Priyanka Muthukumar
Administrator
இக்கதைக்கான விமர்சனங்களை இவ்விடத்தில் தாருங்கள்.
Thank u so so much sis❤️❤️❤️🙏பிரம்மாஸ்திரம் 2023
அஸ்திரம் 6
வெண்பனியில் கரைந்த தீந்தனலே
நிஜமாவே தலைப்புக்கு ஏற்ற மாதிரி சஹானா என்னும் வெண்பனியில் கௌதம் எனும் தீந்தனல் கரைந்த கதை தான்
ஆணிற்கே உரிய கம்பீரத்துடனும் பணத்தினால் வந்த கர்வத்துடனும் வலம் வரும் நாயகன் கௌதம் கரிகாலன் நாயகி சகானாவை பார்த்ததும் காதலில் விழுகிறான்.
சஹானாவை பற்றி முழுவதும் அறியாமலே மனைவியாக ஏற்றுக் கொண்டு அவளைப் பற்றி முழுமையாக அறிந்த பின் அவளை விலகவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் இரண்டு மனநிலையில் தவிக்கிறான்.
வாய் பேச முடியாமல் ஒரு காதும் கேட்காத சஹானா தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் முன்னிறுத்தி கௌதமிடம் பயமும் வெறுப்பும் கொள்கிறாள்.
சஹானா, கெளதம் இருவரும் புரிதல் இல்லாத பிரிவில் தங்களை எப்படி உணர்கிறார்கள் எவ்வாறு தவிக்கிறார்கள் என்பதை உணர்வு பூர்வமாக விலக்கிய விதம் சூப்பர்.
கௌதம் துர்காவின் அப்பா மகள் உறவும் அவர்களின் உணர்வும் அருமை.கௌதம் துர்கா காகவும் சஹானாக்காகவும் பார்த்து பார்த்து செய்யும் செயல்கள் யாவும் வார்த்தையில் அடங்காத அன்பின் வெளிப்பாடக மனதில் பதிகின்றன.
கௌதம், சஹானா மீதான சந்தோஷின் எதிர்பார்பில்லாத நட்பும் அக்கறையும் ரொம்ப நெகிழ்ச்சி அடைய வைக்கிறது. சந்தோஷ் மாதிரி நட்பு கிடைப்பதெல்லாம் வரம்.
வாய் பேச முடியாத ஒரு காது கேட்காத பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவளின் உணர்வுகளையும் ரொம்ப அழுத்தமாகவும் அழகாகவும் தன் எழுத்து திறமையால் கண் முன்னால் காட்சிகளாக கொண்டு வந்து நிறுத்தி எழுத்தாளருக்கு பாராட்டுக்கள் ❤️❤️
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐💐
மிக்க மிக்க நன்றி மா😍😍😍😍🙏💕🙏கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். கௌதம் சஹானாவை பார்த்தவுடன் காதல் வந்து தனக்கே எல்லாம் அவள் என்று நினைத்து திருமணம் செய்கிறான். திருமணம் ஆனவுடன் தான் திருப்பங்கள் நடக்கிறது. திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் அவளிடம் விவாகரத்து வேண்டும் என்று கேட்கிறான் சந்தோஷ் நண்பனாக அவனுடைய காதல் ஜெயிக்க வேண்டும் என்று அவனுக்கு எதிராக செயல் படுகிறான். சஹானா சமாதான படுத்தி அனுப்புகிறார்கள். அவளுக்கு பிரச்சினை வரும் போது என் சஹானா என்றும் அவள் பிரச்சினைகளை களைந்து அவர்கள் உண்டு இல்லை பண்ணுவதால் சஹானா காதல் வந்து இருவரும் இணைகிறார்கள். பின்னர் பிரச்சினை வான்மதி மூலம் ஆரம்பித்து அதனால் அவள் பிரிந்து விடுகிறாள். அவளின் பிரிவின் போது அவளின் மேல் காதலை உணர்ந்து நாலுவருசமாக தேடி கண்டுபிடித்து தனது நிலைமையும் அவளின் நிலைமையும் உணர்ந்து அவளையும் அவனின் மகளையும் வீட்டுக்கு கூட்டி வந்து இல்லறம் இனிமையான நல்லறமாகவும் மாறுகிறது. மொத்தத்தில் கதை அருமை. காதலுக்கு மொழி தேவையில்லை அன்பு உணர்வுகள் போதும். என்பதை அழகாக கொண்டு போயிருக்கேங்க சகி. வாழ்த்துக்கள். நட்பு அண்ணா அண்ணி பாசம் செம. வாழ்க வளமுடன். கௌதம் ஆரம்பத்தில் பிடிக்க வில்லை ஆனால் அவனின் சூழ்நிலையில் அவன் அழகுதான். ரொம்ப பிடிச்சிருக்கு அவனை.
