Priyanka Muthukumar
Administrator
இக்கதைக்கான விமர்சனத்தை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
Thank you very much for your great support. 💕💕💕🙏🙏♥️♥️♥️🥰🥰❣️❣️❣️#நதி_வியூ
❤கள்வனின் தீராக் காதல்❤
ஆண்களோடு போட்டி போட்டுத் தனக்கென்ற ஒரு தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டியாளும் சத்யவதனியின் மரணத்தோடு ஆரம்பிக்கின்றது கதை.
தாயின் மரணத்தைக் கண்டுபிடிக்க இந்தியா திரும்புகிறான் கார் ஓட்டப் பந்தய வீரன். தாயின் இறப்பில் துவண்டு போகின்றவனுக்கு அடுத்த அதிர்ச்சி, நான் தான் சத்யவதனியின் மருமகள்! இந்த சொத்துக்களுக்கு வாரிசு! என்று சத்யவதனியின் சாம்ராஜ்யத்தைத் தனதாக்கிக் கொள்ளும் மகிழினி.
மகிழினி யார்?
எப்படி இவள் மருமகள் ஆனாள்?
சத்யவதனிக்கும் மகிழினிக்கும் என்ன தொடர்பு?
சத்யவதனி எப்படி இறந்தார்?
அவரின் மரணத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?
எனும் கேள்விகளுக்கு விடையளித்துச் செல்கின்றது கதை.
இவர்கள் தான் குற்றம் புரிந்தவர்கள் என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டாலும் அதிலும் குறிப்பாக ஒருவரை இவர் தான் என்று எம்மை எண்ண வைத்து இறுதியில் அது அப்படியல்ல என்றும் அந்தக் கொலைக்கான காரணத்தைச் சொல்லி முடித்ததும் அருமை.
தலைப்பைப் பார்த்து விட்டு ஏதோ காதல் கதை மட்டும் தான் போல என்று தான் எண்ணி வாசிக்க ஆரம்பித்தேன்.
ஆனால் யார்? எதற்காக? எப்படி? என்ற தேடலோடே கதையை நகர்த்திய விதம் சுவாரஸ்யம்.
தன் காதலை தனக்குள் பொத்தி மறைத்து இறுதியில் வெளிப்படுத்தும் போது தலைப்புக்கு நியாயம் செய்து விடுகிறான் நாயகன்.
அழகான கதையை வெற்றிகரமாக முடித்தமைக்கு என்னுடைய வாழ்த்துகள்.
அன்புடன்
அஸ்திரம் - 43
25.03.2023
Thank you very much for your wonderful support. Kandippaa next words ellam correct ah correction parthu poduren. Ungaloda aatharavuku romba nantri. 💝💝💖🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍💞💞💞💞🥰🥰🥰♥️♥️♥️❣️❣️பிரம்மாஸ்திரம் 2023
கள்வனின் தீராக் காதல்
விமர்சனம்
தன் திறமையாலும் ஆளுமையாலும் தனக்கென ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தொழிலதிபரான சத்தியவதனியின் மரணத்தில் ஆரம்பிக்கிறது ததை.
தாயின் மரணத்தை கேள்விப்பட்டு வெளிநாட்டிலிருந்து வருகிறான் சத்திய வதனியின் மகன் விஜய நேத்ரன்.
தாயின் இறப்பிலிருந்து மீளாமல் இருக்கும் தருணத்திலேயே மேலும் அதிர்ச்சி தரும் விதமாக நான்தான் சத்தியவாதனையின் மருமகள் அவர்களின் தொழில் சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க போகும் நிர்வாகி என வருகிறாள் மகிழினி.
யார் இந்த மகிழினி?இவள் எப்படி சத்தியவாதனையின் மருமகள் ஆனால்? சத்தியவதனையின் மரணம் இயற்கை மரணமா கொலையா என்ற கேள்விகளோடு கதை நகர்கிறது
தொழில்துறையில் பல ஆண்களோடு போராடி வெற்றி பெறும் ஒரு பெண்ணின் வளர்ச்சியின்மீது சொந்தங்களில் ஏற்படும் பொறாமையையும், ஒரு பெண்ணிடம் தோற்று கீழ் நிலையில் இருப்பதா என்று தொழில் துறை போட்டியாளர்களின் வஞ்சத்தையும் ரொம்ப நல்லா சொல்லி இருக்கிறார் எழுத்தாளர்.
சத்தியவதனியை கொலை செய்தது யார்? மகிழினிக்கு உதவுவது யார்? என்ற ஒரு தேடலுடனே நகர்த்திய விதம் சூப்பர்.
