வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹18.நிசப்தமே ரீங்காரமாக - விமர்சன திரி

Gowri

Well-known member
#பிரம்மாஸ்திரம்_2023

#கௌரிவிமர்சனம்

#நிசப்தமே_ரீங்காரமாக

ரொம்ப அழுத்தமான கதை, இன்னும் சில பெண்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்கு ....

சிலர் போராடி மேல வருகிறார்கள்.....

சிலர் அந்த சூழ்நிலைக்குள் தன்னையே தொலைச்சாராங்க🤧🤧🤧🤧🤧

சிந்தியா, படிச்சி முடிச்சிட்டு கல்யாணத்திற்கு காத்திருக்கும் சராசரி பெண்🤩🤩🤩🤩🤩

தன் தோழியும் தன்னை போல மேல படிக்கணும்னு சிந்தியா ப்ரெண்ட்க்கு ஆசை, அதை சிந்துகிட்ட சொல்லவும் செய்யர......

ஆன கணவன், குடும்பம், குழந்தை அப்படினு வாழவே ஆவல் அவளுக்கு........

அண்ணன் ஓட மாமியார் வீட்டில் இருந்து பெண் கேட்கவும், அதுவும் வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளை என்பதில் சிந்தியா குடும்பத்திற்கு ஏகா சந்தோசம்......

எதை பற்றியும் விசாரிக்காமல் பெண்ணையும் கொடுக்க.....

அங்கு அவள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது மீதி கதை.......

இதை கதையா படிக்கும் போதே மனம் கனக்கிறது🥺🥺🥺🥺🥺.....

சிந்தியா, உன் கனவு எல்லாம் சரி தான்.....ஆன கடைசி வரை எனக்கு தோன்றியது ஒன்னு தான் நீ உன் தோழி பேச்சை கேட்டு இருக்கலாம் 🤷🤷🤷🤷🤷

பணம் இது தான் எல்லாத்துக்கும் காரணர்த்தா.......அது இவ கிட்ட இருந்து இருந்தா இவளோ துன்பம் இருந்து இருக்காதோ என்னவோ......

எவளவோ போராட்டம் பண்ணி பார்த்திட்டா.......என்ன என்ன கஷ்டங்கள்.......

கணவனோடு கூடி இருப்பது தப்பு, ஆன வாரிசு மட்டும் உடனே வேண்டும்🙄🙄🙄🙄🙄

அவ என்ன குந்தி தேவியா, உடனே குழந்தை கிடைக்க😡😡😡😡😡😡

பசிக்குதுன்னு கணவனுக்கு முன்னாடி சாப்பிடவும் கூடாது, இவ என்ன ரிஷியா பசியே எடுக்காமல் இருக்க.....சாதாரண மனுஷி 😤😤😤😤😤

சுரேஷ், நீ எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணினா🤬🤬🤬🤬🤬🤬

ஆம்பலைனு நிருபிக்கவா இல்ல உன் இளமை தேடல்களை காசு இல்லாம தீர்த்துக்கவா🤮🤮🤮🤮🤮🤮

உன்னை நம்பி வாழ வந்த பிள்ளைக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திட்ட 🙄🙄🙄🙄🙄🙄

பரிமளம் & பழனி, ரொம்ப கேடு கெட்ட மாமியார் அதற்கு சற்றும் குறைவில்லா மாமனார் பழனி🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

எத்தனை பொய், பித்தலாட்டம்.....என்ன ஜென்மம் நீங்க எல்லாம்🤮🤮🤮🤮🤮🤮

சங்கீதா - எங்க அண்ணனுக்கு பொண்ணை குடுங்க குடுங்கன்னு குரங்கு மாறி அவங்களை புடிங்கி எடுத்த கடைசில குரங்கு கையில் சிக்குனா பூ மாலை போல ஆயிருச்சு சிந்தியா வாழ்க்கையும்🤧🤧🤧🤧🤧🤧

அவ அம்மாக்கு ஏத்தி விடற வேலையை சரியா செய்யர கடைசி வரை 😡😡😡😡😡😡😡😡

ஒரு ஒரு நேரம், இந்த மாமியார்களே நல்லா நடந்துப்பாங்க, சரி போகட்டும் அப்படிகரா எண்ணம் இருக்கும்.......அதுக்குணு பரிமள நல்லவ இல்ல தான்......