நேரம் எடுத்து கதையைப் படித்ததற்கும், என்னுடன் தொடர்ந்து பயணித்து ஆதரவித்து என்னை ஊக்கப்படுத்தியதற்கும் என்னுடைய கோடி நன்றிகள் மா🙏💕#பவாவிமர்சனம்
#வெண்பனியில்கரைந்ததீந்தணல் ..
விழிகள் கலந்தபோது மௌனங்கள் தெரியவில்லை
மொழிகள் வலம்பெற துடித்தபோது மௌனங்கள் கசந்ததோ..
தனிமை தவத்தின் விடியல் இருண்டவானமாக தொடர
தனிமை சாபமாக இங்கே பயணித்ததோ..
இல்லை காதலோடு கலந்து வா
உன்னிலை மௌனங்கள் மொழிபேசுமே..
தீந்தணலாய் அவனாக பனிமலராய் அவளாக
மௌன மொழிகளோ கரைந்து காதலோடு உறவாகியதே..!!
மௌன மங்கைக்கும் தனிமை உறைவிடமாய் கொண்ட ஆணுக்கும் ஏற்படும் மௌன போராட்டம் கலந்த உணர்வுசூழ் கதை.👌👏👏❤
நாயகன் .கௌதம் கரிகாலன் ஆண்மையின் கம்பீர நெடு நெடு நெடுமால்.தொழில் இவனை சாய்க்க முடியாதவன். அத்தோடு கர்வம் எனும் முகாந்திரத்துடன் வலம் வரும் அசாரா நாயகன்.
இவனுக்கு சலுகை ,பரிதாப நிலை கொண்டோர் என கண்டாலே பிடிக்காது.👌👌👌💓💓💓
அவனை அசரவைத்த அந்த விழிகளுக்காக ஏங்கி திருமணம் செய்ய. அங்கே இவனின் துன்பங்கள் தொடங்கி.காதலா, ஏளனமா என ஏங்கி தவிக்கும் இவனின் நிலை பரிதாபமே.இவனை பொறுத்தவரை இவனின் அந்த திமிரான இயல்பு கடைசிவரை வந்தது அருமை.👌👏👌👌
நாயகி .சஹானா அமைதியான பெண் இவளின் வாழ்வை பல புயல்கள் சுருட்டிபோட .அதிலிருந்து மீண்டு வந்த போது இன்னொரு பெரும் புயல் காதல் என்ற பெயரோடு திருமணம் என்ற நிலையோடு சுழற்றி சுழன்றாட வைப்பது பாவமே இந்த பெண் என தோன்றியது . 😔👌🌺
சஹானாவின் மன குமுறல் எல்லாம் செய்கை வடிவில் வந்து நம்மை வதைப்பது கவலையே. காதலும் வந்து அதனோடு பிரிவும் வந்து இவளை ஓட வைப்பது சாபமே.😐😐
சந்தோஷ் . இடுக்கை களையும் இனிமையான நண்பன் என்றால் மிகையில்லை . தன் நண்பன் கௌதமுக்காக இவன் செய்யும் பல செயல்கள் நண்பேண்டா நீ என உரக்க கூவவே தோன்றும் .
