GG writers
Moderator
இந்த கதைக்கான விமர்சனங்களை இவ்விடம் தெரிவியுங்கள்!
தங்களுடைய அழகான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி..Ur comment made my day more special#ஜென்ம_பந்தமடி_இது_விமர்சனம்
ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல்❤ இந்த ஜென்மத்திலயும் தொடருது அதன் நினைவுகளுடன்❤
இந்த ஜென்மத்தில் மதுரயாழினி தன் கனவில் வந்த காதலனை எப்படி சந்திக்கிறா? அவனை திருமணம் செய்யகிறாளா? அவனுக்கும் அந்த நினைவுகள் எல்லாம் இருக்கா? அவள் ஊரில் எழுப்பப்படும் தொழிற்சாலையை என்ன பண்ணா? ஊரு மக்களுக்கு நிகழும் ஆபத்திலிருந்து யாரு காப்பத்துறா? இவை அனைத்திற்குமான விடை கதையில்.
காதலுக்கு நீங்கள் குடுத்த விளக்கமும் காதலன் யாருனு யோசிக்கவெச்சதும் நல்லா இருந்தது.
மதுரயாழினி இயற்கையோடவே வளர்ந்த இயற்கையின் காதலிதப்புனா யாரு பண்ணாலும் தப்புதானு கணவனை எதிர்த்து வழக்கு தொடுப்பது நல்ல விஷயம்தான் ஆனால் கணவனையும் கொஞ்சம் நம்பலாம் தப்பில்ல.
கோபம் வந்தா இப்படியேல்லாமா தண்டனை கொடுப்பாங்க விஷ்ணுஊர் மக்களுக்கு பிரச்சனைனா அரசாங்கம் பார்த்துக்கும்னு சொல்லிட்டு அதுவே அவனுக்குனு வரும்போது அதை சரி பண்ண நினைக்கும் விஷ்ணுவின் கதாபாத்திரம் சாமானிய மக்களோட பிரதிபலிப்பு ❤
ஆதிரன் கதாபாத்திரம் அழகு ❤
முன்ஜென்ம கதை நல்லா இருந்தது.
கதையில ஒரே ஒரு இடத்தில அடுத்து எதோ சுவாரசியமா வர போகுதுனு எதிர்ப்பார்த்து ஏமாந்துட்டேன்.
மற்றபடி நல்ல காதல் கதை ❤
இந்த ஜென்பத்தின் பந்தம் அனைவரின் மனதையும் வென்று போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
அழகான கமெண்ட் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி#JAHUREVIEWS #ஜென்ம_பந்தமடி_இது
சிம்மவிஷ்ணு யாழினி இவங்க லவ் ஜென்ம ஜென்மமா தொடர்வது தான் ஸ்டோரி...
அவ்வளவு அருமையா எழுதி இருக்கீங்க ரைட்டரே அதுக்கு பாராட்டுக்கள்
சிம்மா என்ன ஒரு லவ் யாழினி மேல... மகாராஜாவா இருக்கும் போதும் சரி... விஷ்ணுவா இருக்கும் போதும் சரி...
யாழினிக்கு அவளோட லவ் நினைவே வராமல் இருப்பது டூ பேட்பாவம் எங்க மகாராஜா எவ்வளவு பீல் பண்றாரு
ஆதிரன் ரொம்பவே பிடிச்சது போன ஜென்மத்துலயும் சரி இப்போவும் சரி யாழினி மேல அவன் வைச்சு இருக்குற அன்பு அவ்வளவு நல்லா இருந்துச்சு
அதிரனுக்கு தனியா ஒரு ஸ்டோரி எழுதுங்க...
சிம்மா கோபம் கூட அழகா இருந்துச்சு யாழினிக்கு குடுக்குற பனிஷ்மென்ட் எல்லாம் வேற லெவல்
அவன் மேல சந்தேகம் படுறது தான் ஏத்துக்கவே முடியல பாவம் எங்க மகாராஜா
காட்டுக்குள்ள போய் தப்பு பண்றவங்கள கண்டு பிடிச்சி கிராம மக்களை காப்பாத்தி அங்க தேவையானது எல்லாம் செய்றது அவ்வளவு அருமையா இருந்துச்சு
நல்லா விறு விறுப்பா கொண்டு போனீங்க
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Link
தங்கள் கருத்துக்கு நன்றி#gossip_glories_25
#கௌரிவிமர்சனம்
#ஜென்ம_பந்தமடி_இது
ஜென்ம ஜெனமாய் தொடரும் காதல் கதை….
சில வருடங்களா, யாழினிக்கு ஒரே கனவு வருது…
அதில் வரும் காளையவன் கண்களில் தெரியும் காதல் அவளை அலைகளிக்குது….
மலை கிராமத்தில், ஃபேக்டரி கட்ட வரான் விஷ்ணு….
அதை எதிர்க்கும் யாழினி…
விஷ்ணு வந்த பிறகு, யாழினியின் கனவுகளில் மாற்றம் வருது….
ஆன அது அவளை பயம் கொள்ளவே வைக்குது…
கனவில் வரும் காதலன் யார்????
விஷ்ணு கட்டும் ஃபேக்டரி????
யாழியின் எதிர்ப்பு????
இது எல்லாம் மீதி கதை…..
விஷ்ணு, ஆரம்பத்தில் ஆன்டி ஹீரோ போல இருந்தாலும் ….
இவனின் காதல் அப்பவும் சரி இப்பவும் சரி ரொம்ப கியூட்
யாழி, சரியான அவசர குடுக்கை…. அப்பவும் அவனை புரியாம வதைச்ச….இப்பவும் அதே தான்
இன்னும் சொல்லனும்னா, அவ திருந்தல மாமா
ஆதீரன்…. சூப்பர்…அவனுக்கு இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் ரைட்டர்…..
முன் ஜென்ம கதை அப்படியே விட்ட ஃபீல் ரைட்டர்….
ஏதோ டுவிஸ்ட் வரும்னு யோசிச்சேன்….பட் அப்படி வரல…..
ஜென்ம ஜென்மா காதல் தொடருது…ஏதும் கனெக்டிவிடி சொல்லி இருந்தா நல்லா இருக்கும் ரைட்டர்….
கதை நல்லா இருக்கு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
லிங்க்