ஆனா இந்த சங்கி மங்கி பண்ற வேலை இருக்கே🤦🤦🤦🤦🤦🤦

இந்த தண்டனை எல்லாம் அவளுக்கு பத்தல 🤷🤷🤷🤷🤷🤷

கண்ணன் - நீ இப்படியே உன் பொண்டாட்டி வருத்த பட கூடாது, அவ கூட சண்ட வேணாம்னு இரு🙄🙄🙄🙄🙄🙄🙄🙄.....

நீ எல்லாம் அண்ணனா டா பக்கி பயலே, உன் பொண்டாட்டி அந்த சங்கி மங்கி ஊரில் உள்ள எல்லா கேப்மாறி வேலை எல்லாம் பார்ப்பா.......நீ போய் அவ பின்னாடி ஒளிங்கிச்கோ, ச்சைக்😤😤😤😤😤😤😤😤

உனக்கு தங்கச்சி தானே😏😏😏😏😏

கனகு & சீதா, உங்க நிலை புரியுது, ஆன பயங்கர கோவம் தான் முதலில் வருது🙄🙄🙄🙄🙄🙄🙄

அடுத்த பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்கும் போது ஆவது, அவள் கையில் ஒரு வேலை வந்த பிறகு செய்ங்க.......

முக்கியமா அவ சொன்னா இவ சொன்னா அப்படினு கண்ணை மூடிட்டு முடிவு எடுக்காதிங்க ........

கடைசில இப்படி ஆகும்னு நினைக்கல, ஒரு மாதிரி மனதை பிசைகிறது🥺🥺🥺🥺🥺🥺

பெண்களால் தினம் வீட்டில் பெண்களுக்கே நடக்கும் வன்முறை பார்க்கும் போது வெளியில் ஆண்களால் நடக்கும் வன்முறை குறைவு போல தான் தோணுது😥😥😥😥😥

மாமியாரும், நாத்தனாரும் வீட்டுக்கு வரும் மருமகளிடம் கருணை காட்ட வேண்டாம்..... சக மனுஷியாய், தோழியாய் பாருங்க அதுவே போதும்.......

இன்னும் கண்கள் வேர்க்கிறது ஜி🥺🥺🥺🥺🥺🥺

எதார்த்தமான அழுத்தமான கதை கொடுத்த ரைட்டர் ஜிக்கு👏👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 

santhinagaraj

Well-known member
பிரம்மாஸ்ரம் 2023

நிசப்தமே ரீங்காரமாய்

ரொம்ப ரொம்ப அழுத்தம் நிறைந்த ஒரு கதை.

கதைய படிச்சதுல இருந்து மனசு ரொம்ப பாரமா இருக்கு. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று என்ன வைக்கிறது.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற் படிப்பில் ஆர்வம் இல்லாமல் சராசரி பெண் சிந்தியா.

கணவனின் பிரச்சனையில் தாய் வீட்டிற்கு வரும் மகளுக்கே சோறு போடாமல் கணக்கு பார்க்கும் தாய், வெளிநாட்டு வேலை சம்பளம் என்று இருந்தும் ஒரு ரூபாய்க்கும் கணக்கு பார்க்கும் மகன், சொந்த குடும்பத்தில் என்ன நடக்குது என்று தெரியாமலேயே சுற்றும் தந்தை இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் கல்யாண கனவுகளுடன் மகிழ்ச்சியாக அடியெடுத்து வைக்கும் இந்தியாவின் அடுத்த வாழ்க்கை நிலையே கதையின் கரு

நிச்சயமா யாரை எப்படி திட்டறதுன்னு தெரியல எல்லாரும் மேலயும் கோவமா வருது.

ஒரு பெண்ணுக்கு பெண்களே எதிரியாய் இருப்பதை நினைத்தால் ஒரு பெண்ணா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

சிந்தியா அனுபவிக்கும் கொடுமைகளும் அவமானங்களும் மனதை பிழிகிறது.

