்கள் ஆக்கி விடாதீர்கள்
என்ன தான் வசி கெட்டவனா இருந்தாலும், கடைசில இவனுக்காகவும் கலங்க வெச்சிட்டான் 🥺🥺🥺🥺🥺🥺
கனி - வசியின் தேவதை, இவள் அன்பே இத்தனை நாள் செய்த தவறுகளை திருத்தி மனிதனாக மாற்றியது🥰🥰🥰
கதை போனாதே தெரியல, ரொம்ப சுவாரிசியமா, சில இடங்களில் கோவபட்டு, சில இடங்களில் கலங்கி......
நம்மையும் அழகா உள்ளுக்குள் இழுத்துக்குது கதை🥰🥰🥰🥰🥰🥰
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐
லிங்க் 👇👇👇👇