#GG25
#கிள்ளை_மொழி_கவிதையிவள்
#விமர்சனம்.
கதைய படிச்ச உடனே யாரு சாமி இந்த ரைட்டர்னு தான் தோணுச்சு.
ஆரம்பமே ஒரு 16 வயசு சின்ன பெண்ணோட பிரசவ வலியில ஆரம்பிச்சு கண்ணு கலங்க வச்சுட்டாங்க.
அந்த சின்ன பெண் வாழ்க்கையில் என்ன நடந்தது எப்படி கர்ப்பம் ஆனால் அவள் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற கேள்விகளோடு தான் கதை படிக்க ஆரம்பிச்சேன்.
அடுத்தடுத்த அத்தியாயங்களில் அந்த அழுத்தத்தை அப்படியே குறைக்கிற அளவு சைத்ராவோட கலாட்டாகள் மனசை இலக வைக்கும் படியாக இருந்தது.
ஸ்வேதா,சைத்ரா, அஜய் இவங்களோட பாச பிணைப்பு ரொம்ப அருமையா இருந்தது


ஹீரோ ருத்ரா ஆரம்பத்துல அஜய் சைத்ரா மீது காட்டும் கடுமையில் இவன் மேல கழுத்தளவு கோவம் இருந்தாலும் . அடுத்தடுத்து சைக்காவுக்காக அவன் பார்த்து பார்த்து செய்து செயல்களில் அவன் மீதான கோபம் அப்படியே வடிந்துவிட்டது.
ரோபோ மாதிரி சுத்திக்கிட்டு இருந்தவன ரெமோவா மாத்தின நம்ம சைட்ரோவோட திறமை சூப்பர்


மதுபாலா அவங்களோட சூழ்நிலை காரணமாக மகள் வாழ்க்கையில் தடம் மாறி போயிருந்தாலும் ஒரு அம்மாவை அவங்க நிஜமாவே தோத்துட்டாங்க. மகளோட வாழ்க்கையை பற்றி யோசிக்காம அவங்க அந்த நிமிஷம் எடுத்த முடிவு நிஜமா ஏத்துக்க முடியல

மயூரி ஒரு 15 வயசு பொண்ணோட வாழ்க்கையில நடந்த கொடுமைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதது நிஜமாவே பிளாஷ்பேக் படிச்சுட்டு நைட்டு தூங்க முடியல


டேவிட், ஸ்வேதா,ராகவ் உங்களோட கேரக்டர்கள் ரொம்ப நல்லா இருந்தது மனசுல பதியுறாங்க

பூமர் அங்கிள்,காஜி அங்கிள், சைத்தான் என்று ருத்ராவை சைத்து மைண்ட் வாய்ஸ் இல் திட்டும் காட்சிகள் அருமை


சைது ருத்ர ரொமான்ஸ் காட்சிகளும், ஸ்கை டைவிங்கில் ருத்ராவிடம் வம்பிழுத்து ப்ரொபோஸ் காட்சிகள ம் செம்ம





கதைக்காக எழுதணுமேன்னு எழுதாம ஒவ்வொரு விஷயத்தையும் விவரமா விளக்கி எழுதினதுல எழுத்தாளர் ஓட உழைப்பு தெரியுது


அழுத்தம், காதல்,ரொமான்ஸ், காமெடினு கதையிலே எல்லா உணர்வுகளையும் கொண்டு வந்து கதையோட கட்டிப்போட்ட எழுத்தாளரோட எழுத்து திறமை அருமை


அருமையான உணர்வுகள் நிறைந்த கதை சூப்பர்

வாழ்த்துக்கள்