கதையை படிக்க ஆரம்பித்து இருந்து ஏதாவது ஒரு இடத்துலசிந்தியாவோட நிலைமை நல்லபடியா மாறும் ஏதாவது ஒரு கட்டத்துல சிந்தியாவை அவ குடும்பத்தில் இருக்கிறவங்க புரிஞ்சுக்குவாங்கன்னு பார்த்தா ஒருத்தர் கூட கடைசிவரை புரிந்துகொள்ளவே இல்ல.

நிச்சயமா சிந்தியா எடுத்த இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியல. படிச்ச பெண் ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த குடும்பத்தை எதிர்த்து கொஞ்சம் பேசி தன்னுடைய வாழ்க்கை நிலையை மாற்றி இருக்கலாம் ஊருக்காகவும் குடும்பத்துக்காகவும் அடங்கி ஒடுங்கி எடுத்த முடிவு ரொம்ப ரொம்ப தவறான முடிவு.

இன்னும் எத்தனை சிந்தியாக்கள் இதே மாதிரி குடும்பத்துக்காகவும் ஊருக்காகவும் தங்களைத் தாங்களே ஒடுக்கிக் கொள்கிறார்களோ?

அழுத்தம் நிறைந்த கதையாக இருந்தாலும் நல்ல எழுத்து நடையோடு தெளிவோடு கொடுத்த விதம் அருமை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐

( ரைட்டர் அவர்களே கதைக்காக கூட இப்படி பெண்களுக்கான கொடுமைகளை எழுதாதீர்கள் கொஞ்சம் கஷ்டத்தையும், பெண்களுக்கான அநீதிகளையும் எடுத்துக்காட்டு எழுதினாலும் அவர்களுக்கான தன்னம்பிக்கையை வழி காட்டும் விதமாக எழுதுங்கள்.)
 

Ruby

Well-known member
#நீங்காத_ரீங்காரமாய்

ரைட்டர் ஜி எப்படி எழுதி முடிச்சீங்க😳

சமூகத்தில் வெகு சாதாரணமாக நடக்கும் விசயத்தை எடுத்து அழுத்தமா குடுத்து இருக்கீங்க ஜி...

சிந்தியா--படிச்சாலும் கல்யாணம் தான பண்ண போறேன் என.... ஆசையாய் கல்யாணம் பண்ணி போனால்😔😔😔 ஒருநாள் ஒருவாய் சோறு கூட நிம்மதியா சாப்பிட முடியா வாழ்வு வந்தால்.....?

பெண் எடுக்கும் வரை பவ்யமாய் பேசிட்டு, கல்யாணம் முடிந்த நாளே மாமியார், நாத்தனார் செய்யும் அட்டூழியங்கள்😡😡

வாயை திறந்தாலே பொய்யாய் பேசி, மகனின் முன் செம்மையாய் நடிக்கும் மாமியார் பரிமளம்😡😡

என்ன நடந்தாலும் கண்டுக்காம, மருமகளை குறை சொல்ல மட்டுமே செய்யும் மாமனார்😡

கணவன் சாப்பிடாமல் சாப்பிட கூடாது என்ற சட்டங்களில் சிக்கி தவிச்சா, அவனோ காலையில் 12 மணிக்கு சாப்பிடுரான்😳 சீக்கிரம் சாப்பிட எழுப்பினா, கடுப்பில் அவளை முழு நாளும் சாப்பிட முடியாம பண்ணும் அவனோட திருகுதாளங்கள் 🤬🤬 இப்படியும் மனிதர்களா🤬🤬🤬

ஒரு நாத்தனார், அண்ணன் பொண்டாட்டியை மதிக்காமல், அவளை தன் காலுக்கு கீழ் நடத்தனும் என்று தாயிற்கு, அவளுக்கு தீங்கு செய்ய சொல்லி கொடுப்பது, அவர் செய்யும் எல்லாம் ஆதரிப்பது🤬🤬