சத்திய வதனியை இவர்கள்தான் கொ*லை செய்திருப்பார்கள் இதுதான் காரணம் என்று ஒரு நமக்கு ஒரு யோகம் ஏற்படும் போது அந்தக் கொ*லைக்கான காரணமும் நபரும் நம் நினைப்பிற்கு எதிர் மாறாக அமைத்த விதம் ரொம்ப அருமை .
மகிழினிக்கு இன்னும் கொஞ்சம் கம்பீரத்தை கொடுத்து இருக்கலாம்,
நிறைய இடங்களில் எழுத்து பிழைகள் மட்டுமல்லாது வார்த்தைகளே கட்டாகி வாழ்க்கை என்றால் முழுமை பெறாமல் இருக்கின்றன இவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கதை இன்னும் விறுவிறுப்பாக நல்லா இருந்திருக்கும்.
ஆரம்ப அத்தியாத்தில் இருந்து க்ரைம் ஸ்டோரியாக நகர்த்திக் கொண்டு வந்து இறுதி அத்தியாயத்தில் தலைப்பிற்கு அர்த்தம் சேர்த்திருக்கிறார்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
#பிரம்மாஸ்திரம்_2023
#கௌரிவிமர்சனம்
#கள்வனின்_தீராக்காதல்
காதல் கதை மட்டும் இல்ல.....காதல், நிறைய சஸ்பென்ஸ், டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட செம்ம பரபரப்பா இருக்கு கதை🤩🤩
பெரிய பிசினஸ் வுமன் சத்தியவதனி ஓட இறப்பில் ஆரமிக்கிது கதை😥😥😥😥😥
அவங்க இறப்புக்கு வரான், அவங்க பையன் விஜய்.... அப்ப அவனுக்கு வருது தன் தாய் ஓட மரணம் இயற்க்கை இல்லைனு ஒரு மெசேஜ்......ஆயிரம் சந்தேகங்கள் மனதில்.....
தான் தன் தாயை தனிமையில் விட்டு தான், அவருக்கு இப்படி நேர்ந்ததுஎன்று தன்னையே வருத்தி கொள்ள......
நான் தான் உன் மனைவி,இனி பிசினஸ் & சொத்துக்களை பார்த்துக்கொள்ள போகிறேன் என்று மகிழ்😳😳😳😳
சொத்துக்காக நாடகம் என்று எல்லார் மீதும் சந்தேகம் விஜய்க்கு.......
விஜய் கண்டுபிடிச்சானா???????
யார் கொலையாளி என்பதை ரொம்ப சூப்பரா கடைசி வரை சஸ்பென்ஸ் வெச்சி சொல்லி இருக்காங்க ரைட்டர்👏👏👏👏👏👏👏
விஜய் - ஆரம்பத்தில் இவன் என்ன, இப்படி பொறுப்பே இல்லாம இருக்கான் அப்படினு கோவம் தான் வருது🤷🤷🤷
மகிழ் கிட்ட எதுக்கும் விதண்டாவாதம், சண்டை, சந்தேகம் அவ மேல🤦🤦🤦🤦....
அவ வீட்டாரை, அவனை பெறா தாய் அப்படினு தெரிஞ்சும் வெறுக்கரான் 🙄🙄🙄🙄🙄.....
இதுக்கு எல்லாம் பின்னாடி இருக்கும் காரணம்🥺🥺🥺🥺
மகிழ் - அதிரடியா அவன் வாழ்க்கைக்குள் வந்தாலும், அது எல்லாம் அவ ரொம்ப பாசம் வெச்சி இருக்கற சத்யாக்காக தான்......
சத்யா & மகிழ் பாண்டிங் 🥰🥰🥰🥰
அவனை காண்டுஆக்க அவ செய்யறது எல்லாம்🤣🤣🤣🤣🤣
சத்யா கொலைக்கு யார் காரணம் அப்படினு இவளின் கண்டுபிடிக்கும் முயற்ச்சி எல்லாம்👌👌👌👌
வேந்தன் - மகிழ் ஓட அண்ணன், முதலில் இருந்தே சந்தேக வட்டத்திற்குள் இருந்தவன்.....அவன் செயல்கள் அப்படி இருந்தது........
ஆதி, வரதன் & விநாயக் - 3 இடியட்ஸ்🤦🤦🤦🤦🤦, வயசான காலத்துல கீதை படிக்காம கேடி தனம் பண்ணிட்டு இருக்காங்க......
தருண் - நோ கமெண்ட்ஸ் 🤮🤮🤮🤮
கதை முழுக்க கொலையாளி யார் அப்படிக்கரா முயற்ச்சியில் எல்லாரும் இருந்தாலும், கடைசில கள்வனவன் தன் தீரா காதலையும் நேசத்தையும் நெடுநாள் காதலிக்கு உணர்த்தவும் தவறல்ல🥰🥰🥰🥰🥰
செம்ம கதை, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐
லிங்க் 👇👇👇👇