GG writers
Moderator
இக்கதைக்கான விமர்சனங்களை இவ்விடம் தெரிவியுங்கள்!!
ஶ்ரீ வாசுவுக்கு நண்பன்.. ராதாவுக்கும் ஶ்ரீதாமாவுக்கும் வாசுவுடன் இருப்பதில் தான் சண்டையே வரும்.. அதில் தான் ஒரு முறை கோபம் கொண்டு சாபம் அளித்துவிட்டான். அங்கங்கே அவனைப் பத்தி பேசுனதுல கிளியர் ஆகியிருக்கும்னு நினைச்சுட்டேன். கதைக்கான முதல் விமர்சனம் உங்களோடது... ரொம்ப நன்றிங்க...கதை அருமையாக இருந்தது. சேரவே முடியாத ராதாகிருஷ்ணன் காதலை சேர்த்து வைத்து ஒரு கதைஸ்ரீ மற்றும் வாசுதேவன் உடைய உறவு என்ன என்பதை சற்று தெளிவாக சொல்லி இருக்கலாம் க்ரூப்ல டூப் நம்ம அர்விந்த்தான் பாவம்
வாசுதேவன் சுதாமா காதல் அருமை❤
தங்களின் அழகான விமர்சனத்திற்கு நன்றி சிஸ்#இக்கணம்_முதல்_இலக்கணம்_மீறுகிறேன்
சுதாமாவோட கனவு,ஆசை,காதல் பக்தி,பேரன்பு இப்படி என்ன வேணாலும் சொல்லலாம் எப்படி கைகூடுச்சு? அது தான் கதை
யாரு மேலனு கேட்கறீங்களா? எல்லாம் வாசுதேவன் மேலதான்
கதை முழுக்க இவனின் வாசமே
சுதாமாக்கு வாசு மேல இருக்கும் காதல் மெய்சிலிர்க்க வைக்குது ஆனால் சுதாமாவும் வாசுவும் இணையும் போது இதைத்தான் இலக்கணம் மீறுகிறாள்னு சொல்றீங்களோனு நான் ரொம்ப பயந்து தான் படிச்ச ஆனா அச்சுதனுக்கும் சுதாக்கும் ஆனா உறவை சொன்னதுக்கு பிறகுதான் அப்பாடானு இருந்துச்சு❤
அச்சுதனோட காதல் சுதாமாவோட காதலவிட சிறந்ததாக தான் எனக்கு படுது ❤❤ பல இடங்களில் அவனோட காதல் தவிப்பு ஏக்கம் எல்லாம் அருமை
அரவிந்த் மற்றும் ஸ்ரீ கான நட்பு நல்ல இருக்கு ❤ அங்க அங்க இடையில வரும் சின்ன சின்ன நகைச்சுவை நல்லா இருக்கு ❤
அரவிந்த்க்கும் ஏன் அதே மாதிரி கனவு வரனும் ? அவனுக்கும் சுதாமாவுக்குமான உறவு அந்த இசை தானா? அதையும் முற்பிறவியில ஸ்ரீ யாரு? அவன் ஏன் சாபம் விட்டான்? இதை இரண்டும் இன்னும் தெளிவாக சொல்லீருக்கலாம்.
இந்த வாசு வாசகர்கள் மனதில் வாசம் செய்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
நன்றி
#JAHUREVIEWS
#இக்கணம்_முதல்_இலக்கணம்_மீறுகிறேன்
வாசு சுதா இவங்க லவ் தான் ஸ்டோரி
முற்பிறவியில் விரும்பி அடுத்த ஜென்மத்தில் சேருவது தான் கதை
2பேரும் கனவுலையே லவ் பண்ணிக்குறாங்க சுதாமாக்கு வாசு மேல எவ்வளவு லவ்
வாசு கனவுலையே அவளோட உருகி உருகி லவ் பண்றது நல்லா இருந்துச்சு
அச்சுதன் அவனை ரொம்ப பிடிச்சி இருந்துச்சு
சுதா மேல அவனுக்கு இருக்கிறது லவ்க்கும் மேல
அவளுக்கு எல்லாம அவ கூடவே இருக்கான்
இந்த ஸ்ரீ அரவிந்த் 2 பேரோட பிரண்ட் ஷிப் நல்லா இருந்துச்சு
அரவிந்த்க்கும் ஏன் கனவு வந்துச்சுனு சொல்லி இருக்கலாம்
படிக்க ரொம்ப விறு விறுப்பா இருந்துச்சு
அருமையான ஆழமான எழுத்து நடை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Link