இன்னொன்னு நல்லவ போல வந்தா ஆனா 🤬🤬 அவளோட தேவைகள் நிறைவேறின உடனே அவளோட குணம் அப்படியே மாறி போச்சு🤬🤬 ஆனால் இவளோட குணம், தாய், தமக்கை பற்றி நல்லா தெரிந்தும் அவ சிந்த்தியாவை அலட்சியப்படுத்தி நடத்தின எல்லாம் முன்னாடி சொன்ன அவ குணத்தோடு கொஞ்சம் கூட ஒத்து போகல🤷‍♀🤷‍♀

தவறு அனைத்தும் கணவன் செய்த போதும் அவளின் கோபத்தை கூட காட்டாது, தானே சமாதானம் செய்து, அவனிடமே அன்பை எதிர்பார்த்தது🙄🙄 ஆரம்பத்தில் சரியா இருந்தாலும் பிற்பாதியில் சிந்தியா செயல்கள் கொஞ்சமும் ஏற்புடையதாக இல்ல எனக்கு😡

இதில் எப்படி அவ வாழ்க்கை கடலில் மூழ்கி நீந்தி கரை சேறுவாளா? இல்லையா என்பது கதையில்....

சிந்தியா parents ஆரம்பத்தில் சராசரி பெற்றோராய் இருந்தாலும் பின்பு இவளுக்காக எதையும் செய்ய முன் வந்த போது, இவ அவங்களுக்காக மாறி, அவங்களோட இருந்து இருக்கலாம்..

சிந்தியா ஹாஸ்பிடல் விசயம் அவ மேல தப்பு இல்லாதபோது அங்க சுதாரிச்சி இருக்கணும்... இல்லை அதன் பின்னாவது அவ சூட்சுமமா இருந்து இருக்கணும்🙄 எதும் பண்ணாம அம்மா வீட்டுக்கு போன பின் கூட அவளை அவள் திடம் செய்யாம அவளோட செயல்கள் ஏற்க முடியல😡 அவ உடன்பிறப்புகளுக்கு ஒரு ரோல் மாடலா இல்ல😡😡 படிச்ச பொண்ணு ஏற்கவே முடியல சில செயல்கள்😡😡😡 சில நேரங்களில் இவளோட சிந்தனையும், பிறகு அவனை கண்ட பின் இவளோட எண்ணங்கள், சிந்தனை எல்லாம் என்னவோ ஒரு நிலையா இல்லாம இருந்தா போல ஃபீல்...

கல்லானாலும் கணவன்🤬 என இருக்கும் கேரக்டர் இல்ல இவ, சில இடங்களில் அப்படி காட்டி இருக்கீங்க... அப்பறம் இவளே இறங்கி, காலில் விழுந்து போகும் போது வித்தியாசமா இருக்கு இவளோட கேரக்டர்...

கண்ணன் 🤬🤬🤬 இவன் எல்லாம் மனுஷனா இருக்க தகுதியே இல்ல🤬🤬🤬 பொண்டாட்டி பத்தி தெரிஞ்சும் இவனோட கேவலமான நியாயங்கள்🤮🤮🤮 சுந்தரை மேல அப்படினு ஆக்கிட்டாண் இவன்🤬🤬

சுந்தர்🤮🤮🤬🤬 இதெல்லாம் பொறந்தே இருக்க வேண்டாம்🤬🤬

பரிமளம், பிரியா, சங்கீதா🤬🤬🤮🤮🤮🤬🤬🤬🤬🤬🤬🤬

இப்படி முடிவை குடுத்து இருக்க வேண்டாம் ஜி... கொஞ்சமாவது சுயபுத்தி கொடுத்து யோசிக்க விட்டாவது இருக்கலாம்... இப்படி கொடுமைகளுக்கு இது தீர்வு அல்லவே😳😳 கதையிலாவது தீர்வுகள் கான முயன்று இருக்கலாம்🙄🙄

என்னோட எண்ணங்களை சொல்லி இருக்கேன்... நிதர்சனம் என்றாலும், இதை கடக்கும் பெண்களுக்கு ஒரு தைரியம் கதையிலாவது கொடுத்து இருக்கலாம் என்பதே என் எணணம்...

வாழ்த்துகள் ஜி💐💐
 
Top