வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹27.ரேணுகா வேலன் - விமர்சன திரி

GG writers

Moderator
இக்கதைக்கான விமர்சனங்களை இவ்விடம் பதிவிடுங்கள்!!
 
#ரேணுகா_வேலன்_விமர்சனம்
குடும்ப உறவுகளோட முக்கியத்துவத்தை பற்றிய கதை இது.


ரேணுகா மற்றும் வேலனோட திருமணத்தினால பிரியும் இரு குடும்பங்கள். அடுத்த தலைமுறையினால சேருராங்க.


ஆரம்பத்தில் கொஞ்சம் அந்த உறவுங்களை பற்றி புரிஞ்சுக்க கடினமா இருந்தாலும் கதையின் போக்கில் புரிய கூடியதாக இருக்கு.


45 நாள் போட்டி தலைமுறையா தொடருதே 🤣🤣
குடும்பங்களில் எல்லா உறவுகளும் நல்லவங்களா இருப்பதில்லை. ஆனாலும் அவங்களையும் அவங்க சூழ்நிலையை புரிஞ்சு அனுசரிச்சு போக வேண்டி இருக்குனு நல்லா சொல்லிருக்கீங்க.


அத்தை சக்தி வாழ்க்கையில் நடந்த இழப்புகளும் அவங்க மகனை வளர்க்க படும் கஷ்டமும் ரொம்ப உருக்கமா இருந்தது. சக்தி மகன ஆசிரமத்தில் சேர்க்க சொன்ன உறவுகள் மேல கோவமும் வந்தது 😡😡


சுஹானா அவளோட உணர்வுகள் என்னனு புரிஞ்சுக்க முடியாம சக்தியை விட்டுக்கொடுக்கவும் முடியாம அவளோட தவிப்பு அருமையா இருந்தது.


சுஹானா வாழ்க்கைல நடந்த எல்லாத்துக்கும் காரணம்னு ஒரு வில்லன எறக்குனீங்க பாருங்க அதை நான் எதிர் பார்க்கல.
இந்த குடும்பத்தை சேர்த்து வைக்க கேமராவும் முக்கிய அங்கம் வகிச்சிருக்கு 😜😜


குடும்ப உறவுகளோட முக்கியத்துவத்த நல்லா சொல்லீருக்கீங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
#gossip_glories_25

#கௌரிவிமர்சனம்

#ரேணுகா_வேலன்

தலைப்பை பார்த்து இவங்க ரெண்டு பேர் பத்தின கதை தான் போல அப்படினு நினைச்சேன்…..

ஆன இது மொத்த குடும்பத்தை பத்திய கதை…

குடும்ப உறவுகள், அதன் முக்கியத்துவம் எல்லாம் அழகா சொல்லி இருக்காங்க ரைட்டர் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

ரேணுகா, வேலன் கல்யாணத்தில் பிரிஞ்ச குடும்பம்….

அவங்களோட இளைய தலைமுறை கல்யாணத்தில் சேர்ந்து இருக்காங்க….

சக்தி, தான் இந்த கதைக்கே தூண் …

அவங்க இல்லைனா, ரேணுகா, வேலன் வாழ்க்கையே ஆரம்பிச்சி இருக்காது….

ரேணுகாவை சரியா புரிஞ்சிக்காம தான் வேலன் தள்ளி வந்தார் அப்படினா….

அவர் பையனும் அதே தான் செய்யறாங்க….

அங்கையும் சக்தி தான் வந்து எல்லாரையும் சேர்க்கராங்க….

ஆன அவங்களுக்கு அப்படி ஆகி இருக்க வேணாம்…

அடுத்து, விஜய்…

சக்தி ஓட பையன்….மிலிட்டரி ஆபீசர்…

இவன் காதல் ரொம்ப பிடிச்சது…..

சுஹனா ஓட வாழ்வில் இப்படி ஒரு டுவிஸ்ட்….

கதை நல்லா இருந்தது…..

ஆன narration இன்னும் பெட்டரா இருந்து இருக்கலாம்…..

லேகா ஓட attitude ரொம்ப அதிகமா இருந்தது…..

அதுவே ஒரு சலிப்பை தந்தது ….

ரேணுகா, ஏன் லேகாவை விஜயை அவமான படுத்தும் போது எல்லாம் கண்டிக்கல????

சக்தி, விஜயை கூட்டி வந்தப்ப மட்டும் ரேணுகா தன் பொண்ணு வாழ்க்கைனு நியாயம் கேட்க வந்தாங்க இல்ல…..

அதுவே சுகா வாழ்க்கை எப்படி போன என்ன????

இவங்க ஒரு ஒரு வாட்டியும் புறிஞ்சிக்காம செய்வாங்க ….

சக்தி வந்து க்ளியர் செய்யணுமா????