நண்பனின் காதலை அவனோடு சேரவிட்டு அழகு பார்ப்பது, அவனின் தனிமைக்கு தோள் கொடுப்பது, தப்பென்றால் தட்டி கேட்பது , அவனை புரிந்து உதவுவது என !!!!என்ன நட்புடா இது!?? என சொல்லலாம். சந்தோஷின் சந்தோசமே கௌதம் என்பதே தகும்.❤❤💓💓💓
பிரபு . பாசக்கார அண்ணணாய் பல இடங்களிலும் பரிதவிப்பது பாசமே. தன் தங்கை வாழ்வுக்காக தன் வாழ்வையும் தேடி கொண்டு அவளை காப்பது மிக அருமை.❤❤👌
துர்கா . தன் தந்தையின் உணர்வுகளோடு விளையாடி அதை பாசத்தோடு அப்பா என்ற விளிப்போடு மெய்பிக்கும் அந்த இடம் எனக்கே கண்கலங்கிவிட்டது.👌❤❤
இப்படி நிறைய கதாபாத்திரங்கள் நம்மை வலம் வந்து இந்த கதையோடு பின்னி பிணைந்து பயணிப்பது அருமை.❤❤
ஆக ஆசிரிய தோழியே.
யார்ம்மா நீங்கள் !??? இப்படி ஒரு கதையை போட்டி கதைக்கு கருவாக கொண்டு வந்ததிற்கு சபாஷ் போட வேண்டும் .👌👏👏👏
நல்ல முதிர்ந்த எழுத்து நடை. எந்த குறைகளும் இல்லாது கதையை நகர்த்திய விதம் அருமை . பழக்கப்பட்ட எழுத்தாகவும் இருக்கிறது அருமை.👌👏❤❤
பல இடங்களை சுட்டிக்காட்ட ஆசை.விமர்சனம் வளருமே தவிர குறையாது!! நாயகன் நாயகி இணைந்த பின்பும் அவர்களை உடனே இணைய விடாமல் தனிமையை தந்து, இருவருக்குமே கால அவகாசம் தந்து நல்ல புரிதலோடு காதலை உணர்ந்து இணைத்திருப்பது. ஷப்பா இதுவே உங்களின் எழுத்தின் வீரியமான உணர்வுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் .👌👏👏👏👏
நட்பை அழகாக காட்டி அதையும் கோபுர கலசமாய் ஏற்றியது அருமை.👌❤❤
குறைகளை களைந்துப்பார் உண்மையான நேசம் பாசம் காதல் என மூன்றும் முக்கனிச் சாராய் உன்னிடம் நிறைந்திருக்கும் என சொல்லாமல் சொல்லி சென்றது அருமை.👌👌👏❤
மௌன மொழிகளை கூட உணர்வு கொண்ட எழுத்து வடிவங்களாக கொடுத்து எமை அழவைத்து காதலில் திளைக்க வைத்து சென்றது என்ன சொல்ல இருக்கிய அணைப்புகள்மா.👩❤️👩❤❤❤
சஹானா பாத்திரத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்து அவளின் உணர்வுகளை நீங்கள் எமக்காக பேசும்போது பேச்சிழந்தது நான் தான்.மெர்ஷல்மா.👌👌🌺🌺
கௌதம் பாத்திரத்தில் அவன் இயல்பை ஒரு துளி அளவும் குறையாது கொண்டு சென்றது அருமை. அதிலும் சஹானாவின் கௌதம் வேறு உலகுக்கு ஜிகே வேறு ஹப்பா எப்படிமா இப்படி !!!❤👌👏😊😊
"எனக்கு தனிமை புதுசு இல்லை ஆனால் அதை உணரும் இந்நொடி புதுசு"!!!! கௌதம் காதலை அந்த பிரிவில் சொல்வது எழுத்தின் உச்சவடிவம் மா.❤❤❤❤❤❤
ஒவ்வொரு கதை பாத்திரவடிவங்களையும் பல உணர்வுகளோடு விளையாடி எம்மோடும் விதி வழியேன விளையாடி கடைசியில் சுபம் சேர்த்தது அழகு. வாழ்த்துக்கள் .👏👏❤❤
ஒரு உணர்வூபூர்வமான கதை படித்த திருப்தி வாழ்த்துக்கள் மா👏👏🌹🌹
போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.👏🌹🌹👏