சுயநலமில்லா கேரக்டர்ஸ் சக்தி & விஜய் தான்…..

இனி வரும் கதைகளில் இன்னும் நல்லா எழுத வாழ்த்துக்கள் ரைட்டர்….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
#JAHUREVIEWS
#ரேணுகா வேலன்
குடும்ப உறவுகளை பற்றிய கதை
ரேணுகா வேலன் கல்யாணத்துல பிரிஞ்சு அடுத்த தலைமுறைல சேருறது தான் கதை
கேரக்டர்ஸ் நிறைய இருந்துச்சு புரிஞ்சுக்க கஷ்டமா இருந்துச்சு 🥹🥹🥹
கொஞ்சம் தெளிவா எழுதி இருந்து இருக்கலாம் படிக்க சிரமமா இருந்துச்சு
இதுல எனக்கு ரொம்ப பிடித்தது சக்தி தான் 🥰🥰
எல்லாம் உறவுகளையும் சேர்த்து அழகா கொண்டு போனாங்க
சஹானாக்கு இப்படி நடந்து இருக்க வேண்டாம் அது கொஞ்சம் பீல் ஆச்சு
லேகா ஓவரா போறா
குடும்ப உறவுகளை பற்றி அழகா சொல்லி இருக்கீங்க ரைட்டர் வாழ்த்துகள் 💐💐
 
#GG27

#ரேணுகாவேலன்

#விமர்சனம்

தலைப்பு பார்த்த உடனே இது ரெண்டு பேரோட காதல் கதை அப்படின்னு தான் நினைச்சேன். ஆனா அவங்க ரெண்டு பேரோட காதல் மட்டும் இல்லாமல் குடும்பத்தில் அன்பு எத்தகைய முக்கியத்துவம் பெற்றது என்பதையும் எடுத்து சொல்லி இருக்காங்க.

ரேணுகா வேலன் காதல் கல்யாணத்தில் பிரியிற குடும்பம் இளைய தலைமுறையின் காதலில் இணைகிறது.

கதையோட தலைப்பு ரேணுகா வேலன்னு சொல்லி ரேணுகா வேலனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் கதையில் ரொம்ப ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் சக்தி.

எந்த ஒரு சூழ்நிலையிலயும் புரிந்து அவங்கவங்க பக்கம் இருந்து யோசிச்சு ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட தவறை புரிய வைத்து எல்லாரையும் அரவணைச்சு ஒன்று சேர்க்கணும்னு நினைக்கிற சக்தியோட குணம் அருமை 😍😍😍

எல்லாரும் நல்லா இருக்கணும் அன்போடு இருக்கணும்னு நினைச்ச சக்திக்கு அவளோட வாழ்க்கையில் அப்படி நடந்திருக்க வேண்டாம் 😔😔😔

45 நாள் சேலஞ்ச் வைத்து அந்த 45 நாள் சேலஞ்சுக்காக நாத்தனாரின் மாமியாரும் மருமகளின் நாத்தனாரும் செய்யும் அலப்பறைகளும் அருமை 😂😂😂

சக்தி சுகானா இருவருக்கும் மனம் முழுவதும் காதல் இருந்தாலும் அந்த உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பு ரொம்ப உணர்வு பூர்வமா இருந்தது

லேகா கோவக்காரியா வெளிய கட்டிக்கிட்டாலும் சுஹானா மீது காட்டும் அன்பும் அக்கறையும் சூப்பர் 👌👌👌

வேலன் விஜயகுமாரின் சுயநலமில்லாத அன்பும் காதலும் அருமை ❤️❤️

எல்லாருடைய உணர்வுகளையும் எடுத்துக்காட்ட கேமரா ஒரு முக்கிய பங்கு வகிச்சி இருக்கு ஆனா எனக்கு இந்த கேமராவோட புக்கிய பங்கு பிடிக்கல
கேமரா மூலமாக தான் ஒருத்தரோட அன்பு புரிஞ்சுக்கணும்னு இல்ல உண்மையான அன்பு மனசளவுல அடுத்தவங்க மேல உள்ள நம்பிக்கையில வரணும்

பணம் கௌரவம் தான் பெருசுன்னு நம்பிக்கிட்டு இருந்த ஸ்ரீலேகா பாட்டிக்கு அன்பும் பாசமும் தான் பெருசுன்னு சக்தி நிரூபிச்சு இருக்காங்க.

மொத்தத்தில வாழ்க்கைக்கு பணமும் கௌரவம் பெருசு இல்ல அன்பும் பாசமும் தான் முக்கியம் என்று ரொம்ப நல்லா எடுத்து சொல்லி இருக்காங்க

குடும்ப உறவுகளின் அன்பையும் பாசத்தையும் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் நல்ல கதை சூப்பர்👌👌👌
வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top